ஜீவனுக்குள் பிரவேசித்தல் I

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 374

எல்லாவற்றிற்கும் தலைவரான சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய ராஜ வல்லமையை அவருடைய சிங்காசனத்தில் இருந்து பிரயோகிக்கிறார். அவர் பிரபஞ்சத்தையும், எல்லாவற்றையும் ஆளுகிறார், மேலும் பூமியெங்கிலும் நமக்கு வழிகாட்டும் கிரியையைச் செய்கிறார். ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவருடன் நெருக்கமாக இருப்போம், ஒருபோதும் ஒரு தருணத்தையும் இழக்காமல், எல்லா நேரங்களிலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகளுடன் அவருக்கு முன் அமைதியுடன் வருவோம். சுற்றியுள்ள சூழலில் இருந்து ஜனங்கள், செயல்பாடுகள் மற்றும் விஷயங்கள் அனைத்தும் அவருடைய சிங்காசனத்தின் அனுமதியால் இருக்கின்றன. எந்த ஒரு காரணத்தினாலும், உங்கள் இருதயத்தில் மனக்குறைகள் எழும்பக்கூடாது, இல்லையென்றால் தேவன் தம்முடைய கிருபையை உங்களுக்கு அளிக்க மாட்டார். நோய் வரும்போது, இது தேவனுடைய அன்பு, நிச்சயமாக அவருடைய அன்பான நோக்கங்கள் அதற்குள் மறைந்துள்ளன. உங்கள் சரீரம் கொஞ்சம் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டாலும், சாத்தானிடமிருந்து எந்த யோசனைகளையும் வரவேற்க வேண்டாம். நோயின் மத்தியில் தேவனைத் துதியுங்கள், உங்கள் துதியின் மத்தியில் தேவனை அனுபவியுங்கள். நோயை எதிர்கொள்ளும்போது நம்பிக்கையை இழக்காதீர்கள், விட்டு விடாமல் மீண்டும் மீண்டும் தேடுங்கள், தேவன் தம்முடைய ஒளியால் உங்களை ஒளிரச் செய்வார். யோபுவின் நம்பிக்கை எப்படி இருந்தது? சர்வவல்லமையுள்ள தேவன் எல்லாம் வல்ல மருத்துவராவார். நோயுடன் வாழ்வது நோய்வாய்ப்படுவதாகும், ஆனால் ஆவியில் வாழ்வது ஆரோக்கியமாக இருப்பதாகும். உனக்கு ஒரு சுவாசம் இருக்கும்வரை, தேவன் உன்னை மரிப்பதற்கு விடமாட்டார்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவன் நமக்குள் இருக்கிறது. நிச்சயமாகவே, தேவ சமூகத்தில் நாம் விசுவாசத்தில் குறைவுபட்டிருக்கிறோம்: தேவன் நமக்குள் உண்மையான விசுவாசத்தை வைப்பாராக. உண்மையில் தேவனுடைய வார்த்தை இனிமையானது! தேவனுடைய வார்த்தை ஆற்றல்மிக்க மருந்து! அது பிசாசுகளையும் சாத்தானையும் வெட்கப்படுத்துகிறது! தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்வது நமக்கு ஆதரவளிக்கிறது. அவருடைய வார்த்தை நம் இருதயங்களை இரட்சிக்க வேகமாகக் கிரியை செய்கிறது. அது எல்லாவற்றையும் அகற்றி, எல்லாவற்றிலும் சமாதானத்தை ஏற்படுத்துகிறது. விசுவாசமானது ஒற்றை மரப்பாலம் போன்றது: வாழ்க்கையை இழிவான வகையில் பற்றிக் கொள்பவர்கள் அதைக் கடப்பதற்குச் சிரமப்படுவார்கள், ஆனால் தங்களையே அர்ப்பணிக்கத் தயாராய் இருப்பவர்கள் தடுமாறாமல், கவலையற்று கடந்து செல்லலாம். தேவனை அடையும்படி நாம் விசுவாசப் பாலத்தை கடந்து போய் விடுவோம் என்ற பயத்தில், சாத்தான் அவர்களை முட்டாளாக்கினதே மனிதன் கோழையான, பயப்படுகிற எண்ணங்களைக் கொண்டிருப்பதன் காரணமாகும். அவன் எண்ணங்களை நமக்கு அனுப்பும்படி சாத்தான் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறான். தேவன் தம்முடைய ஒளியால் நம்மை ஒளிரச் செய்ய வேண்டும் என்று நாம் ஒவ்வொரு நொடியும் ஜெபிக்க வேண்டும், நமக்குள்ளிருந்து சாத்தானுடைய விஷத்தை வெளியேற்றும்படி நாம் ஒவ்வொரு நொடியும் தேவனைச் சார்ந்து கொள்ள வேண்டும், தேவனிடம் எப்படி நெருங்குவது என்று ஒவ்வொரு நொடியும் நம் ஆவியில் பயிற்சி செய்ய வேண்டும், தேவன் நம் முழு இருப்பின் மீதும் அதிகாரம் செய்யட்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 6” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 375

ஜனங்கள் தங்களுக்கு நடக்கும் விஷயங்களைப் பற்றிய நுண்ணறிவு இல்லாமலும், என்ன செய்வது என்பதை அறியாமலும் இருக்கும்போது, அவர்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்ன? முதலாவதாக அவர்கள் ஜெபிக்க வேண்டும்; ஜெபம் முதலாவது இடத்தில் வருகிறது. நீ ஜெபிக்கிறாய் என்பதன் அர்த்தம் என்ன? நீ பக்திமானாய் இருக்கிறாய் என்றும், தேவன் மீது ஓரளவு பயம் கொண்ட இருதயத்தை நீ பெற்றிருக்கிறாய் என்றும், தேவனைத் தேட வேண்டும் என்பதை நீ அறிந்திருக்கிறாய் என்றும் அர்த்தமாகும், மேலும் நீ தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறாய் என்பதை இது நிரூபிக்கிறது. உன் இருதயத்தில் தேவன் இருக்கும்போது, உன்னுடைய இருதயத்தில் தேவன் ஒரு இடத்தைப் பெற்றிருக்கும்போது, உன்னால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும்போது, நீ ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவனாய் இருக்கிறாய். அனுதினமும் ஒரே நேரத்திலும் ஒரே இடத்திலும் முழங்கால்படியிட்டு, ஒரு மணிநேரமோ அல்லது இரண்டு மணிநேரமோ ஜெபத்தில் தரித்திருக்கும் மூத்த விசுவாசிகள் அநேகர் உள்ளனர். ஆனால் இத்தனை வருடங்களாக இப்படி மண்டியிடுவதன் மூலமாக, அவர்களது பாவப் பிரச்சனை எதுவும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. மத சம்பிரதாய ஜெபமாகிய—அத்தகைய ஜெபத்தால்—ஏதேனும் பயன் உண்டா இல்லையா என்பதை நாம் இப்போதைக்கு ஒதுக்கிவைப்போம். குறைந்த பட்சம், இந்த வயதான சகோதர சகோதரிகள் கொஞ்சமாவது பக்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; இந்த விஷயத்தில், அவர்கள் இளைஞர்களை விட மிகவும் சிறந்தவர்களாவர். நீ தேவனுக்கு முன்பாக வாழ்ந்து, தேவனுடைய கிரியையை அனுபவித்தால், உனக்கு ஏதாவது நேரிடும்போது, முதலாவதாக நீ செய்ய வேண்டியது ஜெபிப்பதேயாகும். ஜெபம் செய்வது என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படும் சில வார்த்தைகளை அடிக்கடி வெறித்தனமாக உச்சரிப்பது அல்ல, மேலும் எந்த விதத்திலும்—இது பிரச்சனையைத் தீர்க்காது. நீ உன்னுடைய இருதயத்திலிருந்து ஜெபிப்பதற்குப் பயிற்சிசெய்ய வேண்டும். இதை எட்டு முறையோ அல்லது பத்து முறையோ செய்த பிறகும் கூட, நீ எதையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் சோர்வடைய வேண்டாம், தொடர்ந்து முயற்சி செய். உனக்கு ஏதாவது நேரிடும்போது, முதலாவதாக ஜெபம் செய், முதலில் தேவனிடத்தில் சொல்லு, தேவன் பொறுப்பேற்கட்டும், தேவன் உனக்கு உதவி செய்யட்டும், தேவன் உன்னை வழிநடத்தட்டும், மற்றும் உனக்கு வழிகாட்டட்டும்; தேவனுக்குப் பயப்படுகிற இருதயம் உனக்கு இருக்கிறது என்பதையும், நீ தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறாய் என்பதையும் இது நிரூபிக்கும். உனக்கு ஏதாவது நேரிடும்போதோ அல்லது நீ சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போதோ, நீ எதிர்மறையாக இருந்து, கோபப்படும்போது, இது உன்னுடைய இருதயத்தில் தேவன் இல்லாததையும், நீ தேவனுக்குப் பயப்படுவதில்லை என்பதையும் வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. உன்னுடைய அன்றாட வாழ்க்கையில், நீ எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும், நீ தேவனுக்கு முன்பாக வர வேண்டும்; நீ செய்யவேண்டிய முதல் விஷயம், ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக மண்டியிடுவதுதான், இதுவே மிக முக்கியமானதாகும். ஜெபம் என்பதன் அர்த்தம் உன்னுடைய இருதயத்தில் தேவன் ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதேயாகும். நீ பிரச்சனையில் இருக்கும்போது, சத்தியத்தைத் தேடும்படிக்கு தேவனை நோக்கிப் பார்த்துக்கொண்டும், தேவனிடத்தில் ஜெபம் செய்துகொண்டும் இருப்பது, நீ தேவனுக்கு பயப்படுகிற ஒரு இருதயத்தை ஓரளவு பெற்றிருப்பதைக் காட்டுகிறது; தேவன் உன்னுடைய இருதயத்தில் இல்லாவிட்டால், நீ அதைச்செய்ய மாட்டாய். சிலர், “நான் தேவனிடத்தில் ஜெபம் செய்தேன், ஆனால் தேவன் இன்னும் என்னைப் பிரகாசிப்பிக்வில்லை!” என்று சொல்கிறார்கள். நீ அப்படிச் சொல்ல முடியாது. நீ ஜெபிக்கும்போது சரியான உந்துதல்கள் உள்ளனவா என்பதை நீ முதலில் பார்க்க வேண்டும்; நீ மெய்யாகவே சத்தியத்தைத் தேடி, அடிக்கடி தேவனிடத்தில் ஜெபம் செய்தால், அப்போது, தேவன் உன்னை நன்றாகப் பிரகாசிப்பிக்கும் மற்றும் உன்னைப் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு குறிப்பிட்ட விஷயம் இருக்கக் கூடும்; எதுவாக இருந்தாலும், தேவன் உனக்குப் புரியவைப்பார். தேவன் உன்னைப் பிரகாசிப்பிக்கவில்லை என்றால், நீயாகவே சொந்தமாகப் புரிந்துகொள்ள முடியாது; நீ நுண்ணறிவு உள்ளவனாக இருக்கிறாயோ இல்லையோ, மற்றும் உன்னுடைய திறன் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, மனுஷனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் உள்ளன. நீ புரிந்துகொள்ளும்போது, இது உன்னுடைய சொந்த எண்ணத்திலிருந்து வெளிப்பட்டதா? பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கான நோக்கங்களையும் தேவனுடைய நோக்கங்களையும் பொருத்தவரையில், நீ பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிப்பிக்கப்படவில்லை என்றால், நீ யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால் அவர்களுக்குத் தெரியாது; தேவன்தாமே உனக்கு அதன் அர்த்தம் என்ன என்று சொல்லும்போதுதான், நீ அறிந்துகொள்ளுவாய். எனவே, உனக்கு ஏதாவது நேரிடும்போது, நீ முதலில் செய்ய வேண்டியது ஜெபிப்பதே ஆகும். நீ ஜெபிக்கும்போது, உன்னுடைய எண்ணங்களையும், கருத்துகளையும் மற்றும் அணுகுமுறையையும் தேவனுக்கு வெளிப்படுத்த வேண்டும், மேலும் கீழ்ப்படியும் மனநிலையுடன் தேவனிடமிருந்து சத்தியத்தை நாட வேண்டும்; இதைத்தான் நீ பயிற்சி செய்ய வேண்டும். வெறுமனே, ஏனோதானோவென்று இருப்பது எந்த விளைவையும் ஏற்படுத்தாது, மேலும் பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிப்பிக்கவில்லை என்று நீ குறைகூறக்கூடாது. தேவன் மீதான தங்களது விசுவாசத்தில், சிலர் வெறுமனே மதச் சம்பிரதாயங்களைப் பின்பற்றி மதச் சடங்குகளைச் செய்வதை நான் கண்டிருக்கிறேன்; அவர்களது இருதயங்களில் தேவனுக்கு இடமில்லை, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கூட மறுதலிக்கிறார்கள், அவர்கள் ஜெபிப்பதுமில்லை, தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பதுமில்லை, அவர்கள் வெறுமனே சபைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள், வேறு எதுவும் செய்வதில்லை. இதுதான் தேவனை விசுவாசிப்பதா? அவர்கள் செய்கிறபடியே விசுவாசிப்பதால், அவர்கள் தேவன் இல்லை என்று விசுவாசித்திருக்கிறார்கள், அவர்களின் இருதயங்களில் தேவன் இல்லை, அவர்கள் ஒருபோதும் தேவனிடத்தில் ஜெபம்செய்ய விரும்புவதில்லை, தேவனுடைய வார்த்தைகளை வாசிக்க விரும்புவதில்லை. இதனால், அவர்கள் அவிசுவாசிகளாக ஆகவில்லையா? குறிப்பாக, சில தலைவர்களும் ஊழியர்களும், பெரும்பாலும் பொது விவகாரங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்கள் ஜீவனுக்குள் பிரவேசித்தலில் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை, மாறாக, இந்தப் பொது விவகாரங்களைத் தங்கள் கடமையின் பணியாகக் கருதுகிறார்கள்; இதனால், அவர்கள் தலைமைக் குமாஸ்தாக்களாக மாறியிருக்கிறார்களே அல்லாமல் வேறல்ல, தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் சாராம்சத்திற்குரிய எந்தப் பணியையும் செய்வதில்லை. இதன் விளைவாக, இருபது அல்லது முப்பது வருடங்களாக தேவனை விசுவாசித்த பிறகும், சொல்லுவதற்குக் கூட அவர்களிடம் வாழ்க்கை அனுபவங்கள் இல்லை, அவர்கள் தேவனைப் பற்றிய மெய்யான அறிவு எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள், மேலும் உபதேசத்தின் சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் திரும்பத் திரும்பச் செல்லிக்கொண்டிருக்க முடியும். இதனால், அவர்கள் பொய்யான தலைவர்களாக மாறியிருக்கவில்லையா? இதற்குக் காரணம், அவர்கள் தேவனை விசுவாசிக்கின்றனர், ஆனால் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்வதோ அல்லது சத்தியத்தைப் பின்தொடர்வதோ இல்லை. வெறுமனே உபதேசத்தின் சொற்களைப் புரிந்துகொள்வதைச் சார்ந்திருப்பது எதையும் சரிசெய்யாது. அவர்கள் சோதிக்கப்படும்போதோ, அல்லது பேரிடர்களைச் சந்திக்கும்போதோ, அல்லது நோய்வாய்ப்படும்போதோ தேவனைப் பற்றிக் குறை கூறுவது, தங்களைப் பற்றிய மெய்யான அறிவு எதையும் பெற்றிராதிருப்பது, அனுபவமும் சாட்சியும் இல்லாதவர்களாய் இருப்பது—ஆகிய இவை அனைத்தும் தேவனை விசுவாசித்த ஆண்டுகளில் ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடர்ந்திருக்கவில்லை என்பதையும், அவர்கள் மேலோட்டமான விஷயங்களில் மட்டுமே தங்களை மும்முரமாக்கி ஈடுபடுத்தி வந்திருக்கின்றனர் என்பதையும், இதன் விளைவாக அவர்கள் தங்களைத் தாங்களே இழந்துவிட்டார்கள் என்பதையும் காட்டுகிறது. ஜனங்கள் எத்தனை வருடங்களாக தேவனை விசுவாசித்திருந்தாலும் சரி, அவர்கள் விழுந்துபோகாமலும், தீமை செய்யாமலும், வெளியேற்றப்படாமலும் இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் சில சத்தியங்களைப் பற்றிய புரிதலை அடைய வேண்டும். இது மிகக் குறைந்தபட்சமாவது அவர்களில் காணப்பட வேண்டும். சிலர் பிரசங்கங்களைக் கேட்கும்போது அலட்சியமாக இருக்கிறார்கள், தேவனுடைய வார்த்தைகளை சிந்திப்பதில்லை, அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும், சத்தியத்தைத் தேடுவதில்லை, அவர்கள் உபதேசத்தின் வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில் மட்டுமே திருப்தி அடைகிறார்கள், மற்றும் அவர்கள் சத்தியத்தைப் பெற்றுக்கொண்டதாக நினைத்துக்கொள்கிறார்கள்—இதன் விளைவாக அவர்கள் சோதிக்கப்படும்போது, அவர்களுக்கு எந்த அறிவும் இருப்பதில்லை, அவர்களது இருதயங்களில் குறைகூறுதலும், அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்ற ஒரு உணர்வும் மட்டுமே இருக்கிறதே அல்லாமல் வேறு எதுவும் இருப்பதில்லை, மற்றும் அவர்கள் வெளிப்படுத்த விரும்புகிறார்கள், ஆனால் தைரியம் இருப்பதில்லை. அத்தகைய ஜனங்கள் மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்கள், இல்லையா? அநேகர் தங்கள் கடமையைச் செய்யும்போது எப்பொழுதும் கவனக்குறைவாகவும் செயலற்றவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்கள் கிளைநறுக்கப்பட்டு, கையாளப்படும்போது தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்கவோ அல்லது அறிந்துகொள்ளவோ முயற்சிப்பதில்லை, அவர்கள் எப்போதும் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்—இதன் விளைவாக, அவர்கள் எல்லா வகையிலும் தங்களைத் தாங்களே அவமானப்படுத்திக்கொள்கிறார்கள், அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள், மேலும் ஒருபோதும் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். காரியம் இப்படி இருக்கிறபடியால், அவர்கள் ஒரு சில உபதேசங்களைப் புரிந்துகொள்வதால் என்ன பயன் இருக்கிறது? எந்தப் பயனும் இல்லை. எத்தனை வருடங்களாக ஜனங்கள் தேவனை விசுவாசித்திருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல, வெறும் உபதேசத்தைப் புரிந்துகொள்வதாலும், வார்த்தைகளையும் வாக்கியங்களையும் திரும்பத் திரும்ப உச்சரிப்பதாலும் எந்தப் பயனும் இல்லை; அவர்கள் சத்தியத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவில்லை, மாறாக வழிதவறிப் போயிருக்கிறார்கள். எனவே, உனக்கு ஏதாவது நேரிட்டு, நீ தேவனிடத்தில் ஜெபம் செய்யும்போது, தேவனுடைய நோக்கங்களை நாடிக்கொண்டிருக்கும்போது, பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றால், சத்தியத்தைப் புரிந்துகொள்ளுதலை அடைவதுதான் முக்கியமானதாகும்; இதுவே சரியான பாதை, இவ்வாறு பயிற்சி செய்வதை நீ ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவன் மீதான விசுவாசத்தில், சத்தியத்தைப் பெறுவது மிகவும் முக்கியம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 376

எல்லாவற்றிலும் தேவனை நோக்கிப் பார்ப்பதும் தேவனை நம்புவதும் தான் மிகப்பெரிய ஞானமாகும். இது சாதாரண மக்களால் கண்டுணரப்படுவதில்லை. அதிகமான கூட்டங்களில் கலந்து கொள்வது, அதிகப் பாடல்களைக் கற்றுக் கொள்வது, தங்கள் சகோதர சகோதரிகளுடன் அதிகமாக ஐக்கியம் கொள்வது, அதிகத் திறன்களைக் கற்றுக் கொள்வது, அதிக விலைக்கிரயம் செலுத்துவது, மேலும் அதிகமானவற்றைக் கைவிடுவது ஆகியவைதான் தேவனுடைய அங்கீகாரத்தையும் இரட்சிப்பையும் தங்களுக்குப் பெற்றுத் தரும் என்று ஜனங்கள் அனைவரும் நினைக்கிறார்கள். இந்த வழியில் நடைமுறைப்படுத்துவதே மிகப்பெரிய ஞானம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் மிகப்பெரிய விஷயங்களான தேவனை நோக்கிப் பார்ப்பது மற்றும் தேவனை நம்புவது ஆகியவற்றை அலட்சியம் பண்ணுகிறார்கள். அவர்கள் அற்பமான மனித புத்திசாலித்தனத்தை ஞானமாகக் கருதுகிறார்கள், மேலும் ஜனங்கள் செய்வதன் இறுதி விளைவைப் புறக்கணிக்கிறார்கள். இது ஒரு தவறாகும். ஒருவர் எவ்வளவு சத்தியத்தைப் புரிந்து கொண்டாலும், ஒருவர் எத்தனை கடமைகளைச் செய்துள்ளார் என்றாலும், அந்தக் கடமைகளைச் செய்யும்போது எவ்வளவு அனுபவித்திருக்கிறார் என்றாலும், ஒருவருடைய வளர்ச்சி எவ்வளவு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்தாலும் அல்லது ஒருவர் எந்த மாதிரியான சூழலில் இருந்தாலும், ஒருவர் செய்யும் எல்லாவற்றிலும் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும் மற்றும் அவரையே நம்ப வேண்டும், இல்லாவிடில் வெற்றியடைய முடியாது. இதுவே மிகப்பெரிய ஞானமாகும். இதை ஏன் மிகப் பெரிய ஞானம் என்று நான் சொல்கிறேன்? ஒருவர் சில சத்தியங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாலும், ஒருவர் தேவனை நம்பாமல் இருந்தால் அது சரியாக இருக்குமா? சிலர் பல வருடங்களாக தேவனை நம்புகிறார்கள், பல உபத்திரங்களை அனுபவித்திருக்கிறார்கள், சில நடைமுறை அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள், சில சத்தியங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் சத்தியத்தைப் பற்றிய நடைமுறை அறிவைக் கொஞ்சம் பெற்றிருக்கிறார்கள், ஆனால் தேவனை நம்புவத அவர்களுக்குத் தெரியவில்லை, எப்படி அவரை நோக்கிப் பார்ப்பது மற்றும் அவரை நம்புவது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதும் இல்லை. அத்தகையவர்களுக்கு ஞானம் உண்டா? அவர்கள் ஜனங்களில் மிகவும் முட்டாள்களாவர், மேலும் தங்களையே புத்திசாலிகள் என்று நினைக்கும் வகையினர் ஆவர்; அவர்கள் தேவனுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகுவதில்லை. “நான் பல சத்தியங்களைப் புரிந்து கொள்கிறேன் மற்றும் சத்தியத்தின் யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறேன். கொள்கை ரீதியில் காரியங்களைச் செய்வதுதான் சரியானது. நான் தேவனுக்கு உண்மையாக இருக்கிறேன், அவரை எப்படி நெருங்குவது என்பது எனக்குத் தெரியும். எனக்குக் காரியங்கள் சம்பவிக்கும்போது நான் சத்தியத்தைக் கடைப்பிடித்தால் போதாதா? தேவனிடம் ஜெபிக்கவோ அல்லது தேவனை நோக்கி பார்க்கவோ எந்தத் தேவையும் இல்லை” என்று சொல்கிறார்கள். சத்தியத்தைக் கடைபிடிப்பது சரியானது, ஆனால் என்ன சத்தியம் மற்றும் சத்தியத்தின் எந்தக் கொள்கைகள் குறிப்பிடப்படுகின்றன என்பது பல நேரங்களில் மற்றும் சூழ்நிலைகளில் ஜனங்களுக்குத் தெரிவதில்லை. நடைமுறை அனுபவம் உள்ள அனைவருக்கும் இது தெரியும். எடுத்துக்காட்டாக, நீ ஏதாவது சிக்கலை எதிர்கொண்டால், இந்தச் சிக்கல் எந்தச் சத்தியத்தைக் குறிப்பிடுகிறது அல்லது இந்தச் சிக்கலுடன் தொடர்புடைய சத்தியத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்த வேண்டும் என்பதை நீ அறியாமல் இருக்கலாம். இது போன்ற நேரங்களில் நீ என்ன செய்ய வேண்டும்? உனக்கு எவ்வளவு நடைமுறை அனுபவம் இருந்தாலும், எல்லா சூழ்நிலைகளிலும் உன்னால் சத்தியத்தின் கொள்கைகளைப் புரிந்து கொள்ள முடியாது. நீ எவ்வளவு காலம் தேவனை நம்பி இருந்தாலும் நீ எத்தனை விஷயங்களை அனுபவித்திருந்தாலும், மேலும் எவ்வளவு கிளை நறுக்குதல், கையாளுதல் அல்லது தண்டித்துத் திருத்துதலை நீ அனுபவித்து இருந்தாலும், நீ சத்தியத்தைப் புரிந்து கொண்டாலும் கூட, நீ தான் சத்தியம் என்று சொல்ல நீ துணிவாயா? நீதான் சத்தியத்தின் ஆதாரம் என்று சொல்லத் துணிவாயா? “மாம்சத்தில் தோன்றுகிறது என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து நன்கு அறியப்பட்ட பேச்சுகள் மற்றும் பத்திகள் அனைத்தையும் நான் மனப்பாடமாக அறிவேன்; நான் தேவனை நம்பவோ அல்லது அவரை நோக்கிப் பார்க்கவோ தேவையில்லை. நேரம் வரும்போது தேவனுடைய இந்த வார்த்தைகளை நம்பி நான் நன்றாக செய்வேன்” என்று சிலர் கூறுகிறார்கள். நீ மனப்பாடம் செய்த வார்த்தைகள் இயங்காதவை, ஆனாலும் நீ சந்திக்கும் சூழல்களும் உன் நிலைகளும் கூட இயங்குபவை. உன்னால் உபதேசத்தின் வார்த்தைகளை வெளிப்படுத்த முடியும், ஆனால் உனக்கு ஏதாவது நேரிடும் போது அவற்றைக் கொண்டு உன்னால் எதுவும் செய்ய முடியாது, இது நீ சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கிறது. நீ உபதேசத்தின் வார்த்தைகளை மனப்பாடமாகச் சொல்வதில் எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும், நீ சத்தியத்தைப் புரிந்து கொள்கிறாய் என்று இதற்கு அர்த்தமல்ல, உன்னால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்றும் அர்த்தம் அல்ல. எனவே, இங்கு கற்க வேண்டிய மிக முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. இந்தப் பாடம் என்ன? ஜனங்கள் எல்லாவற்றிலும் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும், அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தேவன் மீதான நம்பிக்கையை அடைய முடியும். தேவனை நம்புவதன் மூலம் மட்டுமே, அவர்கள் பின்பற்றுவதற்கான பாதையையும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் கொண்டிருப்பார்கள். இல்லையெனில் நீ சரியாகவும் சத்தியத்தை மீறாமலும் எதையாவது செய்யலாம், ஆனால் நீ தேவனை நம்பவில்லை என்றால், உன் செயல்கள் மனிதனுடைய நற்செயல்களே அல்லாமல் வேறு எதுவும் இல்லை, மேலும் அவற்றால் தேவனைத் திருப்திப்படுத்த முடியாது. ஜனங்கள் சத்தியத்தைப் பற்றிய இப்படிப்பட்ட ஆழமற்ற புரிதலைக் கொண்டிருப்பதால், அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, அதே சத்தியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விதிகளைப் பின்பற்றவும் உபதேசங்களின் வார்த்தைகளைப் பிடிவாதமாகப் பற்றிக் கொள்வதற்குமான வாய்ப்பு இருக்கிறது. சத்தியத்தின் கொள்கைகளுக்கு இணங்க அவர்களால் பல விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் தேவனுடைய வழிகாட்டுதலை இதில் காண முடியாது அல்லது பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் பார்க்க முடியாது. இங்கு ஒரு தீவிரமான சிக்கல் உள்ளது, அதாவது ஜனங்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் அவர்கள் புரிந்து கொண்ட விதிகள் மற்றும் சில மனிதக் கற்பனைகளைச் சார்ந்து பல விஷயங்களைச் செய்கிறார்கள். தேவனிடம் உண்மையான ஜெபத்தை ஏறெடுப்பதும் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனை உண்மையாக நோக்கிப் பார்ப்பதும் கடினமாகும். தேவனுடைய சித்தத்தை ஒருவர் புரிந்து கொண்டாலும், தேவனின் வழிகாட்டுதலின்படி மற்றும் சத்தியத்தின் கொள்கைகளின்படி செயல்படுவதன் விளைவை அடைவது கடினமாகும். இந்தக் காரணத்திற்காகவே, எல்லாவற்றிலும் தேவனை நோக்கிப் பார்ப்பதும் எல்லாவற்றிலும் அவரை நம்புவதுமே மிகப்பெரிய ஞானம் என்று நான் சொல்கிறேன்.

எல்லாவற்றிலும் தேவனை நோக்கிப் பார்ப்பதையும் தேவனை நம்புவதையும் ஜனங்கள் எவ்வாறு பழக்கப்படுத்த முடியும்? “நான் இளமையாக இருக்கிறேன், என் வளர்ச்சி சிறியது, நான் சிறிது காலமாகவே தேவனை நம்புகிறேன். ஏதாவது நடந்தால் தேவனை நோக்கிப் பார்க்கவும் தேவனை நம்பவும் எப்படிப் பழகுவது என்று எனக்குத் தெரியவில்லை” என்று சிலர் கூறுகிறார்கள். இது ஒரு பிரச்சனையா? தேவனை நம்புவதில் பல சிரமங்கள் உள்ளன, மேலும் நீங்கள் பல இன்னல்கள், உபத்திரவங்கள் மற்றும் வேதனைகளைக் கடந்து செல்ல வேண்டும். இவை அனைத்திற்கும் தேவனை நோக்கிப் பார்ப்பதும் கடினமான காலங்களைக் கடக்க தேவனை நம்புவதும் தேவையாகும். தேவனை நோக்கி பார்ப்பதையும் தேவனை நம்புவதையும் உங்களால் பழக முடியாவிட்டால், உங்களால் கஷ்டங்களைக் கடந்து செல்ல முடியாது, மற்றும் உங்களால் தேவனைப் பின்பற்ற முடியாது. தேவனை நோக்கிப் பார்ப்பதும் தேவனை நம்புவதும் வெறுமையான உபதேசம் அல்ல, அது தேவனை நம்புவதற்கான ஒரு மந்திரமும் அல்ல. மாறாக, இது ஒரு முக்கியமான சத்தியமாகும், தேவனை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் நீங்கள் கொண்டிருக்க வேண்டிய ஒரு சத்தியமாகும். “ஒரு பெரிய நிகழ்வு நடக்கும் போது மட்டுமே தேவனை நோக்கி பார்ப்பதும் தேவனை நம்புவதும் பொருந்தும். உதாரணமாக, நீங்கள் துன்பங்கள், உபத்திரவங்கள், கைது, மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது அல்லது உங்கள் கடமைகளில் நீங்கள் சிரமங்களைச் சந்திக்கும்போது, அல்லது நீங்கள் கிளைநறுக்கப்பட்டு கையாளப்படும் போது மட்டுமே, நீங்கள் தேவனை நோக்கிப் பார்க்கவும் தேவனை நம்பவும் வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையின் அற்ப விஷயங்களுக்கு தேவனை நோக்கிப் பார்க்கவும் தேவனை நம்பவும் வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் தேவன் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை” என்று சிலர் கூறுகிறார்கள். இந்தக் கூற்று சரியானதா? இது கண்டிப்பாகச் சரியானதல்ல. இங்கே ஒரு விலகல் உள்ளது. முக்கிய விஷயங்களை தேவனை நோக்கிப் பார்ப்பது அவசியமானதாகும், ஆனால் வாழ்க்கையில் அற்ப விஷயங்களையும் சிறிய விஷயங்களையும் கொள்கைகள் இல்லாமல் உங்களால் கையாள முடியுமா? உடுத்துவது சாப்பிடுவது போன்ற விஷயங்களில், உங்களால் கொள்கைகள் இல்லாமல் செயல்பட முடியுமா? நிச்சயமாக முடியாது. ஜனங்கள் மற்றும் காரியங்களுடனான உங்கள் தொடர்புகளில் அப்படிச் செயல்பட முடியுமா? நிச்சயமாக முடியாது. அன்றாட வாழ்க்கையிலும் அற்பமான விஷயங்களிலும் கூட, குறைந்தபட்சம் மனித சாயலின்படி வாழ்வதற்கு உங்களிடம் கொள்கைகள் இருக்க வேண்டும். கொள்கைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சத்தியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகும். ஜனங்களால் அவற்றைத் தாங்களாகவே தீர்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது. எனவே நீங்கள் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும் மற்றும் தேவனை நம்ப வேண்டும். நீங்கள் தேவனுடைய வெளிச்சத்தைப் பெற்று மற்றும் சத்தியத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே இந்த அற்பமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். நீங்கள் தேவனை நோக்கிப் பார்க்காமல் மற்றும் தேவனை நம்பாமல் இருந்தால், கொள்கைகள் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக எளிதாகத் தீர்க்க முடியாது. ஜனங்களால் தெளிவாகப் பார்க்க முடியாத மற்றும் சத்தியத்தைத் தேட வேண்டிய அனைத்து விஷயங்களிலும், அவர்கள் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும் மற்றும் தேவனை நம்ப வேண்டும். எவ்வளவு பெரிதாக அல்லது சிறிதாக இருந்தாலும், சத்தியத்தைக் கொண்டு தீர்க்கப்பட வேண்டிய எந்தப் பிரச்சனைக்கும் தேவனை நோக்கிப் பார்ப்பதும் தேவனை நம்புவதும் அவசியமாகும். இது ஒரு அவசியத் தேவையாகும். ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டு தாங்களாகவே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடிந்தாலும், இந்தப் புரிதல்களும் தீர்வுகளும் வரம்புக்குட்பட்டவை மற்றும் மேலோட்டமானவை ஆகும். ஜனங்கள் தேவனை நோக்கிப் பார்த்து தேவனை நம்பவில்லை என்றால், அவர்களின் நுழைவு ஒருபோதும் ஆழமாக இருக்காது. உதாரணமாக, இன்று நீ நோய்வாய்ப்பட்டிருந்தால், அது உன் கடமையின் செயல் திறனைப் பாதிக்கிறது என்றால், நீ இதைக் குறித்து ஜெபிக்க வேண்டும் மற்றும் “தேவனே, இன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. என்னால் சாப்பிட முடியவில்லை. இது எனது கடமையின் செயல் திறனைப் பாதிக்கிறது. நான் என்னையே ஆய்வு செய்ய வேண்டும். நான் நோய்வாய்ப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன? நான் என் கடமையில் உண்மையாக இல்லாததற்காக தேவனால் தண்டித்துத் திருத்தப்படுகிறேனா? தேவனே, நீர் என்னைப் பிரகாசிப்பித்து வழிநடத்தும்படி நான் உம்மைக் கேட்கிறேன்” என்று சொல்ல வேண்டும். நீ இப்படிச் சத்தமாக சொல்ல வேண்டும். இதுவே தேவனை நோக்கிப் பார்ப்பதாகும். இருப்பினும், நீ தேவனை நோக்கிப் பார்க்கும்போது, நீ வெறுமனே சம்பிரதாயங்களைப் பின்பற்றி விதிகளுக்குக் கட்டுப்பட முடியாது. பிரச்சினைகளைத் தீர்க்க நீ சத்தியத்தைத் தேடவில்லை என்றால், நீ காரியங்களைத் தாமதப்படுத்துவாய். நீ தேவனிடம் ஜெபம் செய்து தேவனை நோக்கிப் பார்த்த பிறகு, உன் வாழ்க்கையை வாழவும், தாமதமின்றி உன் கடமைகளைச் செய்யவும் நீ செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். நீ நோய்வாய்ப்பட்டிருந்தால், நீ ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும், இதுவே சரியானது. அதே நேரத்தில், நீ ஜெபம் செய்ய வேண்டும், உன்னைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், மேலும் பிரச்சனையைத் தீர்க்க சத்தியத்தைத் தேட வேண்டும். இப்படிப் பயிற்சி செய்வது மட்டுமே முற்றிலும் பொருத்தமானதாகும். சில விஷயங்களில், ஜனங்களுக்கு அவற்றை எவ்வாறு சரியாகச் செய்வது என்று தெரிந்தால், அப்போது அவர்கள் அதைச் செய்ய வேண்டும். இப்படித்தான் ஜனங்கள் ஒத்துழைக்க வேண்டும். இருப்பினும், இந்த விஷயங்களில் விரும்பிய விளைவையும் இலக்கையும் முழுமையாக அடைய முடியுமா என்பது தேவனை நோக்கிப் பார்ப்பதையும் மற்றும் தேவனை நம்புவதையும் பொறுத்ததாகும். ஜனங்கள் தெளிவாகப் பார்க்க முடியாத மற்றும் அவர்களால் சரியாகக் கையாள முடியாத பிரச்சனைகளில், அவர்கள் இன்னும் அதிகமாக தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும் மற்றும் அவற்றைத் தீர்க்க சத்தியத்தைத் தேட வேண்டும். சாதாரண மனிதத்தன்மை கொண்டவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன் இதுவேயாகும். தேவனை நோக்கிப் பார்ப்பதில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமுண்டு. தேவனை நோக்கிப் பார்க்கும் செயல்பாட்டில், நீ பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தைப் பெறலாம், மேலும் உனக்கு ஒரு வழி இருக்கும், அல்லது தேவனுடைய வார்த்தை உன் மீது வந்தால், நீ எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பாய், அல்லது ஒருவேளை பாடங்களைக் கற்றுக் கொள்ளும்படி சில சூழ்நிலைகளை தேவன் ஏற்பாடு செய்வார், அவற்றில் தேவனின் நல்ல நோக்கங்கள் இருக்கின்றன. தேவனை நோக்கிப் பார்க்கும் செயல்பாட்டில், நீ தேவனுடைய வழிகாட்டுதலையும் தலைமைத்துவத்தையும் காண்பாய், மேலும் இவை பல பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் தேவனைப் பற்றிய சிறந்த புரிதலை அடையவும் உனக்கு உதவும். தேவனை நோக்கிப் பார்ப்பதால் அடையப்படும் பலன் இதுவே ஆகும். ஆகையால், தேவனைப் பின்பற்றுபவர்கள் அடிக்கடி கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம், தேவனை நோக்கி பார்ப்பது ஆகும், மேலும் அது அவர்கள் வாழ்நாளில் அனுபவித்து தீர்க்க முடியாத ஒரு காரியம் ஆகும். மிகக் குறைவான அனுபவமும் தேவனுடைய செயல்களைப் பார்க்க முடியாதவர்களுமான பலர் உள்ளனர், எனவே அவர்கள், “என்னால் செய்யக்கூடிய பல சிறிய விஷயங்கள் உள்ளன, மேலும் அதில் நான் தேவனை நோக்கிப் பார்க்கத் தேவையில்லை” என்று நினைக்கிறார்கள். இது தவறாகும். சில சிறிய விஷயங்கள் பெரிய விஷயங்களுக்கு வழிவகுக்கின்றன, மேலும் சில சிறிய விஷயங்களில் தேவனுடைய சித்தம் மறைந்துள்ளது. பலர் சிறிய விஷயங்களைப் புறக்கணிக்கிறார்கள், இதன் விளைவாக, சிறிய விஷயங்களால் அவர்கள் பெரும் பின்னடைவைக் காண்கிறார்கள். தேவனுக்கு உண்மையாக பயப்படுபவர்கள், பெரிய மற்றும் சிறிய விஷயங்கள் இரண்டிலும் தேவனை நோக்கிப் பார்ப்பார்கள், தேவனிடம் ஜெபம் செய்வார்கள், எல்லாவற்றையும் தேவனிடம் ஒப்படைப்பார்கள், பின்னர் தேவன் எவ்வாறு வழிநடத்துகிறார் மற்றும் வழிகாட்டுகிறார் என்பதைப் பார்ப்பார்கள். நீ அத்தகைய அனுபவத்தைப் பெற்றவுடன், உன்னால் எல்லாவற்றிலும் தேவனை நோக்கிப் பார்க்க முடியும், மேலும் இதை நீ எவ்வளவு அதிகமாக அனுபவிக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக எல்லா விஷயங்களிலும் தேவனை நோக்கிப் பார்ப்பது மிகவும் நடைமுறைக்குரியது என்பதை நீ உணருவாய். நீ ஒரு விஷயத்தில் தேவனை நோக்கிப் பார்க்கும் போது, தேவன் உனக்கு ஒரு உணர்வையோ தெளிவான அர்த்தத்தையோ அல்லது தெளிவான வழிமுறைகளையும் கொடுக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது, ஆனால் தேவன் உனக்கு ஒரு குறிப்பிட்ட கருத்தை புரிய வைப்பார், அது இந்த விஷயத்துடன் தொடர்புடையதாய் இருக்கும், மேலும் இது தேவன் வேறு முறையைப் பயன்படுத்தி உன்னை வழிநடத்துவதும் உனக்கு வழியை கொடுப்பதுமாகும். இதை உன்னால் உணர்ந்து கொண்டு புரிந்து கொள்ள முடிந்தால், நீ பயனடைவாய். இந்த நேரத்தில் நீ எதையும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நீ தொடர்ந்து ஜெபித்து தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். இதில் எந்தத் தவறும் இல்லை, மேலும் விரைவில் நீங்கள் பிரகாசிப்பிக்கப்படுவீர்கள். இந்த வழியில் பயிற்சி செய்வது விதிகளைக் கடைபிடிப்பது என்று அர்த்தம் அல்ல. அதற்குப் பதிலாக, அது ஆவியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும், மேலும் ஜனங்கள் இப்படித்தான் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் தேவனிடம் ஜெபித்து தேவனை நோக்கிப் பார்க்கும்போதும், நீங்கள் வெளிச்சத்தையும் வழிகாட்டுதலையும் பெறாமல் போகலாம், ஆனால் ஜனங்கள் இந்த வழியில் பயிற்சி செய்ய வேண்டும், மேலும் அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால், அவர்கள் இவ்வழியில் பயிற்சி செய்ய வேண்டும். இது ஜீவன் மற்றும் ஆவியின் இயல்பான நிலையாகும், மேலும் இந்த வழியில் மட்டுமே ஜனங்கள் தேவனுடன் இயல்பான உறவைப் பேண முடியும், இதனால் அவர்களின் இருதயங்கள் தேவனுடன் நெருக்கமாக இருக்கும். எனவே தேவனை நோக்கிப் பார்ப்பது என்பது ஜனங்களின் இருதயங்களில் தேவனுடனான இயல்பான தொடர்பு என்று கூறலாம். உங்களால் தேவனுடைய பிரகாசம் மற்றும் வழிகாட்டுதலை பெற முடியுமா என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் மற்றும் எல்லாவற்றிலும் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். தேவனுக்கு முன்பாக வாழ்வதற்கான தவிர்க்க முடியாத வழியும் இதுதான். ஜனங்கள் தேவனை விசுவாசித்து, தேவனைப் பின்பற்றும்போது, எப்போதும் தேவனையே நோக்கிப் பார்க்கும் மனநிலை அவர்களுக்கு இருக்க வேண்டும். இயல்பான மனிதத்தன்மை உள்ளவர்கள் பெற்றிருக்க வேண்டிய மனநிலை இதுவாகும். சில சமயங்களில், தேவனை நோக்கிப் பார்ப்பது என்பது, குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏதாவது செய்யும்படி தேவனைக் கேட்பது அல்லது குறிப்பிட்ட வழிகாட்டுதல் அல்லது பாதுகாப்பைக் கேட்பது என்பதல்ல. மாறாக, அது ஜனங்கள் சில பிரச்சினைகளைச் சந்திக்கும்போது, அவர்களால் அவரை உண்மையாகக் கூப்பிட முடிவதே ஆகும். எனவே, ஜனங்கள் அவரைக் கூப்பிடும் போது தேவன் அங்கு என்ன செய்கிறார்? ஒருவரின் இருதயம் தூண்டப்பட்டு, அவர்கள்: “தேவனே, இதை என்னால் செய்ய முடியாது, இதை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, நான் பலவீனமாகவும் எதிர்மறையாகவும் உணர்கிறேன்…” என்று எண்ணங்கொள்கிறார்கள், இந்த எண்ணம் அவர்களுக்குள் எழும்போது தேவனுக்கு அதைப் பற்றித் தெரியாதா? இந்த எண்ணம் ஜனங்களுக்குள் எழும்போது, அவர்களின் இருதயங்கள் உண்மையானவையாக இருக்கின்றனவா? இந்த வழியில் அவர்கள் தேவனை உண்மையாகக் கூப்பிடும்போது, தேவன் அவர்களுக்கு உதவ உடன்படுகிறாரா? அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்தபோதிலும், அவர்கள் உண்மையைக் காட்டுகிறார்கள், எனவே தேவன் அவர்களுக்கு உதவ உடன்படுகிறார். யாரேனும் குறிப்பாக முட்களைப் போன்ற சிரமத்தைச் சந்திக்கும்போது, அவர்கள் உதவி கேட்க யாரும் இல்லாதபோது, குறிப்பாக அவர்கள் உதவியற்றவர்களாக உணரும்போது, அவர்கள் தேவன் மீது மட்டுமே தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். அவர்களின் ஜெபங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன? அவர்களின் மனநிலை என்ன? அவர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்களா? அந்த நேரத்தில் ஏதேனும் கலப்படம் இருக்கிறதா? அவர் உனக்கு உதவுவார் என்று, நீ பிடித்துக் கொள்ளத்தக்கதான கடைசி பிடிமானம் தேவன் தான் என்று நீ அவரை நம்பும்போது, உன் இருதயம் உண்மையுள்ளதாக இருக்கிறது. நீ அதிகம் சொல்லவில்லை என்றாலும், உன் இருதயம் ஏற்கெனவே தூண்டப்பட்டிருக்கிறது. அதாவது, நீ உன் உண்மையான இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கிறாய், தேவன் செவிகொடுக்கிறார். தேவன் செவிகொடுக்கும்போது, அவர் உன் சிரமங்களைப் பார்க்கிறார், மேலும் அவர் உன்னைப் பிரகாசிப்பிப்பார், உன்னை வழிநடத்துவார் மற்றும் உனக்கு உதவுவார். மனிதனின் இருதயம் எப்போது மிகவும் உண்மையுள்ளதாக இருக்கிறது? எந்த வழியும் இல்லாதபோது மனிதன் தேவனை நோக்கிப் பார்க்கையில் அது மிகவும் உண்மையுள்ளதாக இருக்கிறது. தேவனை நோக்கிப் பார்ப்பதில் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் உண்மையுள்ளதாக இருதயம் ஆகும். நீங்கள் உண்மையிலேயே தேவன் தேவைப்படும் நிலையில் இருக்க வேண்டும். அதாவது, ஜனங்களின் இருதயங்கள் குறைந்தபட்சம் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும், செயலற்றதாக இருக்கக் கூடாது; அவர்கள் இருதயத்தை அசைக்காமல் வாய்களை மட்டும் அசைக்கக்கூடாது. தேவனிடம் பேசுகிற செயலில் நீ சிரத்தையற்று இருந்தால், ஆனால் உன் இருதயம் அசைக்கப்படவில்லை என்றால், மேலும் நீ சொல்வது, “நான் ஏற்கனவே எனது சொந்தத் திட்டங்களைச் செய்துவிட்டேன், தேவனே, நான் வெறுமனே உமக்கு அறிவிக்கிறேன். நீர் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், நான் அவற்றைத் தொடர்ந்து செய்வேன். நான் வெறுமனே போகிற போக்கில் செல்கிறேன்” என்பதாக இருந்தால், அப்போது அது சிக்கலைக் குறிக்கிறது. நீ தேவனை வஞ்சித்து தேவனுடன் விளையாடுகிறாய், மேலும் இது தேவனுக்கான பயபக்தியின்மையின் வெளிப்பாடுமாகும். இதற்குப் பிறகு தேவன் உன்னை எவ்வாறு நடத்துவார்? தேவன் உன்னைப் புறக்கணித்து உன்னை ஒதுக்கி வைப்பார், மேலும் நீ முற்றிலும் அவமானப்படுத்தப்படுவாய். நீ தீவிரமாக தேவனைத் தேடாமல், சத்தியத்தில் முயற்சி செய்யாமல் இருந்தால், நீ வெளியேற்றப்படுவாய்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவன் மீதான விசுவாசம் என்பது உலகின் பொல்லாத போக்குகளின் உண்மையான இயல்பைப் புரிந்து கொள்வதிலிருந்து தொடங்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 377

தேவனுடைய ஜீவனே சத்தியமாகும்; அது அவருடைய மனநிலையையும், அவருடைய சாராம்சத்தையும், அவர் எதைக் கொண்டிருக்கிறார், என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது. கொஞ்சம் அனுபவமும் அறிவும் இருப்பதன் மூலம், அதனால் உன்னிடம் சத்தியம் இருக்கிறது என்று நீ சொன்னால், அப்போது நீ பரிசுத்தத்தை அடைந்து விட்டாயா? நீ ஏன் இன்னும் சீர்கேட்டைக் காட்டுகிறாய்? வெவ்வேறு வகையான நபர்களை உன்னால் ஏன் பகுத்தறிய முடியவில்லை? உன்னால் ஏன் தேவனுக்குச் சாட்சி பகர முடியவில்லை? நீ சில சத்தியங்களைப் புரிந்து கொண்டாலும், உன்னால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? உன்னால் தேவனுடைய மனநிலையின்படி வாழ முடியுமா? சத்தியத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பற்றி உனக்குச் சில அனுபவமும், அறிவும், வெளிச்சமும் இருக்கலாம், ஆனால் நீ ஜனங்களுக்கு வழங்க முடிவது மிகவும் குறைவாகவே உள்ளது மற்றும் நீண்ட காலம் நீடிக்க முடிவதில்லை. ஏனென்றால் உன் புரிதலும் நீ பெற்ற வெளிச்சமும் சத்தியத்தின் சாரம்சத்தைப் குறிப்பதில்லை, மேலும் அது சத்தியத்தின் முழுமையும் குறிப்பதில்லை. அது சத்தியத்தின் ஒரு பக்கத்தை அல்லது ஒரு சிறிய அம்சத்தை மட்டுமே குறிக்கிறது, அது மனிதர்களால் அடையக்கூடிய ஒரு நிலை மட்டுமே, அது இன்னும் சத்தியத்தின் சாராம்சத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்தச் சிறிதளவான வெளிச்சமும், பிரகாசமும், அனுபவமும், அறிவும் சத்தியத்தின் இடத்தை ஒருபோதும் பிடிக்கவே முடியாது. எல்லா ஜனங்களும் ஒரு சத்தியத்தை அனுபவித்து உணர்ந்தாலும், அவர்கள் எல்லாருடைய அனுபவங்கள் மற்றும் அறிவை ஒருங்கிணைத்தாலும், அது இந்தச் சத்தியத்தின் ஒரே ஒரு வரியின் முழுமையையும் சாராம்சத்தையும் எட்டாது. கடந்த காலத்தில் சொல்லப்பட்டுள்ளது போல, “மனித உலகிற்காக நான் இதை ஒரு பழமொழி மூலமாக சுருக்கமாகச் சொல்கிறேன்: மனுஷர் நடுவே, என் மீது அன்பு கூருகிறவர் எவருமில்லை.” இந்த வாக்கியம் சத்தியமாகும், வாழ்க்கையின் உண்மையான சாராம்சமாகும், மிக ஆழமான விஷயமாகும், மற்றும் தேவனுடைய வெளிப்பாடு ஆகும். மூன்று வருட அனுபவத்திற்குப் பிறகு, உனக்குக் கொஞ்சம் மேலோட்டமான புரிதல் இருக்கலாம், ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உனக்கு இன்னும் கொஞ்சம் அதிகப் புரிதல் இருக்கலாம், ஆனால் இந்தப் புரிதலானது இந்தச் சத்தியத்தின் வரிக்கு ஒருபோதும் பதிலாக முடியாது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வேறொருவருக்கு ஒரு சிறிய புரிதல் இருக்கலாம், அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் சில அதிகப் புரிதல் இருக்கலாம், அல்லது ஒரு ஆயுட்காலத்திற்குப் பிறகு இன்னும் உயர்ந்த புரிதல் இருக்கலாம், ஆனால் உங்கள் இருவரின் ஒருங்கிணைந்த புரிதலும் இந்தச் சத்தியத்தின் வரிக்கு ஒருபோதும் பதிலாக முடியாது. உங்கள் இருவருக்கும் சேர்ந்து எவ்வளவு நுண்ணறிவு, ஒளி, அனுபவம் அல்லது அறிவு இருந்தாலும், இந்தச் சத்தியத்தின் வரிக்கு ஒருபோதும் பதிலாக முடியாது. அதாவது மனித வாழ்க்கை எப்போதும் மனித வாழ்க்கை தான், உன் அறிவானது சத்தியம், தேவனுடைய சித்தம் அல்லது தேவனுடைய தேவைகளுக்கு எவ்வாறு இணங்கிப் போனாலும் அது ஒருபோதும் சத்தியத்திற்குப் பதிலாகாது. ஜனங்களிடம் சத்தியம் இருக்கிறது என்று கூறுவதன் அர்த்தம், ஜனங்கள் உண்மையாக சத்தியத்தைப் புரிந்து கொள்கிறார்கள், தேவனுடைய வார்த்தையின் சில யதார்த்தங்களின்படி வாழ்கிறார்கள், தேவனைப் பற்றிய சில உண்மையான அறிவை பெற்றிருக்கிறார்கள், மேலும் தேவனை உயர்த்தி அவருக்கு சாட்சியமளிக்க முடியும் என்பதாகும். இருப்பினும், ஜனங்கள் ஏற்கெனவே சத்தியத்தைக் கொண்டுள்ளனர் என்று கூற முடியாது, ஏனென்றால் சத்தியம் மிகவும் ஆழமானதாகும். தேவனுடைய வார்த்தையின் ஒரே ஒரு வார்த்தையை அனுபவித்துணர ஜனங்களுக்கு வாழ்நாள் முழுவதும் எடுக்கலாம், மேலும் பல வாழ்நாள் அனுபவத்திற்குப் பிறகும், அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், தேவனுடைய வார்த்தையின் ஒரே ஒரு வரியை முழுமையாக அனுபவித்துணர முடியாது. சத்தியத்தைப் புரிந்து கொள்ளும் மற்றும் தேவனை அறிந்து கொள்ளும் செயல்முறையானது உண்மையிலேயே முடிவில்லாதது என்பதும், வாழ்நாள் அனுபவத்தில் ஜனங்கள் எவ்வளவு சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு வரம்பு உள்ளது என்பதும் தெளிவாகிறது. சிலர் தேவனுடைய வார்த்தையின் உரை அர்த்தத்தைப் புரிந்து கொண்டவுடன் தங்களிடம் சத்தியம் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இது முட்டாள்தனம் இல்லையா? ஒளி மற்றும் அறிவு இரண்டின் அடிப்படையில், ஆழமான விஷயம் ஒன்று உள்ளது. விசுவாசமுள்ள ஆயுட்காலம் முழுவதிலும், ஒரு நபர் நுழையக்கூடிய சத்தியத்தின் யதார்த்தங்கள் குறைவாகவே உள்ளன. எனவே நீங்கள் கொஞ்சம் அறிவையும் ஒளியையும் கொண்டிருப்பதால் நீங்கள் சத்தியத்தின் யதார்த்தங்களைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. இந்த ஒளியும் அறிவும் சத்தியத்தின் சாரம்சத்தை குறிப்பிடுகிறதா என்பது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். இது மிக முக்கியமான விஷயமாகும். சிலர் வெளிச்சத்தைக் கொடுக்கும் போது அல்லது கொஞ்சம் மேலோட்டமான புரிதலை வழங்கும்போது அவர்கள் சத்தியத்தைக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். இது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது, அதனால் அவர்கள் சுயதிருப்தியுடையவர்களாகவும், கர்வமுள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். உண்மையில், அவர்கள் இன்னும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் நுழைவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். ஜனங்கள் எந்தச் சத்தியத்தைக் கொண்டிருக்க முடியும்? சத்தியத்தைக் கொண்டிருக்கிறவர்கள் எந்த நேரத்திலும் எங்கேயும் கீழே விழுவார்களா? ஜனங்களிடம் சத்தியம் இருக்கும்போது, அவர்கள் எப்படி இன்னும் தேவனை மறுக்கவும் காட்டிக்கொடுக்கவும் முடியும்? உன்னிடம் சத்தியம் இருக்கிறது என்று நீ சொல்லிக் கொண்டால், அது உனக்குள் கிறிஸ்துவின் ஜீவன் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது, அப்படியானால் அது பயங்கரமானது! நீ கர்த்தராகி விட்டாயா, நீ கிறிஸ்துவாகி விட்டாயா? இது ஒரு அபத்தமான அறிக்கையாகும், மேலும் இது முற்றிலும் ஜனங்களால் அனுமானிக்கப்படுவதாகும்; இது மனிதக் கருத்துகள் மற்றும் கற்பனைகளுடன் தொடர்புடையதாகும், மேலும் இது தேவனுக்கு ஏற்புடையதல்ல.

ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு, அதைத் தங்கள் ஜீவனாக அதனுடன் ஜீவிக்கும் போது, இந்த ஜீவன் எதைக் குறிக்கிறது? அவர்களின் இதயங்களில் சத்தியம் ஆட்சி செய்கிறது என்று அர்த்தம், அவர்களால் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ முடிகிறது என்று அர்த்தம், அதாவது தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த மெய்யான அறிவையும் சத்தியத்தைக் குறித்த மெய்யான புரிதலையும் கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தமாகும். ஜனங்கள் இந்தப் புதிய ஜீவனை தங்களுக்குள் கொண்டிருக்கும் போது, தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைப்படுத்தி அனுபவிப்பதன் மூலம் இது முற்றிலும் அடையப்படுகிறது. இது தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தின் அடித்தளத்தில் கட்டப்படுகிறது, மேலும் சத்தியத்தின் எல்லைக்குள் அவர்கள் வாழ்வதன் மூலம் இது அடையப்படுகிறது. அவர்கள் சத்தியத்தின் எல்லைக்குள் ஜீவிக்கின்றனர். ஜனங்களின் வாழ்வில் அடங்கியிருப்பது சத்தியத்தைக் குறித்த அவர்களின் அறிவும் அனுபவமும் மட்டுமே ஆகும், மேலும் இதை அதன் அடிப்படையாகக் கொண்டு, அந்த எல்லையை மீறுவதில்லை. சத்தியத்தின் ஜீவனைப் பெறுவது என்பதைப் பற்றிப் பேசும் போது குறிப்பிடப்படும் ஜீவன் இதுதான். தேவனுடைய வார்த்தைகளின் சத்தியத்துக்கு ஏற்ப வாழ, அது சத்தியத்தின் ஜீவன் ஜனங்களுக்குள் இருப்பது போன்ற காரியம் அல்ல, அல்லது அவர்கள் சத்தியத்தை தங்கள் ஜீவனாகக் கொண்டிருந்தால், ஜனங்கள் சத்தியமாக மாறுவார்கள் மற்றும் அவர்களின் உள்ளார்ந்த ஜீவன் சத்திய ஜீவனாகும் என்பது போன்ற காரியமும் அல்ல; அவர்களே சத்தியத்தின் ஜீவன் என்றும் அதை சொல்ல முடியாது. இறுதியாக, அவர்கள் ஜீவன் இன்னும் ஒரு மனுஷ ஜீவனாகவே இருக்கிறது. உன்னால் தேவனுடைய வார்த்தைககளின்படி ஜீவிக்கவும், சத்தியத்தைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்கவும் முடிந்தால், மேலும் இந்தப் புரிதல் உனக்குள் வேரூன்றினால், அது உன் ஜீவனாக மாறும், அனுபவத்தின் மூலம் நீ பெற்ற சத்தியம் உன் இருப்புக்கான அடிப்படையாக மாறும், இதற்குப் பிறகு, நீ தேவனுடைய இந்த வார்த்தைகளின்படி வாழ்ந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது, மேலும் சாத்தானால் உன்னை வஞ்சிக்கவோ அல்லது சீர்கெடுக்கவோ முடியாது, அப்போது நீ சத்தியத்தின் ஜீவனைப் பெற்றிருப்பாய். அதாவது, உன் ஜீவனானது வெறுமனே சத்தியத்தைக் கொண்டிருக்கும், அதாவது புரிதல், அனுபவம் மற்றும் சத்தியத்தைப் பற்றி உள்ளுணர்வு போன்ற இக்காரியங்களை கொண்டிருக்கும், மேலும் நீங்கள் எதைச் செய்தாலும், நீங்கள் இந்த விஷயங்களைக் கடைப்பிடிப்பீர்கள், அவற்றின் எல்லைக்கு அப்பால் செல்ல மாட்டீர்கள். சத்தியத்தின் யதார்த்தத்தை வைத்திருப்பதன் அர்த்தம் இதுதான், தேவன் தம்முடைய கிரியையின் மூலம் இறுதியில் பெற விரும்புவது அத்தகைய மக்கள்தான். ஆனால் ஜனங்கள் சத்தியத்தை எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டாலும், அவர்களுடைய சாராம்சம் இன்னும் மனுக்குலத்தினுடையதாகவே இருக்கிறது, சிறிதளவேனும் தேவனுடைய சாராம்சத்துடன் ஒப்பிடும்படியாக இல்லை. சத்தியத்தின் மீதான அவர்களுடைய அனுபவம் என்றென்றும் தொடர்கிறதால், அவர்கள் சத்தியத்தில் முழுமையாக ஜீவிப்பது சாத்தியமற்றதாக இருப்பதால், அவர்களால் மனுஷரால் அடையக்கூடிய மிகக் குறைந்த அளவு சத்தியத்தில் மட்டுமே ஜீவிக்க முடியும், அப்படியானால், அவர்களால் எப்படி தேவனைப் போல மாற முடியும்? … தேவனுடைய வார்த்தைகளில் உனக்குச் சிறிதளவு அனுபவம் இருந்தால், சத்தியத்தின் உண்மையான அனுபவம் மற்றும் அறிவின்படி நீ ஜீவிக்கிறாய் என்றால், அப்போது தேவனுடைய வார்த்தைகள் படிப்படியாக உன் ஜீவனாக மாறும். ஆனாலும், சத்தியமே உன் ஜீவன் என்றோ அல்லது நீ வெளிப்படுத்துவது சத்தியம் என்றோ உன்னால் இன்னும் சொல்ல முடியாது. உன் கருத்து இத்தகையதாக இருந்தால், அப்போது நீ சொல்வது தவறாகும். சத்தியத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்துடன் உனக்குக் கொஞ்சம் அனுபவம் மட்டுமே இருந்தால், இதுவே உன்னிடம் சத்தியம் இருக்கிறது என்பதைக் குறிக்குமா? இது சத்தியதைப் பெறுவதாகக் கருத முடியுமா? உன்னால் சத்தியத்தை முழுமையாக விளக்க முடியுமா? சத்தியத்திலிருந்து, தேவனுடைய மனநிலையையும் தேவன் என்ன கொண்டிருக்கிறார், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? இந்த விளைவுகள் அடையப்படாவிட்டால், சத்தியத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டுமே அனுபவித்தது சத்தியத்தை உண்மையாகப் புரிந்து கொண்டதாகவோ அல்லது தேவனை அறிந்திருப்பதாகவோ கருத முடியாது, அது சத்தியத்தைப் பெற்றதாகவும் கூற முடியாது என்பதை இது நிரூபிக்கிறது. எல்லோரும் சத்தியத்தின் ஒரே ஒரு அம்சத்தையும் நோக்கத்தையும் கொண்ட அனுபவத்தையே பெற்றிருக்கின்றனர்; உங்கள் குறுகிய நோக்கத்திற்குள் அதை அனுபவிப்பதன் மூலம், சத்தியத்தின் எண்ணற்ற அம்சங்களை உங்களால் குறிப்பிட முடியாது. சத்தியத்தின் உண்மையான அர்த்தத்தில் ஜனங்களால் ஜீவிக்க முடியுமா? உன் சிறிதளவு அனுபவம் எவ்வளவாக கணக்கிடப்படுகிறது? கடற்கரையிலுள்ள ஒரே ஒரு மண்துகள்; சமுத்திரத்தின் ஒரு துளி நீர். ஆகையால், உன் அனுபவங்களிலிருந்து நீ பெற்றுக்கொண்ட அந்த அறிவும் அந்த உணர்வுகளும் எவ்வளவு விலையேறப்பெற்றதாக இருந்தாலும், அவற்றை அப்போதும் சத்தியமாகக் கருத முடியாது. அவை சத்தியத்துக்கு இணங்கிப் போவதாக மட்டுமே கூற முடியும். சத்தியம் தேவனிடமிருந்து வருகிறது, மேலும் சத்தியத்தின் அர்த்தங்களும் யதார்த்தங்களும் மிகப் பரந்த அளவிலானவை, அதை யாராலும் புரிந்து கொள்ளவோ அல்லது மறுக்கவோ முடியாது. சத்தியம் மற்றும் தேவனைப் பற்றிய உண்மையான புரிதல் உனக்கு இருக்கும் வரை, நீ சில சத்தியங்களைப் புரிந்து கொள்வாய், இந்த உண்மையான புரிதல்களை யாராலும் மறுக்க முடியாது, மேலும் சத்தியத்தின் யதார்த்தங்களைக் கொண்ட சாட்சிகள் என்றென்றும் ஏற்கத்தக்கவையாகும். சத்தியத்தின் யதார்த்தங்களைக் கொண்டிருக்கிறவர்களை தேவன் போற்றுகிறார். நீ சத்தியத்தைப் பின்தொடர்ந்து, தேவனுடைய வார்த்தைகளை அனுபவித்துணர நீ தேவனை நம்பி, நீ எந்தச் சூழலில் இருந்தாலும் சத்தியத்தை உன் ஜீவனாக ஏற்றுக்கொள்ளும் வரையில், உனக்கு ஒரு பாதை இருக்கும், தப்பிப் பிழைக்க முடியும், மேலும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற முடியும். ஜனங்கள் பெறும் சிறிய காரியம் சத்தியத்துடன் ஒத்து போனாலும், இதுதான் சத்தியம் என்று சொல்ல முடியாது, அவர்கள் சத்தியத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. ஜனங்கள் பெற்றுள்ள கொஞ்ச வெளிச்சம் தங்களுக்கு அல்லது வேறு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பொருந்தும், ஆனால் வேறு எல்லைக்குள் பொருந்தாது. ஒரு நபரின் அனுபவம் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், அது இன்னும் குறைவாகவே உள்ளது, மேலும் அவர்களின் அனுபவம் ஒருபோதும் சத்தியத்தின் நோக்கத்தின் ஆழத்தை எட்டாது. ஒரு நபரின் ஒளியையும் ஒரு நபரின் புரிதலையும் சத்தியத்துடன் ஒப்பிட முடியாது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 378

நீ சத்தியத்தைக் கடைப்பிடித்து அதைப் புரிந்து கொள்ள விரும்பினால், உன் அன்றாட வாழ்வில் உனக்கு விஷயங்கள் நடக்கும்போது, முதலில் நீ சத்தியத்தைத் தேட வேண்டும். அதாவது தேவனுடைய வார்த்தைகள் மற்றும் சத்தியத்தின் அடிப்படையில் நீ விஷயங்களைப் பார்க்க வேண்டும்; பிரச்சனையின் சாராம்சம் உனக்குத் தெளிவாகத் தெரிந்தால், அப்போது சத்தியத்தின் கொள்கைகளுக்கு இணங்க எப்படிக் கடைப்பிடிப்பது என்பதை நீ அறிவாய். நீ எப்போதும் தேவனுடைய வார்த்தைகளின்படி விஷயங்களைப் பார்த்தால், உன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் தேவனுடைய கரத்தை, தேவனுடைய செயல்களை உன்னால் பார்க்க முடியும். அவர்களைச் சுற்றி என்ன நடந்தாலும், அதற்கும் தேவன் மீதான அவர்களின் விசுவாசத்திற்கும் அல்லது சத்தியத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று சிலர் நினைக்கிறார்கள்; அவர்கள் சாத்தானின் தத்துவங்களின்படி செயல்பட்டு, தங்கள் சொந்த விருப்பங்களை மட்டுமே பின்பற்றுகிறார்கள். இவ்வாறு அவர்களால் ஏதாவது பாடம் கற்றுக் கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. இந்தக் காரணத்தினாலேயே பலர் பத்து அல்லது இருபது வருடங்களாக தேவனை விசுவாசித்தும், இன்னும் சத்தியத்தைப் பற்றிய புரிதலோ அல்லது ஜீவப்பிரவேசமோ இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் தேவனை இணைத்துக் கொள்ளவோ அல்லது தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அணுகவோ இயலாமல் இருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு ஏதாகிலும் நடக்கும்போது, அது உண்மையில் எதற்காக நடக்கிறது என்பதை அவர்களால் சொல்ல முடிவதில்லை, அல்லது சத்தியத்தின் கொள்கைகளின் அடிப்படையில் அதை அவர்களால் கையாளவும் முடிவதில்லை. எனவே, அத்தகையவர்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதில்லை. சிலர் கூட்டத்தில் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது மட்டுமே தங்கள் மனதை ஈடுபடுத்துகிறார்கள்; அத்தகைய சமயங்களில், அவர்களால் ஒரு கொஞ்சம் அறிவைப் பற்றிப் பேச முடியும், ஆனாலும் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாதவர்களாய் இருக்கிறார்கள், எனவே, அவர்கள் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் அனைத்திற்கும் சத்தியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தேவனுடைய வார்த்தைகளுடனும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நினைக்கிறார்கள். தேவன் மீதான அவர்களின் விசுவாசத்தில், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளையும் சத்தியத்தையும், அறிவின் ஒரு பகுதியாக கருதுவது போலவும், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து முற்றிலும் தொடர்பற்றிருப்பதாக மற்றும் அவர்களின் பார்வைகள், அவர்களின் வாழ்க்கை இலக்குகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை பின்தொடர்தல்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் பிரிந்திருப்பதாக கருதுவது போலவும் இருக்கிறது. தேவன் மீதான விசுவாசம் எப்படிப்பட்டது? அவர்களால் சத்தியத்தைப் புரிந்து கொண்டு யதார்த்தத்துக்குள் பிரவேசிக்க முடியுமா? அவர்கள் இவ்வாறு தேவனை விசுவாசிக்கும் போது, அவர்கள் தேவனைப் பின்பற்றும் ஒருவராக இருக்கிறார்களா? அவர்கள் தேவனை உண்மையாக விசுவாசிக்கும் ஒருவரல்ல, அவர்கள் தேவனைப் பின்பற்றுபவர்களும் அல்ல. குடும்பம், திருமணம், வேலை அல்லது அவர்களின் வாய்ப்புகள் உட்பட அவர்களின் அன்றாட வாழ்வில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சத்தியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதாக அவர்கள் பார்க்கிறார்கள், எனவே மனித வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றைத் தீர்க்க முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு அனுபவிப்பதால், அவர்கள் ஒருபோதும் சத்தியத்தை அடைய மாட்டார்கள், தேவன் ஜனங்களில் எதை நிறைவேற்ற விரும்புகிறார் என்பதையும், அவர்களில் அவர் அடைய விரும்பும் விளைவையும் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. ஜனங்களை இரட்சிப்பதற்காக தேவன் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், ஆனால் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதைப் பின்தொடர்ந்தால் மட்டுமே, அவர்களின் சீர்கெட்ட மனநிலைகளைத் தீர்க்க முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை; அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவித்துணரவும் கடைப்பிடிக்கவும் செய்தால் மட்டுமே அவர்களால் சத்தியத்தைப் பெற முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. தேவன் மீது இப்படிப்பட்ட விசுவாசத்தை உடையவர்கள், எல்லோரை விடவும் முட்டாள்களும் கேலிக்குரியவர்களும் இல்லையா? சிலர் தேவன் மீதான தங்கள் விசுவாசத்தில் சத்தியத்தை ஒருபோதும் பின்தொடர்ந்ததில்லை. தேவன் மீதான விசுவாசம் என்பது கூட்டத்திற்குச் செல்வது, ஜெபிப்பது, பாடல்களைப் பாடுவது, தேவனுடைய வார்த்தைகளைப் படிப்பது, மதச்சடங்குகளில் ஈடுபடுவது என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில்லை அல்லது அனுபவித்துணர்வதில்லை. இப்படித்தான் மதத்தவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள். தேவன் மீதான விசுவாசம் போன்ற முக்கியமான ஒன்றை ஜனங்கள் மத நம்பிக்கையாகக் கருதும்போது, அவர்கள் அவிசுவாசிகளுக்கு உரியவர்கள் அல்லவா? அவர்கள் அவிசுவாசிகள் இல்லையா? சத்தியத்தைப் பின்தொடர்வதற்கு பல செயல்முறைகளை அனுபவிக்க வேண்டும். அதற்கு ஒரு எளிய பக்கமும் உள்ளது, மேலும் ஒரு சிக்கலான பக்கமும் உள்ளது. எளிமையாகச் சொன்னால், நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் நாம் சத்தியத்தைத் தேடி, தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து அனுபவித்துணர வேண்டும். நீ இதைச் செய்ய தொடங்கியவுடன், தேவன் மீதான உன் விசுவாசத்தில் நீ எவ்வளவு சத்தியத்தைப் பெற வேண்டும் மற்றும் பின்தொடர வேண்டும் என்பதையும், மேலும் அந்த சத்தியம் மிகவும் உண்மையானது என்றும் சத்தியமே ஜீவன் என்றும் நீ அதிகதிகமாய் காண்பாய். தேவன் மனிதகுலத்தை இரட்சிக்கிறார், இதனால் மனிதகுலம் சத்தியத்தை ஜீவனாகப் பெற முடியும். கடமைகளைச் செய்பவர்கள், தலைவர்கள் மற்றும் ஊழியர்களாக இருப்பவர்கள், மற்றும் தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் மட்டுமல்ல, சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலம் முழுவதும் சத்தியத்தை ஜீவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தைகள் எல்லா மனிதர்களுக்கும் அனுப்பப்படுகின்றன, மேலும் தேவன் முழு மனிதகுலத்திடமும் பேசுகிறார். எனவே சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் மற்றும் எல்லா மனிதர்களும் தேவனுடைய வார்த்தைகளையும் சத்தியத்தையும் ஏற்றுக் கொண்டு, எல்லாவற்றிலும் சத்தியத்தைத் தேடி, அதன் பின்னர் சத்தியத்தின் கொள்கைகளின்படி பயிற்சி செய்ய வேண்டும், இதனால் அவர்களால் சத்தியத்தைக் கடைபிடிக்கவும் அதற்குக் கீழ்ப்படிபவர்களாய் மாறவும் முடியும். தலைவர்களும் ஊழியர்களும் மட்டுமே சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தால், இது தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் முரணாக இருந்திருக்கும், ஏனென்றால் தேவனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியமானது முழு மனிதகுலத்திற்குமானது, மேலும் இது வெறுமனே ஒரு சிலரை மட்டும் இரட்சிப்பதற்காக அல்லாமல் மனிதகுலத்தை இரட்சிக்கும் நோக்கத்திற்காக வெளிப்படுத்தப்படுகிறது. காரியம் இப்படி இருந்தால், தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்குச் சிறிதளவே அர்த்தம் இருக்கும். சத்தியத்தைப் பின்தொடர உங்களுக்கு இப்போது பாதை இருக்கிறதா? சத்தியத்தைப் பின்தொடரும்போது முதலில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பதற்கும், பிரசங்கங்கள் மற்றும் ஐக்கியங்களைக் கேட்பதற்கும் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். நீங்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டால், ஜெபம் செய்து அதிகமாகத் தேடுங்கள். நீங்கள் அதிக சத்தியங்களுடன் உங்களைத் தயார்படுத்திக் கொண்டு, நீங்கள் விரைவாக வளர்ந்து வளர்ச்சியைக் கொண்டிருக்கும்போது, உங்களால் உண்மையான ஒன்றைச் செய்ய முடியும், ஒரு சிறிய வேலையைப் பொறுப்பெடுத்துச் செய்ய முடியும், அதனால் சில உபத்திரவங்கள் மற்றும் சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து போக முடியும். அந்த நேரத்தில், நீங்கள் உண்மையிலேயே சில சத்தியங்களைப் புரிந்து கொண்டு அவற்றைப் பெற்றுள்ளதாக உணர்வீர்கள், மேலும் தேவனால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் சத்தியம் என்றும், அவை சீர்கெட்டுப்போன மனிதகுலத்தின் இரட்சிப்புக்கு மிகவும் அவசியமான சத்தியங்கள் என்றும், மேலும் அவை தனித்துவமான சிருஷ்டிகரால் வழங்கப்பட்ட வாழ்க்கையின் சத்தியம் என்றும் நீங்கள் உணர்வீர்கள்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பின்தொடர்தலின் பாதை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 379

ஜனங்கள் தேவனை விசுவாசிக்கும் போது இரட்சிக்கப்பட விரும்பினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படுகிற ஒரு இருதயத்தைக் கொண்டிருக்கிறார்களா இல்லையா, அவர்களது இருதயங்களில் தேவன் ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறாரா இல்லையா, அவர்கள் தேவனுக்கு முன்பாக வாழக்கூடியவர்களாகவும் தேவனுடன் ஒரு இயல்பான உறவைத் தொடர்ந்து வைத்திருக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களா இல்லையா என்பதுதான் முக்கியமானதாகும். ஜனங்களால் சத்தியத்தைக் கைக்கொள்ள முடிகிறதா இல்லையா, தேவனுக்குக் கீழ்ப்படிவதை அடைய முடிகிறதா இல்லையா என்பதுதான் முக்கியமானதாகும். இரட்சிக்கப்படுவதற்கான பாதையும் நிலைமைகளும் இவையேயாகும். உன்னுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக வாழ முடியாவிட்டால், நீ தேவனிடத்தில் அடிக்கடி ஜெபித்து, தேவனுடன் ஐக்கியங்கொள்ளவில்லை என்றால், தேவனுடனான இயல்பான உறவை இழந்தால், நீ ஒருபோதும் இரட்சிக்கப்பட மாட்டாய், ஏனெனில், நீ இரட்சிப்புக்கான பாதையை அடைத்துவைத்திருக்கிறாய். நீ தேவனுடன் எந்த உறவையும் கொண்டிராதிருந்தால், நீ இறுதி முடிவை அடைந்துவிட்டாய். உன் இருதயத்தில் தேவன் இல்லை என்றால், உனக்கு விசுவாசம் இருக்கிறது என்று கூறுவதும், தேவனைப் பெயரளவிற்கு மட்டுமே விசுவாசிப்பதும், மேலும் உபதேசத்தின் எத்தனை வார்த்தைகளை உன்னால் பிரசங்கிக்க முடிகிறது என்பதும், தேவன் மீதான உன்னுடைய விசுவாசத்திற்காக நீ எவ்வளவு பாடுபட்டிருக்கிறாய் என்பதும், அல்லது நீ எவ்வளவு வரமுள்ளவனாக இருக்கிறாய் என்பதும் பயனற்றது; தேவன் உன் இருதயத்தில் இல்லாதிருந்தால், நீ தேவனுக்குப் பயப்படுவதில்லை என்றால், நீ தேவனை எப்படி விசுவாசித்தாலும், “பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்” என்றுதான் தேவன் சொல்வார். நீ ஒரு பொல்லாதவனாக வகைப்படுத்தப்படுவாய். நீ தேவனுடன் தொடர்பில்லாதவனாய் இருப்பாய், தேவன் உன் கர்த்தராகவோ அல்லது உன் தேவனாகவோ இருக்கமாட்டார். தேவன் எல்லாவற்றின் மீதும் ஆளுகை செய்கிறார் என்பதை நீ ஒப்புக்கொண்டாலும், தேவன் சிருஷ்டிகராய் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டாலும், நீ தேவனை ஆராதிப்பதில்லை, மற்றும் தேவனுடைய ராஜரீகத்துக்குக் கீழ்ப்படிவதில்லை. நீ பிசாசாகிய சாத்தானைப் பின்பற்றுகிறாய், பிசாசாகிய சாத்தானே உன் கர்த்தனாய் இருக்கிறான் எல்லாவற்றிலும், நீ உன்னையே நம்பினால், உன் சுயசித்தத்தைப் பின்பற்றினால், உன் தலைவிதி உன் கைகளில்தான் உள்ளது என்று நீ நம்பினால், அப்போது, நீ உன்னைத்தான் விசுவாசிக்கிறாய், மற்றும் நீ தேவனை விசுவாசிப்பதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினாலும், தேவன் உன்னை ஏற்றுக்கொள்வதில்லை, நீ தேவனுடன் எந்த உறவையும் பெற்றிருப்பதில்லை, எனவே நீ இறுதியில் தேவனால் வெறுக்கப்படவும் நிராகரிக்கப்படவும், தேவனால் தண்டிக்கப்படவும் மற்றும் தேவனால் வெளியேற்றப்படவும் நியமிக்கப்பட்டுள்ளாய்; உன்னைப் போன்றவர்களை தேவன் இரட்சிப்பதில்லை. தேவனை உண்மையாக விசுவாசிப்பவர்களே தேவனை இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்களாகவும், தேவனே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்கள் தேவனுக்காக உண்மையாக அர்ப்பணிக்கக்கூடியவர்களாவும், தேவனுடைய ஒரு சிருஷ்டிக்கான கடமையை நிறைவேற்றக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்கள் தேவனுடைய கிரியையை அனுபவிக்கிறார்கள், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளையும் சத்தியத்தையும் கைக்கொள்கிறார்கள், அவர்கள் சத்தியத்தைப் பின்தொடரும் பாதையில் நடக்கிறார்கள், அவர்கள் தேவனுடைய ராஜரீகத்துக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிபவர்களாயும் தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுபவர்களாயும் இருக்கிறார்கள். ஜனங்கள் தேவன் மீது இப்படிப்பட்ட விசுவாசத்தைக் கொண்டிருந்தால்தான் அவர்களால் இரட்சிக்கப்பட முடியும்; இல்லை என்றால், அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்கள். ஜனங்கள் தேவனை விசுவாசிக்கும்போது, விருப்பமான சிந்தனையில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதா? தேவன் மீதான தங்களது விசுவாசத்தில், ஜனங்கள் எப்போதும் தங்கள் சொந்தக் கருத்துக்களையும் தெளிவற்ற, கருத்தியலான கற்பனைகளையும் பற்றிக்கொள்ளும்போது, அவர்களால் சத்தியத்தைப் பெற முடியுமா? நிச்சயமாக முடியாது. ஜனங்கள் தேவனை விசுவாசிக்கும்போது, அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவன் கேட்பதைப் போலவே அவர்கள் தேவனை விசுவாசிக்க வேண்டும், அவர்கள் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்; அப்போதுதான் அவர்களால் இரட்சிப்பை அடைய முடியும். இதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை; நீங்கள் எதைச் செய்தாலும், விருப்பமான சிந்தனையில் நீங்கள் ஈடுபடக்கூடாது. இந்தத் தலைப்பில் ஐக்கியங்கொள்வது ஜனங்களுக்கு மிகவும் முக்கியமானது, அப்படித்தானே? இது உங்களுக்கான ஒரு எச்சரிக்கை மணியாகும்.

இப்போது நீங்கள் இந்தச் செய்திகளைக் கேட்டிருக்கிறீர்கள், நீங்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாகி, இரட்சிப்பு என்றால் என்ன என்பதைக் குறித்துத் தெளிவாக இருக்க வேண்டும். ஜனங்கள் எதை விரும்புகிறார்கள், அவர்கள் எதற்காகப் பாடுபடுகிறார்கள், எதில் ஆர்வம் காட்டுகிறார்கள்—ஆகிய இவைகளில் எதுவுமே முக்கியமானதல்ல. மிக முக்கியமானது என்னவென்றால், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதுதான். இறுதிப் பகுப்பாய்வில், சத்தியத்தைப் பெறக்கூடியவர்களாய் இருப்பதே மிக முக்கியமானதாகும், அதுவே தேவனுக்கு பயப்படும் பயத்தை அடைய உன்னை அனுமதிக்கக்கூடியது மற்றும் பொல்லாப்புக்கு விலகுவதே சரியான பாதையாகும். நீ அநேக வருஷங்களாக தேவனை விசுவாசித்தும், சத்தியத்துடன் எந்தத் தொடர்பையும் பெற்றிராத விஷயங்களைப் பின்தொடர்வதில் எப்போதும் கவனம் செலுத்தியிருப்பாயானால், உன் விசுவாசத்துக்கும் சத்தியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தேவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீ தேவனை விசுவாசிப்பதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறலாம், ஆனால் தேவன் உன்னுடைய கர்த்தராக இருப்பதில்லை, அவர் உன்னுடைய தேவனாக இருப்பதில்லை, உன் தலைவிதியை தேவன் கட்டுப்படுத்துகிறார் என்பதை நீ ஏற்றுக்கொள்வதில்லை, உனக்காக தேவன் ஏற்பாடு செய்யும் எல்லாவற்றிற்கும் நீ கீழ்ப்படிவதில்லை, தேவன் சத்தியமாய் இருக்கிறார் என்ற உண்மையை நீ ஏற்றுக்கொள்வதில்லை-இதில் உன் இரட்சிப்பின் நம்பிக்கைகள் சிதைந்திருக்கின்றன; உன்னால் சத்தியத்தைப் பின்தொடரும் பாதையில் நடக்க முடியாவிட்டால், நீ அழிவின் பாதையில் நடக்கிறாய். நீ பின்தொடர்வது, கவனம் செலுத்துவது, ஜெபம் செய்வது மற்றும் முறையிடுவது அனைத்தும் தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையிலும், தேவன் என்ன கேட்கிறார் என்பதன் அடிப்படையிலும் இருந்தால், மேலும் நீ சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிகிறாய், மற்றும் சிருஷ்டிகரை ஆராதிக்கிறாய் என்ற உணர்வை அதிகமாகப் பெற்றிருந்து, தேவன் உன்னுடைய கர்த்தராகவும், உன்னுடைய தேவனாகவும் இருக்கிறார் என்று உணர்வாயானால், தேவன் உனக்காகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்யும் அனைத்திற்கும் கீழ்ப்படிவதில் நீ மிகுந்த மகிழ்ச்சியடைவாயானால், மேலும் தேவனுடனான உன்னுடைய உறவு மிக நெருக்கமாக அதிகரித்து, எப்போதும் இயல்பானதாக இருக்குமானால், மேலும் தேவன் மீதான உன் அன்பு இன்னும் தூய்மையாகவும் உண்மையாகவும் இருந்தால், அப்போது, தேவனைப் பற்றிய உன்னுடைய மனக்குறைகளும் தவறான புரிதல்களும் மற்றும் தேவன் மீதான உன்னுடைய ஆடம்பரமான ஆசைகளும் இன்னும் தணிந்துபோகும், மேலும் நீ தேவனுக்குப் பயப்படுகிற பயத்தையும், பொல்லாப்புக்கு விலக்குவதையும் முழுவதுமாக அடைந்திருப்பாய், அதாவது நீ ஏற்கனவே இரட்சிப்பின் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பாய். இரட்சிப்பின் பாதையில் நடப்பது என்பது தேவனுடைய தண்டித்துத் திருத்துதல், கிளைநறுக்குதல், கையாளுதல், நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை ஆகியவற்றுடன் இணைந்து வந்தாலும், இவை உனக்கு அதிக வேதனையை அனுபவிப்பதற்கான காரணமாக இருந்தாலும், இது உன் மீது வரும் தேவனுடைய அன்பாகும். நீ தேவனை விசுவாசிக்கும் போது, ஆசீர்வதிக்கப்படுவதை மட்டுமே பின்தொடர்வாயானால், மேலும் அந்தஸ்தையும் கௌரவத்தையும் மட்டுமே பின்தொடர்வாயானால், மேலும் ஒருபோதும் தண்டித்துத் திருத்தப்படவோ, கிளைநறுக்கப்படவோ, கையாளப்படவோ அல்லது நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்படவோ இல்லை என்றால், வாழ்க்கை உனக்கு சுலபமாக இருந்தாலும் கூட, உன் இருதயம் தேவனிடமிருந்து இன்னும் அதிக தூரமாய் சென்றுவிடும், நீ தேவனுடனான இயல்பான உறவை இழந்துவிடுவாய், மேலும் நீ தேவனுடைய ஆய்வுகளை ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டாய்; நீ உன்னுடைய சொந்த முதலாளியாக இருக்கவே விரும்புவாய்—இவை எல்லாமே, நீ செல்லும் பாதை சரியான பாதை அல்ல என்பதை நிரூபிக்கின்றன. நீ தேவனுடைய கிரியையை சிறிது காலம் அனுபவித்திருந்தால், மனிதகுலம் எவ்வளவு ஆழமாக சீர்கெட்டுக் காணப்படுகிறது, மற்றும் தேவனை எதிர்க்க எத்தனிக்கிறது என்ற உணர்வை அதிகமாகப் பெற்றிருந்தால், மேலும் தேவனை எதிர்க்கும் ஒன்றை நீ செய்யும் ஒரு நாள் வரக்கூடுமோ என்று நீ கவலைப்பட்டால், மற்றும் நீ தேவனைப் புண்படுத்தி, அவரால் கைவிடப்படலாம் என்று பயத்தால், தேவனை எதிர்ப்பதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்று உணர்கிறாய் என்றால், அப்போது நீ தேவனுக்குப் பயப்படும் இருதயத்தைப் பெற்றிருப்பாய். ஜனங்கள் தேவனை விசுவாசிக்கும்போது, அவர்கள் தேவனிடமிருந்து விலகிச்செல்லக் கூடாது என்று நீ உணர்வாய்; அவர்கள் தேவனிடமிருந்து விலகிச்சென்றால், அவர்கள் தேவனுடைய தண்டித்துத் திருத்துதலில் இருந்தும், தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையிலிருந்தும் விலகிச் சென்றால், இது தேவனுடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் இழந்துபோவதற்கும், தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்துபோவதற்கும் சமமாகும், அது ஜனங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப் போல இருக்கும்; அவர்களால் இன்னும் அதிகமாக சீரழிந்தவர்களாக மாற முடியும், அவர்கள் மதத்தைச் சார்ந்த ஜனங்களைப் போல இருப்பார்கள், மேலும் அவர்கள் தேவனை விசுவாசித்துக்கொண்டிருக்கும்போதே தேவனை எதிர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்—இதினிமித்தமாக, அவர்கள் அந்திக்கிறிஸ்துகளாக மாறுவார்கள். இதை உன்னால் உணர முடிந்தால், அப்போது நீ தேவனிடத்தில், “தேவனே! தயவுசெய்து என்னை நியாயந்தீர்த்து என்னை சிட்சிப்பீராக. நான் செய்யும் எல்லாவற்றிலும், நீர் என்னைக் கண்காணிக்க வேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன். சத்தியத்தை மீறுகிறதும் உமது சித்தத்தை மீறுகிறதுமான எதையாவது நான் செய்தால், நீர் என்னைக் கடுமையாக நியாயந்தீர்த்து என்னை சிட்சிப்பீராக—உமது நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று ஜெபம் செய்வாய். தேவன் மீதான தங்களது விசுவாசத்தில் ஜனங்கள் நடக்க வேண்டிய சரியான பாதை இதுதான். எனவே இந்த தரநிலையின்படி அளவிடு: நீ இரட்சிப்பின் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டாய் என்று சொல்ல உனக்குத் தைரியம் இருக்கிறதா? உனக்குத் தைரியம் இல்லை, ஏனென்றால், நீ இன்னும் சத்தியத்தைப் பின்தொடர்பவர்களில் ஒருவனாக ஆகவில்லை, பல விஷயங்களில், நீ சத்தியத்தைத் தேடுவதில்லை, மேலும் கையாளப்படுவதையும் கிளைநறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ளவும், அதற்குக் கீழ்ப்படியவும் உன்னால் முடிவதில்லை—இது நீ இரட்சிப்பின் பாதையில் நடக்க வெகு தொலைவில் இருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறது. நீ சத்தியத்தைப் பின்தொடர்பவனாக இல்லாவிட்டால் இரட்சிப்பின் பாதையில் அடியெடுத்து வைப்பது எளிதானதா? உண்மையில், அது எளிதானது இல்லை. ஜனங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் அனுபவித்திருக்கவில்லை என்றால், அவர்கள் தேவனுடைய தண்டித்துத் திருத்துதல், சிட்சை, கையாளுதல் மற்றும் கிளைநறுக்குதல் ஆகியவற்றை அனுபவித்திருக்கவில்லை என்றால், அவர்கள் சத்தியத்தைப் பின்தொடர்பவர்களாக மாறுவது எளிதானது அல்ல, அதன் விளைவாக, இரட்சிப்புக்கான பாதையில் அடியெடுத்து வைப்பது அவர்களுக்கு மிகக் கடினமாய் இருக்கிறது. இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, நீ இன்னும் இரட்சிப்பின் பாதையில் அடியெடுத்து வைக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்கிறாய், ஆனாலும் இதை நீ ஒரு தீவிரமான விஷயமாகப் பார்க்கவில்லை என்றால், நீ விரும்பும் நாள் சீக்கிரமாக வரும் என்று உணர்ந்தால்—நீ இதைப் பற்றி கவலைப்படாதிருந்தால்—இது எப்படிப்பட்ட பார்வை? அத்தகைய பார்வை உனக்கு இருக்கும்போது, நீ பிரச்சனையில் இருக்கிறாய், மேலும் இரட்சிப்பின் பாதையில் அடியெடுத்து வைப்பது உனக்குக் கடினமாக இருக்கும். ஆகவே, இந்தப் பாதையில் அடியெடுத்து வைக்கக்கூடியவனாக இருப்பதற்கு நீ எப்படித் தீர்மானிக்க வேண்டும்? நீ, “ஆ! இப்போது நான் இன்னும் இரட்சிப்பின் பாதையில் அடியெடுத்து வைக்கவில்லை—இது மிகவும் ஆபத்தானது! ஜனங்கள் எல்லா நேரங்களிலும் அவருக்கு முன்பாக வாழ வேண்டும், மேலும் அதிகமாக ஜெபிக்க வேண்டும், மேலும் அவர்களின் இருதயங்கள் சமாதானத்துடன் இருக்க வேண்டும், மேலும் பதறுகிறவனாக இருக்கக் கூடாது என்று தேவன் கூறுகிறார்—எனவே இதையெல்லாம் நான் இப்போதே பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்” என்று சொல்ல வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்வது தேவன் மீதான விசுவாசத்தின் சரியான பாதையில் பிரவேசிப்பதாகும்; அது எளிமையானது. தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டபின்பு, அவற்றைக் கைக்கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் நல்லவர்களா? அவர்கள் நல்லவர்களே-அவர்கள் சத்தியத்தை நேசிக்கும் ஜனங்களாவர். தேவனுடைய வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அவர்கள் உணர்ச்சியற்றவர்களாகவும், அலட்சியமாகவும், அடிபணியாமலும் இருந்தால்—தேவனுடைய வார்த்தைகளை இலகுவாகக் கருதி, அவைகளுக்குக் காதை அடைத்துக்கொண்டும், கண்ணை மூடிக்கொண்டும் இருந்தால், அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் குழப்பமானவர்கள் இல்லையா? தேவனை விசுவாசிக்கும்போது இரட்சிக்கப்பட ஏதேனும் குறுக்குவழிகள் உள்ளனவா என்று ஜனங்கள் எப்போதும் கேட்கிறார்கள். எதுவுமில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், அதன் பின்னர் இந்த எளிய பாதையைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆனால் அதைக் கேட்ட பிறகு நீங்கள் அதைக் கைக்கொள்வதில்லை—நீங்கள் அதைக் கேட்கும்போது அது ஒரு நல்ல விஷயமாகத் தெரிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட முடியுமா? இவர்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருந்தாலும், அது பெரிதல்ல; இரட்சிப்பு மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்பி, “நான் இப்போது இளமையாக இல்லை, இத்தனை வருடங்களாக தேவனை விசுவாசித்தும் கூட, என் கடமைகளை நான் சரியாகச் செய்திருக்கவில்லை. எல்லா நேரங்களிலும் ஜனங்கள் தமக்கு முன்பாக வாழ வேண்டும் என்று தேவன் கேட்கிறார், நான் தேவனுக்கு முன்பாக வாழ்ந்திருவில்லை. நான் விரைந்து சென்று ஜெபிக்க வேண்டும்” என்று அவர்கள் விஷயங்களைப் பற்றி யோசித்து, தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு நாள் வரலாம். அவர்கள் தங்கள் இருதயங்களில் உணர்வடைந்து, தங்களது சரியான கடமைகளைச் செய்யத் தொடங்கினால் அது மிகவும் தாமதமாக இருக்காது. ஆனால் அதை மிகவும் தாமதமடைய விட்டுவிடாதீர்கள்; நீங்கள் எழுபது அல்லது எண்பது வயதாகும்வரை காத்திருந்தால், உங்கள் சரீரம் செயலிழந்தால், உங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்றால், சத்தியத்தைப் பின்தொடர்வதற்கு அது மிகவும் தாமதமாகிவிடாதா? நீங்கள் உங்கள் வாழ்க்கையின் சிறந்த ஆண்டுகளை அர்த்தமற்ற விஷயங்களில் செலவழித்து, எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயமான சத்தியத்தைப் பின்தொடர்வதைத் தள்ளிப்போடவோ அல்லது தவறவிடவோ செய்தால், இது மிகவும் முட்டாள்தனம் இல்லையா? இதைவிட முட்டாள்தனம் ஏதும் உண்டா? அநேகர் மெய்யான வழியைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்காலம் வரும்வரை காத்திருக்கிறார்கள்—அவர்கள் அனைவரும் மூடர்களாய் இருக்கிறார்கள். அவர்களால் ஜீவனைப் பெற்றுக்கொள்ள இயலும் முன்பு, சத்தியத்தைப் பின்தொடர்வதற்குப் பல ஆண்டுகளாக முயற்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இரட்சிக்கப்படுவதற்கான சிறந்த நேரத்தை அவர்கள் வீணடித்தால், மனம்வருந்துவதற்கு மிகவும் தாமதமாகிவிடும்!

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவனுக்குப் பயப்படுவதால் மட்டுமே ஒருவனால் இரட்சிப்பின் பாதையில் நடக்க முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 380

ஒரு திருச்சபைத் தலைவராக இருப்பது என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சத்தியத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், திறமையுள்ளவர்களைக் கண்டுபிடித்து வளர்ப்பதும் ஆகும், அவர்கள் மேல் நீங்கள் சிறிதளவுகூட பொறாமைப்படவோ அல்லது அவர்களை அடக்கவோ கூடாது. இந்த வகையில் செயல்படுவது திருச்சபையின் பணிக்கு நன்மை தருவதாக இருக்கிறது. நீ செய்யும் எல்லா பணிகளிலும் உன்னோடு நன்றாக ஒத்துழைக்கும் சத்தியத்தைப் பின்பற்றும் ஒரு சிலரை உன்னால் வளர்க்க முடியுமானால், முடிவில் உங்கள் யாவருக்கும் அனுபவ சாட்சிகள் இருக்கும். அதன் பின் நீ ஒரு தகுதி பெற்ற தலைவனாக இருப்பாய். நீங்கள் எல்லாவற்றிலும் கொள்கைகளின்படி செயல்படும் திறனை வளர்த்துக் கொண்டால், நீங்கள் உங்கள் விசுவாசத்திற்கு ஏற்ப வாழ்வீர்கள். மற்றவர்கள் தங்களை விட சிறந்தவர்களும் தங்களை விட உயர்ந்தவர்களுமாய் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் புறக்கணிக்கப் படும்போது மற்றவர்கள் மதிக்கப்படுவார்கள் என்றும் எப்போதும் பயப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். இது அவர்கள் மற்றவர்களைத் தாக்குவதற்கும் ஒதுக்குவதற்கும் வழிவகுக்கிறது. இது தங்களை விடத் திறமையானவர்களைப் பார்த்து பொறாமை கொள்வது அல்லவா? இத்தகைய நடத்தை சுயநலம் மற்றும் இழிவானது அல்லவா? இது எத்தகைய மனநிலையாய் இருக்கிறது? இது தீங்கிழைப்பதாய் இருக்கிறது! தன் சொந்த நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள், தனது சொந்த விருப்பங்களை மட்டுமே திருப்திப்படுத்துபவர்கள், மற்றவர்களையோ அல்லது தேவனுடைய வீட்டின் நலன்களையோ கருத்தில் கொள்ளாமல் இருப்பவர்கள்—இப்படிப்பட்ட ஜனங்கள் மோசமான மனநிலையைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் மீது தேவன் அன்பு வைத்திருப்பதில்லை. உன்னால் உண்மையிலேயே தேவனுடைய சித்தத்தின் மீது அக்கறையுள்ளவனாக இருக்க முடியுமானால், அப்போது உன்னால் மற்றவர்களை நியாயமாக நடத்த முடியும். நீ ஒரு நல்ல நபரைப் பரிந்துரைத்து அவர் பயிற்சி பெறவும் ஒரு கடமையைச் செய்யவும் அனுமதித்து, அதன்மூலம் தேவனுடைய வீட்டில் மற்றொரு திறமையான நபரைச் சேர்த்தால், அப்போது, உன் வேலை உனக்கு எளிதாக இருக்கும் அல்லவா? இந்தக் கடமையினால் நீ உனது விசுவாசத்திற்கு ஏற்ப வாழ்ந்துகாட்டியிருக்க மாட்டாயா? இது தேவனுக்கு முன்பாக ஒரு நற்கிரியையாகும்; இது ஒரு தலைவராக இருப்பவர் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச மனசாட்சி மற்றும் உணர்வு ஆகும். சத்தியத்தைக் கடைபிடிக்கக்கூடிய திறன் கொண்டவர்களால்தான், காரியங்களைச் செய்யும்போது தேவனுடைய சோதனையை ஏற்றுக்கொள்ள முடியும். நீ தேவனுடைய சோதனையை ஏற்றுக்கொள்ளும்போது, உன் இருதயம் சீர்படுத்தப்படுகிறது. நீ இன்னும் மற்றவர்கள் பார்க்கும்படியாக மட்டுமே செயல்களைச் செய்துகொண்டு, எப்போதும் பிறருடைய புகழ்ச்சியையும் பாராட்டையும் பெற விரும்பி, ஆனாலும் நீ தேவனுடைய சோதனையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தேவன் இன்னும் உன்னுடைய இருதயத்தில் இருக்கிறாரா? இப்படிப்பட்ட ஜனங்களுக்கு தேவன் மீதான பயபக்தி கிடையாது. உன் சொந்த நலனுக்காகவே எப்போதும் காரியங்களைச் செய்யாதே மற்றும் உன் சொந்த நலன்களை மட்டுமே எப்போதும் கருத்தில் கொள்ளாதே; மனிதனுடைய நலன்களைக் கருத்தில் கொள்ளாதே, மேலும் உன் சொந்தப் பெருமை, புகழ் அல்லது அந்தஸ்து பற்றி சிந்திக்க வேண்டாம். நீ முதலில் தேவனுடைய வீட்டின் நலன்களைப் பற்றி சிந்திக்க வேண்டும், மேலும் அவற்றை உன்னுடைய முதல் முன்னுரிமையாக நிறுத்த வேண்டும். நீ தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொண்டு, உன் கடமையை நிறைவேற்றுவதில் தூய்மையற்றவனாக இருந்திருக்கிறாயா இல்லையா, விசுவாசமாக இருந்திருக்கிறாயா, உனது பொறுப்புகளை நிறைவேற்றி இருக்கிறாயா, உனக்குரிய அனைத்தையும் கொடுத்திருக்கிறாயா என்பதையும், அதோடு கூட, நீ முழு மனதுடன் உனது கடமை மற்றும் திருச்சபையின் பணியைப் பற்றி சிந்தித்திருக்கிறாயா இல்லையா என்பதையும் சிந்தித்துப் பார்க்கத் தொடங்க வேண்டும். இந்த விஷயங்களில் நீ கவனம் செலுத்த வேண்டும். அவற்றைப் பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்த்து அவற்றைத் தீர்மானித்தால், உன் கடமையைச் சிறப்பாகச் செய்வது உனக்கு எளிதாக இருக்கும். நீ திறமையில் குறைவுற்றவனாக இருந்தால், உன் அனுபவம் ஆழமற்றதாக இருந்தால் அல்லது உன் தொழிலில் நீ கைதேர்ந்தவனாக இல்லை என்றால், அப்போது, உன் வேலையில் சில தவறுகள் அல்லது குறைபாடுகள் இருக்கக் கூடும், மேலும் முடிவுகள் சிறந்ததாக இல்லாமல் போகலாம்—ஆனால் நீ உன் சிறந்த முயற்சியை முன்னெடுத்திருப்பாய். நீ செய்யும் எல்லாவற்றிலும், உன் சொந்த சுயநலமான ஆசைகளை அல்லது முன்னுரிமைகளைத் திருப்தி செய்யாதே. அதற்குப் பதிலாக, திருச்சபைப் பணிகளிலும் தேவனுடைய வீட்டின் நலன்களிலும் தொடர்ந்து அக்கறை செலுத்து. உன் கடமைகளை நன்றாகச் செய்ய முடியாவிட்டாலும், உன் இருதயம் திருத்தப்பட்டுள்ளது; இதற்கு மேலாக உன் கடமைகளில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க சத்தியத்தைத் தேடினால், அதன் பின் உன் கடமை தரமானதாக இருக்கும், மேலும் நீ சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கக் கூடியவனாக இருப்பாய். இதுவே சாட்சி பகருதல்.

சிலர் தேவனை விசுவாசிக்கிறார்கள் ஆனால் சத்தியத்தைப் பின்பற்றுவதில்லை. அவர்கள் எப்போதும் மாம்சத்தில் வாழ்ந்து, எப்போதும் சரீர இன்பங்களைப் பற்றிக்கொண்டு, எப்போதும் தங்கள் சொந்த சுயநல ஆசைகளைத் திருப்திப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனை ஆண்டுகள் இத்தகைய ஜனங்கள் தேவனை விசுவாசித்தாலும் சரி, அவர்கள் சத்தியத்தின் யதார்த்தத்துக்குள் ஒருபோதும் பிரவேசிக்க மாட்டார்கள். இது தேவனுக்கு அவமரியாதை கொண்டு வந்ததற்கான அடையாளம். நீ சொல்கிறாய், “தேவனை எதிர்க்க நான் எதையும் செய்திருக்கவில்லை; நான் எப்படி தேவனுக்கு அவமரியாதையைக் கொண்டு வந்திருக்கிறேன்?” உன் கருத்துகள் மற்றும் சிந்தனைகள் அனைத்துமே தீமையானவை. உனது செயல்களுக்குப் பின்னால் உள்ள குறிக்கோள்கள், இலக்குகள், மற்றும் நோக்கங்கள் மற்றும் நீ செய்பவற்றின் விளைவுகளில்—எல்லா விதத்திலும், அதன் கேலிக்கூத்துக்கான பொருளாக இருப்பதன் மூலமும், அது உன்னிடமிருந்து எதையாவது பெற அனுமதிப்பதன் மூலமும், நீ சாத்தானை திருப்திப்படுத்திக்கொண்டிருக்கிறாய். ஒரு கிறிஸ்தவனுக்கு இருக்க வேண்டிய சாட்சி ஒன்றையும் நீ பெற்றிருக்கவில்லை. நீ சாத்தானுக்கு சொந்தமான ஒருவன். நீ எல்லாவற்றிலும் தேவனுடைய நாமத்தை கனவீனப்படுத்துகிறாய், மேலும் உண்மையான சாட்சியைப் பெற்றிருக்கவில்லை. நீ செய்திருக்கிற காரியங்களை தேவன் நினைவில் கொள்வாரா? முடிவில், உன் செயல்கள் மற்றும் நீ செய்த கடமை பற்றி தேவன் என்ன முடிவை எடுப்பார்? அதிலிருந்து ஏதாவது ஒன்று வந்திருக்க வேண்டும் அல்லவா? வேதாகமத்தில் கர்த்தராகிய இயேசு இவ்வாறு கூறுகிறார், “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:22-23). கர்த்தராகிய இயேசு ஏன் இதைக் கூறினார்? கர்த்தரின் நாமத்தால் பிரசங்கித்து, அசுத்த ஆவிகளை விரட்டி பல அற்புதங்களைச் செய்த பலர் ஏன் அக்கிரமச் செய்கைக்காரர் ஆனார்கள்? இது எதனால் என்றால் கர்த்தராகிய இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை ஏற்காமல், கர்த்தராகிய இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் இருதயங்களில் சத்தியத்தின் மேல் அன்பு இல்லாமல் இருந்ததேயாகும். அவர்கள் வெறுமனே பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களுக்காக தங்கள் பணி, துன்பம் மற்றும் கர்த்தருக்கான தியாகங்களை பரிமாற்றம் செய்துகொள்ள விரும்பினார்கள். இது தேவனுடன் பரிவர்த்தனை செய்வது மற்றும் இது தேவனைப் பயன்படுத்தி தேவனை ஏமாற்றுவது ஆகும், ஆகவே கர்த்தராகிய இயேசு அவர்களை அருவருத்தார், அவர்களை வெறுத்தார், அக்கிரமச் செய்கைக்காரர் என்று கண்டனம் செய்தார். இன்று ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்கின்றனர், ஆனால் சிலர் புகழையும் அந்தஸ்தையும் தேடுகின்றனர். எப்போதும் தனித்து நிறக விரும்புகின்றனர், எப்போதும் தலைவர்களாகவும் ஊழியக்காரர்களாகவும் இருந்து புகழையும் அந்தஸ்தையும் அடைய விரும்புகின்றனர், அவர்கள் அனைவரும் தாங்கள் தேவனை விசுவாசித்து அவரைப் பின்பற்றுவதாகக் கூறினாலும், தங்களைத் துறந்து தேவனுக்காக ஒப்புக்கொடுத்தாலும், அவர்கள் புகழையும், நல்ன்களையும் அந்தஸ்தையும் அடையவே தங்கள் கடமையைச் செய்கிறார்கள் மேலும் அவர்களுக்கு எப்போதும் தனிப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. அவர்கள் தேவனுக்கு விசுவாசமாகவோ கீழ்ப்படிதலோடோ இல்லை, அவர்கள் தங்களைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமலேயே மேம்போக்காகச் செயல்படுகிறார்கள். ஆகவே அவர்கள் அக்கிரமச் செய்கைக்காரர்கள் ஆகியுள்ளார்கள். தேவன் இத்தகைய அக்கிரமச் செய்கைக்காரர்களை வெறுக்கிறார் மேலும் தேவன் அவர்களை இரட்சிப்பதில்லை. ஒரு நபரின் செய்கைகள் நல்லவை அல்லது தீயவை என்று நியாயந்தீர்க்கப் படுவதற்கான அளவுகோல் என்ன? அவர்கள் தங்கள் சிந்தனைகள், வெளிப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளில் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் சாட்சியை கொண்டிருக்கிறார்களா மற்றும் சத்தியத்தின் யதார்த்தத்தின் படி ஜீவிக்கிறார்களா என்பதைப் பொறுத்து அது இருக்கிறது. உனக்கு இந்த யதார்த்தம் இல்லை என்றால் அல்லது இதன்படி வாழாவிட்டால், சந்தேகம் இல்லாமல், நீ ஓர் அக்கிரமச் செய்கைக்காரன்தான். தேவன் அக்கிரமச் செய்கைக்காரர்களை எவ்விதம் பார்க்கிறார்? உன் சிந்தனைகளும் வெளிப்புற நடவடிக்கைகளும் தேவனுக்கு சாட்சி பகர்வதில்லை, அல்லது சாத்தானை வெட்கப்படுத்தி அதைத் தோற்கடிக்காது; அதற்குப் பதிலாக, அவை தேவனை வெட்கப்படுத்தும், அவை தேவனை வெட்கப்படுத்தும் அடையாளங்களால் நிறைந்திருக்கும். நீ தேவனுக்குச் சாட்சி பகரவில்லை, தேவனுக்காக உன்னை ஒப்புக்கொடுக்கவுமில்லை, நீ தேவனுக்கான உன் பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றவுமில்லை; அதற்குப் பதிலாக நீ உனக்காகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறாய். “உனக்காகவே” என்பதன் அர்த்தம் என்ன? சரியாகச் சொன்னால், சாத்தானுக்காக என்பது அதன் அர்த்தமாகும். ஆகவே முடிவில் தேவன் கூறுவார், “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.” தேவனுடைய பார்வையில் நீ நல்ல செயல்களைச் செய்யவில்லை, மாறாக உன் நடத்தைத் தீயதாக மாறியிருக்கிறது. அது தேவனுடைய ஒப்புதலைப் பெறாது என்பதோடு மட்டுமல்லாமல்—அது ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும். தேவனிடத்தில் இத்தகைய நம்பிக்கை கொண்ட ஒருவன் எதைத் தேடி ஆதாயம் செய்வான்? அத்தகைய நம்பிக்கை முடிவில் ஒன்றும் இல்லாமல் போய்விடாதா?

தங்கள் கடமையை நிறைவேற்றும் அனைவருக்கும், சத்தியத்தைப் பற்றிய அவர்களது புரிதல் ஆழமானதாக இருந்தாலும் மேலோட்டமானதாக இருந்தாலும், சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கான எளிய பயிற்சிக்கான வழி என்னவென்றால் எல்லாவற்றிலும் தேவனுடைய வீட்டின் நலன்களைப் பற்றி சிந்திப்பதும், சுயநல ஆசைகள், தனிப்பட்ட நோக்கங்கள், எண்ணங்கள், கர்வம் மற்றும் அந்தஸ்து ஆகிய அனைத்தையும் விட்டுவிடுவதும் ஆகும். தேவனுடைய வீட்டின் நலன்களுக்கு முதலிடம் கொடுங்கள்—இதுவே மிகக் குறைந்தபட்சமாக ஒருவர் செய்ய வேண்டிய ஒன்றாகும். தங்கள் கடமையைச் செய்யும் ஒரு நபரால் இந்த அளவு கூட செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது ஒருவன் தன் கடமையைச் செய்வதாக இருக்காது. நீ முதலில் தேவனுடைய வீட்டின் நலன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும், தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும், திருச்சபையின் பணியைக் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் இந்த விஷயங்ளுக்கு முதன்மையும் முன்னுரிமையும அளிக்க வேண்டும்; அதற்குப் பிறகுதான் உன்னுடைய அந்தஸ்தின் நிலைத்தன்மை அல்லது மற்றவர்கள் உன்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி நீ சிந்திக்கலாம். இவ்வாறு படிகளாகப் பிரித்து, சில சமரசங்களைச் செய்யும்போது, அது கொஞ்சம் எளிதாகிறது என்பதை நீங்கள் உணர்வதில்லையா? நீ இப்படிச் சிறிது காலம் கடைப்பிடித்தால், தேவனை திருப்திப்படுத்துவது கடினம் அல்ல என்பதை நீ உணரத் துவங்குவாய். அதோடு கூட, நீ உன் பொறுப்புகளை நிறைவேற்றவும், உன் கடமைகளையும் வேலைகளையும் செய்யவும், உன் சுயநல ஆசைகளை ஒதுக்கி வைக்கவும், உன் சொந்த நோக்கங்களையும் எண்ணங்களையும் ஒதுக்கி வைக்கவும், தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்ளவும், தேவனுடைய வீட்டின் நலன்களுக்கு, திருச்சபையின் பணிக்கு, மற்றும் நீ செய்ய வேண்டிய கடமைக்கு முதலிடம் கொடுக்கவும் கூடியவனாவாய். சிறிது காலம் இதை அனுபவித்த பிறகு, இது உன்னை நீயே நடத்துவதற்கான ஒரு நல்ல வழி என்று நீ உணருவாய். இது ஒரு வெறுக்கத்தக்க கீழ்த்தரமான நபராக இருப்பதற்கு மாறாக செம்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் வாழ்வதும், மேலும் குறுகிய மனப்பான்மையுடனோ அல்லது கீழ்த்தரமாகவோ இல்லாமல் நியாயமாகவும் மரியாதையுடனும் வாழ்வதும் ஆகும். ஒருவன் இப்படித்தான் வாழ வேண்டும் மற்றும் செயல்பட வேண்டும் என்று நீ உணருவாய். படிப்படியாக, உன்னுடைய சொந்த நலன்களைத் திருப்திப்படுத்துவதற்கான உன் இருதயத்தில் உள்ள ஆசை குறையும். இப்போது, நீங்கள் எவ்வளவு நீண்ட காலம் தேவனை விசுவாசித்திருந்தாலும் சரி, சத்தியத்தைத் தேடுதல், சத்தியத்தைக் கடைப்பிடித்தல், சத்தியத்தின் யதார்த்தத்துக்குள் பிரவேசித்தல் ஆகியவற்றில் உங்கள் பிரவேசம், புரிதல், மற்றும் அனுபவம் ஆழமற்றதாக இருக்கிறது, மேலும் உங்களுக்கு உண்மையான அனுபவம் அல்லது புரிதல் இல்லை, ஆகவே உங்களால் உண்மையான சாட்சியை அளிக்க முடியாது. நான் இப்போது உங்களுக்கு இந்த எளிய உத்தியைப் பகிர்ந்துள்ளேன்: இந்த வழியில் நீங்கள் கடைப்பிடிக்கத் தொடங்குகிறீர்கள், கொஞ்ச காலம் நீங்கள் அப்படி செய்ததும், உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் நிலை மாறும். தேவனை விசுவாசிப்பதில் மிக அதிக ஆர்வத்துடனும் அல்லது அதில் சலிப்படையாமலும் நீங்கள் இருக்கும் அந்தக் கலவையான நிலையில் இருந்து, தேவனை விசுவாசிப்பதும் ஒரு நேர்மையான நபராக இருப்பதும் நல்ல விஷயங்கள் என்று உணரும் நிலைக்கு அது உங்களை மாற்றும். அதில் ஒரு நேர்மையான நபராக இருப்பதில் ஆர்வம் கொண்டு அவ்வாறு வாழ்வதில் அர்த்தமும் போஷிப்பும் இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள். உங்கள் ஆவி சமாதானத்திலும் நிறைவிலும் நிலைகொள்ளும். உங்கள் சொந்த நோக்கங்கள், ஆர்வங்கள், சுயநல ஆசைகளை விட்டுவிட்டதன் விளைவாக அத்தகைய நிலை உங்களுக்கு உரியதாக இருக்கும். அதை நீங்கள் ஆதாயப்படுத்தி இருப்பீ ர்கள். இதன் பலனின் ஒரு பகுதி மனித ஒத்துழைப்பின் விளைவிலும் இன்னொரு பகுதி பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலும் இருக்கும். ஜனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பரிசுத்த ஆவியானவரால் கிரியை செய்யமாட்டார்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவருடைய சீர்கேடான மனநிலையை விட்டொழிப்பதன் மூலம் மட்டுமே சுதந்திரத்தையும் விடுதலையையும் அடைய முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 381

மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகிய இவை இரண்டின் சாராம்சமும் வேறுபட்டவையாகும், மேலும் நடைமுறையில் ஏற்படும் மாற்றங்களும் வேறுபட்டவையாகும். இவை அனைத்தும் அதன் சாராம்சத்தில் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும். பெரும்பாலான ஜனங்கள் தேவன் மீதான நம்பிக்கையில் தங்கள் நடக்கைக்கு சிறப்பு முக்கியத்துவத்தை அளிக்கின்றனர். இதன் விளைவாக அவர்களின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் தேவனை விசுவாசிக்க ஆரம்பித்த பின்பு, அவர்கள் புகை பிடிப்பதையும் மதுபானம் அருந்துவதையும் நிறுத்துகிறார்கள், மேலும் அவர்கள் இனி மற்றவர்களுடன் சண்டையிட மாட்டார்கள், அவர்கள் இழப்பைச் சந்திக்கும்போது பொறுமையாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் சில நடத்தை மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். தேவனை விசுவாசித்தவுடன், தேவனுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் சத்தியத்தைப் புரிந்து கொள்வதாக சிலர் நினைக்கிறார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அனுபவித்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் இருதயங்களில் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுள்ளனர், அது அவர்களை மிகவும் ஆர்வமுள்ளவர்களாக்குகிறது. மேலும் அவர்களால் கைவிட முடியாதது அல்லது சகித்துக்கொள்ள முடியாதது என்பது எதுவுமில்லை. இருந்தபோதிலும், எட்டு, பத்து அல்லது இருபது அல்லது முப்பது வருடங்கள் விசுவாசித்த பின்பும் கூட, தங்கள் ஜீவியத்தின் மனநிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாததால், அவர்கள் தங்கள் பழைய வழிகளில் திரும்பிச் சென்று பின்மாற்றம் அடைகிறார்கள். அவர்களது அகந்தையும் மேட்டிமையும் மிக அதிகமாக வெளிப்படுகிறது. அவர்கள் அதிகாரம் மற்றும் லாபத்திற்காகப் போட்டியிடத் தொடங்குகிறார்கள், அவர்கள் திருச்சபையின் பணத்தை இச்சிக்கிறார்கள், அவர்கள் தேவனுடைய வீட்டைச் சாதகமாக்கிக் கொண்டவர்கள் மீது பொறாமைப்படவும் செய்கிறார்கள். மேலும் அவர்கள் தேவனுடைய வீட்டினுள் ஒட்டுண்ணிகளாகவும் பூச்சிகளாகவும் மாறியிருக்கிறார்கள், மேலும் சிலர் தவறான தலைவர்கள் மற்றும் அந்திக்கிறிஸ்துகள் என்று அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இந்த உண்மைகள் எதை நிரூபிக்கின்றன? வெறும் நடத்தை மாற்றங்கள் நிலைநிற்காது; ஜனங்களுடைய வாழ்க்கையின் மனநிலையில் மாற்றங்கள் இல்லையெனில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில், அவர்கள் தங்களின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களது நடத்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கான ஆதாரம் உணர்ச்சி வேகமாகவும், அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் சில கிரியைகளுடன் இணைந்ததாகவும் இருக்கிறபடியால், அனலாய் மாறுவதும் அல்லது தற்காலிகமாக தயவை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு மிகவும் எளிதாகும். அவிசுவாசிகள் கூறுகிறபடி “ஒரு நல்ல செயலைச் செய்வது எளிது; வாழ்நாள் முழுவதும் நல்ல செயல்களைச் செய்வது கடினம்.” ஏன் ஜனங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல செயல்களைச் செய்ய இயலாதவர்களாக இருக்கிறார்கள்? ஏனென்றால், சுபாவத்திலேயே மக்கள் துன்மார்க்கமானவர்கள், சுயநலவாதிகள், சீர்கேடானவர்கள். ஒருவரின் நடத்தையானது அவர்களின் சுபாவத்தால் வழிநடத்தப்படுகிறது. ஒருவரது சுபாவம் எப்படியோ அப்படியே ஒருவரது நடத்தையும் இருக்கிறது, இயற்கையாகவே வெளிப்படுவது மட்டுமே ஒருவரின் சுபாவத்தைக் குறிக்கிறது. போலியான விஷயங்கள் நீடிக்காது. தேவன் மனுஷனை இரட்சிப்பதற்காகக் கிரியை செய்யும்போது, அது மனிதனை நல்ல நடத்தையினால் அலங்கரிப்பதற்காக அல்ல; ஜனங்களுடைய மனநிலையை மறுரூபப்படுத்துவதும் புதிய ஜனங்களாக அவர்களை மறுபடியும் பிறக்கச் செய்வதுமே தேவனுடைய கிரியைக்கான நோக்கமாகும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு, தண்டனை, உபத்திரவம் மற்றும் மனிதனைப் புடமிடுதல் ஆகிய இவை அனைத்தும் அவர்களின் மனநிலையை மாற்றுவதற்காக உதவுகின்றன. இதனால், அவர்கள் முழுமையான கீழ்ப்படிதலையும் தேவன் மீதான பக்தியையும் அடைந்து, அவரை இயல்பாக ஆராதிக்க முடியும். இதுவே தேவனுடைய கிரியையின் நோக்கமாகும். நன்றாக நடந்து கொள்வதென்பது தேவனுக்குக் கீழ்ப்படிவது போன்றதல்ல, கிறிஸ்துவுடன் இணக்கமாக இருத்தலுக்கு இது சமமானதுமல்ல. நடத்தையில் மாற்றங்கள் என்பது உபதேசத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதும் மிகுந்த ஆர்வத்தினால் பிறப்பதும் ஆகும். அவை தேவனைப் பற்றிய உண்மையான அறிவையோ அல்லது சத்தியத்தை அடிப்படையாகக்கொண்டோ அமைக்கப்படவில்லை, அவை பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலை அடிப்படையாகக் கொண்டும் அமைக்கப்படவில்லை. சில நேரங்களில் ஜனங்கள் செய்கிற சில காரியங்கள் பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறவையாய் இருக்கும் போதிலும், அது அவர்களின் வாழ்க்கையின் வெளிப்பாடு அல்ல. அவர்கள் இன்னும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவில்லை, அவர்களின் வாழ்க்கை மனநிலை சற்றும் மாறவில்லை. ஒரு நபரின் நடத்தை எவ்வளவு நன்றாக இருந்தாலும், அது அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிகிறார்கள் அல்லது சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை நிரூபிப்பதில்லை. நடத்தை மாற்றங்கள் வாழ்க்கை மனநிலையிலுள்ள மாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, மேலும் அவற்றை ஜனங்களின் வாழ்க்கையின் வெளிப்பாடுகளாகக் கணக்கிட முடியாது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 382

ஒரு நபருக்கு பல நல்ல நடத்தைகள் இருந்தால், அவர் சத்தியத்தின் யதார்த்தங்களை உடையவர் என்று அதற்கு அர்த்தமல்ல. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும் கொள்கைகளின்படி செயல்படுவதன் மூலமும் மட்டுமே உங்களால் சத்தியத்தின் யதார்த்தங்களைக் கொண்டிருக்க முடியும். தேவனுக்குப் பயந்து பொல்லாப்பை விட்டு விலகுவதன் மூலம் மட்டுமே உங்களால் சத்தியத்தின் யதார்த்தங்களைக் கொண்டிருக்க முடியும். சிலருக்கு உற்சாகம் இருக்கிறது, அவர்களால் கோட்பாடுகளைப் பேசவும், விதிகளுக்குக் கீழ்ப்படியவும், பல நல்ல செயல்களைச் செய்யவும் முடியும், ஆனால் அவர்களைப் பற்றிச் சொல்லக்கூடியது எல்லாம், அவர்கள் கொஞ்சம் மனிதத்தன்மையையே கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆகும். கோட்பாடுகளைப் பேசக்கூடியவர்களாலும், விதிகளைப் பின்பற்றுவதில் வல்லவர்களாலும் நிச்சயமாக சத்தியத்தைக் கடைபிடிக்க முடியாது. அவர்கள் சொல்வது சரி என்றாலும், பிரச்சனைகள் இல்லாதது போலத் தோன்றினாலும், சத்தியத்தின் சாராம்சம் தொடர்பான விஷயங்களில் அவர்களுக்குச் சொல்ல எதுவும் இருக்காது. எனவே ஒருவர் எவ்வளவு கோட்பாட்டைப் பேசினாலும், அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்கிறார்கள் என்று அதற்கு அர்த்தமல்ல, மேலும் அவர்கள் எவ்வளவு கோட்பாட்டைப் புரிந்து கொண்டாலும், அவர்களால் எந்தப் பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. மதக்கோட்பாட்டாளர்கள் அனைவராலும் வேதாகமத்தை விளக்க முடியும், ஆனால் இறுதியில் அவர்கள் அனைவரும் வீழ்ச்சியடைகிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவன் வெளிப்படுத்திய முழு சத்தியத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களின் மனநிலையில் மாற்றத்தை அனுபவித்த மக்கள் வித்தியாசமானவர்கள்; அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள், எல்லாப் பிரச்சினைகளிலும் பகுத்தறிவுடன் இருக்கிறார்கள், தேவனுடைய சித்தத்தின்படி எவ்வாறு செயல்பட வேண்டும், சத்தியத்தின் கொள்கைக்கு ஏற்ப எவ்வாறு செயல்பட வேண்டும், தேவனைத் திருப்திப்படுத்த எப்படிச் செயல்பட வேண்டும், மேலும் அவர்கள் வெளிப்படுத்துகின்ற சீர்கேட்டின் தன்மையை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்களின் சொந்த யோசனைகளும் எண்ணங்களும் வெளிப்படுத்தப்படும்போது, அவர்கள் பகுத்தறிவுள்ளவர்களாகவும் மாம்சத்தை நிராகரிப்பவர்களாகவும் இருக்க முடிகிறது. மனநிலையின் மாற்றம் இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது. மனநிலையில் ஒரு மாற்றத்துக்கு ஆளானவர்களின் முக்கிய வெளிப்பாடு என்னவென்றால், அவர்கள் சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள், மேலும் விஷயங்களைச் செயல்படுத்தும்போது, அவர்கள் சத்தியத்தை ஒப்பீட்டு அளவில் துல்லியத்துடன் நடைமுறைக்குக் கொண்டு வருகிறார்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் சீர்கேட்டை வெளிப்படுத்துவதில்லை. பொதுவாக, மனநிலையில் மாற்றமடைந்தவர்கள் குறிப்பாக நியாயமானவர்களாகவும் பகுத்தறிவுள்ளவர்களாகவும் தோன்றுகிறார்கள், மேலும் சத்தியத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் காரணமாக, அவர்கள் அந்த அளவிற்கு சுயநீதியையோ ஆணவத்தையோ வெளிப்படுத்துவதில்லை. அவர்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சீர்கேட்டின் பெரும்பகுதியை அவர்களால் கண்டறிந்து புரிந்துகொள்ள முடியும், எனவே அவை ஆணவத்திற்கு வழிவகுக்காது. மனிதனின் நிலை என்ன, நியாயமான முறையில் நடந்து கொள்வது எப்படி, கடமை உணர்வுடன் இருப்பது எப்படி, என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக்கூடாது, எந்த மக்களுக்கு என்ன சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்பதில் அளவிடப்பட்ட புரிதலை அவர்களால் பெற முடிகிறது. இவ்வாறு, தங்களின் மனநிலைகள் மாற்றப்பட்டிருக்கிற மக்கள் ஒப்பீட்டளவில் நியாயமானவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே உண்மையிலேயே ஒரு மனித சாயலில் வாழ்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்கிறார்கள், அவர்களால் எப்போதும் சத்தியத்திற்கு ஏற்ப விஷயங்களைப் பேசவும் பார்க்கவும் முடிகிறது, மேலும் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவை கொள்கை ரீதியாக இருப்பார்கள்; அவர்கள் எந்தவொரு நபரின், விஷயத்தின் அல்லது பொருளின் செல்வாக்கிற்கும் உட்பட்டவர்கள் அல்லர், அவர்கள் அனைவரும் தங்களுக்கெனச் சொந்தக் கருத்துக்கள் கொண்டிருப்பார்கள், மேலும் அவர்களால் சத்தியத்தின் கொள்கையை நிலைநிறுத்த முடியும். அவர்களின் மனநிலைகள் பெரிதும் நிலையானவை, அவர்கள் அடிக்கடி நிலை மாறுவதில்லை, அவர்களின் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், தங்கள் கடமைகளை எவ்வாறு சரியாகச் செய்வது, தேவனின் திருப்திக்கேற்ப எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மனநிலையில் உண்மையான மாற்றம் அடைந்தவர்கள், மேலோட்டமான அளவில் தங்களை நல்லமுறையில் காட்ட என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதில்லை; தேவனைத் திருப்திப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் உள்ளார்ந்த தெளிவைப் பெற்றுள்ளனர். ஆகையால், வெளியிலிருந்து பார்க்கும்போது, அவர்கள் அவ்வளவு உற்சாகமாகவோ அல்லது மிகச் சிறந்த எதையும் செய்ததாகவோ தெரியாது, ஆனால் அவர்கள் செய்யும் அனைத்தும் அர்த்தமுள்ளவை, மதிப்புமிக்கவை, மற்றும் நடைமுறை விளைவுகளைத் தருகின்றவை ஆகும். மனநிலைகளில் மாற்றம் அடைந்தவர்கள் ஏராளமான சத்தியத்தின் யதார்த்தங்களைக் கொண்டிருப்பது உறுதி, மேலும் விஷயங்களை பற்றிய அவர்களின் கண்ணோட்டங்கள் மற்றும் அவர்களின் கொள்கை ரீதியான செயல்களால் இது உறுதிப்படுத்தப்படுத்திக்கொள்ளலாம். சத்தியத்தைப் பெறாதவர்கள் வாழ்க்கை மனநிலையில் எந்த மாற்றத்தையும் நிச்சயமாக அடைந்திருக்கவில்லை. மனநிலையில் மாற்றம் சரியாக எப்படி அடையப்படுகிறது? மனிதர்கள் சாத்தானால் ஆழமாகச் சீர்கெடுக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் தேவனை எதிர்க்கிறார்கள், மேலும் அவர்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் சுபாவத்தைக் கொண்டுள்ளனர். தேவனை எதிர்க்கும் சுபாவம் கொண்டவர்களையும், தேவனை எதிர்க்கக் கூடியவர்களையும் தேவனுக்குக் கீழ்ப்படியக்கூடியவர்களாகவும் அவருக்குப் பயப்படக்கூடியவர்களாகவும் மாற்றுவதன் மூலம் தேவன் ஜனங்களை இரட்சிக்கிறார். இதுவே மனநிலை மாற்றப்பட்ட ஒருவராக இருப்பதற்கான அர்த்தமாகும். ஒருவர் எவ்வளவு சீர்கெட்டவராக இருந்தாலும் அல்லது அவர்களிடம் எத்தனை சீர்கெட்ட மனநிலைகள் இருந்தாலும், அவர்களால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ளவும், பல்வேறு உபத்திரவங்களையும் சுத்திகரிப்புகளையும் ஏற்றுக் கொள்ளவும் முடியும் வரை, அவர்கள் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலைக் கொண்டிருப்பார்கள், அதே நேரத்தில், அவர்களால் தங்களுடைய சொந்த சுபாவம் மற்றும் சாராம்சத்தை தெளிவாகப் பார்க்க முடியும். அவர்கள் தங்களை உண்மையாக அறிந்திருந்தால், அவர்களால் தங்களையும் சாத்தானையும் வெறுக்க முடியும், மேலும் அவர்கள் சாத்தானைக் கைவிடவும், தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படியவும் தயாராக இருப்பார்கள். ஒரு நபர் இந்த உறுதிப்பாடைப் பெற்றவுடன், அவர்களால் சத்தியத்தைப் பின்தொடர முடியும். ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருந்தால், அவர்களின் சாத்தானிய மனநிலை சுத்திகரிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தைகள் அவர்களுக்குள் வேரூன்றி, அவர்களின் வாழ்க்கையாக மற்றும் அவர்களின் இருப்புக்கு அடிப்படையாக மாறினால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்ந்தால், மற்றும் அவர்கள் முற்றிலும் மாறி புதிய மனிதர்களாக மாறினால், அப்போது இது அவர்களின் மனநிலையில் மாற்றமாகக் கருதப்படுகிறது. மனநிலையில் மாற்றம் என்பது முதிர்ந்த மற்றும் அனுபவமிக்க மனிதத்தன்மையைக் கொண்டிருப்பதை அல்லது ஜனங்களின் வெளிப்புற மனநிலைகள் முன்பை விட சாந்தமானவை, அதாவது அவர்கள் முன்பு அகந்தை கொண்டவர்களாக இருந்தனர், ஆனால் இப்போது நியாயமான முறையில் தொடர்பு கொள்ள முடியும், என்று அர்த்தமல்ல, அல்லது அவர்கள் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள், ஆனால் இப்போது மற்றவர்கள் சொல்வதற்கு செவிசாய்க்கிறார்கள் என்றோ அர்த்தமல்ல; இத்தகைய வெளிப்புற மாற்றங்கள் மனநிலையின் மாற்றங்கள் என்று கூற முடியாது. நிச்சயமாக, மனநிலையில் மாற்றங்களில் இதுபோன்ற வெளிப்பாடுகள் உள்ளன, ஆனால் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உள்ளார்ந்து, அவர்களின் வாழ்க்கை மாறிவிட்டது. இதற்கு முழுக் காரணமும் தேவனுடைய வார்த்தைகளும் சத்தியமும் அவர்களுக்குள் வேரூன்றி, அவர்களுக்குள் ஆளுகை செய்து அவர்களின் வாழ்க்கையாக மாறியது தான். விஷயங்களைப் பற்றிய அவர்களின் பார்வையும் மாறிவிட்டது. உலகத்திலும் மனிதகுலத்திலும் என்ன நடக்கிறது, சாத்தான் மனிதகுலத்தை எப்படிச் சீர்கெடுக்கிறான், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தேவனை எப்படி எதிர்க்கிறது மற்றும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சாராம்சம் ஆகியவற்றை அவர்கள் நேராகப் பார்க்க முடியும். அவர்களால் தங்கள் இருதயங்களில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தையும் சாத்தானையும் வெறுக்க முடியும், மேலும் அவர்கள் முழுமையாக தேவனிடம் திரும்பவும் அவரைப் பின்பற்றவும் முடியும். இதன் பொருள் என்னவென்றால், அவர்களின் வாழ்க்கை மனநிலை மாறியிருக்கிறது, மேலும் அவர்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதேயாகும். வாழ்க்கை மனநிலையில் உள்ள மாற்றங்கள் அடிப்படை மாற்றங்கள் ஆகும், அதை வேளையில் நடத்தையில் உள்ள மாற்றங்கள் மேலோட்டமானவை ஆகும். வாழ்க்கை மனநிலையில் மாற்றங்களை அடைந்தவர்கள் மட்டுமே சத்தியத்தைப் பெற்றவர்களாவர், மேலும் அவர்கள் மட்டுமே தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 383

ஒருவரின் மனநிலையில் மாற்றம் என்பது நடத்தையில் உள்ள மாற்றம் அல்ல, அது போலித்தனமான வெளிப்புற மாற்றமும் அல்ல அல்லது ஆர்வத்தால் செய்யப்படும் தற்காலிக மாற்றமும் அல்ல. இந்த மாற்றங்கள் எவ்வளவு சிறந்தவையாக இருந்தாலும், அவை வாழ்க்கை மனநிலையில் உள்ள மாற்றங்களின் இடத்தைப் பெற முடியாது, ஏனென்றால் இந்த வெளிப்புற மாற்றங்களை மனித முயற்சிகளால் அடைய முடியும், ஆனால் வாழ்க்கை மனநிலையில் உள்ள மாற்றங்களை மனித முயற்சியால் மட்டுமே அடைய முடியாது. இதை அடைய தேவனுடைய நியாயத்தீர்ப்பு, சிட்சை, உபத்திரவங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றையும், அதோடு கூட பரிசுத்த ஆவியானவரின் பரிபூரணப்படுத்தலையும் அனுபவிப்பது அவசியமாகும். தேவனை விசுவாசிப்பவர்கள் சில நல்ல நடத்தைகளை வெளிப்படுத்தினாலும் கூட, அவர்களில் ஒருவர் கூட உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்படிவதில்லை, தேவனை உண்மையாக நேசிப்பதில்லை அல்லது தேவனுடைய சித்தத்தை செய்ய முடிவதில்லை. இது ஏன்? ஏனென்றால் இதை அடைவதற்கு வாழ்க்கை மனநிலையில் மாற்றம் தேவைப்படுகிறது, மேலும் வெறுமனே நடத்தையில் ஒரு மாற்றம் மட்டும் போதவே போதாது. மனநிலையில் மாற்றம் என்பதன் அர்த்தம், உனக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் அனுபவமும் இருக்கிறது, மேலும் சத்தியம் உன் வாழ்க்கையாக மாறிவிட்டது, அது உன்னை வழிநடத்தலாம், உன் வாழ்க்கை மற்றும் உன்னைக் குறித்த எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதாகும். இதுவே உன் வாழ்க்கை மனநிலையில் உள்ள மாற்றமாகும். சத்தியத்தை ஜீவனாகக் கொண்டவர்களே தங்களின் மனநிலைகளில் மாற்றம் அடைந்தவர்கள் ஆவர். கடந்த காலத்தில் சில சத்தியங்களை நீ புரிந்து கொண்டபோது, உன்னால் அவற்றில் சிலவற்றைக் கடைப்பிடிக்க முடியாமல் இருந்திருக்கும், ஆனால் இப்போது நீ புரிந்து கொள்ளும் சத்தியத்தின் எந்த அம்சத்தையும் தடையோ சிரமமோ இல்லாமல் கடைப்பிடிக்கலாம். நீங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் போது, மிகவும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறீர்கள், ஆனால் உங்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், நீங்கள் வேதனையை உணர்கிறீர்கள் மற்றும் உங்கள் மனசாட்சி தொந்தரவு செய்யப்படுகிறது. நீ எல்லாவற்றிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கலாம், தேவனுடைய வார்த்தைகளின்படி வாழலாம் மற்றும் வாழ்வதற்கான அடித்தளத்தைக் கொண்டிருக்கலாம். இதன் பொருள் என்னவென்றால் உன் மனநிலை மாறியிருக்கிறது என்பதாகும். உன் கருத்துகள் மற்றும் கற்பனைகள், உன் மாம்ச விருப்பங்கள் மற்றும் நாட்டங்கள், மற்றும் உன்னால் முன்பு விட முடியாத விஷயங்களை இப்போது உன்னால் எளிதாக விட்டுவிட முடியும்; தேவனுடைய வார்த்தைகள் உண்மையிலேயே நல்லவை என்றும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதே செய்வதற்கான சிறந்த செயல் என்றும் நீ உணர்கிறாய். இதன் பொருள் என்னவென்றால் உன் மனநிலை மாறியிருக்கிறது என்பதாகும். மனநிலையில் மாற்றம் என்பது எளிமையானதாகத் தெரிகிறது, ஆனால் இது உண்மையில் அதிக அனுபவத்தை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். இந்தக் காலகட்டத்தில், ஜனங்கள் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும், அவர்கள் தங்கள் சொந்த சரீரங்களைக் கீழ்ப்படுத்தி, தங்கள் மாம்சத்தை அடக்க வேண்டும், அவர்கள் நியாயத்தீர்ப்பு, சிட்சை, கிளைநறுக்குதல், கையாளப்படுதல், உபத்திரவங்கள், சுத்திகரிப்பு ஆகியவற்றை அனுபவிக்க வேண்டும், மேலும் அவர்கள் பல தோல்விகள், வீழ்ச்சிகள், உள்ளான போராட்டங்கள் மற்றும் வேதனைகளை அவர்களின் இருதயங்களுக்குள் அனுபவிக்க வேண்டும். இந்த அனுபவங்களுக்குப் பிறகு தான் ஜனங்கள் தங்கள் சொந்த சுபாவத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும், ஆனால் கொஞ்சம் புரிதல்கள் உடனடியாக ஒரு முழுமையான மாற்றத்தை உருவாக்காது; அவர்களின் சீர்கேடான மனநிலைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவதற்கு முன்பாக, அவர்கள் நீண்ட கால அனுபவத்தைக் கடக்க வேண்டும். இதனாலேயே ஒருவரின் மனநிலையை மாற்ற வாழ்நாள் முழுவதும் தேவைப்படுகிறது. உதாரணமாக, நீ ஒரு விஷயத்தில் சீர்கேட்டை வெளிப்படுத்தினால், நீ சத்தியத்தை உணர்ந்தவுடன் உடனடியாக உன்னால் அதைக் கடைப்பிடிக்க முடியுமா? உன்னால் முடியாது. நீ புரிந்துகொள்ளும் திறனுடன் இருக்கும்போது, மற்றவர்கள் உன்னைக் கிளைநறுக்கிக் கையாள்வார்கள், பின்னர் உன் சூழல் உன்னை கட்டாயப்படுத்துகிறது மற்றும் சத்தியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படும்படி கட்டாயப்படுத்துகிறது. சில சமயங்களில், நீங்கள் அப்படி செய்வதற்கு இன்னும் ஒப்புரவாகவில்லை, மேலும் உங்களுக்கு நீங்களே, “நான் இதை இப்படிச் செய்ய வேண்டுமா? நான் விரும்பியபடி இதை ஏன் நான் செய்யக் கூடாது? நான் ஏன் எப்போதும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறேன்? நான் இதைச் செய்ய விரும்பவில்லை, நான் இதைக் குறித்து சோர்வடைந்திருக்கிறேன்!” என்று சொல்லிக் கொள்கிறீர்கள். தேவனுடைய கிரியையை அனுபவிப்பது பின்வரும் செயல்முறைக்கு உட்பட வேண்டியதிருக்கிறது: தயங்கிக் கொண்டிருப்பதிலிருந்து சத்தியத்தைக் கடைப்பிடிப்பது, விருப்பத்துடன் சத்தியத்தைக் கடைபிடிப்பது; எதிர்மறை மற்றும் பலவீனத்திலிருந்து பெலன் மற்றும் மாம்சத்தை அடக்க முடியும்படி மாறுவது. மக்கள் அனுபவத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்து, அதன்பின் சில உபத்திரவங்கள், சுத்திகரிப்புகளுக்கு உட்பட்டு, இறுதியாக தேவனுடைய சித்தத்தையும் சில சத்தியங்களையும் புரிந்துகொள்ளும்போது, அப்போது அவர்கள் ஓரளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள், சத்தியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட தயாராக இருப்பார்கள். ஆரம்பத்தில், மக்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்க தயங்குகிறார்கள். ஒருவரின் கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: உன் கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் தேவனுக்கு அர்ப்பணிப்பது பற்றி உனக்கு கொஞ்சம் புரிதல் உள்ளது, மேலும் சத்தியங்களைக் குறித்த கொஞ்சம் புரிதலும் உனக்கு இருக்கிறது, ஆனால் நீ எப்போது உன்னை தேவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்க முடியும்? பெயர் மற்றும் செயல் இரண்டிலும் உனது கடமைகளை எப்போது நிறைவேற்ற முடியும்? இதற்கு ஒரு செயல்முறை தேவைப்படும். இந்த செயல்முறையின் போது, நீ பல பாடுகளை சந்திக்க நேரிடும். சிலர் உன்னைக் கையாளகலாம், மற்றவர்கள் உன்னை விமர்சிக்கலாம். அனைவரின் கண்களும் உன் மீது நிலைத்திருக்கும், அப்போதுதான் நீ தவறு செய்கிறாய், உண்மையில் நீ மோசமாகச் செய்திருக்கிறாய், உன் கடமையை நிறைவேற்றுவதில் பக்தி இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது, மேலும் நீ கவனக்குறைவாகவோ அல்லது அசதியாகவோ இருக்கக்கூடாது என்பதை நீ உணரத் தொடங்குவாய். பரிசுத்த ஆவியானவர் உள்ளிலிருந்து உனக்கு அறிவூட்டுவார், மேலும் நீ தவறு செய்யும் போது உன்னை கடிந்துகொள்ளுகிறார். இந்த செயல்முறையின்போது, நீ உன்னைப் பற்றிய சில காரியங்களைப் புரிந்துகொள்வாய், மேலும் நீ மிகவும் பரிசுத்தமற்றவன் என்பதை அறிவாய், நீ பல தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளாய், மேலும் உன் கடமைகளை நிறைவேற்றும்போது அளவுக்கு அதிகமான ஆசைகளை வைத்திருக்கிறாய். இந்தக் காரியங்களின் சாராம்சத்தை நீ புரிந்துகொண்டவுடன், நீ தேவனிடம் ஜெபத்தில் வந்து உண்மையாக மனந்திரும்பலாம்; இந்த வழியில், நீ அந்தச் சீர்கேடான காரியங்களிலிருந்து சுத்திகரிக்கப்படலாம். இந்த வழியில், உன் சொந்த நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க நீ அடிக்கடி சத்தியத்தைத் தேடினால், நீ படிப்படியாக சரியான விசுவாசப் பாதையில் கால் வைப்பாய்; நீ உண்மையான வாழ்க்கை அனுபவங்களைப் பெறத் தொடங்குவாய், உன் சீர்கேடான மனநிலை படிப்படியாக சுத்திகரிக்கப்படத் தொடங்கும். ஒருவரின் சீர்கெட்ட மனநிலை எவ்வளவு தூய்மையாக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக அவர்களின் வாழ்க்கை மனநிலை மாறும்.

இப்போது பலரும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள் என்றாலும், சாராம்சத்தில், எத்தனை பேர் தங்கள் கடமைகளில் சிரத்தையற்று இருக்கிறார்கள்? எத்தனை பேரால் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு சத்தியத்தின் கொள்கைகளின்படி தங்கள் கடமைகளைச் செய்ய முடிகிறது? எத்தனை பேர் தங்கள் மனநிலைகள் மாறிய பிறகு தேவனுடைய தேவைகளுக்கு ஏற்ப தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள்? இந்த விஷயங்களை அதிகமாய் ஆராய்வதன் மூலம், நீ உன் கடமையை நிறைவேற்றுவதில் உண்மையிலேயே தரமானவனா என்பதை உன்னால் அறிந்து கொள்ள முடியும், மேலும் உன் மனநிலை மாறி உள்ளதா என்பதையும் உன்னால் தெளிவாகக் காண முடியும். ஒருவர் மனநிலையில் மறுரூபத்தை அடைவது என்பது ஓர் எளிய விஷயம் அல்ல; அதற்கான அர்த்தமானது, நடத்தையில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டிருப்பது, சத்தியத்தைப் பற்றிய கொஞ்சம் அறிவைப் பெறுவது, சத்தியத்தின் ஒவ்வொரு அம்சங்களைக் கொண்டும் ஒருவரின் அனுபவத்தை பற்றி கொஞ்சம் பேசமுடிவது, அல்லது சில மாற்றங்களைக் கொண்டிருப்பது அல்லது தண்டித்துத் திருத்தப்பட்ட பிறகு கொஞ்சம் கீழ்ப்படிவது என்பது அல்ல. இந்த விஷயங்கள் ஒருவரின் ஜீவிதத்தின் மனநிலையையில் மறுரூபத்தை உண்டாக்காது. இதை நான் ஏன் சொல்கிறேன்? நீ ஓரளவு மாறியிருந்தாலும், நீ இன்னும் சத்தியத்தை உண்மையாக நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. ஒருவேளை நீ தற்காலிகமாக பொருத்தமான சூழலில் இருந்தாலும், மற்றும் சூழ்நிலை அதை அனுமதித்தாலும் அல்லது உனது தற்போதைய சூழ்நிலைகள் உன்னைக் கட்டாயப்படுத்தியதாலும், நீ இவ்வாறு நடந்து கொள்கிறாய். கூடுதலாக, நீ நல்ல மனநிலையில் இருக்கும்போது, உன் நிலை இயல்பாக இருக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியை உனக்கு இருக்கும்போது, நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் நீ ஒரு உபத்திரவத்தின் மத்தியில் இருக்கிறாய், உன் உபத்திரவங்களுக்கு மத்தியில் யோபுவைப் போல நீ துன்பப்படுகிறாய், அல்லது மரணத்தின் உபத்திரவத்தை எதிர்கொள்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். இது வரும்போது, உன்னால் அப்போதும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா, சாட்சியில் உறுதியாக நிற்க முடியுமா? பேதுரு சொன்னது போல, “உம்மை அறிந்த பிறகு நான் மரிக்க வேண்டுமானாலும், நான் அதை எப்படி மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் செய்ய முடியாமல் இருக்கும்?” என்று உன்னால் சொல்ல முடியுமா? பேதுரு எதை உயர்வாக மதித்தான்? பேதுரு கீழ்ப்படிதலை உயர்வாக மதித்தான், மேலும் தேவனை அறிந்து கொள்வதை மிக முக்கியமான விஷயமாக அவன் கருதினான், அதனால் மரணம் வரை அவனால் கீழ்ப்படிய முடிந்தது. மனநிலையில் மாற்றம் என்பது ஒரே இரவில் நிகழ்ந்து விடாது; அதை அடைய வாழ்நாள் முழுவதுமான அனுபவம் தேவை. சத்தியத்தைப் புரிந்து கொள்வது சற்று எளிதானது, ஆனால் பல்வேறு சூழல்களில் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது கடினமானது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் ஜனங்கள் ஏன் எப்போதும் சிரமப்படுகிறார்கள்? உண்மையில், இந்தச் சிரமங்கள் அனைத்தும் ஜனங்களின் சீர்கேடான மனநிலைகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை ஆகும், மேலும் அவை அனைத்தும் சீர்கேடான மனநிலைகளில் இருந்து வரும் தடைகளாகும். எனவே, சத்தியத்தைக் கடைப்பிடிக்க நீங்கள் மிகவும் துன்பப்பட வேண்டும் மற்றும் விலைக்கிரயம் செலுத்த வேண்டும். உங்களிடம் சீர்கெட்ட மனநிலைகள் இல்லாவிட்டால், நீங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்க துன்பப்படவும் விலைக்கிரயம் செலுத்தவும் வேண்டியதில்லை. இது ஒரு வெளிப்படையான உண்மையல்லவா? சில நேரங்களில் நீ சத்தியத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது போல் தோன்றலாம், ஆனால் உண்மையில், உன் செயல்களின் இயல்பு நீ அவ்வாறு செய்கிறாய் என்பதைக் காட்டாது. பல மக்கள் தங்கள் குடும்பங்களையும், தனித்திறப்பணியையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் கடமைகளை நிறைவேற்றுவது போன்ற சில வெளிப்புற நடத்தைகளைக் கொண்டுள்ளனர், எனவே அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறதாக அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறதாகத் தேவன் அங்கீகரிக்கவில்லை. நீங்கள் செய்யும் காரியங்களுக்குப் பின்னால் ஒரு தனிப்பட்ட நோக்கம் இருந்தால், அது கலப்படமானதாக இருந்தால், அப்போது நீங்கள் கொள்கைகளில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பிருக்கிறது, மேலும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூற முடியாது; இது ஒரு வகையான நடத்தை மட்டுமே. கண்டிப்பாகச் சொல்வதானால், அநேகமாக உனது நடத்தை தேவனால் கண்டிக்கப்படும்; அது அவரால் புகழப்படவோ, நினைவில் வைக்கப்படவோ மாட்டாது. இதை மேலும் நுட்பமாக ஆய்வு செய்யும்போது, நீ தீமை செய்கிறாய், உனது நடத்தை தேவனுக்கு எதிராக உள்ளது. வெளிப்புறத்திலிருந்து, நீ எதிலும் குறுக்கிடவில்லை அல்லது எதனையும் தொந்தரவு செய்யவில்லை, மேலும் நீ உண்மையான சேதத்தைச் ஏற்படுத்தவில்லை அல்லது எந்தச் சத்தியத்தையும் மீறவில்லை. இது பொருத்தமுடையதாகவும் நியாயமானதாகவும் தோன்றுகிறது, ஆனாலும் உனது செயல்களின் சாராம்சம் தீங்கு செய்வது மற்றும் தேவனை எதிர்ப்பதோடு தொடர்புடையதாயிருக்கிறது. ஆகையால், உனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதையும், தேவனின் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் உனது செயல்களின் பின்னால் உள்ள நோக்கங்களைப் பார்த்தும் சத்தியத்தைக் கடைபிடிக்கிறாயா என்பதையும் நீ தீர்மானிக்க வேண்டும். உனது செயல்கள் மனிதக் கற்பனைகள் மற்றும் மனித நோக்கங்களுடன் ஒத்துப்போகின்றனவா, அல்லது அவை உனது விருப்பத்திற்கு ஏற்றவையா என்பதைப் பற்றிய மனித பார்வையை பொறுத்தது அல்ல; அத்தகைய விஷயங்கள் முக்கியமல்ல. மாறாக, அது, நீ அவருடைய விருப்பத்திற்கு இணங்குகிறாயா இல்லையா, உனது செயல்கள் சத்தியத்தின் யதார்த்தத்தைக் கொண்டுள்ளனவா இல்லையா, மேலும் அவை அவருடைய தேவைகளையும் தரங்களையும் பூர்த்தி செய்கின்றனவா இல்லையா என்பதைப் பற்றி தேவன் சொல்வதைப் பொறுத்ததாகும். தேவனின் தேவைகளுடன் எதிராக உன்னை அளவிடுவது மட்டுமே சரியானது. மனநிலையையில் மறுரூபம் மற்றும் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது மக்கள் கற்பனை செய்வது போல் அவ்வளவு எளிமையானது அல்ல. இதை நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்களா? இதில் உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கிறதா? ஒரு பிரச்சனையின் சாராம்சத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்; நீங்கள் அதற்குள் செல்வது அதீத மேலோட்டமாக இருந்துள்ளது. நீங்கள் நாள் முழுவதும், விடியற்காலை முதல் சாயங்காலம் வரை, பல காரியங்களில் அலுவலாக இருந்து, அதிகாலையில் எழுந்து தாமதமாக படுக்கைக்குச் செல்கிறீர்கள், ஆனாலும் உங்கள் ஜீவிதத்தின் மனநிலையில் மறுரூபத்தை நீங்கள் அடையவில்லை, அத்தகைய மறுரூபம் எதை உள்ளடக்கியுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை. அப்படியானால் பிரவேசம் மிகவும் மேலோட்டமானது என்று தானே அர்த்தம்? நீங்கள் தேவனை எவ்வளவு காலம் விசுவாசித்தாலும், மனநிலையையில் மறுரூபமடைவதில் அடைய வேண்டிய சாரத்தையும், ஆழமான விஷயங்களையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். உங்கள் மனநிலை மாறிவிட்டது என்று சொல்ல முடியுமா? தேவன் உன்னைப் பாராட்டுகிறாரா இல்லையா என்பது உனக்கு எப்படித் தெரியும்? குறைந்தபட்சம், நீ செய்யும் எல்லாவற்றிலும் நீ மிகவும் உறுதியாக உணர்வாய், மேலும் நீ உனது கடைமைகளை நிறைவேற்றும் போதும், தேவனுடைய வீட்டில் அல்லது பொதுவாக எந்த வேலையும் செய்யும் போதும், பரிசுத்த ஆவியானவர் உன்னை வழிநடத்துவதையும் அறிவூட்டுவதையும் மற்றும் உன்னில் கிரியைச் செய்வதையும் உணர்வாய். உன் நடத்தை தேவனுடைய வார்த்தைகளுடன் கைகோர்க்கும், மற்றும் நீ ஒரு குறிப்பிட்ட அளவு அனுபவத்தைப் பெற்றவுடன், நீ கடந்த காலத்தில் எப்படிச் செயல்பட்டாய் என்பது பெரிதும் பொருத்தமாக இருந்தது என்று உணருவாய். எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனுபவத்தைப் பெற்ற பிறகு, நீ கடந்த காலத்தில் செய்த சில விஷயங்கள் பொருத்தமாக இல்லை என்று நீ உணர்ந்தால், நீ அவைகள் மீது அதிருப்தி அடைந்து, மேலும் நீங்கள் செய்த காரியங்கள் சத்தியத்திற்குப் பொருந்தவில்லை என்று உணர்ந்தால், நீ செய்த காரியங்களில், நீ செய்த அனைத்தும் தேவனுக்கு எதிர்ப்பாக செய்யப்பட்டது என்பதை இது நிரூபிக்கிறது. உன் ஊழியம் கலகம், எதிர்ப்பு மற்றும் மனித செயல்பாட்டு வழிகள் நிறைந்ததாக இருந்தது மற்றும் நீ மனநிலையில் மாற்றங்களை அடைய முற்றிலும் தவறிவிட்டாய் என்பதற்கான சான்றாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவரின் மனநிலையை மறுரூபப்படுத்துவதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை என்ன” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 384

ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியுமா முடியாதா என்பதை அளவிடுவதில், பார்க்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்கள் தேவனிடமிருந்து ஆடம்பரமான எதையும் விரும்புகிறார்களா, மற்றும் அவர்களுக்கு மறைவான உள் நோக்கங்கள் இருக்கிறதா இல்லையா என்பதுதான். ஜனங்கள் எப்போதும் தேவனிடத்தில் கோரிக்கைகளை வைத்துக்கொண்டிருந்தால், அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை என்பதை அது நிரூபிக்கிறது. உனக்கு என்ன நடந்தாலும், நீ அதைத் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், சத்தியத்தைத் தேட முடியாவிட்டால், எப்போதும் உன் சொந்த அகநிலை பகுத்தறிவிலிருந்து பேசிக்கொண்டு, நீ மட்டுமே சரி என்று எப்போதும்எண்ணிக்கொண்டிருந்தால், மேலும் தேவனே சத்தியமும் நீதியும் என்பதை சந்தேகிக்கக்கூட திறமை உனக்கு இருக்கிறது என்றால், அப்பொழுது நீ சிக்கலில் இருப்பாய். அத்தகையவர்கள் மிகுந்த கர்வமுள்ளவர்களாயும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாயும் இருக்கிறார்கள். எப்போதும் தேவனிடம் கோரிக்கைகளை வைக்கும் ஜனங்கள் அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிய முடியாது. நீ தேவனிடத்தில் கோரிக்கைகளை வைத்தால், நீ தேவனுடன் ஓர் ஒப்பந்தம் செய்கிறாய் என்பதையும், நீ உன் சொந்த எண்ணங்களைத் தெரிந்தெடுத்து, உன் சொந்த எண்ணங்களின்படி செயல்படுகிறாய் என்பதையும் இது நிரூபிக்கிறது. இதில், நீ தேவனுக்குத் துரோகம் பண்ணுகிறாய், கீழ்ப்படிதல் இல்லாமல் இருக்கிறாய். தேவனிடம் கோரிக்கைகளை வைப்பது அர்த்தமற்றது; அவர் தேவன் என்று நீ உண்மையாக விசுவாசித்தால், நீ அவரிடம் கோரிக்கைகளை வைக்கத் துணிய மாட்டாய், அவை நியாயமானவைகளாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரிடம் கோரிக்கைகளை வைக்கவும் நீ தகுதி பெறமாட்டாய். உனக்கு தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் இருந்து, அவர் தேவன் என்று நம்புவாயானால், அவரை ஆராதித்து அவருக்குக் கீழ்ப்படிவதைத் தவிர உனக்கு வேறு தெரிவு இருக்காது. இன்று ஜனங்கள் தங்கள் சொந்தத் தேர்வை மட்டுமே செய்வதோடு அல்லாமல், தங்கள் சொந்த விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று தேவனைக் கேட்கிறார்கள். தேவனுக்குக் கீழ்ப்படிவதை அவர்கள் தேர்ந்தெடுக்காமல் இருப்பதோடு, அவர்களுக்குக் கீழ்ப்படியுமாறு தேவனிடத்தில் கேட்கிறார்கள். இது பகுத்தறிவற்றது அல்லவா? எனவே, மனுஷனிடம் உண்மையான நம்பிக்கையும் போதுமான அளவுக்கு விசுவாசமும் இல்லை என்றால், அவர்களால் தேவனுடைய புகழ்ச்சியை ஒருபோதும் பெற முடியாது. ஜனங்களால் தேவனிடம் குறைந்தபட்ச கோரிக்கைகளை வைக்க இயலும்போது, அவர்களுடைய உண்மையான விசுவாசமும் அவர்களுடைய கீழ்ப்படிதலும் வளரும், மேலும் அவர்களுடைய பகுத்தறிவு உணர்வும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சாதாரணமாகிவிடும். ஜனங்கள் எவ்வளவு அதிகமாகப் பகுத்தறிவைச் சார்ந்திருக்கிறார்களோ, அவர்கள் எவ்வளவு அதிகமாக நியாயப்படுத்துதலை அளிக்கிறார்களோ, அவர்களைக் கையாளுவது அவ்வளவு அதிகமாகக் கடினமானது என்பதுதான் பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களிடம் பல கோரிக்கைகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஓர் அங்குலத்தை அவர்களுக்கு அளிக்கும்போது அவர்கள் ஒரு மைலையும் சேர்த்து எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு பகுதியில் அவர்கள் திருப்தி அடைந்த பின் அவர்கள் இன்னொரு பகுதியில் கோரிக்கைகளை வைப்பார்கள். அவர்களை எல்லாப் பகுதிகளிலும் திருப்திப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் புகார் செய்யத் தொடங்கி, நம்பிக்கையில்லாதவர்கள் என்று தங்களுக்குத் தாங்களே எழுதிக் கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் கடன்பட்டவர்களாகவும் வருந்தத்தக்கவர்களாகவும் உணர்கின்றனர், மேலும் அவர்கள் விம்மி அழுது, சாக விரும்புகிறார்கள். இதில் என்ன பயன் இருக்கிறது? இது பகுத்தறிவில்லாதது அல்லவா? இந்தத் தொடர் பிரச்சினைகள் வேரில் இருந்து தீர்க்கப்பட வேண்டும். உங்களுக்கு ஒரு சீர்கேடான மனநிலை இருந்து, அதைத் தீர்க்காவிட்டால், அதைத் தீர்க்க நீங்கள் ஓர் உபத்திரவத்தில் விழவேண்டும் அல்லது பேரிடர் நிகழவேண்டும் என்று காத்திருந்தால், இந்த இழப்பை உங்களால் எப்படி ஈடுகட்ட முடியும்? இது நடந்த பின் ஏற்படும் ஒரு சிந்தனை அல்லவா? ஆகவே, ஒரு சீர்கேடான மனநிலைப் பிரச்சினையை முற்றிலுமாகத் தீர்க்க, அது எழும்போதே அதைத் தீர்க்க சத்தியத்தை நீங்கள் தேடவேண்டும். சீர்கேடான மனநிலையை முளைவிடும்போதே நீங்கள் தீர்க்கவேண்டும். இதனால் ஒரு தவறு நிகழாமல் இருப்பதை உறுதிசெய்து எதிர்கால உபத்திரவங்களையும் தடுக்கலாம். ஒரு சீர்கேடான மனநிலை வேர்விட்டு ஒருவரின் சிந்தனை அல்லது கருத்தாக மாறினால், அது ஒருவரை தீமைக்கு நேராக வழிநடத்தும். ஆகவே, சுயசிந்தனை மற்றும் சுய அறிவு ஆகியவற்றின் முக்கிய நோக்கம் என்னவென்றால், சீர்கேடான மனநிலையைக் கண்டுபிடித்து, உடனடியாக அதைத் தீர்க்க சத்தியத்தைத் தேடுவதுதான். உங்கள் சுபாவத்தில் இருக்கும் விஷயங்கள் என்ன, நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதைத் தேடுகிறீர்கள், மேலும் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை எல்லாம் நீங்கள் அறிய வேண்டும். இவை தேவனுடைய சித்தத்துக்கு ஏற்ப இருக்கின்றனவா என்பதைப் பார்க்க நீங்கள் இந்த விஷயங்களை தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப பகுத்தறிய வேண்டும், இவை ஏன் தவறானவை என்று பார்க்க வேண்டும். இந்த விஷயங்களைப் புரிந்துகொண்டவுடன் பகுத்தறிவுக்கு முரணான பிரச்சினையை, அதாவது, பகுத்தறிவின்மையின் பிரச்சினையை நீங்கள் தீர்க்க வேண்டும். இது சீர்கேடான மனநிலையின் பிரச்சினை மட்டுமல்லாமல் பகுத்தறிவு இல்லாமையும் கூட. குறிப்பாக மக்களின் ஆர்வங்களைப் பொறுத்தவரையில், அதிகப்படியான ஆர்வங்களால் மூழ்கடிக்கப்படுபவர்கள் பகுத்தறிவற்றவர்களாக மாறலாம். இது ஒரு மனநலப் பிரச்சினை, மேலும் இது மக்களின் பலவீனம் ஆகும். சிலர் தங்களுக்குக் குறிப்பிட்ட செயல்திறனும் வரங்களும் இருப்பதாக உணர்கிறார்கள், மேலும் அவர்கள் எப்போதும் தலைவர்களாகித் தனித்து நிற்க விரும்புகிறார்கள். ஆகவே தங்களைப் பயன்படுத்துமாறு தேவனிடம் கேட்கிறார்கள். தேவன் அவர்களைப் பயன்படுத்தாதபோது அவர்கள் கூறுகிறார்கள், “தேவன் எப்படி எனக்குச் சகாயம் பண்ணாமல் இருக்கலாம்? தேவனே முக்கியமான ஏதோ ஒன்றைச் செய்ய என்னை நீர் பயன்படுத்தினால், நான் உமக்காக என்னை ஒப்புக்கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.” இந்த வகையான நோக்கம் சரியானதா? தேவனுக்காக ஒப்புக்கொடுப்பது ஒரு நல்ல காரியம்தான், ஆனால் தேவனுக்காக ஒப்புக்கொடுக்கும் அவர்களுடைய விருப்பத்தின் பின்னால் உள்நோக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் உண்மையில் நேசிப்பது அந்தஸ்தையே, மேலும் அதற்காகவே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். ஜனங்கள் உண்மையிலேயே கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருந்தால், தேவன் அவர்களைப் பயன்படுத்துகிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்களால் தேவனை முழுமனதோடு பின்பற்ற முடியும், மேலும் அவர்களுக்கு அந்தஸ்து இருக்கிறதா இல்லையா என்பதைக் கருதாமல் தேவனுக்கு அவர்களால் ஒப்புக்கொடுக்க முடியும். இந்த ஜனங்களை மட்டுமே பகுத்தறிவுள்ளவர்களாகவும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் கருதமுடியும். ஜனங்கள் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க விருப்பமாய் இருப்பது நல்லதுதான், மேலும் அத்தகைய மக்களை தேவனும் பயன்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார், ஆனால் அவர்களிடம் சத்தியம் இல்லை என்றால் தேவன் அவர்களைப் பயன்படுத்த எந்த வழியும் இல்லை. ஜனங்கள் சத்தியத்தைக் குறித்து முயற்சி செய்து ஒத்துழைக்க விரும்பினால், ஓர் ஆயத்தநிலை இருக்க வேண்டும். ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிந்த பின்னர்தான் தேவனால் அவர்களை அதிகாரபூர்வமாக பயன்படுத்த முடியும். நடைமுறையின் இந்த நிலை தவிர்க்கமுடியாதது. அனைத்து தலைவர்களும் ஊழியர்களும் இன்று நடைமுறையின் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜீவித அனுபவம் கிடைத்து கொள்கைப்படி செயலாற்ற முடியும்போது அவர்கள் தேவனால் பயன்படுத்தப்பட தகுதியுள்ளவர்களாக இருப்பார்கள்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஜனங்கள் தேவனிடம் அநேக கோரிக்கைகளை வைக்கிறார்கள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 385

ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிக்கு சிருஷ்டிகரிடம் இருக்க வேண்டிய ஒரே மனப்பான்மை கீழ்ப்படிதல் ஆகும், நிபந்தனையற்ற கீழ்ப்படிதல் ஆகும். இது இன்றைய ஜனங்கள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனென்றால் மனிதனின் வளர்ச்சி மிகவும் சிறியது மற்றும் அவர்கள் சத்தியத்தின் யதார்த்தம் இல்லாமல் இருக்கிறார்கள். தேவன் உன் கருத்துகளுக்கு முரணான விஷயங்களைச் செய்யும்போது, நீ தேவனைத் தவறாகப் புரிந்து கொள்ள, தேவனுக்குக் கீழ்ப்படியாமல், அவரைப் புறக்கணிக்கக் கூட வாய்ப்பிருந்தால், அப்போது நீ தேவனுக்குக் கீழ்ப்படிய முடிவதிலிருந்து தூரமாய் இருக்கிறாய். மனிதன் தேவனுடைய வார்த்தையால் வழங்கப்பட்டு, நீர்ப்பாய்ச்சப்படுகையில், மனிதன் உண்மையில் ஒரே ஒரு குறிக்கோளுக்காகவே பாடுபடுகிறான், அது இறுதியில் தேவனுக்கு நிபந்தனையற்ற, முழுமையான கீழ்ப்படிதலை அடைய முடிவதைத்தான், அந்தக் கட்டத்தில், இந்தச் சிருஷ்டிப்பான நீ, தேவையான தரத்தை அடைந்திருப்பாய். சில சமயங்களில் தேவன் வேண்டுமென்றே உன் கருத்துகளுக்கு முரணான விஷயங்களைச் செய்கிறார், மேலும் வேண்டுமென்றே உன் விருப்பங்களுக்கு எதிரான விஷயங்களைச் செய்கிறார், அது சத்தியத்துக்கும் மனித உணர்வுகளுக்கும் முரணாக தோன்றக்கூடிய காரியங்களாக இருக்கின்றன, உன்னைப் புண்படுத்தும் காரியங்களாக இருக்கின்றன; இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்வது உனக்குக் கடினமாக இருக்கும், நீ அவற்றை எப்படிப் பகுப்பாய்வு செய்தாலும், உன்னால் ஒருவேளை அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம், அவை உனக்குத் தவறாக தெரியலாம், மேலும் அவற்றை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம், மேலும் தேவன் இதைச் செய்வது நியாயமற்றது என்று நீ நினைக்கலாம், ஆனால் உண்மையில், தேவன் இதை வேண்டுமென்றே தான் செய்தார். அப்படியானால் இவற்றைச் செய்வதில் தேவனுடைய நோக்கம் என்ன? அது உன்னைச் சோதித்து அம்பலப்படுத்துவதாகும், உன்னால் சத்தியத்தைத் தேட முடிகிறதா இல்லையா, உன்னிடம் தேவனுக்கான உண்மையான கீழ்ப்படிதல் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்ப்பதாகும். தேவன் செய்கிற கேட்கிற எல்லாவற்றுக்கும் அடிப்படையைத் தேடாதே, ஏன் என்று கேட்காதே. தேவனுடன் விவாதிக்க முயற்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை. தேவன் தான் சத்தியம் என்பதை மட்டும் நீ உணர்ந்து முழுமையாகக் கீழ்ப்படியும் திறன் கொண்டவனாக இருக்க வேண்டும். தேவன் தான் உன் சிருஷ்டிகர் மற்றும் உன் தேவன் என்பதை நீ அங்கீகரிக்க மட்டும் வேண்டும். இது எந்தப் பகுத்தறிவை விடவும், எந்த மனித உணர்வுகளை விடவும், எந்த மனித ஒழுக்கம், நெறிமுறைகள், நிபுணத்துவம், தத்துவம் அல்லது பாரம்பரிய கலாச்சாரத்தை விடவும் உயர்ந்ததாகும், மனித உணர்வுகள், மனித நீதி மற்றும் மனித அன்பு என்று சொல்லப்படுகிறதை விட உயர்ந்ததாகும். அது எல்லாவற்றையும் விட உயர்ந்ததாகும். இது உனக்கு தெளிவாகத் தெரியவில்லை என்றால், உனக்கு ஏதாவது நேர்ந்தால், நீ விழக்கூடிய ஒரு நாள் ஒன்று விரைவில் வரும். குறைந்தபட்சம், நீ தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து மாறுபட்ட பாதையில் நடப்பாய்; உன்னால் இறுதியில் மனந்திரும்பி, தேவனுடைய தயவை அடையாளங்கண்டு, உன்னிலுள்ள தேவனுடைய கிரியையின் முக்கியத்துவத்தை அடையாளங்காண முடிந்தால், அப்போது உனக்கு இரட்சிப்பின் நம்பிக்கை இன்னும் இருக்கும், ஆனால் இந்த விஷயத்தால் நீ விழுந்து மீண்டும் முன்னேற முடியாமல் போனால், உனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. தேவன் ஜனங்களை நியாயந்தீர்த்தாலும், சிட்சித்தாலும் அல்லது சபித்தாலும், இவை அனைத்தும் அவர்களை இரட்சிப்பதற்காகவே, அவர்கள் பயப்படத் தேவையில்லை. நீ எதற்கு பயப்பட வேண்டும்? “நான் உன்னை வெறுத்து நிராகரிக்கிறேன்” என்று தேவன் கூறுவதற்கு நீ பயப்பட வேண்டும். தேவன் இதைச் சொன்னால், நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள்: இதன் பொருள் தேவன் உங்களை இரட்சிக்க மாட்டார், உங்களுக்கு இரட்சிப்பின் நம்பிக்கை இல்லை என்பதாகும். எனவே தேவனுடைய கிரியையை ஏற்றுக் கொள்வதில், ஜனங்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் தேவனுடைய வார்த்தைகள் என்று வரும்போது, “நியாயத்தீர்ப்பும் சிட்சையும் சரிதான், ஆனால் ஆக்கினைத்தீர்ப்பு, சாபம், அழிவு ஆகிய இவை, எனக்கு எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தப்படுத்துகிறது அல்லவா? தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியாக இருப்பதன் பயன் என்ன? எனவே நான் அப்படி இருக்கப் போவதில்லை, நீர் இனிமேல் என் தேவனாக இருக்க மாட்டீர்” என்று சொல்லிக் கொண்டு சிறிய விஷயங்களில் குற்றம் கண்டுபிடிக்காதீர்கள். நீ தேவனை நிராகரித்து, உன் சாட்சியில் உறுதியாக நிற்கவில்லை என்றால், அப்போது தேவன் உண்மையிலேயே உன்னை நிராகரிக்கலாம். இது உங்களுக்குத் தெரியுமா? ஜனங்கள் எவ்வளவு காலம் தேவனை விசுவாசித்தாலும், எத்தனை சாலைகளில் பயணம் செய்திருந்தாலும், அவர்கள் எவ்வளவு வேலைகளைச் செய்திருந்தாலும், அல்லது எத்தனை கடமைகளை அவர்கள் செய்திருந்தாலும், இந்தக் காலத்தில் அவர்கள் செய்ததெல்லாம் ஒரு காரியத்திற்கான தயாரிப்பிலேயே உள்ளன. அது என்ன? அவர்கள் இறுதியில் தேவனுக்கு முழுமையான கீழ்ப்படிதல், நிபந்தனையற்ற கீழ்ப்படிதலைக் கொண்டிருக்க ஆயத்தப்பட்டு வருகின்றனர். “நிபந்தனையற்ற” என்றால் என்ன? இதன் பொருள் நீ எந்த நியாயப்படுத்தலையும் செய்வதில்லை, மேலும் உன் சொந்த புறநிலை காரணங்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை என்பதாகும், அதாவது நீ முக்கியமற்ற காரியங்களுக்காக விவாதிப்பதில்லை என்று அர்த்தமாகும்; நீ தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சிருஷ்டி, நீ இதற்குத் தகுதியானவன் அல்ல. நீ தேவனுடன் அற்பமான காரியங்களைக் குறித்து விவாதித்தால், நீ உன் நிலையைத் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய், மேலும் நீ தேவனிடம் நியாயப்படுத்த முயற்சிக்கும் போது, மீண்டும், உன் நிலையை நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். தேவனுடன் வாதிடாதீர்கள், எப்போதும் காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள், நீங்கள் கீழ்ப்படிவதற்கு முன்பு புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மேலும் புரியாத போது கீழ்ப்படியாமல் இருப்பதை வலியுறுத்தாதீர்கள். நீ இதைச் செய்யும்போது, நீ உன் நிலையைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய், இந்த விஷயத்தில் நீ தேவனுக்குக் கீழ்படிவது முழுமையானது அல்ல; அது இணையான மற்றும் நிபந்தனையுள்ள கீழ்ப்படிதல் ஆகும். தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு நிபந்தனைகளை ஏற்படுத்துபவர்கள் தேவனுக்கு உண்மையாகக் கீழ்படிகிறவர்களா? நீ தேவனை தேவனாக நடத்துகிறாயா? நீ தேவனை சிருஷ்டிகராக ஆராதிக்கிறாயா? நீ அப்படி செய்யவில்லை என்றால், அப்போது தேவன் உன்னை அங்கீகரிப்பதில்லை. தேவனிடம் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற கீழ்படிதலை அடைய நீ எதை அனுபவித்துணர வேண்டும்? நீ எப்படி அனுபவித்துணர வேண்டும்? ஒரு காரணம் என்னவென்றால், ஜனங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்கள் கிளைநறுக்கப்படுவதையும் கையாளப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவை தவிர, அவர்கள் தேவனுடைய கட்டளையை ஏற்றுக் கொள்ள வேண்டும், அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது சத்தியத்தைப் பின்தொடர வேண்டும், அவர்கள் ஜீவப்பிரவேசத்துடன் தொடர்புடைய சத்தியத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் தேவனுடைய சித்தத்தைப் பற்றிய புரிதலை அடைய வேண்டும். சில நேரங்களில் இது ஜனங்களின் திறமைக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது, மேலும் அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்வதற்கான புரிந்து கொள்ளும் ஆற்றல்களைக் கொண்டிருக்கவில்லை, மற்றவர்கள் அவர்களுடன் ஐக்கியம் கொள்ளும்போது அல்லது தேவனால் உருவாக்கப்பட்ட பல்வேறு சூழ்நிலைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் கொஞ்சமாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆனால் நீ தேவனுக்குக் கீழ்ப்படியும் இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், நீ தேவனுடன் வாதிடவோ அல்லது நிபந்தனைகளை வைக்கவோ முயற்சிக்கக் கூடாது; தேவன் செய்கிற அனைத்தும் செய்யப்பட வேண்டியவை ஆகும், ஏனென்றால் அவர் சிருஷ்டிகர்; நீ தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சிருஷ்டி, கீழ்ப்படியும் மனப்பான்மை உனக்கு இருக்க வேண்டும், மேலும் எப்போதும் காரணத்தைக் கேட்கவோ அல்லது நிபந்தனைகளைப் பற்றிப் பேசவோ கூடாது. நீ கீழ்ப்படிதல் என்ற அடிப்படை மனப்பான்மை கூட இல்லாமல், தேவனைச் சந்தேகிக்கவும், அவரைக் குறித்து முழு நிச்சயமற்றும் இருந்தால், அல்லது உன் இருதயத்தில், “தேவன் என்னை இரட்சிக்கப் போகிறாரா இல்லையா, தேவன் உண்மையில் நீதி உள்ளவரா இல்லையா என்பதை நான் பார்க்க வேண்டும். தேவனே அன்பு என்று எல்லோரும் சொல்கிறார்கள், நல்லது, அப்படியானால் தேவன் என்னில் என்ன செய்கிறார் என்பதில் உண்மையில் அன்பு இருக்கிறதா, அது உண்மையிலேயே அன்பு தானா என்று நான் பார்க்க வேண்டும்” என்று எண்ணினால், மேலும் தேவன் செய்வது உன் கருத்துகளுடனும் விருப்பங்களுடனும் ஒத்துப் போகிறதா என்றும் அல்லது நீ சத்தியம் என்று நம்புகிறதைக் கூட எப்போதும் நீ ஆராய்ந்தால், அப்போது நீ உன் நிலையை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய், நீ சிக்கலில் இருக்கிறாய்: நீ தேவனுடைய மனநிலையைப் புண்படுத்த வாய்ப்புள்ளது. கீழ்படிதலுடன் தொடர்புடைய சத்தியங்கள் முக்கியமானவை, மேலும் எந்தச் சத்தியத்தையும் ஓரிரு வாக்கியங்களில் முழுமையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்த முடியாது; அவை அனைத்தும் ஜனங்களின் பல்வேறு நிலைகள் மற்றும் சீர்கேட்டுடன் தொடர்புடையவை ஆகும். சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதை ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று அல்லது ஐந்து வருடங்களிலோ அடைய முடியாது. அதற்குப் பல விஷயங்களை அனுபவித்துணர்வது, தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை அதிகம் அனுபவிப்பது, கிளை நறுக்குதல் மற்றும் கையாளுதலை அதிகமாய் அனுபவிப்பது, இறுதியில் சத்தியத்தைக் கடைபிடிக்கும் திறனை அடைவது ஆகியவை தேவைப்படுகிறது. அப்போது தான் சத்தியத்தைப் பின்தொடர்வது பயனுள்ளதாக இருக்கும், மேலும் அப்போதுதான் சத்தியத்தின் யதார்த்தத்தை ஜனங்கள் கொண்டிருப்பார்கள். சத்தியத்தின் யதார்த்தத்தைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே உண்மையான அனுபவம் உள்ளவர்களாவர்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 386

தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் காலத்தில், நீ எத்தனை முறை தோல்வியடைந்திருந்தாலும், கீழே விழுந்திருந்தாலும், கிளைநறுக்கப்பட்டிருந்தாலும், கையாளப்பட்டிருந்தாலும் அல்லது அம்பலப்படுத்தப்பட்டிருந்தாலும், இவை மோசமான விஷயங்கள் அல்ல. நீ எப்படிக் கிளை நறுக்கப்பட்டிருந்தாலும் அல்லது கையாளப்பட்டிருந்தாலும், அல்லது அது தலைவர்கள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ அல்லது உன் சகோதர சகோதரிகள் மூலமாகவோ இருந்தாலும், இவை அனைத்தும் நல்ல விஷயங்களாகும். இதை நீ நினைவில் கொள்ள வேண்டும்: நீ எவ்வளவு பாடுபட்டாலும் பரவாயில்லை, நீ உண்மையிலேயே பயனடைந்துகொண்டிருக்கிறாய். அனுபவம் உள்ள எவராலும் இதை உறுதிப்படுத்த முடியும். எது எப்படியோ, கிளைநறுக்கப்படுவது, கையாளப்படுவது அல்லது அம்பலப்படுத்தப்படுவது என்பது எப்போதுமே ஒரு நல்ல விஷயமாகும். இது கண்டனம் செய்வது அல்ல. இது தேவனுடைய இரட்சிப்பும், உன்னையே நீ அறிந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்புமாகும். இது உன் வாழ்க்கை அனுபவத்தை மாற்றியமைக்கும். இது இல்லாமல், உன்னுடைய சீர்கேட்டைப் பற்றிய உண்மையைக் குறித்த புரிதலை அடைவதற்கான வாய்ப்போ, நிலைமையோ அல்லது சூழலோ உனக்கு இருக்காது. நீ உண்மையாகவே சத்தியத்தைப் புரிந்துகொண்டு, உன்னுடைய இருதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் சீர்கேடான காரியங்களை வெளிக்கொணர முடிந்தால், உன்னால் அவற்றைத் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க முடிந்தால், அப்போது இது நல்லது, இது ஜீவனுக்குள் பிரவேசிப்பதில் உள்ள ஒரு பெரிய பிரச்சனையைத் தீர்த்துள்ளது, மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு பெரும் பயனளிக்கிறது. உன்னை உண்மையாக அறிந்துகொள்ள இயலுவது உன் வழிகளைச் சரிசெய்து புதிய நபராக மாறுவதற்கு உனக்கான சிறந்த வாய்ப்பாகும்; புதிய ஜீவனைப் பெற இது உனக்கு சிறந்த வாய்ப்பாகும். உன்னையே நீ உண்மையிலேயே அறிந்தவுடன், சத்தியம் ஒருவருடைய ஜீவனாக மாறும்போது, அது உண்மையிலேயே விலையேறப்பெற்ற ஒரு காரியம் என்பதை உன்னால் பார்க்க முடியும், மேலும் நீ சத்தியத்தின் மீது தாகம்கொள்வாய், சத்தியத்தைக் கைக்கொள்ளுவாய், மற்றும் அதன் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பாய். இது ஒரு மிகப் பெரிய விஷயம்! நீ இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உன்னைக் குறித்து வாஞ்சையோடு ஆராய்ந்து பார்த்து, நீ தோல்வியடையும் போதெல்லாம் அல்லது கீழே விழும்போதெல்லாம் உன்னைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற முடிந்தால், அப்போது எதிர்மறையானவை மற்றும் பலவீனத்தின் மத்தியில், உன்னால் மறுபடியும் எழும்பி நிற்க முடியும். இந்த ஆரம்பக் கட்டத்தை நீ கடந்துவிட்டால், பிறகு உன்னால் ஒரு பெரிய அடியை முன்னோக்கி எடுத்து வைக்கவும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும்.

நீ தேவனுடைய ராஜரீகத்தை விசுவாசித்தால், அன்றாட நிகழ்வுகள் நல்லதோ கெட்டதோ, அது தற்செயலாக நடப்பதில்லை என்பதை விசுவாசிக்க வேண்டும். ஒருவர் வேண்டுமென்றே உன்னிடம் கடுமையாக நடந்துகொள்கிறார் என்பதோ அல்லது உன்னைக் குறிவைக்கிறார் என்பதோ அல்ல; இவை அனைத்தும் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டு திட்டமிடப்பட்டிருந்தது. தேவன் ஏன் இவற்றையெல்லாம் திட்டமிடுகிறார்? நீ யார் என்பதை உனக்கு வெளிப்படுத்துவதற்காகவோ அல்லது உன்னை அம்பலப்படுத்தி வெளியேற்றுவதற்காகவோ அல்ல; உன்னை அம்பலப்படுத்துவது இறுதி குறிக்கோள் அல்ல. உன்னைப் பரிபூரணப்படுத்தி உன்னை இரட்சிப்பதே குறிக்கோளாகும். தேவன் உன்னை எவ்வாறு பரிபூரணப்படுத்துகிறார்? அவர் உன்னை எவ்வாறு இரட்சிக்கிறார்? உன் சொந்த சீர்கெட்ட மனநிலையை உனக்குத் தெரியப்படுத்துவதன் மூலமும், மேலும் உன் சுபாவத்தையும் சாராம்சத்தையும், உன் குறைகளையும் மற்றும் உன் குறைபாடுகளையும் உன்னை அறிந்துகொள்ளச் செய்வதன் மூலமும் அவர் தொடங்குகிறார். இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வதன் மூலமும், அவற்றைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதன் மூலமும் மட்டுமே உன்னால் சத்தியத்தைப் பின்தொடர முடியும் மற்றும் படிப்படியாக உன் சீர்கெட்ட மனநிலையைக் கைவிட முடியும். இது தேவன் உனக்கு வழங்குகிற ஒரு வாய்ப்பாக இருக்கிறது. இது தேவனுடைய மனதுருக்கமாகும். இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். நீ தேவனை எதிர்க்கக்கூடாது, வாக்குவாதம் பண்ணக்கூடாது அல்லது அவரைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. குறிப்பாக, உன்னைச் சுற்றி தேவன் ஏற்பாடு செய்யும் மனுஷர்கள், விஷயங்கள் மற்றும் காரியங்களை எதிர்கொள்ளும்போது, நீ விரும்பியபடி விஷயங்கள் இல்லையே என்று தொடர்ந்து கவலைப்பட வேண்டாம்; தொடர்ந்து அவைகளிடமிருந்து தப்பிச்செல்ல விரும்பாதே அல்லது எப்போதும் தேவனைக் குறைகூறித் தவறாகப் புரிந்துகொள்ளாதே. நீ தொடர்ந்து அந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருந்தால், அப்போது நீ தேவனுடைய கிரியையை அனுபவித்துக்கொண்டிருக்கவில்லை என்று ஆகிவிடும், அது சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதை உனக்கு மிகவும் கடினமாக்கிவிடும். உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத எதை நீ சந்தித்தாலும், ஒரு பிரச்சனை ஏற்படும் போது, நீ கீழ்ப்படியக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ தேவனுக்கு முன்பாக வந்து அதிகமாக ஜெபிப்பதிலிருந்து தொடங்க வேண்டும். அவ்வாறுதான், உன்னை அறியாமலேயே, உன் உள்ளான நிலையில் ஒரு மாற்றம் ஏற்படும், மேலும் உன் பிரச்சனையைத் தீர்க்க உன்னால் சத்தியத்தைத் தேட முடியும். அதைப் போலவே, உன்னால் தேவனுடைய கிரியையை அனுபவிக்க முடியும். இது நிகழும்போது, சத்தியத்தின் யதார்த்தம் உனக்குள் உருவாக்கப்படும், மேலும் நீ இப்படித்தான் முன்னேறி, உன் வாழ்க்கை நிலையின் மறுரூபமாகுதலுக்கு உட்படுவாய். நீ இந்த மாற்றத்திற்கு உட்பட்டு, சத்தியம் குறித்த இந்த யதார்த்தத்தைப் பெற்றவுடன், நீ வளர்ச்சியடைவாய், மேலும் வளர்சியால் ஜீவன் வருகிறது. ஒருவன் எப்போதுமே சாத்தானின் சீர்கெட்ட மனநிலையின் அடிப்படையில் வாழ்ந்தால், அவர்கள் எவ்வளவு உற்சாகத்தை அல்லது ஆற்றலைப் பெற்றிருந்தாலும், அவர்களை வளர்ச்சியையோ அல்லது ஜீவனையோ பெற்றிருப்பவர்களாகக் கருத முடியாது. தேவன் ஒவ்வொரு நபரிலும் கிரியை செய்கிறார், அவருடைய வழிமுறை என்னவாக இருந்தாலும், எந்த வகையான ஜனங்களை, காரியங்களை மற்றும் விஷயங்களை அவர் தமது ஊழியத்தில் பயன்படுத்தினாலும், அல்லது அவருடைய வார்த்தைகள் எவ்வகையான தொனியில் இருந்தாலும், அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது: உன்னை இரட்சிப்பதுதான். அவர் உன்னை எவ்வாறு இரட்சிக்கிறார்? அவர் உன்னை மாற்றுகிறார். அப்படியென்றால், கொஞ்சம் கூட பாடுபடாமல் உன்னால் எப்படி இருக்க முடியும்? நீ பாடுபட வேண்டியிருக்கும். இந்தப் பாடு பல விஷயங்களை உள்ளடக்கலாம். முதலாவதாக, தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அது அவர்களுக்கு வேதனையாக இருக்கலாம். தேவனுடைய வார்த்தைகள் மிகவும் குத்துகிறவையாகவும் வெளிப்படையானவையாகவும் இருக்கும்போது, மற்றும் ஜனங்கள் தேவனைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போது-மற்றும் கருத்துக்களையும் கூட கொண்டிருக்கும்போது-அதுவும் வேதனையாக இருக்கலாம். சில நேரங்களில் தேவன், அவர்களது சீர்கேட்டை அம்பலப்படுத்தவும், அவர்கள் தங்களை ஆராய்ந்து பார்த்து, தங்களை அறியவும் ஒரு சூழலை ஜனங்களைச் சுற்றி உருவாக்குகிறார், அப்போதும் அவர்கள் கொஞ்சம் பாடுவார்கள். சில நேரங்களில், அவர்கள் நேரடியாகக் கிளை நறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, அம்பலப்படுத்தப்படும்போது, ஜனங்கள் பாடுபட வேண்டும்; அது அவர்கள் மீது கத்தி வைக்கப்பட்டிருப்பதைப்போல் இருக்கிறது. பாடு இல்லை என்றால் பலனும் இல்லை. ஒவ்வொரு முறையும் நீ கிளை நறுக்கப்பட்டு கையாளப்படும்போதும், ஒவ்வொரு முறையும் ஒரு சூழலால் நீ வெட்ட வெளிச்சமாக்கப்படுகிறாய் என்றால், அது உன்னுடைய உணர்வுகளைத் தூண்டி, உனக்கு ஊக்கத்தை அளித்தால், இந்த செயல்முறையின் மூலம் நீ சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பாய், மற்றும் வளர்ச்சியைப் பெற்றிருப்பாய். ஒவ்வொரு முறையும் நீ கிளை நறுக்கப்படுவதற்கும், கையாளப்படுவதற்கும், மற்றும் சூழலால் அம்பலப்படுத்தப்படுவதற்கும் உட்படும்போது, நீ எந்த வலியையோ அல்லது நிம்மதியின்மையையோ உணரவில்லை என்றால், மற்றும் ஒரு உணர்வும் இல்லை என்றால், அவருடைய சித்தத்தைத் தேடும்படி நீ தேவனுக்கு முன்பாக வரவில்லை என்றால், ஜெபமும் செய்யாமல் சத்தியத்தையும் தேடாமல் இருந்தால், அப்போது, நீ உண்மையிலேயே மிகவும் உணர்ச்சியற்றவனாய் இருக்கிறாய்! உன் ஆவி எதையும் உணராதபோது, அது எதிர்வினை ஆற்றாதபோது தேவன் உன்னில் கிரியை செய்வதில்லை. அவர், “இவன் மிகுந்த உணர்ச்சியற்றவனாய் இருக்கிறான், மேலும் மிகவும் ஆழமாக சீர்கெட்டு இருக்கிறான். நான் எவ்வளவாய் அவனைத் தண்டித்துத் திருத்தினாலும் அல்லது அவனைக் கட்டுக்குள் வைக்க முயற்சித்தாலும், என்னால் இன்னும் அவனது இருதயத்தை அசைக்கவோ அல்லது அவனது ஆவியை எழுப்பவோ முடியவில்லை. இந்த நபர் சிக்கலில் மாட்டிக்கொள்வான்; அவனை இரட்சிப்பது அவ்வளவு எளிதல்ல” என்று சொல்லுவார். தேவன் உனக்காக குறிப்பிட்ட சூழல்களை, ஜனங்களை, காரியங்களை மற்றும் விஷயங்களை ஏற்பாடு செய்கிறார் என்றால், அவர் உன்னைக் கிளைநறுக்கிக் கையாளுகிறார் என்றால், நீ இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டால், நீ தேவனுக்கு முன்பாக வரக் கற்றுக்கொண்டால், சத்தியத்தைத் தேடக் கற்றுக்கொண்டால், மேலும், அறியாமலேயே, பிரகாசிக்கப்பட்டு, அறிவொளியடைந்து, சத்தியத்தைப் பெற்றுக்கொள்வாயானால், இந்தச் சூழலில் நீ மாற்றத்தை அனுபவித்து, பலன்களை அறுவடை செய்து, முன்னேற்றம் அடைந்திருந்தால், தேவனுடைய சித்தத்தைப் பற்றி நீ கொஞ்சம் புரிந்துகொள்ளத் தொடங்கினால், மற்றும் நீ குறை கூறுவதை நிறுத்திவிடுவாயானால், அப்போது, இந்தச் சூழல்களின் உபத்திரவங்களுக்கு மத்தியில் நீ உறுதியாக நின்று, சோதனையைத் தாங்கிக்கொண்டாய் என்பதை இவை அனைத்தும் குறிக்கும். அப்படியே, நீ இந்த சோதனையைக் கடந்துசென்றிருப்பாய். சோதனையைத் தாங்குபவர்களை தேவன் எவ்வாறு கருதுவார்? அவர்கள் ஒரு உண்மையான இருதயத்தைப் பெற்றிருப்பதாகவும், அவர்களால் இவ்வகையான துன்பங்களைச் சகித்துக்கொள்ள முடியும் என்றும் தேவன் கூறுவார், ஏனென்றால் அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில், சத்தியத்தை நேசிக்கிறார்கள் மற்றும் சத்தியத்தைப் பெற விரும்புகிறார்கள். தேவன் உன்னைப் பற்றி இந்த மாதிரியான மதிப்பீட்டைக் கொண்டிருந்தால், நீ வளர்ச்சியடைந்திருப்பவன் இல்லையா? அப்போது நீ ஜீவனைப் பெற்றிருப்பதில்லையா? மேலும் இந்த ஜீவன் எவ்வாறு அடையப்படுகிறது? இது தேவனால் அருளப்பட்டதா? தேவன் உனக்குப் பல்வேறு வழிகளில் வழங்குகிறார் மற்றும் உன்னைப் பயிற்றுவிக்கப் பல்வேறு நபர்கள், காரியங்கள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துகிறார். இது தேவன் உனக்குத் தனிப்பட்ட முறையில் போஜனமும் பானமும் கொடுப்பதைப் போன்றதும், நீ புசித்துத் திருப்தியடைந்து மகிழும்படியாக தனிப்பட்ட முறையில் பல்வேறு உணவுப் பதார்த்தங்களை உனக்கு வழங்குவதைப் போன்றதுமாகும்; அப்போதுதான் நீ வளர்ந்து பலத்தோடு நிற்க முடியும். இந்த விஷயங்களை நீ இப்படித்தான் அனுபவிக்கவும் புரிந்துகொள்ளவும் வேண்டும்; தேவனிடமிருந்து வரும் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவது என்பது இதுதான். நீ பெற்றிருக்க வேண்டிய மனநிலையும் அணுகுமுறையும் இதுவேயாகும், மேலும் நீ சத்தியத்தைத் தேட கற்றுக்கொள்ள வேண்டும். நீ தொடர்ந்து வெளிப்புற காரணங்களைத் தேடுவதோ அல்லது உன் பிரச்சனைகளுக்கு மற்றவர்களைக் குறை கூறுவதோ அல்லது ஜனங்களிடம் குறைகளைக் கண்டறிவதோ கூடாது; தேவனுடைய சித்தத்தைப் பற்றிய தெளிவான புரிதலை நீ கொண்டிருக்க வேண்டும். வெளியில் இருந்து பார்த்தால், சிலருக்கு உன்னைப் பற்றிய கருத்துகளோ அல்லது உனக்கு எதிரான தவறான எண்ணங்களோ இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் நீ விஷயங்களை அப்படிப் பார்க்கக்கூடாது. இந்த மாதிரியான நிலைப்பாட்டில் இருந்து நீ விஷயங்களைப் பார்த்தால், நீ செய்யும் ஒரே விஷயம் சாக்குப்போக்குகளைச் சொல்லுவது மட்டுமே, உன்னால் எதையும் அடைய முடியாதவனாக இருப்பாய். நீ விஷயங்களைப் பொதுப்படையாகப் பார்க்க வேண்டும் மற்றும் தேவனிடமிருந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு நீ விஷயங்களைப் பார்க்கும்போது, தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிவது உனக்கு எளிதாக இருக்கும், மேலும் உன்னால் சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் முடியும். உன் கண்ணோட்டமும் மனநிலையும் சரி செய்யப்பட்டவுடன், உன்னால் சத்தியத்தை அடைய முடியும். எனவே, நீ அதை ஏன் அப்படியே செய்யக் கூடாது? நீ ஏன் எதிர்க்கிறாய்? நீ எதிர்ப்பதை நிறுத்தினால், நீ சத்தியத்தைப் பெறுவாய். நீ எதிர்த்தால், நீ எதையும் பெற மாட்டாய், மேலும் நீ தேவனுடைய உணர்வுகளைப் புண்படுத்தி, அவரை ஏமாற்றிவிடுவாய். தேவன் எப்படி ஏமாற்றமடைவார்? நீ சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, உனக்கு இரட்சிப்பின் நம்பிக்கை இல்லை, தேவனால் உன்னை ஆதாயப்படுத்த முடிவதில்லை, எனவே அவர் எப்படி ஏமாற்றமடையாமல் இருக்கக் கூடும்? நீ சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதபோது, இது தனிப்பட்ட முறையில் தேவனால் உனக்கு வழங்கப்பட்ட ஆகாரத்தைப் புறக்கணிப்பதற்கு சமமாகும். உனக்குப் பசி இல்லை என்றும் அது உனக்குத் தேவையில்லை என்றும் நீ கூறுகிறாய்; புசிக்கும்படி உன்னை ஊக்குவிக்க தேவன் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார், ஆனால் நீ இன்னும் அதை விரும்பவில்லை. நீ பசியுடன் இருப்பதையே விரும்புகிறாய். உண்மையில், உன்னிடம் முற்றிலுமாக எதுவும் இல்லாதபோது, நீ திருப்தி அடைந்ததாக நினைக்கிறாய். இது போன்ற ஜனங்கள் உணர்வு இல்லாதவர்களும், சுய நீதியுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள்; உண்மையிலேயே, அவர்கள் அதைப் பார்க்கும்போது, அவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் தெரிவதில்லை, அவர்கள் மிகவும் ஏழ்மையான மற்றும் பரிதபிக்கப்படத்தக்க ஜனங்களாவர்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பெற, ஒருவர் அருகில் உள்ள ஜனங்கள், காரியங்கள் மற்றும் விஷயங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 387

திருச்சபைத் தலைவர்களும் ஊழியர்களும் தங்களது ஊழியத்தில் இரண்டு கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்: ஒன்று, ஊழிய ஏற்பாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளின்படி மிகச் சரியாகத் தங்கள் ஊழியத்தைச் செய்ய வேண்டும், அந்தக் கொள்கைகளை ஒருபோதும் மீறாமலும் தாங்கள் கற்பனை செய்வதையோ அல்லது தங்களது சொந்தக் கருத்துக்களில் ஏதாவது ஒன்றையோ தங்கள் ஊழியத்தின் அடிப்படையாகக் கொண்டிராமல் இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும், திருச்சபைப் பணியில் அக்கறை காட்ட வேண்டும், எப்போதும் அதன் நலன்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். மற்றொரு விஷயம்-இது மிகவும் முக்கியமானது-எல்லா விஷயங்களிலும், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்வதில் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். அவர்கள் இன்னும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு எதிராகச் செல்லக்கூடியவர்களாக இருந்தால், அல்லது அவர்கள் பிடிவாதமாகத் தங்கள் சொந்தக் கருத்துகளைப் பின்பற்றி, தங்கள் சொந்தக் கற்பனையின்படி காரியங்களைச் செய்தால், அப்போது, அவர்களது செயல்கள் தேவனுக்கு எதிரான ஒரு மிகத் தீவிரமான எதிர்ப்பை உருவாக்கும். பரிசுத்த ஆவியானவரின் பிரகாசிப்பித்தலுக்கும் வழிநடத்துதலுக்கும் அடிக்கடித் தங்களது முதுகைக் காட்டுவது தொடர்ந்து முன்னேற முடியாத ஒரு கட்டத்திற்கு மட்டுமே இட்டுச்செல்லும். அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இழந்துவிட்டால், அவர்களால் ஊழியம் செய்ய முடியாது; அவர்கள் எப்படியாவது ஊழியம் செய்ய முற்பட்டாலும், அவர்கள் எதையும் சாதிக்க மாட்டார்கள். தலைவர்களும் ஊழியர்களும் பணிபுரியும் போது கடைபிடிக்க வேண்டிய இரண்டு முக்கியக் கோட்பாடுகள் இவை: ஒன்று, மேலேயுள்ளவரின் வேலை ஏற்பாடுகளுக்கு ஏற்றபடி, மிகச் சரியாகத் தங்கள் வேலையைச் செய்ய வேண்டும், அதோடு கூட மேலேயுள்ளவரால் நியமிக்கப்பட்டிருக்கிற கொள்கைகளுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும்; மற்றொன்று தங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்ற வேண்டும். இந்த இரண்டு கொள்கைகளையும் புரிந்து கொண்டால், அவர்கள் தவறு செய்வதற்கு ஏதுவாகாது. இந்தப் பகுதியில் உங்கள் அனுபவம் இன்னும் குறைவாகவே உள்ளது, மேலும் நீங்கள் பணி செய்யும் போது, அது உங்கள் சொந்தக் கருத்துகளால் மிகவும் களங்கமடைகிறது. சில சமயங்களில், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிறதான, உங்களுக்குள் இருக்கும் பிரகாசத்தையோ அல்லது வழிகாட்டுதலையோ நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்; மற்ற நேரங்களில், உங்களுக்கு அது புரிவதைப்போலத் தோன்றுகிறது, ஆனால் நீங்கள் அதைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் நோக்கங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், உங்களுக்குச் சரி என்று தோன்றியபடி செயல்பட்டு, எப்போதும் மனுஷர்களின் முறையின்படி கற்பனை செய்கிறீர்கள் அல்லது அனுமானிக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் எந்தப் பிரகாசத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, உங்கள் சொந்தக் கருத்துகளின்படி மட்டுமே நீங்கள் உங்கள் பணியைச் செய்கிறீர்கள். இத்தகைய சூழ்நிலைகள் அடிக்கடி நிகழ்கின்றன. பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் உள்ளார்ந்த வழிகாட்டுதல் எல்லாமே இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல; அது உண்மையிலேயே மிகவும் சாதாரணமானதாகும். அதாவது, இதுவே செயல்படுவதற்கு ஒரு சரியான வழி என்றும், இதுவே மிகச்சிறந்த வழி என்றும் நீங்கள் உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் அறிவீர்கள். இந்த எண்ணம் உண்மையிலேயே மிகவும் தெளிவானது; அது சிந்திப்பதால் வரவில்லை, சில சமயங்களில், நீங்கள் ஏன் இப்படிச் செயல்பட வேண்டும் என்பது உங்களுக்கு முழுமையாகப் புரிவதில்லை. இது பெரும்பாலும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் பிரகாசமே அன்றி வேறல்ல. அனுபவம் உள்ளவர்களுக்கு இது பெரும்பாலும் நிகழ்கிறது. மிகவும் சரியானதைச் செய்ய பரிசுத்த ஆவியானவர் உன்னை வழிநடத்துகிறார். இது நீ நினைக்கும் ஏதோ ஒரு விஷயமல்ல, மாறாக, இதைச் செய்வதற்கான சிறந்த வழி இதுவே என்பதை உன் இருதயத்தில் உணர வைக்கும் ஒரு உணர்வாகும், மேலும் ஏன் என்று தெரியாமல், நீ அதைச் செய்ய விரும்புகிறாய். இது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரலாம். ஒருவருடைய சொந்தக் கருத்துக்கள் பெரும்பாலும் சிந்தனை மற்றும் யோசனையிலிருந்து வருகின்றன, மேலும் அவை அனைத்தும் சுய-விருப்பத்தால் களங்கமடைந்திருக்கின்றன; தங்களுக்கு என்ன லாபமும் நன்மையும் இருக்கிறது என்று மட்டுமே அவர்கள் நினைக்கிறார்கள்; மனுஷர்கள் செய்ய முடிவு செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்த விஷயங்கள் உள்ளன. இருப்பினும், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் வழிநடத்துதல் எந்த விதத்திலும் இத்தகைய கலப்படங்களைக் கொண்டிருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் வழிநடத்துதல் அல்லது பிரகாசத்தில் அதிகக் கவனம் செலுத்துவது அவசியமாகும்; குறிப்பாக, முக்கியப் பிரச்சனைகளில், அதைப் புரிந்துகொள்வதற்கு நீ கவனமாக இருக்க வேண்டும். தங்கள் மூளையைப் பயன்படுத்த விரும்புபவர்களும் தங்கள் சொந்த யோசனைகளின்படி செயல்பட விரும்புபவர்களும், அத்தகைய வழிநடத்துதலை அல்லது பிரகாசத்தைத் தவறவிட அதிக வாய்ப்புள்ளது. சரியான தலைவர்களும் ஊழியர்களும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உடையவர்களும், ஒவ்வொரு தருணத்திலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கவனிக்கிறவர்களும், பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிகிறவர்களும், தேவனுக்குப் பயப்படுகிறவர்களும், தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொள்பவர்களுமாய், அயராது சத்தியத்தைப் பின்தொடர்பவர்களுமாய் இருக்கிறார்கள். தேவனைத் திருப்திப்படுத்தவும், முறையாக அவருக்குச் சாட்சி பகரவும், உங்கள் கடமையைச் செய்வதில் உங்களது நோக்கங்களையும் இழிநிலைகளையும் அடிக்கடி ஆராய்ந்து பார்க்கவும் வேண்டும், அதன்பிறகு பணியில் மனுஷீகக் கருத்துகள் மூலமாக எவ்வளவு உந்துதல் பெற்றிருக்கிறது, பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிப்பிக்கப்படுதல் மூலமாக எவ்வளவு பிறந்திருக்கிறது மற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப எவ்வளவு காணப்படுகிறது என்பதைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வார்த்தைகளும் செயல்களும் சத்தியத்திற்கு ஏற்ப உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து, எல்லா சூழ்நிலைகளிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்வது தேவனுக்கு ஊழியம் செய்வதற்கான சரியான பாதையில் உங்களை அழைத்துச் செல்லும். தேவனுடைய நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் அவருக்கு ஊழியம் செய்ய சத்தியத்தின் யதார்த்தங்களைப் பெற்றிருப்பது அவசியமாகும். சத்தியத்தைப் புரிந்துகொண்ட பின்னரே, ஜனங்களால் தங்கள் சொந்தக் கருத்துகளிலிருந்து வெளிப்படுவதையும், மனுஷீக நோக்கங்களிலிருந்து வெளிப்படுவதையும் பகுத்தறிந்து அடையாளம் காணும் திறனைப் பெற முடியும். அவர்களால் மனுஷனுடைய அசுத்தங்களையும், அதேபோல் சத்தியத்தின்படி செயல்படுவதன் அர்த்தம் என்ன என்பதையும் அடையாளம் காண முடிகிறது. அவர்களால் பகுத்தறிய முடிந்த பின்னரே, சத்தியத்தைக் கைக்கொள்ளவும் தேவனுடைய சித்தத்திற்கு முழுமையாக இணங்கவும் முடியும் என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியும். சத்தியத்தைப் புரிந்துகொள்ளாமல், ஜனங்கள் பகுத்தறிவதற்கு சாத்தியமில்லை. ஒரு மதியற்ற நபர், தனது சொந்த சீர்கேட்டை வெளிப்படுத்துவது என்றால் என்ன என்றோ அல்லது தேவனை எதிர்ப்பது என்றால் என்ன என்றோ தெரியாமலேயே, அவன் தனது வாழ்நாள் முழுவதும் தேவனை விசுவாசிக்கக் கூடும், ஏனென்றால், அவன் சத்தியத்தைப் புரிந்துகொள்ளவில்லை; அந்த எண்ணம் கூட அவன் மனதில் இருப்பதில்லை. திறமையற்ற ஜனங்களுக்கு சத்தியம் எட்டாத உயரமாக இருக்கிறது; நீங்கள் அவர்களுடன் அதை எப்படி ஐக்கியங்கொண்டாலும், அவர்களுக்கு இன்னும் புரிவதில்லை. அத்தகையவர்கள் மதியற்றவர்களாய் இருக்கிறார்கள். மதியற்றவர்கள் தங்களது விசுவாசத்தில், தேவனுக்குச் சாட்சி பகர முடியாது; அவர்களால் ஒரு சிறிய ஊழியத்தை மட்டுமே செய்ய முடியும். தலைவர்களும் ஊழியர்களும் தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றால், அவர்களின் திறமை மிகவும் மோசமாக இருக்கலாகாது. குறைந்த பட்சம், அவர்கள் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொண்டு, விஷயங்களை முழுமையாகப் பெற வேண்டும், அப்போதுதான், அவர்களால் சத்தியத்தை எளிதாகப் புரிந்துகொண்டு சத்தியத்தைக் கைக்கொள்ள முடியும். சிலரின் அனுபவம் மிகவும் மேலோட்டமானது, எனவே சில சமயங்களில் அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்வதில் மாறுபாடுகளைக் கொண்டுள்ளனர், பின்னர் அவர்கள் தவறுகளைச் செய்ய வாய்ப்புள்ளது. தங்களது புரிந்துகொள்ளுதலில் அவர்கள் மாறுபாடுகளைக் கொண்டிருக்கும்போது, அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் பணியில் சிறந்துவிளங்க மாட்டார்கள். ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்வதில் மாறுபாடுகள் இருக்கும்போது, அவர்கள் விதிகளைப் பின்பற்ற வாய்ப்புள்ளது, மேலும் அவர்கள் விதிகளைப் பின்பற்றும்போது, தவறுகள் செய்வது எளிதாகிறது, மேலும் அவர்கள் சத்தியத்தைக் கைக்கொள்ளும்ம் பணியில் சிறந்து விளங்குவதில்லை. புரிந்துகொள்வதில் விலகல்கள் இருக்கும்போது, அந்திக்கிறிஸ்துகளால் வஞ்சிக்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் கூட எளிதானது. எனவே, புரிதலில் ஏற்படும் விலகல்கள் பல தவறுகளுக்கு வழிவகுக்கக் கூடும். இதன் விளைவாக, ஜனங்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறுவது மட்டுமல்லாமல், அவர்கள் எளிதில் வழிதவறிச் செல்லக் கூடும், இது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் வாழ்க்கைப் பிரவேசத்திற்குத் தீங்கு விளைவிக்கும். இப்படி ஒருவன் தன் கடமையைச் செய்வதால் என்ன மதிப்பு இருக்கிறது? அவர்கள் வெறுமனே திருச்சபையின் பணியைச் சீர்குலைக்கும் ஒருவராகவும் இடையூறு விளைவிக்கும் ஒருவராகவும் மாறியிருக்கிறார்கள். இந்தத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவன் ஒப்படைக்கும் பணியை நிறைவேற்ற, தலைவர்களும் ஊழியர்களும் இந்த இரண்டு கொள்கைகளைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும்: ஒருவன் கடமையைச் செய்வதில் மேலேயுள்ளவரின் வேலை ஏற்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும், மேலும் தேவனுடைய வார்த்தையின்படி, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் எந்த வழிநடத்துதலுக்கும் கவனம் செலுத்தவும் கீழ்ப்படியவும் வேண்டும். இந்த இரண்டு கொள்கைகளும் புரிந்துகொள்ளப்படும்போது மட்டுமே, ஒருவனுடைய பணி பயனுள்ளதாக இருக்கும் மற்றும் தேவனுடைய சித்தம் நிறைவேறும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 388

பேதுரு தேடியதெல்லாம் தன்னை அறிந்து கொள்வதும், தேவனுடைய வார்த்தைகளின் புடமிடுதல் மற்றும் தேவன் அவனுக்கு வழங்கிய பல்வேறு உபத்திரவங்களின் மூலம் அவனில் என்ன வெளிப்படுத்தப்பட்டன என்பதை காண்பதும் ஆகும். பேதுரு உண்மையிலேயே தன்னைப் புரிந்துகொண்டபோது, அவன் மனிதர்கள் எவ்வளவு ஆழமாக சீர்கெட்டுப் போனவர்கள் என்றும், தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு எவ்வளவு பயனற்றவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என்றும், மற்றும் அவர்கள் அவருக்கு முன்பாக வாழத் தகுதியற்றவர்கள் என்பதையும் உணர்ந்தான். பின்னர் பேதுரு தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தான். இவ்வளவு அனுபவங்களை அனுபவித்த பேதுரு இறுதியில், “தேவனை அறிவதுதான் மிகவும் விலையேறப்பெற்ற காரியம்! அவரை அறிவதற்கு முன்பாக நான் மரித்துப்போயிருந்தால், அது மிகவும் பரிதாபமாக இருந்திருக்கும். தேவனை அறிவதுதான் மிகவும் முக்கியமான, மிகவும் அர்த்தமுள்ள காரியம். மனிதன் தேவனை அறியாவிட்டால், அவன் வாழத் தகுதியற்றவன், ஒரு மிருகத்தைப் போலவே இருப்பான் மற்றும் அவனுக்கு ஜீவன் இருக்காது” என்று உணர ஆரம்பித்தான். பேதுருவின் அனுபவம் இந்த நிலையை அடைந்த நேரத்தில், அவன் தன்னுடைய சொந்த சுபாவத்தை அறிந்து கொண்டான் மற்றும் அதைக் குறித்து ஒப்பீட்டளவில் நல்ல புரிதலையும் பெற்றான். இக்காலத்தில் உள்ள மக்களைப் போல அவனால் ஒருவேளை அதை அவ்வளவு தெளிவாக விளக்க முடியாமல் இருந்திருந்தாலும் கூட, பேதுரு மெய்யாகவே இந்த நிலையை அடைந்திருந்தான். ஆகையால், சத்தியத்தைப் பின்தொடரும் பாதையில் நடக்கவும், தேவனால் பரிபூரணத்தை அடையவும் தேவனுடைய பேச்சுகளுக்குள் ஒருவரின் சொந்த சுபாவத்தை அறிந்து கொள்ள வேண்டும், அத்துடன் ஒருவரின் சுபாவத்தின் அம்சங்களைப் புரிந்துகொண்டு அதை வார்த்தைகளில் துல்லியமாக விவரிக்க வேண்டும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும். இது மட்டுமே உண்மையில் உங்களை அறிவது, மற்றும் தேவன் விரும்புகிற முடிவையும் நீங்கள் அடைவீர்கள். உன்னுடைய அறிவு இன்னும் இந்த நிலையை அடையவில்லை என்றால், ஆனால் நீ உன்னை அறிந்திருப்பதாகக் கூறிக்கொண்டு, நீ ஜீவனை அடைந்துவிட்டாய் என்று கூறுவாயானால், நீ வெறுமனே தற்பெருமைப் பேசிக் கொள்ளவில்லையா? நீ உன்னையே அறியவில்லை, தேவனுக்கு முன்பாக நீ யாரென்பதையும் அறியவில்லை, நீ உண்மையிலேயே மனிதனாக இருப்பதன் தரங்களைப் பூர்த்தி செய்திருக்கிறாயா அல்லது உனக்குள் இன்னும் எத்தனை சாத்தானிய கூறுகள் உள்ளன என்பதையும் அறியவில்லை. நீ யாரைச் சேர்ந்தவன் என்பது பற்றி உங்னக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் உனக்கு சுய அறிவு கூட இல்லை—எனவே தேவனுக்கு முன்பாக நீ எவ்வாறு நியாயத்தைக் கொண்டிருக்க முடியும்? பேதுரு ஜீவனைப் பின்தொடர்ந்தபோது, அவன் தன்னைப் புரிந்து கொள்வதிலும், அவனுடைய சோதனைகளில் தனது மனநிலையை மறுரூபப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினான், மேலும் அவன் தேவனை அறிய கடுமையாக முயன்றான், இறுதியில், “மக்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனைப் பற்றிய புரிதலைத் தேடவேண்டும்; அவரை அறிவதே மிக முக்கியமான காரியம். நான் தேவனை அறியவில்லை என்றால், நான் மரிக்கும் போது என்னால் சமாதானத்தை அடைய முடியாது. நான் அவரை அறிந்திருந்து, தேவன் என்னை மரிக்கச் செய்தால், அப்போதும் அதில் நான் இன்னும் மகிழ்ச்சியடைவேன்; நான் சிறிதும் குறைகூற மாட்டேன், எனது முழு வாழ்க்கையும் நிறைவேற்றப்பட்டிருக்கும்” என்று நினைத்தான் தேவனை விசுவாசிக்கத் தொடங்கிய உடனேயே இந்த அளவிலான புரிதலைப் பெறவோ அல்லது இந்த நிலையை அடையவோ பேதுருவினால் முடியவில்லை; அதற்குப் பதிலாக அவன் பல உபத்திரவங்களுக்கு ஆளானான். அவனது அனுபவம் ஒரு குறிப்பிட்ட மைல்கல்லை எட்ட வேண்டியிருந்தது, மேலும் தேவனை அறிவதன் மதிப்பை உணரும் முன்பாக அவன் தன்னைக் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆகையால், பேதுரு சென்ற பாதையானது சத்தியத்தைப் பின்தொடரும் பாதையாகவும் ஜீவனை அடைவதற்கும் பரிபூரணமடைவதற்குமான ஒன்றாகவும் இருந்தது; அவனது குறிப்பிட்ட நடைமுறை இந்த அம்சத்தில் தான் முதன்மையான கவனம் செலுத்துகிறது.

தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தில் நீங்கள் இப்போது எந்தப் பாதையில் செல்கிறீர்கள்? நீங்கள் பேதுருவைப் போல ஜீவனையும், உங்களைப் பற்றிய புரிதலையும், தேவனைப் பற்றிய அறிவையும் தேடவில்லை என்றால், அப்போது நீங்கள் பேதுருவின் பாதையில் நடக்கவில்லை. இந்நாட்களில், பெரும்பாலான ஜனங்கள் இவ்வகையான நிலையிலேயே இருக்கின்றனர்: “ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காக, நான் தேவனுக்கு என்னைச் செலவழிக்க வேண்டும், அவருக்காக ஒரு விலைக்கிரயத்தைக் கொடுக்க வேண்டும். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக, நான் தேவனுக்காக எல்லாவற்றையும் கைவிட வேண்டும்; அவர் என்னிடம் ஒப்புவித்ததை நான் செய்து முடிக்க வேண்டும், என் கடமையை நன்றாகச் செய்ய வேண்டும்.” ஆசீர்வாதங்களைப் பெறும் நோக்கில் இது ஆதிக்கம் செலுத்தப்படுகிறது, இது தேவனிடமிருந்து வெகுமதிகளைப் பெறும் மற்றும் கிரீடத்தைப் பெறும் நோக்கத்திற்காக ஒருவரை முற்றிலும் செலவழிப்பதற்கு ஒரு உதாரணமாகும். இத்தகையவர்கள் தங்கள் இருதயங்களில் உண்மையைக் கொண்டிருப்பதில்லை, அவர்களுடைய புரிதலில் நிச்சயமாக அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் காண்பித்துக் கொள்ளும் விதத்தினால் ஆன ஒரு சில கோட்பாட்டு வார்த்தைகளே உள்ளன. அவர்களுடையது பவுலின் பாதையாகும். அப்படிப்பட்டவர்களின் விசுவாசம் ஒரு நிலையான கடின உழைப்பின் செயலாகும், மேலும் அவர்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அது தேவனிடத்திலான தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கும் என்றும், எவ்வளவு அதிகமாக உழைக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர் நிச்சயமாகத் திருப்தியடைவார் என்றும், மேலும் எவ்வளவு அதிகமாக அவர்கள் செய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுக்கு முன்பாக ஒரு கிரீடம் வழங்கப்படுவதற்குத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் பெறும் ஆசீர்வாதங்கள் மிகவும் பெரிதானவயாக இருக்கும் என்றும், அவர்கள் தங்கள் மனதின் ஆழத்தில் நினைக்கிறார்கள்; துன்பங்களைச் சகித்துக் கொண்டு, பிரசங்கித்து, கிறிஸ்துவுக்காக அவர்களால் மரிக்க முடிந்தால், அவர்களால் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய முடிந்தால், தேவன் அவர்களிடத்தில் ஒப்புவித்த கடமைகள் அனைத்தையும் அவர்களால் நிறைவேற்ற முடிந்தால், அப்போது அவர்கள் மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப் பெறுபவர்களாக இருப்பார்கள் என்றும், நிச்சயமாகக் கிரீடங்கள் வழங்கப்படுபவர்களாய் இருப்பார்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இதுவே துல்லியமாகப் பவுல் கற்பனை செய்ததும் அவர் தேடியதுமாகும்; அவன் நடந்த பாதை சரியாக இதுவாகும், அத்தகைய எண்ணங்களின் வழிகாட்டுதலின்கீழ் தான் அவன் தேவனுக்கு ஊழியஞ்செய்ய உழைத்தான். அந்த எண்ணங்களும் நோக்கங்களும் சாத்தானிய சுபாவத்திலிருந்து தோன்றவில்லையா? பூமியில் இருக்கும்போது அவர்கள் அறிவைப் பின்தொடர வேண்டும், அதைப் பெற்ற பிறகு தான், அவர்களால் கூட்டத்திலிருந்து தனித்து நிற்க முடியும், அதிகாரிகளாக மாறி, அந்தஸ்தைப் பெற முடியும் என்று நம்புகிற உலக மனிதர்களை போலவே அது இருக்கிறது; அவர்கள் அந்தஸ்தைப் பெற்றவுடன், அவர்கள் தங்கள் இலட்சியங்களை உணர்ந்து தங்கள் வீடுகளையும் வணிகங்களையும் ஒரு குறிப்பிட்ட அளவிலான செழிப்புக்குக் கொண்டுவர முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எல்லா அவிசுவாசிகளும் இந்தப் பாதையில் நடப்பதில்லையா? இந்தச் சாத்தானிய சுபாவத்தால் ஆதிக்கம் செய்யப்பட்டவர்கள், தங்கள் விசுவாசத்தில் பவுலைப் போலவேதான் இருக்க முடியும். அவர்கள்: “தேவனுக்காக என்னை ஒப்புக்கொடுக்க நான் எல்லாவற்றையும் தூக்கியெறிய வேண்டும்; நான் அவருக்கு முன்பாக உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும், இறுதியில், நான் பெரிய வெகுமதிகளையும், மேலான கிரீடங்களையும் பெறுவேன்” என்று நினைக்கிறார்கள். உலக விஷயங்களைப் பின்தொடரும் உலக மனிதர்களின் மனோபாவம் இதுவாகவே இருக்கிறது; அவர்கள் எவ்விதத்திலும் வேறுபட்டவர்கள் அல்லர், மேலும் அதே சுபாவத்துக்கு உட்பட்டவர்கள் ஆவர். வெளி உலகில், இந்த மாதிரியான சாத்தானிய சுபாவத்தை ஜனங்கள் கொண்டிருக்கும்போது, அவர்கள் அறிவு, கற்றல், அந்தஸ்து ஆகியவற்றைப் பெறுவதையும் மற்றும் கூட்டத்திலிருந்து தனித்து நிற்பதையும் தேடுவார்கள்; அவர்கள் தேவனை விசுவாசித்தால், அவர்கள் மேலான கிரீடங்களையும் பெரிய ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கு முற்படுவார்கள். தேவனை விசுவாசிக்கும் போது அவர்கள் சத்தியத்தைப் பின்தொடரவில்லை என்றால், அவர்கள் இந்தப் பாதையில் செல்வது உறுதி; இது ஒரு மாறாத உண்மையாகும், இது ஒரு இயற்கை விதியாகும். சத்தியத்தைப் பின்தொடராத ஜனங்கள் செல்லும் பாதையானது பேதுருவின் பாதைக்கு முற்றிலும் எதிரானதாகும். நீங்கள் அனைவரும் தற்போது எந்தப் பாதையில் இருக்கிறீர்கள்? நீ பவுலின் பாதையில் செல்லத் திட்டமிட்டிருக்கவில்லை என்றாலும், உன்னுடைய சுபாவம் நீ இந்த வழியில் நடக்க வேண்டும் என்று விதித்துள்ளது, மேலும் நீயே விரும்பவில்லை என்றாலும் அந்தத் திசையில் செல்கிறாய். நீ பேதுருவின் பாதையில் அடியெடுத்து வைக்க விரும்பினாலும், அதை எப்படிச் செய்வது என்று உனக்குப் புரியவில்லை என்றால், பின்னர் நீ தானாக முன்வந்து பவுலின் பாதையில் செல்வாய்: இதுதான் நிலைமையின் யதார்த்தமாகும். இந்நாட்களில் பேதுருவின் பாதையில் ஒருவர் எவ்வாறு சரியாக நடக்க வேண்டும்? பேதுரு மற்றும் பவுலின் பாதைகளை உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், அல்லது அவற்றைக் குறித்து உனக்குப் பரிச்சயம் இல்லையென்றால், பேதுருவின் பாதையில் நடப்பதாக நீ எவ்வளவுதான் கூறிக் கொண்டாலும், அவை வெறுமனே வெற்று வார்த்தைகளாகவே இருக்கும். பேதுருவின் பாதை எது பவுலின் பாதை எது என்பதை முதலில் நீ தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பேதுருவின் பாதை ஜீவனைப் பின்தொடர்வதற்கான பாதை என்பதையும், பரிபூரணத்திற்கான ஒரே பாதை என்பதையும் நீ உண்மையாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, உன்னால் பேதுருவின் பாதையில் நடக்க முடியும், அவன் பின்தொடர்ந்தது போலப் பின்தொடர முடியும், அவன் கடைபிடித்த கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியும். பேதுருவின் பாதையை நீ புரிந்து கொள்ளவில்லை என்றால், நீ செல்லும் பாதை நிச்சயமாக பவுலின் பாதையாகவே இருக்கும், ஏனென்றால் உனக்கு வேறு எந்தப் பாதையும் இருக்காது; உனக்கு வேறு வழியிருக்காது. சத்தியத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும், அதைப் பின்தொடர முடியாதவர்களுக்கும், அவர்கள் உறுதியுடன் இருந்தாலும் கூட, பேதுருவின் பாதையில் நடப்பது கடினமாக இருக்கும். இரட்சிப்பு மற்றும் பரிபூரணத்திற்கான பாதையை தேவன் இப்போது உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறலாம். இது தேவனுடைய கிருபை மற்றும் உயர்வாகும், மேலும் அவர் தாமே உங்களைப் பேதுருவின் பாதையில் வழிநடத்துகிறார். தேவனுடைய வழிநடத்துதல் மற்றும் வெளிச்சம் இல்லாமல் ஒருவராலும் பேதுருவின் பாதையில் செல்ல முடியாது; அழிவை நோக்கிய பவுலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பவுலின் பாதையில் செல்வது மட்டுமே ஒரே தெரிவாக இருக்கும். முன்பு, அந்தப் பாதையில் நடப்பது தவறு என்று பவுல் உணரவில்லை; அது சரியானது என்று அவன் முழுமையாக நம்பினான். அவன் சத்தியத்தை அடையவில்லை, மேலும் அவன் குறிப்பாக மனநிலையில் மாற்றத்திற்கு ஆளாகவில்லை. அவன் தன்னையே மிகவும் அதிகமாக நம்பினான், மேலும் அப்படி நம்புவதில் ஒரு சிறிய பிரச்சனையும் இல்லை என்பதாக நினைத்தான். முழு நம்பிக்கையுடனும் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், அவன் தொடர்ந்து சென்றான். இறுதியில் அவன் தனது நினைவுக்கு வரவேயில்லை; அவன் அப்போதும் வாழ்வது என்றால் கிறிஸ்து என்று நினைத்தான். அவ்வாறாக, இறுதிவரை பவுல் அந்தப் பாதியிலேயே நடந்தான், இறுதியில் அவன் தண்டிக்கப்படும் நேரத்தில், எல்லாம் அவனுக்கு முடிவடைந்து விட்டது. தன்னைப் பற்றி அறிந்து கொள்வது பவுலின் பாதையில் இருக்கவில்லை, மனநிலையில் மாற்றத்தை நாடுவதும் இருக்கவில்லை. அவன் தனது சொந்த சுபாவத்தை ஒருபோதும் பகுப்பாய்வு செய்யவில்லை, அவன் என்னவாக இருந்தான் என்பதைப் பற்றிய அறிவையும் பெறவில்லை; இயேசுவைத் துன்புறுத்தியதில் அவனே முக்கிய குற்றவாளி என்பதை மட்டுமே அவன் அறிந்திருந்தான். ஆனால் அவனது தனது சொந்த சுபாவத்தைப் பற்றிச் சிறிதளவேனும் புரிந்து கொள்ளவில்லை, மேலும் தனது வேலையை முடித்த பிறகு, அவன் கிறிஸ்துவாக வாழ்கிறான் என்றும் அவனுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் பவுல் நினைத்தான். பவுல் செய்த வேலை வெறுமனே தேவனுக்குச் செய்யப்பட்ட சேவையாக மட்டுமே இருந்தது. பவுலைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில், அவன் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து சில வெளிப்பாடுகளைப் பெற்றிருந்தாலும், அவன் சத்தியத்தையோ ஜீவனையோ சிறிதளவேனும் பெறவில்லை. எனவே அவன் தேவனால் இரட்சிக்கப்படவில்லை; அவன் தேவனால் தண்டிக்கப்பட்டான். பேதுருவின் பாதை பரிபூரணத்திற்கான பாதை என்று ஏன் கூறப்படுகிறது? ஏனென்றால் பேதுருவின் நடைமுறையில், அவன் ஜீவனுக்கும், தேவனை அறிய முற்படுவதற்கும், தன்னை அறிந்துகொள்வதற்கும் குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொடுத்தான். தேவனுடைய கிரியை பற்றிய தனது அனுபவத்தின் மூலம் அவன் தன்னைப் பற்றி அறிந்து கொண்டான், மனிதனின் சீர்கேடான நிலைகளைப் பற்றிய புரிதலைப் பெற்றான், அவனுடைய சொந்தக் குறைபாடுகளைப் பற்றி அறிந்து கொண்டான், மேலும் ஜனங்கள் பின்தொடர வேண்டிய மிகவும் மதிப்புமிக்கதான விஷயத்தைக் கண்டுபிடித்தான். அவனால் தேவனை உண்மையாக நேசிக்க முடிந்தது, தேவனுக்கு எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதை அவன் கற்றுக் கொண்டான், அவர் சில சத்தியங்களைப் பெற்றார், மேலும் தேவன் கோரும் யதார்த்தத்தை அவன் கொண்டிருந்தான். பேதுரு தனது சோதனைகளின்போது கூறிய எல்லா விஷயங்களிலிருந்தும், அவன் உண்மையில் தேவனைப் பற்றி அதிகப் புரிதலைக் கொண்டிருந்த ஒருவனாக இருந்தான் என்பதைக் காணலாம். தேவனுடைய வார்த்தைகளில் இருந்து அவன் நிறைய சத்தியத்தைப் புரிந்து கொண்டதால், அவனுடைய பாதை அதிகதிகமான பிரகாசமாகவும், மேலும் மேலும் தேவனுடைய சித்தத்துடன் ஒத்துப் போகிறதாகவும் மாறியது. பேதுரு இந்தச் சத்தியத்தைக் கொண்டிராமல் இருந்திருந்தானானால், அவன் நடந்த பாதை அவ்வளவு சரியானதாக இருந்திருக்காது.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பேதுருவின் பாதையில் நடப்பது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 389

பேதுரு எனக்குப் பல ஆண்டுகளாக உண்மையுள்ளவனாக இருந்தான், ஆனாலும் அவன் ஒருபோதும் முணுமுணுக்கவுமில்லை, எந்த மனக்குறையும் கொண்டிருக்கவுமில்லை; யோபு கூட அவனுக்கு சமமானவன் அல்ல, யுகங்கள் முழுவதும், பரிசுத்தவான்கள் அனைவரும் பேதுருவைக் காட்டிலும் மிகக் குறைவுபட்டவர்களாகப் போனார்கள். அவன் என்னை அறிந்துகொள்ள முயன்றது மட்டுமல்லாமல், சாத்தான் அவனுடைய வஞ்சகத் திட்டங்களை மேம்படுத்திக் கொண்டிருந்த காலத்திலும் என்னை அறிந்துகொண்டான். இது பேதுருவைப் பல ஆண்டுகளாக எப்போதும் என் சித்தத்திற்கு ஏற்ப எனக்கு ஊழியம் செய்ய வழிவகுத்தது, இந்தக் காரணத்தினாலேயே, அவன் ஒருபோதும் சாத்தானால் அவனது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. பேதுரு யோபுவினுடைய விசுவாசத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டான், அதேவேளையில் யோபுவின் குறைபாடுகளையும் தெளிவாக உணர்ந்துகொண்டான். யோபு மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவனாக இருந்தபோதிலும், ஆவிக்குரிய உலகிலுள்ள காரியங்களைப் பற்றிய அறிவு அவனுக்கு இல்லாதிருந்தது, எனவே அவன் யதார்த்தத்துடன் பொருந்தாத பல வார்த்தைகளைக் கூறினான்; இது யோபுவினுடைய அறிவு ஆழமற்றது மற்றும் முழுமையற்றது என்பதைக் காண்பிக்கிறது. ஆகையால், பேதுரு எப்போதுமே ஆவியின் உணர்வைப் பெறுவதில் கவனம் செலுத்தினான், மேலும் ஆவிக்குரிய உலகத்தின் செயல்பாட்டைக் கூர்ந்து கவனிப்பதில் எப்போதும் கவனம் செலுத்தினான். இதன் விளைவாக, அவன் என் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்ள முடிந்தது என்பது மட்டுமின்றி, சாத்தானின் வஞ்சகத் திட்டங்களைப் பற்றி சிறிதளவு அறிவையும் கொண்டிருந்தான். இதன் காரணமாக, என்னைப் பற்றிய அவனது அறிவு யுகங்கள் முழுவதும் வேறு எவரையும் விட அதிகமாக வளர்ந்தது.

பேதுருவினுடைய அனுபவத்திலிருந்து, மனிதர்கள் என்னை அறிந்துகொள்ள விரும்புகிறார்களா என்று பார்ப்பது கடினமல்ல, அவர்கள் தங்கள் ஆவிகளுக்குள் கவனமாகப் பரிசீலனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீ ஒரு குறிப்பிட்ட தொகையை எனக்கு புறநிலையாக “அர்ப்பணிக்குமாறு” நான் கேட்கவில்லை; இது இரண்டாம் பட்சமானது. நீ என்னை அறியவில்லை என்றால், நீ பேசுகின்ற நம்பிக்கை, அன்பு, மற்றும் விசுவாசம் யாவும் மாயைகள் மட்டுமே; அவை குமிழிகளாக இருக்கின்றன, எனக்கு முன்பாகப் பெருமை பேசும், அதேவேளையில் தன்னைக் குறித்து அறியாத ஒருவனாக நீ மாறுவது உறுதி. இப்படி இருக்கும்போது, நீ மீண்டும் ஒரு முறை சாத்தானின் பிடிக்குள் சிக்கிக்கொள்வாய், பிறகு உன்னை நீயே விடுவித்துக் கொள்ள முடியாது; நீ கேட்டின் மகனாகவும் அழிவின் பொருளாகவும் மாறிவிடுவாய். இருப்பினும், நீ பாராமுகமாக என் வார்த்தைகளைக் கவனிக்காமல் இருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி நீ என்னை எதிர்க்கிறாய். இது உண்மை, நீ என்னால் தண்டிக்கப்பட்ட பல்வேறு மற்றும் பலதரப்பட்ட ஆவிகளை ஆவிக்குரிய உலகின் வாயில் வழியாகப் பார்க்க வேண்டும். அவற்றில் என் வார்த்தைகளை எதிர்கொண்டது, செயலற்றதல்லாதது, அக்கறையற்றது, மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எது? அவற்றில் என் வார்த்தைகளில் முரண்படாதது எது? அவற்றில் என் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடிக்க முயற்சிக்காதது எது? அவற்றில் தங்களைப் “பாதுகாத்துக்கொள்ள” என் வார்த்தைகளைத் “தற்காப்பு ஆயுதங்களாகப்” பயன்படுத்தாதது எது? அவர்கள் என் வார்த்தைகளின் உள்ளடக்கங்களை என்னை அறிந்துகொள்வதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தவில்லை, மாறாக விளையாடுவதற்கான பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்தினார்கள். இதில், அவர்கள் என்னை நேரடியாக எதிர்க்கவில்லையா? என்னுடைய வார்த்தைகள் யார்? என்னுடைய ஆவி யார்? இதுபோன்ற கேள்விகளை நான் உங்களிடம் பலமுறை கேட்டிருக்கிறேன், ஆனாலும் நீங்கள் அவைகளைப் பற்றிய உயர்ந்த மற்றும் தெளிவான நுண்ணறிவுகளைப் பெற்றிருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது உண்மையிலேயே அவற்றை அனுபவித்திருக்கிறீர்களா? நான் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்: நீங்கள் என் வார்த்தைகளை அறியவில்லை என்றால், அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவற்றைக் கடைபிடிக்காவிட்டால், பிறகு நீங்கள் தவிர்க்க முடியாதபடிக்கு என்னுடைய தண்டனைக்குரிய பொருட்களாக மாறிப்போவீர்கள்! நீங்கள் மெய்யாகவே சாத்தானுக்குப் பலியாகிப்போவீர்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 8” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 390

அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்றாலும், தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல் என்றால் என்ன மற்றும் தேவனின் சித்தத்திற்கு இணங்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை சிலர் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால், “தேவன்” என்ற வார்த்தையையும் “தேவனின் கிரியை” போன்ற சொற்றொடர்களையும் ஜனங்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை, அதற்கு மேலாக அவருடைய கிரியையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படியானால், தேவனை அறியாதவர்கள் அனைவரும் அவரை விசுவாசிப்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, இதற்குக் காரணம் தேவனை விசுவாசிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் அறிமுகமில்லாததாகவும், மிகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இவ்வாறாக, அவர்கள் தேவனின் கோரிக்கைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவருடைய கிரியையை அறியாவிட்டால், அவர்கள் தேவன் பயன்படுத்துவற்கு தகுதியற்றவர்களாகிறார்கள், மேலும் அவர்களால் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடிவதில்லை. “தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்” என்பது தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது ஆகும்; இதுவே தேவனை விசுவாசிப்பது குறித்த மிகவும் எளிமையான கருத்தாகும். மேலும், தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது, உண்மையாக தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதற்குச் சமமானதல்ல; மாறாக, இது வலுவான மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு வகையான எளிய விசுவாசம் ஆகும். தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் வைத்தல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவன் எல்லாவற்றிற்கும் மேலான ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில், ஒருவன் தேவனின் வார்த்தைகளையும் அவருடைய கிரியைகளையும் அனுபவிக்கிறான், ஒருவனின் சீர்கெட்ட மனநிலையைத் தூய்மைப்படுத்துகிறான், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான், மேலும் தேவனை அறிந்துகொள்கிறான். இந்த வகையான ஒரு பிரயாணத்தை மட்டுமே “தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்” என்று அழைக்கலாம். ஆயினும், ஜனங்கள் பெரும்பாலும் தேவனிடத்திலான விசுவாசத்தை ஓர் எளிமையான மற்றும் அற்பமான விஷயமாகவே பார்க்கிறார்கள். இவ்வழியில் தேவனை விசுவாசிப்பவர்கள் தேவனை விசுவாசிப்பதன் அர்த்தத்தை இழந்துவிட்டிருக்கிறார்கள், கடைசி வரை அவர்கள் தொடர்ந்து விசுவாசித்தாலும், அவர்கள் ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெறப்போவதில்லை, ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். எழுத்துக்களின்படியும், வெற்றுக் கோட்பாட்டிலும் தேவனை விசுவாசிப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவனிடத்திலான விசுவாசத்தின் சாராம்சம் அவர்களிடம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது, மேலும் அவர்களால் தேவனின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. அப்படியிருப்பினும் அவர்கள் இரட்சிப்பிற்கான ஆசீர்வாதங்களுக்காகவும், போதுமான கிருபைக்காகவும் தேவனிடம் ஜெபிக்கிறார்கள். நாம் நிதானித்து, நம் இருதயங்களை அமைதிப்படுத்திக் கொண்டு, நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: தேவனை விசுவாசிப்பது என்பது உண்மையில் பூமியில் எளிதான விஷயமாக இருக்க முடியுமா? தேவனை விசுவாசிப்பது என்பது தேவனிடமிருந்து அதிகக் கிருபையைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று இருக்க முடியுமா? தேவனை அறியாமலேயே அவரை விசுவாசிப்பவர்களும் அல்லது தேவனை நம்புகிறவர்களும் அவரை எதிர்த்தால், அவர்களால் உண்மையில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியுமா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 391

மனிதன் தேவனை விசுவாசிக்கத் தொடங்கியதிலிருந்து எதை மனிதன் தனக்கென்று ஆதாயப்படுத்தியுள்ளான்? நீ தேவனைக் குறித்து என்ன தெரிந்து கொண்டிருக்கிறாய்? நீ தேவனை விசுவாசித்ததினால் எவ்வளவு மாறியிருக்கிறாய்? இன்றைக்கு, மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது அவனது ஆத்துமாவின் இரட்சிப்பிற்காகவும், அவனது உடல் நன்றாக இருப்பதற்காகவும், அல்லது தேவனை நேசிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையினைச் செழிப்பாக்கிக் கொள்வான் என்பதற்காகவும் அல்ல என இப்படி அநேகமானவற்றை நீங்கள் யாவரும் அறிந்து இருக்கிறீர்கள். இப்படியாக இருக்கும் வேளையில், நீ உன்னுடைய உடல் சார்ந்தவை நன்றாக இருப்பதற்காக அல்லது தற்காலிக சுகத்திற்காக தேவனை நேசிக்கிறேன் என்றும், இதற்கு மேல் நான் எதனையும் கேட்க மாட்டேன் என்கிற அளவிற்கு தேவனிடத்தில் கொண்டிருக்கும் உன் அன்பு அதனுடைய உச்சத்தைத் தொட்டு விட்டதாக இருந்தாலும், நீ தேடும் அந்த அன்பு அவ்வேளையிலும் கலப்படமான அன்பாக, தேவனுக்குப் பிரியமில்லாத ஒன்றாகவே காணப்படுகிறது. அவர்களது மந்தமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அல்லது அவர்களது இருதயங்களில் இருக்கின்ற வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தேவன் மீது தாங்கள் கொண்டிருக்கின்ற அன்பைப் பயன்படுத்துபவர்கள் சுகமான வாழ்க்கை வாழ பேராசைக் கொண்டவர்களாகவும், தேவனிடத்தில் மெய்யான அன்புகூரும்படி தேவனை உண்மையாகத் தேடாத வகையைச் சேர்ந்த ஜனங்களாக இருக்கின்றனர். இந்தவித அன்பு கட்டாயத்தின் பேரில் உண்டாகிறது, இது மனதின் இன்பத்திற்கான நாட்டமாகும், தேவனுக்கு இப்படிப்பட்ட அன்பு தேவையில்லை. அப்படியென்றால், உன்னுடைய அன்பு எப்படிப்பட்டது? எதற்காக தேவனிடம் அன்புகூருகிறாய்? தேவன் மீது எவ்வளவு மெய்யான அன்பைத் தற்பொழுது உனக்குள் கொண்டிருக்கிறாய்? உங்களில் பெரும்பாலானவர்களின் அன்பு மேற்சொல்லிய அன்பைப் போன்றே காணப்படுகின்றது. இந்த விதமான அன்பினால் முன்பிருந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள மட்டுமே முடியும்; அது மாறாத நிலையை அடைய முடியாது அல்லது மனிதனுக்குள் ஆழமாக வேர்விட முடியாது. இந்த விதமான அன்பு மலரும் பூ ஒன்று கனி கொடுக்காமல் உதிர்ந்து விடுவதைப் போல் மட்டுமே இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இத்தகைய விதமாக தேவனை ஒரு கட்டத்தில் நேசித்துவிட்டு, உன்னை வழி நடத்துவதற்கு ஒருவரும் இல்லையென்றால், நீ விழுந்து போவாய். தேவனை நேசிக்கும் போது மட்டுமே உன்னால் தேவனை நேசிக்க முடிந்து, அதற்குப் பின் உன் வாழ்வின் மனநிலை மாற்றம் பெறாமல் இருக்கின்றது என்றால், நீ அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் மூடுதலில் இருந்து தப்பிக்க முடியாமல், சாத்தானின் கட்டுகள் மற்றும் சூழ்ச்சியில் இருந்து விடுபட முடியாதவனாக அப்படியே நின்று விடுவாய். இது போன்ற எவரையும் தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது; இறுதியில், அவர்களின் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இன்னும் சாத்தானுக்கு சொந்தமானதாகவே இருக்கும். இது குறித்து எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட முடியாத அனைவரும் ஆரம்பத்தில் இருந்த இடத்திற்குத் திரும்புவார்கள், அதாவது, சாத்தானிடத்திற்குத் திரும்பிச் செல்வார்கள் மற்றும் தேவனிடத்தில் இருந்து வருகிற அடுத்த படியான தண்டனையைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்குச் செல்வார்கள். சாத்தானை உதறித் தள்ளி விட்டு அவனது ஆதிக்கத்தில் இருந்து தப்பி வருபவர்களே தேவனால் ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுபவர்கள். அவர்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் மக்கள் மத்தியில் எண்ணப்பட்டிருக்கிறார்கள். ராஜ்யத்தின் மக்கள் இப்படித்தான் வருகிறார்கள். இந்த வகையான மனிதனாக நீயும் மாற விரும்புகிறாயா? நீயும் தேவனால் ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? நீயும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்து தேவனிடம் திரும்ப விரும்புகிறாயா? இப்பொழுது நீ சாத்தானுக்குரியவனா அல்லது ராஜ்யத்தின் ஜனமாக எண்ணப்பட்டவர்களில் ஒருவனாக இருக்கின்றாயா? இந்த விஷயங்கள் உனக்கு ஏற்கெனவே தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும், மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 392

கடந்த காலத்தில், அநேகர் கட்டுப்பாடற்ற குறிக்கோள்களுடனும் கருத்துக்களுடனும் தேடினர், அவர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளின் விளைவாகத் தேடினர். இப்படிப்பட்ட பிரச்சினைகளை இப்போதைக்கு ஒதுக்கி வைப்போம்; நாம் தேவனுக்கு முன்பாக ஒரு சாதாரணமான நிலையினைக் கொண்டிருக்க வேண்டும், படிப்படியாக சாத்தானின் ஆதிக்கத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்று அதனால் தேவன் உங்களை ஆதாயப்படுத்தி, நீங்கள் தேவன் எதிர்பார்க்கின்றபடியான வாழ்க்கையை இந்த உலகில் வாழ உதவும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதே இப்போதைய முக்கியமான தேவையாயிருக்கிறது. இந்த வழியாகத்தான் தேவனுடைய நோக்கங்களை உங்களால் நிறைவேற்ற முடியும். அநேகர் தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனாலும் தேவன் எவற்றை விரும்புகிறார் அல்லது சாத்தான் எவற்றை விரும்புகிறான் என்பதை அறியாது இருக்கின்றனர். அவர்கள் குழப்பமான ஒரு வழியை நம்பி, அது செல்லும் வழியிலேயே செல்வதினால், ஓர் இயல்பான கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருக்காலும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் இயல்பான தனிப்பட்ட உறவுகளையும் பெற்றிருக்கவில்லை; தேவனுடன் சரியான உறவையும் கொண்டிருக்கவில்லை. மனிதனின் கஷ்டங்கள், மீறுதல்கள் மற்றும் பல காரணங்கள் தேவனுடைய சித்தத்திற்குத் தடையாக உள்ளன என்பதை இதன் மூலம் காணலாம். மனிதன் தேவனை விசுவாசிப்பதில் செல்ல வேண்டிய சரியான பாதையில் இன்னும் செல்லவில்லை, மனித வாழ்க்கையில் மெய்யான அனுபவத்திற்குள் செல்லவில்லை என்பதை நிரூபிக்க இதுவே போதுமானது. தேவனை விசுவாசிக்கும் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பது எதைக் குறிக்கிறது? தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தை எப்பொழுதும் அமைதலாக்கி தேவனுடன் ஓர் இயல்பான ஐக்கியத்தை அனுபவித்து, படிப்படியாக மனிதனில் என்ன குறை இருக்கின்றது என்பதை அறிந்து தேவனைக் குறித்து ஆழமான அறிவை மெதுவாகப் பெற்றுக் கொள்வதையே சரியான பாதையில் செல்வது என்பது குறிக்கின்றது. இதன் மூலமாக, உன் ஆவி புதிய நுண்ணறிவையும் புதிய பிரகாசிப்பித்தலையும் அனுதினமும் பெற்றுக் கொள்கிறது. உன் ஆர்வம் வளர்கின்றது, நீ சத்தியத்திற்குள் நுழைய முயற்சி செய்கிறாய், ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சம் மற்றும் புதிய புரிதல் உண்டாகிறது. இந்தப் பாதையில் பயணிக்கும் போது, படிப்படியாக நீ சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று வாழ்க்கையில் வளருகிறாய். இப்படிப்பட்ட மக்கள் சரியான பாதையில் நுழைந்திருக்கின்றனர். உன்னுடைய நடைமுறை அனுபவங்களையும், நீ சென்ற உன் விசுவாசப் பாதையையும் சோதித்துப் பார். மேலே குறிப்பிட்டவற்றை நீ ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதைக் கண்டறிகிறாயா? சாத்தானின் ஆதிக்கத்தின் பிடிகளிலிருந்தும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்தும் எந்தக் காரியங்களில் விடுதலைப் பெற்று இருக்கிறாய்? இன்னும் சரியான பாதையில் செல்ல நீ ஆரம்பிக்கவில்லை என்றால் சாத்தானோடு நீ கொண்டிருக்கும் உறவு இன்னும் வேரோடு வெட்டப்படவில்லை என்றுதான் அர்த்தம். இப்படியாக உன் நிலை இருக்குமானால், தேவனிடம் அன்புகூருவதற்கான உனது தேடுதல் உன்னை நம்பகமான, ஒரே நோக்கமுடைய மற்றும் சுத்தமான அன்பிற்கு நேராக வழிநடத்துமா? தேவன் மீதான உன் அன்பு தடுமாற்றம் இல்லாததும் மனப்பூர்வமானதும் என்று நீ சொல்கிறாய், ஆனாலும் நீ சாத்தானுடைய கட்டுகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. நீ தேவனை முட்டாளாக்க முயற்சிக்கவில்லையா? தேவனிடம் நீ கொண்டிருக்கும் அன்பு கலப்படமில்லா நிலைக்கு வர வேண்டும் எனவும், தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட வேண்டும் எனவும், ராஜ்யத்தின் மக்களின் எண்ணிக்கைக்குள் வர வேண்டும் எனவும் நீ விரும்புவாயானால், தேவனை விசுவாசிக்கும் சரியான பாதையில் முதலில் நீ உன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 393

எல்லா மக்களிடமும் இருக்கின்ற பொதுவான பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அதைக் கைக்கொள்ளத் தவறிவிடுகிறார்கள். ஏனென்றால், ஒருபுறம், அவர்கள் அதற்கான விலைக்கிரயத்தைக் கொடுக்கத் தயாராக இல்லை, மறுபுறம், அவர்களின் பகுத்தறிவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது; அன்றாட வாழ்க்கையில் உள்ள பல சிரமங்களை அவர்களால் பார்க்க முடிவதில்லை, அதை எப்படிச் சரியாகப் பயிற்சி செய்வது என்று தெரிவதில்லை. மக்களின் அனுபவங்கள் மிகவும் ஆழமற்றவை என்பதாலும், அவர்களின் திறமை மிகவும் குன்றி உள்ளதாலும், மேலும் அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் அளவு குறைவாக இருப்பதாலும், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களைத் தீர்க்க அவர்களுக்கு எந்த வழியும் இல்லை. அவர்கள் தேவனை வார்த்தையில் மட்டுமே விசுவாசிக்கிறார்களே தவிர, தேவனைத் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டுவர முடிவதில்லை. அதாவது, தேவன் தேவனாக இருக்கிறார், வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கிறது, மக்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் தேவனுடன் எந்த உறவும் இல்லை என்பது போல இருக்கிறது. எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். இவ்வாறு தேவனை விசுவாசித்தால், மக்கள் உண்மையில் அவரால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிபூரணப்படுத்தப்பட மாட்டார்கள். உண்மையில், தேவனின் வார்த்தை முழுமையாக உணரப்படவில்லை என்பதனால் அல்ல, மாறாக, அவருடைய வார்த்தையைப் பெறுவதற்கான மக்களின் திறன் மிகவும் குறைவாக உள்ளது. தேவனின் உண்மையான சித்தத்தின்படி யாரும் செயல்படுவதில்லை என்று ஒருவர் கூறலாம்; மாறாக, தங்களுடைய சொந்த நோக்கங்கள், கடந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த மதக் கருத்துக்கள் மற்றும் காரியங்களைச் செய்வதற்கான அவர்களின் சொந்த வழி ஆகியவற்றிற்கு ஏற்ப தேவன் மீதான அவர்களுடைய விசுவாசம் இருக்கிறது, தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மறுரூபமாதலுக்கு உள்ளாகி, அவருடைய சித்தத்திற்கு ஏற்ப செயல்படத் தொடங்குபவர்கள் மிகக் குறைவு. மாறாக, அவர்கள் தவறான நம்பிக்கைகளில் நிலைத்திருக்கிறார்கள். மக்கள் தேவனை விசுவாசிக்கத் தொடங்கும் போது, மதத்தின் வழக்கமான விதிகளின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்கின்றார்கள், மேலும் முற்றிலும் அவர்களுக்குச் சொந்தமான வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்படையில் வாழ்கிறார்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். பத்துப் பேரில் ஒன்பது பேர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று கூறலாம். தேவனை விசுவாசிக்கத் தொடங்கியபின், மற்றொரு திட்டத்தை வகுத்து, ஒரு புதிய நிலைக்குத் திரும்புகிறவர்கள் மிகக் குறைவு. தேவனுடைய வார்த்தையைச் சத்தியமாகக் கருத அல்லது அதைச் சத்தியமாக ஏற்றுக் கொண்டு அதைக் கைக்கொள்ள மனிதகுலம் தவறிவிட்டது.

உதாரணமாக, இயேசுவின் மீதான விசுவாசத்தை எடுத்துக்கொள்வோம். யாராவது இப்போதுதான் விசுவாசிக்க ஆரம்பித்திருந்தாலும் அல்லது மிக நீண்ட காலமாக விசுவாசித்திருந்தாலும், அனைவருமே தங்களிடம் இருந்த தாலந்துகளைப் பயன்படுத்தவும், அவர்களிடம் இருந்த திறமைகளை வெளிப்படுத்தவுமே அவ்வாறு செய்தனர். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் “தேவன் மீதான விசுவாசம்” என்ற இந்த மூன்று வார்த்தைகளையும் வெறுமெனே சேர்த்தனர், ஆயினும் அவர்களின் மனநிலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை, தேவன் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசம் சிறிதளவும் வளரவில்லை. அவர்களின் பின்தொடர்தல் அனலாகவோ குளிராகவோ இல்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுவதாகச் சொல்லவில்லை, ஆனால் அனைத்தையும் தேவனுக்கென்று பரிசுத்தப்படுத்தவும் இல்லை. அவர்கள் ஒருபோதும் தேவனை மெய்யாக அன்புகூர்ந்ததில்லை அல்லது அவருக்குக் கீழ்ப்படிந்ததில்லை. தேவன் மீதான அவர்களின் விசுவாசம் என்பது உண்மை மற்றும் போலி ஆகியவற்றின் கலவையாகும், அவர்கள் ஒரு கண்ணைத் திறந்து கொண்டும் மறு கண்ணை மூடிக்கொண்டும் அதை அணுகினர். அவர்கள் விசுவாசத்தைக் கைக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் குழப்பமான நிலையில் தொடர்ந்தனர், கடைசியில் ஒரு குழப்பமான மரணம் அடைந்தனர். அவை எல்லாவற்றினாலும் என்ன பயன்? இன்று, நடைமுறைத் தேவனை விசுவாசிக்க, நீ சரியான பாதையில் நடக்க வேண்டும். நீ தேவனை விசுவாசித்தால், நீ ஆசீர்வாதங்களை மட்டுமே தேடாமல், தேவனை நேசிக்கவும், தேவனை அறிந்து கொள்ளவும் வேண்டும். அவருடைய பிரகாசத்தின் மூலமும், உன் தனிப்பட்ட தேடலின் மூலமும், நீ அவருடைய வார்த்தையைப் புசித்துப் பானம் பண்ணலாம், தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை வளர்த்துக் கொள்ளலாம், மேலும் உன் உள்ளான இருதயத்திலிருந்து வரும் தேவனின் உண்மையான அன்பைப் பெறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மீதான உன் அன்பு மிகவும் உண்மையானதாக இருந்தால், மேலும், அவர் மீது நீ வைத்திருக்கும் அன்பின் வழியை ஒருவரும் அழிக்கவோ அதற்கு எதிராக நிற்கவோ முடியாது, இந்த நேரத்தில் நீ தேவன் மீதுள்ள உன் விசுவாசத்தில் சரியான பாதையில் செல்கிறாய். நீ தேவனுக்குரியவன் என்பதை இது நிரூபிக்கிறது, ஏனென்றால் உன் இருதயம் ஏற்கனவே தேவனின் வசம் உள்ளது, வேறு எதுவும் உன்னை ஆட்கொள்ள முடியாது. உன் அனுபவத்தின் மூலமாகவும், நீ செலுத்திய விலைக்கிரயத்தின் மூலமாகவும், தேவனின் கிரியையின் மூலமாகவும், தேவன் மீது கோரப்படாத அன்பை உன்னால் வளர்த்துக் கொள்ள முடியும். நீ அவ்வாறு செய்யும்போது, நீ சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்வாய். அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து நீ விடுபட்டால்தான் நீ தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டிருக்கிறாய் என்று உன்னால் கூற முடியும். தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ இந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். இது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். நீங்கள் யாரும் தற்போதைய விவகாரத்தின் நிலைமைகளில் திருப்தி அடையக்கூடாது. தேவனின் கிரியையைக் குறித்து உங்களால் இருமனமுள்ளவராக இருக்க முடியாது, உங்களால் அதை லேசானதாகக் கருதவும் முடியாது. நீங்கள் எல்லா வகையிலும், எல்லா நேரங்களிலும் தேவனைப் பற்றி சிந்திக்க வேண்டும், எல்லாவற்றையும் அவர் பொருட்டுச் செய்ய வேண்டும். நீங்கள் பேசும்போதும் அல்லது செயல்படும்போதும், முதலில் தேவனுடைய வீட்டின் நலன்களை முன்னிறுத்த வேண்டும். இதன் மூலமாக மட்டுமே உங்களால் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக இருக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 394

தேவன் மீதுள்ள விசுவாசத்தில், மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் உதட்டளவில் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையிலோ தேவன் முற்றிலுமாக இல்லை. எல்லா மக்களும், தேவன் இருப்பதை நம்புகிறார்கள், ஆனாலும் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. மக்களின் வாய்கள் தேவனிடம் அநேக ஜெபங்களை ஏறெடுக்கின்றன, ஆனால் தேவனுக்கு அவர்களின் இதயங்களிலோ சிறிதளவே இடமுள்ளது, எனவே தேவன் அவர்களை மீண்டும் மீண்டும் சோதிக்கிறார். மக்கள் தூய்மையற்றவர்களாக இருப்பதனால், அவர்களைச் சோதிப்பதைத் தவிர தேவனுக்கு வேறு வழியில்லை, இதனால் அவர்கள் அவமானகரமாக உணரலாம், இந்தச் சோதனைகளுக்கு மத்தியில் தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளலாம். இல்லையென்றால், மனிதர்கள் பிரதான தூதனின் சந்ததியினராக மாறுவார்கள், மேலும் மிகவும் சீர்கெட்டவர்களாக மாறுவார்கள். தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் செயல்பாட்டில், ஒவ்வொரு நபரும் தேவனின் இடைவிடாத சுத்திகரிப்பின் கீழ் தங்களின் பல தனிப்பட்ட நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விலக்குகிறார்கள். இல்லையென்றால், தேவன் யாரையும் பயன்படுத்துவதற்கான வழி இருக்காது, மேலும் அவர் செய்ய வேண்டிய கிரியையை மக்களிடம் செய்வதற்கும் வழி இருக்காது. தேவன் முதலில் மக்களைச் சுத்திகரிக்கிறார், இந்தச் செயல்முறையின் மூலம், அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளலாம், மேலும் தேவன் அவர்களை மாற்றக்கூடும். அப்போதுதான் தேவன் தம்முடைய ஜீவனை அவர்களுக்குள் கிரியை செய்ய வைக்கிறார், இதன் மூலமாக மட்டுமே அவர்களின் இருதயங்கள் முழுமையாக தேவனிடம் திரும்ப முடியும். எனவே நான் சொல்கிறேன், தேவனை விசுவாசிப்பது என்பது மக்கள் சொல்வது போல் எளிதானது அல்ல. தேவன் அதைப் பார்ப்பதனால், உனக்கு அறிவு மட்டுமே உண்டாயிருந்து, ஆனால் அவருடைய வார்த்தையை ஜீவனாகக் கொண்டிருக்கவில்லை என்றால், மேலும் நீ உன் சொந்த அறிவுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், சத்தியத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுடைய வார்த்தைப்படி வாழவோ முடியாவிட்டால், தேவனை நேசிக்கும் இருதயம் உன்னிடம் இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும், உன் இருதயம் தேவனுக்கு உரியதல்ல என்பதை இது காட்டுகிறது. ஒருவர் தேவனை விசுவாசிப்பதின் மூலம் அவரை அறிந்து கொள்ள முடியும்: இதுவே இறுதி இலக்கும், மனிதனின் நாட்டத்தின் குறிக்கோளும் ஆகும். தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும், இதனால் அவை உனக்கு நடைமுறையில் பலனளிக்கும். உன்னிடம் கோட்பாட்டு அறிவு மட்டுமே இருந்தால், தேவன் மீதான உன் விசுவாசம் வீணாகிவிடும். நீ அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே, உன் விசுவாசம் முழுமையானதாகவும், தேவனின் சித்தத்திற்கு இணங்கவும் இருப்பதாகக் கருத முடியும். இந்த வழியில், மக்கள் அதிகமாக அறிவு சார்ந்ததைப் பற்றி பேசலாம், ஆனால் அவர்கள் இறக்கும் போது, அவர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்புகின்றன, மேலும் அவர்கள் வாழ்நாளை வீணடித்ததற்காகவும், முதிர் வயது வரை வீணாக வாழ்ந்ததற்காகவும் தங்களை வெறுக்கிறார்கள். அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுக்குச் சாட்சிப் பகரவோ முடிவதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் வெறுமனே அங்கும் இங்கும் ஓடுகிறார்கள், ஒரு தேனீ போலச் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், மரணத்தின் விளிம்பில் வைத்துதான் அவர்களிடம் உண்மையான சாட்சியம் இல்லாததையும் அவர்கள் தேவனை அறியவில்லை என்பதையும் இறுதியாகக் காண்கிறார்கள். இது மிகவும் தாமதமானதாக இல்லையா? நீ ஏன் இன்றைய நாளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி நீ நேசிக்கும் சத்தியத்தைப் பின்பற்றக்கூடாது? நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாழ்க்கையில் நீ சத்தியத்திற்காகக் கஷ்டப்படாவிட்டால் அல்லது அதைப் பெற முயற்சிக்கவில்லை என்றால், மரிக்கும் நேரத்தில் நீ வருத்தப்பட விரும்புகிறாயா? அப்படியானால், ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? உண்மையாகவே, மக்கள் சிறிதளவு முயற்சி செய்தால், சத்தியத்தைக் கடைப்பிடிக்கலாம், அதன் மூலம் தேவனை திருப்திப்படுத்தலாம். மக்களின் இருதயங்கள் எப்போதுமே சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், அவர்கள் தேவனுக்காக செயல்பட முடியாமல் போகிறது, மேலும் அவர்களின் மாம்சத்திற்காக தொடர்ந்து விரைந்து செயல்படுகின்றனர், இறுதியில் அதைக்காட்ட எதுவும் இருப்பதில்லை. இந்தக் காரணத்திற்காக, மக்கள் தொடர்ந்து தொல்லைகள் மற்றும் சிரமங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை சாத்தானின் உபத்திரவம் அல்லவா? இது மாம்சத்தின் சீர்கேடு அல்லவா? நீ உதட்டளவில் பேசி தேவனை முட்டாளாக்க முயற்சிக்கக்கூடாது. மாறாக, நீ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உன்னையே நீ ஏமாற்ற வேண்டாம், அதில் பயன் என்ன? உன் மாம்சத்திற்காக வாழ்வதன் மூலமும், ஆதாயத்திற்காகவும் புகழுக்காகவும் போராடுவதன் மூலமும் உன்னால் என்ன பெற முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 395

இப்போது, நீங்கள் தேவனுடைய ஜனங்களாக மாறுவதை நாட வேண்டும் மற்றும் முழு பிரவேசத்தையும் சரியான பாதையில் தொடங்க வேண்டும். தேவனுடைய ஜனங்களாக இருப்பது என்பது, ராஜ்யத்தின் யுகத்திற்குள் பிரவேசிப்பதைக் குறிக்கிறது. இன்று, நீங்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகிறீர்கள். உங்கள் எதிர்கால ஜீவிதம் முன்பு இருந்ததைப் போலவே மந்தமானதாகவும், ஒழுங்கற்றதாகவும் இருப்பது நிறுத்தப்படும். அவ்வாறு ஜீவிப்பதால், தேவனால் எதிர்பார்க்கப்படும் தரங்களை அடைவது சாத்தியமற்றதாக இருக்கிறது. எந்த அவசரத்தையும் நீ உணரவில்லை என்றால், அது உன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான விருப்பம் உனக்கு இல்லை என்பதையும், உன் பின்தொடர்தல் குழப்பமானதாகவும் புரியாததாகவும் இருப்பதையும், தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதையும் காட்டுகிறது. ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது என்பது தேவனுடைய ஜனங்களின் ஜீவிதத்தைத் தொடங்குவதாகும்—இதுபோன்ற பயிற்சியை ஏற்க நீ தயாராக இருக்கிறாயா? அவசர உணர்வை உணர நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய ஒழுங்குபடுத்தலின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய சிட்சையின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகள் உன் மீது வந்து உன்னைச் சோதிக்கும்போது, நீ எவ்வாறு செயல்படுவாய்? எல்லா விதமான உண்மைகளையும் எதிர்கொள்ளும்போது நீ என்ன செய்வாய்? கடந்த காலத்தில், உங்கள் கவனம் ஜீவிதத்தில் இல்லை. இன்று, நீங்கள் ஜீவிதத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். இதைத்தான் ராஜ்யத்தின் ஜனங்கள் அடைய வேண்டும். தேவனுடைய ஜனங்களாகிய அனைவரும் ஜீவனைக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுடைய ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். ராஜ்யத்தின் ஜனங்களிடம் தேவன் எதிர்பார்ப்பது இதுதான்.

ராஜ்யத்தின் ஜனங்களிடமான தேவனுடைய எதிர்பார்ப்புகள் பின்வருமாறு இருக்கின்றன:

1. அவர்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்க வேண்டும். அதாவது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையில் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்க வேண்டும்.

3. தங்கள் இருதயங்கள் தேவன் தொடும்படியாக அவர்கள் பின்பற்ற வேண்டும். உன் இருதயம் முழுவதுமாக தேவனிடமாய்த் திரும்பி, உனக்கு ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கும்போது, நீ விடுதலையின் உலகில் ஜீவிப்பாய், அதாவது தேவனுடைய அன்பின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் நீ ஜீவிப்பாய். நீ தேவனுடைய கவனிப்பிலும் பாதுகாப்பிலும் ஜீவிக்கும்போதுதான் நீ தேவனுக்குச் சொந்தமானவனாக இருப்பாய்.

4. அவர்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும்.

5. அவர்கள் பூமியில் தேவனுடைய மகிமையின் ஒரு வெளிப்பாடாக மாற வேண்டும்.

இந்த ஐந்து காரியங்களும் உங்களுக்கான எனது ஆணைகளாக இருக்கின்றன. என் வார்த்தைகள் தேவனுடைய ஜனங்களிடம் பேசப்படுகின்றன. இந்த ஆணைகளை நீ ஏற்க விரும்பவில்லை என்றால், நான் உன்னை நிர்ப்பந்திக்க மாட்டேன்—ஆனால் நீ அவற்றை உண்மையாக ஏற்றுக்கொண்டால், உன்னால் தேவனுடைய சித்தத்தைச் செய்ய முடியும். இன்று, நீங்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்கத் தொடங்குகிறீர்கள் மற்றும் ராஜ்யத்தின் ஜனங்களாக மாறுவதைத் தொடர நாடுகிறீர்கள், மேலும் ராஜ்யத்தின் ஜனங்களாக இருக்கத் தேவையான தரங்களை அடைகின்றீர்கள். இதுவே பிரவேசத்தின் முதல் படியாக இருக்கிறது. தேவனுடைய சித்தத்தை நீங்கள் முழுமையாகச் செய்ய விரும்பினால், இந்த ஐந்து ஆணைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை உன்னால் அடைய முடிந்தால், நீ தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருப்பாய் மற்றும் நிச்சயமாக தேவன் உன்னைப் பெரிதளவில் பயன்படுத்துவார். இன்று முக்கியமானது என்னவென்றால், ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது தான். ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது ஆவிக்குரிய ஜீவிதத்தை உள்ளடக்கியது. முன்னதாக, ஆவிக்குரிய ஜீவிதத்தைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை, ஆனால் இன்று, நீங்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகையில், நீங்கள் அதிகாரப்பூர்வமாக ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிக்கிறீர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 396

ஆவிக்குரிய ஜீவிதம் எத்தகைய ஜீவிதம்? ஆவிக்குரிய ஜீவிதம் என்பது உன் இருதயம் முழுவதுமாக தேவனிடம் திரும்பியிருக்கிறதும், தேவனுடைய அன்பைக் கவனத்தில் கொள்ள முடியும் என்பதும் ஆகும். இது, தேவனுடைய வார்த்தைகளில் நீங்கள் ஜீவிப்பதும், வேறு எதுவும் உங்கள் இருதயத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதும், இன்று நீங்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது மற்றும் உங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக பரிசுத்த ஆவியானவரின் ஒளியால் இன்று வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதும் ஆகும். மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான அத்தகைய ஜீவிதமே ஆவிக்குரிய ஜீவிதமாக இருக்கிறது. இன்றைய ஒளியை உன்னால் பின்பற்ற முடியவில்லை என்றால், தேவனுடனான உன் உறவில் ஓர் இடைவெளி உருவாகி உள்ளது—அது துண்டிக்கப்பட்டிருக்கலாம்—மேலும் நீ இயல்பான ஆவிக்குரிய ஜீவிதம் இல்லாமல் இருக்கிறாய். தேவனுடனான ஓர் இயல்பான உறவு என்பது இன்று தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதற்கான அஸ்திபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உன்னிடம் இயல்பான ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கிறதா? உன்னிடம் தேவனுடனான இயல்பான உறவு இருக்கிறதா? நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுகிறவனா? இன்று நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் ஒளியைப் பின்பற்றவும், தேவனுடைய சித்தத்தை அவருடைய வார்த்தைகளுக்குள் புரிந்துகொள்ளவும், இந்த வார்த்தைகளில் பிரவேசிக்கவும் முடிந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தைப் பின்பற்றுகிற ஒருவராக இருக்கிறீர்கள். நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தைப் பின்பற்றவில்லை என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி சத்தியத்தைப் பின்பற்றாத ஒருவனாக நீ இருக்கிறாய். தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் செயல்பட வாய்ப்பேயில்லை, இதன் விளைவாக, அத்தகையவர்களால் ஒருபோதும் தங்கள் பெலனை வரவழைத்துக் கொள்ள முடியாது மற்றும் அவர்கள் எப்போதும் செயலற்றவர்களாக இருப்பார்கள். இன்று, நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தைப் பின்பற்றுகிறாயா? நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தில் இருக்கிறாயா? நீ ஒரு செயலற்ற நிலையில் இருந்து வெளிவந்திருக்கிறாயா? இன்று, தேவனுடைய வார்த்தைகளை நம்புகிற அனைவரும், தேவனுடைய கிரியையை அஸ்திபாரமாக எடுத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரின் ஒளியைப் பின்பற்றுகிற அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தில் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையானவை மற்றும் சரியானவை என்று நீ நம்பினால், தேவன் எதைச் சொன்னாலும் அவருடைய வார்த்தைகளை நீ நம்பினால், நீ தேவனுடைய கிரியைக்குள் பிரவேசிப்பதை நாடும் ஒருவனாக இருக்கிறாய், இவ்வாறு நீ தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறாய்.

பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தினுள் பிரவேசிக்க, நீங்கள் தேவனோடு ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்க வேண்டும், முதலில் உங்கள் செயலற்ற நிலையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் கூட்டத்தைப் பின்தொடர்கிறார்கள், அவர்களுடைய இருதயங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. அத்தகையவர்களுக்குத் தங்களை மேம்படுத்திக்கொள்ள விருப்பமில்லை, மேலும் அவர்கள் பின்பற்றும் தரங்களும் மிகவும் தரம் தாழ்ந்தவை. தேவனை நேசிப்பதில் உள்ள பின்தொடர்தலும், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதும் மட்டுமே தேவனுடைய சித்தமாக இருக்கிறது. தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்த தங்கள் மனசாட்சியை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் உள்ளனர், ஆனால் அது தேவனுடைய சித்தத்தைப் பூர்த்தி செய்யாது. நீ பின்பற்றும் தரநிலைகள் எவ்வளவு உயர்வாக இருக்கிறதோ, அவ்வளவாக அது தேவனுடைய சித்தத்திற்கு உகந்ததாக இருக்கும். இயல்பானவராகவும், தேவனுக்கான அன்பைப் பின்பற்றுபவராகவும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராகவும் மாறுவதற்கு ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதே உங்கள் உண்மையான எதிர்காலமாக இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதமாக இருக்கிறது. உங்களை விட அதிக பாக்கியவான்கள் யாரும் இல்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? ஏனென்றால், தேவனை நம்பாதவர்கள் மாம்சத்திற்காக ஜீவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் சாத்தானுக்காக ஜீவிக்கிறார்கள், ஆனால் இன்று நீங்கள் தேவனுக்காக ஜீவிக்கிறீர்கள் மற்றும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஜீவிக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் ஜீவிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்கிறேன். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இந்த ஜனக்கூட்டத்தால் மட்டுமே, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதத்தை ஜீவிக்க முடிகிறது: பூமியில் வேறு எவராலும் அத்தகைய மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள ஜீவிதத்தை ஜீவிக்க முடியவில்லை. ஏனென்றால், நீங்கள் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள், தேவனால் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும், தேவன் உங்களிடம் அன்பு காட்டியிருக்கிறார் என்பதால், நீங்கள் உண்மையான ஜீவிதத்தைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள், மற்றும் மிக உயர்ந்த மதிப்புள்ள ஜீவிதத்தை எவ்வாறு ஜீவிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். இது உங்களது பின்தொடர்தல் நல்லதாக இருப்பதால் அல்ல, ஆனால் தேவனுடைய கிருபையால் அவ்வாறு இருக்கிறது. உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்தவர் தேவன், உங்கள் இருதயத்தைத் தொட்டவர் தேவனுடைய ஆவியானவர் மற்றும் அவருக்கு முன்பாக வருவதற்கான நல்ல அதிர்ஷ்டத்தை அவரே உங்களுக்குத் தருகிறார். தேவனுடைய ஆவி உங்களை பிரகாசிப்பித்திருக்கவில்லை என்றால், உங்களால் தேவனைப் பற்றிய அழகான காரியங்களைக் காண இயலாது மற்றும் தேவனை நேசிப்பதும் உங்களுக்கு சாத்தியமற்றதாகும். தேவனுடைய ஆவியானவர் ஜனங்களுடைய இருதயங்களைத் தொட்டதால் மட்டுமே அவர்களுடைய இருதயங்கள் தேவனிடம் திரும்பியுள்ளன. சில நேரங்களில், நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்கும்போது, உங்கள் ஆவி தொடப்படுகிறது, தேவனை நேசிப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதாகவும், உங்களுக்குள் பெரும் பெலன் இருப்பதாகவும், நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாத எதுவும் இல்லை என்பதாகவும் நீங்கள் உணர்கிறீர்கள். நீ இப்படி உணர்ந்தால், நீ தேவனுடைய ஆவியால் தொடப்பட்டிருக்கிறாய், உன் இருதயம் முற்றிலுமாக தேவனிடம் திரும்பிவிட்டது. “தேவனே! நாங்கள் உண்மையிலேயே உம்மால் முன்குறிக்கப்பட்டு தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம். உமது மகிமை எனக்குப் பெருமையைத் தருகிறது, மற்றும் உம் ஜனங்களில் ஒருவனாக இருப்பது எனக்கு மகிமையைத் தருகிறது. உமது சித்தத்தைச் செய்ய நான் எதையும் செலவழிப்பேன் மற்றும் எதையும் கொடுப்பேன் மற்றும் என் வருடங்கள் மற்றும் என் ஜீவ கால முயற்சிகள் அனைத்தையும் உமக்காக அர்ப்பணிப்பேன்,” என்று ஜெபித்து நீ தேவனிடம் சொல்வாய். நீ இப்படி ஜெபிக்கும்போது, தேவனுக்கான முடிவில்லாத அன்பும், உண்மையானக் கீழ்ப்படிதலும் உன் இருதயத்தில் இருக்கும். இது போன்ற ஒரு அனுபவம் எப்போதாவது உனக்கு இருந்திருக்கிறதா? ஜனங்கள் அடிக்கடி தேவனுடைய ஆவியானவரால் தொடப்படும்போது, அவர்கள் குறிப்பாகத் தங்கள் ஜெபங்களில் தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார்கள்: “தேவனே! உமது மகிமையின் நாளைக் காண நான் விரும்புகிறேன், மேலும் நான் உமக்காக ஜீவிக்க விரும்புகிறேன்—உமக்காக ஜீவிப்பதை விட வேறு எதுவும் தகுதியானதாகவோ அர்த்தமுள்ளதாகவோ இல்லை, மற்றும் சாத்தானுக்காகவும் மாம்சத்துக்காகவும் ஜீவிக்க எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. இன்று உமக்காக ஜீவிக்க எனக்கு உதவுவதன் மூலம் நீர் என்னை உயர்த்துகிறீர்.” நீ இவ்வாறு ஜெபித்தவுடன், உன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது என்றும், தேவனைப் பெற வேண்டும் என்றும், நீங்கள் ஜீவனுடன் இருக்கும்போது தேவனைப் பெறாமல் இறப்பதை வெறுக்கிறீர்கள் என்றும் நீங்கள் உணருவீர்கள். அத்தகைய ஜெபத்தை ஏறெடுத்தப் பிறகு, உங்களுக்குள் ஒரு சோர்வடையாத பெலன் இருக்கும், மேலும் அது எங்கிருந்து வருகிறது என்பது உனக்குத் தெரியாது. உன் இருதயத்தில் எல்லையற்ற வல்லமை இருக்கும் மற்றும் தேவன் மிகவும் அழகானவர், அவர் நேசிக்கத் தகுந்தவர் என்பதையும் நீ உணர்வாய். அப்போதுதான் நீங்கள் தேவனால் தொடப்பட்டிருப்பீர்கள். அத்தகைய அனுபவத்தைப் பெற்ற அனைவருமே தேவனால் தொடப்பட்டிருக்கிறார்கள். தேவனால் அடிக்கடி தொடப்படுவோருக்கு, அவர்களுடைய ஜீவிதத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவர்களால் தீர்மானத்தை எடுக்க முடிகிறது மற்றும் அவர்கள் தேவனை முழுமையாக அடையத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இருதயங்களில் தேவன் மீதுள்ள அன்பு வலுவாக இருக்கிறது. அவர்களுடைய இருதயங்கள் முழுமையாகத் தேவனிடம் திரும்பியுள்ளன, குடும்பம், உலகம், சிக்கல்கள் அல்லது தங்கள் எதிர்காலம் ஆகியவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை மற்றும் அவர்கள் ஜீவகாலம் முழுவதும் தங்கள் முயற்சிகளை தேவனுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரால் தொடப்பட்டிருக்கிற அனைவரும் சத்தியத்தைப் பின்பற்றும் ஜனங்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 397

தேவனைப் பின்தொடர்வதில் பிரதானமான முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய தேவனுடைய வார்த்தைகளின்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதே: நீங்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதை அல்லது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைப் பின்தொடர்ந்தாலும், எல்லாம் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். நீ பேசுவதும் பின்பற்றுவதும் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், நீ தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியனாகவும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை முற்றிலுமாக இழந்தவனாகவும் இருக்கிறாய். தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களை தேவன் விரும்புகிறார். நீ முன்பு புரிந்துகொண்டது எவ்வளவு அற்புதமானதாக மற்றும் தூய்மையானதாக இருந்தாலும், தேவன் அதை விரும்புவதில்லை. இதுபோன்ற விஷயங்களை உன்னால் ஒதுக்கி வைக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் உன் பிரவேசத்துக்கு அவை மிகப்பெரிய தடையாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய ஒளியைப் பின்பற்றக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். கடந்த கால ஜனங்களும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினர், ஆனாலும் அவர்களால் இன்று வரை பின்பற்ற முடியவில்லை. இது கடைசி நாட்களின் ஜனங்களுடைய ஆசீர்வாதமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றக்கூடியவர்கள், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றக்கூடியவர்கள், அதாவது தேவன் அவர்களை வழிநடத்தும் இடங்களிலெல்லாம் அவற்றைப் பின்பற்றுகிறவர்கள்—இவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றாதவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் கிரியையில் பிரவேசித்திருக்கவில்லை, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர்களுடைய துன்பங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவர்கள் எவ்வளவாக ஓடுகிறார்கள் என்றாலும், இவை எதுவும் தேவனுக்கு ஒரு பொருட்டாகாது மேலும் அவர் அவர்களைப் பாராட்ட மாட்டார். இன்று, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்தில் இருக்கிறார்கள். இன்று தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியர்களாக இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அத்தகையவர்கள் தேவனால் பாராட்டப்படுவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளிலிருந்து விலகிச் செல்லும் ஊழியம் என்பது மாம்சத்திற்கும் கருத்துகளுக்கும் உரிய ஊழியமாகும் மற்றும் அது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருப்பதற்கு சாத்தியமில்லை. ஜனங்கள் மதக் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவித்தால், அவர்களால் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற எதையும் செய்ய இயலாது மற்றும் அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்தாலும், அவர்கள் கற்பனைகளுக்கும் கருத்துக்களுக்கும் நடுவே ஊழியம் செய்கிறார்கள் மற்றும் அவர் சித்தத்திற்கு ஏற்ப ஊழியம் செய்ய அவர்களால் ஒருபோதும் இயலாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்ற முடியாதவர்களுக்கு தேவனுடைய சித்தம் புரிவதில்லை, தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் தேவனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது. தேவன் தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கும் ஊழியத்தை விரும்புகிறார். கருத்துக்கள் மற்றும் மாம்சத்துக்குரிய ஊழியத்தை அவர் விரும்புவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் படிகளைப் பின்பற்ற ஜனங்களால் இயலாது என்றால், அவர்கள் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவிக்கிறார்கள். அத்தகையவர்களின் ஊழியம் குறுக்கிட்டு, தொந்தரவு செய்கிறது, மேலும் அத்தகைய ஊழியம் தேவனுக்கு முரணாக இயங்குகிறது. இவ்வாறு தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்களால் தேவனுக்கு ஊழியஞ்செய்ய இயலாது. தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்கள் நிச்சயமாக தேவனை எதிர்க்கிறார்கள் மற்றும் அவர்களால் தேவனுடன் ஒத்துப்போக இயலாது. இன்று தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், தேவனுடைய தற்போதைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடிவதும், இன்றைய தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்ற முடிவதும், தேவனுடைய புதிய வார்த்தைகளுக்கு ஏற்ப பிரவேசிப்பதும் என இவை “பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுதல்” என்பதன் அர்த்தமாகும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றி பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்தில் இருப்பவன் இவன்தான். அத்தகையவர்கள் தேவனுடைய புகழ்ச்சியைப் பெறுவது, தேவனைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களால் தேவனுடைய சமீபத்திய கிரியைகளிலிருந்து தேவனுடைய மனநிலையையும் அறிந்து கொள்ள முடியும் மற்றும் மனிதனுடைய கருத்துக்கள் மற்றும் கீழ்ப்படியாமை மற்றும் மனிதனுடைய சுபாவம் மற்றும் சாராம்சம் ஆகியவற்றை அவருடைய சமீபத்திய கிரியையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கள் தங்கள் ஊழியத்தின் போது படிப்படியாக அவர்களுடைய மனநிலையில் மாற்றங்களை அடைய முடியும். இது போன்றவர்கள் மட்டுமே தேவனை அடையக்கூடியவர்கள் மற்றும் உண்மையான வழியை உண்மையாகக் கண்டுபிடித்தவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் புறம்பாக்கப்பட்டவர்கள் தேவனுடைய சமீபத்திய கிரியையைப் பின்பற்றத் தகுதியற்றவர்கள் மற்றும் தேவனுடைய சமீபத்திய கிரியைக்கு எதிராகக் கலகம் செய்பவர்கள். அத்தகையவர்கள் தேவனை வெளிப்படையாக எதிர்ப்பது தேவன் புதிய கிரியையைச் செய்ததாலும், தேவனுடைய உருவம் அவர்களுடைய கருத்துக்களில் இருப்பதைப் போன்றதல்ல என்பதாலும் தான்—இதன் விளைவாக, அவர்கள் பகிரங்கமாக தேவனை எதிர்க்கிறார்கள், தேவன் மீது நியாயத்தீர்ப்பை வழங்குகிறார்கள். இதனால் தேவன் அவர்களை வெறுக்கிறார் மற்றும் நிராகரிக்கிறார். தேவனுடைய சமீபத்திய கிரியையைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பது எளிதான விஷயம் அல்ல, ஆனால் தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிவதற்கும் தேவனுடைய கிரியையைத் தேடுவதற்கும் ஜனங்களுக்கு மனமிருந்தால், தேவனைப் பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் புதிய வழிகாட்டுதலைப் பெற வாய்ப்பு கிடைக்கும். தேவனுடைய கிரியையை வேண்டுமென்றே எதிர்ப்பவர்களால் பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தையோ அல்லது தேவனுடைய வழிகாட்டலையோ பெற முடியாது. ஆகவே, தேவனுடைய சமீபத்திய கிரியையை ஜனங்கள் பெற முடியுமா இல்லையா என்பது தேவனுடைய கிருபையைப் பொறுத்தது, அவர்களுடைய பின்தொடர்தலைப் பொறுத்தது மற்றும் அவர்களுடைய நோக்கங்களைப் பொறுத்தது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 398

பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள் அல்லது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் எவ்வாறு கிரியை செய்தார் என்பது முக்கியமல்ல, தேவனுடைய சமீபத்திய கிரியையை அடைந்த அவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர், மற்றும் இன்றைய சமீபத்திய கிரியையைப் பின்பற்ற முடியாதவர்கள் புறம்பாக்கப்படுகிறார்கள். புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களை தேவன் விரும்புகிறார், மேலும் அவருடைய சமீபத்திய கிரியைகளை ஏற்றுக்கொண்டு அறிந்தவர்களை அவர் விரும்புகிறார். நீங்கள் ஒரு கற்புள்ள கன்னிகையாக இருக்க வேண்டும் என்று ஏன் கூறப்படுகிறது? ஒரு கற்புள்ள கன்னிகையால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடவும், புதிய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும், மேலும், பழைய கருத்துக்களை ஒதுக்கி வைத்து, இன்றைய தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படியவும் முடிகிறது. இன்றைய புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளும் இந்த ஜனக்கூட்டம், யுகங்களுக்கு முன்பே தேவனால் முன்னரே முன்குறிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் ஜனங்களுள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் தேவனுடைய சத்தத்தை நேரடியாகக் கேட்கிறீர்கள், தேவனுடைய தோற்றத்தைக் காண்கிறீர்கள். ஆகவே, வானம் பூமி முழுவதுமாக, யுகங்கள் முழுவதுமாக, இந்த ஜனக்கூட்டமான உங்களைவிட வேறு எவரும் ஆசீர்வதிக்கப்படவில்லை. இவை அனைத்தும் தேவனுடைய கிரியை காரணமாகவும், தேவனுடைய முன்குறித்தல் மற்றும் தேர்வு காரணமாகவும், தேவனுடைய கிருபையின் காரணமாகவும் இருக்கின்றன. தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசவில்லை, சொல்லவில்லை என்றால், உங்கள் நிலைமைகள் இன்று இருப்பது போல் இருக்க முடியுமா? ஆகவே, எல்லா மகிமையும் துதியும் தேவனுக்கே உரியதாகட்டும், ஏனென்றால் இவை அனைத்தும் தேவன் உங்களை உயர்த்துவதால்தான். இந்த விஷயங்களை மனதில் கொண்ட பின்பும் உன்னால் செயலற்றவனாக இருக்க முடியுமா? இன்னும் உன் பெலனால் எழும்ப முடியவில்லையா?

தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு, சிட்சை, அடி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை உன்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது, மேலும், தேவனுடைய ஆணைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது, இது நீ சிட்சிக்கப்படும்போது மிகவும் துன்பப்படக்கூடாது என்பதற்காக யுகங்களுக்கு முன்பே தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. உங்களில் செய்யப்பட்டுள்ள கிரியையையும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் யாராலும் பறிக்க முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்தையும் எவரும் பறிக்க முடியாது. மத ஜனங்களுக்கும் உங்களுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை. நீங்கள் வேதாகமத்தில் பெரிய நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்லர், மதக் கோட்பாட்டில் வல்லவர்கள் அல்லர், ஆனால் தேவன் உங்களுக்குள் கிரியை செய்ததால், யுகங்கள் முழுவதிலும் உள்ள அனைவரையும்விட நீங்கள் அதிகமாக அடைந்திருக்கிறீர்கள்—ஆகவே இது உங்களுக்கான மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இதன் காரணமாக, நீங்கள் தேவனிடம் இன்னும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தேவனிடம் இன்னும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும். தேவன் உன்னை எழுப்புவதால், நீ உன் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய ஆணைகளை ஏற்றுக்கொள்ள உன் வளர்ச்சியை ஆயத்தம் செய்ய வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த நிலையில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராக மாறப் பின்தொடர வேண்டும், ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும் மற்றும் இறுதியில் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாற வேண்டும். இந்தத் தீர்மானங்கள் உன்னிடம் இருக்கின்றனவா? அத்தகைய தீர்மானங்கள் உன்னிடம் இருந்தால், இறுதியில் நீ தேவனால் நிச்சயமாக ஆதாயப்படுத்தப்படுவாய் மற்றும் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறுவாய். பிரதானமான ஆணையானது தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறுவதே என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது தேவனுடைய சித்தமாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 399

இன்றைய பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் இயங்குவியல் ஆகும், மேலும் இந்தக் காலகட்டத்தில் மனிதனுக்கான பரிசுத்த ஆவியானவரின் தொடர்ச்சியான பிரகாசம் என்பது பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் போக்கு ஆகும். இன்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் போக்கு என்னவாக இருக்கிறது? இது இன்று தேவனுடைய கிரியையிலும், ஒரு இயல்பான ஆவிக்குரிய ஜீவிதத்திலும் ஜனங்களை தலைமையேற்று நடத்துவதாகும். ஓர் இயல்பான ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிப்பதற்கு பல படிகள் உள்ளன:

1. முதலில், நீ தேவனுடைய வார்த்தைகளுக்குள் உன் இருதயத்தை ஊற்ற வேண்டும். நீ கடந்த காலங்களின் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றக்கூடாது, அவற்றைப் படிக்க அல்லது இன்றைய வார்த்தைகளுடன் ஒப்பிடக் கூடாது. மாறாக, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளில் உன் இருதயத்தை முழுமையாக ஊற்ற வேண்டும். இன்று தேவனுடைய வார்த்தைகளை, ஆவிக்குரிய புத்தகங்களை அல்லது கடந்த காலத்தில் பிரசங்கிக்கப்பட்ட பிற விவரங்களை இன்னும் படிக்க விரும்பும் ஜனங்களும் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளைப் பின்பற்றாதவர்களும் இருந்தால், அவர்களே ஜனங்களில் மிகவும் முட்டாள்தனமானவர்கள். அத்தகையவர்களை தேவன் வெறுக்கிறார். இன்று நீ பரிசுத்த ஆவியானவரின் ஒளியை ஏற்கத் தயாராக இருந்தால், இன்று உன் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றிவிடு. நீ அடைய வேண்டிய முதல் விஷயம் இதுதான்.

2. இன்று தேவன் பேசும் வார்த்தைகளுடைய அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ ஜெபிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளில் பிரவேசிக்க வேண்டும் மற்றும் தேவனோடு உரையாட வேண்டும் மற்றும் நீ எந்தத் தரங்களை அடைய விரும்புகிறாய் என்பதை நிலைநாட்டி உன் தீர்மானங்களை தேவனுக்கு முன்பாகச் செய்ய வேண்டும்.

3. பரிசுத்த ஆவியானவரின் இன்றைய கிரியையின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீங்கள் சத்தியத்தினுள் ஆழமாகப் பிரவேசிப்பதைப் பின்தொடர வேண்டும். கடந்த காலத்தின் காலாவதியான வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் பிடித்துக் கொள்ளாதீர்கள்.

4. நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட நாட வேண்டும், தேவனுடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

5. இன்று பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதையில் நீங்கள் பிரவேசிப்பதைப் பின்தொடர வேண்டும்.

பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுகிறதை நீங்கள் எவ்வாறு தேடுகிறீர்கள்? தேவனுடைய தற்போதைய வார்த்தைகளில் ஜீவிப்பதும், தேவனுடைய எதிர்பார்ப்புகளின் அஸ்திபாரத்தில் ஜெபிப்பதுமே முக்கியமான விஷயங்களாக இருக்கின்றன. இவ்வாறு ஜெபித்ததால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உன்னைத் தொடுவார். இன்று தேவன் பேசின வார்த்தைகளின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ நாடவில்லை என்றால், அது பயனற்றதாக இருக்கும். “தேவனே! நான் உம்மை எதிர்க்கிறேன், நான் உமக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்; நான் மிகவும் கீழ்ப்படியாதவன் மற்றும் என்னால் உம்மை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. தேவனே, நீர் என்னை இரட்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், கடைசிவரையில் உமக்கு ஊழியம் செய்ய நான் விரும்புகிறேன். உமக்காக மரிக்க நான் விரும்புகிறேன். நீர் என்னை நியாயந்தீர்த்து, என்னை சிட்சியும், எனக்கு எந்தப் புகாரும் இல்லை. நான் உம்மை எதிர்க்கிறேன் எனவே நான் இறப்பதற்குத் தகுதியானவன், அதனால் என் மரணத்தில் உமது நீதியுள்ள மனநிலையை எல்லா ஜனங்களும் காணக்கூடும்,” என்று ஜெபித்து நீ தேவனிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு நீ உன் இருதயத்திலிருந்து ஜெபிக்கும்போது, தேவன் உனக்குச் செவிகொடுப்பார் மற்றும் உனக்கு வழிகாட்டுவார். இன்று நீ பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் ஜெபிக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தொடுவதற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லை. நீ தேவனுடைய சித்தத்தின்படியும், இன்று தேவன் செய்ய வாஞ்சையாய் இருப்பதன் அடிப்படையிலும் ஜெபித்தால், நீ சொல்வாய்: “தேவனே! உமது ஆணைகளை ஏற்றுக் கொள்ளவும், உமது ஆணைகளுக்கு உண்மையாக இருக்கவும் நான் விரும்புகிறேன். என் வாழ்நாள் முழுவதையும் உமது மகிமைக்காக அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன், இதனால் நான் செய்யும் சகல காரியங்களிலும் என்னால் தேவனுடைய ஜனங்களுடைய தரங்களை அடைய முடியும். என் இருதயம் உம்மால் தொடப்படட்டும். உம்முடைய ஆவியானவர் எப்பொழுதும் என்னைப் பிரகாசிப்பிக்க வேண்டும் என்றும், நான் செய்யும் சகல காரியங்களிலும் சாத்தானுக்கு அவமானத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், இறுதியில் உம்மால் நான் ஆதாயம் செய்யப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.” நீ இவ்வாறு ஜெபித்தால், தேவனுடைய சித்தத்தை மையமாகக் கொண்ட வழியில் ஜெபித்தால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாய் உன்னில் கிரியை செய்வார். உன் ஜெபங்களின் வார்த்தைகளின் எண்ணிக்கை எத்தனை என்பது முக்கியமல்ல—தேவனுடைய சித்தத்தை நீ புரிந்துகொள்கிறாயா இல்லையா என்பதே முக்கியம். உங்கள் அனைவருக்கும் பின்வரும் அனுபவம் இருந்திருக்கலாம்: சில நேரங்களில், ஒரு கூட்டத்தில் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் இயங்குவியல் உச்சத்தை எட்டுகிறது, இதனால் அனைவரின் பெலனும் உயருகிறது. சிலர் ஜெபிக்கும்போது மிகவும் அதிகமாக அழுகிறார்கள் மற்றும் கண்ணீர் விடுகிறார்கள், தேவனுக்கு முன்பாக மனஸ்தாபம் கொள்கிறார்கள், சிலர் தங்கள் தீர்மானத்தைக் காட்டுகிறார்கள் மற்றும் பொருத்தனைகள் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் அடைய வேண்டிய விளைவு இதுதான். இன்று, எல்லா ஜனங்களும் தங்கள் இருதயங்களை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றுவது முக்கியம். முன்பு பேசிய வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டாம். நீ இன்னும் முன்பு வந்ததையே பிடித்துக் கொண்டிருந்தால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்பட மாட்டார். இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காண்கிறாயா?

இன்று, பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்லும் பாதையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மேலே உள்ள பல காரியங்கள் பரிசுத்த ஆவியானவரால் இன்றும் எதிர்காலத்திலும் நிறைவேற்றப்பட வேண்டியவையாகும். அவை பரிசுத்த ஆவியானவரால் எடுக்கப்பட்ட பாதைகளாக இருக்கின்றன. அவை மனிதனால் பின்தொடர வேண்டிய பிரவேசமாக இருகின்றன. ஜீவனுக்குள் நீங்கள் பிரவேசிக்கும் போது, குறைந்தபட்சம் நீங்கள் உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளுக்குள் ஊற்ற வேண்டும் மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ளும் திறனிருக்க வேண்டும். உங்கள் இருதயம் தேவனுக்காக ஏங்க வேண்டும், நீங்கள் சத்தியத்தில் ஆழமான பிரவேசத்தை மற்றும் தேவனால் எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களையும் பின்பற்றுவதற்காக ஏங்க வேண்டும். நீ இந்த பெலனைக் கொண்டிருக்கும்போது, நீ தேவனால் தொடப்பட்டிருக்கிறாய் மற்றும் உன் இருதயம் தேவனிடம் திரும்பத் தொடங்கியிருக்கிறது என்பவற்றை இது காட்டுகிறது.

ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான முதல் படியானது உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றுவதாகும், இரண்டாவது படியானது பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவதை ஏற்றுக்கொள்ளுவதாகும். பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவதை ஏற்றுக்கொள்வதன் மூலம் அடைய வேண்டிய விளைவு என்னவாக இருக்கிறது? இது மிகவும் ஆழமான உண்மைக்காக ஏங்க, அதைத் தேட, ஆராய முடிவதும், தேவனுடன் நேர்மறையான முறையில் ஒத்துழைக்கும் திறனுடன் இருப்பதுமாகும். இன்று, நீங்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறீர்கள், அதாவது உங்கள் பின்தொடர்தலுக்கு, உங்கள் ஜெபங்களுக்கு மற்றும் தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் தொடர்புகொள்வதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது, மேலும் தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் கடமையை நீங்கள் செய்கிறீர்கள், இதுவே நீங்கள் தேவனுடன் ஒத்துழைப்பதாகும். தேவனைக் கிரியை செய்ய அனுமதிப்பதைப் பற்றி மட்டுமே நீ பேசி, ஆனால் நீ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஜெபிக்கவோ தேடவோ இல்லை என்றால், இதை ஒத்துழைப்பு என்று அழைக்க முடியுமா? உங்களிடம் ஒத்துழைப்பின் எந்த தடயமும் இல்லாமல் மற்றும் ஒரு குறிக்கோளைக் கொண்ட பிரவேசத்துக்கான நடைமுறை இல்லாமல் இருக்கிறது என்றால், நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்பதாகும். “எல்லாம் தேவனுடைய முன்குறித்தலைப் பொறுத்தது. இவை அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகின்றன. தேவன் அதைச் செய்யவில்லை என்றால், மனிதனால் எப்படி அது சாத்தியமாகும்?” என்று சிலர் சொல்கிறார்கள். தேவனுடைய கிரியை இயல்பானது, சிறிதளவும் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, மற்றும் உன் உற்சாகமுள்ள தேடுதல் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார், ஏனென்றால், தேவன் மனிதனை நிர்பந்திப்பதில்லை—தேவன் கிரியை செய்ய அவருக்கு நீ வாய்ப்பளிக்க வேண்டும், நீ பின்தொடரவில்லை அல்லது பிரவேசிக்கவில்லை என்றால், மற்றும் உன் இருதயத்தில் சிறிதளவு ஏக்கமும் இல்லை என்றால், கிரியை செய்ய தேவனுக்கு வாய்ப்பில்லை. தேவனால் தொடப்படும்படிக்கு நீங்கள் எந்தப் பாதையினால் தேட முடியும்? ஜெபத்தின் மூலமாக, தேவனிடம் நெருங்கி வருவதால் மட்டுமே அது முடியும். ஆனால் மிக முக்கியமாக, அது தேவன் பேசும் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீ அடிக்கடி தேவனால் தொடப்படும்போது, நீ மாம்சத்தால் அடிமைப்படுத்தப்படுவதில்லை: கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் பணம் ஆகிய அவை அனைத்தும் உன்னை விலங்கிட முடியாது மற்றும் நீ சத்தியத்தைப் பின்பற்றவும், தேவனுக்கு முன்பாக ஜீவிக்கவும் மட்டுமே விரும்புவாய். இந்த நேரத்தில், நீ சுதந்திர உலகில் ஜீவிக்கும் ஒருவனாக இருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 400

மனுஷனைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் தீர்மானித்துள்ளார், அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பேசினாலும், அவை அனைத்தையும் ஜனங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே பேசுகிறார். ஆவியானவரின் கண்ணோட்டத்தில் பேசப்படும் வார்த்தைகளை ஜனங்கள் புரிந்து கொள்வது கடினம்; அதன்படி நடப்பதற்கான பாதையைக் கண்டுபிடிப்பதற்கான வழி அவர்களுக்கு இல்லை, அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக உள்ளது. தேவனின் கிரியை வெவ்வேறு தாக்கங்களை அடைகிறது, மற்றும் கிரியையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதில் அவருக்கு அவருடைய நோக்கம் இருக்கிறது. மேலும், அவர் வெவ்வேறு கோணங்களிலிருந்துப் பேசுவது கட்டாயமாகும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே அவரால் மனுஷனைப் பரிபூரணப்படுத்த முடியும். ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே அவர் தனது குரலை எழுப்பினால், தேவனின் கிரியையின் இந்த நிலையைப் பரிபூரணப்படுத்த எந்த வழியும் இருக்காது. அவர் பேசும் தொனியில் இருந்து, இந்த நபர்களை பூரணப்படுத்துவதில் அவர் உறுதியாக இருப்பதை நீ காணலாம். ஆகவே, பரிபூரணப்படுத்தப்பட விரும்பும் ஒவ்வொருவருக்கும் முதல் படி என்னவாக இருக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தேவனின் கிரியையை அறிந்திருக்க வேண்டும். இன்று, தேவனின் கிரியையில் ஒரு புதிய முறை தொடங்கியிருக்கிறது; யுகம் மாறியுள்ளது, தேவன் கிரியை செய்யும் முறையும் மாறியுள்ளது, தேவன் பேசும் முறையும் விசேஷித்த விதமாக உள்ளது. இன்று, அவருடைய கிரியையின் முறை மட்டும் மாறாமல், யுகமும் மாறியுள்ளது. இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இது அன்பான தேவனின் யுகமாகவும் உள்ளது. இது ஆயிரவருட அரசாட்சியின் யுகத்தின் முன்னறிவிப்பாகும்—இது வார்த்தையின் யுகமும்கூட, இதில் தேவன் பரிபூரண மனுஷனுடன் பேசுவதற்கு பல வழிகளைப் பயன்படுத்துகிறார், மேலும் மனுஷனுக்கு வழங்குவதற்காக வெவ்வேறு கோணங்களில் பேசுகிறார். ஆயிரவருட அரசாட்சியின் யுகத்திற்குள் நுழைந்தவுடன், தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்க வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குவார், மனுஷனை வாழ்வின் யதார்த்தத்திற்குள் நுழைய அனுமதிப்பார், அவனைச் சரியானப் பாதையில் கொண்டு செல்வார். தேவனின் கிரியையின் பல படிகளை அனுபவித்த மனுஷன், தேவனின் கிரியை மாறவில்லை, ஆனால் அது இடைவிடாமல் உருவாகி, ஆழமடைகிறது என்பதைக் கண்டிருக்கிறான். ஜனங்கள் நீண்ட காலமாக அதனை அனுபவித்த பிறகு, கிரியைத் தொடர்ந்து சுழன்று, மீண்டும் மீண்டும் மாறுகிறது. அது எவ்வளவு மாறினாலும், மனிதகுலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கான தேவனின் நோக்கத்திலிருந்து அது ஒருபோதும் விலகாது. பத்தாயிரம் மாற்றங்களின் மூலம் கூட, அது ஒருபோதும் அதன் உண்மையான நோக்கத்திலிருந்து விலகாது. தேவனின் கிரியையின் முறை எவ்வாறு மாறினாலும், இந்தக் கிரியை ஒருபோதும் சத்தியத்திலிருந்து அல்லது ஜீவனிலிருந்து விலகாது. கிரியையை மேற்கொள்ளும் முறையில் செய்யப்படும் மாற்றங்கள், கிரியையின் வடிவம், மற்றும் தேவன் பேசும் கண்ணோட்டம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதைத்தான் உள்ளடக்கியிருந்தாலும், தேவனின் கிரியையின் மைய நோக்கம் மாறாது. ஒரு பலனை அடைவதற்காக தேவனின் குரலில் மற்றும் அவரது கிரியையின் முறை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குரலின் தொனியில் மாற்றம் என்பது கிரியையின் பின்னால் உள்ள நோக்கம் அல்லது மாற்றத்தைக் குறிக்கவில்லை. ஜீவனைத் தேடுவதற்காகவே ஜனங்கள் தேவனைப் பிரதானமாக விசுவாசிக்கிறார்கள்; நீ தேவனை விசுவாசித்த போதிலும், ஜீவனைத் தேடவில்லை அல்லது சத்தியத்தையோ அல்லது தேவனின் அறிவையோ நாடவில்லை என்றால், அது தேவன் மீதான விசுவாசம் அல்ல! ராஜாவாக இருப்பதற்கு ராஜ்யத்திற்குள் நுழைய இன்னும் முற்படுவது யதார்த்தமானதா? ஜீவனைத் தேடுவதன் மூலம் தேவன் மீதான உண்மையான அன்பை அடைவது—இது மட்டுமே யதார்த்தம்; சத்தியத்தின் நாட்டம் மற்றும் நடைமுறை—இவை அனைத்தும் யதார்த்தம். தேவனின் வார்த்தைகளை வாசிப்பதால், இந்தச் சொற்களை அனுபவிப்பதால், நிஜமான அனுபவத்தின் மத்தியில் நீங்கள் தேவனைப் பற்றிய அறிவைப் பெறுவீர்கள், உண்மையிலேயே பின்தொடர்வது என்றால் இதுதான் அர்த்தம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 401

இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இந்தப் புதிய யுகத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாய் என்பது தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது வாழ்வின் யதார்த்தமாகியிருக்கின்றனவா என்பதைப் பொறுத்தது. தேவனின் வார்த்தைகள் ஒவ்வொரு நபருக்கும் தெரியப்படுத்தப்படுகின்றன, இதன் மூலம், இறுதியில், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளின் உலகில் வாழ்வார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகள் ஒவ்வொருவரையும் உள்ளிருந்து தெளியச் செய்யும் மற்றும் பிரகாசமாக்கும். இந்த நேரத்தில், நீ தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் அக்கறையற்றவனாகவும், அவருடைய வார்த்தைகளில் ஆர்வம் காட்டாமலும் இருந்தால், உனது நிலை தவறானது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் வார்த்தையின் யுகத்திற்குள் நுழைய முடியாவிட்டால், பரிசுத்த ஆவியானவர் உன்னுள் கிரியை செய்ய மாட்டார்; நீ இந்த யுகத்திற்குள் நுழைந்திருந்தால், அவர் தம்முடைய கிரியையைச் செய்வார். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்கு வார்த்தையின் யுகத்தின் தொடக்கத்தில் நீ என்ன செய்ய முடியும்? இந்த யுகத்திலும், உங்களுக்கு மத்தியில், தேவன் பின்வரும் உண்மையை நிறைவேற்றுவார்: ஒவ்வொரு மனுஷனும் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வார்கள், சத்தியத்தைக் கடைபிடிக்க அவர்களால் முடியும், தேவனை ஆர்வத்துடன் நேசிப்பார்கள்; எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தைகளை ஒரு அஸ்திவாரமாகவும், அவர்களின் யதார்த்தமாகவும் பயன்படுத்துவார்கள், மேலும் தேவனை ஆராதிக்கும் இருதயங்களைக் கொண்டிருப்பார்கள்; தேவனின் வார்த்தைகளைக் கடைபிடிப்பதன் மூலம், மனுஷன் தேவனுடன் சேர்ந்து ராஜரீக வல்லமையைப் பயன்படுத்துவான். இது தேவனால் அடைய வேண்டிய கிரியை. தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் நீ இருக்க முடியுமா? இன்று, அவருடைய வார்த்தைகளை வாசிக்காமல் ஓரிரு நாட்கள் கூட இருக்க முடியாது என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும், நேரம் அனுமதிக்கவில்லை என்றால், அவற்றைக் கேட்பது போதுமானதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு அளிக்கும் உணர்வு இதுதான், மற்றும் அவர்களை ஏவத் துவங்கியிருக்கும் வழியும் இதுதான். அதாவது, தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழையும்படி அவர் வார்த்தைகளின் மூலம் ஜனங்களை ஆளுகிறார். தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் ஒரேயொரு நாள் கழிந்தால், நீங்கள் இருட்டையும் தாகத்தையும் உணர்வீர்கள், அதைத் தாங்க முடியாது, இது நீ பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுகிறாய் என்பதையும், அவர் உன்னிடமிருந்து விலகவில்லை என்பதையும் காட்டுகிறது. அப்போது தான் நீ இந்தப் பிரவாகத்தில் இருப்பவனாவாய். இருப்பினும், தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் ஓரிரு நாட்கள் இருந்த பிறகு, நீ எதையும் உணரவில்லை என்றால், உனக்குத் தாகம் இல்லை, மற்றும் நீ ஏவப்படவே இல்லை, பரிசுத்த ஆவியானவர் உன்னிடமிருந்து விலகி விட்டார் என்பதை இது காட்டுகிறது. இதன் அர்த்தம், உனக்குள் உள்ள நிலையில் ஏதோ தவறு இருக்கிறது; நீ வார்த்தையின் யுகத்திற்குள் நுழையவில்லை, பின்மாற்றமடைந்தவர்களில் நீயும் ஒருவனே. ஜனங்களை ஆள்வதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துக் குடித்தால், நன்றாக உணர்வாய், நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ பின்பற்றுவதற்கு வழி இல்லை. தேவனின் வார்த்தைகள் ஜனங்களின் போஜனமாகவும், அவர்களை இயக்கும் சக்தியாகவும் மாறும். “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத்தேயு 4:4). என்று வேதாகமம் சொல்கிறது. இன்று, தேவன் இந்தக் கிரியையைச் செய்து முடிப்பார், இந்த உண்மையை அவர் உங்களிடம் நிறைவேற்றுவார். கடந்த காலங்களில், ஜனங்கள் தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் பல நாட்கள் இருந்திருக்கலாம், ஆயினும் அவர்களால் வழக்கம் போல் புசிக்கவும் வேலை செய்யவும் முடியும், ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை? இந்த யுகத்தில், தேவன் அனைவரையும் ஆள வார்த்தைகளைப் பிரதானமாகப் பயன்படுத்துகிறார். தேவனின் வார்த்தைகளின் மூலம், மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு பரிபூரணமாக்கப்படுகிறான், பின்னர் இறுதியாக ராஜ்யத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறான். தேவனின் வார்த்தைகளால் மட்டுமே மனுஷனின் ஜீவனை வழங்க முடியும், மேலும் தேவனின் வார்த்தைகளால் மட்டுமே, குறிப்பாக ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷனுக்கு வெளிச்சத்தையும் கடைபிடிப்பதற்கான ஒரு பாதையையும் வழங்க முடியும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திலிருந்து நீ விலகிச் செல்லாத வரை, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்தால், தேவனால் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 402

வாழ்வின் நாட்டம் என்பது அவசரப்பட வேண்டிய ஒன்றல்ல; நம் வாழ்வின் வளர்ச்சி என்பது ஓரிரு நாட்களில் நடந்துவிடாது. தேவனின் கிரியை இயல்பானது மற்றும் நடைமுறைக்குரியது, மேலும் அது கட்டாயமாக ஒரு செயல்முறைக்கு உள்ளாகும். சிலுவையில் அறையப்பட்ட தனது கிரியையை நிறைவு செய்வதற்கு மனுஷ ரூபமெடுத்த இயேசுவுக்கு முப்பத்து மூன்றரை ஆண்டுகள் ஆனது—ஆகவே மனுஷனைச் சுத்திகரித்து, அவனுடைய வாழ்வை மாற்றியமைப்பது, மிகவும் கடினமான வேலையா? தேவனை வெளிக்கொணரும் ஒரு சாதாரண மனுஷனை உருவாக்குவதென்பது எளிதான காரியமல்ல. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் பிறந்தவர்கள், மோசமானத் திறமை வாய்ந்தவர்கள் மற்றும் தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியை நீண்டகாலத்திற்குத் தேவைப்படும் ஜனங்களுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். எனவே முடிவுகளைப் பார்க்க பொறுமையிழக்காதீர்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும் நீ ஆர்வமுடன் இருக்க வேண்டும், மேலும் தேவனின் வார்த்தைகளில் அதிக முயற்சி எடுக்க வேண்டும். நீ அவருடைய வார்த்தைகளை வாசித்து முடித்ததும், அவற்றை நீ உண்மையாகக் கடைபிடிக்க முடியும், தேவனுடைய வார்த்தைகளில் அறிவு, நுண்ணறிவு, விவேகம் மற்றும் ஞானம் ஆகியவற்றில் வளர வேண்டும். இதன் மூலம், நீ உனக்கே தெரியாமல் மாறிவிடுவாய். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பது, குடிப்பது, அவற்றை வாசிப்பது, அவற்றை அறிந்து கொள்வது, அவற்றை அனுபவிப்பது மற்றும் அவற்றைக் கடைபிடிப்பது ஆகியவற்றை நீ உனது கொள்கையாக எடுத்துக் கொள்ள முடிந்தால், நீ உனக்கே தெரியாமல் முதிர்ச்சியடைவாய். தேவனின் வார்த்தைகளைப் படித்த பிறகும் அவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்களும் உண்டு. உனக்கு என்ன அவசரம்? நீ ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும்போது, நீ அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை தனது பெற்றோரை ஆதரிக்கவோ கனப்படுத்தவோ முடியாது என்று கூறுமா? உனது தற்போதைய நிலை எவ்வளவு பெரியது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். உன்னால் கடைபிடிக்க முடிந்தவற்றைக் கடைபிடி, தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் ஒருவனாக இருப்பதைத் தவிர்த்திடு. தேவனின் வார்த்தைகளைப் புசி, குடி. இனிமேல் அதனை உனது கொள்கையாக எடுத்துக் கொள். தற்போதைக்கு தேவன் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியுமா என்பது பற்றிக் கவலைப்படாதே. அதை இன்னும் ஆராய வேண்டாம். தேவனின் வார்த்தைகள் உன்னிடம் வரும்போது அவற்றைப் புசித்துக் குடி, மேலும் தேவன் உன்னைப் பரிபூரணப்படுத்துவதில் உறுதியாக இருப்பார். இருப்பினும், அவருடைய வார்த்தைகளை நீ புசிப்பதற்கும் குடிப்பதற்கும் ஒரு கொள்கை உள்ளது. கண்மூடித்தனமாக அவ்வாறு செய்ய வேண்டாம். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும், ஒருபுறம், நீ தெரிந்து கொள்ள வேண்டிய சொற்களைத் தேடு—அதாவது, தரிசனங்களுடன் தொடர்புடையவற்றைத் தேடு—மறுபுறம், நீ எதை நிஜமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தேடு—அதாவது நீ எதற்குள் நுழைய வேண்டும் என்று தேடு. ஒரு அம்சம் அறிவோடு தொடர்புடையது, மற்றொன்று நுழைவதோடு தொடர்புடையது. நீ எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் நீ எதைக் கடைபிடிக்க வேண்டும் என இரண்டையும் நீ புரிந்துகொண்டவுடன் தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று உனக்குத் தெரியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 403

முன்னோக்கிச் செல்லும்போது, தேவனின் வார்த்தைகளைப் பேசுவது என்பதே நீ பேசுவதன் கொள்கையாக இருக்க வேண்டும். சாதாரணமாக, நீங்கள் ஒன்றாக வரும்போது, தேவனின் வார்த்தைகளைப் பற்றிய ஐக்கியத்தில் ஈடுபட வேண்டும், தேவனின் வார்த்தைகளை உங்கள் உரையாடல்களின் உள்ளடக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த வார்த்தைகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், அவற்றை எவ்வாறு கடைபிடிக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றி பேச வேண்டும். தேவனின் வார்த்தைகளுக்கு நீ இசைந்து இருக்கும்வரை பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார். தேவனின் வார்த்தைகளின் உலகத்தை அடைய மனுஷனின் ஒத்துழைப்பு தேவை. நீ இதில் நுழையவில்லை என்றால், தேவனுக்கு கிரியை செய்ய வழி இருக்காது; நீ உனது வாயை மூடிக்கொண்டு, அவருடைய வார்த்தைகளைப் பற்றி பேசாவிட்டால், அவரிடம் உன்னைப் பிரகாசிக்கச் செய்ய வழி இருக்காது. நீ வேறுவிதமாக ஆக்கிரமிக்கப்படாத போதெல்லாம், தேவனின் வார்த்தைகளைப் பற்றி பேசு, வெறும் வெட்டி அரட்டையில் ஈடுபடாதே! உனது வாழ்வு தேவனின் வார்த்தைகளால் நிரம்பட்டும்—அப்போதுதான் நீ பக்தியுள்ள விசுவாசியாக இருப்பாய். உனது ஐக்கியம் மேலோட்டமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆழமற்ற தன்மை இல்லாமல் ஆழம் இருக்க முடியாது. ஒரு செயல்முறை இருக்க வேண்டும். உனது பயிற்சியின் மூலம், பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும், மேலும் தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு திறம்பட புசிப்பது, குடிப்பது என்பதையும் நீ புரிந்துகொள்வாய். ஆய்வின் இடைவெளிக்குப் பிறகு, நீ தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழைவாய். நீ ஒத்துழைக்கத் தீர்மானித்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் பெற முடியும்.

தேவனின் வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் குடித்தல் போன்ற கொள்கைகளில் ஒன்று அறிவுடன் தொடர்புடையது, மற்றொன்று பிரவேசத்துடன் தொடர்புடையது. எந்த வார்த்தைகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்? தரிசனங்களுடன் தொடர்புடைய சொற்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் (அதாவது, தேவனின் கிரியை இப்போது எந்த யுகத்தில் நுழைந்துள்ளது, தேவன் இப்போது எதனை அடைய விரும்புகிறார், மனுஷ ரூபமெடுத்தல் என்றால் என்ன, மற்றும் பல; இவை அனைத்தும் தரிசனங்களுடன் தொடர்புடையவை). மனுஷன் நுழைய வேண்டிய பாதையின் பொருள் என்ன? மனுஷன் கடைபிடிக்க வேண்டிய, நுழைய வேண்டிய தேவனின் வார்த்தைகளை இது குறிக்கிறது. மேற்கூறியவை தேவனின் வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் குடித்தலின் இரண்டு அம்சங்களாகும். இப்போதிலிருந்து, தேவனுடைய வார்த்தைகளை இந்த வழியில் புசியுங்கள். தரிசனங்களைப் பற்றிய அவருடைய வார்த்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெளிவான புரிதல் இருந்தால், எல்லா நேரத்திலும் தொடர்ந்து வாசித்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் இருதயத்தை தேவனை நோக்கி எப்படித் திருப்புவது, தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை எவ்வாறு அமைதிப்படுத்துவது, மாம்சத்தை எப்படி அடக்குவது போன்ற பல வார்த்தைகளைப் புசிப்பதும் குடிப்பதும் முதன்மையானது. இந்த விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று தெரியாமல், உண்மையான ஐக்கியம் என்பது சாத்தியமில்லை. தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று உங்களுக்குத் தெரிந்தவுடன், முக்கியமானது எது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், ஐக்கியமானது விடுதலையாக மாறும், எந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டாலும், நீங்கள் யதார்த்தத்துடன் ஐக்கியப்படவும் அதனைப் புரிந்துக் கொள்ளவும் முடியும். தேவனின் வார்த்தைகளுடன் ஐக்கியப்பட்டிருக்கும்போது, உனக்கு எந்த யதார்த்தமும் இல்லை என்றால், முக்கியமானது எது என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை, இது தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் உனக்குத் தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. சிலருக்கு தேவனின் வார்த்தைகளை வாசிப்பது சோர்வடையச் செய்வதைக் காணலாம், இது சாதாரண நிலை அல்ல. இயல்பானது எதுவென்றால் தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் ஒருபோதும் சோர்வடையாமல் இருப்பது, எப்போதும் அவற்றிற்காகத் தாகம்கொள்வது, மற்றும் எப்போதும் தேவனுடைய வார்த்தைகளை நன்மை செய்வதாகக் கண்டறிவது ஆகும். இப்படித் தான் உண்மையிலேயே நுழைந்த ஒருவர் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் செய்கிறார். தேவனின் வார்த்தைகள் நடைமுறைக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதாக மற்றும் மனுஷன் துல்லியமாக நுழைய வேண்டியது இதற்குள் தான் என்று நீ உணர்ந்தால்; அவருடைய வார்த்தைகள் மனுஷனுக்குப் பெரிதும் உதவிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக மற்றும் அவை மனுஷனின் வாழ்வின் ஏற்பாடாக இருப்பதாக நீ உணர்ந்தால்—பரிசுத்த ஆவியானவர் இந்த உணர்வை உங்களுக்குத் தருகிறார், உங்களை ஏவுகிறவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை புரிகிறார் என்பதையும், தேவன் உன்னிடமிருந்து விலகிச் செல்லவில்லை என்பதையும் இது நிரூபிக்கிறது. சிலர், தேவன் எப்பொழுதும் பேசுவதைப் பார்த்து, அவருடைய வார்த்தைகளால் சோர்வடைந்து, அவற்றை வாசித்தாலும் இல்லாவிட்டாலும் எந்த விளைவும் ஏற்படாது என்று நினைக்கிறார்கள்—இது ஒரு சாதாரண நிலை அல்ல. யதார்த்தத்திற்குள் நுழைய தாகம் கொண்ட ஒரு இருதயம் அவர்களுக்கு இல்லை, அத்தகைய நபர்கள் பரிபூரணமடைவதற்குத் தாகம் கொண்டிருக்க மாட்டார்கள் மற்றும் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். தேவனின் வார்த்தைகளுக்கு நீ தாகம் கொள்ளாததை நீ காணும்போதெல்லாம், நீ ஒரு சாதாரண நிலையில் இல்லை என்பதை இது காட்டுகிறது. கடந்த காலங்களில், தேவன் உன்னிடமிருந்து விலகிவிட்டாரா என்பதை நீ உள்ளுக்குள் அமைதியாக இருக்கிறாயா, மற்றும் நீ இன்பத்தை அனுபவித்தாயா என்பதை வைத்து நீ தீர்மானிக்க முடியும். தேவனின் வார்த்தைகளுக்கு நீ தாகமாக இருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது யதார்த்தமாக இருக்கிறதா, நீ விசுவாசமுடையவனா, தேவனுக்காக உன்னால் முடிந்த அனைத்தையும் உன்னால் செய்ய முடிகிறதா என்பதே இப்போது முக்கியமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தால் மனுஷன் தீர்மானிக்கப்படுகிறான். தேவன் தம்முடைய வார்த்தைகளை மனிதகுலம் முழுவதற்கும் வழிநடத்துகிறார். நீ அவற்றைப் படிக்கத் தயாராக இருந்தால், அவர் உன்னைப் பிரகாசமாக்குவார், ஆனால் நீ தயாராக இல்லையென்றால், அவர் அவ்வாறு செய்ய மாட்டார். நீதிக்காக பசியும் தாகமும் உள்ளவர்களை தேவன் பிரகாசமாக்குகிறார், தன்னைத் தேடுகிறவர்களை அவர் பிரகாசமாக்குகிறார். தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பிறகும் தேவன் அவர்களைப் பிரகாசிக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நீ இந்த வார்த்தைகளை எவ்விதமாக வாசித்தாய்? குதிரையின் முதுகில் அமர்ந்திருக்கும் ஒரு மனுஷன் பூக்களைப் பார்ப்பதைப் போல் நீ அவருடைய வார்த்தைகளைப் படித்தால், மற்றும் யதார்த்தத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்றால், தேவன் உன்னை எவ்வாறு பிரகாசிக்கச் செய்வார்? தேவனின் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதாத ஒருவனை அவரால் எப்படிப் பரிபூரணப்படுத்த முடியும்? நீ தேவனின் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதாவிட்டால், உனக்கு சத்தியமும் இருக்காது யதார்த்தமும் இருக்காது. அவருடைய வார்த்தைகளை நீ பொக்கிஷமாகக் கருதினால், நீ சத்தியத்தைக் கடைபிடிக்க முடியும், அப்போதுதான் நீ யதார்த்தத்தைப் பெறுவாய். இதனால்தான் நீ அலுவலாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ சோதிக்கப்பட்டாலும், சோதிக்கப்படாவிட்டாலும் நீ எல்லா நேரங்களிலும் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். மொத்தத்தில், தேவனின் வார்த்தைகள் மனுஷனின் ஜீவிதத்திற்கான அடித்தளமாகும். அவருடைய வார்த்தைகளிலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது, ஆனால் அவர்கள் தினமும் புசிக்கும் மூன்று வேளை போஜனங்களைப் போலவே அவருடைய வார்த்தைகளையும் புசிக்க வேண்டும். தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு ஆதாயப்படுத்தப்படுவது அவ்வளவு சுலபமா? தற்போது நீ புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், தேவனின் கிரியையைப் பற்றிய புரிதல் உனக்கு இருந்தாலும் இல்லையென்றாலும், நீ தேவனின் வார்த்தைகளை முடிந்தவரை புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். இதுதான் முனைப்புடன் உட்பிரவேசிப்பதாகும். தேவனின் வார்த்தைகளை வாசித்த பிறகு, நீ உட்பிரவேசிக்கக்கூடியவற்றைக் கடைபிடிக்க துரிதப்படுத்து, உன்னால் முடியாத தருணத்திற்கு இப்போதைக்கு ஒதுக்கு. ஆரம்பத்தில் உன்னால் புரிந்து கொள்ள முடியாத தேவனின் வார்த்தைகள் பல இருக்கலாம், ஆனால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருவேளை ஒரு வருடம் கழித்து உனக்குப் புரியும். இது எப்படிச் சாத்தியம்? ஏனென்றால், ஓரிரு நாட்களில் தேவனால் ஜனங்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. பெரும்பாலும், நீ அவருடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, உனக்குச் சரியான வழியும் புரியாமல் போகலாம்; அந்த நேரத்தில், அவை வெறும் உரையாகத் தெரியுமே தவிர வேறெதுவாகவும் தெரியாது; நீ அவற்றைப் புரிந்துகொள்வதற்கு முன்பு அவற்றை ஒரு முறை அனுபவிக்க வேண்டும். தேவன் இவ்வளவு பேசியதால், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் நீ உன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும், பின்னர், நீ உனக்குத் தெரியாமலேயே, புரிந்துகொள்வாய், உனக்குத் தெரியாமலேயே பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார். பரிசுத்த ஆவியானவர் மனுஷனைப் பிரகாசிக்கச் செய்யும்போது, அது பெரும்பாலும் மனுஷனுக்குத் தெரியாமலேயே நடக்கிறது. நீ தாகமாக இருந்து, தேடும்போது அவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்து, வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் செயல்படும் கொள்கை என்பது நீ புசிக்கும், குடிக்கும் தேவனின் வார்த்தைகளை மையமாகக் கொண்டுள்ளது. தேவனின் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளுக்கு எப்போதும் மாறுபட்ட மனப்பான்மையைக் கொண்டிருப்பவர்கள்—அவர்களின் குழப்பமான சிந்தனையில், அவருடைய வார்த்தைகளை வாசித்தாலும் இல்லையென்றாலும் எந்த வித்தியாசமும் ஏற்படாது என்று நம்புகின்றனர்—இவர்கள் யதார்த்தத்தைக் கொண்டிராதவர்கள். அத்தகைய நபரில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையோ அல்லது அவருடைய பிரகாசத்தையோ காண முடியாது. இது போன்ற ஜனங்கள் திரு. நங்குவோ உவமையைப்[அ] போல எந்தவித முயற்சியும் எடுக்காமல் நிஜமானத் தகுதிகள் இல்லாமல் பாசாங்கு செய்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “உவமை” என்ற வார்த்தை இல்லை.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 404

தேவனுடைய வார்த்தைகள் வெளிவருகையில், நீ உடனடியாக அவற்றைப் பெற்று, அவற்றைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். நீ எவ்வளவு புரிந்துகொண்டாலும் பரவாயில்லை, நீ வேகமாகப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவருடைய வார்த்தைகளை புசிப்பதும் குடிப்பதும், தெரிந்துகொள்வதும் மற்றும் கடைபிடிப்பதுமேயாகும். இது உன்னால் செய்யக்கூடிய ஒன்றுதான். உனது வளர்ச்சி எவ்வளவு பெரியதாக மாறும் என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும் கவனம் செலுத்து. இதில் தான் மனுஷன் ஒத்துழைக்க வேண்டும். உனது ஆவிக்குரிய வாழ்க்கை முக்கியமாக தேவனின் வார்த்தைகளைப் புசிப்பது மற்றும் குடிப்பது மற்றும் அவற்றைக் கடைபிடிப்பது என்ற யதார்த்தத்திற்குள் நுழைய முயற்சிப்பதாகும். வேறு எதிலும் கவனம் செலுத்துவது உனது வேலையல்ல. திருச்சபையின் தலைவர்களால் அவர்களின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வழிகாட்ட இயல வேண்டும், இதனால் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு திருச்சபையின் தலைவரின் பொறுப்பும் இதுதான். அவர்கள் இளைஞராகவோ அல்லது முதியவராகவோ இருந்தாலும், அனைவரும் தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதையும் குடிப்பதையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வேண்டும், மேலும் அவருடைய வார்த்தைகளை அவர்கள் இதயங்களில் வைத்திருக்க வேண்டும். இந்த யதார்த்தத்திற்குள் நுழைவது என்பது ராஜ்யத்தின் யுகத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது. இன்று, பெரும்பாலான ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் வாழ முடியாது என்று உணர்கிறார்கள், நேரத்தைப் பொருட்படுத்தாமல் அவருடைய வார்த்தைகள் புதியவை என்று உணர்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் சரியானப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளனர் என்பதேயாகும். தேவன் தனது கிரியையைச் செய்வதற்கும் மனுஷனுக்கு வழங்குவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். எல்லோரும் தேவனுடைய வார்த்தைகளுக்காக ஏங்கும்போது, தாகமாக இருக்கும்போது, மனிதகுலம் அவருடைய வார்த்தைகளின் உலகிற்குள் நுழைகிறது.

தேவன் மிகவும் அதிகமாகப் பேசியுள்ளார். நீ எவ்வளவு தெரிந்துக் கொண்டாய்? நீ எவ்வளவு நுழைந்திருக்கிறாய்? ஒரு திருச்சபைத் தலைவர் தனது சகோதர சகோதரிகளை தேவனின் வார்த்தைகளின் நிஜத்திற்குள் வழிநடத்தவில்லை என்றால், அவர்கள் தங்கள் கடமையில் இருந்து விலகியிருப்பார்கள், மேலும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியிருப்பார்கள்! உனது புரிதல் ஆழமானதாக இருந்தாலும் அல்லது மேலோட்டமாக இருந்தாலும், உனது புரிதலின் அளவைப் பொருட்படுத்தாமல், அவருடைய வார்த்தைகளை எப்படிப் புசிக்கலாம், குடிக்கலாம் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், அவருடைய வார்த்தைகளில் நீ அதிக கவனம் செலுத்த வேண்டும், மேலும் அவற்றைப் புசிப்பது மற்றும் குடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் இவ்வளவு பேசியிருப்பதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும் குடிக்காமலும், அல்லது தேட முயற்சிக்காமலும், அல்லது அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்காமலும் இருந்தால், அதை தேவன் மீதான விசுவாசம் என்று சொல்ல முடியாது. நீ தேவனை நம்புவதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும், அவருடைய வார்த்தைகளை அனுபவிக்கவும் வேண்டும், அவருடைய வார்த்தைகளின்படி வாழவும் வேண்டும். இதை மட்டுமே தேவ நம்பிக்கை என்று அழைக்க முடியும்! நீ உனது வாயால் தேவனை நம்புகிறாய் என்று கூறினால், அவருடைய வார்த்தைகளில் எதையும் கடைபிடிக்கவோ அல்லது எந்த யதார்த்தத்தையும் உருவாக்கவோ முடியவில்லை என்றால், அது தேவனை நம்புவது என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, “பசியினைப் போக்க போஜனத்தைத் தேடுவதைப் போன்றது.” சிறிதளவு உண்மைநிலையைக்கூட சுதந்தரிக்காமல் அற்பமான சாட்சியங்கள், பயனற்ற விஷயங்கள், மற்றும் மேலோட்டமான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவது: இவை தேவன் மேலுள்ள நம்பிக்கையை உள்ளடக்கவில்லை. மேலும் தேவன் மேல் நம்பிக்கை வைப்பதற்கானச் சரியான வழியைப் புரிந்துக்கொள்ளவில்லை. ஏன் நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை முடிந்தவரைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும்? நீங்கள் அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் வெறும் பரலோகத்தை மட்டும் தேடுவது, தேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையாகுமா? தேவனை நம்புகிறவர் எடுக்கவேண்டிய முதற்படி என்ன தெரியுமா? எந்தப் பாதையின் மூலம் தேவன் மனுஷனைப் பூரணப்படுத்துகிறார் தெரியுமா? தேவனுடைய வார்த்தையைப் புசிக்காமல், குடிக்காமல் நீங்கள் பூரணமாக இருக்க முடியுமா? தேவனுடைய வார்த்தைகள் உங்களின் யதார்த்தமாக சேவை செய்யாமல் அவருடைய ராஜ்யத்தின் நபராகக் கருத முடியுமா? தேவனை நம்புவதன் அர்த்தம் என்ன? தேவனை விசுவாசிப்பவர்கள் குறைந்தபட்சம் வெளிப்புறத்திலாவது நன்றாக நடந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டவர்களாய் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவருடைய வார்த்தைகளிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது. தேவனை அறிவது, அவரது உள்நோக்கங்களை நிறைவேற்றுவது என அனைத்தும் அவர் வார்த்தைகளின் மூலம் அடையப்படுகின்றன. இனிவரும் நாட்களில் ஒவ்வொரு தேசமும், இனமும், மதமும், துறையும் தேவனுடைய வார்த்தையினால் சுதந்தரிக்கப்படும். தேவன் நேரிடையாகப் பேசுவார், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளைத் தங்கள் கரங்களில் கொண்டிருப்பர். இதன் மூலம் மனுக்குலம் பரிபூரணமாகும். உள்ளேயும், வெளியேயும் தேவனுடைய வார்த்தைகள் முழுவதுமாய் பரவும்: மனுக்குலத்தார் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாயால் பேசுவர், தேவனின் வார்த்தைகளின்படி நடப்பர், அவர்கள் உள்ளே தேவனின் வார்த்தைகளை வைத்திருப்பார்கள், மீதமிருப்போர் உள்ளேயும் வெளியேயும் தேவ வார்த்தைகளுக்குள் மூழ்கியிருப்பார்கள். இவ்விதமாய் மனுக்குலத்தார் பரிபூரணப்படுத்தப்படுவர். தேவனின் உள்நோக்கங்களை நிறைவேற்ற விரும்புவோர் மற்றும் அவருக்கு சாட்சியாக இருக்கக்கூடியவர்கள், தேவனின் வார்த்தைகளை அவர்களின் யதார்த்தமாகக் கொண்டவர்கள் ஆவர்.

வார்த்தையின் யுகத்திற்குள்—தேவனின் ஆயிரவருட அரசாட்சிக்குள்—நுழைதல் என்னும் கிரியை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுமுதல் தேவனின் வார்த்தைகள் பற்றிய ஐக்கியத்தில் ஈடுபட பழகிக் கொள்ளுங்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதாலும், குடிப்பதாலும் அனுபவிப்பதாலும் மட்டுமே உங்களால் தேவனின் வார்த்தைகளின்படி வாழ முடியும். மற்றவர்களை நம்பவைக்க நீ சில நடைமுறை அனுபவங்களை உருவாக்க வேண்டும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தின்படி உன்னால் வாழ முடியாவிட்டால், ஒருவரும் மாற்றப்பட மாட்டார்கள்! தேவனால் பயன்படுத்தப்படும் அனைவரும் தேவனின் வார்த்தைப்படி வாழ முடியும். உன்னால் இந்த யதார்த்தத்தை உருவாக்க முடியவில்லை என்றால் மற்றும் தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னில் செயல்படவில்லை என்பதையும், நீ தேவனில் பூரணப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது. இதுவே தேவனின் வார்த்தைகளின் முக்கியத்துவம். தேவனின் வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளும் இதயத்தை நீ கொண்டிருக்கிறாயா? தேவனின் வார்த்தைகளுக்காகத் தாகம் கொண்டிருப்பவர்கள், சத்தியத்திற்காகத் தாகம் கொள்கிறார்கள், மற்றும் இது போன்ற ஜனங்கள் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எதிர்காலத்தில், தேவன் அனைத்து மதத்தினருக்கும் அனைத்து இனத்தவருக்கும் மேலும் பல வார்த்தைகளைக் கூறுவார். அவர் முதலாவது உங்கள் மத்தியில் தனது குரலைப் பேசி, உங்களைப் பரிபூரணப்படுத்துவார், பின்பு புறஜாதியினரை ஜெயங்கொள்ளும்படியாக அவர்கள் மத்தியில் தனது குரலைப் பேசுவார். அவருடைய வார்த்தைகளின் மூலம், அனைவரும் உண்மையோடும் முற்றிலுமாகவும் நம்பவைக்கப்படுவார்கள். தேவனின் வார்த்தைகள் மற்றும் அவரின் வெளிப்பாடுகளின் மூலம் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை குறைகிறது. அவன் மனிதனின் தோற்றத்தைப் பெறுகிறான், மற்றும் அவனுடைய கலகத்தனமான மனநிலை குறைகிறது. இந்த வார்த்தைகள் மனுஷன் மீது அதிகாரத்தைச் செயல்படுத்தி, தேவனின் வெளிச்சத்திற்குள் மனுஷனை ஆட்கொள்ளும். தேவன் தற்போதைய யுகத்தில் மேற்கொள்ளும் கிரியையையும், அவரின் கிரியையின் திருப்புமுனைகளையும் அவருடைய வார்த்தைகளுக்குள்ளே கண்டடையலாம். நீ அவரின் வார்த்தைகளை வாசிக்கவில்லை என்றால், உனக்கு எதுவும் புரியாது. அவருடைய வார்த்தைகளை நீயே புசிப்பதன் மூலம் மற்றும் குடிப்பதன் மூலம், மற்றும் உனது சகோதர சகோதரிகளுடனும் ஐக்கியமாய் இருப்பதன் மூலமும் உனது சொந்த அனுபவங்களின் மூலமும், நீ தேவனின் வார்த்தைகள் பற்றிய முழு அறிவைப் பெறுவாய். அப்போதுதான் உன்னால் அவற்றின் யதார்த்தத்தின்படி உண்மையாக வாழ முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 405

“அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதில் கவனம் செலுத்துபவர்கள் அனைவரும் கைவிடப்படுவார்கள். அவர்கள் பரிபூரணர்களாக ஆக்கப்படுபவர்கள் அல்ல,” என்று நான் முன்பு கூறியிருக்கிறேன். நான் அநேக வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன், ஆனாலும் மனிதனுக்கு இந்த கிரியையைப் பற்றி சிறிதளவு அறிவும் இல்லை, மேலும், இந்த இடத்திற்கு வந்தபோதும், ஜனங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் கேட்கிறார்கள். தேவன் மீதான உன் விசுவாசம், அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைத் தேடுவதைத் தவிர வேறொன்றுமில்லையா, அல்லது ஜீவனைப் பெறுவதற்காகவா? இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், அவற்றில் சில இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இயேசு தேவன் இல்லை என்று நீ சொல்ல முடியுமா? அவர் கிறிஸ்து என்றும் தேவனின் நேசகுமாரன் என்றும் தேவன் சாட்சி கொடுத்தார். இதை நீ மறுக்க முடியுமா? இன்று, தேவன் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், இதை நீ முழுமையாக அறியவில்லை என்றால், நீ உறுதியாக நிற்க முடியாது. அவர் தேவன் என்பதால் நீ அவரை விசுவாசிக்கிறாயா, அல்லது அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படுகின்றனவா இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரை விசுவாசிக்கிறாயா? நீ அடையாளங்களையும் அற்புதங்களையும் விசுவாசிக்கிறாயா, அல்லது தேவனை விசுவாசிக்கிறாயா? இன்று, அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டவில்லை. அவர் உண்மையில் தேவனா? அவர் பேசும் வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அவர் உண்மையில் தேவனா? அவர் பேசும் வார்த்தைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதன் மூலம் தேவனின் சாராம்சம் தீர்மானிக்கப்படுகிறதா? தேவனை விசுவாசிப்பதற்கு முன்பு சிலர் தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதற்காக எப்போதும் காத்திருப்பது ஏன்? அவர்கள் அவரை அறியவில்லை என்று அர்த்தமல்லவா? அத்தகைய கருத்துக்களைக் கொண்டவர்கள் அனைவரும் தேவனை மறுப்பவர்கள். தேவனை அளவிட அவர்கள் கருத்துக்களைப் பயன்படுத்துகிறார்கள். தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டால், அவர்கள் அவரை விசுவாசிக்கிறார்கள், இல்லையென்றால் அவர்கள் அவரை விசுவாசிப்பதில்லை. அவர்கள் எப்போதும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பின்பற்றுகிறார்கள். இந்த ஜனங்கள் நவீன காலத்தின் பரிசேயர்கள் அல்லவா? உன்னால் உறுதியாக நிற்க முடியுமா இல்லையா என்பது நீ உண்மையான தேவனை அறிந்திருக்கிறாயா இல்லையா என்பதைப் பொறுத்தது. இது முக்கியமானது! உன்னில் தேவனின் வார்த்தையின் யதார்த்தம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, தேவனின் யதார்த்தத்தைப் பற்றிய உன் அறிவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, சோதனைகளின் போது உன்னால் அவ்வளவு உறுதியாக நிற்க முடிகிறது. அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதில் நீ எவ்வளவு கவனம் செலுத்துகிறாயோ, உன்னால் அவ்வளவு குறைவாக உறுதியாக நிற்க முடிகிறது, மேலும் சோதனைகளுக்கு மத்தியில் நீ விழுந்து விடுவாய். அடையாளங்களும் அற்புதங்களும் அஸ்திபாரம் அல்ல. தேவனின் யதார்த்தம் மட்டுமே ஜீவன். தேவனின் கிரியையால் அடைய வேண்டிய பலன்கள் குறித்து சிலருக்குத் தெரியாது. அவர்கள் தங்கள் நாட்களை கலக்கத்தில் செலவிடுகிறார்கள், தேவனின் கிரியையைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை. அவர்கள் பின்தொடர்வதின் நோக்கம், தேவன் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதே ஆகும், அப்போதுதான் அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தீவிரமாக இருப்பார்கள். தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டால்தான் ஜீவனைப் பின்பற்றுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அவர்கள் ஜீவனைப் பின்பற்ற வாய்ப்பில்லை. தேவனை விசுவாசிப்பது என்பது அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதும், பரலோகத்திற்கும் மூன்றாம் வானத்திற்கும் ஏறுவதற்கான நாட்டமும் என்று மனிதன் கருதுகிறான். அவர்கள் யாரும் தேவன் மீதான விசுவாசம் என்பது யதார்த்தத்திற்குள் நுழைவதும், ஜீவனைப் பின்தொடர்வதும், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதைப் பின்தொடர்வதும் என்று கூறுவதில்லை. இது போன்ற பின்தொடர்தலின் மதிப்பு என்ன? தேவனைப் பற்றிய அறிவையும், தேவனின் திருப்தியையும் பின்பற்றாதவர்கள் தேவனை விசுவாசிக்காதவர்கள் ஆவர். அவர்கள் தான் தேவனை நிந்திக்கிறவர்கள்!

தேவன் மீதான விசுவாசம் என்ன என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? தேவன் மீதான விசுவாசம் என்பது அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதா? அது பரலோகத்திற்கு ஏறுவது என்று அர்த்தமா? தேவனை விசுவாசிப்பது சிறிதும் எளிதானது அல்ல. அந்த மத நடைமுறைகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதும், பேய்களை விரட்டுவதும், அடையாளங்கள் மற்றும் அற்புதங்களில் கவனம் செலுத்துவதும், தேவனின் கிருபை, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியை அதிகம் விரும்புவது, மாம்சத்தின் வாய்ப்புகள் மற்றும் வசதிகளைப் பின்தொடர்வது ஆகிய இவையே மத நடைமுறைகள், அத்தகைய மத நடைமுறைகள் தெளிவற்ற ஒரு வகையான விசுவாசம் ஆகும். இன்று தேவன் மீதான உண்மையான விசுவாசம் என்பது என்ன? தேவனின் வார்த்தையை உங்களுடைய வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதும், அவரைப் பற்றிய உண்மையான அன்பை அடைவதற்காக தேவனை அவருடைய வார்த்தையின் மூலமாய் அறிந்து கொள்வதும் ஆகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தேவன் மீதான விசுவாசம் என்பது நீ தேவனுக்குக் கீழ்ப்படிவதும், தேவனை நேசிப்பதும், தேவனின் ஒரு சிருஷ்டியால் செய்யப்பட வேண்டிய கடமையைச் செய்வதுவும் என்று கூறலாம். இது தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் ஆகும். தேவனின் அருமையைப் பற்றிய அறிவை நீ அடைய வேண்டும், தேவன் ஆராதிப்பதற்கு எவ்வளவு தகுதியானவராக இருக்கிறார், அவருடைய சிருஷ்டிப்புகளில், தேவன் எவ்வாறு இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார், அவற்றை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார். இவை தேவன் மீதான உன் விசுவாசத்தின் அத்தியாவசியமானவை. தேவன் மீதான விசுவாசம் என்பது முக்கியமாக மாம்சத்திற்குரிய வாழ்க்கையிலிருந்து தேவனை நேசிக்கும் வாழ்க்கைக்கு மாறுவது ஆகும். அது சீர்கெட்ட வாழ்க்கையிலிருந்து தேவனின் வார்த்தைகளுக்குள் வாழ்வதுவரை ஆகும். அது சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து வெளிவந்து தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்வது ஆகும். அது தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் மாம்சத்திற்குக் கீழ்ப்படியாமையையும் அடைய முடிவது ஆகும். இது உன் முழு இருதயத்தையும் பெற தேவனை அனுமதிப்பது, உன்னை பரிபூரணமாக்க தேவனை அனுமதிப்பது, மேலும் சீர்கேடு நிறைந்த சாத்தானின் மனநிலையிலிருந்து உன்னை விடுவிப்பதும் ஆகும். தேவன் மீதான விசுவாசம் முக்கியமாக இருப்பதால், தேவனின் வல்லமையும் மகிமையும் உன்னிடத்தில் வெளிப்படும், இதனால் நீ தேவனுடைய சித்தத்தைச் செய்யவும், தேவனின் திட்டத்தை நிறைவேற்றவும், சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு சாட்சி அளிக்கவும் முடியும். தேவன் மீதான விசுவாசம் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணும் விருப்பத்தைச் சுற்றி இருக்கக்கூடாது, அது உன் சுய மாம்சத்திற்காகவும் இருக்கக்கூடாது. இது தேவனை அறிந்துகொள்வதையும், பேதுருவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிவதையும், ஒருவர் இறக்கும் வரை தேவனுக்குக் கீழ்ப்படிவதையும் பற்றியதாக இருக்க வேண்டும். தேவனை விசுவாசிப்பதற்கான முக்கிய நோக்கங்கள் இவையே. தேவனை அறிந்து அவரை திருப்திப்படுத்துவதற்காக ஒருவர் தேவனுடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ணுவது உனக்கு தேவனைப் பற்றிய அதிக அறிவைத் தருகிறது, அதன்பின்தான் உன்னால் அவருக்குக் கீழ்ப்படிய முடியும். தேவனைப் பற்றிய அறிவால் மட்டுமே உன்னால் அவரை நேசிக்க முடியும், மேலும் தேவன் மீதுள்ள விசுவாசத்தில் மனிதன் கொண்டிருக்க வேண்டிய குறிக்கோள் இதுதான். தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ எப்போதும் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண முயற்சிக்கிறாய் என்றால், தேவன் மீதான இந்த விசுவாசத்தின் கண்ணோட்டம் தவறானது. தேவன் மீதான விசுவாசம் என்பது தேவனின் வார்த்தையை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதாகும். தேவனின் வாயிலிருந்து வரும் அவருடைய வார்த்தைகளைக் கடைபிடித்து அவற்றை உனக்குள் நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவனின் நோக்கமானது அடையப்படுகிறது. தேவனை விசுவாசிப்பதில், மனிதன் தேவனால் பரிபூரணமாகவும், தேவனுக்கு அர்ப்பணிக்கவும், தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவும் முயற்சி செய்ய வேண்டும். நீ குறைகூறாமல் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்து, தேவனின் விருப்பங்களைக் கவனத்தில் கொண்டு, பேதுருவின் உயரத்தை அடைந்து, தேவனால் பேசப்படும் பேதுருவின் பாணியைக் கொண்டிருந்தால், நீ தேவன் மீதான விசுவாசத்தில் வெற்றியை அடைந்திருப்பதையும், அதுதான் நீ தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டிருக்கிறாய் என்பதையும் குறிக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

முந்தைய: ஜீவனுக்குள் பிரவேசித்தல்

அடுத்த: ஜீவனுக்குள் பிரவேசித்தல் II

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக