கஷ்டத்தின் மூலம் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வது

ஆகஸ்ட் 20, 2021

எனக்கு நினைவிருக்கு என் மகனுக்கு ஆறு வயசா இருந்தப்போ, அவன் காதுக்குப் பின்னால ஒரு கட்டி வளர்ந்திருந்தத நான் கவனிச்சேன். நான் அவனப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனேன், அது ஒரு கட்டி, எலும்புகள அழிக்கிற ஒரு குறிப்பிட்ட வகையான கட்டின்னு மருத்துவர் சொன்னாரு, அந்த நேரத்தில அது உயிருக்கு ஆபத்தில்ல, ஆனா எந்த ஒரு பயனுள்ள சிகிச்சையும் இல்ல, அது ரொம்ப வலிக்குதுன்னு அவன் சொன்னான், ஏன்னா ஒவ்வொரு முறையும் அது மோசமாகும்போது, என் மகனுக்கு பாதிக்கப்பட்ட எலும்பை வெட்டியெடுக்க அறுவை சிகிச்சை செய்யணும். இல்லன்னா, அவனோட உயிருக்கே ஆபத்து ஏற்படும். மருத்துவர் இத சொன்னத கேட்டப்போ நான் ரொம்பா அதிர்ச்சியானேன். என் மகனுக்கு ஆறு வயசு தான். அவனுக்கு எப்படி இந்த நோய் வந்துச்சு? நான் உடஞ்சு போய்ட்டேன். நான் அப்போ ஒரு புது விசுவாசி நான் தேவன நம்பினதால அவர் என் கன்மலையா இருக்கணும்னு நான் நினைச்சேன். என் விசுவாசத்தில உறுதியா இருக்கணும்னு என்னை நானே வற்புறுத்திகிட்டேன். நான் தேவன் மீது சார்ந்திருக்கும் வரை, என் மகன் நிச்சயமா குணமடைவான்னு நான் நம்பினேன். என் மகனோட அறுவை சிகிச்சை முழு வெற்றியடஞ்சுது, அவன் உண்மையில சீக்கிரமா குணமடைஞ்சான். அவனோட அறுவை சிகிச்சை முடிஞ்சு மூணு நாளைக்கப்புறம் அவன் கட்டிடம் முழுசும் ஓடிட்டிருந்தான், ஒரு வாரத்துக்கப்புறம் அவன் வீட்டுக்கு வந்தான். அதுக்கப்புறம், என் விசுவாசத்தில அதிக உற்சாகத்த உணர்ந்தேன். திருச்சபை எனக்கு ஒதுக்கின எந்த வேலையையும் நான் மகிழ்ச்சியோடு ஏத்துக்கிட்டேன், என்ன நடந்தாலும் நான் எப்போதும் என் கடமைய செஞ்சேன். என் குடும்பத்துக்குப் புரியல, எனக்கு நெருக்கமானவங்க எனக்குப் பின்னாடி எப்போதும் எதயாவது சொல்லிட்டிருந்தாங்க, ஆனா நான் அதப் பெருசா எடுத்துக்கல. நான் கடினமா உழைச்சு, என்னையே அர்ப்பணிக்கிற வரைக்கும், நான் நிச்சயமா தேவனால ஆசீர்வதிக்கப்படுவேன்னு நினைச்சேன்.

கஷ்டத்தின் மூலம் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வது

இதே மாதிரி கண் சிமிட்றதுக்குள்ள இரண்டு வருஷம் கடந்து போயிருச்சு. அப்புறம் ஒரு நாள் என் மகன் அவன் இடுப்ப பிடிச்சுட்டு என் கிட்டவந்து, வலிக்குதுன்னு சொன்னான். அவன் முகத்தில இருந்த வலியின் தோற்றத்தப் பாக்கறப்ப, அது எனக்கு ஒரு மோசமான உணர்வ கொடுத்துச்சு. நான் உடனே அவன் சட்டைய மேலே தூக்கி பார்த்தப்போ, அவன் சொன்ன இடத்தில ஒரு கட்டி வளர்ந்ததப் பார்த்தேன். நா அத லேசா தடவிக் கொடுத்தப்போ, அவன் வலியில அழுதான், அவன் நிலை மீண்டும் வருதுன்னு எனக்குத் தெரிஞ்சுது. உடனே நான் அவன நேரா மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனேன். ஒரு பரிசோதனை அவனது நோய் மீண்டும் வந்துருச்சுன்னு உறுதி செஞ்சுது. முதல் அறுவை சிகிச்சைக்குப் பின்னாடி முழுவதும் குழாய்களா இருந்தத போல அவன பார்க்கறத பத்தி நினைக்கும்போது என்னைய கட்டுப்படுத்தவே முடியல. அவன் ரொம்ப பலவீனமா இருந்தான் நான் வேதனையில இருந்தேன். இந்த முறை அவன் எவ்வளவு சகிக்கணும்னு நினைச்சுப் பார்க்க என்னால தாங்கவே முடியல. அவன் இந்த சின்ன வயசில எவ்ளோ கஷ்டப்படணும்னு நினைக்கும் போதெல்லாம், நான் சாப்பிடவும் தூங்கவும் கூட முடியாத அளவுக்கு ரொம்ப கவலைப்படுவேன். அவனுடைய நோய எடுத்து, அவனுக்குப் பதிலா நான் கஷ்டப்படலாம்னு நான் முழு மனசோட விரும்பினேன். நான் ஒரு விசுவாசியாக மாறினதிலிருந்து நான் அவருக்காகக் கடினமா வேலை செஞ்சிட்டிருக்கும்போதும், தேவன் ஏன் என் குடும்பத்த கவனிச்சு பாதுகாக்கலங்கறதப் பத்தி எனக்கு ஒண்ணுமே புரியல. அன்னைக்கே, எங்க கிராமத்துல இருந்து ஒரு சகோதரி என்னைப் பாக்க வந்தாங்க, அவங்களோட இருந்த ஐக்கியத்தின் மூலமா, என் மகன் உடல்நிலை சரியில்லாம இருப்பது தேவன் அனுமதிச்ச ஒன்னுன்னும், நான் ஜெபிச்சு தேவன சார்ந்துக்கணும், என் விசுவாசத்த சார்ந்து தேவனுக்குச் சாட்சியாக இருக்கணும், என் கடமைய செய்வதில் உறுதியா இருக்கணும்னு உணர்ந்தேன். நான் கூடுகைகளுக்குப் போய்ட்டிருந்தேன் நான் இன்னும் என் கடமைய முழுமூச்சுடன் செஞ்சேன். கூடுகைகளின்போது, என்னோட இந்த அனுபவத்த சகோதர சகோதரிகளோட பகிர்ந்துகிட்டேன். நான் உண்மையுள்ளவளா இருக்கறதுக்காக என்ன அவங்க பாராட்டுவாங்க. அவங்க என்ன இப்படி புகழ்வதக் கேட்கறப்போ, நான் தேவனுக்காக சாட்சியா நிக்கிறேன்னும், அவர் நிச்சயமா என் மகனை ஆசீர்வதிப்பார்னும் நான் இன்னும் உறுதியா நினைச்சேன்.

அப்புறம் என் மகனோட நோய் அஞ்சாவது முறையா வந்துச்சு, சொல்லப்போனா ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒரு தடவயும் அவனுக்கு அதிகமா நோய்த்தாக்கம் வருதுன்னும், இப்படியே தொடர்ந்தா உயிருக்கே ஆபத்தாகும்னு மருத்துவர் சொன்னாரு. கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு உதவுமான்னு பார்க்க அவர் பரிந்துரைச்சாரு. நாம் அத கேட்டதும் உள்ளுக்குள்ள முழுசா உடைஞ்சு விழுந்தேன். நான் தேவனிடத்துல வாதாட ஆரம்பிக்க முயற்சிக்கிற அளவு ரொம்ப வேதனையில இருந்தேன்: “நான் ஒவ்வொரு நாளும் ரொம்ப கடினமா உழைக்கிறேன், என்ன நடந்தாலும், எப்படிப்பட்ட நியாயத்தீர்ப்ப அல்லது தாக்குதல்கள மத்தவங்ககிட்ட இருந்து நான் எதிர்கொண்டாலும், நான் தேவன ஒருநாளும் மறுதலிக்கவேயில்ல. நான் என் கடமைய செஞ்சிட்டே இருந்தேன். தேவன் ஏன் என் மகனைப் பாதுகாக்கல?” நான் மனக்குறைகளால நிறைஞ்சிருந்தேன். நான் கூடுகைகளுக்குப் போய்ட்டு என் கடமைய செஞ்சுட்டே இருந்தேன், ஆனா என் இருதயம் தேவனிடத்தில இருந்து தூரமாய்ட்டே இருந்துச்சு. தேவனுடைய வார்த்தைகள் புத்தகத்த நான் அடிக்கடி பிடிச்சுட்டு வானத்த வெறிச்சு பார்ப்பேன். நான் உண்மையிலேயே கஷ்டப்பட்டேன். நான் தேவன்கிட்ட என் இருதயத்த ஊத்தினேன்: “தேவனே, நான் இப்போ ரொம்ப வேதனைல இருக்கேன். என் மகனோட உடல்நல பிரச்சினைகளுக்காக நான் உம்மைக் குறைசொல்லக் கூடாதுன்னு எனக்குத் தெரியும், ஆனா உம்மோட சித்தம் எனக்குப் புரியல இல்ல இத எப்படி கடந்து போறதுன்னு எனக்குத் தெரியல. தேவனே, உம்மோட சித்தத்தப் புரிந்துகொள்ள என்ன தயவுசெஞ்சு வழிநடத்துங்க.” தேவனோட இந்த வார்த்தைகள என் ஜெபத்துகப்பறம் நான் யோசிச்சேன். “ஒருவேளை யோபு சாட்சி பகர்ந்த பின்னர் தேவன் யோபுவை நீக்கியிருந்திருப்பார் என்றால், அப்போதும் தேவன் நீதியுள்ளவராகவே இருந்திருப்பார்.” நான் உடனே தேவ வார்த்தைகளோட இந்தப் பாடல கண்டுபிடிச்சேன்: “நீதியானது எந்த விதத்திலும் சரியானதாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை; இது சமத்துவ வாதமோ, அல்லது நீ எவ்வளவு வேலையை செய்து முடித்திருக்கிறாய் என்பதற்கு ஏற்ப உனக்கு தகுதியானதை உனக்கு ஒதுக்குவதோ, அல்லது நீ செய்த எந்த வேலைக்கும் உனக்கு ஊதியம் கொடுப்பதோ, அல்லது நீ எடுக்கும் எந்த முயற்சிக்கும் ஏற்ப உனக்கு கொடுப்பதோ அல்ல. இது நீதி அல்ல. ஒருவேளை யோபு சாட்சி பகர்ந்த பின்னர் தேவன் யோபுவை நீக்கியிருந்திருப்பார் என்றால், அப்போதும் தேவன் நீதியுள்ளவராகவே இருந்திருப்பார். இது ஏன் நீதி என்று அழைக்கப்படுகிறது? மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், ஏதாவது ஜனங்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இருந்தால், தேவனை நீதியுள்ளவர் என்று சொல்வது அவர்களுக்கு மிகவும் எளிது; இருப்பினும், அந்த காரியம் தங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதை அவர்கள் காணவில்லை என்றால்—அது அவர்கள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக இருந்தால்—தேவன் நீதியுள்ளவர் என்று சொல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். தேவனுடைய சராம்சமே நீதியாகும். அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது எளிதானதல்ல என்றாலும், அவர் செய்வதெல்லாம் நீதியானதாகும்; இது ஜனங்களுக்குப் புரிவதில்லை. தேவன் பேதுருவை சாத்தானிடம் கொடுத்தபோது, பேதுரு எப்படி பதிலளித்தான்? ‘நீர் என்ன செய்கிறீர் என்பதை மனுக்குலத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் நீர் செய்வதெல்லாவற்றிலும் உமது நல்லெண்ணம் உள்ளது; அவை எல்லாவற்றிலும் நீதி உள்ளது. உமது ஞானமான கிரியைகளுக்காக என்னால் எப்படி புகழ்ந்து பேசாமல் இருக்க முடியும்?’ தேவன் செய்வதெல்லாம் நீதியானதாகும். அது உனக்குப் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம் என்றாலும், நீ விருப்பப்படி நீயாயத்தீர்ப்புகளைச் செய்யக்கூடாது. அவர் செய்யும் ஏதேனும் உனக்கு நியாயமற்றதாகத் தோன்றினால், அல்லது அது குறித்து உனக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், அவர் நீதியுள்ளவர் அல்ல என்று சொல்ல உன்னை வழிநடத்தினால், நீ மிகவும் நியாயமற்றவனாக இருக்கிறாய். பேதுரு சில காரியங்களை புரிந்துகொள்ள முடியாதவனாக இருப்பதை அவன் காண்கிறதை நீ பார்க்கிறாய், ஆனால் தேவனுடைய ஞானம் இருந்தது என்பதிலும் அவருடைய நல்லெண்ணம் அந்த காரியங்களில் இருந்தது என்பதிலும் அவன் உறுதியாக இருந்தான். மனுஷரால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது; அவர்களால் புரிந்துகொள்ள முடியாத பல காரியங்கள் உள்ளன. ஆதலால், தேவனுடைய மனநிலையை அறிந்துகொள்வது எளிதான காரியமல்ல(ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்). தேவனோட வார்த்தைகள நான் திரும்பத் திரும்ப என் மனதில் தியானித்தபோது என் இதயம் பிரகாசமடஞ்சுது. தேவனோட நீதி நான் நினைச்சது போல நியாயமானதாவும், நேர்மையானதாவும், இல்ல எல்லாத்துக்கும் சமமானதாவும் இல்ல, அது உன்னோட வேலைகளுக்கு ஈடு செய்யப்படுவது பத்தியும், நீ போட்டத எடுப்பதப் பத்தியும் இல்ல. தேவனோட செயல்கள் மனுஷனால புரிந்துகொள்ள முடியாதது, ஆனா அவர் என்ன செஞ்சாலும், இல்ல ஒரு நபர எப்படி நடத்துனாலும், அது எல்லாமே நீதியானது தான். அது எல்லாமே தேவனோட ஞானத்தக் கொண்டிருக்கு. ஏன்னா அவரோட சாராம்சம் நீதியானது. தேவனோட நீதியான மனநிலை எனக்குப் புரியலன்னு நான் கண்டுபிடிச்சேன். நான் தேவன நம்பினதால, அவர் என்ன பாத்துக்கணும், நான் தேவனுக்காக என்னையே அர்ப்பணித்ததால, அவர் எல்லா வகையிலும் என்ன நிறைவாக்கி, என் பாதைய சீராக்கணும்னு எனக்கு எண்ணம் இருந்துச்சு. நான் தேவன நம்பினதால என் முழுக் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படணும்னு நான் நினைச்சேன். நான் தேவனோடு ஒப்பந்தம் செய்ய முயற்சி செஞ்சேன்தான?

இந்த சிந்தனைல, நான் என் தேவனுடைய வார்த்தைகள் புத்தகத்த திறந்து இந்த பத்திய படிச்சேன்: “உன் பிள்ளைகள் நோயிலிருந்து விடுபடவும், உன் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும், உன் மகன் ஒரு நல்ல மனைவியைக் கண்டுபிடிக்கவும், உன் மகள் ஒரு நல்ல புருஷனைக் கண்டுபிடிக்கவும், உன் எருதுகள் மற்றும் குதிரைகள் நிலத்தை நன்றாக உழுதிடவும், உன் பயிர்களுக்கு ஒரு வருடம் நல்ல வானிலை கிடைக்கவும் மட்டுமே, நீ தேவனை விசுவாசத்து சமாதானத்தை ஆதாயம் செய்ய இயன்றவனாய் இருக்க அவரைப் பின்பற்றுகிறாய். இதைத்தான் நீ நாடுகிறாய். உன் குடும்பத்திற்கு எந்தவிதமான விபத்துகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், காற்று உங்களை கடந்து செல்வதற்காகவும், உன் முகம் கட்டத்தால் தீண்டப்படாமல் இருப்பதற்காகவும், உன் குடும்பத்தின் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் இருப்பதற்காகவும், நீ எந்தவொரு பேரழிவிலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், தேவனின் அரவணைப்பில் வாழவும், வசதியான வீட்டில் வாழவும், உன் நாட்டம் வசதியாக வாழ்வதற்கு மட்டுமே இருக்கிறது. உன்னைப் போன்ற ஒரு கோழை, எப்போதும் மாம்சத்தைப் பின்தொடர்கிறான் உனக்கு இருதயம் இருக்கிறதா, உனக்கு ஆவி இருக்கிறதா? நீ ஒரு மிருகம் அல்லவா? பதிலுக்கு எதையும் கேட்காமல் நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுக்கிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. தேவனை விசுவாசிக்கிறவர்களில் நீயும் ஒருவனா? உண்மையான மனித வாழ்க்கையை நான் உன்மேல் பொழிகிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. நீ ஒரு பன்றி அல்லது நாயிலிருந்து வேறுபட்டவனா? பன்றிகள் மனிதனின் வாழ்க்கையைத் தொடர்வதில்லை, அவை சுத்திகரிக்கப்படுவதைத் தொடர்வதில்லை, வாழ்க்கை என்னவென்று அவைகளுக்குப் புரியவில்லை. ஒவ்வொரு நாளும், அவைகள் நிரம்ப சாப்பிட்ட பிறகு, அவைகள் வெறுமனே தூங்குகின்றன. நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுத்தேன், ஆனாலும் நீ அதை ஆதாயப் படுத்தவில்லை. நீ வெறுங்கையனாய் இருக்கிறாய். இந்த ஜீவியத்தில் பன்றியின் ஜீவியத்தைத் தொடர நீ விரும்புகிறாயா? அத்தகையவர்கள் உயிருடன் இருப்பதன் முக்கியத்துவம் என்ன? உன் வாழ்க்கை வெறுக்கத்தக்கது மற்றும் இழிவானது, நீ அசுத்தத்திற்கும் ஒழிக்கக்கேடிற்கும் மத்தியில் வாழ்கிறாய் மற்றும் நீ எந்த இலக்குகளையும் பின்பற்றுகிறதில்லை. எல்லாவற்றிலும் உன் வாழ்க்கை மிகவும் இழிவானது அல்லவா? தேவனை நோக்கிப் பார்க்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? இந்த வழியில் நீ தொடர்ந்து அனுபவித்தால், நீ எதையும் ஆதாயம் செய்ய மாட்டாய்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு”). என் விசுவாசத்தில நான் வச்சிருந்த எல்லா நோக்கங்களயும், வீணான நம்பிக்கையையும் தேவனோட வார்த்தைகள் வெளிப்படுத்துச்சு. தேவனோட ஒவ்வொரு கேள்வியும் நான் எங்கயும் மறஞ்சுக்க முடியாம என்ன செஞ்சுது. திரும்பிப் பார்த்தா, ஆரம்பத்திலிருந்தே என்னோட விசுவாசம் ஆசீர்வாதங்கள பெறுவதற்காகத்தான் இருந்திருக்கு. என் நம்பிக்கைல தேவனுக்காக என்னையே அர்ப்பணிப்பதன் மூலமா, தேவன் எனக்கு சமாதானமான வீட்டு வாழ்க்கைய கொடுத்து, என் மகனுக்கு நல்ல ஆரோக்கியத்தக் கொடுத்து ஆசீர்வதிப்பார்னு நான் நெனச்சேன். அதனால தான் என் நண்பர்களும் குடும்பத்தினரும் என்ன எப்படி இழிவா பேசின போதும் என் கடமைய நான் செஞ்சுட்டே இருந்தேன். என் மகனோட நோய் மீண்டும் திடீர்னு வந்தபோது, அவர்மீது எனக்கு உண்மையான விசுவாசம் இருக்கான்னு பார்க்க தேவன் என்னை சோதிக்கிறார்னு நினைச்சேன். தேவனுக்காக கஷ்டங்கள சகிச்சுக்கவும், அவருக்காக சாட்சியா நிக்கவும் முடியற வரைக்கும் அவர் நிச்சயமா என்ன ஆசீர்வதிப்பாரு, என் மகன் சுகமடைவான்னு நான் நினைச்சேன். அதனால அவன் மீண்டும் நோய்வாய்ப்பட்டப்போ, அவன் உயிருக்குக்கே ஆபத்தா இருந்தப்போ, ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபைக்காக இருந்த என்னோட நம்பிக்கைகள் ஒரு நொடியில் உடைஞ்சு போச்சு. நான் தேவன் கிட்ட குறைசொல்லவும் விவாதிக்கவும் ஆரம்பிச்சேன்; நியாயமில்லாம இருக்கிறதா தேவன குற்றஞ்சாட்டினேன். என் வேலைய செய்வதற்கான ஆர்வத்தக்கூட நான் இழந்துட்டேன். தேவனோட வார்த்தைகள்ல இருக்கிற நியாயத்தீர்ப்பும் வெளிப்பாடுகளும், என் கடின உழைப்பு எல்லாமே தேவனிடமிருந்து வெறும் ஆசீர்வாதங்கள திரும்ப பெறதுக்குத்தான்னு எனக்குக் காட்டுச்சு. அது முழுசா தேவனோடு ஒப்பந்தம் செஞ்சு, தேவன வஞ்சிக்கிறதுக்காகத்தான். யதார்த்தத்தின் பார்வையில நான் ரொம்ப உறுதியா இருந்தேன், தேவன் உண்மையில பரிசுத்தமானவர் நீதியுள்ளவர்னு நான் பார்த்தேன். அவரால நம்ம இருதயத்திற்குள்ளும் மனசுக்குள்ளும் பாக்கமுடியும். இந்த சூழ்நிலைகள், அடுத்தடுத்து இல்லாம இருந்து, என் விசுவாசம் கறபட்டிருக்கிறதுன்னும், பின்தொடர்தல்ல பல தவறான கண்ணோட்டம் எனக்கு இருந்ததயும் இது காட்டாம இருந்திருந்தா, என்னோட சொந்த வெளிப்புறமான நல்ல நடத்தையால நான் இன்னும் தவறா வழிநடத்தப்பட்டிருப்பேன். நான் ரொம்ப பக்தியுள்ளவன், தேவனுக்கு சாட்சியா நிக்கிறேன்னு நான் இன்னும் நெனச்சிட்டு இருந்திருப்பேன். என்னையே எனக்கு சுத்தமா தெரியாதுன்னு நான் கண்டுபிடிச்சேன்.

அதுக்கப்புறம் தேவனோட வார்த்தைகள்ல நான் இத படிச்சேன்: “தேவன் மீதான மனுஷனுடைய நிலை மற்றும் மனுஷனுடைய மனப்பான்மையை எதிர்கொண்ட தேவன் புதிய கிரியையைச் செய்து, அவரைக் குறித்த அறிவையும் அவருக்கு கீழ்ப்படிவதையும் கொண்டிருக்கவும் அன்பையும் சாட்சியையும் கொண்டிருக்கவும் மனுஷனை அனுமதிக்கிறார். ஆகவே, மனுஷன் தேவனுடைய சுத்திகரிப்பையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும், தன்னை கையாள்வதையும், கிளை நறுக்குவதையும் அனுபவிக்க வேண்டும், இது இல்லாமல் மனுஷன் ஒருபோதும் தேவனை அறிந்துகொள்ளமாட்டான், ஒருபோதும் அவரை உண்மையாக நேசிக்கவும் சாட்சி பகரவும் தகுதிபெறமாட்டான். தேவன் மனுஷனை சுத்திகரிப்பது ஒருதலைப்பட்ச விளைவுக்காக மட்டுமின்றி, பன்முக விளைவுக்காகவும் ஆகும். இவ்விதமாக மட்டுமே, அவர்களுடைய உறுதியும் அன்பும் தேவனால் பரிபூரணமாக்கப்பட வேண்டும் என்பதற்காக சத்தியத்தைத் தேட விரும்புகிறவர்களிடம் தேவன் சுத்திகரிப்பின் கிரியையைச் செய்கிறார். சத்தியத்தைத் தேட விரும்புகிறவர்களுக்கும், தேவனுக்காக ஏங்குகிறவர்களுக்கும், இது போன்ற சுத்திகரிப்பைக் காட்டிலும் வேறு எதுவும் அர்த்தமுள்ளதாகவோ அல்லது அதிக உதவியுள்ளதாகவோ இருப்பதில்லை. தேவனுடைய மனநிலையானது மனுஷனால் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ளப்படுவதில்லை அல்லது புரிந்துகொள்ளப்படுவதில்லை, ஏனென்றால் தேவன் இறுதியில் தேவனாக இருக்கிறார். இறுதியாக, தேவனுக்கு மனுஷனைப் போன்ற அதே மனநிலையைக் கொண்டிருப்பதற்கு சாத்தியமில்லை, ஆகவே மனுஷனுக்கு அவரது மனநிலையை அறிந்துகொள்வது எளிதல்ல. சத்தியம் இயல்பாகவே மனுஷனிடம் இல்லை, அதை சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது; மனுஷனிடம் சத்தியம் இல்லை, சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் உறுதியும் இல்லை, அவன் துன்பப்படாமல் சுத்திகரிக்கப்படாமல் அல்லது நியாயந்தீர்க்கப்படாமல் இருந்தால், அவனுடைய தீர்மானம் ஒருபோதும் பரிபூரணமாக்கப்படாது. சகல ஜனங்களுக்கும், சுத்திகரிப்பு என்பது மிகவும் வேதனையானது மற்றும் அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது—ஆனாலும், சுத்திகரிப்பின் போதுதான் தேவன் மனுஷனிடம் தமது நீதியான மனநிலையை தெளிவுபடுத்துகிறார், மேலும் மனுஷனுக்கான தேவைகளை பகிரங்கப்படுத்துகிறார், மேலும் அதிக அறிவொளியையும், உண்மையான கிளைநறுக்குதலையும் கையாளுதலையும் கொடுக்கிறார்; உண்மைகளுக்கும் சத்தியத்திற்கும் இடையிலான ஒப்பீட்டின் மூலம், அவர் மனுஷனுக்கு தம்மையும் சத்தியத்தையும் பற்றிய அதிக அறிவைக் கொடுக்கிறார், மேலும் தேவனுடைய சித்தத்தைப் பற்றிய அதிகமானப் புரிதலை மனுஷனுக்குக் கொடுக்கிறார், இவ்வாறு தேவன் மீது உண்மையான மற்றும் தூய்மையான அன்பைக் கொண்டிருக்க மனுஷனை அனுமதிக்கிறார். சுத்திகரிப்பு செய்வதில் தேவனுடைய நோக்கங்கள் அத்தகையவை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சுத்திகரிப்பை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே மனுஷனால் மெய்யான அன்பைக் கொண்டிருக்க முடியும்”). தேவனோட வார்த்தைகள்ல இருந்து, நான் புரிஞ்சிகிட்டேன், தேவன் நம்மள சோதிச்சு, சுத்திகரிக்கிறார், நம்மை வெளிப்படுத்தவும் சுத்தமாக்கவும் கஷ்டமான சூழல அனுபவிக்க ஏற்பாடு செய்கிறார், இதனால நாம சாத்தானால சீர்கெட்ட உண்மைய நம்மால பார்க்க முடியும்; நம்மோட சீர்கேடான மனநிலைகள், நம்ம விசுவாசத்தில இருக்கிற கலப்படங்களப் பத்தின புரிதலயும் அடையமுடியும். அப்புறம் நாம சத்தியத்த தொடரலாம், சுத்திகரிக்கப்படலாம், மாற்றப்படலாம், தேவன்மேல உண்மையான விசுவாசத்தயும் அர்ப்பணிப்பயும் அடையலாம். கடைசில, நாம தேவனால இரட்சிக்கப்படலாம். என் மகன் திரும்பத்திரும்ப நோய்வாய்ப்படுவது, ஆசீர்வாதங்கள அடைய நான் வச்சிருந்த உள்நோக்கத்த முழுசா வெளிப்படுத்துச்சு. என்ன பத்தி நினைச்சு பார்த்தா, தேவன் கிட்ட இருந்து ஆசீர்வாதங்கள பெற என்னால முடிஞ்ச எல்லாத்த பத்தியும் நான் நினைச்சுட்டு இருப்பத தெரிஞ்சிட்டேன். நான் ரொம்ப உற்சாகமாவும் பின்தொடர்தல்ல கவனம் செலுத்தியவளாவும் தெரிஞ்சேன், ஆனா அவை எல்லாவற்றுக்கு பின்னால என்னோட சொந்த இழிவான நோக்கங்கள் இருந்துச்சு. நான் சாத்தானோட விஷத்தால கட்டுப்படுத்தப்பட்டேன் “ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிக்கிறான்” நான் செஞ்ச எல்லாத்துலயும், முதல்ல என்னோட சொந்த விருப்பங்களப் பத்தி நினைச்சேன். என் நம்பிக்கைகள் உடஞ்சபோது, நான் தேவன எதிர்த்து, அவர்கிட்ட கணக்குகள தீர்க்க விரும்பினேன். எல்லா வகையான அருவருப்புகளயும் நான் காட்டினேன். நான் உண்மையில ரொம்ப சுயநலவாதி, இழிவானவள்! தேவன் மேல விசுவாசம் வச்சிருப்பது எப்படி? நான் வெறுமனே அவர எதிர்த்து, அவரை வஞ்சிக்க முயற்சி செஞ்சேன். இத உணர்ந்த நான், ஜெபத்தில தேவனுக்கு முன்னாடி சாஷ்டாங்கமா விழுந்து, இப்படிச் சொன்னேன், “தேவனே, இத்தன வருஷங்களா ஆசீர்வாதங்கள அடைய என்னோட நோக்கங்கள பிடிச்சிட்டு நான் உங்கள வஞ்சிச்சுட்டிருந்தேன். ஒவ்வொரு திருப்பத்திலும் உங்ககிட்ட ஒப்பந்தங்கள செய்ய முயற்சி பண்ணேன், சுத்தமா நேர்மை இல்ல. நா ரொம்ப சுயநலவாதி, இழிவானவள், மனிதத்தன்மை இல்லாதவ! ஆசீர்வாதங்கள அடையறதுக்கான என்னோட நோக்கங்கள விட்டுவிட, என் மகன உங்க கரங்கள்ல விட்டுவிட, அப்புறம் உங்க திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய நான் தயாரா இருக்கேன், நான் நிச்சயமா குறை சொல்ல மாட்டேன்!” இந்த ஜெபத்துக்கப்பறம் நான் ரொம்ப விடுதலையாவும் சமாதானமாவும் உணர்ந்தேன்.

கொஞ்ச நாள் கழிச்சு நான் என் வேலைக்காக ஊருக்கு வெளியே இருந்தப்போ, என் கணவர் என்ன கூப்பிட்டு எங்க மகனோட நோய் பரவிட்டதா சொன்னாங்க. அவனுக்கு தலையில, முதுகுல, கழுத்துல கட்டிகள் இருந்துச்சு. இனி அத கட்டுப்படுத்த எந்த நம்பிக்கையும் இல்ல. அவர் அத சொன்னத கேட்டதுக்கப்பறம், நான் ரொம்ப காலமா எதுவுமே பேச முடியாம இருந்தேன். என் மகன் இருக்க வேண்டிய நிலைய பத்தி எனக்கு நினைச்சு பாக்கவே தாங்க முடியல எப்படி காரியங்கள் மாறுதுங்கறத என்னால உண்மையாவே எதிர்கொள்ள முடியல. நான் திரும்பத் திரும்ப தேவன கூப்பிட்டேன், “தேவனே, நான் இப்போ ரொம்ப பலவீனமா இருக்கேன். தயவுசெஞ்சு எனக்குப் போதிச்சு உங்க சித்தத்தைப் புரிஞ்சுக்க எனக்கு உதவி செய்யுங்க.” ஜெபிச்சதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகள்ல இந்த பத்திய நான் படிச்சேன். “மனிதனைப் பொறுத்தவரையில், தேவன் புரிந்துக்கொள்ள முடியாத மற்றும் நம்பமுடியாத பலவற்றைச் செய்கிறார். தேவன் ஒருவரை இயக்க விரும்பினால், இந்த திட்டம் பெரும்பாலும் மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது மற்றும் மனிதனால் புரிந்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் இந்த முரண்பாடு மற்றும் புரிந்துக்கொள்ள முடியாத தன்மைதான் துல்லியமாக தேவனுடைய சோதனை மற்றும் மனிதனுடைய சோதனையாக இருக்கிறது. இதற்கிடையில், தேவனுக்கான கீழ்ப்படிதலை ஆபிரகாம் தனக்குள்ளேயே நிரூபிக்க முடிந்தது. இது தேவனுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடிந்ததன் மிக அடிப்படையான நிபந்தனையாகும். … வெவ்வேறு சூழல்களில், தேவன் ஒவ்வொரு நபரையும் சோதிக்க வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார். ஆபிரகாமில் தேவன் தான் விரும்பியதைக் கண்டார், ஆபிரகாமின் இருதயம் உண்மை என்றும், அவருடைய கீழ்ப்படிதல் நிபந்தனையற்றது என்றும் அவர் கண்டார். தேவன் துல்லியமாக விரும்பியது இந்த ‘நிபந்தனையற்ற’ ஒன்று தான். ஜனங்கள் அடிக்கடி கூறுகிறார்கள், ‘நான் அதை ஏற்கனவே வழங்கியுள்ளேன். நான் ஏற்கனவே அதை மன்னித்துவிட்டேன்—தேவன் ஏன் என்னை இன்னும் திருப்திப்படுத்தவில்லை? அவர் ஏன் என்னை சோதனைகளுக்கு உட்படுத்துகிறார்? அவர் ஏன் என்னை சோதித்துக்கொண்டிருக்கிறார்?’ இது ஒரு உண்மையை நிரூபிக்கிறது: தேவன் உன் இருதயத்தைக் காணவில்லை. உன் இருதயத்தைப் பெறவில்லை. அதாவது, ஆபிரகாம் தன் மகனை தன் கரத்தால் கொன்று, தேவனுக்கு வழங்குவதற்காக கத்தியை உயர்த்த முடிந்தபோது பார்த்த நேர்மையை, அவர் காணவில்லை. உன் நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை அவர் காணவில்லை. உன்னால் ஆறுதலடையவில்லை. அப்படியானால், தேவன் உன்னிடம் தொடர்ந்து முயற்சி செய்வது இயல்பானதாகும்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II”). நான் இந்த வார்த்தைகள திரும்பத் திரும்ப யோசிச்சேன். ஆபிரகாம் தன் ஒரே மகன தேவனுக்கு ஒப்புக்கொடுத்த போது, அவன்கிட்ட எந்த ஒரு சொந்த கோரிக்கையுமில்ல, இல்ல தன்னோட சொந்த வழக்க அவன் சுத்தமா வாதாடவுமில்ல. அவன் குழந்தை தேவனால கொடுக்கப்பட்டதுன்னும் தேவன் கோரியபடி அவன திருப்பித்தருவது சரியானது, தகுந்ததுன்னும் எந்த சந்தேகமும் இல்லாம அவனுக்குத் தெரியும். அந்த வகையான மனசாட்சியும் அறிவும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிருக்கு இருக்க வேண்டியதாகும். அவனுக்கு ரொம்ப வேதனையா இருந்தபோதிலும் தேவனோட கோரிக்கைகளுக்கு அவனால கீழ்ப்படிய முடிஞ்சுது. முடிவா, அவன் தன் மகனக் கொல்ல கத்திய எடுத்தான், இது தேவனிடத்துல அவனுக்கு இருந்த, அவனோட விசுவாசமும் கீழ்ப்படிதலும் உண்மைனும், அது ஒரு உண்மையான சோதனையத் தாங்கக்கூடியதுன்னும் காட்டுச்சு. ஆனா அப்பறம் அங்க நான் இருந்தேன். தேவனோட திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும் என் மகன தேவனிடம் ஒப்படைக்கவும் நான் தயாரா இருக்கேன்னு சொன்னேன், ஆனா நான் என் சொந்த கோரிக்கைகள என் இருதயத்தில பிடிச்சிட்டிருந்தேன். குறிப்பா, அவன் நிலம மோசமடைஞ்சு சிகிச்சயளிக்க முடியாதுன்னு கேள்விப்பட்டபோது, அவன இழக்கப் போற வலிய எதிர்கொள்ளும்போது, எனக்குள்ள கோரிக்கைகள் இருப்பத நான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் அவைகள வாய்ல சொல்லல; ஆனா, இருதயத்துல அவன சுகமாக்குங்கன்னு தேவன்கிட்ட கேக்க விரும்பினேன். நான் உண்மையில நியாயமற்றவள்னும், தேவனிடத்துல எந்தக் கீழ்ப்படிதலும் இல்லாதவள்னும் தெரிஞ்சிட்டேன். உண்ம என்னன்னா, என் மகன் என்னோட சொந்த சொத்து இல்ல. தேவன்தான் அவனுக்குள்ள ஜீவன ஊதுனார். என் சரீரம் அவன் பிறப்பதற்கான ஒரு கருவி மட்டுந்தான். அவனோட முழு வாழ்க்கையும் முன்குறிக்கப்பட்டது, ரொம்ப காலத்துக்கு முன்னாடியே தேவனால முழுமையா ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் எவ்ளோ கஷ்டப்படுவான், வாழ்நாள் முழுதும் எவ்ளோ துன்பங்கள எதிர்கொள்வான்னு தேவன் ஏற்கனவே தீர்மானிச்சிருந்தார். நான் தேவனோட ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்துச்சு. இந்த எண்ணத்துல நான் தேவனிடத்தில ஜெபிச்சேன், “தேவனே! என் மகன் எனக்குச் சொந்தமானவன் இல்ல. நீங்க அவன எடுத்துக்கிட்டாலும் இல்லாட்டியும், அதுல உம்மோட இரக்கமுள்ள சித்தம் இருக்குனு எனக்குத் தெரியும். நான் கீழ்ப்படியவும், என் மகனோட வாழ்க்கைய உங்க கரங்கள்ல விட்டுவிடவும் நான் தயாரா இருக்கேன். நீங்க என்ன செஞ்சாலும் நான் குறை சொல்ல மாட்டேன்.” ஜெபம் செஞ்சவொடனே என் வேதன தணிஞ்சுது. கண் மூடி கண் திறப்பதற்குள்ள ஒருமாசம் போயிருச்சு. ஒரு நாளு, ஒரு கூடுகைல இருந்து நான் வீட்டுக்குத் திரும்பி வந்தப்போ, என் கணவர் ரொம்ப உற்சாகமா என்ன கூப்பிட்டுச் சொன்னாரு: நம்ம மகனோட கட்டிகள் எல்லாமே மறஞ்சுருச்சுன்னு. மருத்துவமனையில சிடி ஸ்கேன் மூலமா அது உறுதி செய்யப்பட்டுச்சு. விஷயத்த கேட்டதும், நான் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பிச்சுட்டேன் நான் என் மனசுல மீண்டும் மீண்டும், “தேவனுக்கு நன்றி! தேவனுக்கு நன்றி!” இந்தக் குறிப்பிட்ட அனுபவம், உண்மையாவே தேவனோட பெரிதான வல்லமைய எனக்கு காட்டுச்சு: இந்த வார்த்தைகள அவர்கிட்ட இருந்து அனுபவிச்சு உணர செஞ்சது: “நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதை விட ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், எல்லா காரியங்களும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப மாறும், மாற்றம் பெரும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இவ்வாறு தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). இது உண்மையாவே தேவனோட சர்வவல்லமையையும் இறையாண்மையையும் எனக்குக் காட்டுச்சு. அதாவது, ஒன்னுமே இல்லாததிலிருந்து அவரால ஒன்ன கொண்டு வர முடியும்: இனி இல்லாத ஒன்னை அவரால உண்டாக்க முடியும்னு. எல்லாமே தேவனோட கரத்தால திட்டமிடப்பட்டிருக்கு. நான் தேவனுக்கு மனமார்ந்த நன்றிய சொன்னேன்.

ஒரு வருஷம் கழிச்சு எங்க மகனுக்கு நோய் திரும்பவும் வந்துருச்சுன்னு என் கணவரிடமிருந்து எதிர்பாராத செய்தி ஒன்னு வந்துச்சு அவனுக்கு மருத்துவமனையில கீமோ தர்றாங்கன்னு. அத கேட்டது எனக்கு சற்றே வேதனய அளிச்சுது. ஆனா என்னோட முந்தைய அனுபவத்த நெனச்சுப் பார்த்தேன். தேவனோட திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய நான் தயாரா இருந்தேன். நான் ஆச்சரியப்படும்படியா இரண்டு வாரங்களுக்கப்புறம் வீட்டுக்கு வந்துட்டான். அவன் இப்ப வரைக்கும் ஆரோக்கியமாக இருக்கான். என் மகனோட நோயால நான் தேவன குற்றஞ்சாட்டி தவறா புரிஞ்சுக்கிட்டாலும், அவர் என்னோட அறியாமையில கவனம் செலுத்தல, ஆனா அவரோட வார்த்தைகளால என்ன அறிவூட்டி வழிநடத்தினாரு; அதனால தேவனுடைய சர்வ வல்லமையையும் இறையாண்மையையும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது; ஆசீர்வாதங்கள மட்டும் அடையறதுக்காக விசுவாசமா இருப்பதப் பத்தின என்னோட தவறான பார்வைய மாத்த முடிஞ்சது. இது உண்மையில எனக்கு தேவனோட கிருபயும் ஆசீர்வாதமுமாகும்! சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி! ஆமென்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இன்று கத்தோலிக்க திருப்பலி: எனக்கும் பரலோக ராஜ்யத்திற்கும் இடையில் யார் நிற்கிறார்கள்?

நான் ஒரு கத்தோலிக்க திருச்சபைய சேர்ந்தவளாக இருந்தேன். நான் சிறு வயதில் ஒரு கத்தோலிக்க பள்ளிக்குச் சென்றேன், ஆலய காரியங்கள்ல நான் எப்போதும்...

எனது தெரிந்தெடுப்பு

மார்ச் 2012 இல், என் அம்மா கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் சுவிசேஷத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் ஒவ்வொரு நாளும் தேவனுடைய...