பெரிய வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்புத் தொடங்கியுள்ளது

ஜனவரி 21, 2024

நான் விசுவாசத்துக்குள்ள வந்ததுக்கப்புறமா, ஜெபிக்கறது எப்படின்னும் வேதாகமத்த வாசிக்கறது எப்படின்னும் கத்துக்கிட ஆரம்பிச்சேன், அதோட அன்றாட வாழ்க்கையில கர்த்தரோட வார்த்தைகளப் பின்பற்றுறதுக்கு என்னால முடிஞ்சதச் செஞ்சேன். அதுக்கப்புறமா, கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பப் பத்திய நெறைய வீடியோக்கள ஆன்லைன்ல பாத்தேன். அவை வெளிப்படுத்தின விசேஷத்துல உள்ள இந்த தீர்க்கதரிசனத்த குறிப்பிட்டுக் காட்டிச்சுங்க: “பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன், அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது: அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்(வெளிப்படுத்தல் 20:11-12). கடைசி நாட்கள்ல, கர்த்தராகிய இயேசு வெண் அங்கி தரித்து பெரிய வெள்ளை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்க, எல்லோரும் அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுறாங்க. அவர் ஒவ்வொருத்தரயும் அவங்கவங்க வாழ்க்கையில செஞ்ச கிரியைகளின்படி நியாயந்தீர்க்குறாரு. பாவஞ் செய்றவங்க தண்டிக்கப்படுறதுக்காக நரகத்துக்குப் போறாங்க, பாவமில்லாதவங்க ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்படுறாங்க. இந்த வீடியோக்கள் என்னோட மனச கர்த்தரோட நியாயத்தீர்ப்பின் காட்சிகளால் நிரப்பிடுச்சு. கடைசி நாட்கள்ல அவரோட நியாயத்தீர்ப்பு வீடியோ சொன்னது மாதிரியே இருக்கும்னு நான் நம்புனேன். அவர் நம்மல நியாயந்தீர்க்கறதுக்காக திரும்பி வர்றப்போ, அவர் என்னை ராஜ்யத்துக்குள்ள வரவேற்கணுங்கறதுக்காக கர்த்தரோட போதனைகள பின்பற்றுறதுக்கு நான் தீர்மானிச்சேன்.

2004 ல, ஒரு பயங்கரமான சுனாமியினால இந்தோனேசியா பாதிக்கப்பட்டுச்சு, அதுல 200,000 பேர் செத்துப்போனாங்க. இது தேவனோட கடுங்கோபமா இருந்துச்சுங்கறதயும் நியாயத்தீர்ப்பின் நாள் சீக்கிரத்தில வரும்ங்கற அவர் நமக்கு எச்சரிச்சாருங்கறதயும் நான் உணர்ந்தேன். என்னோட இத்தன வருஷ விசுவாசத்துல, கர்த்தரோட போதனைகள கடைப்பிடிக்க என்னால முடிஞ்சத நான் செஞ்சிருக்கேன், ஆனா என்னால அவரோட வார்த்தைகளக் கடைபிடிக்கவோ மத்தவங்களோ என்னைப்போல நேசிக்கவோ என்னால முடியல. என்னோட மாமியார் என்னோட நாத்தனார்கிட்ட என்னையப் பத்தி விமர்சிச்சதுக்காக நான் கோபப்பட்டேன், அதுக்காக நான் அவங்கள வெறுத்தேன். நான் ஐஸ்வர்யத்துமேல ஆசப்பட்டு உலகப் போக்குகள பின்பற்றினேன். வேதாகமம் சொல்லுது: “நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக(லேவியராகமம் 11:45). தேவன் பரிசுத்தமுள்ளவர், பரிசுத்தமில்லாதவங்களால தேவனோட முகத்தப் பாக்க முடியாது. ஆனா நான் எப்பவும் பாவஞ் செஞ்சுக்கிட்டும், அறிக்கை செஞ்சுக்கிட்டும் இருந்தேன், என்னைய பாவத்தில இருந்து விலக்கிக்கவே இல்ல. திரும்பி வந்த கர்த்தர் என்னைய நியாயந்தீர்த்து நரகத்துக்கு அனுப்பிவிடுவாரோ? அதனால பாவஞ் செய்யுற பிரச்சனைய தீர்க்கறது எப்படின்னு சில போதகர்கள்கிட்ட நான் கேட்டேன். அதுக்கு அவங்க, “நாம கர்த்தரிடத்தில ஜெபிச்சு, பாவத்த அறிக்கை செஞ்சு, மனந்திரும்புற வரைக்கும், அவர் நம்மோட பாவங்கள மன்னிப்பாரு” அப்படின்னு சொன்னாங்க. ஆனா இது என்னோட பிரச்சனைய தீர்க்கல. நான் முன்னாடி மாதிரியே தொடர்ந்து பாவஞ் செஞ்சிக்கிட்டும், அறிக்கை செஞ்சிக்கிட்டும் இருந்தேன் நான் பாவஞ் செய்ற ஒவ்வொரு தடவயும், நான் பயப்படுவேன். கர்த்தர் கடைசி நாட்கள்ல நம்மளோட செயல்களக் கொண்டு நம்மல ஒவ்வொருத்தரா நியாயந்தீர்க்க வருவாரு. நான் தொடர்ந்து பாவஞ் செஞ்சிக்கிட்டிருந்தேன்னா, நான் நியாந்தீர்க்கப்பட்டு, கண்டனம் செய்யப்படுவேன். என்னால எப்படி ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும். நான் ரொம்ப கவலப்பட்டேன்.

2018 பிப்ரவரியில, என்னோட கணவர் ஆன்லைன்ல கூடுகைகள்ல கலந்துக்க ஆரம்பிச்சாரு. அவரு தினமும் ரொம்ப சந்தோஷமா தெரிஞ்சாரு, அவரோட விசுவாசத்துல ரொம்ப ஈடுபாடுள்ளவரா மாறிட்டாரு. அவங்க தங்களோட கூடுகைகள்ல என்ன பேசிக்கறாங்கறத தெரிஞ்சுக்க இது என்னோட ஆர்வத்தத் துண்டிச்சு. ஒருநாள், என்னோட கணவர், “கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவனா திரும்பி வந்துருக்காரு. அவர் நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சுக்கிட்டிருக்காரு” அப்படின்னு சொன்னாரு. நான் அதிர்ந்துபோயிட்டேன். கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருந்தா, அவர் ஆகாயத்துல ஒரு பெரிய வெள்ளை சிங்காசனத்துமேல உட்காந்து, நம்மல ஒவ்வொருத்தரயா நியாயந்தீர்ப்பாரு. இந்தக் காட்சிய பாத்ததே இல்ல, அப்படின்னா கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு எப்படி ஏற்கனவே தொடங்கியிருக்க முடியும்? நான் இத என்னோட கணவர்கிட்ட சொன்னப்ப, அவர் அப்படியே சிரிச்சுக்கிட்டே, “கடைசி நாட்கள்ல தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை நாம கற்பன செய்ற மாதிரி இருக்காது. தேவன் பூமிக்கு மாம்சத்துல வந்துருக்காரு, அவர் நம்மல நியாயந்தீர்க்கறதுக்கு சத்தியத்த வெளிப்படுத்திக்கிட்டு இருக்காரு” அப்படின்னு சொன்னாரு. என்னோட சந்தேகங்கள் அதிகரிச்சதனால, நான் இப்படி நெனச்சேன்: கர்த்தர் வார்த்தைகள வெளிப்படுத்துறது மூலமா எப்படி நம்மல நியாயந்தீர்க்க முடியும்? எந்தப் போதகரோ மூப்பரோ இந்த மாதிரியான காரியத்த சொல்றத நான் ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்ல. என்னோட கணவர் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியை அப்பதான் ஏத்துக்கிட்டிருந்ததனால, அவரால அத நல்லா விளக்க முடியல, அதனால சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையச் சேர்ந்தவங்கள சந்திக்குமாறு என்கிட்ட கேட்டுக்கிட்டாரு. நான் அத முதல்ல விரும்பல, ஆனா என்னோட கணவர் சிந்தனையுள்ள மனிதராவும் அவரோட விசுவாசத்துல வாஞ்சையுள்ளவராவும் இருந்தாருன்னும், கர்த்த திரும்பி வந்து நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சிக்கிட்டிருந்தாருங்கற அவரு நம்புனாருன்னாலும் நெனச்சதுனால, அவருகிட்ட ஒரு நல்ல காரணம் இருக்கணும்னு நான் நெனச்சேன். கர்த்தர் உண்மையிலயே திரும்பி வந்துருக்காரா இல்லயாங்கறத கண்டுபிடிக்க, நான் அவங்களோட கூடுகைகள்ல கலந்துக்க ஒத்துக்கிட்டேன்.

ஒரு கூடுகையில, திருச்சபயச் சேர்ந்த சகோதரி ஒருத்தவங்க என்னோட கேள்வியக் குறிச்சு ஐக்கியப்பட்டாங்க: “வெளிப்படுத்தின விசேஷத்துல உள்ள பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புங்கறது பத்மு என்கிற தீவுல யோவான் கண்ட ஒரு தரிசனம், அது கடைசி நாட்கள்ல தேவன் செய்ற கிரியைய தீர்க்கதரிசனமா உரைச்சிருக்கு. அது தேவனோட கிரியையோட உண்மைகளக் காட்டல. நம்மோட கருத்துக்களயும் கற்பனைகளயும் பயன்படுத்தி இந்தத் தீர்க்கதரிசனத்தப் புரிஞ்சுக்க நாம முயற்சிக்கக் கூடாது. வேதாகமம் சொல்லுது: ‘வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்(2 பேதுரு 1:20-21). தீர்க்கதரிசனங்கள்னு வர்றப்ப நாம தேவனுக்குப் பயப்படுற ஒரு இருதயத்தக் கொண்டிருக்கணும். தீர்க்கதரிசனங்கள் தேவனிடத்திலிருந்து வர்றவையாவும் இரகசியமானவையாவும் இருக்குதுங்க, அதனால தேவனால மட்டுந்தான் அவற்றோட அர்த்தத்த வெளிப்படுத்த முடியும். அவை நிறைவேறுனதுக்கப்புறமாதான் ஜனங்களால அவற்றப் புரிஞ்சுக்க முடியும். நாம அவற்ற நேரடியா விளக்குனா, நாம தேவனோட கிரியைய வரம்புக்குட்டுபடுத்தவும் தேவனப் புண்படுத்தவும் வாய்ப்பிருக்கு. மேசியா அரண்மனையில பிறந்து ஆட்சிக்கு வருவாருங்கற கற்பனையில வேத வசனத்தோட நேரடி அர்த்தத்த பரிசேயர்கள் பிடிச்சிக்கிட்டாங்க. ஆனா அது அப்படியே நேர் எதிரா நடந்துச்சு. கர்த்தர் அரண்மனையில பிறக்காம மாட்டுத்தொழுவத்துல ஒரு தச்சரோட மகனா பிறந்தது மட்டுமல்லாம, அவர் உண்மையிலே ஆட்சிக்கு வரவும் இல்ல. பரிசேயர்கள் தங்களோட கருத்துகள பிடிவாதமா பிடிச்சுக்கிட்டு, கர்த்தர மேசியாவா ஏத்துக்க மறுத்தாங்க. அவரோட வார்த்தைகளும் கிரியைகளும் அதிகாரமுள்ளவயாவும் வல்லமையுள்ளவயாவும் இருந்ததயும், அவை தேவனிடமிருந்து வந்ததுன்னு அவங்களால பாக்க முடிஞ்சுது, ஆனா அப்பவும் அவங்க அவரை ஏதிர்த்து கண்டனம் செஞ்சாங்க. அவங்க கடைசில கர்த்தர சிலுவையில அறைஞ்சாங்க. அவங்க தேவனோட மனநிலையப் புண்படுத்துனாங்க, அதனால தேவனால சபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாங்க. நாம பரிசயேர்கள்கிட்ட இருந்து கத்துக்கணும், தீர்க்கதரிசனங்களப் புரிஞ்சுக்க முயற்சிக்கக் கூடாது, தேவனோட கிரியைய நம்மளோட சொந்தக் கருத்துக்களக் கொண்டு வரம்புக்குட்படுத்தக் கூடாது.”

இந்த சகோதரி சொன்னது ரொம்பப் பிரகாசிப்பதாவும், அது வேதாகமத்தோட ஒத்துப்போறதாவும் இருந்துச்சிங்கறத நான் நெனச்சுப் பாத்தேன். தீர்க்கதரிசனங்கள் தேவனிடத்திலருந்து வருது, அவரோட எண்ணங்கள் மனுஷனோட எண்ணங்களவிட உயர்த்தவையா இருக்குது. தேவனோட ஞானமும் மனுஷனோட ஞானத்த விட உயர்ந்ததா இருக்குது. தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறும்ங்கற விவரங்கள் தேவனுக்கு மட்டுந்தான் தெரியும். தேவனோட கிரியைய மனுஷனால ஒருபோதும் புரிஞ்சுக்க முடியாது? தேவனோட கிரியைய என்னோட சொந்தக் கருத்துகளக் கொண்டு வரம்புக்குட்படுத்த முடியும்ங்கறத நான் உணர்ந்தேன். நான் அந்த சகோதரிகிட்ட, “தேவன் கடைசிநாட்கள்ல மனுவுருவெடுத்து பூமிக்கு வந்து, சத்தியத்த வெளிப்படுத்துராருன்னும், நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்றாருன்னும் நீங்க சாட்சி கொடுக்கறீங்க. இதுக்கு என்ன அர்த்தம்? இது வேதாகமத்தில உள்ள பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்போட எப்படி தொடர்புடையதா இருக்கு?” அப்படின்னு கேட்டேன்.

அந்த சகோதரி வேதாகமத்தில உள்ள இந்த வசனங்கள வாசிச்சாங்க: “பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது என்று கூறினான்(வெளிப்படுத்தல் 14:6-7). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22). “அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:27). “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது: நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:48). 1 பேதுருல உள்ள இந்த வசனத்தயும் வாசிச்சாங்க: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). அதுக்கப்புறமா அவங்க ஐக்கியப்பட்டாங்க: “இந்த வசனங்கள் சொல்லுது ‘அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,’ ‘அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது,’ மற்றும் ‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்கும்.’ தேவன் தம்மோட நியாத்தீர்ப்பின் கிரியையச் செய்ய கடைசி நாட்கள்ல பூமிக்கு வர்றாருங்கறத நம்மால பாக்க முடியும். ‘நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்’ அப்படின்னும் சொல்லுறார். ‘குமாரன்’ மற்றும் ‘மனுஷகுமாரன்’ என்றால் மனுஷனுக்குப் பிறந்த, சாதாரண மனிதத்தன்மையக் கொண்டிருக்கற ஒருத்தருன்னு அர்த்தம். கர்த்தராகிய இயேசுவப் போலவே, இவரும் வெளிப்புறத்துல சாதாரணமா தோன்றலாம், இவருக்குள்ள தேவனுடைய ஆவியானவரும் ஒரு தெய்வீக சாராம்சமும் இருக்கு. தேவனோட ஆவியானவரயோ அல்லது அவரோட ஆவிக்குரிய சரீரத்தயோ மனுஷகுமாரன்னு அழைக்க முடியாது. சத்தியத்த வெளிப்படுத்தவும், நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்யவும் தேவன் கடைசி நாட்கள்ல மனுஷகுமாரனா மனுவுருவாவுறாருங்கறதயும், இந்த நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டுல துவங்குதுங்கறதயும் இந்த வசனங்கள் நிரூபிக்குது. தேவனோட சத்தத்தக் கேட்டு அவரோட சிங்காசனத்துக்கு முன்னால வர்றவங்க முதல்ல நியாயந்தீர்க்கப்படுவாங்கன்னு இதுக்கு அர்த்தம்.”

அதுக்கப்புறமா அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் சில பத்திகள வாசிச்சாங்க: “தேவன் மனுஷனை ஒவ்வொருவராக நியாயந்தீர்ப்பதில்லை, மனுஷனை ஒவ்வொருவராகச் சோதிப்பதில்லை. அவ்வாறு செய்வது நியாத்தீர்ப்பின் கிரியையாக இருக்காது. சகல மனுஷரின் சீர்கேடும் ஒன்றுபோல இல்லையா? சகல மனுஷரின் சாரம்சமும் ஒன்றுபோல இல்லையா? மனுக்குலத்தின் சீர்கேடான சாராம்சம், சாத்தானால் சீர்கேடடைந்த மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷனுடைய சகல பாவங்கள் ஆகியவையே நியாயந்தீர்க்கப்படுகின்றன. மனுஷனுடைய அற்பமான மற்றும் முக்கியத்துவமில்லாத தவறுகளை தேவன் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பின் கிரியை ஒரு மாதிரியாகும். இது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நபருக்குச் செய்யப்படுவதில்லை. மாறாக, இது மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடும் பொருட்டு ஒரு கூட்ட ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படும் கிரியையாகும். ஒரு கூட்ட ஜனங்களின் மீது தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதன் மூலம், மனுக்குலம் முழுவதின் கிரியையையும் குறிப்பிட மாம்சத்திலுள்ள தேவன் தமது கிரியையைப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு அது படிப்படியாகப் பரவுகிறது. இவ்வாறும் நியாயத்தீர்ப்பின் கிரியை இருக்கிறது. தேவன் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தையோ நியாயந்தீர்க்க மாட்டார். மாறாக, மனுக்குலம் முழுவதின் அநீதியையும் நியாயந்தீர்க்கிறார். அதாவது, உதாரணமாக, தேவனை மனுஷன் எதிர்ப்பது அல்லது அவர் மீது மனுஷனுக்கு காணப்படும் பக்தியின்மை அல்லது தேவனுடைய கிரியையை மனுஷன் இடையூறு செய்வது மற்றும் இதுபோன்ற பலவற்றை நியாயந்தீர்க்கிறார். தேவனை எதிர்க்கும் மனுக்குலத்தின் சாராம்சமே நியாந்தீர்க்கப்படுகிறது. இந்தக் கிரியை கடைசி நாட்களின் ஜெயங்கொள்ளும் கிரியையாகும். மனுஷனால் சாட்சிகூறப்படும் மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையுமே கடைசி நாட்களில் பெரிய வெண்மையான சிங்காசனத்திற்கு முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பின் கிரியையாகும், இது கடந்த காலங்களில் மனுஷனால் செய்யப்பட்டதாகும். தற்போது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியையானது பெரிய வெண்மையான சிங்காசனத்தின் முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது”). “இன்றைய நாளின் ஜெயங்கொள்ளும் கிரியையானது மனுஷனின் முடிவு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் உள்ளது. இன்றைய ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் கடைசிக் காலத்தின் பெரிய வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பான நியாயத்தீர்ப்பு என்று ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? நீ இதைக் காணவில்லையா? ஜெயங்கொள்ளும் கிரியை ஏன் இறுதிக் கட்டமாக இருக்கிறது? இது ஒவ்வொரு வகையான மனுஷரும் எந்த வகையான முடிவை சந்திப்பார்கள் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்துவதாக இல்லையா? சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது, அவர்களின் உண்மையான வண்ணங்களைக் காட்டவும், பின்னர் அவர்களின் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தவும் அனைவரையும் அனுமதிப்பதாக இல்லையா? இது மனுஷகுலத்தை ஜெயங்கொள்கிறது என்று சொல்வதை விட, ஒவ்வொரு வகையினருக்கும் என்ன மாதிரியான முடிவு இருக்கும் என்பதை இது காட்டுகிறது என்று சொல்வது நல்லது. இது ஜனங்களின் பாவங்களை நியாயந்தீர்ப்பது மற்றும் பல்வேறு வகையானவர்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றைப் பற்றியதாகும், இதன் மூலம் அவர்கள் தீயவர்களா அல்லது நீதியுள்ளவர்களா என்பதைத் தீர்மானிப்பதாகும். ஜெயங்கொள்ளும் கிரியைக்குப் பிறகு, நன்மைக்கு வெகுமதி அளிக்கும் மற்றும் தீமையைத் தண்டிக்கும் கிரியை வருகிறது. முழுமையாகக் கீழ்ப்படிந்தவர்கள்—அதாவது முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்டவர்கள்—தேவனின் கிரியையை முழு பிரபஞ்சத்திற்கும் பரப்புவதற்கான அடுத்தக் கட்டத்தில் வைக்கப்படுவார்கள்; ஜெயங்கொள்ளப்படாதவர்கள் இருளில் வைக்கப்படுவார்கள், பேரழிவைச் சந்திப்பார்கள். இவ்வாறு மனுஷன் வகையின்படி வகைப்படுத்தப்படுவான், தீயவர்கள் தீமையுடன் குழுவாக இருப்பார்கள், அவர்கள் மீது மீண்டும் சூரியனின் வெளிச்சம் படாது, நீதிமான்கள் நன்மையுடன் குழுவாக இருப்பார்கள், வெளிச்சத்தைப் பெற்று வெளிச்சத்திலேயே என்றென்றும் ஜீவித்திருப்பார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)”). “நான் சொல்வதைப் பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் பரிசுத்தவான் என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன், இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நேரமாக இருக்கும், ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீ காணும் நேரம், நீ தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் நிர்வாகத் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும், மேலும், நல்லோருக்கு தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் நேரமாகவும் அது இருக்கும். ஏனென்றால் சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ என்ற விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான நியாயத்தீர்ப்பையும், மெய்யான வழியையும், ஜீவனையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களைக் கையாள்வார். அவர்கள் அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத அகந்தையும் கொண்டவர்கள். இத்தகைய சீர்கேடானவர்களுக்கு இயேசுவால் எவ்வாறு வெகுமதியளிக்க முடியும்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).

அதுக்கப்புறமா அந்த சகோதரி ஐக்கியப்பட்டு இப்படிச் சொன்னாங்க, “எல்லாரும் முழங்காற்படியிட, தேவன் நம்மளோட பாவங்கள ஒவ்வொன்னா வெளிப்படுத்தி, அதுக்கப்புறமா நாம மேல பரலோகத்துக்குப் போவோமா அல்லது கீழ அக்கினிக் கடலுக்குப் போவோமான்னு தீர்மானிப்பாருன்னு நாம கற்பனை செய்ற மாதிரி கடைசி நாட்கள்ல தேவன் தம்மோட நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்ய மாட்டாரு. தேவன் இந்த மாதிரி மனுஷன நியாயந்தீர்த்தாருன்னா, ராஜ்யத்துல பிரவேசிக்க ஒருத்தரும் தகுதி பெற மாட்டாங்க. நாம சாத்தானால ஆழமா சீர்கெடுக்கப்பட்டிருக்கோம், சாத்தானிய மனநிலைகளால நெறஞ்சிருக்கறோம், நாம கர்த்தர விசுவாசிச்சதும், நாம கொஞ்சம் நற்கிரியைகளச் செய்யலாம், அன்பா செயல்படலாம், சுவிசேஷத்தப் பிரசங்கிக்கலாம், கர்த்தருக்காக கடினமா உழைக்கலாம், ஆனா நாம இன்னும் நமக்குள்ள ஒரு பாவ சுபாவத்தக் கொண்டிருக்கறோம். நாம இன்னும் பாவஞ் செஞ்சுக்கிட்டும், அறிக்கை செஞ்சுக்கிட்டும் இருக்கறோம், கர்த்தரோட போதனைகள நம்மால கடைப்பிடிக்க முடியறதில்ல. நாம விரும்புறத கர்த்தர் செய்யலன்னா, நாம அவர குற்றப்படுத்தறோம். நம்மோட சொந்த நலன்களுக்காகவும் கௌரவத்துக்காகவும் நாம பொய் சொல்லறோம், ஏமாத்தறோம். நம்மோட நலன்கள் பாதிக்கப்படறப்போ, நாம மக்கள வெறுத்து அவங்கள பழிவாங்கறோம் … வேதாகமம் சொல்லுது, ‘பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபிரெயர் 12:14). பரலோகராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க ஜனங்களால பாவிகளா இருக்க முடியுமா? நம்மோட தற்போதய நடத்தயின் அடிப்படையில தேவன் நம்மல நியாயந்தீர்த்து கண்டனம் செஞ்சாருன்னா, நாம எல்லாருமே தண்டிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டிருக்க மாட்டோமா? மனுக்குலத்த பாவத்திலயிருந்து முழுவதுமா இரட்சிக்க, தேவன் மனுஷகுமாரனா மீண்டும் ஒருமுறை மனுவுருவெடுத்து, கடைசி நாட்கள்ல இரகசியமா வந்துருக்காரு. அவர்தான் சர்வவல்லமையுள்ள தேவன், அவர் மனுக்குலத்த இரட்சித்து சுத்திகரிக்க சத்தியத்த வெளிப்படுத்தி, கிரியை செய்யறாரு. இதுதான் வெளிப்படுத்தின விசேஷத்துல உள்ள பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. மனுஷன சுத்திகரிச்சு இரட்சிக்கவும், ஒரு கூட்ட ஜெயங்கொள்ளுகிறவர்கள உருவாக்கவும் தேவன் முதல்ல மாம்சமாகி சத்தியத்த வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்றாரு. அதுக்கப்புறமா அவர் மாபெரும் பேரழிவுகளக் கொண்டு வந்து, நல்லவங்களுக்கு வெகுமதியளிச்சு, அக்கிரமக்காரங்கள தண்டிச்சு, பொல்லாத பழைய காலத்த அழிக்கறாரு. கடைசில, அவர் வெளிப்படையா எல்லா மக்களுக்கு மத்தியிலயும் தோன்றுறாரு, அதுக்கப்புறமா அவரோட நியாயத்தீர்ப்பின் கிரியை நிறைவடையது. மாபெரும் பேரழிவுகள் பெரிய வெள்ளை சிங்காசன நியாத்தீர்ப்பு துவங்கறப்போ நடக்கறதில்ல, அது முடியும்போதுதான் நடக்கும். அந்த நேரத்தில, தேவனோட வருகையின்போது அவரோட வார்த்தைகளோட நியாயத்தீர்ப்பினால தங்களோட சீர்கெட்ட மனநிலைகள சுத்திகரிச்சுக் கொண்டவங்க எல்லாரும் தேவனோட பாதுகாப்பினால பேரழிவுகளுக்கு தப்பிச்சுக் கொள்வாங்க, அவர் அவங்கள அவரோட ராஜ்யத்துக்குள்ள கூட்டிட்டுப் போவாரு. சர்வவல்லமையுள்ள தேவனை அவரோட இரகசிய வருகையின்போது மறுதலிச்சு கண்டனம் செஞ்சவங்க அழுகைக்கும் பற்கடிப்புகளுக்கும் மத்தியில தண்டிக்கப்படுறதுக்காக முன் நடந்திராத பேரழிவுகள்ள அழிக்கப்படுவாங்க.”

அவங்களோட ஐக்கியத்துக்கப்புறமா என்னோட இருதயம் பிரகாசமடைஞ்சுது. தேவன் பெரிய வெள்ளை சிங்காசனத்தில அமர்ந்திருந்து, ஜனங்கள ஒவ்வொருத்தரா நியாயந்தீர்த்து, அவங்கள மேல பரலோகத்துக்கும் கீழ நரகத்துக்கும் அனுப்புவாருன்னு நான் கற்பனை செஞ்சு வச்சிருந்தத கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை மாற்றிச்சு. தேவனோட நியாயத்தீர்பின் கிரியை பல கட்டங்கள்ல செய்யப்படுது. முதலாவது, மனுஷனோட பாவ சுபாவத்த நீக்கி, அவங்கள சுத்திகரிச்சு இரட்சித்து, மனந்திரும்பி மாறுவதுக்கான ஒரு வாய்ப்ப அவங்களுக்குக் கொடுக்கறதுக்காக அவர் சத்தியத்த வெளிப்படுத்தறாரு. அதுக்கப்புறமா நல்லவங்களுக்கு வெகுமதியளிக்கவும் பொல்லாதவங்கள தண்டிக்கவும் அவர் வெளிப்படையா தோன்றுறாரு. பெரிய வெள்ளை சிங்காசனத்தப் பத்தி என்னோட மனசுல நான் கொண்டிருந்த காட்சி தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை முடியற காட்சியா இருக்கும். கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்க நான் அது வரைக்கும் காத்திருந்தா, அது ரொம்ப தாமதமா இருக்கும், நான் என்னோட இரட்சிப்பின் வாய்ப்ப இழந்துபோவேன். கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஆராய்ஞ்சு பாக்குறது சிறந்ததுன்னு நான் உணர்ந்தேன். அதனால நான் சகோதரிகிட்ட, தேவன் எப்படி தமது வார்த்தைகளக் கொண்டு ஜனங்கள நியாயந்தீர்த்து சுத்திகரிக்காரு? அப்படின்னு கேட்டேன்.

அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய வாசிச்சாங்க. “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

அவங்க தொடர்ந்து ஐக்கியப்பட்டுச் சொன்னாங்க, “மனுஷன நியாந்தீர்த்து சுத்திகரிக்கும் அவரோட கிரியையச் செய்யுறதுக்கு சத்தியத்த வெளிப்படுத்துறதுல, தேவன் ஒரு சில வார்த்தைகள சொல்லுறதோ அல்லது சில பத்திகள எழுதறதோ மட்டுமில்ல, அதுக்குப் பதிலா, மனுக்குலத்த சுத்திகரிச்சு இரட்சிக்கற எல்லா சத்தியங்களயும் அவர் வெளிப்படுத்தறாரு. சாத்தான் மனுஷன எப்படி சீர்கெடுக்கறான், தேவன் மனுஷன எப்படி இரட்சிக்கறாரு, தேவன் யாரை ஆசீர்வதிக்கறாரு, அவர் யாரை நீக்கறாரு, யாரால இரட்சிக்கப்பட்டு ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும், இது போன்ற சத்தியங்கள அவர் வெளிப்படுத்தறாரு. குறிப்பா அவரு மனுஷனோட தேவன எதிர்கற சாத்தானிய சுபாவத்த அம்பலப்படுத்தி ஆராயறாரு, அதோட நமக்குள்ள நாம கொண்டிருக்கற எல்லா சாத்தானிய மனநிலைகளயும் விஷங்களயும் முற்றிலுமா வெளிப்படுத்தறாரு. தேவனோட வார்த்தைகளின் வெளிப்பாடுகள்லயும் நியாயத்தீர்ப்புலயும் சாத்தானால செய்யப்பட்ட நம்மோட சொந்த சீர்கேட்டப் பத்திய உண்மைய நம்மால பாக்க முடியும். நம்மோட தேவன எதிர்க்கற பாவ சுபாவத்தயும் அதனோட மூலக் காரணத்தயும் நாம அறிஞ்சிக்கறோம், அகந்தை, வஞ்சகம், பொல்லாப்பு மற்றும் சத்தியத்த வெறுத்தல் போன்ற நம்மோட சாத்தானிய சுபாவங்கள் நமக்குள்ள எவ்வளவு ஆழமா வேரூன்றியிருக்கறதுங்கறதயும் நாம பாக்கறோம். உதாரணமா, கர்த்தருக்காக நம்மளயே நம்மளால ஒப்புக்கொடுத்து, அவிசுவாசிகளால் பரியாசம் செய்யப்படுறதயும் அவமானப்படுத்தப்படுறதயும் தாங்கிக்க முடிஞ்சாலும், அதோட நாம சிறைக்கு அனுப்பப்பட்டாலும் கர்த்தர மறுதலிப்பதோ அல்லது ராஜ்யத்தின் சுவிசேஷத்த பிரசங்கிக்கறத நிறுத்துவதோ இல்லைன்னாலும், பேரிடர் வந்து நம்மோட எதிர்கால வாய்ப்புகள் இருண்டதாகத் தெரியறப்ப, நாம தேவன குறைகூறி, குற்றப்படுத்தறோம், நாம எடுத்த முயற்சிகளுக்காக வருந்தறோம், அதோட நாம தேவன மறுதலிச்சு காட்டிக்கொடுக்கவும் கூட செய்யலாம். நாம எடுத்த முயற்சிகள் தேவனோட கிருபையயும் ஆசீர்வாதங்களயும் பெறுறதுக்காகவும், கிரீடத்தப் பெறுறதுக்காகவும், வெகுமதியளிக்கப்படவும் மட்டுமே எடுக்கப்பட்டன என்பத நாம பாக்கறோம். இப்படிப்பட்ட முயற்சிகள் அசுத்தமானவை. நாம வெறுமென தேவனோட ஒப்பந்தங்கள் செய்து, கர்த்தர ஏமாற்றறோம். சாத்தானால நாம் எப்படி சீர்கெடுக்கப்பட்டிருக்கறோம், நாம தேவன வணங்குறதில்ல, மனசாட்சியோ பகுத்தறிவோ இல்லாம இருக்கறோம்ங்கறத நாம அப்பதான் கண்டறியறோம். தேவனோட நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் அனுபவிக்கறதன் மூலமா, நாம தேவனோட நீதியான, மாட்சிமையான மனநிலைய அறிஞ்சுக்க ஆரம்பிக்கறோம். நாம தேவன வணங்கவும், நம்மை நாமே உண்மையிலே வெறுக்கவும், நம்மோட மாம்சத்த கீழ்ப்படுத்தி சத்தியத்தக் கடைப்பிடிக்கவும் விருப்பமுள்ளவங்களா மாறவும் ஆரம்பிக்கறோம். நம்மோட சீர்கேடுகள் சுத்திகரிக்கப்பட ஆரம்பிக்குது, நாம உண்மையான மனித சாயல்ல வாழ ஆரம்பிக்கறோம். தேவனோட வார்த்தைகளால பல வருஷமா நீயாயந்தீர்க்கப்பட்டிருக்கறவங்களுக்கு தேவனோட நியாயத்தீர்ப்பால உண்மையிலே ஜனங்கள சுத்திகரிச்சு மாற்ற முடியும்னும், அது மனுஷன் மீதான அன்பாவும் இரட்சிப்பாவும் இருக்குங்கறதயும் அவங்களோட இருதயத்தின் ஆழத்திலயிருந்து அறிஞ்சுக்கறாங்க.”

நடைமுறைத் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை எப்படி இருக்குங்கறத அவங்களோட ஐக்கியத்தின் மூலமா நான் பாத்தேன். நம்மல நியாயந்தீர்த்து நம்மோட சீர்கேடுகளயும் நம்மோட பாவங்களுக்கான மூலக் காரணத்தயும் வெளிப்படுத்தி, மாறுவதுக்கான வழிய நமக்குக் காட்டி, நம்மல சுத்திகரிச்சு இரட்சிக்கவும் தேவன் உண்மையிலே வார்த்தைகள வெளிப்படுத்தறாரு. இதுக்கு முன்னாடி நான் பாவஞ் செஞ்சப்பவெல்லாம், என்னை மன்னிக்கும்படியா மட்டுந்தான் நான் கர்த்தரிடத்தில கேட்டுக்கிட்டிருந்தேன், ஆனா அதுக்கப்புறம் என்னால திரும்பவும் பாவஞ் செய்யாம இருக்க முடியல, ஏன்னா நான் கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிடல. நான் இப்போ கடைசியா பாவத்தவிட்டு விலகி சுத்திகரிக்கப்படுற பாதைய கண்டுபிடிச்சேன்.

அதுக்கப்புறமா சர்வவல்லமையுள்ள தேவனோட நிறைய வார்த்தைகளயும், அத்தோட சகோதர சகோதரிகள் எழுதன பல சாட்சிகளயும் நான் வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்தான் சத்தியம்னும், அவற்றால ஜனங்கள சுத்திகரிச்சு மாற்ற முடியுங்கறத குறிச்சு நான் உறுதியானேன். சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்த கர்த்தரா இருக்காருங்கறத அறிஞ்சு, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டேன். என்னோட கற்பனையில வாழ்ந்ததயும், பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்காக கர்த்தர் வரணும்னு காத்திருந்ததயும் திரும்ப நெனச்சுப் பாத்தேன். சத்தியத்த வெளிப்படுத்தவும், தேவனோட வீட்லயிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைய ஆரம்பிக்கவும் தேவன் ஏற்கனவே இரகசியமா வந்துட்டாருங்கறது எனக்குத் தெரியாம இருந்துச்சு. கடைசி நாட்களின் தேவனோட இரட்சிப்ப நான் கிட்டத்தட்ட தவறவிட்டிருந்தேன். அவரேட சத்தத்தக் கேட்கறதுக்கும், அவரோட சிங்காசனத்துக்கு முன்பா உயர்த்தப்படுறதுக்கும், கிறிஸ்துவோட சிங்காசனத்துக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்படுறத ஏத்துக்கவும் என்னைய அனுமதிச்ச தேவனோட இரக்கத்துக்காகவும் அன்புக்காகவும் அவருக்கு நன்றி செலுத்தறேன். சர்வவல்லமையுள்ள தேவனுக்கே நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்றல்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென...

பைபிள் பிரசங்க குறிப்புகள்: வேதாகமத்தை சரியாக அணுகியதன் மூலம், நான் கர்த்தருடைய வருகையை வரவேற்றிருக்கிறேன்

தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், தேவன் மீதான நம்பிக்கை பைபிளில் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும், பைபிளிலிருந்து கூறப்படுவது மதங்களுக்கு எதிரானது என்றும் பல சகோதர சகோதரிகள் நம்புகிறார்கள். சகோதரி சுன்கியு இந்த கருத்தையும் வைத்திருந்தார். பின்னர், ஒரு காலகட்டத்தில், அவள் பைபிளைப் பற்றிய சரியான அறிவைப் பெற்றாள், இதனால் கர்த்தரை வரவேற்றாள்.

புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம்...

வேதாகமத்தைத் தவிர வேறெதிலாவது தேவன் பேசியிருக்கிறாரா?

2018 ஜனவரியில ஒரு நாள் நான் சகோதரி சியேயையும் சகோதரி சென்னையும் ஆன்லைன்ல சந்திச்சேன், அவங்களுக்கு வேதாகமத்த பத்திய ஒரு பிரத்தியேகமான...