கத்தோலிக்க ஜெபம்: ஜெபமாலை ஜெபத்தை எப்போதும் ஜெபிப்பவர்களுக்கு தேவன் செவி கொடுப்பாரா?

பிப்ரவரி 3, 2022

கிளாரி, பிலிப்பைன்ஸ்

நான் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன், நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே எனது பெற்றோருடன் இணைந்து அனைத்து வகையான மதச் சடங்குகளையும் கடைப்பிடித்தேன். ஜெபங்கள்தான் என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. கத்தோலிக்கர்களாகிய எங்களுக்கு ஜெபமாலை மிகவும் அடித்தளமாக இருந்தது, நாங்கள் ஒவ்வொரு மாலை வேளையிலும் அதைச் சொல்லி ஜெபிப்போம். முதலில் நாங்கள் சிலுவையின் அடையாளத்தை இடும்போது, ஒரு முத்து மாலையின் சிலுவைப் பதக்கத்தை விரலில் தொங்கவிட்டு விசுவாசப் பிரமாணத்தைச் சொல்லி ஜெபிப்போம்; கர்த்தர் கற்பித்த ஜெபத்தை ஒரு முறையும், மங்கள வார்த்தை ஜெபத்தைப் பத்து முறையும், திரித்துவப் புகழை ஒரு முறையும் சொல்லி ஜெபிப்போம். முதல் பத்து முறை ஜெபமாலையின் மறைபொருளை அறிவிப்போம், பின்னர் அதை இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது முறையும் பத்து முறை சொல்லி ஜெபித்து, ஐந்தாவது முறையில் ஜெபமாலையின் மறைபொருளையும் சொல்லுவோம். அதன் பிறகு நாங்கள் கிருபைதயாபரத்துச் ஜெபத்தை ஜெபித்தோம். இந்த ஜெபங்கள் மிகவும் நீளமாக இருந்தன—முழு விஷயத்தையும் செய்வது எளிதானது அல்ல.

கத்தோலிக்க ஜெபம்

நவநாள் ஜெபம் என்பது கத்தோலிக்க ஜெபங்களில் மற்றொன்றாகும், மேலும் இது ஒன்பது நாட்களில் ஒரே மனதுடன் செய்யப்படுகிறது. தேவனுடைய உதவியால் கிருபை அருளப்படுவதே இதன் நோக்கமாகும். வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு ஜெபங்களைக் கொண்ட ஜெபத்திற்கான வழிகாட்டி புத்தகம் எங்களிடம் இருந்தது. ஜெபம் செய்வதற்கு முன், நாங்கள் எதை எதிர்பார்க்கிறோம் என்பதில் எங்கள் எண்ணங்களைச் செலுத்துவோம், பின்னர் ஜெபிப்பதற்கு சரியான ஜெபத்தைத் தேர்வு தேர்வு செய்வோம். நாங்கள் ஜெபத்தை முடித்ததும், கர்த்தர் கற்பித்த ஜெபம், மங்கள வார்த்தை ஜெபம், திரித்துவப் புகழ் ஆகியவற்றைச் சொல்வோம், பின்னர் அமைதியாக ஆழ்ந்த சிந்தனையுடன் இறுதி ஜெபத்தை முடிப்போம். நவநாள் ஜெபத்தை முடிப்பது மிகவும் கடினமாக இருந்தது, நான் அதைச் செய்தபோது, நான் எப்போதும் மிகவும் பக்தியுள்ளவளாய் காணப்பட்டேன். ஆனால் காலப்போக்கில், நான் எதிர்பார்த்த பெரும்பாலான விஷயங்கள் நடக்கவில்லை என்பதைக் கண்டறிந்தேன், மேலும் நான் குழப்பமடைய ஆரம்பித்தேன். இந்த ஜெபங்களை ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக ஒரே மனதுடன் செய்ய வேண்டும், அப்போது அது நிறைவேறும் என்று அவர்கள் சொன்னார்கள் அல்லவா? என் நம்பிக்கைகள் எதுவும் ஏன் நிறைவேறவில்லை? அவைகள் நிறைவேறவில்லை என்றால், நான் ஏன் இன்னும் அந்த ஜெபத்தைச் செய்து கொண்டிருந்தேன்? அந்த ஜெபங்களை முடிக்க நான் தயங்க ஆரம்பித்தேன், ஆனால் திருச்சபையில் உள்ள அனைவரும் இன்னும் அதைச் செய்து கொண்டிருந்தார்கள், அதனால் நான் அவர்களுடன் சேர்ந்து அதைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

நாங்கள் அதிகாலை 3 மணிக்கு எழுந்து மாதாவின் சொரூபத்தை வீடு வீடாக எடுத்துச் செல்ல வேண்டும், ஒவ்வொருவரின் வீட்டிலும், நாங்கள் மண்டியிட்டு ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும், அந்த ஜெபங்களை இடைவிடாது திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும் என்று கோருகிற ஜெபமாலை பவனி இருந்தது. உண்மையில் நான் ஒருபோதும் அதில் பங்கேற்க விரும்பவில்லை. ஒரு விஷயம் என்னவென்றால், அது மிகவும் களைப்படையச் செய்வதாக இருந்தது, நான் உண்மையில் தூக்கத்தில் இருந்தேன், மற்றொன்று, நான் இவ்வாறு குழப்பமடைந்தேன்: கன்னி மரியாளிடம் ஜெபம் செய்வதற்குப் பதிலாக நாம் ஏன் தேவனிடத்தில் நேரடியாக ஜெபிக்கக் கூடாது? ஆனால் என் பெற்றோர் என்னிடம் சொன்னார்கள், “கர்த்தராகிய இயேசு பரிசுத்த குமாரன் மற்றும் மரியாள் புனிதத் தாய், எனவே நாம் கர்த்தராகிய இயேசுவிடம் ஏதாவது கேட்க விரும்பினால், முதலில் நாம் மரியாளிடம் கேட்க வேண்டும், அவள் நம் சார்பாக கேட்பாள். அப்போதுதான் அதை நிறைவேற்ற முடியும்.” இந்த விளக்கம் கொஞ்சம் சுற்றிவளைத்து இருப்பதாக நான் உணர்ந்தேன், ஆனால் இது கத்தோலிக்க மார்க்கத்தின் விதி என்று நான் உணர்ந்தேன், அதை மீறி தேவனால் கண்டிக்கப்பட விரும்பவில்லை. அதனால் நான் அதன் போக்கிலேயே சென்று அதை செய்து கொண்டே இருந்தேன். எங்களின் ஜெபமாலை பவனி ஒன்றில் விசித்திரமான ஒன்று நடந்தது….

அது ஒரு அதிகாலை நேரமாக இருந்தது, எப்போதும் போலவே, நாங்கள் ஒரு திருச்சபை உறுப்பினரின் வீட்டிற்கு மாதாவின் சொரூபத்தை எடுத்துச் சென்றோம். எங்களில் சிலர் அவருடைய வீட்டில் ஜெபமாலை ஜெபத்தை செய்துகொண்டிருந்தோம், அதே சமயத்தில், இன்னும் சிலர் வெளியே ஜெபம் செய்து கொண்டிருந்தனர். பின்னர் ஏதோ ஒரு சோகம் நடந்தது—இரண்டு அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்தது. தரையில் குழி விழுந்து, வீட்டு உரிமையாளரையும் சிலரையும் நசுக்கியது. இது நடந்தபோது நான் முன் கதவுக்கு வெளியே இருந்தேன், அதிர்ஷ்டவசமாக நான் பாதிப்பிலிருந்து தப்பித்தேன். இந்தக் கொடூரமான காட்சியைப் பார்த்த எனக்கு பயமும் குழப்பமும் ஏற்பட்டது. நாங்கள் தேவனை வணங்கி, அவரிடம் ஜெபித்துக்கொண்டிருந்தோம், அப்படியிருக்க அவர் ஏன் அதை அனுமதிக்க வேண்டும்? நம்முடைய ஜெபங்களில் அவர் மகிழ்ச்சியடையவில்லையா? மீண்டும் அப்படி ஏதாவது நடக்குமோ என்ற பயத்தில், நான் மீண்டும் ஜெபமாலை பவனியில் பங்கேற்கவில்லை, ஆனால் நான் சொந்தமாக ஜெபத்தை செய்தேன்.

பிறகு ஒரு நாள் என்னுடைய வேத தியானங்களின் போது, நான் இந்த வேத வசனங்களை வாசித்தேன்: “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்(மத்தேயு நற்செய்தி 6:5-7). நான் இதில் கவனம் செலுத்தினேன். பிறர் கேட்க வேண்டும் என்பதற்காக மட்டும் ஜெபிக்கும் வெளிவேடக்காரர்களைப் போல் இருக்கக் கூடாது, மாறாக, நாம் இருதயத்திலிருந்து தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் கூறுகிறார். மேலும், நீண்ட ஜெபங்களைக் கேட்க தேவன் விரும்புவதில்லை. இத்தனை வருடங்களாக ஜெபங்களை செய்துகொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன். அவைகள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு நாளும் அதே வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வது உண்மையில் நினைவிலிருந்து எதையாவது திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதாக இருந்தது. ஜெபமாலை பவனியின் போது நடந்த அந்த சோகமான விஷயத்தைப் பற்றியும் யோசித்தேன், நாம் செய்வதை தேவன் விரும்பியிருக்க மாட்டார் என்று எண்ணினேன். இல்லையெனில், நம்முடைய ஜெபத்தின் போது அவர் ஏன் நம்மைப் பாதுகாக்கவில்லை? ஒருவேளை நான் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். எனவே, ஜெபமாலைக்கான ஜெபங்களை மீண்டும் செய்வதை நிறுத்த முடிவு செய்தேன், ஆனால் ஒருமுறை கர்த்தர் கற்பித்த ஜெபத்தையும், பத்து மங்கள வார்த்தை ஜெபத்தையும் மற்றும் பத்து அருள் நிறைந்த மரியே வாழ்க ஜெபத்தையும் செய்து, பின்னர் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபம் செய்து கொண்டே இருப்பேன்.

அப்படியிருந்தும், நான் இன்னும் தேவனால் தொடப்பட்டதாக உணரவில்லை, ஆனால்,‌ உண்மையிலேயே, அவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதாக உணர்ந்தேன். ஒரு சமயம் ஒரு தியானத்தின் போது, வேதாகமத்தில் உபவாச ஜெபம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன், அதனால் தேவன் மீதுள்ள எனது பயபக்தியை உபவாசத்தின் மூலம் வெளிப்படுத்தலாம் என்றும், அதே நேரத்தில், எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவுமாறு அவரிடம் கேட்கலாம் என்றும் நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் உபவாச ஜெபத்தை முடிக்கும் போதும், நான் பெற்றிருந்ததெல்லாம் காலி வயிறும் தலைவலியும்தான். நான் இதைப் பல மாதங்களாகக் கடைபிடித்தேன், ஆனால் இன்னும் தேவனால் தொடப்படவில்லை மற்றும் எனது பணி நிலைமை அப்படியே இருந்தது. மேலும் நான் சரீரப்பிரகாரமாக பலவீனமடைந்து, மிகவும் வியாதிப்பட்டதால், நான் உபவாசத்தை நிறுத்தினேன். அந்த நேரத்தில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை: நான் இவ்வளவு தியாகம் செய்தும் தேவன் ஏன் என் ஜெபங்களைக் கேட்கவில்லை? தேவன் உண்மையிலேயே என்னை ஒதுக்கிவிட்டாரா? என் இருதயத்தில் மென்மேலும் இருளையும் வெறுமையையும் உணர்ந்தேன், என் விசுவாசம் குறைந்து கொண்டே வந்தது.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டில், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த சில சகோதர சகோதரிகளை ஃபேஸ்புக்கில் சந்தித்தேன். கர்த்தர் ஏற்கனவே திரும்பி வந்திருக்கிறார் என்றும், அவர் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் என்றும் என்னிடம் சொன்னார்கள். அவர் சத்தியங்களை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் ஒரு புதிய கட்ட கிரியையைச் செய்கிறார், எனவே நம்முடைய ஜெபங்களை தேவன் கேட்பதற்கான ஒரே வழி சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்தில் ஜெபிப்பதுதான் என்றும் சொன்னார்கள். இல்லையெனில், நாம் எப்படி ஜெபித்தாலும், அது எந்த நன்மையையும் தராது. கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தபோது—யேகோவாவிடம் செய்யப்படும் எந்த ஜெபங்களையும் தேவன் கேட்கவில்லை, மேலும் ஜனங்களால் பரிசுத்த ஆவியானவருடைய பிரகாசத்தைப் பெற முடியவில்லை என்பதைப் போலவே இருந்தது. கர்த்தராகிய இயேசுவின் கிரியையை ஏற்றுக்கொண்டு அவருடைய நாமத்தில் ஜெபித்தவர்களால் மட்டுமே தேவனை அவர்களுடன் சேர்ந்து உணரவும்மற்றும் அவருடைய ஆசீர்வாதங்களையும் கிருபையையும் அனுபவிக்கவும் முடிந்தது.

அவர்களின் ஐக்கியத்தில், கர்த்தர் ஏற்கனவே திரும்பி வந்து ஒரு புதிய நாமத்தைப் பெற்றிருப்பதை நான் முதன்முறையாகக் கேள்விப்பட்டேன். நான் இன்னும் கர்த்தராகிய இயேசுவிடம்தான் ஜெபித்துக்கொண்டிருந்தேன், அதனால்தான் என்னால் கர்த்தரால் தொடப்பட்டதாக உணர முடியவில்லை. ஆனால் தேவனுடைய சித்தத்திற்கு ஒத்துப்போகாத எனது கடந்தகால ஜெபங்கள் அனைத்தும் எப்படிப்பட்டது எனக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. அப்போது, ஒரு நாள், நான் இதை தேவனுடைய வார்த்தைகளில் வாசித்தேன்: “ஜெபம் செய்வது, பாமலைகளைப் பாடுவது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பது பருகுவது அல்லது அவருடைய வார்த்தைகளைச் சிந்திப்பது போன்ற நடைமுறைகள் உண்மையில் ஏதேனும் விளைவைக் கொண்டிருக்கின்றனவா அல்லது மெய்யான புரிதலுக்கு வழிவகுக்கின்றனவா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தில் இவை அவசியம் என பலரும் நம்புகின்றனர். இந்த ஜனங்கள் தங்கள் முடிவுகளைப் பற்றிய சிந்தனை ஏதும் இல்லாமல் மேலோட்டமான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள்; அவர்கள் மதச் சடங்குகளில் திளைக்கும் ஜனங்கள், திருச்சபைக்குள் வாழும் ஜனங்கள் அல்ல, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் ஜனங்களும் அல்ல. அவர்களின் ஜெபங்களும், பாமாலைப் பாடுதலும், தேவனுடைய வார்த்தைகளைப் புசித்தலும் பருகுதலனைத்தும் விருப்பத்தினாலோ மனதிலிருந்தோ அல்லாமல் விதிமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன, நிர்ப்பந்தத்தினால் செய்யப்படுகின்றன, மேலும் நடைமுறை வழக்கத்தில் தொடர வேண்டுமென செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் எவ்வளவு ஜெபித்தாலும் பாடினாலும், அவர்களின் முயற்சிகள் பலனளிக்காது. ஏனென்றால் அவர்கள் கடைப்பிடிப்பது மதத்தின் விதிகள் மற்றும் சடங்குகள் மட்டுமே; அவர்கள் உண்மையில் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதைக் குறித்து தர்க்கம் செய்வதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளாகக் கருதுகிறார்கள். அத்தகையவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்வதில்லை. அவர்கள் மாம்சத்தை மகிழ்விக்கிறார்கள், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள். இம்மத விதிமுறைகளும் சடங்குகளும் தேவனிடமிருந்து வந்தவையல்ல. இவை மனிதனிடமிருந்து தோன்றியவையாகும். தேவன் விதிகளைப் பின்பற்றுவதில்லை. அவர் எந்த சட்டத்திற்கும் உட்பட்டவரும் அல்ல. மாறாக, அவர் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களைச் செய்கிறார், நடைமுறைச் செயல்களை நிறைவேற்றுகிறார். த்ரீ செல்ஃப் சர்ச் போல, ஒவ்வொரு நாளும் காலை ஆராதனைகளில் கலந்துகொள்ளுதல், மாலை நேர ஜெபங்கள் செய்தல் மற்றும் உணவுக்கு முன் நன்றியுணர்வு ஜெபம் செய்தல், எல்லாவற்றிலும் நன்றி செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எவ்வளவுச் செய்தாலும், எவ்வளவுக் காலம் அதைச் செய்தாலும், அவர்களிடம் பரிசுத்த ஆவியின் கிரியை இருக்காது. ஜனங்கள் விதிகளுக்கு மத்தியில் வாழும்போதும், சம்பிரதாய வழிமுறைகளில் தங்கள் இருதயங்களை நிலைநிறுத்தும்போதும் பரிசுத்த ஆவியானவர் செயல்பட முடியாது. ஏனென்றால் அவர்களின் இருதயங்கள், விதிகள் மற்றும் மனித கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தேவனால் தலையிடவும், அவற்றில் செயல்படவும் இயலாது. மேலும் அவர்கள் தங்கள் சட்டங்களின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே வாழ முடியும். அத்தகையவர்கள் ஒருபோதும் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து”).

இந்தப் பத்தியை வாசிக்காத வரையிலும், அந்தப் பலனற்ற ஜெபங்கள் அனைத்தும் இயக்கத்தின் வழியாகச் செல்லும் மத விதிகளும் சடங்குகளும் தவிர வேறில்லை என்பதை நான் உணராதிருந்தேன். தேவன் விரும்புவது அத்தகைய ஜெபத்தை அல்ல. நான் செய்த ஜெபமாலைகள், நவநாள் ஜெபங்கள், ஜெபமாலை பவனிகள் மற்றும் உபவாசங்கள் அனைத்தையும் பற்றி நினைத்துப் பார்த்தேன். நான் அதன் பலன்களைப் பற்றி சிந்திக்காமல் என் முயற்சிக்கான செயல்பாட்டில் கவனம் செலுத்தினேன்—நான் வெறுமனே சடங்குகளைக் கடைபிடித்துக்கொண்டிருந்தேன். பின்னர், அந்த ஜெப சடங்குகளைப் பற்றி எனக்கு சில குழப்பங்கள் இருந்தன, உண்மையில், நான் அவற்றைச் செய்ய விரும்பவில்லை, ஆனால், திருச்சபையில் உள்ள அனைவரும் அவற்றைச் செய்வதைப் பார்த்தேன், அவர்கள் அதைத்தான் தேவன் விரும்புகிறார் என்று சொன்னார்கள், அதனால் நானும் அவர்களுடன் இணைந்து பின்பற்றினேன். இத்தனை வருடங்களாக அவற்றைச் செய்த பிறகும், என் இருதயத்தில் சமாதானமும் மகிழ்ச்சியும் ஏற்படவில்லை என்பது மட்டுமல்லாமல், அது மென்மேலும் களைப்படையச் செய்வதாக இருந்தது, மேலும் தேவனுடனான எனது உறவு இன்னும் தூரமாகிக்கொண்டு இருந்தது. தேவன் இந்த சடங்காச்சாரமான ஜெபங்களில் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை, யார் எவ்வளவு செய்தாலும், அவர்களின் ஜெபங்கள் ஒருபோதும் கர்த்தரால் கேட்கப்படுவதில்லை என்பதை வாசிப்பது எனக்கு ஒரு உண்மையான விழிப்புணர்வாக இருந்தது. நான் உண்மையிலேயே ஒரு முட்டாளாக இருந்ததை உணர்ந்தேன்.

பின்னர், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளில் ஜெபத்தைப் பற்றிய மேலும் இரண்டு பத்திகளை வாசித்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியமென்பது தேவனுக்கு முன்பாக ஜீவிக்கும் ஜீவியமாகும். ஜெபிக்கும்போது, ஒருவர் தேவனுக்கு முன்பாக தன் இருதயத்தை அமைதிப்படுத்த முடியும். மேலும் ஜெபத்தின் மூலம் ஒருவர் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தைத் தேடலாம், தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளலாம், தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளலாம்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து”). “ஜெபம் என்பது ஒரு இயக்கத்தின் வழியாகச் செல்வதோ, வழிமுறையைப் பின்பற்றுவதோ அல்லது தேவனுடைய வார்த்தையை மனப்பாடம் செய்து கூறுவதோ அல்ல. வேறுவிதமாகக் கூறினால், ஜெபம் என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதோ மற்றவர்களைப் பின்பற்றுவதோ அல்ல. ஜெபத்தில் ஒருவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு ஒப்படைக்கக்கூடிய நிலையை அடைந்து, தேவனால் அவன் அசைக்கப்படும்படி ஒருவனது இருதயம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து”).

தேவனுடைய வார்த்தைகள் இதை மிகத் தெளிவாகக் கூறுகின்றன. ஜெபம் என்பது இயக்கங்களின் வழியாகச் செல்வதோ, ஒரு செயல்முறையைப் பின்பற்றுவதோ அல்லது தேவனுடைய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லுவதோ அல்ல. இது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அதிக அறிவொளி மற்றும் வெளிச்சத்தைப் பெறுவதும் தேவனுடைய சித்தத்தையும் தேவைகளையும் புரிந்துகொள்வதையும் பற்றியதாகும். நான் என்னைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். நான் எப்போதும் ஜெபத்திற்கான அனைத்து கத்தோலிக்க நடைமுறைகளையும் பின்பற்றியிருந்தேன், ஒவ்வொரு முறையும் நான் ஜெபிக்கும் போது, நான் அதே விஷயங்களையே கூறுவேன். நான் செய்து முடித்த பிறகு, நான் தேவனால் தொடப்பட்டதாக ஒருபோதும் உணரவில்லை. என் கால்கள் சோர்வடைந்து வலியை உணர்ந்தன, சில சமயங்களில் நான் தொடங்கிய உடனேயே அது முடிந்துவிட வேண்டும் என்று ஏங்கினேன். ஒவ்வொரு ஜெபத்தின் போதும் நான் அதன் போக்கிலேயே சென்றுகொண்டிருந்தேன். இந்த வேத வசனம் என்னை சிந்திக்க வைத்தது: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்(யோவான் நற்செய்தி 4:24). நாம் ஜெபத்தில் எவ்வளவு பேசுகிறோம் அல்லது எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பதைப் பற்றி தேவன் கவலைப்படுவதில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ளும்படியான உண்மையான இருதயத்துடன் அவரிடம் ஜெபிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார். இதை உணர்ந்துகொள்வது, கடந்த காலத்தில் நான் ஜெபித்த வழிகள் உண்மையில் தேவனுடைய சித்தத்திற்கு எவ்வாறு ஒத்துப்போகவில்லை என்பதை எனக்கு இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டியது.

நான் வாசித்த தேவனுடைய வார்த்தைகளின் மற்றொரு பகுதியில் இவ்வாறு இருந்தது: “உண்மையான ஜெபம் என்றால் என்ன? உண்மையான ஜெபம் என்பது உங்கள் இருதயத்தில் உள்ளவற்றைத் தேவனிடத்தில் எடுத்துக் கூறுவதாகும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு, தேவனோடு ஐக்கியப்படுவதாகும், தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவருடன் தொடர்பு கொள்வதாகும், குறிப்பாகத் தேவனுக்கு அருகில் இருப்பதை உணர்ந்து கொள்வதாகும், அவர் உங்களுக்கு முன் இருப்பதை உணர்ந்து, தேவனிடம் பேசுவதற்கு உங்களிடம் ஏதோ இருப்பதாக நம்புவதாகும். உங்கள் இருதயம் ஒளியால் நிறைந்திருப்பதை உணர்கிறது; மேலும், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதையும் உணர்கிறீர்கள். நீ தேவனிடமாக ஈர்க்கப்படுவதாக உணர்கிறாய்; உன்னிடம் கேட்கிற உன் சகோதர, சகோதரிகளுக்கு உன் வார்த்தைகள் மனநிறைவைக் கொண்டு வருகின்றன. அவர்கள் சொல்ல விரும்பிய, அவர்களுடைய வார்த்தைகள் உன்னுடைய வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருப்பது போல, அவர்கள் தங்கள் மனதில் உள்ள வார்த்தைகளை நீயே பேசி வெளிப்படுத்துவதாக உணர்வார்கள். இதுவே உண்மையான ஜெபமாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து”). “ஜெபிக்கும்பொழுது, தேவனுக்கு முன்பாக அமைதியான ஒரு இருதயம் உங்களுக்குக் காணப்பட வேண்டும். மேலும், உன் இருதயத்தில் நேர்மை காணப்பட வேண்டும். நீ உண்மையாகவே தேவனோடு ஐக்கியங்கொண்டு, ஜெபம் செய்யும்பொழுது, நீ இனிய சொற்களாலாகிய வாக்கியங்கள்மூலம் தேவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஜெபமானது, தேவன் இப்பொழுது நிறைவேற்ற விரும்புகிற ஒன்றை மையப்படுத்தியே காணப்படவேண்டும். தேவன் உனக்கு அதிக ஞான ஒளியையும், பிரகாசத்தையும் கொடுக்கும்படி, அவரிடம் கேள். ஜெபிக்கும்பொழுது உன் உண்மை நிலையையும், உனது பிரச்சனைகளையும், தேவனுக்கு முன்பாக நீ எடுத்த தீர்மானங்களையும் கூட அவருடைய சமூகத்திற்குள் கொண்டுவா. ஜெபம் என்பது வெறுமனே செயல்முறையைக் கைக்கொள்ளுதல் அல்ல; மாறாக, நேர்மையுள்ள இருதயத்துடன் தேவனைத் தேடுகிற ஒரு செயலாகும். உன் இருதயம் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக அமைதியோடு காணப்படும்படியாகவும், அவர் உன் இருதயத்தைக் காத்துக் கொள்ளும்படியாகவும் அவரிடம் வேண்டிக்கொள்; இதனால், அவர் உன்னை வைத்துள்ள சூழலில், நீ உன்னையே அறிந்துகொண்டு, உன்னை வெறுத்து, உன் சுயத்தைக் கைவிட்டுவிட்டு, பின் தேவனுடன் சாதாரண ஒரு உறவைக் கொண்டிருக்கும் படியாக, உன்னை விட்டுக் கொடுத்து, உண்மையிலேயே தேவனை நேசிக்கும் ஒருவராக மாற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து”).

உண்மையான ஜெபம் என்பது தேவனிடம் உள்ளத்திலிருந்து பேசுவது என்பதை நான் கண்டேன். இது நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் உட்பட, நம் மனதில் இருக்கும் விஷயங்களைப் பற்றி தேவனிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதைக் குறிக்கிறது. அவருடைய வழிநடத்துதலுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும், அதன்மூலம், நம்முடைய சொந்த சீர்கேட்டை நாம் கண்டுணர முடியும். தேவன் தம்முடைய சித்தத்தை நம்மைப் புரிந்துகொள்ளச் செய்ய நம்மைப் பிரகாசிப்பிக்கும் ஒரே வழி இதுவேயாகும். நான் முன்பு எப்படி ஜெபித்தேன் என்று திரும்பிப் பார்க்கையில், நான் இன்னும் சங்கடமாக உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் நான் ஜெபிக்கும்போது நான் ஜெபங்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தேன், என் இருதயத்தில் உள்ளதை தேவனிடத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை. நான் ஜெபிக்கும் போது பகுத்தறிவுள்ளவளாய் இருக்கவில்லை, மாறாக, தேவனிடத்தில் அவருடைய கிருபையைக் கேட்டுக்கொண்டிருந்தேன், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை, மற்றும் பல விஷயங்களைத் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தேன். இவை அனைத்தும் என் சொந்த நலனுக்காகவே இருந்தது, தேவனுடைய ஞானத்தைப் பெறுவதற்காகவோ அல்லது பாவத்திலிருந்து விடுபடுவதற்காகவோ அல்ல. கர்த்தராகிய இயேசு சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது: “ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்(மத்தேயு நற்செய்தி 6:31-33). நம் உணவு அல்லது உடை போன்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்று கர்த்தராகிய இயேசு நீண்ட காலத்திற்கு முன்பே நமக்குக் கற்பித்தார்—தேவன் இவை அனைத்தையும் நமக்காக ஆயத்தப்படுத்துவார். ஆனால் நானோ, எப்போதும் என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்காக இல்லாமல், என் மாம்சீக வாழ்க்கைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். அத்தகைய ஜெபம் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றதாக இருக்கவில்லை. நான் ஜெபத்தில் சில விஷயங்களைச் சொல்வேன், அது கேட்பதற்கு நன்றாகத் தோன்றினாலும், தேவனிடத்தில் நேர்மையற்றதாக இருந்தது. பாவம் செய்வதிலிருந்து நான் என்னைத் தடுக்கத் தவறியபோது, தேவன் என்னைக் கைவிட்டதைப் போல உணர்ந்தேன். நான் தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்பேன், நான் அதை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று கூறுவேன், ஆனால், உண்மையில் என் வளர்ச்சி மிகவும் சிறியது என்பதும், மேலும் என்னால் பாவத்தின் மீது வெற்றிபெற முடியவில்லை என்பதும் எனக்குத் தெரியும். நான் அதை மீண்டும் செய்வேன், ஆனால், நான் ஒருபோதும் என் இருதயத்தை தேவனுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. என் ஜெபங்கள் உள்ளத்திலிருந்து வரவில்லை என்பதையும், அவை வெறுமையாகவும் போலியாகவும் இருந்தன என்பதையும் இப்போது நான் புரிந்துகொண்டேன். என்னால் தடுத்து நிறுத்த முடியாத நான் செய்கிற பாவங்களுடனான எனது போராட்டங்களைப் பற்றி நான் தேவனிடம் ஜெபிக்க வேண்டும், மேலும் எனது சொந்த தவறான செயல்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவுமாறு அவரிடம் கேட்க வேண்டும், அதன்மூலம், பாவத்தின் கட்டுக்களிலிருந்து விடுபட, அவரால் என்னை வழிநடத்த முடியும்.

அப்போதிலிருந்து, நான் தேவனுடைய இந்த வார்த்தைகளைக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையில் நான் ஏதாவது ஒன்றைச் சந்திக்கும் போதெல்லாம், நான் தேவனிடத்தில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபம் செய்து, அவருடைய சித்தத்தைத் தேடுவேன். அதன்பின்பு, நான் அதை சலிப்பாக உணரவில்லை, ஒவ்வொரு ஜெபத்திற்குப் பிறகும் நான் அமைதியையும் சமாதானத்தையும் பெற்றேன். நான் தேவனிடத்தில் சொல்ல வேண்டிய எதையோ பெற்றிருப்பதாக எப்போதும் உணர்ந்தேன். என்னுடைய பழைய ஜெபங்கள் எனக்கு எப்பொழுதும் சோர்வடையச் செய்வதாகவும் சலிப்பாகவும் இருந்தன, ஆனால், ஜெபத்திற்கான இந்தப் புதிய வழிமுறையை என்னால் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடிந்தது. தேவனுக்கு முன்பாக என் இருதயத்தை அமைதிப்படுத்த என்னால் முடிந்தது, மேலும் நான் களைப்பாகவோ அல்லது சோர்வாகவோ உணரவில்லை. நான் ஒரு பிரச்சனை அல்லது சிரமத்தில் சிக்கிய போதெல்லாம், நான் தேவனுடைய சித்தத்தை நாடி, அவருடைய ஆளுகை மற்றும் ஏற்பாடுகளுக்கு கீழ்ப்படிகிற வரையில், இன்னும் அதிகமாக நான் அவருடைய வழிநடத்துதலைக் கண்டு அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான ஜெபம் என்ன என்பதைக் காட்டியதற்காக நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்—இப்போது நான், ஜெபத்திற்கான மதத்தின் விதிகள் மற்றும் சடங்காச்சாரங்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டிருக்கிறேன். தேவனிடத்தில் உண்மையாக ஜெபிப்பதன் மூலம், நான் பரிசுத்த ஆவியானவருடைய வெளிச்சத்தையும் ஏவுதலையும் பெற்று, நான் தேவனுக்கு இன்னும் அருகிலும் நெருக்கமாகவும் வளர்ந்திருக்கிறேன். தேவனுக்கே நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 1)

தேவாலயங்கள் இன்னும் வெறிச்சோடி காணப்படுகின்றன மற்றும் விசுவாசிகள் விசுவாசத்தில் பலவீனமாக உள்ளனர். உண்மையான மற்றும் பொய்யான வழியை நாம் எவ்வாறு வேறுபடுத்தி கர்த்தரின் வருகையை வரவேற்க வேண்டும்? கற்றுக்கொள்ள இப்போது படிக்கவும்.

இன்றைய நாளுக்கான கத்தோலிக்க சிந்தனை: கத்தோலிக்க வழிபாட்டு முறையைக் கடைப்பிடிப்பது கர்த்தருக்கு ஏற்புடையதா?

ஜெங்சின், ஆஸ்திரேலியா ஆசிரியரின் குறிப்பு: இரண்டாயிரம் ஆண்டுகளாக, தேவனை விசுவாசிக்கும் அனைவரும் வழிபாட்டு முறைமை, பாவசங்கீர்த்தனம்,...

தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்றல்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென...

இன்று கத்தோலிக்க திருப்பலி: எனக்கும் பரலோக ராஜ்யத்திற்கும் இடையில் யார் நிற்கிறார்கள்?

நான் ஒரு கத்தோலிக்க திருச்சபைய சேர்ந்தவளாக இருந்தேன். நான் சிறு வயதில் ஒரு கத்தோலிக்க பள்ளிக்குச் சென்றேன், ஆலய காரியங்கள்ல நான் எப்போதும்...