ஒரு சக ஊழியர் என்பவர் போட்டியாளர் அல்ல

ஜனவரி 21, 2024

கடைசி நாட்களின் தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்ட கொஞ்ச நாள்லயே புதுசா வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதப் பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். நான் உற்சாகமாவும், சுறுசுறுப்பாவும் இருந்ததால, என்னோட கடமையில கொஞ்சம் பலன்கள விளைவிச்சேன், அதோடு, குழுத் தலைவியா தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதுக்கப்புறம், நான் சுவிசேஷ உதவிப் போதகரானேன். என்னோட சகோதர சகோதரிகள், நான் இளமையானவளா இருந்தாலும், நான் நம்பகமானவளா இருக்கறாதா சொன்னாங்க. என்னோட கடமையில நான் பாரமுள்ளவளா இருந்தேன், பொறுப்புள்ளவளா இருந்தேன். இது என்னோட ஆசைய ரொம்பவே நிறைவேத்திக்க உதவுறதா இருந்துச்சு. 2020 அக்டோபர்ல, நான் ஒரு திருச்சபைத் தலைவரானேன், இது நான் சத்தியத்தைப் பின்தொடர்ந்த ஒரு திறமைசாலியா என்னோட சகோதர சகோதரிகளின் இருதயங்கள்ல இருந்தேங்கறத இன்னும் அதிகமாக உணர வச்சுச்சு.

கொஞ்ச நாள் கழிச்சு, சகோதரி ஒலிவியா அவங்கள என்னோட சேர்ந்து வேலை செய்யறதுக்காக ஒரு மேலிடத் தலைவர் ஏற்பாடு செஞ்சாரு. அந்த வேலைய அவருக்கு அறிமுகப்படுத்தினப்போ, எங்க திருச்சபையில இருந்த சில பிரச்சனைகளப் பத்தி தலைவர் பேசினாரு. இதக் கேட்டதுக்கு அப்புறமா, “நாம பிரச்சனைக்கான மூலக்காரணத்தக் கண்டுபிடிச்சு அத சீக்கிரமா தீர்க்கணும். இல்லேன்னா, திருச்சபையோட பணிய அது தடை செய்யும்” அப்படின்னு ஒலிவியா சொன்னாங்க. அவங்க அப்படிச் சொன்னதக் கேட்டதும் எனக்கு அவமானமா இருந்துச்சு, ஏன்னா என்னோட வேலையில இந்தப் பிரச்சனைகள் இருப்பதால ஒலிவியா என்னைய கேவலமாப் பாப்பாங்கன்னு நான் கவலப்பட்டேன். அடுத்த சில நாட்கள்ல, ஒலிவியா திருச்சபையில உள்ள உண்மையான நிலமைய ஆராய்ஞ்சு பார்த்தாங்க. அதுக்கப்புறம், பல சக ஊழியர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் முன்னால, “கடந்த ரெண்டு நாட்கள்ல நான் சந்திச்ச சுவிசேஷ உதவிப் போதகர்கள் மற்றும் குழுத் தலைவர்கள் பலரும் பாரமுள்ளவங்களா இல்ல. புதுசா வந்தவங்களுக்குக் கருத்துக்களும் சிரமங்களும் இருக்கும்போது, குழுத் தலைவர்கள் அதத் தீர்ப்பதோ அல்லது தேடுவதோ இல்ல, அதுக்குப் பதிலா சிரமங்கள்ல சிக்கியிருக்காங்க. இப்படி இருந்தா புதுசா வந்தவங்களுக்கு அவங்களால நல்லா தண்ணீர் பாய்ச்ச முடியாது” அப்படின்னு அவங்க என்கிட்ட சொன்னாங்க. அவங்க சொன்னதக் கேட்டதும் அதக் கொஞ்சம் எதிர்க்கணும்னு எனக்குத் தோனுச்சு. ஆனா நான் பண்படுத்துவதுல கவனம் செலுத்திய சில குழுத் தலைவர்கள் இருந்தாங்க. அவங்களப் பொறுத்தவரை, அவங்கள்ல யாருமே நல்லவங்க இல்ல, அதனால அவங்க கொஞ்சம் அதிகமா கோரிக்கை வைக்கக் கூடும்னு நான் நெனச்சேன். “நீங்க இப்பத்தான் வந்திருக்கீங்க, சரியான சூழ்நிலை உங்களுக்குத் தெரியல, ஆனாலும் நீங்க தப்புக் கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டீங்க. நீங்க பாரம் கொண்டிருக்கீங்கங்கறதையும் சிக்கல்களக் கண்டறிய முடியும்ங்கறதயும் காட்ட விரும்புகிறீங்களா? நீங்க இங்க புதுச வந்திருப்பதால ஒரு பிம்பத்த ஏற்படுத்த முயற்சிக்குறீங்களா? என்னோட வேலையில இருக்குற பிரச்சனைகள நீங்க தோண்டிக்கிட்டே இருந்தா, என்னோட சகோதர சகோதரிகளோட பார்வையில என்னோட நல்ல பெயரை அழிச்சிருவீங்க” அப்படின்னு நான் நெனச்சேன். நான் என்னோட கோபத்த அடக்கிக்கிட்டு, “நீங்க கேட்கிற இந்தக் கேள்விகள்லாம் சரிதான். ஆனாலும், குழுத் தலைவர்கள் மற்றும் சுவிசேஷ உதவிப் போதகர்கள் ரெண்டு பேருமே நடைமுறை சிக்கல்களச் சந்திக்குறாங்க, அதனால சில நேரங்கள்ல பின்தொடர்தல் வேலைகள் சரியா செய்யப்படல, நாம புரிஞ்சுக்கணும்” அப்படின்னு சொன்னேன். இதக் கேட்டதும் அவங்க, “சத்தியத்தப் பத்தி ஐக்கியங்கொள்வதன் மூலமா இந்தச் சிரமங்கள தீர்த்து வைக்க முடியும். அவங்களால சத்தியத்த ஏத்துக்கிட்டு, தேவனோட சித்தத்தப் புரிஞ்சுக்க முடிஞ்சா, அவங்க பாரம் கொண்டிருப்பவங்களாவும், தங்களோட கடமையில பொறுப்புள்ளவங்களாவும் இருப்பாங்க. இந்தப் பிரச்சனைகளத் தீர்ப்பதுக்கு நாம சத்தியத்தக் குறித்து ஐக்கியங்கொள்றோமா இல்லையாங்கறதுதான் முக்கியமானது” அப்படின்னு சொன்னாங்க. உண்மதான், ஆனா நான் அத சரியா புரிஞ்சுக்கல, நான் இன்னும் அதிகமா கோபப்பட்டேன். நான், “என்னால சத்தியத்தக் குறித்து ஐக்கியங்கொள்ள முடியாதுன்னு நீங்க சொல்லலையா?” அப்படின்னு நெனச்சேன். ஒலிவியா பத்திய என்னோட பார்வ முழுசா மாறிருச்சு. நான் அதுக்கப்புறம் அவரை என்னோட சக ஊழியராவும் உதவியாளராவும் நினைக்கல, அதுக்குப் பதிலா, என்னோட எதிரியா நெனச்சேன். இது தொடர்ந்துச்சுன்னா, சீக்கிரத்துலயே அவங்க வேலையில முன்னணியில இருப்பாங்க, ஆனா நான் தலைவியா இருக்குறேன், அவங்க என்னோடு சேர்ந்து வேலை செய்யறதுக்காகத்தான் இங்க வந்தாங்க. அவங்க எல்லா வகையிலயும் என்னைய விட சிறந்தவங்களா இருக்காங்க, எப்பவும் என்னைய சங்கடப்படுத்துறாங்க. இப்படி இருந்தா, எனக்கு எப்படி மரியாதை கிடைக்கும்? என்னோட சகோதர சகோதரிகள் என்னையப் பத்தி என்ன நினைப்பாங்க? அப்படின்னு நான் நெனச்சேன். அதுக்கப்புறம், நான் அவரோடு அதுக்குமேல வேலை செய்ய விரும்பல, அவர்கிட்ட பேசவும் விரும்பல.

ஒருதடவ, சக ஊழியர் கூடுகை ஒன்றுல, கள்ளத் தலைவர்கள் நடைமுறைப் பணிகளச் செய்வதில்லங்கறத வெளிப்படுத்தும் தேவனோட வார்த்தைய வாசிச்சோம், ஒலிவியா தன்னைய ஆராய்ஞ்சு பாத்து தன்னைப் புரிஞ்சுக்கிட்டு, இப்ப கொஞ்ச காலமா திருச்சபையில இருந்து வந்ததாவும், ஆனா அவங்க நடைமுறைப் பணிகளச் செய்யாததால, புதுசா வந்தவங்களோட சிரமங்கள் சரியான நேரத்துல தீர்க்கப்படலன்னும், அதனால அவங்க சிரமங்கள்ல சிக்கினாங்க, அதோடு சத்தியத்த எப்படிக் கைக்கொள்ளுறதுன்னு அவங்களுக்குத் தெரியலன்னும், இது அவங்களோட வாழ்க்கையில வளர்ச்சியத் தாமதப்படுத்துச்சுன்னும் சொன்னாங்க. அவங்க சுய அறிவப் பத்தி விவாதிச்சுக்கிட்டு இருந்தாலும், என்னோட காதுகளுக்கு, அவங்க சரியா வேலை செய்யாததுக்காக என்னைய அம்பலப்படுத்திக்கிட்டு இருந்ததப் போல இருந்துச்சு. நான், “என்னோட வேலையில இருக்குற பிரச்சனைகள வேணும்னே எல்லாருக்கும் தெரியப்படுத்தறதுக்காக இந்தப் பிரச்சனைகளப் பத்தி நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க, இல்லையா? சகோதர சகோதரிகளுக்கு முன்பெல்லாம் என்னையப் பத்தி நல்ல அபிப்ராயம் இருந்துச்சு. ஆனா இப்ப நீங்க என்னைய இப்படி அம்பலப்படுத்தியிருக்கீங்க, அது என்னோட நற்பெயருக்குக் களங்கத்த ஏற்படுத்தாதா? இப்ப அவங்க என்னையப் பத்தி என்ன நினைப்பாங்க?” அப்படின்னு அவர் சொன்னதப் பத்தி நான் யூகிக்க ஆரம்பிச்சேன். அந்த நேரத்துல, நான் ரொம்ப எதிர்ப்பைக் காட்டினேன், அங்க இருந்து போயிற விரும்புனேன், ஆனா அப்படிச் செய்வது பகுத்தறிவில்லாததுன்னு நான் உணர்ந்தேன், அதனால நான் கடைசி வரை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. அன்னைக்கு சாயங்காலம், புதிய குழுத் தலைவர்களத் தேர்ந்தெடுப்பதப் பத்திக் கலந்து பேச ஒலிவியா என்கிட்ட வந்தாங்க நாம முன்வைக்கும்படிக்கு யார் பாரம் கொண்டவங்களா இருக்காங்க அப்படின்னு என்கிட்ட கேட்டாங்க. அவங்க என்கிட்ட கேட்டதுக்கப்புறம், நான் ரொம்ப எதிர்ப்பை உணர்ந்தேன், “தகுதியான நபர்கள் யாராவது இன்னும் இருக்காங்களா? சிறந்தவங்க எல்லாரையும் நீங்க நிராகரிச்சிட்டீங்க. நம்ம திருச்சபையில பிரச்சனைகள் இருக்குது, ஆனா நீங்க அதப் பத்தி இங்க வெளிப்படையாப் பேசினது மட்டுமல்லாம, மத்த திருச்சபைகளச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு முன்னாடி அதப் பத்திக் கலந்து பேசுறீங்க. நான் நடைமுறைப் பணியச் செய்யுறதில்லங்கறத இப்ப அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க. நீங்க பேசும்போது என்னோட உணர்வுகளப் பத்தி ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க? நீங்க வேணும்னே என்னையக் குறிவைக்குறீங்கன்னு நினைக்குறேன்!” அப்படின்னு நான் நெனச்சேன். “நீங்க வந்ததுல இருந்து வேற யாருக்கும் பாரம் இல்லாமப் போயிருச்சு” அப்படின்னு நான் கடுமையாக சொன்னேன். “அப்படின்னா நான் இங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லுறீங்களா?” அப்படின்னு அவங்க தாழ்ந்த குரல்ல எனக்கு பதில் சொன்னாங்க. நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன், நான் சொன்னது தவறுங்கறத உணர்ந்துக்கிட்டேன், அதனால, நான் உடனடியா “இல்லை” அப்படின்னு பதில் சொன்னேன். வேலையப் பத்தி தொடர்ந்து கலந்து பேசறதுக்கு முன்னாடி, நாங்க ரெண்டு பேருமே கொஞ்ச நேரம் அமைதியா இருந்தோம். அதுக்கப்புறம் அந்த சகோதரிகிட்ட சொன்னதை நெனச்சப்போ நான் கொஞ்சம் குற்ற உணர்வ உணர்ந்தேன். நான் அவங்ககிட்ட அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அந்த விவாதம் முடிஞ்சதும் அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்க விரும்புனேன், ஆனா நான் வேலையில மும்முரமா இருந்ததால, அதை நான் மறந்துட்டேன்.

அதுக்கப்புறம், மேலிடத் தலைவர் ஒலிவியாகிட்ட எல்லாத்தயும் பத்தி கலந்தாலோசிச்சத நான் பார்த்தப்போ, ரொம்ப அசௌகரியமா உணர்ந்தேன். “நானும் ஒரு தலைவியா இருக்குறேன், என்னோட சகோதர சகோதரிகள் என்னையப் பத்தி என்ன நினைப்பாங்க? தலைவியா இருக்க நான் பயனற்றவள்ன்னும், நான் தேவையற்றவள்ன்னும் அவங்க சொல்லுவாங்களோ?” ஒலிவியா என்னோட புகழத் திருடுறதா நான் உணர்ந்தேன், நான் அவங்களப் பார்த்துப் பொறாமப்பட்டேன். “அவர் இங்க வந்திருக்கலேன்னா, தலைவர் என்னோடு வேலையப் பத்திக் கலந்து பேசியிருப்பாரு” அப்படின்னு நான் நெனச்சேன். ஒலிவியா இப்ப எல்லா வேலைகள்லயும் ஆதிக்கம் செலுத்துவதப் பத்தியும், அவங்க ரொம்ப காலமா தேவனை விசுவாசிச்சிருந்து, என்னைய விட அதிக சத்தியத்தப் புரிஞ்சிருந்ததப் பத்தியும் நான் நெனச்சுப் பாத்தேன். என்னோட வேலையில இருக்குற பிரச்சனைகள என்னோட சகோதர சகோதரிகள் முன்னால சுட்டிக் காட்டியிருந்தாங்க, அதனால் என்னோட சகோதர சகோதரிகள் என்னையப் பத்தி இப்ப என்ன நெனச்சாங்கன்னு எனக்குத் தெரியல. இந்த விஷயங்களப் பத்தி நான் நெனச்சப்போ, எனக்கு ஒரு நெருக்கடி உணர்வு ஏற்பட்டுச்சு. ஒலிவியா என்னோட தலைமைப் பதவிய எடுத்துக்குவாங்களோன்னு நான் கவலப்பட்டேன். நான் அதைப் பத்தி எவ்வளவு அதிகமா நெனச்சேனோ, அவ்வளவு அதிகமா அதிருப்திய உணர்ந்தேன், அவங்களப் பழிவாங்கணும்ங்கற ஆசை எனக்கு ஏற்பட்டுச்சு: “என்னோட உணர்வுகளப் பத்தி நீங்க கவலைப்படுறதே இல்ல, இதுக்கப்புறமா நான் உங்களுக்கு விஷயங்கள சுலபமாக்க மாட்டேன்.” ஒருதடவ நாங்க வேலையப் பத்திக் கலந்து பேசிக்கிட்டிருந்தோம், ஒலிவியா தன்னோட கருத்தத் தெரிவிச்சதுக்கப்புறம், அவங்க என்கிட்ட ஆலோசனை கேட்டது எனக்கு நினைவிருக்குது. நான் அவரைப் புறக்கணிச்சு, அவரோட வேலை ஏற்பாடுகள்ல தவறுகளக் கண்டுபிடிச்சு, வேணும்ன்னே வேலைய அவருக்குக் கடினமாக்குறதுக்கு தேவையில்லாத விஷயங்கள சொல்லிக்கிட்டிருந்தேன். ஒருதடவ ஒலிவியா முக்கியப் பொறுப்பாயிருந்த ஒரு வேலையப் பத்தி நாங்க கலந்து பேசிக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துல, சிக்கல எப்படித் தீர்ப்பதுன்னு எனக்குத் தெரியும், ஆனா நான் பரிந்துரை செய்ய விரும்பல. “உங்க ஏற்பாடுகள் தோல்வியடஞ்சா நல்லது. அதன்மூலமா, உங்களால விஷயங்களக் கையாள முடியாதுங்கறத எல்லாரும் தெரிஞ்சுக்குவாங்க. எப்பவுமே என்கிட்ட பேசாம உங்களேடு பேசுவது தவறுன்னு தலைவர் உணருவாரு” அப்படின்னு கூட நான் நெனச்சேன். அதுக்கப்புறமா, அவங்க பல பரிந்துரைகள செஞ்சாங்க, அது எல்லாத்தயுமே நான் நிராகரிச்சேன். அத எப்படித் தீர்ப்பதுன்னு அவங்களுக்குத் தெரியாம நான் அவங்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல விரும்புவத நான் பாத்தப்போ, நான் என்னையப் பத்தி ரொம்பப் பெருமையா நெனச்சுக்கிட்டேன். “இந்த மாதிரி வேலையக் கூட உங்களால ஒழுங்கா ஏற்பாடு செய்ய முடியல, ஆனாலும் என்னோட வேலைய சுட்டிக்காட்ட உங்களுக்கு இன்னும் துணிச்சல் இருக்குது” அப்படின்னு நான் நெனச்சேன். அந்த நேரத்துல, என்னோட நிலைமை தவறா இருந்தத என்னோட தலைவி பார்த்தாங்க, அதோடு, நான் ஒலிவியாவோடு சேர்ந்து இணக்கமா வேலை செய்யணும்ங்கறதயும், இல்லேன்னா திருச்சபையோட பணிகள் தாமதமாகும்ங்கறதயும் எனக்கு நினைவூட்டினாங்க. என் தலைவியோட வார்த்தைகளக் கேட்டதும் மனசுக்குள்ள கொஞ்சம் கடிந்துகொள்ளப்பட்டேன். எங்க வேலையில எங்களுக்கு சிக்கல் வந்தப்போ, அதத் தீர்க்குறதுக்கான பாரத்த நான் ஏன் கொண்டிருக்கல? அதுக்குப் பதிலா, அதோடு சேர்ந்து சிரிச்சுக்கிட்டிருந்தேன். நான் திருச்சபையோட பணியப் பாதுகாக்கவே இல்ல. இதை உணர்ந்ததுக்கப்புறம், நான் என்னோட மனநிலைய சரிசெஞ்சுக்கிட்டு விவாதங்கள்ல பங்கெடுத்தேன். ஆனா முந்தைய விவாதத்துல இருந்து அது தாமதமா இருந்ததால, பணி ரொம்ப தாமதமா ஏற்பாடு செய்யப்பட்டுச்சு.

ஒரு நாள் ராத்திரி, தலைவி என்னோட பிரச்சினைகளச் சுட்டிக்காட்ட என்கிட்ட வந்தாங்க. அவங்க, “கௌரவத்துக்கும் அந்தஸ்துக்குமான உங்க ஆசை ரொம்ப வலுவா இருக்குது. நீங்க புகழுக்காக ஒலிவியாவோடு போட்டியிடுறீங்க. வேலையப் பத்திக் கலந்து பேசும்போது, அவங்க முன்வைக்குற எந்தக் கருத்தையும் நீங்க ஏத்துக்கறதில்ல. நீங்க ஒண்ணொன்னையும் மறுக்குறீங்க. ஒலிவியா உங்களால கட்டுப்படுத்தப்பட்டதா உணருறாங்க, உங்களோடு எப்படி ஒத்துழைப்பதுன்னு அவங்களுக்குத் தெரியல. நீங்க உங்களப் பத்தி சிந்திக்கணும்” அப்படின்னு சொன்னாங்க. என்னோட தலைவர் சொன்னதக் கேட்டதும், நான் ரொம்ப வருத்தமும் வேதனையும் அடஞ்சேன்: “ஒலிவியா ஏன் என்னோட பிரச்சனைகள என் முதுகுக்குப் பின்னாடி தெரிவிச்சாங்க? அவங்க உண்மையிலயே எனக்கு உதவ விரும்புனா, அவங்க என்கிட்ட நேரடியா சொல்லியிருக்கலாம். இப்போ தலைவிக்கு என்னோட பிரச்சனைகளப் பத்தித் தெரிஞ்சிருச்சு, அதோடு, என்னைய என்னோட கடமையிலருந்து பணி நீக்கம் செய்யக் கூடும்” அப்படின்னு நெனச்சேன். இத நெனச்சவுடனே தலைவிகிட்ட என்னோட நிலையப் பத்தி மனம் திறந்து பேசினேன். திருச்சபையோட பணிகளத் தாமதப்படுத்தாம இருக்க, நான் ராஜினாமா செய்யக் கூட முன்வந்தேன். நான் அந்த வார்த்தைகளச் சொன்னப்போ, அது கிட்டத்தட்ட என்னோட இருதயத்த உடச்சிருச்சு. நான் என்னோட கடமைய இழக்கப் போறதப் போல உணர்ந்தேன். தலைவி என்கிட்ட, “நமக்குப் பிரச்சனைகள் வரும்போது, அத நம்மால தவிர்க்க முடியாது. நாம சத்தியத்தத் தேடி, நம்மளப் பத்தி சிந்திச்சுப் பாக்கணும். ஒலிவியாவால வேலையில சிக்கல்களக் கண்டுபிடிக்க முடியுறது அவங்களால ஒரு பாரமுள்ளவங்களா இருக்க முடியுறதக் காட்டுது. இது திருச்சபையோட பணிக்கு பயனளிக்கலயா? உங்களால ஏன் அதை சரியா எடுத்துக்க முடியல? நீங்க எப்பவுமே அவங்களப் பார்த்து பொறாமைப்படுறீங்க, அவங்க உங்கள மிஞ்சிவிடுவாங்களோன்னு பயப்படுறீங்க. அந்தஸ்துக்கான உங்க ஆசை ரொம்ப வலுவா இருப்பத இது காட்டுது” அப்படின்னு சொன்னாங்க. என்னோட தலைவியின் ஐக்கியத்துக்கப்புறமா, கௌரவம் மற்றும் அந்தஸ்துக்கான என்னோட ஆசை உண்மையிலயே ரொம்ப வலுவா இருந்துச்சுங்கறத நான் உணர்ந்தேன். என்னோட நிலைய சரிசெய்ய நான் சத்தியத்தத் தேட வேண்டியிருந்துச்சு. அதுக்கப்புறமும் என்னால செயலற்றவளாவும் எதிர்க்கறவளாவும் இருக்க முடியல.

அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய வாசிச்சேன், அதோடு, நான் வெளிப்படுத்திய சீர்கெட்ட மனநிலைய ஓரளவு புரிஞ்சுக்கிட்டேன். “தங்களை அம்பலப்படுத்துபவர்கள் யாரும் தங்ககளுக்குக் கஷ்ட காலத்தை ஏற்படுத்துவதாக அந்திக்கிறிஸ்துகள் நினைக்கிறார்கள், ஆகையினால் தங்களை அம்பலப்படுத்துகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறார்கள், அவர்களோடு போட்டியிடுகிறார்கள் மற்றும் சண்டையிடுடுகிறார்கள். அவர்களது அந்திக்கிறிஸ்து சுபாவத்தால், அவர்களைக் கையாண்டு கிளைநறுக்குகிற யாரிடத்திலும் ஒருபோதும் அன்பாக இருக்க மாட்டார்கள், அப்படிச் செய்பவர்களை சகித்துக்கொள்ளவோ பணிந்துபோகவோ மாட்டார்கள், அதைவிட அப்படிச் செய்பவர்களிடம் நன்றிபாராட்டவோ அல்லது அவர்களைப் புகழவோ மாட்டார்கள். மாறாக, யாராவது அவர்களைக் கிளைநறுக்கிக் கையாண்டு அவர்கள் கண்ணியத்தையும் நற்பெயரையும் இழக்கச்செய்தால், தங்களுடைய இருதயத்தில் அந்த நபருக்கு எதிராக வன்மம் வைத்திருப்பார்கள், அவர்களைப் பழிவாங்க சமயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறர் மேல் அவர்களுக்கு என்ன வெறுப்பு! அவர்கள் நினைப்பதும் மற்றவர்களுக்கு முன்னால் வெளிப்படையாகச் சொல்வதும் இதுதான், ‘இன்று நீ என்னைக் கிளைநறுக்கிக் கையாண்டு இருக்கிறாய், நல்லது, இப்போது நம் பகை கல்லில் எழுதப்படுகிறது. நீ உன் வழியில் போ, நான் என் வழியில் போகிறேன், ஆனால் சத்தியமாக நான் பழிவாங்குவேன்! நீ உன் தவறை என்னிடம் ஒத்துக்கொண்டால், எனக்குத் தலைவணங்கினால், அல்லது மண்டியிட்டு என்னிடம் கெஞ்சினால், நான் உன்னை மன்னிப்பேன், இல்லாவிட்டால் நான் இதை ஒருபோதும் விடமாட்டேன்!’ அந்திக்கிறிஸ்துகள் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும், அவர்கள் யாருடைய அன்பான கிளைநறுக்குதலை அல்லது கையாள்தலை அல்லது யாருடைய உண்மையான உதவியை தேவனின் அன்பு மற்றும் இரட்சிப்பின் வருகையாகப் பார்க்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் அதை ஓர் அவமானத்தின் அடையாளமாகவும் மாபெரும் சங்கடமான தருணமாகவும் பார்க்கிறார்கள். அந்திக்கிறிஸ்துகள் சத்தியத்தை ஏற்கவே மாட்டார்கள் என்பதையும், அவர்களுடைய மனநிலையானது சத்தியத்தைக் குறித்துச் சலிப்படைவதாகவும் வெறுப்பதாகவும் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி எட்டு)”). அந்திக்கிறிஸ்துகள் கிளை நறுக்கப்பட்டு, கையாளப்படுறபோது, அவங்க அத ஏத்துக்காதது மட்டுமல்லாம, அவங்களக் கிளை நறுக்கிக் கையாண்ட நபரை அவங்க வெறுக்கத் தொடங்குறாங்க மற்றும் பழிவாங்க விரும்புறாங்கன்னு தேவன் வெளிப்படுத்தினாரு. அந்திக்கிறிஸ்துகள் சத்தியத்த ஏத்துக்கறதில்ல, சத்தியத்தினால சோர்வடஞ்சு போறாங்க, சத்தியத்த வெறுக்குறாங்கங்கறத நான் பாத்தேன். கடந்த காலங்கள்ல, “ஜனங்களுக்கு எதிரான பழிவாங்கல்” அப்படிங்கற வார்த்தைகளப் பார்த்தப்போ, இந்த அணுகுமுறை தீயதா இருந்துச்சுன்னு நான் நெனச்சேன். நான் தீய குணத்த வெளிப்படுத்தலன்னும் இவற்றச் செய்ய முடியலன்னும், அதோடு அந்திக்கிறிஸ்துக்களும் பொல்லாத செய்கைக்காரர்களும் மட்டுமே ஜனங்களப் பழிவாங்குவாங்கன்னும் நான் நம்புனேன். என்னோட சொந்த நடத்தயப் பத்தி நான் மறுபடியும் சிந்திச்சுப் பாத்தேன்: என்னோட பணியில இருந்த பிரச்சனைகள சக ஊழியர்கள், சகோதர சகோதரிகள் முன்னாலல ஒலிவியா சுட்டிக் காட்டியப்போ, என்னோட நற்பெயர் சேதமடைஞ்சதா நான் உணர்ந்தேன், அதனால நான் அவர் மேல தவறான எண்ணத்தையும் எதிர்ப்பையும் வளர்த்துக்கிட்டேன். ஒரு கூடுகையில, தேவனோட வார்த்தைகளின் அடிப்படையில தான் நடைமுறைப் பணிகளைச் செய்யலங்கறத ஒலிவியா உணர்ந்து, அவங்களோட சுய அறிவைப் பத்திக் கலந்து பேசுவதன் மூலமா அவங்க வேணும்னே என்னோட வேலையில இருக்குற பிரச்சனைகள அம்பலப்படுத்துவதா நான் உணர்ந்தேன், அதனால அவங்க மேல என்னோட தவறான எண்ணம் அதிகரிச்சுச்சு. அவங்க வந்ததுலயிருந்து வேறு யாருக்கும் பாரம் இல்லாமப்போச்சுன்னு சொல்லி அவங்களத் தாக்கவும் செஞ்சேன். அதுக்கப்புறம், தலைவி அவங்களோடு எப்பவுமே வேலையப் பத்திக் கலந்து பேசுவதப் பாத்தப்போ, ஒலிவியா என்னோட புகழத் திருடிக்கிட்டதா நான் உணர்ந்தேன். அவங்களப் பழிவாங்கறதுக்காக, நாங்க வேலையப் பத்தி விவாதிச்சப்போ நான் என்னோட பரிந்துரைகள வெளிப்படுத்தல, ஒலிவியா தன்னோட எண்ணங்களயும் பரிந்துரைகளயும் வெளிப்படுத்தியப்போ, நான் தப்புக் கண்டுபிடிச்சு அவங்களுக்கு மறுப்புத் தெரிவிச்சேன், வேலை முன்னேறுவத அது சாத்தியமற்றதாக்குச்சு. நான் என்னோட சகோதரிய ஒரு போட்டியா நெனச்சேன். என்னோட நற்பெயரயும் அந்தஸ்தயும் தக்க வச்சுக்க, அவங்களத் தாக்கவும் பழிவாங்கவும் கூட என்னால முடிஞ்சுச்சு. நான் வெளிப்படுத்திய மனநிலை ஒரு அந்திக்கிறிஸ்துவோடதப் போல அப்படியே இருந்துது இல்லையா? அதுக்கும் மேல, என்னோட வேலையில இருந்த பொதுவான பிரச்சனைகள அவங்க சுட்டிக்காட்டினாங்கங்கற உண்மைய நான் நெனச்சுப் பாத்தேன். என்னையப் பத்தி சிந்திச்சுப் பாத்து, மாறுபாடுகளை மாத்திக்க நான் சத்தியத்த நாடியிருந்தால், அப்போ, பிரச்சனைகள் சீக்கிரத்துலயே தீர்க்கப்பட்டிருக்கலாம். அது எங்க பணிக்கு நன்மையா இருந்திருக்கும். ஆனா நான் அத ஏத்துக்கலங்கறது மட்டுமல்லாம, என்னோட சகோதரிக்கு பதிலடி கொடுக்க விரும்புனேன். தேவனோட ஒரு விசுவாசின்னு சொல்லுற தகுதி உண்மையிலயே எனக்கு இல்ல!

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையின் மேலும் ரெண்டு பத்திகள வாசிச்சேன், அது இந்த நடத்தையின் சாராம்சத்தயும் விளைவுகளயும் பத்திய அதிக நுண்ணறிவை எனக்குக் கொடுத்துச்சு. தேவன் சொல்லுகிறார்: “அந்திக்கிறிஸ்துகளின் சுபாவத்தில் உள்ள முக்கிய விகாரங்களில் ஒன்று கொடூர குணமாகும். ‘கொடூர குணம்’ என்றால் என்ன அர்த்தம்? சத்தியத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இழிவான நடத்தை இருக்கும்—அதற்குக் கீழ்ப்படியாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அதை ஏற்றுக்கொள்ளாததோடு மட்டுமல்லாமல், அவர்களைக் கிளைநறுக்கிக் கையாளுபவர்களையும் கூட அவர்கள் கண்டனம் செய்வார்கள் என்பது அதன் அர்த்தமாகும். இதுவே அந்திக்கிறிஸ்துகளின் கொடூரமான மனநிலை ஆகும். யாரெல்லாம் கையாளப்பட்டு கிளைநறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் கொடுமைப்படுத்தப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்றும், எப்போதும் பிறரைக் கையாண்டு கிளைநறுக்குபவர்கள், மக்களை எப்போதும் புண்படுத்திக் கொடுமைப்படுத்தும் விருப்பம் கொண்டவர்கள் என்றும் அந்திக்கிறிஸ்துகள் நினைக்கிறார்கள். ஆகவே, யார் அவர்களைக் கையாண்டு கிளைநறுக்கினாலும் அந்திக்கிறிஸ்துகள் எதிர்ப்பார்கள், மேலும் அவர்கள் அந்த நபருக்குக் கஷ்டத்தைக் கொடுப்பார்கள். யாராவது ஒருவர் அந்திக்கிறிஸ்துவின் குறைபாடுகளையும் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டினால், அல்லது சத்தியத்தையும் தேவனுடைய சித்தத்தையும் பற்றி அவர்களோடு ஐக்கியம் கொண்டால் அல்லது அவர்களைப் பற்றி அவர்களை அறியவைத்தால், அவர்கள் இந்த நபர் நமக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறான் என்று நினைத்து அவர்களைச் சந்தேகத்தோடு பார்ப்பார்கள். அவர்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்தில் இருந்து அந்த நபரை வெறுப்பார்கள், அவர்களைப் பழிவாங்குவார்கள் மேலும் அவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பார்கள். … எந்த வகையான மக்கள் இத்தகைய கொடூரமான மனநிலையைக் கொண்டவர்கள்? தீயவர்கள். உண்மை என்னவென்றால் அந்திக்கிறிஸ்துகள் பொல்லாதவர்கள். ஆகையினால், தீயவர்களும் அந்திக்கிறிஸ்துகளும் மட்டுமே இப்படிப்பட்ட கொடூரமான மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நோக்கத்தோடு கூடிய புத்திமதியை, குற்றச்சாட்டை, போதனையை அல்லது உதவியை ஒரு வெறிகொண்ட நபர் எதிர்கொள்ளும்போது, நன்றியுடன் இருப்பதோ அல்லது அதைத் தாழ்மையாக ஏற்றுக்கொள்ளுவதோ அவர்களுடைய மனப்பாங்காக இருப்பதில்லை, அதற்குப் பதிலாக அவர்கள் மூர்க்கமாகி, கடுமையான வெறுப்பையும், பகைமையையும் உணர்ந்து, பழிவாங்கும் வெறியைக் கூட அடைவார்கள்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி எட்டு)”). “அந்திக்கிறிஸ்துகள் வேறு எதையும் விட தங்கள் சொந்த அந்தஸ்தையும் நற்பெயரையும் முக்கியமாகக் கருதுகிறார்கள். இவர்கள், வஞ்சகர்கள், சூழ்ச்சிக்காரர்கள் மற்றும் பொல்லாதவர்கள் ஆகியோராக இருப்பது மட்டுமல்லாமல், மிகவும் கொடியவர்களாகவும் இருக்கின்றனர். தங்கள் அந்தஸ்து ஆபத்தில் இருக்கிறது என்று அறியும்போது, அல்லது மக்களின் இருதயங்களில் தங்கள் இடத்தை அவர்கள் இழந்தபோது, மக்களுடைய ஒப்புதலையும் அன்பையும் இழக்கும்போது, மக்கள் அதற்கு மேலும் அவர்களை வணங்கி பெருமையோடு பார்க்காதபோது, மேலும் அவர்கள் இழிவடையும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் திடீரென்று மாறிவிடுவார்கள். தங்கள் அந்தஸ்தை இழந்தவுடன் அவர்கள் எந்தக் கடமையைச் செய்யவும் விருப்பம் அற்றவர்களாகிறார்கள், இவர்கள் செய்வதெல்லாம் இழிவானதாக இருக்கிறது, மேலும் எதைச் செய்வதிலும் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. ஆனால் இது மிக மோசமான வெளிப்பாடு அல்ல. மிக மோசமான வெளிப்பாடு என்ன? இவர்கள் தங்கள் அந்தஸ்தை இழந்தவுடன், ஒருவரும் இவர்களை உயர்வாகப் பார்க்க மாட்டார்கள், மேலும் யாரும் இவர்களின் முகஸ்துதிக்கு மயங்க மாட்டார்கள்; வெறுப்பு, பொறாமை மற்றும் பழிவாங்கல் வெளிப்படுகின்றன. இவர்களுக்கு தெய்வ பயம் இல்லாதது மட்டுமல்லாமல், கீழ்ப்படிதல் எள்ளளவும் இல்லை. மேலும், இவர்கள் தங்கள் இருதயங்களில், தேவனுடைய வீட்டையும், திருச்சபையையும், தலைவர்களையும் ஊழியர்களையும் வெறுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்; திருச்சபையின் பணி பிரச்சினைக்குள்ளாகவும் அல்லது நின்றுபோகவும் இவர்கள் ஏங்குகிறார்கள்; இவர்கள் திருச்சபையையும், சகோதர சகோதரிகளையும் பார்த்துச் சிரிக்க விரும்புகிறார்கள். சத்தியத்தைப் பின்தொடர்ந்து தேவனுக்குப் பயப்படும் யாரொருவரையும் இவர்கள் வெறுக்கிறார்கள். தங்கள் கடமையில் உண்மையாக இருந்து ஒரு விலை கொடுக்க விருப்பமாய் இருக்கிற யாரையும் இவர்கள் தாக்கிக் கேலி செய்கிறார்கள். இதுவே அந்திக்கிறிஸ்துவின் மனநிலை—இது வஞ்சகமானது இல்லையா? இவர்கள் பொல்லாதவர்கள் என்பது தெளிவு; அந்திக்கிறிஸ்துகள் தங்கள் சாராம்சத்தில் பொல்லாதவர்கள்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி இரண்டு)”). “கொடூரமான மனநிலையைக் கொண்டவர்கள்” மற்றும் “தீயவர்கள்” போன்ற வார்த்தைகளப் பாத்தது வேதனையாவும், என்னோட இருதயத்துக்குள்ள பயத்த ஏற்படுத்துறதாவும் இருந்துச்சு. இந்த வார்த்தைகள் எனக்குப் பொருந்தும்னு நான் எதிர்பாக்கல. என்னோட வேலையில இருந்த பிரச்சனைகள என்னோட சகோதரி சுட்டிக்காட்டியதால என்னோட நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுச்சு, அதனால நான் அவங்களத் தாக்கி பழிவாங்குனேன், வேலையப் பத்திக் கலந்து பேசுறப்போ வேணும்னே அவங்கள சங்கடப்படுத்தினேன், அதோடு அவங்களோட வேலை ஏற்பாடுகள்ல தவறுகளக் கண்டுபிடிச்சேன். வேலையில அவங்களுக்கு இருந்த ஒரு பிரச்சனைய எப்படித் தீர்க்கறதுன்னு எனக்குத் தெரிஞ்சபோதும் கூட நான் அத விளக்கிச் சொல்லல, ஏன்னா, நான் அவங்கள சங்கடப்படுத்தவும் அவங்களப் பாத்து சிரிக்கவும் விரும்புனேன். தலைவர் என்னைய அம்பலப்படுத்தி கையாண்டப்போ, நான் என்னையப் பத்தி சிந்திக்கலங்கறது மட்டுமல்லாம, என்னோட பிரச்சனைகளப் புகாரளிச்சதுக்காக நான் அவங்கள வெறுத்தேன். நான் எதிர்மறையாவும் எதிர்ப்பவளாவும் இருந்தேன், என்னோட கடமையில என்னோட கோபத்தக் காட்டினேன், ராஜினாமா செஞ்சுட்டு என்னோட கடமையச் செய்யுறத நிறுத்திவிடவும் கூட நான் விரும்புனேன். நான் வெளிப்படுத்துனது ஒரு அந்திக்கிறிஸ்துவினுடையதப் போல அப்படியே, ஒரு தீய மனநிலையா இருந்துச்சு! நான் நம்பினது என்னான்னா, “என்னைத் தாக்காதவரை நானும் தாக்க மாட்டேன்” மற்றும் “நீ இரக்கமற்றவனாக இருந்துகொண்டு, என்னை நியாயமற்றவன் என்று குறை சொல்லாதே” அப்படிங்கற இவைகள்தான். என்னோட நலன்களுக்கும் நற்பெயருக்கும் யாராவது பங்கம் விளைவிச்சா, நான் அவங்கள வெறுத்தேன், அவங்களத் தாக்கினேன், அவங்களப் பழிவாங்குனேன். நான் தேவனை விசுவாசிக்கறதுக்கு முன்னாடி ஒரு காலத்துல, ஒரு தோழியோடு எனக்கு மோதல் ஏற்பட்டப்போ, அவள் என்னையப் பத்தி வேறொருத்தர்கிட்ட மோசமா பேசினது எனக்கு ஞாபகம் வந்துச்சு. எனக்கு ரொம்ப கோபம் வந்து, “நீ இரக்கமற்றவளா இருக்கறப்ப, என்னைய நியாயமற்றவள்ன்னு குறை சொல்லாதே” அப்படின்னு நான் நெனச்சேன். நான் அதே நபர்கிட்ட, “அவள்கிட்ட அன்பாக நடந்துக்கற அளவுக்கு உன்னால எப்படி முட்டாளா இருக்க முடியுது? உன்னோட முதுகுக்குப் பின்னாடி அவள் உன்னையப் பத்தித் தப்பா பேசுறாள்ங்கறது உனக்குத் தெரியாது!” அப்படின்னு நான் ரகசியமாக சொன்னேன். கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு திருப்பி அடிக்கலேன்னா நான் பலவீனமானவள்ன்னு நெனச்சேன். இந்தத் தத்துவத்தின்படி வாழ்தல் என்னைய சுயநலவாதியாவும், தீயவளாவும் ஆக்குச்சு, என்னோட சிந்தனைய சிதைச்சு, நன்மை தீமையப் பகுத்து அறிய முடியாதபடி செஞ்சுச்சு. இதை உணர்ந்ததும், நான் அதிர்ச்சியடஞ்சேன், அதே நேரத்துல நான் ரொம்ப மோசமானவளா இருந்தத உணர்ந்தேன். நான் என்னோட தீமையக் கையாண்டிருக்கலேன்னா, என்னால அதிக தீமைகள செஞ்சு, அதுக்கப்புறம் தேவனால நிராகரிக்கப்பட்டு புறம்பாக்கப்பட்டிருக்க மட்டுந்தான் முடிஞ்சிருக்கும்! இத உணர்ந்ததும், நான் மௌனமா தேவனிடத்துல, “தேவனே, எனக்கு நல்ல மனிதத்தன்மை இருப்பதா நான் நெனச்சேன், ஆனா உமது வார்த்தையின் நியாயத்தீர்ப்பும் வெளிப்பாடும் நான் மோசமான மனிதத்தன்மை கொண்டவளும் ரொம்பவே தீமையானவளுமா இருக்கேன்ங்கறத எனக்குக் காட்டுச்சு. என்னோட சகோதரியின் அன்பான உதவிக்காக நான் உண்மையிலயே அவரைப் பழிவாங்குனேன். உண்மையிலயே எனக்கு மனிதத்தன்மை இல்ல! தேவனே, நான் மனந்திரும்பி, சத்தியத்தக் கைக்கொண்டு, என்னைய மாத்திக்க விரும்புறேன். தயவுசெஞ்சு என்னைய வழிநடத்துங்க” அப்படின்னு ஜெபிச்சேன்.

அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தையில வாசிச்சேன், “கொஞ்ச நேரம் யாராவது உன்னைக் கண்காணிப்பதில் அல்லது கவனிப்பதில் கழித்தால், அல்லது உன்னிடம் ஆழமான கேள்விகளைக் கேட்டால், உன்னோடு நெருக்கமாகப் பேசி இந்த காலக் கட்டத்தில் உன் நிலை எப்படி இருக்கிறது என்று அறிய முயன்றால், அதுமட்டுமல்லாமல் சிலவேளைகளில் அவர்களுடைய அணுகுமுறை சற்று கடுமையானதாக இருந்தால், அவர்கள் உன்னைச் சற்றே கையாண்டு கிளைநறுக்கினால், தண்டித்துத் திருத்தினால், உன்னைக் கடிந்துகொண்டால், இவை எல்லாம் தேவனுடைய வீட்டின் பணியின் மேல் அவர்களுக்கு மனச்சாட்சியும் பொறுப்பும் கொண்ட நடத்தை இருக்கிறது என்று அர்த்தம். உனக்கு இதைப் பற்றி எதிர்மறை சிந்தனைகள் அல்லது உணர்வுகள் இருக்கக் கூடாது. மற்றவர்களின் மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் வினவலை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் அதன் அர்த்தம் என்ன? அதாவது, உன் இருதயத்தில் நீ தேவனுடைய கூர்ந்தாய்வை ஏற்கிறாய். உன்னைப் பற்றிய மக்களுடையமேற்பார்வையை, கண்காணிப்பை மற்றும் வினவலை நீ ஏற்காவிட்டால்—இவை அனைத்துக்கும் எதிராக நீ மறுப்பு தெரிவித்தால்—உன்னால் தேவனுடைய கூர்ந்தாய்வை ஏற்றுக்கொள்ள முடியுமா? தேவனுடைய கூர்ந்தாய்வு மக்களின் கேள்விகளைவிட அதிக விவரமானது, ஆழமானது மற்றும் துல்லியமானது; தேவன் கேட்பது இதைவிட மிகவும் குறிப்பானது, வற்புறுத்துவது, மற்றும் ஆழமானது. அப்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் கண்காணிப்பை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தேவனுடைய கூர்ந்தாய்வை ஏற்றுக்கொள்ளுவேன் என நீ கூறுவது வெற்றுச்சொற்கள் அல்லவா? தேவனுடைய கூர்ந்தாய்வையும் பரிசோதனையையும் உன்னால் ஏற்றுக்கொள்ள முடிவதற்கு, நீ முதலில் தேவனுடைய வீடு, தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் சகோதர சகோதரிகளின் கண்ணாணிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 5. தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள். “தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள் (7)”). “உனக்குள் என்ன சிக்கல்கள் இருந்தாலும் அல்லது எந்த வகையான சீர்கேட்டை நீ வெளிப்படுத்தினாலும், தேவனுடைய வார்த்தைகளின்படி நீ சிந்தித்துப் பார்த்து உன்னையே அறிந்துகொள்ள வேண்டும் அல்லது சகோதர சகோதரிகளின் பின்னூட்டத்தைப் பெற வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால் நீ தேவனுடைய கண்காணிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் தேவனுடைய பிரகாசத்தையும் ஒளியையும் பெற அவருக்கு முன்பாக வரவேண்டும். அதை நீ எப்படிச் செய்தாலும் சரி, உன்னுடைய சிக்கல்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பது சிறப்பானதாகும், இதுவே நீ உன்னைப் பற்றிச் சிந்திப்பதன் விளைவாகும். நீ எதைச் செய்தாலும், தேவன் உன்னை அம்பலப்படுத்துவதற்காக வெறுமனே காத்திருக்காதே, ஏனெனில் பின்னர் அது மிகவும் தாமதமாகிவிடும்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஏழு (பகுதி ஒன்று)”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறம்தான், என்னோட சகோதர சகோதரிகள் என்னையக் கண்காணிச்சு வழிநடத்துறதுக்கான உண்மையான காரணம் வேலையில அவங்க தீவிரமாவும் பொறுப்போடும் இருப்பதால மட்டுந்தான், நான் அத தேவனிடத்துலருந்து பெற்று, ஏத்துக்கவும் கீழ்ப்படியவும் கத்துக்கணும்ங்கறத நான் உணர்ந்தேன். இது மட்டுமே தேவனோட சோதனைகள ஏத்துக்கறதும் தேவனுக்குப் பயப்படுற இருதயத்தக் கொண்டிருப்பதுமாகும். என்னோட சகோதரி என்னோட பிரச்சனைகளக் கண்டுபிடிச்சு, எனக்கு அவைகள சுட்டிக்காட்டினப்போ, இது எனக்கு உதவி செய்யவும் துணைபுரியவுமா இருந்துச்சு. என்னோட வாழ்க்கை அனுபவம் ரொம்ப ஆழமற்றதா இருந்துச்சு. புதுசா வந்தவங்களுக்குத் தங்களோட கடமைகள்ல சிக்கல்கள் இருந்துச்சு, ஆனா அதத் தீர்க்க சத்தியத்தக் குறிச்சு என்னால ஐக்கியங்கொள்ள முடியல, அதோடு பல தடவ, நான் வெறுமனே வேலைய ஏற்பாடு செஞ்சு, அதுக்கப்புறம் பின்தொடராம அல்லது உதவி செய்யாம அத அப்படியே விட்டுட்டேன். பணியாளர்கள ஏற்பாடு செய்யும் கொள்கைகள நான் புரிஞ்சுக்கல, ஆனா ஒலிவியாவால ஓரளவு சத்தியத்தப் புரிஞ்சுக்கிட்டு, சில விஷயங்களத் தெளிவா பார்க்க முடிஞ்சுச்சு, அதனால திருச்சபைப் பணிகள்ல நாங்க ஒத்துழச்சிருந்தா, அது வேலைக்கு உதவியிருந்திருப்பது மட்டுமல்ல, என்னால அவங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டு இன்னும் சீக்கிரமா முன்னேறியிருந்திருக்க முடிஞ்சிருக்கும். நம்மளோட கடமைகள நாம மட்டும் செய்யறத விட, நாம ஒத்துழைக்கணும்னு ஏன் தேவன் கேட்குறாருங்கறத அப்பத்தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். ஜனங்கள் சீர்கெட்ட மனநிலையுள்ளவங்களா இருப்பதால, நாம் ஒருத்தரை ஒருத்தர் கண்காணிக்கணும், ஒருத்தரை ஒருத்தர் வழிநடத்தணும், தவறுகளத் தவிர்க்க ஒருத்தருக்கு ஒருத்தர் உதவணும். குறிப்பா இத நினைக்குறப்போ, எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டுச்சு. அதுக்குமேல என்னோட சொந்த கௌரவத்துக்காகவும் அந்தஸ்துக்காகவும் என்னால வாழ முடியல. சுயத்த விட்டுட்டு, மத்தவங்களோட மேற்பார்வையயும் வழிகாட்டுதலயும் ஏத்துக்கவும், என்னோட சகோதரியோடு ஒத்துழைக்கவும், ஒண்ணா வேலை செய்யுறப்போ சத்தியத்தத் தேடி பிரச்சனைகளைத் தீர்க்கவும், என்னோட கடமைய சரியாக நிறைவேற்றவும் நான் கத்துக்க வேண்டியிருந்துச்சு.

அதுக்கப்புறமா, என்னோட சொந்த சீர்கேட்டை அம்பலப்படுத்தவும் பகுப்பாய்வு செய்யவும் ஒலிவியாகிட்ட மனந்திறந்து பேசவும், அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கவும் விரும்புனேன். என்னோட கடமையச் செய்ய என்னோட தலைவர் என்னைய வேறொரு திருச்சபைக்கு அனுப்பினது எனக்கு ஆச்சரியமாக இருந்துச்சு. ஒலிவியாகிட்ட இருந்து பிரிஞ்சதுக்கப்புறம், எனக்குப் பல வருத்தங்கள் இருந்தத நான் உணர்ந்தேன். அதனால, நான் மௌனமா தேவனிடத்துல, இனிமேல், நான் என்னோட கடமைய சரியா செய்யவும், என்னோட சீர்கெட்ட மனநிலைய சரிசெய்யறதுல கவனம் செலுத்தவும் விரும்புறேன்னு சொல்லி ஜெபிச்சேன். அதுக்கப்புறமா, புதிய திருச்சபையில, நான் என்னோட கடமைக்கு என்னைய அர்ப்பணிச்சேன். ஒருதடவ, புதுசா வந்தவங்களோட கூடுகை எப்படி நடந்துச்சுன்னு கேட்க தண்ணீர் பாய்ச்சும் பொறுப்புல இருந்த எஸ்தர் என்னையக் கூப்பிட்டது எனக்கு ஞாபகம் இருக்குது. “நீங்க எப்பவுமே மத்த கூடுகைகளுக்குப் போறீங்க, புதுசா வந்தவங்க கூடுகைகளுக்கு எப்பவாவதுதான் வர்றீங்க, அது தலைவர் இல்லங்கறதப் போலக் காட்டுது. சகோதர சகோதரிகள் யாருக்கும் உங்களத் தெரியாது. இது அவங்களோட நிலைகளையும் சிரமங்களயும் சரியா பின்தொடர்வதக் கடினமாக்குது” அப்படின்னு எஸ்தர் எனக்குக் கொஞ்சம் அறிவுரைகள சொன்னாங்க. அவங்க சொன்னதக் கேட்டு நான் திகைச்சுப்போனேன், என்னோட கோபம் அதிகரிச்சத நான் உணர்ந்தேன். “என்னைய கூடுகைக்கு வராத தலைவின்னு நீங்க எப்படிச் சொல்லலாம்? நான் சரியா வேலை செய்யல, நான் பிரயோஜனமில்லாதவள்ன்னு நீங்க சொல்லலையா? நீங்க ரொம்ப கடுமையானவரா இருக்கீங்க! நான் வேலை செய்யாம இல்ல, நான் மத்த வேலைகள பின்பற்றுறேன். நீங்க இந்தக் குழுவோட பொறுப்பாளரா இருப்பதால, நீங்களே அதுக்கு பொறுப்பாளியா ஏன் இருக்கக்கூடாது? எல்லாத்தயும் நானே செய்ய வேண்டிய அவசியமில்ல. மேலிடத் தலைவர்களுக்கு இது தெரிஞ்சா, நான் நடைமுறைப் பணிகள செய்யலன்னு அவங்க நினைக்க மாட்டாங்களா? அப்படி நினைக்காம இருப்பாங்களா. சொல்லுறதுக்கு உங்க வேலையில சில மாறுபாடுகள நான் கண்டுபிடிக்கணும்…” அப்படின்னு நான் நெனச்சேன். நான் அப்படி நெனச்சப்ப, என்னோட நிலை சரியில்லங்கறத நான் உணர்ந்தேன். என்னோட சகோதரி என்னோட வேலையில இருக்குற பிரச்சனைகள சுட்டிக்காட்டினாங்க, அத ஏத்துக்கறதுக்கும் சிந்திச்சுப் பாக்கறதுக்கும் பதிலா, அவங்க ரொம்ப கடுமையானவங்கன்னு நான் நெனச்சேன், அதோடு அவங்கள தப்புன்னு காட்டும்படி அவங்களோட வேலையில சிக்கல்களக் கண்டுபிடிக்க விரும்புனேன். நான் சத்தியத்த ஏத்துக்க மறுத்து மறுபடியும் பழிவாங்க முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தேன். இத நான் உணர்ந்துக்கிட்டவுடனே, “தேவனே, இன்னைக்கு எஸ்தர் இந்த விஷயத்த என்கிட்ட சுட்டிக் காட்டியது உங்களோட ஏற்பாடாக இருந்துச்சு, ஆனா நான் என்னோட இருதயத்துல எதிர்த்தேன், அது உங்க சித்தத்துக்கு எதிரானதா இருக்குது. நான் கீழ்ப்படிஞ்சு என்னையப் பத்தி சிந்திச்சுப் பாக்க விரும்புறேன்” அப்படின்னு நான் மௌனமா தேவனிடத்துல ஜெபிச்சேன். நான் ஜெபிச்சதுக்கப்புறம், நான் அமைதியாகி என்னையப் பத்தி சிந்திக்க ஆரம்பிச்சேன். எனக்கு ஒரு பிரச்சன இருந்தத உணர்ந்தேன்: நான் எஸ்தரை ரொம்பவே சார்ந்திருந்தேன். புதுசா வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுற பொறுப்ப அவங்க ஏத்துக்கிட்டா, நான் சவுரியமா இருந்துக்கிட்டு தட்டிக்கழிச்சுறலாம்ன்னு நெனச்சேன். ஒரு திருச்சபைத் தலைவியா, புதுசா வந்தவங்களோட உண்மையான நிலைகளயும் சிரமங்களயும் நான் ரொம்பக் குறைவாத்தான் தெரிஞ்சுவச்சிருந்தேன். நான் என்னோட பொறுப்புகள நிறைவேத்தாம இருந்தேன். இது உண்மையிலயே நடைமுறைப் பணிகளச் செய்யாததன் வெளிப்பாடா இருந்துச்சு. அதுக்கப்புறம் நான் எஸ்தர்கிட்ட, “நான் என்னோட நேரத்த மாத்திக்கறேன். இந்தச் சிக்கலை நான் இதுக்கு முன்னாடி உணரல, ஆனா நான் அதை மாத்திக்க விரும்புறேன்” அப்படின்னு சொன்னேன். அதுக்கு அப்புறமா, நான் புதுசா வந்தவங்களோடு தொடர்புகொண்டு அவங்களோட கூடுகைகள்ல கலந்துக்கிட்டேன், அதோடு, அவங்களோட நிலைகளை சரிசெய்ய ஐக்கியங்கொண்டேன். என்னோட கடமைய இப்படிச் செய்யறதால, நான் ரொம்ப நிம்மதியா உணர்ந்தேன். இந்த அனுபவத்தின் மூலமா, தேவனோட வார்த்தையின்படி பயிற்சி செய்வதன் மூலமாவும் என்னோட சகோதர சகோதரிகளோட மேற்பார்வையயும், வழிகாட்டுதலயும், கிளை நறுக்குதலயும் கையாளுதலயும் ஏத்துக்க கத்துகறதன் மூலமாவும், என்னால சில மாற்றங்கள உண்மையாவே அடைய முடிஞ்சத நான் உணர்ந்துக்கிட்டேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நான் எப்படி ஒரு பாதுகாப்பான வேலையை விட்டு விட்டேன்?

நான் ஒரு ஏழ்மயான பின்தங்கின கிராமப்புற குடும்பத்தில பிறந்தேன். சிறு குழந்தையா இருந்தப்பவே, என்னோட அப்பா நான் கடினமா படிக்கணும், அப்பதான்...

சுவிசேஷத்தை நன்றாகப் பிரசங்கிப்பதற்கு பொறுப்பு முக்கியமானது

நான் எப்பவும் என் கடமைகள பெருசா எடுத்துக்காம அதிக முயற்சி செய்யாம இருந்தேன். நான் அடிக்கடி விஷயங்கள கவனமில்லாம செஞ்சேன். சுவிசேஷத்த...

புதிய விசுவாசிகளுக்கு நீர்பாய்ச்சுவதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்

இந்த வருஷம் ஜனவரியில, நான் திருச்சபையில் புதுசா வந்தவங்களுக்கு நீர்ப்பாய்ச்சிட்டு இருந்தேன். புதுசா வந்த சகோதரி ரேன் ஜியா அவங்க கணவர்...