கிறிஸ்தவர்கள் கூடுகைகளில் தவறாமல் கலந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்

செப்டம்பர் 27, 2021

சாங் க்விங்

அது வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” (எபிரெயர் 10:25). கூடுகைகளில் கலந்துகொள்வது கிறிஸ்தவர்களாகிய நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் இப்போது, சில சகோதர சகோதரிகளால் அதை வழக்கமாக செய்ய முடிவதில்லை, ஏனென்றால் அவர்கள் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். அவர்களில் சிலர் கூடுகைகளில் கலந்துகொள்வதை ஒரு கூடுதல் சுமையாகக் கருதுகின்றனர், தேவனுடைய வார்த்தைகளைத் தாங்களாகவே வீட்டில் கொஞ்சம் வாசித்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

உண்மையிலே, கூடுகைகளில் கலந்துகொள்வதை ஒரு சுமையாக கருதி, குடும்ப வாழ்க்கை மற்றும் வேலைக்காக நமது கூடுகைகளை விட்டுவிடுவதைத் தேர்வு செய்வதற்கான காரணம் என்னவென்றால் கூடுகைகளில் கலந்துகொள்வதன் அர்த்தமும் அதைச் செய்யாததனால் ஏற்படும் பின்விளைவுகளும் நமக்குப் புரிவதில்லை என்பதேயாகும். இன்று, நாம் அதைப் பற்றி ஒரு ஐக்கியம் கொள்வோம்.

கூடுகைகளில் கலந்து கொள்ளாத கிறிஸ்தவர்களை தேவன் எப்படிப் பார்க்கிறார்?

தேவன் சொல்லுகிறார்: “உன் ஜீவிதத்தின் மிகப் பெரிய காரியமாக, ஆகாரம், வஸ்திரங்கள் அல்லது வேறு எதையும் விட முக்கியமானதாக விசுவாசத்தை நீ அணுகினால் மட்டுமே நீ தேவன் மீதுள்ள விசுவாசத்திலிருந்து ஆதாயம் பெறுவாய்! உனக்கு நேரம் இருக்கும்போது மட்டுமே நீ நம்பினால், உன் முழு கவனத்தையும் உன் விசுவாசத்திற்கு அர்ப்பணிக்க இயலாமல் நீ எப்போதும் குழப்பத்தில் மூழ்கியிருந்தால், நீ ஒன்றும் பெற மாட்டாய்.” “தேவனுடைய இருதயத்திற்குள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளப்படாத சிலருடைய விசுவாசம் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தம்மைப் பின்பற்றுபவர்களாக அவர்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய நம்பிக்கைகளை அவர் புகழ்வதில்லை. இந்த ஜனங்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனைப் பின்பற்றினாலும், அவர்களுடைய கருத்துக்களும் பார்வைகளும் ஒருபோதும் மாறவில்லை. அவர்கள் அவிசுவாசிகளைப் போன்றவர்கள். அவர்கள் அவிசுவாசிகளின் கொள்கைகள் மற்றும் காரியங்களைச் செய்வதற்கான வழிகள் மற்றும் அவிசுவாசிகளின் பிழைப்பு மற்றும் விசுவாச விதிகளை பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தையை தங்கள் ஜீவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. தேவனுடைய வார்த்தை சத்தியம் என்று அவர்கள் ஒருபோதும் நம்பவில்லை. தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தேவனை தங்கள் தேவனாக அவர்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் தேவனை நம்புவதை ஒருவித முதிர்ச்சியற்ற பொழுதுபோக்காக பார்க்கிறார்கள். அவரை வெறும் ஆவிக்குரிய ஜீவாதாரமாக கருதுகிறார்கள். எனவே, தேவனுடைய மனநிலையையோ சாராம்சத்தையோ முயற்சி செய்து புரிந்துக்கொள்வது மதிப்புக்குரியது என்று அவர்கள் நினைக்கவில்லை. … அத்தகையவர்களை தேவன் எப்படிப் பார்க்கிறார்? அவர் அவர்களை அவிசுவாசிகளாகவே கருதுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனை நமது இருதயத்தில் மகிமைப்படுத்த வேண்டும் என்பதை நாம் இதன் மூலம் பார்க்க முடிகிறது. நமது வாழ்க்கையிலோ அல்லது வேலையிலோ, நாம் எப்போதும் தேவனுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், மேலும் கூடுகைகளில் கலந்துகொண்டு, தேவனிடம் ஜெபிக்க வேண்டும் மற்றும் மிகவும் முக்கியமான காரியங்களாக தேவனுடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும். இதைத்தான் தேவன் மீது விசுவாசமுள்ள ஒருவர் குறைந்தபட்சமாக செய்ய வேண்டியதாகும். தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிப்பதில் நாம் திருப்தி அடைந்துவிட்டு, ஆனால் கூடுகைகளில் கலந்து கொள்வதை மதிக்காமல் மற்றும் தேவனை விசுவாசிப்பதை ஒரு ஆவிக்குரிய ஆதாரமாக எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் பணம் சம்பாதிப்பதிலும், உலக காரியங்களிலும் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, கூடுகைகளில் கலந்துகொண்டாலும் கலந்துகொள்ளாவிட்டாலும் அது எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது என்று நினைத்தால், அத்தகையதொரு அக்கறையில்லா முறையில் விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், நாமும் சரியாக அவிசுவாசிகளைப் போலவே இருக்கவில்லையா? அவிசுவாசிகள் சத்தியத்தை நேசிப்பதில்லை, தேவனிடமிருந்து வரும் ஜீவியத்தை நாடுவதில்லை, மேலும் பணம் சம்பாதிப்பதிலும் தங்கள் சொந்த மாம்சத்தைத் திருப்திப்படுத்துவதிலும் ஈடுபட்டிருக்கின்றனர். தேவனுடைய விசுவாசிகளாகிய நாமும் அவிசுவாசிகளைப் போன்ற அதே நாட்டமுள்ள குறிக்கோள் மற்றும் அதே வாழ்க்கை நோக்கத்தை பகிர்ந்து கொண்டால், நமது விசுவாசத்தைப் பற்றி தேவன் என்ன நினைப்பார்? தேவன் மீதான விசுவாசத்துக்கு நேரான நமது அலட்சிய மற்றும் அக்கறையற்ற மனப்பான்மைக்கு ஏற்ப தேவன் நம்மை அவிசுவாசிகளாக வரையறுப்பார். அவர் நம்மை அவரைப் பின்பற்றுகிறவர்களாக அங்கீகரிக்க மாட்டார், ஏனென்றால் நாம் அவரை விசுவாசிக்கிறோம் ஆனால் அவரை மெய்யாகவே ஆராதிப்பதில்லை மற்றும் அவருடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அவருடைய தேவைகளுக்கு ஏற்ப செயல்படவோ நாம் விரும்புவதில்லை. இதன் விளைவாக, நமது இறுதி பலனானது அவிசுவாசிகளைப் போலவே இருக்கும், அது தேவனால் நிந்திக்கப்பட்டு தண்டிக்கப்படும். இவ்வாறு, நாம் கூடுகைகளில் வழக்கமாக கலந்துகொள்வது நாம் மெய்யாகவே தேவனை விசுவாசிக்கிறோமா, நாம் சத்தியத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருக்கிறோமா என்பதைக் காண்பிக்கிறதா என்பதை நாம் பார்க்க முடியும். நாம் கூடுகைகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்கு எப்போதும் சாக்குப்போக்குச் சொல்வோமேயானால், மற்றும் நாட்டம் குறித்த நமது தவறான கருத்துக்களிலிருந்து நாம் திரும்பாமல் இருந்தால், நாம் தேவனை எத்தனை வருடங்கள் விசுவாசித்திருந்தாலும் சத்தியத்தையோ அல்லது ஜீவனையோ நாம் பெறமாட்டோம், மேலும் நாம் நிச்சயமாகவே நீக்கப்படுவோம் என்ற முடிவை அடைவோம். ஆகையால், நமது சொந்த கருத்துக்கள் மற்றும் கற்பனைகளின்படி நாம் தேவனை விசுவாசிக்க முடியாது, அல்லது நாம் விரும்பாத போதெல்லாம் கூடுகைகளில் கலந்துகொள்வதை நிறுத்த முடியாது, ஏனென்றால் இறுதி வரை நாம் ஒரு முதிர்ச்சியற்ற வழியில் தேவனை விசுவாசித்தால், தேவன் நம்மை அவருடைய விசுவாசிகளாக அங்கீகரிக்க மாட்டார்.

கூடுகைகளில் நாம் அடிக்கடி கலந்துகொள்ளாமலிருப்பதற்குப் பின்னால் இருப்பது சாத்தானின் திட்டம்

பலர் தாங்கள் கூடுகைகளில் கலந்துகொள்ளாததை நியாயப்படுத்த, பணம் சம்பாதிப்பது, சமூகமயமாக்குவது அல்லது தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்வது ஆகியவற்றில் மிகவும் மும்முரமாக இருப்பதாக சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த சாக்குப்போக்குகள் மிகவும் நியாயமானதாகத் தோன்றுகின்றன, ஆனால் நம்மை அறியாமலே நாம் சாத்தானின் திட்டங்களால் பிடிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் சொல்லுகிறார், “தேவன் தனது கிரியையைச் செய்கிறார், தேவன் ஒரு நபரைக் கவனித்துக்கொள்கிறார், இந்த நபரைப் பார்க்கிறார், எல்லா நேரங்களிலும் சாத்தான் அவனது ஒவ்வொரு அடியையும் பின் தொடர்ந்து செல்கிறான். தேவன் யாரை விரும்புகிறாரோ, சாத்தானும் அவனை கவனிக்கிறான், பின்னால் செல்கிறான். தேவன் இந்த நபரை விரும்பினால், தேவனைத் தடுக்க சாத்தான் தன் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்வான். பல்வேறு தீய சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி, தேவன் செய்யும் வேலையைச் சோதிக்கவும், சீர்குலைக்கவும், அழிக்கவும் செய்வான். இவை எல்லாவற்றையும் செய்வது அதன் மறைவான நோக்கத்தை அடைவதற்காக தான். இது என்ன நோக்கம்? தேவன் யாரையும் ஆதாயப்படுத்துவதை அது விரும்பவில்லை; தேவன் விரும்பும் அனைத்துமே தனக்கு வேண்டும் என விரும்புகிறது, அது அவர்களை ஆக்கிரமிக்க விரும்புகிறது, அவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, அவர்களை தன் பொறுப்பிலேற்க விரும்புகிறது. இதனால் அவர்கள் அதை வணங்குகிறார்கள், அதனால் அவர்கள் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது சாத்தானின் கெட்ட நோக்கம் அல்லவா? … தேவனுடன் போரிடுவதிலும், அவருக்குப் பின்னாலே செல்வதிலும், தேவன் செய்ய விரும்பும் எல்லா கிரியைகளையும் தரைமட்டமாக்குவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆக்கிரமித்து கட்டுப்படுத்துவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பது தான் சாத்தானின் நோக்கம். அவை அப்படி அழிக்கப்படாவிட்டால், அவர்கள் சாத்தானால் பயன்படுத்தப்படுவதற்கு அதன் வசமாகிறார்கள்—இது தான் அதன் நோக்கம்.” “இது மகிழ்ச்சியும் அற்புதமும் காணப்படும் உலகம் போல ஜனங்களுக்குத் தோன்றுகிறது. இது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, ஜனங்களுடைய இருதயங்கள் யாவும் அதனுள் மூழ்கியிருக்கின்றன. பலர் அதில் சிக்குண்டு, அதிலிருந்து தங்களை விடுவிக்க முடியாமல் காணப்படுகின்றனர். தந்திரம் மற்றும் சூனியம் ஆகியவற்றில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வஞ்சிக்கப்பட்டுப்போவார்கள். நீ முன்னேற்றத்திற்காக பாடுபடாவிட்டால், குறிக்கோள்கள் இல்லாதிருந்தால், உன்னை உண்மையான வழியில் நிலை நாட்டவில்லை என்றால், நீ பாவத்தின் பெரிய அலைகளால் அடித்துச் செல்லப்படுவாய்.

தேவன் நம்மை இரட்சிப்பதற்காக கிரியை செய்கிறார், ஆனால் சாத்தான் நாம் தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்பதை தேவனுடைய வார்த்தைகளின் மூலம் நாம் பார்க்கிறோம். ஆகையால், நாம் தேவனிடம் வருவதைத் தடுக்க அது சாத்தியமான எல்லா வழிகளையும் முயற்சி செய்கிறது. பணம், புகழ் மற்றும் அந்தஸ்து, சாப்பிடுதல், குடித்தல், நமக்கு நாமே அனுபவித்தல் போன்ற காரியங்கள் எல்லாம் நமக்கு இச்சைகளாக இருக்கின்றன. “பணமே எல்லாமாகிவிடாது, ஆனால் அது இல்லாமல் உன்னால் எதுவும் செய்ய முடியாது,” “வாத்து எங்கு பறந்தாலும் கத்துவது போலவே மனுஷன் எங்கு தங்கினாலும் தனது பெயரை பின்னால் விட்டுச் செல்கிறான்,” “வாழ்க்கை குறுகியது அதனால் மகிழ்ச்சியாக நாளைக் கழி” என்று நாம் அடிக்கடி சொல்வது போன்ற அனைத்து வகையான தவறான கண்ணோட்டங்களையும் சாத்தான் முதலில் ஜனங்களுக்குள் புகுத்தினான். நம்மிடம் சத்தியம் இல்லையென்றால், இந்த தவறான கண்ணோட்டங்கள் நம்மை எளிதில் வஞ்சித்துவிடும். நாம் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும்போது, பணத்தையும் புகழையும் துரத்துதல் மற்றும் மாம்சத்தில் ஈடுபடுதல் போன்ற தீய போக்குகளில் நாம் விழுந்துவிடுவோம், மேலும் நாம் அவிசுவாசிகளைப் போலாகி, சதியாலோசனையில் ஈடுபட்டு, புகழ் மற்றும் ஆதாயத்திற்காக துரோகியாக நடந்து கொள்வோம், பாவத்தைப் பாவம் என்று நம்பாமலே பாவத்தின் நடுவே வாழ்வோம். குறிப்பாக நமது வாழ்க்கையை விட வேறொருவரின் வாழ்க்கை நன்றாக இருப்பதை நாம் பார்க்கும்போது, அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்பது பற்றி நாம் கடினமாக சிந்திப்போம். இன்னும் சிலர் தங்களுடைய சிக்கலான தனிப்பட்ட உறவுகளைப் பேணுவதற்காகச் சாப்பிடுதல், குடித்தல் மற்றும் தங்களுக்குத் தாங்களே அனுபவித்தல் போன்ற தரங்கெட்ட, சீர்கேடான வாழ்க்கையை வாழ்கின்றனர், மேலும் அவர்கள் கூடுகைகளில் கலந்துகொள்வதை ஒரு சுமையாக கருதுகின்றனர். ஒருவர் அத்தகைய சுழலில் சிக்கிவிட்டால், அவர்கள் சாத்தானுக்கு பலியாகிவிடுகின்றனர். அவர்கள் ஆவியில் மேலும் மேலும் அந்தகாரப்படுவது மட்டுமின்றி, அவர்களுடைய வாழ்க்கையும் மேலும் மேலும் வெறுமையாகிவிடும். இறுதியாக, அவர்கள் தேவனிடமிருந்து விலகி இருப்பதனாலும், தேவனைக் காட்டிக் கொடுப்பதனாலும், உலகிற்குத் திரும்புவதனாலும் அவர்கள் சத்தியத்தையும் இரட்சிப்பையும் பெறும் வாய்ப்பை இழப்பார்கள்.

இப்போது, பல கிறிஸ்தவர்களால் சாத்தானின் தந்திரங்களைக் காண முடிவதில்லை, உலகின் போக்குகளைப் பின்பற்றுவது ஒரு பெரிய பாவம் அல்ல என்று நினைக்கின்றனர், மேலும் தேவனை விசுவாசிப்பதும் சத்தியத்தைப் பின்பற்றுவதும் ஒரே இரவில் பலன்களைத் தர முடியாது என்று நினைக்கின்றனர். ஆகையால், அவர்கள் பெரும்பாலும் மாம்சத்தைப் பின்பற்றுகின்றனர் மற்றும் சத்தியத்தின் மீதான அவர்களுடைய நாட்டத்தில் எந்த அவசர உணர்வும் இல்லை. உண்மையிலேயே, சாத்தான் ஜனங்களை சீர்கெடுத்து அவர்களை தேவனிடமிருந்து இன்னும் இன்னும் அதிகமாக திருப்பி, இறுதியில் அவர்களை முற்றிலும் பட்சித்துப்போடுவதற்காக தீய போக்குகளைப் பயன்படுத்துகிறான். நாம் சத்தியத்தை உறுதியாக பின்பற்றவில்லை என்றால், சாத்தானின் தந்திரங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. சாத்தான் ஏவாளை பாவம் செய்ய சோதித்தபோது, தேவனை மறுப்பதும் காட்டிக்கொடுப்பதும் பின்விளைவுகளை உண்டாக்கும் என்று ஜனங்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக, ஜனங்களை வஞ்சிப்பதற்கு நயமாக ஒன்றைச் சொல்கிறது மற்றும் சாத்தான் அந்த காரியங்களை அவர்களுடைய நன்மைக்காகச் சொல்வதாக ஒரு தவறான உணர்வை அவர்களுக்குத் தருகிறது, இறுதியில் அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுக்கும் காரியங்களைச் செய்கின்றனர். இப்போதெல்லாம், நாம் வஞ்சிக்கப்பட்ட ஏவாளைப் போலவே இருக்கிறோம், தேவனுடைய வார்த்தைகளை நம்பாமல், நமக்கு முன்னால் இருக்கும் இந்த பொருட்களை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறோம். நமது உடல் இன்பத்தை திருப்திப்படுத்துவதற்காக, நமது சக்தியையும் நேரத்தையும் அதற்காக அர்ப்பணிக்க நாம் தயங்குவதில்லை. இது இப்படியே போனால், நாமும் சாத்தான் பட்சிப்பதற்கான இலக்காக இருக்க மாட்டோமா? ஆனாலும், நாம் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றி, திருச்சபை ஜீவியத்தில் இயல்பாக கலந்துகொண்டு, அதிக சத்தியங்களைப் புரிந்துகொள்வோமேயானால், சத்தியத்தைப் பயன்படுத்தி சாத்தானின் சூழ்ச்சிகளை நம்மால் அறிந்துகொள்ள முடியும், மேலும் நாம் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாக மாட்டோம்.

கூடுகைகளில் கலந்துகொள்வது ஏன் மிகவும் முக்கியமானது?

கர்த்தராகிய இயேசு சொன்னார், “ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்(மத்தேயு 18:20). தேவன் சொல்லுகிறார், “தேவனால் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வது மட்டுமின்றி, திருச்சபைக்குள்ளும் கிரியை செய்கிறார். அவரால் யாருக்குள்ளும் கிரியை செய்ய இயலும். அவரால் தற்காலத்திலும் உனக்குள் கிரியை செய்யக்கூடும், மேலும் நீ இந்த கிரியையை அனுபவிப்பாய். அடுத்த காலகட்டத்தில், அவர் வேறொருவருக்குள் கிரியை செய்யலாம், இந்த விஷயத்தில் நீ விரைந்து பின்பற்ற வேண்டும்; தற்போதைய ஒளியை நீ எவ்வளவு நெருக்கமாகப் பின்பற்றுகிறாயோ, அவ்வளவு அதிகமாக உன் வாழ்க்கை வளர்ச்சியடையும். ஒருவர் எவ்விதமான நபராக இருந்தாலும், அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால், நீ பின்பற்ற வேண்டும். அவர்கள் அனுபவித்த விதமாகவே நீங்களும் அனுபவிப்பீர்கள், நீங்கள் இன்னும் மேலான காரிங்களையும் பெறுவீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீ மிக விரைவாக முன்னேறுவாய். இதுதான் மனிதர்களின் பரிபூரணத்துக்கான பாதையாகும், இதன் மூலமாகவே வாழ்க்கை வளர்ச்சியடைகிறது.

திருச்சபைதான் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் இடம் என்பதை தேவனுடைய வார்த்தைகளின் மூலம் நாம் அறிவோம். தேவனுடைய வார்த்தையை வாசிக்க சகோதர சகோதரிகள் ஒன்றாக கூடும் வரை, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வார். ஆகையால், திருச்சபை ஜீவியம் ஜீவிப்பது என்பது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்கும் நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்வதற்கும் ஒரு வழியாகும். வெவ்வேறு சகோதர சகோதரிகளுக்கு வெவ்வேறு திறன்கள், நுண்ணறிவுகள் மற்றும் அனுபவங்கள் இருப்பதாலும், தேவனுடைய வார்த்தையின் மூலமாக வெவ்வேறு அறிவூட்டுதல் மற்றும் அறிவைக் கொண்டிருப்பதாலும், நாம் ஐக்கியப்படுவதற்கு ஒன்றாகக் கூடும் போது, நமது பலவீனங்களைப் போக்க ஒருவர் மற்றொருவருடைய வலுவான கருத்துக்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும், இதன் மூலமாக நாம் சத்தியத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். நாம் எதையாவது தவறாகப் புரிந்துகொள்ளும் போது, சகோதர சகோதரிகள் அதை கவனித்து, சரியான நேரத்தில் நம்முடன் தொடர்புகொள்வார்கள், சத்தியத்திற்கு ஏற்ப புரிந்துகொள்வது எப்படி என்பதை நமக்குச் சொல்வார்கள். மேலும், சத்தியத்தைப் பின்தொடரும் ஒவ்வொரு சகோதர சகோதரியும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்தியத்தைப் பற்றிய புதிய புரிதலையும் அனுபவத்தையும் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய கிரியையை எவ்வாறு அனுபவிக்கின்றனர் என்ற அவர்களுடைய பேச்சைக் கேட்பதன் மூலம், நாமும் அதைப் பெற்றுக்கொள்வோம். ஆகையால், திருச்சபை ஜீவியமானது அதிக சத்தியங்களைப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது மற்றும் ஜீவியத்தில் வளர உதவுகிறது. “தேவனுடைய வார்த்தையை நானே வீட்டில் வாசிப்பதன் மூலம் என்னாலும் பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலைப் பெற முடியாதா?” என்று சிலர் சொல்லலாம். இது உண்மை தான், ஆனால் ஒரு நபர் புரிந்துகொள்வது மிகவும் குறைவாகவே இருக்கிறது, மேலும் உங்கள் தனிப்பட்ட அறிவூட்டுதல் மற்றும் தேவனிடமிருந்து வரும் வெளிச்சம் ஆகியவையும் குறைவாகவே உள்ளன. இந்த விஷயத்தில், நாம் சத்தியத்தை மெதுவாக புரிந்துகொள்கிறோம். பெரும்பாலான நேரங்களில் சில எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் அந்த வார்த்தைகளைச் சொல்லுவதில் தேவனுடைய நோக்கம் என்ன, நடைமுறைக் கொள்கைகள் என்ன போன்ற விவரங்களைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலைக் கொண்டிருக்க முடியாது. சில நேரங்களில் நாம் ஒரு தவறான புரிதலையும் கூட கொண்டிருக்கலாம், ஏனென்றால் நாம் தேவனுடைய வார்த்தைகளை அவற்றின் நேர்பொருள் அர்த்தத்திற்கு ஏற்ப நமது மனதில் பகுப்பாய்வு செய்ய முயற்சி செய்கிறோம், இவ்வாறு தேவனைப் பற்றிய கருத்துக்களையும் தவறான புரிதல்களையும் கொண்டிருக்கிறோம். இதன் விளைவாக, நமது ஜீவிய வளர்ச்சியானது மெதுவாகவே இருக்கும், அல்லது நாம் தவறாக செயல்படலாம், இது நமது ஜீவிய வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

இது தவிர, நிஜ வாழ்க்கையில், வேலையில் ஏற்படும் சிரமங்கள், சகப் பணியாளர்களிடமிருந்து வரும் போட்டி அழுத்தம், குழந்தைகளைப் படிக்க வைப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் நமது வாழ்க்கைத் துணைகளுடனான முரண்பாடுகள் போன்ற சகல விதமான பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்வோம். நமது உயரம் சிறியதாக இருப்பதாலும், நமக்கு சத்தியம் புரியவில்லை என்பதாலும், காரியங்களை நம்மால் தெளிவாக பார்க்க முடியவில்லை என்பதாலும், பல சிரமங்களை எவ்வாறு கையாள்வது என்றே நமக்குத் தெரியவில்லை. நம்மிடம் ஒரு சரியான திருச்சபை ஜீவியம் இருந்தால், கூடுகைகளில் நமது சகோதர சகோதரிகளிடம் நாம் தெரிவிக்கலாம், அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பேசுவார்கள் மற்றும் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள், இதன் மூல் நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு பாதையைப் பெறுவோம் மற்றும் எவ்வாறு நடப்பது என்பதையும் அறிந்துகொள்வோம். இது போலவே, நாம் எவ்வளவு அதிகமாக சத்தியத்தைத் தேடி பிரச்சினைகளைத் தீர்க்கிறோமோ, நாம் அவ்வளவு அதிகமாக சத்தியத்தைப் புரிந்துகொள்வோம் மற்றும் குறைவான சிரமங்களும் பிரச்சனைகளும் இருக்கும், மேலும் நமது இருதயங்கள் இலகுவாகும். ஆகையால், கூடுகைகளில் கலந்துகொள்வது கூடுதல் சுமையாக இல்லாமல் இருப்பது மட்டுமின்றி, நமக்கு அதிக ஆதாயங்களையும் தரும். நமது ஜீவியங்கள் வேகமாக வளரும், மேலும் தேவனுடனான நமது உறவு மேலும் மேலும் இயல்பாக இருக்கும். திருச்சபை ஜீவியமானது நமக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கிறது!

இதுவரை, நீங்கள் கூடுகைகளில் கலந்துகொள்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

By Zhang Lan, South Korea “தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு...

கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகம தீர்க்கதரிசனங்களின் கடைசிச் சம்பவங்கள் தோன்றியுள்ளன. இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம்...

கிறிஸ்தவர்கள் எவ்வாறு பாவத்தின் கட்டுகளிலிருந்து விடுபட்டு சுத்திகரிக்கப்படுவார்கள்?

பல கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கர்த்தருக்கு முன்பாக ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறார்கள், ஆனாலும் தொடர்ந்து பாவம் செய்கிறார்கள், இதன் விளைவாக அவர்கள் குழப்பமடைகிறார்கள். கிறிஸ்தவர்கள் எவ்வாறு பாவத்திலிருந்து விடுபட வேண்டும்? பாவத்தின் கட்டுகளிலிருந்து உங்களை எவ்வாறு முற்றிலும் விடுவித்துக் கொள்வது என்பதை இந்த உரை உங்களுக்குக் கூறுகிறது.