தேவனை அறிதல் II

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 31

தேவன் மனிதகுலத்தைப் படைத்த பின்னரே, மனிதனுடன் பழகவும் பேசவும் தொடங்கினார். அவருடைய மனநிலை மனிதனுக்கு வெளிப்படத் தொடங்கியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மனிதகுலத்துடன் முதன்முதலாக ஈடுபட்டதிலிருந்து, குறுக்கீடு இல்லாமல், தம்முடைய சாராம்சத்தையும், தன்னையும், தன்னிடம் இருகின்றவற்றையும் மனிதனுக்கு வெளிப்படையாக காண்பிக்கத் தொடங்கினார். முந்தைய மனிதர்களாலோ அல்லது இன்றைய ஜனங்களாலோ அதைப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியுமா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் மனிதனிடம் பேசுகிறார், மனிதர்களிடையே செயல்படுகிறார், அவருடைய மனநிலையை வெளிப்படுத்துகிறார் மற்றும் அவருடைய சாராம்சத்தை வெளிப்படுத்துகிறார்—இது ஓர் உண்மை மற்றும் எந்தவொரு மனிதரும் மறுக்க முடியாத ஒன்றாகும். தேவன் மனிதனுடன் இணைந்து செயல்படுகையில் தேவனுடைய குணம், தேவனுடைய சாராம்சம், மற்றும் தேவனும், அவரிடம் உள்ளவையும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதையும் இது உணர்த்தும். அவர் ஒருபோதும் மனிதனிடமிருந்து எதையும் ஒளிக்கவோ மறைக்கவோ இல்லை. மாறாக தனது மனநிலையை வெளிப்படையாகக் காட்டி எதையும் மறைக்காமல் தனது சொந்த மனநிலையை வெளியிடுகிறார். இவ்வாறு, மனிதனானவன் தன்னை அறிந்துக்கொள்ள முடியும் என்றும், அவனது மனநிலையையும் சாராம்சத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்றும் தேவன் நம்புகிறார். தன் மனநிலையையும் சாராம்சத்தையும் என்றும் உள்ள மர்மங்களாக மனிதன் கருதுவதை அவர் விரும்பவில்லை. மனிதகுலம் தேவனை ஒருபோதும் தீர்க்க முடியாத ஒரு புதிராகக் கருதுவதை அவர் விரும்பவில்லை. மனிதகுலம் தேவனை அறிந்தால் மட்டுமே மனிதன் முன்னோக்கிச் செல்லும் வழியை அறிந்து தேவனுடைய வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள முடியும். இது போன்ற மனிதகுலத்தால் மட்டுமே தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் உண்மையிலேயே ஜீவிக்க முடியும். தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியிலான வெளிச்சத்தில் ஜீவிக்க முடியும்.

தேவனால் வெளியிடப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளும் மனநிலையும் அவருடைய சித்தத்தைப் பிரதிபலிக்கின்றன. அவை அவருடைய சாராம்சத்தைக் குறிக்கின்றன. தேவன் மனிதனுடன் கிரியை செய்யும் போது, அவர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அல்லது அவர் எந்த மனநிலையை வெளிப்படுத்தினாலும், தேவனுடைய சாராம்சத்தில் மனிதன் அவரிடம் என்ன இருக்கிறது, அவர் என்னவாக இருக்கிறார் என எதைப் பார்த்தாலும், இவை அனைத்தும் மனிதனுக்கான தேவனுடைய சித்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மனிதனால் எவ்வளவு உணர்ந்துகொள்ள, அறிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள முடிந்தாலும், இவை அனைத்தும் தேவனுடைய சித்தத்தைப் பிரதிபலிக்கின்றன, அதாவது மனிதனுக்கான தேவனுடைய சித்தத்தைப் பிரதிபலிக்கின்றன. இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது! மனிதகுலத்திற்கான தேவனுடைய சித்தம் என்னவென்றால், மனிதர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படி ஜீவிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதாகும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதுமாகும். இவை தேவனுடைய சாராம்சத்திலிருந்து பிரிக்க முடியாதவையா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் தனது மனநிலையையும், தன்னையும், தன்னிடம் உள்ள அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில், அவர் மனிதனுடைய எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறார். எந்தப் பொய்யும் இல்லை, பாசாங்கும் இல்லை, மறைவானதும் இல்லை மற்றும் அலங்காரமும் இல்லை. ஆயினும்கூட, மனிதனால் ஏன் தெரிந்துகொள்ள மற்றும் தேவனுடைய மனநிலையைத் தெளிவாக உணர முடியவில்லை? தேவனுடைய சித்தத்தை மனிதன் ஏன் உணரவில்லை? தேவனால் வெளிப்படுத்தப்பட்டு வெளியிடப்படுவது தேவனும், தேவனிடம் உள்ளவையும் ஆகும். அது அவருடைய உண்மையான மனநிலையின் ஒவ்வொரு சிறு பகுதியும் அம்சமும் ஆகும்—எனவே மனிதனால் ஏன் அதைப் பார்க்க முடியாது? பூரணமான அறிவை மனிதனால் ஏன் பெற இயலாது? இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இந்நிலையில், அந்தக் காரணம் என்ன? சிருஷ்டிப்பின் காலம் முதல், மனிதன் தேவனை ஒருபோதும் தேவனாக கருதியதில்லை. ஆதி காலங்களில், மனிதனைப் பொறுத்தவரையில் தேவன் என்ன செய்தாலும், மனிதன்—அப்போது சிருஷ்டிக்கப்பட்டிருந்த மனிதன்—தேவனை ஒரு தோழராக மட்டுமே கருதினான், தான் நம்பும் ஒருவாராகக் கருதினான். மனிதனுக்கு தேவனைப் பற்றிய அறிவோ புரிதலோ இல்லை. அதாவது, தேவனால் வெளிப்படுத்தபட்டவை மனிதனுக்குத் தெரியாது—அவன் நம்பியிருந்த மற்றும் தனது தோழராகக் காணப்பட்டவர் தேவனுடைய சாராம்சம் என்று அவன் அறிந்திருக்கவில்லை அல்லது அனைவரையும் ஆளக்கூடியவர் இவர்தான் என்று அவன் அறிந்திருக்கவில்லை. எளிமையாகச் சொன்னால், அக்கால ஜனங்கள் தேவனை ஒருபோதும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. வானங்களும், பூமியும், எல்லா படைப்புகளும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர் எங்கிருந்து வந்தார் என்பதையும், அவர் யார் என்பதையும் அவர்கள் அறியாதவர்களாக இருந்தார்கள். நிச்சயமாக, மனிதன் தேவனைத் தெரிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ அல்லது அவர் செய்த அனைத்தையும் புரிந்துகொள்ளவோ அல்லது அவருடைய சித்தத்தைப் பற்றி அறிந்திருக்கவோ வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இவை மனிதகுலத்தின் சிருஷ்டிப்பின் காலத்தைத் தொடர்ந்து வந்த ஆதி காலங்கள் ஆகும். தேவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் கிரியைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியபோது, தேவன் மனிதனிடம் சில காரியங்களைச் செய்தார். மனிதனிடம் சில கோரிக்கைகளையும் வைக்கத்தொடங்கினார். தேவனுக்கு எவ்வாறு பலியிட வேண்டும், வணங்க வேண்டும் என்று மனிதனுக்குச் சொன்னார். அப்போதுதான் மனிதன் தேவனைப் பற்றிய சில எளிய யோசனைகளைப் பெற்றான். அப்போதுதான் மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள வித்தியாசத்தை அவன் அறிந்திருந்தான். மனிதனைப் படைத்தவன் தேவன். தேவன்தான் தேவன் என்றும் மனிதன்தான் மனிதன் என்றும் மனிதன் அறிந்தபோது, அவனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தது. ஆனாலும் மனிதனுக்கு அவனைப் பற்றி ஒரு பெரிய அறிவு அல்லது ஆழமான புரிதல் இருக்க வேண்டுமென தேவன் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு, தேவன் தனது கிரியையின் நிலைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனிதனிடமிருந்து வெவ்வேறு காரியங்களை எதிர்பார்க்கிறார். இதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? தேவன் உண்மையானவரா? மனிதனிடமான தேவனுடைய எதிர்பார்ப்பு பொருத்தமானவையா? தேவனுடைய மனிதகுலத்தின் சிருஷ்டிப்பைத் தொடர்ந்து வந்த ஆதி காலங்களில், மனிதனை ஜெயிக்கும் மற்றும் பூரணமாக்கும் கிரியையை தேவன் இன்னும் செய்யவில்லை. அவனிடம் பல வார்த்தைகளைப் பேசவில்லை. அவர் மனிதனிடம் குறைவாகத்தான் எதிர்பார்த்தார். மனிதன் என்ன செய்தான், எப்படி நடந்துகொண்டான் என்பதைப் பொருட்படுத்தாமல்—தேவனைப் புண்படுத்தும் சில காரியங்களைச் செய்தாலும்—தேவன் மன்னித்து அனைத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஏனென்றால், மனிதனுக்கு எதைக் கொடுத்தார், மனிதனுக்குள் என்ன இருக்கிறது என்பதை தேவன் அறிந்திருந்தார். ஆகவே, அவர் மனிதனிடம் எதிர்பார்க்கும் தேவைகளின் தரத்தை அவர் அறிந்திருந்தார். அந்த நேரத்தில் அவருடைய தேவைகளின் தரம் மிகக் குறைவாக இருந்தபோதிலும், அதற்கு அவருடைய மனநிலை பெரிதாக இல்லை என்றோ அவருடைய ஞானமும் சர்வ வல்லமையும் வெற்று வார்த்தைகள் மட்டுமே என்றோ அர்த்தமாகாது. மனிதனைப் பொறுத்தவரையில், தேவனுடைய மனநிலையையும் தேவனையும் அறிந்து கொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது: தேவனுடைய ஆளுகை மற்றும் மனிதகுலத்தின் இரட்சிப்பின் கிரியைகளின் படிகளைப் பின்பற்றுவதன் மூலமும், தேவன் மனிதர்களிடம் பேசும் வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதன் மூலமும் அறிந்துகொள்ள முடியும். தேவனும் தேவனிடம் உள்ளதும் என்ன என்பதை மனிதன் அறிந்த பிறகும், தேவனுடைய மனநிலையை அறிந்த பிறகும், தனது உண்மையான இயல்பைக் காட்டும்படி மனிதன் தேவனிடம் கேட்பானா? இல்லை, மனிதன் கேட்கமாட்டான், கேட்கக்கூடத் துணியமாட்டான். ஏனென்றால், தேவனுடைய மனநிலையையும், தேவனையும் அவரிடம் உள்ளது என்ன என்பதையும் புரிந்துக்கொண்டதால், மனிதன் ஏற்கெனவே உண்மையான தேவனையும், அவரது உண்மையான இயல்பையும் பார்த்திருப்பான். இது தவிர்க்க முடியாத விளைவாகும்.

தேவனுடைய கிரியையும் திட்டமும் இடைவிடாமல் முன்னேறியதும், வெள்ளத்தைப் பயன்படுத்தி உலகை மீண்டும் ஒருபோதும் அழிக்க மாட்டார் என்பதற்கான அடையாளமாக தேவன் மனிதனுடன் வானவில் உடன்படிக்கையை நிறுவியதும், தன்னுடன் ஒரே மனநிலையோடு இருக்கக் கூடியவர்களைப் பெற தேவனுக்கு அதிகமாக அழுத்தம் இருந்தது. ஆகவே, பூமியில் தம்முடைய சித்தத்தைச் செய்ய முடிந்தவர்களைப் பெறவும், இருளின் வல்லமைகளிலிருந்து விடுபடவும், சாத்தானால் கட்டுப்படாமல் இருக்கவும் கூடிய ஒரு கூட்டத்தைப் பெறவும், பூமியில் அவருக்குச் சாட்சி அளிக்கக்கூடிய ஒரு கூட்டத்தைப் பெறவும் அவருக்கு அவசர சித்தம் இருந்ததா? அத்தகைய ஒரு கூட்டத்தைப் பெறுவது தேவனுடைய நீண்டகால சித்தமாக இருந்தது, சிருஷ்டிப்பு காலத்திலிருந்தே அவர் எப்போதும் காத்திருந்தார். ஆகவே, உலகை அழிக்க தேவன் பயன்படுத்திய வெள்ளம் அல்லது மனிதனுடனான உடன்படிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய சித்தம், மனதின் கட்டமைப்பு, திட்டம் மற்றும் நம்பிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவர் செய்ய விரும்பியது என்னவென்றால், சிருஷ்டிப்பு காலத்திற்கு முன்பே அவர் ஏங்கிக்கொண்டிருந்த விஷயம், மனிதர்களிடையே அவர் பெற விரும்பிய மனிதர்களைப் பெறுவது—அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும், அவருடைய சித்தத்தை புரிந்துகொள்ளவும் கூடிய ஒரு கூட்டத்தைப் பெறுவது, அவரை வணங்கக்கூடிய ஒரு கூட்டத்தைப் பெறுவது ஆகியனவாகும். அத்தகைய ஜனங்கள் கூட்டம் உண்மையிலேயே அவருக்குச் சாட்சியளிக்க முடியும். மேலும், அவர்கள் அவருடைய நம்பிக்கைக்குரியவர்கள் என்றும் கூறலாம்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 32

ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைக் கொடுப்பதாக தேவன் வாக்குத்தத்தம் அளிக்கிறார்

ஆதி. 17:15-17  பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு.

ஆதி. 17:21-22  வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.

தேவன் தீர்மானம் செய்த கிரியையை யாராலும் தடுக்க முடியாது

எனவே, நீங்கள் அனைவரும் ஆபிரகாமின் கதையை இப்போது தான் கேட்டிருக்கிறீர்கள், இல்லையா? வெள்ளம் உலகை அழித்தபின் அவன் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனுடைய நாமம் ஆபிரகாம். அவன் நூறு வயதானவனாகவும் அவனது மனைவி சாராய் தொண்ணூறு வயதானவளாகவும் இருந்தபோது, தேவனுடைய வாக்குத்தத்தம் அவனுக்கு வந்தது. தேவன் அவனுக்கு என்ன வாக்குத்தத்தம் அளித்தார்? வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல தேவன் வாக்குத்தத்தம் அளித்தார்: “நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்.” அவனுக்கு ஒரு மகனைக் கொடுப்பதாக தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் பின்னணி என்ன? வேதவாக்கியங்கள் பின்வரும் விவரத்தை அளிக்கின்றன: “அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த வயதான தம்பதியினர் குழந்தைகளைக் கர்ப்பத்தில் தாங்க முடியாத அளவுக்கு வயதானவர்கள். தேவன் அவருக்கு வாக்களித்தபிறகு ஆபிரகாம் என்ன செய்தான்? அவன் சிரித்தபடி முகங்குப்புற விழுந்து, “நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ?” என்று தன்னைக் குறித்து தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். ஆபிரகாம் அது சாத்தியமற்றது என்று நம்பினான்—அதாவது தேவன் தனக்கு அளித்த வாக்குத்தத்தத்தை நகைச்சுவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அவன் நம்பினான். மனிதனுடைய பார்வையில், இது மனிதனால் அடைய முடியாத ஒன்று, அதைப் போலவே தேவனால் செய்ய முடியாத ஒன்று மற்றும் இது தேவனுக்கு சாத்தியமற்றது. ஆபிரகாமுக்கு இது சிரிப்புக்குரியதாக இருந்தது: “தேவன் மனிதனைப் படைத்தார், எனினும் இவ்வளவு வயதான ஒருவர் குழந்தைகளைப் பெற்றெடுக்க இயலாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவர் என்னை அனுமதிக்க முடியும் என்று தேவன் நினைக்கிறார். அவர் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பார் என்று கூறுகிறார்—நிச்சயமாக அது சாத்தியமற்றது!” ஆகவே, ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்துக் கொண்டான். தன்னைப் பற்றி தனக்குள் சிந்தித்துக் கொண்டான்: “சாத்தியமற்றது—தேவன் என்னிடம் கேலி செய்கிறார். இது உண்மையாக இருக்க முடியாது!” அவன் தேவனுடைய வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், தேவனுடைய பார்வையில், ஆபிரகாம் எப்படிப்பட்ட மனிதன்? (நீதிமான்.) அவன் ஒரு நீதியுள்ள மனிதன் என்று எங்கே கூறப்பட்டது? தேவன் அழைக்கும் அனைவரும் நீதிமான்கள், பரிபூரணர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்கள் அனைவரும் தேவனோடு நடப்பவர்கள். நீங்கள் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறீர்கள்! தேவன் ஒருவரை வரையறுக்கும்போது, அவர் தன்னிச்சையாக அவ்வாறு செய்வதில்லை என்பதை நீங்கள் தெளிவாகக் காண வேண்டும். இங்கே, ஆபிரகாம் நீதியுள்ளவன் என்று தேவன் சொல்லவில்லை. அவருடைய இருதயத்தில், ஒவ்வொரு நபரையும் அளவிடுவதற்கான தரநிலைகளை தேவன் வைத்திருக்கிறார். ஆபிரகாம் எந்த வகையான மனிதன் என்று தேவன் சொல்லவில்லை என்றாலும், அவனுடைய நடத்தை அடிப்படையில், ஆபிரகாம் தேவன் மீது எத்தகைய விசுவாசத்தை வைத்திருந்தான்? அது பலனற்றதாக இருந்ததா? அல்லது அவன் மிகுந்த விசுவாசத்துடன் இருந்தானா? இல்லை, அவன் மிகுந்த விசுவாசத்துடன் இருக்கவில்லை! அவனது சிரிப்பும் எண்ணங்களும் அவன் யார் என்பதைக் காட்டின. எனவே, அவன் நீதியுள்ளவன் என்ற உங்களுடைய நம்பிக்கையானது ஒரு கற்பனையின் உருவம் மட்டுமே. இது கோட்பாட்டின் கண்மூடித்தனமான பயன்பாடு ஆகும். அது பொறுப்பற்ற மதிப்பீடாகும். தேவன், ஆபிரகாமின் நகைப்பையும் அவனது சிறிய வெளிப்பாடுகளையும் பார்த்தாரா? அவர் அவற்றை அறிந்திருந்தாரா? தேவன் அறிந்திருந்தார். ஆனால், தேவன் செய்யத் தீர்மானித்ததை மாற்றுவாரா? இல்லை! இந்த மனிதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேவன் திட்டமிட்டுத் தீர்மானித்தபோது, அது நிறைவேறியது. மனிதனுடைய எண்ணங்களோ அல்லது அவனது நடத்தையோ சிறிதளவு செல்வாக்கு செலுத்தவோ அல்லது தேவனுடைய காரியத்தில் தலையிடவோ முடியாது. தேவன் தன்னுடைய திட்டத்தைத் தன்னிச்சையாக மாற்றமாட்டார். மனிதனுடைய நடத்தை, அறியாமை போன்ற நடத்தைகள் காரணமாக அவர் தனது திட்டத்தை திடீரென மாற்றவோ வருத்தப்படவோ மாட்டார். அப்படியானால், ஆதியாகமம் 17:21-22 இல் என்ன எழுதப்பட்டுள்ளது? “வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.” ஆபிரகாம் என்ன நினைத்தான் அல்லது சொன்னான் என்பதில் தேவன் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அவர் புறக்கணிக்க காரணம் என்ன? ஏனென்றால், அந்த நேரத்தில், மனிதன் மிகுந்த விசுவாசமுள்ளவனாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிபார்க்கவில்லை. அவன் தேவனைப் பற்றி மிகுந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்றோ தேவனால் செய்யப்பட்ட, சொல்லப்பட்ட காரியங்களை அவன் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு, அந்த மனிதன் தான் செய்யத் தீர்மானித்ததை அல்லது தேவன் தேர்வு செய்யத் தீர்மானித்த ஜனங்களை அல்லது அவருடைய செயல்களின் கொள்கைகளைப் பூரணமாகப் புரிந்து கொள்ளும்படி அவர் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அதற்கு மனிதனுடைய நிலை மட்டும் போதுமானதாக இல்லை. அந்த நேரத்தில், ஆபிரகாம் செய்ததை, அவன் தன்னைச் சாதாரணமாக நடத்தியதை தேவன் கருதினார். அவர் கண்டிக்கவில்லை அல்லது தண்டிக்கவில்லை. ஆனால்: “வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்கு ஈசாக்கைப் பெற்றெடுப்பாள்.” என்று மட்டும் சொன்னார். அவர் இந்த வார்த்தைகளை அறிவித்த பிறகு, தேவனுக்கு, இந்த விஷயம் படிப்படியாக நிறைவேறியது. தேவனுடைய பார்வையில், அவருடைய திட்டத்தால் நிறைவேற்றப்பட வேண்டியது ஏற்கனவே அடையப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முடித்த பின்னர், தேவன் புறப்பட்டார். மனிதன் என்ன செய்கிறான் அல்லது என்ன நினைக்கிறான், மனிதன் என்ன புரிந்துகொள்கிறான், மனிதனுடைய திட்டங்கள், என இவை எதுவுமே தேவனுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. எல்லாமே தேவனுடைய திட்டத்தின்படி, தேவன் நிர்ணயித்த நேரங்களுக்கும் நிலைகளுக்கும் ஏற்பத் தொடர்கிறது. தேவனுடைய கிரியையின் கொள்கை இதுதான். மனிதன் அவரை நம்புவதில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என்றாலும், மனிதன் எதை நினைக்கிறானோ, எதை அறிந்திருக்கிறானோ அவற்றில் தேவன் தலையிடுவதில்லை, அவர் தன் திட்டத்தைக் கைவிடுவதில்லை அல்லது அவருடைய கிரியையைக் கைவிடுவதில்லை. தேவனுடைய திட்டம் மற்றும் எண்ணங்களின்படி உண்மைகள் இவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன. இதுவே வேதாகமத்தில் நாம் காண்கிறதாகும்: தேவன் ஈசாக்கை அவர் நிர்ணயித்த நேரத்தில் பிறக்கச் செய்தார். மனிதனுடைய குணமும் நடத்தையும் தேவனுடைய கிரியைக்குத் தடையாக இருந்தன என்பதை இந்த உண்மைகள் நிரூபிக்கின்றனவா? அவை தேவனுடைய கிரியைக்குத் தடையாக இருக்கவில்லை! தேவன் மீதான மனிதனுடைய சிறிய நம்பிக்கையும், தேவனைப் பற்றிய அவனது கருத்துக்களும் கற்பனைகளும் தேவனுடைய கிரியையைப் பாதித்ததா? இல்லை, அவை பாதிக்கவில்லை! கொஞ்சம் கூட பாதிக்கவில்லை! தேவனுடைய ஆளுகைத் திட்டத்தை எந்த மனிதனும், விஷயமும், சூழலும் பாதிக்காது. அவர் செய்யத் தீர்மானிக்கும் அனைத்தும் சரியான நேரத்தில் மற்றும் அவருடைய திட்டத்தின்படி நிறைவு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அவருடைய கிரியையில் எந்த மனிதனும் தலையிட முடியாது. மனிதனுடைய முட்டாள்தனம் மற்றும் அறியாமை ஆகியவற்றின் சில அம்சங்களையும், மனிதனுடைய எதிர்ப்பின் சில அம்சங்களையும், அவரை நோக்கிய கருத்துகளையும் தேவன் புறக்கணிக்கிறார். தாம் பொருட்படுத்தாமல் செய்ய வேண்டிய கிரியையை அவர் அவ்வாறு செய்கிறார். அது தேவனுடைய மனநிலையாகும். அது அவருடைய சர்வ வல்லமையின் பிரதிபலிப்பாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 33

ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடுகிறான்

ஆதி. 22:2-3  அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

ஆதி. 22:9-10  தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

தேவனுடைய ஆளுகை மற்றும் மனிதகுலத்திற்கான இரட்சிப்பின் கிரியையானது ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட்டதில் தொடங்குகிறது

ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுத்த பிறகு, தேவன் ஆபிரகாமுடன் பேசிய வார்த்தைகள் நிறைவேறின. தேவனுடைய திட்டம் இங்கே நிறுத்தப்பட்டது என்று அர்த்தமல்ல. மாறாக, மனிதகுலத்தை நிர்வகிப்பதற்கும் இரட்சிப்பதற்கும் தேவனுடைய அருமையான திட்டம் தொடங்கிவிட்டது என்று அர்த்தமாகும். ஆபிரகாமுக்கு ஒரு மகனை அவர் ஆசீர்வாதமாகக் கொடுத்தது அவருடைய ஒட்டுமொத்த ஆளுகைத் திட்டத்திற்கு ஒரு முன்னோடியாகும். அந்த நேரத்தில், ஆபிரகாம் ஈசாக்கை ஒப்புக்கொடுத்த தருணத்தில், சாத்தானுடனான தேவனுடைய யுத்தம் அமைதியாகத் தொடங்கியது என்பதை யார் அறிவார்கள்?

மனிதன் முட்டாள்தனமாக இருந்தால் தேவன் கவலைப்படுவதில்லை—மனிதன் உண்மையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறார்

அடுத்ததாக, தேவன் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்று பார்ப்போம். ஆதியாகமம் 22:2 ல் தேவன் ஆபிரகாமுக்கு பின்வரும் கட்டளையை வழங்கினார்: “உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு.” தேவனுடைய அர்த்தம் தெளிவாக இருந்தது: ஆபிரகாமிடம் அவன் நேசித்த அவனது ஒரே மகனான ஈசாக்கை அக்கினியில் பலியாகக் கொடுக்கச் சொன்னார். இன்று அதைப் பார்க்கும்போது, தேவனுடைய கட்டளை மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறதா? ஆம்! அந்த நேரத்தில் தேவன் செய்ததெல்லாம் மனிதனுடைய கருத்துக்களுக்கு முற்றிலும் முரணானது. அது மனிதனுக்குப் புரியவில்லை. அவர்களின் கருத்துக்களில், ஜனங்கள் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: ஒரு மனிதன் நம்பாதபோது, அது சாத்தியமற்றது என்று நினைத்தபோது, தேவன் அவனுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். அவன் ஒரு மகனைப் பெற்ற பிறகு, தேவன் அவனுடைய மகனைப் பலியிடச் சொன்னார். இது முற்றிலும் நம்பமுடியாததல்லவா! தேவன் உண்மையில் என்ன செய்ய விரும்பினார்? தேவனுடைய உண்மையான நோக்கம் என்ன? அவர் நிபந்தனையின்றி ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுத்தார், ஆனாலும் ஈசாக்கை நிபந்தனையற்ற பலி செய்யும்படி ஆபிரகாமிடம் கேட்டார். இது அதிகப்படியாக இருந்ததா? மூன்றாம் தரப்பினரின் பார்வையில், இது அதிகப்படியானது மட்டுமல்ல, “எந்தக் காரணமும் இல்லாமல் பிரச்சனையை ஏற்படுத்தும்” ஒரு விஷயமுமாகும். ஆனால் ஆபிரகாமோ தேவன் அதிகப்படியாக கேட்கிறார் என்று நம்பவில்லை. அவன் அதைப் பற்றி சிறு சிறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், அவன் தேவனைக் கொஞ்சம் சந்தேகப்பட்டாலும், பலி செய்ய அவன் தயாராகத்தான் இருந்தான். இந்தக் கட்டத்தில், ஆபிரகாம் தனது மகனை வழங்க தயாராக இருந்தான் என்பதை நிரூபிக்க நீ எதைப் பார்க்கிறாய்? இந்த வாக்கியங்களில் என்ன கூறப்படுகிறது? மூலமுதலான வசனம் பின்வரும் விவரங்களை வழங்குகிறது: “ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்” (ஆதி. 22:3). “தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்” (ஆதி. 22:9-10). ஆபிரகாம் தன் கரத்தை நீட்டி, தன் மகனைக் கொல்ல கத்தியை எடுத்தபோது, அவன் செய்த செயல்கள் தேவனால் காணப்பட்டதா? அவை காணப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே, ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட வேண்டும் என்று தேவன் கேட்டபோது, ஆபிரகாம் தன் மகனைக் கொல்ல கத்தியை உயர்த்தியபோது, ஆபிரகாமின் இருதயம் தேவனுக்கு முன்பாக இருந்தது. அவனுடைய முந்தைய முட்டாள்தனம், அறியாமை மற்றும் தேவனைப் பற்றிய அவனுடைய தவறான புரிதல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அந்த நேரத்தில் தேவனுக்காக ஆபிரகாமின் இருதயம் உண்மையாக, நேர்மையாக இருந்தது. அவன் உண்மையிலேயே தேவனால் கொடுக்கப்பட்ட மகன் ஈசாக்கை தேவனிடம் திருப்பித் தர முயற்சி செய்தான். அவரிடத்தில், தேவன் கீழ்ப்படிதலைக் கண்டார். தேவன் தாம் விரும்பிய கீழ்ப்படிதலைக் கண்டார்.

மனிதனைப் பொறுத்தவரையில், தேவன் புரிந்துகொள்ள முடியாத மற்றும் நம்பமுடியாத பலவற்றைச் செய்கிறார். தேவன் ஒருவரை இயக்க விரும்பினால், இந்தத் திட்டம் பெரும்பாலும் மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது மற்றும் மனிதனால் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் இந்த முரண்பாடு மற்றும் புரிந்துகொள்ள முடியாதத் தன்மைதான் துல்லியமாக தேவனுடைய சோதனை மற்றும் மனிதனுடைய சோதனையாக இருக்கிறது. இதற்கிடையில், தேவனுக்கான கீழ்ப்படிதலை ஆபிரகாம் தனக்குள்ளேயே நிரூபிக்க முடிந்தது. இது தேவனுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடிந்ததன் மிக அடிப்படையான நிபந்தனையாகும். அப்பொழுதுதான், ஆபிரகாமால் தேவனுடைய எதிர்பார்ப்புக்குக் கீழ்ப்படிய முடிந்தபோது தான், ஈசாக்கை ஒப்புக்கொடுத்தபோதுதான், தேவன் உண்மையிலேயே மனிதகுலத்திடம் உறுதியையும் ஒப்புதலையும் உணர்ந்தார்—தாம் தேர்ந்தெடுத்த ஆபிரகாமிடம் உணர்ந்தார். அப்போதுதான், தாம் தேர்ந்தெடுத்த இந்த மனிதர் தமது வாக்குத்தத்தையும் தம்முடைய அடுத்தடுத்த ஆளுகைத் திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடிய ஒரு தவிர்க்க முடியாத தலைவராக இருப்பார் என்பதில் தேவன் உறுதியாக இருந்தார். இது ஒரு சோதனை மற்றும் ஒரு தேர்வு என்றாலும், தேவன் மனநிறைவு அடைந்தார். மனிதன் தம்மீது வைத்திருக்கும் அன்பை உணர்ந்தார். மனிதனால் ஆறுதலடைந்தார். ஈசாக்கைக் கொல்ல ஆபிரகாம் கத்தியை உயர்த்திய தருணத்தில், தேவன் அவனைத் தடுத்தாரா? ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடுவதற்கு தேவன் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், ஈசாக்கின் உயிரைப் பறிக்கும் எண்ணம் தேவனுக்கு இல்லை. ஆகவே, தேவன் ஆபிரகாமைச் சரியான நேரத்தில் நிறுத்தினார். தேவனைப் பொறுத்தவரையில், ஆபிரகாமின் கீழ்ப்படிதல் ஏற்கனவே சோதனையில் தேர்ச்சி பெற்றது. ஆபிரகாம் செய்தது போதுமானதாகும். மேலும், அவர் செய்ய நினைத்தவற்றின் விளைவுகளை தேவன் ஏற்கனவே கண்டிருந்தார். இந்த முடிவு தேவனுக்குத் திருப்திகரமாக இருந்ததா? இந்த விளைவு தேவனுக்குத் திருப்திகரமாக இருந்தது என்றும், அது தேவன் விரும்பியது என்றும், தேவன் பார்க்க ஏங்கினார் என்றும் சொல்லலாம். இது உண்மையா? வெவ்வேறு சூழல்களில், தேவன் ஒவ்வொரு நபரையும் சோதிக்க வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார். ஆபிரகாமில் தேவன் தாம் விரும்பியதைக் கண்டார், ஆபிரகாமின் இருதயம் உண்மை என்றும், அவனுடைய கீழ்ப்படிதல் நிபந்தனையற்றது என்றும் அவர் கண்டார். தேவன் துல்லியமாக விரும்பியது இந்த “நிபந்தனையற்ற” ஒன்றுதான். ஜனங்கள் அடிக்கடி கூறுகிறார்கள், “நான் அதை ஏற்கனவே வழங்கியுள்ளேன். நான் ஏற்கனவே அதை மன்னித்துவிட்டேன்—தேவன் ஏன் என்னை இன்னும் திருப்திப்படுத்தவில்லை? அவர் ஏன் என்னைச் சோதனைகளுக்கு உட்படுத்துகிறார்? அவர் ஏன் என்னைச் சோதித்துக்கொண்டிருக்கிறார்?” இது ஓர் உண்மையை நிரூபிக்கிறது: தேவன் உன் இருதயத்தைக் காணவில்லை. உன் இருதயத்தைப் பெறவில்லை. அதாவது, ஆபிரகாம் தன் மகனை தன் கரத்தால் கொன்று, தேவனுக்கு வழங்குவதற்காகக் கத்தியை உயர்த்த முடிந்தபோது பார்த்த நேர்மையை, அவர் காணவில்லை. உன் நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை அவர் காணவில்லை. உன்னால் ஆறுதலடையவில்லை. அப்படியானால், தேவன் உன்னிடம் தொடர்ந்து முயற்சி செய்வது இயல்பானதாகும். இது உண்மையல்லவா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 34

ஆபிரகாமுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 22:16-18  உன் ஒரே புத்திரனாகிய உன் மகன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தை நீ செய்ததால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன் சந்ததியை வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியினர் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தமையால் உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று என்மீது ஆணையிட்டிருக்கிறேன் என்று யேகோவா சொல்கிறார் என்றார்.

இது ஆபிரகாமுக்கு தேவன் அளித்த ஆசீர்வாதத்தின் தடையற்ற விவரம் ஆகும். சுருக்கமாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் வளமிக்கதாகும்: ஆபிரகாமுக்கு தேவன் அளித்த ஈவுக்கான காரணமும், பின்னணியும், ஆபிரகாமுக்கு அவர் கொடுத்தது என்ன என்பதும் இதில் அடங்கும். தேவன் இந்த வார்த்தைகளை உச்சரித்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும், அதைப் போலவே அவருடைய வார்த்தைகளைக் கேட்கக்கூடியவர்களை அவர் பெற வேண்டும் என்பதற்கான அவருடைய ஏக்கத்தின் அவசரத்தையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில், தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுபவர்களிடம் தேவனுடைய மரியாதை மற்றும் மென்மையைக் காண்கிறோம். ஆகவே, ஜனங்களைப் பெறுவதற்கு அவர் செலுத்தும் விலைக்கிரையத்தையும், அவர்களைப் பெறுவதில் அவர் செலுத்தும் அக்கறையையும் சிந்தனையையும் நாம் காண்கிறோம். மேலும், “என்மீது ஆணையிட்டிருக்கிறேன்,” என்ற வார்த்தைகளைக் கொண்ட இந்த பத்தியில், அவருடைய ஆளுகைத் திட்டத்தின் இந்த கிரியையின் திரைக்குப் பின்னால் தேவன் மட்டுமே இருக்கிறார் என்ற உணர்வையும், தேவன் அனுபவிக்கும் கசப்பு மற்றும் வேதனையின் வல்லமைவாய்ந்த உணர்வையும், நமக்குத் தருகிறது. இது ஒரு சிந்தனையைத் தூண்டும் பத்தியாகும். பின்னர் வந்தவர்களுக்கு விஷேசமான முக்கியத்துவத்தைக் கொடுத்தது. மேலும், அவர்கள் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியது.

மனிதன் தன்னுடைய நேர்மை மற்றும் கீழ்ப்படிதல் காரணமாக தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறான்

இங்கே நாம் பெரியது என்று படித்தது ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதமா? அது எவ்வளவு பெரியது? இங்கே ஒரு முக்கிய வாக்கியம் உள்ளது: “உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும்.” இந்த வாக்கியம் ஆபிரகாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள் ஆபிரகாமுக்கு முன்னும் பின்னும் வந்த எவருக்கும் வழங்கப்படாத ஆசீர்வாதங்களாகும் என்பதைக் காட்டுகிறது. தேவன் கேட்டபடி, ஆபிரகாம் தனது ஒரே மகனை—தன் அன்புக்குரிய ஒரே மகனை—தேவனிடம் திருப்பி அனுப்ப தேவன் கேட்ட போது (இங்கே “பலி” என்ற வார்த்தையை நாம் பயன்படுத்த முடியாது; அவர் தனது மகனை தேவனிடம் திருப்பி அனுப்பினார் என்று நாம் கூற வேண்டும்), ஆபிரகாம் ஈசாக்கை வழங்க தேவன் அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர் அவனை ஆசீர்வதித்தார். எந்த வாக்குத்தத்தத்தால் அவர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார்? தேவன் ஆபிரகாமின் சந்ததியைப் பெருக்குவதாக வாக்களித்து அவனை ஆசீர்வதித்தார். அவர்கள் எத்தனை பேராகப் பெருக்கம் பெறப்போகிறார்கள்? வேதவாக்கியங்கள் பின்வரும் பதிவை வழங்குகின்றன: “உன் சந்ததியை வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியினர் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும்.” இந்த வார்த்தைகளை தேவன் உச்சரித்த சூழல் என்ன? அதாவது, ஆபிரகாம் தேவனுடைய ஆசீர்வாதங்களை எவ்வாறு பெற்றான்? தேவன் வேதவசனங்களில் சொல்வதைப் போலவே அவர் அவற்றைப் பெற்றான்: “நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தமையால்.” அதாவது, ஆபிரகாம் தேவனுடைய கட்டளையைப் பின்பற்றியதால், தேவன் சொன்ன, கேட்ட மற்றும் கட்டளையிட்ட எல்லாவற்றையும் சிறிதளவிலும் காரணம் சொல்லாமல் செய்ததால், தேவன் அவனுக்கு அத்தகைய வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தத்தில் ஒரு முக்கியமான வாக்கியம் உள்ளது. அது அந்த நேரத்தில் தேவனுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிறது. நீங்கள் அதைக் கண்டீர்களா? “என்மீது ஆணையிட்டிருக்கிறேன்.” என்ற தேவனுடைய வார்த்தைகளுக்கு நீங்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். அவை சொல்வது என்னவென்றால், தேவன் இந்த வார்த்தைகளை உச்சரித்தபோது, அவர் தன் மீதே சத்தியம் செய்தார் என்பதாகும். ஜனங்கள் சத்தியம் செய்யும்போது என்ன சத்தியம் செய்கிறார்கள்? அவர்கள் பரலோகத்தின் மீது சத்தியம் செய்கிறார்கள். அதாவது, அவர்கள் தேவனுக்கு சத்தியம் செய்கிறார்கள். தேவனால் சத்தியம் செய்கிறார்கள். தேவன் தன் மீதே சத்தியம் செய்த நிகழ்வு ஜனங்களுக்கு அதிகம் புரிவதில்லை. ஆனால் நான் உங்களுக்குச் சரியான விளக்கத்தை அளிக்கும்போது நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அவருடைய வார்த்தைகளை மட்டுமே கேட்க முடியும், ஆனால், அவருடைய இருதயத்தைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு மனிதனை எதிர்கொண்டதால், தேவன் மீண்டும் தனிமையாகவும் இழப்பாகவும் உணர்ந்தார். விரக்தியில்—ஆழ்மனதிலிருந்து—தேவன் மிகவும் இயல்பான ஒன்றைச் செய்தார் என்று சொல்லலாம்: தேவன் தம்முடைய இருதயத்தின் மீது கை வைத்து, ஆபிரகாமுக்கு இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுக்கும் போது தனக்குத்தானே உரையாற்றிக் கொண்டார். இந்த மனிதனிடம் கேட்டதிலிருந்து தேவன் “என்மீது ஆணையிட்டிருக்கிறேன்.” என்று சொன்னார். தேவனுடைய செயல்களின் மூலம், உன்னைப் பற்றியும் நீ நினைக்கலாம். உன் இருதயத்தில் கை வைத்து உன்னுடன் பேசும்போது, நீ என்ன சொல்கிறாய் என்பது பற்றிய தெளிவான யோசனை உனக்கு இருக்கிறதா? உன் அணுகுமுறை உண்மையானதா? உன் இருதயத்துடன் நேர்மையாக பேசுகிறாயா? இவ்வாறு, தேவன் ஆபிரகாமுடன் பேசியபோது, அவர் மிகுந்த அக்கறையுடனும் நேர்மையுடனும் இருந்தார் என்பதை இங்கே காண்கிறோம். ஆபிரகாமுடன் பேசி ஆசீர்வதிக்கும் அதே நேரத்தில், தேவன் தனக்குள்ளாகவே பேசிக் கொண்டிருந்தார். அவர் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டிருந்தார். நான் ஆபிரகாமை ஆசீர்வதிப்பேன், அவனுடைய சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரையின் மணலைப் போலவும் ஏராளமாகப் பெருகப்பண்ணுவேன். ஏனென்றால், அவன் என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான். அவனைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். “என்மீது ஆணையிட்டிருக்கிறேன்,” என்று தேவன் சொன்னபோது, ஆபிரகாமில் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை உருவாக்கப்போவதாக தேவன் தீர்மானித்தார். அதன்பிறகு அவர் இந்த ஜனங்களை தனது கிரியையால் விரைவாக வழிநடத்தினார். அதாவது, தேவனுடைய ஆளுகையின் கிரியையையும், தேவனுடைய கிரியையையும், தேவனால் வெளிப்படுத்தப்பட்ட கிரியையும் ஆபிரகாமின் சந்ததியினரை தேவன் ஏற்றுக்கொள்ளச் செய்வார். அது ஆபிரகாமில் தொடங்கி ஆபிரகாமின் சந்ததியினரில் தொடரும், இதன் மூலமாக, தேவன் மனிதனை இரட்சிக்க விரும்புகிறார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள், இது ஒரு பாக்கியம் அல்லவா? மனிதனைப் பொறுத்தவரையில் இதைவிட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை. இது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட விஷயம் என்று கூறலாம். ஆபிரகாம் பெற்ற ஆசீர்வாதம் அவருடைய சந்ததியினரின் பெருக்கமல்ல, ஆனால் அவருடைய ஆளுகை, அவருடைய கட்டளை மற்றும் ஆபிரகாமின் சந்ததியினரில் அவர் செய்த கிரியைகள் ஆகியவற்றின் தேவனுடைய சாதனையாகும். இதன் அர்த்தம் ஆபிரகாம் பெற்ற ஆசீர்வாதங்கள் தற்காலிகமானவை அல்ல, ஆனால் தேவனுடைய ஆளுகைத் திட்டம் முன்னேறும்போது தொடர்வதாகும். தேவன் பேசியபோது, தேவன் தன் மீதே சத்தியம் செய்தபோது, அவர் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தார். அந்த தீர்மானத்தின் செயல்முறை உண்மையா? அது உண்மையானதா? அந்தக் காலத்திலிருந்தே, அவருடைய முயற்சிகள், அவர் செலுத்திய விலைக்கிரயம், தேவனும் தேவனிடம் உள்ளவையும், அவருடைய அனைத்தும், அவருடைய ஜீவிதமும் ஆபிரகாமுக்கும் ஆபிரகாமின் சந்ததியினருக்கும் வழங்கப்படும் என்று தேவன் தீர்மானித்தார். இந்த கூட்டத்திடமிருந்து தொடங்கி, அவர் தனது கிரியைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் மனிதன் தம்முடைய ஞானத்தையும், அதிகாரத்தையும், வல்லமையையும் காண அனுமதிக்க வேண்டும் என்பதையும் தேவன் தீர்மானித்தார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 35

ஆபிரகாமுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 22:16-18  உன் ஒரே புத்திரனாகிய உன் மகன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தை நீ செய்ததால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன் சந்ததியை வானத்தின் மீதிருக்கும் நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் இருக்கும் மணல் போலவும் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியினர் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தமையால் உன்னுடைய சந்ததியினால் பூமியிலுள்ள சகல நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று என்மீது ஆணையிட்டிருக்கிறேன் என்று யேகோவா சொல்கிறார் என்றார்.

தேவனை அறிந்தவர்களையும் மற்றும் அவருக்குச் சாட்சியளிக்க வல்லவர்களையும் ஆதாயப்படுத்துவதே தேவனுடைய மாறாத விருப்பமாய் இருக்கிறது

தனக்குள் பேசும் அதே நேரத்தில், தேவன் ஆபிரகாமுடனும் பேசினார். ஆனால் அந்த நேரத்தில், தேவன் அவனுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களைக் காதால் கேட்பதைத் தவிர, அவருடைய எல்லா வார்த்தைகளிலும் தேவனுடைய உண்மையான விருப்பங்களை ஆபிரகாம் புரிந்துகொள்ள முடிந்ததா? அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை! எனவே, அந்த நேரத்தில், தேவன் தனக்குள்ளே சத்தியம் செய்தபோது, அவருடைய இருதயம் இன்னும் தனிமையாகவும் துக்கமாகவும் இருந்தது. அவர் நினைத்ததையும் திட்டமிட்டதையும் புரிந்துகொள்ளவோ உணர்ந்துகொள்ளவோ கூடிய ஒரு மனிதன் இன்னும் இல்லை. அந்த நேரத்தில், ஆபிரகாம் உட்பட எவரும் அவருடன் தன்னம்பிக்கையுடன் பேச முடியவில்லை. அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வதில் எவரும் அவருடன் ஒத்துழைக்க முடியவில்லை. மேலோட்டமாக பார்க்கையில், தேவன் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியக்கூடிய ஒருவனான ஆபிரகாமை ஆதாயம் செய்தார். ஆனால் உண்மையில், தேவனைப் பற்றி இந்த மனிதனுக்கு அறிவு எதுவும் இல்லை. தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்திருந்தாலும், இன்னும் தேவனுடைய இருதயம் திருப்தி அடையவில்லை. தேவன் திருப்தி அடையவில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன? அவருடைய ஆளுகை இப்போதே தொடங்கிவிட்டது என்பதே இதன் அர்த்தமாகும். அவர் ஆதாயப்படுத்த விரும்பிய ஜனங்கள், அவர் பார்க்க விரும்பிய ஜனங்கள், அவர் நேசித்த ஜனங்கள் அவரிடமிருந்து இன்னும் தொலைவில் இருந்தனர். அவருக்கு நேரம் தேவைப்பட்டது. அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், அவருடைய தேவை என்ன அல்லது அவர் எதைப் பெற விரும்புகிறார் அல்லது அவர் எதற்காக ஏங்குகிறார் என்பதைத் தேவனைத் தவிர, எவரும் அறியவில்லை. எனவே, தேவன் மிகவும் உற்சாகமாக உணர்ந்த அதே நேரத்தில், இருதயம் கனமாக இருப்பதாகவும் உணர்ந்தார். ஆயினும், அவர் தனது முயற்சிகளை நிறுத்தவில்லை. தாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அடுத்த கட்டத்தை அவர் தொடர்ந்து திட்டமிட்டார்.

ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்ததால், தேவன் ஆபிரகாமுக்குப் பெரும் ஆசீர்வாதங்களை வழங்கினார். மேலோட்டமாகப் பார்க்கையில், இது சாதாரணமான மற்றும் இயல்பான ஒரு விஷயமாகத் தோன்றினாலும், அதில் நாம் தேவனுடைய இருதயத்தைக் காண்கிறோம்: தேவன் குறிப்பாக மனிதனுடைய கீழ்ப்படிதலைப் பொக்கிஷமாகக் கருதுகிறார். மேலும், தேவனைப் பற்றிய மனிதனுடைய புரிதலையும், அவர் மீதான அவனுடைய நேர்மையையும் மதிக்கிறார். இந்த நேர்மையை தேவன் எவ்வளவாக மதிக்கிறார்? அவர் அதை எவ்வளவு மதிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். எவரும் அதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். தேவன் ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். அந்த மகன் வளர்ந்ததும், தேவன் அந்த மகனைத் தமக்கு வழங்கும்படி ஆபிரகாமிடம் கேட்டார். ஆபிரகாம் தேவனுடைய கட்டளையில் சிறிதும் குறைவில்லாமல் பின்பற்றினான். அவன் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவனுடைய நேர்மையானது தேவனை அசைத்தது. மேலும் அது தேவனால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது. தேவன் அதை எவ்வளவாகப் பத்திரப்படுத்தி வைத்தார்? அவர் ஏன் அதைப் பத்திரப்படுத்தினார்? தேவனுடைய வார்த்தைகளை யாரும் புரிந்துகொள்ளாத அல்லது அவருடைய இருதயத்தைப் புரிந்துகொள்ளாத ஒரு நேரத்தில், ஆபிரகாம் வானத்தை உலுக்கி பூமியை நடுங்க வைக்கும் ஒரு காரியத்தைச் செய்தான். மேலும், தேவனுக்கு அதற்கு முன்பு இல்லாத வகையில் அது திருப்தி உணர்வை ஏற்படுத்தியது. அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியக்கூடிய ஒருவரை ஆதாயம் செய்வதில் உள்ள மகிழ்ச்சியை தேவனுக்குக் கொடுத்தது. இந்தத் திருப்தியும் மகிழ்ச்சியும் தேவனுடைய கரத்தால் படைக்கப்பட்ட ஓர் உயிரினத்திலிருந்து வந்தது. மனிதன் தேவனுக்கு வழங்கிய முதல் “பலி” இதுதான். மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து, தேவனால் மிகவும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட ஒன்றாகும். இந்தப் பலிக்காகக் காத்திருப்பது தேவனுக்குச் சிரமமானதாக இருந்தது. தாம் படைத்த மனிதரிடமிருந்து பெறும் மிக முக்கியமான பரிசாக இதைக் கருதினார். இது தேவனுடைய முயற்சிகளின் முதல் பலனையும் அவர் செலுத்திய விலைக்கிரயத்தையும் காட்டியது. மனிதகுலத்தின் விசுவாசத்தை தேவன் பார்க்க அது அனுமதித்தது. அதன்பிறகு, அத்தகைய மனிதர்களில் ஒரு கூட்டம் அவருடன் இணையவும், அவரை நேர்மையுடன் நடத்தவும், அவரை உண்மையாகக் கவனிக்கவும் தேவனிடம் இன்னும் பெரிய ஆவல் இருந்தது. ஆபிரகாம் ஜீவிப்பார் என்று தேவன் நம்பினார். ஏனென்றால், ஆபிரகாமைப் போன்ற ஓர் இருதயம் அவருடன் இருக்க வேண்டும் என்றும் தனது தொடர்ச்சியான ஆளுகையில் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். தேவன் விரும்பினாலும், அது ஓர் ஆசை மற்றும் யோசனை மட்டுமே—ஏனெனில் ஆபிரகாம் வெறுமனே அவருக்குக் கீழ்ப்படியக்கூடிய ஒரு மனிதனாக, தேவனைப் பற்றிய சிறிதளவு புரிதலோ அறிவோ இல்லாமல் இருந்தான். மனிதனிடம் தேவன் எதிர்பார்க்கும் தரத்தை விட மிகக் குறைவானவன் ஆபிரகாம். அதாவது: தேவனை அறிவது, தேவனுக்குச் சாட்சி அளிப்பது, மற்றும் தேவனுடன் ஒருமனதாக இருப்பது ஆகியவையாகும். எனவே, ஆபிரகாமால் தேவனுடன் நடக்க முடியவில்லை. ஆபிரகாம் ஈசாக்கைப் பலி கொடுக்கையில் ஆபிரகாமின் நேர்மையையும் கீழ்ப்படிதலையும் தேவன் கண்டார். மேலும், ஆபிரகாம் மீதான தேவனுடைய சோதனையில் அவன் உறுதியாய் நிலைத்து நின்றிருந்தததைக் கண்டார். தேவன் அவருடைய நேர்மையையும் கீழ்ப்படிதலையும் ஏற்றுக்கொண்ட போதிலும், அவன் தேவனுடைய நம்பிக்கைக்குரியவனாகவும், தேவனை அறிந்த மற்றும் புரிந்துகொண்ட ஒருவனாகவும், தேவனுடைய மனநிலையைப் பற்றி அறிந்த ஒருவனாகவும் மாறத் தகுதியற்றவனாக இருந்தார். அவன் தேவனுடன் ஒரே மனநிலையில் இருப்பதிலிருந்தும் தேவனுடைய சித்தத்தைச் செய்வதிலிருந்தும் வெகு தொலைவில் இருந்தான். எனவே, தம்முடைய இருதயத்தில், தேவன் இன்னும் தனிமையாகவும் கவலையுடனும் இருந்தார். எவ்வளவு தனிமையான மற்றும் ஆர்வமுள்ள தேவனாக மாறினாரோ, அவ்வளவு சீக்கிரமாக அவர் தனது ஆளுகையைத் தொடர வேண்டியிருந்தது. அவருடைய ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றவும், விரைவில் அவருடைய சித்தத்தை அடையவும் ஒரு கூட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இது தேவனுடைய ஆசை. இது ஆதி காலம் முதல் இன்று வரை மாறாமல் உள்ளது. ஆதியில் அவர் மனிதனைப் படைத்ததிலிருந்து, தேவன் ஜெயம் கொள்கிறவர்களுக்காக ஏங்குகிறார். அவருடன் நடக்கும், அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ளும், அறிந்துகொள்ளும் மற்றும் உணர்ந்துகொள்ளும் மனிதருக்காக ஏங்குகிறார். தேவனுடைய இந்த ஆசை ஒருபோதும் மாறவில்லை. அவர் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதைப் பொருட்படுத்தாமல், முன்னோக்கிச் செல்லும் பாதை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அது எவ்வளவு தூரமாக இருந்தாலும், தேவன் ஒருபோதும் மனிதனுக்கான எதிர்பார்ப்புகளை மாற்றவோ கைவிடவோ இல்லை. இப்போதும் இதை நான் சொல்லியிருக்கிறேன். தேவனுடைய சித்தத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் உணர்ந்தவை மிகவும் ஆழமானவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைப் படிப்படியாக புரிந்துகொள்ள முடியும்!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 36

தேவன் சோதோமை அழிக்க வேண்டும் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 18:26  அப்பொழுது யேகோவா, சோதோமில் நான் ஐம்பது நீதிமான்களை நகரத்துக்குள் கண்டால், அவர்கள் நிமித்தம் நான் எல்லா ஸ்தலங்களையும் இரட்சிப்பேன் என்றார்.

ஆதி. 18:29  அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:30  அப்பொழுது அவன்: முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:31  அப்பொழுது அவன்: இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:32  அப்பொழுது அவன்: பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: அதை அழிப்பதில்லை என்றார்.

தேவன் தனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுபவர்களிடம் மட்டுமே அக்கறை காட்டுகிறார்

மேலே உள்ள பத்திகளில் பல குறிப்பு வார்த்தைகள், அதாவது எண்கள் உள்ளன. முதலாவதாக, யேகோவா நகரத்திற்குள் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர் முழு இடத்தையும் அழிக்காமல் விட்டுவிடுவதாகச் சொன்னார். அதாவது அவர் நகரத்தை அழிக்க மாட்டார். உண்மையில், சோதோமுக்குள் ஐம்பது நீதிமான்கள் இருந்தார்களா? இல்லை. உடனே, ஆபிரகாம் தேவனிடம் என்ன சொன்னான்? அவன், ஒருவேளை அங்கு நாற்பது நீதிமான்கள் இருந்தால் என்று கேட்டான். நான் அதை அழிக்கமாட்டேன் என்று தேவன் சொன்னார். அடுத்ததாக, ஆபிரகாம், அங்கே முப்பது பேர் காணப்பட்டால் என்று கேட்டான். நான் அதை அழிக்கமாட்டேன் என்று தேவன் சொன்னார். அவன், இருபது பேர் காணப்பட்டால், என்று கேட்டான். நான் அதை அழிக்கமாட்டேன் என்று தேவன் சொன்னார். அவன், பத்து என்று கேட்டான். நான் அதை அழிக்கமாட்டேன் என்று தேவன் சொன்னார். உண்மையில், நகரத்திற்குள் பத்து நீதிமான்கள் இருந்தார்களா? பத்து பேர்கூட இல்லை—ஆனால் ஒருவன் இருந்தான். அவன் யார்? அவன்தான் லோத்து. அந்த நேரத்தில், சோதோமில் ஒரே ஒரு நீதியுள்ள மனிதன் மட்டுமே இருந்தான். ஆனால் இந்த எண்ணிக்கையில் தேவன் மிகவும் கடுமையானவரா அல்லது வற்புறுத்தினாரா? இல்லை! ஆகவே, “நாற்பது பேர் காணப்பட்டால்?” “முப்பது பேர் காணப்பட்டால்?” “பத்து பேர் காணப்பட்டால்?” என்று மனிதன் கேட்டுக்கொண்டே இருந்தபோது, தேவன், “பத்து பேர் இருந்தாலும்கூட நான் நகரத்தை அழிக்க மாட்டேன். நான் அதை விட்டுவிடுவேன். இந்தப் பத்துப் பேருடன் மற்றவர்களையும் மன்னிப்பேன்.” பத்துப் பேர் மட்டுமே இருந்திருந்தால், அது இரக்கம் பெற்றிருக்கும். ஆனால் உண்மையில், சோதோமில் அந்த எண்ணிக்கையிலான நீதிமான்கள் கூட இல்லை என்பது தெரிந்தது. அப்படியானால், அந்த நகரத்து ஜனங்களின் பாவம் மற்றும் தீமையின் நிமித்தமாக அதை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக தேவனுடைய பார்வையில் அது இருந்தது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஐம்பது நீதிமான்கள் இருந்தால் நகரத்தை அழிக்க மாட்டேன் என்று சொன்னபோது தேவன் எதைக் குறிப்பிட்டார்? இந்த எண்கள் தேவனுக்கு முக்கியமல்ல. முக்கியமானது என்னவென்றால், அவர் விரும்பிய நீதிமான்கள் அந்த நகரத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பதுதான். நகரத்தில் ஒரு நீதியுள்ள மனிதன் இருந்தால், தேவன் நகரத்தை அழிப்பதன் மூலமாக அவர்களைத் தீங்குக்குள்ளாக்க அவர் அனுமதிக்க மாட்டார். இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் நகரத்தை அழிக்கப் போகிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அதற்குள் எத்தனை நீதிமான்கள் இருக்கிறார்கள், தேவன் இந்தப் பாவமான நகரத்தைச் சபித்து மரணதண்டனை கொடுக்க வேண்டும், அழிக்க வேண்டும், கண்களின் முன்னிருந்து மறைக்க வேண்டும் என்பவற்றைப் பொருட்படுத்தாமல் தேவனுக்கு நீதிமான்கள் இருக்க வேண்டும். யுகத்தைப் பொருட்படுத்தாமல், மனிதகுலத்தின் வளர்ச்சியின் கட்டத்தைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய மனப்பான்மை மாறுவதில்லை: அவர் தீமையை வெறுக்கிறார், அவர் தமது பார்வையில் நீதியுள்ளவர்கள் மீது அக்கறைக் காட்டுகிறார். தேவனுடைய இந்தத் தெளிவான மனப்பான்மை தேவனுடைய சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாடாகும். நகரத்திற்குள் ஒரு நீதியுள்ள மனிதன் மட்டுமே இருந்ததால், தேவன் தயங்கவில்லை. இறுதி முடிவாக சோதோம் தவிர்க்க முடியாமல் அழிக்கப்பட வேண்டியிருந்தது. இதில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? அந்த யுகத்தில், ஒரு நகரத்திற்குள் ஐம்பது நீதிமான்கள் இருந்தால் தேவன் அழிக்க மாட்டார், அல்லது பத்துப் பேர் இருந்தாலும் அழிக்க மாட்டார். அதாவது தேவனை வணங்கி ஆராதிக்க முடிந்த ஒரு சில ஜனங்கள் நிமித்தமாக தேவன் மன்னிப்பதற்கும் மனிதகுலத்திடம் சகிப்புத்தன்மையுடன் இருப்பதற்கும், அல்லது வழிகாட்டுதலின் கிரியையைச் செய்வதற்கும் முடிவு செய்கிறார். தேவன் மனிதனுடைய நீதியுள்ள கிரியைகளில் பெரும் பங்கை வைக்கிறார். அவரை வணங்கக்கூடிய மனிதர்களிடத்தில் அவர் பெரும் பங்கை வைக்கிறார். மேலும், அவருக்கு முன்பாக நல்ல கிரியைகளைச் செய்யக்கூடியவர்களை மதிக்கிறார்.

ஆதி காலம் முதல் இன்று வரை, தேவன் சத்தியத்தைச் சொல்வதை, அல்லது தேவனுடைய வழியைப் பற்றி யாரிடமாவது பேசுவதைப் பற்றி வேதாகமத்தில் நீங்கள் எப்பொழுதாவது படித்திருக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை. மனிதன் என்ன செய்ய வேண்டும் என்று ஜனங்களுக்கு சொல்லும் மனிதனுக்கான தேவனுடைய வார்த்தைகளை மட்டுமே நாம் வாசித்துள்ளோம். சிலர் சென்று அதைச் செய்தார்கள், சிலர் செய்யாதிருந்தார்கள். சிலர் நம்பினர், சிலர் நம்பாதிருந்தார்கள். அது அவ்வளவுதான். ஆகவே, அந்த யுகத்தின் நீதிமான்கள்—தேவனுடைய பார்வையில் நீதிமான்களாகக் காணப்பட்டவர்கள்—தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை மனிதர்களிடையே நிறைவேற்றிய ஊழியர்களாக இருந்தார்கள். அத்தகையவர்களை, தேவனை அறிந்தவர்கள் என்று அழைக்கலாமா? தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட ஜனங்கள் என்று அவர்களை அழைக்க முடியுமா? இல்லை, அவர்களை அழைக்க முடியாது. ஆகவே, அவர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய பார்வையில் இந்த நீதிமான்கள் தேவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர்களா? அவர்களை தேவனுடைய சாட்சிகள் என்று அழைக்க முடியுமா? நிச்சயமாக இல்லை! அவர்கள் தேவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் சாட்சிகள் என்று அழைக்கப்படுவதற்கு நிச்சயமாகத் தகுதியற்றவர்கள். இந்நிலையில், தேவன் அத்தகையவர்களை எவ்வாறு அழைத்தார்? வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில், தேவன் அவர்களை “என் ஊழியக்காரன்” என்று அழைத்த பல சம்பவங்கள் உள்ளன. அதாவது, அந்த நேரத்தில், தேவனுடைய பார்வையில் இந்த நீதிமான்கள் தேவனுடைய ஊழியர்களாக இருந்தார்கள். அவர்கள் பூமியில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்கள். இந்த முறையை தேவன் எப்படி நினைத்தார்? அவர் ஏன் அவர்களை அப்படி அழைத்தார்? தேவன் ஜனங்களை அழைக்கும் முறைக்கு அவருடைய இருதயத்தில் தரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? நிச்சயமாக இருக்கின்றன. தேவன் ஜனங்களை நீதிமான்கள், பரிபூரணர், நேர்மையானவர் அல்லது ஊழியர்கள் என்று அழைத்தாலும், அவரிடம் தரநிலைகள் உள்ளன. அவர் ஒருவனைத் தனது ஊழியக்காரன் என்று அழைக்கும்போது, அந்த மனிதன் தேவனுடைய தூதர்களைப் பெற முடியும், அவருடைய கட்டளைகளைப் பின்பற்ற முடியும், தூதர்களால் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்ற முடியும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அந்த மனிதன் எதைச் செய்கிறான்? தேவன் மனிதனுக்குக் கட்டளையிட்டதைப் பூமியில் செய்கிறான். அந்த நேரத்தில், தேவன் மனிதனைப் பூமியில் செய்யும்படியாகச் சொன்னதை தேவனுடைய வழி என்று அழைக்க முடியுமா? இல்லை, அழைக்க முடியாது. அந்த நேரத்தில், மனிதன் சில எளிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே தேவன் கேட்டார். அவர் ஒரு சில எளிய கட்டளைகளைச் சொன்னார். மனிதனிடம் அதைச் செய்யும்படி சொன்னார். அதற்கு மேலாக எதுவும் கேட்கவில்லை. தேவன் தனது திட்டத்தின்படி செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஏனென்றால், அந்த நேரத்தில், பல நிபந்தனைகள் இன்னும் இல்லை, நேரம் இன்னும் வரவில்லை, மனிதர்களுக்கு தேவனுடைய வழி கடினமாக இருப்பதால் அவருடைய வழி அவருடைய இருதயத்திலிருந்து இன்னும் வெளிவரத் தொடங்கவில்லை. தாம் பேசிய நீதியுள்ள ஜனங்களை தேவன் கண்டார். அவர்கள் முப்பது அல்லது இருபது பேராக இருந்தாலும் அவர்களை அவருடைய ஊழியர்களாக நாம் இங்கே பார்க்கிறோம். தேவனுடைய தூதர்கள் இந்த அடியார்கள் மீது வந்தபோது, அவர்களை ஆதாயம் செய்யவும், அவர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றவும், அவர்களின் வார்த்தைகளின்படி செயல்படவும் முடிந்தது. தேவனுடைய பார்வையில் ஊழியர்களாக இருந்தவர்களால் செய்யப்பட வேண்டிய மற்றும் அடையப்பட வேண்டிய ஒன்று துல்லியமாக இதுவே. தேவன் ஜனங்களுக்காக வேண்டுகோள் விடுப்பதில் நியாயமானவராக இருக்கிறார். அவர்கள் இப்போது நீங்கள் இருப்பதைப் போலவே இருந்ததாலோ, அவர்கள் அதிகமாகப் பிரசங்கத்தைக் கேட்டு, தேவன் என்ன செய்வார் என்று அறிந்திருந்து, தேவனுடைய சித்தத்தை அதிகம் புரிந்துகொண்டு, அவருடைய நிர்வாகத் திட்டத்தைப் புரிந்துகொண்டதாலோ அல்ல, மாறாக அவர்கள் தங்கள் மனிதத்தன்மையில் நேர்மையானவர்களாக இருந்ததாலும் அவர்களால் தேவனுடைய வார்த்தைகளுக்கு இணங்க முடிந்தாலுமே அவர் அவர்களை தமது ஊழியர்கள் என்று அழைத்தார் தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டபோது, தாங்கள் செய்வதை ஒதுக்கி வைத்துவிட்டு, தேவன் கட்டளையிட்டதை நிறைவேற்ற முடிந்தது. ஆகவே, தேவனைப் பொறுத்தவரையில், ஊழியக்காரன் என்ற புனைப்பெயரில் உள்ள மற்றொரு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் பூமியில் அவருடைய கிரியைக்கு ஒத்துழைத்தார்கள், அவர்கள் தேவனுடைய தூதர்களாக இல்லாவிட்டாலும், அவர்கள் பூமியில் தேவனுடைய வார்த்தைகளை நிறைவேற்றுபவர்களாகவும் செயல்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள் என்பதாகும். இந்நிலையில், இந்த ஊழியர்கள் அல்லது நீதிமான்கள் தேவனுடைய இருதயத்தில் அதிக இடத்தைக் கொண்டிருந்ததை நீங்கள் காண்கிறீர்கள். தேவன் பூமியில் இறக்கவிருந்த கிரியையானது ஜனங்கள் இல்லாமல் அவருடன் ஒத்துழைக்க முடியாது. தேவனுடைய ஊழியர்களின் பங்கை தேவனுடைய தூதர்களால் ஈடுசெய்ய முடியாது. இந்த ஊழியர்களுக்கு தேவன் கட்டளையிட்ட ஒவ்வொரு கிரியையும் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, அவரால் அவர்களை இழக்க முடியவில்லை. தேவனுடனான இந்த ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், மனிதர்களிடையே அவர் செய்த கிரியைகள் ஸ்தம்பித்திருக்கும். இதன் விளைவாக தேவனுடைய நிர்வாகத் திட்டமும் தேவனுடைய நம்பிக்கையும் வீணாகியிருக்கும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 37

தேவன் சோதோமை அழிக்க வேண்டும் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

ஆதி. 18:26  அப்பொழுது யேகோவா, சோதோமில் நான் ஐம்பது நீதிமான்களை நகரத்துக்குள் கண்டால், அவர்கள் நிமித்தம் நான் எல்லா ஸ்தலங்களையும் இரட்சிப்பேன் என்றார்.

ஆதி. 18:29  அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:30  அப்பொழுது அவன்: முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:31  அப்பொழுது அவன்: இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி. 18:32  அப்பொழுது அவன்: பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: அதை அழிப்பதில்லை என்றார்.

தேவன் தான் அக்கறை கொண்டவர்களிடம் மிகுந்த இரக்கமுள்ளவராகவும், தாம் வெறுத்து ஒதுக்குகிறவர்கள் மீது மிகுந்த கோபம் கொண்டவராகவும் இருக்கிறார்

வேதாகமத்தின் விவரங்களின்படி, சோதோமில் தேவனுக்கான பத்து ஊழியர்கள் இருந்தார்களா? இல்லை, இல்லை! நகரம் தேவனால் இரட்சிக்கப்படுவதற்கு தகுதியானதாக இருந்ததா? நகரத்தில் ஒரு மனிதன் மட்டுமே—லோத்து மட்டுமே—தேவனுடைய தூதர்களைப் பெற்றான். இதன் உட்பொருள் என்னவென்றால், அந்த நகரத்தில் தேவனுடைய ஊழியக்காரனாக ஒருவன் மட்டுமே இருந்தான். ஆகவே, லோத்தைக் காப்பாற்றி பின் சோதோம் நகரத்தை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லாதிருந்தது. மேலே மேற்கோள் காட்டிய ஆபிரகாமுக்கும் தேவனுக்கும் இடையிலான உரையாடல்கள் சாதாரணமானதாகத் தோன்றலாம், ஆனால் அவை மிகவும் ஆழமான ஒன்றை விளக்குகின்றன: தேவனுடைய செயல்களுக்குக் கொள்கைகள் உள்ளன, ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் நீண்ட நேரம் கண்காணிக்கவும் சிந்திக்கவும் செய்வார். அவர் சரியான நேரத்திற்கு முன்பதாக எந்த முடிவுகளையும் எடுக்கமாட்டார் அல்லது எந்த முடிவுகளுக்கும் செல்லமாட்டார். சோதோமை அழிக்க தேவன் எடுத்த முடிவு சிறிதும் தவறில்லை என்பதாக ஆபிரகாமுக்கும் தேவனுக்கும் இடையிலான உரையாடல்கள் காட்டுகின்றன. ஏனென்றால், நகரத்தில் நாற்பது நீதிமான்களோ, முப்பது நீதிமான்களோ, இருபது நீதிமான்களோ இல்லை என்று தேவன் ஏற்கனவே அறிந்திருந்தார். பத்துப் பேர் கூட இல்லை. நகரத்தில் நீதியுள்ள மனிதராக ஒரே ஒரு லோத்து மட்டுமே இருந்தான். சோதோமில் நடந்தவை மற்றும் அதன் சூழ்நிலைகள் அனைத்தும் தேவனால் கவனிக்கப்பட்டன. தேவனுக்கு அவை நன்றாகத் தெரிந்திருந்தன. இதனால், அவருடைய முடிவு தவறாக இருக்க முடியாது. இதற்கு நேர்மாறாக, தேவனுடைய சர்வவல்லமையுடன் ஒப்பிடும்போது, மனிதன் மிகவும் உணர்ச்சியற்றவனாகவும், முட்டாள்தனமாகவும், அறிவற்றவனாகவும், குறுகிய பார்வை கொண்டவனாகவும் இருக்கிறான். ஆபிரகாமுக்கும் தேவனுக்கும் இடையிலான உரையாடல்களில் இதைத்தான் நாம் காண்கிறோம். தேவன் ஆதி காலம் முதல் இன்று வரை தனது மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். இங்கே, அதைப் போலவே, நாம் காண வேண்டிய தேவனுடைய மனநிலையும் உள்ளது. எண்கள் எளிமையானவை—அவை எதையும் விவரிக்கவில்லை—ஆனால் இங்கே தேவனுடைய மனநிலையின் மிக முக்கியமான வெளிப்பாடு உள்ளது. ஐம்பது நீதிமான்களால் தேவன் நகரத்தை அழிக்க மாட்டார். இது தேவனுடைய தயவால் ஏற்பட்டதா? அவருடைய அன்பும் சகிப்புத்தன்மையும் காரணமாகுமா? தேவனுடைய மனநிலையின் இந்தப் பக்கத்தை நீங்கள் பார்த்தீர்களா? நீதியுள்ள பத்துப் பேர் மட்டுமே இருந்தாலும்கூட, இந்த பத்து நீதிமான்களால் தேவன் நகரத்தை அழித்திருக்க மாட்டார். இது தேவனுடைய சகிப்புத்தன்மையும் அன்பும் அல்லவா? தேவனுடைய தயவு, சகிப்புத்தன்மை மற்றும் அந்த நீதியுள்ள ஜனங்கள் மீதான அக்கறை காரணமாக, அவர் நகரத்தை அழித்திருக்க மாட்டார். இது தேவனுடைய சகிப்புத்தன்மை. இறுதியில், நாம் என்ன விளைவைக் காண்கிறோம்? ஆபிரகாம், “பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ,” என்று சொன்னபோது தேவன், “அதை அழிப்பதில்லை.” என்றார். அதற்கு மேலாக ஆபிரகாம் கேட்கவில்லை—ஏனென்றால் சோதோமுக்குள் அவன் குறிப்பிட்ட பத்து நீதிமான்கள் இல்லை. மேலும், அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. சோதோமை அழிக்க தேவன் ஏன் தீர்மானித்தார் என்பதை அப்போது அவன் புரிந்துகொண்டான். இதில், தேவனுடைய எந்த மனநிலையை நீங்கள் காண்கிறீர்கள்? தேவன் எத்தகைய தீர்மானத்தை எடுத்தார்? இந்த நகரத்தில் பத்து நீதிமான்கள் இல்லையென்றால், அந்த நகரம் இருப்பதை அவர் அனுமதிக்கப்போவதில்லை என்றும், அதை நிச்சயமாகவே அழிக்கப்போவதாகவும் தேவன் தீர்மானித்தார். இது தேவனுடைய கோபம் அல்லவா? இந்தக் கோபம் தேவனுடைய மனநிலையைக் குறிக்கிறதா? இந்த மனநிலை தேவனுடைய பரிசுத்தமான சாராம்சத்தின் வெளிப்பாடா? இது மனிதன் இடறலடையக்கூடாத தேவனுடைய நீதியின் சாராம்சத்தின் வெளிப்பாடா? சோதோமில் பத்து நீதிமான்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், தேவன் அந்த நகரத்தை அழிப்பதில் உறுதியாக இருந்தார். அவர்கள் தேவனை எதிர்த்தார்கள் என்பதாலும் மிகவும் இழிவானவர்களாகவும் கேடானவர்களாகவும் இருந்தார்கள் என்பதாலும் அந்த நகரத்திற்குள் இருந்த ஜனங்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என தேவன் உறுதியாக இருந்தார்.

இந்தப் பத்திகளை நாம் ஏன் இவ்வாறு ஆராய்ந்து பார்த்திருக்கிறோம்? ஏனென்றால், இந்த சில எளிய வாக்கியங்கள் தேவனுடைய ஏராளமான தயவு மற்றும் மிகுந்த கோபத்திற்கு முழு வெளிப்பாட்டைக் கொடுக்கின்றன. அதே நேரத்தில் நீதிமான்களைப் பொக்கிஷமாகக் கருதுவதும், அவர்களுக்கு தயவு காட்டுவதும், சகித்துக்கொள்வதும், அக்கறை காட்டுவதும் தேவனுடைய இருதயத்தில் இருந்தது. சோதோமில் சீர்கேடடைந்த அனைவரின் மீதும் ஆழ்ந்த வெறுப்பு இருந்தது. இது ஏராளமான தயவும் மிகுந்த கோபமும் இல்லையா? தேவன் எவ்வாறு நகரத்தை அழித்தார்? நெருப்பால். அவர் அதை ஏன் நெருப்பைப் பயன்படுத்தி அழித்தார்? எதையாவது நெருப்பால் எரிப்பதை நீ காணும்போது அல்லது நீ எதையாவது எரிக்கப் போகிறபோது, அதைப் பற்றிய உன் உணர்வுகள் என்ன? அதை ஏன் எரிக்க விரும்புகிறாய்? உனக்கு இனி அது தேவையில்லை, இனி அதைப் பார்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறாயா? அதை கைவிட விரும்புகிறாயா? தேவனுடைய நெருப்பைப் பயன்படுத்துவது என்பதற்கு கைவிடுதல் மற்றும் வெறுப்பு என்று அர்த்தமாகும். அவர் இனி சோதோமைக் காண விரும்பவில்லை என்று அர்த்தமாகும். இந்த உணர்ச்சி தான் சோதோமை நெருப்பால் அழிக்க தேவனைத் தூண்டியது. நெருப்பின் பயன்பாடானது தேவன் எவ்வளவு கோபமாக இருந்தார் என்பதைக் குறிக்கிறது. தேவனுடைய தயவும் சகிப்புத்தன்மையும் உண்மையில் உள்ளன. ஆனால் தேவனுடைய பரிசுத்தமும் நீதியும் அவர் கோபத்தைக் கட்டவிழ்த்துவிடும்போது, மனிதன் எந்தக் குற்றத்தையும் செய்யாத தேவனுடைய பக்கத்தைப் பார்க்கிறான். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மனிதன் பூரணமாக வல்லமை பெற்றவனாகவும், தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்படும் போதும், மனிதனிடம் தேவன் காட்டிய தயவில் தேவன் அளவில்லாதவராக இருக்கிறார். மனிதன் அவருக்கு எதிராகக் கேடு, வெறுப்பு மற்றும் பகை ஆகியவற்றால் நிறைந்திருக்கும்போது, தேவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அவர் எந்த அளவுக்கு மிகுந்த கோபத்தில் இருக்கிறார்? மனிதனுடைய எதிர்ப்பையும் தீய கிரியைகளையும் தேவன் இனி பார்க்காத வரையில், அவருடைய கண்களுக்கு முன்பாக அவை இல்லாத வரையில், அவருடைய கோபம் நீடிக்கும். அப்போதுதான் தேவனுடைய கோபம் மறைந்து போகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த மனிதர் யார் என்பது முக்கியமல்ல, அவர்களின் இருதயம் தேவனிடமிருந்து தூரம் சென்று, தேவனிடமிருந்து விலகிவிட்டால், ஒருபோதும் திரும்பி வராத வண்ணம் இருந்தால், அவர்களுடைய எல்லா தோற்றங்கள் அல்லது அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் எவ்வாறாக இருந்தாலும், அவர்கள் தேவனை வணங்க விரும்பினாலும், அவர்களுடைய உடலிலோ சிந்தனையிலோ தேவனைப் பின்பற்றும் மற்றும் கீழ்ப்படியும் சிந்தை இருந்தாலும், தேவனுடைய கோபம் நிறுத்தப்படாமல் கட்டவிழ்த்து விடப்படும். இது மனிதனுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கிய பின்னர், தேவன் தனது கோபத்தை ஆழமாக கட்டவிழ்த்துவிடுவது போல இருக்கும். அதை ஒருமுறை கட்டவிழ்த்துவிட்டால், அதை திரும்பப் பெற எந்த வழியும் இருக்காது. அத்தகைய மனிதகுலத்திடம் அவர் ஒருபோதும் இரக்கமுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்க மாட்டார். எந்தவொரு குற்றத்தையும் பொறுத்துக்கொள்ளாத தேவனுடைய மனநிலையின் ஒரு பக்கம் இது. இங்கே, தேவன் ஒரு நகரத்தை அழிப்பார் என்பது ஜனங்களுக்கு சாதாரணமாகத் தோன்றுகிறது. ஏனென்றால், தேவனுடைய பார்வையில், பாவம் நிறைந்த ஒரு நகரம் இருக்க முடியாது, தொடர்ந்து இருக்க முடியாது. அது தேவனால் அழிக்கப்பட வேண்டும் என்பது பகுத்தறிவு. ஆயினும், சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் நடந்தவற்றில், தேவனுடைய மனநிலையை நாம் காண்கிறோம். அவர் அன்பான, அழகான மற்றும் நல்ல காரியங்களுடன் சகிப்புத்தன்மையுடனும் தயவுடனும் இருக்கிறார். தீய, பாவமான, பொல்லாத காரியங்களிடம் அவர் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார். அவர் தம்முடைய கோபத்தில் இடைவிடாமல் இருக்கிறார். தேவனுடைய மனநிலையின் இரண்டு முக்கிய மற்றும் மிக முக்கியமான அம்சங்கள் இவை. ஏராளமான தயவு மற்றும் மிகுந்த கோபம் ஆகியவை தொடக்கம் முதல் இறுதி வரை தேவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உங்களில் பெரும்பாலானோர் தேவனுடைய தயவை அனுபவித்திருக்கிறீர்கள். ஆனால் உங்களில் மிகச் சிலரே தேவனுடைய கோபத்தை அனுபவித்துள்ளீர்கள், ஆனால் வெகு சிலரே தேவனுடைய கோபத்தைப் பாராட்டியுள்ளீர்கள். தேவனுடைய தயவையும் அன்பையும் ஒவ்வொரு நபரிடமும் காணலாம். அதாவது, தேவன் ஒவ்வொரு நபரிடமும் மிகுந்த இரக்கமுள்ளவர். ஆயினும்கூட, மிக அரிதாகவே—அல்லது, ஒருபோதும்—தேவன் உங்களுக்கு மத்தியிலான எந்தவொரு தனிமனிதரிடமோ அல்லது எந்தவொரு கூட்டத்திடமோ மிகுந்த கோபம் கொள்ளவில்லை. ஓய்வெடுங்கள்! உடனடியாகவோ அல்லது பின்னரோ, தேவனுடைய கோபம் ஒவ்வொரு மனிதராலும் காணப்பட்டு அனுபவிக்கப்படும். ஆனால் இப்போது அந்த நேரம் வரவில்லை. இது ஏன்? ஏனென்றால், தேவன் ஒருவரிடம் தொடர்ந்து கோபப்படுகையில், அதாவது, அவர் தம்முடைய மிகுந்த கோபத்தை அவர்கள்மீது கட்டவிழ்த்து விடும்போது, இதன் அர்த்தம், அவர் இந்த நபரை வெறுக்கிறார், நிராகரித்தார், அவர்கள் இருப்பதை அவர் வெறுக்கிறார், அவர்கள் இருப்பதை அவரால் தாங்க முடியாது என்பதாகும். அவருடைய கோபம் அவர்கள் மீது வந்தவுடன் அவை மறைந்துவிடும். இன்று, தேவனுடைய கிரியை அந்த நிலையை இன்னும் எட்டவில்லை. தேவன் மிகுந்த கோபமடைந்தவுடன் உங்களில் எவராலும் அதைத் தாங்க முடியாது. அப்படியானால், இந்த நேரத்தில் தேவன் உங்கள் அனைவரிடமும் மிகுந்த இரக்கமுள்ளவர் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவருடைய மிகுந்த கோபத்தை நீங்கள் இன்னும் காணவில்லை. நம்பாதவர்களாக இருந்தால், தேவனுடைய கோபம் உங்கள் மீது வரும்படி நீங்கள் கேட்கலாம். இதனால் தேவனுடைய கோபமும், மனிதனால் கெடுக்க முடியாத அவருடைய மனநிலையும் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் அனுபவித்து அறியலாம். உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 38

கடைசி நாட்களின் ஜனங்கள் தேவனுடைய கோபத்தை அவருடைய வார்த்தைகளில் மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் தேவனுடைய கோபத்தை அனுபவிக்கவில்லை

இந்த இறுதிக் காலக் கூட்டத்தைப் போல சிருஷ்டிப்புக் காலம் முதல் இன்று வரை எந்தக் கூட்டமும் தேவனுடைய இரக்கம் அல்லது தயவு மற்றும் கிருபையை அனுபவித்ததில்லை என்று கூறலாம். இறுதிக் கட்டத்தில், தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் கிரியையைச் செய்திருந்தாலும், மாட்சிமையோடும் கோபத்தோடும் தனது கிரியையைச் செய்திருந்தாலும், பெரும்பாலான சமயங்களில் தேவன் தம்முடைய கிரியையைச் செய்ய வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறார். அவர் கற்பித்துத் தாகம் தீர்ப்பதற்கும், கொடுத்துப் பசியாற்றுவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதற்கிடையில், தேவனுடைய கோபம், எப்போதும் மறைக்கப்பட்டு வருகிறது. மேலும், தேவனுடைய கோபமான மனநிலையை அவருடைய வார்த்தைகளில் அனுபவிப்பதைத் தவிர, மிகச் சிலரே அவருடைய கோபத்தை நேரில் அனுபவித்திருக்கிறார்கள். இது தேவனுடைய நியாத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் போது, தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படும் கோபமானது தேவனுடைய மாட்சிமையையும், குற்றத்தின் சகிப்புத்தன்மையையும் அனுபவிக்க ஜனங்களை அனுமதிக்கிறது என்றாலும், இந்தக் கோபம் அவருடைய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதனைத் திருத்துவதற்கும், மனிதனை வெளிப்படுத்துவதற்கும், மனிதனை நியாயந்தீர்ப்பதற்கும், மனிதனைச் சிட்சிப்பதற்கும், மனிதனைக் கண்டிப்பதற்கும் தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்—எனினும், தேவன் இன்னும் மனிதன் மீது மிகுந்த கோபம் கொள்ளவில்லை. அவருடைய வார்த்தைகளைத் தவிர, மனிதன் மீது எந்தக் கோபத்தையும் கட்டவிழ்த்துவிடவில்லை. ஆகவே, இந்த யுகத்தில் மனிதன் அனுபவித்த தேவனுடைய தயவும் அன்பும் தேவனுடைய உண்மையான மனநிலையின் வெளிப்பாடாகும். அதே சமயம் மனிதன் அனுபவிக்கும் தேவனுடைய கோபம் வெறுமனே அவரது வார்த்தைகளுடைய தொனி மற்றும் உணர்வின் விளைவாகும். தேவனுடைய கோபத்தைப் பற்றிய உண்மையான அனுபவமாகவும் உண்மையான அறிவாகவும் இந்த விளைவை பலர் தவறாகக் கருதுகிறார்கள். இதன் விளைவாக, தேவனுடைய தயவு மற்றும் கிருபையை அவருடைய வார்த்தைகளில் பார்த்ததாகப் பெரும்பாலான ஜனங்கள் நம்புகிறார்கள். மனிதனுடைய குற்றத்தில் தேவனுடைய சகிப்புத்தன்மையையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தேவனுடைய தயவையும் மனிதனிடம் சகிப்புத்தன்மையையும் புரிந்துகொள்ள வந்திருக்கிறார்கள். ஆனால் மனிதனுடைய நடத்தை எவ்வளவு மோசமானதாக இருந்திருந்தாலும், அல்லது அவனது மனநிலை எவ்வளவு கெட்டதாக இருந்திருந்தாதாலும், தேவன் அதை எப்போதும் சகித்துக்கொண்டிருக்கிறார். சகித்துக்கொள்வதில், அவர் நோக்கம் என்னவென்றால், அவர் ஆதாயம் செய்ய விரும்பும் மனிதர்களில் ஒரு பலனைப் பெற அவர் பேசிய வார்த்தைகள், அவர் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவர் செலுத்திய விலைக்கிரயம் ஆகியவற்றிற்காகக் காத்திருப்பதாகும். இது போன்ற ஒரு முடிவுக்காகக் காத்திருப்பது நேரம் எடுக்கும். இதற்காக மனிதனுக்கு வெவ்வேறு சூழல்களை உருவாக்க வேண்டும். அதைப் போலவே ஜனங்கள் பிறந்தவுடன் பெரியவர்களாக மாற மாட்டார்கள். இதற்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். சிலர் உண்மையான முதிர்ச்சியடைந்தவராக மாறுவதற்கு இருபது அல்லது முப்பது ஆண்டுகள் கூட தேவைப்படும். இந்தச் செயல்முறையை முடிக்க தேவன் காத்திருக்கிறார். அத்தகைய நேரம் வருவதற்காக அவர் காத்திருக்கிறார். இந்த முடிவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அவர் காத்திருக்கும் காலம் முழுவதும், தேவன் மிகுந்த இரக்கமுள்ளவராக இருக்கிறார். எவ்வாறாயினும், தேவனுடைய கிரியையின் போது, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஜனங்கள் தாக்கப்படுகிறார்கள். சிலர் தேவனுக்கு எதிரான அவர்களுடைய கடுமையான எதிர்ப்பால் தண்டிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் மனிதனுடைய குற்றத்தை ஏற்காத தேவனுடைய மனநிலைக்கு இன்னும் பெரிய சான்றாகும். அவை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தேவனுடைய சகிப்புத்தன்மையையும் மற்றும் பொறுமையும் உண்மையில் இருப்பதையும் பூரணமாக உறுதிப்படுத்துகின்றன. இந்தப் பொதுவான எடுத்துக்காட்டுகளில், இந்த ஜனங்களில் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதி வெளிப்படுவது என்பது தேவனுடைய ஒட்டுமொத்த ஆளுகைத் திட்டத்தை நிச்சயமாகப் பாதிக்காது. உண்மையில், தேவனுடைய கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், தேவன் காத்திருக்கும் காலம் முழுவதும் சகித்துக்கொண்டார். மேலும், அவரைப் பின்பற்றுபவர்களின் இரட்சிப்பிற்காக அவர் தனது சகிப்புத்தன்மையையும் ஜீவனையும் பரிமாறிக்கொண்டார். இதைப் பார்க்கிறீர்களா? தேவன் தனது திட்டத்தைக் காரணமின்றி மாற்றுவதில்லை. அவர் தனது கோபத்தைக் கட்டவிழ்த்துவிட முடியும். அவர் இரக்கமுள்ளவராகவும் இருக்க முடியும். இது தேவனுடைய மனநிலையின் இரண்டு முக்கிய பகுதிகளின் வெளிப்பாடு ஆகும். இது மிகவும் தெளிவானதாக இருக்கிறதா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனிடம் சரியானது, தவறானது, நியாயமானது மற்றும் நியாயமற்றது, நேர்மறை மற்றும் எதிர்மறை—இவை அனைத்தும் மனிதனுக்குத் தெளிவாகக் காட்டப்படுகின்றன. அவர் என்ன செய்வார், எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார்—இவை அனைத்தும் அவருடைய மனநிலையில் நேரடியாகப் பிரதிபலிக்க முடியும். இதுபோன்ற விஷயங்களை தேவனுடைய கிரியையில் மிகவும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் காணலாம். அவை தெளிவற்றவை அல்லது பொதுவானவை அல்ல. மாறாக, எல்லா ஜனங்களும் தேவனுடைய மனநிலையையும், அவரிடம் உள்ளதையும், குறிப்பாக உறுதியான, உண்மையான மற்றும் நடைமுறையான முறையிலும் காண அவை அனுமதிக்கின்றன. இவரே உண்மையான தேவன் ஆவார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 39

தேவனுடைய மனநிலை ஒருபோதும் மனிதனிடமிருந்து மறைக்கப்படுவதில்லை—மனிதனுடைய இருதயம் தேவனிடமிருந்து விலகிவிட்டது

படைப்பின் காலத்திலிருந்தே, தேவனுடைய மனநிலை அவருடைய கிரியையுடன் இணங்கி உள்ளது. இது ஒருபோதும் மனிதனிடமிருந்து மறைக்கப்படவில்லை. ஆனால் பூரணமாக வெளிப்படுத்தப்பட்டு மனிதனுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆயினும்கூட, காலப்போக்கில், மனிதனுடைய இருதயம் தேவனிடமிருந்து இன்னும் தூரமாகியுள்ளது. மனிதனுடைய கேடு ஆழமாகிவிட்டதால், மனிதனும் தேவனும் மேலும் மேலும் பிரிந்துவிட்டார்கள். மெதுவாக ஆனால் நிச்சயமாக, மனிதன் தேவனுடைய பார்வையில் இருந்து மறைந்துவிட்டான். மனிதனால் தேவனைப் “பார்க்க” முடியவில்லை. இது அவனை தேவனைப் பற்றிய எந்த “செய்தியும்” இல்லாதவனாக மாற்றிவிட்டது. ஆகவே, தேவன் இருக்கிறாரா என்பது அவனுக்குத் தெரியாமல் போனது. தேவன் இருப்பதை முற்றிலுமாக மறுக்கும் அளவிற்கு கூட அது செல்கிறது. இதன் விளைவாக, தேவனுடைய மனநிலையையையும், தேவனையும், தேவனிடம் உள்ளவற்றையும் மனிதன் புரிந்து கொள்ளவில்லை. மனிதனிடமிருந்து மறைந்திருப்பதால் அல்ல, மாறாக அவனுடைய இருதயம் தேவனிடமிருந்து விலகிவிட்டதால் மனிதன் புரிந்து கொள்ளவில்லை. மனிதன் தேவனை நம்புகிறான் என்றாலும், மனிதனுடைய இருதயம் தேவன் இல்லாமல் இருக்கிறது. தேவனை எப்படி நேசிக்க வேண்டும் என்று அவன் அறியாமலிருக்கிறான். அவன் தேவனை நேசிக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவனுடைய இருதயம் ஒருபோதும் தேவனிடம் நெருங்கி வந்ததில்லை. அவன் எப்போதும் தேவனைத் தவிர்க்கிறான். இதன் விளைவாக, மனிதனுடைய இருதயம் தேவனிடமிருந்து தூரமாக இருக்கிறது. அப்படியானால், அவனது இருதயம் எங்கே இருக்கிறது? உண்மையில், மனிதனுடைய இருதயம் எங்கும் செல்லவில்லை: அதை தேவனுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக அல்லது அதை தேவன் பார்க்கத்தக்கதாக வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவன் அதை தனக்காக வைத்திருக்கிறான். சிலர் அடிக்கடி தேவனிடம், “தேவனே, என் இருதயத்தைப் பாரும்—நான் நினைப்பதை நீர் அறிவீர்” என்று ஜெபிப்பார்கள். சிலர் அவர்களை தேவன் பார்க்க அனுமதித்து, தாங்கள் செய்த சத்தியத்தை மீறினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவனிடம் சத்தியம் செய்கிறார்கள். தேவனை தன் இருதயத்திற்குள் பார்க்க மனிதன் அனுமதித்தாலும், மனிதன் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வல்லவன் என்பதையும், அவன் விதி, வாய்ப்புகள் மற்றும் அனைத்தையும் தேவனுடைய கட்டுப்பாட்டில் விட்டுவிட்டான் என்பதையும் இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆகவே, நீ தேவனிடம் செய்த சத்தியங்கள் அல்லது நீ அவரிடம் உறுதியளித்தவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய பார்வையில் உன் இருதயம் இன்னும் அவருக்கு பூட்டப்பட்டுள்ளது. ஏனென்றால், உன் இருதயத்தை தேவனை பார்க்க மட்டுமே அனுமதிக்கிறாய். ஆனால் அதைக் கட்டுப்படுத்த அவரை அனுமதிக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ உன் இருதயத்தை தேவனிடம் கொடுக்கவில்லை. மேலும், தேவன் கேட்க இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசுகிறாய். இதற்கிடையில், உன் கபடங்கள், சூழ்ச்சி மற்றும் திட்டங்களுடன் சேர்ந்து உன் பல்வேறு வஞ்சக நோக்கங்களை தேவனிடமிருந்து மறைக்கிறாய். உன் வாய்ப்புகளையும் விதியையும் உன் கரங்களில் பிடித்து வைக்கிறாய். அவை தேவனால் பறிக்கப்படும் என்று மிகவும் பயப்படுகிறாய். ஆகவே, தேவன் தம் மீதான மனிதனுடைய நேர்மையை ஒருபோதும் காண்பதில்லை. மனிதனுடைய இருதயத்தின் ஆழத்தை தேவன் கவனித்தாலும், மனிதன் என்ன நினைக்கிறான், தன் இருதயத்தில் என்ன செய்ய விரும்புகிறான் என்பதைக் காண முடியும் என்றாலும், அவனது இருதயத்திற்குள் என்னென்ன விஷயங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதைக் காண முடியும் என்றாலும், மனிதனுடைய இருதயம் தேவனுக்குச் சொந்தமாக இல்லை. அவன் அதை தேவனுடைய கட்டுப்பாட்டுக்குக் கொடுக்கவில்லை. அதாவது தேவனுக்கு உரிமை இருந்தும், அவரைக் கட்டுப்படுத்த அனுமதிக்கவில்லை. மனதளவில், மனிதன் தேவனுடைய ஏற்பாடுகளுக்குத் தன்னைக் கொடுக்க அவனுக்கு வாஞ்சை அல்லது விருப்பம் இல்லை. மனிதன் தன்னைத் தேவனிடமிருந்து பூட்டிவிட்டது மட்டுமல்லாமல், மென்மையான பேச்சு மற்றும் புகழ்ச்சியைப் பயன்படுத்தி ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கி, தேவனுடைய நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் உண்மையான முகத்தை தேவனுடைய பார்வைக்கு மறைத்து, தங்கள் இருதயங்களைப் பூட்டி வைப்பதற்கான வழிகளைப் பற்றி யோசிக்கிறார்கள். தேவன் தங்களைப் பார்க்க அனுமதிக்காததன் அவர்களின் நோக்கம் என்னவென்றால் அவர்கள் உண்மையில் எதைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதேயாகும். அவர்கள் தங்களது இருதயங்களை தேவனுக்குக் கொடுக்க விரும்பவில்லை. மாறாக அவற்றைத் தங்களுக்காகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். இதன் உட்பொருள் என்னவென்றால், மனிதன் எதைச் செய்கிறான், எதை விரும்புகிறான் என்பது அனைத்தும் திட்டமிடப்பட்டு, கணக்கிடப்பட்டு, மனிதனால் தீர்மானிக்கப்படுகின்றன. அவனுக்கு தேவனுடைய பங்கேற்பு அல்லது தலையீடு தேவையில்லை. தேவனுடைய திட்டங்களும் மற்றும் ஏற்பாடுகளும் அவனுக்குத் தேவையில்லை. ஆகவே, தேவனுடைய கட்டளைகள், அவருடைய ஆணை, அல்லது மனிதனிடம் உள்ள எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், மனிதனுடைய முடிவுகள் அவனது சொந்த நோக்கங்களையும் மற்றும் நலன்களையும், அந்த நேரத்தில் அவனது சொந்த நிலையையும் மற்றும் சூழ்நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை ஆகும். மனிதன் எப்போதுமே தனக்குத் தெரிந்த அறிவு மற்றும் உட்கருத்துக்களையும், அவனது சொந்த அறிவையும், தான் எடுக்க வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் பயன்படுத்துகிறான். மேலும், தேவனுடைய குறுக்கீட்டையோ கட்டுப்பாட்டையோ அனுமதிப்பதில்லை. இதுவே தேவன் பார்க்கும் மனிதனுடைய இருதயம் ஆகும்.

ஆதி காலம் முதல் இன்று வரை மனிதன் மட்டுமே தேவனுடன் உரையாட வல்லவனாக இருக்கிறான். அதாவது, தேவனுடைய எல்லா உயிரினங்களுக்கும் படைப்புகளுக்கும் மத்தியில், மனிதனைத் தவிர வேறு எவரும் தேவனுடன் உரையாட முடியவில்லை. மனிதனுக்குக் கேட்கக்கூடிய காதுகளும், பார்க்க அனுமதிக்கும் கண்களும் உள்ளன. அவனுக்கான மொழி, சொந்த யோசனைகள் மற்றும் சுதந்திரம் உள்ளன. தேவன் பேசுவதைக் கேட்பதற்கும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய கட்டளையை ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான அனைத்தையும் அவன் பெற்றிருக்கிறான். ஆகவே, தேவன் தம்முடைய எல்லா விருப்பங்களையும் மனிதனுக்கு அளிக்கிறார். மனிதனை அவருடன் ஒரே மனநிலையுள்ளவனாகவும், அவருடன் நடக்கக் கூடியவனாகவும் இருக்கச் செய்கிறார். அவர் ஆளுகை செய்யத் தொடங்கியதிலிருந்து, மனிதன் தன் இருதயத்தை அவருக்குக் கொடுப்பதற்காகவும், தேவன் அதைச் சுத்திகரிக்கவும், சித்தப்படுத்தவும், தேவனைத் திருப்திப்படுத்தக் கூடியதாகவும், தேவனால் நேசிக்கக் கூடியதாகவும் செய்ய தேவன் காத்திருக்கிறார். மனிதனை தேவன் மீது பயபக்தியுள்ளவனாகவும், தீமைகளைத் தவிர்ப்பவனாகவும் உருவாக்க தேவன் காத்திருக்கிறார். இந்த முடிவை தேவன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 40

யோபுவைப் பற்றிய தேவனுடைய மற்றும் வேதாகமத்தில் உள்ள மதிப்பீடுகள்

யோபு 1:1  ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.

யோபு 1:5  விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.

யோபு 1:8  அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார்.

இந்தப் பத்திகளில் நீங்கள் காணும் முக்கிய கருத்து என்ன? வேதாகமத்தின் இந்த மூன்று சுருக்கமான பகுதிகள் அனைத்தும் யோபுடன் தொடர்புடையவை ஆகும். குறுகியதாக இருந்தாலும், அவன் எந்த வகையான மனிதன் என்பதை அவை தெளிவாகக் கூறுகின்றன. யோபுவின் அன்றாட நடத்தை மற்றும் அவனது குணத்தைப் பற்றிய அவற்றின் விளக்கத்தின் மூலம், ஆதாரமற்றவர்களாக இருப்பதற்குப் பதிலாக, யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடு நன்கு நிறுவப்பட்டுள்ளது என்பதை அந்த வார்த்தைகள் எல்லோரிடமும் கூறுகின்றன. யோபுவைப் பற்றிய மனிதனுடைய மதிப்பீடாக இருந்தாலும் (யோபு 1:1), அல்லது அவனைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடாக இருந்தாலும் (யோபு 1:8), இவை இரண்டும் தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக யோபுவின் செயல்களின் விளைவாகும் என்று அவை நமக்குச் சொல்கின்றன (யோபு 1:5).

முதலில், முதல் பத்தியைப் படிப்போம்: “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” இது வேதாகமத்தில் யோபுவைப் பற்றிய முதல் மதிப்பீடாகும். மேலும், இந்த வாக்கியம் யோபுவைப் பற்றிய ஆசிரியரின் மதிப்பீடாகும். இயற்கையாகவே, இது யோபுவைப் பற்றிய மனிதனுடைய மதிப்பீட்டையும் குறிக்கிறது. அதாவது “அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” அடுத்ததாக, யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீட்டைப் பற்றி வாசிப்போம்: “அவனைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை.” அந்த இரண்டில், ஒன்று மனிதனிடமிருந்து வந்தது, ஒன்று தேவனிடமிருந்து தோன்றியதாகும். அவை ஒரே உள்ளடக்கத்துடன் இருக்கும் இரண்டு மதிப்பீடுகள். ஆகவே, யோபுவின் நடத்தையும் குணமும் மனிதனுக்குத் தெரிந்திருந்தன மற்றும் அவை தேவனால் புகழப்பட்டதையும் காண முடிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதனுக்கு முன்பாகவும் தேவனுக்கு முன்பாகவும் இருந்த யோபுவின் நடத்தை ஒரே மாதிரியானவை. தான் தேவனால் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவன் எல்லா நேரங்களிலும் தனது நடத்தை மற்றும் உந்துதலை தேவனுக்கு முன்பாக வைத்தான். மேலும், அவன் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்த்தவன். இவ்வாறு, தேவனுடைய பார்வையில், பூமியிலுள்ள ஜனங்களுள் யோபு மட்டுமே பரிபூரணனாகவும் நேர்மையாகவும் இருந்தான். தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்த்தான்.

யோபுவிடமிருந்த தேவ பயம் மற்றும் அவனது அன்றாட ஜீவிதத்தில் தீமையைத் தவிர்த்தது பற்றிய விஷேசித்த வெளிப்பாடுகள்

அடுத்ததாக, யோபுவின் தேவ பயம் மற்றும் தீமையைத் தவிர்ப்பது குறித்த விஷேசித்த வெளிப்பாடுகளைப் பார்ப்போம். இதற்கு முந்தைய மற்றும் பின்பற்றும் பத்திகளைத் தவிர, யோபு 1:5 யும் படிப்போம். தேவ பயம் மற்றும் தீமையைத் தவிர்ப்பதும் யோபுவின் விஷேசித்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். அவன் எவ்வாறு தேவனுக்கு அஞ்சினான் மற்றும் அவனது அன்றாட ஜீவிதத்தில் எவ்வாறு தீமையைத் தவிர்த்தான் என்பதற்கு அது தொடர்புடையதாகும். மிக முக்கியமாக, அவன் தனது சொந்த தேவ பயத்துக்காகவும், தீமையைத் தவிர்ப்பதற்காகவும் செய்யவேண்டியதைச் செய்தது மட்டுமல்லாமல், தம்முடைய மகன்களின் சார்பாக தேவனுக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். விருந்து வைக்கும் போது அவர்கள் பெரும்பாலும் “பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள்” என்று அவன் பயந்தான். இந்த பயம் யோபுவில் எவ்வாறு வெளிப்பட்டது? அசல் உரை பின்வரும் விவரத்தை அளிக்கிறது: “விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்.” யோபுவின் நடத்தையானது, அவனுடைய வெளிப்புற நடத்தையில் வெளிப்படாதபடிக்கு, தேவ பயம் அவனுடைய இருதயத்திலிருந்தே வந்தது என்பதையும், தேவ பயம் அவனுடைய அன்றாட ஜீவிதத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், எல்லா நேரங்களிலும் காணப்படலாம் என்பதையும் காட்டுகிறது. ஏனென்றால், அவன் தீமையைத் தவிர்த்தது மட்டுமல்லாமல் பெரும்பாலும் அவனுடைய மகன்களின் சார்பாக சர்வாங்க தகனபலிகளை பலியிட்டான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதையும், தேவனைத் தன் இருதயத்தில் கைவிடுவதையும் பற்றி மிகுந்த பயம் கொண்டதோடு மட்டுமல்லாமல், தன் மகன்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்து அவரை இருதயத்தில் கைவிடக்கூடும் என்றும் கவலைப்பட்டான். இதிலிருந்து யோபுவின் தேவ பயத்தின் உண்மை ஆராய்ச்சிக்கு முன்பாக நிலையாக நிற்கிறது. இது எந்த மனிதனுடைய சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டு இருப்பதைக் காணலாம். அவன் அவ்வாறு அவ்வப்போது செய்தானா, அல்லது அடிக்கடி செய்தானா? உரையின் இறுதி வாக்கியம் “இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.” இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்றால், யோபு எப்போதாவது அல்லது அவனுக்குப் பிரியமானபோது சென்று பார்க்கவில்லை, ஜெபத்தின் மூலமாக தேவனிடம் ஒப்புவிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவன் தனது மகன்களைச் சுத்தமாக்கும்படி தவறாமல் அவர்களுக்காக சர்வாங்க தகனபலிகளைப் பலியிட்டு அனுப்பினான். இங்கே “அந்நாட்களிலெல்லாம்” என்ற வார்த்தையானது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அல்லது ஒரு கணம் அவன் அவ்வாறு செய்ததாக அர்த்தம் அளிக்கவில்லை. யோபுவின் தேவ பயத்தின் வெளிப்பாடு தற்காலிகமானது அல்ல. அவர்களைப் பற்றிய அறிவில் அல்லது பேசும் வார்த்தைகளில் அவன் நிறுத்திக்கொள்ளவில்லை என்று அது கூறுகிறது. அதற்குப் பதிலாக, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்கும் முறை அவனுடைய இருதயத்தை வழிநடத்தியது. அது அவனுடைய நடத்தையை ஆட்சி செய்தது. அதுவே அவன் இருப்பதற்கான ஆதாரம் என்று கருதுகிறான். அவன் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து விடுவாரோ என்று அஞ்சுவதாகவும், அவனுடைய மகன்களும் மகள்களும் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வார்கள் என்றும் அஞ்சுவதாகவும், அவன் அவ்வாறு தொடர்ந்து செய்வது காட்டுகிறது. தேவனுக்குப் பயப்படுவதற்கும், தீமையைத் தவிர்ப்பதற்கும் அவனது இருதயத்திற்குள் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை இது குறிக்கிறது. அவன் தொடர்ந்து இவ்வாறு செய்தான். ஏனென்றால், அவன் இருதயத்தில் பயந்து—தீமை செய்வதற்கும், தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வதற்கும், அவன் தேவனுடைய வழியிலிருந்து விலகி, தேவனைத் திருப்திப்படுத்த முடியாமல் போவதற்கும் பயந்தான். அதே சமயம், தனது மகன்களும் மகள்களும் தேவனைப் புண்படுத்தியிருப்பார்களோ என்ற பயத்தில் அவன் கவலைப்பட்டான். யோபுவின் அன்றாட ஜீவிதத்தில் அவனது இயல்பான நடத்தை இதுதான். துல்லியமாக இதுவே அந்த இயல்பான நடத்தை ஆகும். யோபுவின் தேவ பயம் மற்றும் தீமையைத் தவிர்ப்பது வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை இது நிரூபிக்கிறது. யோபு உண்மையிலேயே அத்தகைய யதார்த்தத்தை ஜீவித்தான். “இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்”: இந்த வார்த்தைகள் தேவனுக்கு முன்பாக யோபுவின் அன்றாட கிரியைகளைக் கூறுகின்றன. அவன் தொடர்ந்து அவ்வாறு செய்தபோது, அவருடைய நடத்தையும் இருதயமும் தேவனுக்கு முன்பாக வந்ததா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் பெரும்பாலும் யோபுவின் இருதயத்துக்காகவும் நடத்தைக்காகவும் மகிழ்ச்சியடைந்தாரா? பின்னர், எந்த நிலையில், எந்தச் சூழலில், யோபு தொடர்ந்து இவ்வாறு செய்தான்? “தேவன் யோபுவுக்கு அடிக்கடி தோன்றியதால்தான் அவன் அவ்வாறு செயல்பட்டான்” என்று சிலர் சொல்கிறார்கள். “தீமையைத் தவிர்ப்பதற்கான விருப்பம் அவனுக்கு இருந்ததால் அவன் தொடர்ந்து அவ்வாறு செய்தான்” என்று சிலர் கூறுகிறார்கள். மேலும், “அவனுடைய செல்வம் எளிதில் வரவில்லை என்று அவன் ஒருவேளை நினைத்திருக்கலாம், அது தேவனால் அவனுக்கு வழங்கப்பட்டதாக அவன் அறிந்திருக்கலாம், ஆகவே, தேவனுக்கு எதிராகப் பாவம் செய்ததாலோ அல்லது தேவனைப் புண்படுத்தியதாலோ தனது சொத்தை இழக்க நேரிடும் என்று அவன் மிகுந்த பயத்தில் இருந்தான்” என்று சிலர் கூறுகிறார்கள். இந்தக் கூற்றுக்களுள் ஏதேனும் ஒன்று உண்மையாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், தேவனுடைய பார்வையில், தேவன் யோபுவை அதிகமாக ஏற்றுக்கொண்டார், நேசித்தார். இதற்கு அவன் தொடர்ந்து இவ்வாறு செய்தான் என்பது மட்டும் காரணமல்ல. அதற்கும் மேலாக, இது தேவன், மனிதன், சாத்தான் ஆகியோருக்கு முன்பாக யோபு சாத்தானிடம் ஒப்படைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது நடந்த நடத்தை ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 41

சாத்தான் முதன்முறையாக யோபுவைச் சோதிக்கிது (அவனுடைய கால்நடைகள் திருடப்பட்டு அவனது பிள்ளைகளுக்குப் பேரழிவு ஏற்படுகிறது) (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

a. தேவன் பேசிய வார்த்தைகள்

யோபு 1:8  அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார்.

யோபு 1:12  யோகோவா சாத்தானிடம், இதோ, அவனுடையது எல்லாம் உன் கையில் இருக்கிறது; அவன் மீது மாத்திரம் உன் கையை வைக்காதே என்றார். ஆகவே சாத்தான் யோகாவாவின் சந்நிதியில் இருந்து புறப்பட்டுச் சென்றான்.

b. சாத்தானுடைய பதில்

யோபு 1:9-11  அப்பொழுது சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா? அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான் என்றான்.

யோபுவின் நம்பிக்கை முழுமையடைய வேண்டும் என்பதற்காக யோபுவைச் சோதிப்பதற்கு தேவன் சாத்தானை அனுமதிக்கிறார்

யேகோவா தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான பரிமாற்றத்தைப் பற்றி வேதாகமத்தில் நாம் காணும் முதல் பதிவு யோபு 1:8 ஆகும். இந்நிலையில், தேவன் என்ன சொன்னார்? மூலமுதலான வேதாகம வசனங்கள் பின்வரும் விவரத்தை வழங்குகிறது: “அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியக்காரனாகிய யோபுவைப் போல பூமியில் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார்.” இது சாத்தானுக்கு முன் யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடாகும். அவன் ஒரு பரிபூரண மற்றும் நேர்மையான மனிதன் என்று தேவன் சொன்னார். அவன் தேவனுக்கு அஞ்சி, தீமையைத் தவிர்த்தான். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இந்த வார்த்தைகளுக்கு முன்பு, யோபுவைச் சோதிக்க சாத்தானைப் பயன்படுத்த வேண்டும்—யோபுவைச் சாத்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருந்தார். ஒரு வகையில், யோபுவைப் பற்றிய தேவனுடைய அவதானிப்பும் மதிப்பீடும் துல்லியமானவை மற்றும் பிழையில்லாமல் இருந்தன என்பதை இது நிரூபிக்கும் மற்றும் யோபுவின் சாட்சியின் மூலம் சாத்தானை வெட்கப்பட வைக்கும். மற்றொரு வகையில், இது தேவன் மீதான யோபுவின் நம்பிக்கையையும் தேவ பயத்தையும் பூரணப்படுத்தும். இவ்வாறு, சாத்தான் தேவனுக்கு முன்பாக வந்தபோது, தேவன் இரு பொருள்படப் பேசவில்லை. அவர் நேராக காரியத்தைச் சாத்தானிடம் கேட்டார்: “என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா?” தேவனுடைய கேள்வியில் பின்வரும் அர்த்தம் உள்ளது: சாத்தான் எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்தது என்றும், தேவனுடைய ஊழியனாக இருந்த யோபுவை அடிக்கடி உளவு பார்த்தது என்றும் தேவன் அறிந்திருந்தார். சாத்தான் பெரும்பாலும் யோபுவைச் சோதித்து தாக்கியது. தேவன் மீதுள்ள நம்பிக்கையும், தேவ பயமும் உறுதியாக இருக்க முடியாது என்பதை நிரூபிப்பதற்காக அவன் மீது அழிவைக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயன்றது. யோபு தேவனைக் கைவிடுவதற்கும், தேவனுடைய கைகளிலிருந்து அவனைச் சாத்தான் கைப்பற்றுவதற்கும் சாத்தான் உடனடியாக யோபுவை அழிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடினது. ஆயினும், தேவன் யோபுவின் இருதயத்திற்குள் பார்த்தார். அவன் பரிபூரணன், நேர்மையானவன் என்பதையும், அவன் தேவனுக்கு அஞ்சுவதையும் தீமையைத் தவிர்ப்பதையும் கண்டார். யோபு ஒருபோதும் தேவனைக் கைவிட்டு சாத்தானைப் பின்பற்ற மாட்டான் என்றும் யோபு ஒரு பரிபூரண மற்றும் நேர்மையான மனிதன் என்றும் தேவன் சாத்தானிடம் சொன்னார். யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீட்டைக் கேட்டதும், சாத்தானுள் அவமானத்தால் ஓர் ஆத்திரம் உருவானது. சாத்தான் யோபுவைப் பறிக்க மிகவும் கோபமாகவும் பொறுமையற்றும் இருந்தது, ஏனென்றால், பரிபூரணனாகவும் நேர்மையாகவும் எவரும் இருக்க முடியாது அல்லது அவர்கள் தேவனுக்குப் பயப்பட, தீமையைத் தவிர்க்க முடியாது என்று சாத்தான் எப்போதும் நம்பினது. அதே சமயம், சாத்தான் மனிதனிலுள்ள பரிபூரணத்தையும் நேர்மையையும் வெறுத்தது. தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கக்கூடிய ஜனங்களை வெறுத்தது. எனவே, யோபு 1:9-11 இல் அது எழுதப்பட்டுள்ளது, “அப்பொழுது சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா? அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான் என்றான்.” தேவன் சாத்தானுடைய தீங்கிழைக்கும் குணத்தை நன்கு அறிந்திருந்தார். யோபின் மீது அழிவை ஏற்படுத்த சாத்தான் நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தது என்பதை நன்கு அறிந்திருந்தார், ஆகவே, யோபு பரிபூரணமானவனாகவும் நேர்மையானவனாகவும், அவன் தேவனுக்கு அஞ்சுகிறான், தீமையைத் தவிர்த்துவிட்டான் என்றும் சாத்தானிடம் மீண்டும் சொல்வதன் மூலம் சாத்தானை தன் வழிக்கு கொண்டுவந்து, சாத்தான் அதன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தவும், யோபுவைத் தாக்கி சோதிக்கவும் வேண்டும் என தேவன் விரும்பினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு பரிபூரணமானவன், நேர்மையானவன் என்றும், அவன் தேவனுக்கு அஞ்சினான், தீமையைத் தவிர்த்தான் என்றும் தேவன் வேண்டுமென்றே வலியுறுத்தினார். இதன் மூலம், சாத்தான் தன்னுடைய வெறுப்பின் காரணமாகவும், யோபு ஒரு பரிபூரண மனிதனாகவும், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் நேர்மையான மனிதனாகவும் இருந்ததை நோக்கி கோபப்படுவதாலும், சாத்தான் யோபுவைத் தாக்கும்படியாக தேவன் செய்தார். இதன் விளைவாக, யோபு ஒரு பரிபூரண மற்றும் நேர்மையான மனிதன், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பவன் என்பதால், தேவன் சாத்தானுக்கு அவமானத்தைத் தருவார். இதன் மூலம் சாத்தான் முற்றிலும் அவமானப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படும். அதன்பிறகு, யோபுவின் பரிபூரணம், நேர்மை, தெய்வ பயம் அல்லது தீமையைத் தவிர்த்தல் என இவற்றைப் பற்றி சாத்தான் இனி சந்தேகிக்கவோ அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோசெய்யாது. இவ்வாறு, தேவனுடைய சோதனை மற்றும் சாத்தானுடைய சோதனையானது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகின. தேவனுடைய சோதனையையும் சாத்தானுடைய சோதனையையும் தாங்கக்கூடிய ஒரே ஒருவன் யோபு ஆவான். இந்தப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, யோபுவைச் சோதிப்பதற்கு சாத்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு சாத்தானுடைய முதல் சுற்று தாக்குதல்கள் தொடங்கின. இந்தத் தாக்குதல்களின் இலக்கு யோபுவின் சொத்து. ஏனெனில், சாத்தான் யோபுவுக்கு எதிராக பின்வரும் குற்றச்சாட்டை முன்வைத்தது: “யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? … அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று.” இதன் விளைவாக, யோபுவிடம் இருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்ள தேவன் சாத்தானை அனுமதித்தார். தேவன் சாத்தானுடன் பேசியதன் நோக்கம் இதுதான். ஆயினும்கூட, தேவன் சாத்தானிடம் ஒரு எதிர்பார்ப்பை முன்வைத்தார்: “அவனுடையது எல்லாம் உன் கையில் இருக்கிறது; அவன் மீது மாத்திரம் உன் கையை வைக்காதே” (யோபு 1:12). யோபுவைச் சோதிக்கச் சாத்தானை அனுமதித்து, யோபுவைச் சாத்தானுடைய கரங்களில் வைத்தபின் தேவன் செய்த நிபந்தனை இதுதான். இது சாத்தானுக்கு அவர் விதித்த வரம்பாகும்: யோபுவுக்குத் தீங்கு விளைவிக்காதபடி சாத்தானுக்குக் கட்டளையிட்டார். ஏனென்றால், யோபு பரிபூரணமானவன், நேர்மையானவன் என்பதை தேவன் உணர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் யோபுவின் பரிபூரணமும் நேர்மையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருந்தன. சோதனைக்கு உட்படுத்தப்படுவதை அவனால் தாங்க முடியும். ஆகவே, தேவன் யோபுவைச் சோதிக்க சாத்தானை அனுமதித்தார். ஆனால் சாத்தானுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தார்: யோபுவின் எல்லா சொத்துகளையும் எடுத்துக்கொள்ள சாத்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அது அவன் மீது விரல் வைக்கக்கூடாது. இதன் அர்த்தம் என்ன? அந்த நேரத்தில் தேவன் யோபுவை சாத்தானுக்குப் பூரணமாக கொடுக்கவில்லை என்று அர்த்தம். சாத்தான் யோபுவை விரும்பிய எந்த வகையிலும் சோதிக்க முடியும், ஆனால் அது யோபுவைக் காயப்படுத்த முடியாது—தலையில் ஒரு முடிக்குக் கூட கேடுசெய்ய முடியாது—ஏனென்றால் மனிதனுடைய அனைத்தும் தேவனால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் மனிதன் ஜீவிக்கிறானா அல்லது மரிக்கிறானா என்பது தேவனால் தீர்மானிக்கப்படுகிறது. சாத்தானுக்கு இந்த உரிமை இல்லை. தேவன் இந்த வார்த்தைகளைச் சாத்தானிடம் சொன்ன பிறகு, சாத்தானால் அதைத் தொடங்கக் காத்திருக்க முடியவில்லை. அது யோபுவைச் சோதிப்பதற்கு எல்லா வழிகளையும் பயன்படுத்தியது. விரைவில் யோபு, மலை முழுவதும் நிறைந்திருந்த செம்மறி ஆடுகளையும் எருதுகளையும், தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டான்…. இவ்வாறு தேவனுடைய உபத்திரவங்கள் அவனுக்கு வந்தன.

யோபுவின் சோதனையின் தோற்றம் பற்றி வேதாகமம் சொல்கிறது என்றாலும், இந்தச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட யோபு, என்ன நடக்கிறது என்பதை அறிந்தானா? யோபு ஒரு மனிதன். அவனைச் சுற்றியுள்ள கதை எதுவும் அவனுக்குத் தெரியாது. ஆயினும்கூட, அவனுடைய தேவனைப் பற்றிய பயமும், அவனுடைய பரிபூரணமும் நேர்மையும் தேவனுடைய சோதனைகள் அவன்மீது வந்துவிட்டன என்பதை உணரவைத்தது. ஆவிக்குரிய உலகில் என்ன நடந்தது என்பதையும், இந்தச் சோதனைகளுக்குப் பின்னால் தேவனுடைய நோக்கங்கள் என்ன என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவனுக்கு என்ன நேர்ந்தாலும், அவன் தனது பரிபூரணத்தையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கும் அவன் கட்டுப்பட வேண்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். இந்த விஷயங்களில் யோபுவின் அணுகுமுறையும் எதிர்வினையும் தேவனால் தெளிவாகக் காணப்பட்டன. தேவன் எதைப் பார்த்தார்? அவர் யோபுவின் தேவனுக்குப் பயந்த இருதயத்தைக் கண்டார். ஏனென்றால், தொடக்கத்தில் இருந்தே யோபுவைச் சோதிக்கும் வரை, யோபுவின் இருதயம் தேவனுக்குத் திறந்தே இருந்தது. அது தேவனுக்கு முன்பாக வைக்கப்பட்டது. யோபு தனது பரிபூரணத்தையோ நேர்மையையோ கைவிடவில்லை. அவன் தேவனைத் தூக்கி எறியவில்லை அல்லது தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியிலிருந்து திரும்பவில்லை. இதைவிடப் பெரிதாக தேவனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எதுவும் இல்லை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 42

சாத்தான் முதன்முறையாக யோபுவைச் சோதிக்கிது (அவனுடைய கால்நடைகள் திருடப்பட்டு அவனது பிள்ளைகளுக்குப் பேரழிவு ஏற்படுகிறது) (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

யோபுவின் எதிர்வினை

யோபு 1:20-21  அப்பொழுது யோபு எழுந்து, தன் போர்வையைக் கிழித்து, தலை முடியை சிரைத்து, தரையில் விழுந்து வணங்கினான். அப்பொழுது: நான் நிர்வாணமாக என் தாயின் கருவிலிருந்து வந்தேன், நிர்வாணமாக நான் அங்கேயே திரும்புவேன், யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

தன்னுடைய தேவ பயத்தின் நிமித்தமாக யோபு தன்னுடைய அனைத்தையும் தேவனிடம் திரும்பக் கொடுக்க பொறுப்பேற்றுக்கொண்டான்

தேவன் சாத்தானை நோக்கி, “அவனுடையது எல்லாம் உன் கையில் இருக்கிறது; அவன் மீது மாத்திரம் உன் கையை வைக்காதே” என்றார். சாத்தான் புறப்பட்டது, அதன்பிறகு யோபு கடுமையான திடீர் தாக்குதல்களுக்கு ஆளானான். முதலாவதாக, அவனுடைய எருதுகளும் கழுதைகளும் கொள்ளையடிக்கப்பட்டன, அவனுடைய ஊழியர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அடுத்ததாக, அவனுடைய ஆடுகளும் இன்னும் சில ஊழியர்களும் நெருப்பில் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, அவனுடைய ஒட்டகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன, இன்னும் அதிகமான ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இறுதியாக, அவனது மகன்கள் மற்றும் மகள்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இந்தத் தொடர் தாக்குதல்கள் முதல் சோதனையின் போது யோபு அனுபவித்த வேதனையாகும். தேவனால் கட்டளையிடப்பட்டபடி, இந்தத் தாக்குதல்களின் போது சாத்தான் யோபுவின் சொத்துக்களையும் அவனது பிள்ளைகளையும் மட்டுமே குறிவைத்தான். யோபுவுக்குத் தீங்கு செய்யவில்லை. ஆயினும்கூட, யோபு உடனடியாகப் பெரும் செல்வம் கொண்ட ஒரு பணக்காரனிடமிருந்து எதுவும் இல்லாத ஒருவனாக மாற்றப்பட்டான். வியக்கத்தக்க விசித்திரமான இந்த அடியை யாரும் தாங்கிக் கொள்ளவோ அல்லது அதற்குச் சரியாக பதிலளிக்கவோ முடியாது. ஆனாலும் யோபு தனது அசாதாரண பக்கத்தை நிரூபித்தான். வேதவாக்கியங்கள் பின்வரும் விவரத்தை வழங்குகின்றன: “அப்பொழுது யோபு எழுந்து, தன் போர்வையைக் கிழித்து, தலை முடியை சிரைத்து, தரையில் விழுந்து வணங்கினான்.” யோபு தனது குழந்தைகளையும் சொத்துக்களையும் இழந்துவிட்டான் என்று கேள்விப்பட்டபின் யோபுவிடம் வெளிப்பட்ட முதல் எதிர்வினை இதுவாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் ஆச்சரியமாகவோ, பீதியுடனோ தோன்றவில்லை. அவன் கோபத்தை அல்லது வெறுப்பை வெளிப்படுத்தவில்லை. அப்படியானால், இந்தப் பேரழிவுகள் ஒரு விபத்து அல்ல, அல்லது மனிதனுடைய கையிலிருந்து பிறந்தவை அல்ல, அவை பழிவாங்கல் அல்லது தண்டனையின் வருகையும் இல்லை. மாறாக, யேகோவாவின் சோதனைகள் அவர்மீது வந்தன, யேகோவா தான் தன் சொத்தையும் குழந்தைகளையும் எடுத்துக் கொள்ள விரும்பினார் என்பதை அவன் ஏற்கனவே உணர்ந்திருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். யோபு அப்போது மிகவும் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தான். அவனது பரிபூரண மற்றும் நேர்மையான மனிதம் அவனுக்கு ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து பகுத்தறிவுடனும் இயற்கையாகவும் துல்லியமான தீர்ப்புகளையும் முடிவுகளையும் எடுக்க உதவியது. இதன் விளைவாக அவன் அசாதாரண அமைதியுடன் நடந்து கொண்டான். “அப்பொழுது யோபு எழுந்து, தன் போர்வையைக் கிழித்து, தலை முடியை சிரைத்து, தரையில் விழுந்து வணங்கினான்.” “தன் போர்வையைக் கிழித்து” என்பதற்கு அவன் ஆடை அணியவில்லை, அவரிடம் எதுவும் இல்லை என்று அர்த்தமாகிறது. “தலை முடியை சிரைத்து” என்பதற்கு அவன் புதிதாகப் பிறந்த குழந்தையாக தேவனுக்கு முன்பாக திரும்பிவிட்டான் என்று அர்த்தமாகிறது. “தரையில் விழுந்து வணங்கினான்” என்பதற்கு அவ ன் நிர்வாணமாக உலகிற்கு வந்துவிட்டான், இன்றும் எதுவும் இல்லாமல், அவன் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல தேவனிடம் திரும்பினான் என்று அர்த்தமாகிறது. தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் பற்றிய யோபுவின் அணுகுமுறையை தேவனுடைய எந்த உயிரினத்தினாலும் பெற முடியாது. யேகோவா மீதான அவனுடைய விசுவாசமானது விசுவாசத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது ஆகும். இதுவே அவனது தேவ பயம், தேவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியனவாகும். தனக்கு தேவன் கொடுத்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல், அவரிடமிருந்து எடுத்ததற்கும் அவனால் நன்றி செலுத்த முடிந்தது. மேலும், அவன் தன்னுடைய ஜீவிதம் உட்பட, தனக்குச் சொந்தமான அனைத்தையும் தேவனிடம் திருப்ப அவனால் பொறுப்பை எடுத்துக் கொள்ள முடிந்தது.

யோபுவின் பயமும் தேவனுக்கான கீழ்ப்படிதலும் மனிதகுலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அவனுடைய பரிபூரணமும் நேர்மையும் மனிதனிடம் இருக்க வேண்டிய மனிதகுலத்திற்கான உச்சமாக இருந்தது. அவன் தேவனைக் காணவில்லை என்றாலும், தேவன் உண்மையிலேயே இருப்பதை அவன் உணர்ந்தான். இந்த உணர்தலால் அவன் தேவனுக்கு அஞ்சினான். தேவ பயம் காரணமாக அவன் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்தது. அவன் தன்னிடம் உள்ளதை எடுத்துக்கொள்ள தேவனுக்கு விடுதலையான கட்டுப்பாட்டைக் கொடுத்தான். ஆனாலும் அவன் குறை கூறவில்லை. தேவனுக்கு முன்பாகப் பணிந்து, இந்தத் தருணத்தில், தேவன் தம்முடைய மாம்சத்தை எடுத்துக் கொண்டாலும், அவன் குறை கூறாமல் மகிழ்ச்சியுடன் தேவனை அவ்வாறு செய்ய அனுமதிப்பது போல இருந்தான். அவனது முழு நடத்தை அவனது பூரணமான மற்றும் நேர்மையான மனிதத்தின் விளைவாக இருந்தது. அதாவது, தனது அப்பாவித்தனம், நேர்மை மற்றும் தயவின் விளைவாக, யோபு தேவன் இருப்பதை உணர்ந்துகொள்வதிலும் அனுபவத்திலும் உறுதியாக இருந்தான். இந்த அஸ்திவாரத்தின் மீது அவன் தனக்குத்தானே கோரிக்கைகளை முன்வைத்து, எல்லாவற்றிலும், தேவனுடைய வழிகாட்டுதலுக்கும், அவன் கண்ட தேவனுடைய செயல்களுக்கும் ஏற்ப தேவன் முன்பாக தனது சிந்தனை, நடத்தை, குணம் மற்றும் செயல்களின் கொள்கைகளைத் தரநிலைப்படுத்தினான். காலப்போக்கில், அவனுடைய அனுபவங்கள் அவனுக்கு ஒரு மெய்யான மற்றும் உண்மையான பயத்தை ஏற்படுத்தி அவனைத் தீமையிலிருந்து விலகச் செய்தன. யோபு உறுதியாக வைத்திருந்த ஒருமைப்பாட்டின் ஆதாரம் இதுதான். யோபு ஒரு நேர்மையான, தூய்மையான மற்றும் கனிவான மனிதத்தைக் கொண்டிருந்தான். அவன் தேவனுக்குப் பயந்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான உண்மையான அனுபவத்தையும், “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்.” என்பதையும் அறிந்திருந்தான். இவற்றின் காரணமாக மட்டுமே சாத்தானுடைய இத்தகைய கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில் அவன் தனது சாட்சியில் உறுதியாக நிற்க முடிந்தது, மேலும் அவற்றின் காரணமாகவே அவன் தேவனை ஏமாற்றாமல் இருக்கவும், தேவனுடைய சோதனைகள் அவன் மீது வரும்போது தேவனுக்குத் திருப்திகரமான பதிலை அளிக்கவும் முடிந்தது. முதல் சோதனையின்போது யோபுவின் நடத்தை மிகவும் நேர்மையானது என்றாலும், ஜீவகால முழுதும் முயற்சித்தப் பிறகும் இதுபோன்ற நேர்மையை அடைவதற்கான உறுதி பிற்கால தலைமுறையினரிடம் இல்லை மற்றும் மேலே விவரிக்கப்பட்ட யோபுவின் நடத்தையை அவர்கள் கொண்டிருக்க மாட்டார்கள். இன்று, யோபுவின் நேர்மையான நடத்தையைப் பார்க்கையில், இதை, தேவனை நம்புவதாகவும் தேவனைப் பின்பற்றுவதாகவும் கூறுபவர்களால் தேவனிடம் காட்டப்படும் “மரணபரியந்தம் உள்ள பூரணமான கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசத்தின்” கூக்குரல்கள் மற்றும் தீர்மானத்துடன் ஒப்பிடுகையில், நீங்கள் மிகவும் வெட்கமாக உணர்கிறீர்களா இல்லையா?

யோபுவும் அவனுடைய குடும்பத்தினரும் அனுபவித்த எல்லாவற்றையும் வேதாகமத்தில் படிக்கும்போது, உன் எதிர்வினை என்னவாக இருக்கிறது? உங்கள் எண்ணங்களில் நீங்கள் தொலைந்து போகிறீர்களா? நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? யோபுவுக்கு ஏற்பட்ட சோதனைகளைத் “திகிலூட்டுகிறது” என்று விவரிக்க முடியுமா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேத வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி யோபுவின் சோதனைகளைப் படிக்கையில் நிஜ ஜீவிதத்தில் அவை எப்படி இருந்திருக்கும் என்று பயமுறுத்துகிறது. அப்படியானால், யோபுவுக்கு நேர்ந்தது ஒரு “பயிற்சி” அல்ல, உண்மையான “துப்பாக்கிகள்” மற்றும் “தோட்டாக்கள்” இடம்பெறும் ஓர் உண்மையான “யுத்தம்” என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் இந்தச் சோதனைகளுக்குள் அவன் யாருடைய கரத்தால் உட்படுத்தப்பட்டான்? அவை நிச்சயமாகச் சாத்தானுடைய கிரியையாக இருந்தன. சாத்தான் தன் கரங்களால் இவற்றைச் செய்தது. இருந்தபோதிலும், இந்த விஷயங்கள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேவன் சாத்தானிடம் யோபுவைச் சோதிக்க சொன்னாரா? அவர் அவ்வாறு செய்யவில்லை. சாத்தான் கடைபிடிக்க வேண்டிய ஒரு நிபந்தனையை மட்டுமே தேவன் சொன்னார். அதன் பிறகு யோபுவின் மீது சோதனை வந்தது. யோபுவின் மீது சோதனை வந்தபோது, அது சாத்தானுடைய தீமை மற்றும் அசிங்கத்தையும், மனிதனுக்கான தீங்கிழைப்பையும், வெறுப்பையும், தேவனுக்கு எதிரான விரோதத்தையும் உணர்த்தியது. இந்தச் சோதனையானது எவ்வளவு கொடூரமானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதை இதில் காண்கிறோம். மனிதனைத் துஷ்பிரயோகம் செய்த சாத்தானுடைய தீங்கிழைக்கும் தன்மையும், அதன் அசிங்கமான முகமும் இந்தத் தருணத்தில் பூரணமாக வெளிப்பட்டன என்று கூறலாம். தேவனுடைய அனுமதியுடன் கிடைத்த இந்த வாய்ப்பைச் சாத்தான் பயன்படுத்தி, யோபுவை வெறிகொண்ட மற்றும் இரக்கமில்லாத துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த, சாத்தான் பயன்படுத்திய கொடுமையான முறை மற்றும் நிலை இன்றைய ஜனங்களுக்குக் கற்பனை செய்ய முடியாதது மற்றும் முற்றிலும் சகிக்க முடியாதது ஆகும். யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டான் என்றும், இந்தச் சோதனையின்போது அவன் அளித்த சாட்சியில் அவன் உறுதியாக நின்றான் என்றும் சொல்வதற்குப் பதிலாக, தேவன் அவனுக்காக முன்வைத்த சோதனைகளில், யோபு தன் நேர்மையையும் பூரணத்தையும் பாதுகாக்க மற்றும் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பாதுகாக்கச் சாத்தானுடன் ஒரு போட்டியைத் தொடங்கினான் என்று சொல்வது நன்றாக இருக்கும். இந்தப் போட்டியில், யோபு மிகவும் அதிக மதிப்பிலான ஆடுகளையும் கால்நடைகளையும் இழந்தான். அவன் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தான். அவன் தனது மகன்களையும் மகள்களையும் இழந்தான். இருப்பினும், அவன் தனது பரிபூரணத்தையோ, நேர்மையையோ, தேவ பயத்தையோ கைவிடவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தானுடனான இந்தப் போட்டியில், யோபு தனது பரிபூரணத்தையும், நேர்மையையும், தேவனுக்குப் பயப்படுவதையும் இழப்பதை விட, அவருடைய சொத்து மற்றும் பிள்ளைகளை இழக்க விரும்பினான். ஒரு மனிதனாக இருப்பதன் அர்த்தத்தின் மூலத்தைப் பிடித்துக் கொள்ள அவன் விரும்பினான். யோபு தனது சொத்துக்களை இழந்த முழு செயல்முறையின் சுருக்கமான விவரத்தை வேதவாக்கியங்கள் வழங்குகின்றன. யோபுவின் நடத்தை மற்றும் அணுகுமுறையை அவை ஆவணப்படுத்துகின்றன. இந்தச் சோதனையை எதிர்கொள்வதில் யோபு ஏறக்குறைய நிதானமாக இருந்தான் என்ற உணர்வை இந்தக் கடுமையான, சுருக்கமான விவரங்கள் தருகின்றன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்றால்—சாத்தானுடைய தீங்கிழைக்கும் குணத்தையும் கருத்தில் கொள்கையில்—இந்த வாக்கியங்களில் விவரித்தபடி விஷயங்கள் சாதாரணமாகவோ அல்லது எளிதாகவோ இருக்காது. உண்மை மிகவும் மோசமானதாக இருந்தது. மனிதகுலத்தின் மீதும், தேவன் அங்கீகரிக்கும் அனைவரின் மீதும் சாத்தான் நடத்தும் பேரழிவு மற்றும் வெறுப்பின் நிலை இதுதான். சாத்தான் யோபுவுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று தேவன் கேட்கவில்லை என்றால், சாத்தான் சந்தேகத்திற்கு இடமின்றி அவனைக் கொன்றிருப்பான். யாரும் தேவனை வணங்குவதை சாத்தான் விரும்பவில்லை. தேவனுடைய பார்வையில் நீதிமான்களும், பரிபூரணரும் நேர்மையானவர்களும் தொடர்ந்து தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதை சாத்தான் விரும்புவதில்லை. ஜனங்கள் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் சாத்தானைத் தவிர்ப்பது மற்றும் கைவிடுவது என்று அர்த்தமாகும். ஆகவே, தன் கோபத்தை எல்லாம் சேர்த்து, தயவு இல்லாமல் யோபுவை வெறுக்க தேவனுடைய அனுமதியைச் சாத்தான் பயன்படுத்திக் கொண்டான். அப்படியானால், யோபு மனதில் இருந்து மாம்சம் வரை, உள்ளிருந்து வெளியே வரை எவ்வளவாக வேதனை அனுபவித்தான் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். இன்று, அந்த நேரத்தில் அது எப்படி இருந்தது என்பதை நாம் காணவில்லை. யோபு வேதனைக்குள்ளான அந்த நேரத்தில் அவனிடமிருந்த அவனுடைய உணர்ச்சிகளின் சுருக்கமான பார்வையை வேதாகமத்தின் விவரங்களிலிருந்து மட்டுமே பெற முடியும்.

யோபுவின் அசைக்க முடியாத நேர்மை சாத்தானுக்கு வெட்கத்தைத் தந்து, அதைப் பீதியில் ஓடச் செய்கிறது

ஆகவே, யோபு இந்த வேதனைக்கு ஆளானபோது தேவன் என்ன செய்தார்? தேவன் பார்த்தார், கவனித்தார், அதன் விளைவுக்காகக் காத்திருந்தார். தேவன் கவனித்துப் பார்த்தபோது, அவர் எப்படி உணர்ந்தார்? அவர் நிச்சயமாக வருத்தத்தை உணர்ந்தார். ஆனால், யோபுவைச் சோதித்துப் பார்க்க சாத்தானை அனுமதித்ததற்கு தேவன் வருத்தப்பட்டிருக்க முடியுமா? பதில், இல்லை. அவர் அத்தகைய வருத்தத்தை உணர்ந்திருக்க முடியாது. ஏனென்றால், யோபு பரிபூரணன், நேர்மையானவன் என்று அவர் உறுதியாக நம்பினார். யோபு தேவனுக்கு அஞ்சினான், தீமையைத் தவிர்த்தான். தேவனுக்கு முன்பாக யோபுவின் நீதியைச் சரிபார்க்கவும், சாத்தானுடைய சொந்தத் துன்மார்க்கத்தையும் அவமதிப்பையும் வெளிப்படுத்தவும் தேவன் சாத்தானுக்கு வாய்ப்பளித்திருந்தார். மேலும், உலக ஜனங்களுக்கும் சாத்தானுக்கும், தேவனைப் பின்பற்றுபவர்களுக்கும் முன்பாக உள்ள யோபுவின் நீதியை, தெய்வ பயத்தை, தீமையைத் தவிர்த்தலை சோதிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாகும். யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடு சரியானது மற்றும் பிழையில்லாமல் இருந்தது என்பதை இறுதி முடிவு நிரூபித்ததா? யோபு உண்மையில் சாத்தானை வென்றானா? யோபுவால் பேசப்பட்ட பழமையான சொற்களைப் பற்றி, அதாவது அவன் சாத்தானை ஜெயித்தான் என்பதற்கான சான்றுகளைப் பற்றி இங்கே படித்தோம். அவன் சொன்னான்: “நான் நிர்வாணமாக என் தாயின் கருவிலிருந்து வந்தேன், நிர்வாணமாக நான் அங்கேயே திரும்புவேன்.” இது தேவனுக்கான கீழ்ப்படிதலைப் பற்றிய யோபுவின் அணுகுமுறை ஆகும். அடுத்ததாக அவன் சொன்னான்: “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” யோபுவால் பேசப்பட்ட இந்த வார்த்தைகள், மனிதனுடைய இருதயத்தின் ஆழத்தை தேவன் கவனிக்கிறார் என்பதையும், மனிதனுடைய மனதை அவரால் கவனிக்க முடிகிறது என்பதையும் நிரூபிக்கின்றன. யோபுவுக்கு அவர் அளித்த ஒப்புதல் பிழையில்லாமல் இருக்கிறது என்பதையும், தேவனால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மனிதன் நீதியுள்ளவன் என்பதையும் நிரூபிக்கின்றன. “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” இந்த வார்த்தைகள் தேவனுக்கான யோபுவின் சாட்சி ஆகும். இந்தச் சாதாரண வார்த்தைகள்தான் சாத்தானைப் பயமுறுத்தியது. அதன் மீது அவமானத்தைக் கொண்டு வந்து பீதியில் ஓடச் செய்தது. மேலும், சாத்தானைக் கட்டி, வளங்கள் இல்லாத வகையில் விட்டுவிட்டது. ஆகவே, இந்த வார்த்தைகள் யேகோவா தேவனுடைய செயல்களின் அதிசயத்தையும் வல்லமையையும் சாத்தானுக்கு உணர்த்தின. தேவனால் ஆளப்படும் இருதயம் கொண்ட ஒருவரின் அசாதாரண கிருபையை உணர அனுமதித்தது. மேலும் அவை, தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமையைத் தவிர்ப்பதற்கும் ஒரு சிறிய மற்றும் அற்பமான மனிதன் காட்டிய வல்லமை வாய்ந்த ஜீவித பெலனைச் சாத்தானுக்கு விளக்கிக் காட்டின. இவ்வாறு முதல் போட்டியில் சாத்தான் தோற்கடிக்கப்பட்டான். “இதிலிருந்து கற்றுக்கொண்ட” போதிலும், சாத்தானுக்கு யோபுவை விடுவிக்கும் எண்ணம் இல்லை. அதன் தீங்கிழைக்கும் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. சாத்தான் யோபுவைத் தாக்க முயன்றது. ஆகவே மீண்டும் ஒரு முறை தேவனுக்கு முன்பாக வந்தது …

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 43

சாத்தான் மீண்டும் ஒரு முறை யோபுவைத் தூண்டுகிறது (யோபுவின் சரீரமெங்கும் கொடிய பருக்கள் உதிர்கின்றன) (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

a. தேவன் பேசிய வார்த்தைகள்

யோபு 2:3  அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். முகாந்திரமில்லாமல் அவனை அழிக்க நீ என்னை ஏவின போதும், அவன் இன்னும் தன் நேர்மையில் உறுதியாக இருக்கிறான் என்றார்.

யோபு 2:6  அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையில் இருக்கிறான்; ஆனாலும் அவன் உயிரை மட்டும் விட்டுவிடு என்றார்.

b. சாத்தான் பேசிய வார்த்தைகள்

யோபு 2:4-5  அதற்கு சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான் என்றான்.

c. யோபு எவ்வாறு சோதனையை மேற்கொண்டான்

யோபு 2:9-10  அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

யோபு 3:3-4  நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக. அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்.

தேவனுடைய வழியின் மீதான யோபுவின் அன்பு மற்ற அனைத்தையும் கடந்து உள்ளது

தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் பேசப்பட்ட வார்த்தைகளை வேதம் பின்வருமாறு ஆவணப்படுத்துகிறது: “அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். முகாந்திரமில்லாமல் அவனை அழிக்க நீ என்னை ஏவின போதும், அவன் இன்னும் தன் நேர்மையில் உறுதியாக இருக்கிறான் என்றார்” (யோபு 2:3). இந்தப் பரிமாற்றத்தில், தேவன் அதே கேள்வியை சாத்தானிடம் மீண்டும் கேட்கிறார். இது ஒரு கேள்வியாகும், இது முதல் சோதனையின்போது யோபுவால் நிரூபிக்கப்பட்ட மற்றும் ஜீவித்துக் காட்டியதைப் பற்றிய யேகோவா தேவனுடைய உறுதிப்படுத்தும் மதிப்பீட்டைக் காட்டுகிறது. இது சாத்தானுடைய சோதனைக்கு முன்னான யோபுவைப் பற்றிய தேவனுடைய மதிப்பீட்டிற்கு வேறுபட்டதல்ல. அதாவது, சோதனையானது யோபுவின் மீது வருவதற்கு முன்பு, தேவனுடைய பார்வையில் யோபு பரிபூரணராக இருந்தான். இதனால் தேவன் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதுகாத்து, அவனை ஆசீர்வதித்தார். அவன் தேவனுடைய பார்வையில் ஆசீர்வதிக்கப்படுவதற்குத் தகுதியானவன். சோதனையின் பின்னர், யோபு தன் சொத்துக்களையும் பிள்ளைகளையும் இழந்ததால் உதடுகளால் பாவம் செய்யவில்லை. மாறாக யேகோவாவின் நாமத்தைத் தொடர்ந்து புகழ்ந்தான். அவனது உண்மையான நடத்தையானது தேவனை அவனைப் பாராட்ட வைத்தது. அதன் காரணமாக தேவன் அவனுக்கு முழு மதிப்பெண்களையும் கொடுத்தார். ஏனென்றால், யோபுவின் பார்வையில், அவன் தேவனைத் துறக்க அவனுடைய சந்ததியோ, சொத்துக்களோ போதுமானதாக இல்லை. வேறுவிதமாகக் கூறினால், அவனுடைய இருதயத்தில் உள்ள தேவனுக்கான இடத்தை, அவனுடைய பிள்ளைகளாலோ, எந்தவொரு சொத்தாலோ மாற்ற முடியாது. அவன் தேவன் மீது வைத்திருக்கும் அன்பும், தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமையைத் தவிர்ப்பதற்கும் அவன் கொண்டிருந்த அன்பும் எல்லாவற்றையும் விட அதிகமாக இருப்பதாகத் தன்னுடைய முதல் சோதனையின்போது காட்டினார். யேகோவா தேவனிடமிருந்து வெகுமதியைப் பெறும் அனுபவத்தையும், சொத்துகளையும் குழந்தைகளையும் தேவனிடம் இழக்கும் அனுபவத்தையும் யோபுவுக்கு இந்தச் சோதனை தந்தது.

யோபுவைப் பொறுத்தவரையில், இது அவனுடைய ஆத்துமாவைச் சுத்தமாகக் கழுவிய ஓர் உண்மையான அனுபவம் ஆகும். இது அவனுடைய ஞானஸ்நானம். அவன் இருப்பதின் நோக்கத்தை நிறைவேற்றியதாகும். மேலும், இது அவனுடைய கீழ்ப்படிதலையும், தேவ பயத்தையும் சோதித்த ஓர் ஆடம்பரமான பந்தியாகும். இந்தச் சோதனையானது, யோபுவை ஐசுவரியவான் என்னும் நிலையிலிருந்து ஒன்றுமில்லாதவனாக மாற்றியது. சாத்தான் மனிதகுலத்தைத் துஷ்பிரயோகம் செய்வதை அனுபவிக்கவும் இது அனுமதித்தது. அவனுடைய வறுமையானது சாத்தானை வெறுக்கச் செய்யவில்லை. மாறாக, அவன் சாத்தானுடைய கேவலமான கிரியைகளில் சாத்தானுடைய அசுத்தத்தையும் அவமதிப்பையும், சாத்தானுடைய பகை மற்றும் தேவனுக்கு எதிரான கலகத்தையும் கண்டான். மேலும், தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமையைத் தவிர்ப்பதற்கும் எப்போதும் உறுதியுடன் இருக்க அது அவனை ஊக்குவித்தது. சொத்து, குழந்தைகள் அல்லது உறவினர்கள் போன்ற வெளிப்புற காரணிகளால் நான் ஒருபோதும் தேவனைக் கைவிடமாட்டேன், தேவனுடைய வழியில் பின்வாங்க மாட்டேன் என்று அவன் சத்தியம் செய்தான். அவன் ஒருபோதும் சாத்தானுக்கோ, சொத்துக்களுக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ அடிமையாக இருக்க மாட்டான் என்றும் யேகோவா தேவனைத் தவிர, யாரும் அவனுடைய கர்த்தராகவோ அல்லது தேவனாகவோ இருக்க முடியாது என்றும் அவன் சத்தியம் செய்தார். யோபுவின் நோக்கம் அத்தகையவை. மறுபுறம், யோபுவும் இந்தச் சோதனையிலிருந்து சிலவற்றைப் பெற்றுக் கொண்டான்: தேவன் அவனுக்குக் கொடுத்த சோதனைகளுக்கு மத்தியில் அவன் பெரும் செல்வத்தைப் பெற்றான்.

முந்தைய பல தசாப்தங்களாக யோபுவின் ஜீவிதத்தில், அவன் யேகோவாவின் கிரியைகளைக் கண்டான், யேகோவா தேவனுடைய ஆசீர்வாதங்களைத் தனக்கெனப் பெற்றுக்கொண்டான். அந்த ஆசீர்வாதங்களால் கவலையாகவும் கடன்பட்டதாகவும் உணர்ந்தான். ஏனென்றால், அவன் தேவனுக்காக எதுவும் செய்யவில்லை என்று நம்பினான். ஆனாலும் இதுபோன்ற பெரிய ஆசீர்வாதங்களைப் பெற்றான். இவ்வளவு பெரிய கிருபையை அனுபவித்தான். இந்தக் காரணத்திற்காக, அவன் அடிக்கடி மனதில் ஜெபித்து தேவனுக்குத் திருப்பிச் செலுத்த முடியும் என்று நம்பினான். தேவனுடைய செயல்களுக்கும் மகத்துவத்திற்கும் சாட்சி அளிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினான். தேவன் தனது கீழ்ப்படிதலைச் சோதனைக்கு உட்படுத்துவார் என்று நம்பினான். மேலும், அவனுடைய கீழ்ப்படிதலும் விசுவாசமும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறும் வரை அவனுடைய விசுவாசம் சுத்திகரிக்கப்படும் என்றும் நம்பினான். பின்னர், யோபுவின் மீது சோதனை வந்தபோது, தேவன் தம்முடைய ஜெபங்களைக் கேட்டதாக அவன் நம்பினான். யோபு இந்த வாய்ப்பை எல்லாவற்றையும் விட அதிகமாக நேசித்தான். இதனால் அவன் அதை லேசாக நடத்தத் துணியவில்லை. ஏனென்றால், அவனுடைய ஜீவ காலம் முழுவதுக்குமான ஆசை நிறைவேற்றப்பட்டது. இந்த வாய்ப்பின் வருகையானது, அவனுடைய கீழ்ப்படிதலும், தேவ பயமும் சோதிக்கப்படலாம், தூய்மையாக்கப்படலாம் என்பதைக் குறித்தது. மேலும், தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற யோபுவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, இதன் மூலமாக அவனை தேவனிடம் நெருங்கி வரச் செய்தது என்பதைக் குறித்தது. சோதனையின் போது, அத்தகைய நம்பிக்கையும் நாட்டமும் அவனை மிகவும் பரிபூரணமாக்கவும், தேவனுடைய சித்தத்தைப் பற்றி அதிக புரிதலைப் பெறவும் அனுமதித்தது. தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கும் கிருபைகளுக்கும் யோபு மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தான். தன் இருதயத்தில் தேவனுடைய செயல்களுக்கு அதிகப் புகழ்ச்சியை ஊற்றினான். அவன் தேவனுக்கு மிகவும் பயந்தவனாகவும் பயபக்தியுடனும் இருந்தான். தேவனுடைய அன்பு, மகத்துவம் மற்றும் பரிசுத்ததிற்காக அதிகம் ஏங்கினான். இந்த நேரத்தில், யோபு இன்னும் தேவனுக்குப் பயந்து, தேவனுடைய பார்வையில் தீமையைத் தவிர்த்தான் என்றாலும், அவனுடைய அனுபவங்களைப் பொறுத்தவரையில், யோபுவின் நம்பிக்கையும் அறிவும் விரைவாக முன்னேறின: அவனுடைய விசுவாசம் அதிகரித்தது, அவனுடைய கீழ்ப்படிதல் கால் ஊன்ற ஓர் இடத்தைப் பெற்றது. தேவ பயம் இன்னும் ஆழமாகிவிட்டது. இந்தச் சோதனை யோபுவின் ஆவியையும் ஜீவிதத்தையும் மாற்றியிருந்தாலும், அத்தகைய மாற்றம் யோபுவைத் திருப்திப்படுத்தவுமில்லை, அவனது முன்னேற்றத்தை மெதுவாக்கவுமில்லை. இந்தச் சோதனையிலிருந்து அவன் பெற்றதைக் கணக்கிட்டு, தனது சொந்த குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, அமைதியாக ஜெபம் செய்தான். அடுத்த சோதனை அவன் மீது வரும் வரை காத்திருந்தான். ஏனென்றால், தேவனுடைய அடுத்த சோதனையின் போது தனது விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் தெய்வ பயம் ஆகியவை உயர்த்தப்பட வேண்டும் என்று அவன் ஏங்கினான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 44

சாத்தான் மீண்டும் ஒரு முறை யோபுவைத் தூண்டுகிறது (யோபுவின் சரீரமெங்கும் கொடிய பருக்கள் உதிர்கின்றன) (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

a. தேவன் பேசிய வார்த்தைகள்

யோபு 2:3  அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். முகாந்திரமில்லாமல் அவனை அழிக்க நீ என்னை ஏவின போதும், அவன் இன்னும் தன் நேர்மையில் உறுதியாக இருக்கிறான் என்றார்.

யோபு 2:6  அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையில் இருக்கிறான்; ஆனாலும் அவன் உயிரை மட்டும் விட்டுவிடு என்றார்.

b. சாத்தான் பேசிய வார்த்தைகள்

யோபு 2:4-5  அதற்கு சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான் என்றான்.

தீவிரமான துன்பங்களுக்கு மத்தியில், யோபு மனிதகுலத்திற்கான தேவனுடைய கவனிப்பை மெய்யாகவே உணர்கிறான்

சாத்தானிடம் கேட்கப்பட்ட யேகோவா தேவனுடைய கேள்விகளினால், ரகசியமாக சாத்தான் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், தேவனுடைய பார்வையில் பரிபூரணமான மனிதனைத் தாக்க, அது மீண்டும் ஒரு முறை அனுமதிக்கப்படும் என்று சாத்தான் அறிந்திருந்தது—சாத்தானைப் பொறுத்தவரையில், அது ஓர் அரிய வாய்ப்பாகும். யோபுவின் நம்பிக்கையை முற்றிலுமாக மதிப்பு குறையச் செய்யவும், தேவன் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யவும், இதனால் தேவனுக்குப் பயப்படவோ அல்லது யேகோவாவின் நாமத்தை ஸ்தோத்தரிக்கவோ கூடாது என்பதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்த சாத்தான் விரும்பியது. இது சாத்தானுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும்: இடம் அல்லது நேரம் எதுவாக இருந்தாலும், அது யோபுவை அதன் கட்டளைக்கு ஏற்ப ஒரு விளையாட்டுப் பொருளாக மாற்ற முடியும். சாத்தான் அதன் பொல்லாத நோக்கங்களைத் தடயமின்றி மறைத்து. ஆனால் தன் தீய குணத்தை அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. வேதவசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யேகோவா தேவனுடைய வார்த்தைகளுக்கான பதிலில் இந்த உண்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: “அதற்கு சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான் என்றான்” (யோபு 2:4-5). தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இந்தப் பரிமாற்றத்திலிருந்து சாத்தானுடைய தீங்கிழைக்கும் தன்மை பற்றிய கணிசமான அறிவையும் உணர்வையும் பெறாமல் இருப்பதற்குச் சாத்தியமில்லை. சாத்தானுடைய இந்தப் பொய்யைக் கேட்டபின், சத்தியத்தை நேசிப்பவர்களும் தீமையை வெறுப்பவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி சாத்தானுடைய அறியாமை மற்றும் வெட்கக்கேடான குணத்தை வெறுப்பார்கள். சாத்தானுடைய தவறுகளால் திகைத்து வெறுப்படைவார்கள். அதே சமயம், யோபுவுக்கு ஆழ்ந்த பிரார்த்தனைகளையும், ஆழ்ந்த விருப்பங்களையும் அளிப்பார்கள். நேர்மையான இந்த மனிதர் பரிபூரணத்தை அடைய முடியும் என்று பிரார்த்தனை செய்வார்கள். தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் இந்த மனிதன் சாத்தானுடைய சோதனையை என்றென்றுமாக ஜெயித்து தேவனுடைய வழிகாட்டுதலுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் இடையில் வெளிச்சத்தில் ஜீவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆகவே, யோபுவின் நீதியுள்ள செயல்கள் என்றென்றும் தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைத் தொடரும் அனைவரையும், தூண்டி ஊக்குவிக்க வேண்டும் என்று அத்தகைய ஜனங்கள் விரும்புவார்கள். இந்தப் பிரகடனத்தில் சாத்தானுடைய தீங்கிழைக்கும் நோக்கத்தைக் காண முடியும் என்றாலும், சாத்தானுடைய “வேண்டுகோளுக்கு” தேவன் விரைவாக சம்மதித்தார்—ஆனால் அவர் ஒரு நிபந்தனையையும் செய்தார்: “அவன் உன் கையில் இருக்கிறான்; ஆனாலும் அவன் உயிரை மட்டும் விட்டுவிடு” (யோபு 2:6). ஏனெனில், இந்த நேரத்தில், யோபுவின் மாம்சத்திற்கும் எலும்புகளுக்கும் தீங்கு விளைவிப்பதற்காக சாத்தான் தன் கரத்தை நீட்டும்படி கேட்டது. “ஆனாலும் அவன் உயிரை மட்டும் விட்டுவிடு.” என்று தேவன் சொன்னார். இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்றால், அவர் யோபுவின் மாம்சத்தைச் சாத்தானுக்குக் கொடுத்தார். ஆனால் யோபுவின் ஜீவன் பாதுகாக்கப்பட, அது தேவனுடையதாகும். சாத்தானால் யோபுவின் உயிரை எடுக்க முடியவில்லை. ஆனால் இதைத் தவிர சாத்தான் யோபுவுக்கு எதிராக எந்த வழியையும் முறையையும் பயன்படுத்த முடியும்.

தேவனுடைய அனுமதியைப் பெற்ற பிறகு, சாத்தான் யோபுவிடம் விரைந்து சென்று அவன் தோலைத் துன்புறுத்துவதற்காகக் கரத்தை நீட்டினது. அவன் உடலெங்கும் கொடிய பருக்கள் தோன்றின. யோபுவின் தோலில் வலி ஏற்பட்டது. யேகோவா தேவனுடைய அதிசயத்தையும் பரிசுத்தத்தையும் யோபு புகழ்ந்தான். இது சாத்தானை அதன் துணிச்சலில் இன்னும் அப்பட்டமாக்கியது. மனிதனைத் துன்புறுத்துவதன் மகிழ்ச்சியை அது உணர்ந்ததால், சாத்தான் தன் கரத்தை நீட்டி, யோபுவின் மாம்சத்தை வாதித்தது. இதனால் அவனுக்குக் கொடிய பருக்கள் தோன்றியன. ஒத்துழைக்காத தனது மாம்சத்தின் நிமித்தம் யோபு உடனடியாக ஒரு வலியையும் வேதனையையும் உணர்ந்தான். தனது ஆவிக்கு ஏற்பட்ட அடியிலிருந்து விடுபட தன் சரீர வலி உதவும் என்பது போல தலை முதல் கால் வரையில் தன் கரங்களால் பிசைந்துக் கொண்டான். அவனால் அதைத் தடுக்க முடியவில்லை. தேவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான், மேலும் அவன் முடிந்த அளவு தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முயன்றான். “நீ மனிதனுடைய இருதயத்திற்குள் பார்க்கிறாய். அவனுடைய துயரத்தை நீ கவனிக்கிறாய். அவனுடைய பலவீனம் உனக்கு ஏன் கவலை அளிக்கிறது? யேகோவா தேவனுடைய நாமம் புகழப்படும்” என்று அவன் மீண்டும் தரையில் மண்டியிட்டு, கூறினான். யோபுவின் தாங்க முடியாத வேதனையை சாத்தான் கண்டது, ஆனால் யோபு யேகோவா தேவனுடைய நாமத்தைக் கைவிடுவதை அது காணவில்லை. இவ்வாறு அது அவசரமாக யோபுவின் எலும்புகளைத் துன்புறுத்துவதற்காகக் கரத்தை நீட்டியது, அவனது அவயவங்களை ஒவ்வொன்றாகப் பிய்த்தெடுக்க ஆசைப்பட்டது. ஒரு நொடியில், யோபு அதற்கு முன் உணர்ந்திராத வேதனையை உணர்ந்தான். அவனது சதை எலும்புகளிலிருந்து கிழிக்கப்பட்டது போல இருந்தது. அவனது எலும்புகள் துண்டு துண்டாக அடித்து நொறுக்கப்பட்டதைப் போல இருந்தது. வேதனையளிக்கும் இந்த வலியானது, மரிப்பது நல்லது என்று அவனை நினைக்க வைத்தது…. இந்த வலியைத் தாங்கும் அவனது திறன் அதன் வரம்பை எட்டியது…. அவன் கூக்குரலிட விரும்பினான். வலியைக் குறைக்கும் முயற்சியில் அவன் தனது சரீரத்தில் தோலைக் கிழிக்க விரும்பினான்—ஆனாலும் அவன் தனது அலறல்களை அடக்கிக்கொண்டான். தன் சரீரத்தில் உள்ள தோலை அவன் கிழிக்கவில்லை. ஏனெனில், அவனது பலவீனத்தைக் காண சாத்தானை அவன் அனுமதிக்க விரும்பவில்லை. ஆகவே, யோபு மீண்டும் ஒரு முறை மண்டியிட்டான். ஆனால் இந்த நேரத்தில் அவன் யேகோவா தேவன் இருப்பதை உணரவில்லை. யேகோவா தேவன் தனக்கு முன்னும், பின்னும், அவருக்கு இருபுறமும் இருப்பதை அவன் அறிந்திருந்தான். ஆயினும், அவனுடைய வேதனையின் போது, தேவன் ஒருபோதும் அவனைப் பார்க்கவில்லை. அவர் தனது முகத்தை மூடி மறைத்து வைத்திருந்தார். ஏனென்றால், அவர் மனிதனைப் படைத்ததன் அர்த்தம் மனிதனுக்குத் துன்பத்தை ஏற்படுத்துவதல்ல. இந்த நேரத்தில், யோபு அழுது கொண்டிருந்தான். இந்தச் சரீர வேதனையைச் சகித்துக்கொள்ள தன்னால் முடிந்ததைச் செய்தான். ஆனாலும் தேவனுக்கு நன்றி செலுத்தாமல் அவனால் இருக்கமுடியவில்லை. “மனிதன் முதல் அடியில் விழுகிறான், அவன் பலவீனமானவனாகவும் வல்லமையற்றவனாகவும் இருக்கிறான், அவன் இளமையாகவும் அறியாமையில் இருப்பவனாகவும் இருக்கிறான்—அவனிடம் இவ்வளவு அக்கறையுடனும் மென்மையாகவும் இருக்க நீர் ஏன் விரும்புகிறீர்? நீர் என்னைத் தாக்குகிறீர். ஆனாலும் அவ்வாறு செய்வது உம்மைத் துன்புறுத்துகிறது. உம் கவனிப்பு மற்றும் அக்கறைக்குத் தகுதியுள்ளவனாக இருக்க மனிதனிடம் இருப்பது என்ன?” யோபுவின் ஜெபங்கள் தேவனுடைய காதுகளை எட்டின. தேவன் அமைதியாக இருந்தார், எந்தச் சத்தமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்…. தன்னுடைய எந்த தந்திரமும் பயனற்று போனதால் சாத்தான் அமைதியாகப் புறப்பட்டது. ஆனால் இது யோபுவிற்கான தேவனுடைய சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. யோபுவிடம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வல்லமை பகிரங்கப்படுத்தப்படாததால், யோபுவின் கதை சாத்தானுடைய பின்வாங்கலுடன் முடிவடையவில்லை. மற்ற கதாபாத்திரங்கள் நுழைந்ததால், இன்னும் அற்புதமான காட்சிகள் இனி வரவிருக்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 45

எல்லாவற்றிலும் தேவனுடைய நாமத்தை யோபு புகழ்ந்து பேசுவது, யோபுவின் தேவ பயம் மற்றும் தீமையைத் தவிர்த்தலின் மற்றொரு வெளிப்பாடாகும்

யோபு சாத்தானுடைய அழிவுகளை அனுபவித்தான், ஆனாலும் அவன் யேகோவா தேவனுடைய நாமத்தைக் கைவிடவில்லை. அவனது மனைவிதான் முதலில் விலகினாள். மனிதனுடைய கண்களுக்குத் தெரியும் ஒரு வடிவத்தில் அவனது மனைவி சாத்தானுடைய பாத்திரமாகச் செயல்பட்டு, யோபுவைத் தாக்கினாள். மூலமுதலான வேதாகமம் இதை விவரிக்கிறது: “அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்” (யோபு 2:9). மனிதனுடைய போர்வையில் சாத்தான் பேசிய வார்த்தைகள் இவை. அவை ஒரு தாக்குதல் மற்றும் ஒரு குற்றச்சாட்டு ஆகும். அவை ஒரு மயக்கம், சோதனை மற்றும் அவதூறு ஆகும். யோபுவின் மாம்சத்தைத் தாக்குவதில் தோல்வியுற்றதால், சாத்தான் நேரடியாக யோபுவின் உண்மையைத் தாக்கியது. யோபு தனது உண்மையைக் கைவிடவும், தேவனைத் துறக்கவும், இனி ஜீவிக்கக் கூடாது என்பதற்காகவும் இதைப் பயன்படுத்த விரும்பினது. ஆகவே, யோபுவைச் சோதிப்பதற்கு சாத்தான் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பியது: யோபு யேகோவாவின் நாமத்தைக் கைவிட்டால், அவன் அத்தகைய வேதனையைத் தாங்க வேண்டியதில்லை. அவன் மாம்சத்தின் வேதனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். தனது மனைவியின் ஆலோசனையை எதிர்கொண்ட யோபு, “நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” (யோபு 2:10). யோபு இந்த வார்த்தைகளை நீண்ட காலமாக அறிந்திருந்தான். ஆனால் இந்த நேரத்தில் யோபுவின் அறிவின் சத்தியம் நிரூபிக்கப்பட்டது.

தேவனைச் சபித்து மரிக்கும்படி அவனுடைய மனைவி அவனுக்கு அறிவுரை கூறியபோது, அவளுடைய அர்த்தம்: “உம் தேவன் உம்மை இவ்வாறு நடத்துகிறார், ஆகவே அவரை ஏன் சபிக்கக்கூடாது? நீர் இன்னும் என்ன செய்கிறீர்? உம் தேவன் உமக்கு மிகவும் நியாயமற்றவர், ஆனாலும் நீர் ‘யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்.’ என்று சொல்கிறீர். நீர் அவருடைய நாமத்தை துதிக்கும்போது அவர் எப்படி உம் மீது பேரழிவை ஏற்படுத்த முடியும்? சீக்கிரம் தேவனுடைய நாமத்தைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றுவதை விட்டுவிடும். பிறகு, உம் கஷ்டங்கள் முடிந்துவிடும்.” இந்த நேரத்தில், தேவன் யோபுவிடம் பார்க்க விரும்பிய சாட்சி உருவானது. எந்தவொரு சாதாரண மனிதனும் அத்தகைய சாட்சிகளைத் தாங்க முடியாது. வேதாகமத்தின் எந்தக் கதைகளிலும் அதைப் படித்ததில்லை—ஆனால் யோபு இந்த வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்பே தேவன் அதைக் கண்டார். தேவன் சரியானவர் என்பதை நிரூபிக்க யோபுவை அனுமதித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்த தேவன் விரும்பினார். மனைவியின் ஆலோசனையைக் கேட்ட யோபு தனது நேர்மையை விட்டுவிடவில்லை அல்லது தேவனைக் கைவிடவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர் தனது மனைவியிடம் கூறினார்: “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” இந்த வார்த்தைகள் அதிக சாரத்தைக் கொண்டிருக்கின்றனவா? இங்கே, இந்த வார்த்தைகளின் சாரத்தை நிரூபிக்க ஓர் உண்மை மட்டுமே உள்ளது. இந்த வார்த்தைகளின் சாரம் என்னவென்றால், அவை தேவனால் அவருடைய இருதயத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அவை தேவனால் விரும்பப்பட்டவை, அவை தேவன் கேட்க விரும்பியவை மற்றும் அவை தேவன் பார்க்க விரும்பிய விளைவு என்பதாகும். இந்த வார்த்தைகள் யோபுவின் சாட்சியின் மையமாகும். இதில், யோபுவின் பரிபூரணம், நேர்மை, தெய்வ பயம், தீமையைத் தவிர்த்தல் ஆகியவை நிரூபிக்கப்பட்டன. யோபுவின் விலைமதிப்பற்ற தன்மை, அவன் எப்படிச் சோதிக்கப்பட்டான் மற்றும் அவனது சரீரம் முழுவதும் கொடிய பருக்களால் மூடப்பட்டிருந்தாலும், அவன் மிகுந்த வேதனையைச் சகித்தபோதும், அவனுடைய மனைவியும் உறவினர்களும் அவனுக்கு அறிவுரை கூறியபோதும், அவன் இன்னும் அத்தகைய வார்த்தைகளை உச்சரித்தான். இதை வேறு விதமாகச் சொல்வதென்றால், என்ன சோதனைகள் இருந்தாலும், அல்லது எவ்வளவு துன்பங்கள் அல்லது வேதனைகள் இருந்தாலும், மரணமே வந்தாலும், அவன் தேவனைத் துறக்கமாட்டான் அல்லது தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதை விட்டு விடமட்டான் என்று தன் இருதயத்தில் அவன் நம்பினான். அப்படியானால், தேவன் அவனுடைய இருதயத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தார் என்பதையும், அவனுடைய இருதயத்தில் தேவன் மட்டுமே இருந்தார் என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள். இதன் காரணமாகவே அவரைப் பற்றிய விளக்கங்களை வேதவசனங்களில் நாம் வாசிக்கிறோம்: இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. அவன் உதடுகளால் பாவம் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இருதயத்தில் அவன் தேவனைப் பற்றி குறை கூறவில்லை. அவன் தேவனைப் பற்றி புண்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லவில்லை. தேவனுக்கு எதிராக பாவம் செய்யவில்லை. அவனுடைய வாய் தேவனுடைய நாமத்தைத் துதித்தது மட்டுமல்லாமல், அவனுடைய இருதயத்திலும் தேவனுடைய நாமத்தைத் துதித்தான். அவனுடைய வாயும் இருதயமும் ஒன்றுதான். இது தேவனால் காணப்பட்ட உண்மையான யோபு ஆகும். தேவன் யோபுவைப் பொக்கிஷமாகக் கருதியதற்கு இதுவே காரணம்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 46

யோபுவை பற்றி ஜனங்களின் பல தவறானப் புரிதல்கள்

யோபு அனுபவித்த கஷ்டங்கள் தேவனால் அனுப்பப்பட்ட தூதர்களின் கிரியை அல்ல. அது தேவனுடைய கரத்தால் ஏற்படவில்லை. மாறாக, அது தனிப்பட்ட முறையில் தேவனுடைய எதிரியான சாத்தானால் ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, யோபு அனுபவித்த கஷ்டங்களின் அளவு ஆழமானது. ஆயினும்கூட, இந்த நேரத்தில் யோபு தனது இருதயத்தில் தேவனைப் பற்றிய அன்றாட அறிவையும், அன்றாட செயல்களின் கொள்கைகளையும், தேவன்மீது அவர் கொண்ட அணுகுமுறையையும் நிரூபித்தான். இதுதான் உண்மை. யோபு சோதிக்கப்படாவிட்டால், தேவன் யோபுவின் மீது சோதனைகளைச் செய்யவில்லை என்றால், யோபு, “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” என்று சொன்னபோது, யோபு ஒரு கபடவாதி, தேவன் அவனுக்குப் பல சொத்துக்களைக் கொடுத்தார், எனவே, அவன் யேகோவாவின் நாமத்தைத் துதித்தான் என்று நீ கூறியிருப்பாய். சோதனைகளுக்கு ஆட்படுவதற்கு முன்பு, யோபு, “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” என்று கூறியிருந்தால் யோபு மிகைப்படுத்தப்பட்டவன் என்றும், தேவனுடைய கரத்தால் அவன் அடிக்கடி ஆசீர்வதிக்கப்பட்டதால் அவன் தேவனுடைய நாமத்தைக் கைவிட மாட்டான் என்றும் நீ கூறியிருப்பாய். தேவன் அவன் மீது பேரழிவை ஏற்படுத்தியிருந்தால், அவன் நிச்சயமாக தேவனுடைய நாமத்தை கைவிட்டிருப்பான் என்று நீங்கள் கூறியிருப்பீர்கள். ஆயினும், யாரும் விரும்பாத அல்லது பார்க்க விரும்பாத சூழ்நிலைகளில், யாரும் அவர்களுக்கு ஏற்பட விரும்பாத சூழ்நிலைகளில், அவர்களுக்கு நேரிடும் என்று அவர்கள் அஞ்சும் சூழ்நிலைகளில், தேவன் கூட தாங்க முடியாத சூழ்நிலைகளில், யோபு தன்னைக் கண்டபோதும் கூட, யோபு தன்னுடைய நேர்மையைப் பற்றிக்கொண்டான்: “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” மற்றும் “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” இந்த நேரத்தில் யோபுவின் நடத்தையை பார்க்கையில், ஆடம்பரமான வார்த்தைகளையும் எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் பேச விரும்புபவர்கள் அனைவரும் பேச்சில்லாமல் இருக்கிறார்கள். தேவனுடைய நாமத்தைப் பேச்சில் மட்டுமே புகழ்ந்து பேசுபவர்கள், ஆனால் ஒருபோதும் தேவனுடைய சோதனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள், யோபு உறுதியாக வைத்திருந்த நேர்மையால் கண்டிக்கப்படுகிறார்கள். மனிதன் தேவனுடைய வழியில் உறுதியாக இருக்க முடியும் என்று ஒருபோதும் நம்பாதவர்கள் யோபுவின் சாட்சியால் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். இந்தச் சோதனைகளின் போது யோபுவின் நடத்தை மற்றும் அவன் பேசிய வார்த்தைகளைப் பார்த்தால், சிலர் குழப்பமடைவார்கள், சிலர் பொறாமைப்படுவார்கள், சிலர் சந்தேகப்படுவார்கள், சிலர் ஆர்வமற்றவர்களாகத் தோன்றுவார்கள். யோபுவின் சாட்சியை ஏற்கமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் சோதனையின்போது யோபுவுக்கு ஏற்பட்ட வேதனையை அவர்கள் காண்பது மட்டுமல்லாமல், யோபு பேசிய வார்த்தைகளைப் படித்ததோடு மட்டுமல்லாமல், சோதனைகள் வந்தபோது யோபுவால் வெளிப்படுத்தப்பட்ட மனித “பலவீனத்தையும்” அவர்கள் காண்கிறார்கள். இந்தப் “பலவீனம்” யோபுவின் பரிபூரணத்தில் பூரணமற்றதாக, தேவனுடைய பார்வையில் பரிபூரணமாக இருந்த ஒருவன் மனிதனுடைய பார்வையில் கறை உள்ளவனாகக் கருதப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். பரிபூரணமானவர்கள் குறைபாடற்றவர்கள், கறை அற்றவர்கள் அல்லது மோசமானவர்கள் அல்ல, அவர்களுக்குப் பலவீனங்கள் இல்லை, வலி பற்றிய அறிவு இல்லை, அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியற்றவர்களாகவோ மனச்சோர்வடைந்தவர்களாகவோ அவர்களால் உணரமுடியாது, வெறுப்பு அற்றவர்கள் அல்லது வெளிப்புறமாக தீவிரமான நடத்தை இல்லாதவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இதன் விளைவாக, யோபு உண்மையிலேயே பரிபூரணன் என்று பெரும்பான்மையான ஜனங்கள் நம்பவில்லை. அவனது சோதனைகளின் போது அவனது நடத்தையை ஜனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, யோபு தனது சொத்தையும் குழந்தைகளையும் இழந்தபோது, ஜனங்கள் கற்பனை செய்தபடி, அவன் கண்ணீர் சிந்தவில்லை. அவனது “அலங்காரமின்மை” அவன் கடுமையாக இருப்பதாக ஜனங்களை நினைக்க வைக்கிறது. ஏனென்றால் அவன் தனது குடும்பத்தினரிடம் கண்ணீரோ பாசமோ இல்லாமல் இருந்தான். ஜனங்களுக்கு யோபுவின் ஆரம்ப மோசமான எண்ணம் இதுதான். அதன்பிறகு அவனது நடத்தை இன்னும் குழப்பமானதாக அவர்கள் காண்கிறார்கள்: “தன் போர்வையைக் கிழித்து” என்பது தேவனுக்கு அவமரியாதை என்று ஜனங்கள் விளக்குகின்றனர். “தலை முடியை சிரைத்து” என்பது யோபுவின் அவதூறு மற்றும் தேவனுக்கு எதிரான எதிர்ப்பைக் குறிக்கும் ஒன்று என்று தவறாக நம்புகின்றனர். “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” யோபுவின் வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல், தேவனால் புகழப்பட்ட யோபுவினிடத்தில் ஜனங்கள் யாரும் நீதியை உணராமல் இருக்கிறார்கள். ஆகவே அவர்களில் பெரும்பான்மையினரால் செய்யப்பட்ட யோபுவைப் பற்றிய மதிப்பீடானது தவறான அறிவு, தவறான புரிதல், சந்தேகம், கண்டனம் மற்றும் கோட்பாடு சார்ந்த ஒப்புதல் ஆகியவற்றைத் தவிர வேறில்லை. யோபு ஒரு பரிபூரண மற்றும் நேர்மையான மனிதன், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பவன் என்ற யேகோவா தேவனுடைய வார்த்தைகளை அவர்களில் எவராலும் உண்மையிலேயே புரிந்துகொள்ளவும் உணரவும் முடியாது.

மேலே சொல்லப்பட்ட யோபுவைப் பற்றிய அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில், ஜனங்கள் அவனுடைய நீதியைப் பற்றி மேலும் சந்தேகிக்கிறார்கள். ஏனென்றால் யோபுவின் செயல்களும், வேதவசனங்களில் பதிவுசெய்யப்பட்ட அவனது நடத்தையும், ஜனங்கள் கற்பனை செய்ததைப் போல பயங்கரமாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அவன் எந்தவொரு பெரிய சாதனைகளையும் செய்யவில்லை என்பது மட்டுமல்லாமல், சாம்பலுக்கு இடையில் உட்கார்ந்திருக்கும்போது தன்னைச் சுரண்ட ஓர் ஓட்டையும் எடுத்துக் கொண்டான். இந்தச் செயல் ஜனங்களை ஆச்சரியப்படுத்துகிறது. அவர்களைச் சந்தேகிக்க வைக்கிறது—மறுக்கவும் வைக்கிறது. தன்னைத்தானே துடைத்துக் கொள்ளும் போது யோபு ஜெபிக்கவில்லை அல்லது தேவனுக்கு சத்தியம் பண்ணவில்லை. இதுவே யோபுவின் நீதியாகும். மேலும், அவன் வலியின் கண்ணீரைச் சிந்துவதாகக் காணப்படவில்லை. இந்த நேரத்தில், ஜனங்கள் யோபுவின் பலவீனத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே, யோபு சொல்வதைக் கேட்கும்போது கூட “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” அவர்கள் மாறாமல் இருக்கிறார்கள், அல்லது தீர்மானம் செய்யாமல் இருக்கிறார்கள். யோபுவின் நீதியை அவருடைய வார்த்தைகளிலிருந்து இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். யோபு தனது சோதனைகளின் வேதனையின் போது ஜனங்களுக்கு அளிக்கும் அடிப்படை எண்ணம் என்னவென்றால், அவன் திணறவில்லை அல்லது திமிர்பிடித்தவனாக இல்லை என்பதுதான். அவனது நடத்தைக்குப் பின்னால் உள்ள கதையை அவனது இருதயத்தின் ஆழத்தில் ஜனங்கள் காணவில்லை. அவனுடைய இருதயத்திற்குள்ளான தேவ பயத்தையோ அல்லது தீமையைத் தவிர்ப்பதையோ, அல்லது தீமையைத் தவிர்க்கும் வழிமுறையின் கொள்கையை அவன் பின்பற்றுவதையோ அவர்கள் காணவில்லை. அவனுடைய சாந்தமானது, அவனுடைய பரிபூரணமும் நேர்மையும் வெற்று வார்த்தைகள் என்றும், அவனது தேவனைப் பற்றிய பயம் வதந்தி மட்டுமே என்றும் ஜனங்களை நினைக்க வைக்கிறது. இதற்கிடையில், அவன் வெளிப்புறமாக வெளிப்படுத்திய “பலவீனம்” அவர்களிடம் ஓர் ஆழமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு ஒரு “புதிய பார்வையையும்,” தேவன் பூரணாமானவர் மற்றும் நேர்மையானவர் என்று வரையறுக்கும் மனிதனுக்கு ஒரு “புதிய புரிதலையும்” அளிக்கிறது. யோபு வாய் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தபோது அத்தகைய “புதிய பார்வை” மற்றும் “புதிய புரிதல்” நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவன் அனுபவித்த வேதனையின் அளவு எந்த மனிதனுக்கும் கற்பனை செய்யமுடியாதது மற்றும் புரிந்துக்கொள்ள முடியாதது என்றாலும், அவன் தேவ தூஷணம் செய்யவில்லை. ஆனால் தனது சரீரத்தின் வலியைத் தனது சொந்த வழிமுறைகளால் குறைத்தார். வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அவர் கூறினார்: “நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக” (யோபு 3:3). ஒருவேளை, இந்த வார்த்தைகளை இதுவரை யாரும் கருத்தில் கொள்ளாமல் இருந்திருக்கலாம், ஒருவேளை அவற்றில் கவனம் செலுத்தியவர்களும் இருக்கலாம். உங்கள் பார்வையில், யோபு தேவனை எதிர்த்தார் என்று அர்த்தமா? அவை தேவனுக்கு எதிரான புகாரா? யோபு பேசும் இந்த வார்த்தைகளைப் பற்றி உங்களில் பலருக்கு சில யோசனைகள் இருப்பதை நான் அறிவேன். யோபு பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருந்திருந்தால், அவர் எந்தப் பலவீனத்தையும் வருத்தத்தையும் காட்டியிருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக சாத்தானிடமிருந்து எந்தவொரு தாக்குதலையும் நேர்மறையாக எதிர்கொண்டிருக்க வேண்டும். சாத்தானுடைய சோதனையின் முன் சிரிப்பைக் காட்டியிருக்க வேண்டும். சாத்தானால் தன் மாம்சத்தின் மீது கொண்டுவரப்பட்ட எந்தவொரு வேதனைக்கும் அவன் சிறிதளவிலும் எதிர்வினை ஆற்றியிருக்கக் கூடாது. அவனுடைய இருதயத்திற்குள் இருக்கும் எந்த உணர்ச்சிகளையும் அவன் வெளிப்படுத்தியிருக்கக் கூடாது. இந்தச் சோதனைகளை தேவன் இன்னும் கடினமாக்க வேண்டும் என்று அவன் கேட்டிருக்க வேண்டும். உண்மையிலேயே தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்கும், அசைக்க முடியாத மனிதனால் இது நிரூபிக்கப்பட வேண்டும். இந்தக் கடுமையான வேதனையின் மத்தியில், யோபு தனது பிறந்த நாளை சபித்தான். அவன் தேவனைப் பற்றி புகார் செய்யவில்லை, தேவனை எதிர்க்கும் எண்ணமும் இல்லை. இதைச் சொல்வது, செய்து காட்டுவதை விட எளிதானது ஆகும். ஏனென்றால், ஆதி காலம் முதல் இன்று வரை, இதுபோன்ற சோதனையை யாரும் அனுபவித்ததில்லை அல்லது யோபுவுக்கு நேர்ந்ததை அனுபவித்ததில்லை. ஆகவே, யோபுவைப் போன்ற அத்தகைய சோதனையில் ஏன் இதுவரை யாரும் உட்படுத்தப்படவில்லை? ஏனென்றால், தேவன் அதைப் பார்க்கும்போது, அத்தகைய பொறுப்பை அல்லது ஆணையை யாராலும் தாங்க முடியாது, யோபு செய்ததைப் போல யாராலும் செய்ய முடியாது. மேலும், அத்தகைய வேதனையை யோபு சந்தித்தபோது செய்ததைப் போல, தன் பிறந்த நாளை மட்டுமே சபித்து, தேவனுடைய நாமம் மற்றும் யேகோவா தேவனுடைய நாமத்தைத் தொடர்ந்து துதிக்க வேறு எவராலும் முடியாது. இதை யாராவது செய்ய முடியுமா? யோபுவைப் பற்றி நாம் இதைச் சொல்லும்போது, அவனுடைய நடத்தையைப் பாராட்டுகிறோமா? அவன் ஒரு நீதியுள்ள மனிதன். தேவனுக்காக இத்தகைய சாட்சிகளைத் தாங்கும் ஒருவன். சாத்தான் தன் முகத்தை மூடிக் கொண்டு தப்பி ஓடச் செய்ய வல்லவன் அவன். அதனால் தேவன் மீது குற்றம் சாட்டுவதற்கு சாத்தான் ஒருபோதும் திரும்ப வரவில்லை—எனவே அவனைப் பாராட்டுவதில் என்ன தவறு? நீங்கள் தேவனை விட உயர்ந்த தரநிலைகளைக் கொண்டிருக்கலாமா? சோதனைகள் உங்கள் மீது வரும்போது நீங்கள் யோபுவை விடச் சிறப்பாக செயல்படுவீர்களா? யோபு தேவனால் புகழப்பட்டார்—உங்களுக்கு என்ன ஆட்சேபனைகள் இருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 47

யோபு தன் பிறந்த நாளைச் சபிக்கிறான், ஏனென்றால் அவன் தேவன் வேதனைப்படுவதை விரும்பவில்லை

தேவன் ஜனங்களின் இருதயங்களுக்குள் இருக்கிறார் என்று நான் அடிக்கடி சொல்கிறேன். அதே நேரத்தில் ஜனங்கள் வெளிப்புறங்களைப் பார்க்கிறார்கள். தேவன் ஜனங்களின் இருதயங்களுக்குள் இருப்பதால், அவற்றின் சாராம்சத்தை அவர் புரிந்துக்கொள்கிறார். அதேசமயம் ஜனங்கள் மற்றவர்களின் சாராம்சத்தை அவர்களின் வெளிப்புறத்தின் அடிப்படையில் வரையறுக்கிறார்கள். யோபு வாய் திறந்து, பிறந்த நாளை சபித்தபோது, இந்தச் செயல் யோபுவின் மூன்று நண்பர்கள் உட்பட அனைத்து ஆவிக்குரிய பிரமுகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. மனிதன் தேவனிடமிருந்து வந்தான், ஜீவனுக்கும் மாம்சத்திற்கும் நன்றி சொல்ல வேண்டும், அதைப் போலவே அவன் பிறந்த நாளும், தேவனால் அவனுக்கு வழங்கப்பட்டது. அவன் அவற்றை சபிக்கக்கூடாது. இது சாதாரண ஜனங்களும் புரிந்துக்கொள்ளக்கூடிய மற்றும் உணரக்கூடிய ஒன்று. தேவனைப் பின்பற்றும் எவருக்கும், இந்தப் புரிதல் பரிசுத்தமானது மற்றும் மீறமுடியாதது. இது ஒருபோதும் மாற்ற முடியாத உண்மை. மறுபுறம், யோபு கட்டளைகளை மீறிவிட்டான்: அவன் பிறந்த நாளைச் சபித்தான். தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவது போன்றது இது என்று சாதாரண ஜனங்கள் கருதுகின்றனர். யோபு ஜனங்களின் புரிதலுக்கும் அனுதாபத்திற்கும் மட்டுமல்லாமல், தேவனுடைய மன்னிப்புக்கும் தகுதி உடையவனாக இல்லை. அதே சமயம், இன்னும் அதிகமான ஜனங்கள் யோபுவின் நீதியைச் சந்தேகிக்கிறார்கள். ஏனென்றால், யோபுவிடம் தேவன் காட்டிய தயவால் யோபு சுய மகிழ்ச்சி அடைந்ததாகத் தோன்றியது. அது அவனை மிகவும் தைரியமாகவும் பொறுப்பற்றதாகவும் ஆக்கியது, தேவன் அவனை ஆசீர்வதித்ததற்கும், ஜீவ நாட்கள் முழுவதும் அவனைக் கவனித்துக்கொண்டதற்கும் அவன தேவனுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தன் பிறந்த நாளையும் சபித்தான். இது தேவனுக்கு எதிரானதல்ல என்றால், இது என்ன? இத்தகைய மேலோட்டங்கள் யோபுவின் இந்தச் செயலைக் கண்டிப்பதற்கான ஆதாரத்தை ஜனங்களுக்கு வழங்குகின்றன. ஆனால் அந்த நேரத்தில் யோபு உண்மையிலேயே என்ன நினைத்துக் கொண்டிருந்தான் என்பதை யார் அறிய முடியும்? யோபு அப்படி நடந்து கொண்டதற்கான காரணத்தை யாரால் அறிய முடியும்? தேவனுக்கும் யோபுவிற்கும் மட்டுமே இங்குள்ள கதையும் காரணங்களும் தெரியும்.

யோபுவின் எலும்புகளைத் துன்புறுத்துவதற்காக சாத்தான் தன் கரத்தை நீட்டியபோது, தப்பிப்பதற்கான வழிமுறையோ அல்லது எதிர்ப்பதற்கான வல்லமையோ இல்லாமல் யோபு அதன் பிடியில் இருந்தான். அவனது சரீரமும் ஆத்துமாவும் மிகுந்த வேதனையை அனுபவித்தன. இந்த வலி மாம்சத்தில் ஜீவிக்கும் மனிதனுடைய அற்பமான தன்மை, பலவீனம் மற்றும் வல்லமையற்ற தன்மை ஆகியவற்றை அவனை ஆழமாக அறியச் செய்தது. அதே சமயம், மனிதகுலத்தைப் பாதுகாக்கும் கவனித்துக்கொள்ளும் மனதை தேவன் ஏன் கொண்டிருக்கிறார் என்பதற்கான ஆழமான உணர்வையும் புரிதலையும் அவன் பெற்றான். அவன் முழங்கால்படியிட்டு தேவனிடம் ஜெபம் செய்தபோது, தேவன் தம் முகத்தை மூடி மறைத்து வைத்திருப்பதைப் போல உணர்ந்தார். ஏனென்றால், தேவன் அவனை சாத்தானுடைய கரங்களில் பூரணமாக வைத்திருந்தார். அதே சமயம், தேவனும் அவருக்காக அழுதார். அவருக்காக வேதனைப்பட்டார். தேவன் அவரது வலியால் வேதனைப்பட்டார் மற்றும் அவரது காயத்தால் தேவன் காயப்பட்டார்…. தேவனுடைய வலியை யோபு உணர்ந்தான். அதைப் போலவே தேவனுக்கு அது எவ்வளவு தாங்கமுடியாததாக இருந்திருக்கும்…. தேவன் மீது மேலும் வருத்தத்தைக் கொண்டுவர யோபு விரும்பவில்லை. தேவன் அவனுக்காக அழுவதை அவன் விரும்பவில்லை, தேவன் அவனால் வேதனைப்படுவதைக் காணவும் அவன் விரும்பவில்லை. இந்தத் தருணத்தில், தன் மாம்சத்தால் தனக்கு ஏற்பட்ட வேதனையை இனி தான் சகித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக யோபு தனது மாம்சத்திலிருந்து தன்னை விலக்க மட்டுமே விரும்பினான். ஏனென்றால், தேவன் தனதுவலியால் துன்பப்படுவதைத் தடுக்க விரும்பினான்—ஆனாலும் அது அவனால் முடியவில்லை. மாம்சத்தின் வலியை அவன் சகித்துக்கொள்வதோடு, தேவனைக் கவலையடையச் செய்யும் வேதனையையும் அவன் சகிக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு வலிகள்—மாம்சத்திலிருந்து வந்தவை, ஆவியிலிருந்து வந்தவை—யோபுவின் மன வருத்தத்தையும் மிகுந்த வெறுப்பையும் தரும் வலியை யோபுவுக்குத் தந்தன. மாம்சமும் இரத்தமும் கொண்ட மனிதனுடைய வரம்புகள் எவ்வாறு ஒருவருக்கு விரக்தியையும் உதவியற்ற குணத்தையும் ஏற்படுத்தும் என்பதை அவனுக்கு உணர்த்தின. இந்தச் சூழ்நிலைகளில், தேவனைப் பற்றிய அவனது ஏக்கம் கடுமையாக இருந்தது. சாத்தான் மீதான வெறுப்பு மேலும் தீவிரமடைந்தது. இந்த நேரத்தில், யோபு மனித உலகில் பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று எதிர்பார்த்திருப்பான். தேவன் யோபுவுக்காகக் கண்ணீர் வடிப்பதை விட அல்லது யோபுவுக்காக அவர் வேதனையை உணருவதை விட தான் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று எதிர்பார்த்திருப்பான். அவன் தனது மாம்சத்தை ஆழமாக வெறுக்கத் தொடங்கினான். அவன் நோய்வாய்ப்பட்டு, தன்னைப் பற்றியும், தன் பிறந்த நாள் பற்றியும், தனக்குத் தொடர்புடைய அனைத்தையும் குறித்து சோர்வடைந்தான். தன் பிறந்த நாள் அல்லது அதற்கு தொடர்புடைய எதுவும் அதற்குப் பின் இருக்கக் கூடாது என்று விரும்பினான். எனவே, அவன் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தான்: “நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக. அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்” (யோபு 3:3-4). யோபுவின் வார்த்தைகள், “நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக,” தனக்குள்ளான வெறுப்பைத் தாங்குகின்றது. தேவனுக்கு வேதனையை ஏற்படுத்தியதற்காக அவன் தன்னைப் பழித்தான். தான் கடன்பட்டிருப்பதையும் உணர்ந்தான். “அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்.” இருக்க விரும்பினான். இந்த இரண்டு பத்திகளும் யோபு அப்போது எப்படி உணர்ந்தான் என்பதற்கான இறுதி வெளிப்பாடாகும். அவை, அவனுடைய பரிபூரணத்தையும் நேர்மையையும் அனைவருக்கும் பூரணமாக வெளிப்படுத்துகின்றன. அதே சமயம், அவனுடைய விசுவாசமும் தேவனுக்கான கீழ்ப்படிதலும், தேவ பயமும் யோபு விரும்பியபடி உண்மையிலேயே உயர்ந்தன. நிச்சயமாக, இந்த உயர்வானது தேவன் எதிர்பார்த்த துல்லியமான விளைவாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 48

யோபு சாத்தானைத் தோற்கடித்து, தேவனுடைய கண்களில் உண்மையான மனிதனாகிறான்

யோபு முதன்முதலில் அவனுடைய சோதனைகளுக்கு ஆளானபோது, அவனுடைய சொத்துக்கள் மற்றும் அவனுடைய எல்லாக் குழந்தைகளும் பறிக்கப்பட்டனர். ஆனால் அவன் கீழே விழுந்துவிடவில்லை அல்லது அதன் விளைவாக தேவனுக்கு எதிரான பாவமாக எதையும் சொல்லவில்லை. அவன் சாத்தானுடைய சோதனையை ஜெயித்தான். மேலும், அவன் தனது பொருள் சொத்துக்கள், சந்ததியினர் மற்றும் அவனது உலக உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டான். அதாவது தேவன் அவனிடமிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் நிலையிலும், அவனால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்தது. தேவன் செய்த காரியங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்தவும் துதிக்கவும் முடிந்தது. இதுவே சாத்தானுடைய முதல் சோதனையில் யோபுவின் நடத்தையாகும். இதுவே தேவனுடைய முதல் சோதனையில் யோபுவின் சாட்சியாகும். இரண்டாவது சோதனையில், யோபுவைத் துன்புறுத்துவதற்காக சாத்தான் தன் கரத்தை நீட்டியது. யோபு முன்பு அனுபவித்ததை விட அதிகமான வலியை அனுபவித்த போதிலும், அவனது சாட்சி ஜனங்களை பிரமிக்கச் செய்ய போதுமானதாக இருந்தது. சாத்தானை மீண்டும் தோற்கடிக்க அவன் தனது துணிச்சலையும், நம்பிக்கையையும், தேவனுக்கான கீழ்ப்படிதலையும், தேவ பயத்தையும் பயன்படுத்தினான். அவனுடைய நடத்தை மற்றும் அவனது சாட்சி மீண்டும் தேவனால் அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது, மாம்சத்தின் வலி தேவனுக்கான விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் மாற்றவோ அல்லது தேவன் மீதான பக்தியையும் தேவ பயத்தையும் பறிக்கவோ முடியாது என்று சாத்தானிடம் அறிவிக்க யோபு தனது உண்மையான நடத்தையைப் பயன்படுத்தினான். அவன் மரணத்தை எதிர்கொள்கிறான் என்பதற்காக அவன் தேவனைக் கைவிடவில்லை அல்லது தனது பூரணத்தையும் நேர்மையையும் விட்டுவிடவில்லை. யோபுவின் உறுதியானது சாத்தானிடம் ஒரு கோழைத்தனத்தை உருவாக்கியது. அவனுடைய விசுவாசம் சாத்தானை கோழையாகவும், நடுங்கவும் செய்தது. ஜீவனுக்கும் மரணத்துக்குமான யுத்தத்தில் சாத்தானுக்கு எதிராக யோபு செய்த தீவிரமான போராட்டம் சாத்தானில் ஆழ்ந்த வெறுப்பையும் ஆத்திரத்தையும் வளர்த்தது. அவனுடைய பரிபூரணமும் நேர்மையும் சாத்தானை வேறு ஒன்றும் செய்யமுடியாத ஒன்றாக மாற்றியது. அதாவது சாத்தான் அவன் மீதான தாக்குதல்களைக் கைவிட்டு, யேகோவா தேவனுக்கு முன்பாக யோபுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சொல்வதை விட்டுவிட்டது. இதன் அர்த்தம் யோபு உலகை ஜெயித்தான், மாம்சத்தை ஜெயித்தான், சாத்தானை ஜெயித்தான் மற்றும் மரணத்தை ஜெயித்தான். அவன் முற்றிலுமாக மற்றும் நிச்சயமாக தேவனுக்குச் சொந்தமான ஒரு மனிதனாகினான். இந்த இரண்டு சோதனைகளின் போது, யோபு தனது சாட்சியில் உறுதியாக நின்றான். உண்மையில், அவனுடைய பரிபூரணத்தையும் நேர்மையையும் வெளிப்படுத்தினான். மேலும், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான அவனது ஜீவிதக் கொள்கைகளின் நோக்கத்தை விரிவுபடுத்தினான். இந்த இரண்டு சோதனைகளுக்கும் ஆளாகியதால், யோபுவிடம் ஒரு சிறப்பான அனுபவம் பிறந்தது. இந்த அனுபவம் அவனை மிகவும் முதிர்ச்சியடைந்தவனாகவும், அனுபவமுள்ளவனாகவும் ஆக்கியது. அது அவனை வல்லமை உடையவனாகவும், அதிக நம்பிக்கை உடையவனாகவும் ஆக்கியது. அது, அவன் உறுதியாக பெற்றிருக்க வேண்டிய ஒருமைப்பாட்டின் பூரணமான தன்மை மற்றும் தகுதியைப் பற்றி அவனுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. யோபுவிற்கான யேகோவா தேவனுடைய சோதனைகள் அவனுக்கு மனிதனுக்கான தேவனுடைய அக்கறை பற்றிய ஆழமான புரிதலையும் உணர்வையும் அளித்தன. தேவனுடைய அன்பின் விலைமதிப்பற்ற குணத்தை உணர அவனை அனுமதித்தன. அந்தக் கட்டத்தில் இருந்து தேவனைப் பற்றிய அக்கறையும் அன்பும் தேவ பயத்தில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டன. யேகோவா தேவனுடைய சோதனைகள் யோபுவை அவரிடமிருந்து அந்நியப்படுத்தின, ஆனால் அவனுடைய இருதயத்தைத் தேவனிடம் நெருக்கமாகக் கொண்டு வந்தன. யோபு தாங்கிய மாம்ச வலியானது அதன் உச்சத்தை எட்டியபோது, யேகோவா தேவனிடமிருந்து அவன் உணர்ந்த அக்கறையின் நிமித்தமாக அவனுக்குத் தன் பிறந்த நாளைச் சபிப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய இயலவில்லை. இத்தகைய நடத்தையானது நீண்டகாலமாக திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் தேவனைப் பற்றிய, அவனது அன்பைப் பற்றிய, யோபுவினுடைய இருதயத்திலிருந்து வரும் இயல்பான வெளிப்பாடாகும். அது தேவன் மீதான அக்கறை மற்றும் அன்பிலிருந்து வந்த ஒரு இயல்பான வெளிப்பாடு ஆகும். ஏனென்றால், யோபு தன்னை வெறுத்தான். அவனால் தேவனைத் துன்புறுத்த முடியவில்லை, அதை விரும்பவுமில்லை. இதனால் அவனுடைய கருத்தும் அன்பும் தன்னலமற்ற நிலையை அடைந்தது. இந்த நேரத்தில், யோபு தனது நீண்டகால ஆராதனையையும், தேவனுக்கான ஏக்கத்தையும், தேவன் கருத்தில் கொள்ளும் நிலையில் இருக்கும் அவனுடைய பக்தியையும், அன்பையும் யோபு உயர்த்தினார். தேவனுக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய அவன் தன்னை அனுமதிக்கவில்லை. தேவனைப் புண்படுத்தும் எந்தவொரு நடத்தையையும் அவன் அனுமதிக்கவில்லை. மேலும், தனது சொந்த காரணங்களுக்காக தேவன் மீது எந்தத் துக்கத்தையும், வருத்தத்தையும், மகிழ்ச்சியையும் கூட கொண்டு வர அனுமதிக்கவில்லை. தேவனுடைய பார்வையில், யோபு முன்பு இருந்த அதே யோபாக இருந்தபோதிலும், யோபுவின் நம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் தெய்வ பயம் ஆகியவை தேவனுக்குப் பூரணமான திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்தன. இந்த நேரத்தில், யோபு அடைய வேண்டும் என்று தேவன் எதிர்பார்த்த பரிபூரணத்தை அடைந்தான். அவன் தேவனுடைய பார்வையில் “பரிபூரணமானவன் மற்றும் நேர்மையானவன்” என்று அழைக்கப்படுவதற்கு உண்மையிலேயே தகுதியான ஒருவனாகிவிட்டான். அவனுடைய நீதியான செயல்கள் சாத்தானை ஜெயிக்கவும், தேவனுக்கு அளித்த சாட்சியில் உறுதியாக நிற்கவும் அவனை அனுமதித்தன. ஆகவே, அவனுடைய நீதியுள்ள செயல்கள் அவனை பரிபூரணமாக்கியதுடன், முன்னெப்போதும் இருந்ததை விட அவனுடைய ஜீவிதத்தின் மதிப்பை உயர்த்தவும், சாத்தானை மீறவும் அனுமதித்தது. சாத்தானால் இனிமேல் தாக்கப்பட்டு சோதிக்கப்படாத முதல் மனிதனாகவும் அவனை மாற்றியது. யோபு நீதியுள்ளவன் என்பதால், அவன் சாத்தானால் குற்றம் சாட்டப்பட்டு சோதிக்கப்பட்டான். யோபு நீதியுள்ளவன் என்பதால், அவன் சாத்தானிடம் ஒப்படைக்கப்பட்டான். யோபு நீதியுள்ளவன் என்பதால், அவன் சாத்தானை ஜெயித்து தோற்கடித்தான். அவனுடைய சாட்சியில் உறுதியாக நின்றான். இனிமேல் யோபு மீண்டும் ஒருபோதும் சாத்தானிடம் ஒப்படைக்கப்படாத முதல் மனிதனாக ஆனான். அவன் உண்மையிலேயே தேவனுடைய சிங்காசனத்தின் முன் வந்து சாத்தானுடைய உளவு அல்லது அழிவு இல்லாமல், வெளிச்சத்தில், தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் ஜீவித்தான்…. அவன் தேவனுடைய பார்வையில் ஓர் உண்மையான மனிதனாகிவிட்டான். அவன் விடுவிக்கப்பட்டான் …

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 49

யோபுவின் அன்றாட ஜீவிதத்தில், அவனுடைய பரிபூரணத்தையும், நேர்மையையும், தேவ பயத்தையும், தீமையைத் தவிர்த்தலையும் காண்கிறோம்

நாம் யோபுவைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், தேவனுடைய சொந்த வாயிலிருந்து சொல்லப்பட்ட யோபுவைப் பற்றிய மதிப்பீட்டை ஆராய்வதன் மூலம் நாம் தொடங்க வேண்டும்: “என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை.”

முதலில் யோபுவின் பரிபூரணம் மற்றும் நேர்மையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

“பரிபூரணமான” மற்றும் “நேர்மையான” ஆகிய வார்த்தைகளைப் பற்றிய உங்கள் புரிதல் என்ன? யோபு நிந்தனை இல்லாமல் இருந்தார், அவர் கௌரவமானவர் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாக, அதுவே, “பரிபூரணமானது” மற்றும் “நேர்மையானது” என்ற வார்த்தைகளின் நேரடி விளக்கமும் புரிதலும் ஆகும். ஆனால் நிஜ ஜீவிதத்தின் சூழலானது யோபுவைப் பற்றிய உண்மையான புரிதலுடன் ஒருங்கிணைந்ததாகும்—வார்த்தைகள், புத்தகங்கள் மற்றும் கோட்பாடு மட்டும் எந்தப் பதில்களையும் வழங்காது. யோபுவின் குடும்ப ஜீவிதத்தைப் பார்ப்பதன் மூலம், அவனுடைய ஜீவிதத்தில் அவனது இயல்பான நடத்தை எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம். இது, ஜீவிதத்தில் அவனது கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றியும், அதைப் போலவே அவனது ஆளுமை மற்றும் நாட்டம் பற்றியும் சொல்லும். இப்போது, யோபு 1:3 இன் இறுதி வார்த்தைகளைப் படிப்போம்: “அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.” இந்த வார்த்தைகள் என்ன சொல்கின்றன என்றால், யோபுவின் அந்தஸ்தும் நிலைப்பாடும் மிக உயர்ந்ததாக இருந்தன. ஆனால் அவன் கிழக்கின் எல்லா மனிதர்களிலும் மிகப் பெரியவனாக இருப்பதற்கான காரணம் அவனுடைய ஏராளமான சொத்துக்களா அல்லது அவன் பரிபூரணமாகவும் நேர்மையானவனாகவும் இருந்தானா என்பதோ, அல்லது தீமையைத் தவிர்த்து தேவனுக்கு அஞ்சினான் என்பதோ என்று சொல்லப்படவில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக, யோபுவின் நிலையும் நிலைப்பாடும் மிகவும் மதிப்புமிக்கவை என்பதை நாம் அறிவோம். வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யோபுவின் முதல் பதிவுகள் யோபு பரிபூரணமானவன், அவன் தேவனுக்கு அஞ்சினான், தீமையைத் தவிர்த்தான், அவனுக்குப் பெரும் செல்வமும் மதிப்புமிக்க அந்தஸ்தும் இருந்தது என்பவையே. அத்தகைய சூழலில், அத்தகைய நிலைமைகளின் கீழ், ஜீவிக்கும் ஒரு சாதாரண மனிதனாகப் பார்த்தால், யோபுவின் உணவு, ஜீவிதத் தரம் மற்றும் அவனது தனிப்பட்ட ஜீவிதத்தின் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பெரும்பாலான ஜனங்களின் கவனத்தின் மையமாக இருக்கும். ஆகவே நாம் தொடர்ந்து வசனங்களைப் படிக்க வேண்டும்: “அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள். விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்” (யோபு 1:4-5). இந்தப் பத்தி இரண்டு விஷயங்களை நமக்குக் கூறுகின்றது: முதலாவது, யோபுவின் மகன்களும் மகள்களும் தவறாமல் விருந்து புசிக்கிறார்கள், அதிகம் புசித்துக் குடிக்கிறார்கள்; இரண்டாவதாக, யோபு அடிக்கடி தன் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும் கவலைப்படுவதால், அவர்கள் பாவம் செய்கிறார்களோ என்று பயந்து, அவர்கள் இருதயங்களில் தேவனைக் கைவிட்டார்களோ என்று பயந்து, தகன பலிகளை அடிக்கடி செலுத்தினான். இதில் இரண்டு வெவ்வேறு வகையான ஜனங்களின் ஜீவிதம் விவரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, யோபுவின் மகன்களும் மகள்களும் தங்கள் செல்வத்தின் காரணமாக அடிக்கடி விருந்து வைத்தனர். ஆடம்பரமாக வாழ்ந்தனர். அவர்களின் இருதயத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப புசித்துக் குடித்தனர். பொருள் செல்வத்தால் கொண்டுவரப்பட்ட உயர்தர ஜீவிதத்தை அனுபவித்தனர். அத்தகைய ஜீவிதத்தை வாழ்வதால், அவர்கள் பெரும்பாலும் பாவம் செய்து தேவனைப் புண்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது—ஆனாலும் அவர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்தவோ அல்லது தகன பலிகளைச் செலுத்தவோ இல்லை. அப்படியானால், அவர்களுடைய இருதயங்களில் தேவனுக்கு இடமில்லை. தேவனுடைய கிருபையைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. தேவனைப் புண்படுத்த அஞ்சவில்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள். நிச்சயமாக, நமது கவனம் யோபுவின் குழந்தைகள் மீது அல்ல, ஆனால் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்ளும்போது யோபு என்ன செய்தான் என்பதில்தான் இருக்கிறது. பத்தியில் விவரிக்கப்பட்டுள்ள மற்ற விஷயம் இதுதான். இது யோபுவின் அன்றாட ஜீவிதத்தையும் அவனது மனிதகுலத்தின் சாராம்சத்தையும் உள்ளடக்கியது. யோபுவின் மகன்கள் மற்றும் மகள்களின் விருந்தை வேதாகமம் விவரிக்கும் இடத்தில், யோபுவைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவனது மகன்களும் மகள்களும் பெரும்பாலும் ஒன்றாகச் சாப்பிட்டுக் குடித்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு பண்டிகைகளை நடத்தவில்லை, தனது மகன்களும் மகள்களும் ஆடம்பரமாகச் சாப்பிடுவதில் யோபு பங்கேற்கவில்லை. ஐசுவரியவானாக இருந்தபோதிலும், பல சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தபோதிலும், யோபுவின் ஜீவிதம் ஆடம்பரமான ஒன்றாக இல்லை. அவன் தனது மிக உயர்ந்த ஜீவிதச் சூழலால் ஏமாற்றப்படவில்லை. அவன் தனது செல்வத்தின் காரணமாக, மாம்சத்தின் இன்பங்களைப் பற்றிக் கொள்ளவில்லை அல்லது தகன பலிகளைச் செலுத்த மறந்துவிடவில்லை. தேவனுடைய இருதயத்தில் படிப்படியாக விலகிச் செல்லவும் அது காரணமாகவில்லை. அப்படியானால், யோபு தனது ஜீவிதமுறையில் ஒழுக்கமாக இருந்திருக்கிறான். தேவன் அவனுக்கு அளித்த ஆசீர்வாதங்களின் விளைவாகப் பேராசை உள்ளவனாக அல்லது வெறித்தனமானவனாக இருக்கவில்லை. அவன் ஒரு ஜீவிதத் தரத்தை நிர்ணயிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவன் தாழ்மையானவனாக, அடக்கமானவனாக இருந்தான். அவன் ஆடம்பரத்திற்கு இடம் கொடுக்கவில்லை. அவன் தேவனுக்கு முன்பாக எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருந்தான். அவன் பெரும்பாலும் தேவனுடைய கிருபையையும் ஆசீர்வாதங்களையும் சிந்தித்துப் பார்த்தான். தொடர்ந்து தேவனுக்கு அஞ்சினான். தனது அன்றாட ஜீவிதத்தில், யோபு தனது மகன்களுக்கும் மகள்களுக்கும் சர்வாங்க தகனபலிகளை வழங்க அதிகாலையில் எழுந்தான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு தேவனுக்கு அஞ்சினான் என்பது மட்டுமல்லாமல், அவனுடைய பிள்ளைகளும் தேவனுக்கு அஞ்சுவார்கள், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்ய மாட்டார்கள் என்றும் அவன் நம்பினான். யோபுவின் பொருள் செல்வம் அவனது இருதயத்திற்குள் எந்த இடத்தையும் கொண்டிருக்கவில்லை. அது தேவனுடைய நிலைப்பாட்டை மாற்றவில்லை. அவனது சொந்த நலனுக்காகவோ அல்லது அவனது குழந்தைகளுக்காகவோ என யோபுவின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதுடன் இணைக்கப்பட்டன. யேகோவா தேவனைப் பற்றிய அவனது பயம் அவனது வாயுடன் நிற்கவில்லை, ஆனால் அவன் கிரியையில் மற்றும் அவனது அன்றாட ஜீவிதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பிரதிபலித்தது. யோபுவின் இந்த உண்மையான நடத்தை, அவன் நேர்மையானவன் என்பதைக் காட்டுகிறது. நீதியை நேசிக்கும் ஒரு சாராம்சத்தையும் நேர்மறையான விஷயங்களையும் கொண்டிருந்தான். யோபு அடிக்கடி தனது மகன்களையும் மகள்களையும் அனுப்பிப் பரிசுத்தப்படுத்தினார் என்றால், தனது குழந்தைகளின் நடத்தையை அவன் அனுமதிக்கவில்லை அல்லது அங்கீகரிக்கவில்லை என்று அர்த்தமாகும். மாறாக, அவர்களுடைய நடத்தையில் அவன் விரக்தியடைந்தான். அவர்களைக் கண்டித்தான். தனது மகன்கள் மற்றும் மகள்களின் நடத்தை யேகோவா தேவனுக்குப் பிரியமானதல்ல என்று அவன் முடிவு செய்திருந்தார். ஆகவே, யேகோவா தேவனுக்கு முன்பாகச் சென்று அவர்களுடைய பாவங்களை ஒப்புக்கொள்ளும்படி அவன் அடிக்கடி அவர்களை அழைத்தான். யோபுவின் செயல்கள் அவனுடைய மனிதத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அதில் அவன் அடிக்கடி பாவம் செய்து தேவனைப் புண்படுத்தியவர்களுடன் ஒருபோதும் நடக்கவில்லை. மாறாக அவர்களை விட்டு விலகி அவர்களைத் தவிர்த்தான். இந்த ஜனங்கள் அவனுடைய மகன்களாகவும், மகள்களாகவும் இருந்தபோதிலும், அவர்கள் தனது சொந்த உறவினர்களாக இருந்தபோதிலும், அவன் தனது சொந்த நடத்தையின் கொள்கைகளைக் கைவிடவில்லை. அவன் தனது சொந்த உணர்வுகளுக்காக அவர்களுடன் பாவங்களைச் செய்யவில்லை. மாறாக, பாவத்தை ஒப்புக்கொண்டு யேகோவா தேவனுடைய சகிப்புத்தன்மையை பெறும்படி யோபு அவர்களை வற்புறுத்தினான். அவர்களுடைய பேராசை இன்பத்திற்காக தேவனைக் கைவிட வேண்டாம் என்று அவன் எச்சரித்தான். யோபு மற்றவர்களை எவ்வாறு நடத்தினான் என்பதற்கான கோட்பாடுகள், அவனுடைய தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்ப்பதற்கான கொள்கைகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தது. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுபவற்றை அவன் நேசித்தான். தேவனால் விரட்டப்படுவதை அவன் வெறுத்தான். தங்கள் இருதயங்களில் தேவனுக்குப் பயந்தவர்களை அவன் நேசித்தான். மேலும், தீமை செய்தவர்கள் அல்லது தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை வெறுத்தான். இத்தகைய அன்பும் வெறுப்பும் அவனுடைய அன்றாட ஜீவிதத்தில் நிரூபிக்கப்பட்டன. இது தேவனுடைய கண்களால் காணப்பட்ட யோபுவின் நேர்மையாகும். இயற்கையாகவே, இது யோபுவின் அன்றாட ஜீவிதத்தில், மற்றவர்களுடனான உறவுகளில் காணப்படும் யோபுவின் உண்மையான மனிதத்தின் வெளிப்பாடு மற்றும் கிரியை ஆகும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 50

யோபுவின் சோதனைகளின் போது இருந்த அவனுடைய மனிதத்தின் வெளிப்பாடுகள் (யோபுவின் பரிபூரணத்தை, நேர்மையை, தேவ பயத்தை மற்றும் அவனது சோதனைகளின் போது தீமையைத் தவிர்த்ததைப் புரிந்துகொள்ளுதல்)

யோபு தனது சொத்து திருடப்பட்டதாகவும், அவனுடைய மகன்களும் மகள்களும் தங்கள் உயிர்களை இழந்ததாகவும், அவருடைய ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும் கேள்விப்பட்டபோது, அவன் பின்வருமாறு பதிலளித்தான்: “அப்பொழுது யோபு எழுந்து, தன் போர்வையைக் கிழித்து, தலை முடியை சிரைத்து, தரையில் விழுந்து வணங்கினான்” (யோபு 1:20). இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு உண்மையைச் சொல்கின்றன: இந்தச் செய்தியைக் கேட்டபின், யோபு பீதியடையவில்லை. தனக்கு செய்தி கொடுத்த ஊழியர்களிடம் அவன் கத்தவோ, குறை கூறவோ இல்லை. அவன் குற்றங்களை ஆராய்ந்து விவரங்களை சரிபார்க்க, உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய, முயற்சி செய்யவில்லை. அவன் தனது உடமைகளை இழந்ததில் எந்த வேதனையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. தனது பிள்ளைகளையும் அவனது அன்புக்குரியவர்களையும் இழந்ததால் அவன் கண்ணீரைச் சிந்தவில்லை. மாறாக, அவன் தனது சால்வையைக் கிழித்து, தலையை மொட்டையடித்து, தரையில் விழுந்து வணங்கினான். யோபுவின் நடவடிக்கைகள் எந்த சாதாரண மனிதனுடைய கிரியைகளையும் போன்றது அல்ல. அவை பலரைக் குழப்புகிறது. அவை, யோபுவின் “கொடூரம்” காரணமாக அவர்கள் அவனைத் தங்கள் இருதயத்தில் கண்டிக்கச் செய்கிறது. திடீரென்று தங்கள் உடமைகளை இழக்கும்போது, சாதாரண ஜனங்கள் மனம் உடைந்தவர்களாக அல்லது விரக்தியடைந்தவர்களாகத் தோன்றுவார்கள்—அல்லது, சிலரின் விஷயத்தில், அவர்கள் ஆழ்ந்த மன அழுத்தத்தில் கூட இருக்கக்கூடும். ஏனென்றால், அவர்களின் இருதயங்களில், ஜனங்களின் சொத்து ஜீவ காலம் முழுமைக்குமான முயற்சியைக் குறிக்கிறது—அவர்களின் ஜீவிதம் இதையே நம்பியிருக்கிறது. இதுவே அவர்களை ஜீவிக்க வைக்கும் நம்பிக்கை ஆகும். அவர்களின் சொத்து இழப்பு என்பது அவர்களின் முயற்சிகள் வீணாகிவிட்டன என்பதாகும். அவர்கள் நம்பிக்கையுடன் இல்லை, அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதாகும். இது சொத்து குறித்த எந்தவொரு சாதாரண மனிதருடைய அணுகுமுறையாகும். சொத்துடனான அவர்களின் நெருங்கிய உறவும் ஆகும். மேலும், இது ஜனங்களின் பார்வையில் சொத்தின் முக்கியத்துவமும் ஆகும். எனவே, பெரும்பான்மையான ஜனங்கள் சொத்து இழப்பு குறித்த யோபுவின் அலட்சிய மனநிலையால் குழப்பமடைகிறார்கள். இன்று, நாம் யோபுவின் இருதயத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை விளக்கி இந்த ஜனங்கள் உணர்ந்த குழப்பத்தை நீக்கப் போகிறோம்.

தேவனால் இத்தகைய ஏராளமான சொத்துக்கள் வழங்கப்பட்டதால், இந்தச் சொத்துக்களை இழந்ததால் யோபு தேவனுக்கு முன்பாக வெட்கப்பட வேண்டும் என்று பொது அறிவு கட்டளையிடுகிறது. ஏனென்றால், அவன் அவற்றைக் கவனிக்கவில்லை அல்லது கவனித்துக் கொள்ளவில்லை, தேவன் அவனுக்குக் கொடுத்த சொத்துக்களை அவன் வைத்திருக்கவில்லை என்பதே காரணமாகும். இவ்வாறு, அவனது சொத்து திருடப்பட்டதாகக் கேள்விப்பட்டபோது, அவனது முதல் எதிர்வினையானது குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று இழந்த அனைத்தைப் பற்றிய விவரங்களை எடுத்துக்கொள்வதும், பின்னர் மீண்டும் தேவனிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக தேவனிடம் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயினும், யோபு இதைச் செய்யவில்லை. அவ்வாறு செய்யாததற்கு இயல்பாகவே அவனுக்கு சொந்த காரணங்கள் இருந்தன. தன்னிடம் இருந்த அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டவை என்றும், அது அவனுடைய சொந்த உழைப்பின் விளைவாக இல்லை என்றும் யோபு தன் இருதயத்தில் ஆழமாக நம்பினான். ஆகவே, இந்த ஆசீர்வாதங்கள் மூலதனமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என்று அவன் பார்க்கவில்லை. மாறாக, தனது முழு வல்லமையுடனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழியில் தனது ஜீவித கொள்கைகளை தொகுத்து வழங்கினான். அவன் தேவனுடைய ஆசீர்வாதங்களை நேசித்தான். அவற்றுக்காக நன்றி தெரிவித்தான். ஆனால் அவன் ஆசீர்வாதங்களால் ஈர்க்கப்படவில்லை. மேலும், அவற்றைவிட அதிகமானவற்றை அவன் தேடவில்லை. சொத்து மீதான அவனது அணுகுமுறை இதுதான். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக அவன் எதையும் செய்யவில்லை. தேவனுடைய ஆசீர்வாதங்களின் பற்றாக்குறை அல்லது இழப்பால் கவலைப்படவில்லை அல்லது வேதனைப்படவில்லை. தேவனுடைய ஆசீர்வாதங்களால் அவன் பெருமளவில் மகிழ்ச்சியடையவில்லை. அவன் அடிக்கடி அனுபவித்த ஆசீர்வாதங்களின் காரணமாக தேவனுடைய வழியைப் புறக்கணிக்கவில்லை அல்லது தேவனுடைய கிருபையை மறந்துவிடவில்லை. யோபுவின் சொத்து மீதான அணுகுமுறை அவனது உண்மையான மனிதத்தை ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறது: முதலாவதாக, யோபு ஒரு பேராசை கொண்ட மனிதன் அல்ல. அவன் பொருள்மயமான ஜீவிதத்தை எதிர்பார்க்கவில்லை. இரண்டாவதாக, தேவன் தன்னிடம் இருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்வார் என்று யோபு ஒருபோதும் கவலைப்படவில்லை அல்லது அஞ்சவில்லை. இது தேவனுக்குக் கீழ்ப்படியும் மனநிலையாக இருந்தது. அதாவது, தேவன் அவனிடமிருந்து எப்போது எடுப்பார் அல்லது எடுப்பாரா இல்லையா என்பது குறித்து அவனுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் புகார்களும் இல்லை. அதற்கான காரணத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தேவனுடைய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய மட்டுமே முயன்றான். மூன்றாவதாக, அவனுடைய சொத்துக்கள் தனது சொந்த உழைப்பிலிருந்து வந்தவை என்று அவன் ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் அவை தேவனால் அவனுக்கு வழங்கப்பட்டன என்று நம்பினார். இதுவே தேவன் மீதான யோபுவின் நம்பிக்கையாக இருந்தது. இது அவனுடைய நம்பிக்கையின் அடையாளமாகும். அவனைப் பற்றிய இந்த மூன்று அம்ச சாராம்சத்தில் யோபுவின் மனிதமும் அவனது உண்மையான அன்றாட தேடலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனவா? சொத்து இழப்பை எதிர்கொள்ளும் போது யோபுவிடம் இருந்த மனிதமும் தேடலும் அவனது சாந்தமான நடத்தையுடன் ஒருங்கிணைந்தவை ஆகும். யோபுவின் அன்றாட தேடலின் காரணமாகவே தேவனுடைய சோதனையின் போது துல்லியமாக இதைச் சொன்னான், “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” இந்த வார்த்தைகள் ஒரே இரவில் பெறப்படவில்லை, அல்லது அவை யோபுவின் தலையில் தோன்றவில்லை. அவை, ஜீவிதத்தை அனுபவித்த பல ஆண்டுகளில் அவன் கண்டதும் பெற்றதும் ஆகும். தேவனுடைய ஆசீர்வாதங்களை மட்டுமே தேடி, தேவன் அவர்களிடமிருந்து எடுப்பார் என்று அஞ்சுகிறவர்கள் மற்றும் அதை வெறுத்து அதைப் பற்றி புகார் கூறுபவர்கள் அனைவருடனும் ஒப்பிடும்போது, யோபுவின் கீழ்ப்படிதல் மிகவும் உண்மையானதல்லவா? ஒரு தேவன் இருக்கிறார் என்று நம்புகிற, ஆனால் தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்று ஒருபோதும் நம்பாத அனைவருடனும் ஒப்பிடும்போது, யோபுவிடம் பெரிய நேர்மையும் உண்மையும் இருந்ததல்லவா?

யோபுவின் பகுத்தறிவு

யோபுவின் உண்மையான அனுபவங்கள் மற்றும் அவனது உண்மையான மற்றும் நேர்மையான மனிதமானது அவன் தனது சொத்துக்களையும் குழந்தைகளையும் இழந்தபோது மிகவும் பகுத்தறிவுள்ள தீர்ப்பையும் தேர்வுகளையும் செய்தான் என்பதைக் குறிக்கிறது. இத்தகைய பகுத்தறிவுத் தேர்வுகள் அவனது அன்றாட முயற்சிகளிலிருந்தும், அவனுடைய அன்றாட ஜீவிதத்தில் அவன் அறிந்த தேவனுடைய செயல்களிலிருந்தும் பிரிக்க முடியாதவை. யேகோவாவின் கை எல்லாவற்றையும் ஆளுகிறது என்பதை யோபுவின் உண்மை அவனை நம்பச் செய்தது. எல்லாவற்றிலும் யேகோவா தேவனுடைய ராஜரீகத்தின் உண்மையை அறிய அவனுடைய நம்பிக்கை அவனை அனுமதித்தது. அவனுடைய அறிவு யேகோவா தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய விருப்பத்தையும் திறமையையும் ஏற்படுத்தியது. அவனுடைய கீழ்ப்படிதல், யேகோவா தேவனைப் பற்றிய பயத்தில் மேலும் மேலும் உண்மையாக இருக்க அவனுக்கு உதவியது. தீமையைத் தவிர்ப்பதைப் பற்றிய அவனது பயம் அவனை மேலும் மேலும் உண்மையுள்ளவனாக மாற்றியது. இறுதியில், யோபு தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்த்ததால் பரிபூரணமானான். அவனுடைய பரிபூரணம் அவனை ஞானவானாக்கியது. அவனுக்கு மிக உயர்ந்த பகுத்தறிவைக் கொடுத்தது.

“பகுத்தறிவு” என்ற இந்த வார்த்தையை நாம் எவ்வாறு புரிந்துக்கொள்ள வேண்டும்? நேரடியான விளக்கம் என்னவென்றால், ஒருவரின் சிந்தனையில் நல்ல உணர்வுடனும், காரணத்துடனும் மற்றும் விவேகத்துடனும் இருப்பதும், நன்றாகப் பேசுவதும், செயல்படுவதும் முடிவெடுப்பதும், மற்றும் நன்மையான மற்றும் வழக்கமான தார்மீக தரநிலைகளைக் கொண்டிருப்பதும் ஆகும். ஆயினும், யோபுவின் பகுத்தறிவு அவ்வளவு எளிதில் விளக்கப்படவில்லை. யோபுவுக்கு மிக உயர்ந்த பகுத்தறிவு இருந்தது என்று இங்கே கூறப்படும் போது, இது அவனுடைய மனிதம் மற்றும் தேவன் முன் அவன் நடத்திய நடத்தை தொடர்பாக கூறப்படுகிறது. யோபு நேர்மையானவன் என்பதால், அவன் தேவனுடைய ராஜரீகத்தை நம்பவும் கீழ்ப்படியவும் முடிந்தது. இது, மற்றவர்களால் அடைய முடியாத ஓர் அறிவை அவனுக்குக் கொடுத்தது. இந்த அறிவு அவனுக்கு நேர்ந்ததை இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ளவும், தீர்ப்பளிக்கவும், வரையறுக்கவும் செய்தது. என்ன செய்ய வேண்டும், எதை உறுதியாக வைத்திருக்க வேண்டும் என்பதை இன்னும் துல்லியமாகவும் தெளிவாகவும் தேர்வு செய்ய அவனுக்கு உதவியது. இது, அவனது வார்த்தைகள், நடத்தை, அவனது செயல்களுக்குப் பின்னால் உள்ள கொள்கைகள் மற்றும் அவன் செயல்பட்ட முறை ஆகியவை வழக்கமானவை, தெளிவானவை, விஷேசமானவை ஆகும். அவை குருட்டுத்தனமானவை, அவசரமானவை அல்லது உணர்ச்சிவசப்பட்டவை அல்ல என்பதாகும். தனக்கு நேர்ந்ததை எவ்வாறு எதிர்கொள்வது என்பது அவனுக்குத் தெரியும். சிக்கலான நிகழ்வுகளுக்கிடையேயான உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது மற்றும் கையாளுவது என்பது அவனுக்குத் தெரியும். உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டிய வழியை எப்படிப் பிடித்துக் கொள்வது என்பது அவனுக்குத் தெரியும். மேலும், யேகோவா தேவன் கொடுப்பதையும் எடுத்துக்கொள்வதையும் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். இது யோபுவின் பகுத்தறிவின் உச்சமாகும். துல்லியமாக யோபு அத்தகைய பகுத்தறிவைக் கொண்டிருந்ததால், அவன் தனது சொத்துக்களையும் மகன்களையும் மகள்களையும் இழந்தபோது, “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்,” என்றான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 51

யோபுவின் உண்மையான முகம்: சத்தியம், பரிசுத்தமானது மற்றும் மாய்மாலமற்றது

யோபு 2:7-8  ஐ நாம் படிப்போம்: “ஆகவே சாத்தான் யேகோவாவின் சந்நிதியில் இருந்து புறப்பட்டுச் சென்று, யோபுவின் உச்சி முதல் பாதம் வரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.” இது, அவனது சரீரத்தில் கொடிய பருக்கள் தோன்றியபோது யோபுவின் நடத்தை பற்றிய விளக்கம் ஆகும். இந்த நேரத்தில், யோபு வலியைத் தாங்கிக் கொண்டே சாம்பலில் அமர்ந்தான். யாரும் அவனுக்கு சிகிச்சையளிக்கவில்லை. அவனது சரீரத்தின் வலியைக் குறைக்க யாரும் அவனுக்கு உதவவில்லை. அதற்குப் பதிலாக, கொடிய பருக்களின் மேற்பரப்பைத் துடைக்க அவன் ஓர் ஓட்டைப் பயன்படுத்தினான். மேலோட்டமாக, இது யோபுவின் வேதனையின் ஒரு கட்டம் மட்டுமே. அவனுடைய மனிதம் மற்றும் தேவ பயம் ஆகியவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், இந்த நேரத்தில் யோபு தனது மனநிலையையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த எந்த வார்த்தைகளையும் பேசவில்லை. ஆயினும்கூட யோபுவின் செயல்களும் அவனது நடத்தையும் அவனுடைய மனிதத்தின் உண்மையான வெளிப்பாடாகும். முந்தைய அத்தியாயத்தின் பதிவில், கிழக்கின் எல்லா மனிதர்களிலும் யோபு மிகப் பெரியவன் என்று படித்தோம். இரண்டாவது அத்தியாயத்தின் இந்தப் பத்தியில், இதற்கிடையில், கிழக்கின் இந்தப் பெரிய மனிதன் உண்மையில் சாம்பலுக்கிடையில் உட்கார்ந்திருக்கும்போது தன்னைத் துடைக்க ஓர் ஓட்டை எடுத்துக் கொண்டான் என்பதைக் காட்டுகிறது. இந்த இரண்டு விளக்கங்களுக்கும் வெளிப்படையான வேறுபாடு இல்லையா? இது யோபுவின் உண்மையான சுயத்தை நமக்குக் காட்டும் மாறுபாடுள்ள கருத்துகளாகும்: அவனிடம் மதிப்புமிக்க நிலைப்பாடு மற்றும் அந்தஸ்து இருந்தபோதிலும், அவன் ஒருபோதும் இந்த விஷயங்களை நேசிக்கவில்லை அல்லது இவற்றில் கவனம் செலுத்தவில்லை. அவனது நிலைப்பாட்டை மற்றவர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதையும் அவன் கவனிக்கவில்லை. அவனுடைய செயல்கள் அல்லது நடத்தை அவனது நிலைப்பாட்டில் ஏதேனும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துமா என்பது குறித்து அவன் கவலைப்படவில்லை. அவன் தன் அந்தஸ்தின் நன்மைகளில் கவனம் செலுத்தவில்லை. அந்தஸ்து மற்றும் நிலைப்பாடுகளில் வந்த மகிமையை அவன் அனுபவிக்கவில்லை. அவன் தனது மதிப்பு மற்றும் யேகோவா தேவனுடைய பார்வையில் அவன் ஜீவித்ததன் முக்கியத்துவத்தைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டினான். யோபுவின் உண்மையான சுயமே அவனின் சாராம்சம்: அவன் புகழ் மற்றும் செல்வத்தை நேசிக்கவில்லை. புகழ் மற்றும் செல்வத்துக்காக ஜீவிக்கவில்லை. அவன் உண்மையுள்ளவன், தூய்மையானவன் மற்றும் மாய்மாலமற்றவன்.

யோபுவின் அன்பின் பிரிவு மற்றும் வெறுப்பு

அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையிலான இந்த பரிமாற்றத்தில் யோபுவின் மனிதத்தின் மற்றொரு பக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளது: “அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்” (யோபு 2:9-10). அவன் அனுபவிக்கும் வேதனையைப் பார்த்து, யோபுவின் மனைவி யோபு அவனுடைய வேதனையிலிருந்து தப்பிக்க அவனுக்கு அறிவுரை வழங்க முயன்றாள். ஆனால் அவளுடைய “நல்ல நோக்கங்கள்” யோபுவின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. அதற்குப் பதிலாக, அவை அவனுடைய கோபத்தைத் தூண்டியது. ஏனென்றால், அவள் அவனுடைய நம்பிக்கையையும் யேகோவா தேவனுக்கான கீழ்ப்படிதலையும் மறுத்தாள். மேலும், யேகோவா தேவன் இருப்பதை மறுத்தாள். இது யோபுவுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது. ஏனென்றால், தேவனை எதிர்க்கும் அல்லது புண்படுத்தும் எதையும் செய்ய அவன் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. மற்றவர்களைப் பற்றியும் எதையும் பேச அனுமதிக்கவில்லை. தேவனை அவமதித்த மற்றும் அவமதிக்கும் வார்த்தைகளை மற்றவர்கள் பேசுவதைக் கண்ட அவன் எப்படி அலட்சியமாக இருக்க முடியும்? இவ்வாறு அவன் தனது மனைவியை “முட்டாள் பெண்” என்று அழைத்தான். தனது மனைவியிடம் யோபுவின் அணுகுமுறையானது கோபம் மற்றும் வெறுப்பு ஆகும். அத்துடன் நிந்தை மற்றும் கண்டிப்பு ஆகியவையும் ஆகும். இது யோபுவின் மனிதத்தின் இயல்பான வெளிப்பாடாகும்—அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் வேறுபடுகிறது—இது அவனுடைய நேர்மையான மனிதத்தின் உண்மையான பிரதிநிதித்துவமாகும். யோபுவுக்கு நீதி உணர்வு இருந்தது—அது அவனை துன்மார்க்கத்தின் காற்றையும் அலைகளையும் வெறுக்கச் செய்தது மற்றும் அபத்தமான தேவ தூஷணத்துக்கு எதிரான கொள்கையாகவும், அபத்தமான வாதங்கள் மற்றும் நகைச்சுவையான கூற்றுக்களை வெறுக்கவும், கண்டிக்கவும், நிராகரிக்கவும் செய்தது. அவனது சொந்த, பூரணமான கொள்கைகளை உண்மையாக வைத்திருக்க அனுமதித்தது. அவன் ஜனங்களால் நிராகரிக்கப்பட்டு, அவனுக்கு நெருக்கமானவர்களால் கைவிடப்பட்டபோது இதுவே அவன் எடுத்த நிலைப்பாடாகும்.

யோபுவின் கனிவான இருதயம் மற்றும் நேர்மை

யோபுவின் நடத்தையிலிருந்து, அவனுடைய மனிதகுலத்தின் பல்வேறு அம்சங்களின் வெளிப்பாட்டை நாம் காண முடிகிறது என்பதால், அவன் தான் பிறந்த நாளைச் சபிக்க வாய் திறந்தபோது யோபுவின் மனிதம் என்னவாக இருந்தது? இதுவே நாம் கீழே பேசவிருக்கும் தலைப்பு ஆகும்.

மேலே, யோபு தன் பிறந்த நாளைச் சபித்ததன் தோற்றம் பற்றி நான் பேசினேன். இதில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? யோபு கடின மனதுடனும் அன்பு இல்லாமலும் இருந்திருந்தால், அவன் சாந்தமாகவும் உணர்ச்சியற்றவனாகவும் மனிதத்தை இழந்தவனாகவும் இருந்திருந்தால், தேவனுடைய இருதயத்தின் விருப்பத்தை அவன் கவனித்திருக்க முடியுமா? அவன் தேவனுடைய இருதயத்தை கவனித்துக்கொண்டதால் அவன் தனது சொந்த பிறந்த நாளை இகழ்ந்திருக்க முடியுமா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோபு கடின மனதுடன், மனிதத்தை இழந்திருந்தால், தேவனுடைய வலியால் அவன் துன்பப்பட்டிருக்க முடியுமா? தேவன் அவனால் வேதனை அடைந்ததால், தன் பிறந்த நாளை அவன் சபித்திருக்க முடியுமா? பதில், நிச்சயமாக இல்லை! யோபு கனிவானவன் என்பதால், தேவனுடைய இருதயத்தை அவன் கவனித்தான். யோபு தேவனுடைய இருதயத்தைக் கவனித்ததால், தேவனுடைய வலியை உணர்ந்தான். யோபு கனிவானவன் என்பதால், தேவனுடைய வலியை உணர்ந்ததன் விளைவாக அவன் அதிக வேதனையை அனுபவித்தான். தேவனுடைய வலியை அவன் உணர்ந்ததால், தன் பிறந்த நாளை வெறுக்கத் தொடங்கினான். எனவே, அவன் பிறந்த நாளைச் சபித்தான். அந்நியர்களுக்கு, யோபுவின் சோதனைகளின் போது அவனிடமிருந்த அவனது முழு நடத்தையும் முன்மாதிரியாக இருக்கிறது. தன் பிறந்த நாளை அவன் சபிப்பது மட்டுமே அவனது பரிபூரணத்திற்கும் நேர்மைக்கும் முன்னாக ஒரு கேள்விக்குறியை வரைகிறது, அல்லது வேறொரு மதிப்பீட்டை வழங்குகிறது. உண்மையில், இது யோபுவின் மனிதத்தின் சாராம்சத்தின் உண்மையான வெளிப்பாடாகும். அவனது மனிதத்தின் சாராம்சம் மறைக்கப்படவில்லை அல்லது தொகுக்கப்படவில்லை, அல்லது வேறு யாராலும் திருத்தப்படவில்லை. தன் பிறந்த நாளை அவன் சபித்தபோது, அவன் இருதயத்திற்குள் ஆழ்ந்த கனிவையும் நேர்மையையும் வெளிப்படுத்தினான். அவன் ஒரு நீரூற்று போன்றவன். அதன் நீர் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறது.

யோபுவைப் பற்றி இதையெல்லாம் கற்றுக்கொண்டதால், பெரும்பாலான ஜனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி யோபுவின் மனிதத்தின் சாராம்சத்தைப் பற்றி மிகவும் துல்லியமான மற்றும் எந்தவொரு சார்பும் இல்லாத மதிப்பீட்டைக் கொண்டிருப்பார்கள். தேவனால் பேசப்பட்டபடி யோபுவின் பரிபூரணத்தையும் நேர்மையையும் பற்றி அவர்கள் ஆழமான, நடைமுறைக்கேற்ற மற்றும் மேம்பட்ட புரிதலும் பாராட்டும் கொண்டிருக்க வேண்டும். இந்தப் புரிதலும் உணர்வும் தேவனுக்குப் பயப்படவும் தீமைகளைத் தவிர்க்கவும் ஜனங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 52

சாத்தானிடம் யோபுவை தேவன் வழங்குவதற்கும் தேவனுடைய கிரியையின் நோக்கங்களுக்கும் இடையிலான உறவு

யோபு பரிபூரணன், நேர்மையானவன் என்பதையும், அவன் தேவனுக்கு அஞ்சினான், தீமையைத் தவிர்த்தான் என்பதையும் பெரும்பாலான ஜனங்கள் இப்போது உணர்ந்தாலும், இந்த அங்கீகாரம் அவர்களுக்கு தேவனுடைய நோக்கத்தைப் பற்றி அதிகப் புரிதலைத் தரவில்லை. யோபுவின் மனிதத்தையும் நோக்கத்தையும் பார்த்து பொறாமைப்படும் அதே நேரத்தில், அவர்கள் தேவனைப் பற்றிய பின்வரும் கேள்வியைக் கேட்கிறார்கள்: யோபு மிகவும் பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருந்தான், ஜனங்கள் அவனைப் பெரிதும் போற்றுகிறார்கள். இந்நிலையில், தேவன் அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்து இவ்வளவு வேதனைகளுக்கு ஆளாக்கியது ஏன்? இத்தகைய கேள்விகள் பலரின் இருதயங்களில் உள்ளன—அல்லது இந்தச் சந்தேகம் பலரின் இருதயங்களில் உள்ள கேள்வியாகும். இது பலரைக் குழப்பிவிட்டதால், இந்தக் கேள்வியை நாம் ஆராய்ந்து சரியாக விளக்க வேண்டும்.

தேவன் செய்யும் அனைத்தும் அவசியமானவை மற்றும் அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், அவர் மனிதனில் செய்கிற அனைத்தும் அவருடைய ஆளுகையையும் மனிதகுலத்தின் இரட்சிப்பையும் பற்றியது. இயற்கையாகவே, தேவனுடைய பார்வையில் யோபு பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருந்தபோதிலும், யோபுவில் தேவன் செய்த கிரியையும் வேறுபட்டதல்ல. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் என்ன செய்கிறார் அல்லது அவர் அதைச் செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், விளைவைப் பொருட்படுத்தாமல், அவருடைய குறிக்கோளைப் பொருட்படுத்தாமல், அவருடைய செயல்களின் நோக்கம் மாறாது. அவருடைய நோக்கம் தேவனுடைய வார்த்தைகளை, தேவனுடைய எதிர்பார்ப்புகளை மற்றும் மனிதனுக்கான சித்தத்தை மனிதனிடம் செயல்படுத்துவது ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனது படிகளுக்கு ஏற்ப நேர்மறையானது என்று தேவன் நம்புகிற அனைத்தையும் மனிதனுக்குள் செயல்படுத்துவதும், தேவனுடைய இருதயத்தைப் புரிந்துக்கொள்வதற்கும் தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்துக்கொள்வதற்கும் மனிதனுக்கு உதவுவதும், தேவனுடைய ராஜரீகத்திற்கும் ஏற்பாடுகளுக்கும் மனிதன் கீழ்ப்படிய அனுமதிப்பதும், இதனால் மனிதன் தேவ பயத்தை அடைய அனுமதிப்பதும் தீமையைத் தவிர்க்கச் செய்வதும் ஆகும்—இவை அனைத்தும் தேவன் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய நோக்கத்தின் ஓர் அம்சமாகும். மற்ற அம்சம் என்னவென்றால், தேவனுடைய கிரியையில் சாத்தான் ஒரு பிரதிபலிப்புப் படலமாகவும் சேவிக்கும் பொருளாகவும் இருப்பதால், மனிதன் பெரும்பாலும் சாத்தானுக்கு வழங்கப்படுகிறான். சாத்தானுடைய சோதனையில் ஜனங்களைக் காண தேவன் அனுமதிப்பதற்கும், சாத்தானுடைய துன்மார்க்கம், அசிங்கம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றைத் தாக்குவதற்கும், இது தேவன் பயன்படுத்தும் வழிமுறையாகும். இதனால் ஜனங்கள் சாத்தானை வெறுக்கிறார்கள். எதிர்மறையானதை அறிந்துக்கொள்கிறார்கள். இந்தச் செயல்முறை சாத்தானுடைய கட்டுப்பாடு மற்றும் குற்றச்சாட்டுகள், குறுக்கீடு மற்றும் தாக்குதல்களிலிருந்து அவர்கள் படிப்படியாக தங்களை விடுவிக்க அனுமதிக்கிறது—தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய அறிவு மற்றும் கீழ்ப்படிதல், தேவன் மீதுள்ள நம்பிக்கை மற்றும் அவரைப் பற்றிய பயம் ஆகியவற்றிற்கு நன்றி செலுத்தும்வரை, அவர்கள் சாத்தானுடைய தாக்குதல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளில் ஜெயம் பெறுகிறார்கள். அப்போதுதான் அவர்கள் சாத்தானுடைய கட்டுப்பாட்டிலிருந்து பூரணமாக விடுவிக்கப்படுவார்கள். ஜனங்களின் விடுதலை என்பது சாத்தான் தோற்கடிக்கப்பட்டது, அதாவது அவர்கள் இனி சாத்தானுடைய வாயில் உள்ள உணவாக இருக்க மாட்டார்கள், அவர்களை விழுங்குவதற்குப் பதிலாக, சாத்தான் அவர்களைக் கைவிட்டுவிட்டது என்பதாகும். ஏனென்றால், அத்தகையவர்கள் நேர்மையானவர்கள். ஏனென்றால், அவர்கள் தேவன் மீது நம்பிக்கை, கீழ்ப்படிதல், பயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் சாத்தானுடன் முற்றிலுமாக உறவை முறித்துக் கொள்கிறார்கள். அவர்கள் சாத்தானுக்கு அவமானத்தைத் தருகிறார்கள். அவர்கள் சாத்தானைக் கோழையாக்குகிறார்கள். அவர்கள் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடிக்கிறார்கள். தேவனைப் பின்பற்றுவதில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், கீழ்ப்படிதலும், தேவனுக்குப் பயப்படுவதும் சாத்தானைத் தோற்கடித்து, சாத்தான் அவர்களை முற்றிலுமாக விட்டுவிடச் செய்கிறது. இது போன்றவர்கள் மட்டுமே தேவனால் உண்மையிலேயே ஆதாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதான் மனிதனைக் காப்பாற்றுவதற்கான தேவனுடைய இறுதி நோக்கம் ஆகும். அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், தேவனால் பூரணமாகப் ஆதாயம் செய்யப்படவும் விரும்பினால், தேவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் சோதனையைச் சந்தித்து, சாத்தானிடமிருந்து வரும் பெரியவற்றையும் சிறியவற்றையும் தாக்க வேண்டும். இந்த சோதனைகள் மற்றும் தாக்குதல்களிலிருந்து வெளிவந்து சாத்தானைப் பூரணமாகத் தோற்கடிக்க முடிந்தவர்கள் தேவனால் இரட்சிக்கப்பட்டவர்கள். அதாவது, தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனுடைய சோதனைகளுக்கு ஆளானவர்களும் சாத்தானால் எண்ணற்ற முறை சோதிக்கப்பட்டு தாக்கப்பட்டவர்களும் ஆவர். தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனுடைய சித்தத்தையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துக்கொள்கிறார்கள். தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தேவனுக்குப் பயப்படுவதையும் சாத்தானுடைய சோதனையின் மத்தியில் தீமையைத் தவிர்ப்பதையும் கைவிட மாட்டார்கள். தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்படுபவர்களுக்கு நேர்மை இருக்கிறது. அவர்கள் கனிவானவர்கள். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில் வேறுபடுகிறார்கள். அவர்களுக்கு நீதியின் உணர்வு இருக்கிறது. பகுத்தறிவு இருக்கிறது. அவர்கள் தேவனைக் கவனித்து, தேவனுடையதை பொக்கிஷமாகக் காக்கிறார்கள். அத்தகையவர்கள் சாத்தானால் பிணைக்கப்படுவதில்லை, உளவு பார்க்கப்படுவதில்லை, குற்றம் சாட்டப்படுவதில்லை அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை. அவர்கள் முற்றிலும் விடுதலையாக இருக்கிறார்கள். அவர்கள் முற்றிலும் விடுவிக்கப்பட்டு விடுதலையாக இருக்கிறார்கள். யோபு அத்தகைய சுதந்திர மனிதன். தேவன் ஏன் அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்தார் என்பதன் துல்லியமான முக்கியத்துவம் இதுதான்.

யோபு சாத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டான். ஆனால் அவன் நித்திய சுதந்திரத்தையும் விடுதலையையும் பெற்றான். மேலும், சாத்தானுடைய கேடு, துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மீண்டும் ஒருபோதும் உட்படுத்தப்படாமல் இருப்பதற்கான உரிமையைப் பெற்றான். அதற்குப் பதிலாக தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தில், தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் சுதந்திரமாகவும் கணக்கிடப்படாமலும் ஜீவிக்கும் உரிமையைப் பெற்றான். இந்த உரிமையை யாரும் பறிக்கவோ, அழிக்கவோ, கைப்பற்றவோ முடியவில்லை. யோபுவின் விசுவாசம், உறுதிப்பாடு, கீழ்ப்படிதல் மற்றும் தேவ பயத்துக்குப் பலனாக இது அவருக்கு வழங்கப்பட்டது. பூமியில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஜெயிப்பதற்கும், பரலோகத்தால் நியமிக்கப்பட்டதும், பூமியால் ஒப்புக் கொள்ளப்பட்டதுமான, பூமியில் இருக்கும் தேவனுடைய உண்மையான உயிரினமாக, குறுக்கிடாமல் சிருஷ்டிகரை வணங்குவதற்கும், உரிமையையும் தகுதியையும் பெறுவதற்கு யோபு தனது ஜீவிதம் என்னும் விலைக்கிரயத்தைச் செலுத்தினான். இதுவே யோபுவால் தாங்கப்பட்ட சோதனையின் மிகப்பெரிய பலன் ஆகும்.

ஜனங்கள் இன்னும் இரட்சிக்கப்படாதபோது, அவர்களின் ஜீவிதம் பெரும்பாலும் சாத்தானால் தலையிடப்படுகிறது, சாத்தானால் கட்டுப்படுத்தவும்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரட்சிக்கப்படாத ஜனங்கள் சாத்தானுக்குக் கைதிகள். அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. அவர்கள் சாத்தானால் விடப்படவில்லை. அவர்கள் தேவனை வணங்குவதற்குத் திறமையற்றவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் அல்ல. அவர்கள் சாத்தானால் நெருக்கமாகப் பின்தொடரப்படுகிறார்கள். கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். அத்தகையவர்களிடம் பேசுவதற்கு மகிழ்ச்சி இல்லை. சாதாரண இருப்பைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பேச அவர்களுக்குக் கண்ணியம் இல்லை. நீ எழுந்து நின்று சாத்தானுடன் யுத்தம் செய்தால், தேவன் மீதான உன் நம்பிக்கையையும் கீழ்ப்படிதலையும் பயன்படுத்தி, சாத்தானுடன் ஜீவனுக்கும் மரணத்துக்குமான யுத்தத்தை நடத்துவதற்கான ஆயுதங்களாக தேவ பயத்தைப் பயன்படுத்தினால், நீ சாத்தானைப் பூரணமாகத் தோற்கடித்து, அது உன்னைப் பார்க்கும்போதெல்லாம் தன் வாலைத் திருப்பிக்கொண்டு கோழைத்தனமாக ஒடச் செய்ய முடிகிறது. இதனால் அது உனக்கு எதிரான தாக்குதல்களையும் குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாகக் கைவிடுகிறது—அப்போதுதான் நீ இரட்சிக்கப்பட்டு சுதந்திரமடைகிறாய். நீ சாத்தானுடன் பூரணமாக உறவை முறித்துக் கொள்ள உறுதியாக இருந்தால், ஆனால் சாத்தானைத் தோற்கடிக்க உதவும் ஆயுதங்கள் உன்னிடம் இல்லை என்றால், நீ இன்னும் ஆபத்தில் இருப்பாய். நேரம் செல்லச் செல்ல, சாத்தானால் நீ சித்திரவதைச் செய்யப்படும்போது, சிறிதளவிலும் வல்லமை உன்னிடம் இல்லாதபோது, நீ இன்னும் சாட்சியளிக்க முடியவில்லை என்றால், சாத்தானுடைய குற்றச்சாட்டுகள் மற்றும் உனக்கு எதிரான தாக்குதல்களில் இருந்து உன்னைப் பூரணமாக விடுவிக்க இயலாதபோது, உனக்கு இரட்சிப்பின் நம்பிக்கை கொஞ்சமாகத்தான் இருக்கும். முடிவில், தேவனுடைய கிரியையின் முடிவு பிரகடனப்படுத்தப்படும்போது, உன்னை விடுவிக்க முடியாமல் நீ இன்னும் சாத்தானுடைய பிடியில் இருப்பாய். இதனால் உனக்கு ஒருபோதும் வாய்ப்போ நம்பிக்கையோ இருக்காது. அப்படியானால், அத்தகையவர்கள் முற்றிலும் சாத்தானுடைய சிறையில் இருப்பார்கள் என்பதே இதன் உட்பொருள் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 53

தேவனுடைய சோதனைகளை ஏற்றுக்கொண்டு, சாத்தானுடைய சோதனையை மேற்கொண்டு, உங்கள் முழு ஜீவிதத்தையும் தேவன் பெற அனுமதியுங்கள்

தேவனுடைய நிலையான ஏற்பாடு மற்றும் மனிதனுடைய ஆதரவின் கிரியையின் போது, தேவன் தனது சித்தத்தையும் தேவைகளையும் மனிதனிடம் பூரணமாய்ச் சொல்கிறார். அவருடைய செயல்கள், மனநிலை மற்றும் தன்னையும் தன்னிடம் உள்ளவற்றையும் மனிதனுக்குக் காட்டுகிறார். மனிதனை அந்தஸ்துடன் சித்தப்படுத்துவதும், மனிதன் தேவனைப் பின்பற்றும் போது தேவனிடமிருந்து பல்வேறு உண்மைகளைப் பெற அனுமதிப்பதும் இதன் நோக்கம் ஆகும்—சாத்தானை எதிர்த்துப் போராடுவதற்காக தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் சத்தியங்களாகும். இவ்வாறு சித்தப்படுத்தப்பட்ட மனிதன் தேவனுடைய சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். மனிதனைச் சோதிக்க தேவனுக்குப் பல முறைகள் மற்றும் வழிகள் உள்ளன. ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் தேவனுடைய எதிரியின் “ஒத்துழைப்பு” தேவைப்படுகிறது: சாத்தான். அதாவது, சாத்தானுடன் போரிடுவதற்கான ஆயுதங்களை மனிதனுக்குக் கொடுத்துவிட்டு, தேவன் மனிதனைச் சாத்தானிடம் ஒப்படைத்து, மனிதனுடைய நிலைப்பாட்டை “சோதிக்க” சாத்தானை அனுமதிக்கிறார். சாத்தானுடைய யுத்தத்தின் அமைப்புகளிலிருந்து மனிதன் வெளியேற முடியுமானால், சாத்தானுடைய முற்றுகையிலிருந்து தப்பித்து இன்னும் ஜீவிக்க முடியுமானால், மனிதன் சோதனையில் தேர்ச்சி பெற்றிருப்பான். ஆனால் மனிதன் சாத்தானுடைய யுத்தத்தின் அமைப்புகளை விட்டு வெளியேறி, சாத்தானுக்கு அடிபணிந்தால், அவன் சோதனையில் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டான். மனிதனுடைய எந்த அம்சத்தை தேவன் ஆராய்ந்தாலும், சாத்தானால் தாக்கப்படும்போது மனிதன் தன் சாட்சியில் உறுதியாக நிற்கிறானா இல்லையா என்பதும், அவன் தேவனைக் கைவிட்டு, சரணடைந்து சாத்தானுக்கு அடிபணிந்து சாத்தானிடம் சமர்ப்பித்திருக்கிறானா என்பதும் அவனது பரிசோதனைக்கான அளவுகோல்கள் ஆகும். மனிதனை இரட்சிக்க முடியுமா இல்லையா என்பது, அவன் சாத்தானை மேற்கொண்டு அதைத் தோற்கடிக்க முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்தது ஆகும். மேலும், அவன் சுதந்திரத்தைப் பெற முடியுமா இல்லையா என்பது, சாத்தானுடைய அடிமைத்தனத்தை ஜெயிக்க தேவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை அவன் தானாகவே உயர்த்தி சாத்தானுடைய நம்பிக்கையை முற்றிலுமாக அழித்து அதைத் தனியாக விட்டுவிட முடியுமா என்பதைப் பொறுத்தது ஆகும். சாத்தான் நம்பிக்கையை கைவிட்டு, ஒருவரை விட்டுவிட்டால், சாத்தான் மீண்டும் அந்த நபரை தேவனிடமிருந்து எடுக்க முயற்சிக்க மாட்டான். அந்த நபரை மீண்டும் ஒருபோதும் குற்றம் சாட்ட மாட்டான். அவரிடம் தலையிட மாட்டான். அவரை ஒருபோதும் சித்திரவதைச் செய்யவோ அல்லது தாக்கவோ மாட்டான். இது போன்ற ஒருவர் மட்டுமே தேவனால் உண்மையிலேயே ஆதாயம் செய்யப்பட்டிருப்பார். தேவன் ஜனங்களைப் பெறும் முழு செயல்முறையும் இதுதான்.

யோபுவின் சாட்சியால் பிற்காலத் தலைமுறையினருக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை மற்றும் வெளிச்சம்

தேவன் ஒருவரை முழுவதுமாகப் பெறும் செயல்முறையைப் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில், தேவன் யோபுவைச் சாத்தானுக்கு ஒப்படைப்பதன் நோக்கங்களையும் முக்கியத்துவத்தையும் ஜனங்கள் புரிந்துக்கொள்வார்கள். யோபுவின் வேதனையால் ஜனங்கள் இனி தொந்தரவு செய்யப்படுவதில்லை. அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு புதிய புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் யோபுவைப் போலவே அதே சோதனையிலும் பாதிக்கப்படுவார்களா என்பது பற்றி அவர்கள் இனி கவலைப்படுவதில்லை. தேவனுடைய சோதனைகள் வருவதை எதிர்க்கவோ நிராகரிக்கவோ மாட்டார்கள். யோபுவின் நம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் சாத்தானை ஜெயிப்பதற்காக அவன் அளித்த சாட்சிகள் ஜனங்களுக்குப் பெரும் உதவியையும் ஊக்கத்தையும் அளித்தன. யோபுவில், அவர்கள் தங்கள் சொந்த இரட்சிப்பின் நம்பிக்கையைப் பார்க்கிறார்கள். விசுவாசத்தினாலும், கீழ்ப்படிதலினாலும், தேவனுக்குப் பயந்ததாலும், சாத்தானைத் தோற்கடிப்பதும், சாத்தானை ஜெயிப்பதும் முற்றிலும் சாத்தியம் என்பதைக் காண்கிறார்கள். தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை, எல்லாவற்றையும் இழந்தபின் தேவனைக் கைவிடக்கூடாது என்ற உறுதியையும் நம்பிக்கையையும் அவர்கள் வைத்திருக்கும் வரை, அவர்கள் சாத்தான் மீது அவமானத்தையும் தோல்வியையும் கொண்டு வர முடியும். தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்பதற்கான உறுதியையும் விடாமுயற்சியையும் மட்டுமே அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்கள் காண்கிறார்கள்—அதாவது, தங்கள் உயிரை இழந்தாலும் கூட—சாத்தானுக்குப் பயந்து, அவசரமாகப் பின்வாங்க கூடாது என்பதைக் காண்கிறார்கள். யோபுவின் சாட்சி பிற்கால தலைமுறையினருக்கு ஓர் எச்சரிக்கையாகும். மேலும், அவர்கள் சாத்தானைத் தோற்கடிக்காவிட்டால், அவர்கள் ஒருபோதும் சாத்தானுடைய குற்றச்சாட்டுகளிலிருந்தும் தலையீட்டிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது என்றும் துஷ்பிரயோகத்திலிருந்தும் சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்க முடியாது என்றும் இந்த எச்சரிக்கை அவர்களுக்குச் சொல்கிறது. யோபுவின் சாட்சி பிற்காலத் தலைமுறையினருக்கு வெளிச்சம் அளித்துள்ளது. இந்த வெளிச்சம் ஜனங்களுக்கு அவர்கள் பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருந்தால் மட்டுமே அவர்கள் தேவனுக்கு அஞ்சவும் தீமையைத் தவிர்க்கவும் முடியும் என்று கற்பிக்கிறது. அவர்கள் தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்த்துவிட்டால் மட்டுமே அவர்கள் தேவனுக்கு வலுவான மற்றும் உறுதியான சாட்சிகளாக இருக்க முடியும் என்று அது அவர்களுக்குக் கற்பிக்கிறது. அவர்கள் தேவனுக்கு வலுவான மற்றும் உறுதியான சாட்சி அளித்தால் மட்டுமே அவர்கள் ஒருபோதும் சாத்தானால் கட்டுப்படுத்தப்பட முடியாது என்றும் தேவனுடைய வழிகாட்டுதலிலும் பாதுகாப்பிலும் ஜீவிக்க முடியும்—அப்போதுதான் அவர்கள் உண்மையிலேயே இரட்சிக்கப்படுவார்கள் என்றும் கற்பிக்கிறது. இரட்சிப்பைப் பின்பற்றும் அனைவருமே யோபுவின் ஆளுமையையும் அவரது ஜீவிதத் தேடலையும் பின்பற்ற வேண்டும். அவர் தனது முழு ஜீவிதத்திலும், சோதனையின்போது தேவனுக்குப் பயந்து நடந்துகொண்டது, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைத் தொடரும் அனைவருக்கும் ஓர் அருமையான பொக்கிஷம் ஆகும்.

யோபுவின் சாட்சி தேவனுக்கு ஆறுதல் தருகிறது

யோபு ஓர் அழகான மனிதன் என்று நான் இப்போது உங்களுக்குச் சொன்னால், இந்த வார்த்தைகளுக்குள் இருக்கும் பொருளை நீங்கள் உணர முடியாமல் போகலாம். இந்த விஷயங்களைப் பற்றி நான் ஏன் பேசினேன் என்பதன் பின்னணியில் உள்ள உணர்வைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆனால், யோபுவைப் போலவே அல்லது அதற்கு ஒத்த சோதனைகளை நீயும் அனுபவிக்கும் நாள் வரும் வரை காத்திரு. நீ துன்பங்களை அனுபவிக்கும்போது, தேவனால் தனிப்பட்ட முறையில் உனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சோதனைகளை நீ அனுபவிக்கும்போது, உன்னுடைய அனைத்தையும் கொடுக்கும்போது, சாத்தானை ஜெயிப்பதற்காகவும், சோதனைகளுக்கு மத்தியில் தேவனுக்கு சாட்சி அளிப்பதற்காகவும் அவமானத்தையும் கஷ்டத்தையும் சகித்துக்கொள்—பின்னர் நான் பேசும் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை நீ உணர முடியும். அந்த நேரத்தில், நீ யோபுவை விட மிகவும் தாழ்ந்தவன் என்பதை உணருவாய். யோபு எவ்வளவு அழகானவன் என்பதை நீ உணருவாய். அவன் பின்பற்றுவதற்கு தகுதியானவன் என்பதை நீ உணருவாய். அந்த நேரம் வரும்போது, யோபு பேசும் உன்னதமான வார்த்தைகள் கெட்டுப்போனவர்களுக்கும், இந்த காலங்களில் ஜீவிப்பவர்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை நீ புரிந்துகொள்வாய். இன்றைய ஜனங்கள் யோபுவால் அடையப்பட்டதை அடைவது எவ்வளவு கடினம் என்பதை நீ புரிந்துகொள்வாய். இது கடினம் என்று நீ உணரும்போது, தேவனுடைய இருதயம் எவ்வளவு கவலையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்வாய். அத்தகையவர்களைப் பெறுவதற்கு தேவன் செலுத்திய விலைக்கிரயம் எவ்வளவு உயர்ந்தது என்பதை நீ புரிந்துகொள்வாய். தேவன் மனிதகுலத்திற்காகச் செய்கிற மற்றும் செலவழிக்கும் விலைக்கிரயம் எவ்வளவு விலைமதிப்புள்ளது என்பதை நீ புரிந்துகொள்வாய். இப்போதும் நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு யோபுவைப் பற்றிய துல்லியமான புரிதலும் சரியான மதிப்பீடும் இருக்கிறதா? உங்கள் பார்வையில், யோபு உண்மையிலேயே பரிபூரணமான, நேர்மையான மனிதனாக இருந்தானா? பெரும்பாலான ஜனங்கள் நிச்சயமாக ஆம் என்று சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், யோபு செயல்பட்டதும் வெளிப்படுத்தியதும் எந்த மனிதனும் அல்லது சாத்தானும் மறுக்க முடியாதவை ஆகும். இவை, சாத்தான் மீதான யோபுவின் ஜெயத்தின் மிக வல்லமைவாய்ந்த சான்றாகும். இந்த ஆதாரம் யோபுவில் தயாரிக்கப்பட்டது. இது தேவனால் பெறப்பட்ட முதல் சாட்சியமாகும். இவ்வாறு, யோபு சாத்தானுடைய சோதனையில் ஜெயம் பெற்று தேவனுக்கு சாட்சி அளித்தபோது, தேவன் யோபில் நம்பிக்கையைக் கண்டார். அவருடைய இருதயம் யோபுவால் ஆறுதலடைந்தது. சிருஷ்டிப்பின் காலம் முதல் யோபுவின் காலம் வரை, ஆறுதல் என்றால் என்ன என்பதையும், மனிதனால் ஆறுதலளிக்கப்படுவதையும் தேவன் உண்மையாக அனுபவித்த முதல் முறை இதுவாகும். அவருக்காகப் பெற்ற உண்மையான சாட்சியை அவர் கண்டதும் பெற்றதும் இதுவே முதல் முறை ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 54

யோபு காதால் தேவனுடைய குரலைக் கேட்கிறான் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

யோபு 9:11  இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன்.

யோபு 23:8-9  இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.

யோபு 42:2-6  தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

தேவன் தன்னை யோபுவுக்கு வெளிப்படுத்தவில்லை என்றாலும், யோபு தேவனுடைய ராஜரீகத்தை நம்புகிறான்

இந்த வார்த்தைகளின் உந்துதல் என்ன? இங்கே ஓர் உண்மை இருக்கிறது என்பதை உங்களில் யாராவது உணர்ந்திருக்கிறீர்களா? முதலில், ஒரு தேவன் இருப்பதாக யோபுவுக்கு எப்படித் தெரியும்? அப்படியானால், வானம், பூமி மற்றும் அனைத்தும் தேவனால் ஆளப்படுகின்றன என்பதை அவன் எப்படி அறிந்திருந்தான்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கும் பத்தி ஒன்று உள்ளது: “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.” தேவனைத் தன் கண்களால் பார்ப்பதை விட, யோபு தேவனைப் பற்றி புராணக்கதைகளிலிருந்து கற்றுக்கொண்டான் என்பதை இந்த வார்த்தைகளிலிருந்து நாம் அறிகிறோம். இந்த சூழ்நிலையில்தான் அவன் தேவனைப் பின்பற்றும் பாதையில் நடக்கத் தொடங்கினான். அதன் பிறகு அவன் தனது ஜீவிதத்திலும் எல்லாவற்றிலும் தேவன் இருப்பதை உறுதிப்படுத்தினான். இங்கே மறுக்க முடியாத உண்மை உள்ளது—அந்த உண்மை என்ன? தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்ற முடிந்த போதிலும், யோபு தேவனைப் பார்த்ததில்லை. இதில், அவன் இன்றைய ஜனங்களைப் போலவே இல்லையா? யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை, இதன் அர்த்தம் என்னவென்றால், அவன் தேவனைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், தேவன் எங்கே இருக்கிறார், அல்லது தேவன் எப்படிப்பட்டவர், அல்லது தேவன் என்ன செய்கிறார் என்பது அவனுக்குத் தெரியாது. இவை அனைத்தும் அகநிலை காரணிகள் ஆகும். புறநிலையாகக் காரணத்துடன் பேசினால், அவன் தேவனைப் பின்பற்றினாலும், தேவன் அவனுக்கு ஒருபோதும் தோன்றவில்லை அல்லது அவனுடன் பேசவில்லை. இது உண்மையல்லவா? தேவன் யோபுவிடம் பேசவில்லை அல்லது அவனுக்கு எந்தக் கட்டளைகளையும் கொடுக்கவில்லை என்றாலும், யோபு தேவன் இருப்பதைக் கண்டான். எல்லாவற்றிலும் அவருடைய ராஜரீகத்தைக் கண்டான். புராணங்களின் மூலம் யோபு காதுகளால் தேவனைக் கேள்விப்பட்டான். அதன் பிறகு அவன் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்கும் ஜீவிதத்தைத் தொடங்கினான். யோபு தேவனைப் பின்பற்றிய தோற்றம் மற்றும் செயல்முறை அத்தகையவை ஆகும். ஆனால் அவன் எவ்வாறு தேவனுக்கு அஞ்சினான், தீமையைத் தவிர்த்தான் என்பது முக்கியமல்ல. அவன் தனது நேர்மையை எப்படி உறுதியாகக் கருதினாலும், தேவன் அவனுக்கு ஒருபோதும் தோன்றவில்லை. இந்தப் பத்தியைப் படிப்போம். அவர் சொன்னார்: “இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன்” (யோபு 9:11). இந்த வார்த்தைகள் என்னவென்றால், யோபு தன்னைச் சுற்றியுள்ள தேவனை உணர்ந்திருக்கலாம் அல்லது அவன் உணராமல் இருந்திருக்கலாம்—ஆனால் அவனால் ஒருபோதும் தேவனைப் பார்க்க முடியவில்லை. தேவன் தனக்கு முன்னால் செல்வதை, அல்லது செயல்படுவதை, அல்லது மனிதனை வழிநடத்துவதை அவன் கற்பனை செய்த நேரங்கள் இருந்தன. ஆனால் அவன் ஒருபோதும் அவற்றை அறிந்திருக்கவில்லை. மனிதன் எதிர்பார்க்காதபோது தேவன் அவன் மீது வருகிறார். தேவன் எப்போது வருவார், அல்லது அவர் எங்கு வருகிறார் என்று மனிதனுக்குத் தெரியாது. ஏனென்றால், மனிதனால் தேவனைப் பார்க்க முடியாது. இதனால் தேவன் மனிதனிடமிருந்து மறைக்கப்படுகிறார்.

தேவன் யோபுவிடமிருந்து மறைக்கப்படுகிறார் என்ற உண்மையால் தேவன் மீதான யோபுவின் நம்பிக்கை அசையவில்லை

வேதாகமத்தின் பின்வரும் பத்தியில், யோபு பின்வருமாறு கூறுகிறான், “இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்” (யோபு 23:8-9). இந்த விவரத்தில், யோபுவின் அனுபவங்களிலெல்லாம், தேவன் அவனிடம் மறைந்திருந்தார் என்பதை அறிகிறோம். தேவன் அவனுக்கு வெளிப்படையாகத் தோன்றவில்லை, வெளிப்படையாக அவனிடம் எந்த வார்த்தையும் பேசவில்லை. ஆனாலும் அவனுடைய இருதயத்தில், யோபு தேவன் இருப்பதைப் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தான். தேவன் தனக்கு முன்பாக நடந்துக்கொண்டிருக்கலாம் அல்லது அவருடைய பக்கத்திலேயே செயல்படக்கூடும் என்றும், தேவனைக் காண முடியாவிட்டாலும், தேவன் அவனுக்கு அடுத்தபடியாக இருந்தார், அவனைப் பற்றிய எல்லாவற்றையும் ஆளுகிறார் என்றும் அவன் எப்போதும் நம்பியிருந்தார். யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் அவனுடைய விசுவாசத்திற்கு அவனால் உண்மையாக இருக்க முடிந்தது. அதை வேறு எந்த மனிதனாலும் செய்ய முடியவில்லை. மற்றவர்கள் ஏன் அதை செய்ய முடியவில்லை? ஏனென்றால், தேவன் யோபுவிடம் பேசவில்லை அல்லது அவருக்குத் தோன்றவில்லை. அவன் உண்மையிலேயே தேவனை நம்பவில்லை என்றால், அவனால் தொடர்ந்து சென்றிருக்க முடியாது. தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை அவன் உறுதியாகப் பிடித்திருக்க முடியாது. இது உண்மையல்லவா? யோபு இந்த வார்த்தைகளைச் சொன்னதைப் படிக்கும்போது நீ எப்படி உணர்கிறாய்? யோபுவின் பரிபூரணமும் நேர்மையும், தேவனுக்கு முன்பாக இருந்த அவன் நீதியும் உண்மைதான் என்றும், தேவனுடைய தரப்பில் மிகைப்படுத்தல் இல்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? தேவன் யோபுவை மற்றவர்களைப் போலவே நடத்தினாலும், அவனிடம் தோன்றவில்லை, பேசவில்லை என்றாலும், யோபு இன்னும் தனது உண்மையை உறுதியாகக் பற்றிக் கொண்டிருந்தான். இன்னும் தேவனுடைய ராஜரீகத்தை நம்பினான். அவன் அடிக்கடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். தேவனைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக தேவனுக்கு முன்பாக ஜெபம் செய்தான். தேவனைப் பார்க்காமல் தேவனுக்கு அஞ்சும் யோபுவின் குணத்தில், அவன் நேர்மறையான விஷயங்களை எவ்வளவு நேசித்தான் என்பதையும், அவனுடைய நம்பிக்கை எவ்வளவு உறுதியானது, உண்மையானது என்பதையும் காண்கிறோம். தேவன் அவனிடமிருந்து மறைந்திருந்தாலும் அவன் தேவன் இருப்பதை மறுக்கவில்லை. தேவனை ஒருபோதும் பார்த்ததில்லை என்றாலும் அவன் நம்பிக்கையை இழந்து தேவனை விட்டுவிடவில்லை. அதற்குப் பதிலாக, எல்லாவற்றையும் ஆளும் தேவனுடைய மறைக்கப்பட்ட கிரியைக்கு மத்தியில் தேவன் இருப்பதை அவன் உணர்ந்தான். தேவனுடைய ராஜரீகத்தையும் வல்லமையையும் உணர்ந்தான். தேவன் மறைந்திருப்பதால் நேர்மையாக இருப்பதை அவன் விட்டுவிடவில்லை. தேவன் அவனுக்கு ஒருபோதும் தோன்றவில்லை என்பதற்காக தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை அவன் கைவிடவில்லை. எல்லாவற்றிலும் தேவனுடைய ராஜரீகத்தை அவர் ஏற்கெனவே பார்த்திருந்ததால், தேவன் தாம் இருப்பதை நிரூபிக்க வெளிப்படையாகத் தோன்றும்படி யோபு ஒருபோதும் கேட்டதில்லை. மற்றவர்கள் பெறாத ஆசீர்வாதங்களையும் கிருபைகளையும் அவன் பெற்றான் என்று அவன் நம்பினான். தேவன் அவனுக்கு மறைந்திருந்தாலும், தேவன் மீதான யோபுவின் நம்பிக்கை ஒருபோதும் அசைக்கப்படவில்லை. ஆகவே, வேறு யாரிடமும் இல்லாத தேவனுடைய ஒப்புதல் மற்றும் தேவனுடைய ஆசீர்வாதத்தை அவன் அறுவடை செய்தான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 55

ஆசீர்வாதம் அல்லது பேரழிவைப் பற்றி சிந்திக்காமல் யோபு தேவனுடைய நாமத்தைத் துதிக்கிறான்

வேதாகமத்தின் யோபுவின் கதைகளில் ஒருபோதும் குறிப்பிடப்படாத ஓர் உண்மை இருக்கிறது. இந்த உண்மையே இன்று நம் தலைப்பாக இருக்கும். யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளை தன் காதுகளால் கேட்டதில்லை என்றாலும், யோபுவின் இருதயத்தில் தேவனுக்கு ஒரு இடம் இருந்தது. தேவனைப் பற்றிய யோபுவின் அணுகுமுறை என்ன? இது முன்னர் குறிப்பிட்டது போல், “யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” தேவனுடைய நாமத்தை அவன் துதிப்பது நிபந்தனையற்றது, சூழலைப் பொருட்படுத்தாதது மற்றும் எந்த காரணத்திற்கும் கட்டுப்படாதது ஆகும். யோபு தன் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தான். அதை தேவன் கட்டுப்படுத்த அனுமதித்தான். அவன் நினைத்தவை, அவன் தீர்மானித்தவை மற்றும் அவன் இருதயத்தில் திட்டமிட்டவை அனைத்தும் தேவனுக்கு முன்பாகத் திறக்கப்பட்டன. அவை தேவனிடமிருந்து மறைக்கப்படவில்லை. அவனுடைய இருதயம் தேவனை எதிர்த்து நிற்கவில்லை. தனக்காக எதையாகிலும் செய்யவோ அல்லது தனக்கு எதையாகிலும் கொடுக்கவோ அவன் ஒருபோதும் தேவனிடம் கேட்டதில்லை. மேலும், அவன் தேவனை வணங்குவதன் மூலம் எதையும் பெற முடியும் என்ற ஆடம்பரமான ஆசைகளை கொண்டிருக்கவில்லை. யோபு தேவனோடு வர்த்தகம் பேசவில்லை. தேவனிடம் தேவைகள் அல்லது எதிர்பார்ப்புகள் எதையும் அவன் முன் வைக்கவில்லை. தேவனுடைய நாமத்தை அவன் புகழ்வதற்கு எல்லாவற்றையும் ஆளும் தேவனுடைய பெரும் வல்லமையும் அதிகாரமும் காரணமாக இருந்தது. அவன் ஆசீர்வாதங்களைப் பெற்றானா அல்லது பேரழிவால் பாதிக்கப்பட்டானா என்பதைப் பொறுத்து அந்த புகழ்ச்சி இல்லை. தேவன் ஜனங்களை ஆசீர்வதித்தாலும் அல்லது அவர்கள் மீது பேரழிவை ஏற்படுத்தினாலும், தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் மாறாது என்றும், இதனால், ஒரு மனிதனுடைய சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய நாமம் புகழப்பட வேண்டும் என்றும் அவன் நம்பினார். அந்த மனிதன் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவது தேவனுடைய ராஜரீகத்தின் காரணமாக நிகழ்கிறது என்றும், மனிதனுக்குப் பேரழிவு ஏற்படும்போதும், அதுவும் தேவனுடைய ராஜரீகத்தின் காரணமாக நிகழ்கிறது என்றும் அவன் நம்பினான். தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் மனிதனுடைய அனைத்தையும் ஆளுகின்றன. மனிதனுடைய அதிர்ஷ்டத்தின் மாறுபாடுகள் தேவனுடைய வல்லமை மற்றும் அதிகாரத்தின் வெளிப்பாடாகும். மேலும், ஒருவரின் பார்வையைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய நாமம் புகழப்பட வேண்டும். இதைத்தான் யோபு அனுபவித்தான். அவனுடைய ஜீவிதத்தின் ஆண்டுகளில் அறிந்து கொண்டான். யோபுவின் எண்ணங்களும் செயல்கள் அனைத்தும் தேவனுடைய காதுகளை அடைந்து தேவனுக்கு முன்பாக வந்தன. அவை தேவனால் முக்கியமானவையாகக் காணப்பட்டன. தேவன் யோபுவின் இந்த அறிவைப் போற்றினார். அத்தகைய இருதயத்தைக் கொண்டிருப்பதற்காக யோபுவைப் பொக்கிஷமாகக் கருதினார். இந்த இருதயம் எப்பொழுதும், எல்லா இடங்களிலும் தேவனுடைய கட்டளைக்காகக் காத்திருந்தது. நேரம் அல்லது இடம் எதுவாக இருந்தாலும் தனக்கு நேர்ந்ததை வரவேற்றது. யோபு தேவனிடம் எந்த எதிர்பார்ப்பும் வைக்கவில்லை. தேவனிடமிருந்து வந்த எல்லா ஏற்பாடுகளுக்காகக் காத்திருந்து, ஏற்றுக்கொள்வது, எதிர்கொள்வது, கீழ்ப்படிவது என்பதே அவன் தனக்குத்தானே எதிர்பார்த்ததாகும். யோபு இது தனது கடமை என்று நம்பினான். அது துல்லியமாக தேவனால் விரும்பப்பட்டது. யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. தேவனுடைய பேசிய எந்த வார்த்தைகளையும், வெளியிட்ட எந்தக் கட்டளைகளையும், கொடுத்த எந்த போதனைகளையும், அவனுக்கு அறிவுறுத்திய எதையும் கேட்டதில்லை. இன்றைய வார்த்தைகளில், சத்தியத்தைப் பற்றி தேவன் அவனுக்கு எந்த அறிவையும், வழிகாட்டுதலையும், ஏற்பாட்டையும் வழங்காதபோது, தேவன்மீது அத்தகைய அறிவையும் அணுகுமுறையையும் அவனால் பெற்றிருக்க முடிந்தது—இது விலைமதிப்பற்றது ஆகும். இதுபோன்ற விஷயங்களை அவன் நிரூபிக்க வேண்டும் என்பது தேவனுக்குப் போதுமானதாகும், அவனுடைய சாட்சி தேவனால் பாராட்டப்பட்டது, போற்றப்பட்டது. யோபு ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை அல்லது தேவன் தனக்கு எந்தப் போதனைகளையும் தனிப்பட்ட முறையில் சொல்வதைக் கேட்டதில்லை, ஆனால் தேவனுக்கு முன்பாக, ஆழ்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் மட்டுமே பேச முடிந்த, பெருமை பேச முடிந்த, பலிகளைச் செலுத்துவதைப் பற்றி பேச முடிந்த, ஆனால் ஒருபோதும் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றிராத மற்றும் ஒருபோதும் தேவனுக்கு அஞ்சாத மனிதர்களை விட யோபுவின் இருதயத்துக்கும், யோபுவுக்கும் விலைமதிப்பு மிகவும் அதிகம். ஏனென்றால், யோபுவின் இருதயம் பரிசுத்தமானது, தேவனிடமிருந்து மறைக்கப்படவில்லை, அவனுடைய மனிதம் நேர்மையானது, கனிவானது மற்றும் அவன் நீதியை நேசித்தான். அது நேர்மறையானதாகும். இதுபோன்ற இருதயமும் மனிதமும் பெற்று, தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க வல்லவனான ஒரு மனிதன் மட்டுமே தேவனுடைய வழியைப் பின்பற்ற முடியும். அத்தகைய மனிதன் மட்டுமே தேவனுடைய ராஜரீகத்தைக் காணமுடியும். அவருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் காண முடியும். அவருடைய ராஜரீகத்திற்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய முடியும். இது போன்ற ஒரு மனிதனால் மட்டுமே தேவனுடைய நாமத்தை உண்மையிலேயே துதிக்க முடியும். ஏனென்றால், தேவன் அவனை ஆசீர்வதிப்பாரா அல்லது அவன் மீது பேரழிவை ஏற்படுத்துவாரா என்று அவன் பார்க்கவில்லை. ஏனென்றால் எல்லாமே தேவனுடைய கரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும், மனிதன் கவலைப்படுவது முட்டாள்தனம், அறியாமை மற்றும் பகுத்தறிவின்மை மற்றும் எல்லாவற்றின் மீதான தேவனுடைய ராஜரீகத்தின் உண்மையைச் சந்தேகிப்பது மற்றும் தேவனுக்குப் பயப்படாமல் இருப்பது ஆகியவற்றின் அடையாளமாகும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். யோபுவின் அறிவு துல்லியமாக தேவன் விரும்பியதில் இருந்தது. ஆகவே, யோபுவுக்கு உங்களைவிட தேவனைப் பற்றிய பெரிய தத்துவார்த்த அறிவு இருந்ததா? அந்த நேரத்தில் தேவனுடைய கிரியையும் வார்த்தைகளும் குறைவாக இருந்ததால், தேவனைப் பற்றிய அறிவை அடைவது எளிதான விஷயம் அல்ல. யோபுவின் அத்தகைய சாதனை சதாரண சாதனையல்ல. அவன் தேவனுடைய கிரியையை அனுபவித்ததில்லை. தேவன் பேசுவதைக் கேட்டதில்லை. தேவனுடைய முகத்தைப் பார்த்ததில்லை. எனினும், தேவன்மீது அத்தகைய அணுகுமுறையை அவன் கொண்டிருக்க முடிந்தது. அது இன்றைய மனிதர்களிடம் காணப்படும் மனிதம் மற்றும் தனிப்பட்ட தேடல் அவனிடம் இருந்தது என்பதற்கான விளைவு ஆகும். ஆகவே, அந்த யுகத்தில், “அவனைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனுமாகிய எவரும் இல்லை” என்று தேவன் சொன்னார். அந்த யுகத்தில், தேவன் அவனைப் பற்றி ஏற்கெனவே ஒரு மதிப்பீட்டைச் செய்திருந்தார். அதன் விளைவாக அத்தகைய முடிவுக்கு வந்திருந்தார். இன்று அது எவ்வளவு உண்மையானதாக இருந்திருக்கும்?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 56

தேவன் மனிதனிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், எல்லாவற்றிலும் இருக்கும் அவருடைய கிரியைகள் மனிதன் அவரை அறிந்துக்கொள்ள போதுமானவையாக இருக்கின்றன

யோபு தேவனுடைய முகத்தைப் பார்த்ததில்லை அல்லது தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்டதில்லை மற்றும் தேவனுடைய கிரியையை அவன் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததும் இல்லை. ஆனாலும் அவனுடைய தேவ பயமும் அவனுடைய சோதனைகளின் போது அவன் அளித்த சாட்சிகளும் அனைவருக்கும் சாட்சியாக இருக்கின்றன. அவை தேவனால் நேசிக்கப்படுகின்றன, அவற்றில் மகிழ்ச்சியைத் தருகின்றன, தேவனால் பாராட்டப்படுகின்றன. அவற்றைப் பார்த்து ஜனங்கள் பொறாமைப்படுகிறார்கள், அவற்றைப் போற்றுகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்களின் புகழைப் பாடுகிறார்கள். அவரது ஜீவிதத்தைப் பற்றி பெரிய அல்லது அசாதாரணமான எதுவும் இருக்கவில்லை: எந்தவொரு சாதாரண மனிதனையும் போலவே, அவன் ஒரு குறிப்பிடத்தக்க ஜீவிதத்தை ஜீவித்தான். சூரிய உதயத்தில் வேலைக்குச் சென்று சூரிய அஸ்தமனத்தில் ஓய்வெடுக்க வீடு திரும்பினான். வித்தியாசம் என்னவென்றால், அவனது ஜீவிதத்தின் குறிப்பிடத்தக்க பல தசாப்தங்களில், அவன் தேவனுடைய வழியைப் பற்றிய ஒரு நுண்ணறிவைப் பெற்றான் என்பதே. தேவனுடைய மகத்தான வல்லமையையும் ராஜரீகத்தையும் பற்றி வேறு எந்த மனிதனும் புரிந்துகொள்ளாத அளவுக்கு உணர்ந்து புரிந்து கொண்டான். அவன் எந்தவொரு சாதாரண மனிதனையும் விட புத்திசாலியாக இருக்கவில்லை. குறிப்பாக அவனது ஜீவிதம் உறுதியானதல்ல. கண்ணுக்கு தெரியாத சிறப்புத் திறன்கள் அவனிடம் இருந்தன. உண்மையான, கனிவான மற்றும் நேர்மையான ஓர் ஆளுமை அவனிடம் இருப்பினும், நேர்மை, நீதியை மற்றும் நேர்மறையான விஷயங்களை நேசித்த ஓர் ஆளுமையை அவன் பெற்றிருந்தான்—இந்த விஷயங்கள் எதுவும் பெரும்பான்மையான சாதாரண ஜனங்களிடம் இல்லை. அவன் அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் வேறுபாடு காட்டினான். நீதியின் உணர்வைக் கொண்டிருந்தான். விட்டுக்கொடுக்காதவனாகவும், விடாமுயற்சியுடனும் இருந்தான். தனது சிந்தனையில் கவனமாக விரிவாகக் கவனம் செலுத்தினான். இவ்வாறு, பூமியில் முக்கியத்துவம் பெறாத காலத்தில் தேவன் செய்த அசாதாரணமான காரியங்கள் அனைத்தையும் அவன் கண்டான். தேவனுடைய மகத்துவம், பரிசுத்தம் மற்றும் நீதியைக் கண்டான். தேவனுடைய அக்கறை, தயவு மற்றும் மனிதனுக்கான பாதுகாப்பு ஆகியவற்றைக் கண்டான். தேவனுடைய கௌரவத்தையும் உயர்ந்த தேவனுடைய அதிகாரத்தையும் அவன் கண்டான். எந்தவொரு சாதாரண மனிதனுக்கும் அப்பாற்பட்ட இந்த விஷயங்களை யோபு பெற முடிந்தது. இதற்கு முதல் காரணம், அவனுக்குத் தூய்மையான இருதயம் இருந்ததும், அவனுடைய இருதயம் தேவனுக்குச் சொந்தமானது என்பதும், சிருஷ்டிகரால் வழிநடத்தப்பட்டதும் ஆகும். இரண்டாவது காரணம் அவன்து தேடல்: பாவமில்லாமல் பரிபூரணனாக இருப்பதற்கான அவனது தேடலும், மற்றும் பரலோகத்தின் சித்தத்திற்கு இணங்க, தேவனால் நேசிக்கப்பட வேண்டும், தீமையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான தேடலும் ஆகும். தேவனைக் காணவோ அல்லது தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கவோ முடியாத யோபு இவற்றைக் கொண்டிருந்தான். அவன் தேவனைப் பார்த்ததில்லை என்றாலும், தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்பதை அவன் அறிந்து கொண்டான். அவ்வாறு செய்யும் தேவ ஞானத்தை அவன் புரிந்துக்கொண்டான். தேவன் பேசிய வார்த்தைகளை அவன் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என்றாலும், மனிதனுக்கு வெகுமதி அளிப்பது, மனிதனிடமிருந்து எடுப்பது போன்ற செயல்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை யோபு அறிந்திருந்தான். அவனது ஜீவிதத்தின் ஆண்டுகள் எந்தவொரு சாதாரண மனிதனிடமிருந்தும் வேறுபட்டவை அல்ல என்றாலும், எல்லாவற்றிலும் தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய தனது அறிவைப் பாதிக்கவோ அல்லது தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்றுவதை பாதிக்கவோ அவன் தனது ஜீவிதத்தின் குறிப்பிடத்தக்க குணத்தை அனுமதிக்கவில்லை. அவனுடைய பார்வையில், எல்லாவற்றின் சட்டங்களும் தேவனுடைய கிரியைகளால் நிறைந்திருந்தன, தேவனுடைய ராஜரீகத்தை ஒரு மனிதனுடைய ஜீவிதத்தின் எந்தப் பகுதியிலும் காணலாம். அவன் தேவனைக் காணவில்லை, ஆனால் தேவனுடைய செயல்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்பதை அவனால் உணர முடிந்தது. பூமியில் முக்கியத்துவம் பெறாத அவனுடைய காலத்தில், அவனது ஜீவிதத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேவனுடைய அசாதாரண மற்றும் அதிசயமான கிரியைகளை அவனால் காணவும் உணரவும் முடிந்தது. தேவனுடைய அற்புதமான ஏற்பாடுகளைக் காணவும் முடிந்தது. தேவனுடைய மறைவான தன்மையும் மௌனமும் தேவனுடைய கிரியைகளை யோபு உணர்ந்து கொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை. எல்லாவற்றிலும் தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய அவனது அறிவை அவை பாதிக்கவில்லை. எல்லாவற்றிலும் மறைந்திருக்கும் தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளை உணர்ந்துகொள்வது என்பது அவனது அன்றாட ஜீவிதத்தில் உணரப்பட்டது. எல்லாவற்றிலும் அமைதியாக இருப்பதன் மூலமும், எல்லாவற்றின் சட்டங்களையும் நிர்வகிப்பதன் மூலமும் தம் இருதயத்தின் குரலையும் தம் வார்த்தைகளையும் வெளிப்படுத்தும் தேவனுடைய இருதயத்தின் குரலையும், தேவனுடைய வார்த்தைகளையும் தனது அன்றாட ஜீவிதத்தில், யோபு கேட்டான், புரிந்து கொண்டான். அப்படியானால், யோபுவைப் போலவே மனிதர்களுக்கும் மனிதம் மற்றும் தேடல் இருந்தால், அவர்கள் யோபுவைப் போலவே அதே உணர்தலையும் அறிவையும் பெற முடியும். யோபுவைப் போல எல்லாவற்றிலும் தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய அதே புரிதலையும் அறிவையும் பெற முடியும். தேவன் யோபுவுக்குத் தோன்றவில்லை அல்லது அவனுடன் பேசவில்லை என்றாலும் யோபுவால் பரிபூரணனாக மற்றும் நேர்மையாக இருக்கவும், தேவனுக்கு பயந்து தீமையைத் தவிர்க்கவும் முடிந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மனிதனுக்குத் தோன்றாமலோ அல்லது பேசாமலோ இருந்தாலும் கூட தேவனுடைய இருப்பு, வல்லமை மற்றும் அதிகாரம் குறித்து மனிதன் அறிந்துக்கொள்ள எல்லாவற்றிலும் இருக்கும் தேவனுடைய செயல்களும் எல்லாவற்றின் மீதான அவருடைய ராஜரீகத்தையும் போதுமானது ஆகும். மனிதன் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்ற, தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் போதுமானது ஆகும். யோபுவைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தேவனுக்குப் பயப்படுவதையும் தீமையைத் தவிர்ப்பதையும் அடைய முடிந்ததால், தேவனைப் பின்தொடரும் ஒவ்வொரு சாதாரண மனிதனாலும் அது முடியும். இந்த வார்த்தைகள் தர்க்கரீதியான அனுமானம் போல் தோன்றினாலும், இது விஷயங்களின் கட்டளைகளுக்கு முரணாக இல்லை. ஆயினும் உண்மைகள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்தவில்லை: தேவனுக்குப் பயப்படுவதும் தீமையைத் தவிர்ப்பதும் யோபுவைப் பாதுகாப்பதும், யோபுவை மட்டுமே பாதுகாப்பதுமாகும். “தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பது” என்ற குறிப்பில், யோபுவால் மட்டுமே இதனைச் செய்ய முடியும் என தேவ பயத்துக்கும், தீமையைத் தவிர்ப்பதற்கும் வழி யோபுவின் பெயருடன் முத்திரை குத்தப்பட்டு உள்ளது போன்றும், மற்றவர்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போன்றும் மக்கள் நினைக்கிறார்கள். இதற்கான காரணம் தெளிவாக உள்ளது: ஏனென்றால், யோபுவுக்கு மட்டுமே உண்மையான, கனிவான மற்றும் நேர்மையான ஓர் ஆளுமை இருந்தது. நேர்மையையும், நீதியையும் நேர்மறை விஷயங்களையும் நேசித்தவன் அவன். ஆகவே, யோபுவால் மட்டுமே தேவனுக்குப் பயந்து தீமைக்கு விலகுவதற்கான வழியைப் பின்பற்ற முடியும். உண்மையான, கனிவான, நேர்மையான, நேர்மையையும் நீதியையும் நேசிக்கும் நேர்மறையான ஒரு மனிதத்தை எவரும் கொண்டிருக்கவில்லை என்பதால், இங்குள்ள உட்குறிப்பை நீங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். இதனால் ஜனங்கள் ஒருபோதும் தேவனுடைய மகிழ்ச்சியைப் பெறவோ அல்லது சோதனைகளுக்கு மத்தியில் உறுதியாக நிற்கவோ முடியாது. யோபுவைத் தவிர, எல்லா ஜனங்களும் இன்னும் சாத்தானால் பிணைக்கப்பட்டு சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் குற்றம் சாட்டப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்பதையும் அது குறிக்கிறது. அவர்களைத்தான் சாத்தான் விழுங்க முயற்சிக்கிறது. அவர்கள் அனைவரும் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளாகின்றனர்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 57

மனிதனுடைய இருதயம் தேவனுக்கு விரோதமாக இருந்தால், மனிதன் எவ்வாறு தேவனுக்கு அஞ்சி, தீமையைத் தவிர்ப்பான்?

இன்றைய ஜனங்கள் யோபுவைப் போன்ற மனிதத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதால், அவர்களின் இயல்பின் சாராம்சம் மற்றும் தேவன்மீது அவர்கள் கொண்ட அணுகுமுறை என்னவாக இருந்தது? அவர்கள் தேவனுக்கு அஞ்சுகிறார்களா? அவர்கள் தீமையைத் தவிர்க்கிறார்களா? தேவனுக்கு அஞ்சாதவர்கள் அல்லது தீமையைத் தவிர்ப்பவர்களை “தேவனுக்கு எதிராக இருப்பவர்கள்” என்ற மூன்று வார்த்தைகளால் மட்டுமே சுருக்கமாகக் கூற முடியும். இந்த மூன்று வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள், ஆனால் அவற்றின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. “தேவனுக்கு எதிராக இருப்பவர்கள்” என்ற வார்த்தைகளுக்குச் சாராம்சம் உண்டு: தேவன் மனிதனை எதிரியாகப் பார்க்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் அந்த மனிதன் தேவனை எதிரியாகப் பார்க்கிறான். முதலாவதாக, ஜனங்கள் தேவனை நம்பத் தொடங்கும் போது, அவர்களில் எவரிடம் சொந்த நோக்கங்கள், உந்துதல்கள் மற்றும் லட்சியங்கள் இல்லை? அவர்களில் ஒரு பகுதியினர் தேவன் இருப்பதை நம்பினாலும், தேவன் இருப்பதைக் கண்டிருந்தாலும், தேவன்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் அந்த உந்துதல்களைக் கொண்டுள்ளது மற்றும் தேவனை நம்புவதில் அவர்களின் இறுதி நோக்கம் அவருடைய ஆசீர்வாதங்களையும் அவர்கள் விரும்பும் விஷயங்களையும் பெறுவதாகவும் உள்ளது. ஜனங்களின் ஜீவித அனுபவங்களில், அவர்கள் பெரும்பாலும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள்: “நான் எனது குடும்பத்தையும் ஜீவிதத்தையும் தேவனுக்காக விட்டுவிட்டேன், அவர் எனக்கு என்ன கொடுத்தார்? நான் அதைச் சேர்க்க வேண்டும், அதை உறுதிப்படுத்த வேண்டும்—சமீபத்தில் எனக்கு ஏதேனும் ஆசீர்வாதம் கிடைத்ததா? இந்த நேரத்தில் நான் நிறைய கொடுத்திருக்கிறேன், நான் ஓடினேன் ஓடினேன். மிகவும் கஷ்டப்பட்டேன்—அதற்குப் பதிலாக தேவன் எனக்கு ஏதாவது வாக்குத்தத்தங்களை அளித்துள்ளாரா? அவர் என் நல்ல கிரியைகளை நினைவில் வைத்திருக்கிறாரா? என் முடிவு என்னவாக இருக்கும்? தேவனுடைய ஆசீர்வாதங்களை என்னால் பெற முடியுமா? …” ஒவ்வொரு மனிதனும் தொடர்ந்து இத்தகைய கணக்கீடுகளை தங்கள் இருதயத்திற்குள் செய்கிறார்கள். அவர்கள் தேவனிடம் தங்களின் உந்துதல்கள், லட்சியங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை வைக்கிறார்கள். ஒரு பரிவர்த்தனை மனநிலையைத் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தன் இருதயத்தில் மனிதன் தொடர்ந்து தேவனைச் சோதித்து வருகிறான். தொடர்ந்து தேவனைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுகிறான். தனது சுய முடிவுக்காக தேவனோடு தொடர்ந்து வழக்கை வாதாடுகிறான். தேவனிடமிருந்து ஓர் அறிக்கையைப் பிரித்தெடுக்க முயற்சிசெய்கிறான். அவனது தேவைகளுள் தேவனால் அவனுக்கு எதைக் கொடுக்க முடியும், எதைக் கொடுக்க முடியாது என்பதைப் பார்க்கிறான். தேவனைப் பின்பற்றும் அதே நேரத்தில், மனிதன் தேவனை தேவனாகக் கருதுவதில்லை. மனிதன் எப்போதுமே தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றான். அவன் இடைவிடாமல் எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறான். ஒவ்வொரு அடியிலும் அவரை அழுத்துகிறான். ஓர் அங்குலம் வழங்கப்பட்ட பிறகு ஒரு மைல் தூரம் பெற முயற்சிசெய்கிறான். தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிசெய்யும் அதே நேரத்தில், மனிதன் அவருடன் வாதாடுகிறான். அவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும் போது அல்லது அவர்கள் சில சூழ்நிலைகளில் தங்களைக் கண்டறிந்தால், பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், செயலற்றவர்களாகவும், தங்கள் கிரியையில் மந்தமானவர்களாகவும், தேவனைப் பற்றி குறை கூறுபவர்களாக மட்டுமே இருப்பார்கள். மனிதன் முதன்முதலில் தேவனை நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து, அவன் தேவனை ஓர் அமுதசுரபி என்றும் சுவிஸ் இராணுவ கத்தி என்றும் கருதினான். தேவன் மிகப் பெரிய அளவில் தனக்குக் கடன்பட்டுள்ளதாக அவன் கருதினான். தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் பெற முயற்சி செய்வது அவனது உள்ளார்ந்த உரிமை மற்றும் கடமை என்று கருதினான். தேவனுடைய பொறுப்பு மனிதனைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும், அவனுக்காக வழங்குவதும் ஆகும் என்று கருதினான். தேவனை நம்புகிற அனைவருக்கும் “தேவ நம்பிக்கை” பற்றிய அடிப்படை புரிதல் இதுதான். தேவ நம்பிக்கை பற்றிய அவர்களின் ஆழமான புரிதல் இதுதான். மனிதனுடைய இயல்பின் சாராம்சம் முதல் அவரது அகநிலை தேடல் வரை, தேவ பயத்துடன் தொடர்புடைய எதுவும் இல்லை. தேவனை நம்புவதில் உள்ள மனிதனுடைய நோக்கத்துக்கும் தேவனை வழிபடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, தேவனை நம்புவது என்பது தேவனுக்குப் பயந்து அவரை வணங்க வேண்டும் என்று மனிதன் ஒருபோதும் கருதவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை. இத்தகைய நிலைமைகளின் வெளிச்சத்தில், மனிதனுடைய சாராம்சம் வெளிப்படையானது. இதன் சாராம்சம் என்ன? மனிதனுடைய இருதயம் தீங்கிழைக்கும், துரோகத்தையும் வஞ்சகத்தையும் கொண்டுள்ளது. நேர்மறையான, நேர்மை மற்றும் நீதியை அது நேசிப்பதில்லை. அதனிடம் அவமதிப்பு மற்றும் பேராசை உள்ளது. மனிதனுடைய இருதயம் தேவனிடம் நெருக்கமாக முடியவில்லை. மனிதன் அதை தேவனுக்குக் கொடுக்கவில்லை. தேவன் ஒருபோதும் மனிதனுடைய உண்மையான இருதயத்தைப் பார்த்ததில்லை. அவர் மனிதனால் வணங்கப்படவில்லை. தேவன் எவ்வளவு பெரிய விலைக்கிரயம் கொடுத்தாலும், அவர் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர் மனிதனுக்கு எவ்வளவு வழங்கினாலும், மனிதன் குருடனாகவும், எல்லாவற்றிலும் முற்றிலும் அலட்சியமாகவும் இருக்கிறான். மனிதன் ஒருபோதும் தன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கவில்லை. அவன் தன் இருதயத்தைத் தனக்காக வைத்துக்கொள்ள விரும்புகிறான். தன் சொந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறான்—இதன் உட்பொருள் என்னவென்றால், தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமைகளைத் தவிர்ப்பதற்கும் அல்லது ராஜரீகத்திற்கும் தேவனுடைய ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய மனிதன் விரும்பவில்லை என்பதாகும். தேவனை தேவனாக வணங்கவும் அவர் விரும்பவில்லை. இன்றைய மனிதனுடைய நிலை இதுதான். இப்போது மீண்டும் யோபுவைப் பார்ப்போம். முதலில், அவன் தேவனுடன் ஓர் ஒப்பந்தம் செய்தாரா? தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை உறுதியாகப் பிடிப்பதில் அவனுக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்ததா? அந்த நேரத்தில், தேவன் வரவிருக்கும் முடிவைப்பற்றி எவருடனும் பேசினாரா? அந்த நேரத்தில், தேவன் முடிவைப் பற்றி யாருக்கும் வாக்குத்தத்தங்களை அளிக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் யோபுவால் தேவனுக்கு அஞ்சவும் தீமையைத் தவிர்க்கவும் முடிந்தது. இன்றைய ஜனங்கள் யோபுவுடன் ஒப்பிடுகையில் நிமிர்ந்து நிற்கிறார்களா? ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ளது. அவை வெவ்வேறு உடன்பாடுகளில் உள்ளன. யோபுவுக்கு தேவனைப் பற்றி அதிக அறிவு இல்லை என்றாலும், அவன் தனது இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தான். அது தேவனுக்குச் சொந்தமானது. அவன் ஒருபோதும் தேவனோடு ஓர் ஒப்பந்தம் செய்யவில்லை. தேவனிடம் எந்தவிதமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் வைக்கவில்லை. அதற்கு பதிலாக, “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்.” என்று அவன் நம்பினான். பல வருட ஜீவிதத்தில் தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியை உண்மையாகப் பிடித்ததில் இருந்து அவன் கண்டதும் பெற்றதும் இதுதான். அதைப் போலவே, அவன் வார்த்தைகளில் குறிப்பிடப்பட்ட விளைவுகளையும் பெற்றான்: “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” இந்த இரண்டு வாக்கியங்களும் அவனுடைய ஜீவித அனுபவங்களின் போது தேவனுக்குக் கீழ்ப்படிந்த மனநிலையின் விளைவாக அவன் கண்டதும் தெரிந்து கொண்டதும் ஆகும். அவை சாத்தானுடைய சோதனையின்போது அவன் ஜெயித்த மிக வல்லமைவாய்ந்த ஆயுதங்களும் ஆகும். தேவனுக்குச் சாட்சியாக அவன் உறுதியாக நிற்க அவை அவனுடைய அடித்தளமாக இருந்தன. இந்த கட்டத்தில், நீங்கள் ஓர் அழகான மனிதனாக யோபுவைக் கற்பனை செய்கிறீர்களா? அத்தகைய மனிதராக நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் சாத்தானுடைய சோதனைகளுக்கு ஆளாக நேரிடும் என்று பயப்படுகிறீர்களா? யோபு உட்படுத்தப்பட்ட அதே சோதனைகளுக்குள் உங்களை உட்படுத்தும்படி தேவனிடம் ஜெபிக்க நீங்கள் தீர்மானிக்கிறீர்களா? சந்தேகத்திற்கு இடமின்றி, பெரும்பாலான ஜனங்கள் இதுபோன்ற காரியங்களுக்காக ஜெபிக்கத் துணிய மாட்டார்கள். அப்படியானால், உங்கள் நம்பிக்கை பரிதாபகரமான நிலையில் சிறியதாக இருக்கின்றது என்பது தெளிவாகிறது. யோபுவுடன் ஒப்பிடும்போது, உங்கள் நம்பிக்கை குறிப்பிடத் தகுதியற்றது. நீங்கள் தேவனுடைய எதிரிகள். நீங்கள் தேவனுக்கு அஞ்சாதவர்கள். தேவனுக்கு நீங்கள் அளித்த சாட்சியில் உறுதியாக நிற்க இயலாதவர்கள். சாத்தானுடைய தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றில் நீங்கள் ஜெயிக்க முடியாதவர்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற உங்களைத் தகுதியாக்குவது எது? யோபுவின் கதையைக் கேட்டு, மனிதனை இரட்சிப்பதில் தேவனுடைய நோக்கத்தையும் மனிதனுடைய இரட்சிப்பின் அர்த்தத்தையும் புரிந்துகொண்ட உங்களுக்கு, யோபுவின் அதே சோதனைகளை ஏற்றுக்கொள்வதற்கான நம்பிக்கை இப்போது இருக்கிறதா? தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்ற உங்களை நீங்கள் அனுமதிக்க கொஞ்சம் உறுதியுடன் இருக்க வேண்டாமா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 58

தேவனுடைய சோதனைகள் பற்றி எந்தவிதமான சந்தேகங்களும் இல்லாதிருக்க வேண்டும்

சோதனைகள் முடிந்ததைத் தொடர்ந்து யோபுவிடமிருந்து சாட்சி பெற்றபின், யோபுவைப் போன்றவர்களில் ஒரு கூட்டத்தை அல்லது ஒரு கூட்டத்தை விட அதிகமாக ஆதாயம் செய்ய வேண்டும் என தேவன் தீர்மானித்தார். ஆனாலும் சாத்தானை மீண்டும் ஒருபோதும் வேறு மனிதர்களைத் தாக்கவோ துஷ்பிரயோகம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தீர்மானித்தார். அது தேவனோடு பந்தயம் கட்டியதன் மூலம் யோபுவைச் சோதித்து, தாக்கி, துஷ்பிரயோகம் செய்தது. பலவீனமான, முட்டாள்தனமான, அறிவற்ற மனிதனிடம் இதுபோன்ற கிரியைகளை மீண்டும் செய்ய தேவன் சாத்தானை அனுமதிக்கவில்லை—சாத்தான் யோபுவை சோதித்ததே போதும்! சாத்தான் வேண்டினாலும் ஜனங்களை துஷ்பிரயோகம் செய்ய சாத்தானை அனுமதிக்காமல் இருப்பதே தேவனுடைய தயவு ஆகும். தேவனைப் பொறுத்தவரையில், யோபு சாத்தானுடைய சோதனையையும் துஷ்பிரயோகத்தையும் அனுபவித்ததே போதும். சாத்தானை மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற கிரியைகளைச் செய்ய தேவன் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், தேவனைப் பின்பற்றும் ஜனங்களின் ஜீவிதமும், அனைத்தும் தேவனால் ஆளப்படுகின்றன, திட்டமிடப்படுகின்றன. தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தனது விருப்பப்படி கையாள சாத்தானுக்கு உரிமை இல்லை—இந்த விஷயத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்! தேவன் மனிதனுடைய பலவீனத்தைப் பற்றி அக்கறை காட்டுகிறார். மேலும் அவனது முட்டாள்தனத்தையும் அறியாமையையும் புரிந்துகொள்கிறார். மனிதனை முழுவதுமாக இரட்சிக்க வேண்டும் என்பதற்காக, தேவன் அவனை சாத்தானிடம் ஒப்படைக்க வேண்டும். மனிதன் முட்டாள்தனமாக விளையாடப்படுவதையும் சாத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் தேவன் பார்க்க விரும்பவில்லை. மனிதன் துன்பப்படுவதை அவர் ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை. மனிதன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டான். தேவன் ஆளுகிற, மனிதனுக்காக ஏற்பாடு செய்கிற அனைத்தும் பரலோகத்தால் நியமிக்கப்பட்டு, பூமியால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. இது தேவனுடைய பொறுப்பாகும். இது, தேவன் எல்லாவற்றையும் ஆளுகின்ற அதிகாரம் ஆகும்! மனிதனை விருப்பப்படி துஷ்பிரயோகம் செய்வதற்கும், தவறாக நடத்துவதற்கும் தேவன் சாத்தானை அனுமதிக்கவில்லை. மனிதனை வழிதவறச் செய்வதற்காக சாத்தான் பல்வேறு வழிகளைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. மேலும், மனிதனுக்கான தேவனுடைய ராஜரீகத்தில் தலையிட சாத்தானை அவர் அனுமதிக்கவில்லை. மனிதகுலத்தை நிர்வகிக்கும் மற்றும் காப்பாற்றும் தேவனுடைய மகத்தான கிரியையைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றையும் ஆளுகின்ற தேவனுடைய சட்டங்களை மிதித்து அழிக்க சாத்தானை அனுமதிக்கவில்லை! தாம் இரட்சிக்க விரும்புவோர், தமக்கு சாட்சி அளிக்கக் கூடியவர்கள் என இவர்களே தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தின் கிரியையின் அடிப்படை மற்றும் படிகமயமாக்கல் ஆகும். அத்துடன் அவரது ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியையில் அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விலைக்கிரயம் ஆகும். தேவன் இந்த ஜனங்களை சாத்தானிடம் எப்படிக் கொடுக்க முடியும்?

ஜனங்கள் பெரும்பாலும் தேவனுடைய சோதனைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் மற்றும் பயப்படுகிறார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் சாத்தானுடைய வலையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சாத்தானால் தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயகரமான பிரதேசத்தில் ஜீவிக்கிறார்கள்—ஆனாலும் அவர்கள் பயப்படுவதில்லை மற்றும் துன்பப்படுத்தப்படுவதில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது? தேவன் மீது மனிதனுடைய நம்பிக்கையானது மனிதன் காணக்கூடிய விஷயங்களில் மட்டுமே உள்ளது. தேவனுடைய அன்பு மற்றும் மனிதனைப் பற்றிய அக்கறை, அல்லது மனிதனுக்கான மென்மை மற்றும் கவனம் ஆகியவற்றைப் பற்றி அவனுக்குச் சிறிதும் உணர்வு இல்லை. ஆனால் தேவனுடைய சோதனைகள், தீர்ப்பு மற்றும் தண்டனை, மாட்சிமை மற்றும் கோபம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு சிறிய நடுக்கம் மற்றும் பயம் கூட அவனுக்கு இல்லை. தேவனுடைய நல்ல நோக்கங்களைப் பற்றி மனிதனுக்கு சிறிதளவு புரிதலும் இல்லை. சோதனைகளைப் பற்றி பேசுகையில், தேவனுக்கு வெளிப்புற நோக்கங்கள் இருப்பதாக ஜனங்கள் உணர்கிறார்கள். தேவன் தீய வடிவமைப்புகளை வைத்திருப்பதாக சிலர் நம்புகிறார்கள். தேவன் உண்மையில் அவர்களுக்கு என்ன செய்வார் என்று அறியாமல் இருக்கிறார்கள். ஆகவே, தேவனுடைய ராஜரீகத்திற்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியும் அதே நேரத்தில், மனிதன் மீதான தேவனுடைய ராஜரீகத்தை மற்றும் மனிதனுக்கான ஏற்பாடுகளை தவிர்ப்பதற்கும் எதிர்ப்பதற்கும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். ஏனென்றால், கவனமாக இல்லாவிட்டால் தேவனால் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த விதியைப் பற்றி ஒரு பிடியை வைத்திருக்காவிட்டால், அவர்களிடம் உள்ள அனைத்தையும் தேவனால் எடுக்க முடியும் என்றும் அவர்களின் ஜீவிதம் கூட முடிவுக்கு வரக்கூடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். மனிதன் சாத்தானுடைய பிடியில் இருக்கிறான். ஆனால் சாத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பற்றி அவன் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. அவன் சாத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறான். ஆனால் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவான் என்பதைக் குறித்து ஒருபோதும் அஞ்சமாட்டான். அவன் தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான், ஆனால் ஒருபோதும் தேவனை நம்புவதில்லை அல்லது சாத்தானுடைய பிடியிலிருந்து தேவன் மனிதனை உண்மையிலேயே காப்பாற்றுவார் என்று அவன் நம்புவதில்லை. யோபுவைப் போலவே, மனிதனும் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் அடிபணிந்து, தனது முழு இருப்பையும் தேவனுடைய கைகளுக்குள் கொடுக்க முடிந்தால், யோபுவைப் போலவே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறும் வகையில் மனிதனுடைய முடிவு மாறுபடுமா? தேவனுடைய ஆட்சியை மனிதன் ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிய முடிந்தால், இழக்க என்ன இருக்கிறது? ஆகவே, உங்கள் கிரியைகளில் நீங்கள் கவனமாக இருக்கவும், உங்கள் மீது வரவிருக்கும் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நான் பரிந்துரைக்கிறேன். உங்கள் சூடான இரத்தம் அல்லது உங்கள் இயல்பைப் பொறுத்து அல்லது உங்கள் கற்பனைகள் மற்றும் கருத்துக்களுக்கு ஏற்ப தேவன் ஏற்பாடு செய்திருக்கும் பொருட்களிடமும், தேவனிடமும், ஜன்ங்களிடமும், விஷயங்கள் குறித்தும் கண்மூடித்தனமாக அல்லது உணர்ச்சி வசப்பட்டு நடக்க வேண்டாம். உங்கள் கிரியைகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவனுடைய கோபத்தைச் சோதிப்பதைத் தவிர்க்க ஜெபிக்கவும் தேடவும் வேண்டும். இதை நினைவில் கொள்ளுங்கள்!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 59

அவரது சோதனைகளுக்குப் பிறகு யோபு (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

யோபு 42:7-9  அதன் பின்னர், யேகோவா இந்த வார்த்தைகளை யோபுவிடம் பேசினபின், யேகோவா தேமானியனான எலிபாஸிடம்: என் கோபம் உனக்கும், உன் இரு சிநேகிதர்களுக்கும் விரோதமாயிருக்கிறது; ஏனெனில் நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. ஆதலால், இப்போது ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் உங்களோடு எடுத்துக் கொண்டு, என் ஊழியக்காரனாகிய யோபுவிடம் சென்று, ஒரு சர்வாங்க தகனபலியை உங்களுக்காகக் கொடுங்கள்; என் ஊழியக்காரன் யோபு உங்களுக்காக ஜெபிப்பான்; அவனுக்காக நான் ஏற்றுக்கொள்வேன், உங்கள் முட்டாள்தனத்திற்கு ஏற்றவாறு உங்களை நடத்தாதிருப்பேன், நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. ஆதலால், தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் சென்று, யேகோவா அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்; யேகோவா யோபுவையும் ஏற்றுக்கொண்டார்.

யோபு 42:10  யோபு தன் சிநேகிதர்களுக்காக ஜெபித்தபோது, யேகோவா அவனது சிறைப்பட்ட நிலையை மாற்றினார்; யோபுவிடம் முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாகத் தந்தருளினார் யேகோவா.

யோபு 42:12  ஆதலால், யோபுவின் முன்னிலைமையைக் காட்டிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார் யேகோவா: அவனிடம் பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம்பூட்டியகாளைகளும், ஆயிரம் பெண் கழுதைகளும் இருந்தன.

யோபு 42:17  யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.

தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பவர்கள் தேவனால் மதிக்கப்படுகிறார்கள், முட்டாள்தனமானவர்கள் தேவனால் தாழ்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள்

யோபு 42:7-9  ல், யோபுவைத் தன் ஊழியக்காரன் என்று தேவன் கூறுகிறார். யோபுவைக் குறிக்க “ஊழியக்காரன்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது அவருடைய இருதயத்தில் யோபுவுக்கு இருந்த முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது. தேவன் யோபுவை மிகவும் மதிப்பிற்குரியவனாக அழைக்கவில்லை என்றாலும், இந்த நாமம் தேவனுடைய இருதயத்திற்குள் யோபுவின் முக்கியத்துவத்தைப் பாதிக்கவில்லை. இங்கே “ஊழியக்காரன்” என்பது யோபுவிற்கான தேவனுடைய புனைப்பெயர் ஆகும். “என் ஊழியக்காரனாகிய யோபு” என்பதைப் பற்றிய தேவனுடைய பல குறிப்புகள், அவர் யோபுவிடம் எவ்வாறு மகிழ்ச்சி அடைந்தார் என்பதைக் காட்டுகிறது. “ஊழியக்காரன்” என்ற வார்த்தையின் பின்னணியில் உள்ள அர்த்தத்தை தேவன் பேசவில்லை என்றாலும் “ஊழியக்காரன்” என்ற வார்த்தையின் தேவனுடைய வரையறையை இந்த வசனத்தில் உள்ள அவரது வார்த்தைகளிலிருந்து காணலாம். தேவன் முதன்முதலில் தெமானியரான எலிபாஸிடம் சொன்னார்: “என் கோபம் உனக்கும், உன் இரு சிநேகிதர்களுக்கும் விரோதமாயிருக்கிறது; ஏனெனில் நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.” தேவனுடைய சோதனைகளுக்குப் பிறகு யோபுவால் சொல்லப்பட்ட மற்றும் செய்யப்பட்ட அனைத்தையும் அவர் ஏற்றுக்கொண்டதாக தேவன் வெளிப்படையாக ஜனங்களுக்குச் சொன்னார். இது, யோபு செய்த எல்லாவற்றின் துல்லியத்தையும் பூரணமான தன்மையையும் அவர் வெளிப்படையாக உறுதிப்படுத்திய முதல் தடவையாகும். எலிபாஸ் மற்றும் பிறரின் தவறான, அபத்தமான பேச்சின் காரணமாக தேவன் கோபமடைந்தார். ஏனென்றால், யோபுவைப் போலவே அவர்களால் தேவனுடைய தோற்றத்தைக் காணவோ அல்லது தங்கள் ஜீவிதத்தில் தேவன் பேசிய வார்த்தைகளைக் கேட்கவோ முடியவில்லை. ஆனால் யோபுவிடமோ தேவனைப் பற்றிய துல்லியமான அறிவு இருந்தது. அதேசமயம் அவர்களோ தேவனைப் பற்றி கண்மூடித்தனமாக யூகித்து, தேவனுடைய சித்தத்தை மீறி, தாங்கள் செய்த எல்லாவற்றிலும் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள். இதன் விளைவாக, யோபுவால் செய்யப்பட்ட மற்றும் சொல்லப்பட்ட அனைத்தையும் ஏற்றுக்கொண்ட தேவன், அதே நேரத்தில், மற்றவர்களிடம் கோபமடைந்தார். ஏனென்றால், அவர்களில் தேவனுக்குப் பயப்படுவதற்கான எந்தவொரு யதார்த்தத்தையும் தேவன் காண முடியவில்லை என்பது மட்டுமல்லாமல் அவர்கள் சொன்னதில் தேவ பயத்தைப் பற்றி எதையும் கேட்கவுமில்லை. எனவே, தேவன் அவர்களிடம் பின்வரும் எதிர்பார்ப்புகளை முன்வைத்தார்: “ஆதலால், இப்போது ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் உங்களோடு எடுத்துக் கொண்டு, என் ஊழியக்காரனாகிய யோபுவிடம் சென்று, ஒரு சர்வாங்க தகனபலியை உங்களுக்காகக் கொடுங்கள்; என் ஊழியக்காரன் யோபு உங்களுக்காக ஜெபிப்பான்; அவனுக்காக நான் ஏற்றுக்கொள்வேன், உங்கள் முட்டாள்தனத்திற்கு ஏற்றவாறு உங்களை நடத்தாதிருப்பேன்.” இந்தப் பத்தியில் தேவன் எலிபாஸுக்கும் மற்றவர்களுக்கும் தங்கள் பாவங்களை சுத்திகரிப்பதற்கு எதையேனும் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஏனென்றால், அவர்களின் முட்டாள்தனம் யேகோவா தேவனுக்கு எதிரான பாவமாகும். இதனால் தாங்கள் செய்த தவறுகளுக்கு தீர்வு காண அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்த வேண்டியிருந்தது. சர்வாங்க தகனபலிகள் பெரும்பாலும் தேவனுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த சர்வாங்க தகனபலிகளில் அசாதாரணமானது என்னவென்றால், அவை யோபுவுக்கு வழங்கப்பட்டன என்பதே. யோபு தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஏனென்றால் அவர் சோதனையின்போது தேவனுக்குச் சாட்சி அளித்தார். இதற்கிடையில், யோபுவின் இந்த நண்பர்கள் அவருடைய சோதனைகளின் போது அம்பலப்படுத்தப்பட்டனர். அவர்களின் முட்டாள்தனத்தின் காரணமாக அவர்கள் தேவனால் கண்டனம் செய்யப்பட்டார்கள். அவர்கள் தேவனுடைய கோபத்தைத் தூண்டினார்கள். எனவே, அவர்கள் தேவனால் தண்டிக்கப்பட வேண்டும்—யோபுவுக்கு முன் சர்வாங்க தகனபலிகளைச் செய்வதன் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்—தேவனுடைய தண்டனையையும் அவர்கள் மீதான தேவனுடைய கோபத்தையும் அகற்ற யோபு அவர்களுக்காக ஜெபித்தான். தேவனுடைய நோக்கம் அவர்கள் மீது அவமானத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பவர்கள் அல்ல. அவர்கள் யோபுவின் நேர்மையைக் கண்டனம் செய்தார்கள். ஒரு விஷயத்தில், தேவன் அவர்களுடைய கிரியைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் யோபுவின் கிரியையையோ பெரிதும் ஏற்றுக்கொண்டு யோபில் மகிழ்ச்சி அடைந்தார். மற்றொன்றில், தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது தேவனுக்கு முன்பாக மனிதனை உயர்த்துவது என்றும், மனிதன் தனது முட்டாள்தனத்தால் தேவனால் வெறுக்கப்படுகிறான் என்றும், அதன் காரணமாக தேவனை புண்படுத்துகிறான் என்றும், தேவனுடைய பார்வையில் தாழ்ந்தவனாகவும் மோசமானவனாகவும் இருக்கிறான் என்றும் தேவன் அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். இவை, இந்த இரண்டு வகையான மனிதர்களுக்கு தேவன் அளித்த வரையறைகள் ஆகும். இவை, இந்த இரண்டு வகையான மனிதர்களுக்கான தேவனுடைய அணுகுமுறைகள் ஆகும். இவை, இந்த இரண்டு வகையான ஜனங்களின் மதிப்பு மற்றும் நிலைப்பாடு பற்றிய தேவனுடைய வெளிப்பாடு ஆகும். தேவன் யோபுவைத் தனது ஊழியக்காரன் என்று அழைத்த போதிலும், தேவனுடைய பார்வையில் இந்த ஊழியக்காரன் பிரியமானவனாக இருந்தான். மற்றவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களுடைய தவறுகளை மன்னிக்கவும் அதிகாரம் பெற்றான். இந்த ஊழியக்காரன் தேவனிடம் நேரடியாகப் பேசவும், தேவனுக்கு முன்பாக நேரடியாக வரவும் முடிந்தது. அவனுடைய அந்தஸ்து மற்றவர்களை விட உயர்ந்ததாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது. தேவன் சொல்லும் “ஊழியக்காரன்” என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் இதுதான். தேவனுக்குப் பயந்ததாலும், தீமையைத் தவிர்த்ததாலும் யோபுவுக்கு இந்தச் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. மற்றவர்கள் தேவனால் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்படாததற்குக் காரணம், அவர்கள் தேவனுக்கு அஞ்சாதது மற்றும் தீமையைத் தவிர்க்காதது ஆகும். தேவனுடைய இந்த இரு வேறுபட்ட மனநிலைகள் இரண்டு வகையான மனிதர்களுக்கான அவருடைய அணுகுமுறைகளாகும்: தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். அவருடைய பார்வையில் விலை உயர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். அதே சமயம் முட்டாள்கள் தேவனுக்கு அஞ்சாதவர்கள், தீமையைத் தவிர்ப்பதற்கு இயலாதவர்கள், தேவனுடைய தயவைப் பெறமாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் தேவனால் வெறுக்கப்படுகிறார்கள், கண்டிக்கப்படுகிறார்கள் மற்றும் தேவனுடைய பார்வையில் தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

தேவன் யோபுவுக்கு அதிகாரம் அளிக்கிறார்

யோபு தன் நண்பர்களுக்காக ஜெபம் செய்தார், அதன் பிறகு, யோபுவின் ஜெபங்களின் காரணமாக, தேவன் அவர்களின் முட்டாள்தனத்திற்கு ஏற்றவாறு அவர்களைக் கையாளவில்லை—அவர் அவர்களைத் தண்டிக்கவில்லை அல்லது அவர்கள் மீது எந்த தண்டனையும் கொடுக்கவில்லை. அது ஏன்? தேவனுடைய ஊழியரான யோபு அவர்களுக்காக செய்த ஜெபங்கள் அவருடைய காதுகளை எட்டியதால்தான். யோபுவின் ஜெபங்களை தேவன் ஏற்றுக்கொண்டதால் அவர் அவர்களை மன்னித்தார். எனவே, இதில் நாம் எதைப் பார்க்கிறோம்? தேவன் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது, அவர் அவர்களுக்கு வெகுமதிகளை அளிக்கிறார். பொருள் மட்டுமல்ல: தேவன் அவர்களுக்கு அதிகாரத்தையும் அளிக்கிறார். மற்றவர்களுக்காக ஜெபிக்க அவர்களுக்கு உரிமை அளிக்கிறார். அந்த ஜெபங்களைக் கேட்பதால் அந்த ஜனங்களின் மீறுதல்களை தேவன் மறந்து கவனித்துக் கொள்கிறார். தேவன் யோபுவுக்கு அளித்த அதிகாரம் இதுதான். அவர்களுடைய கண்டனத்தைத் தடுக்க யோபுவின் ஜெபங்களின் மூலம், அந்த முட்டாள்தனமான ஜனங்கள் மீது யேகோவா தேவன் அவமானத்தைக் கொண்டுவந்தார்—இது எலிபாஸுக்கும் மற்றவர்களுக்கும் அவர் கொடுத்த விஷேசித்த தண்டனையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 60

யோபு மீண்டும் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறான், சாத்தானால் மீண்டும் ஒருபோதும் குற்றம் சாட்டப்படுவதில்லை

யேகோவா தேவனுடைய வார்த்தைகளில், “நீங்கள் என் ஊழியக்காரனாகிய யோபு பேசினது போல் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.” என்ற வார்த்தைகள் உள்ளன. யோபு என்ன சொன்னான்? நாம் முன்பு பேசியதைப் போலவே யோபு புத்தகத்தில் இருக்கும் பல பக்கங்களில் உள்ள வார்த்தைகள் யோபு பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளின் பல பக்கங்களில், தேவனைப் பற்றி யோபுவுக்கு எந்தவிதமான புகார்களும் சந்தேகங்களும் ஒருபோதும் வரவில்லை. அவன் முடிவுக்காக மட்டுமே காத்திருக்கிறான். இந்தக் காத்திருப்புதான் கீழ்ப்படிதலுக்கான அவரது அணுகுமுறை ஆகும். இதன் விளைவாக, அவர் தேவனிடம் சொன்ன வார்த்தைகளின் விளைவாக, யோபு தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவர் சோதனைகளைச் சகித்து, கஷ்டங்களை அனுபவித்தபோது, தேவன் அவருடன் இருந்தார். தேவனுடைய பிரசன்னத்தால் அவருடைய கஷ்டங்கள் குறையவில்லை என்றாலும், தேவன் தாம் பார்க்க விரும்புவதைக் கண்டார். மேலும் அவர் கேட்க விரும்பியதைக் கேட்டார். யோபுவின் ஒவ்வொரு செயலும் வார்த்தைகளும் தேவனுடைய கண்களையும் காதுகளையும் அடைந்தன. தேவன் கேட்டார், அவர் கண்டார்—இது உண்மையாகும். தேவனைப் பற்றிய யோபுவின் அறிவும், அந்தக் காலகட்டத்தில், சோதனையின் போது, தேவனைப் பற்றிய அவரது எண்ணங்களும், உண்மையில் இன்றைய ஜனங்களைப் போலவே குறிப்பிட்டவை அல்ல, ஆனால் அந்தக் காலத்தின் சூழலில், யோபு சொன்ன எல்லாவற்றையும் தேவன் அங்கீகரித்தார். ஏனெனில், அத்துடன் அவர் வெளிப்படுத்திய மற்றும் வெளிக்காட்டிய அவருடைய நடத்தை மற்றும் அவரது இருதயத்தில் உள்ள எண்ணங்கள் ஆகியவை தேவனுடைய தேவைகளுக்குப் போதுமானவையாக இருந்தன. யோபு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில், அவர் மனதில் நினைத்ததும் செய்யத் தீர்மானித்ததும் தேவனுக்கு ஒரு முடிவைக் காட்டியது. இது தேவனுக்கு திருப்திகரமாக இருந்தது. அதன் பிறகு தேவன் யோபுவின் சோதனைகளை எடுத்துக் கொண்டார். யோபு தனது கஷ்டங்களிலிருந்து வெளியே வந்தார். மீண்டும் அவருக்கு நேராத வண்ணம் சோதனைகள் அவரை விட்டுப் போய்விட்டன. ஏனென்றால், யோபு ஏற்கனவே சோதனைகளுக்கு ஆளானார். இந்தச் சோதனைகளின் போது உறுதியாக நின்று, சாத்தானைப் பூரணமாக ஜெயித்ததால், தேவன் அவனுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களை வழங்கினார். யோபு 42:10, 12 இல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யோபு மீண்டும் ஒரு முறை ஆசீர்வதிக்கப்பட்டான். அவன் முதன்முதலில் இருந்ததைவிட அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டான். இந்த நேரத்தில் சாத்தான் விலகிவிட்டது. அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை. எதுவும் செய்யவில்லை. அதுமுதல் சாத்தான் யோபுவிடம் தலையிடவோ அவரைத் தாக்கவோ இல்லை. யோபுவிற்கான தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு எதிராக சாத்தான் அதன் பின் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை.

தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் யோபு தனது ஜீவிதத்தின் பிற்பகுதியைச் செலவிடுகிறான்

அக்காலத்தில் அவருடைய ஆசீர்வாதம் செம்மறி ஆடுகள், கால்நடைகள், ஒட்டகங்கள், பொருள் சொத்துக்கள் மற்றும் பல என இவற்றுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், யோபுக்குக் கொடுக்க தம் இருதயத்தில் தேவன் விரும்பிய ஆசீர்வாதங்கள் இதைவிட மிக அதிகம். அந்த நேரத்தில், யோபுவுக்கு தேவன் எத்தகைய நித்திய வாக்குத்தத்தங்களை வழங்க விரும்பினார்? யோபுவின் ஆசீர்வாதங்களில், தேவன் அவரது முடிவைக் குறிப்பிடவில்லை அல்லது அதைத் தொடவில்லை. தேவனுடைய இருதயத்திற்குள் யோபு எத்தகைய முக்கியத்துவத்தை அல்லது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், மொத்தத்தில் தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை நிதானமாக வழங்கினார். யோபுவின் முடிவை தேவன் அறிவிக்கவில்லை. இதன் அர்த்தம் என்ன? அந்த நேரத்தில், தேவனுடைய திட்டம் மனிதனுடைய முடிவை அறிவிக்கும் கட்டத்தை இன்னும் எட்டாத நிலையில், அந்தத் திட்டம் அவருடைய கிரியையின் இறுதிக் கட்டத்தில் இன்னும் நுழையவில்லை என்பதால், தேவன் முடிவைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மனிதனுக்குப் பொருள் ஆசீர்வாதங்களை மட்டுமே வழங்கினார். இதன் அர்த்தம் என்னவென்றால், யோபுவின் ஜீவிதத்தின் பிற்பகுதி தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடந்துவிட்டது என்பதாகும். இதுவே அவனை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியது—ஆனால் அவர்களைப் போலவே அவன் வயதாகிவிட்டான். எந்தச் சாதாரண மனிதனையும் போலவே அவன் உலகை விட்டு விடைபெறும் நாள் வந்தது. இவ்வாறு அது பதிவு செய்யப்பட்டுள்ளது “யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்” (யோபு 42:17). இங்கே “பூரணவயதுள்ளவனாய் மரித்தான்” என்பதன் அர்த்தம் என்ன? தேவன் ஜனங்களின் முடிவை அறிவிப்பதற்கு முந்தைய யுகத்தில், தேவன் யோபுவின் ஆயுட்காலத்தை நிர்ணயித்திருந்தார். அந்த வயதை எட்டியபோது, இயற்கையாகவே இந்த உலகத்திலிருந்து யோபு வெளியேற அவர் அனுமதித்தார். யோபுவின் இரண்டாவது ஆசீர்வாதம் முதல் அவன் இறக்கும் வரையில், தேவன் அதன் பின் கஷ்டங்களைக் கொடுக்கவில்லை. தேவனைப் பொறுத்தவரையில், யோபுவின் மரணம் இயற்கையானது மற்றும் அவசியமானது ஆகும். இது மிகவும் சாதாரணமான ஒன்று. இது தீர்ப்போ கண்டனமோ அல்ல. உயிருடன் இருந்தபோது, யோபு தேவனை வணங்கி அவருக்கு அஞ்சினார். மரித்ததைத் தொடர்ந்து அவன் எந்த வகையான முடிவைப் பெற்றான் என்பது குறித்து, தேவன் எதுவும் கூறவில்லை. அதைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தேவன் என்ன சொல்கிறார் மற்றும் செய்கிறார் என்பதில் தகுதியின் வலுவான உணர்வு உள்ளது. அவருடைய வார்த்தைகள் மற்றும் செயல்களின் உள்ளடக்கம் மற்றும் கோட்பாடுகள் அவருடைய கிரியையின் நிலை மற்றும் அவர் கிரியை செய்யும் காலத்திற்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. தேவனைப் போன்ற ஒருவருக்கு யோபுவைப் போன்ற ஒருவனைப் பற்றி என்ன முடிவு இருந்தது? தேவன் தனது இருதயத்தில் ஏதேனும் ஒரு முடிவை வைத்திருந்தாரா? நிச்சயமாக தேவன் முடிவை வைத்திருந்தார்! இது மனிதனால் அறியப்படவில்லை, தேவன் மனிதனிடம் சொல்ல விரும்பவில்லை, மனிதனிடம் சொல்லும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது மட்டுமே ஆகும். இவ்வாறு, மேலோட்டமாகப் பார்த்தால், யோபு பூரணவயதுள்ளவனாய் மரித்தான, யோபுவின் ஜீவிதமும் அப்படியானதுதான்.

அவனது ஜீவ காலத்தில் யோபு வழங்கிய விலைக்கிரயம்

யோபு மதிப்புமிக்க ஜீவிதத்தை ஜீவித்தானா? அந்த மதிப்பு எங்கே? அவன் மதிப்புமிக்க ஜீவிதம் ஜீவித்தான் என்று ஏன் கூறப்படுகிறது? மனிதனுக்கு, அவனைப் பற்றிய மதிப்பு என்ன? மனிதனுடைய பார்வையில், சாத்தானுக்கும் உலக ஜனங்களுக்கும் முன்பாக, தேவனுக்கு ஒரு மகத்தான சாட்சி அளிப்பதில், தேவன் இரட்சிக்க விரும்பும் மனிதகுலத்தை யோபு பிரதிநிதித்துவப்படுத்தினான். ஒரு தேவனுடைய சிருஷ்டியால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையை அவன் நிறைவேற்றினான். தேவன் இரட்சிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகச் செயல்பட்டு, தேவனை நம்புவதன் மூலம் சாத்தானை ஜெயிப்பது முற்றிலும் சாத்தியம் என்பதை ஜனங்கள் காண அனுமதித்தான். தேவன் அவனுக்குக் கொடுத்த மதிப்பு என்ன? தேவனைப் பொறுத்தவரையில், யோபுவின் ஜீவிதத்தின் மதிப்பு தேவனுக்குப் பயப்படுவதற்கும், தேவனை ஆராதிப்பதற்கும், தேவனுடைய செயல்களுக்கு சாட்சி அளிப்பதற்கும், தேவனுடைய கிரியைகளைப் புகழ்ந்து பேசுவதற்கும், தேவனுக்கு ஆறுதலையும், அனுபவிக்கக்கூடிய ஒன்றை கொண்டுவருவதற்குமான யோபுவின் திறனில் உள்ளது. தேவனைப் பொறுத்தவரையில், யோபுவின் ஜீவிதத்தின் மதிப்பானது, யோபு மரிப்பதற்கு முன்பாக எவ்வாறு சோதனைகளை அனுபவித்தான், சாத்தானை ஜெயித்தான், மேலும் சாத்தானுக்கும் உலக ஜனங்களுக்கும் முன்பாக தேவனுக்கு சாட்சி அளித்தான், இதனால் மனிதர்களிடையே தேவன் மகிமை அடைந்தார், அவருடைய இருதயத்தை ஆறுதல்படுத்தினார், அவருடைய ஆர்வமுள்ள இருதயத்தை ஒரு முடிவைக் காணவும் நம்பிக்கையைப் பார்க்கவும் அனுமதித்தார் என்பதில் உள்ளது. தேவனுடைய சாட்சியில் உறுதியாக நிற்பதற்கும், மனிதகுலத்தை நிர்வகிக்கும் தேவனுடைய கிரியையில், தேவனுடைய சார்பாக சாத்தானை வெட்கப்படுத்துவதற்கும் யோபுவின் சாட்சி ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. இது யோபுவின் ஜீவிதத்தின் மதிப்பு அல்லவா? யோபு தேவனுடைய இருதயத்திற்கு ஆறுதலளித்தான். மகிமை அடைவதன் மகிழ்ச்சியை தேவனுக்கு முன்னறிவித்தான். தேவனுடைய ஆளுகைத் திட்டத்திற்கு ஓர் அற்புதமான தொடக்கத்தை வழங்கினான். இந்தக் கட்டத்தில் இருந்து, யோபுவின் நாமமானது தேவன் மகிமை அடைவதற்கான அடையாளமாகவும், சாத்தான் மீதான மனிதகுலத்தின் வெற்றியின் அடையாளமாகவும் மாறியது. யோபு தனது ஜீவித காலத்தில் அனுபவித்த விஷயங்களும், சாத்தான் மீது அவன் பெற்ற குறிப்பிடத்தக்க ஜெயமும், தேவனால் எப்போதும் போற்றப்படும். அவனுடைய பரிபூரணம், நேர்மை மற்றும் தேவ பயம் ஆகியவை அடுத்த தலைமுறையினரால் போற்றப்படும் மற்றும் பின்பற்றப்படும். அவன் எப்போதும் ஒரு குறைபாடற்ற, ஒளிரும் முத்து போல தேவனால் போற்றப்படுவான். அதைப் போலவே அவன் மனிதனாலும் பொக்கிஷமாக மதிப்பிடப்படுவான்!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 61

நியாயப்பிரமாண யுகத்தின் கட்டளைகள்

பத்துக் கட்டளைகள்

பலிபீடங்களைக் கட்டுவதற்கான கட்டளைகள்

ஊழியர்களை நடத்துவதற்கான கட்டளைகள்

களவு மற்றும் இழப்பீட்டுக்கான கட்டளைகள்

ஓய்வின் வருஷம் மற்றும் மூன்று பண்டிகைகளை ஆசரித்தல்

ஓய்வு நாளுக்கான கட்டளைகள்

பலிகளுக்கான கட்டளைகள்

தகன பலிகள்

போஜன பலிகள்

சமாதான பலிகள்

பாவ நிவாரண பலிகள்

குற்ற நிவாரண பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் பலிகளுக்கான கட்டளைகள் (ஆரோன் மற்றும் அவரது மகன்கள் செலுத்த உத்தரவிடப்படுகிறார்கள்)

ஆசாரியர்கள் செலுத்தும் தகன பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் போஜன பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் பாவ நிவாரண பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் குற்ற நிவாரண பலிகள்

ஆசாரியர்கள் செலுத்தும் சமாதான பலிகள்

ஆசாரியர்கள் பலியைப் புசிப்பதற்கான கட்டளைகள்

சுத்தமான மற்றும் அசுத்தமான விலங்குகள் (புசிக்கக் கூடிய மற்றும் புசிக்கக் கூடாத விலங்குகள்)

பிரசவத்துக்குப் பின் பெண்களை சுத்திகரிப்பதற்கான கட்டளைகள்

குஷ்டரோகத்தின் சோதனைக்கான தரநிலைகள்

குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்தவர்களுக்கான கட்டளைகள்

தீட்டுப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கட்டளைகள்

அசாதாரண வெளியேற்றங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கான கட்டளைகள்

வருடத்திற்கு ஒரு முறை ஆசரிக்கப்பட வேண்டிய பாவ நிவிர்த்தி செய்யும் நாள்

கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளை அறுப்பதற்கான கட்டளைகள்

புறஜாதியினரின் அருவருப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான தடை (உடலுறவு கொள்ளாதது மற்றும் பல)

ஜனங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைகள் (“நீங்கள் பரிசுத்தமாக இருங்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய யோகோவா நானும் பரிசுத்தமாக இருக்கிறேன்” (லேவி. 19:2))

தங்கள் குழந்தைகளை மோளேகிற்குப் பலியிடுபவர்களுக்கான மரண தண்டனை

விபச்சார குற்றத்தின் தண்டனைக்கான கட்டளைகள்

ஆசாரியர்கள் கவனிக்க வேண்டிய கட்டளைகள் (அவர்களின் அன்றாட நடத்தைக்கான கட்டளைகள், பரிசுத்த விஷயங்களை உட்கொள்வதற்கான கட்டளைகள், பலியிடுவதற்கான கட்டளைகள் மற்றும் பல)

கவனிக்க வேண்டிய விருந்துகள் (ஓய்வு நாள், பஸ்கா, பெந்தெகொஸ்தே நாள், பாவநிவிர்த்தி நாள், மற்றும் பல)

பிற கட்டளைகள் (விளக்குகளை ஏற்றுதல், யூபிலி வருஷம், நிலத்தின் மீட்பு, சத்தியம் பண்ணுதல், தசமபாகம் வழங்குதல் மற்றும் பல)

நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கான கட்டளைகள் அனைத்தும் மனிதகுலத்தின் தேவனுடைய வழிநடத்துதலின் உண்மையான சான்றாக இருக்கின்றன

எனவே, நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கான இந்தக் கட்டளைகளையும் கொள்கைகளையும் நீங்கள் படித்திருக்கிறீர்களா? கட்டளைகள் ஒரு பரந்த அளவை உள்ளடக்கியனவா? முதலாவதாக, அவை பத்துக் கட்டளைகளை உள்ளடக்குகின்றன. அதன் பிறகு பலிபீடங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான கட்டளைகள் மற்றும் பல உள்ளன. ஓய்வு நாளை ஆசரிப்பதற்கும் மூன்று பண்டிகைகளை ஆசரிப்பதற்கும் கட்டளைகளைப் பின்பற்றுகின்றன. அதன் பிறகு பலிகளுக்கான கட்டளைகள் உள்ளன. எத்தனை வகையான பலிகள் உள்ளன என்று பார்த்தீர்களா? சர்வாங்க தகன பலிகள், போஜனப் பலிகள், சமாதானப் பலிகள், பாவ நிவாரண பலிகள் போன்றவை உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, ஆசாரியர்களின் பலி, தகன பலிகள் மற்றும் ஆசாரியர்களின் போஜன பலிகள் மற்றும் பிற வகையான பலிகள் உள்ளிட்ட கட்டளைகள் உள்ளன. எட்டாவதாக ஆசாரியர்களுக்கான பலியைப் புசிக்கும் கட்டளைகள் உள்ளன. அதன் பிறகு, ஜனங்களின் ஜீவிதத்தில் எதைக் கவனிக்க வேண்டும் என்பதற்கான கட்டளைகள் உள்ளன. ஜனங்களின் ஜீவிதத்தின் பல அம்சங்களுக்கான நிபந்தனைகள் உள்ளன. அதாவது அவர்கள் எதைப் புசிக்கலாம் அல்லது புசிக்கக்கூடாது என்பதற்கான கட்டளைகள், பிரசவத்தைத் தொடர்ந்து பெண்களைச் சுத்திகரிப்பது மற்றும் தொழுநோயால் குணமடைந்தவர்களைச் சுத்திகரிப்பதற்கான கட்டளைகள் உள்ளன. இந்த கட்டளைகளில், தேவன் நோயைப் பற்றி பேசும் அளவிற்குச் செல்கிறார். ஆடுகளையும் கால்நடைகளையும் மற்றும் பிற ஜீவங்களை அறுப்பதற்கான கட்டளைகள் கூட உள்ளன. ஆடுகளும் கால்நடைகளும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை. தேவன் உனக்குச் சொன்னது போல அவற்றை நீ அறுக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளுக்கு சந்தேகம் இல்லாமல், தேவனால் கட்டளையிடப்பட்டபடி செயல்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி சரியானது ஆகும். நிச்சயமாக ஜனங்களுக்கு அது நன்மை பயக்கும்! ஓய்வு நாள், பஸ்கா மற்றும் அதைப் போன்ற பல பண்டிகைகளும் கட்டளைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும்—இவை அனைத்தையும் தேவன் சொன்னார். இறுதியானவற்றைப் பார்ப்போம்: பிற கட்டளைகள்—விளக்குகளை ஏற்றுதல், யூபிலி வருஷம், நிலத்தை மீட்பது, சத்தியம் செய்வது, தசமபாகம் செலுத்துவது போன்றவை. இவை பரந்த கருத்துக்களை உள்ளடக்கியனவா? முதலில் பேசப்பட வேண்டியது ஜனங்களின் பலிகளின் பிரச்சனை ஆகும். பின்னர் களவு மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான கட்டளைகளைப் பற்றி மற்றும் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது பற்றி பேச வேண்டும்…; ஜீவிதத்தின் ஒவ்வொரு விவரங்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. தேவன் தனது ஆளுகைத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ கிரியையைத் தொடங்கியபோது, மனிதன் பின்பற்ற வேண்டிய பல கட்டளைகளை அவர் வகுத்தார். இந்தக் கட்டளைகள் மனிதனைப் பூமியில் மனிதனுடைய இயல்பான ஜீவிதத்தை நடத்த அனுமதிக்கும் பொருட்டு இருந்தன. இது தேவனிடமிருந்து பிரிக்க முடியாத மனிதனுடைய இயல்பான ஜீவிதம் மற்றும் அவரது வழிகாட்டுதல் ஆகும். பலிபீடங்களை எவ்வாறு உருவாக்குவது, பலிபீடங்களை எவ்வாறு அமைப்பது என்று தேவன் முதலில் மனிதனிடம் சொன்னார். அதன்பிறகு, அவர் எவ்வாறு பலி செய்ய வேண்டும் என்று மனிதனிடம் சொன்னார். மனிதன் எப்படி ஜீவிக்க வேண்டும் என்பதை வகுத்தார்—ஜீவிதத்தில் அவர் எதில் கவனம் செலுத்த வேண்டும், அவர் எதைக் கடைபிடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை வகுத்தார். தேவன் மனிதனுக்காக அமைத்த அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தன. இந்தப் பழக்கவழக்கங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டளைகளுடன் அவர் ஜனங்களின் நடத்தையைத் தரப்படுத்தினார். அவர்களின் ஜீவிதத்தை வழிநடத்தினார். தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றத் தொடங்க அவர்களை வழிநடத்தினார். தேவனுடைய பலிபீடத்தின் முன் வர அவர்களுக்கு வழிகாட்டினார். ஒழுக்கம், ஒழுங்குமுறை மற்றும் அமைதி கொண்ட மனிதனுக்காக தேவன் உருவாக்கிய எல்லாவற்றின் மத்தியிலும் ஒரு ஜீவிதத்தை ஜீவிக்க அவர்களுக்கு வழிகாட்டினார். மனிதனுக்கு வரம்புகளை நிர்ணயிக்க தேவன் முதலில் இந்த எளிய கட்டளைகளையும் கொள்கைகளையும் பயன்படுத்தினார். இதனால் பூமியில் தேவனை வணங்கும் ஒரு சாதாரண ஜீவிதம் மனிதனுக்கு இருக்கும். ஓர் இயல்பான ஜீவிதம் மனிதனிடம் இருக்கும். அவரது ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தின் தொடக்கத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கம் இதுதான். கட்டளைகள் மற்றும் கற்பனைகள் மிகவும் பரந்த உள்ளடக்கத்தைக் கொண்டது. அவை நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் போது மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட தேவனுடைய வழிகாட்டுதலின் பிரத்தியேகங்கள் ஆகும். அவை நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கு முன்னர் வந்த ஜனங்களால் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது. அவை நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தேவனால் செய்யப்பட்ட கிரியையின் பதிவு ஆகும். அவை தேவனுடைய தலைமைத்துவத்திற்கும் எல்லா மனிதர்களுக்குமான அவருடைய வழிகாட்டுதலுக்கும் உண்மையான சான்றாகும்.

தேவனுடைய போதனைகள் மற்றும் ஏற்பாடுகளிலிருந்து மனிதகுலம் எப்போதும் பிரிக்க முடியாத ஒன்றாகும்

இந்தக் கட்டளைகளில், தேவனுடைய கிரியையின் மீதும், தேவனுடைய ஆளுகையின் மீதும், மனிதகுலத்தின் மீதும் உள்ள தேவனுடைய அணுகுமுறையானது தீவிரமானது, மனசாட்சியுள்ளது, கடுமையானது மற்றும் பொறுப்பானது என்பதைக் காண்கிறோம். அவர் மனிதர்களிடையே செய்யவேண்டிய கிரியையை தனது படிகளின்படி, சிறிதும் வேறுபாடின்றி செய்கிறார். தம் வார்த்தைகளை, மனிதகுலத்திடம் சிறிதளவு பிழையோ, விலக்கலோ இல்லாமல் பேசுகிறார். தேவனுடைய தலைமையிலிருந்து அவர் பிரிக்கமுடியாதவர் என்பதை மனிதன் காண அனுமதிக்கிறார். தேவன் செய்வதும் சொல்வதும் மனிதகுலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறார். அடுத்த யுகத்தில் மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், ஆதியில்—நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் போது—தேவன் இந்த எளிய காரியங்களைச் செய்தார். தேவனைப் பொறுத்தவரையில், அந்த யுகத்தில் தேவன், உலகம் மற்றும் மனிதகுலம் பற்றிய ஜனங்களின் கருத்துக்கள் சுருக்கமாகவும், தெளிவற்றதாகவும் இருந்தன. அவற்றில் சில யோசனைகளும் நோக்கங்களும் நிறைவேறிய போதிலும், அவை அனைத்தும் தெளிவற்றவை மற்றும் தவறானவை ஆகும். இதனால் மனிதகுலம் தேவனுடைய போதனைகள் மற்றும் அவர்களுக்கான ஏற்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதது ஆகும். ஆதிகால மனிதகுலத்திற்கு இது எதுவும் தெரியாது. ஆகவே மனிதன் ஜீவிப்பதற்கான மிக மேலோட்டமான மற்றும் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து, ஜீவிதத்துக்குத் தேவையான கட்டளைகளை மனிதனுக்கு தேவன் கற்பிக்கத் தொடங்க வேண்டியிருந்தது. இந்த விஷயங்களை மனிதனுடைய இருதயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பதிய வைத்தார் வார்த்தைகளாக இருந்த இந்த விதிகள் மூலமாகவும், இந்த விதிமுறைகள் மூலமாகவும், அவரைப் பற்றிய படிப்படியான புரிதலையும், அவருடைய தலைமைத்துவத்தைப் பற்றிய படிப்படியானப் நன்றியறிதலையும் புரிதலையும், அவருக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவின் அடிப்படைக் கருத்தையும் மனிதனுக்குத் தந்தார். இந்த விளைவை அடைந்த பிறகு தான், தேவன் பின்னர் செய்யவேண்டிய கிரியையை சிறிது சிறிதாகச் செய்ய முடிந்தது. இவ்வாறு, இந்தக் கட்டளைகளும், நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் போது தேவன் செய்த கிரியையும் மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்கான அவரது கிரியையின் அடித்தளம், மற்றும் தேவனுடைய ஆளுகைத் திட்டத்திற்கான கிரியையின் முதல் கட்டம் ஆகும். நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் கிரியைக்கு முன்னர், தேவன் ஆதாம், ஏவாள் மற்றும் அவர்களின் சந்ததியினருடன் பேசியிருந்தாலும், அந்தக் கட்டளைகளும் போதனைகளும் மனிதனுக்கு ஒவ்வொன்றாக வழங்கப்படும் அளவுக்கு முறையானவை அல்லது குறிப்பிட்டவை அல்ல. அவை எழுதப்படவில்லை, அவை கட்டளைகளாக மாறவில்லை. ஏனென்றால், அந்த நேரத்தில், தேவனுடைய திட்டம் அவ்வளவு தூரம் செல்லவில்லை. தேவன் மனிதனை இந்த நடவடிக்கைக்கு இட்டுச் சென்றபோதுதான், அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் இந்தக் கட்டளைகளைப் பேச ஆரம்பித்தார். அவற்றை மனிதனிடம் செயல்படுத்தத் தொடங்கினார். இது ஓர் அவசியமான செயல் மற்றும் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். இந்த எளிய பழக்கவழக்கங்கள் மற்றும் கட்டளைகள் மனிதனுக்கான தேவனுடைய நிர்வாகக் கிரியைகளின் படிகளையும், அவருடைய ஆளுகைத் திட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய ஞானத்தையும் காட்டுகிறது. தொடங்குவதற்கு என்ன உள்ளடக்கம் மற்றும் வழியைப் பயன்படுத்துவது என்றும், தொடர எதைப் பயன்படுத்துவது என்றும், நிறைவு செய்ய எதைப் பயன்படுத்துவது என்றும், அதற்கு சாட்சி அளிக்கும் ஒரு கூட்டத்தை அவர் பெற முடியும் என்பதையும், அவரைப் போன்ற மனநிலையோடு இருக்கும் ஒரு கூட்டத்தைப் பெற முடியும் என்பதையும் தேவன் அறிவார். மனிதனுக்குள் இருப்பதை அவர் அறிவார். மனிதனிடம் இல்லாததை அவர் அறிவார். அவர் என்ன வழங்க வேண்டும் என்பதையும், மனிதனை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதையும் அவர் அறிவார். மேலும் மனிதன் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதையும் அவர் அறிவார். மனிதன் ஒரு கைப்பாவை போன்றவன்: தேவனுடைய சித்தத்தைப் பற்றி அவனுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை என்றாலும், இன்று வரை தேவனுடைய நிர்வாகக் கிரியைகளால் வழிநடத்தப்படுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவர் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தேவனுடைய இருதயத்தில் எந்தவிதமான கவலையும் இல்லை. அவருடைய இருதயத்தில் மிகத் தெளிவான மற்றும் தெளிவான திட்டம் இருந்தது. தனது படிகளுக்கும் தனது திட்டத்திற்கும் ஏற்ப தான் செய்ய விரும்பிய கிரியையைச் செய்தார். மேலோட்டமானவையிலிருந்து ஆழ்ந்த நிலைக்கு முன்னேறினார். பின்னர் செய்ய வேண்டிய கிரியையை அவர் சுட்டிக்காட்டவில்லை என்றாலும், அவருடைய அடுத்தடுத்த கிரியைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருடைய திட்டத்தின்படி நிச்சயமாக முன்னேறுகின்றன. இது தேவன் வைத்திருப்பதற்கும் தேவன் இருப்பதற்குமான ஒரு வெளிப்பாடாகும். இது தேவனுடைய அதிகாரமாகும். அவரது ஆளுகைத் திட்டத்தின் எந்த கட்டத்தில் அவர் கிரியைச் செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய மனநிலையும் அவரது சாராம்சமும் அவரை மட்டுமே குறிக்கின்றன. இது முற்றிலும் உண்மை. யுகத்தைப் பொருட்படுத்தாமல், அல்லது கிரியையின் நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒருபோதும் மாறாத விஷயங்கள் உள்ளன: தேவன் எந்த வகையான ஜனங்களை நேசிக்கிறார், அவர் எந்த வகையான ஜனங்களை வெறுக்கிறார், அவருடைய மனநிலை மற்றும் அவரிடம் உள்ள அனைத்தும், அவரும் ஒருபோதும் மாறாது. நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கான கிரியையின் போது, தேவன் நிறுவிய இந்த கட்டளைகளும் கோட்பாடுகளும், இன்று ஜனங்களுக்கு மிகவும் எளிமையானவை மற்றும் மேலோட்டமானவை என்று தோன்றினாலும், அவற்றைப் புரிந்துக்கொள்வதும் சாதிப்பதும் எளிதானது என்றாலும், அவற்றில் இன்னும் தேவனுடைய ஞானமும் தேவனுடைய மனநிலையும், தேவனும், அவரிடம் உள்ளதும் இருக்கின்றது. இந்த எளிய கட்டளைகளுக்குள் தேவனுடைய பொறுப்பும் மனிதகுலத்தின் அக்கறையும் வெளிப்படுத்தப்படுகின்றன. அத்துடன் அவருடைய எண்ணங்களின் நேர்த்தியான பொருளையும், இதனால் தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார், எல்லாவற்றையும் அவருடைய கரத்தால் கட்டுப்படுத்துகிறார் என்ற உண்மையை மனிதன் உண்மையாக உணர அனுமதிக்கிறது. மனிதகுல எஜமானர்களுக்கு எவ்வளவு அறிவு இருந்தாலும், அல்லது எத்தனைக் கோட்பாடுகள் அல்லது மர்மங்களை அவர்கள் புரிந்துகொண்டாலும், தேவனைப் பொறுத்தவரையில், இவற்றில் எதுவுமே அவருடைய ஏற்பாட்டையும், மனிதகுலத்தின் தலைமைத்துவத்தையும் மாற்றும் திறன் கொண்டவை அல்ல. தேவனுடைய வழிகாட்டுதலிலிருந்தும் தேவனுடைய தனிப்பட்ட கிரியையிலிருந்தும் மனிதகுலம் எப்போதும் பிரிக்க முடியாததாக இருக்கும். மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவு இதுதான். தேவன் உனக்கு ஒரு கட்டளையை அளிக்கிறாரா, அல்லது ஓர் ஒழுங்குமுறையை அளிக்கிறாரா அல்லது அவருடைய சித்தத்தைப் புரிந்துக்கொள்ள உனக்கு உண்மையை அளிக்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் என்ன செய்தாலும், தேவனுடைய நோக்கம் மனிதனை ஓர் அழகான அடுத்த நாளுக்குள் வழிநடத்துவதாகும். தேவன் சொன்ன வார்த்தைகள் மற்றும் அவர் செய்யும் கிரியை ஆகிய இரண்டும் அவருடைய பொருளின் ஓர் அம்சத்தின் வெளிப்பாடு, மற்றும் அவரது மனநிலையின் ஓர் அம்சத்தின் வெளிப்பாடு மற்றும் அவருடைய ஞானம் ஆகும். அவை அவருடைய ஆளுகைத் திட்டத்தின் இன்றியமையாத படியாகும். இதை கவனிக்கக்கூடாது! தேவனுடைய சித்தமானது அவர் செய்வதில் இருக்கிறது. தவறான கருத்துக்களுக்கு தேவன் அஞ்சமாட்டார். அவரைப் பற்றிய எந்த மனிதனுடைய கருத்துக்களுக்கும் அல்லது எண்ணங்களுக்கும் அவர் பயப்படுவதில்லை. அவர் தனது கிரியையை மட்டுமே செய்கிறார் மற்றும் எந்தவொரு மனிதராலும், விஷயத்தாலும், பொருளாலும் கட்டுப்படுத்தப்படாத, அவருடைய நிர்வாகத் திட்டத்தின்படி தனது நிர்வகித்தலைத் தொடர்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 62

உலகத்தைச் சிருஷ்டித்ததில் இருந்து தேவனின் எண்ணங்கள், யோசனைகள் மற்றும் செயல்கள் பற்றிய மீள்பார்வை

இன்றைக்கு முதலாவதாக நாம் தேவனுடைய எண்ணங்கள், யோசனைகள் மற்றும் மனுக்குலத்தை சிருஷ்டித்ததிலிருந்து அவருடைய ஒவ்வொரு அசைவையும் சுருக்கமாகக் காணலாம். உலகை உருவாக்கினது முதல் கிருபையின் காலத்தின் அதிகாரப்பூர்வ ஆரம்பம் வரை அவர் என்ன கிரியைகளைச் செய்து முடித்துள்ளார் என்பதைப் பார்ப்போம். அதன் பின்பு, தேவனுடைய எண்ணங்களிலும் யோசனைகளிலும் எவைகளெல்லாம் மனிதனுக்குத் தெரியாதவைகள் என்று நாம் கண்டறியலாம், மேலும் அங்கிருந்து தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் ஒழுங்குமுறையில் நாம் தெளிவாகி, மேலும் தேவன் தனது நிர்வாகக் கிரியை மற்றும் அதன் பிறப்பிடம் மற்றும் மேம்பாட்டுச் செயல்முறையை எந்தச் சூழலில் உருவாக்கினார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். மேலும் அவர் தன் நிர்வாகக் கிரியையிலிருந்து, அதாவது அவருடைய நிர்வாகக் கிரியையின் மையம் மற்றும் நோக்கத்திலிருந்து என்ன பலன்களைப் பெற விரும்புகிறார் என்றும் முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். இந்த விஷயங்களை நாம் புரிந்து கொள்ள, மனிதர்கள் இல்லாத தொலைதூர, ஆழ்ந்த மற்றும் அமைதியான காலத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் …

தேவன் தனிப்பட்ட முறையில் முதல் ஜீவனுள்ள மனிதனைச் சிருஷ்டிக்கிறார்

தேவன் தமது படுக்கையிலிருந்து எழுந்தபோது, அவரிடம் இருந்த முதல் எண்ணம் இதுதான்: அவருடன் வாழ்வதற்கும், அவருடைய நிலையான தோழனாக இருப்பதற்கும் ஒரு ஜீவனுள்ள நபரை, உண்மையான, உயிருள்ள மனிதனை சிருஷ்டிக்க வேண்டும் என்பதே ஆகும்; இந்த மனிதனால் அவருக்குச் செவிகொடுக்க முடியும், அவர் அவனில் நம்பிக்கை கொண்டு அவனோடு பேச முடியும். பின்னர், முதன்முறையாக, தேவன் கை நிறைய மண்ணை எடுத்து, அதைக்கொண்டு தனது மனதில் கற்பனை செய்த உருவத்திற்கு ஏற்ப முதல் உயிருள்ள நபரை உருவாக்கினார், பின்னர் அவர் இந்த சிருஷ்டிக்கு ஆதாம் என்று பெயரிட்டார். இந்த உயிருள்ள மற்றும் சுவாசமுள்ள நபரைப் பெற்றவுடன் தேவன் எப்படி உணர்ந்தார்? முதல்முறையாக அன்பான ஒரு தோழன் கிடைத்த மகிழ்ச்சியை அவர் உணர்ந்தார். ஒரு தந்தையாக இருப்பதற்கான பொறுப்பையும் அதனுடன் வரும் அக்கறையையும் அவர் முதன்முறையாக உணர்ந்தார். இந்த உயிருள்ள மற்றும் சுவாசமுள்ள மனிதன் தேவனுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுத்தான்; அவர் முதல்முறையாக ஆறுதலாக உணர்ந்தார். அவருடைய எண்ணங்களாலோ அல்லது வார்த்தைகளாலோ கூட செய்து முடிக்காமல், தேவன் தன் சொந்தக் கைகளால் செய்த முதல் காரியம் இதுதான். இந்த வகையான ஒர் உயிருள்ள மற்றும் சுவாசிக்கும் நபர், மாம்சம் மற்றும் இரத்தத்தால் ஆன, ஓர் உடலுடன் மற்றும் வடிவத்துடன் மற்றும் தேவனுடன் பேசக்கூடிய ஒரு நபர் தேவனுக்கு முன்னால் நின்றபோது, அவர் இதற்கு முன்பு உணர்ந்திராத ஒரு மகிழ்ச்சியை அனுபவித்தார். தேவன் உண்மையிலேயே தனது பொறுப்பை உணர்ந்தார், இந்த ஜீவனுள்ள மனிதன் அவருடைய இருதயத்தைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், அவன் செய்த ஒவ்வொரு சிறிய அசைவிலும் அவரது இருதயத்தை இனிமையாக்கி, அசைத்தான். இந்த ஜீவனுள்ள மனிதன் தேவனுக்கு முன்னால் நின்றபோது, இதுபோன்ற அநேகரைப் பெறுவதற்கான எண்ணம் அவருக்கு முதல் தடவையாக வந்தது. இது தேவன் கொண்டிருந்த இந்த முதல் சிந்தனையுடன் தொடங்கிய நிகழ்வுகளின் தொடராகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் தேவனுக்கு முதன்முறையாக நிகழ்ந்தன, ஆனால் இந்த முதல் நிகழ்வுகளில், அவர் அந்நேரத்தில் மகிழ்ச்சி, பொறுப்பு, அக்கறை போன்ற எந்த உணர்வை உணர்ந்தபோதிலும், அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லாமல் இருந்தார். அந்தத் தருணத்திலிருந்து, தான் முன்னெப்போதும் அனுபவித்திராத, தனிமையையும், சோகத்தையும் தேவன் உண்மையிலேயே உணர்ந்தார். மனிதன் தனது அன்பையும் அக்கறையையும் அல்லது மனிதனுக்கான தன் நோக்கங்களையும் ஏற்றுக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்று அவர் உணர்ந்தார், எனவே அவர் தனது இருதயத்தில் இன்னும் துக்கத்தையும் வேதனையையும் உணர்ந்தார். அவர் மனிதனுக்காக இந்த காரியங்களைச் செய்திருந்தாலும், மனிதன் அதை அறிந்திருக்கவில்லை, அவனுக்கு அது புரியவில்லை. மனிதன் ஒரு பக்கம் அவருக்கு சந்தோஷத்தை, இன்பத்தை, ஆறுதலை வருவித்திருந்தாலும், அவைகளோடு கூட முதல்முறையாக துக்கமான, தனிமையான உணர்வையும் அவருக்கு வருவித்தான். இவைதான் அந்நேரத்தில் தேவனுடைய எண்ணங்களும் உணர்வுகளுமாக இருந்தன. தேவன் இவற்றையெல்லாம் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய இருதயத்தில் அவர் மகிழ்ச்சியிலிருந்து துக்கத்தையும், துக்கத்திலிருந்து வேதனையையும் அடைந்தார். மேலும் இந்த உணர்வுகளுடன் கவலையும் கலந்திருந்தன. அவர் செய்ய விரும்பியதெல்லாம், சீக்கிரத்தில் இந்த மனிதனை, இந்த மனுகுலத்தைத் தன் இருதயத்தில் இருந்ததை அறிந்து கொள்ளச் செய்து, தன்னுடைய நோக்கங்களை அவர்கள் விரைவில் புரிந்து கொள்ளச் செய்வதே ஆகும். அதன்பின், அவர்கள் அவரைப் பின்பற்றுபவர்களாக மாறி, அவருடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, அவருடைய சித்தத்தோடு ஒத்துப்போக முடியும். அவர்கள் இனிமேல் தேவன் பேசுவதை வெறுமனே கேட்டுக்கொண்டு, பேசாமல் இருக்க மாட்டார்கள்; அவர்கள் இனிமேல் தேவனுடைய கிரியையில் அவருடன் எவ்வாறு இணைவது என்பதைப் பற்றி அறியாமலிருக்க மாட்டார்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இனி தேவனுடைய தேவைகளைக் குறித்து அலட்சியமாக இருக்க மாட்டார்கள். தேவன் செய்த இந்த முதல் காரியங்கள் மிகவும் அர்த்தமுள்ளவையாகும். மேலும் இவை, அவருடைய நிர்வாகத் திட்டத்திற்கான மற்றும் இன்றைய மனிதர்களுக்கான பெரிதான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

எல்லாவற்றையும், மனிதர்களையும் உருவாக்கிய பிறகு, தேவன் ஓய்ந்திருக்கவில்லை. அவர் அமைதியற்றவராகவும், அவருடைய நிர்வாகத்தை நிறைவேற்றவும், மனிதர்களிடையே தான் மிகவும் நேசித்த ஜனங்களை ஆதாயம் பண்ணவும் ஆர்வமாக இருந்தார்.

நியாயப்பிரமாண காலத்திற்கு முன்னும் பின்னும் சம்பவத்திராத ஒரு தொகுப்பு கிரியைகளை தேவன் செய்கிறார்

அடுத்து, தேவன் மனிதர்களை சிருஷ்டித்த சிறிது காலத்திலேயே, உலகம் முழுவதும் ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டதை வேதத்தில் காண்கிறோம். நோவாவைக் குறித்து வெள்ளத்தைப் பற்றின பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேவனுடைய ஒரு செயலை செய்து முடிக்கும்படி, அவருடன் செயல்பட, தேவனுடைய அழைப்பைப் பெற்ற முதல் நபர் நோவா என்று கூறலாம். நிச்சயமாக, பூமியிலுள்ள ஒரு நபரை, தேவன் தனது கட்டளைப்படி ஒன்றைச் செய்ய அழைத்தது இதுவே முதல் முறையாய் இருந்தது. நோவா பேழையைக் கட்டி முடித்தவுடனே, தேவன் முதன்முறையாக பூமியை வெள்ளத்தில் மூழ்கப் பண்ணினார். தேவன் பூமியை வெள்ளத்தால் அழித்தபோது, மனிதர்களை சிருஷ்டித்த காலத்திலிருந்து அவர் அவர்களைக்குறித்து வெறுப்படைந்தது இதுவே முதல் முறையாகும்; இதுவே, இந்த மனித இனத்தை வெள்ளத்தின் மூலம் அழிக்கத்தக்க வலிமிகுந்த முடிவை எடுக்கும்படி தேவனைக் கட்டாயப்படுத்தியது. வெள்ளம் பூமியை அழித்தபின்பு, தேவன் மனிதர்களிடம் தனது முதல் உடன்படிக்கையைப் பண்ணினார். அது வெள்ளத்தால் உலகத்தை மீண்டும் ஒருபோதும் அழிக்க மாட்டார் என்பதைக் காட்டும் ஓர் உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் அடையாளம் வானவில் ஆகும். இது மனிதர்களுடனான தேவனின் முதல் உடன்படிக்கையாகும், எனவே வானவில் தேவன் கொடுத்த உடன்படிக்கையின் முதல் அடையாளமாகும்; வானவில் என்பது ஓர் உண்மையான, காணப்படுகிற இயற்பொருளாகும். வானவில் இருப்பதுதான், தான் இழந்த முந்தைய மனித இனத்திற்காக, தேவனை அடிக்கடி வருத்தப்பட வைக்கிறது, மேலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவருக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறதாய் அது இருக்கிறது…. தேவன் தனது வேகத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டார். அவர் அமைதியற்றவராக இருந்தார், அவருடைய நிர்வாகத்தில் அடுத்த படியை எடுத்துவைக்க அவர் ஆர்வமாக இருந்தார். அதைத் தொடர்ந்து, இஸ்ரவேல் முழுவதிலும் தனது கிரியைக்காக முதல் தேர்வாக தேவன் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தார். தேவன் இத்தகைய நபரைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நபரின் மூலம் மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான தனது கிரியையைச் செய்யத் தொடங்கவும், இந்த நபரின் சந்ததியினரிடையே தனது கிரியையைத் தொடரவும் தேவன் தீர்மானித்தார். தேவன் ஆபிரகாமிடம் செய்த காரியம் இதுதான் என்பதை நாம் வேதத்தில் காணலாம். பின்பு தேவன் இஸ்ரவேலை முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசமாக்கி, தம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களான இஸ்ரவேலர் மூலமாக நியாயப்பிரமாண காலத்தைத் தொடங்கினார். மீண்டும் முதன்முறையாக, மனிதர்கள் பின்பற்ற வேண்டிய வெளிப்படையான விதிகளையும் சட்டங்களையும் தேவன் இஸ்ரவேலர்களுக்கு வழங்கினார், அவர் அவற்றை விரிவாக விளக்கினார். இதுவே தேவன் மனிதர்களுக்கு எவ்வாறு பலியிட வேண்டும், அவர்கள் எப்படி வாழ வேண்டும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது, எந்தெந்த பண்டிகைகளையும் மற்றும் நாட்களையும் ஆசரிக்க வேண்டும், செய்கிற எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் ஆகியவற்றைக் குறித்து இந்த அளவிற்கு பிரத்தியேகமான, தரப்படுத்தப்பட்ட விதிகளை வழங்கின முதல் முறையாகும். மனுக்குலம் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் குறித்த விரிவான, தரப்படுத்தப்பட்ட விதிமுறைகளையும், கொள்கைகளையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.

ஒவ்வொரு முறையும் நான் “முதல் முறையாக” என்று சொல்லும்போது, தேவன் இதற்கு முன்பு செய்திராத ஒரு கிரியையை அது குறிக்கிறது. இது முன்னர் இருந்திராத கிரியையைக் குறிக்கிறது, மேலும் தேவன் மனுக்குலத்தையும், எல்லா வகையான உயிரினங்களையும், ஜீவராசிகளையும் சிருஷ்டித்திருந்தாலும், இது அவர் இதற்கு முன்பு செய்திராத ஒரு வகைக் கிரியையாகும். இக்கிரியை முழுமையும் தேவனுடைய மனுக்குல நிர்வாகத்தை உள்ளடக்கியதாகும்; இது முழுவதும் ஜனங்களுடனும், அவருடைய இரட்சிப்பு மற்றும் அவர்களை நிர்வகிப்பதுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. ஆபிரகாமுக்குப் பிறகு, தேவன் மீண்டும் இன்னொருவனை முதன்மையாக்கினார்—நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவனாகவும், தேவனுக்கு எப்போதும் பயந்து, பொல்லாப்புக்கு விலகி, தேவனுக்கு சாட்சியாக இருந்து, சாத்தானின் சோதனைகளைத் தாங்கக்கூடியவனாகவும் இருந்த யோபுவைத் தேர்ந்தெடுத்தார். இது, சாத்தான் ஒரு நபரைச் சோதிக்கும்படி தேவன் அனுமதித்த முதல் முறையுமாகும். மேலும் இது, அவர் சாத்தானுடன் பந்தயம் கட்டிய முதல் முறையும் ஆகும். இறுதியில், சாத்தானை எதிர்கொள்ளும்போது, சாட்சியாக நிற்கவும், அவருக்காகச் சாட்சியமளிக்கவும் வல்ல ஒருவனையும், சாத்தானை முற்றிலும் வெட்கப்படுத்தக்கூடிய ஒருவனையும் அவர் முதன்முறையாகப் பெற்றார். மனுக்குலத்தை சிருஷ்டித்ததிலிருந்து, அவருக்காக சாட்சியாக வாழ முடிந்த, அவர் பெற்ற முதல் நபர் இவன்தான். தேவன் இந்த மனிதனைப் பெற்றவுடன், தன்னுடைய கிரியையின் அடுத்த அடிக்கான இடத்தையும், தான் தெரிந்தெடுக்கப்போகும் ஜனங்களையும் ஆயத்தப்படுத்தி, தனது நிர்வாகத்தைத் தொடரவும், தனது செயலில் அடுத்த கட்டத்தை நிறைவேற்றவும், இன்னும் ஆர்வமாக இருந்தார்.

இவை அனைத்தையும் பற்றி ஜக்கியம் கொண்ட பிறகு, தேவனுடைய சித்தத்தைக் குறித்து உங்களுக்கு சரியான புரிதல் இருக்கிறதா? தேவன் அவரின் மனுக்குல நிர்வாகத்தினுடைய, மனுக்குலத்தின் இரட்சிப்பினுடைய இந்த நிகழ்வை, எல்லாவற்றையும் விட முக்கியமானதாகக் கருதுகிறார். அவர் இந்தக் காரியங்களைத் தனது சிந்தையால், தன்னுடைய வார்த்தைகளால் மட்டும் செய்யாமல், நிச்சயமாக ஒரு சாதாரண மனப்பான்மையுடனும் செய்யாமல், அவை அனைத்தையும் அவர் ஒரு திட்டத்துடனும், ஒரு குறிக்கோளுடனும், தரங்களுடனும், தன் சித்தத்துடனும் செய்கிறார். மனுக்குலத்தை இரட்சிக்கும் இந்தக் கிரியை, தேவனுக்கும் மனிதனுக்குமான பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. கிரியை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தடைகள் எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், மனிதர்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அல்லது மனுக்குலத்தின் கலகத்தன்மை எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், இதில் எதுவுமே தேவனுக்குக் கடினமானதல்ல. தேவன் அவருடைய கடும் முயற்சியைப் பயன்படுத்தி, அவர் தாமே செய்துமுடிக்க விரும்பும் கிரியையை நிர்வகித்து, தன்னைத்தானே மும்முரமாக வைத்துக்கொள்கிறார். அவர் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தவும் செய்து, அவர் கிரியை செய்யவிருக்கும் ஜனங்கள் மீதும், அவர் செய்து முடிக்க விரும்பும் அனைத்து கிரியைகளின் மீதும் தனது ராஜரீகத்தைப் பயன்படுத்துகிறார்—இது எதுவுமே இதற்கு முன் செய்யப்படவில்லை. மனுக்குலத்தை நிர்வகிக்கும், இரட்சிக்கும் இந்தப் பெரிய திட்டத்திற்கு தேவன் இந்த முறைகளைப் பயன்படுத்துவதும், இவ்வளவு பெரிய விலைக்கிரயம் செலுத்துவதும் இதுவே முதல் முறை ஆகும். தேவன் இந்தக் கிரியையைச் செய்துகொண்டிருக்கும்போது, தன்னுடைய கடும் முயற்சியையும், தன்னிடம் இருக்கிறதையும், தான் யாராய் இருக்கிறார் என்பதையும், தன்னுடைய ஞானத்தையும் சர்வ வல்லமையையும், தன்னுடைய மனநிலையின் ஒவ்வொரு அம்சத்தையும் தயக்கமின்றி, மனுக்குலத்திற்குச் சிறிது சிறிதாகத் தெரியப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார். அவர் இதற்கு முன் இவ்விஷயங்களைச் செய்யாததினால், அவர் அவைகளைத் தெரியப்படுத்தி, வெளிப்படுத்துகிறார். ஆகவே, முழு பிரபஞ்சத்திலும், தேவன் நிர்வகிக்கவும் இரட்சிக்கவும் நோக்கம் கொண்ட ஜனங்களைத் தவிர, தேவனுடன் இப்படிப்பட்ட நெருக்கமான உறவைக் கொண்டிருந்த வேறெந்த உயிரினங்களும் அவருடன் இவ்வளவு நெருக்கமாய் இருந்ததில்லை. அவருடைய இருதயத்தில், அவர் நிர்வகிக்கவும் இரட்சிக்கவும் விரும்பும் மனுக்குலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; அவர் இந்த மனுக்குலத்தை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்வாய்க் கருதுகிறார். அவர் அவர்களுக்காக ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளபோதும்கூட, அவர்கள் தொடர்ந்து அவரை வேதனைப்படுத்தி, கீழ்ப்படியாமல் இருந்தபோதிலும், அவர் அவர்களிடத்தில் நம்பிக்கை இழக்காமல், எந்தவிதமான முறையீடும், வருத்தமும் இல்லாமல், தனது கிரியை அயராது தொடர்ந்து செய்கிறார். ஏனென்றால், சீக்கிரத்தில் ஜனங்கள் அவருடைய அழைப்பைக் கவனித்து, அவருடைய வார்த்தைகளால் தொடப்பட்டு, அவர் சிருஷ்டிப்பின் கர்த்தர் என்பதை உணர்ந்து, அவர் பக்கம் திரும்புவார்கள் என்பதை அவர் அறிவார் …

இன்று இவை அனைத்தையும் கேட்ட பிறகு, தேவன் செய்யும் அனைத்தும் மிகவும் சாதாரணமானவை என்று நீங்கள் நினைக்கலாம். அவருடைய வார்த்தைகளிலிருந்தும் அவருடைய கிரியையிலிருந்தும் தேவனுடைய சில நோக்கங்களை மனிதர்கள் எப்போதுமே உணர்ந்திருப்பதைப் போலத் தெரிகிறது, ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கும் அல்லது அறிவுக்கும் மற்றும் தேவன் என்ன சிந்திக்கிறார் என்பதற்கும் இடையே எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான், தேவன் ஏன் மனுக்குலத்தைப் படைத்தார், அவர் எதிர்பார்த்த மனுக்குலத்தைப் பெறுவதற்கான அவரது விருப்பத்தின் பின் இருந்த பின்னணியையும் பற்றி எல்லா ஜனங்களுக்கும் தெரிவிப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்கள் இருதயத்தில் தெளிவடைய, அதைப் புரிந்து கொள்ள இதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால், தேவனுடைய ஒவ்வொரு சிந்தனையும் யோசனையும், அவருடைய கிரியையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையும், ஒவ்வொரு காலகட்டமும் அவருடைய முழு நிர்வாகக் கிரியைகளோடு பிணைக்கப்பட்டு, நெருக்கமாக இணைந்திருக்கின்றன. அதனால், நீ அவருடைய கிரியையின் ஒவ்வொரு அடியிலுமுள்ள அவருடைய சிந்தனைகளையும் யோசனைகளையும் புரிந்து கொள்வது என்பது, அவருடைய நிர்வாகத் திட்டத்தின் கிரியை எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்குச் சமமாகும். இந்த அடித்தளத்தில்தான் தேவனைப் பற்றிய உன்னுடைய புரிதல் ஆழமடைகிறது. தேவன் உலகத்தை முதன்முதலில் சிருஷ்டித்தபோது, நான் முன்பு சொன்ன காரியங்களான, அவர் செய்த அனைத்தும், இப்போது சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான பொருத்தமற்ற, வெறுமனே “தகவல்” போலத் தோன்றினாலும், உன் அனுபவங்களின் காலப்போக்கில் ஏதாவது ஒருநாள், இது ஓரிரு சாதாரண தகவல் அல்ல என்றும், அல்லது இது ஒருவித மறைபொருள் அல்ல என்றும் நீ நினைப்பாய். உன் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்போது, தேவனுக்கு உன் இருதயத்தில் ஏதேனும் ஓர் இடம் உண்டானவுடன், அல்லது நீ அவருடைய சித்தத்தை இன்னும் முழுமையாகவும் ஆழமாகவும் புரிந்துகொண்டவுடன், நீ உண்மையிலேயே நான் இன்று பேசிக்கொண்டிருப்பதைக் குறித்த முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்துகொள்வாய். இப்போது நீங்கள் இதை எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் இந்த விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்வதும், அறிந்துகொள்வதும் இனியும் அவசியமானதே. தேவன் எதையாவது செய்யும்போது, அவர் தனது கிரியையைச் செய்யும்போது, அது அவருடைய யோசனைகளாலோ அல்லது சொந்தக் கைகளாலோ செய்தாலும், அவர் அதை முதன்முறையாகவோ அல்லது இறுதி முறையாகவோ செய்தாலும், முடிவில் தேவனுக்கு ஒரு திட்டம் உள்ளது, மற்றும் அவர் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய நோக்கங்களும் அவருடைய எண்ணங்களும் உள்ளன. இந்த நோக்கங்களும் எண்ணங்களும் தேவனின் மனநிலையைக் குறிக்கின்றன, மேலும் அவை அவரிடம் இருப்பதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. தேவனின் மனநிலையும் மற்றும் அவரிடம் இருப்பதும், அவர் யாராய் இருக்கிறார் என்ற இவ்விரண்டும் ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். ஒரு நபர் தேவனுடைய மனநிலையையும், அவரிடம் இருப்பதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டவுடன், அவர் செய்வதை ஏன் செய்கிறார் என்பதையும், அவர் சொல்வதை ஏன் சொல்கிறார் என்பதையும் படிப்படியாக அவர்களால் புரிந்துகொள்ள முடியும். அதிலிருந்து, தேவனைப் பின்பற்ற, சத்தியத்தைத் தொடர, தங்களின் மனநிலையில் மாற்றத்தைப் பெற அவர்களால் அதிக விசுவாசம் கொள்ள முடியும். அதாவது, தேவனைப் பற்றிய மனிதனின் புரிதலும், தேவன் மீதான அவனுடைய விசுவாசமும் பிரிக்க முடியாதவையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 63

ஜனங்கள் தேவனுடைய மனநிலையையும், அவரிடத்தில் என்ன இருக்கிறது, அவர் யாராக இருக்கிறார் ஆகியவற்றைக் குறித்த அறிவை பெற்றுக்கொண்டு, அதைப் புரிந்துகொண்டார்களானால், பின்பு அவர்கள் தேவனிடத்தில் இருந்து வரும் ஜீவனைப் பெற்றுக் கொள்வார்கள். இந்த ஜீவன் உனக்குள் உருவாக்கப்பட்டவுடன், தேவனுக்குப் பயப்படும் உன்னுடைய பயம் மிகவும் அதிகமாகும். இது மிக இயல்பாக வரும் ஓர் ஆதாயம் ஆகும். நீ தேவனுடைய மனநிலையை அல்லது சாராம்சத்தைப் பற்றி புரிந்துகொள்ளவோ அல்லது தெரிந்துகொள்ளவோ விரும்பவில்லை என்றால், இக்காரியங்களைக் குறித்து நீ சிந்திக்க அல்லது கவனம் செலுத்தக்கூட விரும்பவில்லை என்றால், நீ தேவன் மீதான உன் விசுவாசத்தைத் தற்போது பின்தொடர்ந்து கொண்டிருக்கும் வழிமுறையானது ஒருபோதும் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற அல்லது அவருடைய மெச்சுதலைப் பெற உன்னை அனுமதிக்காது என்பதை என்னால் நிச்சயமாய் சொல்ல முடியும். அதற்கும் மேலாக, ஒருபோதும் நீ உண்மையிலேயே இரட்சிப்பை அடைய முடியாது, இவைகளே இறுதியான விளைவுகளாகும். ஜனங்கள் தேவனைப் புரிந்து கொள்ளாதபோது, அவருடைய மனநிலையை அறிந்து கொள்ளாதபோது, அவர்களுடைய இருதயங்கள் ஒருபோதும் அவருக்காக உண்மையாகத் திறக்கப்பட முடியாது. அவர்கள் தேவனைப் புரிந்துகொண்டவுடன், அவர்கள் அவருடைய இருதயத்தில் இருக்கிறதை ஆர்வத்தோடும் விசுவாசத்தோடும் புரிந்துகொள்ளவும், ருசிக்கவும் ஆரம்பிப்பார்கள். தேவனுடைய இருதயத்தில் இருப்பதை நீ புரிந்துகொண்டு, ருசிக்கும்போது உன்னுடைய இருதயம் படிப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக அவருக்காகத் திறக்கும். உன்னுடைய இருதயம் அவருக்காகத் திறக்கும்போது தேவனுடனான உன்னுடைய உரையாடல்கள், தேவனிடத்தில் நீ வைக்கிற கோரிக்கைகள் மற்றும் உன்னுடைய சொந்த மிதமிஞ்சிய ஆசைகள் எவ்வளவு வெட்கத்துக்குரியவையாக, வெறுக்கத்தக்கவையாக இருந்தன என்பதை நீ உணருவாய். உன்னுடைய இருதயம் உண்மையிலேயே தேவனுக்காகத் திறக்கும்போது, அவருடைய இருதயம் எத்தகைய முடிவில்லாத உலகம் என்பதை நீ காண்பாய். மேலும் நீ இதற்கு முன் அனுபவித்திராத ஒரு சாம்ராஜ்யத்திற்குள் நுழைவாய். இந்த சாம்ராஜ்யத்தில் ஏமாற்றுதல் இல்லை, வஞ்சகம் இல்லை, இருள் இல்லை, தீமை இல்லை. இங்கே நேர்மையும், விசுவாசமும், வெளிச்சமும், நேரிய நடத்தையும், நீதியும், இரக்கமும் மட்டுமே உண்டு. இது அன்பும் அக்கறையும் நிறைந்தது, இரக்கமும் சகிப்புத்தன்மையும் நிறைந்தது, மேலும் இதன் மூலம் நீ ஜீவனுடன் இருப்பதன் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் உணருவாய். இவையே நீ உன் இருதயத்தை தேவனுக்காகத் திறக்கும்போது, அவர் உனக்கு வெளிப்படுத்துகிற காரியங்கள் ஆகும். இந்த முடிவில்லாத உலகம் தேவனுடைய ஞானமும், சர்வவல்லமையும் நிறைந்ததாகும். இது அவருடைய அன்பினாலும் அதிகாரத்தினாலும் நிறைந்ததாகும். இங்கே தேவனிடத்தில் இருக்கிற, தேவன் யாராய் இருக்கிறார் என்பதன் மற்றும் எது அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும், ஏன் அவர் கவலைப்படுகிறார், ஏன் சோகமாகிறார், ஏன் கோபப்படுகிறார் என்பதன் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னால் காண முடியும்…. இதுவே தங்களுடைய இருதயத்தைத் திறந்து, தேவனை உள்ளே வர அனுமதிக்கும் ஒவ்வொரு நபரும் பார்க்கக் கூடியதாகும். நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனுக்காகத் திறந்தால் மட்டுமே அவரால் அதற்குள் வர முடியும். அவர் உன்னுடைய இருதயத்திற்குள் வந்திருந்தால் மட்டுமே, உன்னால் தேவனிடத்தில் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும், உனக்கான அவருடைய நோக்கங்களையும் பார்க்க முடியும். அந்த நேரத்தில், தேவனைப் பற்றின எல்லாமே மிகவும் விலைமதிப்பற்றவை என்பதையும், அவரிடம் உள்ளவையும், அவர் யாராக இருக்கிறார் என்பதும் உயர்வாய் மதிப்பதற்கு மிகவும் தகுதியானவை என்பதையும் நீ கண்டுபிடிப்பாய். அதனுடன் ஒப்பிடும்போது, உன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள், உன் வாழ்க்கையில் உள்ள பொருட்கள் மற்றும் நடந்த நிகழ்வுகள், மற்றும் உனக்கு அன்புக்குரியவர்கள், உன்னுடைய துணைவர் மற்றும் நீ விரும்புகிற விஷயங்கள் கூட குறிப்பிடப்படத் தகுதியுடையவை அல்ல. அவை மிகவும் சிறியவை, மிகவும் தாழ்ந்தவை; எந்த உலகப் பொருளும் உன்னை மறுபடியும் ஒருபோதும் கவர்ந்திழுக்க முடியாது, அல்லது எந்த உலகப் பொருளும் அதற்கான எந்த விலையையும் செலுத்தும்படி உன்னை மறுபடியும் மயக்க முடியாது என்பதை நீ உணருவாய். தேவனுடைய தாழ்மையில் நீ அவருடைய மகத்துவத்தையும், அவருடைய அதிகாரத்தையும் காண்பாய். மேலும் தேவனுடைய சில செயல்களில், முன்பு நீ அவருடைய எல்லையற்ற ஞானத்தையும், அவருடைய சகிப்புத்தன்மையையும் மிகச் சிறிய அளவில் விசுவாசித்ததையும் காண்பாய், அவருடைய பொறுமையையும், அவருடைய சகிப்புத்தன்மையையும், உன்னைக் குறித்த அவருடைய புரிதலையும் நீ காண்பாய். இது அவர் மீது ஒரு பக்தியை உனக்குள் உண்டாக்கும். அந்நாளில், மனிதகுலம் இத்தகைய இழிவான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும், உன் அருகில் உள்ள ஜனங்கள், உன் வாழ்க்கையில் நடக்கின்ற காரியங்கள், நீ நேசிப்பவர்கள், உனக்கான அவர்களுடைய அன்பு, அவர்களின் பாதுகாப்பு அல்லது அக்கறை என்றழைக்கப்படும் எதுவும் சொல்லப்படக்கூட தகுதியற்றவை என்பதையும், தேவன் மட்டுமே உனக்குப் பிரியமானவர், தேவனை மட்டுமே நீ மிகவும் மதிக்கிறாய் என்பதையும் நீ உணருவாய். அந்த நாள் வரும்போது சில ஜனங்கள் இவ்வாறு சொல்வார்கள் என்று நம்புகிறேன்: தேவனுடைய அன்பு மிகவும் பெரியது, அவருடைய சாராம்சம் மிகவும் பரிசுத்தமானது, அதில் எந்த வஞ்சகமும் எந்தத் தீமையும், எந்தப் பொறாமையும், எந்தச் சண்டையும் இல்லை. ஆனால் நீதியும், நம்பகத்தன்மையும் மட்டுமே இருக்கிறது, தேவனிடத்தில் இருக்கிற எல்லாமும், அவர் யாராய் இருக்கிறார் என்பதும் மனிதர்களால் விரும்பப்படவேண்டியவையாகும். ஜனங்கள் அதை அடையும்படி கடும்முயற்சி செய்து, இதைப் பெறும்படி பேராவல் கொள்ள வேண்டும். இந்த கட்டமைப்பை அடைவதற்கு மனுக்குலத்தின் திறன் எந்த அடிப்படையில் உள்ளது? இது தேவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்வதன் அடிப்படையிலும் அவருடைய சாராம்சத்தைப் பற்றிய புரிதலின் அடிப்படையிலும் கட்டப்பட்டுள்ளது. எனவே தேவனுடைய மனநிலையையும், அவரிடம் இருப்பதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்வது ஒவ்வொரு நபருக்கும் வாழ்நாள் முழுவதற்கான படிப்பினை ஆகும். இது தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொள்ளவும், தேவனை அறியவும் கடும்முயற்சி செய்யும் ஒவ்வொரு நபரும் அடையத் தொடரும் வாழ்நாள் இலக்காகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 64

தேவன் கிரியை செய்வதற்காக முதல் முறையாக மாம்சமாதல்

தேவனிடத்தில் இருப்பதையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் நாம் அதிகம் புரிந்துகொள்ள விரும்பினால், நம் பழைய ஏற்பாட்டுடனோ அல்லது நியாயப்பிரமாணத்தின் காலத்துடனோ நிறுத்திக்கொள்ளாமல், தொடர்ந்து, தேவன் தன்னுடைய கிரியையில் எடுத்த நடவடிக்கைகளைப் பின்பற்றித் தொடரவேண்டும். ஆகவே, தேவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடித்து, கிருபையின் காலத்தைத் தொடங்கினதால், நம்முடைய சொந்த அடிச்சுவடுகள், கிருபையும் மீட்பும் நிறைந்த காலமான கிருபையின் காலத்திற்குள் பின்தொடர்ந்து போகட்டும். இந்தக் காலத்தில் முன்னெப்போதும் செய்திராத முக்கியமான ஒன்றை தேவன் மீண்டும் செய்தார். இந்தப் புதிய காலத்தின் கிரியையானது, தேவன் மற்றும் மனுக்குலம் ஆகிய இருவருக்கும் ஒரு புதிய தொடக்கப்புள்ளியாக இருந்தது. மேலும் இந்தத் தொடக்கப்புள்ளி முன்னெப்போதும் செய்திராத, தேவனால் செய்யப்பட்ட ஒரு புதிய காரியத்தைக் கொண்டிருந்தது. இந்தப் புதிய கிரியையானது முன்னெப்போதும் செய்திராததும், மனிதர்களுடைய மற்றும் அனைத்து சிருஷ்டிகளுடைய கற்பனைத் திறன்களுக்கும் அப்பாற்பட்டதுமாக இருந்தது. முதல்முறையாக தேவன் மனிதனானார், முதன்முறையாக தேவன் ஒரு மனிதனின் அடையாளத்துடன், மனு உருவில் புதிய கிரியையைத் தொடங்கினார் என்பது இப்போது எல்லா ஜனங்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றாகும். இந்தப் புதிய கிரியையானது தேவன் நியாயப்பிரமாண காலத்தில் தனது கிரியையை முடித்து விட்டார் என்பதையும், இனி அவர் நியாயப்பிரமாணத்தின்கீழ் எதையும் செய்யவோ, சொல்லவோ மாட்டார் என்பதையும் குறிக்கிறது. அவர் நியாயப்பிரமாணத்தின் வடிவத்திலும் அல்லது நியாயப்பிரமாணத்தின் கொள்கைகள் அல்லது விதிகளின்படியும் கூட அவர் எதையும் சொல்லவும் மாட்டார், செய்யவும் மாட்டார். அதாவது நியாயப்பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்ட அவருடைய எல்லாக் கிரியைகளும் என்றென்றும் நிறுத்தப்பட்டன, அது தொடரப்படாது, ஏனென்றால் தேவன் புதிய கிரியைகளைத் தொடங்கவும், புதிய விஷயங்களைச் செய்யவும் விரும்பினார். அவருடைய திட்டம் மீண்டும் ஒரு புதிய தொடக்கப் புள்ளியைக் கொண்டிருந்தது, எனவே தேவன் மனுக்குலத்தை அடுத்த காலத்திற்குள்ளாக வழிநடத்த வேண்டியிருந்தது.

இது மனிதர்களுக்கு சந்தோஷமான அல்லது அச்சுறுத்தும் செய்தியாக இருந்ததா என்பது ஒவ்வொரு தனிநபரின் சாராம்சத்தையும் சார்ந்திருந்தது. சிலருக்கு இது சந்தோஷமான செய்தியாக இல்லாமல் அச்சுறுத்துவதாக இருந்தது என்று சொல்லலாம், ஏனென்றால் தேவன் தன்னுடைய புதிய கிரியையைத் தொடங்கினபோது சட்டங்களையும் விதிகளையும் பின்பற்றின, மற்றும் போதனைகளை மட்டும் பின்பற்றின, ஆனால் தேவனுக்குப் பயப்படாத ஜனங்கள், தேவனுடைய பழைய கிரியைகளைப் பயன்படுத்தி அவருடைய புதிய கிரியையை நிந்திக்க முற்பட்டனர். இந்த ஜனங்களுக்கு, இது அச்சுறுத்தும் செய்தியாயிருந்தது. ஆனால் குற்றமற்ற, வெளிப்படையான, தேவனுக்கு உண்மையாய் இருக்கும், அவருடைய மீட்பைப் பெற விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் தேவனுடைய முதல் மனுஷரூபமெடுத்தல் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாயிருந்தது. ஏனென்றால், மனிதர்கள் முதன்முதலில் உருவானதிலிருந்து, ஆவி அல்லாத ஒரு வடிவத்தில் தேவன் மனிதர்களிடையே தோன்றி வாழ்ந்தது இதுவே முதன்முறையாகும்; இம்முறை, அவர் மனிதனிடத்தில் பிறந்து, மனிதர்கள் மத்தியில் மனுஷகுமாரனாய் வாழ்ந்து, அவர்கள் நடுவில் கிரியை செய்தார். இந்த “முதல்முறை” என்பது ஜனங்களுடைய கருத்துக்களை உடைத்துப் போட்டது; எல்லா கற்பனைக்கும் அது அப்பாற்பட்டிருந்தது. மேலும், தேவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் உண்மையான பலனைப் பெற்றனர். தேவன் பழைய காலத்தை மட்டும் முடிவுக்குக் கொண்டுவராமல் அவர் தன்னுடைய பழைய கிரியை செய்யும் முறைகளையும், கிரியை செய்யும் பாணியையும் கூட முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர் அதன்பிறகு தூதுவர்களிடம் தம்முடைய சித்தத்தைத் தெரிவிக்கும்படி கேட்கவில்லை, அதன்பிறகு மேகங்களில் மறைந்திருக்கவோ, மனிதர்களிடம் அதிகாரத்துடன் இடியின் மூலமாக தோன்றவோ, பேசவோ இல்லை. முன்பிருந்த எதையும் போலல்லாமல், மனிதர்கள் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ கடினமாக இருந்த, கற்பனை செய்து பார்த்திராத, அவர் மாம்சமாகின முறையின் மூலம், அவர் அந்தக் காலத்தின் கிரியையைத் தொடங்கும்பொருட்டு மனுஷகுமாரனானார். தேவனுடைய இந்தச் செயல் மனுக்குலத்தைத் ஆயத்தமில்லாத நிலையில் பிடித்தது. இது அவர்களைத் தடுமாறச் செய்தது, ஏனென்றால் முன்னெப்போதும் செய்யாத புதிய கிரியையைத் தேவன் மீண்டும் தொடங்கினார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 65

இயேசு ஓய்வுநாளில் உண்பதற்காகக் கதிர்களைக் கொய்கிறார்

மத். 12:1  அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.

மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்

மத். 12:6-8  தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.

இந்தப் பத்தியை முதலில் பார்ப்போம்: “அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.”

இந்தப் பத்தியை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்? தேவனுடைய மனநிலையோடு இதற்கு என்ன தொடர்பிருக்கிறது? இந்த உரையில், நாம் அறிகிற முதல் காரியம், அது ஓய்வுநாளாய் இருந்தது, ஆனால் கர்த்தராகிய இயேசு வெளியே சென்று, தன்னுடைய சீடர்களைப் பயிர்வயல்களின் வழியே அழைத்துச் சென்றார் என்பதாகும். இன்னும் “நம்ப முடியாதது” என்னவென்றால், அவர்கள் “கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்” என்பதே. நியாயப்பிரமாணக் காலத்தில், ஓய்வுநாளில் ஜனங்கள் சாதாரணமாக வெளியே செல்லவோ அல்லது காரியங்களில் ஈடுபடவோ முடியாது என்று யேகோவா தேவனின் நியாயப்பிரமாணம் விதித்திருந்தது, ஓய்வுநாளில் செய்யப்படக்கூடாத பல விஷயங்கள் இருந்தன. கர்த்தராகிய இயேசுவின் இந்த நடவடிக்கை நீண்டகாலமாக நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவர்களுக்கு குழப்பமாக இருந்தது, அது விமர்சனத்தையும் தூண்டிவிட்டது. அவர்களுடைய குழப்பம் மற்றும் இயேசு செய்ததைப் பற்றி அவர்கள் எப்படிப் பேசினார்கள் என்பதைப் பொறுத்தவரையில், அதை நாம் இப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, கர்த்தராகிய இயேசு இதைச் செய்ய எல்லா நாட்களிலுமிருந்து ஏன் ஓய்வுநாளைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும், இந்தச் செயல்பாட்டின் மூலம் அவர் நியாயப்பிரமாணத்தின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு என்ன சொல்ல விரும்பினார் என்பதையும் நாம் முதலில் கலந்தாலோசிப்போம். இந்தப் பத்திக்கும் தேவனுடைய மனநிலைக்கும் இடையேயான தொடர்பைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.

கர்த்தராகிய இயேசு வந்தபோது, தேவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தை விட்டு புறப்பட்டுவிட்டார் என்றும், புதிய கிரியையைத் தொடங்கி விட்டார் என்றும், இந்தப் புதிய கிரியைக்கு ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது அவசியம் இல்லை என்றும் தனது நடைமுறை செயல்பாடுகளைப் பயன்படுத்தி ஜனங்களுக்குச் சொன்னார். தேவன் ஓய்வுநாளின் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியே வருவது அவருடைய புதிய கிரியையின் ஓர் அறிகுறி தானேயொழிய, உண்மையான மற்றும் பெரிதான கிரியை இன்னும் நிகழவில்லை. கர்த்தராகிய இயேசு தம்முடைய கிரியையைத் தொடங்கினபோது, அவர் ஏற்கனவே நியாயப்பிரமாண காலத்தின் “கட்டுகளை” விட்டுவிலகி, அந்த காலத்தின் விதிமுறைகளையும் கொள்கைகளையும் கடந்து வந்திருந்தார். நியாயப்பிரமாணம் தொடர்பான சுவடு கூட அவரில் இருக்கவில்லை. அவர் அதை முற்றிலுமாக ஒதுக்கி விட்டிருந்தார், அவர் அதை முன்போல இனி ஆசரிக்கவில்லை, இனி மனிதகுலமும் அதை ஆசரிக்க வேண்டுமென்பது அவருக்கு இல்லை. ஆகவே, இங்கே கர்த்தராகிய இயேசு ஓய்வுநாளில் பயிர்களின் வழியாகச் சென்றதையும், அவர் ஓய்ந்திருக்கவில்லை என்பதையும் நீ பார்க்கிறாய். அவர் ஓய்ந்திராமல், வெளியே கிரியை செய்துகொண்டிருந்தார். அவருடைய இந்தச் செயலானது ஜனங்களின் கருத்துக்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது, மேலும் அது, அவர் இனிமேல் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழவில்லை என்பதையும், அவர் ஓய்வுநாளின் கட்டுப்பாடுகளை விட்டுவிலகி, மனுக்குலத்திற்கு முன்பாகவும், அவர்கள் மத்தியிலும் கிரியை செய்யும் புதிய நடைமுறையில், புதிய சாயலில் தோன்றியிருக்கிறார் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்தது. அவருடைய இந்தச் செயலானது, நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்ததிலிருந்து வெளியேறி, ஓய்வுநாளை விட்டு விலகுவதில் இருந்து தொடங்கும் புதிய கிரியையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை ஜனங்களுக்குச் சொன்னது. தேவன் தம்முடைய புதிய கிரியையை நிறைவேற்றின போது, அவர் அதற்குப் பிறகு கடந்த காலத்தைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை, நியாயப்பிரமாண காலத்தின் விதிமுறைகளைப் பற்றி அவர் அதற்கு மேல் கவலைப்படவில்லை. முந்தைய காலத்தில் அவர் செய்த கிரியையினால் அவர் பாதிக்கப்படவில்லை, ஆனால் மாறாக, அவர் மற்ற ஒவ்வொரு நாளும் செய்ததைப் போலவே ஓய்வுநாளிலும் வேலை செய்தார், அவருடைய சீஷர்கள் ஓய்வுநாளில் பசியாய் இருந்தபோது, அவர்கள் பயிர்களைக் கொய்து சாப்பிட்டனர். தேவனுடைய பார்வையில் இவையெல்லாம் மிகவும் சாதாரணமாகவே இருந்தது. தேவனைப் பொறுத்தவரை, அவர் செய்ய விரும்பும் மிகுதியான புதிய கிரியைக்கும், அவர் சொல்ல விரும்பும் புதிய வார்த்தைகளுக்கும், ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருப்பது ஏற்புடையதே. அவர் புதியதாக ஒன்றைத் தொடங்கும்போது, அவர் தனது முந்தைய கிரியையைக் குறிப்பிடுவதுமில்லை, செய்து முடிக்கும்படி அதைத் தொடர்வதுமில்லை. ஏனென்றால் தேவனுக்கு அவருடைய கிரியையில் அவருடைய கொள்கைகள் இருக்கிறது. அவர் எப்போது மனுக்குலத்தை அவருடைய கிரியையின் புதிய கட்டத்திற்குள் கொண்டுவர விரும்புகிறாரோ, எப்போது அவருடைய கிரியை ஒரு உயர்ந்த கட்டத்திற்குள் நுழையுமோ, அப்போது அவர் தன்னுடைய புதிய கிரியையைத் தொடங்க விரும்புகிறார். ஜனங்கள் பழைய பழமொழிகளின்படி அல்லது விதிமுறைகளின்படி தொடர்ந்து செயல்பட்டால் அல்லது அவற்றைத் தொடர்ந்து பிடித்துக்கொண்டால், அவர் அதை நினைவில் கொள்ளவோ, அங்கீகரிக்கவோ மாட்டார். ஏனென்றால் அவர் ஏற்கனவே புதிய கிரியைகளைக் கொண்டுவந்திருக்கிறார், மேலும் அவர் தன்னுடைய கிரியையின் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் புதிய கிரியையைத் தொடங்கும்போது, முற்றிலும் புதிய சாயலில், முற்றிலும் புதிய கோணத்திலிருந்து, முற்றிலும் புதிய வழியில் ஜனங்களுக்குத் தோன்றுகிறார். இதனால் ஜனங்கள் அவருடைய மனநிலையின் வெவ்வேறு அம்சங்களையும், அவரிடம் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் காணலாம். இது அவருடைய புதிய கிரியையில் அவரது குறிக்கோள்களில் ஒன்றாகும். தேவன் பழைய காரியங்களுடன் ஒட்டிக்கொள்வதில்லை அல்லது பலரும் பயன்படுத்தின பாதையில் நடப்பதில்லை. அவர் கிரியை செய்யும்போதும், பேசும்போதும், ஜனங்கள் கற்பனை செய்யும் அளவிற்குக் கட்டுப்பாடாய் இருப்பதில்லை. தேவனில், அனைத்தும் சுதந்திரமானவை, விடுவிக்கப்பட்டவை, அதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, தடைகளும் இல்லை, அவர் மனுக்குலத்திற்கு அளிப்பது சுதந்திரமும் விடுதலையும் ஆகும். அவர் ஒரு ஜீவனுள்ள தேவன், அவர் உண்மையாகவே, மெய்யாகவே இருக்கிற தேவன். அவர் ஒரு கைப்பொம்மையோ, களிமண் உருவமோ அல்ல, ஜனங்கள் புனிதமெனப் பாதுகாக்கும், ஆராதிக்கும் விக்கிரகங்களிலிருந்து அவர் முற்றிலும் வேறுபட்டவர். அவர் ஜீவனுள்ளவர், உயிர்த்துடிப்பு உள்ளவர். மேலும் அவருடைய வார்த்தைகளும், கிரியையும் மனுக்குலத்திற்கு ஜீவனையும் வெளிச்சத்தையும், எல்லா சுதந்திரத்தையும், விடுதலையையும் கொண்டுவரும், ஏனென்றால் அவர் சத்தியத்தையும், ஜீவனையும், வழியையும் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய எந்தக் கிரியையிலும், எந்தக் காரியத்தாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஜனங்கள் என்ன சொன்னாலும், அவருடைய புதிய கிரியையை அவர்கள் எப்படிப் பார்த்தாலும் அல்லது மதிப்பிட்டாலும், அவர் எந்த ஒரு தடுமாற்றமுமின்றி தனது கிரியையைச் செய்து முடிப்பார். அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளைப் பொறுத்தவரை, யாருடைய கருத்துகளைப் பற்றியோ, குறைகூறுதலைப் பற்றியோ, அல்லது அவருடைய புதிய கிரியைக்கு எதிரான அவர்களுடைய கடுமையான எதிர்ப்பையோ தடைகளையோ பற்றிக்கூட அவர் கவலைப்பட மாட்டார். தேவன் செய்கிறதை அளவிடவோ அல்லது வரையறுக்கவோ, அவருடைய கிரியையை இழிவுபடுத்தவோ, தடுத்து நிறுத்தவோ, அல்லது நாசப்படுத்தவோ, அனைத்து சிருஷ்டிகளிலும் எந்த ஒருவராலும் மனிதனுடைய பகுத்தறிவையோ அல்லது மனிதனுடைய கற்பனையையோ, அறிவையோ அல்லது அறநெறியையோ பயன்படுத்த முடியாது. அவருடைய கிரியையிலும், அவர் செய்வதிலும் எந்தத் தடையும் இல்லை. அது எந்த ஒரு மனிதனாலும், நிகழ்வினாலும், காரியத்தினாலும், கட்டுப்படுத்தப்படவுமாட்டாது, எந்தவொரு விரோதமான வல்லமைகளாலும் தடுத்து நிறுத்தப்படவுமாட்டாது. அவருடைய புதிய கிரியையைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் ஜெயம்பெறும் ராஜா, எந்த ஒரு விரோதமான வல்லமைகளும், மனுக்குலத்தின் அனைத்து மாறுபட்ட மதக்கருத்துக்களும், மூடநம்பிக்கைகளும் அவருடைய பாதப்படியின்கீழ் நசுக்கப்படுகின்றன. அவருடைய எந்தப் புதிய கட்டக் கிரியையை அவர் செய்கிறார் என்பது முக்கியமல்ல, அது நிச்சயமாக மனுக்குலத்தின் மத்தியில் வளர்ச்சியுற்று, விரிவாக்கப்படும், மேலும் அவருடைய பெரிதான கிரியை நிறைவடையும் வரையிலும், அது நிச்சயமாக முழு பிரபஞ்சத்திலும் தடையின்றிச் செய்யப்படும். இது தேவனுடைய சர்வவல்லமையும் ஞானமும், அவருடைய அதிகாரமும் வல்லமையும் ஆகும். ஆகவே கர்த்தராகிய இயேசு வெளிப்படையாக வெளியே சென்று ஓய்வுநாளில் கிரியை செய்ய முடியும், ஏனென்றால் அவருடைய இருதயத்தில் மனுக்குலத்திலிருந்து தோன்றிய விதிகளோ, அறிவோ அல்லது போதனைகளோ இருக்கவில்லை. அவரிடத்தில் இருந்தது தேவனுடைய புதிய கிரியை மற்றும் தேவனுடைய வழியாகும். அவருடைய கிரியையானது மனுக்குலத்தை விடுவிப்பதற்கும், ஜனங்களை விடுதலையாக்குவதற்கும், அவர்களை வெளிச்சத்தில் இருக்க அனுமதிப்பதற்கும், வாழ்வதற்கும் வழியாயிருந்தது. இதற்கிடையில் விக்கிரகங்களை அல்லது பொய்யான தெய்வங்களை வணங்குபவர்கள் ஒவ்வொரு நாளும் சாத்தானால் கட்டப்பட்டு, எல்லா வகையான நியதிகளாலும், தடைகளினாலும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், இன்று ஒரு விஷயம் தடை செய்யப்படும், நாளை இன்னொன்று தடைபடும், அவர்களுடைய வாழ்க்கையில் விடுதலை இருப்பதில்லை. அவர்கள் விலங்கிடப்பட்ட கைதிகளைப் போன்று, சொல்லப்படும் அளவிற்கு எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் வாழ்கிறார்கள். “தடை” எதைக் குறிக்கிறது? அது கட்டுப்பாடுகள், கட்டுகள் மற்றும் தீமையைக் குறிக்கிறது. ஒரு நபர் விக்கிரகத்தை வணங்கியவுடனே, அவர் ஒரு பொய்யான தேவனை, ஓர் அசுத்த ஆவியை வணங்குகிறார். இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது தடை வருகிறது. நீ இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக்கூடாது, இன்றைக்கு நீ வெளியே போக முடியாது, நாளைக்கு நீ சமைக்கக் கூடாது, அடுத்த நாள் நீ ஒரு புது வீட்டிற்குக் குடிபோகக் கூடாது, திருமணங்களுக்கும் இறுதிச்சடங்குகளுக்கும், ஏன் குழந்தை பிறப்புக்கும் கூட சில நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது என்னவென்று அழைக்கப்படுகிறது? இதுதான் தடை; இது மனுக்குலத்தின் அடிமைத்தனம், மேலும் இது ஜனங்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் அவர்களுடைய இருதயங்களை, சரீரங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தானுடைய மற்றும் அசுத்த ஆவிகளுடைய கட்டுகளாகும். இப்படிப்பட்ட தடைகள் தேவனிடம் இருக்கின்றனவா? தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி பேசும் போது, முதலாவது நீ இதைக் குறித்து சிந்திக்க வேண்டும்: தேவனிடத்தில் எந்தத் தடைகளும் இல்லை. தேவன் தம்முடைய வார்த்தைகளிலும் கிரியையிலும் கொள்கைகளைக் கொண்டு இருக்கிறார், ஆனால் அதில் தடைகள் எதுவும் இல்லை, ஏனென்றால் தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 66

“தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்” (மத்.12:6-8). “தேவாலயம்” என்ற சொல் இங்கே எதைக் குறிக்கிறது? எளிமையாகச் சொல்வதானால், அது ஓர் அற்புதமான, உயரமான கட்டிடத்தைக் குறிக்கிறது, மேலும் நியாயப்பிரமாண காலத்தில் தேவனை ஆராதிக்க ஆசாரியர்களுக்கான ஓர்இடமாக அது இருந்தது. கர்த்தராகிய இயேசு “தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார்,” என்று சொன்னபோது, “பெரியவர்” என்று யாரைக் குறிப்பிட்டார்? மாம்சத்தில் இருந்த கர்த்தராகிய இயேசுவையே “பெரியவர்” என்று குறிப்பிடுவது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால் அவர் மட்டுமே ஆலயத்தை விட பெரியவர். அந்த வார்த்தைகள் ஜனங்களுக்கு என்ன சொன்னது? அவை ஜனங்களை ஆலயத்தை விட்டு வெளியே வரவும், தேவன் ஏற்கனவே ஆலயத்தை விட்டு வெளியேறி விட்டார், இனி அதில் கிரியை செய்வதில்லை, எனவே ஜனங்கள் தேவனுடைய அடிச்சுவடுகளை ஆலயத்திற்கு வெளியே தேட வேண்டும், அவருடைய புதிய கிரியையில் அவருடைய அடிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சொன்னது. கர்த்தராகிய இயேசு இதைச் சொன்னபோது, அவருடைய வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது. அது என்னவென்றால், நியாயப்பிரமாணத்தின் கீழ், ஜனங்கள் தேவனைக் காட்டிலும் ஆலயத்தைப் பெரியதாகக் கருதி பார்க்க வந்தார்கள். அதாவது, ஜனங்கள் தேவனை ஆராதிக்காமல் ஆலயத்தை ஆராதித்தனர், அதனால் கர்த்தராகிய இயேசு விக்கிரகங்களை வணங்காமல், மாறாக, தேவன் மிகவும் உயர்ந்தவராய் இருப்பதினால் அவரை வணங்க வேண்டும் என்று அவர்களை எச்சரித்தார். எனவே, அவர், “பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்.” என்று சொன்னார். கர்த்தராகிய இயேசுவின் பார்வையில் நியாயப்பிரமாணத்தின்கீழ் வாழும் பெரும்பாலான ஜனங்கள் முன்போல இனி யேகோவாவை வணங்காமல், பலியிடுவதற்கான முறைகளை மட்டுமே செய்து வந்தார்கள் என்பது தெளிவாயிருந்தது, மேலும் கர்த்தராகிய இயேசு இதை உருவாக்கப்பட்ட விக்கிரக ஆராதனை எனத் தீர்மானித்தார். இந்த விக்கிரக ஆராதனையாளர்கள் தேவனை விட தேவாலயத்தைப் பெரியதாகவும், உயர்ந்ததாகவும் பார்த்தார்கள். அவர்களுடைய இருதயங்களில் தேவாலயம் மட்டுமே இருந்தது, தேவன் இல்லை. மேலும் அவர்கள் தேவாலயத்தை இழக்க நேர்ந்தால், அவர்கள் தங்குமிடத்தையும் இழப்பார்கள். தேவாலயம் இல்லையென்றால் அவர்களால் எவ்விடத்திலும் ஆராதிக்க முடியாது, அவர்களுடைய பலிகளையும் செலுத்த முடியாது. அவர்கள் “தங்குமிடம்” என்று அழைக்கப்படுவது என்னவென்றால், அவர்கள் தேவாலயத்தில் தங்கி, தங்கள் சொந்தக் காரியங்களை நிறைவேற்றுவதற்காக, யேகோவா தேவனை ஆராதிப்பதைப் போன்ற ஒரு போலியான பாசாங்கைப் பயன்படுத்தினதுதான். அவர்களுடைய “பலியிடுதல்” என்று அழைக்கப்படுவது என்னவென்றால், தங்களுடைய ஆராதனையை தேவாலயத்தில் நடத்துகிறோம் என்ற போர்வையில் அவர்கள் தங்கள் சொந்த, வெட்கக்கேடான காரியங்களை மேற்கொண்டது தான். அந்தக் காலத்தில் இருந்த ஜனங்கள் தேவனை விட தேவாலயத்தைப் பெரியதாக பார்த்த காரணம் இதுதான். கர்த்தராகிய இயேசு இந்த வார்த்தைகளை ஜனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பேசினார், ஏனென்றால் அவர்கள் ஆலயத்தை ஒரு முகப்பாகப் பயன்படுத்தி, பலிகளை ஜனங்களையும் தேவனையும் ஏமாற்றும் ஒரு உறையாகப் பயன்படுத்தினார்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் நிகழ்காலத்திற்குப் பயன்படுத்தினால், அவை இன்னும் சரியானதாகவும் மற்றும் பொருத்தமானவையாகவே இருக்கும். நியாயப்பிராமண காலத்து ஜனங்களை விட இன்றைய ஜனங்கள் தேவனுடைய வித்தியாசமான கிரியையை அனுபவித்திருந்தாலும், அவர்களுடைய சுபாவத்தின் சாராம்சம் ஒன்றே. இன்றைய கிரியையின் சூழலில், “தேவனை விட தேவாலயம் பெரியது” என்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும் அதே வகையான காரியங்களை ஜனங்கள் இன்னும் செய்வார்கள். உதாரணமாக, ஜனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவதைத் தங்கள் வேலையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் தேவனுக்கு சாட்சியாக இருப்பதையும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை எதிர்த்து யுத்தம் பண்ணுவதையும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரசியல் இயக்கங்களாகப் பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் திறமைகளைத் தொழிலாக பயன்படுத்தத்தக்கதாய், தங்கள் கடமைகளை மாற்றுகின்றனர், ஆனால் அவர்கள் தேவனுக்குப் பயப்படுவதையும், பொல்லாப்பை விட்டு விலகுவதையும் ஆசரிக்கும்படியான மதபோதகத்தின் ஒரு பகுதியே தவிர வேறொன்றுமில்லை என்று கருதுகிறார்கள்; இன்னும் பல உள்ளன. “தேவாலயம் தேவனை விடப் பெரியது” என்பதைப் போலவே இந்த நடத்தைகளும் அடிப்படையில் இருக்கின்றன அல்லவா? வித்தியாசம் என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஜனங்கள் தங்கள் தனிப்பட்ட தொழில்களைத் கட்டடமான தேவாலயத்தில் செய்துகொண்டிருந்தனர், ஆனால் இன்று, ஜனங்கள் தங்கள் தனிப்பட்டத் தொழில்களைத் தொட்டுணர முடியாத தேவாலயங்களில் செய்கின்றனர். விதிகளை மதிக்கும் நபர்கள் தேவனை விட விதிகளைப் பெரியதாகப் பார்க்கிறார்கள், அந்தஸ்தை நேசிக்கும் ஜனங்கள் தேவனை விட அந்தஸ்தைப் பெரியதாக பார்க்கிறார்கள், தங்கள் தொழிலை நேசிப்பவர்கள் தேவனை விட த் தொழிலைப் பெரியதாகப் பார்க்கிறார்கள், இன்னும் பல உள்ளன, அவர்களுடைய வெளிப்பாடுகள் அனைத்தும் இதைச் சொல்வதற்கு என்னை வழிவகுக்கின்றன: “ஜனங்கள் தேவனைத் தங்கள் வார்த்தைகளில் மிகவும் பெரியவராகப் போற்றுகிறார்கள், ஆனால் அவர்களுடைய கண்களில் ஒவ்வொரு பொருளும் தேவனை விடப் பெரியதாக இருக்கிறது.” ஏனென்றால், ஜனங்கள் தேவனைப் பின்தொடரும் பாதையில், தங்கள் சொந்தத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு அல்லது தங்கள் சொந்தத் தொழிலைச் செய்வதற்கு ஒரு வாய்ப்பைக் கண்டவுடன், அவர்கள் தேவனிடமிருந்து தங்களைத் தூர விலக்கி, தங்களைத் தங்கள் விருப்பத்திற்குரிய தொழிலில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தேவன் அவர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்ததையும், அவருடைய சித்தத்தையும் பொறுத்தவரையில், அந்த காரியங்கள் நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஜனங்களின் நிலைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவாலயத்தில் சொந்தமாகத் தொழில் நடத்தியவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 67

“மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்” என்ற வாக்கியம் ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய அனைத்தும் பொருள் இயல்புடையது அல்ல என்று சொல்கிறது, மேலும் உங்களின் பொருள் தேவைகள் அனைத்தையும் தேவனால் வழங்க முடியும் என்றாலும், உங்கள் பொருள் தேவைகள் சந்திக்கப்பட்டவுடன், இந்தக் காரியங்களில் இருந்து வரும் திருப்தியானது நீங்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதை மாற்றீடு செய்ய முடியுமா? தெளிவாக அது சாத்தியமில்லை! நாம் கலந்தாலோசித்த தேவனுடைய மனநிலையும், அவரிடத்தில் உள்ளவைகளும் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்கிற இரண்டுமே சத்தியமாகும். அதன் மதிப்பை எந்த ஓர் இயற்பொருளோடும் அளவிட முடியாது, அது எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் அதன் மதிப்பைப் பணத்தின் அடிப்படையிலும் அளவிட முடியாது, ஏனென்றால் அது ஓர் இயற்பொருள் அல்ல, மேலும் அது ஒவ்வொரு நபரின் இருதயத்தின் தேவைகளையும் சந்திக்கிறது. ஒவ்வொரு நபருக்கும், இந்த உணர்ந்தறிய இயலாத சத்தியங்களின் மதிப்பு நீ மதிப்பிடக்கூடிய எந்த ஒரு பொருளின் மதிப்பை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் இல்லையா? இந்த அறிக்கை நீங்கள் நீடித்து யோசிக்க வேண்டிய ஒன்றாகும். நான் கூறினவற்றின் முக்கிய குறிப்பு என்னவென்றால், தேவனிடம் உள்ளவைகளும் அவர் யாராக இருக்கிறார் என்பதும் மற்றும் தேவனைப் பற்றிய அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் மிக முக்கியமான காரியங்களாகும், மேலும் அவை இயற்கை பொருட்களால் ஈடுசெய்ய முடியாது என்பதேயாகும். நான் உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன்: நீ பசியாயிருக்கும்போது, உனக்கு உணவு தேவை. இந்த உணவானது ஓரளவுக்கு நன்றாகவும், ஓரளவுக்கு திருப்தியற்றதாகவும் இருக்கலாம், ஆனால் வயிறு நிறைந்தவுடன், பசியுடன் இருப்பதான அந்த மோசமான உணர்வு அதன் பின்பு இருக்காது, அது இல்லாமல் போயிருக்கும். நீ நிம்மதியாக உட்காரலாம், உன் உடல் இளைப்பாறும். ஜனங்களுடைய பசியை உணவின் மூலம் தீர்க்க முடியும், ஆனால் நீ தேவனைப் பின்தொடரும் போது அவரைப் பற்றின புரிதல் உனக்கு இல்லை என்று உணர்ந்தால், உன் இருதயத்தில் உள்ள வெறுமையை உன்னால் எப்படித் தீர்க்க முடியும்? உணவைக் கொண்டு அதைத் தீர்க்க முடியுமா? அல்லது நீ தேவனைப் பின்பற்றுகையில் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாத போது, உன் இருதயத்தில் உள்ள அந்தப் பசியை எதைக்கொண்டு ஆற்றுவாய்? தேவன் மூலமாக பெற்ற உன்னுடைய இரட்சிப்பினுடைய அனுபவத்தின் நடைமுறையில், உன் மனநிலையில் ஒரு மாற்றத்தைத் தொடரும்போது, அவருடைய சித்தத்தை நீ புரிந்துகொள்ளாவிட்டால் அல்லது சத்தியம் என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்ளாவிட்டால் நீ மிகவும் அசௌகரியமாக உணர்வாயல்லவா? உன்னுடைய இருதயத்தில் ஒரு வலுவான பசியையும் தாகத்தையும் நீ உணர்வாய் அல்லவா? இந்த உணர்வுகள் உன் இருதயத்தில் இளைப்பாறுதலாக உணர்வதைத் தடைசெய்யும் அல்லவா? அப்படியானால் உன் இருதயத்தில் உள்ள அந்தப் பசியை நீ எவ்வாறு ஆற்றுவாய், அதைத் தீர்க்க ஒரு வழி இருக்கிறதா? சிலர் கடைக்குச் செல்கிறார்கள், சிலர் இரகசியங்களைப் பேச தங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தேடுகிறார்கள், சிலர் நீண்ட நேரம் தூங்குகிறார்கள், சிலர் தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகப் படிக்கிறார்கள் அல்லது அவர்கள் கடினமாக உழைத்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற அதிகப் பிரயாசங்களைச் செலவழிக்கிறார்கள். இந்த விஷயங்கள் உன்னுடைய உண்மையான சிக்கல்களைத் தீர்க்க முடியுமா? நீங்கள் அனைவரும் இந்த வகையான வழக்கங்களை முழுமையாகப் புரிந்து கொள்கிறீர்கள். நீ பலமற்று உணரும்போது, சத்தியத்தின் மற்றும் அவருடைய சித்தத்தின் உண்மை நிலையை அறிந்துகொள்ள உன்னை அனுமதிக்கும்படி தேவனிடத்திலிருந்து தெளிவைப் பெறவேண்டும் என்ற வலுவான விருப்பத்தை நீ உணரும் போது உனக்கு அதிகமாய் எது தேவைப்படுகிறது? உனக்குத் தேவைப்படுவது ஒரு முழு சாப்பாடு அல்ல, ஒரு சில அன்பான வார்த்தைகளும் அல்ல, மாம்சத்தின் நிலையற்ற ஆறுதலும் திருப்தியும் ஒருபுறமிருக்கட்டும், உனக்குத் தேவையானது என்னவென்றால், தேவன் நீ என்ன செய்ய வேண்டும் என்று உன்னிடம் நேரடியாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும், சத்தியம் என்ன என்பதை உனக்குத் தெளிவாகக் கூற வேண்டும் என்பதே. நீ இதைப் புரிந்து கொண்ட பிறகு, நீ ஒரு சிறிய புரிதலை மட்டுமே பெற்றிருந்தாலும்கூட, ஒரு நல்ல உணவைச் சாப்பிட்டதை விட அதிகத் திருப்தியை உன் இருதயத்தில் உணர்வாய் அல்லவா? உன்னுடைய இருதயம் திருப்தியடையும் போது, உன்னுடைய இருதயமும் உன்னுடைய முழுமையும் உண்மையான இளைப்பாறுதலைப் பெறுமல்லவா? இந்த மேற்கோள் மற்றும் பகுப்பாய்வின் மூலம் “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்” என்ற இந்த வாக்கியத்தை உங்களுடன் நான் ஏன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? அதன் பொருள் என்னவென்றால், தேவனிடமிருந்து வருவது, அவரிடம் உள்ளவைகள், அவர் யாராக இருக்கிறார், அவரைப் பற்றிய அனைத்தும், மற்ற எந்த விஷயத்தை விடவும், அதோடுகூட, ஒரு காலத்தில் நீங்கள் நம்பியிருந்த, மிகவும் மதித்த பொருளை அல்லது நபரை விடவும் பெரியதாகும். அதாவது, ஒரு நபர் தேவனுடைய வாயிலிருந்து வார்த்தைகளைப் பெற முடியாவிட்டால் அல்லது அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லையென்றால் அவர்கள் இளைப்பாறுதலைப் பெற முடியாது. உங்களின் எதிர்கால அனுபவங்களில், இன்று இந்தப் பத்தியை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் ஏன் விரும்புகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள், இது மிகவும் முக்கியமானது. தேவன் செய்யும் அனைத்தும் சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறது. சத்தியம் என்பது ஜனங்கள் தங்கள் ஜீவிதங்களில் குறைவற்று இருக்கக்கூடாத ஒன்றும் மேலும் அது இல்லாமல் ஒருபோதும் அவர்களால் சமாளிக்க முடியாத ஒன்றுமாகும். அது மிகப்பெரிய விஷயம் என்றும் நீங்கள் சொல்லலாம். நீங்கள் அதைப் பார்க்கவோ அல்லது தொடவோ முடியாது என்றாலும், உங்களுக்கான அதன் முக்கியத்துவம் புறக்கணிக்க முடியாததாகும்; உங்கள் இருதயத்திற்கு இளைப்பாறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் அது தான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 68

சத்தியத்தைப் பற்றிய உங்களுடைய புரிதல் உங்கள் சொந்த நிலைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதா? நிஜ வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த ஜனங்களுடன், நிகழ்வுகளுடன், விஷயங்களுடன் எந்தச் சத்தியங்கள் தொடர்புடையவை என்பதைக் குறித்து நீங்கள் முதலாவது சிந்திக்க வேண்டும். இந்தச் சத்தியங்களில்தான் நீ தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடித்து, நீ சந்தித்ததை அவருடைய சித்தத்துடன் தொடர்புபடுத்த முடியும். நீ சந்தித்தவைகளுடன் சத்தியத்தின் எந்த அம்சங்கள் தொடர்புடையதாய் இருக்கின்றன என்பது உனக்குத் தெரியாத போது, அதற்குப் பதிலாக தேவனுடைய சித்தத்தை நேரடியாக அணுகினால், இது முடிவுகளைத் தரக்கூடாத ஒரு குருட்டுத்தனமான அணுகுமுறையாகும். நீ சத்தியத்தைத் தேடி தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால், முதலில் உனக்கு என்ன மாதிரியான விஷயங்கள் நிகழ்ந்தன, சத்தியத்தின் எந்த அம்சங்கள் அதனோடு தொடர்புடையவை என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும் மற்றும் நீ அனுபவித்தவைகளுடன் தொடர்புடைய தேவனுடைய வார்த்தையில் உள்ள குறிப்பிட்ட சத்தியத்தைத் தேட வேண்டும். அதன்பின்பு நீ அந்த சத்தியத்தில் உனக்கு ஏற்ற நடைமுறைப் பாதையைத் தேடு; இவ்வழியில் நீ தேவனுடைய சித்தத்தை மறைமுகமாகப் புரிந்து கொள்ள முடியும். சத்தியத்தைத் தேடுவதும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் ஒரு போதனையையோ இயந்திரத்தனமாக உபயோகிப்பதோ அல்லது ஒரு சூத்திரத்தைப் பின்பற்றுவதோ அல்ல. சத்தியம் சூத்திரமானது அல்ல, அது ஒரு சட்டமும் அல்ல. அது உயிரற்றதல்ல, அதுவே ஜீவனானது, அது ஒரு ஜீவனுள்ள விஷயம், மேலும் அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதும், மனிதன் தன் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டியதுமான ஒரு கட்டளையாகும். இது நீ முடிந்தவரை அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். நீ உன் அனுபவத்தில் எந்த நிலைக்கு வந்திருந்தாலும், தேவனுடைய வார்த்தையில் இருந்தோ அல்லது சத்தியத்தில் இருந்தோ உன்னைப் பிரிக்க முடியாது, மேலும் தேவனுடைய மனநிலையைப் பற்றி நீ புரிந்து கொள்வதும், தேவனிடத்தில் உள்ளவைகளையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் பற்றி உனக்கு தெரிந்தவைகளெல்லாம் தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகள் சத்தியத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தேவனுடைய மனநிலையும், அவரிடம் உள்ளவைகளும், அவர் யாராக இருக்கிறார் என்பதே சத்தியமாகும்; சத்தியம் என்பது தேவனுடைய மனநிலை, அவரிடம் உள்ளவைகள் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் அதிகாரப்பூர்வமான வெளிப்பாடாகும். அது அவரிடம் உள்ளவைகளையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் வலுவாக்குகிறது, மேலும் அவரிடம் உள்ளவைகளையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் குறித்த ஒரு தெளிவான அறிக்கையை உருவாக்குகிறது. அது தேவன் எதை விரும்புகிறார், எதை விரும்புவதில்லை, நீங்கள் எதைச் செய்ய அவர் விரும்புகிறார், அவர் உங்களைச் செய்ய அனுமதிக்காதது எது, எந்த ஜனங்களை அவர் வெறுக்கிறார், எந்த ஜனங்களை அவர் விரும்புகிறார் என்பதை மிக நேரடியாகக் கூறுகிறது. தேவன் வெளிப்படுத்தும் சத்தியங்களுக்குப் பின்னால் ஜனங்கள் அவருடைய இன்பம், கோபம், துக்கம், சந்தோஷம் ஆகியவற்றையும், அவருடைய சாராம்சத்தையும் கூட காணலாம், இதுவே அவருடைய மனநிலையின் வெளிப்பாடாகும். தேவனிடத்தில் உள்ளவையும், அவர் யாராக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதோடு, அவருடைய வார்த்தையிலிருந்து அவருடைய மனநிலையை அறிந்துகொள்வதோடு கூட, நடைமுறை அனுபவத்தின் மூலம் இந்தப் புரிதலை அடைய வேண்டியதின் அவசியம் மிக முக்கியமானதாகும். தேவனை அறிந்து கொள்வதற்காக ஒரு நபர் நிஜ வாழ்க்கையில் இருந்து தன்னை நீக்கிக் கொண்டால் அவரால் அதை அடைய முடியாது. தேவனுடைய வார்த்தையிலிருந்து சில புரிதல்களைப் பெறக்கூடிய நபர்கள் இருந்தாலும், அவர்களின் புரிதலானது கோட்பாடுகள் மற்றும் வார்த்தைகளுக்கு உட்பட்டுள்ளது, மேலும் அந்தப் புரிதலில் தேவன் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதில் ஏற்றத்தாழ்வு எழுகிறது.

நாம் இப்போது பரிமாறிக்கொள்வது அனைத்தும் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட கதைகளின் எல்லைக்குள் உள்ளது. இந்தக் கதைகளின் மூலமாகவும், நிகழ்ந்த இந்த விஷயங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமாகவும், அவர் வெளிப்படுத்தின மன நிலையையும், அவரிடம் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் ஜனங்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் இவைகள் தேவனுடைய ஒவ்வொரு அம்சத்தையும் இன்னும் பரந்த அளவிலும், இன்னும் ஆழமாகவும், இன்னும் விரிவாகவும், இன்னும் முழுமையாகவும் அறிந்து கொள்ள அவர்களை அனுமதிக்கிறது. அப்படியானால், தேவனுடைய ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்து கொள்வதற்கு இந்தக் கதைகள் மட்டுமே ஒரே வழியா? இல்லை, அது மட்டுமே ஒரே வழியல்ல! ஏனென்றால் தேவன் சொல்வதும், அவர் ராஜ்ஜியத்தின் காலத்தில் செய்த கிரியையுமானது அவருடைய மனநிலையை அறியவும், அதை முழுமையாக அறிந்து கொள்ளவும் ஜனங்களுக்குச் சிறந்த முறையில் உதவக்கூடும். இருப்பினும், ஜனங்கள் நன்றாக அறிந்திருக்கும் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட சில உதாரணங்கள் அல்லது கதைகள் மூலமாக தேவனுடைய மனநிலையை அறிந்து கொள்வதும், அவரிடத்தில் உள்ளவையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்வதும் சற்றுச் சுலபமாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் வார்த்தைகளையும் மற்றும் தேவன் இன்று வெளிப்படுத்துகிற சத்தியங்களையும் வார்த்தைக்கு வார்த்தையாக, அவரை இவ்வழியில் நீங்கள் புரிந்துகொள்வதற்காக நான் எடுத்தால், நீங்கள் அதை மிகவும் மந்தமானதாகவும் கடினமானதாகவும் உணர்வீர்கள், மேலும் சில ஜனங்கள் தேவனுடைய வார்த்தை சூத்திரமானதைப் போல உணர்வார்கள். ஆனால் தேவனுடைய மனநிலையை அறிய ஜனங்களுக்கு உதவும்படி இந்த வேதாகமக் கதைகளை நான் எடுத்துக்காட்டுகளாகச் சொன்னால், அது அவர்களுக்குச் சலிப்பாகத் தெரியாது. நீங்கள் இப்படிச் சொல்லலாம்—இந்த எடுத்துக்காட்டுகளை விளக்கும் பாதையில், தேவனுடைய இருதயத்தில் இருந்த அவருடைய உணர்வு நிலை அல்லது உள்ளுணர்வு அல்லது அவரது எண்ணங்கள் மற்றும் யோசனைகள் ஆகிய இந்த விவரங்கள் ஜனங்களுக்கு மனித மொழியில் சொல்லப்பட்டுள்ளன, மேலும் அவர்களை நன்றியுடன் இருக்க அனுமதிப்பதும், தேவனிடத்தில் உள்ளவைகளும், அவர் யாராய் இருக்கிறார் என்பதும் சூத்திரமானவை அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வைப்பதுமே இவை அனைத்தினுடைய குறிக்கோளாகும் என்று. இது ஒரு புராணக்கதை அல்ல, அல்லது ஜனங்கள் பார்க்கவோ தொடவோ முடியாத ஒன்றுமல்ல. இது உண்மையிலேயே இருக்கிறதும் ஜனங்கள் உணரவும், புரிந்துகொள்ளவும் கூடியதுமான ஒன்றாகும். இதுவே இறுதி இலக்காகும். இந்த காலத்தில் வாழும் ஜனங்களெல்லாம் பாக்கியவான்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவர்கள் தேவனுடைய முந்தைய கிரியையின் விரிவான புரிதலைப் பெறுவதற்கு வேதாகமக் கதைகளைப் பயன்படுத்தலாம்; அவர் செய்த கிரியையின் மூலம் அவருடைய மனநிலையை அவர்கள் பார்க்கலாம். அவர் வெளிப்படுத்தின இந்த மனநிலைகளின் மூலம் அவர்கள் மனுக்குலத்திற்கான தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளலாம், அவருடைய பரிசுத்தத்தின் உறுதியான வெளிப்பாடுகளையும், மனிதர்களுக்கான அவருடைய அக்கறையையும் அவர்கள் புரிந்து கொள்ளலாம், மேலும் இந்த வழியில் அவர்கள் தேவனுடைய மனநிலையைப் பற்றிய மிக விரிவான மற்றும் ஆழமான அறிவை அடைய முடியும். நீங்கள் அனைவரும் இப்போது இதை உணர முடியும் என்று நான் நம்புகிறேன்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 69

கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் நிறைவு செய்த கிரியையின் எல்லைக்குள், தேவனிடத்தில் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் மற்றொரு அம்சத்தையும் நீ காணலாம். இந்த அம்சமானது அவருடைய மாம்சத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது, மேலும் அவருடைய மனிதத்தன்மையின் காரணமாக ஜனங்கள் அதை பார்க்கவும், புரிந்துகொள்ளவும் முடிந்தது. மாம்சத்தில் இருந்த தேவன் அவருடைய மனிதத்தன்மையில் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை ஜனங்கள் மனுஷகுமாரனில் கண்டார்கள், மேலும் தேவனுடைய தெய்வீகத்தன்மை மாம்சத்தில் வெளிப்பட்டதையும் அவர்கள் கண்டார்கள். இந்த இரண்டு வகையான வெளிப்பாடுகளும் ஒரு மிக உண்மையான தேவனைக் காண ஜனங்களை அனுமதித்தன, மேலும் அவை தேவனைப் பற்றிய வித்தியாசமான கருத்தை உருவாக்க ஜனங்களை அனுமதித்தன. இருப்பினும், உலகத்தைச் சிருஷ்டித்த காலத்திற்கும் நியாயப்பிரமாண காலத்தின் முடிவிற்கும் இடையிலான காலகட்டத்தில், அதாவது கிருபையின் காலத்திற்கு முன்பு, மனிதர்களால் காணப்பட்ட, கேட்கப்பட்ட, அனுபவிக்கப்பட்ட தேவனுடைய ஒரே அம்சங்கள் என்னவென்றால் தேவனுடைய தேவத்துவமும், பொருளில்லா உலகில் தேவன் செய்த, சொன்ன காரியங்களும், பார்க்க முடியாததும் தொட முடியாததுமான அவருடைய மெய்யான மனு உடலில் அவர் வெளிப்படுத்தின காரியங்களுமே ஆகும். பெரும்பாலும் இக்காரியங்கள் தாங்கள் அவரிடம் நெருங்க முடியாத அளவிற்குத் தேவன் தம்முடைய மகத்துவத்தில் மிக உயரமானவராய் இருக்கிறார் என்று ஜனங்களை எண்ண வைத்தன. தேவன் பொதுவாக ஜனங்களுக்குக் கொடுத்த உணர்வு என்னவென்றால், அவரைப் புரிந்துகொள்ள அவர்களின் ஆற்றலுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் ஒளிர்ந்தார் என்பதாகும், மேலும் அவருடைய ஒவ்வொரு எண்ணங்களும் யோசனைகளும் அவை எவ்வழியிலும் அடைய முடியாத அளவிற்கும், அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க முடியாத அளவிற்கும் மிகவும் இரகசியமானவையாகவும், மழுப்பலானவையாகவும் இருப்பதாகக்கூட ஜனங்கள் கருதினார்கள். ஜனங்களைப் பொறுத்தவரை, தேவனைப் பற்றிய அனைத்தும் மிகத்தொலைவில் இருந்தன, ஜனங்களால் அதைப் பார்க்க முடியாத, அதைத் தொட முடியாத அளவிற்குத் தூரமாய் இருந்தன. அவர் வானத்தில் உயரமாக இருப்பது போல் தோன்றியது, அவர் இல்லவே இல்லை என்பது போலத் தோன்றியது. ஆகவே ஜனங்களைப் பொறுத்தவரை, தேவனுடைய இருதயத்தையும் மனதையும் அல்லது அவருடைய எந்த ஒரு சிந்தனையையும் புரிந்துகொள்வது என்பது அடைய முடியாததும், அவர்களால் எட்டக்கூட முடியாதுமாய் இருந்தது. நியாயப்பிரமாண காலத்தில் தேவன் சில உறுதியானக் கிரியைகளைச் செய்திருந்தாலும், ஜனங்கள் அவரைப் புரிந்துகொள்ளவும், அவரைப் பற்றிய சிறிது உண்மையான அறிவை உணர்ந்து கொள்ளவும் அனுமதிக்கும்படியாய், அவர் சில குறிப்பிட்ட வார்த்தைகளை வெளியிடவும் மற்றும் சில குறிப்பிட்ட மனநிலைகளை வெளிப்படுத்தவும் செய்தார். ஆனாலும் முடிவில் தேவனிடத்தில் உள்ளவையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதைப் பற்றிய இந்த வெளிப்பாடுகள் பொருளில்லா உலகத்தில் இருந்தே வந்தன. மேலும் ஜனங்கள் புரிந்து கொண்டதும், அவர்கள் அறிந்திருந்ததும் என்னவென்றால் அவரிடத்தில் உள்ளவையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதின் தெய்வீக அம்சத்தைப் பற்றினதே ஆகும். அவரிடத்தில் உள்ளவையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதைப் பற்றின இந்த வெளிப்பாட்டிலிருந்து, மனுக்குலம் ஓர் உறுதியான கருத்தை அடைய முடியவில்லை. தேவனைப் பற்றிய அவர்களின் அபிப்பிராயம் “நெருங்கக் கடினமானதும், பார்வைக்கு உள்ளேயும் வெளியேயும் தோன்றி மறையும் ஓர் ஆவிக்குரிய உடல்” என்ற எல்லைக்குள் இன்னும் சிக்கியுள்ளது. பொருள் உலகத்திற்குரிய ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது ஓர் உருவத்தையோ ஜனங்கள் முன்பாகத் தோன்றுவதற்கு தேவன் உபயோகப்படுத்தாத காரணத்தால், அவர்களால் மனித மொழியைப் பயன்படுத்தி அவரை வரையறுக்க முடியவில்லை. ஜனங்களுடைய இருதயங்களிலும் மனங்களிலும், அவர்கள் தேவனுக்காக ஒரு தரத்தை நிலைநாட்டவும், மேலும் அவர் எவ்வளவு உயரமானவர், எவ்வளவு பெரியவர், அவர் பார்க்க எப்படி இருக்கிறார், அவருக்குச் சரியாக என்ன பிடிக்கும், அவருடைய ஆளுமை என்ன என்பதையெல்லாம் வைத்து அவரைத் தொடக்கூடியவராக, மனிதத்தன்மையுடையவராகச் செய்யவும் தங்களின் சொந்த மொழியைப் பயன்படுத்த எப்போதும் விரும்பினர். உண்மையில், ஜனங்கள் இவ்வழியில் சிந்திக்கிறார்கள் என்பதை தேவன் அவருடைய இருதயத்தில் அறிந்திருந்தார். அவர் ஜனங்களின் தேவைகளைக் குறித்து மிகவும் தெளிவாக இருந்தார், மேலும் தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் நிச்சயமாய் அறிந்திருந்தார், ஆகவே அவர் கிருபையின் காலத்தில் தனது கிரியையை வேறு வழியில் செய்து முடித்தார். இந்தப் புதிய வழியானது தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்தன்மை இரண்டும் உடையதாயிருந்தது. கர்த்தராகிய இயேசு கிரியை செய்த காலகட்டத்தில், தேவனுக்குப் பல மனித வெளிப்பாடுகள் இருந்ததை ஜனங்கள் காண முடிந்தது. உதாரணமாக, அவர் நடனமாட முடியும், திருமணங்களில் கலந்து கொள்ள முடியும், ஜனங்களுடன் ஒன்றுபட முடியும், அவர்களுடன் பேச முடியும், அவர்களுடன் கலந்துரையாட முடியும். அதோடுகூட கர்த்தராகிய இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையைக் குறிப்பிடும் ஏராளமான கிரியைகளையும் செய்துமுடித்தார், நிச்சயமாக இந்தக் கிரியைகள் அனைத்தும் தேவனுடைய மனநிலையின் வெளிப்படுத்தலும், வெளிப்பாடும் ஆகும். இந்த நேரத்தில், ஜனங்கள் பார்க்கவும், தொடவும் கூடிய வகையில் தேவனுடைய தெய்வீகத்தன்மையானது சாதாரண மாம்சத்தில் உணரப்பட்டபோது, அவர் பார்வைக்கு உள்ளேயும் வெளியேயும் தோன்றி மறைகிறார் என்றும் அல்லது தங்களால் அவரிடம் நெருங்க முடியாது என்றும் அதற்குப் பின் அவர்கள் நினைக்கவில்லை. மாறாக, அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம் அல்லது அவருடைய ஒவ்வொரு அசைவின் மூலமாகவும், அவருடைய வார்த்தைகள் மூலமாகவும், மனுஷகுமாரனுடைய கிரியையின் மூலமாகவும் அவர்கள் தேவனுடைய சித்தத்தை முழுவதும் புரிந்து கொள்ளவும் அல்லது அவருடைய தெய்வீகத்தன்மையை உணர்ந்து கொள்ளவும் முயற்சி செய்யலாம். மனுவுருவான மனுஷகுமாரன் தேவனுடைய தெய்வீகத்தன்மையை தன்னுடைய மனிதத்தன்மையின் மூலம் வெளிப்படுத்தி, தேவனுடைய சித்தத்தை மனுக்குலத்திற்குத் தெரிவித்தார். மேலும் தேவனுடைய சித்தம் மற்றும் மனநிலையை அவர் வெளிப்படுத்தியதின் மூலம், ஆவிக்குரிய உலகில் வாழ்கின்ற காணக்கூடாத, தொடக்கூடாத தேவனையும் அவர் ஜனங்களுக்கு வெளிப்படுத்தினார். மாம்சம் மட்டும் இரத்தத்தாலான, தொடக்கூடிய வடிவத்தில் தேவனையே ஜனங்கள் பார்த்தார்கள். ஆகவே மனவுருவான மனுஷகுமாரன், தேவனுடைய அடையாளம், தேவனுடைய நிலை, உருவம், மனநிலை மற்றும் அவரிடத்தில் உள்ளவை, அவர் யாராக இருக்கிறார் ஆகிய காரியங்களை உறுதியானதாகவும், மனிதத்தன்மையுடையதாகவும் மாற்றினார். மனுஷகுமாரனின் வெளிப்புறத் தோற்றம் தேவனுடைய உருவத்தைப் பற்றிய சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும், அவருடைய சாராம்சமும் அவரிடத்தில் உள்ளவையும் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதும் அவருடைய அடையாளத்தையும் மற்றும் தேவனுடைய நிகழ்நிலையையும் முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. வெளிப்படுத்தின விதத்தில் சொற்பமான சில வேறுபாடுகள் இருந்தன. மனுஷகுமாரன் தேவனுடைய அடையாளத்தையும், நிகழ்நிலையையும் தன்னுடைய மனிதத்தன்மையின் வடிவத்திலும் மற்றும் தன்னுடைய தெய்வீகதன்மையிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வாறாயினும், இந்த நேரத்தில், தேவன் மாம்சத்தின் மூலம் கிரியை செய்தார், மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து பேசினார், மனுஷகுமாரனுடைய அடையாளம் மற்றும் நிகழ்நிலையுடன் மனுக்குலத்தின் முன் நின்றார். மேலும் இது உண்மையான வார்த்தைகளை, மனுக்குலத்திற்கு மத்தியில் செய்யப்பட்ட தேவனுடைய கிரியையைச் சந்திக்கவும், அனுபவிக்கவும் ஜனங்களுக்கு வாய்ப்பளித்தது. இது, மனத்தாழ்மையின் மத்தியில் அவருக்கிருந்த தெய்வீகத்தன்மை மற்றும் அவருடைய மகத்துவத்தை ஜனங்கள் ஆழ்ந்து நோக்க அனுமதித்தது. அத்துடன் இது தேவனுடைய நம்பகத்தன்மை மற்றும் உண்மை நிலையின் ஆரம்பக் கட்ட புரிதலையும், வரையறையையும் அடையவும் அனுமதித்தது. கர்த்தராகிய இயேசுவால் செய்து முடிக்கப்பட்ட கிரியைகள், அவர் கிரியை செய்யும் வழிகள் மற்றும் அவர் எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பேசினார் ஆகியவை ஆவிக்குரிய உலகத்தில் உள்ள தேவனுடைய மெய்யான மனுவுடலில் இருந்து வேறுபட்டிருந்தாலும், அவரைப் பற்றிய அனைத்தும் உண்மையிலேயே முன் ஒருக்காலும் மனுக்குலம் கண்டிராத தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தின, இதை மறுக்க முடியாது! அதாவது, எந்த வடிவத்தில் தேவன் தோன்றினாலும், அவர் எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பேசினாலும் அல்லது எந்த உருவத்தில் மனுக்குலத்தை எதிர்கொண்டாலும், தேவன் தன்னைத் தவிர வேறு எதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர் எந்த ஒரு மனிதனையோ அல்லது சீர்கேடான மனுக்குலத்தையோ பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. தேவன்தாமே தேவன், இதை மறுக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 70

காணாமல் போன ஆடு பற்றிய உவமை

மத். 18:12-14  உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

இந்த பத்தி ஓர் உவமை ஆகும். இது ஜனங்களுக்கு எவ்வகையான உணர்வைத் தருகிறது? இங்கே பயன்படுத்தப்பட்ட உவமையை வெளிப்படுத்தும் முறையானது மனித மொழியில் பேசும் ஒரு வழிமொழியாகும், மேலும், இது அப்படியே மனித அறிவின் எல்லைக்கு உட்பட்டுள்ளது. நியாயப்பிரமாண காலத்தில் தேவன் இதே போன்ற ஒன்றைச் சொல்லி இருந்தால், இது போன்ற வார்த்தைகள் தேவன் யார் என்பதோடு உண்மையிலேயே ஒத்துப் போகவில்லை என்று ஜனங்கள் நினைத்திருப்பார்கள், ஆனால் மனுஷகுமாரன் இந்த வார்த்தைகளைக் கிருபையின் காலத்தில் பேசினபோது, ஜனங்கள் அவற்றை ஆறுதலாகவும், கனிவாகவும், நெருக்கமாகவும் உணர்ந்தார்கள். தேவன் மாம்சமான போது, அவர் மனித உருவத்தில் தோன்றின போது, அவருடைய இருதயத்தின் குரலை வெளிப்படுத்தும்படி, அவருடைய சொந்த மனிதத்தன்மையில் இருந்து வந்த பொருத்தமான உவமையை அவர் பயன்படுத்தினார். இந்தக் குரலானது தேவனுடைய சொந்த குரலையும் அந்த காலத்தில் அவர் செய்ய விரும்பின கிரியையும் குறித்தது. கிருபையின் காலத்தில் ஜனங்களைக் குறித்து தேவன் கொண்டிருந்த மனப்பான்மையையும் அது குறித்தது. ஜனங்களைப் பற்றிய தேவனுடைய மனப்பான்மையின் கண்ணோட்டத்தில், அவர் ஒவ்வொரு நபரையும் ஓர் ஆட்டுடன் ஒப்பிட்டார். ஓர் ஆடு தொலைந்துவிட்டால் அதைக் கண்டுபிடிப்பதற்கு அவர் எதை வேண்டுமானாலும் செய்வார். இது அவர் மாம்சத்தில் இருந்தபோது, அந்தக் காலத்தில் மனுக்குலத்தின் நடுவில் செய்யப்பட்ட தேவனுடைய கிரியையின் ஒரு கொள்கையைக் குறித்தது. அந்தக் கிரியையில் தன்னுடைய உறுதியையும், மனப்பான்மையையும் விவரிக்கும்படியாய் தேவன் இந்த உவமையைப் பயன்படுத்தினார். தேவன் மாம்சமானதின் பலன் இதுதான்: அவர் மனிதகுலத்தின் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம், மேலும் ஜனங்களுடன் பேசவும், தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்தவும் அவர் மனித மொழியைப் பயன்படுத்தலாம். ஜனங்கள் புரிந்து கொள்ளப் போராடிய அவருடைய ஆழ்ந்த, தெய்வீகமான மொழியை அவர் மனிதனுக்கு மனித மொழியில், மனித வழியில் விளக்கினார் அல்லது “மொழிபெயர்த்தார்”. இது அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவும், அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதையும் அறிந்து கொள்ள ஜனங்களுக்கு உதவியது. அவரால் மனித கண்ணோட்டத்திலிருந்து, மனித மொழியைப் பயன்படுத்தி, அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் ஜனங்களுடன் உரையாடவும் முடிந்தது. ஜனங்கள் தேவனுடைய தயவையும், நெருக்கத்தையும் உணரும்படியாய், அவர்கள் அவருடைய இருதயத்தைப் பார்க்கும்படியாய், அவரால் மனித மொழியையும் அறிவையும் பயன்படுத்திப் பேசவும், கிரியை செய்யவும் முடிந்தது. இதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தைகளிலும் கிரியைகளிலும் ஏதேனும் தடை இருக்கிறதா? தேவன் தாமே பேச விரும்பியதைப் பற்றியும், தான் செய்ய விரும்பும் கிரியையைப் பற்றியும் அல்லது அவருடைய சொந்த சித்தத்தை வெளிப்படுத்துவதைப் பற்றியும் பேசுவதற்கு மனித அறிவையும், மொழியையும் அல்லது பேசும் முறைகளையும் பயன்படுத்த வழியே இல்லை என்ற வகையில் ஜனங்கள் பார்க்கின்றனர். ஆனால் இது தவறான சிந்தனையாகும். ஜனங்கள் தேவனுடைய உண்மைத் தன்மையையும், நேர்மையையும் உணரும்படியாய், அந்தக் காலகட்டத்தில் ஜனங்களைக் குறித்த அவருடைய மனப்பான்மையைப் பார்க்கும்படியாய் தேவன் இவ்வகையான உவமையைப் பயன்படுத்தினார். இந்த உவமையானது ஒரு கனவில் இருந்து கொண்டு, நீண்டகாலமாக நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்த ஜனங்களை எழுப்பி விட்டது, மேலும் இது கிருபையின் காலத்தில் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்த ஜனங்களுக்கு ஊக்கமளித்தது. இந்த உவமையின் பத்தியைப் படிப்பதின் மூலம், மனுக்குலத்தை இரட்சிப்பதில் தேவனுடைய நேர்மையை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். மேலும் தேவனுடைய இருதயத்தில் மனுக்குலத்திற்கு வழங்கப்படும் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்கிறார்கள்.

இந்தப் பத்தியின் கடைசி வாக்கியத்தை நாம் பார்க்கலாம்: “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.” இவை கர்த்தராகிய இயேசுவினுடைய சொந்த வார்த்தைகளா அல்லது பரலோகத்திலிருக்கிற பிதாவின் வார்த்தைகளா? மேலோட்டமாகப் பார்க்கும் போது, பேசுவது கர்த்தராகிய இயேசுவைப் போலத் தோன்றுகிறது, ஆனால் அவருடைய சித்தம் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறது. அதனால்தான் அவர் சொன்னார்: “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.” அக்காலத்து ஜனங்கள் பரலோகத்திலுள்ள பிதாவை மட்டுமே தேவன் என்று ஏற்றுக் கொண்டனர், மேலும் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பார்த்த இந்த நபரை அவரால் வெறுமனே அனுப்பப்பட்டவர் என்றும், இவரால் பரலோகத்தில் உள்ள பிதாவைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றும் நம்பினர். அதனால்தான் கர்த்தராகிய இயேசு இந்த உவமையின் முடிவில் இந்த வாக்கியத்தைக் கூற வேண்டியிருந்தது, இதனால் ஜனங்கள் மனுக்குலத்திற்கான தேவனுடைய சித்தத்தை உண்மையிலேயே உணரவும், அவர் சொன்னவற்றின் நம்பகத்தன்மையையும், துல்லியத்தையும் உணர முடிந்தது. இந்த வாக்கியம் சொல்வதற்கு எளிமையான காரியமாக இருந்தாலும், இது அக்கறையுடனும் அன்புடனும் பேசப்பட்டு, கர்த்தராகிய இயேசுவின் மனத்தாழ்மையையும் மறைபொருளையும் வெளிப்படுத்தியது. தேவன் மாம்சமானாரா அல்லது ஆவிக்குரிய உலகில் கிரியை செய்தாரா என்பது முக்கியமல்ல, அவர் மனித இருதயத்தை நன்கு அறிந்திருந்தார், ஜனங்களுக்கு என்ன தேவை, ஜனங்கள் எதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள், எது அவர்களைக் குழப்புகிறது என்பதை நன்கு புரிந்திருந்தார், ஆகவேதான் அவர் இந்த வாக்கியத்தைக் கூறினார். இந்த வாக்கியம் மனுக்குலத்தின் மறைந்திருக்கும் ஒரு பிரச்சினையைக் கோடிட்டுக் காண்பிக்கிறது: ஜனங்கள் மனுஷகுமாரன் சொன்னதைச் சந்தேகித்தனர், அதாவது கர்த்தராகிய இயேசு பேசினபோது அவர் இதைச் சொல்ல வேண்டியிருந்தது: “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல,” ஜனங்கள் தன்னுடைய பிழையின்மையை நம்புவதற்கும், அவர்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த கருத்தின் அடிப்படையில்தான் அவருடைய வார்த்தைகள் பலனளிப்பதாய் இருந்தன. தேவன் ஒரு சாதாரண மனுஷகுமாரனான போது, தேவனுக்கும் மனுக்குலத்திற்கும் ஓர் அவலமான உறவு இருந்தது என்பதையும் மனுஷகுமாரனுடைய சூழ்நிலை இக்கட்டானதாக இருந்ததையும் காட்டுகிறது. அந்த நாட்களில் கர்த்தராகிய இயேசுவின் நிலை மனிதர்கள் மத்தியில் எவ்வளவு முக்கியமற்றதாக இருந்தது என்பதையும் இது காட்டுகிறது. அவர் இதைச் சொன்னபோது உண்மையில் ஜனங்களிடம் சொல்வது இதுதான்: இந்த வார்த்தைகள் என்னுடைய இருதயத்தில் இருப்பதைக் குறிப்பிடுவதில்லை, ஆனால் இவை உங்களுடைய இருதயங்களில் இருக்கும் தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதை நீங்கள் உறுதியுடன் நம்பலாம். மனுக்குலத்தைப் பொறுத்தவரை இது ஒரு முரணான விஷயம் அல்லவா? மாம்சத்தில் கிரியை செய்யும் தேவன், தமது சுயமாக இல்லாத பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அவர் அவர்களுடைய சந்தேகங்களையும், நிராகரிப்பையும் மற்றும் உணர்வின்மையையும், மந்தமான தன்மையையும் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. மனுஷகுமாரனுடைய கிரியையின் செயல்முறையானது மனுக்குலத்தின் நிராகரிப்பை அனுபவிப்பதும், அவருக்கு எதிராக அவர்கள் போட்டியிடுவதை அனுபவமாகப் பெறுவதும் என்று சொல்லலாம். அதற்கும் மேலாக, மனுக்குலத்தின் நம்பிக்கையைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்வதற்கும், தன்னிடத்தில் இருப்பதையும், தான் யாராக இருக்கிறார் என்பதன் மூலம், தன்னுடைய சொந்தச் சாராம்சத்தின் மூலம் மனுக்குலத்தை வெல்வதற்குமான கிரியை செய்யும் செயல்முறையாய் இருந்தது. அதைவிட முக்கியமாக மனுவுருவான தேவன் சாத்தானுடன் பூமியில் போர் செய்தார்; அதைவிட, தேவன் ஒரு சாதாரண மனிதனாகத் தன்னைப் பின்பற்றுபவர்களுடன் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார், இந்தப் போராட்டத்தில் மனுஷகுமாரன் தன்னுடைய மனத்தாழ்மை, தன்னிடம் இருப்பது, தான் யாராக இருக்கிறார், தன்னுடைய அன்பு ஞானம் ஆகியவற்றைக் கொண்டு தன்னுடைய கிரியையைச் செய்து முடித்தார். அவர் விரும்பிய ஜனங்களைப் பெற்றுக் கொண்டார், அவர் தனக்குத் தகுதியான அடையாளத்தையும் அந்தஸ்தையும் பெற்று, அவருடைய சிங்காசனத்திற்குத் “திரும்பினார்”.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 71

ஏழெழுபது முறை மன்னிப்பது

மத். 18:21-22  அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.

தேவனுடைய அன்பு

மத். 22:37-39  இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

இந்த இரண்டு பத்திகளில், ஒன்று மன்னிப்பைப் பற்றியும் மற்றொன்று அன்பைப் பற்றியும் பேசுகிறது. கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் செய்ய விரும்பிய கிரியையை இந்த இரண்டு தலைப்புகளும் உண்மையில் கோடிட்டுக் காண்பிக்கின்றன.

தேவன் மாம்சமானபோது, அவர் தனது கிரியையின் ஒரு கட்டத்தை அவருடன் எடுத்து வந்திருந்தார், அது அந்தக் காலத்தில் அவர் வெளிப்படுத்த விரும்பிய குறிப்பிட்ட கிரியையின் பணிகளும், மனநிலையும் ஆகும். அந்தக் காலகட்டத்தில் மனுஷகுமாரன் செய்த அனைத்தும் இந்தக் காலத்தில் தேவன் செய்ய விரும்பிய கிரியையைச் சார்ந்திருந்தன. அவர் அதற்கு அதிகமாகவும் செய்யமாட்டார், அதற்குக் குறைவாகவும் செய்யமாட்டார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், அவர் நிறைவேற்றின ஒவ்வொரு வகையான கிரியை அனைத்தும் இந்தக் காலத்துடன் தொடர்புடையவையாய் இருந்தன. அவர் அதை மனித மொழியில், மனித வழியிலோ அல்லது தெய்வீக மொழியின் வாயிலாகவோ வெளிப்படுத்தினார் என்பதைப் பொருட்படுத்தாமல், மேலும் எந்த வழியில் அல்லது எந்தக் கண்ணோட்டத்தில் அவர் அவ்வாறு செய்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் என்ன விரும்புகிறார், அவருடைய சித்தம் என்ன, அவர் ஜனங்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் ஜனங்கள் புரிந்து கொள்ள உதவுவதே அவரின் நோக்கமாய் இருந்தது. அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் மனுக்குலத்தை இரட்சிக்கும் அவருடைய கிரியையைப் புரிந்து கொள்வதற்கும் அவர் பல்வேறு வழிகளையும் வெவ்வேறு கண்ணோட்டங்களையும் பயன்படுத்தலாம். ஆகவே, கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு மனுக்குலத்திற்குச் சொல்ல வேண்டியவைகளை வெளிப்படுத்தப் பெரும்பான்மையாக மனித மொழியைப் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். இன்னும், நாம் அவரை ஒரு சாதாரண வழிகாட்டியின் கண்ணோட்டத்திலிருந்து, அவர் ஜனங்களோடு பேசுவதையும், அவர்களின் தேவைகளைச் சந்திப்பதையும், அவர்கள் வேண்டியதை அவர்களுக்குக் கொடுத்து உதவுவதையும் பார்க்கிறோம். கிருபையின் காலத்திற்கு முன்னர் வந்த நியாயப்பிரமாண காலத்தில் இந்தக் கிரியை முறை காணப்படவில்லை. அவர் மனுக்குலத்துடன் மிகவும் நெருக்கமானவராகவும், அதிக மனதுருக்கம் கொண்டவராகவும் ஆனார். அதேபோல வடிவத்திலும் முறையிலும் நடைமுறைப் பலன்களை அடைய முடிந்தது. ஜனங்களை ஏழெழுபது முறை மன்னிப்பதைப் பற்றிய உருவகம் இந்தக் குறிப்பை உண்மையில் தெளிவுபடுத்துகிறது. இந்த உருவகத்தில் உள்ள எண்ணிக்கையினால் அடையப்பட்ட நோக்கமானது இதைச் சொன்ன அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசுவின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள ஜனங்களை அனுமதிப்பதாகும். ஜனங்கள் மற்றவர்களை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்ல ஏழு முறைகள் கூட அல்ல, ஆனால் ஏழெழுபது முறை மன்னிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். “ஏழெழுபது முறை” என்ற கருத்துக்குள் எவ்வகையான கருத்து உள்ளது? அது ஜனங்கள் மன்னிப்பை தங்களுடைய சொந்த பொறுப்பாகவும், தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகவும், தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு “வழியாகவும்” மாற்றிக் கொள்ளச் செய்வதாகும். இது ஓர் உருவகம் மட்டுமே என்றாலும் இது முக்கியமான கருத்தைக் கோடிட்டுக் காண்பிக்க உதவியது. அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், சரியான நடைமுறை வழிகளையும், நடைமுறையின் கொள்கைகளையும், தரங்களையும் கண்டறிய ஜனங்களுக்கு இது உதவியது. இந்த உருவகமானது, ஜனங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவியது, மேலும் மன்னிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நிபந்தனைகள் இல்லாமல், மற்றவர்களிடம் சகிப்புத் தன்மையுடனும், புரிந்து கொள்ளும் தன்மையுடனும், எத்தனை முறையாயினும் மன்னிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சரியான ஒரு மையக்கருத்தை அவர்களுக்குத் தந்தது. கர்த்தராகிய இயேசு இதைச் சொன்னபோது அவருடைய இருதயத்தில் என்ன இருந்தது? அவர் உண்மையில் “ஏழெழுபது முறை” என்ற எண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாரா? இல்லை, அவர் அதை நினைக்கவில்லை. தேவன் ஜனங்களை மன்னிப்பதில் எண்ணிக்கை இருக்கிறதா? இங்கே குறிப்பிடப்பட்டுள்ள “எத்தனை முறை” என்பதில் மிக ஆர்வமாக உள்ள பல ஜனங்கள் இருக்கின்றனர், அவர்கள் உண்மையில் இந்த எண்ணின் தோற்றத்தையும் பொருளையும் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். கர்த்தராகிய இயேசுவின் வாயிலிருந்து இந்த எண் ஏன் வந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த எண்ணில் ஓர் ஆழமான அர்த்தம் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் இது தேவன் பயன்படுத்தின மனிதப் பேச்சின் ஓர் இலக்கம் மட்டுமே. மனுக்குலத்திற்கான கர்த்தராகிய இயேசுவின் தேவைகளுடனேயே எந்த ஓர் உட்குறிப்பும் அல்லது அர்த்தமும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தேவன் இன்னும் மாம்சமாகாத போது, அவர் சொன்னதை ஜனங்கள் அதிகம் புரிந்து கொள்ளவில்லை, ஏனென்றால் அவருடைய வார்த்தைகள் முழுமையான தெய்வீகத்தன்மையிலிருந்து வெளிப்பட்டன. அவர் சொன்ன கண்ணோட்டமும், சூழலும் கண்களுக்குத் தெரியாததாய் மற்றும் மனுக்குலம் அடைய முடியாததாய் இருந்தது. அது ஜனங்கள் பார்க்கக் கூடாத ஓர் ஆவிக்குரிய உலகிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. மாம்சத்தில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஆவிக்குரிய உலகத்திற்குள்ளாகக் கடந்து செல்ல முடியவில்லை. ஆனால் தேவன் மாம்சமான பிறகு மனிதத்தன்மையின் கண்ணோட்டத்திலிருந்து மனுக்குலத்தோடு பேசினார், மேலும் அவர் வெளியேறி, ஆவிக்குரிய உலகத்தின் எல்லையைத் தாண்டினார். அவர் தன்னுடைய தெய்வீக மனநிலையையும், சித்தத்தையும் மற்றும் மனப்பான்மையையும், மனிதர்களால் கற்பனை செய்யக்கூடிய விஷயங்கள், அவர்கள் வாழ்க்கையில் கண்ட மற்றும் சந்தித்த விஷயங்கள், மற்றும் மனிதர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகள், அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் மற்றும் அறிவால் அவர்கள் கிரகித்துக்கொள்ளக்கூடியவை மூலம் வெளிப்படுத்த முடியும். இது மனுக்குலத்தை தேவனைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள, அவருடைய நோக்கத்தையும், அவர் எதிர்பார்க்கிற தரத்தையும் அவர்களுடைய திறனின் எல்லைக்குள்ளும், அவர்களால் முடிந்த அளவிற்கும் கிரகித்துக் கொள்ள அனுமதிக்கிறது. இதுவே மனுக்குலத்தில் செய்யப்படும் தேவனுடைய கிரியையின் முறையும் கொள்கையும் ஆகும். மாம்சத்தில் கிரியை செய்யும் தேவனுடைய வழிகளும், அவருடைய கொள்கைகளும் பெரும்பாலும் மனுக்குலத்தின் வாயிலாகவோ அல்லது அதன் மூலமாகவோ அடையப்பட்டிருந்தாலும், அது உண்மையிலேயே நேரடியாக தெய்வீகத்தன்மையில் கிரியை செய்வதன் மூலம் அடையமுடியாத பலன்களை அடைந்தது. மனுக்குலத்தில் தேவனுடைய கிரியை மிகவும் உறுதியானது, உண்மையானது மற்றும் இலக்குடையது, கிரியையின் முறைகள் மிகவும் நெகிழ்வானவையாக இருந்தன, மேலும் இது, வடிவத்தில் நியாயப்பிரமாண காலத்தின்போது நிறைவேற்றப்பட்ட கிரியைகளை விஞ்சியது.

அடுத்து கர்த்தரை நேசிப்பதைப் பற்றியும், உங்களைப் போலவே பிறரை நேசிப்பதைப் பற்றியும் பேசலாம். இது தெய்வீகத்தில் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட ஒன்றா? இல்லை, நிச்சயமாக இல்லை! இவை அனைத்தும் மனுஷகுமாரன் மனிதத்தன்மையிலிருந்து பேசப்பட்டவை ஆகும். மனிதர்கள் மட்டுமே “உன்னைப்போலவே பிறரையும் நேசி,” மற்றும் “உன் ஜீவனை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசி” என்று சொல்லமுடியும். இந்த முறையில் பேசுவது பிரத்தியேகமாக மனிதன்தான். தேவன் ஒருபோதும் இப்படி பேசியது இல்லை. குறைந்தபட்சம், தேவன் தனது தெய்வீகத்தன்மையில் இவ்வகையான மொழியைக் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் மனுக்குலத்தின் மீதான அவருடைய அன்பை முறைப்படுத்த “உன்னைப் போலவே பிறரையும் நேசி” என்ற இந்தக் கோட்பாடு அவருக்கு அவசியமில்லை, ஏனென்றால் மனுக்குலத்திற்கான தேவனுடைய அன்பானது, அவரிடம் இருப்பதன் மற்றும் அவர் யாராக இருக்கிறார் என்பதன் இயல்பான வெளிப்பாடாகும். “நான் என்னை நேசிப்பதைப் போலவே மனுக்குலத்தையும் நேசிக்கிறேன்” என்று தேவன் சொல்வதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், ஏனென்றால், அன்பு தேவனுடைய சாராம்சத்திலும், அவரிடம் இருப்பதிலும் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதிலும் இருக்கிறது. மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அன்பு, அவருடைய மனப்பான்மை மற்றும் அவர் ஜனங்களை நடத்தும் விதம் ஆகியவை அவருடைய மனநிலையின் இயல்பான வெளிப்பாடும் வெளிப்படுத்துதலும் ஆகும். அவர் வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட வழியில் இதைச் செய்யத் தேவையில்லை அல்லது தன்னைப் போலவே பிறரையும் நேசிப்பதை அடைய ஒரு குறிப்பிட்ட முறையையோ அல்லது அறநெறி முறையையோ வேண்டுமென்றே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, இந்த வகையான சாராம்சத்தை அவர் ஏற்கனவே கொண்டிருக்கிறார். இதில் நீ எதைக் காண்கிறாய்? தேவன் மனிதத்தன்மையில் கிரியை செய்தபோது, அவருடைய பல முறைகளும், வார்த்தைகளும், சத்தியங்களும் மனித வழியில் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால் அதே நேரத்தில், தேவனுடைய மனநிலையும், அவரிடம் உள்ளவை மற்றும் அவர் யாராக இருக்கிறார் என்பதும், அவருடைய சித்தம் ஆகியவை ஜனங்கள் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தப்பட்டன. தேவனுடைய உள்ளார்ந்த அடையாளத்தையும் அந்தஸ்தையும் குறிக்கிற அவருடைய சாராம்சத்தையும், அவரிடம் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டார்கள். அதாவது, மாம்சத்தில் இருந்த மனுஷகுமாரன் தேவனுடைய உள்ளான மனநிலையையும், சாராம்சத்தையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கும், முடிந்த அளவிற்கு மிகத் துல்லியமாகவும் வெளிப்படுத்தினார். மனுஷகுமாரனுடைய மனிதத்தன்மையானது, பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திலான மனிதனுடைய கருத்துப் பரிமாற்றத்திற்கும் தொடர்புக்கும் இடையூறாகவோ அல்லது தடையாகவோ இல்லை என்பது மட்டுமல்லாமல், உண்மையில் சிருஷ்டிப்பின் தேவனுடன் இணைவதற்கு மனுக்குலத்திற்கான ஒரே வாய்க்காலாகவும், ஒரே பாலமாகவும் அது இருந்தது. கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு செய்த கிரியையின் இயல்புக்கும் முறைகளுக்கும், தற்போதைய கிரியையின் நிலைக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக இப்போது, இந்தக் கட்டத்தில் நீங்கள் உணரவில்லையா? தற்போதைய கட்ட கிரியையும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்த அதிகமான மனித மொழியைப் பயன்படுத்துகிறது, மேலும் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்த மனுக்குலத்தின் அன்றாட வாழ்க்கை மற்றும் மனித அறிவிலிருந்து அதிகமான மொழி மற்றும் முறைகளைப் பயன்படுத்துகிறது. தேவன் மாம்சமானவுடன், அவர் மனிதக் கண்ணோட்டத்தில் இருந்தோ அல்லது தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்தோ பேசினாலும், பெரும்பாலான அவருடைய மொழி மற்றும் வெளிப்படுத்தும் முறைகளானது மனித மொழி மற்றும் முறைகள் என்றும் ஊடகம் வழியாக வருகின்றன. அதாவது, தேவன் மாம்சமாகிற போது, தேவனுடைய சர்வவல்லமையையும், அவருடைய ஞானத்தையும், தேவனுடைய ஒவ்வொரு உண்மையான அம்சத்தையும் நீ அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாகும். தேவன் மாம்சமான போது, அவர் வளர்ந்த போது, மனுக்குலத்தின் சில அறிவையும், விவேகத்தையும், மொழியையும், வெளிப்படுத்தும் முறைகளையும் புரிந்து மனிதத்தன்மையில் புரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும், கிரகித்துக்கொள்ளவும் வந்தார். மனுவுருவான தேவன் தாம் சிருஷ்டித்த மனிதர்களிடமிருந்து வந்தக் காரியங்களையே கொண்டிருந்தார். அவருடைய மனநிலையையும் அவருடைய தெய்வீகத்தன்மையையும் வெளிப்படுத்தும்படி, அவை மாம்சத்தில் இருந்த தேவனின் கருவிகளாக மாறின, மேலும் அவர் மனிதக் கண்ணோட்டத்திலிருந்து மற்றும் மனித மொழியைப் பயன்படுத்தி மனுக்குலத்தின் மத்தியில் கிரியை செய்தபோது, அவருடைய கிரியையை மிகப் பொருத்தமானதாகவும், உண்மையானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும் மாற்ற அவரை அனுமதித்தன. இது அவருடைய கிரியையை ஜனங்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும், எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் ஆக்கியது, இதனால் தேவன் விரும்பிய முடிவுகளை அடைந்தார். தேவன் இவ்வகையில் மாம்சத்தில் கிரியை செய்வது அவருக்கு மிகவும் நடைமுறைக்குரியதாய் இருக்கிறதல்லவா? இது தேவனுடைய ஞானமல்லவா? தேவன் மாம்சமான போது, அவர் செய்ய விரும்பின கிரியையை தேவனுடைய மாம்சமானது செய்ய முடிந்த போது, அப்போதுதான் அவர் தம்முடைய மனநிலையையும், கிரியையும் நடைமுறையில் வெளிப்படுத்த முடிந்தது, மேலும் மனுஷகுமாரனாக அவர் தம்முடைய ஊழியத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கான நேரமும் அதுவாகத்தான் இருந்தது. இதன் பொருள் என்னவென்றால், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே அதன்பின் ஒரு “தலைமுறை இடைவெளி” இல்லை, அதாவது தூதுவர்கள் மூலமாகத் தொடர்பு கொள்வதாகத் தனது கிரியையை விரைவில் நிறுத்திவிட்டு, தேவன் தாமாகவே தனிப்பட்ட முறையில் எல்லா வார்த்தைகளையும், மாம்சத்தில் அவர் செய்ய விரும்பிய கிரியையும் செய்ய முடியும் என்பதேயாகும். தேவன் இரட்சிக்கும் ஜனங்கள் அவருடன் நெருக்கமாக இருந்தார்கள் என்றும் அவருடைய நிர்வாகக் கிரியை புதிய எல்லைக்குள் நுழைந்தது என்பதையும், மனுக்குலம் முழுவதுமே ஒரு புதிய சகாப்தத்தை எதிர்கொள்ளவிருப்பதையும் இது குறித்தது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 72

கர்த்தராகிய இயேசு பிறந்த போது பல சம்பவங்கள் நடந்தன என்பதை வேதாகமத்தைப் படித்த அனைவருக்கும் தெரியும். அந்த நிகழ்வுகளில் மிகப் பெரியது பிசாசுகளின் ராஜாவால் அவர் வேட்டையாடப்படுவது, இரண்டு வயதிற்கும் மற்றும் அதற்குக் குறைவான வயதிருக்கும் பட்டணத்தின் குழந்தைகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட அளவிற்கு இது மிகவும் தீவிரமான ஒரு நிகழ்வாகும். மனிதர்களிடையே மாம்சமானதின் மூலம் தேவன் பெரிய ஆபத்தை ஏற்றுக்கொண்டார் என்பது தெளிவாகிறது. மனுக்குலத்தை இரட்சிக்கும் தனது நிர்வாகத்தை நிறைவு செய்வதற்காக அவர் செலுத்திய பெரும் கிரயமும் தெளிவாகத் தெரிகிறது. மனிதர்களிடையே தேவன் செய்த கிரியைகளுக்காக அவர் மாம்சத்தில் கொண்டிருந்த பெரும் நம்பிக்கையும் தெளிவாகத் தெரிகிறது. தேவனின் மாம்சம் மனிதர்களிடையே கிரியை செய்ய முடிந்தபோது அவர் எப்படி உணர்ந்தார்? ஜனங்கள் அதை ஓரளவிற்குப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? குறைந்தபட்சம், தேவன் மகிழ்ச்சியாக இருந்தார், ஏனென்றால் அவர் தனது புதிய கிரியையை மனிதர்களிடையே செய்யத் தொடங்க முடிந்தது. கர்த்தராகிய இயேசு ஞானஸ்நானம் பெற்று அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற அதிகாரபூர்வமாகத் தன்னுடைய கிரியையைத் தொடங்கினபோது, தேவனுடைய இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கியது, ஏனென்றால் பல வருடக் காத்திருப்பு மற்றும் ஆயத்தத்திற்குப் பிறகு, அவர் இறுதியாக ஒரு சாதாரண மனிதனுடைய ரூபத்தில், அவருடைய புதிய கிரியையை மாம்சமும் இரத்தமும் கொண்ட, மனிதர்களால் பார்க்கவும் தொடவும் முடிந்த, மனித வடிவத்தில் தொடங்க முடிந்தது. அவரால் இறுதியாக ஒரு மனிதனின் அடையாளத்தின் மூலம் ஜனங்களுடன் நேருக்கு நேரும், இதயத்துடன் இதயமாகவும் பேச முடிந்தது. இறுதியாக மனித வழிகள் மற்றும் மனித மொழி என்னும் ஊடகம் வாயிலாக தேவன் மனுகுலத்தை நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது. அவர் மனித மொழியைப் பயன்படுத்தி மனுக்குலத்தின் தேவைகளைச் சந்திக்கவும், அவர்களைத் தெளிவுபடுத்தவும், அவர்களுக்கு உதவவும் முடிந்தது; அவர் அவர்களுடன் ஒரே மேஜையில் சாப்பிட்டு, ஒரே இடத்தில் வாழ முடிந்தது. அவரால் மனிதர்களைப் பார்க்கவும், பொருட்களைப் பார்க்கவும், மனிதர்கள் தங்களைப் பார்த்த விதத்திலும், அவர்கள் சொந்தக் கண்கள் மூலமாகக் கூட எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. தேவனைப் பொறுத்தவரை, இது ஏற்கனவே அவர் மாம்சத்தில் செய்த கிரியையின் முதல் வெற்றியாகும். இது ஒரு பெரிய கிரியையின் சாதனை என்றும் சொல்லலாம், மேலும் நிச்சயமாக இது, தேவன் இதைக் குறித்து சந்தோஷப்பட்ட ஒரு காரியமாகும். அப்போதிலிருந்து, மனிதர்களிடையே செய்யப்பட்ட தனது கிரியையில் ஒருவகையான ஆறுதலைத் தேவன் முதன்முறையாக உணர்ந்தார். நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் நடைமுறையானதாகவும் மற்றும் மிக இயல்பானதாகவும் இருந்தது, மேலும் தேவன் உணர்ந்த ஆறுதல் மிக உண்மையாக இருந்தது. மனுக்குலத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முறை தேவனுடைய ஒரு புதிய கட்ட கிரியை நிறைவேறும்போதும், ஒவ்வொரு முறையும் தேவன் மனநிறைவை உணரும்போதும், அப்போது மனுக்குலம் தேவனிடம் நெருங்கி வந்து இரட்சிப்பை அடைய முடியும். தேவனைப் பொறுத்தவரை, இது அவருடைய நிர்வாகத் திட்டத்தில், முன்னோக்கிச் செல்கிற அவருடைய புதிய கிரியையின் தொடக்கமாகும். மேலும் இவை அவருடைய நோக்கங்கள் முழுமையான நிறைவேறுதலை நெருங்கும் நேரங்கள் ஆகும். மனுக்குலத்திற்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது அதிர்ஷ்டமானதும் மிக நன்மையானதுமாகும்; தேவனுடைய இரட்சிப்புக்காக காத்திருக்கும் அனைவருக்கும் இது மிக முக்கியமான, மகிழ்ச்சியான செய்தியாகும். தேவன் ஒரு புதிய கட்ட கிரியையை நிறைவேற்றும்போது, அவருக்கு ஒரு புதிய ஆரம்பம் இருக்கும், மேலும் இந்தப் புதிய கிரியையும், புதிய ஆரம்பமும் மனுக்குலத்தினிடையே ஆரம்பிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்படும்போது, இந்தக் கட்ட கிரியைகளின் முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, தேவனால் இறுதியான விளைவையும் பலனையும் ஏற்கனவே பார்க்கப்பட்டிருக்கும். மேலும் இதுதான் தேவனைத் திருப்தியாய் உணரச் செய்யும் மற்றும் நிச்சயமாக அவருடைய இருதயம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணமாக இருக்கிறது. தேவன் நம்பிக்கையாக உணர்கிறார், ஏனென்றால் அவருடைய பார்வையில் அவர் தேடும் ஜனங்களை அவர் பார்த்திருந்தார் மற்றும் தீர்மானித்திருந்தார், மேலும் ஏற்கனவே தன்னுடைய கிரியையை வெற்றிகரமாக முடித்து, தனக்குத் திருப்தியை அளிக்கக்கூடிய இந்த ஒரு ஜனக்கூட்டத்தை ஆதாயப்படுத்தி இருந்தார். இவ்வாறு அவர் தனது கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மகிழ்ச்சியாக உணர்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தேவனுடைய மாம்சம் மனிதர்களிடையே புதிய கிரியையைத் தொடங்க இயலும்போது, அவர் தடையின்றி தான் செய்யவேண்டிய கிரியையை செய்யத் தொடங்குகிறார், மேலும் அனைத்தும் நிறைவேறியதாக அவர் உணரும்போது, முடிவானது ஏற்கனவே அவர் பார்வையில் உள்ளது. இதன் காரணமாக, அவர் திருப்தி அடைகிறார், அவருடைய இருதயம் மகிழ்ச்சியடைகிறது. தேவனுடைய மகிழ்ச்சி எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது? பதில் என்னவாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? தேவன் அழுவாரா? தேவனால் அழ முடியுமா? தேவனால் தன் கரங்களைத் தட்ட முடியுமா? தேவனால் ஆட முடியுமா? தேவனால் பாட முடியுமா? அப்படியானால், அவர் என்ன பாடுவார்? நிச்சயமாக ஓர் அழகான, உருக்கமான, தன் இருதயத்தில் இருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தும் ஒரு பாடலை அவரால் பாட முடியும். அதை மனுக்குலத்திற்காகவும், தனக்காகவும் மற்றும் எல்லா காரியங்களுக்காகவும் அவரால் பாட முடியும். தேவனுடைய மகிழ்ச்சி எவ்வகையிலும் வெளிப்படுத்தப்படலாம், இவை அனைத்தும் இயல்பானவையாகும், ஏனென்றால் தேவனுக்கு சந்தோஷங்களும் துக்கங்களும் உள்ளன, மேலும் அவருடைய பல்வேறு உணர்வுகளைப் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம். இது அவருடைய உரிமை மேலும் எதுவும் அதிக இயல்பானதாகவும் சரியானதாகவும் இருக்க முடியாது. அதைத் தவிர, ஜனங்கள் வேறு எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. நீங்கள் தேவனிடத்தில் இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இப்படி நடந்து கொள்ளக் கூடாது, அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி, இவ்வழியில் அவர் கொண்டிருக்கும் அவருடைய சந்தோஷத்தை அல்லது உணர்வைக் கட்டுப்படுத்தி, அவர் மீது “பட்டையை இறுக்கும் மந்திரத்தைப்”[அ] பயன்படுத்த முயற்சி செய்யக்கூடாது. தேவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, கண்ணீர் சிந்த முடியாது, அவரால் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த முடியாது என்று ஜனங்களின் இருதயத்தில் உள்ளது. இந்த இரண்டு கூடுகைகளின் போது, நாம் பரிமாறிக்கொண்டவற்றின் மூலம், இனி தேவனை இவ்வழியில் பார்க்காமல், தேவன் சிறிது சுதந்திரமும் விடுதலையும் கொண்டிருக்க அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். இது மிகவும் நல்ல விஷயம் எதிர்காலத்தில் நீங்கள் தேவன் சோகமாக இருப்பதை பற்றி கேட்கும்போது, தேவனுடைய வருத்தத்தை உண்மையாக உணர முடிந்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றிக் கேட்கும்போது, நீங்கள் உண்மையிலேயே அவருடைய மகிழ்ச்சியை உணர முடிந்தால், அதன்பின் உங்களால் குறைந்தபட்சம், எது தேவனை மகிழ்ச்சி அடையச் செய்கிறது, எது அவரை வருத்தமடையச் செய்கிறது என்பதைத் தெளிவாக அறிந்து, புரிந்து கொள்ள முடியும். தேவன் வருத்தமாக இருப்பதால் நீங்கள் சோகமாகவும், தேவன் மகிழ்ச்சியாக இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் உணர முடிந்தால், அவர் உங்கள் இருதயத்தை முழுமையாக ஆதாயப்படுத்தி இருப்பார், மேலும் உங்களுக்கும் அவருக்குமிடையில் இனி எந்தத் தடுப்பும் இருக்காது. நீங்கள் இனிமேல், மனிதக் கற்பனைகள், கருத்துக்கள் மற்றும் அறிவைக்கொண்டு தேவனைக் கட்டுப்படுத்த முயற்சிக்க மாட்டீர்கள். அந்த நேரத்தில், தேவன் உங்கள் இருதயத்தில் ஜீவனுள்ளவராய், உயிர்ப்புள்ளவராய் இருப்பார். அவர் உங்கள் ஜீவனின் தேவனாகவும், உங்களைப் பற்றின எல்லாவற்றிற்கும் எஜமானராகவும் இருப்பார். உங்களுக்கு இவ்வகையான ஆசை இருக்கிறதா? உங்களால் இதை அடைய முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. “பட்டையை இறுக்கும் மந்திரம்” என்பது ஜர்னி டூ த வெஸ்ட் என்ற சீன நாவலில், துறவி டாங் சாங்சாங் பயன்படுத்திய ஒரு மந்திரமாகும். சன் வுகோங்கைக் கட்டுப்படுத்த அவர் இந்த மந்திரத்தைப் பயன்படுத்துகிறார், அவரின் தலையைச் சுற்றி ஓர் உலோகப் பட்டையை இறுக்கி, அவருக்குக் கடுமையான தலைவலியைக் கொடுத்து அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். ஒரு நபரைப் பிணைக்கும் ஒன்றை விவரிக்க இது ஓர் உருவகமாக மாறிவிட்டது.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 73

கர்த்தராகிய இயேசுவின் உவமைகள்

விதைக்கிறவனைப் பற்றிய உவமை (மத் 13:1-9)

களைகளைப் பற்றிய உவமை (மத் 13:24-30)

கடுகு விதையைப் பற்றிய உவமை (மத் 13:31-32)

புளித்த மாவைப் பற்றிய உவமை (மத் 13:33)

களைகளைப் பற்றிய உவமையின் விளக்கம் (மத் 13:36-43)

பொக்கிஷத்தைப் பற்றிய உவமை (மத் 13:44)

முத்தைப் பற்றிய உவமை (மத் 13:45-46)

வலையைப் பற்றிய உவமை (மத் 13:47-50)

முதலாவது விதைக்கிறவனைப் பற்றிய உவமை. இது மிகவும் சுவாரஸ்யமான உவமை ஆகும்; விதைகளை விதைப்பது ஜனங்களின் வாழ்க்கையில் பொதுவான ஒரு நிகழ்வாகும். இரண்டாவது களைகளைப் பற்றிய உவமை. பயிர்களை நடவு செய்த எவருக்கும் மற்றும் நிச்சயமாக எல்லாப் பெரியோர்களுக்கும் “களைகள்” என்றால் என்னவென்று தெரியும். மூன்றாவது கடுகு விதை பற்றிய உவமை. கடுகு என்றால் என்ன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அப்படித்தானே? உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் வேதாகமத்தில் பார்க்கலாம். நான்காவது உவமை புளித்த மாவைப் பற்றிய உவமை. இப்போது, புளிக்கப்பண்ணுவதற்கு புளித்த மாவு பயன்படுத்தப்படுகிறது, அது ஜனங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒன்று என்பதைப் பெரும்பாலான ஜனங்கள் அறிவார்கள். இன்னும், ஆறாவது உவமையான பொக்கிஷத்தைப் பற்றிய உவமை உட்பட; ஏழாவது முத்தைப் பற்றிய உவமை மற்றும் எட்டாவது வலையைப் பற்றிய உவமை ஆகிய அனைத்தும் ஜனங்களின் இயல்பான வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டு, பெறப்பட்டவையாகும். இந்த உவமைகள் எவ்வகையான காட்சியை வெளிப்படுத்துகின்றன? தேவன் ஒரு சாதாரண மனிதனாக மாறி, மனுக்குலத்துடன் வாழ்ந்து, வாழ்க்கையின் மொழியையும் மனித மொழியையும் பயன்படுத்தி, மனிதர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுடைய தேவைகளைச் சந்திப்பது போன்ற காட்சி இது. தேவன் மாம்சமாகி மனிதர்களிடையே நீண்டகாலம் வாழ்ந்த போது, ஜனங்களின் பல்வேறு வாழ்க்கை முறைகளை அவர் அனுபவித்து, நேரடியாகப் பார்த்த பின்பு, இந்த அனுபவங்கள் அவருடைய போதிக்கும் பொருளாக மாறியது, இதன்மூலம் அவர் தனது தெய்வீக மொழியை மனித மொழியாக உருமாற்றினார். நிச்சயமாக, அவர் வாழ்க்கையில் பார்த்த மற்றும் கேட்ட இந்த விஷயங்கள் மனுஷகுமாரனுடைய மனித அனுபவத்தை மேம்படுத்தின. ஜனங்கள் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும், சிறிதளவு தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினபோது, தேவனுடைய சித்தம் மற்றும் மனுக்குலத்திடம் அவர் எதிர்பார்க்கும் காரியங்கள் ஆகியவற்றை ஜனங்களுக்குச் சொல்ல அவர் மேலே உள்ளதைப் போன்ற உவமைகளைப் பயன்படுத்த முடிந்தது. இந்த உவமைகள் அனைத்தும் ஜனங்களுடைய வாழ்க்கையுடன் தொடர்புடையதாய் இருந்தன. மனித வாழ்க்கையுடன் தொடர்பில்லாத ஒன்று கூட அங்கு இல்லை. கர்த்தராகிய இயேசு மனுக்குலத்துடன் வாழ்ந்தபோது, விவசாயிகள் தங்கள் வயல்களைப் பராமரிப்பதைக் கண்டார், அவருக்குக் களைகள் என்றால் என்ன என்று தெரியும், புளித்துப் போவதைப் பற்றி அவர் அறிந்திருந்தார்; மனிதர்கள் பொக்கிஷத்தை விரும்புகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார், எனவே அவர் பொக்கிஷம் மற்றும் முத்து ஆகிய இரண்டின் உருவகங்களையும் பயன்படுத்தினார். வாழ்க்கையில், அவர் மீனவர்கள் வலை வீசுவதை அடிக்கடி பார்த்தார், கர்த்தராகிய இயேசு இதையும், மனித வாழ்வுடன் தொடர்பான பிற செயல்களையும் கண்டார், மேலும் அவர் அந்த வகையான வாழ்க்கையையும் அனுபவித்தார். மற்ற சாதாரண மனிதர்களைப் போலவே, அவர் மனிதனின் அன்றாட நடைமுறைகளை அனுபவித்தார், அவர்களைப் போல ஒரு நாளைக்கு மூன்று வேளைச் சாப்பிட்டார். அவர் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைத் தாமே அனுபவித்தார், மற்றவர்களின் வாழ்க்கையை உற்றுக் கவனித்தார். இவை அனைத்தையும் அவர் உற்றுக் கவனித்து தனிப்பட்ட முறையில் அனுபவித்த போது, அவர் நினைத்தது ஒரு நல்ல வாழ்க்கையை எப்படிப் பெறுவது அல்லது அவர் எப்படி சுதந்திரமாகவும், வசதியாகவும் வாழமுடியும் என்பதல்ல. அதற்குப் பதிலாக, உண்மையான மனித வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து கர்த்தராகிய இயேசு ஜனங்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைக் கண்டார். சாத்தானுடைய ராஜ்யத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த, சாத்தானுடைய சீர்கேட்டின் கீழ் பாவ வாழ்க்கை வாழ்ந்த ஜனங்களுடைய கஷ்டங்களையும், பரிதாபங்களையும் சோகங்களையும் அவர் கண்டார். அவர் தாமே மனித வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, சீர்கேட்டுக்கு மத்தியில் வாழ்ந்த ஜனங்கள் எவ்வளவு உதவியற்றவர்களாக இருந்தார்கள் என்பதை அவர் அனுபவித்தார், மேலும் பாவத்தில் வாழ்ந்த மனிதர்களின் பரிதாபகரமான நிலைமைகளை அவர் கண்டார், அனுபவித்தார். இந்த ஜனங்கள் சாத்தானாலும், பொல்லாப்பினாலும் சித்திரவதைக்கு உட்பட்டதின் மத்தியில் எல்லா நோக்கத்தையும் இழந்திருந்தனர். கர்த்தராகிய இயேசு இந்தக் காரியங்களை கண்டபோது, அவர் தம்முடைய தெய்வீகத்தன்மையோடு அல்லது தன்னுடைய மனிதத்தன்மையோடு அவைகளைப் பார்த்தாரா? அவருடைய மனிதத்தன்மை உண்மையாகவே இருந்தது, மற்றும் அது மிகுந்த உயிர்ப்புடன் இருந்தது. இவற்றையெல்லாம் அவரால் அனுபவிக்கவும், பார்க்கவும் முடிந்தது. ஆனால் நிச்சயமாக, அவர் இந்தக் காரியங்களை அவருடைய தெய்வீகத்தன்மையான அவருடைய சாராம்சத்தில் பார்த்தார். அதாவது, கிறிஸ்து தாமே, மனிதனான கர்த்தராகிய இயேசுவே, இதைக் கண்டார், அவர் கண்ட அனைத்தும், அவர் மாம்சத்தில் வாழ்ந்த இந்த காலத்தில் அவர் ஏற்றுக்கொண்ட கிரியையின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அவரை உணர வைத்தது. மாம்சத்தில் அவர் ஏற்க வேண்டிய பொறுப்பு மிகப் பெரியது என்பதை அவரே அறிந்திருந்தாலும் மற்றும் அவர் எதிர்கொள்ளப் போகிற வேதனை எவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தும், பாவத்தில் மனுக்குலத்தை உதவியற்றதாகக் கண்டபோது, அவர்களுடைய வாழ்க்கையின் பரிதாபமான தன்மை, நியாயப்பிரமாணத்தின் கீழ் அவர்களுடைய பலவீனமான போராட்டங்கள் ஆகியவற்றை அவர் கண்டபோது, அவர் அதிகதிகமாக துக்கப்பட்டார், மனுக்குலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்க அதிகதிகமாய் கவலை கொண்டார். அவர் எந்த வகையான சிரமங்களை எதிர்கொள்வார் அல்லது எந்த வகையான வேதனையை அனுபவிப்பார் என்பதைப் பொருட்படுத்தாமல், பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மனுக்குலத்தை மீட்பதற்கு அவர் உறுதியாக தீர்மானித்தார். இந்தச் செயல்பாட்டின் போது, கர்த்தராகிய இயேசு அவர் செய்ய வேண்டிய கிரியைகளையும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டதையும் மேலும் மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினார் என்று நீங்கள் சொல்லலாம். மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வது, மனுக்குலம் அதன்பின் பாவத்தில் வாழாதபடி அவர்களுக்காகப் பரிகாரம் செய்வது ஆகிய அவர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கிரியையை முடிப்பதற்கு அவர் அதிக ஆர்வமுள்ளவரானார். அதேசமயம் பாவநிவாரணபலியின் காரணத்தினால் தேவனால் மனிதனுடைய பாவங்களை மன்னிக்க முடியும், இது மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான அவரது கிரியையைத் தொடர அவரை அனுமதிக்கிறது. கர்த்தராகிய இயேசுவின் இருதயத்தில், மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கவும், தன்னையே பலியாகக் கொடுக்கவும், அவர் தயாராக இருந்தார் என்று கூறலாம். அவர் பாவநிவாரணபலியாக செயல்படவும், சிலுவையில் அறையப்படவும் தயாராக இருந்தார், அவர் உண்மையில் இந்தக் கிரியையை முடிக்க ஆர்வத்துடன் இருந்தார். மனித வாழ்க்கையின் பரிதாபகரமான நிலைமைகளை அவர் கண்டபோது, ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி கூட தாமதமின்றி தனது கிரியையை முடிந்தவரை விரைவாக நிறைவேற்ற அவர் விரும்பினார். அத்தகைய அவசரத்தை உணர்ந்த அவர், தனது சொந்த வேதனை எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதைப் பற்றித் துளியும் சிந்திக்கவில்லை, அவர் எவ்வளவு அவமானங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக்கூட எந்தவிதமான பயத்தையும் அவர் கொண்டிருக்கவில்லை. அவர் தனது இருதயத்தில் ஒரே ஒரு திடநம்பிக்கையைக் கொண்டிருந்தார். அவர் தன்னை ஒப்புக்கொடுத்த பின், அவர் பாவநிவாரணபலியாக சிலுவையில் அறையப்பட்ட பின், தேவனுடைய சித்தம் நிறைவேறும், மேலும் தேவனால் புதிய கிரியையை தொடங்க முடியும் என்பதே அது. மனுக்குலத்தின் வாழ்வும், பாவத்தில் அவர்கள் இருக்கும் நிலையும் முற்றிலும் உருமாற்றப்படும். அவரது திடநம்பிக்கையும், அவர் செய்ய தீர்மானித்தவையும் மனிதனை இரட்சிக்கிறதோடு தொடர்புடையதாக இருந்தது, மேலும் அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது, அது தேவனுடைய சித்தத்தைச் செய்வதாகும், இதனால் தேவன் தனது கிரியையின் அடுத்த கட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்க முடியும். அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசுவின் மனதில் இருந்தது இதுதான்.

மாம்சத்தில் வாழ்கிற போது மனுவுருவான தேவன் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருந்தார்; அவர் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிகளையும் பகுத்தறிவையும் கொண்டிருந்தார். மகிழ்ச்சி என்றால் என்ன, வலி என்றால் என்ன என்பதை அவர் அறிந்திருந்தார், மனுக்குலம் இவ்வகையான வாழ்க்கையை வாழ்வதை அவர் கண்டபோது ஜனங்களுக்குச் சில போதனைகளை வழங்குவதோ, அவர்களுக்கு ஏதாவது கொடுப்பதோ அல்லது அவர்களுக்கு ஏதாவது போதிப்பதோ அவர்களைப் பாவத்தில் இருந்து விடுவிப்பதற்குப் போதுமானதாக இருக்காது என்பதை அவர் ஆழமாக உணர்ந்தார். அவர்களை வெறுமனே கட்டளைக்குக் கீழ்ப்படிய செய்வதும் அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டெடுக்காது என்றும் அவர் மனுக்குலத்தின் பாவத்தை ஏற்றுக்கொண்டு பாவ மாம்சமத்தின் சாயலாகும்போதுதான், அவரால் மனுக்குலத்தின் விடுதலையையும் மனுக்குலத்திற்கு ஈடாக தேவனுடைய மன்னிப்பையும் பெற முடியும். ஆகவே கர்த்தராகிய இயேசு பாவத்தில் ஜனங்களுடைய வாழ்க்கையை அனுபவித்து, கண்ணாரக் கண்ட பின், பாவத்தில் போராடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள ஜனங்களை அனுமதிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் அவருடைய இருதயத்தில் வெளிப்பட்டது. இந்த விருப்பமே எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் சிலுவைக்குச் சென்று மனுக்குலத்தின் பாவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரை அதிகதிகமாக நினைக்க வைத்தது. ஜனங்களுடன் வாழ்ந்து, பாவத்திலிருக்கும் அவர்களுடைய வாழ்க்கையின் துயரத்தைக் கண்டு, கேட்டு, உணர்ந்தபின், இவை தான் அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசுவின் சிந்தனைகளாயிருந்தன. மனுவுருவான தேவன் மனுக்குலத்திற்காக இவ்வகையான சித்தத்தைக் கொண்டிருக்க முடியும், அவர் இவ்வகையான மனநிலையை தெரிவிக்கவும், வெளிப்படுத்தவும் முடியும் என்பது ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒன்றா? இவ்வகைச் சூழலில் வாழும் ஒரு சராசரி மனிதன் எதைப் பார்ப்பான்? அவர்கள் என்ன நினைப்பார்கள்? ஒரு சராசரி நபர் இவை அனைத்தையும் எதிர்கொண்டால், அவர்கள் பிரச்சனைகளை ஒரு மேலான கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பார்களா? நிச்சயமாக பார்க்க மாட்டார்கள்! தேவனுடைய மனு உருவின் வெளிப்புறத் தோற்றம் ஒரு மனிதனைப் போலவே இருந்தாலும், அவர் மனித அறிவை கற்றுக்கொண்டு மனித மொழியைப் பேசுகிறார் என்றாலும், சில சமயங்களில் அவருடைய எண்ணங்களை மனுக்குலத்தின் சொந்த முறைகள் அல்லது பேசும் முறைகள் மூலம் வெளிப்படுத்தினாலும்கூட, அப்போதும் கூட அவர் மனிதர்களைப் பார்க்கும் விதமும் அவர் காரியங்களின் சாராம்சத்தை பார்க்கும் விதமும், சீர்கேடான ஜனங்கள் மனுக்குலத்தையும், காரியங்களின் சாராம்சத்தையும் பார்க்கும் விதத்தைப் போன்று நிச்சயமாக இருக்காது. அவருடைய கண்ணோட்டமும் மற்றும் அவர் நிற்கும் உயரமும் ஒரு சீர்கேடான நபரால் அடைய முடியாத ஒன்றாகும். ஏனென்றால் தேவன் சத்தியமாய் இருக்கிறார், ஏனென்றால் அவர் கொண்டிருக்கும் மாம்சமும் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டுள்ளது, மேலும் அவருடைய எண்ணங்களும் அவர் தன்னுடைய மனிதத்தன்மையின் மூலம் வெளிப்படுத்துகிறதும் கூட சத்தியமாயிருக்கிறது. சீர்கேடான ஜனங்களுக்கு அவர் மாம்சத்தில் வெளிப்படுத்துவது சத்தியத்தின் மற்றும் ஜீவனின் ஏற்பாடுகள் ஆகும். இந்த ஏற்பாடுகள் ஏதோ ஒரு நபருக்கானது அல்ல, மனுக்குலம் முழுவதற்குமானது. எந்த ஒரு சீர்கேடான நபரின் இருதயத்திலும் அவர்களுடன் தொடர்புடைய சிலர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் இந்த சொற்ப ஜனங்களை மட்டுமே பராமரித்து, அக்கறை காட்டுகிறார்கள். பேரழிவின் விளிம்பில் இருக்கும்போது, அவர்கள் முதலில் தங்களுடைய சொந்த குழந்தைகள், வாழ்க்கைத் துணை அல்லது பெற்றோரைப் பற்றி நினைக்கிறார்கள். அதிகபட்சமாக, மிகவும் இரக்கமுள்ள ஒரு நபர் சில உறவினர்கள் அல்லது நல்ல நண்பருக்காக சில சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள், ஆனாலும் அத்தகைய இரக்கமுள்ள நபரின் எண்ணங்கள் கூட அதற்கு மேல் விரிவாகுமா? இல்லை, ஒருபோதும் ஆகாது! ஏனென்றால், மனிதர்கள் என்ன இருந்தாலும் மனிதர்கள்தான், மேலும் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு மனிதனுடைய மட்டத்தில் இருந்தும், கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பார்க்க முடியும். எப்படியிருப்பினும், மனுவுருவான தேவன் சீர்கேடான மனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராவார். மனுவுருவான தேவனின் மாம்சம் எவ்வளவு சாதாரணமானதாக, எவ்வளவு இயல்பானதாக, எவ்வளவு தாழ்மையுள்ளதாக இருந்தாலும் அல்லது ஜனங்கள் எப்படிப்பட்ட அவமதிப்புடன் அவரைத் தாழ்வாகப் பார்த்தாலும், மனுக்குலத்தின் மீதான அவருடைய எண்ணங்களும், மனப்பான்மையும் எந்த ஒரு மனிதனும் கொண்டிருக்க முடியாதவையும், எந்த ஒரு மனிதனும் பின்பற்ற முடியாதவையுமாகும். அவர் எப்போதும் மனுக்குலத்தை தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து, சிருஷ்டிகராகத் தன்னுடைய நிலையின் உயரத்தில் இருந்து உற்று நோக்குவார். அவர் எப்போதும் தேவனுடைய சாராம்சம் மற்றும் மனநிலையின் மூலம் மனுக்குலத்தைப் பார்ப்பார். அவர் நிச்சயமாக ஒரு சராசரி மனிதனுடைய தாழ்ந்த உயரத்திலிருந்தோ அல்லது ஒரு சீர்கேடான மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்தோ மனுக்குலத்தைப் பார்க்க முடியாது. ஜனங்கள் மனுக்குலத்தைப் பார்க்கும்போது, அவர்கள் மனிதப் பார்வை, மனித அறிவு மற்றும் மனித விதிகள் மற்றும் கோட்பாடுகள் போன்ற காரியங்களை அளவு முறையாகப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். இது ஜனங்கள் தங்கள் கண்களால் பார்க்கக்கூடிய எல்லைக்குள் உள்ளது, மேலும் சீர்கேடான ஜனங்களால் அடையக்கூடிய எல்லைக்குள் உள்ளது. தேவன் மனுக்குலத்தைப் பார்க்கும்போது அவர் தெய்வீகப் பார்வையுடன் பார்க்கிறார், மேலும் அவர் தனது சாராம்சத்தையும், தன்னிடம் உள்ளவை மற்றும் தான் யாராக இருக்கிறார் என்பதையும் அளவு முறையாகப் பயன்படுத்துகிறார். இந்த எல்லையில் ஜனங்கள் பார்க்க முடியாத காரியங்கள் உள்ளன, மேலும் இங்கேதான் மனுவுருவான தேவனும் சீர்கேடான மனிதர்களும் முற்றிலும் வேறுபட்டவர்களாய் இருக்கிறார்கள். இந்த வேறுபாடு மனிதர்களுடைய மற்றும் தேவனுடைய வித்தியாசமான சாராம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது, இந்த வெவ்வேறான சாராம்சங்கள் அவர்களுடைய அடையாளங்களையும், நிலைகளையும் அத்துடன் அவர்கள் எந்தக் கண்ணோட்டத்திலிருந்தும் மற்றும் உயரத்திலிருந்தும் காரியங்களைப் பார்க்கிறார்கள் என்பதையும் தீர்மானிக்கின்றன. கர்த்தராகிய இயேசுவில் தேவனுடைய வெளிப்படுத்துதலையும், வெளிப்பாட்டையும் நீங்கள் பார்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு செய்ததும், சொன்னதும் அவருடைய ஊழியத்துடனும், தேவனுடைய சொந்த நிர்வாகக் கிரியையுடனும் தொடர்புடையது என்றும், மேலும் இது முழுவதும் தேவனுடைய சாராம்சத்தின் வெளிப்படுத்துதலும் வெளிப்பாடுமாகும் என்றும் நீங்கள் கூறலாம். அவர் ஒரு மனிதனின் தெளிவான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவருடைய தெய்வீக சாராம்சமும் அவருடைய தெய்வீகத்தின் வெளிப்படும் மறுக்க முடியாதவையாகும். இந்த மனிதத் தோற்றம் உண்மையிலேயே மனுக்குலத்தின் வெளிப்பாடாக இருந்ததா? அவருடைய மனித வெளிப்பாடானது அதன் சாராம்சத்தின்படி சீர்கேடான ஜனங்களின் மனித வெளிப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கர்த்தராகிய இயேசு மனுவுருவான தேவனாக இருந்தார். அவர் உண்மையிலேயே சாதாரணமான, சீர்கேடான ஜனங்களில் ஒருவராக இருந்திருந்தால், பாவத்திலிருந்த மனுக்குலத்தின் வாழ்க்கையை தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து அவரால் பார்த்திருக்க முடியுமா? நிச்சயமாக முடிந்திருக்காது! இதுதான் மனுஷகுமாரனுக்கும் சாதாரண மனிதர்களுக்குமுள்ள வித்தியாசமாகும். சீர்கேடான ஜனங்கள் அனைவரும் பாவத்தில் வாழ்கிறார்கள், மேலும் யாராவது பாவத்தைப் பார்க்கும்போது, அதைப் பற்றிய எந்த குறிப்பிட்ட உணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை; அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாய் இருக்கிறார்கள், சேற்றில் வாழும் ஒரு பன்றி எப்படி அசௌகரியமாகவோ அல்லது அழுக்காகவோ உணராமல், நன்றாகச் சாப்பிட்டு, நன்றாகத் தூங்குகிறதோ, அதைப் போலவே அவர்களும் இருக்கிறார்கள். யாராவது பன்றித் தொழுவத்தைச் சுத்தம் செய்தால், பன்றி உண்மையில் அசௌகரியமாக உணரும், அது சுத்தமாக இருக்காது. சீக்கிரமாக, முற்றிலும் சௌகரியமாக, அது மீண்டும் சேற்றில் சுற்றி உருளும், ஏனென்றால் அது ஓர் அசுத்தமான உயிரினமாகும். மனிதர்கள் பன்றிகளை அசுத்தமானதாகப் பார்க்கிறார்கள், ஆனால் நீ ஒரு பன்றியின் வசிப்பிடத்தை சுத்தம் செய்தால், அது எவ்விதத்திலும் நன்றாக உணராது, இதனால் தான் யாரும் தங்கள் வீட்டில் ஒரு பன்றியை வைப்பதில்லை. மனிதர்களும் பன்றிகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதால், மனிதர்கள் பன்றிகளைப் பார்க்கும் விதம் எப்போதுமே பன்றிகள் தாமாகவே எப்படி உணர்கின்றன என்பதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். மனுவுருவான மனுஷகுமாரன் சீர்கேடான மனிதர்களைப் போன்றவராய் இல்லாததினால் மனுவுருவான தேவன் மட்டுமே தெய்வீக கண்ணோட்டத்தில், தேவனுடைய உயரத்தில், மற்றும் மனுக்குலத்தையும் மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் இடத்தில் நிற்க முடியும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 74

தேவன் மாம்சமாகி மனிதர்களிடையே வாழும்போது அவர் அனுபவிக்கும் துன்பம் என்ன? இந்தத் துன்பம் என்றால் என்ன? யாராவது இதை உண்மையிலேயே புரிந்து கொள்கிறார்களா? தேவன் பெரிதும் துன்பப்படுகிறார் என்று சிலர் சொல்கிறார்கள், அவர் தாமே தேவனாக இருந்தாலும், ஜனங்கள் அவருடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் எப்போதும் அவரை ஒரு மனிதனைப் போலவே நடத்த முனைகிறார்கள், இது அவரை வேதனையாக, அநியாயமாக நடத்தப்பட்டதாக உணர வைக்கிறது. மேலும் அவர்கள் இந்த காரணங்களுக்காக, தேவனுடைய துன்பம் உண்மையில் பெரிதானது என்று சொல்கிறார்கள். மற்ற ஜனங்கள் தேவன் குற்றமற்றவர் மற்றும் பாவம் இல்லாதவர் என்கிறார்கள், அதைத் தவிர மனுக்குலத்தைப் போலவே அவர் பாடுபடுகிறார் என்றும், அவர் மனுக்குலத்துடன் உபத்திரவம், அவதூறு மற்றும் அவமதிப்பையும் அனுபவிக்கிறார் என்கிறார்கள். அவர் தம்மைப் பின்பற்றுபவர்களின் தவறானப் புரிதல்களையும், கீழ்ப்படியாமையையும் தாங்கிக் கொள்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆகவே தேவனுடைய துன்பத்தை உண்மையிலேயே அளவிட முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்போது, நீங்கள் தேவனை உண்மையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது போல் தெரிகிறது. உண்மையில் நீங்கள் குறிப்பிடும் இந்த துன்பத்தை, உண்மையான துன்பமாய் தேவன் கருதுவதில்லை, ஏனென்றால் இதை விட பெரிதான துன்பம் ஒன்று இருக்கிறது. தேவனுக்கு உண்மையான துன்பம் என்றால் என்ன? தேவனுடைய மனுவுருவான மாம்சத்திற்கு உண்மையான துன்பம் என்றால் என்ன? தேவனைப் பொறுத்தவரை, மனுக்குலம் அவரைப் புரிந்து கொள்ளாததை அவர் துன்பமாகக் கருதுவதில்லை, மேலும் ஜனங்கள் தேவனைப் பற்றிய சில தவறான புரிதல்களை கொண்டிருப்பதையும், அவரைத் தேவனாகப் பார்க்காததையும் அவர் துன்பமாகக் கருதுவதில்லை. இருப்பினும், தேவன் மிகுந்த அநீதியை அனுபவித்திருக்க வேண்டும் என்றும், தேவன் மாம்சத்தில் இருந்த நேரத்தில், அவர் தன்னுடைய ஆள்தத்துவத்தை மனுக்குலத்திற்குக் காட்ட முடியாது, மேலும் அவருடைய மகத்துவத்தைக் காண ஜனங்களை அனுமதிக்க முடியாது என்றும், அற்பமான மாம்சத்தில் தேவன் தாழ்மையாய் ஒளித்துக் கொண்டிருக்கிறார், மேலும் இது அவருக்கு ஒரு பெரிய சித்தரவதையாக இருக்கும் என்றும் ஜனங்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். ஜனங்கள் புரிந்துகொள்ளக்கூடியதையும், தேவனுடைய துன்பத்தைப் பற்றி அவர்கள் காணக்கூடியதையும் பெரிதாக எடுத்துக் கொண்டு, தேவன் மீது எல்லா வகையான அனுதாபங்களையும் வெளிக்காட்டி, பலமுறை அவருடைய துன்பத்துக்கு ஒரு சிறிய பாராட்டையும் கூட அளிப்பார்கள். உண்மையில், அங்கே ஒரு வித்தியாசம் உள்ளது. தேவனுடைய துன்பத்தைப் பற்றி ஜனங்கள் புரிந்து கொள்வதற்கும் அவர் உண்மையிலேயே உணர்வதற்கும் இடையே ஒரு இடைவெளி உள்ளது. நான் உங்களுக்கு வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன், தேவனைப் பொறுத்தவரை, அது தேவனுடைய ஆவியானவராக அல்லது தேவனுடைய மனுவுருவான மாம்சமாக இருந்தாலும் சரி, மேலே விவரிக்கப்பட்ட துன்பம் உண்மையான துன்பம் அல்ல. அப்படியானால் தேவன் உண்மையில் துன்பப்படுகிற காரியம் என்ன? தேவனுடைய துன்பத்தை மனுவுருவான தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பேசுவோம்.

தேவன் மாம்சமாகிற போது, ஒரு சராசரியான, சாதாரண மனிதனாக மாறி மனுக்குலத்தின் மத்தியில், ஜனங்களுடன் அருகருகே வாழ்கையில், அவரால் வாழ்வதற்கான ஜனங்களுடைய முறைகளையும் சட்டங்களையும் மற்றும் தத்துவங்களையும் காணவும், உணரவும் முடியாதா? வாழ்வதற்கான இந்த முறைகளும் சட்டங்களும் அவரை எவ்வாறு உணர வைக்கின்றன? அவர் தனது இருதயத்தில் வெறுப்பை உணருகிறாரா? அவர் ஏன் வெறுப்பை உணர வேண்டும்? வாழ்வதற்கான மனுக்குலத்தின் வழிமுறைகள் மற்றும் சட்டங்கள் யாவை? அவை எதை அடிப்படையாகக் கொண்டுள்ளன? வாழ்வதற்கான வழியுடன் தொடர்புடைய வழிமுறைகள், சட்டங்கள், இன்னும் பல என இவை அனைத்தும் சாத்தானுடைய எண்ணப்போக்கு, அறிவு மற்றும் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இவ்வகையான சட்டங்களின் கீழ் வாழும் மனிதர்களுக்கு மனித நேயம் இல்லை, சத்தியம் இல்லை, அவர்கள் அனைவரும் சத்தியத்தை மீறி தேவனை விரோதிக்கிறார்கள். தேவனுடைய சாராம்சத்தை நாம் கூர்ந்து கவனித்தால் அவருடைய சாராம்சம் சாத்தானுடைய எண்ணப்போக்கு, அறிவு மற்றும் தத்துவத்திற்கு நேர் எதிரானது என்பதைக் காண்கிறோம். அவருடைய சாராம்சமானது நீதி, சத்தியம், பரிசுத்தம் மற்றும் அனைத்து நேர்மறையான விஷயங்களின் பிற யதார்த்தங்கள் ஆகியவையால் நிறைந்துள்ளது. இந்த சாராம்சத்தைக் கொண்டு, இப்படிப்பட்ட மனுக்குலத்தினிடையே வாழ்கிற தேவன் என்ன நினைக்கிறார்? அவர் தன்னுடைய இருதயத்தில் என்ன உணர்கிறார்? அது வேதனையால் நிறைந்திருக்கிறதல்லவா? அவருடைய இருதயம் வேதனையில் உள்ளது, அது எந்த ஒரு நபராலும் புரிந்துகொள்ளமுடியாத, அனுபவிக்க முடியாத வேதனையாகும். ஏனென்றால், அவர் எதிர்கொள்ளும், சந்திக்கும், கேட்கும், பார்க்கும் மற்றும் அனுபவிக்கும் அனைத்தும் மனுக்குலத்தின் சீர்கேடு, தீமை மற்றும் சத்தியத்திற்கு எதிரான அவர்களுடைய கலகத்தன்மையும் அவர்களுடைய எதிர்ப்பும் ஆகும். மனிதர்களிடமிருந்து வரும் அனைத்தும் அவருடைய துன்பத்துக்கான மூலகாரணமாகும். அதாவது அவருடைய சாராம்சமானது சீர்கேடான மனிதர்களைப் போன்றதல்ல என்பதால், மனிதர்களின் சீர்கேடு அவருடைய பெரிதான துன்பத்துக்கான மூலகாரணமாகிறது. தேவன் மாம்சமாகிறபோது, அவருடன் ஒரு பொதுவான மொழியைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவரை கண்டுபிடிக்க முடிகிறதா? அத்தகைய நபரை மனிதர்களிடையே காண இயலாது. தேவனுடன் தொடர்புகொள்ள முடிந்த அல்லது இந்தப் பரிமாற்றத்தைச் செய்ய முடிந்த ஒருவரையும் கண்டுபிடிக்க முடியாது, இதைக்குறித்து தேவன் எவ்வகையான உணர்வைக் கொண்டிருப்பார் என்று நீ சொல்லுவாய்? ஜனங்கள் கலந்துரையாடும், நேசிக்கும், பின்தொடரும் மற்றும் ஏக்கங்கொள்ளும் விஷயங்கள் பாவத்துடனும், தீயப்போக்குகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தேவன் இதையெல்லாம் எதிர்கொள்ளும்போது, அது அவருடைய இருதயத்தை ஆழமாய்க் காயப்படுத்துகிறதல்லவா? இவற்றையெல்லாம் எதிர்கொண்ட அவரால் இருதயத்தில் மகிழ்ச்சி கொள்ள முடியுமா? அவர் ஆறுதலைக் காண முடியுமா? அவரோடு வாழ்பவர்கள் கலகத்தன்மையாலும், தீமைகளாலும் நிறைந்த மனிதர்களாய் இருக்கும்போது, அவருடைய இருதயம் துன்பப்படாமல் இருக்குமா? இந்த துன்பம் உண்மையில் எவ்வளவு பெரியது, மேலும் அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? யார் கவனத்தில் கொள்கிறார்கள்? யாரால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது? தேவனுடைய இருதயத்தைப் புரிந்துகொள்ள ஜனங்களுக்கு வழியே இல்லை. அவரது துன்பம், குறிப்பாக ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும், மேலும் மனுக்குலத்தின் பற்றின்மையும், உணர்வின்மையும் தேவனுடைய துன்பத்தை இன்னும் ஆழமாக்குகிறது.

கிறிஸ்துவின் நெருக்கடியான நிலைக்காக அடிக்கடி அனுதாபம் காட்டும் சிலர் இருக்கிறார்கள், ஏனென்றால் வேதாகமத்தில் ஒரு வசனம் இப்படி உள்ளது: “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.” ஜனங்கள் இதைக் கேட்கும்போது அவர்கள் அதை மனதில் கொண்டு, இது தேவன் தாங்கிக்கொள்ளும் மிகப் பெரிய வேதனை என்றும், கிறிஸ்து தாங்கிக்கொள்ளும் மிகப் பெரிய வேதனை என்றும் நம்புகிறார்கள். இப்போது உண்மைகளின் கண்ணோட்டத்திலிருந்து அதைப் பார்க்கும்போது, அது உண்மையா? இல்லை; இந்தச் சிரமங்களை தேவன் வேதனையாக எடுத்துக்கொள்வதில்லை. அவரின் மாம்சத்தின் சிரமங்களால் அநீதிக்கு எதிராக ஒருபோதும் அவர் சத்தமிட்டதில்லை, அவர் ஒருபோதும் மனிதர்கள் தனக்கு கைம்மாறு செய்யவோ அல்லது எதையும் வெகுமதியாக அளிக்கச் செய்யவோ இல்லை. இருப்பினும், மனுக்குலம் பற்றிய அனைத்தையும் மற்றும் சீர்கேடான வாழ்க்கை மற்றும் சீர்கெட்ட மனிதர்களின் தீமையை நேரில் பார்க்கும்போதும், மனுக்குலம் சாத்தானின் பிடியில் இருப்பதையும், சாத்தானால் சிறைப்படுத்தப்பட்டு, தப்பிக்க முடியாமல் இருப்பதையும், பாவத்தில் வாழும் ஜனங்களுக்குச் சத்தியம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதையும் நேரில் பார்க்கும்போதும், அவரால் இந்த பாவங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனிதர்களைப் பற்றிய அவரது வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ஆனால் அவர் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும். இது தேவனின் பெரும் வேதனையாகும். தேவன் தன்னுடைய இருதயத்தின் குரலையோ அல்லது தன்னுடைய உணர்ச்சிகளையோ கூட தன் விசுவாசிகளிடையே முழுமையாக வெளிப்படுத்த முடியாது, அவரை விசுவாசிக்கிறவர்கள் எவரும் அவருடைய வேதனைகளை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வேதனையை நாளுக்கு நாள், வருடா வருடம், திரும்பத் திரும்ப தாங்கிக்கொள்ளும் அவருடைய இருதயத்தைப் புரிந்து கொள்ளவோ அல்லது அவருடைய இருதயத்தை ஆற்றவோ கூட யாரும் முயற்சிப்பதில்லை. இவை அனைத்திலும் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? அவர் கொடுத்ததற்குப் பதிலாக, தேவன் மனிதர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் தேவனுடைய சாராம்சத்தின் காரணமாக, மனுக்குலத்தின் தீமையையும், சீர்கேட்டையும், பாவத்தையும் அவரால் நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ள முடியாது, அதற்குப் பதிலாக தீவிர அருவருப்பையும், வெறுப்பையும் உணர்கிறார், இது தேவனுடைய இருதயமும் அவருடைய மாம்சமும் முடிவில்லாத வேதனையைத் தாங்க வழிவகுக்கிறது. நீங்கள் இதைப் பார்த்தீர்களா? பெரும்பாலும், உங்களில் எவராலும் இதைப் பார்க்க முடியவில்லை, ஏனென்றால் உங்களில் எவராலும் தேவனை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது. காலப்போக்கில் அதைப் படிப்படியாக நீங்களே அனுபவித்துணர வேண்டும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 75

இயேசு ஐயாயிரம் பேரைப் போஷிக்கிறார்

யோவா. 6:8-13  அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.

“ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களின்” கருத்து என்ன? சாதாரணமாக, ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களைக் கொண்டு எத்தனை பேரைப் போதுமான அளவு போஷிக்க முடியும்? ஒரு சராசரி நபரின் பசியின் அடிப்படையில் உங்கள் அளவீட்டை எடுத்துக் கொண்டால், இது இரண்டு பேருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இதுவே “ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள்” குறித்த மிக அடிப்படையான கருத்தாகும். இருப்பினும் இந்தப் பத்தியில் ஐந்து அப்பங்கள் மற்றும் 2 மீன்களால் எத்தனை பேர் போஷிக்கப்பட்டார்கள்? பின்வருமாறு வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது: “அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.” ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களுடன் ஒப்பிடும்போது, ஐயாயிரம் என்பது பெரிய எண்ணிக்கையா? இவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பது எதைக் காட்டுகிறது? ஒரு மனித கண்ணோட்டத்திலிருந்து, ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பிரித்துக் கொடுப்பது என்பது சாத்தியமற்றது, ஏனென்றால் ஜனங்களுக்கும் உணவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு மிக அதிகமாகும். ஒவ்வொரு நபருக்கும் ஒரு சிறிய கடி மட்டுமே கொடுக்கப்பட்டாலும் கூட, அப்போதும் அது ஐயாயிரம் பேருக்குப் போதுமானதாக இருக்காது. ஆனால் இங்கே, கர்த்தராகிய இயேசு ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார், ஐயாயிரம் பேர் தங்கள் உணவை வயிறார உண்ணும்படி உறுதி செய்ததுமல்லாமல், உணவு மீதமும் இருந்தது. வேதாகமம் இவ்வாறு சொல்கிறது: “அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.” இந்த அற்புதம் கர்த்தராகிய இயேசுவின் அடையாளத்தையும் அந்தஸ்தையும் காணவும், தேவனுக்கு முடியாததென்று ஒன்றும் இல்லை என்பதைக் காணவும் ஜனங்களுக்கு உதவியது, இவ்வகையில் அவர்கள் தேவனுடைய சர்வவல்லமையின் உண்மைத்தன்மையைக் கண்டார்கள். ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் போதுமானதாக இருந்தன, ஆனால் எந்த உணவும் இல்லாதிருந்தால், தேவனால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருக்க முடியுமா? நிச்சயமாக அவரால் முடிந்திருக்கும்! இது ஓர் அற்புதம் எனவே நிச்சயமாக இது புரிந்துகொள்ள முடியாதது, நம்ப முடியாதது மற்றும் இரகசியமானது என்று ஜனங்கள் நினைத்தார்கள், ஆனால் தேவனைப் பொறுத்தவரை, இதுபோன்ற ஒன்றைச் செய்வது அவருக்கு ஒரு காரியமே இல்லை. இது தேவனுக்குச் சாதாரணமான ஒன்று என்பதால் அதைப் பற்றி இப்போது ஏன் விளக்கத்திற்காகப் பேச வேண்டும்? ஏனென்றால் இந்த அற்புதத்தின் பின்னால் இருப்பது மனுக்குலத்தால் இதற்கு முன் உணரப்படாத கர்த்தராகிய இயேசுவின் சித்தமாகும்.

முதலில் இந்த ஐயாயிரம் பேர் எவ்வகையான ஜனங்கள் என்பதைப் புரிந்து கொள்வோம். அவர்கள் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றினவர்களா? வேதத்திலிருந்து, அவர்கள் அவரைப் பின்பற்றினவர்கள் அல்ல என்பதை நாம் அறிவோம். கர்த்தராகிய இயேசு யார் என்று அவர்களுக்குத் தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது! குறைந்தபட்சம், அவர்களுக்கு முன்னால் நிற்கும் நபர் கிறிஸ்து என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை, அல்லது சிலர் அவருடைய பெயர் என்னவென்று மட்டும் அறிந்திருக்கலாம், அல்லது அவர் செய்த காரியங்கள சிலவற்றைப் பற்றி அறிந்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம், கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய அவர்களின் ஆர்வம் அவரைப் பற்றிய கதைகளைக் கேட்ட போது அவர்களுக்குத் தூண்டப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்றோ, அவரைப் புரிந்துகொண்டார்கள் என்றோ உங்களால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. கர்த்தராகிய இயேசு இந்த ஐயாயிரம் ஜனங்களைக் கண்டபோது, அவர்கள் பசியுடன் இருந்தார்கள், வயிற்றை நிரப்புவது பற்றி மட்டுமே அவர்களால் சிந்திக்க முடிந்தது, ஆகவே, இந்தச் சூழலில்தான் கர்த்தராகிய இயேசு அவர்களுடைய விருப்பத்தை நிறைவாக்கினார். அவர்களுடைய விருப்பத்தை அவர் நிறைவேற்றின போது அவருடைய இருதயத்தில் என்ன இருந்தது? வயிற்றை மட்டுமே நிரப்ப விரும்பின இந்த ஜனங்களைப் பற்றின அவருடைய மனப்பான்மை என்ன? இந்த நேரத்தில், கர்த்தராகிய இயேசுவின் எண்ணங்களும், அவருடைய மனப்பான்மையும் தேவனுடைய தன்மை மற்றும் சாராம்சத்துடன் தொடர்புடையவையாக இருந்தது. ஒரு முழு உணவை மட்டுமே சாப்பிட விரும்பின காலியான வயிறுகளைக் கொண்ட இந்த ஐயாயிரம் பேரை எதிர்கொள்கையில், அவரிடத்தில் மிகுந்த ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட இந்த ஜனங்களை எதிர்கொள்வதில், கர்த்தராகிய இயேசு அவர்கள் மேல் கிருபையை அளிக்க இந்த அற்புதத்தைப் பயன்படுத்த மட்டுமே நினைத்தார். இருப்பினும், அவர்கள் தம்மைப் பின்பற்றுபவர்களாக மாறுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்கள் வயிற்றை நிரப்ப சாப்பிடவே விரும்பினார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார், ஆகவே, அவர் அங்கே இருந்ததைக் கொண்டு மிகச் சிறந்ததைச் செய்தார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பயன்படுத்தி ஐயாயிரம் ஜனங்களைப் போஷித்தார். ஆச்சரியமான விஷயங்களைக் கண்டு மகிழ்ந்த, அற்புதங்களைக் காண விரும்பின இந்த ஜனங்களின் கண்களை அவர் திறந்தார், மேலும் அவர்கள் மனுவுருவான தேவன் செய்யக் கூடிய காரியங்களைத் தங்கள் சொந்தக் கண்களால் கண்டார்கள். கர்த்தராகிய இயேசு அவர்களின் ஆர்வத்தை நிறைவேற்ற தெளிவான காரியங்களைப் பயன்படுத்தின போதும், இந்த ஐயாயிரம் பேரும் ஒரு நல்ல உணவை மட்டுமே விரும்புவதாக அவர் ஏற்கனவே தன் இருதயத்தில் அறிந்திருந்தார், எனவே அவர் அவர்களுக்குப் பிரசங்கிக்கவுமில்லை அல்லது வேறேதையும் சொல்லவுமில்லை, இந்த அற்புதம் நடக்கும் போது அவர்களைப் பார்க்க மட்டுமே அனுமதித்தார். அவரை உண்மையாய்ப் பின்பற்றின சீஷர்களை நடத்தியதைப் போல அவரால் இந்த ஜனங்களை நிச்சயமாக நடத்த முடியவில்லை, ஆனால் தேவனுடைய இருதயத்தில் எல்லா உயிரினங்களும் அவருடைய ஆளுகையின் கீழ் உள்ளன, மேலும், அவருடைய பார்வையில் உள்ள எல்லா உயிரினங்களையும் தேவைப்படும்போது தேவனுடைய கிருபையை அனுபவிக்க அவர் அனுமதிப்பார். அவர் யார் என்பதை இந்த ஜனங்கள் அறியாமல் அல்லது அவரைப் புரிந்து கொள்ளாமல் அல்லது அவரைப் பற்றிய எந்தவிதமான உணர்வும் இல்லாமல் அல்லது அப்பங்களையும் மீன்களையும் சாப்பிட்ட பின்பும் அவரிடத்தில் நன்றி உணர்வோடு இல்லாமல் இருந்த போதும் தேவன் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர் தேவனுடைய கிருபையை அனுபவிக்க இந்த ஜனங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பைக் கொடுத்தார். தேவன் தான் செய்வதில் கொள்கை ரீதியானவர் என்றும், அவர் அவிசுவாசிகளைக் பொறுப்பாகக் கவனிப்பதோ அல்லது பாதுகாப்பதோ இல்லை என்றும் குறிப்பாக அவருடைய கிருபையை அனுபவிக்க அவர்களை அவர் அனுமதிப்பதில்லை என்றும் சில ஜனங்கள் சொல்கிறார்கள். அது உண்மையில் அப்படியா? தேவனுடைய பார்வையில், அவர் தாமாகவே சிருஷ்டித்த உயிரினங்களாக அவர்கள் இருக்கும் வரையிலும், அவர் அவர்களை நிர்வகித்து பராமரிப்பார், மேலும் பல வழிகளில் அவர் அவர்களை நடத்துவார், அவர்களுக்காகத் திட்டமிடுவார், அவர்களை ஆளுகை செய்வார். இவை அனைத்தும் அனைத்துக் காரியங்களைக் குறித்ததான தேவனுடைய எண்ணங்களும் மனப்பான்மையும் ஆகும்.

அப்பங்களையும் மீன்களையும் சாப்பிட்ட ஐயாயிரம் பேர் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்ற திட்டமிடவில்லை என்றாலும், அவர் அவர்களிடம் எவ்விதமான வற்புறுத்துகிற கோரிக்கைகளையும் வைக்கவில்லை; அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டவுடன், கர்த்தராகிய இயேசு என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் அவர்களுக்கு ஏதாவது பிரசங்கித்தாரா? இதைச் செய்த பின் அவர் எங்குச் சென்றார்? கர்த்தராகிய இயேசு அவர்களிடம் எதையும் சொன்னதாக வேதாகமம் பதிவு செய்யவில்லை, அவர் தம்முடைய அற்புதத்தைச் செய்து அமைதியாக வெளியேறினார் என்றே இருக்கிறது. எனவே அவர் இந்த ஜனங்களிடம் ஏதாகிலும் கேட்டாரா? ஏதாவது வெறுப்பு இருந்ததா? இல்லை, இவை எதுவும் இங்கே இல்லை. அவரைப் பின்தொடர முடியாத இந்த ஜனங்களிடம் அதன் பின் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை, மேலும் அந்த நேரத்தில் அவருடைய இருதயம் வேதனையில் இருந்தது. ஏனென்றால் அவர் மனுக்குலத்தின் சீரழிவைக் கண்டார், மனுக்குலம் அவரை நிராகரிப்பதை அவர் உணர்ந்தார், அவர் இந்த ஜனங்களைப் பார்த்த போது, அவர்களுடன் இருந்தபோது, அவர் மனிதனின் முட்டாள்தனத்தாலும், அறியாமையாலும் வருத்தமுற்றார், மேலும் அவருடைய இருதயம் வேதனையில் இருந்தது, அவர் விரும்பியதெல்லாம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இந்த ஜனங்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதே. கர்த்தர் தம்முடைய இருதயத்தில் அவர்களிடத்தில் எதையும் கேட்கவில்லை, அவர்களிடம் கவனம் செலுத்த விரும்பவில்லை, இன்னும் அதிகமாக, அவர்கள் மீது தனது சக்தியைச் செலவழிக்க விரும்பவில்லை. அவர்களால் தன்னைப் பின்பற்ற முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார், ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அவர்கள் மீதான அவருடைய மனப்பான்மை அப்போதும் மிகத் தெளிவாக இருந்தது. அவர் அவர்களை அன்பாக நடத்தவே விரும்பினார், அவர்கள் மேல் கிருபையை அளிக்க விரும்பினார், உண்மையில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரிவாக நடத்தவும், அவற்றின் தேவைகளைச் சந்திக்கவும், அவற்றைப் போஷிக்கவும் செய்வதாகிய இதுவே அவருடைய ஆளுகையின் கீழுள்ள ஒவ்வொரு உயிரினங்கள் மேலுமுள்ள தேவனுடைய மனப்பான்மையாக இருந்தது. கர்த்தராகிய இயேசு மனுவுருவான தேவன் என்ற குறிப்பிட்ட காரணத்தினால், அவர் மிக இயல்பாக தேவனுடைய சொந்தச் சாராம்சத்தை வெளிப்படுத்தினார் மற்றும் இந்த ஜனங்களைப் பரிவாக நடத்தினார். அவர் அவர்களைக் கருணையுள்ள, சகிப்புத்தன்மையுள்ள இருதயத்தோடு நடத்தினார், அத்தகைய இருதயத்தோடு அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டினார். இந்த ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவை எப்படிப் பார்த்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அங்கே எந்த மாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல், சகல சிருஷ்டிப்பின் கர்த்தர் என்ற தனது நிலைப்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு உயிரினத்தையும் அவர் நடத்தினார். அவர் வெளிப்படுத்திய அனைத்தும், விதிவிலக்கு இல்லாமல், தேவனுடைய மனநிலை, அவரிடத்தில் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பவையாக இருந்தன. கர்த்தராகிய இயேசு அமைதியாக இந்தக் காரியத்தைச் செய்தார், பின்னர் அமைதியாக வெளியேறினார், தேவனுடைய மனநிலையின் எந்த அம்சம் இது? இது தேவனுடைய கிருபை என்று நீங்கள் சொல்ல முடியுமா? இது தேவனுடைய தன்னலமற்ற தன்மை என்று நீங்கள் கூற முடியுமா? இது ஒரு சாதாரணமான நபரால் செய்ய முடிகிற ஒன்றா? நிச்சயமாக இல்லை! சாராம்சத்தில், கர்த்தராகிய இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு போஷித்த இந்த ஐயாயிரம் பேர் யார்? அவர்கள் அவருடன் ஒத்துப் போகும் நபர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் அனைவரும் தேவனுக்கு விரோதமானவர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் முற்றிலும் தேவனுடன் ஒத்துப்போகவில்லை என்பதையும் அவர்களின் சாராம்சம் தேவனுக்கு முற்றிலும் விரோதமானது என்பதையும் உறுதியாகக் கூறலாம். ஆனால் தேவன் அவர்களை எப்படி நடத்தினார்? தேவன் மீது ஜனங்களுக்கு இருந்த விரோதத்தைத் தணிக்க அவர் ஒரு முறைமையைப் பயன்படுத்தினார், இந்த முறைமையானது “இரக்கம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, கர்த்தராகிய இயேசு இந்த ஜனங்களைப் பாவிகளாகக் கண்டாலும், தேவனுடைய பார்வையில் எவ்வாறாயினும் அவர்கள் அவருடைய சிருஷ்டிப்பாக இருந்தார்கள், ஆகவே, அவர் இந்தப் பாவிகளை அப்போதும் தயவோடு நடத்தினார். இது தேவனுடைய சகிப்புத்தன்மையாகும், மேலும் இந்தச் சகிப்புத்தன்மையானது தேவனுடைய சொந்த அடையாளத்தினாலும் சாராம்சத்தினாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இது தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட எந்த மனிதனாலும் முடியாத ஒன்று, தேவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 76

மனுக்குலத்தின் மீதான தேவனுடைய எண்ணங்களையும், அவருடைய மனப்பான்மையையும் உன்னால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடிந்தால், சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினத்தின் மீதான தேவனுடைய உணர்ச்சியையும், அக்கறையையும் நீ உண்மையிலேயே புரிந்து கொள்ளும்போது, சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் ஒவ்வொருவரின் மேலும் பாவித்த ஈடுபாட்டையும், அன்பையும் உன்னால் புரிந்துகொள்ள முடியும். இது நிகழும் போது, தேவனுடைய அன்பை விவரிக்க நீ இரண்டு சொற்களைப் பயன்படுத்துவாய். அந்த இரண்டு சொற்கள் என்ன? சிலர் “தன்னலமற்றது” என்பார்கள் சிலர் “கொடைப்பண்புள்ளது” என்பார்கள். இந்த இரண்டில் “கொடைப்பண்புள்ளது” என்பது தேவனுடைய அன்பை விவரிக்க மிகக் குறைந்தபட்சமே பொருத்தமானதாகும். இது மகத்தான அல்லது பரந்த எண்ணம் கொண்ட ஒருவரை விவரிக்க ஜனங்கள் பயன்படுத்தும் சொல்லாகும். இந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன், ஏனென்றால் இது சீரற்ற முறையில், கண்மூடித்தனமாக, கொள்கையைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் தர்மத்தைக் குறிக்கிறது. இது மூடத்தனமான மற்றும் குழப்பமான ஜனங்களிடம் பரவலாகக் காணப்படுகிறதைப் போல அதிக உணர்ச்சிவசமிக்க மனப்போக்காகும். தேவனுடைய அன்பை விவரிக்க இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படும்போது, தவிர்க்க முடியாமல் அதில் ஒரு தூஷண உள்ளர்த்தம் உள்ளது. தேவனுடைய அன்பை இன்னும் பொருத்தமாக விவரிக்கும் இரண்டு வார்த்தைகள் இங்கே என்னிடம் உள்ளன. அவை யாவை? முதலாவது “அளவற்ற” என்ற வார்த்தை. இந்த வார்த்தை உணர்ச்சியை மிகவும் தூண்டக்கூடியதாய் இருக்கிறதல்லவா? இரண்டாவது “பரந்த” என்ற வார்த்தை. தேவனுடைய அன்பை விவரிக்க நான் பயன்படுத்தும் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உண்மையான அர்த்தம் உள்ளது. எழுத்தின் பிரகாரமாக, “அளவற்ற” என்பது ஒரு பொருளின் அளவு அல்லது திறனை விவரிக்கிறது, ஆனால் அந்தப் பொருள் எவ்வளவு பெரியது என்பதைப் பொருட்படுத்தாமல், அது ஜனங்கள் தொடக்கூடியதும் காணக்கூடியதுமாய் இருக்கிறது. ஏனென்றால் அது மெய்யானனதாக இருக்கிறது, அது ஒரு சுருக்கமான பொருள் அல்ல, ஆனால் ஜனங்களுக்குப் பெரிதும் துல்லியமாகவும், நடைமுறை வழியிலும் யோசனைகளை வழங்கக் கூடிய ஒன்றாகும். நீங்கள் அதை இருபரிமாண அல்லது முப்பரிமாண கண்ணோட்டத்தில் பார்த்தாலும், அதன் இருப்பை நீங்கள் கற்பனை செய்யத் தேவையில்லை, ஏனென்றால் அது உண்மையில் மெய்யாகவே இருக்கிற ஒன்றாகும். தேவனுடைய அன்பை விவரிக்க, “அளவற்ற,” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது, அவருடைய அன்பை அளவிடுவதற்கான ஒரு முயற்சியாக உணரப்பட்டாலும், அவருடைய அன்பு அளவிட முடியாதது என்ற உணர்வையும் அது தருகிறது. தேவனுடைய அன்பை அளவிட முடியும் என்று நான் சொல்லுகிறேன், ஏனென்றால் அவருடைய அன்பு வெறுமையானதாக இல்லை, மேலும் அது ஒரு புராணக்கதையும் அல்ல. மாறாக, அது தேவனுடைய ஆளுகையின் கீழுள்ள அனைத்துக் காரியங்களாலும் பகிர்ந்து கொள்ளப்படும் ஒன்றாகும், எல்லா உயிரினங்களாலும் வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு கண்ணோட்டங்களிலும் அனுபவிக்கப்படும் ஒன்றாகும். ஜனங்களால் அதைப் பார்க்கவும் தொடவும் முடியாது என்றாலும், இந்த அன்பு கொஞ்சம் கொஞ்சமாக, அவர்கள் உயிரோடிருக்கையில் வெளிப்படுத்தப்படும்போது, எல்லாக் காரியங்களுக்கும் வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறது மற்றும் உயிரூட்டுகிறது. மேலும் அவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் அனுபவிக்கும் தேவனுடைய அன்பை எண்ணி, சாட்சி கூறுகிறார்கள். தேவனுடைய அன்பு அளவிட முடியாதது என்று நான் சொல்கிறேன், ஏனென்றால் எல்லாக் காரியங்களுக்கும் கொடுக்கும், பராமரிக்கும் தேவனுடைய இரகசியத்தைப் புரிந்து கொள்வது மனிதர்களுக்குக் கடினமானதாகும், அப்படியே எல்லாக் காரியங்களுக்குமான, குறிப்பாக மனுக்குலத்திற்கான தேவனுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வதும் கடினமே. அதாவது, சிருஷ்டிகர் மனுக்குலத்திற்காகச் சிந்திய இரத்தமும் கண்ணீரும் யாருக்கும் தெரியாது. எவராலும் புரிந்து கொள்ள முடியாது, எவராலும் தன் சொந்தக் கைகளால் சிருஷ்டித்த மனுக்குலத்தின் மீது சிருஷ்டிகர் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தையோ அல்லது மதிப்பையோ புரிந்து கொள்ள முடியாது. தேவனுடைய அன்பை அளவற்றது என விவரிப்பது, அதன் அகலத்தையும், அதன் உண்மை இருப்பையும் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஜனங்களுக்கு உதவுவதற்கேயாகும். “சிருஷ்டிகர்” என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை ஜனங்கள் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளவும், மேலும் “சிருஷ்டிப்பு” என்ற பெயரின் உண்மையான அர்த்தத்தை ஜனங்கள் ஆழமாகப் புரிந்து கொள்ளவும் உதவுவதற்கே ஆகும். “பரந்த” என்ற வார்த்தை பொதுவாக எதை விவரிக்கிறது? அது பொதுவாக சமுத்திரம் அல்லது பிரபஞ்சத்தை விவரிக்கப் பயன்படுகிறது, எடுத்துக்காட்டாகப்: “பரந்த பிரபஞ்சம்” அல்லது “பரந்த சமுத்திரம்”. பிரபஞ்சத்தின் விஸ்தாரமும், சந்தடியற்ற ஆழமும் மனிதப்புரிதலுக்கு அப்பாற்பட்டவையாகும். அது மனிதனுடைய கற்பனையைக் கவரும் ஒன்று, அவர்கள் அதை அதிகமாய் விரும்புகிறார்கள். அதனுடைய இரகசியமும், ஆழமும் பார்க்கும்படி உள்ளன, ஆனால் அடைய முடியாதவையாக இருக்கின்றன. நீ சமுத்திரத்தைப் பற்றி நினைக்கும் போது, நீ அதன் அகலத்தை நினைக்கிறாய், அது எல்லையற்றதாகத் தோன்றுகிறது, மேலும் நீ அதன் மர்மத்தையும், காரியங்களைக் கொண்டிருக்கும் பெரிதான கொள்ளளவையும் உணர முடியும். இதனால்தான் தேவனுடைய அன்பை விவரிக்கவும், அது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை உணரவும், அவருடைய அன்பின் ஆழமான அழகையும், தேவனுடைய அன்பின் வல்லமை எல்லையற்றது மற்றும் பரந்த அளவிலானது என்பதையும் உணர்ந்துகொள்ள ஜனங்களுக்கு உதவவே நான் “பரந்த” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அவருடைய அன்பின் பரிசுத்தத்தன்மையையும், அவருடைய அன்பின் மூலம் வெளிப்படும் தேவனுடைய பெருமதிப்பையும், அவமதிக்க முடியாத தன்மையையும் உணரும்படி ஜனங்களுக்கு உதவ நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். தேவனுடைய அன்பை விவரிக்கப் “பரந்த” என்பது பொருத்தமான வார்த்தை என்று இப்போது நீங்கள் நினைக்கிறீர்களா? தேவனுடைய அன்பை “அளவற்ற” மற்றும் “பரந்த” என்ற இரண்டு வார்த்தைகளைக் கொண்டு அளவிட முடியுமா? நிச்சயமாக! மனித மொழியில் இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே ஓரளவு பொருத்தமானவையாகும், மேலும் அவை தேவனுடைய அன்பை விவரிப்பதற்கு ஓரளவு நெருக்கமானவையாகும். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? தேவனுடைய அன்பை உங்களை விவரிக்கச் சொன்னால், நீங்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்துவீர்களா? பெரும்பாலும் நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள், ஏனென்றால் தேவனுடைய அன்பைப் பற்றிய உங்கள் புரிதலும், புரிந்துகொள்ளும்தன்மையும் இருபரிமாண கண்ணோட்டத்தின் எல்லையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, மேலும் முப்பரிமாண இடத்தின் உயரத்திற்கு உயரவில்லை. ஆகவே, நான் உங்களை தேவனுடைய அன்பை விவரிக்கச் சொல்லி இருந்தால், உங்களிடம் வார்த்தைகள் இல்லை என்று நீங்கள் உணர்வீர்கள் அல்லது ஒருவேளை நீங்கள் வாயடைத்துப்போய்க் கூட இருப்பீர்கள். இன்று நான் பேசிய வார்த்தைகள் உங்களுக்குப் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கலாம் அல்லது நீங்கள் ஒருவேளை வெறுமனே ஒப்புக்கொள்ளாமல் போகலாம். இது தேவனுடைய அன்பைப் பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதலும், புரிதலும் மேலோட்டமானது மற்றும் குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதையே காட்டுகிறது. தேவன் தன்னலமற்றவர் என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன்; “தன்னலமற்றவர்” என்ற வார்த்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? தேவனுடைய அன்பைத் தன்னலமற்றது என்று மட்டுமே விவரிப்பது சாத்தியமா? இது மிகவும் குறுகிய எல்லை இல்லையா? இந்த விஷயத்தின் மூலம் நீங்கள் எதையாவது பெற்றுக் கொள்ளும்படி, இதைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 77

லாசருவின் உயிர்த்தெழுதல் தேவனை மகிமைப்படுத்துகிறது

யோவா. 11:43-44  இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

இந்த பத்தியைப் படித்தபிறகு என்ன உணர்வுகள் உங்களுக்குத் தோன்றுகின்றன? கர்த்தராகிய இயேசு செய்த இந்த அற்புதத்தின் முக்கியத்துவம் முந்தையதை விட மிகப் பெரியதாகும், ஏனென்றால் மரித்த மனிதனைக் கல்லறையிலிருந்து திரும்பக் கொண்டு வருவதைவிட வேறெந்த அற்புதமும் இவ்வளவு பிரமிக்கச்செய்கிறதாக இல்லை. அந்தக் காலத்தில், கர்த்தராகிய இயேசு இது போன்ற ஒன்றைச் செய்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தேவன் மாம்சமானதால், ஜனங்கள் அவருடைய வெளிப்புறத் தோற்றத்தை, அவருடைய நடைமுறைப் பக்கத்தை மற்றும் முக்கியமில்லாத அம்சத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. அவருடைய குணாம்சத்தையோ அல்லது அவர் கொண்டிருந்ததைப் போலவிருந்த சில சிறப்புத் திறன்களையோ சிலர் பார்த்து, புரிந்து கொண்டிருந்தாலும் கூட கர்த்தராகிய இயேசு எங்கிருந்து வந்தார், அவர் சாராம்சத்தில் அவர் உண்மையிலேயே யாராக இருந்தார், வேறு எந்த விஷயங்களை அவர் உண்மையில் செய்யக்கூடியவர் என்று ஒருவருக்கும் தெரியாதிருந்தது. இவை அனைத்தும் மனுக்குலத்திற்கு தெரியாதிருந்தது. ஆகவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கும், உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் பலரும் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க விரும்பினர். தேவன் தனது சொந்த அடையாளத்தை நிரூபிக்க ஏதாவது செய்ய முடியுமா? தேவனைப் பொறுத்தவரை, இது செய்வதற்கு மிகச் சுலபமானதும், எளிமையாக செய்யக்கூடியதுமாய் இருந்தது. அவருடைய அடையாளத்தையும் சாராம்சத்தையும் நிரூபிக்க, அவர் எவ்விடத்திலும், எந்நேரத்திலும் எதையாகிலும் செய்ய முடியும், ஆனால் தேவன் ஒரு திட்டத்துடனும், படிப்படியாகவுமே காரியங்களைச் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் கண்மூடித்தனமாகக் காரியங்களைச் செய்யவில்லை, மாறாக, மனிதனைப் பார்க்க அனுமதிக்கும் ஒன்றைச் செய்யவும், உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருக்கும் ஒன்றைச் செய்யவும், அவர் சரியான நேரத்திற்காகவும், சரியான வாய்ப்புக்காகவும் காத்திருந்தார். இப்படி அவர் தனது அதிகாரத்தையும் அடையாளத்தையும் நிரூபித்தார். அப்படியானால், லாசருவின் உயிர்த்தெழுதல் கர்த்தராகிய இயேசுவின் அடையாளத்தை நிரூபிக்குமா? பின்வரும் வசனத்தின் பத்தியைக் கவனிப்போம்: “இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்….” கர்த்தராகிய இயேசு இதைச் செய்த போது, அவர் ஒரே ஒரு காரியத்தை மட்டுமே சொன்னார்: “லாசருவே, வெளியே வா.” பின்னர் லாசரு தனது கல்லறையில் இருந்து வெளியே வந்தான்—இது கர்த்தர் சொன்ன சில வார்த்தைகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த நேரத்தில், கர்த்தராகிய இயேசு ஒரு பலிபீடத்தை அமைக்கவில்லை வேறு எந்தச் செயலையும் அவர் செய்யவும் இல்லை. அவர் இந்த ஒரு விஷயத்தை மட்டுமே சொன்னார். இதை ஓர் அற்புதம் என்றா அல்லது கட்டளை என்றா, எப்படி அழைக்க வேண்டும்? அல்லது அது ஒருவித மந்திரமாக இருந்ததா? மேலோட்டமாகப் பார்க்கும்போது, இதை ஓர் அற்புதம் என்றழைக்கலாம் எனத் தோன்றுகிறது, நீங்கள் இதை ஒரு நவீனக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், நிச்சயமாக அப்போதும் அதை ஓர் அற்புதம் என்று நீங்கள் அழைக்கக்கூடும். ஆயினும், ஓர் ஆத்துமாவை மரித்தோரிலிருந்து திரும்ப அழைப்பதாகக் கருதப்படும் மந்திரம் என்று அதை நிச்சயமாகக் கருத முடியாது, மேலும் அது நிச்சயம் எவ்வகையிலும் மந்திரமாக இருக்கவில்லை. இந்த அற்புதமானது, சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் மிகச் சாதாரணமான, சிறிய அளவிலான சான்றாக இருந்தது எனச் சொல்வது சரியானதாகும். இதுவே தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் ஆகும். ஒரு நபரை மரிக்கச் செய்வதற்கும், அவனுடைய ஆவி அவன் உடலை விட்டு வெளியேறி பாதாளத்திற்கோ அல்லது அது போக வேண்டிய வேறு இடத்திற்கோ போக வைப்பதற்கும் தேவனிடம் அதிகாரமுண்டு. ஒரு நபரின் மரிக்கும் நேரம், மற்றும் அவன் இறந்த பிறகு செல்லும் இடம் ஆகிய இவை தேவனால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த முடிவுகளை மனிதர்கள், நிகழ்வுகள், பொருட்கள், விண்வெளி அல்லது புவியியல் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படாதபடி, எந்த நேரத்திலும், எவ்விடத்திலும் அவரால் எடுக்க முடியும். அவர் ஒன்றைச் செய்ய விரும்பினால், அவரால் அதைச் செய்ய முடியும். ஏனென்றால் எல்லா பொருட்களும், உயிரினங்களும் அவருடைய ஆளுகையின் கீழ் உள்ளன, மேலும் எல்லாக் காரியங்களும் அவருடைய வார்த்தையினாலும், அவருடைய அதிகாரத்தினாலும் பெருகி, இருந்து, அழிந்து போகின்றன. அவர் ஒன்றைச் செய்ய விரும்பினால், அவரால் அதைச் செய்ய முடியும். ஏனென்றால் எல்லா பொருட்களும், உயிரினங்களும் அவருடைய ஆளுகையின் கீழ் உள்ளன, மேலும் எல்லாக் காரியங்களும் அவருடைய வார்த்தையினாலும், அவருடைய அதிகாரத்தினாலும் பிறந்து, வாழ்ந்து, அழிந்து போகின்றன. அவர் ஒரு மரித்த மனிதனை உயிரோடெழுப்ப முடியும், அதுவும், அவர் அதை எந்த நேரத்திலும் எவ்விடத்திலும் செய்ய முடியும். இது சிருஷ்டிகர் மட்டுமே கொண்டிருக்கும் அதிகாரமாகும்.

கர்த்தராகிய இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்ததைப் போன்ற செயல்களைச் செய்த போது, அவருடைய குறிக்கோளானது, மனிதர்களும் சாத்தானும் பார்க்கும்படி ஆதாரம் அளிப்பதாயிருந்தது, மேலும் மனுக்குலத்தைப் பற்றின அனைத்தையும் மற்றும் மனுக்குலத்தின் ஜீவன் மற்றும் மரணம் தேவனால் தீர்மானிக்கப்படுகின்றன என்றும், அவர் மாம்சமான போதிலும், அவர் காணக்கூடிய பொருள் உலகத்தையும், மனிதர்கள் காணக்கூடாத ஆவிக்குரிய உலகத்தையும் கூட ஆளுகைச் செய்பவராக இருந்தார் என்றும், மனிதர்களையும் சாத்தானையும் அறிந்துகொள்ளச் செய்கிறதாய் இருந்தது. மனுக்குலத்தைப் பற்றிய எல்லாம் சாத்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டவை அல்ல என்பதை மனிதர்களும் சாத்தானும் அறியக் கூடியதாய் இருந்தது. இது தேவனுடைய அதிகாரத்தின் வெளிப்பாடும், சான்றுமாகும், மேலும் இது, மனுக்குலத்தின் ஜீவனும், மரணமும் தேவனுடைய கரங்களில் உள்ளன என்ற செய்தியை எல்லாவற்றிற்கும் அனுப்ப தேவனுக்கு ஒரு வழியாகும். கர்த்தராகிய இயேசு லாசருவை உயிர்த்தெழப் பண்ணினது, சிருஷ்டிகர் மனுக்குலத்திற்குப் போதிக்கும் மற்றும் கற்பிக்கும் வழிகளில் ஒன்றாகும். இது அவர் மனுக்குலத்திற்குக் கற்பிப்பதற்கும், மனுக்குலத்தின் தேவைகளைச் சந்திப்பதற்கும் அவர் தனது வல்லமையையும், அதிகாரத்தையும் பயன்படுத்தின ஓர் உறுதியான செயலாகும். தான் எல்லாக் காரியங்களையும் ஆளுகைச் செய்யும் உண்மையை மனுக்குலம் அறிந்துகொள்ள அனுமதிக்கும்படி சிருஷ்டிகருக்கு, இது வார்த்தைகளைப் பயன்படுத்தாத, ஒரு வழியாய் இருந்தது. அவராலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை என்பதை நடைமுறைச் செயல்களின் மூலம் மனுக்குலத்திற்குச் சொல்வதற்கான ஒரு வழியாக அது அவருக்கு இருந்தது. மனுக்குலத்திற்கு அறிவுறுத்த அவர் பயன்படுத்தின இந்த அமைதி வழிமுறையானது நித்தியமானது, அழியாதது, மனித இருதயங்களுக்கு ஓர் அதிர்ச்சியையும், எப்போதும் மங்காத அறிவொளியையும் தருகிறது. லாசருவின் உயிர்த்தெழுதல் தேவனை மகிமைப்படுத்தியது, இது தேவனைப் பின்பற்றும் ஒவ்வொருவரிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வை ஆழமாகப் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நபரிடமும், இது புரிந்து கொள்ளுதலையும், மனுக்குலத்தின் ஜீவனையும் மரணத்தையும் தேவனால் மட்டுமே கட்டளையிட முடியும் என்ற தரிசனத்தையும் உறுதியாகப் பொருத்துகிறது. தேவனுக்கு இவ்வகையான அதிகாரம் இருந்தாலும், லாசருவின் உயிர்த்தெழுதல் மூலம் மனுக்குலத்தின் ஜீவன் மற்றும் மரணம் மீதான அவருடைய ராஜரீகத்தைப் பற்றி அவர் ஒரு செய்தியை அனுப்பின போதிலும், இது அவருடைய முதன்மையான கிரியை அல்ல. தேவன் ஒருபோதும் அர்த்தமின்றி எதையும் செய்வதில்லை, அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பெரிய மதிப்பு உண்டு, அது பொக்கிஷக் களஞ்சியத்தில் மிகப் பெரிதான ஓர் அணிகலனாய் இருக்கும். “ஒரு நபர் தன் கல்லறையிலிருந்து வெளியே வருவதைத்” தன்னுடைய கிரியையின் முதன்மையானதாகவோ அல்லது ஒரே இலக்காகவோ அல்லது காரியமாகவோ நிச்சயமாக உருவாக்க மாட்டார். தேவன் அர்த்தமில்லாத எதையும் செய்வதில்லை. தனித்துவமான நிகழ்வாக, லாசருவின் உயிர்த்தெழுதலானது, தேவனுடைய அதிகாரத்தை நிரூபிக்க, கர்த்தராகிய இயேசுவின் அடையாளத்தை நிரூபிக்கப் போதுமானதாய் இருக்கிறது. இதனால்தான் கர்த்தராகிய இயேசு இவ்வகையான அற்புதத்தை மீண்டும் செய்யவில்லை. தேவன் தனது சொந்த கொள்கைகளின்படி காரியங்களைச் செய்கிறார். மனித மொழியில், தேவன் முக்கியமான விஷயங்களால் மட்டுமே தனது மனதை நிரப்புகிறார் என்று கூறலாம். அதாவது தேவன் காரியங்களைச் செய்யும்போது, அவர் தம்முடைய கிரியையின் நோக்கத்திலிருந்து விலகுவதில்லை. இந்தக் கட்டத்தில் அவர் என்ன கிரியையைச் செய்ய வேண்டும், அவர் எதை நிறைவேற்ற வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார், மேலும் அவர் மிகச்சரியாகத் தனது திட்டத்தின்படி செயல்படுவார். ஒரு சீர்கேடான நபருக்கு அந்த மாதிரியான திறன் இருந்தால், அவன் தனது திறனை வெளிப்படுத்தும் வழிகளைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருப்பான், இதனால் அவன் எவ்வளவு வல்லமைமிக்கவன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும், எனவே அவர்கள் அவனுக்குத் தலை வணங்குவார்கள், அதனால் அவன் அவர்களைக் கட்டுப்படுத்தி, அவர்களை விழுங்கிப் போட முடியும். இது சாத்தானிடமிருந்து வரும் தீமையாகும், இது சீர்கேடு என்று அழைக்கப்படுகிறது. தேவனுக்கு அப்படிப்பட்ட மனநிலை இல்லை, அப்படிப்பட்ட சாராம்சத்தை அவர் கொண்டிருக்கவில்லை. காரியங்களைச் செய்வதில் தன்னை மிகைப்படுத்தி காட்டுவது அவருடைய நோக்கம் அல்ல, மாறாக மனுக்குலத்திற்கு அதிக வெளிப்பாடுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதேயாகும், இதனால்தான் இவ்வகையான நிகழ்வுகளின் உதாரணங்களை வேதாகமத்தில் ஜனங்கள் வெகு சிலவற்றையே காண்கிறார்கள். அதனால் கர்த்தராகிய இயேசுவின் வல்லமைகள் எல்லைக்குட்பட்டது என்றோ அல்லது இத்தகைய காரியங்களை அவர் செய்ய இயலாதவர் என்றோ அர்த்தமல்ல. மாறாக தேவன் அதைச் செய்ய விரும்பவில்லை என்றே அர்த்தம், ஏனென்றால் கர்த்தராகிய இயேசு நடப்பித்த லாசருவின் உயிர்த்தெழுதலானது, மிகவும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தது, மேலும் தேவன் மாம்சமானதின் முக்கிய குறிக்கோள் அற்புதங்களைச் செய்வது அல்ல, ஜனங்களை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்வதும் அல்ல, ஆனால் மனுக்குலத்திற்கான மீட்பின் கிரியையே குறிக்கோளாகும். ஆகவே கர்த்தராகிய இயேசு செய்து முடித்த கிரியைகளில் பெரும்பாலானவை ஜனங்களுக்குக் கற்பித்தது, அவர்களுடைய தேவைகளைச் சந்தித்தது, அவர்களுக்கு உதவினதே ஆகும், மேலும் லாசருவை உயர்த்தெழச் செய்தது போன்ற நிகழ்வுகள் கர்த்தராகிய இயேசு செய்த ஊழியத்தின் ஒரு சிறிய பகுதியே ஆகும். இன்னும், “மிகைப்படுத்திக் காட்டிக்கொள்வது” என்பது தேவனுடைய சாராம்சத்தில் ஒரு பகுதி அல்ல என்று நீங்கள் கூறலாம், ஆகவே கர்த்தராகிய இயேசு வேண்டுமென்றே அதிக அற்புதங்களை காண்பிக்காததின் மூலம் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தவில்லை, இது சுற்றுச்சூழலின் வரம்புகளாலும் இல்லை, மேலும் நிச்சயமாக வல்லமையின்மையாலும் இல்லை.

கர்த்தராகிய இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்தபோது, அவர் இந்தச் சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தினார்: “லாசருவே, வெளியே வா.” இதைத் தவிர அவர் வேறெதுவும் பேசவில்லை. எனவே இந்த வார்த்தைகள் எதை நிரூபிக்கின்றன? மரித்த மனிதனை உயிர்ப்பெற வைப்பது உட்பட, பேசுவதன் மூலம் தேவனால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்த போது, அவர் உலகத்தை சிருஷ்டித்தபோது, அவர் அதை வார்த்தைகளினாலே சிருஷ்டித்தார்—சொல்லப்பட்ட கட்டளைகள், அதிகாரம் கொண்ட வார்த்தைகள் இவைகளின் வழியே அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டன, மேலும் இப்படியே அது நிறைவேற்றப்பட்டது. கர்த்தராகிய இயேசு பேசின இந்த சில வார்த்தைகள், வானத்தையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது தேவன் பேசிய வார்த்தைகளைப் போலவே இருந்தன; அப்படியே அவை தேவனுடைய அதிகாரத்தையும், சிருஷ்டிகருடைய வல்லமையையும் கொண்டிருந்தன. தேவனுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகளால் எல்லாமே உருவாக்கப்பட்டு, நிலைத்து நின்றன. அதைப்போலவே, கர்த்தராகிய இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளால் லாசரு கல்லறையிலிருந்து வெளியே வந்தான். இது அவருடைய மனுஅவதாரத்தில் நிரூபிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தேவனுடைய அதிகாரமாகும். இவ்வகை அதிகாரமும் வல்லமையும் சிருஷ்டிகருக்கும், சிருஷ்டிகர் உணரப்பட்ட மனுஷகுமாரனுக்கும் உரியதாகும். லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்ததன் மூலம் தேவன் மனுக்குலத்திற்குக் கற்பித்த புரிதல் இதுவாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 78

இயேசுவைப் பற்றிய பரிசேயர்களின் நியாயத்தீர்ப்பு

மாற். 3:21-22  அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

இயேசு பரிசேயர்களைக் கடிந்து கொள்ளுதல்

மத். 12:31-32  ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

மத். 23:13-15  மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மேலே உள்ள இரண்டு பத்திகளின் உள்ளடக்கமும் வேறுபட்டதாகும். முதல் பத்தியை முதலில் பார்ப்போம்: இயேசுவைப் பற்றிய பரிசேயரின் நியாயத்தீர்ப்பு.

வேதாகமத்தில் இயேசுவைப் பற்றிய மற்றும் அவர் செய்த காரியங்களைப் பற்றிய பரிசேயர்களின் மதிப்பீடு இதுதான்: “… அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள். … இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்” (மாற். 3:21-22). கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய வேதபாரகர் மற்றும் பரிசேயர் அளித்த நியாயத்தீர்ப்பு அவர்கள் வெறுமனே மற்றவர்களுடைய வார்த்தைகளைப் பின்பற்றின காரியம் அல்ல மேலும் அது ஆதாரமற்ற அனுமானமும் அல்ல, அது அவர்கள் பார்த்த மற்றும் அவருடைய செயல்களைக் குறித்து கேள்விப்பட்டதிலிருந்து கர்த்தராகிய இயேசுவைப் பற்றி எடுத்த முடிவாகும். அவர்களின் முடிவு நீதி என்ற பெயரால் மேம்போக்காகச் செய்யப்பட்டு, நியாயமானதைப் போல மக்களுக்குத் தோன்றினாலும், கர்த்தராகிய இயேசுவை அவர்கள் நியாயந்தீர்க்கக் கொண்டிருந்த இறுமாப்பானது, அதைக் கொண்டிருப்பதற்கு அவர்களுக்கே கடினமாக இருந்தது. கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய அவர்களின் வெறுப்பின் வெறிகொண்ட ஆற்றலானது, அவர்களுடைய சொந்தக் காட்டுத்தனமான ஆசைகளையும் மற்றும் அவர்களுடைய தீய, சாத்தானிய முகங்களையும், அதேபோல, தேவனை எதிர்க்கிற அவர்களின் வன்மமுள்ள தன்மையையும் அம்பலப்படுத்தியது. கர்த்தராகிய இயேசுவைக் குறித்த நியாயத்தீர்ப்பில் அவர்கள் சொன்ன இந்த விஷயங்கள் அவர்களுடைய காட்டுத்தனமான ஆசைகள், பொறாமை, மற்றும் தேவன் மற்றும் சத்தியத்தின் மீதான அவர்களுடைய விரோதத்தின் அவலட்சணமான, வன்மமுள்ள தன்மை ஆகியவற்றால் உந்தப்பட்டன. கர்த்தராகிய இயேசுவின் செயல்களின் மூலகாரணத்தை அவர்கள் விசாரணை செய்யவில்லை, அவர் சொன்னது அல்லது செய்தவற்றின் சாராம்சத்தையும் அவர்கள் விசாரணை செய்யவில்லை. மாறாக கண்மூடித்தனமாக, வெறித்தனமான கொந்தளிக்கும் நிலையில், உள்நோக்கமுள்ள வன்மத்தினாலும், அவர் செய்ததை அவர்கள் தாக்கி, இழிவுபடுத்தினர். அவருடைய ஆவியை, அதாவது தேவனுடைய ஆவியானவராகிய பரிசுத்த ஆவியானவரை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் அளவிற்கு அவர்கள் சென்றார்கள். இதைத்தான் அவர்கள் “அவர் மதிமயங்கியிருக்கிறார்,” “பெயெல்செபூல்,” மற்றும் “பிசாசுகளின் தலைவன்” என்று சொன்னபோது அர்த்தப்படுத்தினார்கள். அதாவது, தேவனுடைய ஆவியானவரை பெயெல்செபூல் மற்றும் பிசாசுகளின் தலைவன் என்று கூறினார்கள். மாம்சத்தை உடையாய் அணிந்திருந்த மனுவுருவான தேவனுடைய ஆவியானவரின் கிரியையை அவர்கள் பைத்தியக்காரத்தனம் என்று வகைப்படுத்தினார்கள். அவர்கள் தேவனுடைய ஆவியானவரை பெயெல்செபூல் மற்றும் பிசாசுகளின் தலைவன் என்று தூஷித்தது மட்டுமல்லாமல், தேவனுடைய கிரியையை நிந்தித்ததோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் நிந்தித்து, தூஷித்தார்கள். தேவனை எதிர்க்கும் மற்றும் தூஷிக்கும் அவர்களுடைய சாராம்சமானது முற்றிலும் சாத்தானாலும் பிசாசுகளினாலும் கொடுக்கப்பட்ட தேவனை எதிர்க்கும் மற்றும் தூஷிக்கும் சாராம்சத்தைப் போன்றதே ஆகும். அவர்கள் வெறுமனே சீர்கேடான மனிதர்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் முற்றிலும் சாத்தானின் உருவமாகவே இருந்தார்கள். அவர்கள் மனுக்குலத்தினிடையே சாத்தானுக்கு ஒரு கால்வாயாகவும், மேலும் அவர்கள் சாத்தானுக்கு உடந்தையாகவும், அடிமைகளாகவும் இருந்தார்கள். அவர்களுடைய தூஷணத்தின் சாராம்சமும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் இழிவுபடுத்துவதும், அந்தஸ்துக்காக தேவனோடுள்ள அவர்களுடைய போராட்டமும், தேவனோடுள்ள அவர்களுடைய போட்டியிடுதலும், மேலும் முடிவில்லாமல் தேவனை சோதிப்பதுமே ஆகும். தேவனுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பின் சாராம்சமும், அவர் மீது கொண்ட விரோதமான மனப்பான்மையும், மேலும் அவர்களுடைய வார்த்தைகளும், அவர்களுடைய எண்ணங்களும் கூட தேவனுடைய ஆவியானவரை நேரடியாக தூஷித்துக் கோபப்படுத்தின. இவ்வாறு அவர்கள் சொன்னதையும் செய்ததையும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு நியாயமான நியாயத்தீர்ப்பை தேவன் தீர்மானித்தார், மேலும் அவர்களின் செயல்களைப் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷிக்கும் பாவமாக தேவன் தீர்மானித்தார். இந்தப் பாவமானது பின்வரும் வேதவசனங்களின் பத்தியில் உறுதியாகச் சொல்லப்பட்டதின்படி, இந்த உலகத்திலும் வரவிருக்கும் உலகத்திலும் மன்னிக்க முடியாததாகும்: “ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை,” மற்றும் “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” இன்று, தேவனிடமிருந்து வந்த இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் பற்றி நாம் பேசலாம்: “அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” அதாவது தேவன் எவ்வாறு இவ்வார்த்தைகளை நிறைவேற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்குச் சுலபமாக்குவோம்: “அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.”

நாம் பேசின அனைத்தும் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் காரியங்களைப் பற்றிய தேவனுடைய மனநிலை மற்றும் அவருடைய மனப்பான்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இயல்பாகவே மேலே உள்ள இரண்டு பத்திகளும் விதிவிலக்கானவை அல்ல. இந்த இரண்டு வசனங்களிலும் நீங்கள் எதையாவது கவனித்தீர்களா? சிலர் தங்கள் மீதுள்ள தேவனுடைய கோபத்தைக் காண்கிறதாகக் கூறுகிறார்கள். சிலர் மனுக்குலத்தின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளாத தேவனுடைய மனநிலையின் பக்கத்தைத் தாங்கள் காண்பதாகவும், மேலும் தேவனைத் தூஷிக்கும் எதையாகிலும் ஜனங்கள் செய்தால், அவர்கள் அவருடைய மன்னிப்பைப் பெற மாட்டார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த இரண்டு பகுதிகளிலும் தேவனுடைய கோபத்தையும், மனுக்குலத்தின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையையும் ஜனங்கள் பார்த்து, உணர்ந்தாலும், அவர்கள் இன்னும் உண்மையில் அவருடைய மனப்பான்மையைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த இரண்டு பத்திகளிலும், தேவனுடைய உண்மையான மனப்பான்மை மற்றும் அவரைத் தூஷித்து, அவரை கோபப்படுத்துபவர்களின் மேல் அவருடைய அணுகுமுறை ஆகியவற்றின் மறைக்கப்பட்ட குறிப்புகள் உள்ளடங்கியுள்ளன. அவருடைய மனப்பான்மையும் அணுகுமுறையும் பின்வரும் பத்தியின் உண்மையான அர்த்தத்தை விளக்கிக் காட்டுகிறது: “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” ஜனங்கள் தேவனைத் தூஷிக்கும்போது, அவரைக் கோபப்படுத்தும்போது, அவர் ஒரு தீர்ப்பை வழங்குகிறார், இந்தத் தீர்ப்பானது அவர் வழங்கிய ஒரு பலனாய் இருக்கிறது. இது வேதாகமத்தில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது: “ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை” (மத். 12:31), மற்றும் “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ” (மத். 23:13). ஆயினும், அந்த வேதபாரகர்களுக்கும், பரிசேயர்களுக்கும் மற்றும் இந்த விஷயங்களைச் சொன்னபின் கர்த்தராகிய இயேசுவைப் பைத்தியம் பிடித்தவர் என்று சொன்னவர்களுக்கும் கிடைத்த விளைவு என்ன என்பது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அவர்கள் ஏதேனும் தண்டனையை அனுபவித்தாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லை, இதை உறுதியாகக் கூறலாம். இங்கே “இல்லை” என்று சொல்வது, அத்தகைய பதிவு எதுவும் இல்லை என்று சொல்வதன்று, ஆனால் உண்மையில் மனிதக்கண்களால் காணக்கூடிய எந்த விளைவும் அங்கே இல்லை என்பதே. “அது பதிவு செய்யப்படவில்லை” என்று சொல்வது, சில காரியங்களைக் கையாள்வதற்கான தேவனுடைய மனப்பான்மை மற்றும் கொள்கைகளின் சிக்கலைத் தெளிவுபடுத்துகிறது. தன்னைத் தூஷிக்கும் அல்லது எதிர்க்கும் அல்லது அவதூறாகக் கூட பேசும், வேண்டுமென்றே தாக்கி, அவதூறாகப் பேசி, சபிக்கும் ஜனங்களிடம் தேவன் காணாதவர் போல, கேளாதவர் போல இருப்பதில்லை, மாறாக அவர்களைக் குறித்த தெளிவான ஒரு மனப்பான்மை அவருக்கு உண்டு. அவர் இந்த ஜனங்களை வெறுக்கிறார், மேலும் அவர் அவர்களைத் தன்னுடைய இருதயத்தில் கண்டனம் பண்ணுகிறார். அவர்களுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்கிறார் இதனால் அவரைத் தூஷிப்பவர்களைக் குறித்து, அவருக்குத் தெளிவான மனப்பான்மை உண்டு என்பதை ஜனங்கள் அறிந்து கொள்வார்கள், மேலும் அவர்களுடைய விளைவை அவர் எவ்வாறு தீர்மானிப்பார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். இருப்பினும், இந்தக் காரியங்களைச் சொன்ன பிறகு, அந்த ஜனங்களை தேவன் எவ்வாறு கையாள்வார் என்ற உண்மையை ஜனங்கள் அரிதாகவே காண முடிந்தது, மேலும் தேவன் அவர்களுக்கு வழங்கிய முடிவு மற்றும் தீர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள கொள்கைகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது, அவர்களைக் கையாள்வதற்கு தேவன் வைத்திருக்கும் குறிப்பிட்ட அணுகுமுறையையும், வழிமுறைகளையும் ஜனங்களால் பார்க்க முடியவில்லை. காரியங்களைச் செய்வதற்கான தேவனுடைய கொள்கைகளுடன் இது தொடர்புடையதாகும். சில ஜனங்களுடைய பொல்லாத நடத்தைகளைச் சமாளிக்க தேவன் உண்மைச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறார். அதாவது, அவர் அவர்களின் பாவங்களை அறிவிப்பதோ, அவர்களின் முடிவைத் தீர்மானிப்பதோ இல்லை, மாறாக, அவர்களுக்குத் தண்டனையையும், நியாயமான உரிய தண்டனையையும் அளிக்க உண்மையான நிகழ்வுகளை நேரடியாகப் பயன்படுத்துகிறார். இந்த நிகழ்வுகள் நிகழும்போது, ஜனங்களுடைய மாம்சம் தண்டனையை அனுபவிக்கிறது, அதாவது மனிதக் கண்களால் பார்க்கக்கூடிய தண்டனையாகும். சிலரின் பொல்லாத நடத்தைகளைக் கையாள்கையில், தேவன் அவர்களை வெறுமனே வார்த்தைகளால் சபிக்கிறார், அவருடைய கோபமும் அவர்கள் மீது கடந்து வருகிறது, ஆனால் அவர்கள் பெறும் தண்டனையானது ஜனங்கள் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆயினும்கூட, இந்த வகையான விளைவானது, தண்டிக்கப்படுதல் அல்லது கொல்லப்படுதல் போன்ற ஜனங்கள் பார்க்கக் கூடிய விளைவுகளை விட மிகத் தீவிரமாக இருக்கலாம். ஏனென்றால், இந்த வகை நபர்களை இரட்சிக்கக் கூடாது, இனி அவர்கள் மேல் இரக்கம் காட்டக்கூடாது அல்லது அவர்களைச் சகித்துக் கொள்ளக் கூடாது மற்றும் அவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புக்களை கொடுக்கக்கூடாது என்று தேவன் தீர்மானித்த சூழ்நிலைகளில், அவர்களைக் குறித்து அவர் கொண்ட மனப்பான்மை என்னவென்றால், அவர்களை ஒதுக்கி வைப்பதே ஆகும். இங்கே “ஒதுக்கி வைப்பது” என்பதன் அர்த்தம் என்ன? இந்தத் தொடரின் அடிப்படைப் பொருள் எதையாவது ஒரு பக்கமாக வைத்துவிட்டு, அதன்பின் புறக்கணித்து அதில் கவனம் செலுத்தாமல் இருப்பது என்பதாகும். ஆனால் இங்கே, தேவன் ஒருவரை ஒதுக்கி வைக்கும்போது, அதன் அர்த்தத்திற்கு இரண்டு வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன: முதலாவது விளக்கம் என்னவென்றால், அவர் அந்த நபரின் ஜீவனையும் மற்றும் அந்த நபரைக் குறித்த எல்லாவற்றையும் சாத்தான் சமாளிக்கும்படி அவனிடம் கொடுத்துவிட்டார், மேலும் தேவன் அதன்பின் பொறுப்பேற்க மாட்டார், அந்த நபரை இனி நிர்வகிக்க மாட்டார் என்பதாகும். அந்த நபர் பைத்தியமாக அல்லது முட்டாளாக இருந்தாலும் அல்லது அவர்கள் மரித்து அல்லது உயிரோடு இருந்தாலும், அல்லது அவர்கள் தண்டனைக்காக நரகத்தில் இறங்கியிருந்தாலும், இவற்றில் ஒன்றுக்கும்கூட தேவனுடன் எந்த சம்பந்தமும் இருக்காது. அதாவது, இத்தகைய சிருஷ்டிக்கு சிருஷ்டிகருடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்று அர்த்தமாகும். இரண்டாவது விளக்கம் என்னவென்றால், இந்த நபரைக் கொண்டு தேவன் தன் சொந்தக் கரங்களால் ஏதாவது செய்ய தீர்மானித்துள்ளார் என்பதாகும். இந்த நபரின் சேவையை அவர் பயன்படுத்துவார், அல்லது அவர் அவர்களை ஒரு பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்துவார். இவ்வகையான நபர்களைக் கையாள்வதற்கான ஒரு சிறப்பான வழியை அவர் கொண்டிருப்பார், எடுத்துக்காட்டாக, பவுலிடம் செய்ததைப் போலவே, அவர்களைக் கையாளும்படி ஒரு சிறப்பான வழியைக் கொண்டிருப்பார். தேவனுடைய இருதயத்தில் இருக்கும் இந்தக் கொள்கை மற்றும் மனப்பான்மையைக் கொண்டே இவ்வகையான நபரைக் கையாள்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். ஆகையால் ஜனங்கள் தேவனை எதிர்த்து, அவரை அவதூறாகப் பேசி, தூஷிக்கையில், அவருடைய மனநிலையை அவர்கள் தொந்தரவு செய்து அல்லது தேவனை அவரின் சகிப்புத்தன்மையின் எல்லையைத் தாண்ட செய்தால், அதன் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். மிகக் கடுமையான பின்விளைவு என்னவென்றால், தேவன் அவர்களுடைய ஜீவனையும், அவர்களைப் பற்றிய எல்லாவற்றையும் முழுவதுமாக சாத்தானிடம் ஒப்படைப்பதே. அவர்கள் நித்தியத்திற்கும் மன்னிக்கப்பட மாட்டார்கள். அதாவது இந்த நபர் சாத்தானுடைய வாய்க்கு இரையாக, அவன் கரத்தில் பொம்மையாக மாறி விட்டார், மேலும் அப்போதிலிருந்து தேவனுக்கும் அவர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று அர்த்தமாகும். சாத்தான் யோபுவைச் சோதித்தபோது, அது எப்படிப்பட்ட துயரம் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? யோபுவின் ஜீவனுக்குத் தீங்கு விளைவிக்க சாத்தான் அனுமதிக்கப்படாதபோதும், யோபு அதிகளவில் துன்பப்பட்டான். சாத்தானிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்ட, சாத்தானின் பிடியில் முழுமையாக இருக்கும், தேவனுடைய அக்கறையையும் இரக்கத்தையும் முற்றிலுமாக இழந்த, இனிமேல் சிருஷ்டிகருடைய ஆளுகையின் கீழ் இல்லாத, தேவனை ஆராதிக்கும் உரிமையும், தேவனுடைய ஆளுகையின்கீழ் உயிரினமாக இருக்கும் உரிமையும் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும், சிருஷ்டிப்பின் தேவனுடனான உறவு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட ஒருவர் மீது சாத்தான் விளைவிக்கிற சேதங்கள் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகக் கடினமானதாக இருக்கிறதல்லவா? சாத்தான் யோபுவைத் துன்புறுத்துவது மனிதக் கண்களால் காணக்கூடிய ஒன்றாகும், ஆனால் தேவன் ஒரு நபரின் ஜீவனை சாத்தானிடம் ஒப்படைத்தால், அதன் விளைவுகள் மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும். உதாரணமாக, சிலர் மாடு அல்லது கழுதையாகத் திரும்பவும் பிறக்கலாம், சிலர் அசுத்தமான, பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிக்கப்படலாம், இன்னும் பலவும் நடக்கும். இவையே தேவனால் சாத்தானிடம் ஒப்படைக்கப்படும் சிலருடைய விளைவுகளாகும். வெளியில் இருந்து பார்க்கையில், கர்த்தராகிய இயேசுவை ஏளனம் செய்த, அவதூறாகப் பேசின, கண்டனம் பண்ணின மற்றும் தூஷித்த ஜனங்கள் எந்த விளைவுகளையும் சந்திக்கவில்லை என்பது போலத் தெரியும். ஆயினும், எல்லாவற்றையும் கையாள்வதில் தேவனுக்கு ஓர் அணுகுமுறை உள்ளது என்பதே உண்மையாகும். ஒவ்வொரு வகையான நபர்களை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதின் விளைவுகளை ஜனங்களுக்குச் சொல்ல அவர் தெளிவான மொழியைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். சில நேரங்களில் அவர் நேரடியாகப் பேசுவதில்லை, மாறாக நேரடியாகச் செயல்படுகிறார். அவர் அதைப் பற்றிப் பேசவில்லை என்பதால் எந்த விளைவும் இல்லை என்று அர்த்தமல்ல, உண்மையில் சொல்லப்போனால், இப்படிப்பட்ட நிலையில் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்க வாய்ப்புண்டு. வெளியிலிருந்து பார்த்தால், சிலரிடம் தேவன் தன்னுடைய மனப்பான்மையைப் பற்றி வெளிப்படையாகப் பேசாததைப் போலத் தெரியும், ஆனால் உண்மையில் நீண்ட காலமாக அவர்களை தேவன் கவனிக்க விரும்பவில்லை என்பதே காரியம். அவர் இனி அவர்களைப் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் செய்த காரியங்கள் மற்றும் அவர்களின் நடத்தை, அவர்களுடைய சுபாவம் மற்றும் அவர்களின் சாராம்சம் காரணமாக, தேவன் தம்முடைய பார்வையில் அவர்கள் இருக்க வேண்டாம் என்றே விரும்புகிறார், அவர்களைச் சாத்தானிடம் நேரடியாக ஒப்படைக்க விரும்புகிறார், அவர்களுடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தைச் சாத்தானிடம் கொடுக்கவும், சாத்தான் அவர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறானோ அவற்றைச் செய்ய அவனை அனுமதிக்கவும் விரும்புகிறார். தேவன் அவர்களை எந்த அளவிற்கு வெறுக்கிறார், அவர்களால் எந்த அளவிற்கு அவர் வெறுப்படைகிறார் என்பது தெளிவாகிறது. ஒரு நபர் தேவனைக் கோபப்படுத்தினால், அவர் அவர்களை மீண்டும் பார்க்கக் கூட விரும்பாத அளவிற்கு, அவர்களை முற்றிலுமாகக் கைவிடத் தயாரான அளவிற்கு, தாமாக அவர்களைக் கையாளக்கூட விரும்பாத அளவிற்குக் கோபப்படுத்தினால், மேலும் அவர்களைச் சாத்தானிடம் ஒப்படைத்து, அவன் விரும்புவதை அவர்களிடம் செய்யவும், அவர்களைக் கட்டுப்படுத்தி, விழுங்கிப்போட்டு, அவன் விருப்பப்படி அவர்களைக் கையாளவும் அவர்களை ஒப்புக் கொடுக்கும் அளவிற்கு அவரைக் கோபப்படுத்தினால், அதன்பின் அந்த நபர் முற்றிலும் முடிந்து விட்டார் என்றே அர்த்தம். மனிதனாக இருப்பதற்கான அவர்களின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒரு சிருஷ்டியாக இருப்பதற்கான அவர்களின் உரிமை முடிவுக்கு வந்துவிட்டது. இது மிகவும் கடுமையான தண்டனை அல்லவா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 79

உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்களிடம் இயேசு பேசின வார்த்தைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

யோவா. 20:26-29  மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

யோவா. 21:16-17  இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவருடைய சீஷர்களிடம் சொன்ன சில காரியங்களை இந்தப் பத்திகள் விவரிக்கின்றன. முதலில், உயிர்த்தெழுதலுக்கு முன்னும் பின்னும் கர்த்தராகிய இயேசுவில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தனவா என்று பார்ப்போம். கடந்த காலங்களில் இருந்த அதே கர்த்தராகிய இயேசுவாக அவர் இருந்தாரா? உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசுவை விவரிக்கும் பின்வரும் வரி வேதாகமத்தில் உள்ளது: “கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.” அந்த நேரத்தில், கர்த்தராகிய இயேசு அதன்பின் ஒரு மாம்ச சரீரத்தில் வசிக்கவில்லை, ஆனால் அவர் இப்போது ஓர்ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார் என்பது மிகவும் தெளிவாகிறது. ஏனென்றால் அவர் மாம்சத்தின் வரம்புகளைக் கடந்து விட்டார்; கதவு மூடப்பட்டு இருந்தாலும், அவர் அப்போதும் ஜனங்கள் நடுவில் வந்து, அவரைப் பார்க்க அவர்களை அனுமதிக்க முடிந்தது. இதுவே உயிர்த்தெழுதலுக்குப் பின்பான இயேசு கிறிஸ்துவுக்கும் உயிர்த்தெழுதலுக்கு முன்பாக மாம்சத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாகும். அந்தத் தருணத்தில் இருந்த ஆவிக்குரிய உடலின் தோற்றத்திற்கும், முன்பு இருந்த இயேசு கிறிஸ்துவின் தோற்றத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசு ஜனங்களுக்கு அந்நியராக உணரப்பட்டார், ஏனென்றால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு ஆவிக்குரிய சரீரமாக மாறினார், மேலும் அவருடைய முந்தைய மாம்சத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆவிக்குரிய சரீரமானது ஜனங்களுக்கு மிகவும் திகைப்பானதாகவும் குழப்பமானதாகவும் இருந்தது. இது கர்த்தராகிய இயேசுவுக்கும் ஜனங்களுக்கும் இடையில் அதிக இடைவெளியை உருவாக்கியது, அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசு அதிகப் புதிரானவராக மாறிவிட்டார் என்று ஜனங்கள் தங்கள் இருதயங்களில் நினைத்தார்கள். ஜனங்களின் இந்த அறிவாற்றல்களும் உணர்ச்சிகளும், காணவோ தொடவோ முடியாத ஒரு தேவனை நம்பும் காலத்திற்கு அவர்களைச் சடுதியில் அழைத்துப் போயின. ஆகவே, கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்தபிறகு செய்த முதல் காரியம் என்னவென்றால், எல்லோரும் அவரைப் பார்க்க அனுமதித்ததும், அவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தினதும், அவருடைய உயிர்த்தெழுதலின் உண்மையை உறுதிப்படுத்தினதுமே ஆகும். அதோடு கூட, இந்தச் செயலானது அவர் மாம்சத்தில் கிரியை செய்த போதும், அவர்கள் பார்க்கவும் தொடவும் முடிந்ததான கிறிஸ்துவாக அவர் இருந்த போதும், அவருக்கு இருந்த ஜனங்களுடனான உறவை மீட்டுத் தந்தது. இதன் ஒரு விளைவு என்னவென்றால், கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டபின், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதில் ஜனங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதும், மனுக்குலத்தை மீட்பதற்கான கர்த்தராகிய இயேசுவின் கிரியையிலும் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்பதும் ஆகும். மற்றொரு விளைவு என்னவென்றால், கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின் ஜனங்களுக்குத் தரிசனமானார் என்றதும், மேலும் அவரைப் பார்க்கவும், தொடவும் ஜனங்களை அனுமதித்தார் என்ற உண்மையும் மனுக்குலத்தைக் கிருபையின் காலத்தில் உறுதியாகப் பிணைத்தது. மேலும் இது, கர்த்தராகிய இயேசு “மறைந்து போய் விட்டார்” அல்லது “ஒரு வார்த்தையும் சொல்லாமல் போய்விட்டார்” என்று கருதப்பட்ட அடிப்படையில், ஜனங்கள் அப்போதிலிருந்து முந்தைய நியாயப்பிரமாண காலத்திற்குத் திரும்ப மாட்டார்கள் என்பதை உறுதி செய்தது. இவ்வாறு கர்த்தராகிய இயேசுவின் போதனைகளையும் அவர் செய்த கிரியையையும் பின்பற்றி அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதி செய்தார். இவ்வாறு கிருபையின் காலத்தினுடைய கிரியையில் புதிய கட்டம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது, அந்தத் தருணத்திலிருந்து, நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்த ஜனங்கள் அதிகாரப்பூர்வமாக நியாயப்பிரமாணத்திலிருந்து வெளியேறி ஒரு புதிய சகாப்தத்திற்குள், புதிய ஆரம்பத்திற்குள் நுழைந்தனர். கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, மனுக்குலத்திற்கு தோன்றியதின் பன்முகத்தன்மையுள்ள அர்த்தங்கள் இவைதான்.

கர்த்தராகிய இயேசு அப்போது ஓர் ஆவிக்குரிய சரீரத்தில் வசித்ததால், எப்படி ஜனங்களால் அவரைத் தொடவும் பார்க்கவும் முடிந்திருக்கும்? இந்தக் கேள்வியானது மனுக்குலத்திற்காக கர்த்தராகிய இயேசு தோன்றுவதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. நாம் இப்போது வாசித்த வேதாகமத்தின் பத்திகளில் நீங்கள் எதையாவது கவனித்தீர்களா? பொதுவாக, ஆவிக்குரிய சரீரங்களைக் காணவோ தொடவோ முடியாது. மேலும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசு மேற்கொண்ட கிரியைகள் ஏற்கனவே முடிந்திருந்தன. எனவே கோட்பாட்டளவில், ஜனங்களைச் சந்திக்க அவருடைய உண்மையான உருவத்தில் அவர்கள் மத்தியில் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை, ஆனால் தோமா போன்றவர்களுக்கு கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தில் தோன்றுவது, அவர் தோன்றுவதன் முக்கியத்துவத்தை மேலும் உறுதியாக்கியது, அதனால் அது இன்னும் ஆழமாக ஜனங்களுடைய இருதயங்களில் ஊடுருவியது. அவர் தோமாவிடம் வந்தபோது, சந்தேகிக்கும் தோமாவை, தனது கரங்களைத் தொட்டுப் பார்க்க அனுமதித்து அவனிடம் சொன்னார்: “உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு.” இந்த வார்த்தைகளும் செயல்களும் கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின்னரே சொல்லவும், செய்யவும் விரும்பின விஷயங்கள் அல்ல; உண்மையில், அவை அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சொல்ல விரும்பிய, செய்ய விரும்பின விஷயங்கள் ஆகும், ஏனென்றால் தோமாவின் சந்தேகங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்திரு க்கவில்லை, ஆனால் அவன் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றி வந்த காலம் முழுவதிலும் அது அவனிடத்தில் இருந்தது. அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, கர்த்தராகிய இயேசு தோமா போன்ற ஜனங்களை ஏற்கனவே புரிந்து வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. ஆகையால் இதிலிருந்து நாம் என்ன பார்க்க முடிகிறது? அவர் உயிர்த்தெழுந்த பிறகும் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருந்தார். அவருடைய சாராம்சம் மாறவில்லை. இருப்பினும், இங்கே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, தன்னுடைய உண்மையான உருவத்தோடு, தன்னுடைய உண்மையான மனநிலையோடு, அவர் மாம்சத்தில் இருந்த காலத்திலிருந்து மனுக்குலத்தைப் பற்றின புரிதலோடு, ஆவிக்குரிய உலகத்திலிருந்து கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருந்தார், எனவே அவர் முதலில் தோமாவிடம் சென்றார், தோமாவைத் தன்னுடைய விலாவைத் தொட்டுப்பார்க்க அனுமதித்தார், இது தோமாவை உயிர்த்தெழுதலுக்குப் பிறகான அவருடைய ஆவிக்குரிய சரீரத்தைக் காண அனுமதிப்பதற்காக மட்டுமல்லாமல், தோமா தனது ஆவிக்குரிய சரீரம் இருப்பதைத் தொட்டு, உணர்ந்து, தன்னுடைய சந்தேகங்களை முற்றிலுமாக விட்டுவிடுவதற்காகவே. கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர்தான் கிறிஸ்து என்பதைத் தோமா எப்போதும் சந்தேகித்தான், அவனால் நம்ப இயலவில்லை. தேவன் மீதான அவனுடைய விசுவாசமானது, தன் கண்களால் பார்க்க முடிந்த, தன் கைகளால் தொட முடிந்தவைகளின் அடிப்படையில் மட்டுமே உறுதிப்பட்டிருந்தது. இவ்வகையான நபரின் விசுவாசத்தைப் பற்றி கர்த்தராகிய இயேசுவுக்கு நல்ல புரிதல் இருந்தது. அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மட்டுமே நம்பினார்கள், தேவனால் அனுப்பப்பட்டவரையோ அல்லது மாம்சத்தில் இருந்த கிறிஸ்துவையோ அவர்கள் சிறிதும் விசுவாசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை. கர்த்தராகிய இயேசு ஜீவிப்பதையும், அவர் உண்மையிலேயே மனுவுருவான தேவன் என்பதையும் தோமா ஒப்புக்கொள்ளவும், விசுவாசிக்கவும், அவர் தோமாவை அவனுடைய கையை நீட்டி, தன்னுடைய விலாவைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தார். கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முன்பும் பின்பும் தோமா கொண்டிருந்த சந்தேகத்தில் ஏதாவது வித்தியாசம் இருந்ததா? அவன் எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தான், கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரமானது, அவனுக்குத் தனிப்பட்ட முறையில் தரிசனமாகி, அவரது சரீரத்தில் உள்ள ஆணிகளாலுண்டான காயங்களைத் தொட அனுமதித்ததைத் தவிர, அவனுடைய சந்தேகங்களைத் தீர்க்கவும், அவன் தன் சந்தேகங்களை விட்டுவிடவும் செய்வதற்கான வேறு எந்த வழியும் ஒருவரிடத்திலும் இருக்கவில்லை. ஆகவே, கர்த்தராகிய இயேசு தோமாவை தனது விலாவைத் தொட்டு, ஆணிகளாலுண்டான காயம் இருப்பதை உண்மையில் உணர அனுமதித்த நேரத்திலிருந்தே தோமாவின் சந்தேகம் மறைந்தது, கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை அவன் உண்மையிலேயே அறிந்துகொண்டான், மேலும் அவன் அதை ஏற்றுக்கொண்டு கர்த்தராகிய இயேசு உண்மையான கிறிஸ்து என்றும், மனுவுருவான தேவன் என்றும் விசுவாசித்தான். அந்த நேரத்தில் தோமா அதன்பின் சந்தேகிக்கவில்லை என்றாலும், கிறிஸ்துவைச் சந்திக்கும் வாய்ப்பை அவன் என்றென்றும் இழந்திருந்தான். அவருடன் இணைந்திருக்க, அவரைப் பின்தொடர, அவரை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் அவன் என்றென்றும் இழந்திருந்தான். கிறிஸ்து அவனைப் பரிபூரணமாக்குவதற்கான வாய்ப்பை அவன் இழந்திருந்தான். கர்த்தராகிய இயேசுவின் தரிசனமும், அவருடைய வார்த்தைகளும் சந்தேகங்கள் நிறைந்தவர்களின் விசுவாசத்தைப் பற்றிய ஒரு முடிவையும், தீர்ப்பையும் அளித்தன. அவர் தனது உண்மையான வார்த்தைகளையும், செயல்களையும் சந்தேகிப்பவர்களுக்குச் சொல்லவும், பரலோக தேவனை மட்டுமே நம்பி, கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களிடம் சொல்லவும் பயன்படுத்தினார்: தேவன் அவர்களின் விசுவாசத்தையும் பாராட்டவில்லை, அவரைச் சந்தேகிக்கும்போது அவரைப் பின்தொடர்ந்ததற்காகவும் அவர்களைப் பாராட்டவில்லை. அவர்கள் தேவனையும், கிறிஸ்துவையும் முழுமையாக நம்பிய நாளே, தேவன் தம்முடைய பெரிதான கிரியையை முடித்த நாளாக இருந்திருக்க முடியும். நிச்சயமாக, அந்த நாள் அவர்களின் சந்தேகத்தின் மீது தீர்ப்பு வழங்கப்பட்ட நாளாகவும் இருந்திருக்கும். கிறிஸ்துவைப் பற்றிய அவர்களின் மனப்பான்மை அவர்களின் தலைவிதியை நிர்ணயித்தது, அவர்களுடைய பிடிவாதமான சந்தேகம், அதாவது அவர்களின் விசுவாசம் அவர்களுக்கு பலனைத் தரவில்லை என்பதையும், அவர்களின் கடினத்தன்மையானது, அதாவது அவர்களுடைய நம்பிக்கைகள் வீணானவை என்பதையும் குறித்தது. பரலோக தேவன் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை மாயைகளால் உறுதி செய்யப்பட்டு, கிறிஸ்துவைப் பற்றிய அவர்களின் சந்தேகமானது, உண்மையில் தேவனைப் பற்றிய அவர்களின் உண்மையான மனப்பான்மையாக இருந்தபடியால், அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தில் உள்ள ஆணிகளாலுண்டான காயங்களைத் தொட்ட போதிலும், அவர்களுடைய விசுவாசம் அப்போதும் பயனற்றதாகவே இருந்தது, அவர்களின் பலன், ஓட்டையான பாத்திரத்தில் தண்ணீர் இறைப்பதைப் போன்றது என்றே விவரிக்க முடிந்தது, அனைத்தும் வீணாய் இருந்தன. கர்த்தராகிய இயேசு தோமாவிடம் சொன்னது, ஒவ்வொருவரிடமும்கூடச் சொல்லும் அவரின் மிகத் தெளிவான விதமாகும்: உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவே முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மனிதர்களிடையே கிரியை செய்த கர்த்தராகிய இயேசு ஆவார். அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தாலும், மரண இருளின் பள்ளத்தாக்கை அனுபவித்திருந்தாலும், அவர் உயிர்த்தெழுதலை அனுபவித்திருந்தாலும், அவர் எந்த அம்சத்திலும், எந்த மாற்றத்தையும் அனுபவிக்கவில்லை. இப்போது, அவர் ஆணிகளாலுண்டான தழும்புகளை அவர் சரீரத்தில் கொண்டிருந்தாலும், அவர் உயிர்த்தெழுந்து, கல்லறையில் இருந்து வெளியேறி இருந்தாலும், அவருடைய மனநிலை, மனுக்குலத்தைப் பற்றிய அவரது புரிதல், மனுக்குலத்திற்கான அவருடைய நோக்கங்கள் சிறிதளவும் மாறவே இல்லை. மேலும், அவர் சிலுவையிலிருந்து இறங்கினார் என்றும், பாவத்தை வென்றார் என்றும், போராட்டங்களை ஜெயித்தார் என்றும், மரணத்தின் மீது ஜெயமெடுத்தார் என்றும் ஜனங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆணிகளாலுண்டான அவருடைய தழும்புகளானது, சாத்தானுக்கு எதிரான ஜெயத்தின் சரியான ஆதாரமாகும், மனுக்குலம் முழுவதையும் வெற்றிகரமாக மீட்பதற்கான பாவநிவாரணபலியாக இருந்ததின் ஆதாரமாகும். அவர் ஏற்கனவே மனுக்குலத்தின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக்கொண்டார் என்றும், மீட்பின் கிரியையை நிறைவேற்றி விட்டார் என்றும் ஜனங்களுக்குச் சொல்லி கொண்டிருந்தார். அவர் தம்முடைய சீஷர்களைப் பார்க்க திரும்பிச் சென்றபோது, அவர் தம்முடைய தரிசனத்தின் மூலம் இந்தச் செய்தியை அவர்களிடம் சொன்னார்: “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன், நான் இப்போதும் இருக்கிறேன்; நீங்கள் என்னைப் பார்க்கவும் தொடவும் முடியும்படியாய், இன்று உங்களுக்கு முன்பாக உண்மையிலேயே நான் நின்று கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.” கர்த்தராகிய இயேசு, தோமாவின் காரியத்தை வருங்கால ஜனங்களுக்கு ஓர் எச்சரிக்கையாகப் பயன்படுத்த விரும்பினார்: அவர் மீது உள்ள உன் விசுவாசத்தில் கர்த்தராகிய இயேசுவை உன்னால் பார்க்கவோ, தொடவோ முடியாது என்றாலும், உன்னுடைய உண்மையான விசுவாசத்தின் காரணமாக நீ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய், உன்னுடைய உண்மையான விசுவாசத்தினால் உன்னால் கர்த்தராகிய இயேசுவைப் பார்க்க முடியும், மேலும் இந்த வகையான நபர் ஆசீர்வதிக்கப்பட்டவராவார்.

கர்த்தராகிய இயேசு தோமாவுக்குத் தரிசனமானபோது பேசியதாக வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வார்த்தைகள் கிருபையின் காலத்தில் உள்ள அனைவருக்கும் பெரிதும் உதவுகின்றன. தோமாவுக்கு அவர் தந்த தரிசனமும், அவனுடன் பேசின வார்த்தைகளும் பின்னர் வந்த தலைமுறையினர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின; அவை நித்திய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. தேவனை விசுவாசித்தும், தேவனைச் சந்தேகிக்கிற வகையான நபரைத் தோமா பிரதிநிதித்துவப்படுத்துகிறான். அவர்கள் சந்தேகக் குணமுடையவர்கள், கபடமான இருதயங்களைக் கொண்டவர்கள், துரோகிகள், தேவன் நிறைவேற்றக் கூடிய காரியங்களை விசுவாசிக்காதவர்கள் ஆவர். அவர்கள் தேவனுடைய சர்வவல்லமையையும், அவருடைய ராஜரீகத்தையும், மேலும் மனுவுருவான தேவனையும் விசுவாசிப்பதில்லை. இருப்பினும், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலானது அவர்கள் கொண்டிருந்த இந்தக் குணாதிசயங்களை முற்றிலுமாய் எதிர்த்தது, மேலும் இது அவர்களின் சொந்தச் சந்தேகத்தைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களின் சொந்தச் சந்தேகத்தை அடையாளங்காண்பதற்கும், அவர்களின் சொந்தத் துரோகத்தை ஒப்புக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது, இதனால் கர்த்தராகிய இயேசு ஜீவிப்பதையும், உயர்த்தெழுதலையும் அவர்களை மனப்பூர்வமாக நம்பச் செய்தது. தோமாவிற்கு நடந்ததானது, தோமாவைப் போன்ற சந்தேகிக்கும் நபர்களாக இருக்கக்கூடாது என்றும், அவர்கள் தங்களைச் சந்தேகத்தால் நிரப்பிக் கொண்டால், அவர்கள் இருளில் மூழ்கி விடுவார்கள் என்றும் அதிகமான ஜனங்கள் தங்களைத் தாங்களே எச்சரிக்கும்படி, பிற்கால சந்ததியினருக்கு எச்சரிப்பாகவும், முன்னறிவிப்பாகவும் இருந்தது. நீ தேவனைப் பின்பற்றியும், தோமாவைப் போலவே, தேவன் இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், சரிபார்க்கவும், ஊகிக்கவும் விரும்பி, எப்போதும் தேவனுடைய விலாவைத் தொட்டுப்பார்த்து, அவருடைய ஆணி அடையாளங்களை உணர விரும்பினால், தேவன் உன்னைக் கைவிடுவார். ஆகவே கர்த்தராகிய இயேசு ஜனங்கள் தங்கள் கண்களால் பார்க்கக்கூடியதை மட்டுமே நம்பும் தோமாவைப் போல இருக்காமல், பரிசுத்தமாகவும், நேர்மையான மனிதர்களாகவும், தேவன் மீது இரகசியமாக மனதில் சந்தேகம் கொள்ளாமல், அவரை முழுமையாக விசுவாசித்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இவ்வகையான ஜனங்கள் பாக்கியவான்கள். இதுவே கர்த்தராகிய இயேசு ஜனங்களிடம் எதிர்பார்க்கும் மிகச்சிறிய காரியமாகும், மேலும் இது அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 80

உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்களிடம் இயேசு பேசின வார்த்தைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

யோவா. 21:16-17  இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

இந்த உரையாடலில் கர்த்தராகிய இயேசு பேதுருவிடம் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைக் கேட்டார்: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” இது கர்த்தராகிய இயேசு தன் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, பேதுரு போன்றவர்களிடமும், கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிற மற்றும் கர்த்தரை நேசிக்கப் பிரயாசப்படுபவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கும் உயர்வான தரமாகும். இந்தக் கேள்வியானது ஒரு வகையான ஆய்வு மற்றும் விசாரணையைப் போல இருந்தாலும், அதைவிட, பேதுரு போன்றவர்களிடம் எதிர்பார்க்கும் காரியமாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்தது. கர்த்தராகிய இயேசு இந்தக் கேள்வி கேட்கும் முறையைப் பயன்படுத்தினார், இதனால் ஜனங்கள் தங்களைப் பற்றிக் கவனமாய்ச் சிந்தித்து, தங்களைத் தாங்களே கவனித்துப் பார்ப்பார்கள் மற்றும் இவ்வாறு கேட்பார்கள்: ஜனங்களிடம் கர்த்தராகிய இயேசு எதிர்பார்க்கும் காரியங்கள் என்ன? நான் கர்த்தரை நேசிக்கிறேனா? நான் தேவனை நேசிக்கும் நபரா? நான் தேவனை எவ்வாறு நேசிக்க வேண்டும்? கர்த்தராகிய இயேசு பேதுருவிடம் இந்தக் கேள்வியை மட்டுமே கேட்டிருந்தாலும், உண்மை என்னவென்றால், அவருடைய இருதயத்தில், இந்தக் கேள்விகளைப் பேதுருவிடம் கேட்பதன் மூலம், தேவனை நேசிக்க விரும்பும் அதிகமான ஜனங்களிடம் இதே வகையான கேள்வியைக் கேட்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அவர் விரும்பினார். கர்த்தராகிய இயேசுவின் சொந்த வாயிலிருந்து இந்த கேள்வியைப் பெற, இவ்வகையான நபர்களின் பிரதிநிதியாகச் செயல்படவே, பேதுரு ஆசீர்வதிக்கப்பட்டான்.

கர்த்தராகிய இயேசு தன் உயிர்த்தெழுதலுக்குப் பின் தோமாவிடம் சொன்ன பின்வரும், “உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு,” என்ற வார்த்தைகளுடன் ஒப்பிடுகையில், அவர் பேதுருவிடம் மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்ட: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்ற கேள்வியானது, கர்த்தராகிய இயேசுவினுடய மனப்பான்மையின் கடுமையையும், அவர் கேள்வி கேட்கும்போது உணர்ந்த அவசரத்தையும் ஜனங்கள் முன்னிலும் திருத்தமாக உணர அனுமதிக்கிறது. வஞ்சகமான சுபாவமுடைய, சந்தேக நபரான தோமாவைப் பொறுத்தவரை, அவனைக் கையை நீட்டி, அவர் சரீரத்திலுள்ள ஆணிகளாலுண்டான காயங்களைத் தொட கர்த்தராகிய இயேசு அனுமதித்தார், இது கர்த்தராகிய இயேசுவை உயிர்த்தெழுந்த மனுஷகுமாரன் என்று விசுவாசிக்கவும், கர்த்தராகிய இயேசுவின் அடையாளத்தை கிறிஸ்து என்று ஏற்றுக் கொள்ளவும் அவனை வழிநடத்தியது. மேலும் கர்த்தராகிய இயேசு தோமாவைக் கடுமையாகக் கண்டிக்கவுமில்லை, அவனைப் பற்றிய எந்தத் தெளிவான நியாயத்தீர்ப்பையும் அவர் வாய்மொழியாக வெளிப்படுத்தவுமில்லையென்றாலும், அவர் தோமாவைப் புரிந்து கொண்டார் என்பதை அவன் அறிந்துகொள்ள அனுமதிக்கும்படி, அவர் நடைமுறைச் செயல்களைப் பயன்படுத்தினார், அதே நேரத்தில் அவ்வகையான நபரைக் குறித்த அவருடைய மனப்பான்மையையும், உறுதியையும் கூட வெளிப்படுத்தினார். அவ்வகை நபர்களிடம் கர்த்தராகிய இயேசு எதிர்பார்க்கும் காரியங்களும், எதிர்பார்ப்புகளும் அவர் சொன்ன காரியங்களிலிருந்து கண்டுகொள்ள முடியாது, ஏனென்றால் தோமா போன்றவர்களிடம் உண்மையான விசுவாசத்தின் ஒரு சிறு பகுதி கூட கிடையாது. அவர்களுக்கான கர்த்தராகிய இயேசுவின் தேவைகள் அதிக அளவில் இருந்தன, ஆனால் பேதுருவைப் போன்றவர்களிடம் அவர் வெளிப்படுத்திய மனப்பான்மையானது முற்றிலும் வேறுபட்டதாகும். பேதுரு தன் கையை நீட்டி ஆணிகளால் உண்டான தன் தழும்புகளைத் தொட வேண்டும் என்று அவர் கேட்கவுமில்லை, அவர் பேதுருவிடம்: “அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்று கூறவுமில்லை. அதற்குப் பதிலாக, ஒரே கேள்வியை அவர் திரும்பத் திரும்பப் பேதுருவிடம் கேட்டார். அந்த கேள்வியானது சிந்திக்கத் தூண்டுவதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது, மேலும் கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவருவரையும், தடுக்க முடியாதபடி வருத்தத்தையும் பயத்தையும் உணர வைத்தது, கர்த்தராகிய இயேசுவின் கவலையான, துயரமான மனநிலையையும் உணர வைத்தது. மேலும் அவர்கள் மிகுந்த வேதனையிலும் துன்பத்திலும் இருக்கும்போது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அக்கறையையும், அவருடைய பராமரிப்பையும் அவர்களால் அதிகமாகப் புரிந்து கொள்ள முடிகிறது; அவருடைய ஊக்கமான போதனையையும் மற்றும் பரிசுத்தமான, நேர்மையான ஜனங்களிடம் எதிர்பார்க்கும் கண்டிப்பான தேவைகளையும் அவர்கள் உணர்கிறார்கள். கர்த்தராகிய இயேசுவின் கேள்வியானது, இந்த எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட ஜனங்களிடம் எதிர்பார்த்த கர்த்தருடைய எதிர்பார்ப்புகள் வெறுமனே அவரை விசுவாசித்து, பின்பற்றுவதற்காக மாத்திரம் அல்ல, மாறாக உன்னுடைய கர்த்தரையும், உன்னுடைய தேவனையும் நேசிக்கிற அன்பை அடைவதற்கே என்று ஜனங்களை உணர வைத்தது. இவ்வகையான அன்பு அக்கறையுடையதாகவும், கீழ்ப்படிகிறதாகவும் இருக்கும். தேவனுக்காக வாழ்கிறதும், தேவனுக்காக மரிக்கிறதும், தேவனுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறதும், தேவனுக்காகச் செலவழிக்கிறதும், கொடுக்கிறதும் மனிதர்கள்தான். இந்த வகையான அன்பு தேவனுக்கு ஆறுதல் அளிக்கிறது, சாட்சியை அனுபவிக்கவும், இளைப்பாறவும் அவரை அனுமதிக்கிறது. இது மனிதன் தேவனுக்குத் திருப்பிச் செலுத்தும் காரியமும், மனிதனுடைய பொறுப்பும், நன்றிக் கடனும், கடமையுமாகும், மேலும் இது ஜனங்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் பின்பற்ற வேண்டிய ஒரு வழியாகும். இந்த மூன்று கேள்விகளும் கர்த்தராகிய இயேசு பேதுருவிடமிருந்தும், பரிபூரணமாக்கப்படப் போகிற எல்லா ஜனங்களிடமும் முன்வைக்கும் ஒரு கோரிக்கையும் மற்றும் அறிவுரையும் ஆகும். இந்த மூன்று கேள்விகள்தான், பேதுருவை அவன் வாழ்க்கையில் முடிவு வரையில் தனது பாதையைப் பின்பற்ற வழிவகுத்தது, மேலும் கர்த்தராகிய இயேசு புறப்பட்டுச் செல்கையில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விகளானது, தான் பரிபூரணமாக்கப்பட்ட பாதையில் தொடக்கம் பண்ண பேதுருவை வழிநடத்தியது, அவனை வழிநடத்தியது, கர்த்தருக்கான அவனுடைய அன்பினால், கர்த்தருடைய இருதயத்திற்காக அக்கறை கொள்ளவும், கர்த்தருக்குக் கீழ்ப்படியவும், கர்த்தருக்கு ஆறுதல் அளிக்கவும், இந்த அன்பினால் அவனுடைய முழு வாழ்க்கையையும், அவனுடைய முழு ஜீவிதத்தையும் அர்ப்பணிக்கவும் அவனை வழிநடத்தியது.

கிருபையின் காலத்தின் போது, தேவனுடைய பணியானது முதன்மையாக இரண்டு வகையான நபர்களுக்கானதாய் இருந்தது. முதலாவது வகையான நபரானவர், அவரை விசுவாசித்த, அவரைப் பின்பற்றின, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து சிலுவையைச் சுமக்கக்கூடிய, கிருபையின் காலத்தின் வழியைப் பற்றிக் கொள்ளக் கூடிய வகையில் உள்ள நபராவர். இவ்வகையான நபர் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு, தேவனுடைய கிருபையை அனுபவிப்பார். இரண்டாம் வகையான நபரைப் பரிபூரணப்படுத்தக் கூடும், அவர் பேதுருவைப் போன்றவராவார். ஆகவே, கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவர் முதலாவது இந்த இரண்டு அர்த்தமுள்ள காரியங்களைச் செய்தார். ஒன்று தோமாவிடம் செய்யப்பட்டது, மற்றொன்று பேதுருவிடம் செய்யப்பட்டதாகும். இந்த இரண்டு காரியங்களும் எதைக் குறிக்கின்றன? மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான தேவனுடைய உண்மையான நோக்கங்களை அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா? அவை மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவா? தேவன் தோமாவிடம் செய்த கிரியையானது சந்தேகிப்பவர்களாக இல்லாமல், விசுவாசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஜனங்களை எச்சரிப்பதற்காகச் செய்யப்பட்டதாகும். பேதுருவிடம் அவர் செய்த கிரியையானது, பேதுருவைப் போன்று இருந்த ஜனஙகளின் விசுவாசத்தைப் பெலப்படுத்தவும், இவ்வகையான நபரிடம்தான் எதிர்பார்ப்பதைத் தெளிவுபடுத்தவும், அவர்கள் எந்த இலக்குகளைப் பின்தொடர வேண்டும் என்று அவர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் செய்யப்பட்டதாகும்.

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவசியமானவர்கள் என்று அவர் நினைத்த ஜனங்களுக்குத் தரிசனமானார், அவர்களுடன் பேசினார், ஜனங்களுக்கான நோக்கங்களையும், ஜனங்களின் எதிர்பார்ப்புகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தார். அதாவது, மனுவுருவான தேவனாக, அவருடைய அக்கறையும், ஜனங்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்களும் ஒருபோதும் மாறவே இல்லை. அவர் மாம்சத்தில் இருந்தபோதும், சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்திருந்த பின்பு அவர் ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தபோதும், இவை அப்படியே இருந்தன. அவர் சிலுவைக்குப் போகும் முன்பாக, அவர் இந்த சீஷர்களைக் குறித்து அக்கறை கொண்டிருந்தார், ஒவ்வொரு மனிதனின் நிலையைப் பற்றியும் அவருடைய இருதயத்தில் அவர் தெளிவாக இருந்தார், ஒவ்வொரு நபரின் குறைபாடுகளையும் அவர் புரிந்திருந்தார், நிச்சயமாக, ஒவ்வொரு நபரைக் குறித்த அவருடைய புரிந்து கொள்ளுதலானது, மரித்து உயிர்த்தெழுந்து, ஆவிக்குரிய சரீரமாக மாறின பின்பும், அவர் மாம்சத்தில் இருந்தபோது இருந்ததைப் போலவே இருந்தது. கிறிஸ்து என்கிற அவரது அடையாளத்தைக் குறித்து ஜனங்கள் முழுமையான நிச்சயத்துடன் இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார், ஆனால் அவர் மாம்சத்தில் இருந்த காலத்தில், அவர் ஜனங்களிடம் கடுமையான கோரிக்கைகளை வைக்கவில்லை. இருப்பினும், அவர் உயிர்த்தெழுந்த பிறகு, அவர் அவர்களுக்குத் தரிசனமாகி, கர்த்தராகிய இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்பதையும், அவர் மனுவுருவான தேவன் என்பதையும் குறித்து அவர்களை முற்றிலும் நிச்சயமுடையவர்களாக்கினார். மேலும் அவர் தாம் தோன்றியது குறித்த உண்மையையும் அவருடைய உயிர்த்தெழுதலையும், மனுக்குலத்தின் வாழ்நாள் பின்தொடர்தலுக்காக உயர்ந்த தரிசனமாகவும் உள்நோக்கமாகவும் பயன்படுத்தினார். மரணத்திலிருந்தெழுந்த அவரின் உயிர்த்தெழுதலானது, அவரை பின்பற்றின அனைவரையும் பெலபடுத்தினது மட்டுமல்லாமல், மனுக்குலத்தினிடையே அவருடைய கிருபையின் காலத்துக் கிரியையை முழுமையாகச் செயல்படுத்தியது, இப்படியாக கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசுவினுடைய இரட்சிப்பின் நற்செய்தியானது மனுக்குலத்தினுடைய ஒவ்வொரு மூலைக்கும் படிப்படியாய்ப் பரவியது. உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசு தோன்றியதற்கு ஏதேனும் முக்கியத்துவம் இருந்ததாக நீ சொல்வாயா? அந்த நேரத்தில் நீ தோமாவாகவோ அல்லது பேதுருவாகவோ இருந்திருந்தால், உன் வாழ்க்கையில் இந்த அதிக அர்த்தமுள்ள ஒரு விஷயத்தை நீ சந்தித்திருந்தால், அது உன் மேல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும்? தேவனில் விசுவாசம் கொள்ளும் உன் வாழ்க்கையின் மிகச் சிறந்த மற்றும் மிகப் பெரிதான தரிசனமாக இதை நீ பார்த்திருப்பாயா? நீ தேவனைப் பின்தொடர்ந்து, அவரைத் திருப்திப்படுத்தப் பாடுபட்டு, உன் வாழ்நாள் முழுவதிலும் அவரை நேசிக்க முற்படுகையில், உன்னைத் தூண்டும் சக்தியாக இதைப் பார்த்திருப்பாயா? இந்த மிகப்பெரிய தரிசனங்களைப் பரப்புவதற்கு வாழ்நாளின் பிரயாசத்தை நீ செலவு செய்திருப்பாயா? கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பைப் பரப்புவதைத் தேவனிடமிருந்து வந்த ஒரு கட்டளையாக நீ ஏற்றுக் கொண்டிருப்பாயா? நீ இதை அனுபவிக்கவில்லை என்றாலும், தோமா மற்றும் பேதுருவின் இரண்டு உதாரணங்களும், நவீன ஜனங்களுக்குத் தேவனைப் பற்றியும் அவருடைய சித்தத்தைப் பற்றியும் தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ள ஏற்கனவே போதுமானவையாகும். தேவன் மாம்சமான பின்பு, மனுக்குலத்தினிடையே அவர் தனிப்பட்ட முறையில் ஜீவனை அனுபவித்து மற்றும் மனித வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் அனுபவித்த பின்பு, மேலும் மனுக்குலத்தின் சீரழிவையும், அந்நேரத்தில் மனித வாழ்க்கையின் நிலைமையையும் அவர் கண்ட பின்பு, மாம்சத்தில் இருந்த தேவன் மனுக்குலமானது எவ்வளவு உதவியற்றதாகவும், துக்ககரமானதாகவும், பரிதாபகரமானதாகவும் இருக்கிறது என்பதை அதிக ஆழமாக உணர்ந்தார் என்று சொல்லலாம். மாம்சத்தில் வாழ்ந்திருக்கையில் அவர் கொண்டிருந்த மனிதத்தன்மையினாலும், அவருடைய மாம்ச உள்ளுணர்வினாலும் மனிதனுடைய நிலைமைக்கு தேவன் அதிக பச்சாதாபத்தைக் கொண்டார். இது அவரைப் பின்பற்றுபவர்களிடம் அதிக அக்கறை கொள்ள அவரை வழிநடத்தியது. இவை அநேகமாக நீங்கள் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களாயிருந்தாலும், தேவனைப் பின்பற்றிய ஒவ்வொருவருக்காக அவர் மாம்சத்தில் உணர்ந்த கவலையையும், அக்கறையையும் நான் இரண்டே வார்த்தைகளான “ஆழ்ந்த அக்கறை” என்பவைகளைக் கொண்டு விவரிக்க முடியும். இந்த வார்த்தையானது மனித மொழியிலிருந்து வந்திருந்தாலும், இது மிகவும் மனிதத்தன்மையுடன் இருந்தாலும், ஆயினும் இது தேவனைப் பின்பற்றுபவர்களுக்கான தேவனுடைய உணர்ச்சிகளை உண்மையாக வெளிப்படுத்துகிறது மற்றும் விவரிக்கிறது. மனிதர்களுக்கான தேவனுடைய ஆழ்ந்த அக்கறையைப் பொறுத்தவரை, உங்கள் அனுபவங்களின் பாதையில், நீங்கள் படிப்படியாக இதை உணர்ந்து, அதனுடைய சுவையை உணர ஆரம்பிப்பீர்கள். எவ்வாறாயினும், உங்கள் சொந்த மனநிலையில் மாற்றத்தைப் பின்தொடர்வதன் அடிப்படையில், தேவனுடைய மனநிலையைப் படிப்படியாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும். கர்த்தராகிய இயேசு இந்தத் தோற்றத்தை வெளிப்படுத்தியபோது, அது மனக்குலத்தில் தம்மைப் பின்பற்றுபவர்களுக்காக அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையை நடைமுறைப்படுத்தவும், அவருடைய ஆவிக்குரிய சரீரத்திற்கு அல்லது நீங்கள் சொல்லலாம் அவருடைய தெய்வீகத் தன்மைக்கு, தாண்டிப் போகவும் செய்தது. அவர் தோன்றியது ஜனங்களை மீண்டும் ஒருமுறை தேவனுடைய அக்கறையையும், பராமரிப்பையும் அனுபவிக்கவும் உணரவும் செய்தது, அதேசமயம் தேவனே ஒரு காலத்தைத் தொடங்கவும், ஒரு காலத்தைக் கட்டவிழ்க்கவும், ஒரு காலத்தை முடிக்கவும் கூடியவர் என்பதை வல்லமையாக நிரூபிக்கிறது. அவர் தோன்றியதன் மூலம் எல்லா ஜனங்களின் விசுவாசத்தையும் அவர் பெலப்படுத்தினார், மேலும் அவர் தாமே தேவன் என்ற உண்மையை உலகிற்கு நிரூபித்தார். இது அவருடைய சீஷர்களுக்கு நித்திய உறுதிப்பாட்டைக் கொடுத்தது, மேலும் அவர் தாம் தோன்றியதின் மூலம் புதிய காலத்தில் அவருடைய கிரியையின் ஒரு கட்டத்தையும் தொடங்கினார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 81

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அப்பத்தைப் புசித்து, வேதவசனங்களை விளக்குகிறார்

லூக். 24:30-32  அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு?

சீஷர்கள் இயேசுவுக்குப் பொரித்த மீனைப் புசிக்கக் கொடுத்தார்கள்

லூக். 24:36-43  இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து.

அடுத்து, மேலே உள்ள வேதவாக்கியங்களின் பத்திகளைப் பார்ப்போம். முதலாம் பத்தியானது, உயிர்த்தெழுந்த பிறகு கர்த்தராகிய இயேசு அப்பத்தைப் புசிப்பது குறித்த ஒரு விவரத்தைத் தருகிறது மற்றும் வேதவாக்கியங்களை விவரிக்கிறது, இரண்டாம் பக்தியானது கர்த்தராகிய இயேசு பொரித்த மீனைப் புசிப்பதை விவரிக்கிறது. இந்த இரண்டு பத்திகளும் தேவனுடைய தன்மையை அறிய உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன? கர்த்தராகிய இயேசு அப்பத்தைப் புசிப்பதையும், பின்னர் ஒரு பொரித்த மீனைப் புசிப்பதையும் பற்றிய இந்த விளக்கங்களிலிருந்து நீங்கள் பெறும் வரைபடத்தின் வகையை நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா? கர்த்தராகிய இயேசு உங்களுக்கு முன்னால் நின்று அப்பத்தைப் புசித்துக் கொண்டிருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அல்லது அவர் உங்களுடன் ஒரே மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஜனங்களுடன் மீனையும் அப்பத்தையும் புசித்துக் கொண்டிருந்தால், அந்தத் தருணத்தில் நீங்கள் எவ்விதமான உணர்வைக் கொண்டிருப்பீர்கள்? தேவன் உன்னுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்றும், உன்னுடன் நெருங்கிய உறவு கொண்டவராக நீ உணர்ந்தால், இந்த உணர்வு சரியானதாகும். இதுவே கர்த்தராகிய இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கூடியிருந்த ஜனங்களுக்கு முன்னால் அப்பத்தையும் மீனையும் புசிப்பதன் மூலம் விளைவிக்க விரும்பிய சரியான விளைவாகும். கர்த்தராகிய இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர்களுடன் பேச மட்டும் செய்திருந்து, அவருடைய மாம்சத்தையும் எலும்புகளையும் அவர்கள் உணர முடியாமல், அதற்குப் பதிலாக அணுக முடியாத ஆவியானவராக அவரை உணர்ந்திருந்தால், அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள்? அவர்கள் ஏமாற்றமடைந்திருக்க மாட்டார்களா? ஏமாற்றமாக உணர்ந்த ஜனங்கள் கைவிடப்பட்டதாக உணர்ந்திருக்க மாட்டார்களா? தங்களுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையில் ஓர் இடைவெளியை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் அல்லவா? தேவனுடனான ஜனங்களுடைய உறவில் இந்த இடைவெளி எவ்வகையான எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கியிருக்கும்? ஜனங்கள் நிச்சயமாக அவரிடம் நெருங்கத் துணியாதபடி பயப்பட்டிருப்பார்கள், இதனால் அவரை ஒரு மரியாதைக்குரிய தூரத்தில் வைத்திருக்கும் மனப்பான்மை அவர்களுக்கு இருந்திருக்கும். அப்போதிலிருந்து, அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுடனான நெருங்கிய உறவைத் துண்டித்துவிட்டு, கிருபையின் காலத்திற்கு முன்பு இருந்தபடியே, பரலோகத்திலுள்ள தேவனுக்கும் ஜனங்களுக்கும் இடையிலான உறவுக்கே திரும்பி இருந்திருப்பார்கள். ஜனங்கள் தொடவோ, உணரவோ முடியாத ஆவிக்குரிய சரீரமானது தேவனுடனான அவர்களின் நெருக்கத்தை முற்றிலுமாக அழித்திருந்திருக்கும், மேலும் இது கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டதும், அவருக்கும் மனிதர்களுக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லாததுமான நெருங்கிய உறவின் இருப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்திருந்திருக்கும். ஆவிக்குரிய உடலால் ஜனங்களில் கலக்கத்தை ஏற்படுத்தின விஷயங்களாவன பயவுணர்வு, தவிர்த்தல் மற்றும் வார்த்தைகளற்ற கருத்தூன்றிய பார்வை ஆகும். அவர்கள் அவருடன் நெருங்கவோ அல்லது அவருடன் உரையாடலில் ஈடுபடவோ, அதைவிட அவரைப் பின்பற்றவோ, நம்பவோ, அவரை நோக்கிப் பார்க்கவோ கூட துணிந்திருக்க மாட்டார்கள். மனிதர்கள் தமக்காகக் கொண்டிருக்கும் இவ்வகையான உணர்வைக் காண தேவன் விரும்பவில்லை. ஜனங்கள் அவரைத் தவிர்ப்பதையோ அல்லது அவரிடமிருந்து தங்களைத் தாங்களே நீக்குவதையோ அவர் பார்க்க விரும்பவில்லை; ஜனங்கள் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும், அவரிடம் நெருங்கி வர வேண்டும், அவருடைய குடும்பமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். உன்னுடைய சொந்தக் குடும்பம், உன்னுடைய பிள்ளைகள், உன்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்ளவில்லையெனில், உன்னிடம் நெருங்கிவரத் துணியாமல் எப்பொழுதும் உன்னைத் தவிர்த்தால், நீ அவர்களுக்காக செய்த எல்லாவற்றையும் குறித்த அவர்களுடைய புரிந்துகொள்ளுதலை உன்னால் பெற முடியாமல் போனால், அது உன்னை எவ்வாறு உணர வைக்கும்? அது வேதனையாக இருக்கும் அல்லவா? நீ மனமுடைந்து போவாய் அல்லவா? ஜனங்கள் அவரைத் தவிர்க்கும் போது தேவனும் அப்படியே தான் உணருகிறார். ஆகவே அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அப்போதும் கர்த்தராகிய இயேசு மாம்சமும் இரத்தமும் கொண்ட அவருடைய உருவத்துடன் ஜனங்களுக்குத் தரிசனமானார், அப்போதும் அவர்களுடன் புசித்துக் குடித்தார். தேவன் ஜனங்களைக் குடும்பமாக பார்க்கிறார், மேலும் மனுக்குலமும் தன்னை மிகவும் அன்புக்குரியவராகக் காண வேண்டுமென தேவன் விரும்புகிறார். இவ்வழியில் மட்டுமே தேவன் உண்மையிலேயே ஜனங்களை ஆதாயப்படுத்த முடியும், மேலும் இவ்வழியில் மட்டுமே ஜனங்கள் தேவனை உண்மையாக நேசிக்கவும், ஆராதிக்கவும் முடியும். கர்த்தராகிய இயேசு அப்பத்தைப் புசிக்கும் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு வேதவாக்கியங்களை விளக்கும் மற்றும் சீஷர்கள் அவருக்குப் பொரித்த மீனைப் புசிக்கக் கொடுக்கும் இந்த வேத வசனங்களின் இரண்டு பத்திகளைச் சுட்டிக்காட்டுவதிலுள்ள என் நோக்கத்தை இப்பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பிறகு சொன்ன மற்றும் செய்த விஷயங்களின் தொடர்களுக்குள்ளே வாஞ்சையுள்ள எண்ணம் வைக்கப்பட்டது என்று கூறலாம். இந்த விஷயங்கள் தேவன் மனுக்குலத்தின் மீது கொண்டிருந்த இரக்கமும் அன்பும் நிறைந்தவையாக இருந்தன, மேலும் அவை, அவர் மாம்சத்தில் இருந்த காலத்தில் மனுக்குலத்துடன் ஏற்படுத்தியிருந்த நெருக்கமான உறவிற்காக அவர் கொண்டிருந்த நேசமும், கருத்தார்ந்த அக்கறையும் நிறைந்ததாய் இருந்தன. இன்னும் அதிகமாக, அவர் மாம்சத்தில் இருந்த காலத்தில் தம்முடைய சீஷர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, வாழ்ந்த வாழ்க்கைக்காக அவர் உணர்ந்த ஏக்கமும் பேராவலும் நிறைந்தவையாக இருந்தன. ஆகவே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஓர் இடைவெளியை ஜனங்கள் உணரவும் தேவன் விரும்பவில்லை, அல்லது மனிதர்கள் தேவனிடம் இருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்வதையும் அவர் விரும்பவில்லை. இன்னும் அதிகமாகக் கர்த்தராகிய இயேசு தன் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஜனங்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்த தேவனாக இருக்கப் போவதில்லை என்றும், அவர் ஆவிக்குரிய உலகத்திற்குத் திரும்பிப்போனதால், ஜனங்கள் ஒருபோதும் காணக்கூடாத, அடையக்கூடாத பிதாவிடம் அவர் திரும்பிப்போனதால், அவர் இனி மனுக்குலத்துடன் ஒன்றாக இருக்கப் போவதில்லை என்று மனுக்குலம் நினைக்கவும் அவர் விரும்பவில்லை. தனக்கும் மனுக்குலத்திற்கும் இடையில், அந்தஸ்தில் எந்த ஒரு வித்தியாசமும் தோன்றியுள்ளதாக ஜனங்கள் நினைக்க அவர் விரும்பவில்லை. தம்மைப் பின்பற்ற விரும்பும், ஆனால் தன்னை மரியாதைக்குரிய தூரத்தில் வைத்திருக்கும் ஜனங்களை தேவன் பார்க்கும்போது அவருடைய இருதயம் வேதனை அடைகிறது, ஏனென்றால் அவர்களுடைய இருதயங்கள் அவரிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளன என்பதையும் அவர்களுடைய இருதயங்களை ஆதாயப்படுத்துவது அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதையும் அது குறிக்கிறது. ஆகவே, அவர்கள் பார்க்கவோ தொடவோ முடியாத ஆவிக்குரிய உடலோடு அவர் ஜனங்களுக்குத் தரிசனமாகியிருந்தால், அது மீண்டும் மனிதனைதேவனிடமிருந்து விலக்கி இருக்கும், மேலும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கிறிஸ்துவை ஆணவமுள்ளவராக, மனிதர்களைவிட வித்தியாசமானவராக, மேலும் மனிதர்கள் பாவம் நிறைந்தவர்களாக, அசுத்தமானவர்களாக, ஒருபோதும் தேவனிடம் நெருங்கிச் சேர முடியாதவர்களாக இருப்பதால், அவர் அதன்பின் மனிதனோடு இணைந்து புசிக்க மாட்டாத ஒருவராக மாறிவிட்டார் என்று மனுக்குலம் தவறாகப் பார்க்க வழிநடத்தியிருக்கும். மனுக்குலத்தின் இந்தத் தவறான புரிதல்களை அகற்றுவதற்காக, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் இருந்தபோது செய்த பல விஷயங்களைச் செய்தார்: “அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.” அவர் கடந்த காலங்களில் செய்ததைப் போலவே, வேதவாக்கியங்களையும் அவர்களுக்கு விளக்கினார். கர்த்தராகிய இயேசு செய்த இந்தக் காரியங்கள் அனைத்தும், அவரைப் பார்த்த ஒவ்வொரு மனிதனையும், கர்த்தர் மாறவில்லை என்றும் அவர் இன்னும் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருக்கிறார் என்றும் உண்மையில் உணர வைத்தன. அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரணத்தை ருசித்திருந்தாலும், அவர் உயிர்த்தெழுந்தார், அவர் மனுக்குலத்தை விட்டுச் செல்லவில்லை. அவர் மனிதர்களிடையே இருக்கும்படியாய்த் திரும்ப வந்தார், அவரைப் பற்றிய எதுவுமே மாறவில்லை. ஜனங்கள் முன் நின்று கொண்டிருக்கும் மனுஷகுமாரன் அப்போதும் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருந்தார். அவரது நடத்தையும், ஜனங்களுடன் உரையாடும் அவருடைய முறையும் மிகப் பழக்கமானதாகவே உணரப்பட்டன. அவர் அப்போதும் அன்பான இரக்கத்தால், கிருபையால் சகிப்புத்தன்மையால் நிறைந்தவராக இருந்தார், அவர் அப்போதும் தம்மை நேசித்ததைப் போலவே மற்றவர்களை நேசித்த, மனுக்குலத்தை ஏழெழுபது முறை மன்னிக்கக் கூடிய அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருந்தார். முன்பு போலவே, அவர் ஜனங்களுடன் புசித்தார், வேதவாக்கியங்களைப் பற்றி கலந்துரையாடினார், அதைவிட முக்கியமாக, முன்பு போலவே, அவர் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய், தொடவும் பார்க்கவும் கூடியவராக இருந்தார். மனுஷகுமாரன் ஜனங்கள் நெருக்கத்தை உணரவும், நிம்மதியாக உணரவும், இழந்த ஒன்றை மீண்டும் பெறுகிற மகிழ்ச்சியை உணரவும் ஜனங்களை அனுமதித்தார். மிகச் சுலபமாக அவர்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பாவங்களிலிருந்து மனுக்குலத்தை மன்னிக்கக் கூடிய மனுஷகுமாரனைச் சார்ந்து கொள்ளவும், நோக்கிப் பார்க்கவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் தயக்கமின்றி ஜெபிக்க ஆரம்பித்தார்கள், அவருடைய கிருபையையும், அவருடைய ஆசீர்வாதத்தையும் அவரிடமிருந்து சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்ளவும், அவரிடமிருந்து அக்கறையையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளவும் ஆரம்பித்தார்கள். மேலும் அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் வியாதியஸ்தர்களைச் சுகமாக்கவும், பிசாசுகளைத் துரத்தவும் தொடங்கினார்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 82

கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் கிரியை செய்த காலத்தில், அவருடைய சீஷர்களில் பெரும்பாலானோர், அவருடைய அடையாளத்தையும் அவர் சொன்ன விஷயங்களையும் முழுமையாகச் சரிபார்க்க முடியவில்லை. அவர் சிலுவையை நெருங்கும்போது, அவரைப் பின்பற்றுபவர்களின் மனப்பான்மையானது, கவனித்துப் பார்ப்பதாக இருந்தது. பின்னர், அவர் சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் இருந்து அவர் கல்லறைக்குள் வைக்கப்படும் நேரம் வரையிலும், அவரைக் குறித்த ஜனங்களுடைய மனப்பான்மையானது ஏமாற்றமாகவே இருந்தது. இந்தச் சமயத்தில், கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் இருந்த காலத்தில் சொன்ன விஷயங்களைச் சந்தேகிப்பதிலிருந்து அவற்றை முற்றிலுமாக மறுக்கும் வரையிலும் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் நிலைமாற ஆரம்பித்தார்கள். பின்னர், அவர் கல்லறையிலிருந்து வெளியேறி, ஒவ்வொருக்கும் தரிசனமானபோது, அவரைத் தங்கள் சொந்தக் கண்களால் பார்த்த அல்லது அவருடைய உயிர்த்தெழுதலின் செய்தியை கேட்டவர்களில் பெரும்பாலானோர், படிப்படியாகத் தங்கள் மறுப்பின் மனப்பான்மையிலிருந்து சந்தேகம் கொள்ளும் மனநிலைக்கு மாறினர். கர்த்தராகிய இயேசு தோமாவைத் தன் விலாவில் கை வைத்துப் பார்க்க அனுமதித்த பின்பே, அவர் தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கூட்டத்திற்கு முன்பாக அப்பத்தைப் பிட்டு புசித்து, அதன்பின் அவர்களுக்கு முன்னால் பொரிக்கப்பட்ட மீனைப் புசிக்க ஆரம்பித்த பிறகே, அவர்கள் கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் இருக்கும் கிறிஸ்து என்ற உண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். மாம்சம் மற்றும் இரத்தத்தினாலான இந்த ஆவிக்குரிய சரீரம் அந்த ஜனங்கள் முன்பாக நின்று, ஒவ்வொருவரையும் ஒரு கனவிலிருந்து எழுப்புவது போல் இருந்தது என்று நீங்கள் கூறலாம். அவர்களுக்கு முன்னால் நிற்கும் மனுஷகுமாரன் ஆதிகாலத்திலிருந்தே இருந்த ஒருவராவார். அவருக்கு ஒரு வடிவம், மாம்சம் மற்றும் எலும்புகள் இருந்தன, அவர் ஏற்கனவே மனுக்குலத்துடன் நீண்ட காலமாக வாழ்ந்திருந்து, புசித்திருந்தார்…. இந்த நேரத்தில், அவர் இருப்பது மிகவும் உண்மையானது என்றும், மிகவும் அற்புதமானது என்றும் ஜனங்கள் உணர்ந்தனர். அதே சமயம், அவர்கள் மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து, உணர்ச்சிகளால் நிறைந்திருந்தனர். அவர் மீண்டும் தரிசனமானது, அவருடைய மனத்தாழ்மையையும், ஜனங்களுடனான அவரது நெருக்கத்தையும் தொடர்பையும் உணரவும், அவர்களைப் பற்றி அவர் எவ்வளவு நினைவாய் இருந்தார் என்பதையும் பார்க்க ஜனங்களை அனுமதித்தது. இந்தச் சிறிய மறு இணக்கமானது கர்த்தராகிய இயேசுவைக் கண்ட ஜனங்களுக்கு ஓர் ஆயுட்காலம் கடந்து விட்டதைப் போல உணர வைத்தது. அவர்களின் இழந்து போன, குழப்பமான, பயமான, பதட்டமான, ஏங்குகிற மற்றும் உணர்ச்சியற்ற இருதயங்கள் ஆறுதலடைந்தன. அவர்கள் அதன்பின் சந்தேகமாகவோ ஏமாற்றமாகவோ இருக்கவில்லை, ஏனென்றால் அப்போது நம்பிக்கையும், சார்ந்து கொள்ள ஏதோ ஒன்றும் இருக்கிறதாக அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுக்கு முன்பாக அப்போது நின்று கொண்டிருந்த மனுஷகுமாரன் எல்லா நேரங்களிலும் அவர்களைக் காப்பவராக இருந்தார்; அவர் அவர்களுக்குப் பலத்த கோட்டையாகவும், நித்தியத்திற்கும் அவர்கள் புகலிடமாகவும் இருந்தார்.

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்திருந்தாலும், அவருடைய இருதயமும், அவருடைய கிரியையும் மனுக்குலத்தை விட்டு விடவில்லை. ஜனங்களுக்குத் தோன்றுவதின் மூலம், அவர் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவர்களுடன் இணைசேர முடியும், அவர்களுடன் நடக்க முடியும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அவர்களோடு இருக்க முடியும் என்பதை அவர்களுக்குச் சொன்னார். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் மனுக்குலத்தின் தேவைகளைச் சந்திப்பதாகவும், அவரைப் பார்க்கவும், தொடவும் அவர்களை அனுமதிப்பதாகவும், மேலும் அவர்கள் மீண்டும் ஒருபோதும் உதவியற்றவர்களாக உணராதபடி உத்தரவாதமளிப்பதாகவும் அவர்களுக்குச் சொன்னார். தாங்கள் இந்த உலகத்தில் தனியாக வாழவில்லை என்பதையும் ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு விரும்பினார். மனுக்குலத்திற்கு தேவனுடைய அக்கறை உண்டு; தேவன் அவர்களுடன் இருக்கிறார். அவர்கள் எப்போதும் தேவனைச் சார்ந்து கொள்ளலாம், மேலும் அவர் தம்மைப் பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் குடும்பமாய் இருக்கிறார். சார்ந்து கொள்ள தேவன் இருக்கையில், மனுக்குலம் இனி தனிமையாகவும், உதவியற்றதாகவும் இருக்கப்போவதில்லை, மேலும் அவரைத் தங்கள் பாவநிவாரணபலியாக ஏற்றுக்கொள்பவர்கள் இனி ஒருபோதும் பாவத்தினால் கட்டுண்டிருக்க மாட்டார்கள். மனிதர்களின் பார்வையில் கர்த்தராகிய இயேசு தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு செய்த கிரியையின் இந்தப் பகுதிகள் மிகச் சிறிய விஷயங்களாயிருந்தன, ஆனால் நானோ அவர் செய்த ஒவ்வொன்றையும் மிகவும் அர்த்தமுள்ளதாக, மிகவும் மதிப்புமிக்கவையாக, அதிக முக்கியத்துவமுடையதாக மற்றும் தனிச்சிறப்பு நிறைந்ததாகப் பார்க்கிறேன்.

கர்த்தராகிய இயேசுவின் மாம்சத்தில் கிரியை செய்த நேரமானது கஷ்டங்களும் துன்பங்களும் நிறைந்ததாக இருந்தபோதிலும், அவர் மாம்சம் மற்றும் இரத்தம் கொண்ட ஆவிக்குரிய சரீரத்தில் தரிசனமானதின் மூலம், அந்த காலத்திற்குரிய மனுக்குலத்தை மீட்கும் தன்னுடைய கிரியையை முழுமையாகவும் பரிபூரணமாகவும் மாம்சத்தில் நிறைவேற்றினார். அவர் மாம்சமாகிறதன் மூலம் தன்னுடைய ஊழியத்தைத் தொடங்கினார், மேலும் அவர் மனுக்குலத்திற்கு அவருடைய மாம்ச வடிவத்தில் தோன்றுவதின் மூலம் தம்முடைய ஊழியத்தை முடித்தார். அவர் கிருபையின் காலத்தை முன்னறிவித்து, கிறிஸ்து என்ற தனது அடையாளத்தின் மூலம் புதிய காலத்தைத் தொடங்கினார். கிறிஸ்து என்ற அவரது அடையாளத்தின் மூலம் அவர் கிருபையின் காலத்தில் கிரியை செய்தார், மேலும் கிருபையின் காலத்தில் தம்மைப் பின்பற்றின அனைவரையும் பெலப்படுத்தி, வழிநடத்தினார். தேவனுடைய கிரியையைப் பற்றி, அவர் தொடங்கியதை அவர் உண்மையாக நிறைவேற்றினார் என்று சொல்லலாம். அங்கே படிகளும் திட்டங்களும் உள்ளன, மேலும் அவருடைய கிரியையானது அவருடைய ஞானம், அவருடைய சர்வவல்லமை, அவருடைய அற்புதமான செயல்கள், அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தினால் நிறைந்துள்ளது. நிச்சயமாக இதனுடைய எல்லா கிரியைகளிடையே இருக்கிற முக்கிய கருத்து மனுக்குலத்திற்கான அவருடைய அக்கறையே ஆகும்; அது அவரால் எப்போதும் ஒதுக்கி வைக்க முடியாத அவரது அக்கறை உணர்வுகளால் வியாபித்துள்ளது. வேதாகமத்தின் இந்த வசனங்களில், கர்த்தராகிய இயேசு அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு செய்த ஒவ்வொரு காரியத்திலும் தேவனுடைய மாறாத நம்பிக்கையும், மனுக்குலத்திற்கான அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டன, அதேபோல் மனுக்குலத்திற்கான கருத்தார்ந்த கவனிப்பும், நேசமும் வெளிப்படுத்தப்பட்டன. இவை எதுவும் இதுவரையிலும் மாறவில்லை, இன்று வரையிலும் மாறவில்லை, உங்களால் இதைப் பார்க்க முடிகிறதா? நீங்கள் இதைப் பார்க்கும்போது உங்கள் இருதயங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே தேவனிடம் கிட்டிச் சேருகிறது அல்லவா? நீங்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்து, கர்த்தராகிய இயேசு தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நீங்கள் பார்க்கும்படி உங்களுக்கு உருவமுள்ளவராகத் தரிசனமாகியிருந்திருப்பாரானால், அவர் உங்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பாரானால், அப்பத்தையும் மீனையும் புசித்து உங்களுக்கு வேத வசனங்களை விளக்கியிருந்திருப்பாரானால், உங்களிடம் பேசி இருந்திருப்பாரானால், நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? நீங்கள் மகிழ்ச்சியாக உணர்ந்திருப்பீர்கள் அல்லவா? அல்லது குற்ற உணர்ச்சியுடன் இருந்திருப்பீர்களா? முந்தைய தவறானப் புரிதல்கள் மற்றும் தேவனைத் தவிர்த்தல், தேவனுடனான போட்டிகள் மற்றும் அவரைக் குறித்தச் சந்தேகங்கள் ஆகிய அனைத்தும் மறைந்து போயிருக்கும் அல்லவா? தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு மிக இயல்பானதாகவும், சரியானதாகவும் மாறியிருக்கும் அல்லவா?

வேதாகமத்தின் இந்த வரையறுக்கப்பட்ட அத்தியாயங்களை விளக்குவதன் மூலம் தேவனுடைய மன நிலையில் ஏதேனும் குறைபாடுகளை நீங்கள் காண்கிறீர்களா? தேவனுடைய அன்பில் ஏதேனும் கலப்படத்தை நீங்கள் காண்கிறீர்களா? தேவனுடைய சர்வவல்லமையில் அல்லது ஞானத்தில் ஏதேனும் வஞ்சகத்தையோ அல்லது தீமையையோ நீங்கள் பார்க்கிறீர்களா? நிச்சயமாக பார்க்க முடியாது! தேவன் பரிசுத்தமானவர் என்று இப்போது உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? தேவனுடைய உணர்ச்சிகளில் ஒவ்வொன்றும் அவருடைய சாராம்சம் மற்றும் அவருடைய மனநிலையின் வெளிப்பாடு என்று நீங்கள் உறுதியாகக் கூற முடியுமா? நீங்கள் இந்த வார்த்தைகளைப் படித்த பிறகு இவைகளிலிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளும் புரிதலானது, உங்களுக்கு உதவும் என்றும், மனநிலையிலும் மற்றும் தேவனுக்கு பயப்படுதலிலும் நீங்கள் அடைய முயற்சிக்கும் மாற்றத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்றும் நம்புகிறேன். மேலும் அவை உங்களில் பலன் தரும் என்றும், அந்தப் பலனானது நாளுக்கு நாள் வளரும் என்றும், இதனால் இந்த முயற்சியின் செயல்பாட்டில் நீங்கள் தேவனுக்கு இன்னும் அதிக நெருக்கமாவீர்கள் என்றும் தேவன் விரும்பும் தரத்திற்கு அதிக நெருக்கமாவீர்கள் என்றும் நம்புகிறேன். சத்தியத்தைப் பின்தொடர்வதில் நீங்கள் இனி சலிப்படைய மாட்டீர்கள், மேலும் சத்தியத்தைப் பின்தொடர்வதையும் மற்றும் மனநிலையில் மாற்றத்தைப் பின்தொடர்வதையும் இனி தொந்தரவானதாகவோ அல்லது மிதமிஞ்சிய விஷயமாகவோ நினைக்க மாட்டீர்கள். மாறாக, தேவனுடைய உண்மையான மனநிலை மற்றும் தேவனுடைய பரிசுத்த சாராம்சத்தின் வெளிப்பாட்டினால் உந்தப்பட்டு, நீங்கள் வெளிச்சத்திற்காக ஏங்குவீர்கள், நீதிக்காக ஏங்குவீர்கள், சத்தியத்தைப் பின்தொடர, தேவசித்தத்தின் திருப்தியைப் பின்தொடர ஆசைப்படுவீர்கள், மேலும் நீங்கள் தேவனால் ஆதாயம் பண்ணப்பட்ட நபராகவும், உண்மையான நபராகவும் ஆவீர்கள்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

முந்தைய: தேவனை அறிதல் I

அடுத்த: தேவனை அறிதல் III

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக