H. தேவனுக்கு பயந்து, தீமையை விட்டு விலகுவது எப்படி என்பது குறித்து

415. ஒரு உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன், சிருஷ்டிகர் யார், மனிதனுடைய சிருஷ்டிப்பு எதற்காக, ஒரு சிருஷ்டியின் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுவது மற்றும் எல்லா சிருஷ்டிப்புகளின் தேவனை எவ்வாறு வணங்குவது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சிருஷ்டிகரின் நோக்கங்கள், விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும், அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் கவனித்துக்கொள்ள வேண்டும். சிருஷ்டிகரின் வழிக்கு ஏற்ப செயல்பட வேண்டும். தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்க்க வேண்டும்.

தேவனுக்கு பயப்படுவது என்றால் என்ன? ஒருவர் எவ்வாறு தீமையைத் தவிர்க்க முடியும்?

“தேவனுக்குப் பயப்படுவது” என்பது பெயரிடப்படாத பயம் மற்றும் திகில் என்று அர்த்தமல்ல, தவிர்த்தலும், தூரத்தில் வைத்தலும் அல்ல மற்றும் விக்கிரகாராதனையோ மூடநம்பிக்கையோ அல்ல. மாறாக, அது போற்றுதல், மரியாதை, நம்பிக்கை, புரிதல், அக்கறை, கீழ்ப்படிதல், பிரதிஷ்டை, அன்பு, அத்துடன் நிபந்தனையற்ற மற்றும் குறைகூறாத வழிபாடு, காணிக்கை மற்றும் சமர்ப்பணம் ஆகியனவாகும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான போற்றுதல், உண்மையான நம்பிக்கை, உண்மையான புரிதல், உண்மையான அக்கறை அல்லது கீழ்ப்படிதல் இருக்காது. ஆனால் பயம் அமைதி, சந்தேகம், தவறான புரிதல், ஏய்ப்பு மற்றும் தவிர்ப்பு ஆகியவை இருக்கும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான பிரதிஷ்டை மற்றும் காணிக்கை இருக்காது. தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான வழிபாடும் அர்ப்பணிப்பும் இருக்காது. குருட்டு வழிபாடு மற்றும் மூடநம்பிக்கை மட்டுமே இருக்கும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலம் தேவனுடைய வழிக்கு ஏற்ப செயல்படவோ, தேவனுக்கு பயப்படவோ அல்லது தீமையைத் தவிர்க்கவோ முடியாது. மாறாக, மனிதன் ஈடுபடும் ஒவ்வொரு செயலும் நடத்தையும் கலகம் மற்றும் எதிர்ப்பால் நிரப்பப்படும். அவதூறான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரைப் பற்றிய மோசமான நியாயத்தீர்ப்புகளால் நிரப்பப்படும். சத்தியத்திற்கு மாறாக தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மனிதகுலம் தேவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்தவுடன், அவர்கள் அவரைப் பின்பற்றுவதில் அவரைச் சார்ந்திருப்பதில் உண்மையானவர்களாக இருப்பார்கள். உண்மையான நம்பிக்கையுடன் இருப்பதாலும், தேவனைச் சார்ந்திருப்பதாலும் மட்டுமே மனிதகுலத்திற்கு உண்மையான புரிதலும் உணர்தலும் இருக்க முடியும். தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுடன் அவர் மீதான உண்மையான அக்கறையும் வருகிறது. தேவன் மீதான உண்மையான அக்கறையுடன் மட்டுமே மனிதகுலம் உண்மையான கீழ்ப்படிதலைக் கொண்டிருக்க முடியும். தேவனுக்கான உண்மையான கீழ்ப்படிதலால் மட்டுமே மனிதகுலம் உண்மையான பிரதிஷ்டை செய்ய முடியும். தேவனுக்கு உண்மையான பிரதிஷ்டை செய்வதன் மூலம் மட்டுமே மனிதகுலத்திடம் நிபந்தனையற்ற மற்றும் புகார் இல்லாத கைமாறு இருக்க முடியும். உண்மையான நம்பிக்கை மற்றும் சார்பு, உண்மையான புரிதல் மற்றும் அக்கறை, உண்மையான கீழ்ப்படிதல், உண்மையான பிரதிஷ்டை மற்றும் கைமாறு ஆகியவற்றால் மட்டுமே, தேவனுடைய மனநிலையையும் சாரத்தையும் மனிதகுலம் உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியும் மற்றும் சிருஷ்டிகரின் அடையாளத்தை அறிந்துகொள்ள முடியும். சிருஷ்டிகரை அவர்கள் உண்மையிலேயே அறிந்துகொண்டால்தான் மனிதகுலம் தங்களுக்குள் உண்மையான வழிபாட்டையும் அர்ப்பணிப்பையும் எழுப்ப முடியும். சிருஷ்டிகருக்கு உண்மையான வழிபாடும் கீழ்ப்படிதலும் இருக்கும்போது மட்டுமே, மனிதகுலத்தால் அவர்களின் தீய வழிகளை ஒதுக்கி வைக்க முடியும், அதாவது தீமையைத் தவிர்க்க முடியும்.

இது “தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான” முழு செயல்முறையையும் உருவாக்குகிறது. இது, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான முழு உள்ளடக்கமாகும். இது, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கு பயணிக்க வேண்டிய பாதையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

416. முதலாவதாக, தேவனுடைய மனநிலை கம்பீரமும் கோபமுமானது என்பதை நாம் அறிவோம். அவர் யாராலும் வெட்டப்படும் ஆடு அல்ல. ஜனங்களால் அவர்கள் விருப்பம் போலக் கட்டுப்படுத்தப்படும் ஒரு கைப்பாவையுமல்ல. அவர் வெறுமையான காற்றின் கலவை அல்ல. தேவன் இருக்கிறார் என்று நீ உண்மையிலேயே நம்பினால், நீ தேவனுக்குப் பயந்த இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய சாராம்சம் கோபப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதை நீ அறிந்துக்கொள்ள வேண்டும். இந்த கோபம் ஒரு சொல்லால் அல்லது ஒருவேளை ஒரு சிந்தனை அல்லது ஒருவித மோசமான நடத்தை அல்லது ஒருவேளை லேசான நடத்தை ஆகியவற்றால் ஏற்படலாம்—மனிதர்களின் கண்களிலும் நெறிமுறைகளிலும் கடந்து செல்லக்கூடிய நடத்தையாலும் அல்லது, ஒருவேளை அது ஒரு உபதேசத்தால் அல்லது ஒரு கோட்பாட்டால் அது தூண்டப்படலாம். இருப்பினும், நீ தேவனை கோபப்படுத்தியவுடன், நீ உனது வாய்ப்பினை இழக்கிறாய். உன் இறுதி நாட்கள் வந்துவிடுகின்றன. அது ஒரு பயங்கரமான விஷயமாகும்! தேவனைப் புண்படுத்தக்கூடாது என்பதை நீ புரிந்துக்கொள்ளவில்லை என்றால், ஒருவேளை நீ அவருக்குப் பயப்படாமல் இருக்கிறாய், ஒருவேளை நீ அவரை வழக்கத்தின்படி புண்படுத்துகிறாய் என்பதாகும். தேவனுக்கு எப்படி பயப்பட வேண்டும் என்று உனக்குத் தெரியாவிட்டால், நீ தேவனுக்கு அஞ்ச முடியாது. தேவனுடைய வழியில் நடப்பதற்கான பாதையில் உன்னை எவ்வாறு ஈடுபடுத்துவது என்று அதாவது தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பது என்று உனக்குத் தெரியாமல் போகும். நீ அதை அறிந்தவுடன், தேவனைப் புண்படுத்தக்கூடாது என்பதை அறிந்தவுடன், தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பது என்றால் என்ன என்பதை நீ அறிவாய்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

417. தேவனுடைய சாராம்சம் அன்பின் ஒரு கூறுகளைக் கொண்டிருந்தாலும், அவர் ஒவ்வொரு மனிதனிடமும் இரக்கமுள்ளவர் என்றாலும், அவருடைய சாராம்சம் கண்ணியத்தில் ஒன்றாகும் என்ற உண்மையை ஜனங்கள் கவனிக்கவில்லை மற்றும் அதை மறந்துவிட்டார்கள். அவருக்கு அன்பு இருக்கிறது என்பதற்கு ஜனங்கள் அவருடைய உணர்ச்சிகளை அல்லது எதிர்வினையைத் சுதந்திரமாக புண்படுத்தலாம் அல்லது தூண்டலாம் என்று அர்த்தமாகாது அல்லது அவர் இரக்கம் காட்டினார் என்பதன் அர்த்தம், அவர் ஜனங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதில் அவருக்கு எந்தக் கொள்கைகளும் இல்லை என்பதாகாது. தேவன் உயிருடன் இருக்கிறார். அவர் உண்மையிலேயே இருக்கிறார். அவர் கற்பனை செய்யப்பட்ட கைப்பாவை அல்லது வேறு எந்த பொருளும் இல்லை. அவர் இருக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் எப்போதுமே அவருடைய இருதயத்தின் குரலைக் கவனமாகக் கேட்க வேண்டும். அவருடைய மனநிலையில் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அவருடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும். தேவனை வரையறுக்க நாம் மனித கற்பனைகளைப் பயன்படுத்தக்கூடாது. மனித எண்ணங்களையும் விருப்பங்களையும் அவர் மீது திணிக்கக் கூடாது. மனித கற்பனைகளின் அடிப்படையில் தேவன் மனிதர்களை மனித முறையில் நடத்தும்படி செய்கிறார். நீ இதைச் செய்தால், நீ தேவனைக் கோபப்படுத்துகிறாய், அவருடைய கோபத்தைத் தூண்டுகிறாய், அவருடைய கனத்திற்கு சவால் விடுகிறாய்! எனவே, இந்த விஷயத்தின் தீவிரத்தை நீங்கள் புரிந்துக்கொண்டவுடன், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் செயல்களில் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பேச்சில் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருங்கள். தேவனை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது குறித்து, நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்கிறீர்களோ அது அவ்வளவு சிறந்தது ஆகும்! தேவனுடைய மனநிலை என்னவென்று உனக்கு புரியாதபோது, கவனக்குறைவாக பேசுவதைத் தவிர்க்கவும். உன் செயல்களில் கவனக்குறைவாக இருக்காதே, சாதாரணமாக நாமங்களைப் பயன்படுத்த வேண்டாம். அதைவிட முக்கியமாக, எந்தவொரு தன்னிச்சையான முடிவுகளுக்கும் வர வேண்டாம். மாறாக, நீ காத்திருந்து தேட வேண்டும். இந்த செயல்களும் தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வெளிப்பாடாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீ இதை அடைய முடிந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மனநிலையை நீ கொண்டிருந்தால், உன் முட்டாள்தனம், அறியாமை மற்றும் விஷயங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஆகியவற்றைக் குறித்து தேவன் உன்னைக் குறை கூற மாட்டார். மாறாக, தேவனை புண்படுத்துவது குறித்த பயம், அவருடைய நோக்கங்களுக்கு மரியாதை மற்றும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பம் ஆகியவற்றின் காரணமாக, தேவன் உன்னை நினைவில் கொள்வார், உனக்கு வழிகாட்டுவார், அறிவூட்டுவார் அல்லது உன் முதிர்ச்சியற்ற தன்மையையும் அறியாமையையும் பொறுத்துக்கொள்வார். மாறாக, அவரைப் பற்றிய உன் மனநிலை பொருத்தமற்றதாக இருந்தால்—நீ விரும்பியபடி அவரை நியாயந்தீர்க்க வேண்டும் அல்லது தன்னிச்சையாக யூகித்து அவருடைய கருத்துக்களை வரையறுக்க வேண்டும் என்றிருந்தால்—தேவன் உன்னை கண்டனம் செய்வார், உன்னை ஒழுங்குபடுத்துவார், உன்னை சிட்சிப்பார் அல்லது அவர் உன்னைப் பற்றி கருத்து தெரிவிப்பார். ஒருவேளை இந்த கருத்து உன் முடிவை உள்ளடக்கும். ஆகையால், நான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்த விரும்புகிறேன்: நீங்கள் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரும் எல்லாவற்றையும் பற்றி எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும். கவனக்குறைவாக பேசாதீர்கள், உங்கள் செயல்களில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். நீ எதையும் சொல்வதற்கு முன், அதை நிறுத்தி சிந்திக்க வேண்டும்: என்னுடைய இந்த நடவடிக்கை தேவனுக்கு கோபமளிக்குமா? அதைச் செய்வதில், நான் தேவனுக்கு மரியாதை தருகின்றேனா? சாதாரண விஷயங்களில் கூட, இந்தக் கேள்விகளைக் கண்டுபிடிக்க நீ முயற்சி செய்ய வேண்டும். அவற்றைக் கருத்தில் கொண்டு அதிக நேரம் செலவிட வேண்டும். எல்லா அம்சங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் இந்த கொள்கைகளின்படி உண்மையிலேயே உன்னால் செயல்பட முடியும். குறிப்பாக, உனக்கு ஏதாவது புரியாதபோது அத்தகைய மனநிலையைக் கடைப்பிடிக்க உன்னால் முடியும் என்றால், தேவன் எப்போதும் உனக்கு வழிகாட்டுவார் மற்றும் பின்பற்றுவதற்கான பாதையை உனக்கு வழங்குவார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

418. தேவனுடைய நிர்வாக ஆணைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி நன்கு புரிந்துக் கொள்ளவும், அவரது மனநிலையை அறிந்துக் கொள்ள முயற்சி செய்யவும் வேண்டுமென்று நான் உங்களுக்கு புத்திச் சொல்லுகிறேன். இல்லையென்றால், உங்கள் உதடுகளை மூடிக் கொள்ளுவது உங்களுக்குக் கடினமாக இருக்கும், உங்கள் நாவுகள் அதிக பேச்சுச் சத்தத்துடன் இங்கும் அங்குமாக ஆடிக் கொண்டிருக்கும், மேலும் நீங்கள் அறியாமல் தேவனுடைய மனதைப் புண்படுத்தி இருளிலே விழுவீர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும் ஒளியையும் இழந்து விடுவீர்கள். ஏனென்றால், நீங்கள் உங்கள் செயல்களில் கொள்கை இல்லாதவர்கள், ஏனென்றால் நீ செய்யக் கூடாத மற்றும் சொல்லக் கூடாத காரியங்களையே செய்வதால், நீ அதற்குத் தகுந்த பிரதிபலனையே பெறுவாய். உன்னுடைய வார்த்தையிலும் செயலிலும் நீ கொள்கை இல்லாதவர் என்றாலும், தேவன் அப்படியிராமல் அவை இரண்டிலும் அவர் மிகவும் கொள்கை ரீதியானவர் என்பதை நீ அறிந்துக் கொள்ள வேண்டும். நீ இப்படி பிரதிபலனைப் பெறுவதற்கான காரணம், நீ ஒரு நபரையல்ல, தேவனைப் புண்படுத்தியதே ஆகும். உன் வாழ்க்கையில், தேவனுடைய மனநிலைக்கு எதிராக நீ பல குற்றங்களைச் செய்தால், பிறகு நீ நரகத்தின் பிள்ளையாக மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். மனிதனைப் பொறுத்தமட்டில், அவர்கள் சத்தியத்திற்கு முரணான ஒரு சில காரியங்களை மட்டுமே செய்துள்ளார்கள், அதற்கு மேல் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், தேவனுடைய பார்வையில் நீ ஏற்கனவே பாவ நிவாரண பலி எதுவும் இல்லாத ஒருவராக இருக்கிறாய் என்பதை நீ அறிவாயா? ஏனென்றால், நீ தேவனுடைய நிர்வாக ஆணைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீறியுள்ளாய், மேலும் நீ அவைகளில் இருந்து மனந்திரும்பின மனந்திரும்புதலின் அறிகுறியைக் காண்பிக்கவில்லை, ஆகவே வேறு எந்த வழியும் இல்லை, மாறாக தேவன் மனிதனை நரத்தில் தள்ளித் தண்டிக்கிற அந்த நரகத்தில் நீயும் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தேவனைப் பின்பற்றுகிற போது, அவரது கொள்கைகளை மீறும் ஒரு சில செயல்களைச் செய்தார்கள், ஆனாலும் அதிலிருந்து மீண்டுவரும் வழிகாட்டுதல்களைப் பெற்ற பின்னர், அவர்கள் படிப்படியாக தங்கள் தவறுகளைக் கண்டுபிடித்தனர், அதன் பிறகு யதார்த்தத்தின் சரியான பாதைக்கு வந்தார்கள், அவர்கள் இன்று நன்கு உறுதியானவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் முடிவு வரையிலும் நிலைத்திருப்பார்கள். ஆகிலும், நான் தேடுவது நேர்மை மட்டுமே; நீ ஒரு நேர்மையான நபராகவும், கொள்கையின்படிச் செயல்படும் ஒருவராகவும் இருக்கிறீர் என்றால், பிறகு நீ தேவனுடைய நம்பிக்கைக்குரியவராக இருக்க முடியும். உன்னுடைய செயல்களில் நீ தேவனுடைய மனதைப் புண்படுத்தாமல், அவரது சித்தத்தை நாடி, அவர் மீது பயபக்தியுள்ள ஒரு இருதயத்தைக் கொண்டிருந்தால், உன் விசுவாசமானது சரியான நிலையைக் கொண்டதாகும். தேவனுக்கு பயந்து அவருக்கு நடுங்கும் இருதயம் இல்லாத எவரும் தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்டவர்களே. பலர் தங்கள் ஆர்வத்தினுடைய பலத்தின் பேரில் தேவனுக்குச் சேவைச் செய்கிறார்கள், ஆனால் தேவனுடைய நிர்வாக ஆணைகளைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை, அவருடைய வார்த்தைகளின் தாக்கங்களைப் பொறுத்தமட்டில் இன்னும் குறைவாகவேக் கருதுகின்றனர். ஆகவே, அவர்களின் நல்ல நோக்கங்களுடன், தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விஷயங்களை அவர்கள் அடிக்கடி செய்கிறார்கள். கடுமையானச் சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், தேவனைப் பின் தொடர்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இழக்கிறார்கள், மேலும் முடிவில் தேவனுடைய வீட்டிலே இணைந்திருக்கும் காரியத்தில் விடுபட்டு அவர்கள் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். இந்த மக்கள் தங்களுடைய அறியாமை நல்ல நோக்கங்களின் பலத்தின் அடிப்படையில் தேவனுடைய வீட்டில் வேலை செய்கிறார்கள், பிறகு தேவனுடைய மனதைக் கோபப்படுத்துவதிலே முடிவடைகிறார்கள். மக்கள் தங்கள் அதிகாரிகளுக்கும் பிரபுக்களுக்கும் சேவை செய்யும் வழிமுறைகளைத் தேவனுடைய வீட்டிற்கும் கொண்டு வந்து எந்த ஒரு சிரமுமில்லாமல் எளிதில் காரியங்களை அடைய அவர்களைக் கொண்டு முயற்சிக்கலாம் என விருதாவாக நினைக்கிறார்கள். தேவனுக்கு ஆட்டுக்குட்டியின் மனநிலை இல்லை, ஆனால் ஒரு சிங்கத்தின் மனநிலை இருக்கிறது என்று அவர்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆகவே, முதன் முறையாக தேவனோடு இணைந்தவர்கள் அவருடன் தொடர்புக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் தேவனுடைய இருதயம் மனிதனைப் போலல்லாது இருக்கிறது. நீ பல உண்மைகளைப் புரிந்துக் கொண்ட பின்னரே நீ தொடர்ந்து தேவனை அறிந்துக் கொள்ள முடியும். இந்த அறிவு வெறுமனே சொற்களாலும் கோட்பாடுகளாலும் ஆனது அல்ல, மாறாக நீ தேவனோடு நெருங்கிய நம்பிக்கையில் நுழைவதன் மூலமாகவும், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகிறார் என்பதற்கான சான்றாகவும் நீ இதை ஒரு பொக்கிஷமாகப் பயன்படுத்தலாம். நீ இந்த அறிவின் யதார்த்தத்தைக் கொண்டிருக்காமல் மற்றும் சத்தியத்துடன பொருந்தவில்லை என்றால், உன் உணர்ச்சிவசப்பட்ட சேவையானது தேவனுக்கு வெறுப்பையும் விருப்பமற்றதையும் மட்டுமே உ மீது கொண்டு வர முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மூன்று புத்திமதிகள்” என்பதிலிருந்து

419. தேவனின் மனநிலையை நீ புரிந்து கொள்ளாவிட்டால், நீ அவருக்காகச் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வது உனக்கு சாத்தியமில்லை. தேவனின் சாரம் உனக்கு தெரியாவிட்டால், நீ அவரிடம் பயபக்தியையும் பயத்தையும் கொண்டிருப்பது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, கவனக்குறைவான வேடிக்கையான தன்மையும் இரண்டகம் பேசுவதும் மேலும், திருத்த முடியாத தேவதூஷணமும் மட்டுமே இருக்கும். தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது உண்மையில் முக்கியமானது என்றாலும், தேவனின் சாரத்தை அறிந்து கொள்வதை கவனிக்காதிருக்க முடியாது என்றாலும், இந்த பிரச்சினைகளைக் குறித்து யாரும் முழுமையாக ஆராயவோ அல்லது அதற்குள் மூழ்கிடவோ இல்லை. நான் வழங்கிய நிர்வாகக் கட்டளைகளை நீங்கள் அனைவரும் தள்ளிவிட்டீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் அவருடைய மனநிலையை அவமதிப்பது பெரும்பாலும் நிகழக்கூடியதே. அவருடைய மனநிலையை அவமதிப்பது தேவனின் கோபத்தைத் தூண்டுவதற்கு ஒப்பாகும், இந்நிலையில் நிர்வாகக் கட்டளைகளை மீறுவதே உன்னுடைய கிரியைகளின் கடைசி பலனாக இருக்கும். தேவனின் சாரத்தை நீ அறிந்திருக்கும்போது, அவருடைய மனநிலையையும் நீ புரிந்துகொள்ள முடியும் என்பதை இப்போது நீ உணர வேண்டும். அவருடைய மனநிலையை நீ புரிந்துகொள்ளும்போது, நிர்வாகக் கட்டளைகளையும் நீ புரிந்துகொள்வாய். நிர்வாகக் கட்டளைகளில் உள்ளவற்றில் பெரும்பாலானவை தேவனின் மனநிலையைத் தொடுகிறது என்று சொல்லத் தேவையில்லை, ஆனால் அவருடைய மனநிலை எல்லாம் நிர்வாகக் கட்டளைகளுக்குள் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, தேவனின் மனநிலையைப் பற்றிய உங்கள் புரிதலை வளர்ப்பதில் நீங்கள் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது” என்பதிலிருந்து

420. தேவன் ஒரு ஜீவனுள்ள தேவன். ஜனங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக நடந்துக்கொள்வதைப் போலவே, இந்த நடத்தைகள் குறித்த அவரது மனநிலையும் வேறுபடுகின்றன. ஏனெனில், அவர் ஒரு கைப்பாவை அல்ல. அவர் வெறுமையான காற்றின் கலவை அல்ல. தேவனுடைய மனநிலையை அறிந்துக்கொள்வது மனிதகுலத்திற்கான ஒரு தகுதியான நாட்டமாகும். தேவனுடைய மனநிலையை அறிந்துக்கொள்வதன் மூலம், தேவனுடைய மனநிலையைப் பற்றிய அறிவை அவர்கள் சிறிது சிறிதாக அடைய முடியும் மற்றும் அவருடைய இருதயத்தைப் புரிந்துக்கொள்ள முடியும் என்பதை ஜனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய இருதயத்தை நீ படிப்படியாக புரிந்துக்கொள்ளும்போது, அவருக்குப் பயப்படுவதும் தீமையைத் தவிர்ப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை நீ உணர மாட்டாய். மேலும், நீ தேவனைப் புரிந்துக்கொள்ளும்போது, அவரைப் பற்றி நீ முடிவுகளை எடுக்க வாய்ப்பில்லை. தேவனைப் பற்றிய முடிவுகளை எடுப்பதை நீ நிறுத்தியவுடன், நீ அவரைப் புண்படுத்தும் வாய்ப்பும் இல்லாமல் போகும். உன் அறியாமையிலேயே, தேவனைப் பற்றிய அறிவைப் பெற தேவன் உன்னை வழிநடத்துவார். அது உன் இருதயத்தை அவர் மீதான பயபக்தியால் நிரப்பும். நீ தேர்ச்சி பெற்ற கோட்பாடுகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் தேவனை வரையறுப்பதை நிறுத்துவாய். அதற்கு பதிலாக, எல்லாவற்றிலும் தேவனுடைய நோக்கங்களைத் தொடர்ந்து தேடுவதன் மூலம், நீ அறியாமலேயே தேவனுடைய இருதயத்திற்குப் பின்செல்லும் ஒரு மனிதனாக மாறுவாய்.

தேவனுடைய கிரியை மனிதர்களால் காணப்படாதது மற்றும் தீண்டத்தகாதது ஆகும். ஆனால் அவரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனிதனுடைய செயல்களும்—அவரைப் பற்றிய மனநிலையுடன்—தேவனால் உணரக்கூடியவை மட்டும் அல்ல, ஆனால் அவரால் காணக்கூடியவையும் ஆகும். இது, எல்லோரும் அங்கீகரிக்க வேண்டிய மற்றும் தெளிவாக இருக்க வேண்டிய ஒன்றாகும். “நான் இங்கே என்ன செய்கிறேன் என்று தேவனுக்குத் தெரியுமா? நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரியுமா? ஒருவேளை அவர் செய்கிறார், ஒருவேளை அவர் அவ்வாறு செய்ய மாட்டார்,” என்று எப்போதும் உன்னை நீயே கேட்டுக்கொண்டிருக்கலாம். இத்தகைய கண்ணோட்டத்தை நீ கடைப்பிடித்தால், தேவனைப் பின்பற்றியப் பின் அவருடைய கிரியையையும் அவருடைய இருப்பையும் சந்தேகிக்கிறாய் என்றால், நீ உடனடியாக அல்லது பிற்பாடு அவருடைய கோபத்தைத் தூண்டும் ஒரு நாள் வரும். ஏனென்றால், நீ ஏற்கனவே ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறாய். பல ஆண்டுகளாக தேவனை நம்பியவர்களை நான் பார்த்திருக்கிறேன், ஆனாலும் சத்தியத்தின் யதார்த்தத்தை அவர்கள் இன்னும் பெறவில்லை, தேவனுடைய சித்தத்தை அவர்கள் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை. இந்த ஜனங்கள் தங்கள் ஜீவிதத்திலும், நிலைகளிலும் எந்த முன்னேற்றத்தையும் அடைவதில்லை. அவர்கள் ஆழமற்ற கோட்பாடுகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். ஏனென்றால், அத்தகைய மனிதர்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தையை ஜீவனாக எடுத்துக்கொள்ளவில்லை மற்றும் அவர்கள் ஒருபோதும் அவரை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகையவர்களைப் பார்த்தவுடன், தேவன் இன்பத்தால் நிரப்பப்படுகிறார் என்று நீ நினைக்கிறாயா? அவர்கள் அவரை ஆறுதல்படுத்துகிறார்களா? இவ்வாறு, ஜனங்கள் தேவனை எப்படி நம்புகிறார்கள் என்பது அவர்களுடைய தலைவிதியை தீர்மானிக்கிறது. ஜனங்கள் எவ்வாறு தேடுகிறார்கள், ஜனங்கள் தேவனை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதில் ஜனங்களுடைய மனநிலைகள் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தேவனை உங்கள் தலையின் பின்புறத்தில் மிதக்கும் வெறுமையான காற்றின் கலவை போல அவரைப் புறக்கணிக்காதீர்கள். நீ நம்பும் ஜீவனுள்ள உண்மையான தேவனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் ஒன்றும் செய்யாமல் மூன்றாம் வானத்தில் உட்கார்ந்திருக்கவில்லை. மாறாக, அவர் தொடர்ந்து அனைவரின் இருதயத்தையும் கவனித்து வருகிறார். நீ என்ன செய்கிறாய் என்பதைக் கவனித்து வருகிறார். உன் ஒவ்வொரு சிறிய வார்த்தையையும் ஒவ்வொரு சிறிய செயலையும் கவனித்து வருகிறார். நீ எவ்வாறு நடந்துக்கொள்கிறாய் என்பதைப் பார்க்கிறார். அவரைப் பற்றிய உன் மனநிலை என்ன என்பதைப் பார்க்கிறார். உன்னை தேவனுக்குக் கொடுக்க நீ தயாராக இருக்கிறாயா இல்லையா என்பதும், உன் நடத்தை மற்றும் உன் உள்ளார்ந்த எண்ணங்கள் மற்றும் யோசனைகள் என அனைத்தும் அவருக்கு முன்பாக வைக்கப்பட்டு அவரால் கவனிக்கப்படுகின்றன. உன் நடத்தை காரணமாகவும், உன் செயல்களின் காரணமாகவும், அவரைப் பற்றிய உன் மனநிலையின் காரணமாகவும், உன்னைப் பற்றிய தேவனுடைய கருத்தும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. சிலருக்கு நான் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்: தேவன் உன்னை அதீதமாக நேசிப்பார் என்பது போலவும், அவர் உன்னை ஒருபோதும் விட்டுவிட மாட்டார் என்பது போலவும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலை நிலையானது என்பது போலவும், ஒருபோதும் மாறமுடியாது என்பது போலவும், உன்னை தேவனுடைய கரங்களில் குழந்தைகளைப் போல வைக்காதே. கனவு காண்பதை விட்டுவிடுமாறு நான் உனக்கு அறிவுறுத்துகிறேன்! ஒவ்வொரு மனிதனையும் நடத்துவதில் தேவன் நீதியுள்ளவர். ஜனங்களை ஜெயித்து அவர்களை இரட்சிக்கும் கிரியைக்கான மனநிலையில் அவர் அக்கறையுள்ளவர். அது அவருடைய மேலாண்மையாகும். அவர் ஒவ்வொரு மனிதனையும் செல்லப் பிராணி போன்று நடத்தாமல் தீவிரமாக நடத்துகிறார். மனிதர்கள் மீதான தேவனுடைய அன்பு ஆடம்பரமான வகை அல்லது கெடுக்கும் வகையல்ல. மனிதகுலத்தின் மீது அவர் காட்டிய இரக்கமும் சகிப்புத்தன்மையும் மகிழ்ச்சியற்றதாக கவலையற்றதாகவோ இல்லை. மாறாக, மனிதர்களிடமான தேவனுடைய அன்பில் ஜீவனை நேசிப்பதும், அதற்கு பரிதாபப்படுவதும், அதை மதிப்பதும் அடங்கும். அவருடைய இரக்கமும் சகிப்புத்தன்மையும் அவர்களைப் பற்றிய அவருடைய எதிர்பார்ப்புகளை மற்றும் மனிதகுலம் பிழைக்க அவசியமானவற்றை வெளிப்படுத்துகின்றன. தேவன் ஜீவனுடன் இருக்கிறார். தேவன் உண்மையாகவே இருக்கிறார். மனிதகுலத்தைப் பற்றிய அவரது மனநிலை கொள்கை ரீதியானதாகும். அது ஒரு இறுமாப்புள்ள விதிகளின் தொகுப்பல்ல. அது மாறக்கூடியதாகும். மனிதகுலத்திற்கான அவரது நோக்கங்கள் படிப்படியாக மாறுகின்றன. அவை எழும் சூழ்நிலைகளைப் பொறுத்தும், ஒவ்வொரு மனிதனுடைய மனநிலையுடனும் காலப்போக்கில் அவை மாறுகின்றன. ஆகையால், தேவனுடைய சாராம்சமானது மாறாதது என்பதையும், அவருடைய மனநிலை வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு சூழல்களிலும் வெளிவரும் என்பதையும் நீ உன் இருதயத்தில் முழுமையான தெளிவுடன் அறிந்துக்கொள்ள வேண்டும். அது ஒரு தீவிரமான விஷயம் என்று நீ நினைக்கக்கூடாது. தேவன் எவ்வாறு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை கற்பனை செய்ய உன் சொந்த கருத்துக்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், உன் கண்ணோட்டத்தின் எதிர்வாதம் உண்மையாக இருக்கும் நேரங்களும் உள்ளன. தேவனை அளவிட முயற்சிக்க உன் சொந்த கருத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீ ஏற்கனவே அவரை கோபப்படுத்தியிருக்கிறாய். ஏனென்றால், தேவன் நீ நினைப்பதைப் போல செயல்படவில்லை. நீ சொல்வதைப் போல அவர் இந்த விஷயத்தை நடத்துவதுமில்லை. ஆகவே, உன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றைக் குறித்தும் உன் மனநிலையில் கவனமாகவும் விவேகமாகவும் இருக்கும்படி நான் உனக்கு நினைவூட்டுகிறேன். எல்லாவற்றிலும் தேவனுடைய வழியில் நடப்பதற்கான கொள்கையை எவ்வாறு பின்பற்றுவது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவனுடைய சித்தம் மற்றும் தேவனுடைய மனநிலை தொடர்பான விஷயங்களில் நீ உறுதியான புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயங்களுடன் உன்னை தொடர்புகொள்வதற்கு நீ அறிவொளி பெற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் நீ ஆர்வத்துடன் முயற்சி செய்ய வேண்டும். உன் நம்பிக்கையின் தேவனை ஒரு கைப்பாவையாக பார்க்க வேண்டாம்—விருப்பப்படி அவரை நியாயந்தீர்க்க வேண்டாம், அவரைப் பற்றி தன்னிச்சையான முடிவுகளுக்கு வர வேண்டாம், அவருக்குத் தகுதியுள்ள மரியாதையுடன் நடந்துக்கொள்ளாமல் இருக்க வேண்டாம். தேவன் உனக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்து, உன் முடிவைத் தீர்மானிக்கும்போது, அவர் உனக்கு இரக்கம் அல்லது சகிப்புத்தன்மை அல்லது நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை வழங்கக்கூடும். ஆனால் எப்படியிருந்தாலும், உன்னைப் பற்றிய அவருடைய மனநிலை சரி செய்யப்படாது. அது அவரைப் பற்றிய உன் சொந்த மனநிலையையும், அவரைப் பற்றிய உன் புரிதலையும் சார்ந்துள்ளது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

421. தேவனை உண்மையாக விசுவாசிக்கிற ஜனங்கள் எப்பொழுதும் அவரை தங்கள் இருதயங்களில் வைத்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் எப்போதும் தேவன் மீது பயபக்தி கொண்டிருக்கும் இருதயத்தை, தேவனை நேசிக்கும் இருதயத்தை அவர்களுக்குள் சுமக்கிறார்கள். தேவனை விசுவாசிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் காரியங்களைச் செய்ய வேண்டும், மற்றும் அவர்கள் செய்யும் அனைத்தும் தேவனின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் மற்றும் அவருடைய இருதயத்தைத் திருப்திப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தலைக்கனமிக்கவர்களாக, அவர்கள் விரும்பியதைச் செய்பவர்களாக இருக்கக்கூடாது; அது பரிசுத்த குணத்திற்குப் பொருந்தாது. ஜனங்கள் பித்துப்பிடித்து ஓடக்கூடாது, எல்லா இடங்களிலும் ஏமாற்றும்போது மற்றும் வஞ்சிக்கும்போது தேவனின் கொடியை எல்லா இடங்களிலும் அசைக்கக்கூடாது; இது மிகவும் கலகத்தனமான நடத்தையாகும். குடும்பங்களுக்கு அவர்களுக்கான விதிகள் உள்ளன, மற்றும் நாடுகளுக்கு அவற்றுக்கான சட்டங்கள் உள்ளன—மேலும் இது தேவனுடைய வீட்டில் மிக அதிகமாக இல்லையா? தரநிலைகள் இன்னும் கடுமையானவையாக இல்லையா? இன்னும் அதிகமான நிர்வாக ஆணைகள் இல்லையா? ஜனங்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தேவனின் நிர்வாக ஆணைகளை விருப்பப்படி மாற்ற முடியாது. தேவன் என்பவர் மனுஷர்கள் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளாத தேவன்; அவர் ஜனங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் தேவன். இது ஏற்கனவே ஜனங்களுக்குத் தெரியாதா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்பதிலிருந்து

422. ஒவ்வொரு யுகத்திலும், மனிதர்களிடையே கிரியை செய்யும் போது, தேவன் அவர்களுக்கு சில வார்த்தைகளை அளித்து, சில சத்தியங்களைச் சொல்கிறார். இந்த சத்தியங்கள் ஜனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழி, அவர்கள் நடக்க வேண்டிய வழி, தேவனுக்கு அஞ்சுவதற்கும் தீமைகளைத் தவிர்ப்பதற்கும் உதவும் வழி மற்றும் ஜனங்கள் அவர்களுடைய ஜீவிதத்திலும் ஜீவகாலத்திலும் சர்ந்துகொள்ளும் மற்றும் நடைமுறையில் கொண்டு செல்லும் வழியாக இருக்கிறது. இந்த காரணங்களால் தான் தேவன் இந்த வார்த்தைகளை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்துகிறார். தேவனிடமிருந்து வரும் இந்த வார்த்தைகள் ஜனங்களால் கடைபிடிக்கப்பட வேண்டும். அவற்றைக் கடைப்பிடிப்பது என்பது ஜீவனைப் பெறுவதாகும். ஒரு மனிதன் அவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால், அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை, தேவனுடைய வார்த்தைகளை அவர்களுடைய ஜீவிதத்தில் கடைபிடிக்கவில்லை என்றால், இந்த மனிதன் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில்லை என்பதாகும். மேலும், ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்றால், அவர்களால் தேவனுக்குப் பயந்து தீமைகளைத் தவிர்க்கவும், தேவனை திருப்திப்படுத்தவும் முடியாது. தேவனை திருப்திப்படுத்த இயலாத ஜனங்கள் அவருடைய புகழைப் பெற முடியாது. அத்தகையவர்களுக்கு எந்த பலனும் இல்லை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

423. தேவனுடைய வழியில் நடப்பதென்பது மேலோட்டமான விதிகளைக் கடைப்பிடிப்பது அல்ல. மாறாக, நீ ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, அது தேவனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சூழ்நிலை, அவர் உனக்கு வழங்கிய பொறுப்பு அல்லது அவர் உன்னிடம் ஒப்படைத்த ஒரு கிரியை என்று கருதுகிறாய். இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, தேவன் உனக்கு அளித்த ஒரு சோதனையாகவும் அதை நீ பார்க்க வேண்டும். இந்த பிரச்சனையை நீ எதிர்கொள்ளும்போது, உன் இருதயத்தில் ஒரு தரநிலை இருக்க வேண்டும். இந்த விஷயம் தேவனிடமிருந்து வந்தது என்று நீ நினைக்க வேண்டும். தேவனுக்கு விசுவாசமாக இருக்கும்போதே உன் பொறுப்பை நிறைவேற்றும் விதத்தில் அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும், அவரை கோபப்படுத்தாமல் அல்லது அவருடைய மனநிலையை புண்படுத்தாமல் அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் நீ சிந்திக்க வேண்டும். … ஏனென்றால், தேவனுடைய வழியைக் கடைப்பிடிப்பதற்காக, நமக்கு நடக்கும் அல்லது நம்மைச் சுற்றியுள்ள எதையும், சிறிய விஷயங்களைக்கூட நாம் விட்டுவிடக் கூடாது. எந்தவொரு விஷயமும் நம்மை எதிர்கொள்ளும் வரை, நாம் அதை கவனிக்கக்கூடாது என்று நாம் நினைத்தாலும் இல்லையென்றாலும், அதை நாம் விட்டுவிடக்கூடாது. நடக்கும் எல்லாவற்றையும் தேவன் நமக்குக் கொடுத்த சோதனைகளாகவே பார்க்க வேண்டும். விஷயங்களைப் பார்க்கும் இந்த வழியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உன்னிடம் இத்தகைய மனநிலை இருந்தால், மனதின் ஆழத்தில், நீ தேவனுக்கு அஞ்சுகிறாய் மற்றும் தீமையைத் தவிர்க்க தயாராக இருக்கிறாய் என்னும் உண்மையை அது உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் நீ தேவனை திருப்திப்படுத்த விரும்பினால், தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான தரத்தை பூர்த்தி செய்வதிலிருந்து நீ நடைமுறைக்கு கொண்டு வந்தவை வெகு தொலைவில் இருக்காது.

அதிக கவனம் செலுத்த தேவையற்றது மற்றும் பொதுவாக குறிப்பிட அவசியமற்ற விஷயங்கள் என்று ஜனங்கள் நம்பும் காரியங்கள் பெரும்பாலும் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் எந்த சம்பந்தமும் இல்லாத அற்பமானவையாக இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, இந்த மனிதர்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். பின்னர் அவர்கள் அதை விழுந்துபோக அனுமதிக்கிறார்கள். இருப்பினும், உண்மையில், இந்த விஷயம் நீ படிக்க வேண்டிய ஒரு பாடமாகும்—தேவனுக்கு எவ்வாறு பயப்பட வேண்டும், தீமையை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பதற்கான பாடமாகும். மேலும், நீ இன்னும் அக்கறை கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த விஷயம் உன்னை எதிர்கொள்ள எழும்போது தேவன் என்ன செய்கிறார் என்பதை அறிந்துக்கொள்வது தான். தேவன் உன் பக்கத்திலேயே இருக்கிறார். உன் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் கவனித்து, நீ செய்யும் அனைத்தையும், உன் எண்ணங்களில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் பார்க்கிறார். அது தேவனுடைய கிரியையாகும். சிலர், “அது உண்மை என்றால், நான் ஏன் அதை உணரவில்லை?” என்று கேட்கிறார்கள். நீ அதை உணரவில்லை, ஏனென்றால் நீ தேவனுக்கு பயந்து, தீமையை விலக்கும் வழியை உன் முதன்மை வழியாக கொள்ளவில்லை. ஆகவே, தேவன் ஜனங்களில் செய்யும் நுட்பமான கிரியையை நீ உணர முடியாது. அது ஜனங்களுடைய பல்வேறு எண்ணங்கள் மற்றும் செயல்களின்படி வெளிப்படுகிறது. நீ ஒருமனமற்ற ஒருவன்! பெரிய விஷயம் என்னவாக இருக்கிறது? சிறிய விஷயம் என்னவாக இருக்கிறது? தேவனுடைய வழியில் நடப்பது சம்பந்தப்பட்ட விஷயங்கள் பெரிய அல்லது சிறிய விஷயங்களுக்கு இடையில் பிரிக்கப்படவில்லை. ஆனால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஜனங்கள் பெரும்பாலும் இந்த முக்கிய விஷயங்களை மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர் மற்றும் அவை தேவனால் அனுப்பப்பட்டவை என்று கருதுகின்றனர். எவ்வாறாயினும், இந்த முக்கிய விஷயங்கள் வெளிவருவதால், ஜனங்களுடைய முதிர்ச்சியற்ற நிலை மற்றும் அவர்களுடைய மோசமான திறன் காரணமாக, ஜனங்கள் பெரும்பாலும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில்லை. அவர்களால் எந்த வெளிப்பாடுகளையும் பெற முடியாது, மதிப்புமிக்க எந்த உண்மையான அறிவையும் பெற முடியாது. சிறிய விஷயங்களைப் பொறுத்தவரையில், இவை வெறுமனே ஜனங்களால் கவனிக்கப்படுவதில்லை மற்றும் ஒவ்வொரு நேரமும் ஒரு சிறு பகுதியாக நழுவ விடப்படுகின்றன. ஆகவே, தேவனுக்கு முன்பாக ஆராயப்படுவதற்கும் அவரால் சோதிக்கப்படுவதற்கும் ஜனங்கள் பல வாய்ப்புகளை இழந்துவிட்டார்கள். தேவன் உனக்காக ஏற்பாடு செய்துள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளை நீ எப்போதும் கவனிக்கவில்லை என்பதன் அர்த்தம் என்னவாக இருக்கிறது? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணத்திலும் கூட, தேவனுடைய பரிபூரணத்தையும், அவருடைய தலைமையையும் நீ தொடர்ந்து கைவிடுகிறாய் என்பதே இதன் பொருளாகும். தேவன் உனக்காக ஒரு சூழ்நிலையை ஏற்பாடு செய்யும் போதெல்லாம், அவர் இரகசியமாகப் பார்க்கிறார், உன் இருதயத்தைப் பார்க்கிறார், உன் எண்ணங்களையும் விவாதங்களையும் கவனிக்கிறார், நீ எப்படி நினைக்கிறாய் என்பதைப் பார்க்கிறார் மற்றும் நீ எவ்வாறு செயல்படுவாய் என்று காத்திருக்கிறார். நீ ஒரு கவனக்குறைவான மனிதனாக இருந்தால், தேவனுடைய வழி, அவருடைய வார்த்தைகள் அல்லது சத்தியம் குறித்து ஒருபோதும் அக்கறை கொள்ளாத ஒருவனாக இருந்தால், நீ பூர்த்தி செய்ய விரும்புவது குறித்து அல்லது அவர் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்த காரியங்கள் குறித்தும் உனக்காக ஒரு குறிப்பிட்ட சூழலை ஏற்பாடு செய்தது குறித்தும் நீ கவனமாக இருக்க மாட்டாய். நீ சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் எவ்வாறு சத்தியத்துடன் அல்லது தேவனுடைய சித்தத்துடன் தொடர்புபடுகின்றன என்பது உனக்குத் தெரியாது. நீ மீண்டும் மீண்டும் சூழ்நிலைகளையும் அதுபோன்ற சோதனைகளையும் எதிர்கொண்ட பிறகு, தேவன் உன்னிடம் எந்த முடிவுகளையும் காணவில்லை என்றால் அவர் எவ்வாறு தொடருவார்? பலமுறை சோதனைகளைச் சந்தித்தபின்னும், நீ உன் இருதயத்தில் தேவனைப் பெரிதுபடுத்தவில்லை, தேவன் உனக்கு ஏற்பாடு செய்த சூழ்நிலைகளையும் நீ பார்க்கவில்லை: தேவனுடைய சோதனைகள் மற்றும் பரீட்சைகளையும் நீ பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, ஒன்றன் பின் ஒன்றாக, தேவன் உனக்கு அளித்த வாய்ப்புகளை நீ நிராகரித்தாய், ஒவ்வொரு நேரத்திலும் மீண்டும் மீண்டும் அதை நழுவ விடுகிறாய். அது ஜனங்கள் வெளிப்படுத்தும் தீவிர ஒத்துழையாமை அல்லவா? (ஆம்.) இதன் காரணமாக தேவன் வேதனைப்படுவாரா? (அவர் வேதனைப்படுவார்.) தேவன் புண்பட்டதாக எண்ணமாட்டார்! நான் சொல்லும் இதுபோன்ற விஷயங்களைக் கேட்பது உங்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்: “தேவன் எப்போதுமே வேதனைப்படுவார் என்று முன்பு சொல்லவில்லையா? ஆகவே தேவன் வேதனைப்படமாட்டாரா? அப்படியானால், அவர் எப்போது காயப்படுகிறார்?” சுருக்கமாகச் சொன்னால், இந்த சூழ்நிலையில் தேவன் காயமடைய மாட்டார். அப்படியானால், மேலே குறிப்பிட்டுள்ள நடத்தை வகை குறித்து தேவனுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? தேவன் அனுப்பும் சோதனைகளையும் சிட்சைகளையும் ஜனங்கள் நிராகரிக்கும் போது, அவற்றிடமிருந்து அவர்கள் விலகிச்செல்லும்போது, அத்தகைய மனிதர்களிடம் ஒரே ஒரு மனநிலையை தேவன் வைத்திருப்பார். அது எத்தகைய மனநிலை? தேவன் இத்தகைய மனிதனை, அவரது இருதயத்தின் ஆழத்திலிருந்து அருவருக்கிறார். “அருவருப்பு” என்ற சொல்லுக்கு இரண்டு அடுக்கு அர்த்தங்கள் உள்ளன. எனது பார்வையில் இருந்து அதை எவ்வாறு விளக்கலாம்? ஆழமாக பார்த்தால், “அருவருப்பு” என்ற சொல் வெறுப்பு மற்றும் வெறுப்பின் அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதன் பொருளின் மற்றொரு பகுதி என்னவாக இருக்கிறது? எதையாவது விட்டுவிடுவதைக் குறிக்கும் பகுதி அது. “விட்டுவிடு” என்றால் என்ன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அல்லவா? சுருக்கமாகச் சொன்னால், “அருவருப்பு” என்பது தேவனுடைய இறுதி எதிர்வினையையும், அவ்வாறு நடந்துக்கொள்ளும் மனிதர்களிடம் இருக்கும் மனநிலையையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். அது அவர்கள் மீதான மிகுந்த வெறுப்பு மற்றும் அருவருப்பு ஆகும். எனவே, அவர்களைக் கைவிடுவதற்கான முடிவை அது விளைகிறது. ஒருபோதும் தேவனுடைய வழியில் நடக்காத, ஒருபோதும் தேவனுக்கு அஞ்சாத, தீமையைத் தவிர்க்காதவர்களுக்கு இதுவே தேவனுடைய இறுதி முடிவு ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

424. யோபுவின்பயமும் தேவனுக்கான கீழ்ப்படிதலும் மனிதகுலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அவருடைய பரிபூரணமும் நேர்மையும் மனிதனிடம் இருக்க வேண்டிய மனிதகுலத்திற்கான உச்சமாக இருந்தது. அவர் தேவனைக் காணவில்லை என்றாலும், தேவன் உண்மையிலேயே இருப்பதை அவர் உணர்ந்தார். இந்த உணர்தலால் அவர் தேவனுக்கு அஞ்சினார். தெய்வ பயம் காரணமாக அவர் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்தது. அவர் தன்னிடம் உள்ளதை எடுத்துக்கொள்ள தேவனுக்கு விடுதலையான கட்டுப்பாட்டைக் கொடுத்தார். ஆனாலும் அவர் குறை கூறவில்லை. தேவனுக்கு முன்பாக பணிந்து, இந்த தருணத்தில், தேவன் தம்முடைய மாம்சத்தை எடுத்துக் கொண்டாலும், அவர் குறை கூறாமல் மகிழ்ச்சியுடன் தேவனை அவ்வாறு செய்ய அனுமதிப்பது போல இருந்தார். அவரது முழு நடத்தை அவரது பூரணமான மற்றும் நேர்மையான மனிதத்தின் விளைவாக இருந்தது. அதாவது, தனது அப்பாவித்தனம், நேர்மை மற்றும் தயவின் விளைவாக, யோபு தேவன் இருப்பதை உணர்ந்துக்கொள்வதிலும் அனுபவத்திலும் உறுதியாக இருந்தார். இந்த அஸ்திவாரத்தின் மீது அவர் தன்னைத்தானே வைத்து, எல்லாவற்றிலும், தேவனுடைய வழிகாட்டுதலுக்கும், அவர் கண்ட தேவனுடைய செயல்களுக்கும் ஏற்ப தேவன் முன்பாக தனது சிந்தனை, நடத்தை, குணம் மற்றும் செயல்களின் கொள்கைகளை தரநிலைப்படுத்தினார். காலப்போக்கில், அவருடைய அனுபவங்கள் அவருக்கு ஒரு மெய்யான மற்றும் உண்மையான பயத்தை ஏற்படுத்தி அவரைத் தீமையிலிருந்து விலகச் செய்தன. யோபு உறுதியாக வைத்திருந்த ஒருமைப்பாட்டின் ஆதாரம் இதுதான். யோபு ஒரு நேர்மையான, தூய்மையான மற்றும் கனிவான மனிதத்தைக் கொண்டிருந்தார். அவர் தேவனுக்குப் பயந்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான உண்மையான அனுபவத்தையும், “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்.” என்பதையும் அறிந்திருந்தார். இவற்றின் காரணமாக மட்டுமே சாத்தானுடைய இத்தகைய கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில் அவர் தனது சாட்சியில் உறுதியாக நிற்க முடிந்தது, மேலும் அவற்றின் காரணமாகவே அவர் தேவனை ஏமாற்றாமல் இருக்கவும், தேவனுடைய சோதனைகள் அவர் மீது வரும்போது தேவனுக்கு திருப்திகரமான பதிலை அளிக்கவும் முடிந்தது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

425. யோபு தேவனுடைய முகத்தைப் பார்த்ததில்லை அல்லது தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்டதில்லை மற்றும் தேவனுடைய கிரியையை அவர் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததும் இல்லை. ஆனாலும் அவருடைய தெய்வ பயமும் அவருடைய சோதனைகளின் போது அவர் அளித்த சாட்சிகளும் அனைவருக்கும் சாட்சியாக இருக்கின்றன. அவை தேவனால் நேசிக்கப்படுகிறது, அவற்றில் மகிழ்ச்சியைத் தருகிறது, தேவனால் பாராட்டப்படுகிறது. அவற்றைப் பார்த்து ஜனங்கள் பொறாமைப்படுகிறார்கள், அவற்றைப் போற்றுகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்களின் புகழைப் பாடுகிறார்கள். அவரது ஜீவிதத்தைப் பற்றி பெரிய அல்லது அசாதாரணமான எதுவும் இருக்கவில்லை: எந்தவொரு சாதாரண மனிதனையும் போலவே, அவர் ஒரு குறிப்பிடத்தக்க ஜீவிதத்தை ஜீவித்தார். சூரிய உதயத்தில் வேலைக்குச் சென்று சூரிய அஸ்தமனத்தில் ஓய்வெடுக்க வீடு திரும்பினார். வித்தியாசம் என்னவென்றால், அவரது ஜீவிதத்தின் குறிப்பிடத்தக்க பல தசாப்தங்களில், அவர் தேவனுடைய வழியைப் பற்றிய ஒரு நுண்ணறிவைப் பெற்றார் என்பதே. தேவனுடைய மகத்தான வல்லமையையும் இறையாண்மையையும் பற்றி வேறு எந்த மனிதரும் புரிந்துக்கொள்ளாத அளவுக்கு உணர்ந்து புரிந்து கொண்டார். அவர் எந்தவொரு சாதாரண மனிதனையும் விட புத்திசாலியாக இருக்கவில்லை. குறிப்பாக அவரது ஜீவிதம் உறுதியானதல்ல. கண்ணுக்கு தெரியாத சிறப்புத் திறன்கள் அவரிடம் இருந்தன. உண்மையான, கனிவான மற்றும் நேர்மையான ஒரு ஆளுமை அவரிடம் இருப்பினும், நேர்மை, நீதியை மற்றும் நேர்மறையான விஷயங்களை நேசித்த ஒரு ஆளுமையை அவர் பெற்றிருந்தார்—இந்த விஷயங்கள் எதுவும் பெரும்பான்மையான சாதாரண ஜனங்களிடம் இல்லை. அவர் அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் வேறுபாடு காட்டினார். நீதியின் உணர்வைக் கொண்டிருந்தார். விட்டுக்கொடுக்காதவராகவும், விடாமுயற்சியுடனும் இருந்தார். தனது சிந்தனையில் கவனமாக விரிவாகக் கவனம் செலுத்தினார். இவ்வாறு, பூமியில் முக்கியத்துவம் பெறாத காலத்தில் தேவன் செய்த அசாதாரணமான காரியங்கள் அனைத்தையும் அவர் கண்டார். தேவனுடைய மகத்துவம், பரிசுத்தம் மற்றும் நீதியைக் கண்டார். தேவனுடைய அக்கறை, தயவு மற்றும் மனிதனுக்கான பாதுகாப்பு ஆகியவற்றைக் கண்டார். தேவனுடைய கௌரவத்தையும் உயர்ந்த தேவனுடைய அதிகாரத்தையும் அவர் கண்டார். எந்தவொரு சாதாரண மனிதனுக்கும் அப்பாற்பட்ட இந்த விஷயங்களை யோபு பெற முடிந்தது. இதற்கு முதல் காரணம், அவருக்கு தூய்மையான இருதயம் இருந்ததும், அவருடைய இருதயம் தேவனுக்கு சொந்தமானது என்பதும், சிருஷ்டிப்பாளரால் வழிநடத்தப்பட்டதும் ஆகும். இரண்டாவது காரணம் அவரது தேடல்: பாவமில்லாமல் பரிபூரணராக இருப்பதற்கான அவரது தேடலும், மற்றும் பரலோகத்தின் சித்தத்திற்கு இணங்க, தேவனால் நேசிக்கப்பட வேண்டும், தீமையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான தேடலும் ஆகும். தேவனைக் காணவோ அல்லது தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கவோ முடியாத யோபு இவற்றைக் கொண்டிருந்தார். அவர் தேவனைப் பார்த்ததில்லை என்றாலும், தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்பதை அவர் அறிந்து கொண்டார். அவ்வாறு செய்யும் தேவ ஞானத்தை அவர் புரிந்துக்கொண்டார். தேவன் பேசிய வார்த்தைகளை அவர் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என்றாலும், மனிதனுக்கு வெகுமதி அளிப்பது, மனிதனிடமிருந்து எடுப்பது போன்ற செயல்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை யோபு அறிந்திருந்தார். அவரது ஜீவிதத்தின் ஆண்டுகள் எந்தவொரு சாதாரண மனிதரிடமிருந்தும் வேறுபட்டவை அல்ல என்றாலும், எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய தனது அறிவைப் பாதிக்கவோ அல்லது தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்றுவதை பாதிக்கவோ அவர் தனது ஜீவிதத்தின் குறிப்பிடத்தக்க குணத்தை அனுமதிக்கவில்லை. அவருடைய பார்வையில், எல்லாவற்றின் சட்டங்களும் தேவனுடைய கிரியைகளால் நிறைந்திருந்தன, தேவனுடைய இறையாண்மையை ஒரு மனிதனுடைய ஜீவிதத்தின் எந்தப் பகுதியிலும் காணலாம். அவர் தேவனைக் காணவில்லை, ஆனால் தேவனுடைய செயல்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்பதை அவரால் உணர முடிந்தது. பூமியில் முக்கியத்துவம் பெறாத அவருடைய காலத்தில், அவரது ஜீவிதத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேவனுடைய அசாதாரண மற்றும் அதிசயமான கிரியைகளை அவரால் காணவும் உணரவும் முடிந்தது. தேவனுடைய அற்புதமான ஏற்பாடுகளைக் காணவும் முடிந்தது. தேவனுடைய மறைவான தன்மையும் மௌனமும் தேவனுடைய கிரியைகளை யோபு உணர்ந்துக் கொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை. எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய அவரது அறிவை அவை பாதிக்கவில்லை. எல்லாவற்றிலும் மறைந்திருக்கும் தேவனுடைய இறையாண்மை மற்றும் ஏற்பாடுகளை உணர்ந்துக்கொள்வது என்பது அவரது அன்றாட ஜீவிதத்தில் உணரப்பட்டது. எல்லாவற்றிலும் அமைதியாக இருப்பதன் மூலமும், எல்லாவற்றின் சட்டங்களையும் நிர்வகிப்பதன் மூலமும் தம் இருதயத்தின் குரலையும் தம் வார்த்தைகளையும் வெளிப்படுத்தும் தேவனுடைய இருதயத்தின் குரலையும், தேவனுடைய வார்த்தைகளையும் தனது அன்றாட ஜீவிதத்தில், யோபு கேட்டார், புரிந்து கொண்டார். அப்படியானால், யோபுவைப் போலவே மனிதர்களுக்கும் மனிதம் மற்றும் தேடல் இருந்தால், அவர்கள் யோபுவைப் போலவே அதே உணர்தலையும் அறிவையும் பெற முடியும். யோபுவைப் போல எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய அதே புரிதலையும் அறிவையும் பெற முடியும். தேவன் யோபுவுக்குத் தோன்றவில்லை அல்லது அவருடன் பேசவில்லை என்றாலும் யோபுவால் பரிபூரணராக மற்றும் நேர்மையாக இருக்கவும், தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்க்கவும் முடிந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மனிதனுக்குத் தோன்றாமலோ அல்லது பேசாமலோ இருந்தாலும் கூட தேவனுடைய இருப்பு, வல்லமை மற்றும் அதிகாரம் குறித்து மனிதன் அறிந்துக்கொள்ள எல்லாவற்றிலும் இருக்கும் தேவனுடைய செயல்களும் எல்லாவற்றின் மீதான அவருடைய இறையாண்மையும் போதுமானது ஆகும். மனிதன் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்ற, தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் போதுமானது ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

426. “தேவனுக்குப் பயப்படுவதும், தீமையைத் தவிர்ப்பதும்” மற்றும் தேவனை அறிவதும் எண்ணற்ற நூல்களால் பிரிக்கமுடியாமல் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையேயான தொடர்பு பிரத்தியட்சமாகத் தெரிகிறது. ஒருவர் தீமையைத் தவிர்ப்பதற்கு விரும்பினால், முதலில் தேவன் மீது உண்மையான பயம் இருக்க வேண்டும். ஒருவர் தேவனைப் பற்றிய உண்மையான பயத்தை அடைய விரும்பினால், முதலில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருக்க வேண்டும். தேவனைப் பற்றிய அறிவை அடைய ஒருவர் விரும்பினால், முதலில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும், தேவனுடைய சிட்சையையும் ஒழுக்கத்தையும் அனுபவிக்க வேண்டும், அவருடைய சிட்சையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும். ஒருவர் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க விரும்பினால், ஒருவர் முதலில் தேவனுடைய வார்த்தைகளை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், தேவனை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், மற்றும் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சூழல்களின் வடிவத்திலும் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்க தேவனிடம் கேட்க வேண்டும். ஒருவர் தேவனோடு, தேவனுடைய வார்த்தைகளோடு நேருக்கு நேர் வர விரும்பினால், முதலில் ஒரு எளிய மற்றும் நேர்மையான இருதயம், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கான தயார்நிலை, துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் விருப்பம், மனஉறுதி மற்றும் தீமையைத் தவிர்ப்பதற்கான தைரியம் மற்றும் ஒரு உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக ஆசை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு, படிப்படியாக முன்னேறும்போது, நீ தேவனிடம் இன்னும் நெருக்கமாக வருவாய், உன் இருதயம் இன்னும் தூய்மையாக வளரும் மற்றும் உன் ஜீவிதத்தையும் உயிருடன் இருப்பதன் மதிப்பையும், தேவனைப் பற்றிய உன் அறிவோடு, இன்னும் அர்த்தமுள்ளதாகவும், இன்னும் பிரகாசமானதாகவும் மாற்றுவாய். ஒரு நாள், சிருஷ்டிகர் இனி ஒரு புதிர் அல்ல என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் மறைக்கப்படவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் முகத்தை மறைக்கவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும், சிருஷ்டிகர் இனி உன் எண்ணங்களில் நீ தொடர்ந்து ஏங்கி, உணர முடியாமல் போனவர் அல்ல என்றும், அவர் உன் இடது மற்றும் வலதுபுறம் நிஜமாகவும் உண்மையாகவும் பாதுகாப்பாக நிற்கிறார் என்றும், உன் ஜீவனை வழங்குகிறார் என்றும், உன் விதியைக் கட்டுப்படுத்துகிறார் என்றும், நீ உணருவாய். அவர் தொலைதூர அடிவானத்தில் இல்லை, மேகங்களில் தன்னைத்தானே மறைக்கவில்லை. அவர் உன் பக்கத்திலேயே இருக்கிறார். உன்னை எல்லாவற்றிலும் வழிநடத்துகிறார். உன்னிடம் உள்ள அனைத்திடமும் உன்னிடமும் அவர் மட்டுமே இருக்கிறார். அத்தகைய தேவன், இருதயத்திலிருந்து அவரை நேசிக்கவும், அவருடன் ஒட்டிக்கொள்ளவும், அவரை நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளவும், அவரைப் போற்றவும், அவரை இழக்க பயப்படுவதற்கும், இனிமேல் அவரைத் துறக்க, அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருக்க அல்லது அவரைத் தவிர்க்க அல்லது தூரத்தில் அவரை தள்ளி வைக்க விரும்பாமல் இருப்பதற்கும் உன்னை அனுமதிக்கிறார். நீ விரும்புவதெல்லாம் அவர் மீது அக்கறைகொள்வதும், அவருக்குக் கீழ்ப்படிவதும், அவர் உனக்குக் கொடுக்கும் அனைத்தையும் கூறுவதும், அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிவதும் மட்டுமே. நீ இனி வழிநடத்தப்படுவதை, உனக்கு வழங்கப்படுவதை, கவனிக்கப்படுவதை, அவரால் பாதுகாக்கப்படுவதை, அவர் கட்டளையிடுவதை, உனக்காக ஆணையிடுவதை, இனி மறுக்க மாட்டாய். நீ விரும்புவதெல்லாம் அவரைப் பின்பற்றுவதும், அவருடைய பக்கத்திலேயே நடப்பதும், அவரை உன் ஒரே ஜீவனாக ஏற்றுக்கொள்வதும், அவரை உன் ஒரே கர்த்தராக ஏற்றுக்கொள்வதும், உன் ஒரே தேவனாக ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

427. தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது, அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால், அவர் புரிந்துகொள்ளமுடியாதவர், ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவை தான், மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள், அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள், இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவருடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே ஜனங்கள் விரும்புகிறார்கள்; அவர்கள் அவரை மிஞ்ச விரும்புவதில்லை, ஏனென்றால் அவர் செய்யும் கிரியையானது மனுஷனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது, அவருக்குப் பதிலாக மனுஷனால் அதைச் செய்ய முடியாது. மனுஷனுக்கு கூட தனது குறைபாடுகள் தெரியாது, ஆனாலும் தேவன் ஒரு புதிய பாதையை உருவாக்கி, மனுஷனை ஒரு புதிய மற்றும் அழகான உலகிற்கு கொண்டு வர வந்திருக்கிறார், எனவே மனுஷகுலமானது புதிய முன்னேற்றத்தை அடைந்து ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கியுள்ளது. தேவனைப் பற்றி ஜனங்கள் உணருவது போற்றுதல் இல்லை, அல்லது அதற்கு மாறாக அது போற்றுதல் மட்டுமில்லை. பயபக்தியும் அன்பும் அவர்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கின்றன; தேவன் உண்மையில் அற்புதமானவர் என்பது அவர்களின் உணர்வாக இருக்கிறது. மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவர் செய்கிறார், மனுஷனால் சொல்ல முடியாத விஷயங்களை அவர் சொல்கிறார். தேவனின் கிரியையை அனுபவித்தவர்களுக்கு எப்போதும் விவரிக்க முடியாத உணர்வு இருக்கும். ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களால் தேவனின் அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது; அவருடைய சௌந்தரியத்தை அவர்களால் உணரமுடிகிறது, அவருடைய கிரியையானது மிகவும் ஞானமானது என்பதையும், மிகவும் அற்புதமானது என்பதையும், அதன் மூலம் எல்லையற்ற வல்லமையானது அவர்கள் மத்தியில் உருவாகிறது என்பதையும் அவர்களால் உணர முடிகிறது. இது பயமோ அல்லது அவ்வப்போது வெளிப்படும் அன்பு மற்றும் மரியாதையோ இல்லை, ஆனால் மனுஷனுக்கான தேவனுடைய இரக்கத்தின் ஆழமான மற்றும் அவனை சகித்துக்கொள்ளும் உணர்வு ஆகும். இருப்பினும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த ஜனங்கள் அவருடைய மகத்துத்தையும் அவர் எந்தக் குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் உணர்கிறார்கள். அவருடைய கிரியையின் பெரும்பகுதியை அனுபவித்தவர்களால் கூட அவரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை; அவரை உண்மையிலேயே வணங்கும் அனைவருக்கும் அவருடைய கிரியையானது ஜனங்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதில்லை என்பதையும், ஆனால் எப்போதும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் அறிவார்கள். ஜனங்கள் அவரை முழுமையாகப் போற்றவேண்டும் என்பதையோ அல்லது அவருக்கு அடிபணிந்த தோற்றத்தை முன்வைக்க வேண்டும் என்பதையோ அவர் எதிர்பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் உண்மையான பயபக்தியையும் உண்மையான கீழ்ப்படிதலையும் அடைய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார். அவருடைய கிரியையில் அதிகபட்சமாக, உண்மையான அனுபவமுள்ள எவரும் அவரை பயபக்தியுடன் வணங்குவதை உணர்கிறார்கள், இது போற்றுதலை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவருடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை காரணமாக ஜனங்கள் அவருடைய மனநிலையைப் பார்த்திருக்கிறார்கள், ஆகவே அவர்கள் அவரை இருதயத்தில் வைத்து வணங்குகிறார்கள். தேவன் வணங்கப்படுவதற்கும் கீழ்ப்படிவதற்கும் உரியவர், ஏனென்றால் அவருடைய இருப்புநிலையும் அவருடைய மனநிலையும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்குச் சமமானவை இல்லை, அதற்கும் மேற்பட்டவையாக இருக்கின்றன. தேவன் தன்னிறைவுள்ளவர், நித்தியமானவர், அவர் சிருஷ்டிக்கப்படாத ஜீவன், மேலும் தேவன் மட்டுமே பயபக்திக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவர்; மனுஷன் இதற்கு தகுதியற்றவனாக இருக்கிறான். எனவே, அவருடைய கிரியையை அனுபவித்தவர்கள், அவரை உண்மையாக அறிந்தவர்கள் அனைவரும் அவரைப் பயபக்தியுடன் உணர்கிறார்கள். இருப்பினும், அவரைப் பற்றிய தங்கள் கருத்துக்களை விட்டுவிடாதவர்களுக்கு—அவரை தேவனாகக் கருதாதவர்களுக்கு—அவரைப் பற்றி எந்த பயபக்தியும் இருப்பதில்லை, அவர்கள் அவரைப் பின்பற்றினாலும், அவர்கள் ஜெயங்கொள்ளப்படுவதில்லை; அவர்கள் இயற்கையாகவே கீழ்ப்படியாத ஜனங்கள் ஆவர். இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் மனுஷன் அடைய வேண்டியது என்னவென்றால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா ஜீவன்களும் சிருஷ்டிகருக்கு மரியாதைக்குரிய இருதயங்களைக் கொண்டிருக்க வேண்டும், அவரை வணங்க வேண்டும், நிபந்தனையின்றி அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் ஆகியவை தான். அவருடைய அனைத்து கிரியைகளும் அடைய வேண்டிய இறுதி முடிவு இதுதான். இதுபோன்ற கிரியையை அனுபவித்தவர்கள் தேவனை சிறிதளவு கூட வணங்கவில்லை என்றால், மேலும் அவர்களின் கடந்த கால கீழ்ப்படியாமையானது மாறாவிட்டால், அவர்கள் அகற்றப்படுவது உறுதி. தேவனுக்கான ஒரு நபரின் அணுகுமுறையானது அவரைப் போற்றுவதோ அல்லது தூரத்திலிருந்தே அவருக்கு மரியாதை செலுத்துவதோ மட்டுமாக இருந்து, அவரை சிறிதளவு கூட நேசிப்பதாக இல்லை என்றால், இதுவே தேவன்மீது அன்பு இல்லாத ஒரு நபர் வந்துள்ளதன் விளைவாகும், மேலும் அந்த நபர் பரிபூரணமடைவதற்கான நிபந்தனைகளைக் கொண்டிருப்பதில்லை. இவ்வளவு கிரியைகளாலும் ஒரு நபரின் உண்மையான அன்பைப் பெற முடியாவிட்டால், அந்த நபர் தேவனைப் பெறவில்லை என்றும், சத்தியத்தை உண்மையாகப் பின்தொடரவில்லை என்றும் அர்த்தமாகிறது. தேவனை நேசிக்காதவன் சத்தியத்தை நேசிப்பதில்லை, அதனால் அவனால் தேவனைப் பெற்றுக்கொள்ள முடியாது, தேவனின் அங்கீகாரத்தையும் பெற முடியாது. அத்தகையவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவித்தாலும், அவர்கள் நியாயத்தீர்ப்பை அனுபவித்தாலும், அவர்களால் தேவனை வணங்க முடிவதில்லை. இவர்களின் சுபாவம் மாறாததாக இருக்கிறது, மேலும் மிகவும் பொல்லாத மனநிலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனை வணங்காத அனைவருமே அகற்றப்பட வேண்டும், தண்டனைக்குரிய பொருள்களாக இருக்க வேண்டும், பொல்லாப்பு செய்பவர்களைப் போலவே தண்டிக்கப்பட வேண்டும், அநீதியான காரியங்களைச் செய்தவர்களைக் காட்டிலும் அதிகமாகத் துன்பப்பட வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

முந்தைய: G. ஒருவருடைய கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து

அடுத்த: I. விசுவாசத்தில் ஒருவருடைய பாதையை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக