C. மனுஷனுக்கான தேவனுடைய எச்சரிக்கைகள்

644. கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்படுவோர், பூமியின் மேல் மிகவும் பரியாசம் பண்ணுகிற ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனுக்கான வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போனவர்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சுற்றிச் செல்லக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வழங்கும் ஜீவனை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி உன்னால் சிந்திக்கவே இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளைத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது ஒரு மெலிந்த நபரை அல்ல, மாறாக கிறிஸ்துவையே அப்படி செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத் தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைத் திறக்க வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

645. தேவன் அடைய வேண்டுமென்று பிரயாசப்படுகிற வழியில் எந்த நாடோ அல்லது எந்த அதிகாரமோ நிற்க முடியாது என்று நாம் நம்புகிறோம். தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்து, தேவனுடைய வார்த்தையை எதிர்த்து, தேவனுடைய திட்டத்திற்கு இடறலுண்டாக்கி, பலவீனப்படுத்துபவர்கள் இறுதியில் தேவனால் தண்டிக்கப்படுவார்கள். தேவனுடைய கிரியைக்கு எதிராக நிற்பவன் நரகத்திற்கு அனுப்பப்படுவான்; தேவனுடைய கிரியையை எதிர்க்கும் எந்த நாடும் அழிக்கப்படும்; தேவனுடைய கிரியையை எதிர்க்க எழுந்த எந்தத் தேசமும் இந்தப் பூமியில் இல்லாமல் நிர்மூலமாக்கப்படும் மற்றும் ஜீவன் அறுப்புண்டு போகும். தேவனுடைய குரலைக் கேட்கவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், மனுக்குலத்தின் தலைவிதியின் மீது கவனம் செலுத்தவும், தேவனை மிகவும் பரிசுத்தமானவராகவும், மிகவும் கனத்திற்குரியவராகவும், மிகவும் உயர்ந்தவராகவும், மனுக்குலம் தொழுதுகொள்ளும் ஒரே இலக்காக மாற்றவும், ஆபிரகாமின் சந்ததியினர் யோகோவாவின் வாக்குத்தத்தத்தின் கீழ் வாழ்ந்ததைப் போலவும், தேவன் முதலாவது சிருஷ்டித்த ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தது போலவும் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் மனுக்குலம் முழுவதும் வாழ்வதற்கு உதவவும் வேண்டுமாறு சகல தேசங்களையும், சகல நாடுகளையும், ஏன் சகல தொழில் நிறுவனங்களையும் சேர்ந்த ஜனங்களை வலியுறுத்துகிறேன்.

தேவனுடைய கிரியையானது ஒரு பலம் வாய்ந்த அலை போல முன்னோக்கி சீறிப் பாய்கிறது. அவரை யாரும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் முன்னேறிச் செல்வதை யாரும் தடுக்க இயலாது. அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்பவர்களும், அவரைத் தேடுபவர்களும், அவருக்காக தாகம் கொள்பவர்களும் மாத்திரமே அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ள இயலும். அப்படி இல்லாதவர்கள் பெரும் பேரழிவிற்கும் உரிய ஆக்கினைத்தீர்ப்பிற்கும் ஆளாவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

646. தேவன் தோன்றியருள வேண்டும் என்று வாஞ்சிப்பவர்களைத் தேவன் தேடுகிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கத் திராணியுள்ளவர்களையும், அவருடைய கட்டளையை மறவாதவர்களையும், தங்களுடைய இருதயங்களையும் சரீரங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுப்பவர்களையும் அவர் தேடுகிறார். அவருக்கு முன்பாகக் குழந்தைகளைப் போலக் கீழ்ப்படிகிறவர்களையும், அவருக்கு விரோதமாக இல்லாதவர்களையும் அவர் தேடுகிறார். எந்தவொரு அதிகாரத்திற்கோ அல்லது வல்லமைக்கோ கட்டுப்படாமல் உன்னைத் தேவனுக்கு அர்ப்பணித்தால், தேவன் உன்னை ஆதரவாகப் பார்த்து, அவருடைய ஆசீர்வாதங்களை உன் மீது பொழிந்தருளுவார். நீ உயர் பதவியில் இருந்தும், மேன்மைதாங்கிய நற்பெயர் பெற்றிருந்தும், அளப்பெரிய அறிவைப் பெற்றிருந்தும், ஏராளமான சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்தும் மற்றும் பலரால் ஆதரிக்கப்படுகிறவனாக இருந்தும், இந்தக் காரியங்கள் எல்லாம் தேவனுக்கு முன்பாக வந்து அவருடைய அழைப்பையும் அவருடைய கட்டளையையும் ஏற்றுக்கொள்வதையும், தேவன் உன்னிடம் செய்யச் சொல்வதைச் செய்வதையும் தடுக்கவில்லை என்றால், நீ செய்வது எல்லாம் பூமியில் மிகவும் அர்த்தமுள்ள காரியமாகவும், மனுக்குலத்தின் மிகவும் நீதியான செயலாகவும் இருக்கும். நீ அந்தஸ்துக்காகவும், உன் சொந்த இலக்குகளுக்காகவும் தேவனுடைய அழைப்பை ஏற்க மறுத்தால், நீ செய்யும் அனைத்தும் தேவனால் சபிக்கப்படும் மற்றும் வெறுக்கப்படும். ஒருவேளை நீ ஒரு அதிபராக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு போதகராக அல்லது ஒரு மூப்பராக இருந்து, உன் அலுவலகம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், உன் செயல்களில் உன் அறிவையும் திறமையையும் சார்ந்திருந்தால், நீ எப்பொழுதும் தோல்வியாகவே இருப்பாய் மற்றும் எப்பொழுதும் தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்து காணப்படுவாய். ஏனென்றால், நீ செய்யும் எதையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை, உன் செயலை நீதியான ஒன்றாகக் கருதுவதில்லை அல்லது நீ மனுக்குலத்தின் நலனுக்காக செயல்படுகிறாய் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மனுஷனைத் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து நீக்கவும், தேவனுடைய ஆசீர்வாதங்களை மறுக்கவும், மனுக்குலத்தின் அறிவையும் பெலத்தையும் பயன்படுத்தவே நீ எல்லாவற்றையும் செய்கிறாய் என்று அவர் சொல்வார். நீ மனுக்குலத்தை இருளை நோக்கியும், மரணத்தை நோக்கியும், மனுஷன் தேவனையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் இழந்து கட்டுப்படாமல் வாழ்வதற்கான ஆரம்பத்தை நோக்கியும் வழிநடத்துகிறாய் என்று அவர் சொல்வார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

647. பரிசேயர்கள் இயேசுவை, ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிய விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், மாறாக ஜீவிதத்தின் சத்தியத்தைத் தேடவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவிதத்தின் வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்கள் தேவனின் ஆசீர்வாதத்தை எவ்வாறு பெற முடியும்? அவர்கள் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் செயல்பாட்டை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை வீணாகப் போற்றும் தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உங்கள் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுள்ளதாக இருந்தாலும், உங்கள் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீங்கள் கிறிஸ்து அல்ல என்பதே. இந்தப் பார்வைகள் போலித்தனமானவை மற்றும் கேலிக்குரியவை அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகால பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உங்களால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியின் கிரியையை உங்களால் பின்பற்ற இயலுமா? நீங்கள் கிறிஸ்துவை எதிர்ப்பீர்களா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்ப்பதற்கும், இயேசுவை நிராகரிப்பதற்கும், அவதூறு செய்வதற்கும் வல்லவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்ய வல்லவர்கள். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்க வல்லவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதை குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களை பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான அவதூறும், பரிசுத்த ஆவியானவர் திருச்சபைக்கு வழங்கும் வார்த்தைகள் அழிக்கப்படுவதும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலும் ஆகும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டால், ஒரு வெண்மையான மேகத்தின் மீது, இயேசு மறுபடியும் மாம்சத்தில் திரும்பும்போது, அவரின் கிரியையை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையை கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருந்தும், சத்தியத்தைப் புரிந்துக்கொள்ளாத ஜனங்கள், நிச்சயமாக பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பார்கள். மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். நீங்கள் இயேசுவின் கிருபையை மட்டுமே விரும்புகிறீர்கள். பரலோகத்தின் ஆனந்த சாம்ராஜ்யத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறீர்கள். ஆனால் இயேசு பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை. இயேசு மாம்சத்தில் திரும்பி வருகையில் அவர் வெளிப்படுத்திய சத்தியத்தை ஒருபோதும் பெறவில்லை. ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பியதற்கு ஈடாக நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து, அதன் பின் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்பு கேட்பது நேர்மையாகுமா? ஒரு வெண்மேகத்தின் மீது மறுபடியும் வரும் இயேசுவுக்கு பலியாக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் பெருமையாகக் கருதும், உங்களுடைய ஆண்டுக்கணக்கான வேலையையா? திரும்பி வந்த இயேசு உங்களை நம்புவதற்கு நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எந்த சத்தியத்திற்கும் கீழ்ப்படியாத உங்கள் ஆணவ குணத்தையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து

648. அடையாளங்களைக் காரணமாகக் கொண்டு தேவனை விசுவாசிப்பவர்கள் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டிய பிரிவினர் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மாம்சத்திற்குத் திரும்பிய இயேசுவின் வார்த்தைகளைப் பெற இயலாதவர்கள் நிச்சயமாக நரகத்தின் சந்ததியினரும், பிரதான தூதனுடைய சந்ததியினரும் மற்றும் நித்திய அழிவுக்கு உட்படுத்தப்படும் பிரிவினரும் ஆவர். நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன். இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும். ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீங்கள் காணும் நேரம், நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும். மேலும், நல்லோருக்கு, தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் போது அது இருக்கும். சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், மேலும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். “ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து” எனக் கருதும் விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான தீர்ப்பையும், மெய்யான ஜீவிதத்தின் வழியையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களுக்கு நியாயம் செய்வார். அவர்கள், அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத கர்வமும் கொண்டவர்கள். இத்தகைய சீரழிவுகளுக்கு இயேசுவால் எவ்வாறு பலனளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசுவின் வருகை ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, திமிரான நபராக நீங்கள் இருக்கக்கூடாது. மாறாக பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்தை எதிர்பார்க்கும் ஒருவராக இருக்கவேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள். தேவனுடைய விசுவாசத்தின் பாதையில் கவனமாக நடக்க வேண்டும் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். உடனடியாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம். மேலும் என்னவென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தில் பொறுப்பற்றும் சிந்தனையின்றியும் இருக்காதீர்கள். குறைந்தபட்சம், தேவனை விசுவாசிப்பவர்கள் தாழ்மையும் பயபக்தியும் உடையவராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சத்தியத்தைக் கேட்டும், அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முட்டாள்தனமானவர்கள் மற்றும் அறிவற்றவர்கள். சத்தியத்தைக் கேட்டும், கவனக்குறைவாக முடிவுகளுக்குச் செல்பவர்களும் அதைக் கண்டனம் செய்பவர்களும் ஆணவத்தால் சூழப்படுகிறார்கள். இயேசுவில் விசுவாசிக்கிற எவரும் மற்றவர்களை சபிக்கவோ கண்டிக்கவோ தகுதிப்படுத்தப்படவில்லை. நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாகவும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை, சத்திய வழியைக் கேட்டு, ஜீவ வார்த்தையைப் படித்த பிறகு, இந்த 10,000 வார்த்தைகளில் ஒன்று மட்டுமே உங்களது விசுவாசங்களுக்கும் வேதாகமத்துக்கும் இணங்குவதாக நீங்கள் நம்புகிறீர்களானால், பின்னர் இந்த 10,000 வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் தொடர்ந்து நாட வேண்டும். தாழ்மையுடன் இருக்கவும், அதீத நம்பிக்கை இல்லாதிருக்கவும், உங்களை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளாதிருக்கவும், நான் மறுபடியும் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். தேவனுக்கு இத்தகைய அற்ப பயபக்தியை உங்களது இருதயம் கொண்டிருப்பதால், நீங்கள் அதிக கவனத்தைப் பெறுவீர்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் கவனமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் சிந்தித்தால், அவை சத்தியமா இல்லையா என்பதையும், ஜீவனா இல்லையா என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஒருவேளை, சில வாக்கியங்களை மட்டுமே வாசித்த சிலர், இந்த வார்த்தைகளை கண்மூடித்தனமாகக் கண்டிப்பார்கள். “இது பரிசுத்த ஆவியானவரின் சில வெளிப்பாடுகளே அன்றி வேறொன்றுமில்லை” அல்லது “இவர் ஜனங்களை ஏமாற்றுவதற்காக வந்த ஒரு கள்ளக்கிறிஸ்து” என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். தேவனின் கிரியை மற்றும் ஞானத்தை மிகக் குறைவாகவே நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் மீண்டும் புதிதாகத் தொடங்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்! கடைசி நாட்களில் கள்ளக்கிறிஸ்து தோன்றியதால் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் கண்மூடித்தனமாக கண்டிக்கக்கூடாது. மேலும் நீங்கள் வஞ்சகத்திற்கு பயப்படுவதால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறு கூறும் ஒருவராக இருந்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய பரிதாபமாக இருக்கும் அல்லவா? பல பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் சத்தியம் இல்லை, வழி இல்லை, தேவனின் வெளிப்பாடும் இல்லை என்று நீங்கள் இன்னும் நம்பினால், நீங்கள் இறுதியில் தண்டிக்கப்படுவீர்கள் மற்றும் நீங்கள் ஆசீர்வாதம் இல்லாமலும் இருப்பீர்கள். இவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் பேசப்படும் இத்தகைய சத்தியத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தேவனின் இரட்சிப்புக்கு நீங்கள் தகுதியற்றவராக இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்கு போதுமான பாக்கியம் இல்லாத ஒருவர் அல்லவா? யோசித்துப் பாருங்கள்! கண்மூடித்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்க வேண்டாம். தேவன் மீதான விசுவாசத்தை ஒரு விளையாட்டாக கருத வேண்டாம். உங்கள் இலக்குக்காகவும், உங்கள் வருங்காலத்துக்காகவும், உங்கள் ஜீவிதத்தின் நன்மைக்காகவும் சிந்தியுங்கள், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். இந்த வார்த்தைகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து

649. கடைசி நாட்களில், உலகெங்கிலும் உள்ள ஜனங்களுக்கு போதிக்கவும், சகல சத்தியங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கிறிஸ்து சத்தியத்தைப் பயன்படுத்துவார். இதுவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையாகும். தேவனுடைய இரண்டாவது மனித அவதரிப்பைப் பற்றி பலருக்கும் ஒரு மோசமான உணர்வு இருக்கிறது, ஏனென்றால் நியாயத்தீர்ப்பை கொடுக்கும்படிக்கு தேவன் மாம்சமாவார் என்று மக்கள் நம்புவது கடினம். ஆயினும்கூட, தேவனுடைய கிரியையானது பெரும்பாலும் மனிதனின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது, மனித மனம் இதை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதை நான் உனக்கு சொல்லியாக வேண்டும். தேவன் பிரபஞ்சத்தை நிரப்புகிற உன்னதமானவராக இருக்கிறார், அதே சமயம், ஜனங்கள் பூமியில் வெறும் புழுக்களாக இருக்கிறார்கள்; மனிதனின் மனதானது புழுக்களை மட்டுமே வளர்க்கும் ஒரு தவறான நீரின் குழி போன்றது, அதேசமயம் தேவனுடைய நினைவுகளால் செயல்படுத்தப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய ஞானத்தின் பலன் ஆகும். ஜனங்கள் எப்பொழுதும் தேவனோடு சண்டையிட முயற்சிக்கிறார்கள், இறுதியில் யார் தோற்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களையே நீங்கள் தங்கத்தை விட அதிகம் மதிப்புமிக்கவர்களாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் நான் அறிவுறுத்துகிறேன். தேவனுடைய நியாயத்தீர்ப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், நீ ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? நீ மற்றவர்களைக் காட்டிலும் எவ்வளவு உயர்வாக நிற்கிறாய்? மற்றவர்கள் சத்தியத்திற்கு முன்பாக தங்கள் தலைகளைத் தாழ்த்த முடிந்தால், உன்னால் ஏன் முடியாது? தேவனுடைய கிரியையானது யாராலும் தடுத்து நிறுத்த முடியாத ஒரு உத்வேகத்தைக் கொண்டுள்ளது. நீ செய்திருக்கிற “பங்களிப்பு” காரணமாகவே அவர் மீண்டும் நியாயத்தீர்ப்பை வழங்க மாட்டார், மேலும் இதுபோன்ற ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருத்தத்தால் நீ வெல்லப்படுவாய். நீ என்னுடைய வார்த்தைகளை நம்பவில்லை என்றால், வானத்தில் இருக்கும் அந்தப் பெரிய வெள்ளை சிங்காசனம் உன் மீது தீர்ப்பளிப்பதற்காக காத்திரு! இஸ்ரவேலர் அனைவரும் இயேசுவை நிராகரித்தார்கள் மற்றும் மறுதலித்தார்கள் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், ஆனாலும் இயேசுவின் மனிதகுலத்திற்கான மீட்பின் சத்தியம் இன்னும் பிரபஞ்சம் முழுவதும் மற்றும் பூமியின் முடிவுபரியந்தம் விரிவடைந்துள்ளது. இது தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கிய ஒரு யதார்த்தம் அல்லவா? இயேசு உன்னைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நீ இன்னும் காத்திருந்தால், நீ ஒரு செத்துப்போன மரக்கட்டை[அ] என்று நான் சொல்கிறேன். சத்தியத்திற்கு விசுவாசமற்ற மற்றும் ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிற உன்னைப் போன்ற ஒரு போலியான விசுவாசியை இயேசு ஏற்றுக்கொள்ள மாட்டார். மாறாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உன்னை அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலில் தள்ளுவதில் அவர் இரக்கம் காட்ட மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

650. தேவன் இந்த உலகைச் சிருஷ்டித்தார். இந்த மனுகுலத்தைச் சிருஷ்டித்தவரும் அவரே. மேலும், பண்டைய கிரேக்கக் கலாச்சாரம் மற்றும் மனித நாகரிகத்தின் படைப்பாளரும் அவரே. தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை ஆறுதல்படுத்துகிறார். தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்கிறார். மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் தேவனுடைய ஆளுகையிலிருந்து பிரிக்க இயலாதவையாக இருக்கின்றன. மேலும், மனுக்குலத்தின் வரலாறும் எதிர்காலமும் தேவனுடைய வடிவமைப்புகளிலிருந்து பிரிக்க இயலாதவையாகவே இருக்கின்றன. நீ ஒரு மெய்யான கிறிஸ்தவனானால், எந்தவொரு தேசத்தின் அல்லது நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் தேவனுடைய வடிவமைப்புகளின் படியே நடக்கின்றன என்பதை நிச்சயமாக நம்புவாய். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியைத் தேவன் மாத்திரமே அறிவார். இந்த மனுக்குலத்தின் போக்கைத் தேவன் மாத்திரமே கட்டுப்படுத்துகிறார். மனுக்குலமானது ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்பட்டால், ஒரு நாடு ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ளப் பிரயாசப்பட்டால், மனுஷன் தேவனுக்கு முன்பாக பணிந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும், மனந்திரும்பி தேவனுக்கு முன்பாகப் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால் மனிதனின் விதியும் தலைவிதியும் தவிர்க்க முடியாத ஒரு பேரழிவாக இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

651. உங்களது தலைவிதியின் பொருட்டு, நீங்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அது என்னவென்றால், நீங்கள் தேவனுடைய வீட்டிலே ஒரு உறுப்பினர் என்பதை ஒப்புக்கொள்ளுகிறபடியினால், தேவனுக்கு மனஅமைதியைக் கொண்டுவந்து எல்லாவற்றிலும் அவரை நீங்கள் திருப்திப்படுத்த வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், உங்களுடைய செயல்களில் கொள்கையுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும், மற்றும் அவற்றில் உள்ள சத்தியத்திற்கு ஒப்பாக இருக்கவேண்டும். இது உனக்கு அப்பாற்பட்டது என்றால், நீ தேவனால் வெறுக்கப்படுவாய், நிராகரிக்கப்படுவாய், மற்றும் ஒவ்வொரு மனிதராலும் வெறுத்து ஒதுக்கப்படுவாய். நீ அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டால், தேவனுடைய வீட்டிலே ஒருவராக அவர்கள் மத்தியில் உன்னைக் கணக்கிட முடியாது, இதுதான் தேவனால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதன் அர்த்தமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

652. என் கோரிக்கைகள் எளிமையாக இருக்கலாம், ஆனால் நான் உங்களிடம் கூறுவது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல் அவ்வளவு எளிதானது அல்ல. நீங்கள் செய்வதெல்லாம் இதைப் பற்றி சாதாரணமாகப் பேசுவதும் அல்லது வெற்று, ஆரவார அறிக்கைகள் மூலம் உளறித்திரிவதுமாக இருந்தால், பின் உங்கள் வரைபடங்களும் உங்கள் விருப்பங்களும் எப்போதும் ஒரு வெற்றுப்பக்கமாக மட்டுமே இருக்கும். உங்களில் பல ஆண்டுகளாகத் துன்பப்பட்டும் கடுமையாக உழைத்தும் பலன் எதுவும் இன்றி இருப்போருக்காக நான் இரக்கம் கொள்ள மாட்டேன். மாறாக, என் கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்களுக்குப் பிரதிபலன்கள் அல்ல, தண்டனை அளிப்பேன், அதைவிட எவ்வித இரக்கமும் காட்ட மாட்டேன். பல ஆண்டுகளாகப் பின்பற்றும் ஒருவராக இருந்து, கடின உழைப்பு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அளித்து, மேலும் வெறும் ஒரு சேவை செய்பவராக தேவனின் வீட்டில் இருந்ததற்கு உங்களுக்கு ஒரு கிண்ணம் சாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். உங்களில் பெரும்பான்மையோர் இவ்விதமாகவே சிந்திக்கிறீர்கள் என்று நான் கூறுவேன், ஏனெனில் எவ்வாறு விஷயங்களை சாதாகமாக்கிக்கொள்வது என்ற கொள்கையை எப்போதும் பின்பற்றி இருக்கிறீர்களேயன்றி சாதகமாக்கிக் கொள்ளக்கூடாது என்பதை அல்ல. இவ்வாறு, நான் இப்போது உங்களிடம் எல்லா தீவிரத்துடனும் கூறுகிறேன்: உன் கடின உழைப்பு எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், உன் தகுதிகள் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும், நீ எவ்வளவு நெருக்கமாக என்னைப் பின் தொடர்ந்தாலும், நீ எவ்வளவு புகழ்பெற்றவனாக இருந்தாலும், அல்லது உன் மனப்பான்மையை நீ எவ்வளவு தூரம் மேம்படுத்தி இருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்; என்னுடைய கோரிக்கைகளை நிறைவுசெய்யாத வரையில் நீ என் பாராட்டைப் பெற முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக உங்களுடைய எல்லா எண்ணங்களையும் கணக்கீடுகளையும் தள்ளுபடி செய்துவிடுங்கள், மேலும் என்னுடைய கோரிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்குங்கள்; இல்லாவிட்டால், என்னுடைய கிரியையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர நான் உங்கள் அனைவரையும் சாம்பலாக மாற்றிவிடுவேன் மேலும், ஆகச் சிறந்த வகையில் ஆண்டாண்டான என் கிரியை மற்றும் துன்பத்தை ஒன்றுமில்லாமல் மாற்றுவேன், ஏனெனில் என்னுடைய சத்துருக்களையும் தீமையின் துர்நாற்றம் வீசும் மற்றும் சாத்தானின் தோற்றத்தையும் கொண்ட அந்த ஜனங்களையும் என் ராஜ்யத்துக்குள் என்னால் கொண்டுவர முடியாது அல்லது அவர்களை அடுத்த யுகத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்” என்பதிலிருந்து

653. இப்போது எனது ஆவி மாபெரும் கிரியையைச் செய்கிற நேரம், புறஜாதியார் தேசங்களிடையே நான் எனது வேலையைத் தொடங்கும் நேரம். அதற்கும் மேலாக, எனது கிரியை இன்னும் விரைவாகவும் திறமையாகவும் தொடரக்கூடும் என்பதற்காக என்னால் சிருஷ்டிக்கப்பட்ட அனைவரையும் வகைப்படுத்தும் நேரம் இது. எனவே, நீ எனது கிரியை அனைத்திற்கும் முழுமையாக நான் உங்களியம் கேட்பயதெல்லாம் என்னவென்றால், உன்னை ஒப்புக்கொடு, மேலும், நான் உன்னில் செய்த எல்லா கிரியைகளையும் தெளிவாக உணர்ந்து உறுதிப்படுத்திக் கொள், மற்றும் உனது எல்லா வல்லமையையும் எனது கிரியையில் செலுத்து, இதனால் அது மிகவும் திறமிக்கதாக மாறும். இதைத்தான் நீ புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கிடையில் சண்டையிடுவதைத் தவிர்ப்பது, திரும்பிச் செல்வதற்கான வழியைத் தேடுவது, அல்லது மாம்ச சுகங்களை நாடுவது எனது கிரியையைத் தாமதப்படுத்தும், மற்றும் உனது அற்புதமான எதிர்காலத்தை தாமதப்படுத்தும். உன்னை பாதுகாப்பதற்குப் பதிலாக, அவ்வாறு செய்வது உனக்கு அழிவை ஏற்படுத்தும். இது உன் முட்டாள்தனமாக இருக்காதா? இன்று நீ பேராசையுடன் அனுபவிப்பது உன் எதிர்காலத்தை அழித்துவிடும் முக்கிய விஷயமாக இருக்கும், அதேசமயம் நீ இன்று அனுபவிக்கும் வேதனையே உன்னைப் பாதுகாக்கும் முக்கிய விஷயமாக இருக்கிறது. இச்சைகளுக்கு இரையாகிவிடாமல் இருக்க, உன்னை நீயே விடுவித்துக் கொள்ள மற்றும் அடர்ந்த மூடு பனிக்குள் தவறாக சென்று, சூரியனைக் கண்டுபிடிக்க இயலாமல் போவது போலன்றி நீ இந்த விஷயங்களைப் பற்றித் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அடர்ந்த மூடுபனி தெளிவானால், மகாநாளின் நியாயத்தீர்ப்பின் மத்தியில் நீ உன்னைக் காண்பாய். அதற்குள், எனது நாள் மனித இனத்தை நெருங்குகிறது. எனது தீர்ப்பிலிருந்து நீ எவ்வாறு தப்புவாய்? சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்தை உன்னால் எவ்வாறு தாங்க முடியும்? நான் எனது நிறைவை மனிதனுக்கு அளிக்கும்போது, அவன் அதை தனது நெஞ்சத்தில் போற்றாமல், அதை யாரும் கவனிக்காத இடத்தில் ஒதுக்கி வைக்கிறான். எனது நாள் மனிதனின் மீது இறங்கும்போது, அவனால் இனி என் மிகுதியைக் கண்டுபிடிக்க முடியாது, அல்லது நான் அவனிடம் நீண்ட காலத்திற்கு முன்பு பேசிய சத்தியத்தின் கசப்பான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாது. அவன் ஒளியின் பிரகாசத்தை இழந்து, இருளில் விழுந்ததால் அவன் அழுவான். இன்று நீங்கள் பார்ப்பது எனது வாயின் கூர்மையான பட்டயத்தை மட்டுமே. எனது கரத்தில் உள்ள தடியையோ அல்லது நான் மனிதனை எரிக்கும் ஜுவாலையையோ நீங்கள் பார்த்ததில்லை, அதனால்தான் நீங்கள் இன்னும் பெருமிதம் கொள்கிறீர்கள், எனது முன்னிலையில் விரோதமாயும் மட்டுமீறியும் இருக்கிறீர்கள். அதனால்தான், நீங்கள் இன்னும் எனது வீட்டில் என்னுடன் சண்டையிடுகிறீர்கள், நான் எனது வாயால் பேசியதை உங்கள் மனித நாவால் மறுக்கிறீர்கள். மனிதன் எனக்கு அஞ்சமாட்டான், அவன் இன்றும் என்னிடம் தொடர்ந்து பகைமையைக் காட்டுகிறான் என்றாலும், அவன் எந்த பயமும் இல்லாமல் இருக்கிறான். உங்கள் வாய்களில் அநியாயக்காரர்களின் நாவும் பற்களும் உள்ளன. உங்கள் சொற்களும் செயல்களும் ஏவாளை பாவத்திற்கு தூண்டிய சர்ப்பத்தைப் போன்றவை. நீங்கள் ஒருவருக்கொருவர் கண்ணுக்கு கண் மற்றும் பல்லுக்குப் பல்லைக் கேட்கிறீர்கள், அந்தஸ்து, புகழ் மற்றும் லாபத்தை நீங்களே கைப்பற்றுவதற்காக என் முன்னிலையில் நீங்கள் போராடுகிறீர்கள், ஆனாலும் நான் உங்கள் சொற்களையும் கிரியைகளையும் இரகசியமாகப் பார்க்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் எனது முன்னிலையில் வருவதற்கு முன்பே, உங்கள் இதயங்களின் அடியில் நான் ஒலித்தேன். மனிதன் எப்போதுமே எனது கரத்தின் பிடியில் இருந்து தப்பித்து என்னால் கவனிக்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகிறான், ஆனால் நான் ஒருபோதும் அவனுடைய வார்த்தைகளிலிருந்தோ கிரியைகளிலிருந்தோ விலகிச் செல்லவில்லை. அதற்கு பதிலாக, அந்த வார்த்தைகளையும் செயல்களையும் எனது கண்களுக்குள் நுழைய நான் வேண்டுமென்றே அனுமதிக்கிறேன், நான் மனிதனின் அநீதியை தண்டிக்கக்கூடும், அவனுடைய இரண்டகம் பண்ணுதலின் மீது தீர்ப்பை வழங்கக்கூடும். ஆகவே, மனிதனின் வார்த்தைகளும் கிரியைகளும் இரகசியமாக எனது தீர்ப்பு இருக்கைக்கு முன் உள்ளன, எனது தீர்ப்பு மனிதனை ஒருபோதும் விட்டுவிடவில்லை, ஏனென்றால் அவன் மிகவும் அதிகமாக இரண்டகம் பண்ணுகிறான். எனது ஆன்மாவின் முன்னிலையில் மனிதனால் சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளையும் மற்றும் செய்யப்பட்ட செயல்களையும் எரித்து சுத்திகரிப்பது எனது வேலை. இந்த வழியில்,[ஆ] நான் பூமியை விட்டுச் செல்லும்போது, மக்கள் இன்னும் என்னிடம் விசுவாசத்தைக் கடைபிடிப்பார்கள், மற்றும் எனது பரிசுத்த வேலைக்காரர்கள் எனது கிரியையில் செய்வது போலவே எனக்கு சேவை செய்வார்கள், பூமியில் எனது கிரியை முடியும் நாள் வரை எனது கிரியையைத் தொடர அனுமதிப்பார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது” என்பதிலிருந்து

654. பூமியில், எல்லா விதமான பொல்லாத ஆவிகளும் ஓய்வெடுப்பதற்கான இடத்தை நிரந்தரமாக தேடுகின்றன, மேலும் அவை உட்புகக்கூடிய மனுஷ பிரேதங்களை முடிவில்லாமல் தேடுகின்றன. என் ஜனமே! நீங்கள் என் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். ஒருபோதும் கட்டுப்பாடற்றுப்போகாதீர்! ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளாதீர்! எனது வீட்டில் உன் விசுவாசத்தை நீ வழங்கு, விசுவாசத்தினால் மட்டுமே பிசாசின் தந்திரத்திற்கு எதிராக எதிர்குற்றஞ்சாட்ட முடியும். எந்தவொரு சூழ்நிலையிலும், நீங்கள் கடந்த காலத்தில், ஒரு காரியத்தை எனக்கு முன்பாகவும், இன்னொன்றை என் முதுகுக்குப் பின்னாலும் செய்ததைப் போல தற்போதும் நடந்து கொள்ளாதீர்; நீங்கள் இந்த வழியில் செயல்பட்டால், நீங்கள் ஏற்கனவே மீட்பிற்கு அப்பாற்பட்டவர் ஆவீர்கள். இது போன்ற போதுமான வார்த்தைகளை நான் அதிகமாக உச்சரிக்கவில்லையா? மனுஷரின் பழைய இயல்பை திருத்த முடியாது என்பதால், ஜனங்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டல்களை நான் கொடுக்க வேண்டியிருக்கிறது. சலிப்படைய வேண்டாம்! நான் சொல்வது எல்லாம் உங்கள் தலையெழுத்தை உறுதி செய்வதற்காகத்தான்! ஒரு வெறுக்கத்தக்க மற்றும் இழிவான இடம் தான் சாத்தானுக்குத் தேவை; நீங்கள் எந்தளவிற்கு நம்பிக்கையற்ற முறையிலும், ஒழுக்கமற்ற முறையிலும் இருக்கிறீர்களோ, கட்டுப்பாட்டுக்கு கீழ்படிய மறுக்கிறீர்களோ, அந்தளவிற்கு அந்த அசுத்த ஆவிகள் உங்களை ஊடுருவுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் பெறும். நீங்கள் இந்த நிலைக்கு வந்திருந்தால், உங்கள் விசுவாசம் வெறுமனே உரையாடலைத் தவிர வேறொன்றுமில்லை, அதற்கு எந்தவொரு மெய்மையும் இல்லாமல், அசுத்த ஆவிகள் உங்கள் தீர்மானத்தைத் தகர்த்து அதனை எனது கிரியையை சீர்குலைக்கப் பயன்படும் கீழ்ப்படியாமை மற்றும் சாத்தானுடைய சதிகளாக மாற்றுகின்றன. அங்கிருந்து, நீங்கள் எந்த நேரத்திலும் என்னால் அடித்து நொறுக்கப்படுவீர்கள். இந்த சூழ்நிலையின் கனம் பற்றி யாருக்கும் புரிவதில்லை; ஜனங்கள் அனைவரும் அவர்கள் கேட்கும் விஷயங்களை நோக்கி செவிட்டுக் காதைத் திருப்புகிறார்கள், கொஞ்சமும் எச்சரிக்கையாக இருப்பதில்லை. கடந்த காலத்தில் என்ன செய்யப்பட்டது என்பது எனக்கு நினைவில் இல்லை; மீண்டும் ஒரு முறை நான் “மறப்பேன்” என்றும் அதன்மூலம் உன்னிடம் மென்மையாக இருப்பேன் என்று நீ இன்னும் காத்திருக்கிறாயா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 10” என்பதிலிருந்து

655. பலர் நேர்மையாகப் பேசுவதையும் செயல்படுவதையும் விட நரகத்திற்கு தண்டிக்கப்படுவதே மேலானதாக இருக்கும். நேர்மையற்றவர்களுக்காக நான் வேறு வழிமுறை வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமில்லை. நீங்கள் நேர்மையாக இருப்பது உங்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை மெய்யாகவே நான் நன்கு அறிவேன். ஏனெனில் நீங்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், உங்கள் சொந்த சிறிய அளவுகோல் கொண்டு மக்களை அளவிடுவதில் மிகவும் சிறந்தவர்கள், இது எனது வேலையை மிகவும் எளிமையாக்குகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இரகசியங்களை உங்கள் மார்போடு கட்டியணைத்துக் கொள்வதால், என் வார்த்தைகளில் உங்கள் நம்பிக்கையின்படியே நான் உங்களை ஒவ்வொருவராக பேரழிவின் அக்கினிக்குள் அனுப்புவேன், அதன்பிறகு நீங்கள் மரித்தவர்களாகலாம். இறுதியில், “தேவன் உண்மையுள்ள தேவன்” என்கிற வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்து நான் வர கைப்பற்றுவேன், அதன்பின் நீங்கள் உங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு, “மனிதனின் இதயம் வஞ்சகமானது!” என்று புலம்புவீர்கள். இந்த நேரத்தில் உங்களது மனநிலை என்னவாக இருக்கும்? நீங்கள் இப்போது இருப்பதைப்போல வெற்றிகரமாக இருக்கமாட்டீர்கள் என்று நான் கற்பனைசெய்துப் பார்க்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதைப் போலவே “ஆழ்ந்த நிலையிலும் மற்றும் எளிதில் புரிந்துக்கொள்ளமுடியாத” நபராகவும் இருப்பீர்கள். தேவனுடைய சமூகத்தில், சிலர் அனைத்திலும் முதன்மையானவர்கள் மற்றும் சரியானவர்கள், அவர்கள் “நன்னடத்தையுடன்” இருப்பதற்கு வலிகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் தங்களுடைய திறந்த நச்சுப்பற்களால், ஆவியானவரின் சமூகத்தில் தங்கள் நகங்களால் நாலாபுறமும் கீறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை நீங்கள் நேர்மையானவர்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுவீர்களா? நீ ஒரு மாயக்காரனாக இருந்தால், “தனிப்பட்டவர்களுக்கிடையேயான உறவுகளில்” நீ திறமையான ஒருவராக இருந்தால், நிச்சயமாக நீ தேவனுடன் அற்பமான முயற்சியை செய்கிறாய் என்று நான் சொல்கிறேன். உன்னுடைய வார்த்தைகள் சாக்குபோக்குகள் மற்றும் பயனற்ற நியாயங்களுடன் புதிராக இருந்தால், நீ சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் வெறுக்கத்தக்க ஒரு நபர் என்று நான் சொல்கிறேன். நீ வெளிப்படையாக பகிர்ந்துக்கொள்ளத் தயங்குகிற பல இரகசியங்கள் உனக்கு இருக்குமானால், உன் இரகசியங்களையும் உன் சிரமங்களையும் மற்றவர்கள் வெளிச்சத்தின் வழியைத் தேடுவதற்கு முன்பாக நீ மிகவும் தயங்கி வெறுக்கிறாய் என்றால், நீ இரட்சிப்பை எளிதில் அடைய முடியாதபடிக்கு, இருளிலிருந்து எளிதில் வெளியே வராத ஒருவராகவே இருக்கிறாய். … இவ்வாறாக, ஒருவருக்கு நேர்மையான மற்றும் சிவப்பு-இரத்த இருதயம் இருக்கிறதா, அவர்களுக்கு பரிசுத்தமான ஆத்துமா இருக்கிறதா என்பதைப் பொறுத்து ஒருவரின் தலைவிதி செயல்படும். நீ மிகவும் நேர்மையற்ற ஒருவராக இருக்கிறீர்கள் என்றால், தீங்கிழைக்கும் இருதயம் கொண்ட, அசுத்தமான ஆத்மாகொண்ட ஒருவர் என்றால், உன் தலைவிதியின் பதிவில் எழுதப்பட்டுள்ளபடியே, மனிதன் தண்டிக்கப்படும் இடத்தில் நீயும் சென்றடைவது உறுதி. நீ மிகவும் நேர்மையானவராக இருக்கிறாய் என்றுக் கூறுவாயானால், அதேநேரத்தில் ஒரு போதும் சத்தியத்திற்கு ஏற்பச் செயல்படவோ அல்லது சத்தியவார்த்தையைப் பேசவோ நீ ஒரு போதும் முற்படவில்லை என்றால், தேவன் உனக்கு வெகுமதி அளிப்பதற்காக நீ இன்னுமா காத்திருக்கிறாய்? தேவன் உன்னை அவருடைய கண்ணின் மணிபோலப் பாதுகாத்துக் கொள்வார் என்று நீ இன்னும் நம்புகிறாயா? இத்தகைய உன்னுடைய சிந்தனை போலித்தனமானதல்லவா? நீ எல்லாவற்றிலும் தேவனை ஏமாற்றுகிறாய்; அசுத்தமானகைகளைக் கொண்டுள்ள உன்னைப் போன்ற ஒருவருக்கு தேவனுடைய வீடு எப்படி இடமளிக்கும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

657. உங்களை ஜெயங்கொள்ளுவதை எண்ணமாகக் கொண்டு நான் உங்களுக்குப் பல எச்சரிக்கைகளை அளித்திருக்கிறேன் மேலும் பல சத்தியங்களை வழங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம், கடந்த காலத்தில் இருந்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் நீங்கள் அனைவரும் மிகவும் செழிப்படைந்து இருப்பதாக உணர்கிறீர்கள், ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பல உபதேசங்களைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் மற்றும் உண்மையுள்ள ஜனங்களுக்கு இருக்க வேண்டிய பொது அறிவை மிக அதிகமாகக் கொண்டிருக்கிறீர்கள். இவை எல்லாம் பல ஆண்டுகளின் போக்கில் நீங்கள் அறுவடை செய்துள்ள விளைச்சல் ஆகும். நான் உங்கள் சாதனைகளை மறுக்கவில்லை, ஆனால் இந்தப் பல ஆண்டுகளாக நீங்கள் எனக்கு எதிராகச் செய்துள்ள எண்ணற்ற கீழ்ப்படியாமைகளையும் கலகங்களையும் நான் மறுக்கவில்லை என்பதை மிகவும் வெளிப்படையாகக் கூற வேண்டும், ஏனெனில் உங்கள் மத்தியில் ஒரு பரிசுத்தவான் கூட இல்லை. நீங்கள் எந்த விதிவிலக்கும் இல்லாமல் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஜனங்கள்; நீங்கள் கிறிஸ்துவின் சத்துருக்கள். இந்நாள் வரை, உங்களது மீறுதல்களும் கீழ்ப்படியாமைகளும் எண்ணமுடியாத அளவுக்குப் பலவாக இருக்கின்றன, ஆகவே தொடர்ந்து நானே உங்களுக்குத் திரும்பத்திரும்பக் கூறிவருவதை அபூர்வமானதாகக் கருதமுடியாது. இந்த விதமாக உங்களோடு இருப்பதை நான் விரும்பவில்லை—ஆனால் உங்கள் எதிர்காலங்களின் பொருட்டு, நீங்கள் சென்றடையும் இடத்தின் பொருட்டு தற்போது மீண்டும் ஒருமுறை நான் ஏற்கெனவே கூறியதையே திரும்பவும் கூறுவேன். நீங்கள் நான் கூறுவதில் ஈடுபடுவதோடு, என்னுடைய ஒவ்வொரு பேச்சையும் உங்களால் நம்ப முடியும் என்றும் அதன் ஆழமான தாக்கங்களை அனுமானம் செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன். நான் கூறுவதை சந்தேகிக்காதீர்கள், மட்டுமல்லாமல் நீங்கள் விரும்பும் விதமாக என் வார்த்தைகளை எடுத்து விருப்பத்திற்கேற்ப அப்பால் எறியாதீர்கள்; இதை நான் சகிக்கமுடியாததாகப் பார்க்கிறேன். என்னுடைய வார்த்தைகளை மதிப்பீடு செய்யாதீர்கள், மேலும் அவற்றை நீங்கள் இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லது நான் எப்போதும் உங்களை சோதிக்கிறேன் என்றும் அல்லது அதைவிட மோசமாக, நான் உங்களிடம் கூறியது தவறானது என்றும் சொல்லக் கூடாது. இந்த விஷயங்களை நானும் சகிக்க முடியாதவைகளாகக் காணுகிறேன். ஏனெனில் நீங்கள் என்னையும் நான் கூறுபவைகளையும் அத்தகைய சந்தேகத்துடன் நடத்துகிறீர்கள், என்னுடைய வார்த்தைகளை ஏற்காமல் என்னைப் புறக்கணிக்கிறீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் எல்லா தீவிரத்தோடும் கூறுகிறேன்: நான் கூறுவதைத் தத்துவத்தோடு இணைக்காதீர்கள்; என்னுடைய வார்த்தைகளை ஒரு மோசடிக்காரனின் பொய்களோடு இணைக்காதீர்கள். அதை விட, வெறுப்போடு என் வார்த்தையைக் கேட்டு நடக்காதீர்கள். ஒருவேளை எதிர்காலத்தில் ஒருவரும் நான் உங்களுக்குக் கூறுவதை உங்களிடம் கூற முடியாது, அல்லது இவ்வளவு அன்போடு பேச முடியாது அல்லது அதைவிட இந்த கருத்துக்களின் வழியாக உங்களைப் பொறுமையாக நடத்த முடியாது. நீங்கள் நல்ல நேரங்களை நினைவுபடுத்திக்கொண்டும், அல்லது சத்தமாக விம்மிக்கொண்டும் அல்லது வலியால் முனகிக்கொண்டும், அல்லது இருண்ட இரவுகளின் ஊடாக சிறு துண்டு அளவிலான சத்தியம் அல்லது ஜீவனும் இன்றி வாழ்ந்துகொண்டு, அல்லது நம்பிக்கையின்றி காத்துக்கொண்டிருந்து, அல்லது எல்லா பகுத்தறிவையும் நீங்கள் இழந்து கசப்பான வருத்தங்களோடு வாழ்ந்துகொண்டு வரவிருக்கும் அந்த நாட்களைக் கழிப்பீர்கள்…. மெய்யாக உங்களில் யாரும் இந்த சாத்தியங்களில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனென்றால் உங்களில் ஒருவரும் உண்மையாக தேவனை ஆராதிக்கும் ஓர் இருக்கையில் அமரவில்லை, ஆனால் காமவெறியும் தீமையும் நிறைந்த உலகத்துக்குள் உங்களை மூழ்கடித்துக்கொண்டு, ஜீவனுக்கும் சத்தியத்திற்கும் சம்பந்தமற்றவையும் உண்மையில் அவற்றிற்கு எதிர்மாறாக இருப்பவைகளையும் உங்கள் நம்பிக்கைகளிலும், உங்கள் ஆவிகளிலும், ஆத்துமாக்களிலும், சரீரங்களிலும் கலந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆகையால் உங்களை வெளிச்சத்தின் பாதையில் கொண்டுவந்துவிடலாம் என்றே உங்களுக்காக நான் நம்பிக்கைகொள்கிறேன். உங்கள் நடத்தையையும் அலட்சியத்தோடு கூடிய மீறுதல்களையும் பார்க்கும் போது, உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளும், உங்களுக்காக நீங்களே கவனம் எடுத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக உங்களால் மாறமுடியும் மேலும் உங்களது சென்றடையும் இடம் குறித்து நீங்கள் மிக அதிகமான முக்கியத்துவம் அளிக்க மாட்டீர்கள் என்பதே என் ஒரே நம்பிக்கை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்” என்பதிலிருந்து

658. நீ அதிகமாக மீறுதல்களைச் செய்யும்போது, ஒரு நல்ல சென்றடையும் இடத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உனக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். மாறாக, மிகக் குறைவான மீறுதல்களை நீ செய்யும் போது, தேவனால் புகழப்படுவதற்கு சிறந்த வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கும். உன்னை மன்னிப்பதற்கு என்னால் முடியாத அளவுக்கு உனது மீறுதல்கள் அதிகரித்தால், பின்னர் மன்னிக்கப்படுவதற்கான உன் வாய்ப்புகளை முற்றிலுமாக வீணாக்கி விட்டிருப்பாய். இப்படி இருக்க, உனது சென்றடையும் இடம் மேலே இருக்காது, ஆனால் கீழே இருக்கும். நீ என்னை விசுவாசிக்காவிட்டால், பின்னர் தைரியமாக பொல்லாங்கைச் செய், மேலும் அது உனக்கு என்ன கொண்டுவரும் என்று பார். நீ சத்தியத்தின் படி நடக்கும் ஓர் ஊக்கமுள்ள நபராக இருந்தால், உன் மீறுதல்களுக்காக மன்னிக்கப்பட நிச்சயமாக ஒரு வாய்ப்பைப் பெறுவாய், மேலும் உன் கீழ்ப்படியாமை குறைந்துகொண்டே போகும். சத்தியத்தைக் கடைப்பிடிக்க மனதில்லாத ஒரு நபராக நீ இருந்தால், பின் தேவனுக்கு முன்பான உன் மீறுதல்கள் நிச்சயமாக எண்ணிக்கையில் அதிகரிக்கும் மேலும் வரம்பை எட்டும்வரை மிகவும் அடிக்கடி நீ கீழ்ப்படியாமல் இருப்பாய், அதுவே உன் முழுமையான அழிவுக்கான நேரமாக இருக்கும். ஆசீர்வாதத்தைப் பெறும் உன்னுடைய மகிழ்ச்சியான கனவு சிதையும் போது இது நடக்கும். உன்னுடைய மீறுதல்களை ஒரு முதிர்வடையாத அல்லது முட்டாள்தனமான ஒரு நபரின் சாதாரணத் தவறே என்று எண்ணாதே; உனது மோசமான திறமையின் காரணமாக சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டது என்ற சமாதானத்தை பயன்படுத்தாதே. மேலும், உன்னால் செய்யப்பட்ட மீறுதல்கள் அதிகம் அறியாத ஒருவனின் செயல்கள் என்று வெறுமனே கருதாதே. உன்னை நீயே மன்னித்துக் கொள்வதில் நீ சிறந்தவனாக இருந்தால் மேலும் உன்னை நீயே பெருந்தன்மையோடு நடத்திக்கொண்டால், பின்னர் நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ ஒரு போதும் சத்தியத்தைப் பெற முடியாத ஒரு கோழை, மட்டுமல்லாது உன்னுடைய மீறுதல்கள் உன்னைச் சுற்றிச்சுற்றி வந்து வதைப்பதற்கு முடிவே இருக்காது; அவை சத்தியத்தின் தேவைகளை நீ நிறைவுசெய்வதை ஒருபோதும் அனுமதிக்கவிடாமல் உன்னை என்றென்றைக்கும் சாத்தானின் ஒரு விசுவாசமுள்ள கூட்டாளியாக இருக்கச் செய்யும். இன்னும் உனக்கு என் புத்திமதி இதுவே: உனது மறைவான மீறுதல்களைக் கவனிக்கத் தவறும் அதே வேளையில் நீ சென்றடையும் இடத்தின் மேல் மட்டும் கவனம் செலுத்தாதே; மீறுதல்களைத் தீவிரமாக எண்ணிப்பார், மேலும் உனது சென்றடையும் இடத்தின் மேல் உள்ள அக்கறையால் அவற்றில் ஒன்றையும் பார்க்கத் தவறாதே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்” என்பதிலிருந்து

659. தேவனுடைய சாராம்சம் அன்பின் ஒரு கூறுகளைக் கொண்டிருந்தாலும், அவர் ஒவ்வொரு மனிதனிடமும் இரக்கமுள்ளவர் என்றாலும், அவருடைய சாராம்சம் கண்ணியத்தில் ஒன்றாகும் என்ற உண்மையை ஜனங்கள் கவனிக்கவில்லை மற்றும் அதை மறந்துவிட்டார்கள். அவருக்கு அன்பு இருக்கிறது என்பதற்கு ஜனங்கள் அவருடைய உணர்ச்சிகளை அல்லது எதிர்வினையைத் சுதந்திரமாக புண்படுத்தலாம் அல்லது தூண்டலாம் என்று அர்த்தமாகாது அல்லது அவர் இரக்கம் காட்டினார் என்பதன் அர்த்தம், அவர் ஜனங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதில் அவருக்கு எந்தக் கொள்கைகளும் இல்லை என்பதாகாது. தேவன் உயிருடன் இருக்கிறார். அவர் உண்மையிலேயே இருக்கிறார். அவர் கற்பனை செய்யப்பட்ட கைப்பாவை அல்லது வேறு எந்த பொருளும் இல்லை. அவர் இருக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் எப்போதுமே அவருடைய இருதயத்தின் குரலைக் கவனமாகக் கேட்க வேண்டும். அவருடைய மனநிலையில் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அவருடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும். தேவனை வரையறுக்க நாம் மனித கற்பனைகளைப் பயன்படுத்தக்கூடாது. மனித எண்ணங்களையும் விருப்பங்களையும் அவர் மீது திணிக்கக் கூடாது. மனித கற்பனைகளின் அடிப்படையில் தேவன் மனிதர்களை மனித முறையில் நடத்தும்படி செய்கிறார். நீ இதைச் செய்தால், நீ தேவனைக் கோபப்படுத்துகிறாய், அவருடைய கோபத்தைத் தூண்டுகிறாய், அவருடைய கனத்திற்கு சவால் விடுகிறாய்! எனவே, இந்த விஷயத்தின் தீவிரத்தை நீங்கள் புரிந்துக்கொண்டவுடன், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் செயல்களில் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பேச்சில் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருங்கள். தேவனை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது குறித்து, நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்கிறீர்களோ அது அவ்வளவு சிறந்தது ஆகும்! தேவனுடைய மனநிலை என்னவென்று உனக்கு புரியாதபோது, கவனக்குறைவாக பேசுவதைத் தவிர்க்கவும். உன் செயல்களில் கவனக்குறைவாக இருக்காதே, சாதாரணமாக நாமங்களைப் பயன்படுத்த வேண்டாம். அதைவிட முக்கியமாக, எந்தவொரு தன்னிச்சையான முடிவுகளுக்கும் வர வேண்டாம். மாறாக, நீ காத்திருந்து தேட வேண்டும். இந்த செயல்களும் தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வெளிப்பாடாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீ இதை அடைய முடிந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மனநிலையை நீ கொண்டிருந்தால், உன் முட்டாள்தனம், அறியாமை மற்றும் விஷயங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஆகியவற்றைக் குறித்து தேவன் உன்னைக் குறை கூற மாட்டார். மாறாக, தேவனை புண்படுத்துவது குறித்த பயம், அவருடைய நோக்கங்களுக்கு மரியாதை மற்றும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பம் ஆகியவற்றின் காரணமாக, தேவன் உன்னை நினைவில் கொள்வார், உனக்கு வழிகாட்டுவார், அறிவூட்டுவார் அல்லது உன் முதிர்ச்சியற்ற தன்மையையும் அறியாமையையும் பொறுத்துக்கொள்வார். மாறாக, அவரைப் பற்றிய உன் மனநிலை பொருத்தமற்றதாக இருந்தால்—நீ விரும்பியபடி அவரை நியாயந்தீர்க்க வேண்டும் அல்லது தன்னிச்சையாக யூகித்து அவருடைய கருத்துக்களை வரையறுக்க வேண்டும் என்றிருந்தால்—தேவன் உன்னை கண்டனம் செய்வார், உன்னை ஒழுங்குபடுத்துவார், உன்னை சிட்சிப்பார் அல்லது அவர் உன்னைப் பற்றி கருத்து தெரிவிப்பார். ஒருவேளை இந்த கருத்து உன் முடிவை உள்ளடக்கும். ஆகையால், நான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்த விரும்புகிறேன்: நீங்கள் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரும் எல்லாவற்றையும் பற்றி எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும். கவனக்குறைவாக பேசாதீர்கள், உங்கள் செயல்களில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். நீ எதையும் சொல்வதற்கு முன், அதை நிறுத்தி சிந்திக்க வேண்டும்: என்னுடைய இந்த நடவடிக்கை தேவனுக்கு கோபமளிக்குமா? அதைச் செய்வதில், நான் தேவனுக்கு மரியாதை தருகின்றேனா? சாதாரண விஷயங்களில் கூட, இந்தக் கேள்விகளைக் கண்டுபிடிக்க நீ முயற்சி செய்ய வேண்டும். அவற்றைக் கருத்தில் கொண்டு அதிக நேரம் செலவிட வேண்டும். எல்லா அம்சங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் இந்த கொள்கைகளின்படி உண்மையிலேயே உன்னால் செயல்பட முடியும். குறிப்பாக, உனக்கு ஏதாவது புரியாதபோது அத்தகைய மனநிலையைக் கடைப்பிடிக்க உன்னால் முடியும் என்றால், தேவன் எப்போதும் உனக்கு வழிகாட்டுவார் மற்றும் பின்பற்றுவதற்கான பாதையை உனக்கு வழங்குவார். ஜனங்கள் எத்தகைய நிகழ்ச்சியைப் போட்டாலும், தேவன் அவர்களை மிகவும் உன்னிப்பாகவும் தெளிவாகவும் பார்க்கிறார். உன்னுடைய இந்த வெளிப்பாடுகளைப் பற்றிய துல்லியமான மற்றும் பொருத்தமான மதிப்பீட்டை அவர் வழங்குவார். நீ இறுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, உன் முடிவை தீர்மானிக்க தேவன் உன் நடத்தை அனைத்தையும் எடுத்து அதை முழுவதுமாக தொகுப்பார். இந்த முடிவு ஒவ்வொரு மனிதனையும் ஒரு சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால் நம்ப வைக்கும். நான் இங்கே உங்களுக்குச் சொல்ல விரும்புவது அதுதான்: உங்கள் ஒவ்வொரு கிரியையும், உங்கள் ஒவ்வொரு செயலும், உங்கள் ஒவ்வொரு எண்ணமும் உங்கள் தலைவிதியை தீர்மானிக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

660. ஜனங்கள் எவ்வாறு தேடுகிறார்கள், ஜனங்கள் தேவனை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதில் ஜனங்களுடைய மனநிலைகள் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தேவனை உங்கள் தலையின் பின்புறத்தில் மிதக்கும் வெறுமையான காற்றின் கலவை போல அவரைப் புறக்கணிக்காதீர்கள். நீ நம்பும் ஜீவனுள்ள உண்மையான தேவனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் ஒன்றும் செய்யாமல் மூன்றாம் வானத்தில் உட்கார்ந்திருக்கவில்லை. மாறாக, அவர் தொடர்ந்து அனைவரின் இருதயத்தையும் கவனித்து வருகிறார். நீ என்ன செய்கிறாய் என்பதைக் கவனித்து வருகிறார். உன் ஒவ்வொரு சிறிய வார்த்தையையும் ஒவ்வொரு சிறிய செயலையும் கவனித்து வருகிறார். நீ எவ்வாறு நடந்துக்கொள்கிறாய் என்பதைப் பார்க்கிறார். அவரைப் பற்றிய உன் மனநிலை என்ன என்பதைப் பார்க்கிறார். உன்னை தேவனுக்குக் கொடுக்க நீ தயாராக இருக்கிறாயா இல்லையா என்பதும், உன் நடத்தை மற்றும் உன் உள்ளார்ந்த எண்ணங்கள் மற்றும் யோசனைகள் என அனைத்தும் அவருக்கு முன்பாக வைக்கப்பட்டு அவரால் கவனிக்கப்படுகின்றன. உன் நடத்தை காரணமாகவும், உன் செயல்களின் காரணமாகவும், அவரைப் பற்றிய உன் மனநிலையின் காரணமாகவும், உன்னைப் பற்றிய தேவனுடைய கருத்தும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. சிலருக்கு நான் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்: தேவன் உன்னை அதீதமாக நேசிப்பார் என்பது போலவும், அவர் உன்னை ஒருபோதும் விட்டுவிட மாட்டார் என்பது போலவும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலை நிலையானது என்பது போலவும், ஒருபோதும் மாறமுடியாது என்பது போலவும், உன்னை தேவனுடைய கரங்களில் குழந்தைகளைப் போல வைக்காதே. கனவு காண்பதை விட்டுவிடுமாறு நான் உனக்கு அறிவுறுத்துகிறேன்! ஒவ்வொரு மனிதனையும் நடத்துவதில் தேவன் நீதியுள்ளவர். ஜனங்களை ஜெயித்து அவர்களை இரட்சிக்கும் கிரியைக்கான மனநிலையில் அவர் அக்கறையுள்ளவர். அது அவருடைய மேலாண்மையாகும். அவர் ஒவ்வொரு மனிதனையும் செல்லப் பிராணி போன்று நடத்தாமல் தீவிரமாக நடத்துகிறார். மனிதர்கள் மீதான தேவனுடைய அன்பு ஆடம்பரமான வகை அல்லது கெடுக்கும் வகையல்ல. மனிதகுலத்தின் மீது அவர் காட்டிய இரக்கமும் சகிப்புத்தன்மையும் மகிழ்ச்சியற்றதாக கவலையற்றதாகவோ இல்லை. மாறாக, மனிதர்களிடமான தேவனுடைய அன்பில் ஜீவனை நேசிப்பதும், அதற்கு பரிதாபப்படுவதும், அதை மதிப்பதும் அடங்கும். அவருடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் அவர்களைப் பற்றிய அவருடைய எதிர்பார்ப்புகளை மற்றும் மனிதகுலம் பிழைக்க அவசியமானவற்றை வெளிப்படுத்துகின்றன. தேவன் ஜீவனுடன் இருக்கிறார். தேவன் உண்மையாகவே இருக்கிறார். மனிதகுலத்தைப் பற்றிய அவரது மனநிலை கொள்கை ரீதியானதாகும். அது ஒரு இறுமாப்புள்ள விதிகளின் தொகுப்பல்ல. அது மாறக்கூடியதாகும். மனிதகுலத்திற்கான அவரது நோக்கங்கள் படிப்படியாக மாறுகின்றன. அவை எழும் சூழ்நிலைகளைப் பொறுத்தும், ஒவ்வொரு மனிதனுடைய மனநிலையுடனும் காலப்போக்கில் அவை மாறுகின்றன. ஆகையால், தேவனுடைய சாராம்சமானது மாறாதது என்பதையும், அவருடைய மனநிலை வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு சூழல்களிலும் வெளிவரும் என்பதையும் நீ உன் இருதயத்தில் முழுமையான தெளிவுடன் அறிந்துக்கொள்ள வேண்டும். அது ஒரு தீவிரமான விஷயம் என்று நீ நினைக்கக்கூடாது. தேவன் எவ்வாறு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை கற்பனை செய்ய உன் சொந்த கருத்துக்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், உன் கண்ணோட்டத்தின் எதிர்வாதம் உண்மையாக இருக்கும் நேரங்களும் உள்ளன. தேவனை அளவிட முயற்சிக்க உன் சொந்த கருத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீ ஏற்கனவே அவரை கோபப்படுத்தியிருக்கிறாய். ஏனென்றால், தேவன் நீ நினைப்பதைப் போல செயல்படவில்லை. நீ சொல்வதைப் போல அவர் இந்த விஷயத்தை நடத்துவதுமில்லை. ஆகவே, உன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றைக் குறித்தும் உன் மனநிலையில் கவனமாகவும் விவேகமாகவும் இருக்கும்படி நான் உனக்கு நினைவூட்டுகிறேன். எல்லாவற்றிலும் தேவனுடைய வழியில் நடப்பதற்கான கொள்கையை எவ்வாறு பின்பற்றுவது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவனுடைய சித்தம் மற்றும் தேவனுடைய மனநிலை தொடர்பான விஷயங்களில் நீ உறுதியான புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயங்களுடன் உன்னை தொடர்புகொள்வதற்கு நீ அறிவொளி பெற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் நீ ஆர்வத்துடன் முயற்சி செய்ய வேண்டும். உன் நம்பிக்கையின் தேவனை ஒரு கைப்பாவையாக பார்க்க வேண்டாம்—விருப்பப்படி அவரை நியாயந்தீர்க்க வேண்டாம், அவரைப் பற்றி தன்னிச்சையான முடிவுகளுக்கு வர வேண்டாம், அவருக்குத் தகுதியுள்ள மரியாதையுடன் நடந்துக்கொள்ளாமல் இருக்க வேண்டாம். தேவன் உனக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்து, உன் முடிவைத் தீர்மானிக்கும்போது, அவர் உனக்கு இரக்கம் அல்லது சகிப்புத்தன்மை அல்லது நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை வழங்கக்கூடும். ஆனால் எப்படியிருந்தாலும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலை சரி செய்யப்படாது. அது அவரைப் பற்றிய உன் சொந்த மனநிலையையும், அவரைப் பற்றிய உன் புரிதலையும் சார்ந்துள்ளது. கடந்து செல்லும் உன் அறிவின் ஓர் அம்சத்தை அல்லது தேவனைப் பற்றிய புரிதலை நிரந்தரமாக தேவனை வரையறுக்க அனுமதிக்காதே. மரித்த தேவனை நம்ப வேண்டாம். ஜீவனுள்ளவரை நம்ப வேண்டும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

661. உங்களுக்குள் தேவன் மகிழ்ந்திருக்க நீங்கள் ஏங்குகிறீர்கள், ஆனாலும் நீங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். இங்கே காரியம் என்ன? நீங்கள் அவர்மீது முழு விசுவாசம் வைத்திருக்க அவருடைய வார்த்தைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் அவருடைய கையாளுதலையோ அல்லது பராமரிப்பையோ அல்ல, அவருடைய ஒவ்வொரு ஒழுங்கையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அப்படியானால், இங்கே காரியம் என்ன? கடைசி ஆய்வில், உங்கள் விசுவாசம் ஒருபோதும் ஒரு குஞ்சை உருவாக்க முடியாத ஒரு வெற்று முட்டைக் கூடாகும். உங்கள் விசுவாசம் உங்களுக்கு சத்தியத்தைக் கொண்டு வரவில்லை அல்லது உங்களுக்கு ஜீவனைக் கொடுக்கவில்லை, மாறாக உங்களுக்கு ஒரு மாயையான விசுவாச ஆதாரத்தின் உணர்வை அளித்துள்ளது. இந்த விசுவாச ஆதாரத்தின் உணர்வுதான் தேவனை விசுவாசிப்பதில் உங்கள் நோக்கமாயிருக்கிறது, யதார்த்தமும் ஜீவனும் அல்ல. ஆகவே, தேவன்மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் போக்கு, அடிமைத்தனம் மற்றும் வெட்கமின்மை ஆகியவற்றின் மூலம் தேவனுக்கு உகந்தவராக முயற்சிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, எந்த வகையிலும் உண்மையான விசுவாசமாக கருதப்பட முடியாது. இது போன்ற விசுவாசத்தால் ஒரு குஞ்சு எப்படி பிறக்கக் கூடும்? வேறு விதாமாக சொல்வதானால், இது போன்ற விசுவாசம் என்னத்தை சாதிக்க முடியும்? தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் நோக்கம், உங்கள் சொந்த நோக்கங்களை அடைந்திட அவரைப் பயன்படுத்துவதாகும். மேலும், இது தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் மீறுதலின் யதார்த்தம் அல்லவா? நீங்கள் பரலோகத்தில் தேவன் இருப்பதை விசுவாசிக்கிறீர்கள், பூமியில் உள்ள தேவனின் இருப்பை மறுக்கிறீர்கள், ஆனாலும் உங்கள் கருத்துக்களை நான் அங்கீகரிக்கவில்லை. தரையில் கால்களை வைத்து, தேவனை பூமியில் சேவிப்பவர்களை மட்டுமே நான் பாராட்டுகிறேன், ஆனால் பூமியில் இருக்கும் கிறிஸ்துவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அத்தகையவர்கள் பரலோகத்திலுள்ள தேவனிடம் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், கடைசியில் அவர்கள் துன்மார்க்கரைத் தண்டிக்கும் என் கைக்கு தப்பிக்க மாட்டார்கள். இந்த ஜனங்கள் பொல்லாதவர்கள். அவர்கள் தேவனை எதிர்க்கும் பொல்லாதவர்கள் மற்றும் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவில்லை. நிச்சயமாக, அவர்களின் எண்ணிக்கை கிறிஸ்துவைத் தெரியாத மேலும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உள்ளடக்கியுள்ளது. நீ பரலோகத்திலுள்ள தேவனுக்கு விசுவாசமாக இருக்கும் வரை நீ விரும்பியபடி கிறிஸ்துவுக்காக செயல்பட முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? தவறு! கிறிஸ்துவைக் குறித்த உன் அறியாமை பரலோகத்தில் உள்ள தேவனை அறியாமல் இருப்பது ஆகும். பரலோகத்திலுள்ள தேவனிடம் நீ எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், அது வெறும் பேச்சும் மற்றும் பாசாங்கும் தான், ஏனென்றால் பூமியிலுள்ள தேவன் மனிதன் சத்தியத்தையும் அதிக ஆழமான அறிவையும் பெறுவதில் கருவியாக இருக்கிறார், ஆனால் அதைவிட அதிகமான கருவியானது மனிதனைக் கண்டனம் செய்தல், பின்னர் துன்மார்க்கரைத் தண்டிப்பதற்கான உண்மைகளைக் கைப்பற்றுவது ஆகும். இங்குள்ள நன்மை பயக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை நீ புரிந்து கொண்டாயா? நீ அவற்றை அனுபவித்திருக்கிறாயா? ஒரு நாள் இந்த உண்மையை விரைவில் புரிந்து கொள்ள உங்களுக்காக நான் விரும்புகிறேன். தேவனை அறிய, நீ பரலோகத்தில் உள்ள தேவனை மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, பூமியிலுள்ள தேவனையும் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் முன்னுரிமைகள் குழப்பமடைய வேண்டாம் அல்லது இரண்டாம் நிலையானது முதன்மையானதை மீற அனுமதிக்காதீர்கள். இந்த வழியில் மட்டுமே நீ உண்மையிலேயே தேவனோடு ஒரு நல்ல உறவை உருவாக்க முடியும், தேவனிடம் நெருங்கி பழகலாம், மேலும் உன் இருதயத்தை அவருக்கு அருகில் கொண்டுவர முடியும். நீ அநேக ஆண்டுகளாக விசுவாசமாக இருந்திருந்தால், என்னுடன் நீண்ட காலமாக இணைந்திருந்தும், என்னிடமிருந்து தொலைவில் இருந்தால், நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் நீ அடிக்கடி தேவனின் மனநிலையை புண்படுத்துகிறாய், உன் முடிவு கணக்கிட மிகவும் கடினமாக இருக்கும். என்னுடன் அநேக ஆண்டுகளாக இணைந்திருப்பது உன்னை மனிதத்தன்மையையும் சத்தியத்தையும் கொண்ட ஒரு நபராக மாற்றத் தவறியது மட்டுமல்லாமல், மேலும், உங்கள் பொல்லாத வழிகளை உங்கள் இயல்புக்குள் பதித்திருந்தால், உங்களுக்கு முன்பு போல இரு மடங்கான அகந்தை மட்டுமல்லாமல், என்னைக் குறித்த உங்கள் தவறான புரிதல்களும் பெருகிவிட்டன, அதாவது நீ என்னை உன் சிறிய சேவகனாகக் கருதுகிறாய், பிறகு நான் சொல்கிறேன், உன் துன்பம் இனி தோல் ஆழம் மட்டும் இல்லை, ஆனால் உன் எலும்புகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. உன் இறுதி யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக நீ காத்திருக்க வேண்டும். நீ உன் தேவனாக இருக்கும்படி என்னை மன்றாட வேண்டியதில்லை, ஏனென்றால் நீ மரணத்திற்கு தகுதியான பாவத்தை, மன்னிக்க முடியாத பாவத்தை செய்துள்ளாய். நான் உன்னிடம் கருணை காட்ட முடிந்தாலும், பரலோகத்தில் உள்ள தேவன் உன் ஜீவனை எடுக்கும்படி வலியுறுத்துவார், ஏனென்றால் தேவனின் மனநிலைக்கு எதிரான உன் குற்றம் சாதாரண பிரச்சினை அல்ல, ஆனால் மிகவும் கடுமையான இயல்புடையது. நேரம் வரும்போது, உன்னிடம் முன்பே சொல்லாததற்காக என்னைக் குறை கூற வேண்டாம். நீ பூமியிலுள்ள தேவனான கிறிஸ்துவுடன் ஒரு சாதாரண மனிதனாக இணைந்திருக்கும்போது, அதாவது, இந்த தேவன் ஒரு நபரைத் தவிர வேறில்லை என்று நீ விசுவாசிக்கும்போது, இது அனைத்தும் இதற்கே மீண்டும் வருகிறது, அப்போதுதான் நீ அழிந்துவிடுவாய். இது உங்கள் அனைவருக்குமான எனது ஒரே அறிவுரை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

662. தேவன் மீது விசுவாசமாக வாழ்கின்ற போக்கில், ஒவ்வொரு நபரும் தேவனை எதிர்க்கிற மற்றும் ஏமாற்றுகிறச் செயல்களையே செய்திருக்கிறார்கள். சில தவறான செயல்கள் ஒரு குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை, ஆனால் சில தவறுகள் மன்னிக்க முடியாதவையாகும்; தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறும் பல செயல்கள் உள்ளன, அவை அவரின் மனநிலையைப் புண்படுத்துகின்றன. தங்களுடைய சொந்தத் தலைவிதிகளைப் பற்றிக் கவலைப்படுபவர்களில் பலர் இந்த செயல்கள் என்ன என்று கேட்கலாம். நீங்கள் ஆணவமும் மனமேட்டிமையும் கொண்டவர்கள் என்பதையும், உண்மைகளுக்கு அடிபணிய விரும்பாதவர்கள் என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த காரணத்திற்காகவே, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதை பிரதிபலித்தப் பிறகு நான் உங்களுக்கு சிறிது சிறிதாகச் சொல்கிறேன். தேவனுடைய நிர்வாக ஆணைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி நன்கு புரிந்துக் கொள்ளவும், அவரது மனநிலையை அறிந்துக் கொள்ள முயற்சி செய்யவும் வேண்டுமென்று நான் உங்களுக்கு புத்திச் சொல்லுகிறேன். இல்லையென்றால், உங்கள் உதடுகளை மூடிக் கொள்ளுவது உங்களுக்குக் கடினமாக இருக்கும், உங்கள் நாவுகள் அதிக பேச்சுச் சத்தத்துடன் இங்கும் அங்குமாக ஆடிக் கொண்டிருக்கும், மேலும் நீங்கள் அறியாமல் தேவனுடைய மனதைப் புண்படுத்தி இருளிலே விழுவீர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும் ஒளியையும் இழந்து விடுவீர்கள். ஏனென்றால், நீங்கள் உங்கள் செயல்களில் கொள்கை இல்லாதவர்கள், ஏனென்றால் நீ செய்யக் கூடாத மற்றும் சொல்லக் கூடாத காரியங்களையே செய்வதால், நீ அதற்குத் தகுந்த பிரதிபலனையே பெறுவாய். உன்னுடைய வார்த்தையிலும் செயலிலும் நீ கொள்கை இல்லாதவர் என்றாலும், தேவன் அப்படியிராமல் அவை இரண்டிலும் அவர் மிகவும் கொள்கை ரீதியானவர் என்பதை நீ அறிந்துக் கொள்ள வேண்டும். நீ இப்படி பிரதிபலனைப் பெறுவதற்கான காரணம், நீ ஒரு நபரையல்ல, தேவனைப் புண்படுத்தியதே ஆகும். உன் வாழ்க்கையில், தேவனுடைய மனநிலைக்கு எதிராக நீ பல குற்றங்களைச் செய்தால், பிறகு நீ நரகத்தின் பிள்ளையாக மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். மனிதனைப் பொறுத்தமட்டில், அவர்கள் சத்தியத்திற்கு முரணான ஒரு சில காரியங்களை மட்டுமே செய்துள்ளார்கள், அதற்கு மேல் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், தேவனுடைய பார்வையில் நீ ஏற்கனவே பாவ நிவாரண பலி எதுவும் இல்லாத ஒருவராக இருக்கிறாய் என்பதை நீ அறிவாயா? ஏனென்றால், நீ தேவனுடைய நிர்வாக ஆணைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீறியுள்ளாய், மேலும் நீ அவைகளில் இருந்து மனந்திரும்பின மனந்திரும்புதலின் அறிகுறியைக் காண்பிக்கவில்லை, ஆகவே வேறு எந்த வழியும் இல்லை, மாறாக தேவன் மனிதனை நரத்தில் தள்ளித் தண்டிக்கிற அந்த நரகத்தில் நீயும் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தேவனைப் பின்பற்றுகிற போது, அவரது கொள்கைகளை மீறும் ஒரு சில செயல்களைச் செய்தார்கள், ஆனாலும் அதிலிருந்து மீண்டுவரும் வழிகாட்டுதல்களைப் பெற்ற பின்னர், அவர்கள் படிப்படியாக தங்கள் தவறுகளைக் கண்டுபிடித்தனர், அதன் பிறகு யதார்த்தத்தின் சரியான பாதைக்கு வந்தார்கள், அவர்கள் இன்று நன்கு உறுதியானவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் முடிவு வரையிலும் நிலைத்திருப்பார்கள். ஆகிலும், நான் தேடுவது நேர்மை மட்டுமே; நீ ஒரு நேர்மையான நபராகவும், கொள்கையின்படிச் செயல்படும் ஒருவராகவும் இருக்கிறீர் என்றால், பிறகு நீ தேவனுடைய நம்பிக்கைக்குரியவராக இருக்க முடியும். உன்னுடைய செயல்களில் நீ தேவனுடைய மனதைப் புண்படுத்தாமல், அவரது சித்தத்தை நாடி, அவர் மீது பயபக்தியுள்ள ஒரு இருதயத்தைக் கொண்டிருந்தால், உன் விசுவாசமானது சரியான நிலையைக் கொண்டதாகும். தேவனுக்கு பயந்து அவருக்கு நடுங்கும் இருதயம் இல்லாத எவரும் தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்டவர்களே. பலர் தங்கள் ஆர்வத்தினுடைய பலத்தின் பேரில் தேவனுக்குச் சேவைச் செய்கிறார்கள், ஆனால் தேவனுடைய நிர்வாக ஆணைகளைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை, அவருடைய வார்த்தைகளின் தாக்கங்களைப் பொறுத்தமட்டில் இன்னும் குறைவாகவேக் கருதுகின்றனர். ஆகவே, அவர்களின் நல்ல நோக்கங்களுடன், தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விஷயங்களை அவர்கள் அடிக்கடி செய்கிறார்கள். கடுமையானச் சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், தேவனைப் பின் தொடர்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இழக்கிறார்கள், மேலும் முடிவில் தேவனுடைய வீட்டிலே இணைந்திருக்கும் காரியத்தில் விடுபட்டு அவர்கள் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். இந்த மக்கள் தங்களுடைய அறியாமை நல்ல நோக்கங்களின் பலத்தின் அடிப்படையில் தேவனுடைய வீட்டில் வேலை செய்கிறார்கள், பிறகு தேவனுடைய மனதைக் கோபப்படுத்துவதிலே முடிவடைகிறார்கள். மக்கள் தங்கள் அதிகாரிகளுக்கும் பிரபுக்களுக்கும் சேவை செய்யும் வழிமுறைகளைத் தேவனுடைய வீட்டிற்கும் கொண்டு வந்து எந்த ஒரு சிரமுமில்லாமல் எளிதில் காரியங்களை அடைய அவர்களைக் கொண்டு முயற்சிக்கலாம் என விருதாவாக நினைக்கிறார்கள். தேவனுக்கு ஆட்டுக்குட்டியின் மனநிலை இல்லை, ஆனால் ஒரு சிங்கத்தின் மனநிலை இருக்கிறது என்று அவர்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆகவே, முதன் முறையாக தேவனோடு இணைந்தவர்கள் அவருடன் தொடர்புக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் தேவனுடைய இருதயம் மனிதனைப் போலல்லாது இருக்கிறது. நீ பல உண்மைகளைப் புரிந்துக் கொண்ட பின்னரே நீ தொடர்ந்து தேவனை அறிந்துக் கொள்ள முடியும். இந்த அறிவு வெறுமனே சொற்களாலும் கோட்பாடுகளாலும் ஆனது அல்ல, மாறாக நீ தேவனோடு நெருங்கிய நம்பிக்கையில் நுழைவதன் மூலமாகவும், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகிறார் என்பதற்கான சான்றாகவும் நீ இதை ஒரு பொக்கிஷமாகப் பயன்படுத்தலாம். நீ இந்த அறிவின் யதார்த்தத்தைக் கொண்டிருக்காமல் மற்றும் சத்தியத்துடன பொருந்தவில்லை என்றால், உன் உணர்ச்சிவசப்பட்ட சேவையானது தேவனுக்கு வெறுப்பையும் விருப்பமற்றதையும் மட்டுமே உ மீது கொண்டு வர முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

663. நான் பேசிய ஒவ்வொரு வாக்கியத்திலும் தேவனின் மனநிலை இருக்கிறது. நீங்கள் என் வார்த்தைகளை கவனமாக நன்றாக சிந்தித்துப் பார்த்து, நீங்கள் நிச்சயமாக அவற்றிலிருந்து பெரிதும் ஆதாயம் அடைவீர்கள். தேவனின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம், ஆனால் உங்கள் அனைவருக்கும் தேவனின் மனநிலையைப் பற்றி குறைந்தபட்ச கருத்தாவது இருப்பதாக நான் நம்புகிறேன். அப்படியானால், நீங்கள் மேலும் தேவனின் மனநிலையை புண்படுத்தாதவற்றைச் எனக்குக் காண்பித்து மேலும் அதை அதிகமாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். அப்போது எனக்கு உறுதியளிக்கப்படும். உதாரணமாக, தேவனை எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தில் வைத்திரு. நீ கிரியை செய்யும்போது, அவருடைய வார்த்தைகளின்படி செய். எல்லாவற்றிலும் அவருடைய நோக்கங்களைத் தேடு, தேவனை அவமதிக்கும் மற்றும் அவமானமான கிரியைகளைச் செய்வதைத் தவிர். உன் இருதயத்தில் எதிர்கால வெறுமையை நிரப்ப தேவனை சிறிதளவேனும் உன் மனதின் பின்புறத்தில் வைக்க வேண்டும். நீ இதைச் செய்தால், நீ தேவனின் மனநிலையை புண்படுத்தியிருப்பாய். மீண்டும், உன் வாழ்நாள் முழுவதும் நீ ஒருபோதும் தேவனுக்கு எதிராக இழிவுபடுத்தும் கருத்துக்களையோ, புகார்களையோ கூறுவதில்லை என்பதாலும், மறுபடியும், அவர் உன்னிடம் ஒப்படைத்த எல்லாவற்றையும் நீ சரியாக வெளிப்படுத்த முடிகிறது என்பதாலும், மற்றும் அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் உன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்க முடிகிறது என்பதாலும், நீ நிர்வாகக் கட்டளைகளுக்கு எதிராக மீறுவதைத் தவிர்ப்பாய். உதாரணமாக, “அவர் தேவன் என்று நான் ஏன் நினைக்கவில்லை?” “இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் சில ஞானத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன்,” “என் கருத்துப்படி, தேவன் செய்யும் எல்லாம் சரியானதாக இருக்க அவசியமில்லை,” “தேவனின் மனிதத்தன்மை என்னுடையதை விட உயர்ந்ததல்ல,” “தேவனின் வார்த்தைகள் வெறுமனே நம்பமுடியாதவை,” அல்லது இதுபோன்ற வேறு யூகக் கருத்துக்களை நீ எப்போதாவது கூறியிருந்தால், உன் பாவங்களை அடிக்கடி அறிக்கையிட்டு மனந்திரும்பும்படி நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இல்லையெனில், நீ ஒருபோதும் மன்னிப்பிற்கான வாய்ப்பைப் பெற மாட்டாய், ஏனென்றால் நீ ஒரு மனிதனை அல்ல, ஆனால் தேவனையே புண்படுத்துகிறாய். நீ ஒரு மனிதனை நியாயந்தீர்க்கிறாய் என்று நீ நம்பலாம், ஆனால் தேவனுடைய ஆவியானவர் அதை அவ்வாறு கருதுவதில்லை. அவருடைய மாம்சத்தை நீ அவமதிப்பது அவரை அவமதிப்பதற்கு சமம். இது அப்படியே இருப்பதால், நீ தேவனின் மனநிலையை புண்படுத்தியிருக்கவில்லையா? தேவனுடைய ஆவியானவரால் செய்யப்படும் எல்லாம் மாம்சத்தில் அவருடைய கிரியையைப் பாதுகாப்பதற்காகவும், இந்த கிரியை சிறப்பாக செய்யப்படுவதற்காகவும் செய்யப்படுகிறது என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இதை புறக்கணித்தால், நீ தேவனை விசுவாசிப்பதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாத ஒருவன் என்று நான் சொல்கிறேன். நீ தேவனின் கோபத்தைத் தூண்டிவிட்டாய், எனவே அவர் உனக்கு ஒரு பாடத்தை கற்பிக்க பொருத்தமான தண்டனையைப் பயன்படுத்துவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது” என்பதிலிருந்து

664. தேவனுடைய மனநிலையையும் அவரிடம் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட பிறகு, நீங்கள் தேவனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைக் குறித்து ஏதேனும் முடிவுகளை எடுத்து இருக்கிறீர்களா? இறுதியாக, இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நான் உங்களுக்கு மூன்று ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்: முதலாவது, தேவனைச் சோதிக்க வேண்டாம். தேவனைப் பற்றி நீ எவ்வளவு புரிந்து கொண்டிருந்தாலும், அவருடைய மனநிலையைப் பற்றி நீ எவ்வளவு அறிந்திருந்தாலும், அவரை நிச்சயமாகச் சோதிக்க வேண்டாம். இரண்டாவதாக, அந்தஸ்துக்காக தேவனுடன் போராட வேண்டாம். தேவன் உனக்கு எவ்வகையான அந்தஸ்தை அளிக்கிறார் என்றாலும் அல்லது எவ்வகையான கிரியையை உன்னிடம் அவர் ஒப்படைக்கிறார் என்றாலும், எவ்வகையான கடமையை நீ செய்யும்படி உன்னை உயர்த்தினாலும், நீ தேவனுக்காக எவ்வளவாக உன்னையே செலவு செய்து, அர்ப்பணித்திருந்தாலும் ஒருபோதும் அந்தஸ்துக்காக அவருடன் போராடாதே. மூன்றாவதாக, தேவனுடன் போட்டியிட வேண்டாம். உனக்கு புரிந்தாலும் அல்லது உன்னிடத்தில் தேவன் செய்வதற்கு நீ உன்னை அர்ப்பணிக்க முடிந்தாலும், அவர் உனக்காக ஏற்பாடுகள் செய்ததும், அவர் உன்னிடத்தில் கொண்டுவரும் விஷயங்களும் நிச்சயமாக தேவனுடன் போட்டியிட முடியாது. இம்மூன்று ஆலோசனைகளின்படி நீ கீழ்ப்படிய முடிந்தால், பின்பு நீ மிகவும் பாதுகாப்பாக இருப்பாய், மேலும் நீ தேவனை கோபப்படுத்த வாய்ப்பிருக்காது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

665. உனது காலத்தில் நீ நன்கு துயரப்பட்டிருப்பாய், ஆனால் நீ இன்னும் எதுவும் புரிந்து கொள்ளவில்லை; ஜீவிதத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நீ அறிந்திருக்கவில்லை. நீ சிட்சிக்கப்பட்டு நியாயந்தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், நீ சிறிதும் மாறவில்லை, உனக்குள் ஆழமாக நீ ஜீவிதத்தைப் பெற்றிருக்கவில்லை. உன் கிரியையைச் சோதிக்க நேரம் வரும்போது, நீ நெருப்பு போன்ற கடுமையான சோதனையை மற்றும் இன்னும் பெரிய உபத்திரவத்தை அனுபவிப்பாய். இந்த நெருப்பு உன்னை சாம்பலாக மாற்றும். ஜீவிதத்தை கொண்டிருக்காத ஒருவனாக, தனக்குள் சிறிதளவு தூய தங்கம் கூட இல்லாத ஒருவனாக, பழைய சீர்கெட்ட மனநிலையுடன் சிக்கிக்கொண்ட ஒருவனாக, ஒரு ஜடப்பொருளாக இருப்பதில் நல்ல வேலையைக் கூட செய்ய முடியாத ஒருவனாக இருக்கும் உன்னை எப்படி அகற்றாமல் இருக்கமுடியும்? ஒரு பைசாவிற்குக்கூட மதிப்பில்லாத, ஜீவனைக் கொண்டிருக்காத ஒருவனால் ஜெயங்கொள்ளுதல் கிரியைக்கு என்ன பிரயோஜனம்? அந்த நேரம் வரும்போது, நோவா மற்றும் சோதோமின் நாட்களை விட உனது நாட்கள் கடினமாக இருக்கும்! உனது பிரார்த்தனைகள் உனக்கு எந்த நன்மையும் செய்யாது. இரட்சிப்பின் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டதால், பின்னர் திரும்பி வந்து புதிதாக உன்னால் எப்படி மனந்திரும்ப முடியும்? இரட்சிப்பின் அனைத்து கிரியைகளும் முடிந்ததும், அதற்கு மேல் எதுவும் இருக்காது; தீயவர்களைத் தண்டிக்கும் கிரியையின் ஆரம்பம் மட்டுமே இருக்கும். நீ எதிர்க்கிறாய், நீ கலகம் செய்கிறாய், நீ தீயவை என்று அறிந்த காரியங்களைச் செய்கிறாய். நீ கடுமையான தண்டனையின் இலக்கு இல்லையா? இதை இன்று உனக்காக உச்சரிக்கிறேன். நீ அதைக் கேட்க வேண்டாம் என்று முடிவுசெய்தால், பின்னர் உனக்கு பேரழிவு நேரும்போது, அப்போது நீ வருத்தப்பட ஆரம்பித்து விசுவாசிக்கத் தொடங்கினால் அது தாமதமானதாக இருக்காதா? இன்று நீ மனந்திரும்ப உனக்கு ஒரு வாய்ப்பை நான் தருகிறேன், ஆனால் நீ அவ்வாறு செய்ய விரும்பவில்லை. நீ எவ்வளவு நேரம் காத்திருக்க விரும்புகிறாய்? ஆக்கினைத்தீர்பிற்கான நாள் வரையிலா? உனது கடந்த கால மீறல்களை நான் இன்று நினைவில் கொள்வதில்லை; நான் உன்னை மீண்டும் மீண்டும் மன்னிக்கிறேன், உனது எதிர்மறையான பக்கத்திலிருந்து விலகி, உனது நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்கிறேன், ஏனென்றால் எனது தற்போதைய வார்த்தைகளும் கிரியைகளும் உன்னை இரட்சிப்பதற்காகவே உள்ளன, மேலும் எனக்கு உன்மீது எந்தவித தீயநோக்கமும் இல்லை. ஆனாலும் நீ பிரவேசிக்க மறுக்கிறாய்; கெட்டதில் இருந்து உன்னால் நல்லதைச் சொல்ல முடியாது, மேலும் உனக்கு தயையை எவ்வாறு புரிந்துகொள்வது என்றும் தெரியவில்லை. அத்தகையவர்கள் வெறுமனே தண்டனை மற்றும் நீதியான தண்டனையின் வருகைக்காக காத்திருக்கவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

666. உங்களிடையே நான் கிரியை செய்வது யேகோவா இஸ்ரவேலில் கிரியை செய்ததைப் போன்றது அல்ல, குறிப்பாக, யூதேயாவில் இயேசு செய்த கிரியையைப் போன்றதும் அல்ல. நான் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் பேசுகிறேன் மற்றும் கிரியை செய்கிறேன், மேலும் கோபத்தோடும் நியாயத்தீர்ப்போடும்தான் சீர்கெட்டுப்போன இவர்களை நான் ஜெயங்கொள்கிறேன். இது இஸ்ரவேலில் யேகோவா தமது ஜனங்களை வழிநடத்துவதைப் போன்றது இல்லை இஸ்ரவேலில் அவர் செய்த கிரியையானது, ஆகாரம் மற்றும் ஜீவத்தண்ணீரை வழங்குவதாகும், மேலும் அவர் தம் ஜனங்களுக்கு வழங்கும்போது மிகுந்த இரக்கமும் அன்பும் நிறைந்தவராக இருந்தார். இன்றைய கிரியையானது தெரிவு செய்யப்படாத ஒரு சபிக்கப்பட்ட தேசத்தினுடைய ஜனங்களின் மத்தியில் செய்யப்படுகிறது. அங்கு ஏராளமான ஆகாரமும் இல்லை, தாகத்தைத் தணிக்கும் ஊட்டமுள்ள ஜீவத்தண்ணீரும் இல்லை, மேலும் போதுமான அளவு பொருட்களும் வழங்கப்படுவதில்லை; அங்கு போதுமான அளவு நியாயத்தீர்ப்பு, சாபம் மற்றும் ஆக்கினைத்தீர்ப்பு ஆகியவை மட்டுமே வழங்கப்படுகின்றன. குப்பையில் வாழும் இந்தப் புழுக்கள், நான் இஸ்ரவேலுக்கு அளித்ததைப் போன்று, கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகள் நிறைந்த மலைகள், பெரும் செல்வம் மற்றும் எல்லா தேசங்களில் இருக்கும் குழந்தைகளைவிட மிக அழகான குழந்தைகளைப் பெறுவதற்கு முற்றிலும் தகுதியற்றவையாக இருக்கின்றன. சமகால இஸ்ரவேலானது, அதன் ஜனங்களுக்கு ஆகாரமளிப்பதற்கு நான் கொடுத்த கால்நடைகள், செம்மறி ஆடுகள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை தனது பலிபீடத்தின் மீது காணிக்கையாக்குகிறது, இது நியாயப்பிரமாணத்தின்கீழ் யேகோவாவிற்கு தேவைப்படுவதில் பத்தில் ஒரு பங்கைவிட அதிகமாக இருக்கிறது. ஆகவே, நான் அவர்களுக்கு இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்கிறேன்—நியாயப்பிரமாணத்தின்கீழ் இஸ்ரவேல் ஆதாயம் செய்ய வேண்டியதைவிட நூறு மடங்கிற்கும் மேலாக கொடுத்திருக்கிறேன். இஸ்ரவேலுக்கு நான் ஆகாரமளிப்பது ஆபிரகாம் பெற்றுக்கொண்ட அனைத்தையும், ஈசாக்கு பெற்றுக்கொண்ட அனைத்தையும்விட அதிகமானதாக இருக்கிறது. நான் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பலனளிப்பேன், அவர்களைப் பெருகப் பண்ணுவேன், மேலும், என் இஸ்ரவேல் ஜனங்களை நான் பூமியெங்கும் பரவ வைப்பேன். நான் ஆசீர்வதித்து கவனித்துக்கொள்பவர்கள் இன்னும் இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாகவே இருக்கிறார்கள்—அதாவது, இவர்கள் எல்லாவற்றையும் என்னிடம் அர்ப்பணிப்பணிக்கும், என்னிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளும் ஜனங்களாக இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் எனது பலிபீடத்தின் மீது தங்களது புதிதாகப் பிறந்த கன்றுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் பலியிட்டு, எனக்கு முன்பாக அவர்கள் வைத்திருக்கும் அனைத்தையும் எனக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள், எனது வருகையை எதிர்பார்த்து தங்களுக்குப் பிறந்த முதற்பேறான குமாரன்களை பலி கொடுக்கும் அளவிற்குகூட அவர்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். சரி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எனது கோபத்தைத் தூண்டுகிறீர்கள், என்னிடம் கோரிக்கை வைக்கிறீர்கள், பிறர் எனக்காக பலிகொடுப்பனவற்றை நீங்கள் திருடுகிறீர்கள், மேலும் நீங்கள் என்னைப் புண்படுத்துகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால், நீங்கள் அந்தகாரத்தில் அழுகையையும் தண்டனையையும் தான் பெறுகிறீர்கள். நீங்கள் எனது கோபத்தைப் பல முறை தூண்டிவிட்டிருக்கிறீர்கள், சிலர் துயரம் நிறைந்த முடிவை சந்தித்திருக்கும் அளவிற்கும், மகிழ்ச்சியான வீடுகளும் பாழடைந்த கல்லறைகளாக மாறியிருக்கும் அளவிற்கும் காரணமான எனது எரியும் அக்கினியை நான் மழைபோல் பொழிந்திருக்கிறேன். இந்தப் புழுக்களுக்கு என்னிடம் இருப்பதெல்லாம் எல்லையற்ற கோபம் மட்டுமே, அவற்றை ஆசீர்வதிக்கும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. எனது கிரியையின் பொருட்டு மட்டுமே நான் ஒரு விதிவிலக்காக உங்களை உயர்த்தியிருக்கிறேன், மிகுந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு உங்களிடையே கிரியை செய்திருக்கிறேன். எனது பிதாவின் சித்தத்திற்காக இல்லாவிட்டால், குப்பையில் உருளும் புழுக்களுடன் நான் ஒரே வீட்டில் எவ்வாறு ஜீவிக்க முடியும்? உங்களது செயல்கள் மற்றும் வார்த்தைகள் அனைத்திற்கும் நான் மிகுந்த வெறுப்பை உணர்கிறேன். எப்படியிருந்தாலும், உங்களது இழிநிலை மற்றும் கலகத்தன்மை ஆகியவற்றில் எனக்கு சற்று “ஆர்வம்” இருப்பதால், இது எனது வார்த்தைகளின் சிறந்த தொகுப்பாகிவிட்டது. இல்லையெனில், நான் உங்களிடையே இங்கு இவ்வளவு காலம் இருந்திருக்க மாட்டேன். ஆகையால், உங்களுக்கான எனது அணுகுமுறையானது வெறும் அனுதாபத்தினாலும் பரிதாபத்தினாலும் இருக்கின்ற ஒன்றுதான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்; உங்களுக்கான ஒரு துளி அன்பு கூட என்னிடம் இல்லை. நான் உங்களிடம் கொண்டிருப்பது வெறும் சகிப்புத்தன்மைதான், ஏனென்றால் நான் இதை எனது கிரியையின் பொருட்டு மட்டுமே செய்கிறேன். நீங்கள் எனது கிரியைகளைப் பார்த்திருக்கிறீர்கள், ஏனென்றால், நான் அசுத்தத்தன்மையையும் கலகத்தன்மையையும் “மூலப்பொருட்களாக” தெரிந்தெடுத்திருக்கிறேன்; இல்லையெனில், நான் இந்தப் புழுக்களுக்கு எனது கிரியைகளை வெளிப்படுத்தியிருக்க மாட்டேன். நான் விருப்பமில்லாமல் மட்டுமே உங்களில் கிரியை செய்கிறேன், இஸ்ரவேலில் நான் எனது தயார்நிலை விருப்பத்தோடு கொண்டு கிரியை செய்தது போல் உங்களுக்குச் செய்யவில்லை. உங்களிடையே பேசும்படி என்னை நானே கட்டாயப்படுத்தும் போது நான் எனது கோபத்தைத் தாங்கிக்கொள்கிறேன். எனது பெரிய கிரியைக்காக இல்லாவிட்டால், இதுபோன்ற புழுக்களின் தொடர்ச்சியான பார்வையை நான் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? எனது நாமத்துக்காக இல்லாவிட்டால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே மிக உயரமான இடங்களுக்கு ஏறி, இந்தப் புழுக்களை அவற்றின் குப்பையோடு சேர்த்து முழுமையாக எரித்திருப்பேன்! எனது மகிமைக்காக இல்லாவிட்டால், இந்தப் பொல்லாத பிசாசுகள் எனது கண்களுக்கு முன்பாக தங்களது தலையை அசைத்து என்னை வெளிப்படையாக எதிர்க்க என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? சிறிதளவு தடங்கலும் இன்றி எனது கிரியை சுமூகமாக செய்யப்படாவிட்டால், இந்தப் புழுக்களைப் போன்ற ஜனங்கள் என்னை வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்ய என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? இஸ்ரவேலில் ஒரு கிராமத்தில் நூறு பேர் என்னை இப்படி எதிர்க்க முன்வந்தால், அவர்கள் எனக்குப் பலிகளைக் கொடுத்திருந்தாலும், மற்ற நகரங்களில் உள்ள ஜனங்கள் மீண்டும் கலகம் செய்வதைத் தடுப்பதற்காக நான் இவர்களை அழித்து நிலத்தில் இருக்கும் விரிசல்களுக்குள் தள்ளுவேன். நான் எல்லாவற்றையும் விழுங்கும் நெருப்பு, குற்றத்தை நான் பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். மனுஷர் அனைவரும் எம்மால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதால், நான் என்ன சொன்னாலும் செய்தாலும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும், அவர்கள் கலகம் செய்யக்கூடாது. எனது கிரியையில் தலையிட ஜனங்களுக்கு உரிமை இல்லை, எனது கிரியையிலும் எனது வார்த்தைகளிலும் எது சரி எது தவறு என்பதை ஆராய அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். நான் தான் சிருஷ்டிப்பின் கர்த்தர், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் எனக்குத் தேவையான அனைத்தையும் பயபக்தியுடனான இருதயத்துடன் அடைய வேண்டும்; அவர்கள் என்னுடன் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடாது, குறிப்பாக, அவர்கள் எதிர்க்கக்கூடாது. எனது அதிகாரத்தினால் நான் எனது ஜனங்களை ஆளுகிறேன், எனது சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அனைவரும் எனது அதிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். இன்று நீங்கள் எனக்கு முன்பாக தைரியமாகவும், அகந்தையோடும் இருந்தாலும், நான் உங்களுக்குப் போதிக்கும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவில்லை என்றாலும், உங்களிடம் எந்த பயமும் இல்லை என்றாலும், நான் உங்களது கலகத்தன்மையை சகிப்புத்தன்மையுடன் மட்டுமே எதிர்கொள்கிறேன்; சிறிய, அற்பமான புழுக்கள் குப்பையில் உள்ள அசுத்தத்தைக் கிளறிவிட்டிருந்தாலும், நான் கோபப்பட்டு எனது கிரியையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டேன். நான் வெறுக்கிற எல்லாவற்றின் இருப்பையும் நான் தாங்கிக்கொள்கிறேன், எனது பிதாவின் சித்தத்திற்காக நான் வெறுக்கிற எல்லாவற்றையும் நான் பொறுத்துக்கொள்கிறேன், எனது வெளிப்பாடுகள் நிறைவடையும் வரை, எனது கடைசி தருணம் வரை நான் இதைச் செய்வேன். கவலைப்படாதே! நாமமிடப்படாத புழுக்கள் இருக்கும் அதே மட்டத்திற்கு என்னால் மூழ்க முடியாது, மேலும் எனது திறமையின் அளவை உன்னுடன் ஒப்பிடவும் மாட்டேன். நான் உன்னை வெறுக்கிறேன், ஆனாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது. நீ எனக்குக் கீழ்ப்படிவதில்லை, ஆனால் உன்னை நான் தண்டிக்கும் நாளில் உன்னால் தப்பித்துக்கொள்ள முடியாது, இது எனது பிதாவினால் எனக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டது. சிருஷ்டிக்கும் கர்த்தருடன் சிருஷ்டிக்கப்பட்ட புழுவை ஒப்பிட முடியுமா? இலையுதிர்காலத்தில், உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்புகின்றன; நீ உனது “பிதாவின்” வீட்டிற்குத் திரும்பிச் செல்வாய், நான் எனது பிதாவின் பக்கமாகத் திரும்பிச் செல்வேன். நான் அவருடைய கனிவான பாசத்துடன் இருப்பேன், நீ உனது தகப்பனின் நடையை பின்பற்றுவாய். எனது பிதாவின் மகிமை எனக்கு இருக்கும், நீ உன்னுடைய தகப்பனின் அவமானத்தைப் பெறுவாய். நான் நீண்ட காலமாக என்னிடம் வைத்திருந்த உனக்குக் கொடுக்க வேண்டிய சிட்சையைப் பயன்படுத்துவேன், மேலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீர்கெட்டுப் போயிருக்கும் உன்னுடைய கெட்டுப்போன மாம்சத்துடன் நீ எனது சிட்சிப்பை எதிர்கொள்வாய். சகிப்புத்தன்மையுடன் உனக்குள் எனது வார்த்தைகளின் கிரியையை நான் முடித்திருப்பேன், எனது வார்த்தைகளிலிருந்து பேரழிவை அனுபவிக்கும் பங்கினை நீ நிறைவேற்றத் தொடங்குவாய். நான் இஸ்ரவேலில் மிகுந்த சந்தோஷத்துடன் கிரியை செய்வேன்; நீ அழுது பற்களை நறநறவென கடித்து, ஜீவித்து அப்படியே சேற்றில் விழுந்து இறந்துபோவாய். நான் எனது சுயமான வடிவத்தை மீண்டும் பெறுவேன், இனியும் உன்னுடன் அசுத்தத்தில் இருக்க மாட்டேன், அதே நேரத்தில் நீ உனது சுயமான அருவருப்பான தோற்றத்தை மீண்டும் பெற்று குப்பைக்குள் தொடர்ந்து புதையுண்டு போவாய். எனது கிரியையும் வார்த்தைகளும் நிறைவடைந்தவுடன், அது எனக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உனது எதிர்ப்பும் கலகமும் முடிவிற்கு வரும்போது, அது நீ அழுகிற நாளாக இருக்கும். நான் உன்னிடம் அனுதாபப்பட மாட்டேன், நீ என்னை மீண்டும் ஒருபோதும் பார்க்கவும் மாட்டாய். நான் இனி உன்னுடன் உரையாடலிலும் ஈடுபட மாட்டேன், நீ என்னை மீண்டும் ஒருபோதும் சந்திக்கவும் மாட்டாய். உனது கலகத்தனத்தை நான் வெறுப்பேன், மேலும் நீ எனது சௌந்தரியத்தை இழப்பாய். நான் உன்னை அடிப்பேன், நீ எனக்காக வருந்துவாய். நான் உன்னிடமிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் செல்வேன், எனக்கான உன்னுடைய கடனை நீ அறிந்து கொள்வாய். நான் உன்னை மீண்டும் பார்க்க மாட்டேன், ஆனால் நீ எப்போதும் எனக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பாய். நான் உன்னை வெறுப்பேன், ஏனென்றால் நீ தற்போது என்னை எதிர்க்கிறாய், நீ என்னை இழக்க நேரிடும், ஏனெனில் நான் தற்போது உன்னை சிட்சிக்கிறேன். நான் உன்னுடன் ஜீவிக்க விரும்பவில்லை, ஆனால் நீ அதற்காகக் கடுமையாக ஏங்கி நித்தியமாக அழுவாய், ஏனென்றால் நீ என்னிடம் செய்த எல்லாவற்றிற்கும் நீ வருந்துவாய். உனது கலகத்தன்மை மற்றும் எதிர்ப்பிற்காக நீ வருந்துவாய், நீ வருத்தத்துடன் தரையில் முகங்குப்புற எனது முன் விழுந்து, மீண்டும் ஒருபோதும் எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வாய். இருப்பினும், உனது இருதயத்தில், நீ என்னை நேசிக்க மட்டுமே செய்வாய், ஆனாலும் உன்னால் ஒருபோதும் எனது சத்தத்தைக் கேட்க முடியாது. உன்னை எண்ணி நீயே வெட்கங்கொள்ளச் செய்வேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்” என்பதிலிருந்து

667. இப்போது என்னை நயங்காட்டி ஏமாற்றும் உனது மென்மையான மாம்சத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் உனக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை மட்டுமே விடுக்கிறேன், இருப்பினும் நான் உனக்கு சிட்சையைக் கொண்டு “சேவையை” செய்ய மாட்டேன். எனது கிரியையில் நீ என்ன பங்கு வகிக்கிறாய் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும், அதன் பின்னரே நான் திருப்தி அடைவேன். இதற்கு அப்பாற்பட்ட விஷயங்களில், நீ என்னை எதிர்த்தால் அல்லது எனது பணத்தை செலவிட்டால், அல்லது யேகோவாவாகிய எனக்கானப் பலிகளைப் புசித்தால், அல்லது புழுக்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் கடித்துக்கொண்டால், அல்லது நாய் போன்ற ஜீவன்களான உங்களுக்குள் மோதல்கள் இருந்தால் அல்லது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டால்—இப்படி எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் நான் கவலைகொள்வதில்லை. நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அதன்மூலம் நான் திருப்தி அடைவேன். இவை அனைத்தையும் தவிர, நீங்கள் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அல்லது ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் சண்டையிட விரும்பினால், அது ஒன்றும் பெரிய விஷயமல்ல; இதுபோன்ற விஷயங்களில் தலையிட எனக்கு விருப்பமில்லை, மேலும் மனுஷ விஷயங்களில் சிறிதளவிலும் நான் ஈடுபடுவதும் இல்லை. நான் இப்படி இருப்பதற்கு உங்களுக்கிடையேயான மோதல்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று அர்த்தமில்லை; நான் உங்களில் ஒருவன் இல்லை என்பதால் உங்களிடையே நடக்கும் விஷயங்களில் பங்கேற்பதில்லை என்று அர்த்ததமாகும். நான் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் இல்லை, நான் உலகத்தைச் சேர்ந்தவனில்லை, எனவே ஜனங்களின் பரபரப்பான வாழ்க்கையையும் அவர்களுக்கு இடையேயான குழப்பமான, முறையற்ற உறவுகளையும் நான் வெறுக்கிறேன். நான் குறிப்பாகக் கூச்சலிடும் கூட்டங்களை வெறுக்கிறேன். இருப்பினும், ஒவ்வொரு ஜீவனின் இருதயங்களிலும் இருக்கும் அசுத்தங்களைப் பற்றி எனக்கு ஆழமான அறிவு உள்ளது, நான் உங்களை சிருஷ்டிப்பதற்கு முன்பு, மனுஷ இருதயத்தில் ஆழமாக இருந்த அநீதியை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன், மேலும் மனுஷ இருதயத்தில் இருக்கும் எல்லா ஏமாற்றுத்தனங்களையும் வஞ்சகத்தையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால், ஜனங்கள் அநீதியான காரியங்களைச் செய்யும்போது எந்தத் தடயங்களும் காணப்படுவதில்லை என்றாலும், உங்கள் இருதயங்களுக்குள் அடங்கியுள்ள அநீதியானது நான் உருவாக்கிய எல்லாவற்றின் செழுமையையும் மிஞ்சும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் பெருந்திரளான ஜனங்கள் என்னும் உச்சத்திற்கு உயர்ந்திருக்கிறீர்கள்; நீங்கள் வெகுஜனங்களின் மூதாதையர்களாக இருக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள், மேலும் நீங்கள் எல்லாப் புழுக்களிடையேயும் வெறிகொண்டு ஓடுகிறீர்கள், எளிதான இடத்தைத் தேடுகிறீர்கள், உங்களை விட சிறியதாக இருக்கும் புழுக்களை விழுங்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் இருதயங்களில் நீங்கள் தீங்கிழைப்பவராகவும் மற்றும் கெட்டவராகவும் இருக்கிறீர்கள், சமுத்திரத்தின் அடிப்பகுதியில் மூழ்கியிருக்கும் பிசாசுகளைக் கூட மிஞ்சிவிடுகிறீர்கள். நீங்கள் குப்பையின் அடிப்பகுதியில் வசிக்கிறீர்கள், புழுக்களுக்கு அமைதி இல்லாமல் போகும்வரை உச்சி முதல் அடி வரை தொந்தரவு செய்கிறீர்கள், ஒருவருக்கொருவர் சிறிது நேரம் சண்டையிட்டுவிட்டு பின்னர் அமைதியடைகிறீர்கள். உங்களுக்கு உங்கள் இடம் எதுவென்று தெரிவதில்லை, ஆனாலும் நீங்கள் குப்பையில் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறீர்கள். அத்தகைய போராட்டத்திலிருந்து உங்களால் எதை ஆதாயமாக பெற முடியும்? உங்கள் இருதயங்களில் நீங்கள் உண்மையிலேயே என்னிடம் பயபக்தியுடன் இருந்தால், என் முதுகிற்குப் பின்னால் நீங்கள் எப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட முடியும்? உங்கள் அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் இன்னும் குப்பையில் துர்நாற்றம் வீசும் சிறிய புழு தான், இல்லையா? உங்களால் இறக்கைகள் முளைத்து வானத்தில் புறாவாகப் பறக்க முடியுமா? துர்நாற்றம் வீசும் சிறிய புழுக்களான நீங்கள், யேகோவாவாகிய எனது பலிபீடத்திலிருந்து காணிக்கைகளைத் திருடுகிறீர்கள்; அவ்வாறு செய்யும்போது, உனது கெட்டுப்போன, தோல்வியுற்ற நற்பெயரை மீட்டு இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாக மாற முடியுமா? நீங்கள் வெட்கமே இல்லாத மோசமானவர்கள்! பலிபீடத்தின் மீது இருக்கும் அந்தக் காணிக்கைகள் என்னை வணங்குபவர்களின் தர்ம சிந்தனைகளின் வெளிப்பாடாக எனக்கு செலுத்தப்பட்டவை. அவை எனது கட்டுப்பாட்டிற்காகவும் எனது பயன்பாட்டிற்காகவும் உள்ளன, எனவே ஜனங்கள் எனக்குக் கொடுத்த சிறிய காட்டுப்புறாக்களை உன்னால் எப்படிக் கொள்ளையடிக்க முடியும்? யூதாஸாக மாறுவதற்கு நீ பயப்படவில்லையா? உனது தேசம் இரத்தக் களமாக மாறக்கூடும் என்று நீ பயப்படவில்லையா? வெட்கமில்லாத அற்பனே! ஜனங்கள் வழங்கும் காட்டுப்புறாக்களானது புழுவான உனது வயிற்றை வளர்ப்பதற்குத்தான் என்று நீ நினைக்கிறாயா? நான் உனக்குக்குக் கொடுத்தது நான் மனநிறைவுடனும் விருப்பத்துடனும் உனக்கு கொடுத்ததாகும்; நான் உனக்குக் கொடுக்காதது எனது வசம் உள்ளது. நீ எனது காணிக்கைகளைத் திருடக்கூடாது. யேகோவாவும், சிருஷ்டிப்பின் கர்த்தருமான நானே கிரியை செய்பவர், ஜனங்கள் எனக்காக பலிகளைக் கொடுக்கிறார்கள். நீ செய்யும் எல்லாவற்றுக்கும் இது பிரதியுபகரம் என்று நீ நினைக்கிறாயா? நீ உண்மையில் வெட்கமில்லாதவன்! நீ யாருக்காக ஓடுகிறாய்? அது உனக்காக அல்லவா? நீ எதற்காக எனது பலிகளை திருடுகிறாய்? எனது பணப் பையில் இருந்து பணத்தை ஏன் திருடுகிறாய்? நீ யூதாஸ்காரியோத்தின் குமாரன் இல்லையா? யேகோவாவாகிய எனக்கு செய்யப்பட்ட பலிகளானது ஆசாரியர்கள் அனுபவிக்க வேண்டியவை. நீ ஒரு ஆசாரியனா? எனக்கான பலிகளை நீ மனநிறைவுடன் புசிக்கத் துணிகிறாய், மேலும் அவற்றை மேசைமீதும் வைக்கிறாய்; நீ எந்த மதிப்பும் இல்லாதவன்! நீ எதற்கும் பயனற்ற மோசமான ஒருவன்! எனது அக்கினி, அதாவது யேகோவாவின் அக்கினி, உன்னை எரித்துப்போடும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்” என்பதிலிருந்து

668. உங்கள் மத்தியில் நான் இவ்விதமாய்க் கிரியை செய்து பேசினேன், நான் மிக அதிகமாக ஆற்றலையும் முயற்சியையும் செலவுசெய்தேன், இருப்பினும் நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறியதை எப்போது நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுள்ளீர்கள்? சர்வவல்லவரான எனக்கு எங்கே நீங்கள் தலைவணங்கினீர்கள்? நீங்கள் ஏன் என்னை இவ்விதமாக நடத்துகிறீர்கள்? நீங்கள் கூறும் மற்றும் செய்யும் எல்லாம் ஏன் என் கோபத்தைக் கிளறுகின்றன? உங்கள் இருதயம் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? நான் எப்போதாவது உங்களை விழத்தள்ளி இருக்கிறேனா? என்னைத் துயரமும் விசனமும் அடையச் செய்வதைத் தவிர வேறொன்றையும் நீங்கள் செய்யவில்லையே? யேகோவாவாகிய என் கோபாக்கினையின் நாள் உங்கள் மேல் வரட்டும் என்று நீங்கள் காத்திருக்கிறீர்களா? உங்கள் கீழ்ப்படியாமையால் தூண்டப்படும் கோபத்தை நான் அனுப்புவதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? நான் செய்யும் ஒவ்வொன்றும் உங்களுக்காக இல்லையா? ஆனால் யேகோவாவான என்னை எப்போதும் நீங்கள் இந்த விதமாகத்தானே நடத்தியிருக்கிறீர்கள்: என் பலிகளைத் திருடி, என் பலிபீடத்தில் இருந்து காணிக்கைகளை எடுத்து ஓநாய்களின் குட்டிகளுக்கும் குட்டிகளின் குட்டிக்கும் உணவளிக்கத்தானே அதன் குகைக்கு எடுத்துசெல்கிறீர்கள்; கோப முறைப்புடனும், வாள்களோடும், வேல்களோடும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுகின்றனர், சர்வவல்லவரான என் வார்த்தைகளை மலக்கழிவைப் போல அசுத்தமாக மாற கழிப்பறைக்குள் வீசி எறிகின்றார்கள். உங்கள் நேர்மை எங்கே? உங்கள் மனிதப்பண்பு விலங்குப்பண்பாக மாறிவிட்டது! உங்கள் இருதயங்கள் வெகுகாலத்திற்கு முன்னரே கல்லாக மாறிவிட்டன. சர்வவல்லவரான எனக்கு எதிராக இன்று நீங்கள் செய்யும் தீமைகளை வருகின்ற என் கோபாக்கினை நாளே நான் நியாயம் தீர்க்கும் நாள் என்று உங்களுக்குத் தெரியாதா? என் வார்த்தைகளைச் சேற்றில் வீசிவிட்டு அதற்குச் செவிகொடுக்காது என்னை இவ்விதமாக ஏமாற்றிவிட்டு, இவ்வாறு என் முதுகுக்குப் பின்னால் நடிப்பதன் மூலம் என் உக்கிரத்தின் பார்வையில் இருந்து தப்பித்துவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? என் பலிகளைத் திருடி என் உடைமைகளை இச்சித்த போதே யேகோவாவாகிய என் கண்கள் உங்களைப் பார்த்துவிட்டதை நீங்கள் அறியவில்லையா? பலிகள் செலுத்தப்பட்ட பலிபீடத்துக்கு முன் என் பலிகளை எப்போது திருடினீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வகையில் என்னை ஏமாற்ற நீங்கள் போதுமான அளவுக்குப் புத்திசாலிகள் என்று உங்களை நீங்கள் எவ்வாறு நம்ப முடிந்தது? உங்கள் கொடிய பாவங்களை விட்டு என் கோபாக்கினை எவ்வாறு விலக முடியும்? உங்கள் தீய செயல்களைக் கடந்து என் உக்கிர கோபம் எவ்வாறு செல்லும்? இன்று நீங்கள் செய்யும் தீமை உங்களுக்கு ஒரு வெளியேறும் வழியைத் திறக்காது, ஆனால் உங்களது நாளைய தினத்துக்காகத் தண்டனையைக் குவித்து வைக்கும்; அது உங்களுக்கு எதிராக சர்வவல்லவரான என் கடிந்துகொள்ளுதலைத் தூண்டுகிறது. உங்கள் தீய காரியங்களும் தீய வார்த்தைகளும் என் தண்டனையில் இருந்து எவ்வாறு தப்பிக்கும்? உங்கள் ஜெபங்கள் என் செவிகளை எவ்வாறு வந்தடையும்? உங்களை அநீதியில் இருந்து விடுவிக்க ஒரு வழியை எவ்வாறு நான் திறக்க முடியும்? என்னை மீறும் உங்கள் தீய செயல்களை நான் எவ்வாறு விட்டுவிட முடியும்? சர்ப்பத்தைப் போன்று விஷம் நிறைந்த உங்கள் நாவுகளை துண்டிக்காமால் நான் எவ்வாறு இருக்க முடியும்? உங்கள் நீதிக்காக நீங்கள் என்னைக் கூப்பிடவில்லை, ஆனால் பதிலாக உங்கள் அநீதியின் காரணமாக என் கோபாக்கினையைக் குவித்து வைக்கிறீர்கள். உங்களை நான் எவ்வாறு மன்னிக்க முடியும்? சர்வவல்லவரான என் கண்களில் உங்கள் வார்த்தைகளும் செயல்களும் அசுத்தமானவை. சர்வவல்லவராகிய என் கண்கள் உங்கள் அநீதியை இடைவிடாத தண்டனையாகக் காண்கிறது. எனது நீதியான கடிந்துகொள்ளுதலும் நியாயத்தீர்ப்பும் உங்களிடம் இருந்து எவ்வாறு விலக முடியும்? இதை நீங்கள் எனக்குச் செய்து, துன்பமும் கோபமும் உருவாக்குவதால், என் கையில் இருந்து உங்களை நான் எவ்விதம் தப்பவிடவும் யேகோவாவாகிய நான் உங்களை தண்டித்து சபிக்கும் நாளில் இருந்து விலகிச்செல்லவும் விட முடியும்? உங்களது எல்லா தீய சொற்களும் பேச்சுக்களும் என் செவிகளுக்கு ஏற்கெனவே எட்டிவிட்டது உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் அநீதி ஏற்கெனவே நீதி என்னும் என் பரிசுத்த அங்கியை களங்கப்படுத்திவிட்டதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் கீழ்ப்படியாமை ஏற்கெனவே என் உறுதியான கோபத்தைத் தூண்டிவிட்டுவிட்டதை நீங்கள் அறியவில்லையா? வெகுகாலத்துக்கு முன்னரே நீங்கள் என்னைக் குமுறவைத்ததுடன், வெகுகாலத்திற்கு முன்னரே என் பொறுமையைச் சோதித்து வருவதையும் நீங்கள் அறியவில்லையா? நீங்கள் ஏற்கெனவே என் மாம்சத்தைச் சிதைத்து அதைக் கந்தலாக்கிவிட்டதை நீங்கள் அறியவில்லையா? நான் என் கோபத்தை மட்டுப்படுத்தி இதுவரை பொறுமையாக இருந்தேன், இனிமேலும் உங்களைக் குறித்து நான் பொறுமையாக இருக்க மாட்டேன். நீங்கள் ஆற்றும் தீமைகள் ஏற்கெனவே என் கண்களை எட்டிவிட்டது, மேலும் என்னுடைய கூப்பிடுதல்கள் ஏற்கெனவே என் பிதாவின் காதுகளை எட்டியுள்ளது. நீங்கள் என்னை இவ்வாறு நடத்துவதற்கு அவர் எவ்வாறு அனுமதிக்க முடியும்? நான் உங்களில் செய்யும் எந்த கிரியையாவது உங்கள் பொருட்டானதாக இல்லாமல் இருக்கிறதா? இருப்பினும் யேகோவாவாகிய என் கிரியையை அதிகம் நேசிக்கிறவராக உங்கள் மத்தியில் மாறியிருப்பது யார்? நான் பலவீனமாக இருப்பதாலும் வேதனையை அனுபவித்ததன் காரணமாகவும் என் பிதாவின் சித்தத்துக்கு உண்மை இல்லாதவனாக நான் இருக்க முடியுமா? நீங்கள் என் இருதயத்தைப் புரிந்துகொள்ளவில்லையா? யேகோவா செய்தது போல நான் உங்களிடம் பேசுகிறேன்; உங்களுக்காக நான் அதிகமாக விட்டுக்கொடுக்கவில்லையா? என் பிதாவின் கிரியைக்காக இந்த துன்பங்களை எல்லாம் நான் தாங்கிக்கொள்ள விரும்பினாலும், என் துன்பத்தின் விளைவாக நான் உங்கள் மேல் கொண்டுவரும் தண்டனையில் இருந்து உங்களை எவ்வாறு விடுவிக்க முடியும்? என்னால் நீங்கள் அதிகமாக அனுபவிக்கவில்லையா? இன்று, என் பிதாவால் நான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளேன்; உங்கள் ஜீவனுக்காகவும் நீங்கள் அனுபவிக்கும் விஷயங்களுக்காகவும் என் ஜீவன் பரிமாற்றம் செய்யப்பட்டதை நீங்கள் அறியவில்லையா? என் பிதா என் ஜீவனைப் பயன்படுத்தி சாத்தானோடு யுத்தம் செய்து, உங்களுக்கு என் ஜீவனை வழங்கியதும், அதன் காரணமாக நீங்கள் நூறுமடங்கப் பெறுவதோடு, பல சோதனைகளை நீங்கள் தவிர்க்கவும் அனுமதித்ததை நீங்கள் அறியவில்லையா? என் கிரியையின் மூலமாக மட்டுமே நீங்கள் பல சோதனைகளில் இருந்தும் பல கடுமையான தண்டனைகளில் இருந்தும் விதிவிலக்கு பெற்றீர்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? என் நிமித்தமாகவே பிதா இதுவரை உங்களை அனுபவித்து மகிழ அனுமதிக்கிறார் என்பதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் இருதயங்களில் காய்ப்பு உருவாகிவிட்டது போல உங்களால் இன்று கடினமாகவும் பிடிவாதமாகவும் எவ்வாறு இருக்க முடிகிறது. நான் பூமியில் இருந்து சென்ற பின்னர் தொடர்ந்து வரும் கோபாக்கினையின் நாளில் இருந்து நீங்கள் இன்று செய்யும் தீமை எவ்வாறு தப்பும்? மிகவும் கடினமாகவும் பிடிவாதமாகவும் இருப்பவர்களை யேகோவாவின் கோபத்தில் இருந்து எவ்வாறு நான் தப்புவதற்கு அனுமதிப்பேன்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது” என்பதிலிருந்து

669. கடந்த காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்: எப்போது உங்களை நோக்கி என் பார்வை கோபமாகவும், என் குரல் கண்டிப்பாகவும் இருந்தது? அற்ப விஷயங்களை பற்றிய பிரச்சினைகளை உங்களிடம் நான் எழுப்பி இருக்கிறேனா? காரணமின்றி எப்போது நான் உங்களைக் கண்டித்துள்ளேன்? முகமுகமாக எப்போது நான் உங்களைக் கண்டித்திருக்கிறேன்? ஒவ்வொரு சோதனைகளில் இருந்தும் உங்களை விலக்கிக் காக்க என் கிரியையின் நிமித்தமாக அல்லவா நான் என் பிதாவைக் கூப்பிட்டேன்? நீங்கள் ஏன் என்னை இவ்வாறு நடத்துகிறீர்கள்? நான் உங்கள் மாம்சத்தை வீழ்த்த எப்போதாவது என் அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கிறேனா? நீங்கள் எனக்கு ஏன் இவ்வாறு திருப்பி அளிக்கிறீர்கள்? என்னைப் பொறுத்த வரையில் சில சமயம் அனலாகவும் சிலசமயம் குளிராகவும் உங்களைக் காட்டிக்கொண்டாலும் நீங்கள் அனலும் இல்லை குளிரும் இல்லாத நிலையில் இருந்து இனிமையாகப் பேசி என்னிடம் இருந்து விஷயங்களை மறைக்கிறீர்கள், மேலும் உங்கள் வாய்நிறைய அநீதியின் எச்சிலே நிறைந்துள்ளது. உங்கள் நாவுகளால் என் ஆவியை ஏமாற்ற முடியும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் நாவுகள் என் கோபாக்கினையில் இருந்து தப்ப முடியும் என்று எண்ணுகிறீர்களா? யேகோவாவான என் கிரியைகளின் மேல் உங்கள் நாவுகள் அவைகள் விரும்புகிற படியெல்லாம் நியாயந்தீர்க்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? மனிதன் நியாயந்தீர்க்கும் தேவனாக நான் இருக்கிறேனா? இவ்வாறு என்னை தேவதூஷணம் கூற ஒரு சிறு முட்டைப்புழுவை என்னால் அனுமதிக்க முடியுமா? என் நித்திய ஆசீர்வாதங்களின் மத்தியில் இத்தகையக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை எவ்வாறு நான் வைக்க முடியும்? உங்கள் வார்த்தைகளும் செயல்பாடுகளும் வெகுகாலத்திற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு கண்டிக்கப்பட்டவை. நான் வானங்களை விரித்து எல்லாவற்றையும் படைத்தபோது, நான் எந்த சிருஷ்டியையும் அவைகள் விரும்பியபடி பங்கேற்க அனுமதிக்கவில்லை, அதுமட்டுமல்லாமல் எதுவும் அதன் இஷ்டப்படி என் கிரியைக்கும் நிர்வாகத்துக்கும் இடையூறு செய்ய அனுமதிக்கவுமில்லை. ஒரு மனிதனை அல்லது பொருளை நான் சகித்துக்கொள்ளவில்லை; என்னிடம் கொடூரமாகவும் மனிதத்தன்மையற்றும் நடந்தவர்களை நான் எப்படி விட்டுவைப்பேன்? என் வார்த்தைகளுக்கு எதிராகக் கலகம் செய்பவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்? எனக்குக் கீழ்ப்படியாதவர்களை எவ்வாறு நான் தப்பவிட முடியும்? மனிதனின் முடிவு சர்வவல்லவரான என் கையில் இல்லையா? உனது அநீதியையும் கீழ்ப்படியாமையையும் பரிசுத்தமானது என்று நான் எவ்வாறு கருத முடியும்? உன் பாவங்கள் என் பரிசுத்தத்தை எவ்வாறு தீட்டுப்படுத்த முடியும்? அநியாயக்காரனின் அசுத்தத்தால் நான் தீட்டுப்படுவதில்லை, அல்லது அநியாயக்காரனின் காணிக்கைளில் நான் பிரியப்படுவதும் இல்லை. யேகோவாவான என்னிடம் நீ உண்மையுள்ளவனாக இருந்தால் என் பலிபீடத்தில் இருக்கும் பலிகளை உனக்காக எப்படி உன்னால் எடுத்துக்கொள்ள முடியும்? என் பரிசுத்த நாமத்தை தூஷிக்க உன் விஷம்நிறைந்த நாவைப் பயன்படுத்த முடியுமா? இந்த வகையில் என் வார்த்தைகளுக்கு எதிராக உன்னால் கலகம் செய்ய முடியுமா? என் மகிமையையும் பரிசுத்த நாமத்தையும் ஒரு கருவியாகக் கொண்டு தீயவனான சாத்தானுக்கு சேவைசெய்ய முடியுமா? பரிசுத்தவான்களின் மகிழ்வுக்காக என் ஜீவன் வழங்கப்பட்டிருக்கிறது. நீ விரும்பும்படி எல்லாம் என் ஜீவனை வைத்து விளையாடவும், அதை உங்கள் நடுவில் சண்டைக்கான கருவியாக பயன்படுத்தவும் நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்னைப் பொறுத்தவற்றில் நீங்கள் எவ்வாறு மிகவும் இதயமற்றவர்களாகவும், நன்மையின் வழியில் மிகவும் குறைபாடு கொண்டவர்களாகவும் இருக்கமுடியும்? இந்த ஜீவ வார்த்தைகளில் உங்கள் தீய செயல்களை நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன் என்பதை நீங்கள் அறியவில்லையா? நான் எகிப்தை தண்டிக்கும் கோபாக்கினையின் நாளின் போது நீங்கள் எவ்வாறு தப்பிக்க முடியும்? காலங்காலமாக இந்த விதமாக என்னை நீங்கள் எதிர்த்து மீறுவதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அந்த நாள் வரும்போது உங்கள் தண்டனை எகிப்தில் நடந்ததை விட சகிக்கமுடியாததாக இருக்கும் என்று நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். என் கோபாக்கினை நாளில் இருந்து உங்களால் எவ்வாறு தப்பிக்க முடியும்? நான் மெய்யாகவே கூறுகிறேன்: என் பொறுமை உங்கள் தீய செயல்களுக்காக உருவாக்கப்பட்டு அந்த நாளின் தண்டனைக்காக நிலைத்திருக்கிறது. நான் என் பொறுமையின் முடிவை எட்டிவிட்ட பின்னர் கோபாக்கினையான நியாயத்தீர்ப்பால் துன்பம் அடையப்போவது நீங்கள்தாம் அல்லவா? எல்லா விஷயங்களும் சர்வவல்லவராகிய என் கையில் இருக்கவில்லையா? வானங்களின் கீழ் இவ்வாறு எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்க உங்களை நான் அனுமதிக்க முடியும்? அவர் வருவார் ஆனால் ஒருபோதும் வரவில்லை என்று கூறப்பட்ட மேசியாவை நீங்கள் சந்தித்துவிட்ட காரணத்தால் உங்கள் ஜீவன் மிகக் கடினமானதாக இருக்கும். நீங்கள் அவருடைய விரோதிகள் இல்லையா? இயேசு உங்களோடு நட்போடு இருந்தார், ஆனால் நீங்கள்தான் மேசியாவின் எதிரிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுவுடன் நட்பாக இருந்தும் உங்கள் தீய செயல்கள் வெறுக்கத்தக்கவர்களாக இருப்பவர்களின் பாத்திரங்களை நிரப்பிவிட்டது என்பதை நீங்கள் அறியவில்லையா? நீங்கள் யேகோவாவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தும் உங்கள் தீய வார்த்தைகள் யேகோவாவின் காதுகளை எட்டி அவருடைய உக்கிரத்தைத் தூண்டிவிட்டுள்ளதை நீங்கள் அறியீர்களா? அவர் எவ்வாறு உனக்கு நெருக்கமாக இருக்க முடியும், மேலும் தீய செயல்களால் நிரம்பி இருக்கும் உன்னுடைய அந்தப் பாத்திரங்களை அவர் எவ்வாறு எரிக்காமல் இருக்க முடியும்? அவர் எவ்வாறு உன் எதிரியாக இல்லாமல் இருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது” என்பதிலிருந்து

672. சாத்தானால் சீர்கெட்டுப்போன அனைத்து ஆத்துமாக்களும் சாத்தானின் ஆதிக்கத்தில் அடிமைகளாக இருக்கின்றன. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மட்டுமே தனியாகப் பிரிக்கப்பட்டு, சாத்தானின் முகாமிலிருந்து இரட்சிக்கப்பட்டு, இன்றைய ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர். இந்த ஜனங்கள் இனியும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் ஜீவித்திருக்க மாட்டார்கள். அப்படியிருந்தும், மனுஷனின் சுபாவமானது இன்னும் மனுஷனின் மாம்சத்தில் வேரூன்றியிருக்கிறது, அதாவது உங்கள் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், உங்கள் சுபாவமானது முன்பைப் போலவே இருக்கிறது, மேலும் எமது எச்சங்களுக்கு நீங்கள் துரோகம் செய்ய நூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. உங்களது சுபாவம் கட்டுப்படுத்த முடியாததாக இருப்பதால் தான் எமது கிரியை நீண்ட காலம் நீடிக்கிறது. இப்போது, நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது உங்கள் திறனுக்கு ஏற்றவாறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறீர்கள், ஆனாலும் நீங்கள் ஒவ்வொருவரும் எமக்கு துரோகம் செய்து, சாத்தானின் ஆதிக்கத்திற்கு, அவனது முகாமுக்குத் திரும்பி, உங்கள் பழைய ஜீவிதத்திற்கு திரும்பும் திறன் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்—இது மறுக்க முடியாத உண்மை. அந்த நேரத்தில், நீங்கள் இப்போது செய்வது போல, மனுஷத்தன்மையையோ அல்லது மனுஷ ஒற்றுமையையோ முன்வைக்க உங்களுக்கு சாத்தியமாக இருக்காது. கடுமையான சந்தர்ப்பங்களில், நீங்கள் அழிக்கப்படுவீர்கள், மேலும், நித்தியமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் மறு அவதரிப்பு எடுக்காதபடிக்குக் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள். இதுவே உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள பிரச்சினை. முதலாவதாக, எமது கிரியை வீணாகாதபடிக்கு, இரண்டாவதாக, நீங்கள் அனைவரும் வெளிச்சத்தின் நாட்களில் வாழும்படிக்கு நான் உங்களுக்கு இவ்வாறாக நினைவூட்டுகிறேன். உண்மையில், எமது கிரியையானது வீணானதா என்பது முக்கியமான பிரச்சினை இல்லை. நீங்கள் மகிழ்ச்சியான ஜீவிதத்தையும் அற்புதமான எதிர்காலத்தையும் பெற முடிகிறது என்பது தான் முக்கியமானதாக இருக்கிறது. ஜனங்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பதே எமது கிரியையாக இருக்கிறது. உனது ஆத்துமா சாத்தானின் கைகளுக்குள் விழுந்தால், உனது சரீரம் நிம்மதியாக ஜீவிக்காது. நான் உனது சரீரத்தை பாதுகாக்கிறேன் என்றால், உனது ஆத்துமாவும் நிச்சயமாக என் பராமரிப்பில் தான் இருக்கும். நான் உன்னை மெய்யாகவே வெறுக்கிறேன் என்றால், உன் சரீரமும் ஆத்துமாவும் ஒரே நேரத்தில் சாத்தானின் கைகளில் விழும். அதற்குப் பிறகான உனது நிலைமையை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு நாள் எமது வார்த்தைகள் உங்கள் மீது செயல்படவில்லை என்றால், நான் உங்களை சாத்தானிடம் ஒப்படைப்பேன், அதன் மூலம் எமது கோபம் முற்றிலுமாகக் கலைந்து போகும் வரை நீங்கள் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவீர்கள், அல்லது, உங்களது இருதயம் எமக்கு துரோகம் செய்வதில் இருந்து மாறாது என்பதற்காக மீட்க முடியாத மனுஷரான உங்களை நான் தனிப்பட்ட முறையில் தண்டிப்பேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து

673. எமது கிரியையின் கடைசி கட்டத்தில், உங்களால் மிகச்சிறந்த செயல்திறனை வழங்க முடியும் என்றும், நீங்கள் முழு மனதுடன் உங்களை நியமிப்பீர்கள் என்றும், இனி அரை மனதுடன் இருக்க மாட்டீர்கள் என்றும் மட்டுமே நம்புகிறேன். நிச்சயமாக, உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல சென்றடையும் இடம் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆயினும்கூட, எமக்கான தேவை எமக்கு இன்னும் இருக்கிறது, அதாவது உங்கள் ஒரே மற்றும் இறுதி பக்தியை எமக்கு வழங்குவதில் நீங்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும். ஒருவனுக்கு அந்த ஒரே பக்தி இல்லையென்றால், அவன் நிச்சயமாக சாத்தானின் பொக்கிஷமான உடைமையாக இருக்கிறான், நான் இனியும் அவனைப் பயன்படுத்த மாட்டேன், ஆனால் அவனது பெற்றோரால் கவனிக்கப்படுவதற்காக அவனை அவனது வீட்டிற்கு அனுப்புவேன். எமது கிரியையானது உங்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கிறது; நான் உங்களிடமிருந்து நேர்மையான மற்றும் மேலே செல்ல விரும்பும் ஒரு இருதயத்தைத்தான் பெற விரும்புகிறேன், ஆனால் இதுவரை என் கைகள் வெறுமையாகவே இருக்கின்றன. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: ஒரு நாள், சொல்லக்கூடிய சொற்களுக்கும் அப்பால் வேதனைப்படுகிறேன் என்றால், பிறகு உங்களைப் பற்றிய எமது அணுகுமுறை என்னவாக இருக்கும்? அந்த நேரத்தில் நான் இப்போது இருப்பதைப் போல உங்களிடம் நட்பாக இருப்பேனா? அந்த நேரத்தில் இப்போது இருப்பதைப் போல எமது இருதயம் அமைதியாக இருக்குமா? வயலில் சிரமப்பட்டு உழைத்தும் ஒரு தானியத்தைக் கூட அறுவடை செய்யாத ஒருவனின் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? ஒரு பெரிய அடியைச் சந்தித்தபோது ஒருவனின் இருதயம் எவ்வளவு காயமடைகிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஒரு சமயம் நம்பிக்கையால் நிறைந்திருந்த, மோசமான காரியங்களில் பங்கெடுக்க வேண்டியிருக்கும் ஒருவனின் கசப்புத்தன்மையை உங்களால் ருசிக்க முடியுமா? எரிச்சலடைந்த ஒருவனிடமிருந்து வரும் கோபத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பகை மற்றும் வஞ்சகத்துடன் நடத்தப்பட்ட ஒருவனிடம் இருக்கும் பழிவாங்கலுக்கான ஆர்வத்தை உங்களால் அறிய முடியுமா? இந்த ஜனங்களின் மனநிலையை நீங்கள் புரிந்து கொண்டால், தேவனின் பழிவாங்கும் நேரத்தில் அவர் கொண்டிருக்கும் அணுகுமுறையை கற்பனை செய்வது உங்களுக்கு கடினமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்! இறுதியாக, நீங்கள் உங்களது சென்றடையும் இடத்திற்காக தீவிர முயற்சியில் ஈடுபடுகிறீர்கள் என்று நம்புகிறேன், ஆனாலும் உங்கள் முயற்சிகளில் நீங்கள் வஞ்சகமான வழிகளைப் பயன்படுத்த வேண்டாம், இல்லையென்றால் எமது இருதயத்தில் நான் உங்களை எண்ணி தொடர்ந்து ஏமாற்றமடைவேன். அத்தகைய ஏமாற்றம் எதற்கு வழிவகுக்கிறது? நீங்களே உங்களை முட்டாளாக்குவதாக இல்லையா? தங்களது சென்றடையும் இடத்தை நினைத்துக்கொண்டே அதை அழிப்பவர்கள் இரட்சிக்கப்படவே முடியாது. அவன் சினங்கொண்டவனாகவும் கோபமுள்ளவனாகவும் மாறினாலும், அத்தகையவன் மீது யார் பரிதாபப்படுவார்கள்? மொத்தத்தில், நீங்கள் ஒரு பொருத்தமான மற்றும் நல்ல சென்றடையும் இடத்தை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும், நீங்கள் யாரும் பேரழிவிற்குள் விழமாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சென்றடையும் இடம்” என்பதிலிருந்து

674. என்னுடைய இறுதிக் கிரியையானது மனிதனைத் தண்டிப்பது மாத்திரம் இல்லை, ஆனால் மனிதனுக்கான இலக்கை ஆயத்தம் செய்வதும்தான். மேலும் இதனால் ஜனங்கள் என்னுடைய நியமங்களையும், செயல்களையும் ஒப்புக்கொள்ளக்கூடும். ஒவ்வொரு மனிதனும் நான் செய்தவை எல்லாம் சரி என்றும், நான் செய்தவை எல்லாம் என் மனநிலையின் வெளிப்பாடுகள் என்றும் காண நான் விரும்புகின்றேன். இது மனிதனின் செயல் அல்ல, மனிதக்குலத்தை வெளிக்கொண்டுவந்த இயற்கையுடையதும் அல்ல, ஆனால் படைப்பில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் போஷிக்கும் என் செயலே. நான் இல்லையென்றால் மனிதகுலம் அழிவதோடு பேரழிவு என்னும் சாட்டையடியால் பாடுபடும். எந்த மனிதனும் சந்திர, சூரியனின் அழகையோ அல்லது பசுமையான உலகத்தையோ மீண்டும் காண முடியாது. மனிதகுலம் குளிர்ந்த இரவுகளையும், இரக்கமில்லாத மரண இருளின் பள்ளத்தாக்கையும் மாத்திரமே எதிர்கொள்ளும். நானே மனுக்குலத்தின் ஒரே இரட்சிப்பு. நானே மனுக்குலத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறேன், அதற்கும் மேலே மனிதகுலத்தின் மொத்த ஜீவிப்பும் என்னையே சார்ந்திருக்கிறது. நானின்றி ஒட்டுமொத்த மனுக்குலமும் உடனடியாக ஓர் அசைவற்ற நிலைக்கு வந்துவிடும். நானின்றி மனிதகுலம் பெரும் அழிவில் அவதியுறும், எல்லாவகையான பிசாசுகளாலும் கால்களின் கீழ் மிதிக்கப்படும், ஆனாலும் ஒருவரும் என்மீது கவனம் செலுத்துவதில்லை. நான் வேறு ஒருவரும் செய்யமுடியாத கிரியையைச் செய்திருக்கின்றேன், இதனை மனிதன் சில நற்கிரியைகள் மூலம் எனக்கு ஈடு செய்வான் என்று நம்பியிருக்கின்றேன். ஒரு சிலரால் மாத்திரமே எனக்கு ஈடு செய்ய முடிகிறது என்றாலும், நான் மனிதனின் உலகத்தில் என் பயணத்தை முடித்து என் விரிவாக்கக் கிரியையின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவேன். ஏனெனில் மனிதரின் மத்தியில் இத்தனை வருடமாக என் போக்குவரத்தின் வேகம் எல்லாம் பலனுள்ளதாக இருந்திருக்கிறது, நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மக்களின் எண்ணிக்கை முக்கியமில்லை மாறாக அவர்களது நற்கிரியைகளே முக்கியம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் உங்கள் இலக்கிற்காக போதுமான நற்கிரியைகளை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் என நம்புகிறேன். அப்போது நான் திருப்தியாவேன், அப்படியில்லாவிட்டால், உங்களில் ஒருவனும் உங்கள்மீது விழப்போகும் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாது. அந்தப் பேரழிவு என்னிலிருந்தே ஆரம்பிக்கப்படும், மேலும் அது நிச்சயமாகவே என்னாலே திட்டமிடப்படும். என் கண்களில் நீங்கள் செம்மையாய் காணப்படவில்லை என்றால், உங்களால் அந்தப் பேரழிவில் பாடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. உபத்திரவத்தின் காலத்திலே உங்களுடைய அன்பும், விசுவாசமும் ஆழம் இல்லாமல் இருந்ததினால், அப்போது உங்களுடைய செயல்கள் முற்றிலும் பொருத்தமானது என்று கருத முடியாது, ஒன்று நீங்கள் உங்களைக் கோழையாகவோ அல்லது கடுமையாகவோ காட்டியிருப்பீர்கள். அதைப் பொறுத்தவரை நன்மையா அல்லது தீமையா என்று மாத்திரமே நான் ஒரு நியாயத்தீர்ப்பு வழங்குவேன். என் அக்கறை எல்லாம் நீங்கள் எந்த வழியில் நடக்கிறீர்கள் என்பதிலும், எப்படி உங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதிலுமே தொடர்கிறது, அதன் அடிப்படையிலேயே உங்களுடைய முடிவை நான் தீர்மானிப்பேன். எனினும், என் இரக்கம் அதுவரையே நீட்டிக்கப் பட்டிருப்பதால், உபத்திரவத்தின் காலத்திலே சிறிதளவாயினும் விசுவாசத்தைக் காட்டாதவர்களுக்கு நான் நிச்சயமாக அதற்குமேல் இரங்குவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். என்னை காட்டிக்கொடுத்த அல்லது துரோகம் செய்த யார்மீதும் நான் அதற்குமேல் என் விருப்பத்தை வைப்பதில்லை. தன் நண்பர்களின் நன்மையை விற்றுப் போடுபவர்களிடமும் நான் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. யார் அந்த நபராக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. என் இருதயத்தை உடைப்பவர்கள் யாராயினும் என்னிடமிருந்து இரண்டாம் முறை கருணையைப் பெற முடியாது என்பதை நான் உங்களுக்கு அவசியம் சொல்ல வேண்டும். மேலும் எனக்கு உண்மையாக இருப்பவர்களோ என் இருதயத்தில் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து

அடிக்குறிப்புகள்:

அ. ஒரு செத்துப்போன மரக்கட்டை: “உதவிக்கு அப்பாற்பட்டது” என்னும் அர்த்தம் கொண்ட ஒரு சீன முதுமொழி.

ஆ. அசல் உரையில் “இந்த வழியில்” என்ற சொற்றொடர் இல்லை.

முந்தைய: B. மனுஷனுக்கான தேவனுடைய அறிவுரைகள் மற்றும் ஆறுதல்கள்

அடுத்த: XIV. மனுஷனுடைய பலனை வரையறுப்பதற்கான தேவனுடைய தரநிலைகள் மற்றும் ஒவ்வொரு வகையான நபருக்கான முடிவு குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக