மதத் தலைவர்களைப் பின்பற்றுவது தேவனைப் பின்பற்றுவதா?

ஜனவரி 7, 2023

2,000 ஆண்டுகளுக்கு முன்பு, நம் இரட்சகர் கர்த்தராகிய இயேசு மீட்பின் பணியைச் செய்ய வந்தாரு, யூத நம்பிக்கையுள்ளவங்களான பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களால வெறித்தனமா குற்றம் சாட்டப்பட்டாரு. ஏன்னா, பெரும்பாலான யூத மதத்தினர் தங்களோட மதத் தலைவர்கள வணங்குனாங்க, கர்த்தராகிய இயேசுவைக் குற்றப்படுத்துவதுலயும் நிராகரிப்பதுலயும் அவங்க அந்த அந்திக்கிறிஸ்துகளோட சேந்து செயல்பட்டாங்க, இறுதியில, அவர சிலுவையில அறஞ்சதிலயும் அவங்களுக்கு ஒரு கை இருக்கு. இது ஒரு மிகப்பெரிய பாவத்தயும் தேவனோட சாபத்தயும் தண்டனையயும் அவங்களுக்கு சம்பாதிச்சுக் கொடுத்துச்சு, இஸ்ரவேல் தேசத்தை 2,000 வருஷங்களா அழிச்சுக்கிட்டுமிருக்கு. கர்த்தராகிய இயேசு கடைசி நாட்கள்ல மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனா திரும்பி வந்திருக்காரு, மனிதகுலத்தை முழுமையா சுத்திகரிச்சு இரட்சிக்க, சத்தியங்கள வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்புக் கிரியைய செய்யுறாரு. மதத் தலைவர்களோட வெறித்தனமான கண்டனங்களையும் எதிர்ப்பையும் அவர் எதிர்கொள்றாரு. அவங்க திருச்சபைகள மூடி, விசுவாசிகள் மெய்யான வழியப் பாக்குற பாதையில குறுக்க நிக்கறாங்க, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்தான் சத்தியம் என்றும், அவை வல்லமையுள்ளவைகளாகவும், அதிகாரமுள்ளவையாகவும், தேவனிடத்திலிருந்து வந்தவையாகவும் இருக்குதுங்கிறத அவங்க தெளிவாப் பாத்திருந்தாலும், அதை ஆராய்ந்து பாக்கவும் ஏற்றுக்கொள்ளவும் ஜனங்கள பயப்படத்துறாங்க. இதனால, கர்த்தர வரவேற்கும் வாய்ப்பைத் தவற விட்டு பேரழிவுல சிக்குறாங்க. கர்த்தர வரவேற்காமபோற அளவுக்கு எங்க தவறுனாங்க? அவங்க தங்களோட மதத் தலைவர்களைப் புகழ்ந்து பேசுவதுதான் இதற்குக் காரணம்! அவங்க, மதத் தலைவர்கள் தேவனால நியமிக்கப்பட்டிருக்காங்கன்னும், தேவனால பயன்படுத்தப்படுறாங்கன்னும், அவங்களுக்குக் கீழ்ப்படிவது தேவனுக்குக் கீழ்ப்படிவதுன்னும் நம்புறாங்க. அதுனால தான் அவங்க, அவர்கள முழுமையாப் பின்பற்றுறாங்க, தேவனிடத்துல இருந்து வந்ததப் போல அவர்களோட வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியறாங்க. இன்னும் பலர், கர்த்தராகிய இயேசு திரும்பி வரும்போது நிச்சயமா, முதல்ல மதகுருக்களுக்குச் சொல்வாருன்னும், அவர்களிடமிருந்து அதைக் கேட்காதது அவர் திரும்பி வரலங்கறத நிரூபிக்குதுன்னும் நினைக்கறாங்க. அப்புறம் அவங்க, சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய கேட்டறிய எந்த முயற்சியும் செய்யாம, அவரைக் குற்றப்படுத்துவதில் மதத் தலைவர்களைப் பின்பற்றுறாங்க. அதனால அவங்க பேரழிவுகள்ல விழுந்து, எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பை இழந்துபோறாங்க. இது யாரோட தவறு? எந்த எளிமையான பதிலும் இல்லை. நீண்ட காலத்திற்கு முன்னாடி, கர்த்தராகிய இயேசுவை எதிர்த்துக் கண்டனம் செஞ்ச பரிசேயர்கள் தேவனால தண்டிக்கப்பட்டாங்க இன்று மத உலகத்துல இருக்கிற பலரும் அந்த வேதனையான பாடத்த அவங்ககிட்ட இருந்து கத்துக்கல. அவங்க மத போதகர்கள கண்மூடித்தனமாக வணங்குவதால, திரும்பி வந்திருக்கற கர்த்தராகிய இயேசுவ கண்டனம்செய்றதுல அவங்களோட சேந்து, தேவனை மறுபடியும் சிலுவையில அறையுறாங்க. இது உண்மையிலயே வெட்கக்கேடானது! அப்படினா, மதத் தலைவர்கள் உண்மையில தேவனாலதான் ஏற்படுத்தப்பட்டிருக்காங்களா? அவங்களுக்குக் கீழ்ப்படிவது தேவனைப் பின்பற்றுவதப் போன்றதா? இதுல தெளிவு பெறுவது ஒரு கடினமான விஷயம்.

பல விசுவாசிகள் மதத் தலைவர்களான, போப், பேராயர்கள், போதகர்கள் மற்றும் மூப்பர்கள் போன்ற மதகுருமார்கள்லாம் கர்த்தராகிய இயேசுவால நியமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுறாங்கன்னும் விசுவாசிகளை வழிநடத்தும் அதிகாரம் உடையவங்கன்னும் அதனால, அவங்களுக்குக் கீழ்ப்படிவது தேவனுக்குக் கீழ்ப்படிவதுன்னும் நினைக்கறாங்க. இந்த நம்பிக்கைக்கான அடிப்படை எது? கர்த்தராகிய இயேசு எப்போதாவது, எல்லா மதத் தலைவர்களும் தேவனால ஏற்ப்படுத்தப்படவங்கன்னு சொன்னாரா? அவர் ஒருபோதும் சொல்ல. அவர்களிடத்தில பரிசுத்த ஆவியானவரோட சாட்சி இருக்குதா, அல்லது ஆவியானவரோட கிரியைக்கான ஆதாரம் இருக்குதா? இல்லை. அப்படின்னா, இந்தக் கருத்து முழுவதும் மனுஷீகக் கருத்துதான். நாம இதப் பத்தி சிந்திப்போம். இந்த மனுஷீகக் கருத்தின்படி, மதத் தலைவர்கள் எல்லாரும் தேவனால் ஏற்படுத்தப்பட்டவங்க, அப்படின்னா, கர்த்தராகிய இயேசுவை எதிர்த்துக் குற்றப்படுத்தின யூத பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களப் பத்திய காரியங்கள் உண்மையா இருக்க முடியுமா? கர்த்தராகிய இயேசுவை சிலுவையில அறையும்படி அவர்களப் பின்பற்றுவது தேவனுக்குக் கீழ்ப்படிவதா இருக்க முடியுமா? இது நிச்சயமா மதகுருமார்களை நடத்துற முட்டாள்தனமான வழி! வேதாகமத்துல இருந்து பாக்கலாம் ஒவ்வொரு காலகட்டத்துலயும் தேவனோட கிரியையில, அவர் தம்மோட கிரியைக்கு உதவ ஆட்கள நியமிக்கிறார்னு அந்த ஜனங்க எல்லாரும் தனிப்பட்ட முறையில அழைக்கப்பட்டு தேவனால சாட்சி பெற்றிருக்காங்க, தேவனோட வார்த்தைகள் இதக் காட்டுது. அவங்க ஒருபோதும் மற்ற மனுஷர்களால நியமிக்கப்படுவதில்ல, அவங்க மனுஷர்களால பயிற்றுவிக்கப்படவுமில்ல. எகிப்துலருந்து இஸ்ரவேலர்களை வழிநடத்த தேவன் மோசேயப் பயன்படுத்தின நியாயப்பிரமாணத்து காலத்தப் பத்தி சிந்தியுங்க. யேகோவா தேவனோட சொந்த வார்த்தைகள் இதற்கு சாட்சி அளித்தன. யேகோவா தேவன் மோசேட்ட சொன்னாரு, “இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா(யாத்திராகமம் 3:9-10). கிருபையின் காலத்துல, கர்த்தராகிய இயேசு திருச்சபைய மேய்க்க பேதுருவப் பயன்படுத்தினாரு, அவர் பேதுருவுக்கும் கூட சாட்சி கொடுத்தாரு. கர்த்தராகிய இயேசு பேதுருகிட்ட சொன்னாரு, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா? … என் ஆடுகளை மேய்ப்பாயாக(யோவான் 21:17). “மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்(மத்தேயு 16:18-19). ஒவ்வொரு காலகட்டத்துலயும் தேவன் பயன்படுத்துற ஜனங்கள அவர்தாமே ஒரு ஸ்தானத்துல வச்சு சாட்சி கொடுக்கிறாரு, இது பரிசுத்த ஆவியானவரோட கிரியையால சரிபார்க்கப்படுது. நியாயப்பிரமாணத்தின் காலத்துலயும் கிருபையின் காலத்துலயும், சில நேரங்கள்ல தேவனால பயன்படுத்தப்பட்டவங்க, தனிப்பட்ட முறையில ஏற்படுத்தப்பட்டு அவரால சாட்சியளிக்கப்பட்டாங்க. சில நேரங்கள்ல அவர் வேறு வழிகளைப் பயன்படுத்தினாரு. அவருடைய நேரடி நியமனம் இல்லாமல், அவர் தீர்க்கதரிசிகள் மூலமா இத வெளிப்படுத்துவாரு, அல்லது பரிசுத்த ஆவியானவரோட கிரியைக்கான ஆதாரம் இருந்துச்சு. இது மறுக்க முடியாதது. இன்றைய மத உலகத்துல, போப், பேராயர்கள், குருமார்கள், போதகர்கள் மற்றும் மூப்பர்களுக்கு அவங்க வகிக்கும் பதவிகள் யாரால கொடுக்கப்பட்டுச்சு? தேவனோட வார்த்தைகளின் இல்ல பரிசுத்தாவியின் கிரியைகளின் ஆதாரங்கள் இதுக்கு உண்டா? ஆவியானவர் அவங்களுக்கு சாட்சி கொடுத்திருக்கிறாரா? ரொம்பவே குறைவுதான்! உண்மையாவே, திருச்சபைகள்ல உள்ள எல்லா மதத் தலைவர்களும் பெரும்பாலும் இறையியல் கல்லூரிகளிலும் இறையியல் பள்ளிகளிலும் தேர்ச்சி பெற்று, இறையியல்ல பட்டம் பெற்றவங்களா இருக்காங்க. கையில டிப்ளோமா பட்டத்தை வச்சுக்கிட்டு, விசுவாசிகளை வழிநடத்த திருச்சபைகள்ல அவங்க நியமிக்கப்படுறாங்க. சிலர் வரம் பெற்றவங்களாவும் திறமையான பேச்சாளர்களாவும் இருக்காங்க, தங்களோட பணிய நல்லா கத்துக்கறாங்க, அதனால, அவங்க உயர் தலைமைத்துவத்தால நியமிக்கப்படுகிறாங்க அல்லது பரிந்துரைக்கப்படுறாங்க, பதவிகள்ல உயர்வ அடையுறாங்க. ஏறக்குறைய மத உலக மதகுருமார்கள் எல்லாரும் தங்களோட பதவிகள இப்படித்தான் பெற்றுக்கிடுறாங்க, ஆனா, பெரும்பாலானவங்களுக்கு பரிசுத்த ஆவியானவரோட கிரியை இல்லை. அவங்கள்ல ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டும் ஆவியானவரோட சில கிரியைகளக் கொண்டிருக்கலாம், ஆனா, அவங்ககிட்ட அவரது சாட்சி இல்லை. அதனால, தேவன் சாட்சி அளிக்கற அல்லது பயன்படுத்துற ஜனங்க அவங்க இல்ல என்பத நாம உறுதியா நம்பலாம் அவங்க ரொம்ப தெளிவா வளர்க்கப்பட்டு மத்தவங்களால தெரிந்துகொள்ளப்படுறாங்க, அப்படினா, தாங்கள் தேவனால நியமிக்கப்பட்டவங்கன்னு அவங்க ஏன் வலியுறுத்துறாங்க? இது உண்மைகளுக்கு எதிரா இருக்குது இல்லையா? இது வெட்கக்கேடான பொய்யும், தங்களுக்குத் தாங்களே சாட்சியளிக்கற மாதிரி தான இருக்கு? இதன் விளைவுகள் என்ன? இது விசுவாசிகளை ஏமாத்துறதும் அவங்களுக்குத் தீங்கு செய்யறதும் இல்லையா? சில மதத் தலைவர்கள் பேதுருவ அழச்ச கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள மேற்கோள் காட்டி வெட்கமில்லாம சொல்றாங்க, கர்த்தராகிய இயேசு பேதுருவுக்குக் கொடுத்த அதிகாரம் போப்பிடத்துல ஒப்படைக்கப்பட்டிருக்கு, அதனால, போப் தேவனால அங்கீகரிக்கப்பட்டவராவும், கர்த்தராகிய இயேசுவப் பிரதிநிதித்துவப்படுத்தறவராவும் இருக்காரு. பாதிரியார்கள் போப்பப் பின்பற்றுவதால, அவங்களும் தேவனால அங்கீகரிக்கப்பட்டவர்களா இருக்காங்க, அதனால, அவங்களாலையும் பாவங்கள மன்னிக்க முடியும். இது வேடிக்கையா இல்லயா? பேதுருவுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்த கர்த்தராகிய இயேசு எப்போதாவது அவன்கிட்ட சொன்னாரா? குருமார்களின் தலைமுறைகளுக்குக் கொடுக்கணும்னு கர்த்தராகிய இயேசு எப்போதாவது அவன்கிட்ட சொன்னாரா? கர்த்தராகிய இயேசு அப்படிச் சொல்லவே இல்ல! பேதுரு எப்போதாவது இப்படிப்பட்ட விஷயங்களத் தெரிவிச்சிருக்கிறாரா? நிச்சயமா இல்ல! அப்படிப்பட்ட எதுவும் வேதாகமத்துல எழுதப்படல. அந்தக் காலத்துல போப்பும் இல்ல, போதகர்களும் இல்ல என்பது உண்மை. அதனால, அவங்க தேவனால அங்கீகரிக்கப்பட்டவங்கன்னும் கர்த்தராகிய இயேசுவ அவங்க பிரதிநிதித்துவப்படுத்தலாம்னும் சொல்லுற மதத் தலைவர்கள் தேவனா இருப்பதப் போல, நடிச்சு ஜனங்கள தவறா வழிநடத்துறாங்க, இல்லையா? அவங்களுக்குக் கீழ்ப்படிஞ்சு அவங்களப் பணிந்து கொள்றவங்க விக்கிரகத்த ஆராதிக்கறாங்க இல்லயா? அது தேவனுக்கு எதிரா கிரியை செய்யறது இல்லையா? பலரும் இதப் புரிஞ்சிக்கறதில்ல, தங்களோட தலைவர்கள் தேவனால நியமிக்கப்பட்டவங்கன்னு நெனச்சு அவங்கள கண்மூடித்தனமா ஆராதிக்கறாங்க. இது எவ்ளோ முட்டாள்தனமும் அறியாமையின்னும் உங்களால பாக்க முடியுதா? அவிசுவாசிகள் விக்கிரகத்த ஆராதிப்பதில இருந்து இது எப்படி வித்தியாசமானதா இருக்கும்? நீங்க ஒரு விசுவாசி ஆனா தேவனோட வார்த்தையப் பின்பற்றலனா, நீங்க மத்த மனுஷங்கள ஆராதிச்சு, அவங்க தேவனா இருப்பதப் போல, அவங்களுக்கு முன்னாடி முழங்கால் போட்டு, உங்க பாவங்கள அறிக்கையிட்டா, நீங்க தேவன அவமதிச்சு தூஷிக்கறீங்க இல்லையா? முட்டாள்தனமா இதச் செய்யறவங்க தேவனால இரட்சிக்கப்பட முடியுமா? பெரும்பாலும் இல்லை. முட்டாள்தனமா இதைச் செய்யறவங்க தேவனோட அங்கீகாரத்தைப் பெற முடியாது.

தேவன் ஒருவரை நியமிக்கறது என்பது சாதாரணமானதோ தன்னிச்சையானதோ அல்ல என்பதுல நாம தெளிவா இருக்கணும். அதற்கு ஆதாரம் இருக்கணும். தேவன் மோசேய நியமிச்சதற்கான ஆதாரம் இருந்துச்சு. இஸ்ரவேலர்களுக்கு அது தெரியும். கர்த்தராகிய இயேசுவால நடந்த பேதுருவின் நியமனமும் உண்மையானது, இது அப்போஸ்தலர்களுக்குத் தெரியும். அதனால, தேவன் ஒருவர நியமிச்சிருக்கிறார் என்ற சொல்லுக்கு உண்மையான ஆதாரம் தேவையா இருக்கு. எந்த மனுஷனும் இதத் தன்னிச்சையா கோர முடியாது. தேவன் நியமிக்கற ஒருவன் பரிசுத்த ஆவியானவரோட வழிநடத்துதலையும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் உறுதிப்படுத்தலையும் பெறுவான் என்பதயும் நம்மால பாக்க முடியும். அவங்களோட கிரியை தேவனோட சித்தத்த நிறைவேத்த முடியும், அது மிகவும் தெளிவான முடிவுகளப் பெறும். அவங்களால தேவனோட கட்டளைய நிறைவேத்த முடியும். சர்வவல்லமையுள்ள தேவன் என்ன சொல்றார்னு பார்ப்போம். “அவனுடைய வேலையின் சாராம்சம் மற்றும் அவன் பயன்படுத்தப்படும் பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையில், தேவனால் பயன்படுத்தப்படுகிற மனுஷன் அவரால் எழுப்பப்படுகிறான், அவன் தேவனுடைய கிரியைக்காக தேவனால் ஆயத்தப்படுத்தப்படுகிறான், மேலும் அவன் தேவனின் சொந்தக் கிரியையிலேயே ஒத்துழைக்கிறான். அவனுக்குப் பதிலாக வேறு எவரும் அவனுடைய வேலையைச் செய்ய முடியாது—இது தேவ கிரியையோடு கூட தவிர்க்க முடியாததாக இருக்கும் மனுஷ ஒத்துழைப்பாகும். அதேநேரத்தில், மற்ற ஊழியக்காரர்கள் அல்லது அப்போஸ்தலர்களால் செய்யப்படும் கிரியை என்பது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சபைகளுக்கான ஏற்பாடுகளின் பல அம்சங்களின் அனுப்புதலும் நடைமுறைப்படுத்தலும் ஆகும், அல்லது சபை வாழ்க்கையைப் பராமரிப்பதற்கான சில எளிய வாழ்க்கை நியதிக்கான கிரியை ஆகும். இந்த ஊழியக்காரர்களும் அப்போஸ்தலர்களும் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்கள் என்றும் கூறமுடியாது. அவர்கள் சபைகளின் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மேலும் ஒரு கால அளவிற்கு அவர்கள் பயிற்சிபெற்று பண்படுத்தப்பட்ட பின்னர், அவர்களில் தகுதியானவர்கள் வைக்கப்பட்டு தகுதியற்றவர்கள் அவர்கள் வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் சபைகளின் நடுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், தலைவர்கள் ஆன பின்னர் அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டுகிறார்கள், மேலும் சிலர் மோசமான செயல்களையும் கூட செய்து முடிவில் புறம்பாக்கப்படுகிறார்கள். மாறாக, தேவனால் பயன்படுத்தப்படும் மனுஷன், தேவனால் ஆயத்தப்படுத்தப்படுகிறான், மேலும் சில திறன்களைக் கொண்டவனாய் இருக்கிறான், மேலும் மனிதத்தன்மை உள்ளவனாய் இருக்கிறான். அவன் முன்கூட்டியே பரிசுத்த ஆவியானவரால் ஆயத்தப்படுத்தப்பட்டு பரிபூரணப்படுத்தப்படுகிறான், மேலும் அவன் முழுமையாகப் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறான், மற்றும் குறிப்பாக அவனுடைய கிரியை என்று வரும்போது, அவன் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு கட்டளையிடப்படுகிறான்—இதனால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வழிநடத்தும் பாதையில் எந்தத் திசைமாற்றமும் இல்லை, ஏனெனில் தேவன் தமது சொந்தக் கிரியைக்கு நிச்சயமாகப் பொறுப்பை எடுத்துக்கொள்ளுகிறார், மேலும் தேவன் தமது சொந்தக் கிரியையையே எல்லா நேரமும் செய்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி”).

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள், தேவன் தாம் நியமிப்பவங்கள முன்கூட்டியே தயார் செஞ்சு, அவரோட கிரியைக்காக பயன்படுத்துறாருங்கறதையும், தம்மால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள வழிநடத்த அவங்களத் தான் தேவன் எழுப்புறாருங்கறதையும் நமக்குக் காட்டுது. அவங்களோட கிரியையும் பிரசங்கங்களும் முழுவதுமா பரிசுத்த ஆவியானவரோட ஏற்பாட்டாலயும் வழிநடத்துதலாலயும் இருக்கு. தேவனால தனிப்பட்ட முறையில நியமிக்கப்படாத யாரும் அவங்களுக்குஒருபோதும் மாற்றாக முடியாது. நியாயப்பிரமாண காலத்துல மோசேயும், கிருபையின் காலத்துல பேதுருவும் தேவனோட வார்த்தைகளக் கண்டிப்பான முறையில கடைபிடிச்சு, அவரால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள வழிநடத்தும்படிக்கு கேட்கப்படுறாங்க, தேவன் எப்போதும் அவங்களோட இருந்தாரு, ஒவ்வொரு திருப்பத்துலயும் அவங்கள வழிநடத்தினாரு. தேவன் தவறான நபரையோ அவருக்கு எதிரா கிரியை செய்யற ஒருவரையோ ஒருபோதும் பயன்படுத்துவதில்ல. அவர்தான் தம்மோட சொந்த கிரியைகளுக்கு எப்போதும் பொறுப்பா இருக்காரு. தேவனால பயன்படுத்தப்படுறவங்க பரிசுத்த ஆவியானவரால தங்களோட கிரியையிலும் வார்த்தைகளிலும் தொடர்ச்சியா பிரகாசிப்பிக்கப்படுறாங்க, தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கு, அவரோட வார்த்தைகள், அவரோட சித்தம், அவரோட கோரிக்கைகளைப் புரிஞ்சுக்க உதவ தேவனோட வார்த்தைகளோட தூய புரிதலை அவங்களால பகிர்ந்துக்க முடியும். தேவனோட வார்த்தைகளின் யதார்த்தத்துக்குள்ளயும் தங்களோட விசுவாசத்துல சரியான பாதையிலயும் நுழைய தங்களுக்கு இருந்த நடைமுறைப் போராட்டங்கள் மூலமா, தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கு உதவ, அவங்க எப்போதும் சத்தியத்தைப் பயன்படுத்த முடியும். தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் தேவனால பயன்படுத்தப்பட்டவங்களோட மேய்ச்சல ஏத்துக்கிட்டு கீழ்ப்படிஞ்சா அவங்க தங்களோட வாழ்க்கைக்கு உண்மையான வாழ்வாதாரத்தைப் பெற முடியும், படிப்படியா சத்தியத்தக் குறித்து அதிகமா புரிஞ்சுக்க முடியும், தேவனோட கிரியையயும் மனநிலையயும் நல்லா தெரிஞ்சுக்கவும், தேவன் மீதான விசுவாசத்தயும் அன்பயும் அதிகரிக்க முடியும். அதனாலதான், அவங்க தேவனால நியமிக்கப்பட்டவங்கன்னும், தேவனோட இருதயத்துக்கு ஏத்தவங்கன்னும் தங்களோட இருதயத்துல அறிஞ்சிருக்கற, தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களால ஆதரிக்கப்படுறாங்க. நாம அவங்களோட தலைமையை ஏத்துக்கிட்டு கீழ்ப்படியும்போது, இதுதான் தேவனப் பின்பற்றுவதும் தேவனுக்குக் கீழ்ப்படிவதுமாகவும், தேவனோட சித்தத்துக்கு ஏற்றதுமாகவும் இருக்கு. தேவன் தெரிந்து கொண்டவங்களை தேவகிரியய அனுபவிச்சி, அவரப் பின்பற்ற வழிநடத்துவதற்கு தேவனால பயன்படுத்தப்படுறவங்க ஏற்படுத்தப்படுறாங்க அவங்களோட கிரியையும் பிரசங்கங்களும் முழுவதுமா பரிசுத்த ஆவியானவரோட தலைமைத்துவத்துல இருந்தும் வெளிச்சத்துல இருந்தும் வர்றதா இருக்குது. அவங்களோட தலைமைத்துவத்த ஏத்துக்கறதும் கீழ்ப்படியறதும் உண்மையிலயே தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதா இருக்கு. அவங்கள எதிர்ப்பது தேவன எதிர்ப்பதா இருக்கு, அது தேவனால அம்பலப்படுத்தப்பட்டு அகற்றப்படுவதுல முடிவடையும், இல்லனா, ஒருவேள ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படலாம், தண்டிக்கப்படலாம். மோசே இஸ்ரவேலர்கள எகிப்துல இருந்து வெளியே அழச்சுட்டு போனப்ப, அவனுக்கு எதிராப் போரிட்ட கோராகு மற்றும் தாத்தானின் கூட்டத்தினர்கள் தேவனால தண்டிக்கப்பட்டதப் போல தண்டிக்கப்படலாம். அது தெளிவான உண்மை.

இன்றைய மதத் தலைவர்களான போப், பேராயர், கத்தோலிக்கப் பாதிரியார்கள், அப்பறம் கிறிஸ்தவ மதத்துல உள்ள போதகர்கள், மூப்பர்கள், பிற மதகுருமார்கள்னு இவங்களப் பத்தி நாம பாக்கலாம். அவங்க தேவனால நியமிக்கப்பட்டிருக்காங்களா? தேவன் அவங்களுக்கு ஆதரவா பேசியிருக்காரா? பரிசுத்த ஆவியானவரோட கிரியையில இருந்து அவங்ககிட்ட ஆதாரமிருக்கா? அவங்களோட கிரியைக்கான பலன்கள்ல இருந்து அவங்ககிட்ட ஆதாரம் இருக்கா? அவங்ககிட்ட இது எதுவுமே இல்ல. அவங்க தேவனால நியமிக்கப்படல, மனுஷங்களால தெரிந்துகொள்ளப்பட்டாங்க என்பத இது நிரூபிக்குது. அவர்கள் வேதாகமக் கல்லுரிகள்ல வளர்க்கப்பட்டு அதிகாரப்பூர்வ மத நிறுவனங்களால் நியமிக்கப்பட்டாங்க என்பத நாம பாத்ததனால, நாம ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணுங்கறது நமக்குத் தெரியும் அவங்கள்ல பெரும்பாலானவங்க சத்தியத்த விசுவாசிக்கறதுமில்ல, தேவன் மேல உண்மையான விசுவாசம் வைக்கறதும் இல்ல. அவங்க இறையியலையும், அவங்களோட நிலையயும் பதவியையும், அதுல இருந்து அவங்க வாழுற வாழ்க்கயயும் நம்புறாங்க. அவங்களோட வேதாகம அறிவு எவ்வளோ உயர்ந்ததா இருந்தாலும், அவங்களோட பிரசங்கங்கள் எவ்வளோ சிறந்ததா இருந்தாலும், அவங்களுக்குப் பரிசுத்த ஆவியியானவரோட கிரியையும் வழிநடத்துதலுமோ, ஆவியானவரின் வெளிச்சமோ இருப்பதில்ல. அவங்க கள்ள மேய்ப்பர்களும் அவிசுவாசிகளுமா இருக்காங்க என்பத இது நமக்குக் காட்டுது, தேவன் அவங்கள அங்கீகரிப்பதில்ல. அப்படினா, அவங்கள ஆராதிப்பது பின்பற்றுவது ரொம்பவே முட்டாள்தனம் இல்லையா? அவங்ககிட்ட தேவனோட வார்த்தைகளப் பத்திய சாட்சியும் பரிசுத்த ஆவியானவரிடத்துல இருந்து கிடைக்கற ஆதாரமும் இல்லை. அவங்க என்னவா இருக்காங்க என்பதப் பார்க்க நமக்கு உதவுற முக்கியமான சின்ன ஆதாரம் ஒன்னு இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவன், பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு. ஜனங்களோட உண்மையான நிறத்தஅதாவது, அவங்க சத்தியத்த நேசிக்கறாங்களா இல்லையா, அவங்க சத்தியத்த ஒத்துக்கறாங்களா இல்லையா, அவங்க சத்தியத்த ஏத்துக்கறாங்களா இல்லையா, அவங்க சத்தியத்த வெறுத்து ஒதுக்கறாங்களா அப்படிங்கறத பகிரங்கமா வெளிப்படுத்தியிருக்காரு. எல்லாமே வெளிப்படுத்தப்பட்டிருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சத்தியம்னும் அவர் மாம்சத்துல இருக்கற தேவன்னும், ஏற்றுக்கொள்பவங்க சத்தியத்த நேசிப்பவங்களாவும் தேவனோட அங்கீகாரத்தைப் பெற்றவங்களாவும் இருக்காங்க. அவங்கதான் தேவனோட சத்தத்தக் கேட்டு அவரோட சிங்காசனத்துக்கு முன்பா எடுத்துக்கொள்ளப்பட்ட புத்தியுள்ள கன்னிகைகள். சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருப்பத ஒருவன் பாத்த பெறகும் தேவனோட தோற்றத்தையும் கிரியையையயும் எதிர்த்தும், கண்டனம் செஞ்சும், மறுத்தும் இருந்தா, அதுக்கு, அவங்க சத்தியத்த வெறுக்கறாங்கன்னுதான் அர்த்தம், அவங்க தேவன எதிர்க்கற கண்டனம்செய்ற அந்திக்கிறிஸ்துக்களா இருக்காங்க. அவங்க ஏற்கனவே பேரழிவுகள்ல விழுந்து தேவனால தண்டிக்கப்பட இருக்காங்க. இது கத்தோலிக்கத் தலைவர்களுக்கும் கிறிஸ்தவத் தலைவர்களுக்கும் மட்டுமல்ல, எல்லா மதப்பிரிவுகள்ல இருக்கற தலைவர்களுக்கும் வழிநடத்துபவங்களுக்குந்தான். கிட்டத்தட்ட விதிவிலக்கு இல்லாம, சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எதிரா செயல்படுற, இந்த அந்திக்கிறிஸ்து கும்பலின் பிடியில மத உலகம் இருக்கு. இத யாரும் மறுக்க முடியாதுங்கறது எல்லாருக்குந் தெரிந்த உண்மை. அதனால, இந்த பேராயர்கள், பாதிரியார்கள், போதகர்கள் மற்றும் மூப்பர்கள் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய எதிர்த்துக் குற்றப்படுத்தற அந்திக்கிறிஸ்துக்களோட கூட்டத்தின் ஒரு பகுதியினர இருக்காங்கன்னு நாம தெரிஞ்சிக்கிட்டா, அத நாம எப்படி அணுகணும்? நாம அவங்கள நிராகரிச்சு சபிக்கணும், அவங்களோட கண்டிப்புகள்லருந்து நம்ம விடுவிச்சுக்கணும். இதுதான் புத்திசாலித்தனமா இருப்பது. மெய்யான வழிக்காக நாம அவங்களத் தொடர்ந்து தேடினா, எது சரி, எது தவறுங்கறத அவங்க நம்மகிட்ட சொல்லுவாங்கன்னு எதிர்பாத்தா, இது ரொம்பவே முட்டாள்தனமானது, இது குருட்டுத்தனமானதும் அறியாமையுமாய் இருக்கு! குருடனக் குருடனே வழிநடத்தினா அது அழிவுல தான் முடிவடையும். இது வேதாகம வசனங்கள நிறைவேத்துது: “மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்” (நீதிமொழிகள் 10:21). “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்(ஓசியா 4:6).

கத்தோலிக்கத் தலைவர்களும் கிறித்தவத் தலைவர்களும், மற்ற அனைத்துப் பிரிவுகளின் தலைவர்களோட சேந்து, சர்வவல்லமையுள்ள தேவன வெளிப்படையாக் கண்டனம் செய்றாங்கங்கறது, ரொம்பவே தெளிவா இருக்கு. தங்களோட அந்தஸ்தையும் சம்பளத்தையும் தக்க வச்சுக்க, அவங்க விசுவாசிகளத் தங்களோட பிடியில உறுதியா வச்சிருக்காங்க. அவங்களோட பணத்தையே எடுத்து, ஒட்டுண்ணிகள் போலவும், பிசாசுகள் தங்களோட சரீரத்தயே விருந்தாக்குவதப் போலவும் விசுவாசிகள போஷிக்கறாங்க. இந்த அந்திக்கிறிஸ்துகள், தங்களோட நிலைகளையும் வாழ்வாதாரங்களையும் தக்க வச்சுக்க, எல்லாவிதமான தீமையான பொய்களையும் பரப்பி, கர்த்தரோட வருகயப் பத்தின எந்த செய்தியும் பொய்யானதுன்னும், கர்த்தராகிய இயேசு மேகத்தின் மீதுதான் வரணும்னும், கர்த்தரோட ரெண்டாவது மனுவுருவாதல ஏத்துக்கறது ஒரு கள்ளக்கிறிஸ்துவை ஏத்துக்கறதுன்னும் சொல்லுறாங்க. ஜனங்களத் தவறா வழிநடத்த அவங்க பொய் சொல்றாங்க, மெய்யான வழிய ஆராஞ்சுபாக்கறதுல இருந்து விசுவாசிகளைத் தடுக்க தங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செய்யுறாங்க. ராஜ்யத்தின் சுவிசேஷத்தப் பகிர்ந்துகொள்பவங்களக் கைது செஞ்சு துன்புறுத்த, அவங்க சிசிபி-யோட தங்களை இணச்சுக்கறாங்க. இந்த மத தலைவர்கள் எப்படி இருக்காங்க, கர்த்தராகிய இயேசுவை அவருடைய நாள்ல எதிர்த்த பரிசேயர்கள்ல இருந்து வேறுபட்டவங்களா யாராவது இருக்காங்களா? அவங்க தேவன சிலுவையில அறையும் ஜனங்கள் இல்லையா? அவங்க எல்லாரும், ஜனங்கள வழிதவறச் செஞ்சு அவங்கள அழிக்கற, கள்ள மேய்ப்பர்களும் அந்திக்கிறிஸ்துக்களுமா இருக்காங்க, அல்லவா? பரிசேயர்களக் கண்டிக்கும் கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள நெனச்சுப் பாருங்க: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை(மத்தேயு 23:13). “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்(மத்தேயு 23:15). இன்னைக்குப் பெரும்பாலான மதத் தலைவர்கள், கர்த்தராகிய இயேசுவ வெறித்தனமா எதிர்த்துட்டு, விசுவாசிகளுக்கான வழியில நின்ன பரிசேயர்கள்ல இருந்து வேறுபட்டவங்க இல்லங்கறத நம்மால பாக்க முடியும் அவங்க எல்லாரும் தேவன வெறுத்து அவருக்கு எதிரா கிரியை செய்யுறாங்க. அவங்க கடைசி நாட்களோட அந்திக்கிறிஸ்துவின் பிசாசுகளா இருக்காங்க.

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் மேலும் சில பகுதிகள் இதோ. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஒவ்வொரு சபைப் பிரிவின் தலைவர்களையும் பார்—அவர்கள் அனைவரும் அகந்தையுள்ளவர்களும் சுயநீதிக்காரர்களாகவும் இருக்கின்றனர், மேலும் வேதாகமத்தை அவர்கள் விளக்குவது சூழலுக்குப் பொருத்தமற்று அவர்களது சொந்தக் கருத்துகளாலும் கற்பனைகளாலும் வழிகாட்டப்படுகின்றன. அவர்கள் தங்கள் கிரியையைச் செய்ய வரங்களையும் அறிவையும் சார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பிரசங்கமே செய்ய முடியாவிட்டால் ஜனங்கள் அவர்களைப் பின்பற்றுவார்களா? எது எப்படி இருந்தாலும், அவர்களுக்கு சிறிது அறிவு இருக்கிறது மேலும் சில உபதேசங்களைப் பற்றி பிரசங்கிக்க முடியும், அல்லது பிறரை எப்படிக் கவர்வது என்றும் சில உபாயங்களை பயன்படுத்தவும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஜனங்களை வஞ்சிக்கவும் தங்களுக்கு முன்னால் அவர்களைக் கொண்டு வரவும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பெயரளவில், அந்த ஜனங்கள் தேவனை விசுவாசிக்கின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் தங்கள் தலைவர்களைப் பின்பற்றுகின்றனர். யாராவது ஒருவர் சத்திய வழியைப் பிரசங்கிப்பதை அவர்கள் எதிர்கொண்டால், அவர்களில் சிலர் ‘எங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எங்கள் தலைவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள். ஜனங்கள் தேவனை விசுவாசித்து மெய்யான வழியை ஏற்றுக்கொள்ளும்போது பிறருடைய இசைவும் ஒப்புதலும் அவர்களுக்கு இன்னும் எவ்வாறு தேவைப்படுகிறது என்று பாருங்கள்—இது ஒரு பிரச்சினை இல்லையா? பின்னர், அந்தத் தலைவர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்கள், பரிசேயர்கள், கள்ள மேய்ப்பர்கள், அந்திக்கிறிஸ்துக்கள் ஆகி ஜனங்கள் சத்திய வழியை ஏற்றுக்கொள்வதற்குத் தடைக்கற்களாக மாறவில்லையா?(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”).

பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”).

தேவனுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பவர்களும் அவரை எதிர்ப்பவர்களுமே எல்லோரைக் காட்டிலும் பெரிய கலகக்காரர்கள். அவர்கள் தான் தேவனுடைய எதிரிகள், அந்திகிறிஸ்துக்கள். அவர்களுடையது எப்போதும் தேவனுடைய புதிய கிரியைக்கு எதிரான விரோதப் போக்காகும்; அவர்களிடம் ஒருபோதும் கீழ்ப்படிவதற்கான விருப்பம் சிறிதளவு கூட இருப்பதில்லை, அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்ததோ அல்லது தாழ்மைப்படுத்திக் கொண்டதோ கிடையாது. அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள், ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. தேவனுக்கு முன்பாக, வார்த்தையைப் பிரசங்கிப்பதில் சிறந்தவர்களாகவும், மற்றவர்களை இயக்குவதில் மிகவும் திறமையானவர்களாகவும் தங்களைக் கருதுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களிடமுள்ள ‘பொக்கிஷங்களை’ ஒதுக்கித் தள்ளுவதில்லை, ஆனால் அவற்றைத் தொழுகைக்கான, மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்கான குடும்பப் பரம்பரைச் சொத்துக்களாகக் கருதுகிறார்கள், மேலும் அவற்றைப் பார்த்து பிரமிக்கும் முட்டாள்களுக்குப் பிரசங்கிக்க அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். திருச்சபையில் உண்மையிலேயே இது போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தலைமுறை தலைமுறையாக தேவனுடைய வீட்டில் தங்கியிருக்கும் ‘வெல்லமுடியாத கதாநாயகர்கள்’ என்று சொல்லலாம். அவர்கள் வார்த்தையை (கோட்பாடு) பிரசங்கிப்பதை தங்களுடைய மிக உயரிய கடமையாக கருதுகிறார்கள். கால காலமாக, தலைமுறை தலைமுறையாக, அவர்கள் தங்கள் ‘பரிசுத்தமான மற்றும் மீற முடியாத’ கடமையைத் தீவிரமாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களைத் தொடக்கூட யாரும் துணிவதில்லை; ஒருவர் கூட அவர்களை வெளிப்படையாக கடிந்துகொள்ளத் துணிவதில்லை. அவர்கள் கால காலமாக மற்றவர்களை அடக்கி ஆண்டு வருவதனால் தேவனுடைய வீட்டில் ‘ராஜாக்கள்’ ஆக மாறி கட்டுப்பாடற்றவர்களாக செயல்படுகிறார்கள். இந்த பிசாசுகளின் கூட்டம் ஒன்றாக கைகோர்த்து எனது கிரியையை அழிக்க எத்தனிக்கிறது; இந்த உயிருள்ள பிசாசுகள் என் கண் முன்னே இருப்பதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்”).

பெரும்பாலான மதத் தலைவர்கள், சத்தியத்த வெறுக்கற, தேவன வெறுக்கற அந்திக்கிறிஸ்துக்களாவும், ஜனங்கள தவறா வழிநடத்துற பொல்லாத ஊழியர்களாவும் கள்ள மேய்ப்பர்களாவும் இருக்காங்க என்பதுல, நாம எல்லாரும் தெளிவா இருக்கோம்னு நான் உறுதியா நம்புறேன். அவங்க சொல்றதக் கேக்கறதும் அவங்களுக்குக் கீழ்ப்படியறதும் தேவனுக்குக் கீழ்ப்படிவது இல்ல. அது தேவனப் பின்பற்றுவதில்ல. அது சாத்தானப் பின்பற்றி தேவன எதிர்க்கிறதாவும், சாத்தானோட கூட்டாளியா மாறுறதும், தேவன் வெறுக்கற, அவர் அழிக்கிற ஒருத்தராகவுந்தான் இருக்க முடியும். அதனால, விசுவாசிகளாகிய நாம தேவன மகிமைப்படுத்தணும், அவருக்கு பயப்படணும், அவருக்கும் சத்தியத்துக்கும் கீழ்ப்படியணும்னு அறிஞ்சிருக்கணும். நாம ஒருபோதும் மனுஷர்கள ஆராதிக்கவோ பின்பற்றவோ முடியாது. கர்த்தராகிய இயேசு சொன்னதப் போலவே, “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக(மத்தேயு 4:10). ஒரு மதத் தலைவர் சத்தியத்த நேசிப்பவரா இருந்தா, அவங்களோட வார்த்தைகள் கர்த்தரோட வார்த்தைகளோட ஒத்துப்போனா, நாம தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகும்படி அவைகள் நம்மள வழிநடத்துனா, அப்ப, சத்தியத்துக்கு ஒத்துப்போற அந்த வார்த்தைகளப் பின்பற்றுறதும் கீழ்ப்படியறதும் தேவனுக்குக் கீழ்ப்படியறதா இருக்கும். அவங்களோட வார்த்தைகள் சத்தியத்துக்கு ஒத்துப்போகலைனா, அவங்க கர்த்தரோட வார்த்தைகளுக்கு விரோதமாக நடந்தா, நாம அவங்கள நிராகரிக்கணும். அவங்களோட வார்த்தைகள் சத்தியத்துக்கு ஒத்துப்போகலைனா, அவங்க கர்த்தரோட வார்த்தைகளுக்கு விரோதமாக நடந்தா, ஒரு மதத் தலைவர் சத்தியத்த நிராகரிச்சு, இகழ்ந்து, மற்றவங்கள மெய்யான வழிய ஆராயவிடாம தடுத்தா, அவங்க ஒரு அந்திக்கிறிஸ்துவா இருக்காங்க நாம தேவனோட பக்கம் நின்னு, அவங்கள வெளிப்படுத்தி நிராகரிக்கணும், “முடியாதுன்னு” சொல்லத் துணியவும், அவங்களோட கட்டுப்பாட்லருந்து தப்பிக்கவும், மெய்யான வழியத் தேடி ஏத்துக்கவும், தேவனோட அடிச்சுவடுகளப் பின்பற்றுறவங்களாவும் இருக்கணும். அதுதான், உண்மையான விசுவாசமும், உண்மையாவே தேவனைப் பின்பற்றுவதும், அவரோட சித்தத்துக்கு ஏற்றதாவும் இருக்கும். பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பேதுருவ கூட்டிட்டுப் போனப்ப அவன் சொன்னதப் போலவே: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” (அப்போஸ்தலர் 5:29).

சர்வவல்லமையுள்ள தேவனோட மற்றொரு பகுதியப் படிப்போம். “தேவனைப் பின்தொடர்வதில் பிரதானமான முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய தேவனுடைய வார்த்தைகளின்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதே: நீங்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதை அல்லது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைப் பின்தொடர்ந்தாலும், எல்லாம் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். நீ பேசுவதும் பின்பற்றுவதும் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், நீ தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியனாகவும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை முற்றிலுமாக இழந்தவனாகவும் இருக்கிறாய். தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களை தேவன் விரும்புகிறார். நீ முன்பு புரிந்துகொண்டது எவ்வளவு அற்புதமானதாக மற்றும் தூய்மையானதாக இருந்தாலும், தேவன் அதை விரும்புவதில்லை. இதுபோன்ற விஷயங்களை உன்னால் ஒதுக்கி வைக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் உன் பிரவேசத்துக்கு அவை மிகப்பெரிய தடையாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய ஒளியைப் பின்பற்றக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். கடந்த கால ஜனங்களும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினர், ஆனாலும் அவர்களால் இன்று வரை பின்பற்ற முடியவில்லை. இது கடைசி நாட்களின் ஜனங்களுடைய ஆசீர்வாதமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றக்கூடியவர்கள், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றக்கூடியவர்கள், அதாவது தேவன் அவர்களை வழிநடத்தும் இடங்களிலெல்லாம் அவற்றைப் பின்பற்றுகிறவர்கள்—இவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றாதவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் கிரியையில் பிரவேசித்திருக்கவில்லை, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர்களுடைய துன்பங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவர்கள் எவ்வளவாக ஓடுகிறார்கள் என்றாலும், இவை எதுவும் தேவனுக்கு ஒரு பொருட்டாகாது மேலும் அவர் அவர்களைப் பாராட்ட மாட்டார். … இன்று தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், தேவனுடைய தற்போதைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடிவதும், இன்றைய தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்ற முடிவதும், தேவனுடைய புதிய வார்த்தைகளுக்கு ஏற்ப பிரவேசிப்பதும் என இவை ‘பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுதல்’ என்பதன் அர்த்தமாகும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றி பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்தில் இருப்பவன் இவன்தான். அத்தகையவர்கள் தேவனுடைய புகழ்ச்சியைப் பெறுவது, தேவனைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களால் தேவனுடைய சமீபத்திய கிரியைகளிலிருந்து தேவனுடைய மனநிலையையும் அறிந்து கொள்ள முடியும் மற்றும் மனிதனுடைய கருத்துக்கள் மற்றும் கீழ்ப்படியாமை மற்றும் மனிதனுடைய சுபாவம் மற்றும் சாராம்சம் ஆகியவற்றை அவருடைய சமீபத்திய கிரியையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கள் தங்கள் ஊழியத்தின் போது படிப்படியாக அவர்களுடைய மனநிலையில் மாற்றங்களை அடைய முடியும். இது போன்றவர்கள் மட்டுமே தேவனை அடையக்கூடியவர்கள் மற்றும் உண்மையான வழியை உண்மையாகக் கண்டுபிடித்தவர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்”).

விசுவாசமா இருப்பது, அப்புறம் தேவனைப் பின்பற்றுறதுங்கறது சத்தியத்துக்குக் கீழ்ப்படிவதும், சத்தியத்த ஏத்துக்கறதும், தேவனோட தற்போதைய கிரியையயும் வார்த்தைகளையும் ஏத்துக்கறதையும் அவரது அடிச்சுவடுகளப் பின்பற்றுறதையும் பத்தியதாக இருக்குங்கற விஷயத்துல, இப்ப நாம தெளிவா இருக்கோம்னு நான் உறுதியா நம்புறேன். தேவனோட கிரியை ஜனங்களோட கருத்துக்கள்ல இருந்து எவ்ளோ தூரமா இருந்தாலு சரி, அல்லது எத்தன பேரு அத எதிர்த்துக் கண்டனம் செஞ்சாலும், அது சத்தியமாவும் தேவனோட கிரியையாவும் இருக்கும் வரை, நாம அத ஏத்துக்கிட்டு அதுக்குக் கீழ்ப்படியணும். அது மட்டுந்தான் விசுவாசமா இருக்கறதும் தேவனைப் பின்பற்றுவதுமா இருக்கு. வெளிப்படுத்தின விசேஷத்துல சொல்லப்பட்டதப் போல: “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே(வெளிப்படுத்தல் 14:4). கடைசி நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவன் இங்க கிரியை செஞ்சு பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு. மனுக்குலத்த முழுமையா சுத்திகரிச்சு இரட்சிக்க தேவனோட வீட்லயிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பு கிரியைய செய்யுறாரு, பொல்லப்புல இருந்தும் சாத்தானோட வல்லமைகளிடத்துல இருந்தும் நம்மள இரட்சிக்கறாரு. இது தவறவிடக்கூடாத ஒரே வாய்ப்பும் இரட்சிக்கப்படுறதுக்கும் தேவனோட ராஜ்யத்துல நுழையறதுக்குமான ஒரே பாதையுமா இருக்கு. இப்ப உலக முழுவதுலயும் தேவனோட தோற்றத்துக்காக ஏங்குகிற அதிகமான ஜனங்கள் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய இணையதளத்துல பாத்துக்கிட்டு இருக்காங்க. அவரோட வார்த்தைகள் அனைத்தும் சத்தியம்னும், அவை தேவனோட சத்தம்னு அவங்க பாத்திருக்காங்க. அவங்க மதத் தலைவர்களோட கட்டுல இருந்து தங்கள விடுவிச்சுக் கொள்றாங்க, தங்களோட திருச்சபை கட்டுப்பாட்டுலருந்து வெளியில வந்து, ஆட்டுக்குட்டியானவரோட கலியாண விருந்துல கலந்துக்க தேவனோட சிங்காசனத்துக்கு முன்னாடி வர்றாங்க. ஆனா, குருமார்கள கண்மூடித்தனமா பின்பற்றி ஆராதிக்கிறவங்களான, அந்திக்கிறிஸ்துவோட வல்லமைகளால கட்டுப்படுத்தப்பட்டு வஞ்சனையில சிக்கியிருக்கறவங்க பலரும் மத உலகத்துல இன்னும் இருக்காங்க. அவங்க தரிசு நிலத்துக்குள்ள இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுறாங்க, கர்த்தர் மேகத்து மேல வருவார்னு வீணாக் காத்துக்கிட்டு இருக்காங்க, நீண்ட காலத்துக்கு முன்னாடியே தேவனால நிராகரிக்கப்பட்டும் அகற்றப்பட்டும், பேரழிவுகள்ல அழுதுகிட்டும், தங்களோட பற்களக் கடிச்சிக்கிட்டும் இருக்காங்க. இதுதான் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளோட நிறைவேறுதல் “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே(மத்தேயு 15:14). அவங்க தேவனை விசுவாசிப்பதா சொல்றாங்க, ஆனா உண்மையில, அவங்க தேவனுக்கு எதிராப் போய் ஜனங்களப் பின்பற்றுறாங்க. தேவன் அவங்கள அவிசுவாசிகளாப் பாக்குறாரு. தேவன் தீமைய வெறுக்கும் பரிசுத்தமான தேவனா இருக்காரு அவரோட நீதி குற்றமற்றதா இருக்கு. மனுஷங்களப் புகழுறவங்களையும், தேவனை எதிர்ப்பதுலயும் தூஷிப்பதுலயும் அந்திக்கிறிஸ்துக்களப் பின்பற்றுறவங்களயும் அவர் ஒருபோதும் இரட்சிக்க மாட்டாரு. சத்தியத்த நேசிக்காமலும் ஏத்துக்காமலும் கண்மூடித்தனமா வேதத்தப் பற்றிக் கொள்ளுற யாரையும், தேவன் இரட்சிக்க மாட்டாரு. மத பாபிலோன்ல இருந்து ஜனங்கள விடுவிக்கறதுதான் தேவனோட சித்தம். அதனால, மத உலகத்தோட அந்திக்கிறிஸ்து வல்லமைகளோட கட்டுப்பாடுகளால நாம இனி கட்டுப்படுத்தப்படுவதில்ல, மதத்துல இருந்து வெளிய வந்து நம்மால சத்தியத்தத் தேடவும் தேவனோட கிரியையத் தேடவும் முடியும், அதனால, தேவனோட தோற்றத்தையும் கிரியையயும் வரவேற்கற நம்பிக்க நமக்கு இருக்கு.

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள மேலும் பாக்கலாம். “நீங்கள் போற்றுவது கிறிஸ்துவின் தாழ்மையை அல்ல, மாறாக முக்கிய நிலையில் காணப்படும் அந்தக் கள்ள போதகர்களையே போற்றுகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் அன்பையோ அல்லது ஞானத்தையோ ஆராதிக்கவில்லை. ஆனால் இவ்வுலகின் அழுக்கில் புரண்டுக்கொண்டு இருக்கும் தன்னிச்சைப் பிரியர்களையே ஆராதிக்கிறீர்கள். நீங்கள் தலை சாய்க்க இடமில்லாத கிறிஸ்துவின் வேதனையைப் பார்த்து நகைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்தக் காணிக்கைகளை வஞ்சிக்க தேடி அலைந்து ஒழுக்கக் கேட்டில் வாழும் பிணங்களைப் போற்றுகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து துன்பம் அனுபவிப்பதை விரும்பவில்லை; ஆனால் அந்திக்கிறிஸ்துக்கள் உங்களுக்கு மாம்சத்தையும், வார்த்தைகளையும், கட்டுப்பாட்டையும் மட்டுமே கொடுத்தாலும், நீங்கள் சந்தோஷமாக அந்தப் பொறுப்பற்ற அந்திகிறிஸ்துவின் கரங்களிலேயே உங்களை ஒப்புக்கொடுக்கின்றீர்கள். இப்போதும்கூட உங்கள் இருதயம் இன்னும் அவர்களுக்கு நேராகவும் அவர்களுடைய பெயர் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவற்றின் பக்கமாகவும் திரும்புகிறது. இருந்தாலும் நீங்கள் கிறிஸ்துவின் கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமானது என்றும், இதைச் செய்ய விருப்பம் இல்லை என்ற ஒரு எண்ணத்தையும் உடையவராக இருக்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விசுவாசத்தில் குறைவுள்ளவர்களாக இருக்கின்றீர்கள் என்று கூறுகிறேன். இந்த நாட்களில் உங்களுக்கு வேறு வழி இல்லை என்பது மட்டுமே நீங்கள் அவரை இந்நாள் வரையிலும் பின்பற்றியிருக்கிறீர்கள் என்பதற்குக் காரணமாக இருக்கிறது. மிகவும் பிரபலமானவர்களின் உருவங்கள் உங்கள் இருதயத்தில் குவிந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும், கிரியைகளையும் அல்லது அவர்களது செல்வாக்கான வார்த்தைகளையும், கரங்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர்கள் உங்களுடைய இருதயத்தில் எக்காலத்திலும் உயர்வானவர்களாகவும், கதாநாயகர்களாகவும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்துவுக்கு அவ்வாறு இடமளிக்கப்படவில்லை. அவர் உங்களுடைய இருதயத்தில் முக்கியமற்றவராக, ஆராதிக்கத் தகுதியற்றவராக இருக்கிறார். அவர் உங்களுக்கு மிகவும் சாதாரணமானவராகவும், குறைந்த செல்வாக்கு உள்ளவராகவும், உயர்வற்றவராகவும் இருக்கின்றார்.

எந்த நிலையிலும் சத்தியத்தை மதிக்காதவர்கள் சத்தியத்திற்கு அவிசுவாசிகளாகவும் துரோகிகளாகவும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் கிறிஸ்துவின் அங்கீகாரத்தைப் பெறமுடியாது. இப்போது உங்களுக்குள் எந்த அளவிற்கு அவிசுவாசமும், கிறிஸ்துவை மறுதலித்தலும் இருக்கிறது என்று காண முடிகிறதா? நீங்கள் சத்தியத்தின் வழியைத் தெரிந்துகொண்டு இருப்பதால், நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் சேவிக்க வேண்டும்; தெளிவற்றவர்களாகவும், அரை மனதுள்ளவர்களாகவும் இருக்கவேண்டாம் என்று நான் உங்களை அறிவுறுத்துகிறேன். தேவன் இந்த உலகத்திற்கோ அல்லது ஒரு தனிநபருக்கோ உரியவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் யாரெல்லாம் உண்மையாக அவரை விசுவாசிக்கிறார்களோ, அவரைத் தொழுது கொள்ளுகிறார்களோ, பக்தியுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கே உரியவர்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை எப்படி மனுக்குலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் செய்யுது?

பேரழிவுகள் தங்கள் மேல இருப்பத மக்கள் உணர்ந்துருக்காங்க மேலும், மேகத்து மேல கர்த்தர் வர்றத எதிர்பாத்து படபடப்போடு காத்திருக்காங்க....

கடைசி நாட்களின் மனுவுருவான தேவன் ஏன் பெண்ணாக இருக்கிறார்?

கடைசி நாட்கள்ல மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்கார். இதயெல்லாம் இண்டர்நெட்டுல போட்டு அது உலகம்...

தேவன் ஏன் கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்?

பெருந்தொற்று இப்போ உலகம் பூராவும் பரவுது, பேரழிவுகள் மோசமாக. பூகம்பங்களையும், பஞ்சங்களையும், யுத்தங்களையும் பாத்திருக்கோம், விசுவாசிங்க...

விசுவாசத்தின் மூலம் அடையும் இரட்சிப்பு தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசத்தை அளிக்கிறதா?

பெருந்தொற்று தீவிரமா பரவிக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பூமியதிர்ச்சி, வெள்ளம், பூச்சிக் கூட்டம், பஞ்சமெல்லாம் ஏற்பட ஆரம்பிச்சிருச்சி....

Leave a Reply