ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்

பெரும்பாலான ஜனங்கள் தங்கள் எதிர்கால இலக்கிற்காக அல்லது தற்காலிக இன்பத்திற்காக தேவனை விசுவாசிக்கிறார்கள். எந்தவொரு கையாளுதலுக்கும் உட்படுத்தப்படாதவர்கள் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் தேவனை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவதற்காகவோ அல்லது தேவனுடைய சிருஷ்டியாகத் தங்கள் கடமையைச் செய்வதற்காகவோ அவர்கள் தேவனை விசுவாசிப்பதில்லை. அதாவது, பெரும்பாலான ஜனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காகவோ தேவனை விசுவாசிப்பதில்லை. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்காக ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதுமில்லை அல்லது மனிதன் உயிருடன் இருப்பதால், அவன் தேவனை நேசிக்க வேண்டும் என்று விசுவாசிப்பவர்களும் இல்லை. ஏனென்றால் அவ்வாறு செய்யப்படுவதற்காக அது பரலோகத்தால் நியமிக்கப்பட்டு பூமியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது மனிதனின் இயல்பான தொழில். இவ்வாறு, வெவ்வேறு மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்தக் குறிக்கோள்களைப் பின்தொடர்ந்தாலும், அவர்களுடைய பின்தொடர்தலின் நோக்கம் மற்றும் அதன் பின்னால் உள்ள உந்துதல் அனைத்தும் ஒரே மாதிரியானவையாகும். மேலும் என்னவென்றால், அவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களுடைய வழிபாட்டின் நோக்கங்கள் ஒரே மாதிரியானவை ஆகும். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில், பல விசுவாசிகள் இறந்துவிட்டார்கள். பலர் இறந்து மீண்டும் பிறந்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு மனிதர்கள் அல்லது ஓராயிரம் அல்லது ஈராயிரம் மனிதர்கள் தேவனைத் தேடுவது மட்டுமின்றி, பெரும்பாலானோர் தங்கள் சொந்த வாய்ப்புகளுக்காகவோ எதிர்காலத்திற்கான அவர்களுடைய மகிமையான நம்பிக்கைகளுக்காகவோ தேவனைப் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவின் மீது பக்தியுள்ளவர்கள் மிகக் குறைவானவர்கள். இன்னும் பல பக்தியுள்ள விசுவாசிகள் தங்கள் வலைகளிலேயே சிக்கி இறந்திருக்கின்றனர். மேலும், ஜெயம்பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இன்றுவரை, ஜனங்களுக்கு அவர்கள் தோல்வியடைவதற்கான காரணங்கள் அல்லது அவர்களுடைய ஜெயத்தின் ரகசியங்கள் இன்னும் தெரியவில்லை. கிறிஸ்துவைத் தேடுவதில் வெறித்தனமானவர்களுக்கு இன்னும் திடீர் நுண்ணறிவைப் பெறும் கணம் வரவில்லை. அவர்கள் இந்த இரகசியங்களின் அடிப்புறத்திற்கு இன்னும் வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை. அவர்கள் தங்கள் பின்தொடர்தல் கடினமான முயற்சிகளை மேற்கொண்டாலும், அவர்கள் நடந்து செல்லும் பாதையானது அவர்கள் முன்னோர்கள் முன்பு நடந்து சென்ற தோல்வியின் பாதையாகவே இருக்கிறது. அது ஜெயத்தின் பாதை அல்ல. இவ்வாறு, அவர்கள் எப்படித் தேடுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் இருளுக்கு வழிவகுக்கும் பாதையில் நடக்கிறார்கள் அல்லவா? அவர்கள் பெறுவது கசப்பான பழமல்லவா? கடந்த காலங்களில் ஜெயம் பெற்றவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் இறுதியில் செல்வத்தைப் பெறுவார்களா அல்லது பேரழிவுக்கு வருவார்களா என்று கணிப்பது கடினமாகும். அப்படியானால், தோல்வியுற்றவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலம் தேடும் ஜனங்களின் சிக்கல்கள் எவ்வளவு மோசமானதாக இருக்கும்? தோல்வி அடைவதற்கான இன்னும் பெரிய வாய்ப்பில் அவர்கள் நிற்கவில்லையா? அவர்கள் நடந்து செல்லும் பாதைக்கான மதிப்பு என்னவாக இருக்கிறது? அவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லையா? சுருக்கமாகச் சொல்வதானால், ஜனங்கள் தங்கள் முயற்சியில் ஜெயம் பெறுகிறார்களா அல்லது தோல்வியடைகிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் விருப்பம் போல தேடுவதன் மூலம் அவர்களுடைய ஜெயம் அல்லது தோல்வி தீர்மானிக்கப்படுவதில்லை.

தேவன் மீதான மனிதனின் விசுவாசத்தின் மிக அடிப்படையான தேவை என்னவென்றால், அவனுக்கு ஒரு நேர்மையான இருதயம் இருக்க வேண்டும், அவன் தன்னையே முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் மற்றும் உண்மையிலேயே கீழ்ப்படிய வேண்டும். மனிதனுக்குக் கடினமான விஷயம் என்னவென்றால், அவன் முழு சத்தியத்தைப் பெறவும் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றவும் வைக்கக்கூடிய உண்மையான விசுவாசத்திற்கு ஈடாக தனது முழு வாழ்வையும் வழங்குவதாகும். தோல்வியுற்றவர்களுக்கு இது அடைய முடியாதது ஆகும். கிறிஸ்துவைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் அதை அடைவது இன்னும் கடினமானதாகும். மனிதன் தன்னை முழுமையாக தேவனுக்காக அர்ப்பணிப்பதில் சரியாக இல்லை என்பதாலும், மனிதன் சிருஷ்டிகருக்குத் தன் கடமையைச் செய்யத் தயாராக இல்லை என்பதாலும், மனிதன் சத்தியத்தைக் கண்டுகொண்டாலும், அதைத் தவிர்த்து, தன் சொந்தப் பாதையில் நடப்பதாலும், மனிதன் எப்பொழுதும் தோல்வியுற்றவர்களின் வழியைப் பின்பற்றுவதையே முயற்சிப்பதாலும், மனிதன் எப்போதும் பரலோகத்தை எதிர்ப்பதாலும், மனிதன் எப்பொழுதும் தோல்வியடைகிறான், எப்போதும் சாத்தானின் தந்திரத்துக்குள் விழுகிறான் மற்றும் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்கிறான். மனிதன் கிறிஸ்துவை அறியாததாலும், மனிதன் சத்தியத்தைப் புரிந்துகொள்வதிலும் அனுபவிப்பதிலும் திறமையானவன் அல்ல என்பதாலும், மனிதன் பவுலை அதிகமாக ஆராதிக்கிறான் மற்றும் பரலோகத்தை மிகவும் விரும்புகிறான் என்பதாலும், கிறிஸ்து அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் தேவனுக்கே கட்டளையிட வேண்டும் என்றும் மனிதன் எப்போதும் வலியுறுத்துவதாலும், அந்த பெரிய மனிதர்கள் மற்றும் உலகத்தின் வித்தியாசங்களை அனுபவித்தவர்கள் இன்னும் மரணத்திற்குட்பட்டிருக்கிறார்கள் மற்றும் தேவனுடைய தண்டனையின் மத்தியில் மரிக்கின்றனர். அத்தகையவர்களைப் பற்றி நான் சொல்லக்கூடியது என்னவென்றால், அவர்கள் ஒரு துன்பகரமான மரணத்தை அடைகிறார்கள். அவர்களுக்கான விளைவான அவர்களுடைய மரணமானது நியாயப்படுத்தப்படாமல் இல்லை. இன்னும் அவர்களுடைய தோல்வியானது பரலோகப் பிரமாணத்தால் இன்னும் சகிக்க முடியாதது அல்லவா? சத்தியமானது மனிதனின் உலகத்திலிருந்து வருகிறது, ஆனாலும் மனிதர்களிடையே உள்ள சத்தியம் கிறிஸ்துவால் அனுப்பப்படுகிறது. இது கிறிஸ்துவினிடமிருந்து உருவாகிறது, அதாவது தேவனிடமிருந்தே உருவாகிறது. இது மனிதனால் இயலக்கூடிய ஒன்று அல்ல. ஆனாலும் கிறிஸ்து சத்தியத்தை மட்டுமே தருகிறார்; சத்தியத்தைத் தேடுவதில் மனிதன் வெற்றி பெறுவானா என்பதை தீர்மானிக்க அவர் வரவில்லை. ஆகவே, சத்தியத்தில் வெற்றி அல்லது தோல்வி அனைத்தும் மனிதனின் பின்தொடர்தலைப் பொறுத்தது என்பதை இது பின்பற்றுகிறது. சத்தியத்தில் மனிதன் பெறும் ஜெயம் அல்லது தோல்வியானது ஒருபோதும் கிறிஸ்துவுடன் எந்த தொடர்பும் கொண்டிருப்பதில்லை, மாறாக அது அவனுடைய பின்பற்றுதலினால் தீர்மானிக்கப்படுகிறது. மனிதனின் இலக்கு மற்றும் அவனது ஜெயம் அல்லது தோல்வி ஆகியவற்றை தேவனே தாங்கும்படியாக இருக்கிறார் என்பதாக அவற்றை அவருடைய பொறுப்பில் வைக்க முடியாது. ஏனென்றால், தேவனுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனால் தேவனுடைய சிருஷ்டிகள் செய்ய வேண்டிய கடமையுடன் அதற்கு நேரடியாகத் தொடர்பு இருக்கிறது. பவுல் மற்றும் பேதுருவின் நாட்டம் மற்றும் இலக்கு பற்றி பெரும்பாலானவர்களுக்கு கொஞ்சம் அறிவு இருக்கிறது. ஆனாலும் பேதுரு மற்றும் பவுல் பெற்ற பலன்களைத் தவிர வேறு எதுவும் ஜனங்களுக்குத் தெரியாது. பேதுருவின் ஜெயத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் அல்லது பவுலின் தோல்விக்கு வழிவகுத்த குறைபாடுகள் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. இந்நிலையில், அவர்களுடைய பின்பற்றுதலின் சாராம்சத்தை நீங்கள் முழுமையாகப் பார்க்க இயலாது என்றால், உங்களில் பெரும்பாலானோரின் பின்பற்றுதல் இன்னும் தோல்வியடையும். உங்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் ஜெயத்துடன் இருந்தாலும், அவர்கள் பேதுருவுக்குச் சமமாக இருக்க மாட்டார்கள். உன் பின்பற்றுதலின் பாதை சரியானது என்றால், உனக்கு ஜெயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சத்தியத்தைத் தேடுவதில் நீ செல்லும் பாதை தவறானது என்றால், நீ என்றென்றும் ஜெயம்பெற இயலாமல் இருப்பாய். பவுலின் அதே முடிவை நீயும் சந்திப்பாய்.

பேதுரு ஒரு பரிபூரணப்படுத்தப்பட்ட மனிதனாக இருந்தான். சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த பின்னரே, தேவன் மீதான தூய அன்பைப் பெற்று, அவன் முழுமையாக பரிபூரணப்படுத்தப்பட்டான். அவன் நடந்த பாதை பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையாக இருந்தது. அதாவது, தொடக்கத்திலிருந்தே, பேதுரு நடந்துவந்த பாதை சரியானதாக இருந்தது. தேவனை விசுவாசிப்பதற்கான அவனது உந்துதல் சரியானதாக இருந்தது, எனவே அவன் பரிபூரணமாக்கப்பட்ட ஒருவனாக மாறினான் மற்றும் மனிதன் இதற்கு முன்பு நடந்திராத ஒரு புதிய பாதையில் அவன் நடந்தான். ஆயினும், தொடக்கத்திலிருந்தே பவுல் நடந்துவந்த பாதை கிறிஸ்துவுக்கு எதிரானப் பாதையாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் தான் பவுலைப் பயன்படுத்த விரும்பினார். தம்முடைய கிரியைகளுக்காக பவுலுடைய வரங்களையும், எல்லா தாலந்துகளையும் பயன்படுத்திக் கொள்ள அவன் விரும்பியதாலேயே, கிறிஸ்துவுக்காக பல தசாப்தங்களாக பவுல் கிரியை செய்தான். அவன் வெறுமனே பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். இயேசு அவனுடைய மனிதத்தன்மையைப் பார்த்ததனால் அவன் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அவனுடைய வரங்களின் நிமித்தமாகப் பயன்படுத்தப்பட்டான். பவுல் தாக்கப்பட்டதால் அவனால் இயேசுவுக்காக கிரியை செய்ய முடிந்தது. அவ்வாறு செய்வதில் தமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று அவன் அவ்வாறு செய்யவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய அறிவொளி மற்றும் வழிகாட்டுதலின் காரணமாக அவனால் அத்தகைய கிரியையைச் செய்ய முடிந்தது. அவன் செய்த கிரியையானது எந்த வகையிலும் அவனது நாட்டத்தையோ அல்லது அவனது மனிதத்தன்மையையோ குறிக்கவில்லை. பவுலின் கிரியை ஒரு ஊழியரின் கிரியையைக் குறிக்கிறது. அதாவது அவன் ஒரு அப்போஸ்தலனின் கிரியையைச் செய்தான். பேதுருவோ வேறுபட்டவன்: அவனும் சில கிரியைகளைச் செய்தான். இது பவுலின் கிரியையைப் போல பெரியதல்ல. ஆனால் தனது சொந்த பிரவேசத்தைப் பின்பற்றும்போது அவன் கிரியை செய்தான். அவனுடைய கிரியை பவுலின் கிரியையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்வதே பேதுருவின் கிரியையாக இருந்தது. அவன் ஒரு அப்போஸ்தலனின் பாத்திரத்தில் கிரியை செய்யவில்லை, ஆனால் தேவன் மீதான அன்பைப் பின்பற்றி கிரியை செய்தான். பவுலின் கிரியையின் போக்கில் அவனது தனிப்பட்ட பின்தொடர்தலும் இருந்தது: அவனுடைய பின்தொடர்தலானது எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் மற்றும் ஒரு நல்ல இலக்குக்கான அவனது விருப்பத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அவன் தனது கிரியையின் போது சுத்திகரிப்பையும் ஏற்கவில்லை, கத்தரித்து கிளைநறுக்கப்படுவதையும் கையாளப்படுவதையும் ஏற்கவில்லை. அவன் செய்த கிரியை எவ்வளவாக தேவனுடைய விருப்பத்தை பூர்த்திசெய்யும் வரை, அவன் செய்ததெல்லாம் தேவனுக்குப் பிரியமாக இருக்கும் வரை, ஒரு வெகுமதி இறுதியில் அவனுக்குக் காத்திருக்கும் என்று அவன் நம்பினான். அவனது கிரியையில் தனிப்பட்ட அனுபவங்கள் எதுவும் இல்லை—அது அனைத்தும் அதன் சொந்த நலனுக்கானவை மற்றும் மாற்றத்தைத் தேடும் பயணத்தில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. அவனது கிரியையில் உள்ள அனைத்தும் ஒரு பரிவர்த்தனையாக இருந்தது. அதில் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமை அல்லது கீழ்ப்படிதல் எதுவும் இல்லை. பவுலின் கிரியையின் போது, அவனது பழைய மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவனது கிரியை வெறுமனே மற்றவர்களுக்குச் சேவை செய்வதாக இருந்தது மற்றும் அவனது மனநிலையில் ஏதும் மாற்றங்களைக் கொண்டு வர முடியாமல் இருந்தது. பவுல் பரிபூரணமாக்கப்படாமல் அல்லது கையாளப்படாமல் நேரடியாக தனது கிரியையைச் செய்தான். அவன் வெகுமதியால் தூண்டப்பட்டான். பேதுரு வித்தியாசமானவனாக இருந்தான்: அவன் கிளைநறுக்கப்படுதல் மற்றும் கையாளுதலுக்கு உட்பட்டவன் மற்றும் சுத்திகரித்தலுக்கு உட்பட்டவன். பேதுருவின் கிரியையின் நோக்கமும் உந்துதலும் அடிப்படையில் பவுலின் நோக்கங்களுக்கு வேறுபட்டவையாக இருந்தன. பேதுரு பெரிய அளவிலான கிரியையைச் செய்யவில்லை என்றாலும், அவனுடைய மனநிலை பல மாற்றங்களைச் சந்தித்தது. அவன் தேடியது சத்தியமும், உண்மையான மாற்றமும் ஆகும். அவனது கிரியை அந்தக் கிரியைக்காக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. பவுல் அதிகக் கிரியை செய்த போதிலும், அது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாக இருந்தது. இந்தக் கிரியையில் பவுல் ஒத்துழைத்த போதிலும், அவன் அதை அனுபவிக்கவில்லை. பேதுரு மிகக் குறைவான கிரியையைச் செய்தான். ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் அவன் மூலமாக அவ்வளவாக கிரியையைச் செய்யவில்லை. அவர்களுடைய கிரியையின் அளவு அவர்கள் பரிபூரணமாக்கப்பட்டிருந்தார்களா என்பதைத் தீர்மானிக்கவில்லை. ஒருவருடைய பின்பற்றுதல் வெகுமதிகளைப் பெறுவதற்கானதும், மற்றவர்களுடையது தேவனுடைய ஒரு நிறைவான அன்பை அடைவதற்கானதும், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றுவதும், தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான ரூபத்தில் ஜீவிப்பதும் ஆகும். வெளிப்புறமாக அவை வேறுபட்டவை மற்றும் அவற்றின் சாராம்சங்களும் வேறுபட்டவையாக இருந்தன. அவர்கள் எவ்வளவு கிரியை செய்தார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களில் யார் பரிபூரணமாக்கப்பட்டார்கள் என்று உன்னால் தீர்மானிக்க முடியாது. தேவனை நேசிப்பவருடைய சாயலில் வாழ்பவனாகவும், தேவனுக்குக் கீழ்ப்படிந்த ஒருவனாகவும், கையாளுதலையும் கிளைநறுக்கப்படுதலையும் ஏற்றுக்கொண்ட ஒருவனாகவும், தேவனுடைய சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றிய ஒருவனாகவும் இருக்க பேதுரு முயன்றான். அவனால் தன்னை தேவனுக்காக அர்ப்பணிக்கவும், தன்னை முழுவதுமாக தேவனுடைய கைகளில் வைக்கவும், மரிக்கும் வரை அவருக்குக் கீழ்ப்படியவும் முடிந்தது. அதைத்தான் அவன் செய்யத் தீர்மானித்தான் மற்றும், அதைத்தான் அவன் நிறைவேற்றினான். கடைசியாக அவனுடைய முடிவு பவுலின் முடிவுக்கு வேறுபட்டதற்கு இதுவே அடிப்படை காரணம். பேதுருவில் பரிசுத்த ஆவியானவர் செய்த கிரியை அவனை பரிபூரணப்படுத்துவதற்காகும். பரிசுத்த ஆவியானவர் பவுலில் செய்த கிரியை அவனைப் பயன்படுத்துவதற்காகும். ஏனென்றால், அவர்களுடைய சுபாவங்களும், பின்பற்றுவதற்கான அவர்களுடைய பார்வைகளும் ஒரே மாதிரியாக இல்லை. இருவரிடமும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை இருந்தது. பேதுரு இந்தக் கிரியையை தன்னிலே அப்பியாசப்படுத்திக் கொண்டான், மற்றவர்களுக்கும் அதை வழங்கினான். இதற்கிடையில், பவுல் பரிசுத்த ஆவியானவருடைய முழு கிரியையையும் மற்றவர்களுக்கு மட்டுமே வழங்கினான், அதிலிருந்து எதையும் தனக்கெனப் பெறவில்லை. இவ்வாறு, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் பல ஆண்டுகளாக அனுபவித்தபின், பவுலில் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லாதவைகளுக்கு நெருக்கமாக இருந்தன. அவன் இன்னும் இயல்பான நிலையில் இருந்தான். அவன் இன்னும் முந்தைய பவுலாகவே இருந்தான். பல வருட கிரியையின் கஷ்டங்களைத் தாங்கியப் பின்னர், அவன் “கிரியை” செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டான். அவன் சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொண்டான். ஆனால் அவனது பழைய சுபாவமான அவனது கடுமையான போட்டி மற்றும் கூலிப்படையின் சுபாவம் அவனுடன் இன்னமும் இருந்தது. பல வருடங்கள் கிரியை செய்த பின்னும், அவன் தனது சீர்கேடான மனநிலையை அறிந்திருக்கவில்லை அல்லது தனது பழைய மனநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அது அவனுடைய கிரியையில் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அவனிடம் இன்னும் அதிகமான கிரியை அனுபவம் இருந்தது. ஆனால் இதுபோன்ற சிறிய அனுபவம் மட்டுமே அவனை மாற்ற இயலாமல் மற்றும் இருப்பு அல்லது அவனது நோக்கத்தின் முக்கியத்துவம் குறித்த அவனது கருத்துக்களை மாற்ற முடியாமல் இருந்தது. அவன் கிறிஸ்துவுக்காக பல ஆண்டுகள் கிரியை செய்தாலும், கர்த்தராகிய இயேசுவை மீண்டும் ஒருபோதும் துன்புறுத்தவில்லை என்றாலும், அவனுடைய இருதயத்தில் தேவனைப் பற்றிய அறிவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதன் பொருள் என்னவென்றால், அவன் தன்னை தேவனுக்காக அர்ப்பணிப்பதற்காகக் கிரியை செய்யவில்லை, மாறாக அவன் தனது எதிர்கால இலக்குக்காக கிரியை செய்ய நிர்பந்திக்கப்பட்டான். தொடக்கத்தில், அவன் கிறிஸ்துவைத் துன்புறுத்தினான், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவில்லை. அவன் இயல்பாகவே கிறிஸ்துவை எதிர்த்த ஒரு கலகக்காரனாகவும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பற்றி அறியாத ஒருவனாகவும் இருந்தான். அவனுடைய கிரியை ஏறக்குறைய முடிந்ததும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் அறிந்திருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய சித்தத்திற்கு சிறிதளவேனும் கவனம் செலுத்தாமல், தனது சொந்த குணாதிசயத்திற்கு ஏற்ப தனது சொந்த விருப்பப்படியே செயல்பட்டான். எனவே அவனுடைய சுபாவம் கிறிஸ்துவுக்கு விரோதமாக இருந்தது. அவன் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. இது போன்ற ஒருவன், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையால் கைவிடப்பட்டவன், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அறியாதவன், கிறிஸ்துவை எதிர்த்தவன்—அத்தகைய மனிதன் எவ்வாறு இரட்சிக்கப்படுவான்? மனிதனை இரட்சிக்க முடியுமா இல்லையா என்பது அவன் எவ்வளவு கிரியை செய்கிறான், எவ்வளவு அர்ப்பணிக்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல, மாறாக, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் அறிந்திருக்கிறானா இல்லையா, அவனால் சத்தியத்தைக் கடைபிடிக்க முடியுமா இல்லையா மற்றும் பின்பற்றுவதைப் பற்றிய அவனது கருத்துக்கள் சத்தியத்துடன் ஒத்துப்போகின்றனவா இல்லையா என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

பேதுரு இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியபின் இயற்கையான வெளிப்பாடுகள் நிகழ்ந்தாலும், இயற்கையாகவே, அவன் தொடக்கத்திலிருந்தே பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து கிறிஸ்துவைத் தேட விரும்பிய ஒருவன் ஆவான். பரிசுத்த ஆவியானவருக்கு அவன் கீழ்ப்படிந்தது தூய்மையானதாகும்: அவன் புகழ்ச்சியையும் செல்வத்தையும் தேடவில்லை, மாறாக, சத்தியத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம் உந்துதல் பெற்றான். கிறிஸ்துவை அறிந்திருக்கிறதைப் பேதுரு மூன்று தடவை மறுதலித்த போதிலும், கர்த்தராகிய இயேசுவை அவன் சோதித்த போதிலும், அத்தகைய சிறிய மனித பலவீனம் அவனுடைய சுபாவத்துடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், அது அவனுடைய எதிர்கால நோக்கத்தைப் பாதிக்கவில்லை மற்றும் அவனுடைய சோதனை ஒரு அந்திக்கிறிஸ்துவின் செயல் என்பதை இது நிரூபிக்க முடியாது. சாதாரண மனித பலவீனம் என்பது உலகில் உள்ள அனைவராலும் பகிரப்பட்ட ஒன்று—பேதுரு வேறுபட்டவனாக இருக்கிறான் என்று நீ கருதுகிறாயா? பேதுரு பல முட்டாள்தனமான தவறுகளைச் செய்ததால் அவனைப் பற்றி ஜனங்கள் சில கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லையா? பவுல் செய்த எல்லா கிரியைகள், அவன் எழுதிய எல்லா நிருபங்கள் நிமித்தமாக ஜனங்கள் அவனை ஆராதிக்கிறார்களா? மனிதனின் சாராம்சத்தை மனிதன் எவ்வாறு பார்க்க முடியும்? உண்மையிலேயே உணர்வுள்ளவர்கள் அத்தகைய அற்பமான ஒன்றைக் காண முடியுமா? பேதுருவின் பல வருட வேதனையான அனுபவங்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், பேதுருவுக்கு உண்மையான அனுபவங்கள் இல்லை அல்லது பேதுரு பரிபூரணமாக்கப்படவில்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. தேவனுடைய கிரியையை மனிதனால் எவ்வாறு முழுமையாக புரிந்துகொள்ள முடியும்? வேதாகமத்தில் உள்ள பதிவுகள் இயேசுவால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் பிற்கால தலைமுறையினரால் தொகுக்கப்பட்டன. அப்படியானால், வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டவை அனைத்தும் மனிதனின் கருத்துக்களுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்லவா? மேலும், பேதுரு மற்றும் பவுலின் முடிவுகள் நிருபங்களில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. ஆகவே, மனிதன் பேதுருவையும் பவுலையும் தன் சொந்தக் கருத்துக்களின்படி, அவனது விருப்பங்களின்படி நியாயந்தீர்க்கிறான். பவுல் அநேக கிரியைகளைச் செய்ததால், அவனுடைய “பங்களிப்புகள்” மிகப் பெரியவை என்பதால், அவன் ஜனங்களின் நம்பிக்கையை வென்றான். மனிதன் மேலோட்டமான கருத்துக்களில் மட்டும் கவனம் செலுத்துகிறானல்லவா? மனிதனின் சாராம்சத்தை மனிதனால் எவ்வாறு பார்க்க முடியும்? பவுல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆராதனைக்குரிய ஒரு பொருளாக இருப்பதால், அவனுடைய கிரியையை கடுமையாக மறுக்க யார் துணிவார்கள்? பேதுரு ஒரு மீனவன். இந்நிலையில் அவனுடைய பங்களிப்பு எவ்வாறு பவுலின் பங்களிப்பைப் போல இருக்கும்? அவர்கள் செய்த பங்களிப்புகளைப் பொறுத்தவரையில், பேதுருவுக்கு முன்பதாகவே பவுலுக்கு வெகுமதி கிடைத்திருக்க வேண்டும். தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற மிகவும் தகுதி பெற்றவனாக அவன் இருந்திருக்க வேண்டும். பவுலைக் கையாளுகையில், தேவன் பவுலுடைய தாலந்துகளின் மூலம் அவனை கிரியை செய்ய மட்டுமே செய்தார், அதேசமயம் தேவன் பேதுருவைப் பரிபூரணமாக்கினார் என்பதை யார் கற்பனை செய்திருக்க முடியும். கர்த்தராகிய இயேசு தொடக்கத்திலிருந்தே பேதுருவுக்கும் பவுலுக்கும் திட்டங்களை வகுத்திருந்தார் என்பது எந்த வகையிலும் இல்லை: மாறாக, அவர்கள் பரிபூரணமாக்கப்பட்டார்களா அல்லது அவர்களுடைய உள்ளார்ந்த சுபாவங்களுக்கு ஏற்ப கிரியை செய்ய வைக்கப்பட்டார்களா என்பதைப் பார்க்க வேண்டும். எனவே, ஜனங்கள் பார்ப்பது மனிதனின் வெளிப்புற பங்களிப்புகள் மட்டுமே. அதேசமயம் தேவன் பார்ப்பது மனிதனின் சாராம்சம், மனிதன் தொடக்கத்தில் இருந்தே பின்பற்றும் பாதை மற்றும் மனிதனின் நோக்கத்திற்குப் பின்னால் உள்ள உந்துதல் ஆகியனவாகும். ஜனங்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களின்படி, ஒரு மனிதனை தங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப அளவிடுகிறார்கள். ஒரு மனிதனின் இறுதி முடிவு அவனது வெளிப்புறங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதில்லை. ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நீ எடுக்கும் பாதை ஜெயத்தின் பாதையாகவும், நாட்டத்தை நோக்கிய உன் பார்வை தொடக்கத்திலிருந்தே சரியானதாகவும் இருந்தால், நீ பேதுருவைப் போன்ற ஒருவன் என்று நான் சொல்கிறேன். நீ நடக்கும் பாதை தோல்வியின் பாதை என்றால், நீ எவ்வளவு விலை கொடுத்தாலும், உன் முடிவு பவுலின் பாதையைப் போலவே இருக்கும். எது எப்படியிருந்தாலும், உன் இலக்கு மற்றும் உன் ஜெயம் அல்லது தோல்வியானது உன் பக்தியையோ அல்லது நீ செலுத்தும் விலைக்கிரயத்தையோ காட்டிலும், நீ தேடும் பாதை சரியாக இருக்கிறதா இல்லையா என்பதால் தீர்மானிக்கப்படுகின்றன. பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்கள் மற்றும் அவர்கள் பின்பற்றிய குறிக்கோள்கள் வேறுபட்டவையாகும். மனிதனால் இவற்றைக் கண்டுபிடிக்க இயலாது. அவற்றை தேவனால் மட்டுமே முழுமையாக அறிய முடியும். தேவன் பார்ப்பது மனிதனின் சாராம்சமாகும், அதேசமயம் மனிதனுக்கு அவனது சொந்த சாராம்சத்தைப் பற்றி எதுவும் தெரியாது. மனிதனுக்குள் இருக்கும் சாராம்சத்தை அல்லது அவனது உண்மையான வளர்ச்சியைக் காண மனிதனால் இயலாது. இதனால் பவுல் மற்றும் பேதுருவின் தோல்வி மற்றும் ஜெயத்துக்கான காரணங்களை அடையாளம் காண இயலாது. பெரும்பாலான ஜனங்கள் பேதுருவையல்லாமல் பவுலை ஆராதிப்பதற்கான காரணம், பவுல் பொது கிரியைக்குப் பயன்படுத்தப்பட்டான் மற்றும் மனிதனால் இந்தக் கிரியையை உணர முடிகிறது, எனவே ஜனங்கள் பவுலின் “சாதனைகளை” ஒப்புக்கொள்கிறார்கள். இதற்கிடையில், பேதுருவின் அனுபவங்கள் மனிதனுடைய கண்ணுக்குத் தெரியாதவையாகும். அவன் தேடியது மனிதனால் அடைய முடியாதது ஆகும். எனவே மனிதனுக்கு பேதுருவின் மீது அக்கறை இல்லாமற்போகிறது.

கையாளுதல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை அனுபவிப்பதன் மூலம் பேதுரு பரிபூரணமாக்கப்பட்டான். அவன், “நான் எப்போதுமே தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நான் செய்யும் எல்லாவற்றிலும் நான் தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய மட்டுமே முயல்கிறேன். நான் சிட்சிக்கப்பட்டாலும், நியாயந்தீர்க்கப்பட்டாலும், அவ்வாறு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினான். பேதுரு தனக்குரிய அனைத்தையும் தேவனுக்குக் கொடுத்தான், அவனுடைய கிரியை, வார்த்தைகள் மற்றும் முழு ஜீவிதத்தையும் தேவனை நேசிப்பதற்காகவே கொடுத்தான். அவன் பரிசுத்தத்தைத் தேடிய ஒருவன். அவன் எவ்வளவு அதிகமாக அனுபவித்தானோ, அவனுடைய இருதயத்திற்குள் தேவன் மீதுள்ள அன்பு அவ்வளவு அதிகமாக இருந்தது. இதற்கிடையில், பவுல் வெளிப்புறக் கிரியைகளை மட்டுமே செய்தான். அவன் கடினமாக உழைத்தாலும், அவனுடைய உழைப்பு அவனது கிரியையைச் சரியாகச் செய்வதற்கும், அதனால் வெகுமதியைப் பெறுவதற்கும் உரியதாகும். தனக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது என்று தெரிந்திருந்தால், அவன் தனது கிரியையை கைவிட்டிருப்பான். பேதுரு அக்கறை காட்டியது அவனுடைய இருதயத்திற்குள் இருக்கும் உண்மையான அன்பாகும். அது நடைமுறைக்குரியது மற்றும் அடையக்கூடியது ஆகும். அவன் ஒரு வெகுமதியைப் பெறுவானா என்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் அவனது மனநிலையை மாற்ற முடியுமா என்பது பற்றி கவலைப்பட்டான். பவுல் எப்போதும் கடினமாக உழைப்பதைப் பற்றி அக்கறை காட்டினான். வெளிப்புறக் கிரியை மற்றும் பக்தி பற்றியும், சாதாரண ஜனங்கள் அனுபவிக்காதக் கோட்பாடுகளைப் பற்றியும் அக்கறை காட்டினான். தனக்குள்ளான ஆழமான மாற்றங்கள் மீதோ அல்லது தேவன் மீதான உண்மையான அன்பின் மீதோ அவன் அக்கறைகொள்ளவில்லை. உண்மையான அன்பையும் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவதற்காகவே பேதுருவின் அனுபவங்கள் இருந்தன. அவனுடைய அனுபவங்கள் தேவனோடு நெருங்கிய உறவைப் பெறுவதற்கும், நடைமுறையில் ஜீவிப்பதற்கும் உரியதாகும். பவுலின் கிரியையானது இயேசுவால் அவனிடம் ஒப்படைக்கப்பட்டதாலும், அவன் ஏங்கியவற்றைப் பெறுவதற்காகவும் அதைச் செய்தான். ஆனால் தன்னைப் பற்றியும் தேவனைப் பற்றியும் அவன் அறிந்த அறிவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவனது கிரியை சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கானதாகும். பேதுரு தேடியது தூய அன்பு மற்றும் பவுல் தேடியது நீதியின் கிரீடம் ஆகும். பேதுரு பரிசுத்த ஆவியானவருடைய பல வருட கிரியைகளை அனுபவித்தான். கிறிஸ்துவைப் பற்றிய நடைமுறை அறிவையும், தன்னைப் பற்றிய ஆழமான அறிவையும் கொண்டிருந்தான். எனவே, தேவன் மீதான அவனது அன்பு தூய்மையானது. பல வருட சுத்திகரிப்பு இயேசுவையும் ஜீவனையும் பற்றிய அவனது அறிவை உயர்த்தியிருந்தது. அவனுடைய அன்பு நிபந்தனையற்ற அன்பு. அது ஒரு தன்னிச்சையான அன்பு. அதற்குப் பதிலாக அவன் எதுவும் கேட்கவில்லை. அவன் எந்த நன்மைகளையும் எதிர்பார்க்கவில்லை. பவுல் பல ஆண்டுகளாக கிரியை செய்தான், ஆனாலும் அவன் கிறிஸ்துவைப் பற்றிய அதிக அறிவைக் கொண்டிருக்கவில்லை, தன்னைப்பற்றிய அறிவும் பரிதாபகரமாக குறைவானதாகவே இருந்தது. வெறுமனே கிறிஸ்துவின் மீது அவனுக்கு அன்பு இல்லை. அவனுடைய கிரியையும், அவன் ஓடிய ஓட்டமும் இறுதி விருதைப் பெறுவதற்கானவையே. அவன் தேடியது மிகச்சிறந்த கிரீடம், தூய்மையான அன்பு அல்ல. அவன் சுறுசுறுப்பாக தேடவில்லை, ஆனால் செயலற்ற முறையில் தேடினான். அவன் தனது கடமையைச் செய்யவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் அவரைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே, அவன் தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டி என்பதை அவனது நாட்டம் நிரூபிக்கவில்லை. தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டியாக இருந்த பேதுரு தான் தன்னுடைய கடமையைச் செய்தான். தேவனுக்கு பங்களிப்பு செய்பவர்கள் அனைவருக்கும் வெகுமதி கிடைக்க வேண்டும் என்றும், எவ்வளவு அதிகமான பங்களிப்பு இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக தேவனுடைய தயவை அவர்கள் பெற வேண்டும் என்றும் மனிதன் கருதுகிறான். மனிதனின் பார்வையின் சாராம்சம் பரிவர்த்தனைக்குரியதாகும். அவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையைச் செய்ய தீவிரமாக முயற்சிப்பதில்லை. தேவனைப் பொறுத்தவரையில், ஜனங்கள் தேவன் மீதான உண்மையான அன்பையும் தேவனுக்கான கீழ்ப்படிதலையும் எவ்வளவு அதிகமாக நாடுகிறார்களோ, அதாவது தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்ய எவ்வளவு அதிகமாக முற்படுகிறார்களோ அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற முடிகிறது. தேவனுடைய பார்வை என்னவென்றால், மனிதன் தனது மெய்யான கடமையையும் அந்தஸ்தையும் மீட்டெடுக்க வேண்டும். மனிதன் தேவனுடைய ஒரு சிருஷ்டி. ஆகவே மனிதன் தேவனிடம் எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைத்து தன்னை மீறி நடக்கக் கூடாது மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தன் கடமையைச் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது. பவுலின் மற்றும் பேதுருவின் இலக்குகள் தேவனுடைய சிருஷ்டிகளாக தங்கள் கடமையைச் செய்ய முடியுமா என்பதைப் பொறுத்து அளவிடப்பட்டன. அவர்களின் பங்களிப்பின் அளவிற்கு ஏற்ப அளவிடப்படவில்லை. அவர்களுடைய இலக்குகள் தொடக்கத்தில் இருந்தே அவர்கள் தேடியவற்றின்படி தீர்மானிக்கப்படுகின்றன. அவர்கள் எவ்வளவு கிரியை செய்தார்கள் என்பதன் அடிப்படையிலோ அல்லது மற்றவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையிலோ தீர்மானிக்கப்படவில்லை. எனவே, தேவனுடைய சிருஷ்டியாக ஒருவரின் கடமையைத் தீவிரமாகச் செய்ய முற்படுவது ஜெயத்துக்கான பாதையாகும். தேவன் மீதான உண்மையான அன்பின் பாதையைத் தேடுவது மிகவும் சரியான பாதையாகும். ஒருவரின் பழைய மனநிலையில் மாற்றங்களைத் தேடுவது, தேவன் மீதான தூய்மையான அன்பைத் தேடுவது ஆகியவை ஜெயத்துக்கான பாதையாகும். அத்தகைய ஜெயத்துக்கான பாதை மெய்யான கடமையை மீட்டெடுப்பதற்கான பாதை மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் மெய்யான தோற்றம் ஆகும். இது மீட்புக்கான பாதை மற்றும் இது தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தேவனுடைய எல்லாக் கிரியைகளின் நோக்கமாகும். மனிதனுடைய நாட்டமானது தனிப்பட்ட ஆடம்பரக் கோரிக்கைகள் மற்றும் பகுத்தறிவற்ற ஏக்கங்கள் ஆகியவற்றால் களங்கப்பட்டால், அதனால் வரும் விளைவு மனிதனின் மனநிலையில் உள்ள மாற்றங்களாக இருக்காது. இது மீட்பின் கிரியைக்கு முரணானது. இது சந்தேகத்திற்கு இடமின்றி பரிசுத்த ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியை அல்ல. எனவே இந்த வகையான நாட்டம் தேவனால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. தேவனால் அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

பவுல் செய்த கிரியைகள் மனிதனுக்கு முன்பாகக் காட்சிக்கு வைக்கப்படுகையில், தேவன் மீது அவன் கொண்டிருந்த அன்பு எவ்வளவு தூய்மையானது மற்றும் தேவனைத் தன் இருதயத்தின் ஆழத்தில் எவ்வளவாக நேசித்தான் என்பதை மனிதனால் பார்க்க முடியாது. மனிதனால் தான் செய்த கிரியையை மட்டுமே பார்க்க முடியும். அதிலிருந்து, அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டான் என்பதை நிச்சயமாக அறிவான். ஆகவே, பவுல் பேதுருவை விடச் சிறந்தவன் என்றும், அவனுடைய கிரியை பெரிதாக இருந்தது என்றும், அவனால் தம் கிரியையைத் திருச்சபைகளுக்கு வழங்க முடிந்தது என்றும் மனிதன் நினைக்கிறான். பேதுரு தனது தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே பார்த்து, அவ்வப்போது தனது கிரியையின் போது ஒரு சிலரை ஆதாயம் செய்தான். அவனிடமிருந்து அறியப்பட்ட நிருபங்கள் கொஞ்சமாக மட்டுமே உள்ளன. ஆனால் தன் இருதயத்தில் தேவன் மீது அவன் கொண்டிருந்த அன்பு எவ்வளவு பெரியது என்று யாருக்குத் தெரியும்? பவுல் தேவனுக்காக ஒவ்வொரு நாளும் கிரியை செய்தான்: செய்ய வேண்டிய கிரியை இருக்கும் வரை, அவன் அதைச் செய்தான். இவ்வாறு தான் கிரீடத்தைப் பெற முடியும் என்றும், தேவனைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவன் உணர்ந்தான். ஆனாலும் அவன் தனது கிரியையின் மூலமாகத் தன்னை மாற்றிக் கொள்ள வழிகளைத் தேடவில்லை. பேதுருவின் ஜீவிதத்தில் தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யாத எதுவுமே அவனுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. இது தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவன் வருத்தப்பட்டிருப்பான் மற்றும் தேவனுடைய இருதயத்தைப் பூர்த்தி செய்ய அவன் முயற்சி செய்யக்கூடிய பொருத்தமான வழியைத் தேடியிருப்பான். அவனுடைய ஜீவிதத்தின் மிகச்சிறிய மற்றும் மிகவும் பொருத்தமற்ற அம்சங்களில் கூட, தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதையே அவன் தன்னிடத்தில் எதிர்பார்த்தான். அவன் தனது பழைய மனநிலையைப் பொறுத்தவரையில் அவன் எந்த குறையுமில்லாமல் இருந்தான், சத்தியத்தில் ஆழமாக முன்னேற வேண்டும் என்ற தனது தேவைகளில் எப்போதும் கடுமையாக இருந்தான். பவுல் மேலோட்டமான நற்பெயரையும் அந்தஸ்தையும் மட்டுமே நாடினான். அவன் மனிதனுக்கு முன்பாக தன்னைக் காட்ட முயன்றான் மற்றும் ஜீவிதப் பிரவேசத்தில் எந்த ஆழமான முன்னேற்றத்தையும் அடைய முயலவில்லை. அவன் அக்கறை காட்டியது உபதேசம் குறித்து மட்டுமே, யதார்த்தத்தை அல்ல. சிலர், “பவுல் தேவனுக்காக இவ்வளவு கிரியை செய்தும், அவன் ஏன் தேவனால் நினைவுகூரப்படவில்லை? பேதுரு தேவனுக்காக ஒரு சிறிய கிரியையைச் செய்தான், ஆனால் திருச்சபைகளுக்குப் பெரிய பங்களிப்பைச் செய்யவில்லை, இந்நிலையில் அவன் ஏன் பரிபூரணமாக்கப்பட்டான்?” என்று கேட்கின்றனர். பேதுரு தேவனை, தேவன் எதிர்பார்த்த ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நேசித்தான். இது போன்றவர்களுக்கு மட்டுமே சாட்சி உண்டு. பவுலின் நிலை என்னவாக இருந்தது? பவுல் தேவனை எந்த அளவுக்கு நேசித்தான்? உனக்குத் தெரியுமா? பவுலின் கிரியை எதற்காக செய்யப்பட்டது? பேதுருவின் கிரியை எதற்காக செய்யப்பட்டது? பேதுரு அதிகக் கிரியை செய்யவில்லை, ஆனால் அவனுடைய இருதயத்திற்குள் ஆழமாக இருந்தது என்னவென்று உனக்குத் தெரியுமா? பவுலின் கிரியை திருச்சபைகளுக்கு வழங்கல் மற்றும் திருச்சபைகளின் ஆதரவு ஆகியவற்றுக்கு தொடர்பானது. பேதுரு அனுபவித்தவை அவனுடைய ஜீவித மனநிலையின் மாற்றங்களாக இருந்தன. அவன் தேவனுடைய அன்பை அனுபவித்தான். அவற்றின் சாராம்சங்களில் உள்ள வேறுபாடுகளை இப்போது நீ அறிந்திருக்கிறாய். இறுதியில், யார் தேவனை உண்மையாக விசுவாசித்தார்கள், யார் தேவனை உண்மையாக விசுவாசிக்கவில்லை என்பதை நீ காணலாம். அவர்களில் ஒருவன் உண்மையிலேயே தேவனை நேசித்தான். மற்றவன் உண்மையிலேயே தேவனை நேசிக்கவில்லை. ஒருவன் தனது மனநிலையில் மாற்றங்களைச் சந்தித்தான். மற்றவன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவன் தாழ்மையுடன் கிரியை செய்தான். ஜனங்களால் எளிதில் கவனிக்கப்படவில்லை. மற்றொருவன் ஜனங்களால் ஆராதனை செய்யப்பட்டான் மற்றும் பெரிய மனிதனானான். ஒருவன் பரிசுத்தத்தை நாடினான், மற்றவன் அவ்வாறு செய்யவில்லை. அவன் தூய்மையற்றவனாக இல்லாவிட்டாலும், அவன் தூய்மையான அன்பைக் கொண்டிருக்கவில்லை. ஒருவன் உண்மையான மனிதத்தன்மையைக் கொண்டிருந்தான், மற்றொருவன் அவ்வாறு இல்லை. ஒருவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் உணர்வைக் கொண்டிருந்தான், மற்றொருவன் அவ்வாறு இல்லை. பவுல் மற்றும் பேதுருவின் சாராம்சங்களில் உள்ள வேறுபாடுகள் அத்தகையவை. பேதுரு நடந்த பாதை ஜெயத்தின் பாதையாக இருந்தது. இது இயல்பான மனிதத்தன்மையை மீட்டெடுப்பதற்கான மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை மீட்டெடுப்பதற்கான பாதையாகும். பேதுரு ஜெயங்கொள்ளுகிற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். பவுல் நடந்த பாதை தோல்வியின் பாதையாக இருந்தது மற்றும் தங்களை மேலோட்டமாக சமர்ப்பித்து அர்ப்பணிக்கும் அனைவரையும் தேவனை உண்மையாக நேசிக்காத அனைவரையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். பவுல் சத்தியத்தைக் கொண்டிராத அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். தேவன் மீதான தனது விசுவாசத்தில், பேதுரு எல்லாவற்றிலும் தேவனைத் திருப்திப்படுத்த முயன்றான் மற்றும் தேவனிடமிருந்து வந்த அனைத்திற்கும் கீழ்ப்படிய முயன்றான். சிறிதும் குறைகூறாமல், அவனால் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதே போல் சுத்திகரிப்பு, உபத்திரவம் மற்றும் அவனது ஜீவிதத்தில் எதுவும் இல்லாமல் போவது என இவை எதுவுமே தேவன் மீதான அவனது அன்பை மாற்ற முடியவில்லை. இது தேவன் மீதான நிறைவான அன்பு அல்லவா? இது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையின் நிறைவேற்றமல்லவா? சிட்சையிலோ, நியாயத்தீர்ப்பிலோ, உபத்திரவத்திலோ, நீ எப்போதுமே மரணம் வரையில் கீழ்ப்படிதலைக் காட்ட திறனுள்ளவனாய் இருக்கிறாய். இதுதான் தேவனுடைய ஒரு சிருஷ்டியால் அடையப்பட வேண்டும். இதுதான் தேவன் மீதான அன்பின் தூய்மையாகும். மனிதனால் இதை அதிகம் அடைய முடிந்தால், அவனே தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டியாக இருக்கிறான், மேலும் சிருஷ்டிகரின் விருப்பத்தை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வேறு எதுவும் இல்லை. உன்னால் தேவனுக்காகக் கிரியை செய்ய முடிகிறது, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியவில்லை, தேவனை உண்மையாக நேசிக்க இயலவில்லை என்பதாகக் கற்பனை செய்துகொள். இவ்வாறு, நீ தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நிறைவேற்றாமல் போவதோடு மட்டுமல்லாமல், நீ தேவனால் கண்டிக்கப்படுவாய். ஏனென்றால், நீ சத்தியத்தைக் கொண்டிராத, தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாத, தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒருவன். நீ தேவனுக்காகக் கிரியை செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுகிறாய். சத்தியத்தைக் கடைபிடிப்பது பற்றியோ உன்னை அறிந்து கொள்வது பற்றியோ நீ கவலைப்படுவதில்லை. நீ சிருஷ்டிகரைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. நீ சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிவதுமில்லை சிருஷ்டிகரை நேசிப்பதுமில்லை. இயல்பாகவே நீ தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒருவன், எனவே அத்தகையவர்கள் சிருஷ்டிகரால் நேசிக்கப்படுவதில்லை.

“பவுல் மிகப்பெரிய கிரியையைச் செய்தான், அவன் திருச்சபைகளுக்காக பெரும் பாரங்களைச் சுமந்து, அவற்றுக்கு மிக அதிகப் பங்களிப்புகளைச் செய்துள்ளான். பவுலின் பதின்மூன்று நிருபங்கள் கிருபையின் காலத்தின் 2,000 ஆண்டுகளை உறுதிப்படுத்தின. அவை நான்கு சுவிசேஷங்களுக்கு அடுத்தபடியாக உள்ளன. அவனுடன் யாரை ஒப்பிட முடியும்? யோவானின் வெளிப்பாட்டை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அதேசமயம் பவுலின் நிருபங்கள் ஜீவனை அளிக்கின்றன. அவன் செய்த கிரியை திருச்சபைகளுக்கு பயனளித்தது. இதுபோன்ற விஷயங்களை வேறு யார் சாதித்திருக்க முடியும்? பேதுரு என்ன கிரியை செய்தான்?” என்று சிலர் சொல்கிறார்கள். மனிதன் மற்றவர்களை அளவிடும்போது, அவர்களுடைய பங்களிப்புக்கு ஏற்ப அவ்வாறு செய்கிறான். தேவன் மனிதனை அளவிடும்போது, மனிதனின் சுபாவத்திற்கு ஏற்ப அவர் அவ்வாறு செய்கிறார். ஜீவனைத் தேடுபவர்களில், பவுல் தனது சொந்த சாராம்சத்தை அறியாத ஒருவன். அவன் எந்த வகையிலும் தாழ்மையானவனோ அல்லது கீழ்ப்படிதலுள்ளவனோ அல்ல. தேவனுக்கு எதிரான அவனது சாராம்சத்தை அவன் அறிந்திருக்கவில்லை. எனவே, அவன் விரிவான அனுபவங்களுக்கு ஆளாகாத ஒருவன். சத்தியத்தைக் கடைபிடிக்காத ஒருவன். பேதுருவோ வித்தியாசமானவன். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக அவனது குறைபாடுகள், பலவீனங்கள் மற்றும் அவனது சீர்கேடான மனநிலை ஆகியவற்றை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் தனது மனநிலையை மாற்றும் ஒரு நடைமுறைப் பாதையைக் கொண்டிருந்தான். அவன் கோட்பாட்டை மட்டுமே கொண்டிருந்து எந்த யதார்த்தமும் இல்லாதவர்களில் ஒருவனல்ல. மாறும் மனிதர்கள் இரட்சிக்கப்பட்ட புதிய மனிதர்கள். அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றத் தகுதியுள்ளவர்கள். மாறாதவர்கள் இயற்கையாகவே வழக்கற்றுப் போனவர்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள். அதாவது தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் எவ்வளவு பெரிய கிரியை செய்தாலும் அவர்கள் தேவனால் நினைவுகூரப்பட மாட்டார்கள். இதை நீ உன் சொந்த நாட்டத்துடன் ஒப்பிடும்போது, நீ இறுதியில் பேதுரு போன்ற அல்லது பவுல் போன்ற மனிதனாக இருக்கிறாயா என்பதைச் சுயமாக அறிய வேண்டும். நீ தேடுவதில் இன்னும் சத்தியம் இல்லை என்றால், இன்றும் நீ பவுலைப் போலவே திமிர்பிடித்தவனாகவும், இழிவானவனாகவும் இருந்தால், அவனைப் போலவே அகந்தையாகவும் பெருமையாகவும் இருந்தால், நீ தோல்வியுற்ற ஒரு சீர்கெட்டவன் என்பதில் சந்தேகமில்லை. நீ பேதுருவைப் போலவே தேடுவாயானால், நீ நடைமுறைகளையும் உண்மையான மாற்றங்களையும் நாடி, திமிர்பிடித்தவனாகவோ, பிடிவாதமுள்ளவனாகவோ இல்லாமல், உன் கடமையைச் செய்ய முற்பட்டால், நீ ஜெயத்தை அடையக்கூடிய தேவனுடைய ஒரு சிருஷ்டியாக இருப்பாய். தனது சொந்த சாராம்சம் அல்லது சீர்கேடு என்னவென்று பவுலுக்கு தெரியாது. அவனுடைய கீழ்ப்படியாமையை அவன் அறியாதிருந்தான். அவன் ஒருபோதும் கிறிஸ்துவை இழிவுபடுத்தியதைக் குறிப்பிடவில்லை. அதற்கான அதிக வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. அவன் ஒரு சுருக்கமான விளக்கத்தை மட்டுமே வழங்கினான் மற்றும் அவனது இருதயத்தில் ஆழமாக, அவன் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. அவன் தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் விழுந்தாலும், அவன் தனக்குள்ளே ஆழமாகப் பார்க்கவில்லை. அவன் தொடர்ந்து கிரியை செய்வதில் திருப்தி அடைந்தான். அவன் தன்னை அறிந்துகொள்வதையும் தனது பழைய மனநிலையை மாற்றுவதையும் பிரச்சனைகளில் மிக முக்கியமானதாகக் கருதவில்லை. வெறுமனே சத்தியத்தைப் பேசுவதில் திருப்தி அடைந்தான். தனது மனசாட்சிக்கு ஒரு அடிமையைப் போல மற்றவர்களுக்காகத் தன்னை வழங்கித் திருப்தி அடைந்தான் மற்றும் தன்னை ஆறுதல்படுத்தவும், கடந்த கால பாவங்களுக்காகத் தன்னை மன்னிக்கவும் இயேசுவின் சீஷர்களை இனி துன்புறுத்தாமல் இருப்பதில் திருப்தி அடைந்தான். அவன் பின்பற்றிய குறிக்கோளானது எதிர்கால கிரீடம் மற்றும் நிரந்தரமற்ற கிரியைகளைத் தவிர வேறொன்றுமில்லை. அவன் பின்பற்றிய குறிக்கோளானது ஏராளமான கிருபையாகும். அவன் போதுமான சத்தியத்தைத் தேடவில்லை. முன்பு புரிந்து கொள்ளாத சத்தியத்தில் ஆழமாக முன்னேற அவன் முயலவில்லை. ஆகவே, தன்னைப் பற்றிய அவனது அறிவு பொய்யானது என்று கூறலாம் மற்றும் அவன் சிட்சையையோ நியாயத்தீர்ப்பையோ ஏற்கவில்லை. அவனால் கிரியை செய்ய முடிந்தது என்பது அவன் தனது சொந்த சுபாவம் அல்லது சாராம்சத்தைப் பற்றிய அறிவைக் கொண்டிருந்தான் என்று அர்த்தமாகாது. அவனது கவனம் வெளிப்புற நடைமுறைகளில் மட்டுமே இருந்தது. மேலும் அவன் பாடுபட்டது, மாற்றத்துக்கானது அல்ல, அது அறிவுக்கானது. அவனுடைய கிரியையானது முற்றிலுமாக தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் இயேசு தோன்றியதன் விளைவாகும். இது அவன் முதலில் செய்யத் தீர்மானித்த ஒன்றல்ல அல்லது அவனது பழைய மனநிலையைக் கத்தரித்து சுத்தம் செய்து கொண்டபின் ஏற்பட்ட கிரியையும் அல்ல. அவன் எவ்வாறு கிரியை செய்திருந்தாலும், அவனுடைய பழைய மனநிலை மாறவில்லை. ஆகவே அவனது கிரியை அவனது கடந்தகால பாவங்களை நிவர்த்தி செய்யவில்லை. ஆனால் அவனது கிரியை அக்கால திருச்சபைகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்தது. இதுபோன்ற ஒருவனுக்கு, அவனது பழைய மனநிலை மாறவில்லை—அதாவது, இரட்சிப்பைப் பெறாத மற்றும் சத்தியம் இல்லாமல் இருந்த ஒருவனால்—கர்த்தராகிய இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக அவன் முற்றிலுமாக மாற இயலாது. அவன் இயேசு கிறிஸ்துவின் மீது அன்பும் பயபக்தியும் நிறைந்த ஒருவனும் அல்ல, சத்தியத்தைத் தேடுவதில் திறமையானவனும் அல்ல, மனுவுருவாதலின் இரகசியத்தைத் தேடிய ஒருவனும் அல்ல. அவன் போலியான வாதம் செய்வதில் திறமையானவனாக மட்டுமே இருந்தான். அவன் தன்னை விட உயர்ந்த அல்லது சத்தியம் பெற்ற எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான். தனக்கு முரணான அல்லது தன்னுடன் பகைமை கொண்ட மனிதர்கள் அல்லது உண்மைகள் மீது அவன் பொறாமை கொண்டான். ஒரு சிறந்த காட்சியை முன்வைத்து ஆழ்ந்த அறிவைக் கொண்ட திறமையான மனிதர்களையே அவன் விரும்பினான். மெய்யான வழியைத் தேடும், சத்தியத்தைத் தவிர வேறொன்றையும் கவனித்துக்கொள்ளாத ஏழை ஜனங்களுடன் பழகுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதற்குப் பதிலாக மத அமைப்புகளின் மூத்த மனிதர்களுடனும், கோட்பாடுகளை மட்டுமே பேசும், ஏராளமான அறிவைப் பெற்ற மனிதர்களுடனும் தன்னை இணைத்துக்கொண்டான். பரிசுத்த ஆவியானவருடைய புதிய கிரியையைப் பற்றி அவனுக்கு எந்த அன்பும் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய புதிய கிரியையின் செயல்பாட்டில் அக்கறைகொள்ளவில்லை. மாறாக, பொதுவான சத்தியங்களை விட உயர்ந்த அந்த விதிகளையும் உபதேசங்களையும் அவன் விரும்பினான். அவனது உள்ளார்ந்த சாராம்சத்திலும், அவன் தேடியவை முழுவதிலும், சத்தியத்தைப் பின்பற்றிய ஒரு கிறிஸ்தவன் என்றும் தேவனுடைய வீட்டில் உண்மையுள்ள ஊழியக்காரன் என்றும் அழைக்கப்படுவதற்கு அவன் தகுதியற்றவன். ஏனென்றால் அவனுடைய மாய்மாலம் அதிகமாக இருந்தது, அவனுடைய கீழ்ப்படியாமை மிகப் பெரியது. அவன் கர்த்தராகிய இயேசுவின் ஊழியக்காரனாக அறியப்பட்டாலும், பரலோகராஜ்யத்தின் வாசலில் பிரவேசிப்பதற்கு அவன் ஒருபோதும் தகுதியுடையவன் அல்ல. ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அவன் செய்த செயல்களை நீதியுள்ளவை என்று சொல்ல முடியாது. அவன் மாயத்தனமாக அநீதியைச் செய்தவனாக ஆனால் கிறிஸ்துவுக்காக கிரியை செய்தவனாக மட்டுமே பார்க்கப்படலாம். அவனைப் பிசாசு என்று அழைக்க முடியாது என்றாலும், அவனை அநீதியைச் செய்த மனிதன் என்று அழைக்கலாம். அவன் அதிகக் கிரியை செய்தான். ஆனாலும் அவன் செய்த கிரியையின் அளவு குறித்து தீர்மானிக்காமல் அதன் தரம் மற்றும் சாராம்சத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு மட்டுமே இந்த விஷயத்தின் அடிப்படையை அடைய முடியும். அவன் எப்போதும் விசுவாசித்தான்: “நான் கிரியை செய்ய வல்லவன், பெரும்பாலான ஜனங்களை விட நான் சிறந்தவன். வேறு யாரைக் காட்டிலும் கர்த்தருடைய பாரத்தைச் சுமக்கக்கூடிய ஒருவனாக என்னைக் கருதுகிறேன். யாரும் என்னைப் போல ஆழமாக மனந்திரும்புவதில்லை, ஏனென்றால், பெரிய ஒளி என் மீது பிரகாசித்தது. நான் பெரிய ஒளியைக் கண்டேன், எனவே என் மனந்திரும்புதல் மற்றவர்களை விட ஆழமானது.” அந்த நேரத்தில், அவன் தனது இருதயத்திற்குள் நினைத்தது இதுதான். பவுல் தனது கிரியையின் முடிவில், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினான். அவனது போராட்டம், கிரியை மற்றும் போக்கு முற்றிலுமாக நீதியின் கிரீடத்திற்காகவே இருந்தது மற்றும் அவன் தீவிரமாக முன்னேறவில்லை. அவன் தனது கிரியையில் முழுமையடையவில்லை என்றாலும், அவனது தவறுகளைச் சமாளிப்பதற்காகவும், அவனது மனசாட்சியின் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்காகவும் அவனது கிரியை வெறுமனே செய்யப்பட்டது என்று கூறலாம். அவன் தனது கிரியையை முடிப்பான் என்றும், தனது போக்கை முடித்துக்கொள்வான், விரைவில் தனது போராட்டத்தைப் போராடி முடிப்பான் என்று மட்டுமே நம்பினான். இதனால் அவன் தனது நீண்டகால நீதியின் கிரீடத்தை விரைவில் பெற முடியும் என்று நம்பினான். கர்த்தராகிய இயேசுவை அவருடைய அனுபவங்களாலும் உண்மையான அறிவினாலும் சந்திக்காமல், தனது கிரியையை சீக்கிரம் முடிப்பதன் மூலம் கர்த்தராகிய இயேசுவைச் சந்திக்கும் போது, தான் செய்த கிரியையின் பலன்களை அவன் பெற வேண்டும் என்பதற்காக அவன் ஏங்கினான். அவன் தனது கிரியையை தன்னை ஆறுதல்படுத்தவும், எதிர்காலக் கிரீடத்திற்கு ஈடாக வைக்கவும் பயன்படுத்தினான். அவன் தேடியது சத்தியமோ தேவனோ அல்ல, கிரீடம் மட்டுமே. அத்தகைய நாட்டம் எவ்வாறு தரமானதாக இருக்கும்? அவனது உந்துதல், அவனது கிரியை, அவன் செலுத்திய விலைக்கிரயம் மற்றும் அவனது முயற்சிகள் அனைத்தையும்—அவனது அற்புதமானக் கற்பனைகள் அனைத்தையும் நிரப்பியது. அவன் தனது சொந்த ஆசைகளுக்கு ஏற்ப முற்றிலுமாக கிரியை செய்தான். அவனது முழு கிரியையிலும், அவன் செலுத்திய விலைக்கிரயத்தில் சிறிதளவு விருப்பமும் இல்லை. அவன் வெறுமனே ஒரு ஒப்பந்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தான். அவனது கடமையைச் செய்வதற்காக அவனது முயற்சிகள் விருப்பத்துடன் செய்யப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் நோக்கத்தை அடைவதற்காக விருப்பத்துடன் செய்யப்பட்டன. அத்தகைய முயற்சிகளுக்கு ஏதாவது மதிப்பு இருக்கிறதா? அவனது அசுத்தமான முயற்சிகளை யாரேனும் பாராட்டுவார்களா? இத்தகைய முயற்சிகளில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? அவனது கிரியை எதிர்காலத்திற்கான கனவுகள் நிறைந்ததாகவும், அற்புதமான திட்டங்கள் நிறைந்ததாகவும் இருந்தன. மனித மனநிலையை மாற்றுவதற்கான பாதையை அது கொண்டிருக்கவில்லை. அவனது தயவு மிகவும் பாசாங்கானதாகும். அவனது கிரியை ஜீவனை வழங்கவில்லை. ஆனால் அது ஒரு நாகரிகத்தின் மோசடியாகும். அது ஒரு ஒப்பந்தமாகும். இத்தகையக் கிரியையால் மனிதனை எவ்வாறு மெய்யான கடமையை மீட்டெடுக்கும் பாதையில் செலுத்த முடியும்?

பேதுரு தேடியதெல்லாம் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதுதான். அவன் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றான். துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாமல், தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவன் தயாராக இருந்தான். தேவனுடைய விசுவாசிகளுக்கு இதைவிட பெரிய நாட்டம் இருக்கமுடியாது. பவுல் தேடியவை அவனுடைய மாம்சத்தாலும், அவனுடைய சொந்தக் கருத்துக்களாலும், அவனுடைய சொந்தத் திட்டங்களாலும், யோசனைகளாலும் களங்கப்படுத்தப்பட்டது. அவன் எந்த வகையிலும் தேவனுடைய தகுதியான சிருஷ்டி அல்ல. தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றவன் அல்ல. தேவனுடைய திட்டங்களுக்கு அடிபணிய பேதுரு முயன்றான். அவன் செய்த கிரியை பெரிதாக இல்லை என்றாலும், அவனது பின்தொடரலுக்குப் பின்னால் இருந்த உந்துதலும் அவன் நடந்து வந்த பாதையும் சரியானதுதான். அவனால் பலரை ஆதாயம் செய்ய முடியவில்லை என்றாலும், அவனால் சத்தியத்தின் வழியைப் பின்பற்ற முடிந்தது. இதன் காரணமாக அவன் தேவனுடைய தகுதியான சிருஷ்டி என்று கூறலாம். இன்று, நீ ஒரு ஊழியக்காரன் இல்லையென்றாலும், தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை உன்னால் செய்ய முடியும் மற்றும் தேவனுடைய அனைத்து திட்டங்களுக்கும் நீ கீழ்ப்படிய முற்பட வேண்டும். தேவன் சொல்வதை உன்னால் கடைப்பிடிக்க முடிய வேண்டும் மற்றும் எல்லா விதமான துன்பங்களையும் சுத்திகரிப்புகளையும் அனுபவிக்க முடிய வேண்டும். நீ பலவீனமாக இருந்தாலும், உன் இருதயத்தில் உன்னால் இன்னும் தேவனை நேசிக்க முடிய வேண்டும். தங்கள் சொந்த ஜீவனுக்குப் பொறுப்பேற்கிறவர்கள் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் மற்றும் அத்தகைய மனிதர்களின் பின்தொடருதல் பற்றிய கண்ணோட்டம் சரியானதாகும். தேவனுக்குத் தேவைப்படுகின்ற மனிதர்கள் இவர்கள் தான். நீ அதிகக் கிரியை செய்கிறாய், மற்றவர்கள் உன் போதனைகளைப் பெற்றார்கள், ஆனால் நீயோ மாறவில்லை, எந்த சாட்சியும் பகரவில்லை அல்லது உண்மையான அனுபவமும் இல்லை, அதாவது உன் ஜீவிதத்தின் முடிவில், நீ செய்தவற்றில் எதுவும் சாட்சி பகரவில்லை என்றால், நீ மாறிவிட்டாயா? நீ சத்தியத்தைப் பின்பற்றும் ஒருவனா? அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் உன்னைப் பயன்படுத்தியபோது, உன்னுடைய ஒரு பகுதியை அவர் கிரியை செய்யப் பயன்படுத்தினார். உன்னால் பயன்படுத்த முடியாத பகுதியை அவர் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தப்படும்போது நீ மாற முற்பட்டால், நீ படிப்படியாகப் பரிபூரணமடைவாய். ஆயினும், நீ இறுதியில் ஆதாயம் செய்யப்படுவாயா இல்லையா என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. இது உன் நாட்டத்தின் முறையைப் பொறுத்தது. உன் தனிப்பட்ட மனநிலையில் எந்த மாற்றங்களும் இல்லை என்றால், அதற்குக் காரணம், நாட்டம் குறித்த உன் பார்வை தவறானது என்பதே. உனக்கு எந்த வெகுமதியும் வழங்கப்படாவிட்டால், அது உன் சொந்தப் பிரச்சனையாகும். ஏனென்றால் நீ சத்தியத்தைக் கடைபிடிக்கவில்லை. தேவனுடைய விருப்பத்தை உன்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, உன் தனிப்பட்ட அனுபவங்களை விட வேறு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. உன் தனிப்பட்ட பிரவேசத்தை விட வேறு எதுவும் முக்கியமானதாக இல்லை! சிலர், “நான் உமக்காக இவ்வளவு கிரியைகளைச் செய்திருக்கிறேன், நான் எந்தவொரு புகழ்பெற்ற சாதனைகளையும் செய்யவில்லை என்றாலும், நான் இன்னும் எனது முயற்சிகளில் முனைப்புடன் இருக்கிறேன். ஜீவவிருட்சக் கனியைப் புசிக்க என்னைப் பரலோகத்திற்கு உம்மால் அனுமதிக்க முடியவில்லையா?” என்று சொல்வார்கள். நான் எத்தகைய ஜனங்களை விரும்புகிறேன் என்பதை நீ அறிந்துக்கொள்ள வேண்டும். அசுத்தமானவர்கள் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அசுத்தமானவர்கள் பரிசுத்தமான பூமியை அசுத்தப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. நீ பல கிரியைகளைச் செய்திருந்தாலும், பல ஆண்டுகளாக கிரியை செய்திருந்தாலும், இறுதியில் நீ இன்னும் வருந்தத்தக்கதாக அசுத்தமாய் இருந்தால், நீ என் ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்புவதைப் பரலோக பிரமாணத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது! உலகம் உருவானது முதல் இன்று வரை, என்னிடம் நயங்காட்டுபவர்களை என்னுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க நான் ஒருபோதும் எளிதாக அணுகலை வழங்கியதில்லை. இது பரலோக விதியாகும், ஒருவராலும் அதை மீற முடியாது! நீ ஜீவனை நாட வேண்டும். இன்று, பரிபூரணமாக்கப்படுபவர்களும் பேதுருவைப் போன்றவர்களே: அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றங்களைத் தேடுபவர்கள், தேவனுக்கு சாட்சி அளிக்கவும், தேவனுடைய சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இது போன்றவர்கள் மட்டுமே பரிபூரணமாக்கப்படுவார்கள். நீ வெகுமதிகளை மட்டுமே பார்த்து, உன் சொந்த ஜீவித மனநிலையை மாற்ற முற்படவில்லை என்றால், உன் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்—இது மாற்ற முடியாத சத்தியமாகும்!

ஜீவித உழைப்பைப் பின்பற்றாதவர்கள் அனைவரும் வீணாக இருக்கிறார்கள் என்பதை பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்களின் வேறுபாட்டிலிருந்து நீ புரிந்துக்கொள்ள வேண்டும்! நீ தேவனை விசுவாசிக்கிறாய், தேவனைப் பின்பற்றுகிறாய் மற்றும் உன் இருதயத்தில் நீ தேவனை நேசிக்கிறாய். உன் சீர்கேடான மனநிலையை நீ ஒதுக்கி வைக்க வேண்டும். தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீ முயல வேண்டும் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நீ செய்ய வேண்டும். நீ தேவனை விசுவாசிக்கிறாய், பின்பற்றுகிறாய் என்பதால், நீ எல்லாவற்றையும் அவருக்கு வழங்க வேண்டும், தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது கோரிக்கைகளை வைக்கக்கூடாது மற்றும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். நீ சிருஷ்டிக்கப்பட்டதால், உன்னைச் சிருஷ்டித்த கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், நீ இயல்பாகவே உன் மீது ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறாய். உன் சொந்த விதியைக் கட்டுப்படுத்தும் திறன் உன்னிடம் இல்லை. நீ தேவனை விசுவாசிக்கிற ஒரு மனிதன் என்பதால், நீ பரிசுத்தத்தையும் மாற்றத்தையும் நாட வேண்டும். நீ தேவனுடைய சிருஷ்டி என்பதால், நீ உன் கடமையைக் கடைபிடிக்க வேண்டும். உனக்குத் தகுதியான இடத்தில் இருக்க வேண்டும். உன் கடமையை நீ மீறக்கூடாது. இது உன்னைக் கட்டுப்படுத்துவதற்காகவோ அல்லது உபதேசத்தின் மூலம் உன்னை அடக்குவதற்காகவோ அல்ல. மாறாக இது உன் கடமையை நீ செய்யும் பாதையாகும் மற்றும் அதை நீதியைச் செய்கிற அனைவராலும் அடைய முடியும்—அடைய வேண்டும். பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், நீ எவ்வாறு நாட வேண்டும் என்பதை நீ அறிவாய். பேதுருவும் பவுலும் நடந்த பாதைகளில் ஒன்று, பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதை, மற்றொன்று புறம்பாக்கப்படுவதற்கான பாதை ஆகும். பேதுருவும் பவுலும் இரண்டு வெவ்வேறு பாதைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவருடைய அறிவொளியையும் பிரகாசத்தையும் பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசுவினால் தங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டாலும், ஒவ்வொருவரிலும் கிடைக்கும் கனி ஒன்றல்ல: ஒருவன் உண்மையிலேயே கனி கொடுத்தான், மற்றொருவன் கனி கொடுக்கவில்லை. அவர்கள் செய்த கிரியை, அவர்களால் வெளிப்புறமாக வெளிப்படுத்தப்பட்டவை மற்றும் அவர்களின் இறுதி முடிவுகள் ஆகியவற்றின் சாராம்சங்களிலிருந்து, நீ எந்தப் பாதையில் செல்ல வேண்டும், எந்தப் பாதையில் நடக்க வேண்டும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெளிவாக இரண்டு வெவ்வேறு பாதைகளில் நடந்தார்கள். பவுலும் பேதுருவும், ஒவ்வொரு பாதையின் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர். ஆகவே தொடக்கத்திலிருந்தே இந்த இரண்டு பாதைகளுக்கும் அவர்கள் முன்மாதிரியாக இருந்தார்கள். பவுலின் அனுபவங்களின் முக்கிய கருத்துக்கள் எவை, அவன் ஏன் ஜெயம் பெறவில்லை? பேதுருவின் அனுபவங்களின் முக்கியக் கருத்துக்கள் எவை, அவன் எவ்வாறு பரிபூரணமாக்கப்படுதலை அனுபவித்தான்? அவர்கள் ஒவ்வொருவரும் அக்கறை காட்டியதை ஒப்பிட்டுப் பார்த்தால், தேவன் எந்த வகையான மனிதரை விரும்புகிறார், தேவனுடைய விருப்பம் என்ன, தேவனுடைய மனநிலை என்ன, எந்த வகையான மனிதர் இறுதியில் பரிபூரணமாக்கப்படுவான் மற்றும் எந்த வகையான நபர் பரிபூரணமாக்கப்படமாட்டான், பரிபூரணமாக்கப்படுபவர்களின் மனநிலை என்ன என்பதையும், பரிபூரணமாக்கப்படாதவர்களின் மனநிலை என்ன என்பதையும் நீ அறிந்து கொள்வாய். இந்த சாராம்சத்தின் பிரச்சனைகளை பேதுரு மற்றும் பவுலின் அனுபவங்களில் பார்க்கலாம். தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், ஆகவே எல்லா சிருஷ்டிப்புகளையும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வந்து தம்முடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படியச் செய்கிறார். எல்லாவற்றையும் அவருடைய கைகளில் இருக்கும்படி அவர் எல்லாவற்றிற்கும் கட்டளையிடுவார். விலங்குகள், தாவரங்கள், மனிதகுலம், மலைகள் மற்றும் ஆறுகள் மற்றும் ஏரிகள் உட்பட தேவனுடைய சிருஷ்டிப்பு அனைத்தும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும். வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும். அவற்றுக்கு வேறு வழியில்லை. அனைத்தும் அவருடைய திட்டங்களுக்கு அடிபணிய வேண்டும். இது தேவனால் ஆணையிடப்பட்டது. இது தேவனுடைய அதிகாரம். தேவன் எல்லாவற்றிற்கும் கட்டளையிடுகிறார், எல்லாவற்றிற்கும் கட்டளையிட்டு வரிசைப்படுத்துகிறார். ஒவ்வொன்றும் வகையின்படி வகைப்படுத்தப்பட்டு, தேவனுடைய சித்தப்படி அவற்றுக்குரிய சொந்த நிலையை ஒதுக்குகிறார். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எந்தவொரு விஷயமும் தேவனை மிஞ்ச முடியாது. எல்லாமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்திற்கு ஊழியம் செய்கின்றன. தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கவோ தேவனிடம் எந்தவொரு கோரிக்கையையும் வைக்கவோ எந்த ஒரு சிருஷ்டியும் துணிவதில்லை. ஆகவே, மனிதன், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, தன் கடமையைச் செய்ய வேண்டும். மனிதன் எல்லாவற்றிற்கும் அதிபதியாக அல்லது பராமரிப்பாளனாக இருந்தாலும், எல்லாவற்றிலும் எவ்வளவு உயர்ந்ததாக மனிதனுடைய அந்தஸ்து இருந்தாலும், அவன் தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் ஒரு சிறிய மனிதனாகவே இருக்கிறான். அவன் ஒரு சிறிய மனிதன் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டி என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவன் ஒருபோதும் தேவனுக்கு மேலே இருக்க மாட்டான். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, மனிதன் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்ய முற்பட வேண்டும். மற்ற தேர்வுகளைச் செய்யாமல் தேவனை நேசிக்க முற்பட வேண்டும், ஏனென்றால் தேவன் மனிதனின் அன்பிற்கு தகுதியானவர். தேவனை நேசிக்க முற்படுபவர்கள் எந்தவொரு தனிப்பட்ட நன்மைகளையும் தேடக்கூடாது அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் ஏங்குகிறதைத் தேடக்கூடாது. இது மிகவும் சரியான வழிமுறையாகும். நீ தேடுவது சத்தியம் என்றால், நீ நடைமுறையில் வைத்திருப்பது சத்தியம் என்றால், நீ அடைவது உன் மனநிலையின் மாற்றமாக இருந்தால், நீ செல்லும் பாதை சரியானதாகும். நீ தேடுவது மாம்சத்தின் ஆசீர்வாதங்கள் என்றால், நீ கடைபிடிப்பது உன் சொந்த கருத்துக்களின் சத்தியம் என்றால் மற்றும் உன் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நீ மாம்சத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதாகும். நீ இன்னும் தெளிவற்ற நிலையில் ஜீவிப்பதால், நீ தேடுவது நிச்சயமாக உன்னை நரகத்திற்கு அழைத்துச் செல்லும். ஏனென்றால், நீ நடந்து செல்லும் பாதை தோல்வியின் பாதையாகும். நீ பரிபூரணமாக்கப்படுவாயா அல்லது புறம்பாக்கப்படுவாயா என்பது உன் சொந்த நாட்டத்தைப் பொறுத்ததாகும். அதாவது, ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்.

முந்தைய: பதின்மூன்று நிருபங்களைப் பொறுத்தவரையில் உன் நிலைப்பாடு என்ன?

அடுத்த: தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக