ஒரு “நல்ல தலைவரின்” சிந்தனைகள்

ஜனவரி 21, 2024

என்னோட சின்ன வயசுலருந்தே என்னோட பெற்றோர், நட்போடு பழகணும், அணுகக்கூடியவளாவும் அனுதாபத்தோடும் இருக்கணும், மத்தவங்களுக்குப் பிரச்சனைகளோ அல்லது குறைபாடுகளோ இருந்தா, நான் அவற்ற வெளிப்படுத்தக் கூடாது. நான் அவங்களோட கண்ணியத்தக் கருத்துல கொள்ளணும் அப்படின்னு எனக்குக் கத்துக் கொடுத்தாங்க. இதனால, ஒருபோதும் எனக்கு யாரோடும் முரண்பாடு இருந்ததில்ல, அதோடு ஜனங்கள் என்னைய நல்லவள்ன்னு நெனச்சு என் கூட பழக விரும்பினாங்க. இது வாழுறதுக்கான ஒரு நல்ல வழின்னு நான் நெனச்சேன். நான் தேவனை விசுவாசிச்சதுக்கப்புறமும், மத்தவங்கள இப்படித்தான் நடத்தினேன். குறிப்பா, நான் திருச்சபைத் தலைவியா ஆனதுக்கப்புறம், தவறுகள சாதாரணமா சுட்டிக் காட்டாம, மத்தவங்ககிட்ட நட்பா இருக்கணும்னு நெனச்சேன். அப்படிச் செய்யறதால, அது எங்களோட நட்பக் கெடுக்காது, அதோடு, அவங்க என்னோடு பழகவும், என்னைய ஒரு நல்ல தலைவியா பாராட்டவும் விரும்புவாங்க.

அதுக்கப்புறம், ஒரு குழுவின் தலைவியான சகோதரி ஜோன் தன்னோட கடமையில தீவிரமா இல்லங்கறத நான் தெரிஞ்சுக்கிட்டேன். நான், “ஒரு குழு தலைவியா, நீங்க மத்தவங்களோட நிலைகள்ல கவனம் செலுத்தணும், அதோடு குழுவோட வேலைகளக் கண்காணிக்கணும்” அப்படின்னு அவங்களுக்குப் பலமுறை ஞாபகப்படுத்தினேன். ஆனா அவங்க அப்பவும் அதச் செய்யல, அதனால நான் அவங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருந்துச்சு, ஏன் இப்படி நடந்துக்குறீங்கன்னு அவங்களிடத்துல கேட்டேன். தனக்கு ஒரு மணி நேரம் மட்டுந்தான் ஓய்வு நேரம் இருந்ததாவும், ஆனா அவங்க அத சமூக ஊடகங்கள்லயும் படங்களப் பாக்குறதுக்கும் பயன்படுத்தினாங்க, அதனால அவங்களுக்குக் கண்காணிக்க நேரமில்லாம இருந்துச்சுன்னும் சொன்னாங்க. இதக் கேட்டதும் நான் கோபப்பட்டு, “நீங்க ரொம்ப சோம்பேறி, எந்த பாரமும் இல்லாம இருக்குறீங்க. ஜனங்கள் கூடுகைகளத் தவறவிட்டா, நீங்க தொடர்புகொள்ளணும்னு யோசிக்க மாட்டீங்க!” அப்படின்னு நினைச்சேன். அவங்களோட கடமைய அலட்சியப்படுத்தினதுக்காகவும், பொறுப்பற்றவங்களா இருந்ததுக்காகவும் நான் அவங்களக் கையாள விரும்புனேன், ஆனா, நான் அவங்களக் கையாண்டா, அவங்க என்கிட்ட இருந்து தன்னைய தூரப்படுத்திக்கிட்டு நான் ஒரு நல்ல தலைவி இல்லன்னு சொல்லிருவாங்களோன்னு நான் கவலப்பட்டேன். எங்க நட்ப அழிக்க நான் விரும்பல, அதனால அவங்களக் கையாளுறதுக்குப் பதிலா, நான் அவங்கள உற்சாகப்படுத்தினேன். “உங்க சகோதர சகோதரிகளோட நிலையப் புரிஞ்சுக்க, இந்த ஓய்வு நேரத்த நீங்க பயன்படுத்தலாம், அதுக்கப்புறமா உங்க கடமைய நீங்க சிறப்பா செய்ய முடியும்” அப்படின்னு நான் சொன்னேன். கொஞ்ச நாளுக்கு அவங்க நல்லா செயல்பட்டாங்க, ஆனா மறுபடியும் அவங்க பழைய நிலமைக்குத் திரும்பிட்டாங்க. அவங்க தன்னோட கடமைய சமாளிச்ச விதம், புதுசா வந்தவங்க நிறைய பேரு கூடுகைல சரியா கலந்துக்காமப் போக வழி வகுத்திருச்சு, அதோடு சிலர் வரணும்னு நினைக்குறதே இல்ல. எனக்கு ரொம்ப கோபமா இருந்துச்சு. அவங்க ரொம்ப பொறுப்பில்லாதவங்களா இருந்தாங்க! நான் உண்மையில அவங்களக் கையாள விரும்புனேன், ஆனா அவங்க என்னையத் தவிர்த்திடுவாங்களோன்னு பயந்தேன். அதனால பல்லக் கடிச்சுக்கிட்டு புதுசா வந்தவங்களுக்கு நானே உதவி செஞ்சேன். புதுசா வந்தவங்ககிட்ட பேசினதுக்கப்புறமாதான், தீர்க்க முடியாத சிரமங்கள் இருந்ததாலதான் அவங்க கூடுகைகளுக்கு வரலங்கறத நான் தெரிஞ்சுகிட்டேன், ஆனா மெசேஜ்க்கு அவங்க பதிலளிக்கலன்னு ஜோன் என்கிட்ட சொல்லியிருந்தாங்க. ஜோனின் நடத்தையப் பாத்ததுக்கப்புறமா, நான் அவங்கள உண்மையில கையாள விரும்புனேன். அவங்களோட பொறுப்பற்ற தன்மையின் கடுமையான விளைவுகள அவங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புனேன். ஆனா நான் விரும்பத்தக்க நம்பத்தக்க ஒரு நல்ல தலைவியா இருக்க விரும்புனேன். அதனால, நான் அவங்கள உற்சாகப்படுத்துற விஷயங்களச் சொன்னேன். அதனால, அவங்க மாறவே இல்ல. ஒரு கூடுகையில, ஜோன், “நான் ரொம்ப காலமா குழுவுல இருக்குறேன், இன்னும் எனக்கு ஏன் பதவி உயர்வு கிடைக்கல?” அப்படின்னு குறை சொன்னாங்க. ஜோன் சொன்னதக் கேட்டதும், “நீங்க சோம்பேறி, உங்களோட கடமையப் புறக்கணிக்குறீங்க, கவனக்குறைவா இருக்குறீங்க. நீங்க எப்படிப் பதவி உயர்வு பெறுவீங்க?” அப்படின்னு நான் நினைச்சேன். நான் கோபமா இருந்தாலும் கூட, “எல்லா கடமைகளும் தேவனோட ராஜரீக ஏற்பாடுகளால செய்யப்படுது. நம்மளோட கடமைகள் வேறுபட்டாலும், நாம எல்லாருமே புதுசா வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சி தேவனோட கிரியைய அனுபவிக்கிறோம்” அப்படின்னு சொல்லி நான் அவங்கள ஆறுதல்படுத்துனேன். நான் ஒரு நல்ல தலைவியா இருந்ததப் போல இது அவங்கள புரிஞ்சிக்கப்பட்டவங்களாவும் கவனிக்கப்பட்டவங்களாவும் உணர வைக்கும்ன்னு நெனச்சேன். அதனால, நான் ஒருபோதும் ஜனங்களோட பிரச்சனைகள வெளிப்படுத்தினதோ அல்லது கையாண்டதோ இல்ல. அதுக்கு பதிலா, அவங்கள ஆறுதல்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் நல்ல விஷயங்களச் சொன்னேன். இது நான் அணுகக்கூடியவளா இருந்தேன்ங்கறத ஜனங்கள உணர வைக்கும்ன்னு நான் நெனச்சேன்.

ஒரு தடவ, எட்னா அப்படிங்கற ஒரு உதவிப்போதகரும் அன்னி அப்படிங்கற ஒரு குழுத் தலைவியும் ஒத்துப் போகல. எட்னா கோபமா என்கிட்ட, “அன்னி ரொம்ப சோம்பேறி. அவங்களோட குழுவுல இருக்கிறவங்களோட சூழ்நிலைகளப் பத்தி நான் கேட்டேன், அவங்க ரொம்ப தாமதமா பதில் சொன்னாங்க. நான் இதுல அப்போதய தகவல வச்சிருக்கலேன்னா, அவங்க தன்னோட வேலைய சரியா செய்யல” அப்படின்னு சொன்னாங்க. எட்னா அகந்தையான ஒரு சுபாவம் கொண்டவங்கன்னு எனக்குத் தெரியும், அவங்களோட தொனி அடிக்கடி கோரிக்கை வைக்குறதா இருந்துச்சு, மத்தவங்களுக்கு அது கடினமா இருந்துச்சு. அன்னி தன்னோட பெருமிதத்துல அக்கறையுள்ளவங்களா இருந்தாங்க. பெரும்பாலும் எட்னாவோட கடுமையான தொனி அன்னிய பதில் சொல்ல தயங்க வச்சிருக்கும். இத எட்னாகிட்ட சுட்டிக்காட்ட விரும்புனேன், ஆனா அவங்க புண்பட்டதா உணருவதயோ தவறா புரிஞ்சுக்கப்பட்டதா உணர்வதயோ நான் விரும்பல. அதனால அவங்ககிட்ட, “ஒருவேள அன்னி அலுவலா இருந்ததால உங்க செய்திய கவனிக்காம போயிருக்கலாம்” அப்படின்னு நட்போடு சொன்னேன். அதுக்கப்புறம், நான் அன்னிகிட்ட போனேன், அன்னி வருத்தத்தோடு, “எட்னா ரொம்ப அகந்தையுள்ளவங்களா இருக்காங்க. அவங்க கோரிக்கை வைக்குறாங்க, கடுமையா நடந்துக்கறாங்க, அதனால நான் பதிலளிக்க விரும்பல” அப்படின்னு சொன்னாங்க. அவங்க மத்தவங்களோட ஆலோசனைய ஏத்துக்கலங்கறத நான் பாத்து, அத சுட்டிக்காட்ட விரும்புனேன். ஆனா அவங்க கேட்க மாட்டாங்கன்னும், அது எங்களுக்குள் விரிசல ஏற்படுத்தக்கூடும்ன்னும் நான் பயந்தேன். அதனால, “நீங்க எட்னாவத் தப்பாப் புரிஞ்சிருக்கக் கூடும். நீங்க உங்களோட கடமைய சரியா செய்யணும்னு மட்டுந்தான் அவங்க விரும்புறாங்க” அப்படின்னு நான் சொன்னேன். நான் அவங்களுக்கு ஆறுதல்படுத்துற வார்த்தைகளயும் அறிவுரைகளயும் மட்டுந்தான் சொன்னேன், அவங்களோட பிரச்சனைகள நான் சுட்டிக்காட்டல. ரெண்டு பேருமே தங்களைப் புரிஞ்சுக்கல. அன்னியோட வேலைய எட்னாவால இன்னும் பின்தொடர முடியல, அன்னி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாவும் அவங்களால இந்தக் கடமையைச் செய்ய முடியாதுன்னும் நெனச்சங்க. ஒரு தலைவியா நான் என்னோட பொறுப்புகள நிறைவேற்றலங்கறது எனக்குத் தெரியும். அதாவது அவங்க தங்களோட சொந்தப் பிரச்சனைகள உணரலங்கறதுதான் அதுக்கு அர்த்தம். நான்தான் இந்த விளைவுகள ஏற்படுத்தியிருந்தேன். நான் என்னைய அறிஞ்சுக்க எனக்கு வழிகாட்டும்படி தேவனிடத்துல ஜெபிச்சேன்.

தேவனோட வார்த்தையில், நான் இத வாசிச்சேன், “வெற்றுச் சொற்களைச் சொல்லுவதும், உருவாக்கப்பட்ட சொற்றொடர்களை ஓதுவதும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது அல்ல. ஒருவர் வாழ்க்கையில் எதை எதிர்கொண்டாலும் சரி, அது மனித நடத்தையின் கொள்கைகளை உள்ளடக்கியதாக, நிகழ்வுகளைப் பற்றிய கண்ணோட்டங்களை, அல்லது அவர்களது கடமையைச் செய்யும் விஷயங்களைப் பற்றியதாக இருக்கும் வரை, அவர்கள் ஒரு முடிவெடுப்பதை எதிர்கொள்கிறார்கள், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளில் ஓர் அடிப்படையையும் கொள்கையையும் தேட வேண்டும் மற்றும் அதன்பின் அவர்கள் கடைப்பிடிப்பதற்கு ஒரு பாதையைத் தேட வேண்டும்; இந்த வகையில் பயிற்சி செய்பவர்கள் சத்தியத்தைத் தேடுபவர்கள். ஒருவர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும்போதும் இந்த வகையில் சத்தியத்தைத் தேட முடிவது என்பது பேதுரு நடந்த பாதையில் நடப்பதாகும் மேலும் சத்தியத்தைப் பின்தொடரும் பாதையாகும். உதாரணமாக, பிறரோடு தொடர்புகொள்ளும்போது எந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்? உன்னுடைய சுயமான கருத்து என்னவென்றால் நீ யாருக்கும் இடறலுண்டாக்கக் கூடாது, ஆனால் அமைதியைப் பேணி யாரையும் மதிப்பிழக்கச் செய்யக் கூடாது, அதனால் எதிர்காலத்தில், யாவரும் நட்போடு பழகலாம் என்பதாகும். இந்தக் கருத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, ஒருவர் மோசமானதைச் செய்வதை, ஒரு தவறைச் செய்வதை, அல்லது கொள்கைகளுக்கு எதிராக ஒரு செயலைச் செய்வதை நீ பார்க்கும்போது, அதை அந்த நபரின் கவனத்துக்குக் கொண்டு வராமல் அதைச் சகித்துக்கொள்வாய். உன் கருத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, யாரையும் புண்படுத்துவதை நீ வெறுக்கிறாய். யாரோடு நீ பழகினாலும் சரி, பல ஆண்டு தொடர்பில் வளர்ந்த முகம், உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் பற்றிய நினைவுகளால் நீ தடுக்கப்படுவதால், நீ அந்த நபரை மகிழ்ச்சியாக்க எப்போதும் அருமையான விஷயங்களையே கூறுவாய். திருப்தி அளிக்காத விஷயங்கள் எங்கிருக்கிறதோ, அங்கு நீ சகிப்புத்தன்மையோடும் இருக்கிறாய்; தனியாக இருக்கும்போது வெறுமனே கொஞ்சம் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறாய், சில விமரிசனங்களை கடுமையாகச் செய்கிறாய், ஆனால் அவர்களை நேரில் பார்க்கும்போது பிரச்சினையை உருவாக்குவதில்லை, அவர்களோடு உறவை இன்னும் பேணுகிறாய். இப்படிப்பட்ட நடத்தையைப் பற்றி என்ன எண்ணுகிறாய்? இது மக்களை மகிழ்விப்பவரின் நடத்தையல்லவா? இது மிகவும் நழுவுவதாக இருக்கிறதல்லவா? இது நடத்தையின் கொள்கைகளை மீறுகிறது. ஆக இந்த வகையில் நடந்துகொள்வது கீழ்த்தரமானது இல்லையா? இப்படி நடந்துகொள்ளுகிறவர்கள் நல்லவர்கள் அல்லர், அவர்கள் உயர்ந்தவர்களும் அல்லர். நீ எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, நீ எவ்வளவு விலை கொடுத்திருந்தாலும் சரி, கொள்கைகள் இல்லாமல் நடந்துகொண்டால், நீ தோல்வி அடைந்துவிட்டாய், நீ தேவனுக்கு முன்பாக அங்கீகாரத்தைப் பெற மாட்டாய், அல்லது அவரால் நினைக்கப்பட மாட்டாய் அல்லது அவரை மகிழ்விக்க மாட்டாய்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தன் கடமையைச் சிறப்பாகச் செய்ய, குறைந்தபட்சம் ஒருவர் மனசாட்சியும் பகுத்தறிவும் உடையவராக இருக்க வேண்டும்”). தேவனோட வார்த்தைகள வாசிச்ச பிறகு, எது எப்படியோ சத்தியத்த நடைமுறைப்படுத்துறதுங்கறது சத்தியத்தின் கொள்கைகள்படி செயல்படுவதா இருக்குது, அதோடு ஜனங்களப் புண்படுத்த பயப்படக் கூடாது அப்படிங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். ஆனா நான் சகோதர சகோதரிகளோடு பழகுனப்போ, அவங்க என்னையப் பத்தி உயர்வா நெனைக்கணும், எங்களோட நட்ப இணக்கமா வச்சிருக்கணும்னும் நான் விரும்புனேன், நான் அணுகத்தக்கவளாவும் அனுதாபத்தோடு இருக்கவும், சகோதர சகோதரிகளால பாராட்டப்படவும் கடுமையா முயற்சி செஞ்சேன். நான் சத்தியத்தக் கடைப்பிடிக்காமபுறக்கணிச்சுக்கிட்டிருந்தேன். ஜோன் தன்னோட கடமையத் தட்டிக் கழிப்பதயும் சோம்பேறியா இருப்பதயும் நான் பாத்தப்போ, பொறுப்பில்லாதவங்களா இருந்ததுக்காக அவங்களக் கையாள விரும்புனேன். ஆனா எங்களோட நட்புகளத் தக்கவச்சுக்கறதுக்காகவும், நான் ஒரு நல்லவளா, எதையும் சுலபமா எடுத்துக்கற தலைவியா இருந்தேன்ங்கறத அவங்கள நெனைக்க வெக்கறதுக்காகவும், நான் அவங்கள எதிர்த்து நிக்கல. அவங்களோட பொறுப்பில்லாத தன்மையினால, புதுசா வந்தவங்க சிலருக்குத் தங்களோட பிரச்சினைகளத் தீர்க்க முடியாம, கூடுகைகளுக்கு வர்றத நிறுத்திட்டாங்க. அதோடு கூட, எட்னாவயும் அன்னியயும் பொறுத்தவரை, அவங்களால சரியா பழக முடியலங்கறதயும், சுய அறிவு இல்லாததயும் நான் பாத்தேன், ஆனா அவங்களோட பிரச்சனைகள சுட்டிக்காட்டுவதயோ அல்லது அவங்களுக்கு உதவுவதயோ விட்டுட்டு, ஆறுதல்தர்றதும் அறிவுரைகள சொல்லுறதுமான வார்த்தைகளப் பேசுறதன் மூலமா அவங்களோட கருத்து வேறுபாடுகள சரி செய்ய முயற்சி செஞ்சு நான் மேலோட்டமா பதில் சொன்னேன். அதன் விளைவா, எட்னாவால அப்பவும் பின்தொடர முடியல, அன்னி தன்னோட கடமைய சரியா செய்யல, தன்னோட இடத்த வேறு யாராவது எடுத்துக்கணும்னு விரும்புனாங்க. நட்போடு பழகுறவளாவும் அணுகக்கூடியவளாவும் இருக்குற ஒரு நல்ல தலைவர் அப்படிங்கற என்னோட பிம்பத்தத் தக்க வச்சுக்கறதுக்காக, திருச்சபையோட பணிய நான் பாதுகாக்கவே இல்லங்கறத நான் பாத்தேன். ஜனங்களோடு நட்ப தக்கவச்சுக்கறதுக்காக வேலை பாதிக்கப்படுறத நான் தேர்ந்தெடுத்தேன். நான் ரொம்ப சுயநலமானவளாவும் கேவலமானவளாவும் இருந்தேன். நான் ஜனங்கள பிரியப்படுத்துறவளாவும் ஏமாத்துறவளாவும் இருந்தேன். நான் நடந்துக்கிட்ட விதம் என்னோட சீர்கெட்ட மனநிலைய அடிப்படையா கொண்டிருந்துச்சு. நான் சத்தியத்தக் கடைப்பிடிக்காம இருந்தேன். மத்தவங்க என்னையப் புகழ்ந்திருக்கலாம், ஆனா தேவன் ஒருபோதும் பாராட்டமாட்டாரு. என்னோட சகோதர சகோதரிகளோட பிரச்சனைகள நான் வெளிப்படுத்தல, அவற்ற தீர்த்து வைக்க நான் சத்தியத்த குறிச்சு ஐக்கியங்கொள்ளவுமில்ல. அதனால அவங்க தங்களோட பிரச்சினைகள அடையாளங்காணவோ அல்லது தங்களோட கடமைகள சரியா செய்யவோ இல்ல. இது சுவிசேஷப் பணிய பாதிச்சுச்சு. அப்பத்தான் நான் கொஞ்சங்கூட நல்லவள் இல்லங்கறது எனக்கு தெரிஞ்சுச்சு, ஏன்னா, மத்தவங்க ஜீவப் பிரவேசத்துல வளர்றதுக்கு நான் உதவி செய்யாம இருந்தேன். அதுக்குப்பதிலா, எல்லாரையும் என்னையப் புகழவும், என்னைய உயர்ந்தவளா பாக்கவும் வச்சேன். அது தேவனுக்கு அருவருப்பானது. இத நான் உணர்ந்துக்கிட்டப்ப, நான் ரொம்ப வருத்தப்பட்டேன், அதனால, என்னோட சீர்கெட்ட மனநிலைகள சரிசெய்ய எனக்கு வழிகாட்டணும்னு தேவனிடத்துல கேட்டு நான் ஜெபிச்சேன்.

என்னோட நிலையப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டதும், ஒரு சகோதரி தேவனோட வார்த்தைகள் சிலத எனக்கு அனுப்பி வச்சாங்க. “அணுகக்கூடிய மற்றும் இணக்கமாக இருத்தல் ஆகிய ‘நல்ல’ நடத்தைக்குப் பின்னால் இருக்கும் சாராம்சத்தை ஒரு வார்த்தையில் கூறிவிடலாம்: பாசாங்கு. இத்தகைய ‘நல்ல’ நடத்தை தேவனுடைய வார்த்தையில் இருந்தோ, சத்தியத்தைக் கடைப்பிடிப்பதாலோ அல்லது கொள்கைக்கு ஏற்ப நடப்பதாலோ பிறப்பது அல்ல. அது எதனால் உண்டாகிறது? அது ஜனங்களின் நோக்கங்களில், திட்டங்களில், அவர்கள் பாசாங்கு செய்வதில், நடிப்பதில், ஏமாற்றுக்காரர்களாக இருப்பதில் இருந்து வருகிறது, ஜனங்கள் இந்த ‘நல்ல’ நடத்தைகளைப் பற்றிப் பிடித்திருக்கும்போது, அவர்களது நோக்கம் அவர்கள் விரும்பியதை அடைவதாய் இருக்கிறது; இல்லை என்றால், அவர்கள் இந்த வழியில் ஒருபோதும் தங்களை வருத்திக்கொள்ள மாட்டார்கள், மேலும் தங்கள் சொந்த விருப்பங்களுக்கு மாறாக வாழ மாட்டார்கள். தங்கள் விருப்பங்களுக்கு மாறாக வாழ்வது என்பதன் அர்த்தம் என்ன? அதாவது அவர்களுடைய உண்மையான சுபாவமானது ஜனங்கள் கற்பனை செய்வது போல நல்ல முறையில் நடப்பதும், வஞ்சகம் இல்லாமல் இருப்பதும், மென்மையாகவும், இரக்கத்துடனும், நல்லொழுக்கமுள்ளதாகவும் இல்லை. அவர்கள் மனச்சாட்சியுடனும் அறிவுடனும் வாழ்வதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் குறிப்பிட்ட இலக்கயும் கோரிக்கையையும் அடைவதற்காகவே வாழ்கிறார்கள். அவர்களுடைய உண்மை சுபாவமானது அவமானகரமானதும் அறியாமை நிறைந்ததுமாய் இருக்கிறது. தேவன் வழங்கியுள்ள நியாயப்பிரமாணங்களும் கட்டளைகளும் இல்லாமல், பாவம் என்றால் என்ன என்பது பற்றி ஜனங்களுக்கு எந்த அறிவும் இருக்காது. இப்படித்தானே மனுக்குலம் வழக்கமாக இருந்து வருகிறது? தேவன் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் வழங்கிய பின்னர்தான் ஜனங்களுக்குப் பாவத்தைப் பற்றிய கருத்துரு சற்று கிடைத்தது. ஆனால் இன்னும் அவர்களுக்குச் சரி அல்லது தவறு, அல்லது நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களைப் பற்றிய கருத்துரு எதுவும் இல்லை. மேலும் நிலை இதுவாக இருக்க, பேசுவதற்கும் செயல்படுவதற்குமான சரியான கொள்கைகளை அவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்? இயல்பான மனிதத்தன்மையில் காணப்பட வேண்டிய செயல்களும் நல்ல நடத்தைகளும் எதுவென்று அவர்களால் அறிய முடியுமா? உண்மையிலேயே நல்ல நடத்தைகளை எது உருவாக்குகிறது, மனிதச் சாயலாக வாழ எந்த வழியைத் தாங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை அவர்களால் அறிய முடியுமா? அவர்களால் முடியாது. ஜனங்களின் சாத்தானிய சுபாவத்தால், அவர்களுடைய உள்ளுணர்வுகளால், பாசாங்கு செய்து, நாகரிகமாகவும் கண்ணியத்துடனும் நடந்துகொள்வது போல அவர்களால் நடிக்கத்தான் முடியும்—இதுதான் சுத்திகரிக்கப்பட்டவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும், மென்மையான நடத்தை கொண்டவர்களாகவும், பணிவானவர்களாகவும், வயதானவர்களை மதித்து இளையவர்களை பேணுபவர்களாகவும், இணக்கமானவர்களாகவும், அணுகக்கூடியவர்களாகவும் இருப்பது போன்ற வஞ்சகங்களுக்கு வழிவகுக்கிறது; இவ்வாறே ஏமாற்றுத்தனத்தின் இந்தத் தந்திரங்களும் உத்திகளும் எழுந்தன. அவை எழுந்துவிட்டால், ஜனங்கள் இந்த ஏமாற்றுத்தனங்களில் ஒன்று அல்லது இரண்டைத் தேர்ந்தெடுத்துப் பற்றிக்கொள்கிறார்கள். சிலர் இணக்கமாகவும் அணுகக்கூடியவர்களாகவும் இருக்கவும், சிலர் சுத்திகரிக்கப்பட்டவர்களாகவும், அறிவுடனும் மென்மையான நடத்தையுடனும் இருப்பதையும், சிலர் மரியாதையுள்ளவர்களாகவும், வயதானவர்களை மதித்து இளையவர்களைப் பேணுபவர்களாக இருப்பதையும், சிலர் இவை எல்லாவற்றையும் தேர்ந்துகொள்ளுகிறார்கள். ஆனாலும் நான் இப்படிப்பட்ட ‘நல்ல’ நடத்தை உள்ள ஜனங்களை ஒரு வார்த்தையால் வரையறுக்கிறேன். அந்த வார்த்தை என்ன? ‘கூழாங்கற்கள்.’ கூழாங்கற்கள் என்றால் என்ன? அவைதான் நதியோரங்களில் ஆண்டாண்டு காலமாக ஓடும் நீரால் கூர்மையான விளிம்புகள் தேய்க்கப்பட்டு மழுக்கப்பட்ட வழுவழுப்பான கற்கள். அவற்றின் மேல் காலை வைத்தால் அவை காயப்படுத்தாது என்றாலும், கவனமில்லாமல் இருந்தால் ஜனங்கள் அவற்றின்மீது வழுக்கி விழுவார்கள். தோற்றத்திலும் வடிவத்திலும் இந்தக் கற்கள் மிகவும் அழகானவை, ஆனால் அவற்றை நீ வீட்டுக்கு எடுத்துச் சென்றால், அவற்றால் எந்தப் பயனும் இல்லை. அவற்றைத் தூர எறியவும் உனக்கு மனம் இருக்காது, அவற்றைத் தொடர்ந்து வைத்திருப்பதிலும் பொருள் இல்லை—இதுதான் ‘கூழாங்கல்’. என்னைப் பொறுத்தவரையில், நல்ல நடத்தை உள்ளவர்கள் போல் தோற்றமளிக்கும் ஜனங்கள் வெதுவெதுப்பானவர்கள். வெளிப்புறத்தில் அவர்கள் நல்லவர்களைப் போல நடிக்கிறார்கள், ஆனால் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதே இல்லை, அவர்கள் கேட்பதற்கு இனிமையான விஷயங்களைக் கூறுவார்கள், ஆனால் உண்மையான எதையும் செய்ய மாட்டார்கள். அவர்கள் கூழாங்கற்களே தவிர ஒன்றுமில்லை(வார்த்தை, தொகுதி 6. சத்தியத்தைப் பின்தொடர்தல் பற்றி. “சத்தியத்தைப் பின்தொடர்வது என்றால் என்ன (3)”). முன்னாடி, நட்போடு பழகுறவங்களும் அன்பா இருப்பவங்களும் நல்ல மனுஷங்கன்னு நான் எப்பவுமே நெனச்சேன். இந்த நடத்தைக்குப் பின்னால இருந்த சீர்கெட்ட மனநிலைகளயும் அது சுய சேவைங்கறதயும் நான் பாத்ததேயில்ல. ரொம்ப சின்ன வயசுல இருந்தே, நான் அணுகத்தக்கவளாவும் நட்பா இருக்கவும் நாடுனேன், என்னோட நண்பர்களும் குடும்பத்தினர் எல்லாருமே அக்கறையா இருந்ததுக்காக என்னையப் புகழ்ந்தாங்க ஆனா என்னோட உள்ளத்தின் ஆழத்துல, நான் செஞ்சதெல்லாம் மத்தவங்கள என்னையப் பாராட்டவும் புகழவும் வெச்சதுதான். நான் அணுகத்தக்கவளாவும் அன்பாவும் இருக்கற தோற்றத்த என்னோட சகோதர சகோதரிகள குருடாக்கவும் ஏமாத்தவும் பயன்படுத்துனேன். இப்படிப்பட்ட நபர்கள தேவன் “மிருதுவான கல்” அப்படின்னு சொல்லுறத நான் பாத்தேன். இந்தக் கல்லுகள் அழகா இருக்கும், அவற்ற மிதிக்கறதால வலிக்காது, ஆனா அதுக மேல வழுக்கி விழுறது ரொம்ப சுலபம். அவை அலங்காரமானவையா இருக்குது, நடைமுறையானவையா இல்ல. நான் யாரா இருந்தேன்ங்கறத உணர்ந்தேன், பிரியமாவும் நட்பாவும் தெரிஞ்ச ஒருத்தியா இருந்தேன், ஆனா என்னோட சகோதர சகோதரிகளுக்கு எந்த நடைமுறை உதவியயும் செய்யல. என்னோட இருதயம் வஞ்சகமும் தந்திரமும் நிறைஞ்சதா இருந்துச்சு. நான் எல்லார்கிட்டயும் அன்பா இருந்தேன், யாரையும் புண்படுத்தல. நான் வெறுமனே ஒரு “மிருதுவான கல்லா” இருந்தேன், நடுநிலையா இருந்து ஜனங்களப் பிரியப்படுத்துற, தந்திரமான மாய்மாலக்காரியா இருந்தேன். அது தேவனோட வார்த்தை வெளிப்படுத்துறதப் போலவே இருக்குது, “நடுப்பகுதியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் அனைவரும் மிகவும் வஞ்சனையானவர்கள். அவர்கள் யாரையும் புண்படுத்தாமல் இருக்க முயல்வார்கள், அவர்கள் மக்களை மகிழ்விப்பவர்கள், அவர்கள் விஷயங்களோடு ஒத்துப்போகிறவர்கள், மேலும் யாராலும் அவர்களின் உண்மையான தன்மையைக் கண்டறிய முடியாது. இப்படிப்பட்ட ஒரு நபர் வாழும் சாத்தான்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைக் கைக்கொள்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் சீர்கெட்ட மனநிலையின் கட்டுகளை நீக்க முடியும்”). அணுகத்தக்கவங்கள தேவன் அங்கீகரிக்கிறாருன்னு நான் நினைக்கறதுண்டு. என்னோட செயல்கள் சத்தியத்தோடயும் தேவனோட வார்த்தைகளின் கொள்கைகளோடயும் ஒத்துப்போகாம இருந்துதுங்கறத இப்ப நான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் என்னோட வஞ்சக சுபாவத்த வெளிப்படுத்திக்கிட்டிருந்தேன். அப்படிப்பட்டவங்களிடத்துல கண்ணியம் இல்ல, தேவன் அவங்கள வெறுக்குறாரு. நான் மனந்திரும்பி மாறலேன்னா, ஒரு நாள் நான் வெளிப்படுத்தப்பட்டு தேவனால புறம்பாக்கப்படுவேன்னு எனக்குத் தெரியும். நான் அப்படிப்பட்ட நபரா இருக்க விரும்பல. அதனால, நான் தேவனிடத்துல ஜெபிச்சு மனந்திரும்பி, மாறுறதுக்கு எனக்கு உதவி செய்யவும் சத்தியத்தக் கைக்கொள்ள எனக்கு பலத்தக் கொடுக்கவும், தேவனிடத்துலயும் மத்தவங்ககிட்டயும் உண்மையான இதயத்தோடு இருக்க எனக்கு உதவவும் அவரிடத்துல கேட்டேன்.

தேவனோட வார்த்தைகளோட ரெண்டு பத்திகள ஒரு சகோதரி எனக்கு அனுப்பி வச்சாங்க: “ஒரு நபரின் செய்கைகள் நல்லவை அல்லது தீயவை என்று நியாயந்தீர்க்கப் படுவதற்கான அளவுகோல் என்ன? அவர்கள் தங்கள் சிந்தனைகள், வெளிப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளில் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் சாட்சியை கொண்டிருக்கிறார்களா மற்றும் சத்தியத்தின் யதார்த்தத்தின் படி ஜீவிக்கிறார்களா என்பதைப் பொறுத்து அது இருக்கிறது. உனக்கு இந்த யதார்த்தம் இல்லை என்றால் அல்லது இதன்படி வாழாவிட்டால், சந்தேகம் இல்லாமல், நீ ஓர் அக்கிரமச் செய்கைக்காரன்தான்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவருடைய சீர்கேடான மனநிலையை விட்டொழிப்பதன் மூலம் மட்டுமே சுதந்திரத்தையும் விடுதலையையும் அடைய முடியும்”). “தலைவர்கள் மற்றும் பணியாளர்களின் பொறுப்புகள்: 1. தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடித்து அவற்றைப் புரிந்துகொண்டு தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்துக்குள் பிரவேசிக்க ஜனங்களை வழிநடத்துங்கள். 2. ஒவ்வொரு வகையான நபரின் நிலையை தெரிந்துகொண்டு, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஜீவப்பிரவேசம் தொடர்பாக எதிர்கொள்ளும் பல்வேறு கஷ்டங்களைத் தீர்த்து வையுங்கள். 3. ஒவ்வொரு கடமையையும் சரியாகச் செய்வதற்காகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியத்தின் கொள்கைகளைப் பற்றி ஐக்கியங்கொள்ளுங்கள். 4. பொருத்தமற்ற ஜனங்களைப் பணியமர்த்துவதால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க அல்லது குறைக்க மற்றும் பணியின் செயல்திறனுக்கும் சுமூகமான முன்னேற்றத்திற்கும் உத்தரவாதமளிக்க வெவ்வேறு பணியின் மேற்பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு முக்கிய வேலைகளுக்குப் பொறுப்பான பணியாளர்களின் சூழ்நிலைகளை தெரிந்துவைத்துக்கொண்டு, தேவைக்கு ஏற்ப காலதாமதம் இன்றி அவர்களை மறு பணிஒதுக்கீடு செய்யவும் அல்லது மாற்றவும். 5. பணியின் ஒவ்வொரு செயல்திட்டத்தின் நிலையையும் முன்னேற்றத்தையும் பற்றிய சமீபத்திய கிரகித்தலையும் புரிதலையும்பராமரியுங்கள், பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து, விலகல்களைச் சரிப்படுத்தி, பணி சுமூகமாக முன்னேறுவதற்காக பணியில் இருக்கும் கவனக்குறைபாடுகளைக் களைந்து விடுபவராய் இருங்கள்(வார்த்தை, தொகுதி 5. தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள். “தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள் (1)”). தேவனோட வார்த்தைகள வாசிச்ச பிறகு, நம்மளோட மனிதத்தன்மைக்கான தேவனோட தரநிலை நாம எத்தன நற்கிரியைகளச் செய்யுறோம் அல்லது ஜனங்கள் நம்மளப் பத்தி உயர்வா நினைக்குறாங்களா இல்லையா அப்படிங்கறதப் பொறுத்ததா இல்ல. அதுக்குப் பதிலா, தேவனோட தரநிலை கீழ்ப்படிதலயும், நம்மளோட எண்ணங்களும் கிரியைகளும் சத்தியத்துக்குச் சாட்சியளிக்குதாங்கறதயும் பொறுத்ததா இருக்குதுங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். இப்படிப்பட்டவங்ககிட்டதான் நல்ல மனிதத்தன்மை இருக்கும். ஜோன் தன்னோட கடமைய பொறுப்பில்லாம சமாளிச்சுக்கிட்டிருந்ததயும், அதோடு எட்னாவும் அன்னியும் சீர்கேட்டுல வாழ்ந்துக்கிட்டு ஒருத்தர ஒருத்தர் புறக்கணிக்குறாங்கங்கறதயும் நான் பாத்தேன். இந்த விஷயங்கள் திருச்சபையோட பணிய பாதிச்சுச்சு. ஒரு திருச்சபைத் தலைவியா, நான் ஐக்கியங்கொண்டு, அவங்க செஞ்ச செயல்களோட தன்மைய அம்பலப்படுத்தியிருக்கணும், ஆனா அதுக்குப் பதிலா நான் மென்மையா பேசி சமாதானம் செய்யுறவளா இருக்க முயற்சி செஞ்சேன். திருச்சபையோட பணிகள் பாதிக்கப்படுறத நான் பாத்ததுக்கப்புறமும் கூட, நான் என்னோட பிம்பத்தத் தக்க வச்சுக்கிட்டேன். சத்தியத்தக் கடைப்பிடிச்சதுக்கான சாட்சி என்கிட்ட இல்ல, ஒரு தலைவியா நான் என்னோட பொறுப்புகள நிறைவேத்தவுமில்ல என்னோட சகோதர சகோதரிகளோட ஜீவப் பிரவேசத்துக்கு நான் உதவவுமில்ல. எல்லாரோடும் இணக்கமா வாழ முடிஞ்சு, நட்போடு பழகுறவளாவும் தோழமையோடு இருக்கறவளாவும் பாக்கப்பட்டா, நான் நல்ல தலைவியா இருந்தேன்னு நெனச்சதுண்டு. இந்தப் புரிதல் தவறானதுங்கறத இப்போ நான் உணருறேன். ஒரு நல்ல தலைவரால பிரச்சனைகளத் தீர்க்க சத்தியத்துல ஐக்கியங்கொள்ளவும், கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படவும், மத்தவங்களப் புண்படுத்திருவோமோன்னு பயப்படாமலும், மத்தவங்களோட வாழ்க்கையில அக்கறையுள்ளவங்களாவும் இருக்க முடியும். அவங்களோட பிரச்சனைகள எதிர்கொள்ளுறப்போ, அவங்கள அம்பலப்படுத்தி, சத்தியத்திற்குள்ள பிரவேசிக்க மத்தவங்களுக்கு உதவுறதுக்குப் பதிலா, என்னோட பிம்பத்தப் பாதுகாக்க நான் தந்திரமா செயல்பட்டு, ஆறுதலயும் ஊக்கத்தயும் கொடுத்தேன், ஆனா தீர்வுகளக் கொடுக்கல. இது ஏமாத்துக்காரியா இருக்கறது இல்லையா? ஒரு நல்ல தலைவியா இருக்கணும்ங்கற என்னோட எண்ணம் தப்பு, அது தேவனோட கோரிக்கைகளுக்கு ஏற்ப இல்ல. என்னோட எல்லா வார்த்தைகளும் செயல்களும் தேவனோட வார்த்தைகளின் அடிப்படையில இருக்கணும். நான் சத்தியத்தக் கைக்கொள்ளலேன்னா, நான் தேவனை எதிர்க்குறேன். அவரோட வார்த்தைகளயும் கோரிக்கைகளயும் பின்பற்றுறவங்களத்தான் தேவன் விரும்புறாரு, பாரம்பரிய நல்லொழுக்கங்களக் கடைப்பிடிப்பவங்களயோ, புகழைப் பின்தொடருறவங்களயோ நேர்மையில்லாம செயல்படுறவங்களயோ, சத்தியத்தக் கைக்கொள்ளாம இருக்கறவங்களயோ தேவன் விரும்புறதில்ல அப்படிங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். நான் மத்தவங்களோடு பழகின விதத்த மாத்திக்கணும்ங்கறத உணர்ந்தேன். ஒரு திருச்சபைத் தலைவியா, அதுக்கப்புறமும் என்னோட சொந்த யோசனைகள்படி என் கடமைய என்னால செய்ய முடியல. நான் தேவனோட சித்தப்படி செயல்படவும், தேவனோட வார்த்தையின்படி மத்தவங்களோட சிரமங்களத் தீர்த்துவைக்க உதவவும் வேண்டியிருந்துச்சு, அதன் மூலமா அவங்களால தங்களோட கடமைகள சரியா செய்ய முடியும். இது என்னோட பொறுப்பா இருந்துச்சு. தேவனோட வார்த்தையில, நான் பயிற்சிக்கான பாதையக் கண்டுபிடிச்சேன். அதனால, நான் தேவனிடத்துல ஜெபிச்சு, என்னோட சீர்கெட்ட மனநிலைய சரிசெய்ய எனக்கு வழிகாட்டும்படி அவரிடத்துல கேட்டேன்.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையில ஒரு காரியத்த வாசிச்சேன். “தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் அடிப்படையாகவும், சத்தியத்தைத் தங்கள் அளவுகோலாகவும் வைக்கும் நிலையை அடையவே ஜனங்கள் மிகவும் முயலவேண்டும்; அப்போதுதான் அவர்கள் ஒளியில் வாழ்ந்து சாதாரண மனிதனைப் போல வாழ முடியும். நீ ஒளியில் வாழ விரும்பினால், நீ சத்தியத்தின்படி செயல்பட வேண்டும்; நீ நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்றால், நீ நேர்மையான வார்த்தைகளைப் பேசி நேர்மையான விஷயங்களைச் செய்ய வேண்டும், சத்தியத்தின் கொள்கைகளில் மட்டும்தான் உன் நடத்தைக்கான அடிப்படை இருக்கிறது; ஜனங்கள் சத்தியத்தின் கொள்கைகளை இழந்துவிட்டு, நல்ல நடத்தைகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், அது தவிர்க்க முடியாதபடி போலித்தனத்துக்கும் பாசாங்குக்கும் வழிவகுக்கும். ஜனங்களின் நடத்தையில் கொள்கை எதுவும் இல்லை என்றால், அப்போது அவர்கள் நடத்தை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அவர்கள் மாயக்காரர்களே; அவர்களால் கொஞ்ச காலத்திற்கு மற்றவர்களை ஏமாற்ற முடியும், ஆனால் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க முடியாது. ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளின்படி செயல்பட்டாலும், நடந்தாலும் மட்டுமே அவர்களுக்கு ஓர் உண்மையான அடித்தளம் இருக்கும். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின்படி நடக்காமல், நன்றாக நடப்பதாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால், அதன் விளைவாக அவர்கள் நல்ல ஜனங்களாக ஆக முடியுமா? நிச்சயமாக முடியாது. நல்ல நடத்தையால் ஜனங்களின் சாராம்சத்தை மாற்ற முடியாது. சத்தியமும் தேவனுடைய வார்த்தைகளும் மட்டுமே ஜனங்களின் மனநிலைகள், சிந்தனைகள் மற்றும் எண்ணங்களை மாற்றமுடியும், மேலும் அவர்களின் ஜீவனாக ஆக முடியும். … சில வேளைகளில், பிறருடைய குறைகள், குறைபாடுகள் மற்றும் தவறுகளை நேரடியாகச் சுட்டிக்காட்டி விமரிசனம் செய்வது தேவைப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் நன்மையாக உள்ளது. அது அவர்களுக்கு ஓர் உண்மையான உதவியாக இருக்கிறது, மேலும் அது அவர்களுக்கு ஆக்கபூர்வமானதாக இருக்கிறது, இல்லையா?(வார்த்தை, தொகுதி 6. சத்தியத்தைப் பின்தொடர்தல் பற்றி. “சத்தியத்தைப் பின்தொடர்வது என்றால் என்ன (3)”). தேவனோட வார்த்தைகள் எனக்கு மாற்றத்தின் பாதைய சுட்டிக்காட்டிச்சி, தேவனோட வார்த்தைகளின்படி செயல்படணும், சத்தியத்த என்னோட அளவுகோலாக பயன்படுத்தணும், நற்கிரியைகளால மாறுவேடமிட்டுக்கக் கூடாது, சத்தியத்தக் கைக்கொள்ளணும், நேர்மையான நபரா இருக்கணும் அப்படிங்கற மாற்றத்துக்கான பாதைய எனக்கு சுட்டிக்காட்டுச்சு. சத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிரா இருக்குற விஷயங்கள நான் பாக்கறப்ப, அல்லது மத்தவங்க தங்களோட கடமைகள சீர்கெட்ட மனநிலைகளோடு செய்யுறத நான் பாக்ககறப்ப, நான் நேர்மையா இருந்து, கொள்கைகளின்படி அவங்கள நடத்தணும், தேவைக்கேற்ப அவங்களோடு ஐக்கியங்கொள்ளவோ கையாளவோ செய்யணும். இப்படிச் செய்வதால மட்டுந்தான் தங்களோட கடமைகள்ல என்ன குறைபாடுங்கறத சகோதர சகோதரிகளால உணர முடியும் அதோடு விஷயங்கள சரியான நேரத்துல சரிசெஞ்சுக்க முடியும். இதுதான் என்னோட சகோதர சகோதரிகளுக்கு உண்மையிலயே உதவுறதும், தேவனோட வார்த்தையின் அடிப்படையில அவங்களோடு நட்புகொள்ளுதலுமா இருக்குது. நட்பு இப்படித்தான் இருக்கணும். சத்தியத்த எப்படிக் கைக்கொள்ளுறதுன்னு புரிஞ்சுக்கிட்டதுக்கப்புறமா, “தவறுகளப் பத்தி மத்தவங்ககிட்ட பேச பயப்படாதே, அதப் பூசி மொழுகாதே. நடிக்கறவங்களயும் ஏமாத்துறவங்களயும் தேவன் வெறுக்குறாரு. என்னோட செயல்கள் தேவனோட வார்த்தைகள் மற்றும் சத்தியத்தின் கொள்கைகளோடு ஒத்துப்போகணும்” அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். அதுக்கப்புறமா, ஜோன் சோம்பேறியா இருந்தத மறுபடியும் பாத்தப்ப, நான் அத அவங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புனேன், ஆனா அதச் செய்ய வேண்டிய நேரம் வந்தப்ப, அது ரொம்பக் கடினமா இருந்துச்சு. என்னையப் பத்தி அவங்களுக்கு இருக்குற நேர்மறையான அபிப்பிராயத்த இழந்துடுவேனோன்னு நான் அப்பவும் கவலப்பட்டேன். நான் தேவனோட வார்த்தைய சிந்திச்சுப் பாத்து, நான் நல்லா விரும்பப்படத்தக்கவளாவும் நட்போடு இருப்பவளாவும் இருப்பத இன்னும் பிடிச்சுக்கிட்டிருப்பத உணர்ந்தேன் அது நான் செயல்பட்டுக்கிட்டிருந்த விதத்த பாதிச்சுச்சு. நான் தேவனிடத்துல, என்னைய வழிநடத்தும்படி கேட்டு ஜெபிச்சேன். அதுக்கப்புறமா, நான் ஜோன்கிட்ட போயி, “சகோதரி, உங்க கடமைய நீங்க புறக்கணிக்கறதால, புதுசா வந்தவங்க நிறைய பேர் கூடுகைகளுக்கு வர்றதில்ல. புதுசா வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுறதுக்கு நீங்க அதிக காலதாமதம் செய்யுறீங்கங்கறத நீங்க உணருறீங்களா?” அப்படின்னு அவங்ககிட்ட சொன்னேன். இதச் சுட்டிக்காட்டியதுக்கப்புறமா, அவங்களிடத்துல என்னோட அனுபவத்தப் பகிர்ந்துக்கிட்டேன். அவங்க கோபப்பட்டு என்னையப் புறக்கணிப்பாங்கன்னு நெனச்சேன், ஆனா நடந்த விஷயம் என்னைய ஆச்சரியப்பட வச்சுது. அவங்க கோபப்படல, அதோடு அவங்க தன்னையப் பத்தி சிந்திச்சுப் பாத்து “இது என்னோட குறைபாடு, நான் மாறணும்” அப்படின்னு சொன்னாங்க. அதுக்கப்புறமா, சகோதரி ஜோன் தன்னோட கடமைய உண்மையா செய்யத் தொடங்குனாங்க, அவங்க தண்ணீர் பாய்ச்சின புதுசா வந்தவங்க கூடுகைகள்ல தவறாம கலந்துக்கிட்டாங்க. என்னோட வழிகாட்டுதலாலும் உதவியாலும் எங்களுக்கு இடையே இருந்த நட்பு முறிஞ்சுபோயிடல, அது இன்னும் நல்லா வளர்ந்துச்சு. அதுக்கப்புறம், அவங்களோட சீர்கேட்ட மறுபடியும் பாத்தப்ப அவங்ககிட்ட நேரடியா சுட்டிக் காட்டினேன், அவங்களால அத ஏத்துக்கிட்டு தன்னைத்தானே அறிஞ்சுக்க முடிஞ்சுச்சு. இப்போ, தன் கடமையப் பத்திய அவங்களோட அணுகுமுறை நிறைய மாறியிருக்குது, அதோடு அவங்க திருச்சபைத் தலைவியா பதவி உயர்வு பெற்றாங்க. எட்னா மற்றும் அன்னியோட பிரச்சனைகளயும் சுட்டிக்காட்டினேன். எட்னா தன் அகந்தைய உணர்ந்து, அவங்க மத்தவங்ககிட்ட பேசுற விதத்த மாத்திக்கணும்னு சொன்னாங்க, அதோடு அன்னி தன்னோட சீர்கெட்ட மனநிலைய உணர்ந்து, தான் மாற விரும்புனதா சொன்னாங்க. இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தக் கொடுத்துச்சு. தேவனுக்கு நன்றி! தேவனோட வார்த்தை மட்டுந்தான் ஜனங்கள மாத்த முடியும்!

இந்த விஷயங்கள அனுபவிச்சது, ஒரு உண்மையான நல்ல நபர்ங்கறவர், வெளிப்புறமா மட்டும் நல்லா நடந்துக்கறவர் இல்ல. தேவனோட வார்த்தையின்படி செயல்பட்டு, சத்தியத்தக் கைக்கொண்டு, நேர்மையான நபரா இருப்பவர்தான் உண்மையான நபர் அப்படிங்கறத நான் பார்க்க உதவுச்சு. தேவன் விரும்புற நபர் இவர்தான். மத்தவங்களோட பிரச்சனைகளப் பாக்கறப்ப, நான் சீக்கிரத்துல ஐக்கியங்கொள்ளணும்ங்கறதயும் தேவைக்கேற்ப அவங்கள அம்பலப்படுத்தி கையாளணும்ங்கறதயும் நான் கத்துக்கிட்டேன். இப்படித்தான் தங்களோட சொந்த சீர்கேட்ட அவங்களால உணர முடியும், அதன் மூலமா அவங்க சத்தியத்தத் தேடி தங்களோட கடமைகள சரியா செய்ய முடியும். அவங்களுக்கு உதவ இதுதான் சிறந்த வழி. இப்ப, என்னோட சகோதர சகோதரிகளோட பிரச்சனைகளச் சுட்டிக்காட்ட ஒருபோதும் நான் பயப்படுறதில்ல. அவங்க என்னையப் பத்தி என்ன நெனச்சாலும் பரவாயில்ல, நான் ஒரு நேர்மையான நபரா இருப்பதப் பயிற்சி செய்யவும், கொள்கைகளப் பின்பற்றி, திருச்சபையின் பணியைப் பாதுகாக்கவும் விரும்புறேன். தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சுகபோகத்திற்கான பேராசை உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்

கடந்த ஜூலை மாதத்துல, என்னை காணொளிப் பணிக்குப் பொறுப்பாளியாக ஏற்படுத்தினாங்க. ஆரம்பத்துல, நான் அடிக்கடி என் சகோதர சகோதரிகளின் பணியை...

சாலையில் ஒரு முட்கரண்டி

நான் கிராமப்புறத்துல பிறந்து ஏழ்மையான குடும்பத்துல வளர்ந்தேன். என்னோட பெற்றோர் பாமர விவசாயிகளா இருந்தாங்க, அவங்க ரொம்ப கொடுமைய...

நேர்மையான ஒரு அறிக்கையின் பலன்

ஜாவோ மிங், சீனா ஏப்ரல் 2011 இல், நாட்டின் மற்றொரு பகுதியில் ஒரு திருச்சபையில் யாவோ லான் என்ற தலைவரின் இடத்தை எடுக்க வேண்டியிருந்தது....