இன்று கத்தோலிக்க திருப்பலி: எனக்கும் பரலோக ராஜ்யத்திற்கும் இடையில் யார் நிற்கிறார்கள்?

ஜூன் 13, 2021

நான் ஒரு கத்தோலிக்க திருச்சபைய சேர்ந்தவளாக இருந்தேன். நான் சிறு வயதில் ஒரு கத்தோலிக்க பள்ளிக்குச் சென்றேன், ஆலய காரியங்கள்ல நான் எப்போதும் தீவிரமாக பங்கேற்பேன். நான் ஒவ்வொரு வாரமும் ஜெபங்களுக்கோ அல்லது ஐக்கியங்களுக்கோ செல்வேன். ஆனா கடந்த சில வருடங்களாக பாதிரியாரின் பிரசங்கங்களிலிருந்து நான் எதையும் பெறவில்லை, என்னிடம் இன்னும் பதிலளிக்கப்படாத கேள்விகள் நிறைய இருந்தன, அதனால பதில்களைக் காண ஆன்லைனிற்குச் சென்றேன்.

2018 ஆகஸ்ட் மாதத்தில், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் இணையதளத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் பார்த்தபோது நிறைய சுவிசேஷ திரைப்படங்கள் இருந்தன பட்டணம் கவிழ்க்கப்படும், திரும்பி வந்திருக்கிறவர் யார், தேவபக்திக்குரிய இரகசியம், வேதாகமத்த பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்துகிறார், தேவனுடைய நாமம் மாறியுள்ளதா?!, கண்ணியை தகர், ஆபத்தில் பேரானந்தம், மற்றும் பல. இந்த திரைப்பட தலைப்புகள் என் கவனத்தை ஈர்த்தன. நான் நினைத்தேன், “என் திருச்சபை இப்போது மிகவும் பாழடைந்துவிட்டது, பாதிரியார் அதே பழைய காரியங்களையே பிரசங்கிக்கிறார். அவர் நம்முடைய ஆவிகளை போஷிக்கவில்லை, கர்த்தராகிய இயேசு திரும்பி வர வேண்டுமென நாமெல்லாரும் ஏங்குகிறோம். கர்த்தரை வரவேற்க இந்த திரைப்படங்கள் எனக்கு உதவக்கூடும்.” நான் எல்லா திரைப்படங்களையும் பார்த்து முடித்தேன், கதாபாத்திரங்களின் ஐக்கியத்தின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் பற்றிய குறிப்புகளை எடுத்தேன். இந்த திரைப்படங்களின் மூலமாக கர்த்தர் ஏற்கனவே கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனாக திரும்பி வந்திருக்கிறார் என்பதையும், மனிதனை நியாயந்தீர்க்கவும் சுத்திகரிக்கவும் அவர் சத்தியத்தை வெளிப்படுத்தி கிரியை செய்கிறார் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன். தேவனுடைய நாமங்களின் இரகசியத்தைப் பற்றியும், அவருடைய மாம்சமாதலின் இரகசியம், வேதாகமத்திற்குப் பின்னால் உள்ள உண்மை பற்றியும், மெய்யான கிறிஸ்துவையும், பொய்யான வழியிலிருந்து மெய்யான வழியையும் எப்படிச் சொல்வது என்பது பற்றியும், தேவன் யாரை இரட்சிக்கிறார், யாரை நீக்குகிறார், யாரால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் மற்றும் பலவற்றைப் பற்றியும் நான் கற்றுக்கொண்டேன். இந்த சத்தியங்களையும் இரகசியங்களையும் இதற்கு முன் நான் கேட்டதே இல்லை. எனது பல கேள்விகளுக்கான பதில்களையும் கண்டேன், என் ஆவி பறப்பதாக நான் உணர்ந்தேன். ஆறு மாதங்கள் ஆன்லைனில் அதைப் பார்த்த பிறகு, அது தேவனுடைய சத்தம் என்பதையும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்த கர்த்தர் என்பதை நான் உறுதியாக அறிந்துகொண்டேன். அதன்பின் கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை நான் சந்தோஷமா ஏற்றுக்கொண்டேன்.

2019 மார்ச் மாதத்தில் ஒரு நாள், நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் திரைப்படங்கள் மற்றும் பாமாலைகளை முகநூலில் பகிர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்த என் உறவுக்கார பெண் நான் இப்போது சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பதை உணர்ந்தார். அவர் என் அப்பாவிடம் சென்றார், அதைப் பற்றி பேச அவர்கள் இருவரும் என்னிடம் வந்தார்கள். என் அப்பாவும் எனது உறவுக்கார பெண்ணும் எப்படி சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை எப்போதும் கடுமையாக எதிர்க்கும் ஒரு கிறிஸ்தவ மூப்பரும் ஒரு போதகருமாக இருந்தனர் என்பதை எண்ணிப் பார்த்து, தேவனுடைய புதிய கிரியைக்கு சாட்சியமளிக்கும் ஒரு நல்ல வேலையை நான் செய்ய மாட்டேன் என்று நான் கவலைப்பட்டேன், ஏனென்றால் நான் மட்டுமே அதை ஏற்றுக்கொண்டேன். சர்வவல்லமையுள்ள தேவனை நம்புவதை அவங்க தடுக்க முயற்சிப்பாங்கன்னு நான் பயந்தேன். அதனால என் இருதயத்தில் தேவனிடம் ஒரு அமைதியான ஜெபத்தை சொன்னேன், தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைக்கு எப்படி சாட்சியமளிக்க வேண்டுமென்பதை நான் அறிம்படி எனக்கு விசுவாசத்தையும் பெலத்தையும் தருமாறும், சரியான வார்த்தைகளை தருமாறும் அவரிடம் கேட்டேன்.

என் அப்பா என்னிடம் கடுமையான முகத்துடன் கேட்டார், “நீ ஏன் கர்த்தரை விசுவாசிக்காமல் சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்கிறாய்?” கர்த்தராகிய இயேசு கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனாக திரும்பி வந்து பல சத்தியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார், அவர் ஒரு புதிய கட்ட கிரியையைச் செய்கிறார், வெளிப்படுத்துதலில் முன்னறிவிக்கப்பட்ட சிறிய புஸ்தகச்சுருளை அவர் திறந்திருக்கிறார்னு அவரிடம் சொன்னேன். அவர் அதைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினேன். அதற்கு பதிலாக, என் அப்பா கோபமாக சொன்னார், “புதிய கிரியையாம்? புதிய வார்த்தைகளாம்? தேவனுடைய சகல கிரியையும் வார்த்தைகளும் வேதாகமத்தில் உள்ளன. வேதாகமத்திற்கு வெளியே தேவனிடமிருந்து எந்த புதிய கிரியையோ வார்த்தைகளோ இல்லை. வேதாகமத்திற்கு அப்பால் செல்லும் எதுவும் மதங்களுக்கு எதிரானது. நீ அதை உணரவில்லையா?” என் உறவுக்கார பெண் என் அப்பா சொன்னதை எதிரொலித்தார்.

என் அப்பா ரொம்ப கோபமாக இருப்பதைப் பார்த்த நான் அமைதியாக சொன்னேன், “அப்பா, தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகள் எல்லாம் வேதாகமத்தில இருக்குன்னும், அதற்கு வெளியே தேவனுடைய எந்த வார்த்தைகளோ கிரியையோ இல்லை, வேதாகமத்திற்கு அப்பால் செல்லும் எதுவும் மதங்களுக்கு எதிரானதுன்னு சொல்றீங்க. ஆனா உண்மைகள் இந்த கூற்ற ஆதரிக்குதா? கர்த்தராகிய இயேசு அதிகாரப்பூர்வமாக மூன்றரை ஆண்டுகள் கிரியை செய்தார் என்பதை நாம் அறிவோம். அவர் சென்ற இடமெல்லாம் பிரசங்கித்து கிரியை செய்தார், மேலும் அவர் பல காரியங்களைச் சொல்லியிருக்கவும் செய்திருக்கவும் வேண்டும். நான்கு சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன அவர் சொன்ன காரியங்களை சொல்வதற்கு அவருக்கு ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே எடுத்திருக்கும். அதனால, கர்த்தர் சொன்ன எல்லாம் புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதுன்னு எப்படி உங்களால சொல்ல முடியும்?” அதனால் என் அப்பாவும் என் உறவுக்கார பெண்ணும் மலைத்துப் போனார்கள். நான் தொடர்ந்து சொன்னேன்: “வேதாகமம் சொல்லுகிறது, ‘இயேசு செய்த வேறு பல காரியங்களும் உள்ளன; அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் புத்தகங்களை உலகமே கொள்ளாது என்று நினைக்கிறேன்’ (யோவான் நற்செய்தி 21:25). கர்த்தர் சொன்ன அநேக காரியங்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லைன்னு இந்த வசனம் நமக்கு சொல்லுது. அதனால தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகள் எல்லாம் வேதாகமத்தில இருக்குன்னும், வேதாமத்திற்கு வெளியே தேவனுடைய கிரியையோ வார்த்தைகளோ எதுவுமில்லைன்னு நீங்க சொல்றதில உண்மையிலே எந்த அர்த்தமும் இல்லை. மேலும், கிருபையின் காலத்தில் கர்த்தர் கிரியை செய்தபோது, புதிய ஏற்பாடும் இல்லை. ஜனங்கள் பாவங்களை அறிக்கையிடவும், மனந்திரும்பவும் கற்றுக் கொடுத்தார் மற்றும் பல அற்புதங்களைச் செய்தார். இது எல்லாம் புதிய வார்த்தைகள் மற்றும் புதிய கிரியை. இது எதுவும் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்படவில்லை—இது எல்லாம் பழைய ஏற்பாட்டிற்கு அப்பால் சென்றது. வேதத்திற்கு அப்பால் செல்லும் எதுவும் மதங்களுக்கு எதிரானதுன்னு நாம சொன்னா, கர்த்தராகிய இயேசுவின் கிரியையையும் வார்த்தைகளையும் நாம நிந்திப்பதாக இருக்காதா?”

அடுத்தது, அந்த திரைப்படங்கள நான் பார்த்தபோது எடுத்த சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் குறிப்புகளைத் திறந்து அவர்களிடம் வாசித்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் தம்மை வழிநடத்தியதற்கு ஏற்ப இயேசு யூதர்களையும், அவரைப் பின்பற்றிய அனைவரையும் வழிநடத்தினார். அவர் வேதாகமத்தை தாம் செய்தவற்றுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமது கிரியைக்கு ஏற்ப பேசினார். அவர் வேதாகமம் சொன்னதை கவனிக்கவில்லை, தம்மைப் பின்பற்றுபவர்களை வழிநடத்துவதற்கான வழியையும் அவர் வேதாகமத்தில் தேடவில்லை. அவர் கிரியை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அவர் மனந்திரும்புதலின் வழியைப் பரப்பினார். இந்த மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களில் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் வேதாகமத்தின் படி செயல்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் ஒரு புதிய பாதையை வழிநடத்தி, புதிய கிரியையைச் செய்தார். அவர் பிரசங்கித்தபோது அவர் ஒருபோதும் வேதாகமத்தைக் குறிப்பிடவில்லை. நியாயப்பிரமாண காலத்தின் போது, பிணியாளிகளை குணப்படுத்தும், பிசாசுகளைத் துரத்தும் அவருடைய அற்புதங்களை ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆகையால், அவருடைய கிரியையும், அவருடைய போதனைகளும், அவருடைய வார்த்தைகளின் அதிகாரமும் வல்லமையும் நியாயப்பிரமாண காலத்திலுள்ள எந்தவொரு மனிதனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன. இயேசு தமது புதிய கிரியையை மட்டுமே செய்தார். அவர் வேதாகமத்தைப் பயன்படுத்துவதை பலரும் கண்டித்தபோதிலும், அவரை சிலுவையில் அறைவதற்கு பழைய ஏற்பாட்டை பயன்படுத்தியபோதிலும், அவருடைய கிரியை பழைய ஏற்பாட்டை மிஞ்சியது. இது அப்படி இல்லையென்றால், ஜனங்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவருடைய போதனையும், பிணியாளிகளைக் குணப்படுத்தும் பிசாசுகளைத் துரத்தும் அவருடைய திறனையும் பற்றி பழைய ஏற்பாட்டில் எதுவும் சொல்லாததானால்தானே அல்லவா? ஒரு புதிய பாதையை வழிநடத்துவதற்காகவே அவருடைய கிரியை செய்யப்பட்டது, அது வேண்டுமென்றே வேதாகமத்திற்கு எதிராக சண்டை போடுவதற்காகவோ அல்லது பழைய ஏற்பாட்டை வேண்டுமென்றே புறந்தள்ளுவதற்காகவோ அல்ல. தமது ஊழியத்தைச் செய்யவும், தமக்காக ஏங்குகிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் புதிய கிரியையைக் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே அவர் வந்தார். அவர் பழைய ஏற்பாட்டை விளக்கவோ அல்லது அதன் கிரியையை ஆதரிக்கவோ வரவில்லை. நியாயப்பிரமாண காலத்தை தொடர்ந்து வளர அனுமதிப்பதற்காக அவருடைய கிரியை செய்யப்படவில்லை. ஏனென்றால், அவருடைய கிரியை வேதாகமத்தை அதன் அடிப்படையாகக் கொண்டிருந்ததா என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை. இயேசு தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே வந்தார். ஆகவே, அவர் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களை விளக்கவுமில்லை, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண காலத்தின் வார்த்தைகளின்படி அவர் கிரியை செய்யவுமில்லை. அவர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பதை புறக்கணித்தார், அது தமது கிரியையுடன் ஒத்திருக்கிறதா இல்லையா என்று அவர் கவலைப்படவில்லை, மற்றவர்கள் தமது கிரியையைப் பற்றி என்ன அறிந்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் அதை எவ்வாறு கண்டித்தார்கள் என்பது குறித்தும் கவலைப்படவில்லை. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்பை பலர் கண்டித்தபோதிலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர் செய்து வந்தார். அவருடைய கிரியையில் எந்த அடிப்படையும் இல்லாதது போல ஜனங்களுக்கு தோன்றியது. மேலும், அது பழைய ஏற்பாட்டின் பதிவுகளுடன் பெரிதும் முரண்பட்டதாக இருந்தது. இது மனிதனின் தவறாக இருக்கவில்லையா? தேவனுடைய கிரியையில் உபதேசம் பயன்படுத்தப்பட வேண்டுமா? தீர்க்கதரிசிகளுடைய முன்னறிவிப்பின்படி தேவன் கிரியை செய்ய வேண்டுமா? இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, அதன்படி நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்! ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கும் அவரால் வேதாகமத்தின் ஆண்டவராக இருக்க முடியாதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”). இதை வாசித்த பிறகு, நான் என் அப்பாவிடம் சொன்னேன், “தேவன் வேதவசனங்களின்படி கிரியை செய்வதில்லை. உண்மையில், தேவனுடைய கிரியையே முதலில் வந்தது, பின்னர் அது வேதவசனங்களில் பதிவு செய்யப்பட்டது. தேவன் ஆதியிலே சகலத்தையும் சிருஷ்டித்தார். அவர் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார், அவர் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார். அவர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியேற்றினார், அவர் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும், மற்றும் பலவற்றையும் கொடுத்தார், இது எதுவும் வேதவசனங்களின்படி செய்யப்படவில்லை. அப்போது பழைய ஏற்பாடு கிடையாது. கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் கிரியை செய்ய வந்தபோது, முழு இருதயத்தோடு அவரில் அன்புகூறவும், பிறரையும் தன்னைப் போலவே அன்புகூறவும், ஜனங்களை ஏழெழுபது முறை மன்னிக்கவும் அவர் கற்றுக்கொடுத்தார். அவர் பிணியாளிகளைக் குணமாக்கினார், பேய்களை துரத்தினார், அவர் பல அற்புதங்களையும் மற்றும் பலவற்றையும் செய்தார். அவருடைய வார்த்தைகளோ கிரியையோ பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்படவில்லை, மாறாக பழைய ஏற்பாட்டிற்கு அப்பால் சென்றது. ஆனா பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவின் கிரியையை புரிந்துகொள்ளவில்லை. அவருடைய கிரியை வேதவசனங்களுக்கு அப்பால் சென்றதைக் கண்டு, அவருடைய புதிய கிரியையை நிந்திக்க வேதத்திலுள்ள வார்தைகளை அவங்க பயன்படுத்தினாங்க. அவர் ஓய்வுநாளை கடைப்பிடிக்கவில்லை என்றும், ஆண்கள் விருத்தசேதனம் செய்யத் தேவையில்லை என்று ஜனங்களிடம் சொன்னார் என்றும் மற்றும் பலவற்றையும் சொன்னார்கள். அவர்கள் அவரை தேவதூஷணம் செய்தார்கள், பிசாசுகளின் தலைவனைக் கொண்டு அவர் பேய்களை துரத்துவதாகக் கூறினார்கள். அவர்கள் இறுதியாக கர்த்தரை சிலுவையில் அறைந்தார்கள், தேவனை எதிர்க்கும் கொடூரமான பாவத்தைச் செய்தார்கள். அப்பா, இந்த பண்டைய சோக படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்! நாம இப்போ கடைசி நாட்களில் இருக்கிறோம், கர்த்தர் தீர்க்கதரிசனம் உரைத்தார்: ‘நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன: ஆனால் இப்போது உங்களால் அவற்றை தாங்க முடியாது. ஆனால் உண்மையின் ஆவியாகிய அவர் வரும்போது அவர் எல்லா உண்மையையும் உங்களுக்கு போதிப்பார். ஏனென்றால் அவர் தாமாக பேசமாட்டார்; ஆனால் தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு காண்பிப்பார்(யோவான் நற்செய்தி 16:12-13). இது வேதாகமத்திலும் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது: ‘கேட்கக் காதுள்ளவன் திருச்சபைகளுக்குத் தூய ஆவியானவர் சொல்லுவதைக் கேட்கட்டும்(திருவெளிப்பாடு 2,3). ‘ஏனென்றால், தீர்ப்புக்கான காலம் கடவுளுடைய வீட்டாரிடத்தில் தொடங்க வேண்டும்(1 பேதுரு 4:17). பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளை நம்மை கேட்க வைப்பதற்கு கடைசி நாட்களில் ஆவியானவர் சபைகளிடம் பேசுவார் என்று வெளிப்படுத்துதல் பல முறை கூறுகிறது.” “கர்த்தர் கடைசி நாட்களில் அதிகமான சத்தியங்களை வெளிப்படுத்தி, தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையை செய்ய வேண்டும். தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையும் வார்த்தைகளும் எப்படி வேதாகமத்தில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருக்க முடியும்? அவருடைய கடைசி நாட்களின் கிரியை வேதாகமத்திற்கு அப்பால் செல்லவில்லை என்றால், கர்த்தராகிய இயேசு திரும்பி வரும்போது அவர் சொல்லும் மற்றும் செய்யும் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறும்?” “தேவன் சர்வவல்லவர், ஞானமுள்ளவர். அவர் ஓய்வுநாளுக்கும் வேதாகமத்திற்கும் கர்த்தராக இருக்கிறார். வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டதைத் தாண்டி அவர் புதிய கிரியைகளைச் செய்ய முற்றிலும் வல்லவராயிருக்கிறார். ஆகவே தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகள் எல்லாம் வேதாகமத்தில் உள்ளன என்றும், அவை வேதாகமத்தில் மட்டுமே உள்ளன, வேதாகமத்திற்கு அப்பால் செல்லும் எதுவும் மதங்களுக்கு எதிரானது என்றும் சொல்லுவது நமது கருத்தாக மட்டுமே இருக்கிறது மற்றும் தேவனுடைய கிரியையின் உண்மைகளுடன் முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது! அப்பா, நாம இந்த தவறான கருத்தை தொடர்ந்து பிடித்துக்கொண்டிருக்க முடியாது, இல்லையென்றால் நாம தேவனை எதிர்ப்பதிலும் அவருடைய மனநிலைக்கு இடறலுண்டாக்குவதிலும் போய் முடிவடைவோம்.” அதற்கு என் அப்பாவும் என் உறவினரும் பதிலளிக்கவில்லை ஆனால் தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகள் எல்லாம் வேதாகமத்தில இருக்குன்னு அவங்க இன்னும் வலியுறுத்தினாங்க, சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை ஆராய மறுத்துட்டாங்க. சர்வவல்லமையுள்ள தேவனை நிந்திக்கும், எதிர்க்கும் சில காரியங்களையும் அவங்க சொன்னாங்க.

தேவனுக்கு எதிராக தூஷணம் சொல்ல வேண்டாம்னு நான் அவங்ககிட்ட சொன்னேன், என் அப்பா திடீரென ரொம்ப கோபமாகி என்னைப் பார்த்து, சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்குமாறு நீ வற்புறுத்தினால், நீ இனிமேல் என் மகளாக இருக்க மாட்டாய்! அவர் இதை என்கிட்ட சொல்லுறத கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு திருச்சபை மூப்பராக இருந்தார், கர்த்தர் திரும்பி வர வேண்டுமென்று எப்போதும் ஏங்கினார். ஆனா, கர்த்தர் திரும்பி வந்ததைப் பற்றி கேட்டபோது, அவர் தனது கருத்துக்களை விட்டுவிட மறுத்துவிட்டார், அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவரிடம் எந்த ஆர்வமும் இல்லை. அவர் என்னை கைவிட்டுவிட விரும்பினார். அன்று இரவு, நான் தூங்க முடியாமல் படுக்கையில் படுத்திருந்தேன். என் அப்பா அதை எதிர்ப்பார், என்னுடனான எல்லா உறவுகளையும் துண்டிக்க தயாராக இருப்பார்னு நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் ரொம்ப பரிதாபமாக இருந்தேன், என் அப்பா குறித்து நான் ரொம்ப விரக்தியடைந்தேன். என் தலை சுற்றிக் கொண்டிருந்தது, பேசுவதற்கு யாராவது தேவைப்படுவது போல் உணர்ந்தேன், அதனால என் அப்பாவும் உறவினரும் என் விசுவாசத்தைத் தடுக்க முயற்சிப்பதை குறித்து சொல்லி சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையிலுள்ளவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினேன். ஒரு சகோதரி சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய ஒரு பத்தியை எனக்கு அனுப்பினார். “தேவன் தனது கிரியையைச் செய்கிறார், தேவன் ஒரு நபரைக் கவனித்துக்கொள்கிறார், இந்த நபரைப் பார்க்கிறார், எல்லா நேரங்களிலும் சாத்தான் அவனது ஒவ்வொரு அடியையும் பின் தொடர்ந்து செல்கிறான். தேவன் யாரை விரும்புகிறாரோ, சாத்தானும் அவனை கவனிக்கிறான், பின்னால் செல்கிறான். தேவன் இந்த நபரை விரும்பினால், தேவனைத் தடுக்க சாத்தான் தன் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்வான். பல்வேறு தீய சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி, தேவன் செய்யும் வேலையைச் சோதிக்கவும், சீர்குலைக்கவும், அழிக்கவும் செய்வான். இவை எல்லாவற்றையும் செய்வது அதன் மறைவான நோக்கத்தை அடைவதற்காக தான். இது என்ன நோக்கம்? தேவன் யாரையும் ஆதாயப்படுத்துவதை அது விரும்பவில்லை; தேவன் விரும்பும் அனைத்துமே தனக்கு வேண்டும் என விரும்புகிறது, அது அவர்களை ஆக்கிரமிக்க விரும்புகிறது, அவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, அவர்களை தன் பொறுப்பிலேற்க விரும்புகிறது. இதனால் அவர்கள் அதை வணங்குகிறார்கள், அதனால் அவர்கள் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது சாத்தானின் கெட்ட நோக்கம் அல்லவா?(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV”). அப்போது அந்த சகோதரி என்னுடன் ஐக்கியப்பட்டு சொன்னார், “குடும்ப உறுப்பினர்கள் நம்மை தடுக்க முயற்சிக்கும்போது, ஒரு ஆவிக்குரிய யுத்தம் மறைமுகமாக எழும்புகிறது. தேவன் தம்மை உண்மையாக விசுவாசிக்கிற எல்லோரையும் கடைசி நாட்களில் அவருக்கு முன்பாக கொண்டுவந்து சத்தியத்தை நேசிக்க வைக்க விரும்புகிறார் இதன்மூலம் அவர்களால் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ளவும், சுத்திகரிக்கப்படவும் இரட்சிக்கப்படவும், அவருடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவும் முடியும். மறுபுறம், சாத்தான் ஜனங்களை என்றென்றும் ஆட்கொள்ளவும் கட்டுப்படுத்தவும் விரும்புகிறான். அது எல்லா வகையான நபர்களையும், நிகழ்வுகளையும், காரியங்களையும் நம் வழியில் நிற்க பயன்படுத்துகிறது, நாம் அதனோடு சேர்ந்து அழிந்துபோகும்படியாக தேவனுடைய இரட்சிப்பிலிருந்து நம்மைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று நம்புகிறது.” சகோதரியின் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு இறுதியாக புரிந்தது. என் அப்பாவும் உறவினரும் என்னை சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்க விடாமல் தடுக்க முயற்சிப்பது போல தோன்றியது, என் அப்பா என்னுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க விரும்பினார். ஆனா அதற்கு பின்னால சாத்தானோட தந்திரமான திட்டம் இருந்தது. மெய்யான வழியை விட்டுவிடவும், கடைசி நாட்களில் தேவனுடைய இரட்சிப்பை இழக்கவும் என்னை பலவந்தப்படுத்த சாத்தான் என் அப்பாவின் அச்சுறுத்தலைப் பயன்படுத்த விரும்பினான். சாத்தான் நம்பமுடியாத அளவிற்கு தீயவன்! அது விரும்பியதை என்னால் செய்ய முடியவில்லை. எவ்வளவு வேதனையானதாக இருந்தாலும், நான் மெய்யான வழியைக் கடைப்பிடித்து உறுதியாக நிற்க வேண்டியதாயிருந்தது!

என் அப்பா தன்னோட திருச்சபையைச் சேர்ந்த இரண்டு போதகர்களையும் மூன்று கத்தோலிக்க பாதிரியார்களையும் அழைத்து வந்தார், அவங்க எல்லாரும் என்னைத் துன்புறுத்த வந்தாங்க. என் அப்பாவும் உறவினரும் முன்பு வந்தபோது உறுதியாக நிற்க தேவன் என்னை எவ்வாறு வழிநடத்தினார் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, இந்த போதகர்களையும் பாதிரியார்களையும் எதிர்கொள்ள நான் அச்சத்தையோ பயத்தையோ உணரவில்லை. என்னால் புரிந்துகொள்ளக்கூடிய தேவனுடைய வார்த்தைகள பிரசங்கிக்கவும், சத்தியத்தால் சாத்தானை தோற்கடிக்கவும் நான் தேவனை நம்ப வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அவங்க என்னை பயமுறுத்த நான் எந்த வழியையும் அனுமதிக்க மாட்டேன். இந்த ஆவிக்குரிய யுத்தத்தில் நான் சாட்சியாக நிற்கும்படியாக எனக்கு உதவும், எனக்கு ஞானத்தைக் கொடும் என்று தேவனிடம் கேட்டு என் இருதயத்தில் ஒரு அமைதியான ஜெபத்தை சொன்னேன். போதகர் லியு சொல்ல ஆரம்பித்தார், “நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டார். நாம் கர்த்தருடைய மீட்பைப் பெற்றிருக்கிறோம், அவருடைய ஏராளமான கிருபையையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்திருக்கிறோம். சர்வவல்லமையுள்ள தேவனன் மீதான விசுவாசத்தை விட்டுச் செல்வது கர்த்தருக்கு செய்யும் துரோகமாகும்!” நான் பதிலளித்தேன், “போதகர் லியு, நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆராய்ந்திருக்கிறேன், அவருடைய பல வார்த்தைகளைப் படித்திருக்கிறேன். அவருடைய வார்த்தைகள் அதிகாரம் நிறைந்தவை மற்றும் வல்லமையானவை என்பதை நான் கண்டறிந்தேன்—அவை சத்தியமானவை. இந்த வார்த்தைகள் தேவனுடைய சத்தம் என்பதையும், சர்வவல்லமையுள்ள தேவனே திரும்பிவந்த கர்த்தராகிய இயேசு என்பதையும் நான் என் இருதயத்தில் அறிவேன்!” “சர்வவல்லமையுள்ள தேவன் மீதான என் விசுவாசம் என்றால் நான் கர்த்தரை வரவேற்றிருக்கிறேன் என்று அர்த்தம். ஆகவே, சர்வவல்லமையுள்ள தேவன் மீதான என் விசுவாசம் எப்படி கர்த்தருக்கு துரோகமானதாக இருக்கும்?” “யேகோவா, கர்த்தராகிய இயேசு, சர்வவல்லமையுள்ள தேவன் எல்லோரும் உண்மையில் ஒரே தேவன்தான். இவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கிரியைகளைச் செய்ய அவர் எடுக்கும் நாமங்கள் மாத்திரமே. நியாப்பிரமாண காலத்தைச் சேர்ந்த ஜனங்கள் யேகோவா தேவனை விசுவாசிச்சாங்க. அவங்க அவரை ஆராதித்து, அவரை பெரியவராக பெருமைப்படுத்தினாங்க. கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் மீட்பின் கிரியையைச் செய்ய வந்தார், நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டு கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றியவர்கள் யேகோவா தேவனுக்கு துரோகம் செய்யவில்லை ஆனால் கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினாங்க—அவங்க அவருடைய மீட்பைப் பெற்றாங்க.” “கர்த்தராகிய இயேசுவின் கிரியையை ஏற்க மறுத்த பரிசேயர்கள்தான் உண்மையில் யேகோவா தேவனுக்கு துரோகம் செய்தவர்கள்.” நான் பார்த்த “தேவனுடைய நாமம் மாறியுள்ளதா?!” என்ற திரைப்படத்தையும், இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார் என்ற தேவனுடைய வாசிப்பு அடங்கிய ஒரு வீடியோவையும் பற்றி அப்போது நினைத்துப் பார்த்தேன் இந்த வீடியோக்கள் தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய உண்மைகளை விவாதித்தன. “சாத்தான் மனிதனை சீர்கெட்டுப்போகச் செய்தது முதல், மனிதனை இரட்சிக்க தேவன் மூன்று கட்ட கிரியைகளைச் செய்திருக்கிறார். யேகோவா தேவன் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் வழங்கி, பூமியில் மனிதனுக்கு வழிகாட்டி, தேவனை ஆராதிப்பது எப்படி என்று அவர்களுக்குக் கற்பித்த நியாயப்பிரமாண காலத்தின் கிரியைதான் முதல் கட்டம். பாவம் என்றால் என்ன என்பதை அவர் ஜனங்களுக்குக் காட்டினார். இரண்டாவது கட்டம் கிருபையின் காலத்தில் இருந்தது. கர்த்தராகிய இயேசு மனிதனை மீட்கும் கிரியையைச் செய்து மனந்திரும்புதலின் வழியைக் கொண்டுவந்தார். பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புவது எப்படி என்று அவர் ஜனங்களுக்குக் காட்டினார்.” “மூன்றாவது கட்டம் கடைசி நாட்களிலுள்ள ராஜ்யத்தின் காலம். கர்த்தராகிய இயேசுவின் கிரியையை செய்யும் சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு புதிய, உன்னதமான கிரியையைச் செய்கிறார். அவர் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், மனிதனின் சீர்கேட்டை நியாயந்தீர்த்து சுத்திகரிக்கிறார், பாவத்தின் பிடிகளிலிருந்து நம்மை என்றென்றும் இரட்சிக்கிறார். நாம் சீர்கேட்டிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு அவருடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியுள்ளவர்களாகும்படி அவர் சகல பாவங்களையும் நம்மிடமிருந்து நீக்கிப்போடுகிறார். தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிச் செல்லுகிறது. மூன்று கட்டங்களும் அவசியமானவை, ஒவ்வொரு கட்டமும் கடைசி கட்டத்தை விட உயர்ந்ததாகவும் மிகவும் ஆழமானதாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியை அவருடைய நாமத்துடன் கடைசி நாட்களில் மாறினாலும், அது இன்னும் ஒரே தேவனின் கிரியையாக இருக்கிறது. அதனால்தான் கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொள்வது தேவனுடைய அடிச்சுவடுகளுக்கு ஒத்ததாக இருக்கிறது. இது கர்த்தருக்கு துரோகம் செய்வது அல்ல.” “நாம் கிருபையின் காலத்தில் நின்று, ராஜ்யத்தின் காலத்தோட கிரியையை ஏற்க மறுத்தால், நாம் உண்மையிலே கர்த்தருக்கு துரோகம் செய்கிறவர்களாக இருப்போம், பரிசேயர்களைப் போல கடைசியில் நிந்திப்பட்டு நீக்கப்பட்டுப்போவோம்.”

அதற்கு பிறகு, திரைப்படத்தின் போது நான் குறிப்பெடுத்த சர்வவல்லமையுள்ள தேவனுடைய சில வார்த்தைகளை வாசித்தேன்: “மூன்று கட்ட கிரியைகளும் ஒரே தேவனால்தான் செய்யப்பட்டன; இதுதான் மிகப் பெரிய தரிசனமாகும், மேலும் இதுதான் தேவனை அறிந்துகொள்வதற்கான ஒரே பாதையாகும். மூன்று கட்ட கிரியைகளும் தேவனால் மட்டுமே செய்யப்பட்டிருக்க முடியும், எந்த மனுஷனாலும் அவர் சார்பாக இதுபோன்ற கிரியையைச் செய்திருக்க முடியாது. அதாவது, தேவனால் மட்டுமே ஆதியில் இருந்து இன்று வரை தனது சொந்தக் கிரியையைச் செய்திருக்க முடியும். … மூன்று கட்ட கிரியைகளிலும் அவை வெவ்வேறு யுகங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களிடம் தேவனால் செய்யப்பட்டவை என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், கிரியை வேறுபட்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே தேவனால்தான் செய்யப்படுகின்றன என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், அது ஒரே தேவனால் செய்யப்பட்ட கிரியை என்பதனால், அது சரியானதாகவும் பிழையில்லாததுமாக இருக்க வேண்டும். மேலும் அது மனுஷனின் கருத்துக்களுடன் முரண்பட்டதாக இருந்தாலும், அது ஒரே தேவனுடைய கிரியை என்பதை மறுப்பதற்கில்லை. இது ஒரே தேவனுடைய கிரியைதான் என்று மனுஷனால் உறுதியாகச் சொல்ல முடிந்தால், மனுஷனுடைய கருத்துக்கள் வெறும் அற்பமானவையாக குறைக்கப்படும், குறிப்பிடத் தகுதியற்றவையாகிவிடும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்”). நான் வாசிப்பதை முடிப்பதற்கு முன்பே, போதகர்கள் என்னை நிறுத்தினார்கள். அவர்கள் கடுமையாகச் சொன்னார்கள், “நாங்க கர்த்தராகிய இயேசுவை மட்டுமே எங்கள் கர்த்தராக விசுவாசிக்கிறோம். நாங்க சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்க மாட்டோம்!” என் அப்பாவும் கோபமாகச் சொன்னார், “கர்த்தர் மீதான உன் விசுவாசத்தை நான் ஆதரிக்கிறேன், ஆனால் சர்வவல்லமையுள்ள தேவன் மீதான உன் விசுவாசத்தை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். நீ மறுபடியும் யோசிப்பது நல்லது!” சர்வவல்லமையுள்ள தேவன் மீதான என் விசுவாசத்தை அவர் இன்னும் எதிர்ப்பதைக் கண்ட நான் நினைத்தேன், “சர்வவல்லமையுள்ள தேவனே திரும்பிவந்த கர்த்தராகிய இயேசு. நீங்கள் என்ன சொன்னாலும் நான் அவரை விசுவாசிப்பேன்.” அதனால் நான் உறுதியாக சொன்னேன், “அப்பா, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சத்தியமானவையாகவும், தேவனுடைய சத்தமாகவும் இருக்கின்றன என்பதை நான் உறுதியாக அறிவேன். சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுவது குறித்து என் மனதை நான் மாற்ற மாட்டேன். நான் வயதுவந்தவள், எதை விசுவாசிப்பது என்பதைத் தேர்வுசெய்ய எனக்கு உரிமை உள்ளது. நீங்கள் முடிவுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளையும் கிரியையையும் அதிகமாக கற்றுக்கொள்ளவும் ஆராயவும் வேண்டும்.” நான் இதைச் சொன்னபோது போதகர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மற்றபடி அவர்களால் என்னை சமாதானப்படுத்த முடியாது என்று அறிந்தார்கள், அதனால் அவர்கள் வெளியே சென்றுவிட்டனர்.

அவங்க போனதும், திருச்சபையிலுள்ள பாழடைதலைப் பற்றி நான் நினைத்தேன். அதனால் பலர் விசுவாசத்தை இழந்து எதிர்மறையாகவும் பலவீனமாகவும் மாறினர், ஆனாலும் இந்த போதகர்களும் பாதிரியார்கள் கவலைப்படவில்லை. என்னவானாலும் அவர்களுக்கு எந்த அன்பும் இல்லை, பரிசுத்த ஆவியானவரின் கிரியை உள்ள ஒரு திருச்சபையை தேடுமாறு விசுவாசிகளை வழிநடத்தவில்லை. ஆனால் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அவர்கள் கண்டறிந்தபோது, என்னைத் தடுக்க அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தாங்க. அவர்கள் தங்கள் கருத்துக்களால் வேதாகமத்தை தவறாகப் புரிந்துகொண்டு, என்னை தவறாக வழிநடத்தவும் தொந்தரவு செய்யவும் பொய்களை பரப்பினாங்க. அவங்களோ நடத்தை எனக்கு மிகுந்த விரக்தியில் ஆழ்த்தியது. குறிப்பாக என் அப்பா… கர்த்தராகிய இயேசு என்று வரும்போது, அவர் பொதுவாக மிகவும் பக்தியுள்ளவர், அவர் எப்போதும் என்னிடம் நன்றாக இருந்தார். கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றும்படி அவர் என்னை ஊக்குவித்தார், கர்த்தர் வரும்போது நாங்கள் அவரை ஒன்றாக வரவேற்கிறோம் என்றார். திரும்பிவந்த கர்த்தரின் கிரியைக்கு நான் சாட்சி பகர்ந்தபோது அவர் ஆர்வமாக இருக்காமல் என்னைத் தடுக்கவும் துன்புறுத்தவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார், சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை நிந்தித்து, என்னுடனான எல்லா உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அச்சுறுத்துவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் முற்றிலும் மாறுபட்ட நபரைப் போல இருந்தார். என் அப்பாவுக்கு என்னவானது? அவர் இப்போது பரலோகராஜ்யத்திற்கான எனது பாதையில் தடையாக இல்லையா? அவர் ஒரு மாயக்காரராகிய பரிசேயராக, அந்திகிறிஸ்துவாக மாறினார்! கர்த்தர் மீதான விசுவாசத்தில் இந்த போதகர்களையும், மூப்பர்களையும், பாதிரியார்களையும் பின்பற்றுவதன் மூலம், கர்த்தரை வரவேற்று அவருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான விசுவாசிகளின் வாய்ப்புகள் பாழாக்கப்படவில்லையா? கர்த்தராகிய இயேசு பரிசேயர்களை கடிந்துகொண்டதைப் பற்றி இது என்னை சிந்திக்க வைத்தது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ! ஏனென்றால் நீங்கள் ஜனங்கள் நுழையாதவாறு அவர்களுக்கு முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்களும் நுழைவதில்லை, நுழைவோரையும் நுழைய விடுவதில்லை(மத்தேயு நற்செய்தி 23:13). இதைப் பற்றிய சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளையும் நான் நினைத்தேன். “பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்கு சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துகளே தவிர வேறு யாருமல்ல என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). இந்த சந்திப்பு மூலம் இந்த போதகர்கள் மற்றும் பாதிரியார்களின் அந்திகிறிஸ்து சாராம்சத்தை உணர ஆரம்பித்தேன், அவங்க தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்தைத் தடுக்கும் தடைக் கற்கள் என்பதை உணர்ந்தேன். தேவன் என்னை எப்போதும் பாதுகாக்கிறார் என்றும், எனக்கு விசுவாசத்தையும், பெலத்தையும், பேசுவதற்கு சரியான வார்த்தைகளையும், போதகர்களையும் பாதிரியார்களையும் மறுப்பதற்கான தன்னம்பிக்கையையும் கொடுக்கிறார் என்றும் உணர்ந்தேன். சாத்தானின் சோதனைகளை மேற்கொள்வதற்கு என்னை வழிநடத்துவதற்காகவும், மெய்யான வழியில் உறுதியாக நிற்க உதவுவதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுவதற்கான என் விசுவாசம் இறுதி வரை இன்னும் வலுவானது!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 2)

கர்த்தரின் வருகையை வரவேற்பதில், ஒருவர் தவறான வழியைத் தேர்ந்தெடுத்து உண்மையான வழியை நாடவில்லை என்றால், அவர்கள் உண்மையில் கர்த்தரின் வருகையை வரவேற்க முடியுமா?

கத்தோலிக்க ஜெபம்: ஜெபமாலை ஜெபத்தை எப்போதும் ஜெபிப்பவர்களுக்கு தேவன் செவி கொடுப்பாரா?

கிளாரி, பிலிப்பைன்ஸ் நான் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன், நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே எனது பெற்றோருடன் இணைந்து அனைத்து...