தேவனைச் சார்ந்திருப்பதே மாபெரும் ஞானம்

ஜனவரி 7, 2023

2011 இலையுதிர் காலத்துல, என்னோட கிராமத்த சேர்ந்த ஃபாங் மின் என்கிற ஒரு நபர நான் சந்திச்சேன். அவங்க நல்ல மனிதத்தன்மையுள்ளவங்களா, ரொம்ப அன்பானவங்களா இருந்தாங்க, அவங்க கர்த்தர 20 வருஷத்துக்கும் மேலா விசுவாசிச்சிருந்தாங்க, அவங்க தொடந்து கூடுகைகள்ல கலந்துக்கிட்டும் வேதாகமத்த படிச்சிக்கிட்டும் இருந்திருந்தாங்க. அவங்க ஒரு உண்மயான விசுவாசியா இருந்தாங்க, அதனால கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேஷத்த அவங்ககிட்ட பிரசங்கிக்க நான் விரும்புனேன். அந்த நேரத்தில, நான் கொஞ்ச காலமாத்தான் தேவன விசுவாசிச்சிருந்தேன், ரொம்ப குறைவான சத்தியம்தான் எனக்கு புரிஞ்சிருந்துது. அதனால நான் ஃபாங் மின் அவங்ககிட்ட கடைசி நாட்கள்ல தேவனோட கிரியையப் பத்தி சாட்சியளிக்குமாறு ஸோங் ஜியாயின் அவங்ககிட்ட கேட்டுக்கிட்டேன். கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஆராஞ்சு பாக்க ஃபாங் மின் அவங்க உடனடியா முடிவு செஞ்சாங்க. அந்த நேரத்தில, நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஆனா கொஞ்ச நாட்களுக்கப்புறமா, நான் ஃபாங் மின் அவங்களப் பாக்கப் போனப்ப, ஆராய்றதத் தொடர விரும்பலன்னு அவங்க சொன்னாங்க. ஃபாங் மின் சொன்னாங்க, “நான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளப் படிச்சு, அவை நன்றா இருந்ததா உணர்ந்தேன். அதனால நான் என் அம்மாவ கூப்பிட்டு கர்த்தரோட வருகையப் பத்திய நற்செய்திய அவங்ககிட்ட சொன்னேன். நீ விசுவாசிக்கிறது கிழக்கத்திய மின்னல்னும் நான் அத விசுவாசிக்கக்கூடாதுன்னும் என்னோட அம்மா சொன்னாங்க. தேவனோட வார்த்தைகள் மற்றும் கிரியைகள் எல்லாமே வேதாகமத்தில இருக்கு, வேதாகமத்துக்கு வெளியே தேவனோட வார்த்தைகள் மற்றும் கிரியைகள் எதுவும் இல்லன்னு எங்க பிரசங்கியார்கள் அடிக்கடி சொல்வாங்க, கிழக்கத்திய மின்னலின் பிரசங்கம் வேதாகமத்தில இருந்து விலகுது, அது கர்த்தரோட வருகையா இருக்க முடியாது.” ஃபாங் மின் அவரோட அம்மாவால வஞ்சிக்கப்பட்டதப் பாத்தேன், அதனால நான் கவலயோட சொன்னேன். “தேவனோட வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்திலதான் இருக்குன்னும், அவை வேதாகமத்துக்கு வெளியே நடக்கலன்னும் நாம விசுவாசிச்சா, இது தேவன வேத வசனங்களுக்குள்ளயே மட்டுப்படுத்துவதா இருக்காதா? வேதாகமத்துக்கு வெளிய தேவனால புதிய கிரியையச் செய்ய முடியாதா? புதிய வார்த்தைகள் எதையும் சொல்ல முடியாதா? தேவன் சிருஷ்டிகர், வாழ்க்கையோட ஆதாரம். அவர் சர்வவல்லவர், ஞானமுள்ளவர், பன்முகத்தன்மையுள்ளவர். வேதாகமத்தால மட்டும் முழு தேவனையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? தேவனோட வார்த்தைகளும் கிரியைகளும் எப்படி வேதாகமத்தில மட்டுமே பதிவு செய்யப்பட்டவையா இருக்க முடியும்? தேவனோட கிரியை எப்போதும் புதியதாவே இருக்கு, ஒருபோதும் பழையதா இருக்கிறதில்ல. அவரோட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முந்தையத அடிப்படையா கொண்டிருக்கு, அவர் ஒவ்வொரு கட்டத்திலும் புதிய மற்றும் உயர்ந்த கிரியையச் செய்றார். நியாயப்பிரமாணத்தின் காலத்தில, பூமியில வாழ்ந்த ஜனங்கள வழிநடத்த தேவன் நியாயப்பிரமாணங்கள கொடுத்தார். கிருபையின் காலத்தில, தேவன் நியாயப்பிரமாண காலத்தின் கிரியைய மீண்டும் செய்யல. மாறாக, நியாயப்பிரமாண காலத்தின் கிரியையின் அடிப்படையில, அவர் மீட்பின் பணியச் செஞ்சாரு. இந்தப் புதிய கிரியை பழைய ஏற்பாட்டில பதிவு செய்யப்பட்டிருக்கா? இல்ல. பழைய ஏற்பாட்டக் கடைப்பிடிச்சவங்க கர்த்தராகிய இயேசுவின் புதிய கிரியைய ஏத்துக்கல, அவங்க எல்லாரும் தேவனால கைவிடப்பட்டு புறம்பாக்கப்பட்டாங்க. கடைசி நாட்களின் இந்தக் கட்ட கிரியைக்கும் இதுவே உண்ம. இரட்சிப்பின் கிரியைக்கான தேவனோட திட்டத்தின் அடிப்படையில, அவர் ஜனங்களோட தேவைகளுக்கு ஏற்பவும், ஜனங்களோட பாவ பிரச்சினைய முழுமையா தீர்க்கவும், அதன்மூலமா ஜனங்க சுத்திகரிக்கப்படவும் நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்றார். ஆட்டுக்குட்டியானவரோட அடிச்சுவடுகளப் பின்பற்றி, தேவனோட புதிய கிரியைய ஏத்துக்கிறதன் மூலமா மட்டுமே நம்மால தேவனோட இரட்சிப்பப் பெற்று, தேவனோட ராஜ்யத்தில பிரவேசிக்க முடியும்.உங்க அம்மா தேவனோட புதிய வார்த்தைகள பாக்கல. அதனால அவங்க அந்த விஷயங்கள உங்ககிட்ட சொல்றாங்க. நீங்க முதல்ல ஆராஞ்சு பாக்கணும். கண்மூடித்தனமா முடிவு செய்யக்கூடாது. கர்த்தரோட வருகைய நீங்க தவறவிட்டா, நீங்க தேவனால இரட்சிக்கப்படுற வாய்ப்ப இனி பெற மாட்டீங்க” அப்படின்னு சொன்னேன். ஆனா நான் என்ன சொன்னாலும், அவங்க செவிகொடுக்கல. நான் இன்னொரு சகோதரியிடம் ஐக்கியப்படுமாறு கேட்டுக்க விரும்புனேன், ஆனா ஃபாங் மின் அவங்களோ அவங்களப் பாக்கறதுக்கு ஒத்துக்கல, என்னைப் பாக்குறதுக்கு மட்டும் ஒத்துக்கிட்டாங்க. அவங்க சில நாட்கள்ல சொந்த ஊர் திரும்புறதாவும், ரயில் டிக்கெட் கூட வாங்கிட்டதாவும் சொன்னாங்க. அவங்க ரொம்ப தொந்தரவாகி, அதிர்ந்திருந்தாங்க. அவங்க சொந்த ஊருக்கு திரும்பிப்போனா, அவங்களோட போதகரும், பிரசங்கியார்களும் அவங்கள இன்னும் அதிகமா தொந்தரவு செய்ய மாட்டாங்களா? நானும் கவலப்பட்டேன், ஆனா ஃபாங் மின் அவங்க ஏற்கனவே முடிவு செஞ்சிருந்தாங்க, எனக்கு வேற வழியில்ல. அந்த நேரத்தில நான் சொல்ல வேண்டியிருந்தத அவங்க கேட்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும், அதனால நான் புறப்பட வேண்டியதாயிருந்துச்சு.

நான் வீட்டுக்கு வந்ததுக்கப்புறமா, ஃபாங் மின் அவங்களோட சொந்த ஊருக்குப் போனதும் அவங்களுக்குப் பிரசங்கம்பண்றதுக்கான நம்பிக்கை ரொம்ப கம்மியா இருந்தத நெனைச்சு, எனக்குக் கொஞ்ச விசுவாசந்தான் இருந்துச்சு, சுவிசேஷத்தப் பிரசங்கிக்கறது ரொம்ப கடினமா இருந்ததா நெனச்சேன். நான் எவ்ளோ அதிகமா சிந்திச்சேனோ, அவ்ளோ மோசமா உணர்ந்தேன். நான் எதிர்மறையா உணர ஆரம்பிச்சப்போ, தேவனோட வார்த்தய நெனச்சிப் பார்த்தேன், “கிருபையின் காலத்தில், மனிதர்களிடத்தில் இயேசுவுக்கு இரக்கமும் கிருபையும் இருந்தது. நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போனால், அவர் அந்த ஒன்றைத் தேட தொண்ணூறொன்பதையும் விட்டுச் செல்வார். இந்த வரிகள் இயந்திரத்தனமான ஒரு செயலை அல்லது விதியைக் குறிக்கவில்லை; மாறாக அது மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனுடைய அவசர நோக்கத்தை மட்டும் அல்லாமல் அவர்களிடத்தில் அவருக்கிருந்த ஆழமான அன்பையும் காட்டுகிறது. இது விஷயங்களைச் செய்யும் முறை அல்ல; அது ஒரு வகையான மனநிலை, ஒரு விதமான மனப்பாங்கு(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள் ரொம்ப தூண்டுதலா இருந்துச்சு. நூத்துல ஒரு ஆடு காணாம போனாலும், தேவன் தொண்ணூத்தொன்பது ஆட்டையும் விட்டுட்டு காணாமபோன ஒரு ஆட்டத் தேடுவாரு. ஜனங்கள இரட்சிப்பதுக்கான தேவனோட விருப்பம் தீவிரமாவும் உண்மையாவும் இருக்கிறத நான் பாத்தேன். தேவன் தம்ம உண்மையா விசுவாசிக்கிற யாரையும் இழக்க விரும்பல. ஜனங்கள் மீதான தேவனோட அன்பு ரொம்பப் பெருசு. நான் தேவனோட வார்த்தைகள ஆழமா சிந்திச்சப்போ, நான் வெக்கப்பட்டேன். சீர்கேடான மனுக்குலத்த இரட்சிக்க, தேவன உண்மையா விசுவாசிக்கிற எல்லாரும், தேவனுக்கு முன்பா வந்து, தேவனோட இரட்சிப்ப ஏத்துக்குவாங்கங்கற முழு நம்பிக்கையோட தேவன் மனுவுருவெடுத்து வந்து பெரிதான விலைக்கிரயத்த கொடுத்தாரு. ஆனாலும் எனக்கு பிரசங்கிக்கிறதுல சிரமம் இருந்தப்போ, நான் பின்வாங்கிப் போய் மந்தமா மாறுனேன். நான் தேவனோட சித்தத்தப் பத்தி ரொம்பவும் அக்கறையில்லாம இருந்தேன். ஃபாங் மின் அவங்க வஞ்சிக்கப்பட்டு தொந்தரவு செய்யப்பட்டாலும், சில மதக் கருத்துகளக் கொண்டிருந்தாலும், அவங்க தேவனோட உண்மையான விசுவாசியா இருந்தாங்க. சத்தியத்தப் புரிஞ்சிக்கவும், அவங்களோட எண்ணங்கள நீக்கவும், தேவனிடத்துக்குத் திரும்பச் செய்யறதுக்கு அவங்களுக்கு உதவ என்னால முடிஞ்சதச் செய்ய வேண்டியிருந்துச்சு. இது என் கடமையா இருந்துச்சு. தேவனோட வார்த்தைகளின் இன்னொரு பத்திய நான் நெனச்சிப் பாத்தேன். “மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் பிடிக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் நகரும், மாற்றம் பெறும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). தேவனோட வார்த்தை எனக்கு நம்பிக்கையயும் பலத்தையும் கொடுத்துச்சு. ஜனங்களோட எண்ணங்கள் மற்றும் யோசனைகள் உட்பட, எல்லாமே தேவனோட கரங்கள்லதான் இருக்கு. மனிதக் கண்களுக்கு, ஃபாங் மின் அவங்க இப்போ தொந்தரவு செய்யப்பட்டிருந்தாங்க, அவங்களோட சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியதாயிருந்துச்சு, அவங்ககிட்ட சுவிசேஷத்தப் பிரசங்கிக்குற நம்பிக்கை குறஞ்சுப் போச்சு, ஆனா தேவன் எல்லாவற்றின் மீதும் ராஜரீகம் பண்ணுகிறவரா இருக்காரு. அவங்க தேவனோட ஆடா இருந்தா, அவங்க தேவனோட சத்தத்தப் புரிஞ்சுக்குவாங்க. என்னால முடிஞ்சதெல்லாம் ஒத்துழைக்கறதுக்காக என்னால முடிஞ்சத முயற்சி செய்றதுதான், விஷயம் முடியுற வர, என்னால கைவிட முடியல. நான் இத அறிஞ்சதும், நான் தேவனிடம், “தேவனே! ஃபாங் மின் அவங்க தொந்தரவாகியிருக்காங்க, இப்போ மெய்யான வழிய ஆராஞ்சு பாக்கத் துணியல. நான் அவங்கள உமது கரங்கள்ல ஒப்படைக்கறேன். அவங்க உம்மோட ஆடுன்னா, அவங்ககிட்ட சுவிசேஷத்தப் பிரசங்கிக்க என்னால முடிஞ்ச எல்லாத்தயும் செய்ய விரும்புறேன்” அப்படின்னு ஜெபிச்சேன். அதுக்கப்புறமா, ஃபாங் மின் தன்னோட ரயில் இரவு 9:10 க்குத்தான்னு நெனச்சாங்க, ஆனா அது காலைல 9:10 க்கா இருந்துச்சு, அதனால அவங்களால போக முடியல. ஜனங்களோட இதயங்களும் ஆவிகளும் தேவனோட கரங்கள்ல இருக்குங்கறதயும், தேவனே எல்லாத்தயும் திட்டமிட்டு ஏற்பாடு செய்றாருங்கறதயும் நான் பாத்தேன். நான் தேவனுக்கு என் இதயத்தில மீண்டும் மீண்டுமா நன்றி சொன்னேன், ஃபாங் மின் அவங்களுக்கு சுவிசேஷத்த பிரசங்கிக்கறத பத்தி நான் ரொம்ப நம்பிக்கையா உணர்ந்தேன்.

அதுக்கப்புறமா, நான் ஃபாங் மின் அவங்கள பாக்கப் போனேன், அவங்க இன்னும் தன்னோட கருத்துகளப் பிடிச்சுக்கிட்டு இருக்கிறத பாத்து, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய அவங்களுக்கு வாசிச்சுக் காண்பிச்சேன். “நாம் தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுகிறோம் என்பதால், தேவனுடைய சித்தம், தேவனுடைய வார்த்தைகள், அவருடைய சொற்கள் ஆகியவற்றைத் தேடும் கடமையை இது நமக்கு அளிக்கிறது—ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய வார்த்தைகள் பேசப்படுகின்றனவோ, அங்கு தேவனின் சத்தம் இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும். தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுகிறார், தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும். தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுவதில், நீங்கள் ‘தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்’ என்கிற வார்த்தைகளை உதாசீனம் செய்திருக்கிறீர்கள். எனவே, பலர், சத்தியத்தைப் பெற்றாலும், அவர்கள் தேவனின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடித்துவிட்டதை நம்புவதில்லை, அதிலும் அவர்கள் தேவனின் தோன்றுதலை ஒப்புக்கொள்வதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு! தேவன் தோன்றுதலை மனிதனின் கருத்துகளுடன் தொடர்புப்படுத்த முடியாது, அதிலும் தேவன் மனிதனின் கட்டளைப்படி தோன்ற மாட்டார். தேவன் தமது கிரியையைச் செய்யும்போது அவருடைய சொந்தத் தேர்வுகளையும், அவருடைய சொந்தத் திட்டங்களையும் வகுக்கிறார்; மேலும், அவர் தமது சொந்த குறிக்கோள்களையும் தமது சொந்த வழிமுறைகளையும் கொண்டிருக்கிறார். அவர் எந்தக் கிரியையைச் செய்தாலும், அதை மனிதனுடன் விவாதிக்க அல்லது அவனுடைய ஆலோசனையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இல்லை. அதிலும், அவருடைய கிரியை குறித்து ஒவ்வொரு நபருக்கும் தெரிவிக்க வேண்டியதும் இல்லை. இது தேவனுடைய மனநிலையாகும், மேலும், இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். நீங்கள் தேவனின் தோன்றுதலைக் காணவும் தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் விரும்பினால், நீங்கள் முதலில் உங்கள் சொந்தக் கருத்துக்களிலிருந்து வெளியேற வேண்டும். தேவன் இதைச் செய்ய வேண்டும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று நீ கேட்கக்கூடாது, அதிலும் நீ அவரை உன் சொந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், உன் கருத்துக்களுக்குள் அடக்கி வைக்கவும் கூடாது. அதற்குப் பதிலாக, நீங்கள் தேவனின் அடிச்சுவடுகளை எவ்வாறு தேட வேண்டும், நீங்கள் தேவனின் தோன்றுதலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனின் புதிய கிரியைக்கு நீங்கள் எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்று நீங்கள் உங்களிடமே கேட்க வேண்டும்: இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, நான் அவங்களோட ஐக்கியப்பட்டேன். “நாம கர்த்தரோட வருகைய வரவேற்க விரும்புனா, நம்மோட சொந்தக் கருத்துகள விட்டுட நாம கத்துக்கணும். தேவனோட சிந்தனைகள் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவைங்கிறது உங்களுக்குத் தெரியும். மனுஷங்களோட கருத்துகளின்படியும் கற்பனைகளின்படியும் தேவன் கிரியை செய்றதில்ல. எல்லா தேவனோட வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்தில இருக்குன்னும், வேதாகமத்துக்கு வெளிய எதுவும் நடக்கிறதில்லன்னும் நீங்க நெனைக்கிறீங்க, ஆனா இதுக்கு தேவனோட வார்த்தையில ஆதாரம் இருக்கா? இல்ல. அப்படின்னா இது மனுஷ கருத்துகள் மற்றும் கற்பனைகளின் அடிப்படையில இருக்குது தான? கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தப்போ, கர்த்தராகிய இயேசு எவ்ளோ சத்தியத்த வெளிப்படுத்தினாருங்கறத பரிசேயர்கள் பாக்கல. மாறாக, அவங்க பழைய ஏற்பாட்ட பிடிச்சுக்கிட்டிருந்தாங்க. கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்துக்கு அப்பாற்பட்டவைன்னு நெனச்சாங்க, அதனால அவங்க கர்த்தராகிய இயேசுவக் கண்டிக்க இத ஒரு சாக்குப்போக்காப் பயன்படுத்தினாங்க, கடைசியா, அவங்க கர்த்தர சிலுவையில் அறையற கொடூரமான பாவத்தச் செஞ்சாங்க. பரிசேயர்களின் தோல்வியிலிருந்து நாம பாடம் கத்துக்கணும்! தேவனோட வார்த்தைகளும் கிரியைகளும் எந்த நபராலும் அல்லது பொருளாலும் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படுறதில்ல, வேதாகமத்தாலும் கட்டுப்படுத்தப்படுறதில்ல. தேவன் எப்ப்பவும் தமது நிர்வாகத் திட்டத்திற்கு ஏற்பவும் மனுக்குலத்தோட இரட்சிப்பின் தேவைகளுக்கு ஏற்பவும் அதிக வார்த்தைகளப் பேசுறார், அநேக புதிய கிரியைகளச் செய்யறாரு. அதனால, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுங்கறத தீர்மானிக்க, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்துக்கு அப்பாற்பட்டவையாங்கறத நம்மால பார்க்க முடியாது. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சத்தியமாங்கறதயும், சர்வவல்லமையுள்ள தேவனால மனுக்குலத்த இரட்சிக்கிற கிரியைய செய்ய முடியுமாங்கறதயும் நாம பாக்கணும், ஏன்னா தேவன் மட்டுமே சத்தியமும், வழியும், ஜீவனுமா இருக்காரு, தேவனால மட்டுமே மனுக்குலத்த இரட்சிக்க முடியும். நீங்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளப் படிச்சிருக்கீங்க. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தையின் அதிகாரத்தயும் வல்லமையயும் நீங்க ஒப்புக்கொள்ளுறீங்க. இன்னும், அவரோட வார்த்தைகள் தேவனோட ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தயும், வேதாகமத்தின் ரகசியங்களயும், யாரெல்லாம் பரலோகராஜ்யத்தில பிரவேசிப்பாங்கங்கறதயும், மனுக்குலத்தோட எதிர்கால சென்றடையுற இடத்தையும் வெளிப்படுத்துது. சத்தியத்தப் பத்திய இந்த ரகசியங்க யாருக்கும் தெரியாது, தேவனால மட்டுமே அவற்ற வெளிப்படுத்த முடியும்….” ஆனா நான் என்னோட ஐக்கியத்த முடிக்கிறதுக்குள்ள, ஃபாங் மின் அவங்க குறுக்கிட்டு, என்னை அதுக்கு மேல எதுவும் சொல்ல விடல. நான் நெனைச்சேன், “அது நான் சத்தியத்த ரொம்பக் குறைவா புரிஞ்சுக்கிட்டதனாலயும் என்னோட ஐக்கியம் தெளிவா இல்லாததனாலயும் இருக்குமோ?” அதுக்கப்புறம் ஃபாங் மின் அவங்களுக்கு ஜியாயின் அவங்க மேலும் ஐக்கியத்தக் கொடுக்கணும்னு நான் விரும்புனேன், ஆனா ஃபாங் மின் அவங்க என்னை அனுமதிக்கல. நான் ரொம்ப கவலப்பட்டேன். நான் கொஞ்ச காலமாத்தான் தேவன விசுவாசிச்சிருந்தேன், கொஞ்சம் சத்தியத்ததான் புரிஞ்சிருந்தேன். ஆனா ஃபாங் மின் அவங்க 20 வருஷத்துக்கும் மேலா கர்த்தர விசுவாசிச்சாங்க, என்னால அவங்க பிரச்சனைகள தீர்க்க முடியல. இந்தச் சிரமங்களின் நிமித்தமா, நான் பின்வாங்க விரும்புனேன். நான் நெனைச்சேன், “என்னால அவங்க கிட்ட உண்மையில பிரசங்கிக்க முடியலன்னா, நான் நிறுத்திருவேன். இது ரொம்பக் கடினமா இருக்கு.” நான் எவ்ளோ அதிகமா சிந்திச்சேனோ, அவ்ளோ எதிர்மறையா உணர்ந்தேன். நான் வீட்டுக்குப் போற வழியில, எந்த உந்துதலயும் உணரல.

அப்புறமா, ஒரு கூடுகையில, சகோதர சகோதரிக என்னோட நிலைய அறிஞ்சுக்கிட்டாங்க, அவங்க தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய எனக்கு வாசிச்சுக் காண்பிச்சாங்க. “‘விசுவாசம்’ என்ற இந்த வார்த்தை எதைக் குறிக்கிறது? விசுவாசம் என்பது எதையாகிலும் பார்க்கவோ, தொடவோ முடியாதபோது, தேவனுடைய கிரியை மனித கருத்துக்களுடன் ஒத்துப்போகாதிருக்கும்போது, அது மனிதனுக்கு எட்டாத நிலையில் இருக்கும்போது, மனிதர் கொண்டிருக்க வேண்டிய உண்மையான நம்பிக்கை மற்றும் உண்மையான இருதயமாக இருக்கிறது. இதுதான் நான் பேசும் விசுவாசமாக இருக்கிறது. கஷ்டங்கள் மற்றும் சுத்திகரிப்பின் காலங்களில் ஜனங்களுக்கு விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் விசுவாசம் என்பது சுத்திகரிப்புக்குப் பின்பு வரும் ஒன்றாக இருக்கிறது. சுத்திகரிப்பு மற்றும் விசுவாசத்தைப் பிரிக்க முடியாது. தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பது முக்கியமல்ல, உன் சூழலைப் பொருட்படுத்தாமல், உன்னால் ஜீவிதத்தைத் தொடரவும், சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறவும், அவருடைய கிரியைகளைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது மற்றும் உன்னால் சத்தியத்தின்படி செயல்படவும் முடிகிறது. அவ்வாறு செய்வதுதான் உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக இருக்கிறது. அவ்வாறு செய்வது நீ தேவன்மீது விசுவாசத்தை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. நீ சுத்திகரிப்பு மூலம் சத்தியத்தைப் பின்தொடர முடிந்தால் மற்றும் உண்மையாகவே உன்னால் தேவனை நேசிக்க முடிந்தால், அவரைப் பற்றி சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதிருக்க முடிந்தால், அவர் என்ன செய்தாலும் நீ அவரைத் திருப்திப்படுத்த சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறாய் என்றால் மற்றும் அவருடைய சித்தத்திற்காக ஆழமாகத் தேடவும், அவருடைய சித்தத்தைக் குறித்து அக்கறையுடன் இருக்கவும் முடிந்தால் மட்டுமே உன்னால் தேவன் மீதான உண்மையான விசுவாசத்தைப் பெற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, ஒரு சகோதரி, “சுவிசேஷத்தப் பிரசங்கிக்கறதுல நமக்குச் சிரமங்கள் இருக்கிறப்போ நாம மந்தமாகி, பின்வாங்கினா, இதுக்கு முக்கியமா தேவனோட சித்தத்த நாம புரிஞ்சிக்காததே காரணம். உண்மையில, இந்தச் சிரமங்கள் நமக்கு வர்றதுக்கு தேவன் அனுமதிக்கிறாரு அதனால நம்ம விசுவாசம் பரிபூரணப்படுத்தப்பட முடியும், நாம தேவனச் சார்ந்திருக்கக் கத்துக்கலாம். அதே நேரத்தில, இந்தச் சிரமங்கள் மூலமா, நாம சத்தியத்தக் கொண்டு நம்மை ஆயத்தப்படுத்திக்கிட்டு, தேவனோட கிரியைக்கு சாட்சி கொடுக்க கத்துக்கலாம்” அப்படின்னு ஐக்கியப்பட்டாங்க. தேவனோட வார்த்தையப் பத்திய அவங்களோட ஐக்கியத்தின் மூலமா, சுவிசேஷத்தப் பிரசங்கிக்கிறதுல நான் சந்திச்ச சிரமங்கள்ல தேவனோட நல்ல நோக்கங்கள் இருந்தத உணர்ந்தேன். என்னோட விசுவாசத்தப் பரிபூரணப்படுத்தவும், அதிகமான சத்தியத்தப் புரிஞ்சிக்கவும் எனக்கு உதவவும் தேவன் இதப் பயன்படுத்த விரும்புனாரு. எனக்குச் சிரமங்கள் இருந்தப்போ, ஃபாங் மின் அவங்களோட கருத்துகளப் போக்கி தேவனுக்கு முன்பா கொண்டுவர்றதுக்கு சத்தியத்த தேடுறதுக்கு தேவனச் சார்ந்திருக்கிறதப் பத்தி சிந்திக்கிறதுக்குப் பதிலா, நான் சிரமத்தால குழம்பியிருந்தேன், பின்வாங்கவும் விட்டுடவும் விரும்புனேன். நான் அதிக முயற்சி பண்ணவோ, அதிக விலைக்கிரயம் கொடுக்கவோ விரும்பல, நான் தேவனோட சித்தத்த கருத்தில கொள்ளவே இல்ல. உண்மைகள் என்னை வெளிப்படுத்தினப்போ, எனக்கு தேவன் மேலே கொஞ்சங்கூட விசுவாசமே இல்லாம இருந்துதுங்கறதயும், என் வளர்ச்சி பரிதாபகரமான அளவில சின்னதா இருந்ததையும் கடைசியா பாத்தேன். நான் தேவனோட வார்த்தைய நெனைச்சுப் பாத்தேன், “மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கிறார்களோ, மேலும் அவர்கள் தேவனின் தேவைகளின் தரத்தை அடைவதற்கு எவ்வளவு அதிகமாகப் பின்தொடருகிறார்களோ, அந்த அளவுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் பெரியது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி”). அது உண்ம, எவ்ளோ அதிகமா ஜனங்க ஒத்துழைக்கறாங்களோ, அவ்ளோ அதிகமா அவங்க பரிசுத்த ஆவியானவரோட கிரியையக் கொண்டிருக்காங்க. ஃபாங் மின் அவங்க கர்த்தர 20 வருஷமா விசுவாசிச்சு, வேதாகமத்தக் குறிச்ச அறிவக் கொண்டிருந்தாலும், என்கிட்ட சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தை இருந்துச்சு. தேவனோட வார்த்ததான் சத்தியம், அது எல்லாரோட பிரச்சினகளயும் தீர்க்க முடியும். நான் தேவன உண்மையாகவே சார்ந்திருந்து, விலைக்கிரயம் கொடுத்த வரைக்கும் தேவன் அவங்கள பிரகாசமாக்குனாரு.

அதுக்கப்புறமா, ஃபான் மிங் அவங்ககிட்ட இருந்த கருத்துகள பத்திய சத்தியத்த புரிஞ்சுக்கிட்டவங்களோடு சேந்து தேடுனேன், தேவனோட வார்த்தையுடன் சம்பந்தப்பட்ட பத்திகள கண்டறிய என் சகோதர சகோதரிகள் எனக்கு உதவினாங்க. அதுக்கப்புறமா, ஃபாங் மின் அவங்களோட வீட்டுக்கு நான் திரும்பவும் போய், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இரண்டு பத்திய நான் அவங்களுக்கு வாசிச்சுக் காண்பிச்சேன். “தேவனுடைய கிரியையில் உபதேசம் பயன்படுத்தப்பட வேண்டுமா? தீர்க்கதரிசிகளுடைய முன்னறிவிப்பின்படி தேவன் கிரியை செய்ய வேண்டுமா? இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளின் வெளிச்சத்தில் நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்! ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கும் அவரால் வேதாகமத்தின் ஆண்டவராக இருக்க முடியாதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”). “நீ நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைக் காண விரும்பினால் மற்றும் இஸ்ரவேலர் யேகோவாவின் வழியை எவ்வாறு பின்பற்றினார்கள் என்பதையும் காண விரும்பினால், நீ பழைய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். நீ கிருபையின் காலத்துக் கிரியையைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீ புதிய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். ஆனால் கடைசி நாட்களின் கிரியையை நீ எவ்வாறு காண்கிறாய்? இன்றைய தேவனுடைய தலைமைத்துவத்தை நீ ஏற்றுக்கொண்டு, இன்றைய கிரியைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஏனென்றால், இது புதிய கிரியையாகும், இதை ஒருவரும் இதற்கு முன்பு வேதாகமத்தில் பதிவு செய்ததில்லை. இன்று, தேவன் மாம்சமாகி, சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தேவன் இந்த ஜனங்களில் கிரியை செய்கிறார், அவர் பூமியில் தமது கிரியையிலிருந்து தொடர்கிறார் மற்றும் கிருபையின் காலத்துக் கிரியையிலிருந்து தொடர்கிறார். இன்றைய கிரியையானது மனிதன் ஒருபோதும் நடந்திராத ஒரு பாதையாகும், ஒருவரும் கண்டிராத ஒரு வழியாகும். இது இதற்கு முன்பு செய்யப்பட்டிராத கிரியையாகும், இது பூமியில் தேவனுடைய சமீபத்திய கிரியையாகும். ஆகையால், இதற்கு முன் செய்யப்பட்டிராத கிரியை என்பது வரலாறு அல்ல, ஏனென்றால் நிகழ்காலம் நிகழ்காலமாகவே இருக்கிறது, இது இன்னும் கடந்த காலமாக வேண்டியதிருக்கிறது. தேவன் பூமியிலும், இஸ்ரவேலுக்கு வெளியேயும் பெரிதான, புதிய கிரியைகளைச் செய்திருக்கிறார், இது ஏற்கனவே இஸ்ரவேலின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது, தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்புக்கு அப்பாற்பட்டது, இது தீர்க்கதரிசனங்களுக்கு வெளியே செய்யப்பட்ட புதிய மற்றும் அற்புதமான கிரியை, இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யபட்ட புதிய கிரியை மற்றும் ஜனங்கள் உணரவோ கற்பனை செய்து பார்க்கவோ முடியாத கிரியை என்பது ஜனங்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற கிரியையின் தெளிவான பதிவுகளை வேதாகமத்தால் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? இன்றைய கிரியையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் விட்டுவிடாமல் முன்கூட்டியே யார் பதிவு செய்திருக்க முடியும்? விதியை மீறும் இந்த வல்லமையான, ஞானமான கிரியையை அந்த புராதானமான பழைய புத்தகத்தில் யார் பதிவு செய்திருக்க முடியும்? இன்றைய கிரியை என்பது வரலாறு அல்ல. அதுபோல, நீ இன்றைய புதிய பாதையில் நடக்க விரும்பினால், நீ வேதாகமத்திலிருந்து வெளியேற வேண்டும். நீ வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன அல்லது வரலாற்றுப் புத்தகங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். அப்போதுதான் உன்னால் புதிய பாதையில் சரியாக நடக்க முடியும், அப்போதுதான் உன்னால் புதிய உலகிற்குள்ளும் புதிய கிரியைக்குள்ளும் பிரவேசிக்க முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, நான் அவங்ககிட்ட, “சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்தில இல்லங்கிறதனால, அவர்தான் திரும்பிவந்திருக்கிற கர்த்தர்ங்கிறத நீங்க நம்பல. இது தேவன வேதாகமத்துக்குள்ள உள்ளதுக்குள்ளேயே மட்டுப்படுத்துவதா இருக்கு, இது தேவன வரம்புக்குட்படுத்துவதா இருக்கு.” அப்படின்னு ஐக்கியப்பட்டேன். “தேவன் முதல்ல வந்தாரா அல்லது வேதாகமம் முதல்ல வந்துச்சா? தேவன் முதல்ல வானத்தயும், பூமியயும், எல்லாத்தயும் சிருஷ்டிச்சப்ப வேதாகமம் இருந்துச்சா? ஆபிரகாம்கிட்ட வேதாகமம் இல்ல. அவன் வேதாகமத்தின்படி தேவன விசுவாசிக்கல. ஆபிரகாம் தேவன விசுவாசிக்கலன்னு நம்மால சொல்ல முடியுமா? வேதாகமங்கறது தேவனோட கிரியையோட வரலாற்று பதிவு மட்டுந்தாங்கறத நாம புரிஞ்சுக்கணும். தேவனோட கிரியை முடிஞ்சதுக்கப்புறம், பிந்தைய எழுத்தாளர்கள் தொகுத்து திருத்தியதுக்குப்புறமாதான் அது உருவாக்கப்பட்டுச்சு. கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தப்போ, புதிய ஏற்பாடு கிடையாது. ஜனங்கள் பழைய ஏற்பாட்ட மட்டுந்தான் படிச்சாங்க. கர்த்தராகிய இயேசு கிரிய செஞ்சு நூற்றாண்டுகளுக்கப்புறமாதான் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் வந்துச்சு. தேவனோட வார்த்தைகளும் கிரியைகளும் முதல்ல வந்தது, அதுக்கப்புறமாதான் வேதாகமம் எழுதப்பட்டதுங்கறத இது நிரூபிக்குது. இது உண்ம. தேவன் கடைசி நாட்கள்ல தோன்றி கிரியை செய்றார், அதனால அவரோட வார்த்தைகளும் கிரியைகளும் எப்படி முன்கூட்டியே வேதாகமத்தில பதிவுசெய்யப்பட்டிருக்க முடியும்? நாம கர்த்தர வரவேற்க விரும்புனா, நாம வேதாகமத்தத் தாண்டிப் போய், தேவனோட தற்போதய வார்த்தைகளயும் கிரியைகளயும் தேடி ஆராஞ்சு பாக்கணும். தேவனோட அடிச்சுவடுகள பின்பத்துறதுக்கு இதுதான் ஒரே வழி!” அப்படின்னு பேசினேன். நான் இந்த விஷயங்கள ஃபாங் மின் அவங்ககிட்ட ஐக்கியப்பட்டதுக்கப்புறமா, அவங்க அதுல கொஞ்சத்த புரிஞ்சுக்கிட்டமாதரி தெரிஞ்சுச்சு, ஆனா அவங்க இன்னும் குழப்பமடைஞ்சு, “சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றது சரிதான். தேவனோட கிரியை முதல்லயும், வேதாகமம் அப்புறமா வந்ததும் உண்மதான், தேவன் வேதாகமத்தோட பெரியவர்ங்கறத நான் புரிஞ்சுக்கறேன். ஆனா நான் பல ஆண்டுகளா வேதாகமத்த வாசிச்சிக்கிட்டிருக்கேன், என்னால அத அப்படியே விட்டுட முடியாது. நான் இன்னும் வேதாகமத்த வாசிக்கணும்” அப்படின்னு சொன்னாங்க. அதுக்கப்புறம், ஃபாங் மின் அவங்க எங்கிட்ட பல புதிய கேள்விகள கேட்டாங்க. இது கேட்கிறதுக்கு முதல்ல கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு. அவங்களோட கேள்விகளுக்குப் பதிலளிக்க சத்தியத்தோட எந்த அம்சங்களக் குறிச்சு ஐக்கியப்படுறதுன்னு எனக்குத் தெரியல. வீட்டுக்குத் திரும்பி வந்ததுக்கப்புறமா, தேவன் என்னைப் பிரகாசமாக்கி வழிநடத்தும்படியா நான் அவர்கிட்ட ஜெபிச்சேன். அதுக்கப்புறமா, நான் ஃபாங் மின் அவங்ககிட்ட ஐக்கியப்பட விரும்புனேன். ஒரு நாள், நான் ஃபாங் மின் அவங்ககளோட வீட்டுக்குப் போனேன், ஒரு திறந்த வேதாகமத்தயும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் புத்தகத்தயும் ஜன்னல்ல பாத்தேன். ஃபான் மிங் அவங்க அத ஏத்துக்கலன்னு சொன்னாலும், அவங்க இதயத்தில அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஆராய விரும்புனாங்கங்கறத நான் உணர்ந்தேன், அவங்க மேல கொஞ்சம் நம்பிக்கைய பாத்தேன்.

அப்புறமா, ஃபாங் மின் அவங்க நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில சேர்க்கப்பட்டாங்க. அவங்கள கவனிச்சிக்கவும் அவங்களுக்கு தேவனோட வார்த்தைய வாசிச்சுக் காட்டவும் என் வேலையில நான் விடுப்பு எடுத்தேன். நான் அடிக்கடி விடுப்பு எடுக்கிறத என் முதலாளி பாத்தாரு, அதனால அவரு என்னத் திட்டுறதுக்கு வேணும்னே காரணங்கள கண்டுபிடிச்சாரு. முதல்ல, என்னால அதத் தாங்கிக்க முடிஞ்சுது. நான் கொஞ்சம் துன்பப்பட்டாலும், ஃபான் மின் அவங்க மெய்யான வழிய ஏத்துக்கிட்டா நல்லாயிருக்கும்னு நான் நெனெச்சேன். ஆனா ஃபாங் மின் அவங்களுக்கு தேவனோட வார்த்தைய பல முறை வாசிச்சுக் காண்பிச்சத்துக்கப்புறமாவும், அவங்க அப்பவும் ஆராஞ்சு பாக்க ஒத்துக்கல. இந்தக் கட்டத்தில, நான் கொஞ்சம் சேர்வடைஞ்சேன். நான் இவ்ளோ விலைக்கிரயம் கொடுத்திருக்கேன், ஆனா அவங்க தொடந்து என்னை மறுக்கிறாங்கன்னு நெனெச்சேன். அவங்க அத ஏத்துக்கிறதுக்கு முன்னாடி நான் எவ்வளவு காலம் பிரசங்கிக்க வேண்டியிருக்கும்? நான் எவ்ளோ அதிகமா சிந்திச்சேனோ, அவ்ளோ அதிகமா மனமுடைஞ்சுப் போனேன், அவ்ளோ குறைவா ஒத்துழைக்க விரும்புனேன். அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தைய வாசிச்சேன், “உன் தோள்களின் மீதுள்ள சுமை, உனக்களிக்கப்பட்ட கட்டளை மற்றும் உன் பொறுப்பு குறித்து நீ அறிவாயா? வரலாற்றுப் பணிக்கான உன் உணர்வு எங்கே? அடுத்த யுகத்தில் ஓர் எஜமானராக நீ எவ்வாறு போதுமான அளவிற்கு பணியாற்றுவாய்? உனக்கு எஜமானராக இருக்கவேண்டிய நிலை குறித்த வலுவான உணர்வு இருக்கிறதா? எல்லாவற்றிற்குமான எஜமானரை நீ எவ்வாறு விளக்குவாய்? அது உண்மையில் எல்லா ஜீவஜந்துக்களுக்கும், உலகில் சரீரம் கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் எஜமானரா? அடுத்தக் கட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கு நீ என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்? தங்களின் மேய்ப்பராக நீ வேண்டும் என எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? உன் பணி கனமானதா? அவர்கள் ஏழைகள், பரிதாபகரமானவர்கள், குருடர்கள், மேலும் நஷ்டத்தால் அந்தகாரத்தில் அழுகிறார்கள்—எங்கிருக்கிறது வழி? பல ஆண்டுகளாக மனுஷனை ஒடுக்கிய அந்தகாரத்தின் படைகளை, திடீரென இறங்கி சிதறடிக்கும் ஒரு விண்கல் போன்ற வெளிச்சத்திற்காக அவர்கள் எப்படி ஏங்குகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்புகிறார்கள், இதற்காக அவர்கள் இரவும் பகலும் எப்படி ஏங்குகிறார்கள் என்பதை யார் அறிய முடியும்? ஒளி வீசும் நாளில் கூட, ஆழ்ந்து துன்பப்படும் இந்த ஜனங்கள் விடுதலைக்கான நம்பிக்கையின்றி அந்தகார நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; எப்போது அவர்கள் இனியும் அழாமல் இருப்பர்? ஒருபோதும் ஓய்வு வழங்கப்படாத இந்தப் பலவீனமான ஆவிகள் பயங்கர துரதிர்ஷ்டவசமானவை, மேலும் இதே நிலையில் அவை இரக்கமற்ற அடிமைகளாகவும் மற்றும் உறைந்த வரலாற்றைக் கொண்டவைகளாகவும் நீண்ட காலமாக கட்டப்பட்டுள்ளன. அந்த ஜனங்கள் அழும் சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்? அவர்களின் பரிதாப நிலையை யார் கவனித்திருக்கிறார்கள்? தேவனின் இருதயம் எவ்வளவு வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படிப்பட்ட வேதனையை, தன் சொந்த கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட அப்பாவி மனுஷகுலம் அனுபவிப்பதை அவரால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர் விஷமாக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மனுஷன் இன்றுவரை உயிர் பிழைத்திருந்தாலும், மனுஷகுலத்திற்கு நீண்ட காலமாக தீயவனால் விஷம் கொடுக்கப்பட்டு வருவதை யார் அறிந்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்பதை நீ மறந்துவிட்டாயா? தேவன் மீதான உனது அன்பின் காரணமாக, இந்த உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற நீ பாடுபடத் தயாராக இல்லையா? தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் போல மனுஷகுலத்தை நேசிக்கும் தேவனுக்குத் திருப்பிச் செலுத்த உங்கள் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லையா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?”). தேவனோட தீவிர விருப்பத்த அவரோட வார்த்தைகள்ல இருந்து நாம உணரலாம். சாத்தானோட ஆதிக்கத்தின் கீழ வாழ்ந்து, தேவனுக்கு முன்பா வராதவங்களுக்காக, தேவன் கவலயும் வேதனயும் படுறாரு, கடைசி நாட்கள்ல ஜனங்களால இரட்சிப்ப அடைய முடியும்னு தேவன் நம்புறாரு. கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்கிட்ட ஒருத்தியா, தேவனுக்கு முன்பா வராதவங்கள தேவனோட இரட்சிப்ப ஏத்துக்க தேவனோட வீட்டுக்கு நான் கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும். இது என்னோட பொறுப்பா இருந்துச்சு. கிருபையின் காலத்துல, சுவிசேஷத்தப் பரப்புனதுக்காக பலரும் இரத்த சாட்சியா மரிச்சாங்க, கடைசில, சுவிசேஷம் உலகத்திலுள்ள மூலை முடுக்கெல்லாம் பரவி, எல்லாருக்கும் தெரிய வந்துச்சு. தேவனோட கட்டளைய நிறைவேத்துறதுக்காக பேழைய கட்டின நோவாவப் பத்தியும் நெனெச்சுப் பாத்தேன். தொடந்து 120 வருஷமா, இந்தக் காலகட்டத்துல அவன் சந்திச்ச சிரமங்களுக்கும், பரியாசத்துக்கும், அவதூறுக்கும் மத்தியில, அவன் விட்டுக்கொடுக்கவே இல்ல. கடைசில, அவன் தேவனோட கட்டளைய நிறைவேத்தி, தேவனோட அங்கீகாரத்தப் பெற்றான். நோவா தேவன் மேல அப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தக் கொண்டிருந்தான். சுவிசேஷத்தப் பிரசங்கிக்கறதுல நான் கொஞ்சம் சிரமங்களயும், கொஞ்சம் துன்பத்தயும் அனுபவிச்சிருந்தாலும், காலகாலமா பரிசுத்தவான்கள் செலுத்திய விலக்கிரயத்துக்கு கொஞ்சங்கூட ஈடானதா இல்ல. சகோதர சகோதரிகள் என்கிட்ட சுவிசேஷத்தப் பிரசங்கிச்சத நெனச்சுப் பாத்தேன். நான் மீண்டும் மீண்டும் அவங்கள மறுக்கவும் செஞ்சேன், நான் அத ஏத்துக்கறதுக்கு முன்னாடி அவங்க என்கிட்ட பல முற பிரசங்கிக்க வேண்டியதிருந்துச்சு. இப்போ, அவங்க செலுத்திய அளவு அன்ப என்னால ஏன் ஃபாங் மின் அவங்ககிட்ட காட்ட முடியல? அவங்க இன்னும் சத்தியத்தப் புரிஞ்சுக்கல, மதக் கருத்துகளுக்கு அடிமையா இருந்தாங்க, அவர் எதிர்ப்பா இருக்கறது இயல்பானதுதான் இல்லையா? அது கொஞ்சம் சிரமமா இருந்ததனால, என்னால அவங்கள விட்டுட முடியல. நான் இதக் கண்டறிஞ்சதுக்கப்புறமா, நான் ரொம்ப வருத்தப்பட்டேன், அதுக்கப்புறமா தேவன்கிட்ட ஒரு சத்தியம் செஞ்சேன்: சுவிசேஷத்தப் பிரசங்கிக்கறப்ப என்ன சிரமங்கள நான் எதிர்கொண்டாலும், ஒத்துழைக்கவும் சுவிசேஷத்தப் பரப்பவும் என்னால முடிஞ்சத செய்வேன். இது என்னோட பொறுப்பும் கடைமையுமா இருந்துச்சு.

அப்புறமா, நான் தொடந்து ஃபாங் மின் அவங்கள கவனிச்சு, அவங்களுக்கு தேவனோட வார்த்தைகள வாசிச்சுக் காண்பிச்சேன். ஒரு நாள் அவங்க என்கிட்ட, “இந்த நேரத்தில நீங்க எனக்கு வாசிச்சுக் காண்பிச்ச தேவனோட வார்த்தைகள் மூலமா, ஜனங்கள் தேவன வோதாகமத்தில உள்ளதுக்குள்ள மட்டுப்படுத்தக்கூடாதுங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். தேவனோட கிரியை எப்ப்பவும் புதுசாவே இருக்கு, ஒருபோதும் பழசா இருக்கிறதில்ல, வேதாகமத்தில இருக்கறது தேவனோட கடந்தகால கிரியை. தேவன் திரும்பி வந்து, வேதாகமத்தில பதிவு செய்யப்பட்ட காரியங்கள செஞ்சிருந்தா, தேவனோட கிரியை மீண்டும் செய்யப்பட்டதா இருந்திருக்கும்” அப்படின்னு சொன்னாங்க. “அது அப்படியா தன்னோட அர்த்தத்த இழந்திருக்கும். வேதாகமத்தத் தாண்டி தேவன் புதிய கிரியைய செஞ்சு, கர்த்தராகிய இயேசுவோட மீட்பின் பணிய ஏத்துக்கறதன் அடிப்படையில ஜனங்கள நியாத்தீர்ப்புக்கும் சுத்திகரிக்கப்படறதுக்கும் உட்படுத்த அனுமதிக்கறப்ப மட்டுந்தான், அவங்களால உண்மையிலே இரட்சிக்கப்பட முடியும். நான் இன்னும் தேவனோட முந்தய கிரியையே பிடிச்சிக்கிட்டு இருந்தா, வேதாகமத்த என் வாழ்நாள் முழுசும் வாசிச்சாலும், நான் சத்தியத்தயும் ஜீவனயும் ஒருபோதும் பெற்றுக்கிட மாட்டேன். நான் தேவனோட அடிச்சுவடுகள பின்பற்றி, கடைசி நாட்கள்ல தேவனோட இரட்சிப்ப ஏத்துக்கணும்.” கடைசியா ஃபாங் மின் அவங்க ஏத்துக்கிட்டத நான் பாத்தப்போ, நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். தேவனோட ஆடு தேவனோட சத்தத்த கேக்கிறதயும் நான் பாத்தேன். சாத்தான் அவங்களுக்கு எவ்ளோதான் தொந்தரவு கொடுத்தாலும் இல்ல அவங்ககிட்ட என்ன கருத்துகள் இருந்தாலும், முடிவுல அவங்க சத்தியத்த ஏத்துக்கிட்டு தேவனுக்கு முன்பா வருவாங்க. அதுக்கப்புறமா, ஃபாங் மின் அவங்க தேவனோட வார்த்தைகள உற்சாகமா வாசிக்கவும் கூடுகைகள்ல கலந்துக்கவும் ஆரம்பிச்சாங்க, அவங்க சுகவீனம் படிப்படியா சுகமாக ஆரம்பிச்சுச்சு. ஃபாங் மின் அவங்களோட சிரமங்களயும் கருத்துகளயும் தீக்கறதுக்காக தேவனோட வார்த்தைகளப் பத்திய நெறைய ஐக்கியத்த ஜியாயின் அவங்க கொடுத்தாங்க, ஃபாங் மின் அவங்க சீக்கிரமாவே கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியையப் பத்தி நிச்சயத்த அடைஞ்சாங்க. மேலும் அவங்க என்கிட்ட, “நீங்க கடந்த காலத்தில தேவனோட வார்த்தய எனக்கு வாசிச்சுக் காண்பிச்சப்போ, நான் உங்கள வெளிப்புறமா புறக்கணிச்சாலும், நான் உண்மையில அதில சிலவற்றக் கேட்டுக்கிட்டிருந்தேன், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல சத்தியம் இருந்ததா உணர்ந்தேன், ஆனா நான் தப்பா இருப்பேனோன்னு பயந்தேன், அதனாலதான் நான் அத ஏத்துக்கத் துணியல. இப்போ எனக்குப் புரியுது, ஏத்துக்கத் தயாரா இருக்கேன்” அப்படின்னு சொன்னாங்க. தேவனோட வார்த்தையில ஃபாங் மின் அவங்க உறுதியா இருக்கறத பாத்து, நான் ரொம்ப மகிழ்ச்சியடஞ்சேன், அத்தோட ஆழமா ஏவப்பட்டேன். ஒவ்வொரு நபரும் தேவனோட வீட்டுக்கு எப்போ வராங்கங்கற தேவனே தீர்மானிக்கறாரு, நாம தேவன உண்மையா சார்ந்திருக்கற வரையிலும், நம்மால தேவனோட செய்கைகளப் பாக்க முடியும். அப்புறமா, ஃபாங் மின் தன்னோட தோழிகளுக்கும் பழக்கமானவங்களுக்கும் சுவிசேஷத்தப் பரப்புறதுக்கு முன்வந்தாங்க. ஒரு குறிப்பிட்ட கால ஒத்துழைப்புக்கப்புறமா, கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைய பதினாலுபேர் ஏத்துக்கிட்டாங்க.

சுவிசேஷத்தப் பிரசங்கிக்கற இந்த அனுபவம் மூலமா, நான் உண்மையில தேவனோட கிரியைகள பாத்தேன். இந்தக் காலக்கட்டத்தில, நான் பல சிரமங்கள எதிர்கொண்டாலும், சிலநேரங்கள்ல நான் பலவீனமா இருந்து பின்வாங்கினாலும், என்னோட விசுவாசத்தயும் அன்பயும் பரிபூரணப்படுத்தறதுக்காகவும், அதிக சத்தியங்களக் கொண்டு என்னை ஆயத்தப்படுத்த எனக்கு உதவறதுக்காகவும் தேவன் இதப் பயன்படுத்துறாருங்கறத நான் அனுபவிச்சறிஞ்சேன். தேவன சார்ந்திருக்கறதும் தேவன தேடறதும் மாபெரும் ஞானங்கறதயும் நான் அனுபவிச்சறிஞ்சேன். இப்போ, சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு தேவனுக்கு சாட்சி கொடுக்கறதுல நான் இன்னும் அதிக தீர்மானமா இருக்கேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

பூமியதிர்ச்சிக்குப் பின்

நான் 2019 இல் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டேன். அப்புறமா பின்னால நான் சர்வவல்லமையுள்ள தேவனின் பல வார்த்தைகள...

தந்திரமாக இருப்பது எனக்கு எப்படித் தீங்கு விளைவித்தது

எங்களோட வேலை முடிஞ்ச உடனேயே, மாசத் தொடக்கத்துல, எங்களோட வேல சரியா நடக்கலன்னு ஒரு தலைவர் குறிப்பிட்டாரு, அதுக்கான காரணத்த சொல்லச் சொல்லி...

மேற்பார்வையை ஏதிர்த்த பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

2021 இல், நான் திருச்சபையில் நீர்ப்பாய்ச்சும் பணிக்குப் பொறுப்பாளராக இருந்தேன். அந்த நேரத்தில், மேற்பார்வையிடவும் எங்கள் வேலையைப் பற்றிய...