IX. தேவனுடைய கிரியைக்கும் மனுஷனுடைய கிரியைக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துதல் குறித்த வார்த்தைகள்

310. தேவனின் கிரியையானது மனுஷகுலத்தின் அனைத்து கிரியைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது, மேலும் இது முழு யுகத்தின் கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதாவது தேவனின் சொந்தக் கிரியையானது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு வல்லமையையும் போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதேசமயம் அப்போஸ்தலர்களின் கிரியையானது தேவனின் சொந்த கிரியைக்கு பிறகு வருகிறது, அதிலிருந்து தொடர்கிறது. அது யுகத்தை வழிநடத்துவதும் இல்லை, முழு யுகத்திலும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. மனுஷன் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள், அதற்கும் நிர்வாகக் கிரியைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. தேவன் அவராகவே செய்யும் கிரியையானது நிர்வாகக் கிரியைக்குள் இருக்கும் ஒரு திட்டமாகும். மனுஷனின் கிரியையானது பயன்படுத்தப்பட்டவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டுமே ஆகும், அதற்கும் நிர்வாக கிரியைக்கும் தொடர்பில்லை. அவை இரண்டும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்ற போதிலும், கிரியையின் அடையாளங்கள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் ஆகியவற்றின் வேறுபாடுகள் காரணமாக, தேவனின் சொந்த கிரியைக்கும் மனுஷனின் கிரியைக்கும் இடையே தெளிவான மற்றும் கணிசமான வேறுபாடுகள் இருக்கின்றன. மேலும், பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையின் அளவு வெவ்வேறு அடையாளங்களைக் கொண்ட பொருள்களில் மாறுபடுகிறது. இவையே பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் கொள்கைகள் மற்றும் நோக்கம் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

311. மாம்சமான தேவனுடைய கிரியை ஒரு புதிய யுகத்தைத் துவக்கி வைக்கிறது. அவருடைய கிரியையைத் தொடருபவர்கள் அவரால் பயன்படுத்தப்படுபவர்கள். மனுஷனால் செய்யப்படும் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய ஊழியத்திற்குள் உள்ளன. இந்த எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. மாம்சமான தேவன் தமது கிரியையைச் செய்வதற்காக வரவில்லை என்றால், மனுஷனால் பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது, ஒரு புதிய காலத்தைத் தொடங்கவும் முடியாது. மனுஷனால் செய்யப்படும் கிரியை வெறுமனே மனுஷனால் செய்யக்கூடிய கடமையின் எல்லைக்குளேயே உள்ளது. இது தேவனுடைய கிரியையைக் குறிப்பிடவில்லை. மாம்சமான தேவனால் மட்டுமே அவர் வந்து செய்ய வேண்டிய கிரியையை செய்து முடிக்க முடியும். அவரைத் தவிர, அவர் சார்பாக இந்தக் கிரியையை யாராலும் செய்ய முடியாது. நிச்சயமாகவே, நான் மாம்சமான தேவனைக் குறித்தே பேசுகிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

312. தேவனின் வார்த்தையை மனுஷனின் வார்த்தையாக மாற்ற முடியாது, மேலும் மனுஷனின் வார்த்தையை தேவனின் வார்த்தையாக மாற்ற முடியாது. தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனானவன் மனுஷனாக அவதரித்த தேவன் அல்ல; மனுஷ அவதாரமான தேவன், தேவனால் பயன்படுத்தப்பட்ட மனுஷன் அல்ல. இதில், ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. ஒருவேளை, இந்த வார்த்தைகளைப் படித்த பிறகு, இவை தேவனின் வார்த்தைகள் என்று நீ ஒப்புக் கொள்ள மாட்டாய், ஆனால் மனுஷன் பெற்ற அறிவூட்டலாக மட்டுமே ஒப்புக் கொள்வாய். அவ்வாறான நிலையில், நீ அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறாய். தேவனின் வார்த்தைகள் எப்படி மனுஷன் பெற்ற அறிவூட்டலைப் போலவே இருக்க முடியும்? மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகள் ஒரு புதிய யுகத்தைத் திறக்கின்றன, மனுஷகுலம் முழுவதற்கும் வழிகாட்டுகின்றன, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்றன, மேலும் புதிய யுகத்தில் மனுஷன் செல்ல வேண்டிய திசையையும் காட்டுகின்றன. மனுஷனால் பெறப்பட்ட அறிவூட்டல் என்பது கடைபிடிக்கக் கூடிய அல்லது அறிவுக்கு எளிய வழிமுறைகளாக இருக்கிறது. இதனால் மனுஷகுலம் அனைத்தையும் ஒரு புதிய யுகத்திற்கு வழிநடத்தவோ அல்லது தேவனின் மறைபொருட்களை வெளிப்படுத்தவோ முடியாது. எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, தேவன் தேவனாகவும், மனுஷன் மனுஷனாகவும் இருக்கிறான். தேவனுக்கு தேவனின் சாராம்சம் இருக்கிறது, மனுஷனுக்கு மனுஷனின் சாராம்சம் இருக்கிறது. தேவன் பேசும் வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெறப்படும் எளிமையான அறிவூட்டலாக மனுஷன் கருதினால், அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக் கொண்டால், அது மனுஷனின் தவறு. எதுவாக இருந்தாலும், நீ ஒருபோதும் சரியானதையும் தவறானதையும் குழப்பிக்கொள்ளக் கூடாது, அல்லது குறைவானதை உயர்வாக எடுத்துக்கொள்ளக் கூடாது, அல்லது மேலோட்டமானவற்றையை ஆழ்ந்த விஷயம் கொண்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாது; எதுவாக இருந்தாலும், சத்தியம் என்று உனக்குத் தெரிந்ததை நீ ஒருபோதும் வேண்டுமென்றே மறுக்கக்கூடாது. தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நம்பும் ஒவ்வொருவரும் சரியான நிலைப்பாட்டில் இருந்து பிரச்சினைகளை விசாரிக்க வேண்டும், மேலும் தேவனின் புதிய கிரியையையும் அவருடைய புதிய வார்த்தைகளையும் அவர் சிருஷ்டித்த கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையெனில், அவர்கள் தேவனால் அகற்றப்படுவர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

313. தேவனால் பயன்படுத்தப்படுகிற ஒருவனால் செய்யப்படும் கிரியை கிறிஸ்து அல்லது பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் ஒத்துழைப்பதற்காகவே செய்யப்படுகிறது. இந்த மனுஷன் மனுஷர்களின் நடுவில் இருந்து தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும் வழிநடத்த தேவனால் எழுப்பப்படுகிறான், மேலும் இவன் மனுஷ ஒத்துழைப்பின் கிரியையை செய்ய தேவனால் எழுப்பப்படுகிறான். மனுஷ ஒத்துழைப்பின் கிரியையை செய்யக் கூடிய இப்படிப்பட்ட ஒருவனைக் கொண்டு, இன்னும் அதிகமான மனுஷனுக்கான தேவனின் தேவைகளையும், மனுஷனின் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் செய்யவேண்டிய கிரியையையும் அவன் மூலம் செய்ய முடியும். இதை இன்னொரு வகையில் இப்படிச் சொல்லலாம்: இந்த மனுஷனை தேவன் பயன்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால், தேவனைப் பின்பற்றும் யாவரும் தேவனின் சித்தத்தைச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும், தேவனின் தேவைகளை இன்னும் அதிகமாக அடைய முடியும் என்பதாகும். தேவனின் வார்த்தைகளை அல்லது தேவனின் சித்தத்தை ஜனங்களால் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாததால், இத்தகையக் கிரியையைச் செய்ய யாராவது ஒருவனை தேவன் எழுப்புகிறார். தேவனால் பயன்படுத்தப்படும் இந்த நபரை மத்தியஸ்தன் என விளக்கலாம். தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியில் தொடர்புகொள்ளும் ஒரு “மொழிபெயர்ப்பாளன்” போல இவன் மூலம் தேவன் ஜனங்களை வழிநடத்துகிறார். இவ்வாறு, இப்படிப்பட்ட மனுஷன் தேவனுடைய வீட்டில் பணி செய்பவர்களையோ அல்லது அவருடைய அப்போஸ்தலர்களையோ போன்றவன் அல்ல. அவர்களைப் போல, தேவனை சேவிக்கிற ஒருவன் எனச் சொல்லலாம், எனினும் அவன் செய்யும் வேலையின் தன்மையிலும் அவனை தேவன் பயன்படுத்தும் பின்னணியிலும் அவன் பெருமளவில் மற்ற ஊழியக்காரர்களிலும் அப்போஸ்தலர்களிலும் இருந்து வேறுபடுகிறான். அவனுடைய வேலையின் தன்மை மற்றும் அவன் பயன்படுத்தப்படும் பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையில், தேவனால் பயன்படுத்தப்படுகிற மனுஷன் அவரால் எழுப்பப்படுகிறான், அவன் தேவனுடைய கிரியைக்காக தேவனால் ஆயத்தப்படுத்தப்படுகிறான், மேலும் அவன் தேவனின் சொந்தக் கிரியையிலேயே ஒத்துழைக்கிறான். அவனுக்குப் பதிலாக வேறு எவரும் அவனுடைய வேலையைச் செய்ய முடியாது—இது தேவ கிரியையோடு கூட தவிர்க்க முடியாததாக இருக்கும் மனுஷ ஒத்துழைப்பாகும். அதேநேரத்தில், மற்ற ஊழியக்காரர்கள் அல்லது அப்போஸ்தலர்களால் செய்யப்படும் கிரியை என்பது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சபைகளுக்கான ஏற்பாடுகளின் பல அம்சங்களின் அனுப்புதலும் நடைமுறைப்படுத்தலும் ஆகும், அல்லது சபை வாழ்க்கையைப் பராமரிப்பதற்கான சில எளிய வாழ்க்கை நியதிக்கான கிரியை ஆகும். இந்த ஊழியக்காரர்களும் அப்போஸ்தலர்களும் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்கள் என்றும் கூறமுடியாது. அவர்கள் சபைகளின் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மேலும் ஒரு கால அளவிற்கு அவர்கள் பயிற்சிபெற்று பண்படுத்தப்பட்ட பின்னர், அவர்களில் தகுதியானவர்கள் வைக்கப்பட்டு தகுதியற்றவர்கள் அவர்கள் வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் சபைகளின் நடுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், தலைவர்கள் ஆன பின்னர் அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டுகிறார்கள், மேலும் சிலர் மோசமான செயல்களையும் கூட செய்து முடிவில் வெளியேற்றவும் படுகிறார்கள். மாறாக, தேவனால் பயன்படுத்தப்படும் மனுஷன், தேவனால் ஆயத்தப்படுத்தப்படுகிறான், மேலும் சில திறன்களைக் கொண்டவனாய் இருக்கிறான், மேலும் மனிதத்தன்மை உள்ளவனாய் இருக்கிறான். அவன் முன்கூட்டியே பரிசுத்த ஆவியானவரால் ஆயத்தப்படுத்தப்பட்டு பரிபூரணப்படுத்தப்படுகிறான், மேலும் அவன் முழுமையாகப் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறான், மற்றும் குறிப்பாக அவனுடைய கிரியை என்று வரும்போது, அவன் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு கட்டளையிடப்படுகிறான்—இதனால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வழிநடத்தும் பாதையில் எந்தத் திசைமாற்றமும் இல்லை, ஏனெனில் தேவன் தமது சொந்த கிரியைக்கு நிச்சயமாகப் பொறுப்பை எடுத்துக்கொள்ளுகிறார், மேலும் தேவன் தமது சொந்த கிரியையையே எல்லா நேரமும் செய்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி” என்பதிலிருந்து

314. தேவன் மாம்சத்தில் வந்தபோது, அவர் தெய்வீகக் கிரியையை மட்டுமே செய்து, அவருடன் இணைந்து கிரியை செய்ய அவரது இருதயத்திற்கு ஏற்ற ஒருவரும் இல்லை என்றால், மனிதனால் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவோ தேவனுடன் இணைந்து செயல்படவோ முடியாது. தேவன் இந்தக் கிரியையைச் செய்து முடிக்கவும், திருச்சபைகளை கண்காணிக்கவும், மேய்க்கவும் அவருடைய இருதயத்திற்கு ஏற்ற சாதாரண நபர்களைப் பயன்படுத்த வேண்டும், இதனால் மனிதனின் அறிவாற்றல் செயல்முறைகளின் அளவு, அவனது மூளை ஆகியவை கற்பனை செய்யும் திறனுடையவையாக இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், தேவன் தமது தெய்வீகத்திற்குள் செய்யும் கிரியையை “மொழிபெயர்க்க” அவருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு சிறு எண்ணிக்கையிலான நபர்களைப் பயன்படுத்துகிறார், இதன்மூலம் தெய்வீகப் பாஷையை மனிதப் பாஷையாக மாற்ற முடியும், மேலும் இதன்மூலம் ஜனங்களால் அதைப் புரிந்துகொள்ளவும் முடியும். தேவன் அவ்வாறு செய்திருக்காவிட்டால், தேவனுடைய தெய்வீகப் பாஷையை ஒருவரும் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்கள்பொதுவாகவே சிறிய எண்ணிக்கையிலான சிறுபான்மையினராக இருக்கின்றனர், மேலும் மனிதனின் புரிந்துகொள்ளும் திறன் பலவீனமாகவே இருக்கிறது. அதனால்தான், மாம்சமாகிய தேவனின் மாம்சத்தில் கிரியை செய்யும் போது மட்டுமே தேவன் இந்த முறையைத் தேர்ந்தெடுக்கிறார். தெய்வீகக் கிரியை மட்டுமே இருந்திருந்தால், மனிதனுக்கு தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது தேவனுடன் செயல்படவோ வழி எதுவும் இருந்திருக்காது, ஏனென்றால் மனிதனுக்கு தேவனுடைய பாஷைப் புரிவதில்லை. தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற, அவருடைய வார்த்தைகளைத் தெளிவுபடுத்தும் பிரதிநிதிகள் மூலமாக மட்டுமே மனிதனால் இந்த பாஷையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனாலும், மனிதகுலத்திற்குள் இதுபோன்றவர்கள் மட்டுமே கிரியை செய்தால், அது மனிதனின் சாதாரண வாழ்க்கையை மட்டுமே பராமரிக்க முடிந்ததே தவிர, மனிதனின் மனநிலையை அதனால் மாற்ற முடியவில்லை. தேவனுடைய கிரியையால் ஒரு புதிய தொடக்கப் புள்ளியைக் கொண்டிருக்க முடியவில்லை. அதே பழைய பாடல்களும், அதே பழைய பயனற்ற கூற்றுகளும் மட்டுமே இருந்தன. மாம்சமாகிய தேவனுடைய பிரதிநிதி மூலமாக மட்டுமே, மாம்சமாகிய அவருடைய காலத்தில் அவர் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்கிறார் மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறார், அதன் பிறகு ஜனங்கள் அவருடைய வார்த்தைகளின்படியே கிரியை செய்கின்றனர், அனுபவம் பெறுகின்றனர், இவ்வாறு மட்டுமே அவர்களுடைய வாழ்க்கை மனநிலை மாற முடியும், இவ்வாறு மட்டுமே அவர்களால் காலத்துடன் ஓட முடியும். தெய்வீகத்தன்மையில் கிரியை செய்கிறவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அதே நேரத்தில் மனிதத்தன்மையில் கிரியை செய்கிறவர்கள் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களாக இருக்கின்றனர். அதாவது, மாம்சமாகிய தேவன் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவராக இருக்கிறார். மாம்சமாகிய தேவன் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிகிறது, அதே நேரத்தில் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களால் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு காலத்தின் துவக்கத்திலும், மனிதனை புதிய துவக்கத்திற்குள் கொண்டுவர தேவனுடைய ஆவியானவர் தனிப்பட்ட முறையில் பேசி, புதிய யுகத்தைத் தொடங்குகிறார். அவர் பேசி முடித்ததும், தேவனுடைய தெய்வீகத்தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது என்பதை இது குறிக்கிறது. அதன் பிறகு, ஜனங்கள் எல்லோரும் தங்கள் ஜீவனின் அனுபவத்திற்குள் பிரவேசிக்க தேவனால் பயன்படுத்தப்படுபவர்களின் வழியைப் பின்பற்றுகின்றனர். மேலும், இந்தக் கட்டத்தில் தான் தேவன் மனிதனை புதிய யுகத்திற்குள் கொண்டு வந்து, மாம்சத்தில் தேவனுடைய கிரியை முடிக்கும் தருணமான ஒரு புதிய தொடக்கப் புள்ளியை ஜனங்களிடம் கொடுக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து

315. பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனால் கூட தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இதுபோன்ற மனுஷனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று சொல்வது மட்டுமல்லாமல், அவன் செய்யும் கிரியையாலும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனுஷனின் அனுபவத்தை நேரடியாகத் தேவனின் ஆளுகையின் கீழ் வைத்திருக்க முடியாது, மேலும் அதனால் தேவனின் ஆளுகையைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியாது. தேவன் அவராகவே செய்யும் கிரியை முழுக்க முழுக்க அவர் தமது சொந்த ஆளுகைத் திட்டத்தில் செய்ய விரும்பும் கிரியை ஆகும், அது பெரிய அளவிலான ஆளுகையுடன் தொடர்புடையது. மனுஷனால் செய்யப்படும் கிரியையானது அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குவதை உள்ளடக்கியதாகும். இதற்கு முன்னர் சென்றவர்களால் நடந்ததையும் தாண்டி ஒரு புதிய அனுபவ வழியைக் கண்டறிவதும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு வழிகாட்டுவதும் இதில் அடங்கும். இந்த ஜனங்கள் வழங்குவது அவர்களின் தனிப்பட்ட அனுபவம் அல்லது ஆன்மீக ஜனங்களின் ஆன்மீக எழுத்துக்கள் ஆகியவையே ஆகும். இந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டாலும், அவர்கள் செய்யும் கிரியையானது ஆறாயிரம் ஆண்டுகாலத் திட்டத்தில் ஆளுகையின் பெரிய கிரியைக்குத் தொடர்பில்லாதது ஆகும். அவர்கள் வெறுமனே, ஜனங்களை பரிசுத்த ஆவியானவரின் நீரோட்டத்தில் வழிநடத்த, பரிசுத்த ஆவியானவரால் வெவ்வேறு காலங்களில் எழுப்பப்பட்டவர்கள். அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள் முடிவடையும் வரை அல்லது அவர்களின் ஜீவிதங்கள் முடிவடையும் வரை அதைச் செய்வார்கள். அவர்கள் செய்யும் கிரியை தேவனுக்கு ஒரு பொருத்தமானப் பாதையை உருவாக்குவது அல்லது பூமியில் தேவனுடைய ஆளுகையில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைத் தொடர்வது மட்டுமே ஆகும். தேவனுடைய ஆளுகையின் பெரிய கிரியையை இவர்களால் தங்களுக்குளேயே செய்ய இயலாது, அல்லது புதிய பாதைகளைத் திறக்கவும் முடியாது, மேலும் அவர்களில் எவரும் முந்தைய யுகத்தை சேர்ந்த தேவனுடைய எல்லா கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் முடியாது. ஆகையால், அவர்கள் செய்யும் கிரியை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் செய்யும் ஒரு செயல்பாட்டைப் பிரதிநித்துவப்படுத்துகிறதே அன்றி தேவன் செய்யும் ஊழியத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர்கள் செய்யும் கிரியை, தேவனால் செய்யப்படுவதைப் போன்றது இல்லை. ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கான கிரியை தேவனின் இடத்தில் உள்ள மனுஷனால் செய்யக்கூடிய ஒன்றல்ல. தேவனைத் தவிர வேறு எவராலும் இதைச் செய்ய முடியாது. மனுஷனால் செய்யப்படும் அனைத்துக் கிரியைகளும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தனது கடமையைச் செய்வதைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்படும்போது அல்லது தெளிவுபடுத்தப்படும்போது செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் வழங்கும் வழிகாட்டுதல், முழுக்க முழுக்க மனுஷனுக்கு அன்றாட ஜீவிதத்தில் நடைமுறையின் பாதையைக் காண்பிப்பதையும், தேவனின் விருப்பத்திற்கு இணங்க அவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் கொண்டுள்ளது. மனுஷனின் கிரியை தேவனின் ஆளுகையை உள்ளடக்கியதும் இல்லை, ஆவியானவரின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. உதாரணமாக, விட்னஸ் லீ மற்றும் வாட்ச்மேன் நீ ஆகியோரின் கிரியைகள் தலைமை தாங்குவது மட்டுமே. புதிய பாதையோ அல்லது பழைய பாதையோ, வேதாகமத்தில் மீதமுள்ள கொள்கையின் அடிப்படையில் அந்தக் கிரியை முன்வைக்கப்பட்டது. உள்ளூர் தேவாலயத்தை மீட்டெடுப்பதோ அல்லது உள்ளூர் தேவாலயத்தைக் கட்டியெழுப்புவதோ, எதுவாக இருந்தாலும் தேவாலயங்களை நிறுவுவதே அவர்களின் கிரியையாக இருந்தது. இயேசுவாலும் அவருடைய அப்போஸ்தலர்களாலும் முடிக்கப்படாத கிரியையை அல்லது கிருபையின் யுகத்தில் மேலும் வளர்ச்சியடையாத கிரியையையே அவர்கள் செய்தார்கள். இயேசு தம்முடைய ஆரம்பகாலக் கிரியையில் அவருக்குப் பின் வரும் தலைமுறையினரைக் கேட்டுக்கொண்ட விஷயங்களான முக்காடிடுதல், ஞானஸ்நானம் பெறுதல், அப்பம் பிட்குதல் அல்லது திராட்சரசம் பருகுதல் ஆகியவற்றையே அவர்கள் தங்களது கிரியையில் செய்தார்கள். அவர்களின் கிரியை, வேதாகமத்தைக் கடைப்பிடிப்பதும், வேதாகமத்தினுள் பாதைகளைத் தேடுவதுமாகும் என்று கூறலாம். அவர்கள் எந்த விதமான புதிய முன்னேற்றங்களையும் செய்யவில்லை. … பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்களின் கிரியையானது தேவன் செய்த கிரியையைப் போலல்லாமல் இருப்பதால், அவர்களின் அடையாளங்களும் அவர்கள் சார்பாக அவர்கள் செயல்படுத்தும் விஷயங்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் செய்ய விரும்பும் கிரியை வேறுபட்டது, இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாகக் கிரியை செய்பவர்களுக்கு வெவ்வேறு அடையாளங்களும் அந்தஸ்துகளும் வழங்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்கள் சில புதிய கிரியைகளையும் செய்யலாம், மேலும் முந்தைய யுகத்தில் செய்யப்பட்ட சில கிரியைகளை அகற்றவும் செய்யலாம், ஆனால் அவர்கள் செய்வது புதிய யுகத்தில் தேவனின் மனநிலையையும் சித்தத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவர்கள் முந்தைய யுகத்தின் கிரியையை ஒழிக்க மட்டுமே கிரியை செய்கின்றனர், தேவனின் மனநிலையை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்திற்கான புதிய கிரியைகளைச் செய்வதற்காக அல்ல. இவ்வாறு, அவர்கள் எத்தனை காலாவதியான நடைமுறைகளை ஒழித்தாலும் அல்லது எத்தனை புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தினாலும், அவர்கள் இன்னமும் மனுஷனையும், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களையும்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், தேவனே தமது கிரியையைச் செய்யும்போது, பழைய யுகத்தின் நடைமுறைகள் ஒழிக்கப்படுவதை அவர் வெளிப்படையாக அறிவிப்பதில்லை அல்லது புதிய யுகத்தின் தொடக்கத்தை நேரடியாக அறிவிப்பதில்லை. அவர் தமது கிரியையில் நேர்மையாகவும், நேரடியாகவும் இருக்கிறார். தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதில் அவர் நேர்மையானவர்; அதாவது, அவர் கொண்டு வந்தக் கிரியையை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அந்தக் கிரியையை துவக்கத்தில் எப்படிச் செய்ய விரும்பினாரோ அப்படியேச் செய்கிறார், அவருடைய இருப்பையும் மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். மனுஷன் அதைப் பார்க்கும்போது, அவருடைய மனநிலையும் அவருடைய கிரியையும் கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கின்றன. இருப்பினும், தேவனின் கண்ணோட்டத்தில், இது அவருடைய கிரியையின் தொடர்ச்சியும், வளர்ச்சியுமாக மட்டுமே இருக்கிறது. தேவன் கிரியை செய்யும்போது, அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்தி, புதிய கிரியையை நேரடியாகக் கொண்டுவருகிறார். இதற்கு நேர்மாறாக, மனுஷன் கிரியை செய்யும் போது, அந்தக் கிரியை, விவாதம் மற்றும் கற்றல் மூலமாக செய்யப்படுகிறது, அல்லது மற்றவர்களின் கிரியைகளில் நிறுவப்பட்ட அறிவின் விரிவாக்கம் மற்றும் நடைமுறையை முறைப்படுத்துவதாக இருக்கிறது. அதாவது, மனுஷன் செய்தக் கிரியையின் சாராம்சம் ஒரு நிறுவப்பட்ட ஒழுங்கைப் பின்பற்றுவதும், “பழைய பாதைகளில் புதிய காலணிகளைக் கொண்டு நடப்பதும்,” ஆகும். இதன் பொருள் என்னவென்றால், ஜனங்கள் நடந்துசென்ற பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திய பாதை கூட தேவனால் தொடங்கப்பட்டதின் மீது கட்டப்பட்டுள்ளது என்பது தான். எனவே, எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, மனுஷன் இன்னும் மனுஷனாகவே இருக்கிறான், தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து

317. மனுஷனின் கிரியையானது அவனது அனுபவத்தையும் மனுஷத்தன்மையையும் குறிக்கிறது. மனுஷன் எதை வழங்குகிறானோ அதுவும், அவன் செய்யும் கிரியையும் அவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மனுஷனின் நுண்ணறிவு, மனுஷனின் பகுத்தறிவு, மனுஷனின் தர்க்கம் மற்றும் அவனது செழிப்பான கற்பனை ஆகிய அனைத்தும் அவனது கிரியையில் சேர்க்கப்பட்டுள்ளன. மனுஷனின் அனுபவத்தால் குறிப்பாக அவனது கிரியையைக் குறிக்க முடிகிறது, மேலும் ஒரு நபரின் அனுபவங்கள் அவனது கிரியையின் கூறுகளாகின்றன. மனுஷனின் கிரியையால் அவனது அனுபவத்தை வெளிப்படுத்த முடியும். சிலர் எதிர்மறையாக அனுபவிக்கும் போது, அவர்கள் பேசும் பெரும்பாலான மொழி எதிர்மறை கூறுகளைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் அனுபவம் நேர்மறையாக இருந்து, அவர்கள் குறிப்பாக நேர்மறையான அம்சத்தில் ஒரு பாதையைக் கொண்டிருந்தால், அவர்களின் பேச்சு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது, மேலும் ஜனங்கள் அவர்களிடமிருந்து நேர்மறையான காரியங்களைப் பெறவும் முடியும். ஒரு ஊழியக்காரன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்மறையாக மாறினால், அவனுடைய பேச்சும் எப்போதும் எதிர்மறையான கூறுகளைக் கொண்டிருக்கும். இந்த வகையான பேச்சு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது, மற்றவர்கள் அவனது பேச்சுக்குப் பிறகு தங்களை அறியாமலேயே மனச்சோர்வடைந்து போவார்கள். தலைவரின் நிலையைப் பொறுத்து பின்பற்றுபவர்களின் நிலை மாறுகிறது. ஒரு ஊழியக்காரன் அவனது அகத்தில் எப்படி இருந்தாலும், அதையே தான் அவன் வெளிப்படுத்துகிறான், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை பெரும்பாலும் மனுஷனின் நிலைக்கு ஏற்ப மாறுகிறது. அவர் ஜனங்களின் அனுபவத்திற்கு ஏற்ப கிரியை செய்கிறார், அவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் அனுபவத்தின் இயல்பான போக்கிற்கு ஏற்ப ஜனங்களிடம் கோரிக்கைகளை வைக்கிறார். மனுஷனின் பேச்சு தேவனின் வார்த்தையிலிருந்து வேறுபடுகிறது என்பதே இதன் அர்த்தம். ஜனங்களின் பேச்சானது அவர்களின் தனிப்பட்ட நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் தெரிவிக்கிறது, தேவனுடைய கிரியையின் அடிப்படையில் அவர்களின் நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துகிறது. தேவன் கிரியை செய்தபின் அல்லது பேசியபின், அவர்கள் எதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதும், பின்னர் அதைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்குவதும் அவர்களின் பொறுப்பு ஆகும். எனவே, மனுஷனின் கிரியை அவனது பிரவேசித்தலையும் நடைமுறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நிச்சயமாக, இத்தகைய கிரியை மனுஷ பாடங்கள் மற்றும் அனுபவம் அல்லது சில மனுஷ எண்ணங்களுடன் கலக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் எப்படி கிரியை செய்தாலும், அதாவது மனுஷன் மீதோ அல்லது மாம்சமாகிய தேவன் மீதோ, ஊழியக்காரர்கள் எப்போதுமே அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதை வெளிப்படுத்துகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் தான் கிரியை செய்கிறார் என்றாலும், மனுஷன் இயல்பாகவே என்னவாக இருக்கிறான் என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அடித்தளமின்றி கிரியை செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிரியையானது ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து வருவதில்லை, ஆனால் எப்போதும் உண்மையான சூழ்நிலைகள் மற்றும் உண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும் மற்றும் அவனது பழைய கருத்துகளையும் பழைய எண்ணங்களையும் மாற்ற முடியும். மனுஷன் வெளிப்படுத்துவது என்னவென்றால், அவன் பார்ப்பது, அனுபவிப்பது, கற்பனை செய்யக்கூடியது ஆகியவை தான். அது கோட்பாடுகள் அல்லது கருத்துகளாக இருந்தாலும் கூட அது மனுஷனின் சிந்தனையால் அடையக்கூடியது தான். மனுஷனின் கிரியையானது அந்த கிரியையின் அளவைப் பொருட்படுத்தாமல், மனுஷனுடைய அனுபவத்தின் அளவையும், மனுஷன் எதைப் பார்க்கிறானோ அதையும், அல்லது மனுஷனால் கற்பனை செய்யவோ அல்லது எண்ணவோ முடியாததையும் மீறாததாக இருக்கிறது. தேவன் தாம் என்னவாக இருக்கிறாரோ அதை மட்டுமே வெளிப்படுத்துகிறார், இது மனுஷனால் அடைய முடியாதது—அதாவது மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எல்லா மனுஷரையும் வழிநடத்தும் தமது கிரியையை அவர் வெளிப்படுத்துகிறார், இது மனுஷ அனுபவத்தின் விவரங்களுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது, ஆனால் அதற்குப் பதிலாக அவருடைய சொந்த நிர்வாகத்துடன் தொடர்புடையாதாகும். மனுஷன் அவனது அனுபவத்தைத்தான் வெளிப்படுத்துகிறான், அதே சமயம் தேவன் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், இது அவருடைய உள்ளார்ந்த மனநிலை, மனுஷனால் இதை அடையமுடியாது. மனுஷனின் அனுபவம் என்பது தேவனுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் பெறப்பட்ட அவனது நுண்ணறிவு மற்றும் அறிவு ஆகியவை ஆகும். இத்தகைய நுண்ணறிவும் அறிவும் மனுஷனின் இருப்பு என்று அழைக்கப்படுகின்றன, அவற்றின் வெளிப்பாட்டின் அடிப்படையானது மனுஷனின் உள்ளார்ந்த மனநிலை மற்றும் திறமை ஆகியவையாக இருக்கின்றன—இதனால்தான் அவை மனுஷனின் இருப்பு என்றும் அழைக்கப்படுகின்றன. மனுஷனால் அவன் அனுபவிப்பதையும் பார்ப்பதையும் பேச முடிகிறது. அவர்கள் அனுபவிக்காத, பார்த்திராத, அல்லது அவர்களின் சிந்தனையை அடைய முடியாதவற்றை யாராலும் பேச முடியாது, அவை அவர்களுக்குள் இல்லாத விஷயங்களாகும். மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்திலிருந்து வந்ததில்லை என்றால், அது அவனது கற்பனை அல்லது கோட்பாடாகத்தான் இருக்கும். சுருக்கமாகக் கூறுவதானால், அவனது வார்த்தைகளில் எந்த யதார்த்தமும் இல்லை. நீ ஒருபோதும் சமுதாய விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாவிட்டால், உன்னால் சமூகத்தின் சிக்கலான உறவுகளை தெளிவாக பேச முடியாது. உனக்கு குடும்பம் இல்லையென்றால், மற்றவர்கள் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசினால், அவர்கள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, மனுஷன் பேசுவதும், அவன் செய்யும் கிரியையும் அவனது உள்ளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

318. என் பேச்சு நான் இருப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் நான் சொல்வது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாக இருக்கிறது. நான் சொல்வது மனுஷன் அனுபவிக்கும் விஷயமாக இருப்பதில்லை, அது மனுஷனால் பார்க்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பதில்லை; இது மனுஷனால் தொடக்கூடிய ஒன்றாகவும் இருப்பதில்லை, ஆனால் அது தான் நான். நான் அனுபவித்ததை மட்டுமே பேசுகிறேன் என்று சிலர் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடு என்பதை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. நிச்சயமாக, நான் அனுபவித்த விஷயங்கள் பற்றி தான் நான் சொல்கிறேன். ஆறாயிரம் ஆண்டுகளாக நிர்வாகக் கிரியைகளைச் செய்தது நான் தான். மனுஷகுலத்தின் சிருஷ்டிப்பின் ஆதி முதல் இப்போது வரை அனைத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்; என்னால் அதை எப்படி விவாதிக்காமல் இருக்க முடியும்? மனுஷனின் சுபாவத்தைப் பற்றி பேசுகிறோம் என்றால், நான் அதைத் தெளிவாகக் கண்டிருக்கிறேன்; நான் அதை நீண்ட காலத்திற்கு முன்பே கவனித்தேன். இவ்வாறாக இருப்பின் இதைப் பற்றி என்னால் எப்படி தெளிவாகப் பேசாமல் இருக்க முடியும்? மனுஷனின் சாராம்சத்தை நான் தெளிவாகக் கண்டதால், மனுஷனைத் சிட்சிப்பதற்கும் அவனை நியாயந்தீர்ப்பதற்கும் நான் தகுதியானவனாக இருக்கிறேன், ஏனென்றால் மனுஷர் அனைவரும் என்னிடமிருந்து வந்தவர்கள், ஆனால் சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கிறார்கள். நிச்சயமாக, நான் செய்த கிரியையை மதிப்பிடுவதற்கான தகுதியும் எனக்கு உண்டு. இந்தக் கிரியை என் மாம்சத்தால் செய்யப்படவில்லை என்றாலும், இது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவே இருக்கிறது, என்னிடம் இருப்பது இதுதான், நான் என்னவாக இருக்கிறேனோ அதுவும் இதுதான். எனவே, அதை வெளிப்படுத்தவும், நான் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் நான் தகுதியானவனாக இருக்கிறேன். ஜனங்கள் அவர்கள் அனுபவித்ததை மட்டும் தான் சொல்கிறார்கள். இதைத்தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள், அவர்களது மனங்கள் அடையக்கூடியது இதுதான், அவர்களின் புலன்களால் கண்டறிய முடிவதும் இதுதான். இதைத்தான் அவர்கள் பேச முடியும். மாம்சமாகிய தேவனால் பேசப்படும் வார்த்தைகளானது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன. இதனை மாம்சம் அனுபவித்ததும் இல்லை, பார்த்ததும் இல்லை, ஆனாலும் அவர் இன்னும் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் மாம்சத்தின் சாராம்சம் ஆவியானவராக இருக்கிறார், மேலும் ஆவியானவரின் கிரியையைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார். மாம்சத்தால் அடையமுடியாத போதிலும், இந்தக் கிரியையானது ஆவியானவரால் ஏற்கனவே செய்யப்பட்ட கிரியையாக இருக்கிறது. மாம்சமான பிறகு, மாம்சத்தின் வெளிப்பாட்டின் மூலம், தேவன் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் ஜனங்களுக்கு உதவுகிறார், மேலும் தேவனின் மனநிலையையும் அவர் செய்த கிரியையையும் பார்க்க ஜனங்களை அனுமதிக்கிறார். மனுஷனின் கிரியையானது ஜனங்களுக்கு அவர்கள் எதில் பிரவேசிக்க வேண்டும், எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக தெளிவைத் தருகிறது; சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஜனங்களை வழிநடத்துவதும் இதில் அடங்கும். மனுஷனை நிலைநிற்கச் செய்வதே மனுஷனின் கிரியையாக இருக்கிறது; தேவனின் கிரியையானது மனுஷகுலத்திற்கான புதிய பாதைகளையும் புதிய யுகங்களையும் திறந்து வைப்பது, இறந்துபோகக்கூடியவர்களால் அறியப்படாதவற்றை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது, அவருடைய மனநிலையை ஜனங்கள் அறிந்து கொள்ள அனுமதிப்பது ஆகிய விஷயங்களைச் செய்கிறது. மனுஷகுலம் முழுவதையும் வழிநடத்துவதே தேவனின் கிரியையாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

319. பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளும் ஜனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் செய்யப்படுகின்றன. இது ஜனங்களை மேம்படுத்துவது பற்றியதாக இருக்கிறது; ஜனங்களுக்கு பயனளிக்காத எந்தக் கிரியையும் இருப்பதில்லை. சத்தியம் ஆழமானதா அல்லது ஆழமற்றதா என்பது முக்கியமல்ல, சத்தியத்தை ஏற்றுக்கொள்பவர்களின் திறமை எதுவாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் என்ன செய்தாலும், அது ஜனங்களுக்குப் பயனளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நேரடியாகச் செய்ய முடியாது; அதை அவருடன் ஒத்துழைக்கும் ஜனங்கள் மூலமாகத்தான் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறாக மட்டுமே பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் முடிவுகளைப் பெற முடியும். நிச்சயமாக, பரிசுத்த ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்யும்போது, அது கலப்படம் செய்யப்படுவதில்லை; ஆனால் பரிசுத்த ஆவியானவர் மனுஷன் மூலமாகக் கிரியை செய்யும்போது, அது மிகவும் கறைபடிந்து பரிசுத்த ஆவியானவரின் அசல் கிரியையாக இருப்பதில்லை. இது இவ்வாறு இருப்பதால், சத்தியமானது மாறுபட்ட அளவுகளுக்கு மாறுகிறது. பின்பற்றுபவர்கள் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான நோக்கத்தைப் பெறுவதில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, மனுஷனின் அனுபவம் மற்றும் அறிவின் கலவையை அவர்கள் பெறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியை சரியானது என்பதையே பின்பற்றுபவர்கள் பெறுவதன் ஒரு பகுதியாக இருக்கிறது, அதேசமயம் ஊழியக்காரர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதால் பின்பற்றுபவர்கள் பெறும் மனுஷனின் அனுபவமும் அறிவும் வேறுபடுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் தெளிவு மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய ஊழியக்காரர்கள் இந்தத் தெளிவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனுபவங்களைப் பெறுவார்கள். இந்த அனுபவங்களுக்குள் மனுஷனின் மனம் மற்றும் அனுபவம், மனுஷத்தன்மையின் இருப்பு ஆகியவை ஒன்றிணைக்கப்படுகின்றன, பின்னர் அவற்றில் இருக்க வேண்டிய அறிவு அல்லது நுண்ணறிவை அவர்கள் பெறுகின்றனர். சத்தியத்தை அனுபவித்த பிறகு இதுவே மனுஷனின் நடைமுறையாக இருக்கிறது. இந்த நடைமுறையானது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஏனென்றால் ஜனங்கள் வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள், மேலும் ஜனங்கள் அனுபவிக்கும் விஷயங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன. இவ்வாறாக, பரிசுத்த ஆவியானவரின் அதே தெளிவு வெவ்வேறு அறிவையும் நடைமுறையையும் விளைவிக்கிறது, ஏனென்றால் தெளிவைப் பெறுபவர்கள் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் நடைமுறையில் சிறிய தவறுகளைச் செய்கிறார்கள், சிலர் பெரிய தவறுகளைச் செய்கிறார்கள், சிலர் தவறுகளை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், ஜனங்கள் புரிந்துகொள்ளும் திறனில் வேறுபடுகிறார்கள், மேலும் அவர்களின் உள்ளார்ந்த திறன்களும் வேறுபடுகின்றன. சிலருக்கு ஒரு செய்தியைக் கேட்டபின் ஒருவித புரிதல் ஏற்படுகிறது, மேலும் சிலருக்கு ஒரு சத்தியத்தைக் கேட்டபின் வேறு மாதிரியான புரிதல் ஏற்படுகிறது. சிலர் சற்றே விலகுகிறார்கள், சிலருக்குச் சத்தியத்தின் உண்மையான அர்த்தம் புரிவதேயில்லை. எனவே, ஒருவனின் புரிதலானது அவன் மற்றவர்களை எவ்வாறு வழிநடத்துவான் என்பதைக் கூறுகிறது; இதுதான் சத்தியம், ஏனென்றால் ஒருவனின் கிரியை என்பது ஒருவர் இருப்பதற்கான வெளிப்பாடாகும். சத்தியத்தைப் பற்றிச் சரியான புரிதல் உள்ளவர்கள் தலைமையிலான ஜனங்களுக்கும் சத்தியத்தைப் பற்றிய சரியான புரிதல் இருக்கும். புரிதலில் பிழைகள் கொண்டவர்கள் இருந்தாலும், அவர்களில் மிகக் குறைவானவர்களே இருக்கிறார்கள், ஆனால் அனைவருக்கும் பிழைகள் இருப்பதில்லை. ஒருவனுக்குச் சத்தியத்தைப் புரிந்துகொள்வதில் பிழைகள் இருந்தால், அவனைப் பின்பற்றுபவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி பிழை கொண்டவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்கள் வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் பிழை கொண்டவர்களாக இருப்பார்கள். பின்தொடர்பவர்கள் எந்த அளவிற்கு உண்மையைப் புரிந்துகொள்கிறார்கள் என்பது பெரும்பாலும் ஊழியக்காரர்களைப் பொறுத்து இருக்கிறது. நிச்சயமாக, தேவனிடமிருந்து வரும் சத்தியம் சரியானதாகவும் பிழையில்லாமலும் இருக்கிறது, அது முற்றிலும் நிச்சயமானதாக இருக்கிறது. எவ்வாறாயினும், ஊழியக்காரர்கள் முற்றிலும் சரியானவர்களாக இருப்பதில்லை, மேலும் அவர்கள் முற்றிலும் நம்பகமானவர்கள் என்றும் கூறிவிட முடியாது. சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு ஊழியக்காரர்களுக்கு வழி இருந்தால், பின்பற்றுபவர்களுக்கும் நடைமுறைப்படுத்த ஒரு வழி இருக்கும். ஊழியக்காரர்களுக்குச் சத்தியத்தை கடைப்பிடிக்க ஒரு வழி இல்லை, ஆனால் கோட்பாடு மட்டும் இருக்கிறது என்றால், பின்தொடர்பவர்களுக்கு எந்த யதார்த்தமும் இருக்காது. பின்தொடர்பவர்களின் திறனும் தன்மையும் பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்றன, அவை ஊழியக்காரர்களுடன் தொடர்புடையவை அல்ல, ஆனால் பின்தொடர்பவர்கள் எந்த அளவிற்குச் சத்தியத்தை புரிந்துகொண்டு தேவனை அறிகிறார்கள் என்பது ஊழியக்காரர்களைப் பொறுத்தது (இது சிலருக்கு மட்டுமே). ஒரு ஊழியக்காரன் எப்படியாக இருக்கிறானோ, அவன் வழிநடத்தும் விசுவாசிகளும் அப்படித்தான் இருப்பார்கள். ஒரு ஊழியக்காரன் எவ்விதத் தடையும் இல்லாமல் தன்னை வெளிப்படுத்துகிறான். அவனைப் பின்பற்றுபவர்களிடம் அவன் வைக்கும் கோரிக்கைகளானது அவன் அவனாகவே அடைய விருப்பப்படும் அல்லது அவனாகவே அடைய முடிகிறவையாக இருக்கின்றன. பெரும்பாலான ஊழியக்காரர்கள் அவர்கள் தங்களுக்கு என்ன செய்துகொள்கிறார்களோ, அவர்களைப் பின்பற்றுபவர்களால் அதை ஒருபோதும் அடைய முடியாது என்றாலும், அதையே தங்களைப் பின்பற்றுபவர்களின் கோரிக்கைகளை வைப்பதற்கு ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள்—மேலும் ஒருவனால் அதை அடைய முடியவில்லை எனில், அவனே அவனது பிரவேசத்திற்குத் தடையாகிறான்.

கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களின் கிரியையில் மிகக் குறைவான விலகலே இருக்கிறது, மேலும் அவர்களுடைய கிரியையின் வெளிப்பாடு மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. கிரியை செய்ய தங்கள் சுபாவத்தை நம்பியிருப்பவர்கள் மிகப் பெரிய தவறுகளை செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு ஒரு பெரிய தடையாக இருக்கும் பரிபூரணமாக்கப்பட்ட கிரியையானது அவர்களின் இயல்புத்தன்மையை அதிகமாக வெளிப்படுத்துகிறது. ஒரு நபரின் திறமை எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கட்டளையின் கிரியையைச் செய்வதற்கு முன்பு அவர்கள் கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, நியாந்தீர்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்கள் அத்தகைய நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்காவிட்டால், அவர்களின் கிரியையானது எவ்வளவு சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தாலும், அதனால் சத்தியத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியாது, அது எப்போதும் அவர்களின் இயல்புத்தன்மை மற்றும் மனுஷனின் நற்குணம் ஆகியவற்றின் விளைவாகவே இருக்கும். கிளைநறுக்கப்படாமல், கையாளப்படாமல் மற்றும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படாதவர்களின் கிரியையை விட கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு மற்றும் நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களின் கிரியையானது மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. நியாத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படாதவர்கள், மனுஷ மாம்சம் மற்றும் எண்ணங்களைத் தவிர வேறொன்றையும் வெளிப்படுத்துவதில்லை, அவர்கள் அதிக மனுஷ நுண்ணறிவு மற்றும் உள்ளார்ந்த திறமைகளின் கலவையாக இருக்கிறார்கள். இது தேவனுடைய கிரியைக்கான மனுஷனின் துல்லியமான வெளிப்பாடு இல்லை. அத்தகையவர்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களுடைய இயல்பான திறமையால் அவர்களுக்கு முன் கொண்டு வரப்படுகிறார்கள். தேவனின் உண்மையான நோக்கத்திலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு, அதிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்லும் மனுஷனின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்தை அவை அதிகம் வெளிப்படுத்துவதால், இந்த வகை நபரின் கிரியையால் ஜனங்களை தேவனுக்கு முன்பாகக் கொண்டுவர முடியாது, ஆனால் அவர்களை மனுஷனுக்கு முன்பாகக் கொண்டுவருகிறது. எனவே, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்தப்படாதவர்கள் தேவனின் கட்டளை கிரியையைச் செய்ய தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். … ஒரு மனுஷன் பரிபூரணப்படுத்தப்படாமலும், அவனுடைய சீர்கெட்ட மனநிலை கிளைநறுக்கப்படாமலும், கையாளப்படாமலும் இருந்தால், அவன் வெளிப்படுத்தும் விஷயத்திற்கும் சத்தியத்திற்கும் இடையே ஒரு பரந்த இடைவெளி இருக்கும்; அவன் வெளிப்படுத்தும் விஷயங்களானது அவனது கற்பனை மற்றும் ஒருதலைப்பட்ச அனுபவம் போன்ற தெளிவற்ற விஷயங்களுடன் கலக்கப்படும். மேலும், அவன் எவ்வாறு கிரியை செய்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒட்டுமொத்த குறிக்கோளும் இல்லை, எல்லா ஜனங்களின் பிரவேசத்திற்கு ஏற்ப சத்தியமும் இல்லை என்பதை ஜனங்கள் உணர்கிறார்கள். மதில்சுவர்களில் வாத்துகளை உட்கார வைத்திருப்பதைப் போல, ஜனங்களிடம் கோரப்பட்டவற்றில் பெரும்பாலானவை அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இது மனுஷ விருப்பத்திற்கான கிரியையாக இருக்கிறது. மனுஷனின் சீர்கெட்ட மனநிலை, அவனது எண்ணங்கள் மற்றும் அவனது கருத்துக்கள் அவனது உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. மனுஷன் சத்தியத்தை கடைப்பிடிக்கும் உள்ளுணர்வோடு பிறப்பதில்லை, சத்தியத்தை நேரடியாகப் புரிந்து கொள்ளும் உள்ளுணர்வும் அவனுக்கு இருப்பதில்லை. இதனை அந்த மனுஷனின் சீர்கெட்ட மனநிலையுடன் சேர்த்தால்—இந்த வகையான சுபாவம் கொண்ட நபர் கிரியை செய்யும்போது, இது குறுக்கீடுகளை ஏற்படுத்தாதா? ஆனால் பரிபூரணமான ஒரு மனுஷனுக்கு ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியத்தின் அனுபவமும், அவர்களின் சீர்கெட்ட மனநிலையைப் பற்றிய அறிவும் இருக்கிறது, இதனால் அவனது கிரியையில் உள்ள தெளிவற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்கள் படிப்படியாகக் குறைந்து, மனுஷ கலப்படம் குறைந்து, அவனுடைய கிரியையும் சேவையும் தேவனுக்கு தேவைப்படும் தரங்களுக்கு மிக நெருக்கத்தில் வரும். இவ்வாறு, அவனது கிரியை சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் நுழைந்திருக்கிறது, அது யதார்த்தமாகவும் மாறிவிட்டது. குறிப்பாக மனுஷனின் மனதில் உள்ள எண்ணங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கின்றன. மனுஷனுக்கு வளமான கற்பனையும் நியாயமான தர்க்கமும் இருக்கிறது, மேலும் அவன் விவகாரங்களைக் கையாண்ட நீண்ட அனுபவத்தையும் கொண்டிருக்கிறான். மனுஷனின் இந்த அம்சங்கள் கிளைநறுக்கப்பட்டு மற்றும் திருத்தப்படாவிட்டால், இவை அனைத்தும் கிரியை செய்வதற்கான தடைகளாகத்தான் இருக்கும். எனவே, மனுஷனின் கிரியையானது மிக உயர்ந்த துல்லியத்தை அடைய முடியாது, குறிப்பாக பரிபூரணமாக்கப்படாத ஜனங்களின் கிரியை மிக உயர்ந்த துல்லியத்தை அடைய முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

320. மனுஷனின் கிரியையானது ஒரு எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது. மனுஷனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் கிரியையை மட்டுமே செய்ய முடியும், முழு யுகத்தின் கிரியையையும் செய்ய முடியாது—இல்லையெனில், அவன் ஜனங்களை விதிகளுக்கு மத்தியில் அழைத்துச் செல்வான். மனுஷனின் கிரியையானது ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால், மனுஷனின் அனுபவத்திற்கு எல்லை இருக்கிறது. மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. மனுஷன் நடக்கும் வழிகள் மற்றும் சத்தியத்தைப் பற்றிய அவனது அறிவு ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பொருந்தும். மனுஷன் பயணிக்கும் பாதையானது முற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் சித்தம் தான் என்று உன்னால் கூற முடியாது, ஏனென்றால் மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே தெளிவு பெற முடியும், மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் முழுமையாக நிரம்பியிருக்கவும் முடியாது. மனுஷன் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் சாதாரண மனுஷத்தன்மையின் எல்லைக்குள் இருக்கின்றன, மேலும் அவற்றால் சாதாரண மனுஷ மனதில் இருக்கும் எண்ணங்களின் வரம்பை மீற முடியாது. சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் ஜீவிக்க முடிந்தவர்கள் இந்த வரம்பிற்குள் தான் அனுபவிப்பார்கள். அவர்கள் சத்தியத்தை அனுபவிக்கும்போது, அது எப்போதும் பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெற்ற சாதாரண மனுஷ ஜீவிதத்தின் அனுபவமாகவே இருக்கிறது; இது சாதாரண மனுஷ ஜீவிதத்திலிருந்து விலகிச் செல்லும் அனுபவமாக இருப்பதில்லை. தங்கள் மனுஷ ஜீவிதத்தை ஜீவிப்பதற்கான அஸ்திபாரத்தில் பரிசுத்த ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட சத்தியத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். மேலும், இந்த சத்தியமானது நபருக்கு நபர் மாறுபடுகிறது, அதன் ஆழமானது அந்த நபரின் மனநிலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அவர்கள் நடந்துகொண்டிருக்கும் பாதையானது சத்தியத்தைப் பின்தொடரும் ஒருவரின் சாதாரண மனுஷ ஜீவிதம் தான் என்று உன்னால் சொல்ல மட்டுமே முடியும், மேலும் இது பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெற்ற ஒரு சாதாரண மனுஷன் நடந்து சென்ற பாதை என்றும் அழைக்கப்படலாம். அவர்கள் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்லும் பாதை தான் என்று உன்னால் சொல்ல முடியாது. சாதாரண மனுஷ அனுபவத்தில், பின்பற்றுபவர்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும், ஜனங்கள் அனுபவிக்கும் சூழல்களும் அவர்களின் அனுபவத்தின் வரம்புகளும் ஒரே மாதிரியாக இல்லாததாலும், அவர்களின் மனம் மற்றும் எண்ணங்களின் கலவையின் காரணமாகவும், அவர்களின் அனுபவமானது வெவ்வேறு அளவுகளில் கலக்கப்படுகிறது. ஒவ்வொருவனும் வெவ்வேறு, தனிப்பட்ட நிலைமைகளுக்கு ஏற்ப ஒரு சத்தியத்தைப் புரிந்துகொள்கிறான். சத்தியத்தின் உண்மையான அர்த்தத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் முழுமையடையாமல் இருக்கிறது, மேலும் அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மனுஷனின் நிபந்தனைகளுக்கு ஏற்ப மனுஷன் அனுபவிக்கும் சத்தியத்தின் நோக்கமானது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. இவ்வாறாக, வெவ்வேறு நபர்களால் வெளிப்படுத்தப்படும் ஒரே சத்தியத்தின் அறிவானது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது, மனுஷனின் அனுபவமானது எப்போதுமே வரம்புகளைக் கொண்டிருக்கிறது, மேலும் அந்த அனுபவத்தால் பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மனுஷனால் வெளிப்படுத்தப்படும் விஷயங்கள் தேவனின் சித்தத்திற்கு மிக நெருக்கமாக ஒத்திருந்தாலும் கூட, மேலும் மனுஷனின் அனுபவமானது பரிசுத்த ஆவியானவர் செய்யும் பரிபூரணமாக்கும் கிரியைக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் கூட மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையாக உணர்ந்துகொள்ள முடியாது. மனுஷன் தேவனின் ஊழியனாக மட்டுமே இருக்க முடியும், தேவன் அவனிடம் ஒப்படைக்கும் கிரியையைச் செய்யும் ஊழியனாக மட்டுமே அவனால் இருக்க முடியும். மனுஷனால் பரிசுத்த ஆவியானவரால் தெளிவுபடுத்தப்பட்ட அறிவையும் அவனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சத்தியங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மனுஷன் தகுதியற்றவன், பரிசுத்த ஆவியானவரை வெளிப்படுத்துபவனாக இருப்பதற்குத் தேவனையான நிபந்தனைகளை அவன் பூர்த்தி செய்வதில்லை. அவனுடைய கிரியையானது தேவனின் கிரியை என்று சொல்ல அவனுக்கு உரிமை இல்லை. மனுஷனிடம், மனுஷனின் கிரியை செய்வதற்கான கொள்கைகள் இருக்கின்றன, மேலும் எல்லா மனுஷரும் வெவ்வேறு அனுபவங்களையும் மாறுபட்ட நிலைமைகளையும் கொண்டுள்ளனர். மனுஷனின் கிரியையில் பரிசுத்த ஆவியானவரின் தெளிவிற்குக் கீழ் இருக்கும் அவனது அனுபவங்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இந்த அனுபவங்களால் மனுஷன் இருப்பதை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், தேவன் இருப்பதை அல்லது பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆகையால், மனுஷன் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதை என்று சொல்ல முடியாது, ஏனென்றால் மனுஷனின் கிரியையால் தேவனின் கிரியையை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் மனுஷனின் கிரியையும் அனுபவமும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையான சித்தமல்ல. மனுஷனின் கிரியையானது எளிதில் விதிகளுக்குள் சிக்கிக்கொள்கிறது, மேலும் அவனது கிரியையின் முறையானது எளிதில் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் அதனால் ஜனங்களை ஒரு சுதந்திரமான வழியில் அழைத்துச் செல்ல இயலாது. பின்பற்றும் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர், மேலும் அவர்கள் அனுபவிக்கும் முறையும் அதன் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனுஷனின் அனுபவமானது எப்போதும் குறைவானதாகவே இருக்கிறது; அவனுடைய கிரியையின் முறையும் ஒரு சில வகைகளுக்கு என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனை பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்லது தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மனுஷனின் அனுபவமானது இறுதியில் குறைவானதாகவே இருக்கிறது. தேவன் தமது கிரியையை எப்படிச் செய்தாலும், அது விதிகளுக்குக் கட்டுப்பட்டதாக இருப்பதில்லை; அது எவ்வாறாக செய்யப்பட்டாலும், அது ஒரேயொரு முறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதில்லை. தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை—அவருடைய எல்லா கிரியைகளும் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக இருக்கின்றன. மனுஷன் அவரைப் பின்தொடர எவ்வளவு நேரம் செலவிட்டாலும், தேவன் கிரியை செய்யும் முறைகளை ஆளும் எந்த சட்டங்களையும் அவனால் வடிகட்டிட முடியாது. அவரது கிரியையானது கொள்கை ரீதியானது தான் என்றாலும், அது எப்போதும் புதிய வழிகளில் செய்யப்படுகிறது, எப்போதும் புதிய முன்னேற்றங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் அது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. ஒரே காலகட்டத்தில், தேவனுக்குப் பல்வேறு வகையான கிரியைகள் மற்றும் ஜனங்களை வழிநடத்தும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம், இதன் மூலம் ஜனங்கள் எப்போதும் புதிய பிரவேசங்களையும் மாற்றங்களையும் கொண்டிருப்பார்கள். அவருடைய கிரியையின் சட்டங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது, ஏனென்றால் அவர் எப்போதும் புதிய வழிகளில் கிரியை செய்கிறார், இதனால் மட்டுமே தேவனைப் பின்பற்றுபவர்கள் விதிகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தேவனின் கிரியையானது எப்போதுமே ஜனங்களின் கருத்துக்களைத் தவிர்த்து, அவற்றை எதிர்க்கிறது. உண்மையான இருதயத்தோடு தேவனைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே அவர்களின் மனநிலையை மாற்றியமைத்து சுதந்திரமாக வாழ முடியும், எந்தவொரு விதிகளுக்கும் உட்படுத்தப்படாமலும் அல்லது எந்த மதக் கருத்துக்களாலும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்க முடியும். மனுஷனின் கிரியையானது அவனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், அவனால் எதை அடைய முடியும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஜனங்களுக்குக் கோரிக்கைகளை வைக்கிறது. இந்த கோரிக்கைகளின் தரமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது, மேலும் நடைமுறைக்கான வழிமுறைகளும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இவ்வாறு, பின்பற்றுபவர்கள் தங்களை அறியாமலேயே இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர்; காலம் செல்லச் செல்ல, இவை விதிகளாகவும் சடங்குகளாகவும் மாறுகின்றன. ஒரு காலகட்டத்தின் கிரியையானது தேவனின் தனிப்பட்ட பரிபூரணத்திற்கு உட்படுத்தப்படாத மற்றும் நியாயத்தீர்ப்பைப் பெறாத ஒருவனால் வழிநடத்தப்பட்டால், அவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தேவனை எதிர்ப்பதில் மதவாதிகளாகவும் நிபுணர்களாகவும் மாறுவார்கள். எனவே, ஒருவன் ஒரு தகுதி வாய்ந்த தலைவராக இருந்தால், அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு, பரிபூரணமடைவதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படாதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருந்தாலும், தெளிவற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். காலப்போக்கில், அவர்கள் ஜனங்களை தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதிகளுக்கு வழிநடத்திச் சென்றுவிடுவார்கள். தேவன் செய்யும் கிரியையானது மனுஷனின் மாம்சத்துடன் ஒத்துப்போவதில்லை. இது மனுஷனின் எண்ணங்களுடன் ஒத்துப்போவதில்லை, ஆனால் மனுஷனின் கருத்துக்களை எதிர்க்கிறது; இது தெளிவற்ற மதச் சாயங்களுடன் களங்கப்படுத்தப்படுவதும் இல்லை. தேவனுடைய கிரியையின் முடிவுகளை அவரால் பரிபூரணப்படுத்தப்படாத ஒருவனால் அடைய முடியாது; அவை மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

321. மனுஷனின் மனதில் இருக்கும் கிரியையானது மனுஷனால் மிக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, மத உலகில் உள்ள போதகர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தங்கள் கிரியையைச் செய்ய தங்களின் வரங்களையும் பதவிகளையும் நம்பியிருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்களைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வரங்களால் பாதிக்கப்படுவார்கள், அவர்களில் சிலராலேயே ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். அவர்கள் ஜனங்களின் வரங்கள், திறன்கள் மற்றும் அறிவில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மற்றும் பல ஆழமான, நம்பத்தகாத கோட்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள் (நிச்சயமாக, இந்த ஆழமான கோட்பாடுகள் அடைய முடியாதவை). அவர்கள் ஜனங்களின் மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துவதில்லை, மாறாக, பிரசங்கிக்கவும் கிரியை செய்யவும் ஜனங்களைப் பயிற்றுவிப்பதிலும், ஜனங்களின் அறிவையும் அவர்களின் ஏராளமான மதக் கோட்பாடுகளையும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். ஜனங்களின் மனநிலை எவ்வளவு மாறியிருக்கிறது அல்லது ஜனங்கள் சத்தியத்தை எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் ஜனங்களின் சாராம்சத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, மேலும் ஜனங்களின் இயல்பான மற்றும் அசாதாரண நிலைகளை அறிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்வதே இல்லை. அவர்கள் ஜனங்களின் கருத்துக்களை எதிர்ப்பதில்லை, அல்லது அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் இல்லை, அவர்கள் குறைபாடுகள் அல்லது சீர்கேடுகளுக்காக ஜனங்களை கிளை நறுக்குவதும் இல்லை. அவர்களைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் தங்கள் வரங்களைக் கொண்டு ஊழியம் செய்கிறார்கள், மேலும் அவர்கள் மதக் கருத்துக்களையும் இறையியல் கோட்பாடுகளையும் தான் வெளிப்படுத்துகிறார்கள், அவை யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவை, மேலும் அவற்றால் ஜனங்களுக்கு ஜீவிதத்தை முழுமையாக வழங்கவும் இயலாது. உண்மையில், அவர்களுடைய கிரியையின் சாராம்சமானது திறமையை வளர்ப்பது, ஒன்றுமில்லாதவனைப் பின்னர் அவன் பணிக்கு சென்று வழிநடத்தும் ஒருவனாக மாற்ற ஒரு திறமையான இறையியல் கல்லூரி பட்டதாரியாக வளர்ப்பது ஆகியவை தான். தேவனின் ஆறாயிரம் ஆண்டுக்காலக் கிரியைகளில் இருக்கும் ஏதேனும் சட்டங்களை நீ அறிவாயா? மனுஷன் செய்யும் கிரியையில் பல விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன, மேலும் மனுஷ மூளை மிகவும் இறுமாப்புள்ளதாக இருக்கிறது. ஆகவே, மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்தின் எல்லைக்குள் இருக்கும் அறிவு மற்றும் புரிதலாகவே இருக்கிறது. இதைத் தவிர மனுஷனால் எதையும் வெளிப்படுத்த முடிவதில்லை. மனுஷனின் அனுபவங்கள் அல்லது அறிவானது அவனது உள்ளார்ந்த வரங்களிலிருந்தோ அல்லது அவனது உள்ளுணர்விலிருந்தோ எழுவதில்லை; அவை தேவனின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி வழிநடத்துதல் காரணமாக எழுகின்றன. இந்த வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளும் மனத்திறன் மட்டுமே மனுஷனிடம் இருக்கிறது, ஆனால் தெய்வீகத்தன்மை என்பது என்ன என்பதை நேரடியாக வெளிப்படுத்தக்கூடிய எந்த மனத்திறனும் இல்லை. மனுஷனால் ஊற்றாக இருக்க முடியாது; அவனால் ஊற்றிலிருந்து வரும் தண்ணீரை ஏற்றுக்கொள்ளும் ஒரு பாத்திரமாக மட்டுமே இருக்க முடியும். இதுவே மனுஷனின் உள்ளுணர்வு ஆகும், ஒரு மனுஷனாக இருக்க வேண்டியவனிடம் இருக்கக்கூடிய மனத்திறன் இதுதான். தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனத்திறனை மனுஷன் இழந்து, உள்ளுணர்வையும் இழந்தால், அவன் மிகவும் விலையேறப்பெற்றதை இழந்து, சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் கடமையையும் இழக்கிறான். ஒருவன் தேவனின் வார்த்தையையோ அல்லது அவரது கிரியையையோ அறிந்திருக்கவில்லை அல்லது அதைப்பற்றிய அனுபவம் அவனுக்கு இல்லை என்றால், அவன் தனது கடமையை இழக்கிறான், அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக அவன் செய்ய வேண்டிய கடமை, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன் என்ற மேன்மையையும் இழக்கிறான். தெய்வீகம் என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துவது தேவனின் உள்ளுணர்வாக இருக்கிறது, இது மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டாலும் அல்லது நேரடியாக ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டாலும்; இது தேவனின் ஊழியம் தான். மனுஷன் தேவனின் கிரியையின் போது அல்லது அதற்குப் பிறகு தனது சொந்த அனுபவங்களை அல்லது அறிவை வெளிப்படுத்துகிறான் (அதாவது, அவன் யார் என்பதை வெளிப்படுத்துகிறான்); இதுவே மனுஷனின் உள்ளுணர்வும் கடமையுமாகும், மேலும் மனுஷன் அடைய வேண்டியதும் இதுதான். மனுஷனின் வெளிப்பாடு தேவன் வெளிப்படுத்துவதை விட மிகக் குறைவுதான் என்றாலும், மனுஷனின் வெளிப்பாடு பல விதிகளுக்குக் கட்டுப்பட்டிருந்தாலும், மனுஷனானவன் அவன் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும், மேலும் அவன் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். மனுஷன் தன் கடமையை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், அவனுக்குச் சிறிதளவு தயக்கமும் இருக்கக்கூடாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

322. “மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகளுக்கும், கடந்த கால தீர்க்கதரிசிகளும் மற்றும் அப்போஸ்தலர்களும் செய்தவற்றிற்கும் வித்தியாசம் என்ன? தாவீது கர்த்தர் என்றும் அழைக்கப்பட்டார், இயேசுவும் அப்படித்தான். அவர்கள் செய்த கிரியை வேறுபட்டிருந்தாலும், அவை ஒரே காரியமென்று அழைக்கப்பட்டன. எனக்குச் சொல்லுங்கள், ஏன் அவர்களின் அடையாளங்கள் ஒன்று போல் இல்லை? யோவான் கண்டது ஒரு தரிசனமாக இருந்தது, அதுவும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்ததாக இருந்தது, மேலும் பரிசுத்த ஆவியானவர் சொல்ல நினைத்த வார்த்தைகளை அவரால் சொல்ல முடிந்தது. யோவானின் அடையாளம் இயேசுவின் அடையாளத்திலிருந்து ஏன் வேறுபட்டது?” என்று சிலர் கேட்பார்கள். இயேசு பேசிய வார்த்தைகளால் தேவனை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது, அவை தேவனின் கிரியையை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தின. யோவான் கண்டது ஒரு தரிசனம், அவர் தேவனின் கிரியையை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த இயலாமல் இருந்தார். இயேசுவைப் போலவே யோவானும், பேதுருவும், பவுலும் அநேக வார்த்தைகளைப் பேசினார்கள், ஆனாலும் அவர்கள் ஏன் இயேசுவைப் போன்ற அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை? அவர்கள் செய்த கிரியை வேறுபட்டது என்பதே இதற்கு முக்கிய காரணம். இயேசு தேவனுடைய ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், தேவனுடைய ஆவியானவர் நேரடியாக கிரியை செய்து கொண்டிருந்தார். இதற்கு முன்பு யாரும் செய்திராத கிரியையான புதிய யுகத்தின் கிரியையை அவர் செய்தார். அவர் ஒரு புதிய வழியைத் திறந்தார், அவர் யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் தேவனையே பிரதிநிதித்துவப்படுத்தினார், அதேசமயம் பேதுரு, பவுல் மற்றும் தாவீது ஆகியோர் இயேசுவால் அல்லது யேகோவாவால் அனுப்பப்பட்டவர்கள், அவர்கள் எதற்காக அழைக்கப்பட்டார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தேவனின் ஒரு சிருஷ்டிப்பின் அடையாளத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆகவே, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், எவ்வளவு பெரிய அற்புதங்களைச் செய்தாலும், அவர்கள் இன்னும் தேவனின் ஆவியானவரை பிரதிநிதித்துவப்படுத்த முடியாமல் தேவனின் சிருஷ்டிகளாக இருந்தனர். அவர்கள் தேவனின் நாமத்தால் கிரியை செய்தார்கள் அல்லது தேவனால் அனுப்பப்பட்ட பிறகு கிரியை செய்தார்கள். மேலும், அவர்கள் இயேசு அல்லது யேகோவா ஆரம்பித்த யுகங்களில் கிரியை செய்தார்கள், அவர்கள் வேறு எந்த கிரியையும் செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தேவனின் சிருஷ்டிப்புகளாக மட்டுமே இருந்தனர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து

323. கிருபையின் யுகத்தில், இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், அதிகக் கிரியைகள் செய்தார். அவர் ஏசாயாவை விட எவ்வாறு வேறுபட்டவர்? அவர் தானியேலை விட எவ்வாறு வேறுபட்டவர்? அவர் ஒரு தீர்க்கதரிசியா? அவர் ஏன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்? அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? அவர்கள் அனைவரும் வார்த்தைகளைப் பேசிய மனுஷர், அவர்களுடைய வார்த்தைகள் மனுஷனுக்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் தோன்றின. அவர்கள் அனைவரும் வார்த்தைகளைப் பேசினர், கிரியைகள் செய்தனர். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களைப் பேசினார்கள், அதே விஷயத்தை இயேசுவினாலும் செய்திருக்க முடியும். இது ஏன் அப்படி? இங்கே வேறுபாடானது கிரியையின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயத்தை அறிய, நீ மாம்சத்தின் தன்மையை கருத்தில் கொள்ளக்கூடாது, அல்லது அவர்களின் சொற்களின் ஆழத்தையோ அல்லது மேலோட்டமான சாரத்தையோ நீ கருத்தில் கொள்ளக்கூடாது. எப்போதும் நீ முதலில் அவர்களின் கிரியைகளையும், அந்தக் கிரியைகள் மனுஷனில் ஏற்படுத்தும் விளைவுகளையுமே கருத்தில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனங்கள் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவில்லை, மேலும் ஏசாயா, தானியேல் போன்றவர்களால் பெறப்பட்ட உத்வேகங்கள் வெறும் தீர்க்கதரிசனங்களாக மட்டுமே இருந்தன, ஜீவவழியாக இருக்கவில்லை. யேகோவாவின் நேரடி வெளிப்பாடு இல்லாவிட்டால், மனுஷருக்குச் சாத்தியமில்லாத அந்தக் கிரியையை யாராலும் செய்திருக்க முடியாது. இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், ஆனால் அத்தகைய வார்த்தைகள் மனுஷனால் கடைப்பிடிக்கக் கூடிய ஜீவவழிக்கானப் பாதையை கண்டுபிடிக்க உதவும்படி இருந்தன. அதாவது, முதலாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை அவனுக்கு வழங்க முடியும், ஏனென்றால் இயேசு ஜீவனாக இருக்கிறார்; இரண்டாவதாக, அவரால் மனுஷனின் வழிவிலகல்களை மாற்றியமைக்க முடியும்; மூன்றாவதாக, யுகத்தைத் தொடர யேகோவாவின் கிரியைகளைப் பின்பற்றி அவரது கிரியைகள் செயல்படக்கூடும்; நான்காவதாக, அவரால் மனுஷனுக்குள் இருக்கும் தேவைகளையும், மனுஷனிடம் இல்லாததைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஐந்தாவதாக, அவரால் ஒரு புதிய யுகத்தில் நுழைந்து பழையதை முடித்துவைக்க முடியும். அதனால்தான் அவர் தேவன் என்றும், கிறிஸ்து என்றும் அழைக்கப்படுகிறார்; அவர் ஏசாயாவிடமிருந்து மட்டுமல்ல, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளிடமிருந்தும் வேறுபட்டவர். ஏசாயாவை தீர்க்கதரிசிகளின் கிரியைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முதலாவதாக, அவனால் மனுஷனுக்கான ஜீவனை வழங்க முடியவில்லை; இரண்டாவதாக, அவனால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடியவில்லை. அவன் யேகோவாவின் தலைமையில் பணிபுரிந்து கொண்டிருந்தான், ஆனால் ஒரு புதிய யுகத்தை தொடங்கவில்லை. மூன்றாவதாக, அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அவன் தேவனுடைய ஆவியிலிருந்து நேரடியாக வெளிப்பாடுகளைப் பெற்றுவந்தான், மற்றவர்கள் அவற்றைக் கேட்டாலும் கூட அவர்களுக்குப் புரியாது. அவனுடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனங்களை விடவும், யேகோவாவின் இடத்தில் செய்யப்படும் கிரியையின் அம்சத்தை விடவும் பெரியது இல்லை என்பதை நிரூபிக்க இந்த சில விஷயங்கள் மட்டுமே போதுமானவை. ஆயினும், அவனால் யேகோவாவை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை. அவன் யேகோவாவின் ஊழியனாக இருந்தான், யேகோவாவின் கிரியையில் ஒரு கருவியாக இருந்தான். அவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்குள்ளும், யேகோவாவின் கிரியையின் எல்லைக்குள்ளும் மட்டுமே கிரியை செய்து கொண்டிருந்தான்; அவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தைத் தாண்டி கிரியை செய்யவில்லை. இதற்கு மாறாக, இயேசுவின் கிரியை வேறுபட்டதாக இருந்தது. அவர் யேகோவாவின் கிரியையின் வரம்பை மிஞ்சினார்; சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் மனுஷனாக அவதரித்த தேவனாகக் கிரியை செய்தார், மேலும் சிலுவையிலும் அறையப்பட்டார். அதாவது, யேகோவா செய்த கிரியைக்கு வெளியே அவர் புதிய கிரியையைச் செய்தார். இது ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியது. மேலும், மனுஷனால் அடைய முடியாததைப் பற்றி அவரால் பேச முடிந்தது. அவருடைய கிரியை தேவனின் ஆளுகைக்குட்பட்ட கிரியையாக இருந்தது, இது மனுஷகுலம் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அவர் ஒரு சில மனுஷருக்காக மட்டும் கிரியை செய்யவில்லை, அவரது கிரியை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுஷரை மட்டும் வழிநடத்துவதாக இருக்கவில்லை. தேவன் ஒரு மனுஷனாக எப்படி அவதரித்தார், அந்த நேரத்தில் ஆவியானவர் எவ்வாறு வெளிப்பாடுகளைக் கொடுத்தார், ஆவியானவர் எவ்வாறு ஒரு மனுஷன் மீது இறங்கி கிரியை செய்யத் தொடங்கினார்—இவை மனுஷரால் பார்க்கவோ தொடவோ முடியாத விஷயங்கள். அவர் மனுஷனாக அவதரித்த தேவன் என்பதற்கு இந்த உண்மைகள் சான்றாக செயல்படுவது முற்றிலும் சாத்தியமற்றது. எனவே, மனுஷனுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகளில் மட்டுமே அவனால் வேறுபாடு காண முடியும். இது மட்டுமே உண்மையானது. ஏனென்றால், ஆவியானவரின் விஷயங்கள் உனக்குப் புலப்படாது, அவை தேவனால் மட்டுமே தெளிவாக அறியப்படுகின்றன, மேலும் மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சத்தால் கூட அவற்றை அறிய முடியாது; அவர் செய்த கிரியைகளிலிருந்து மட்டுமே அவர் தேவன் தானா என்பதை உன்னால் சரிபார்க்க முடியும். அவருடைய கிரியையிலிருந்து, முதலில், அவரால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடிகிறது என்பதைக் காணலாம்; இரண்டாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவும், மனுஷன் பின்பற்றுவதற்கான வழியைக் காட்டவும் முடியும். அவர் தான் தேவன் என்பதை நிரூபிக்க இது போதுமானது. குறைந்தபட்சம், அவர் செய்யும் கிரியையால் தேவ ஆவியானவரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அத்தகைய கிரியையிலிருந்து தேவ ஆவி அவருக்குள் இருப்பதைக் காணலாம். மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகள் முக்கியமாக ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கும், புதியக் கிரியைகளை வழிநடத்துவதற்கும் மற்றும் ஒரு புதிய சாம்ராஜ்யத்தைத் தொடங்குவதற்குமாக இருந்ததால், அவர் மட்டுமே தேவன் என்பதை உறுதிப்படுத்த இவை மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இது அவரை ஏசாயா, தானியேல் மற்றும் பிற பெரிய தீர்க்கதரிசிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

324. கிருபையின் யுகத்தில், யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான். யோவானால் தேவனின் கிரியையைச் செய்ய முடியவில்லை, ஆனால் மனுஷனின் கடமையை மட்டுமே நிறைவேற்றினான். யோவான் கர்த்தருடைய முன்னோடியாக இருந்தான் என்றாலும், அவனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை; அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் மட்டுமே. இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல அவர்மீது இறங்கினார். பின்னர் அவர் தமது கிரியையைத் தொடங்கினார், அதாவது அவர் கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்யத் தொடங்கினார். அதனால்தான் அவர் தேவனின் அடையாளத்தைச் சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அது அவர் வந்த தேவனிடமிருந்து வந்தது. இதற்கு முன்பு அவருடைய விசுவாசம் எப்படியிருந்திருந்தாலும்—அது சில சமயங்களில் பலவீனமாக இருந்திருக்கலாம், அல்லது சில சமயங்களில் வலுவாகவும் இருந்திருக்கலாம்—அவை அனைத்தும் அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வழிநடத்தியச் சாதாரண மனுஷ ஜீவிதத்தைச் சேர்ந்தவை. அவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகு (அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட பின்), தேவனின் வல்லமையும் மகிமையும் உடனடியாக அவரிடத்தில் வந்துசேர்ந்தன, ஆகவே அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கினார். அவரால் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடிந்தது, அதிசயங்களைச் செய்ய முடிந்தது, அவருக்கு வல்லமையும் அதிகாரமும் இருந்தன, ஏனென்றால் அவர் நேரடியாக தேவனின் சார்பாகக் கிரியை செய்துவந்தார்; அவர் ஆவியானவரின் கிரியையை அவருக்குப் பதிலாகச் செய்து ஆவியானவரின் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகையால், அவரே தேவன்; இது மறுக்க முடியாதது. யோவான் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒருவன். அவனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாத்தியமும் அவனுக்கு இல்லை. அவன் அவ்வாறு செய்ய விரும்பியிருந்தால், பரிசுத்த ஆவியானவர் அதை அனுமதித்திருக்க மாட்டார், ஏனென்றால் தேவன் அவராகவே நிறைவேற்ற நினைத்தக் கிரியையை அவனால் செய்ய முடியவில்லை. ஒருவேளை மனுஷன் நிறைய விருப்பங்களைக் கொண்டிருந்திருக்கலாம், அல்லது மாறுபட்ட ஏதோவொன்று இருந்திருக்கலாம்; எந்தச் சூழ்நிலையிலும் அவனால் நேரடியாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடிந்திருக்காது. அவனுடைய தவறுகளும் பிழைகளும் அவனை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தின, ஆனால் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது. ஆனாலும், அவனுடைய அனைத்தும் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்று உன்னால் சொல்ல முடியாது. அவனுடைய விலகலும் பிழையும் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? மனுஷனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தவறு இருப்பது இயல்பானது, ஆனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஒருவன் மாறுபட்டவனாக இருந்தால், அது தேவனை அவமதிப்பதாக இருக்காதா? அது பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணம் அல்லவா? மற்றவர்களால் உயர்த்தப்பட்டாலும், தேவனின் இடத்தில் நிற்க பரிசுத்த ஆவியானவர் மனுஷனை அனுமதிப்பதில்லை. அவன் தேவன் இல்லையென்றால், அவனால் இறுதியில் நிலையாக நிற்க முடியாது. மனுஷன் விரும்பியபடி தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த பரிசுத்த ஆவியானவர் மனுஷனை அனுமதிப்பதில்லை! உதாரணமாக, பரிசுத்த ஆவியானவர் யோவானுக்கு சாட்சியம் அளித்தார், அவன் தான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தியவன் என்பதை வெளிப்படுத்தியதும் பரிசுத்த ஆவியானவர் தான், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவன்மீது செய்த கிரியைகள் நன்கு அளவிடப்பட்டிருந்தன. யோவானிடம் கேட்கப்பட்டதெல்லாம், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும், அவருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பன மட்டுமே. அதாவது, பரிசுத்த ஆவியானவர், வழியை ஆயத்தப்படுத்தும் அவனுடையக் கிரியையை மட்டுமே ஆதரித்தார், அத்தகையக் கிரியையைச் செய்ய மட்டுமே அவனை அனுமதித்தார்—வேறு எந்தக் கிரியையும் செய்ய அவனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. யோவான் எலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினான், மேலும் வழியை ஆயத்தப்படுத்த ஒரு தீர்க்கதரிசியையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்தினான். பரிசுத்த ஆவியானவர் இவ்விஷயத்தில் அவனை ஆதரித்தார்; அவனுடைய கிரியை வழிவகுப்பதாக இருக்கும் வரை, பரிசுத்த ஆவியானவர் அவனை ஆதரித்தார். இருப்பினும், அவனே தேவனாக இருப்பதாகக் கூறி, மீட்பின் கிரியையை முடிக்க வந்திருப்பதாகச் சொன்னால், பரிசுத்த ஆவியானவர் அவனை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்திருக்கும். யோவானின் கிரியை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கிரியைக்கு எல்லைகள் இல்லாமல் இல்லை. பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கிரியையை உண்மையிலேயே ஆதரித்தார் என்பது உண்மையாக இருப்பினும், அந்த நேரத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வல்லமை அவன் வழியை ஆயத்தப்படுத்த மட்டுமே என வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவனால் வேறு எந்தக் கிரியையும் செய்ய முடியவில்லை, ஏனென்றால் அவன் வழியை ஆயத்தப்படுத்த வந்த யோவான் மட்டுமே, இயேசு அல்ல. ஆகையால், பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் முக்கியமானது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் மனுஷனைச் செய்ய அனுமதிக்கும் கிரியை அதைவிட முக்கியமானது. அந்த நேரத்தில் யோவானுக்கு அற்புதமான சாட்சியம் கிடைக்கவில்லையா? அவனது கிரியையும் பெரிதாக இருக்கவில்லையா? ஆனால் அவன் செய்த கிரியையானது இயேசுவை விட அதிகமானதாக இருக்க முடியாது, ஏனென்றால் அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் மட்டுமே, மேலும் தேவனை அவனால் நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, எனவே அவன் செய்த கிரியை வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவன் தனது ஆயத்தப்படுத்தும் கிரியையை முடித்தபின், பரிசுத்த ஆவியானவர் அவனது சாட்சியத்தை ஆதரிக்கவில்லை, புதிய கிரியைகள் எதுவும் அவனுக்குக் கொடுக்கப்படவில்லை, தேவன் அவராகவே கிரியை செய்யத் தொடங்கியவுடன் அவன் புறப்பட்டுச் சென்றான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து

325. யோவான், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்றும் கூறினான், அவன் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தையும் பிரசங்கித்தான், ஆனாலும் அவனுடைய கிரியை மேலும் வளர்ச்சியடையவில்லை, வெறுமனே ஒரு தொடக்கமாக மட்டுமே அமைந்தது. இதற்கு நேர்மாறாக, இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், அதேபோல் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், மேலும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தையும் அவர் நிறைவேற்றினார். அவர் செய்த கிரியை யோவான் செய்ததை விடப் பெரியதாக இருந்தது, மேலும் சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் வந்தார்—கிரியையின் அந்தக் கட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் யோவானைப் பொறுத்தவரை, அவன் வெறுமனே பாதையை மட்டுமே ஆயத்தப்படுத்தினான். அவனுடைய கிரியை சிறப்பானதாக இருந்தாலும், அநேக வார்த்தைகள் கொண்டதாக இருந்தாலும், அவனை ஏராளமான சீஷர்கள் பின்பற்றினார்கள் என்றாலும், அவனுடைய கிரியை மனுஷனுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மனுஷன் ஒருபோதும் அவனிடமிருந்து ஜீவனையோ, வழியையோ, ஆழமான சத்தியங்களையோ பெறவில்லை, மேலும் தேவனின் சித்தத்தைப் பற்றிய புரிதலையும் அவனிடமிருந்து மனுஷன் பெறவில்லை. யோவான் ஒரு சிறந்த தீர்க்கதரிசி (எலியா), அவன் இயேசுவின் கிரியைக்குப் புதிய தளத்தைத் திறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆயத்தப்படுத்தினான்; அவன் கிருபையின் யுகத்தின் முன்னோடியாக இருந்தான். இத்தகைய விஷயங்களை அவர்களின் சாதாரண மனுஷ தோற்றங்களைக் கவனிப்பதன் மூலம் வெறுமனே அறிய முடியாது. யோவானும் மிகவும் கணிசமான கிரியையைச் செய்ததால், மேலும் பரிசுத்த ஆவியானவரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டதால், மற்றும் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டதால் இவை அனைத்தும் பொருத்தமாக இருந்தன. இது அவ்வாறு இருப்பதால், அவர்கள் செய்யும் கிரியையின் மூலம்தான் ஒருவன் அந்தந்த அடையாளங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும், ஏனென்றால் ஒரு மனுஷனின் சாராம்சத்தை அவனது வெளிப்புற தோற்றத்தைக் கண்டு சொல்ல எந்த வழியும் இல்லை, அல்லது பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் என்ன என்பதை மனுஷன் அறியும் வழியும் இல்லை. யோவானால் செய்யப்பட்ட கிரியையும், இயேசுவால் செய்யப்பட்ட கிரியையும் வேறுபட்டவை, அவை வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருந்தன. இதிலிருந்தே யோவான் தேவனா இல்லையா என்பதை ஒருவன் தீர்மானிக்க முடியும். இயேசுவின் கிரியையானது ஆரம்பிக்க, தொடர மற்றும் முடிவுக்குக் கொண்டுவந்து நிறைவேற்றுவதாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தேவன் மேற்கொண்டார், அதேசமயம் யோவானின் கிரியை ஒரு தொடக்கத்தைத் தவிர வேறேதுமாக இருக்கவில்லை. ஆரம்பத்தில், இயேசு சுவிசேஷத்தைப் பரப்பி, மனந்திரும்புதலுக்கான வழியைப் பிரசங்கித்தார், பின்னர் மனுஷனை ஞானஸ்நானம் செய்யவும், நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும், பிசாசுகளை விரட்டவும் செய்தார். இறுதியில், அவர் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டு, யுகம் முழுவதற்குமான தமது கிரியையை நிறைவு செய்தார். அவர் எல்லா இடங்களுக்கும் சென்று, மனுஷரிடம் பிரசங்கித்து, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார். இந்த விஷயத்தில் அவரும் யோவானும் ஒரே மாதிரியாக இருந்தார்கள், வித்தியாசம் என்னவென்றால், இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், மேலும் கிருபையின் யுகத்தை மனுஷனிடம் கொண்டு வந்தார். கிருபையின் யுகத்தில் மனுஷன் எதைக் கடைப்பிடிக்க வேண்டும், மனுஷன் பின்பற்ற வேண்டிய வழி ஆகியவற்றைப் பற்றிய வார்த்தை அவருடைய வாயிலிருந்து வந்தது, இறுதியில், அவர் மீட்பின் கிரியையை முடித்தார். யோவானால் இந்தக் கிரியையை ஒருபோதும் செய்திருக்க முடியாது. ஆகவே, தேவனின் கிரியையைச் செய்தவர் இயேசுதான், அவரே தேவனாகவும் மற்றும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் இருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து

326. தீர்க்கதரிசிகளும், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஜனங்களும் பேசியபோதும், கிரியை செய்தபோதும், இது மனுஷனின் கிரியைகளை மற்றும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் செயல்பாட்டைச் செய்வதாக இருந்தது. இது மனுஷன் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகளும் கிரியையும் அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டவை ஆகும். அவருடைய வெளிப்புறத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டவைக்குரியதாக இருந்தபோதிலும், அவருடைய கிரியை அவருடைய செயல்பாட்டைச் செய்வதல்ல, அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். “கடமை” என்ற சொல் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் “ஊழியம்” என்பது மனுஷனாக அவதரித்த தேவனைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது. இரண்டிற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது; அவை ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளக் கூடியவை அல்ல. மனுஷனின் கிரியை அவனுடைய கடமையைச் செய்வதேயாகும், அதேசமயம் தேவனின் கிரியை நிர்வகிப்பதும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதும் ஆகும். ஆகையால், பல அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பல தீர்க்கதரிசிகள் அவரால் நிரப்பப்பட்டிருந்தாலும், அவர்களுடைய கிரியையும் வார்த்தைகளும் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷராக தங்கள் கடமையைச் செய்வதற்காக மட்டுமே இருந்தன. அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் மனுஷராக அவதரித்த தேவனால் பேசப்பட்ட ஜீவவழியை மிஞ்சியிருக்கலாம், மேலும் அவர்களின் மனுஷத்தன்மையானது மனுஷனாக அவதரித்த தேவனின் தன்மையை மிஞ்சியிருக்கலாம், ஆனால் அவர்கள் இன்னும் தங்கள் கடமையைத் தான் செய்து கொண்டிருந்தார்கள், ஊழியத்தை நிறைவேற்றவில்லை. மனுஷனின் கடமை மனுஷனின் செயல்பாட்டைக் குறிக்கிறது; அதுவே மனுஷனால் அடையக்கூடியதும் கூட. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனால் மேற்கொள்ளப்படும் ஊழியம் அவருடைய ஆளுகையுடன் தொடர்புடையது, இது மனுஷனால் அடைய முடியாதது. மனுஷனாக அவதரித்த தேவன் பேசினாலும், கிரியை செய்தாலும், அதிசயங்களை வெளிப்படுத்தினாலும், அவர் தனது ஆளுகையின் மத்தியில் மிகச் சிறந்த கிரியையைச் செய்துவருகிறார், அத்தகையக் கிரியையை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது. மனுஷனின் கிரியை என்பது தேவனின் ஆளுகையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக தனது கடமையைச் செய்வதாகும். தேவனின் ஆளுகை இல்லாமல், அதாவது, மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியம் இழக்கப்பட்டால், சிருஷ்டிக்கப்பட்ட ஒருவனின் கடமை இழக்கப்பட நேரிடும். தன் ஊழியத்தைச் செய்வதில் இருக்கும் தேவனின் கிரியை, மனுஷனை நிர்வகிப்பதாகும், அதேசமயம் மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது சிருஷ்டிகரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தனது சொந்த கடமையை நிறைவேற்றுவதாகும், மேலும் ஒருவருடைய சொந்த ஊழியத்தை நிறைவேற்றுவதை எந்த வகையிலும் கருத முடியாது. தேவனின் ஆழமான சாராம்சத்திற்கு—அவருடைய ஆவிக்கு—தேவனின் கிரியை அவருடைய ஆளுகையாகும், ஆனால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் வெளிப்புற தோற்றத்தை அணிந்திருக்கும் மனுஷனாக அவதரித்த தேவனுக்கு, அவருடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். அவர் எந்தக் கிரியையைச் செய்தாலும் அது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்; மனுஷனால் செய்யக்கூடியது, தேவனின் ஆளுகையின் எல்லைக்குள் மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் தனது சிறந்ததைக் கொடுப்பது மட்டுமே ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

328. தேவனின் கிரியையை மனுஷனின் கிரியையிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மனுஷனின் கிரியையில் உன்னால் என்ன பார்க்க முடியும்? மனுஷனின் கிரியையில் அவனது அனுபவத்தின் பல கூறுகள் இருக்கின்றன; மனுஷன் அவன் என்னவாக இருக்கிறான் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறான். தேவனின் சொந்த கிரியையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது, ஆனால் அவரது இருப்புநிலையானது மனுஷனிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மனுஷனின் இருப்புநிலையானது அவனது அனுபவத்தையும் ஜீவிதத்தையும் குறிக்கிறது (மனுஷன் தனது ஜீவிதத்தில் என்ன அனுபவிக்கிறான் அல்லது எதை எதிர்கொள்கிறான், அல்லது அவனிடமிருக்கும் ஜீவிப்பதற்க்கான தத்துவங்கள் ஆகியவை), மேலும் வெவ்வேறு சூழல்களில் வாழும் ஜனங்கள் வெவ்வேறு இருப்புநிலைகளை வெளிப்படுத்துகிறார்கள். நீ சமுதாயத்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறாயா, நீ உனது குடும்பத்தில் உண்மையில் எப்படி ஜீவிக்கிறாய் என்பதையும் அதற்குள் இருக்கும் அனுபவத்தையும் நீ வெளிப்படுத்தியவற்றில் காணலாம், அதேசமயம் உன்னால் தேவனின் கிரியையில் மாம்சமாகிய தேவனுக்கு சமூக அனுபவங்கள் உள்ளதா என்பதையும் பார்க்க முடியாது. மனுஷனின் சாராம்சத்தை அவர் நன்கு அறிவார், மேலும் அனைத்து வகையான ஜனங்களுக்கும் தொடர்புடைய அனைத்து வகையான நடைமுறைகளையும் அவரால் வெளிப்படுத்த முடியும். மனுஷரின் சீர்கெட்ட மனநிலையையும் கலகத்தனமான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் அவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறார். அவர் உலக ஜனங்களிடையே ஜீவிக்கவில்லை என்றாலும், மனுஷரின் சுபாவம் மற்றும் உலக ஜனங்கள் அனைவரின் சீர்கேடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். இதுவே அவருடைய இருப்புநிலை ஆகும். அவர் உலகத்தைக் கையாள்வதில்லை என்றாலும், உலகத்தைக் கையாள்வதற்கான விதிகளை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் மனுஷ சுபாவங்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். இன்றைய மற்றும் கடந்த காலங்களில் மனுஷனின் கண்களால் பார்க்க முடியாத மற்றும் மனுஷனின் செவிகளால் கேட்க முடியாத ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார். இதில் ஜீவிப்பதற்கான தத்துவம் அல்லாத ஞானமும், ஜனங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் அதிசயங்களும் அடங்கும். இதுதான் அவருடைய இருப்புநிலை, ஜனங்களுக்குத் தெரியும்படியும் இருக்கிறது, ஜனங்களிடமிருந்து மறைக்கப்பட்டும் இருக்கிறது. அவர் வெளிப்படுத்தும் விஷயங்களானது ஒரு அசாதாரண நபர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருப்பது இல்லை, ஆனால் உள்ளார்ந்த பண்புகள் கொண்ட ஆவியானவர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. அவர் உலகில் பயணம் செய்வதில்லை, ஆனாலும் அவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அறிவு அல்லது நுண்ணறிவு இல்லாத “மனுஷக்குரங்கினங்களை” தொடர்பு கொள்கிறார், ஆனால் அறிவை விட உயர்ந்த மற்றும் பெரிய மனுஷருக்கு மேலான வார்த்தைகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மனுஷத்தன்மை இல்லாத மற்றும் மனுஷகுலத்தின் மரபுகளையும் ஜீவிதத்தையும் புரிந்து கொள்ளாத ஒரு குழப்பமான மற்றும் உணர்ச்சியற்ற ஜனக்கூட்டத்திற்குள் ஜீவிக்கிறார், ஆனால் அவரால் சாதாரண மனுஷத்தன்மையில் ஜீவிக்குமாறு மனுஷகுலத்தை கேட்டுக்கொள்ள முடியும், அதே நேரத்தில் மனுஷத்தன்மையின் அடிப்படையையும் அதன் இழிவான தன்மையையும் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் அவருடைய இருப்புநிலை தான், இவை மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபரின் இருப்புநிலையை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் மற்றும் சீர்கெட்ட மனுஷகுலத்தின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்தவும் சிக்கலான, தொந்தரவான, மோசமான சமூக ஜீவிதத்தை அனுபவிப்பது தேவையற்றதாக இருக்கிறது. ஒரு மோசமான சமூக ஜீவிதமானது அவருடைய மாம்சத்தை மேம்படுத்துவதில்லை. அவரது கிரியையும் வார்த்தைகளும் மனுஷனின் கீழ்ப்படியாமையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை மனுஷனுக்கு உலகத்தைக் கையாள்வதற்கான அனுபவத்தையும் பாடங்களையும் வழங்குவதில்லை. அவர் மனுஷனுக்கு ஜீவனை வழங்கும்போது சமூகம் அல்லது மனுஷனின் குடும்பத்தை ஆராயத் தேவையில்லை. மனுஷனை வெளிப்படுத்துவதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவருடைய மாம்சத்தின் அனுபவங்களின் வெளிப்பாடாக இருப்பதில்லை; நீண்ட காலமாக மனுஷனின் கீழ்ப்படியாமையை அறிந்த பின்பும், மனுஷகுலத்தின் சீர்கேட்டை வெறுத்த பின்பும் மனுஷனின் அநீதியை அவர் வெளிப்படுத்துவதே அவரது வெளிப்பாடாக இருக்கிறது. அவர் செய்யும் கிரியையானது மனுஷனுக்கு அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதற்கும் அவருடைய இருப்புநிலையை வெளிப்படுத்துவதற்குமே செய்யப்படுகிறது. அவரால் மட்டுமே இந்த கிரியையைச் செய்ய முடியும்; இது மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபர் அடையக்கூடிய ஒன்று இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

329. தேவன் யுகத்தை வழிநடத்துவதற்கும், புதிய கிரியையைத் தொடங்குவதற்கும் மட்டுமே மாம்சமாகிறார். இந்த விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். இது மனுஷனின் செயல்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, இரண்டையும் ஒருசேரக் குறிப்பிட முடியாது. கிரியை செய்ய மனுஷனைப் பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவனைப் பண்படுத்தி, பரிபூரணப்படுத்த வேண்டும், மேலும் அதற்குத் தேவைப்படும் மனுஷத்தன்மை குறிப்பாக உயர்ந்ததாக இருக்க வேண்டும். சாதாரண மனுஷத்தன்மையின் உணர்வை மனுஷன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுடனான அவனது நடத்தையை நிர்வகிக்கும் பல கொள்கைகளையும் விதிகளையும் அவன் மேலும் புரிந்து கொள்ள வேண்டும், மேலும், மனுஷனின் ஞானம் மற்றும் நெறிமுறை அறிவு பற்றி மேலும் கற்பதிலும் அவன் ஈடுபட வேண்டும். இதுதான் மனுஷனுக்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும், மாம்சமாகிய தேவனுக்கு இது அவ்வாறு இல்லை, ஏனென்றால் அவருடைய கிரியை மனுஷனைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அது மனுஷனின் கிரியையும் இல்லை; மாறாக, அவர் இருப்பது ஒரு நேரடி வெளிப்பாடு மற்றும் அவர் செய்ய வேண்டிய கிரியையை நேரடியாகச் செயல்படுத்துதல் மட்டுமே ஆகும். (இயற்கையாகவே, அவருடைய கிரியை தற்செயலாகவோ அல்லது சீரற்ற முறையிலோ இல்லாமல், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது, அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற வேண்டிய நேரம் வரும்போது இது தொடங்கப்படுகிறது.) அவர் மனுஷனின் ஜீவிதத்திலோ அல்லது மனுஷனின் கிரியையிலோ பங்கேற்பதில்லை அதாவது, அவருடைய மனுஷத்தன்மை இவற்றில் எதையுமே கொண்டிருப்பதில்லை (இருப்பினும் இது அவருடைய கிரியையைப் பாதிக்காது). அவர் ஊழியம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது மட்டுமே அவர் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்; அவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை அவர் வெறுமனே முன்னெடுத்துச் செல்கிறார். மனுஷன் அவரைப் பற்றி என்ன அறிந்திருந்தாலும், அவரைப் பற்றி மனுஷனின் கருத்து எதுவாக இருந்தாலும், அவருடைய கிரியை முற்றிலும் பாதிக்கப்படாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (3)” என்பதிலிருந்து

330. தேவன் செய்யும் கிரியையானது அவருடைய மாம்சத்தினுடைய அனுபவத்தின் பிரதிநிதியாக இருப்பதில்லை; மனுஷன் செய்யும் கிரியையானது அவனது அனுபவத்தின் பிரதிநிதியாக இருக்கிறது. எல்லோரும் தங்கள் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேவனால் சத்தியத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியும், அதே சமயம் மனுஷனால் சத்தியத்தை அனுபவித்ததற்கு ஒத்த அனுபவத்தை மட்டுமே வெளிப்படுத்த முடியும். தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை, மேலும் அந்த கிரியையானது காலம் அல்லது நிலம் ஏற்படுத்தும் தடைகளுக்கு உட்பட்டதாக இல்லை. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவரால் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். அவர் விரும்பியபடி கிரியை செய்கிறார். மனுஷனின் கிரியைக்கு நிபந்தனைகளும் சூழலும் இருக்கின்றன; அவை இல்லாமல், அவனால் கிரியை செய்ய இயலாது மற்றும் தேவனைப் பற்றிய அவனது அறிவை அல்லது சத்தியத்தின் அனுபவத்தை அவனால் வெளிப்படுத்த முடியாது. ஒரு விஷயத்தை தேவனின் கிரியை என்றோ அல்லது மனுஷனின் கிரியை என்றோ சொல்ல, இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை நீ ஒப்பிட வேண்டும். தேவனால் செய்யப்பட்ட எந்த கிரியையும் இல்லை, மனுஷனின் கிரியை மட்டுமே இருக்கிறது எனில், மனுஷனின் போதனைகள் தான் உயர்ந்தவை என்றும், அவை வேறு யாருடைய திறனுக்கும் அப்பாற்பட்டவை என்றும் நீ வெறுமனே அறிந்து கொள்ளுவாய்; அவர்கள் பேசும் தொனிகளும், விஷயங்களைக் கையாள்வதில் அவர்களின் கொள்கைகளும், கிரியை செய்யும் அனுபவமும் நிலையான முறையும் மற்றவர்களுக்கு எட்டாதவையாக இருக்கின்றன. நல்ல திறமை வாய்ந்த மற்றும் உயர்ந்த அறிவைக் கொண்ட இந்த ஜனங்களை நீங்கள் அனைவரும் பாராட்டுகிறீர்கள், ஆனால் தேவனின் கிரியை மற்றும் வார்த்தைகளிலிருந்து அவருடைய மனுஷத்தன்மையானது எவ்வளவு உயர்ந்தது என்பதை உன்னால் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக, அவர் சாதாரணமானவராக இருக்கிறார், கிரியை செய்யும் போது அவர் இயல்பானவராகவும், உண்மையானவராகவும் இருந்தாலும் மனுஷரால் அளவிடமுடியாதவராக இருக்கிறார், ஆகவே அந்த விஷயமானது ஜனங்களை அவர்மீது ஒருவித பயபக்திகொள்ள வைக்கிறது. ஒரு நபரின் கிரியையில் அவனது அனுபவமானது குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், அல்லது அவனது கற்பனையும் பகுத்தறிவும் குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், மேலும் அவனது மனுஷத்தன்மையும் குறிப்பாக நல்லதாக இருக்கலாம்; இத்தகைய பண்புக்கூறுகளால் ஜனங்களின் போற்றுதலைத்தான் பெற முடியும், ஆனால் அவர்களின் பிரமிப்பையும் பயத்தையும் தூண்டாது. நன்றாக கிரியை செய்யக்கூடியவர்களையும், குறிப்பாக ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களையும், சத்தியத்தை கடைப்பிடிக்கக்கூடியவர்களையும் ஜனங்கள் அனைவரும் போற்றுகிறார்கள், ஆனால் அத்தகையவர்களால் ஒருபோதும் பயபக்தியை வெளிப்படுத்த முடியாது, போற்றுதலையும் பொறாமையையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆனால் தேவனின் கிரியையை அனுபவித்தவர்கள் தேவனைப் போற்றுவதில்லை; அதற்குப் பதிலாக, அவருடைய கிரியையானது மனுஷனுக்கு அப்பாற்பட்டது என்றும், மனுஷனுக்குப் புரியாதது என்றும், அது புதியது மற்றும் அற்புதமானது என்றும் அவர்கள் உணர்கிறார்கள். தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது, அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால், அவர் புரிந்துகொள்ளமுடியாதவர், ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவை தான், மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள், அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள், இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவருடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே ஜனங்கள் விரும்புகிறார்கள்; அவர்கள் அவரை மிஞ்ச விரும்புவதில்லை, ஏனென்றால் அவர் செய்யும் கிரியையானது மனுஷனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது, அவருக்குப் பதிலாக மனுஷனால் அதைச் செய்ய முடியாது. மனுஷனுக்கு கூட தனது குறைபாடுகள் தெரியாது, ஆனாலும் தேவன் ஒரு புதிய பாதையை உருவாக்கி, மனுஷனை ஒரு புதிய மற்றும் அழகான உலகிற்கு கொண்டு வர வந்திருக்கிறார், எனவே மனுஷகுலமானது புதிய முன்னேற்றத்தை அடைந்து ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கியுள்ளது. தேவனைப் பற்றி ஜனங்கள் உணருவது போற்றுதல் இல்லை, அல்லது அதற்கு மாறாக அது போற்றுதல் மட்டுமில்லை. பயபக்தியும் அன்பும் அவர்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கின்றன; தேவன் உண்மையில் அற்புதமானவர் என்பது அவர்களின் உணர்வாக இருக்கிறது. மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவர் செய்கிறார், மனுஷனால் சொல்ல முடியாத விஷயங்களை அவர் சொல்கிறார். தேவனின் கிரியையை அனுபவித்தவர்களுக்கு எப்போதும் விவரிக்க முடியாத உணர்வு இருக்கும். ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களால் தேவனின் அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது; அவருடைய சௌந்தரியத்தை அவர்களால் உணரமுடிகிறது, அவருடைய கிரியையானது மிகவும் ஞானமானது என்பதையும், மிகவும் அற்புதமானது என்பதையும், அதன் மூலம் எல்லையற்ற வல்லமையானது அவர்கள் மத்தியில் உருவாகிறது என்பதையும் அவர்களால் உணர முடிகிறது. இது பயமோ அல்லது அவ்வப்போது வெளிப்படும் அன்பு மற்றும் மரியாதையோ இல்லை, ஆனால் மனுஷனுக்கான தேவனுடைய இரக்கத்தின் ஆழமான மற்றும் அவனை சகித்துக்கொள்ளும் உணர்வு ஆகும். இருப்பினும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த ஜனங்கள் அவருடைய மகத்துத்தையும் அவர் எந்தக் குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் உணர்கிறார்கள். அவருடைய கிரியையின் பெரும்பகுதியை அனுபவித்தவர்களால் கூட அவரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை; அவரை உண்மையிலேயே வணங்கும் அனைவருக்கும் அவருடைய கிரியையானது ஜனங்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதில்லை என்பதையும், ஆனால் எப்போதும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் அறிவார்கள். ஜனங்கள் அவரை முழுமையாகப் போற்றவேண்டும் என்பதையோ அல்லது அவருக்கு அடிபணிந்த தோற்றத்தை முன்வைக்க வேண்டும் என்பதையோ அவர் எதிர்பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் உண்மையான பயபக்தியையும் உண்மையான கீழ்ப்படிதலையும் அடைய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார். அவருடைய கிரியையில் அதிகபட்சமாக, உண்மையான அனுபவமுள்ள எவரும் அவரை பயபக்தியுடன் வணங்குவதை உணர்கிறார்கள், இது போற்றுதலை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவருடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை காரணமாக ஜனங்கள் அவருடைய மனநிலையைப் பார்த்திருக்கிறார்கள், ஆகவே அவர்கள் அவரை இருதயத்தில் வைத்து வணங்குகிறார்கள். தேவன் வணங்கப்படுவதற்கும் கீழ்ப்படிவதற்கும் உரியவர், ஏனென்றால் அவருடைய இருப்புநிலையும் அவருடைய மனநிலையும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்குச் சமமானவை இல்லை, அதற்கும் மேற்பட்டவையாக இருக்கின்றன. தேவன் தன்னிறைவுள்ளவர், நித்தியமானவர், அவர் சிருஷ்டிக்கப்படாத ஜீவன், மேலும் தேவன் மட்டுமே பயபக்திக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவர்; மனுஷன் இதற்கு தகுதியற்றவனாக இருக்கிறான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

முந்தைய: VIII. தேவனுடைய கிரியையை அறிந்துகொள்வது குறித்த வார்த்தைகள்

அடுத்த: X. தேவன் மீதான ஒருவருடைய விசுவாசத்தில் சத்தியத்தின் யதார்தத்திற்குள் எவ்வாறு பிரவேசிப்பது என்பது குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக