ஜீவனுக்குள் பிரவேசித்தல் (2)
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 406
மக்கள் தங்கள் இருதயத்தால் தேவனுடைய ஆவியைத் தொடுவதே அவர்கள் தேவனில் விசுவாசம் வைப்பதற்கும், அவரை நேசிப்பதற்கும், அவரைத் திருப்திப்படுத்துவதற்குமான வழியாகும். தேவனுடைய திருப்தியைப் பெற்று, தங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளோடு ஐக்கியப்படுத்தி தேவனுடைய ஆவியின் ஏவுதலை பெறுவார்கள். நீ ஓர் இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ்ந்திடவும், தேவனோடு ஓர் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்பினால், முதலாவது உனது இருதயத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். உனது இருதயத்தை அவருக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவருக்குள் உனது முழு இருதயத்தையும் ஊற்றினால், படிப்படியாக இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கையை வளர்த்துக்கொள்ள முடியும். தேவன் மீதான மக்களின் விசுவாசத்தை பொறுத்தமட்டில் அவர்கள் தங்கள் இருதயத்தை அவருக்கு கொடுக்காவிட்டால், அவர்கள் இருதயம் அவருக்குள் இராவிட்டால், அவர்கள் தேவனின் நுகத்தை தங்கள் நுகமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த ஜனங்களின் நடத்தையானது தேவனை ஏமாற்றுவதாக, மதம் சார்ந்த மக்களின் செய்கையாக இருக்குமே தவிர அதை தேவன் மெச்சிக்கொள்ளமாட்டார். இப்படிப்பட்ட நபரிடமிருந்து தேவன் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர் தேவனுடைய செயலை தடுப்பவராகவும், தேவனுடைய வீட்டில் பயனற்றதான, பகட்டான அலங்காரம் போன்றும் மட்டுமே இருப்பார். இப்படிப்பட்டவரை தேவன் பயன்படுத்தமாட்டார். இப்படிப்பட்ட நபரில் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டுக்கு எந்த வாய்ப்பும் இல்லாததோடு, அவர்கள் பரிபூரணப்படுவதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. உண்மையில் இப்படிப்பட்டவர் நடைபிணமாவார். பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தக்கூடியவை எதுவும் இப்படிப்பட்டவர்களில் காணப்படாது. மாறாக, அவர்கள் அனைவரும் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவர்களாயும், மிகவும் சீர்கெட்டுப்போனவர்களாயும் இருப்பர். இப்படிப்பட்டவர்களை தேவன் களையெடுப்பார். பரிசுத்த ஆவியானவர் மக்களை பயன்படுத்தும்போது, காரியங்களை முடிப்பதற்கு அவர்களிலுள்ள விரும்பத்தக்க பகுதிகளை உபயோகப்படுத்துவதோடு, அவர்களிலுள்ள விரும்பத்தகாத பகுதிகளை அவர் மாற்றி பரிபூரணப்படுத்துகிறார். உனது இருதயம் தேவனுக்குள் ஊற்றப்பட்டு அவர் முன்பு அமைதியாக இருக்குமானால் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுவதற்கு, அவர் அருளும் ஞானத்தையும் பிரகாசத்தையும் அடைவதற்கான தகுதிகளையும் வாய்ப்பையும் நீ பெற்றுக்கொள்வாய். மேலும் உனது தப்பிதங்களை பரிசுத்த ஆவியானவர் சீர்செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். நீ உனது இருதயத்தை தேவனுக்கு கொடுக்கும்போது, நேர்மறையான காரியமாக ஆழமாக நுழைந்து புத்தியின் உயர்தளத்தை அடைதல் போன்றவையும், எதிர்மறையான காரியமாக உனது சொந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளை பற்றிய புரிதலும் கிடைக்கும்; தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வத்துடன் இருப்பாய்; மந்தமாக இல்லாமல் துடிப்பாக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பாய். இவ்விதமாக நீ சரியான நபராக மாறுவாய். தேவனுக்கு முன்பாக உனது இருதயம் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியும் என்று வைத்துக்கொண்டால், நீ பரிசுத்த ஆவியானவரின் பாராட்டுதலை பெறுகிறாயோ இல்லையோ, தேவனை பிரியப்படுத்துகிறாயோ இல்லையோ, துடிப்பாக உட்பிரவேசிக்கிறாயா என்பதுதான் முக்கியமான காரியம். பரிசுத்த ஆவியானவர் ஒரு நபரை பிரகாசிக்கச் செய்து அவரை பயன்படுத்தும்போது, அவர் அவர்களை ஒருபோதும் எதிர்மறையாக மாற்றுவதில்லை. ஆனால், துடிப்பாக முன்னேறிச் செல்லவே வைக்கிறார். அந்த நபருக்கு பெலவீனங்கள் இருந்தாலும், அந்த பெலவீனங்களையே அடிப்படையாகக் கொண்டு வாழ்வதை, வாழ்வில் வளர்ச்சி தாமதப்படுவதை அவர்கள் தவிர்க்க இயலும்; தேவ சித்தத்தை நிறைவேற்றுவதை தொடர்ந்து நாட இயலும். இது ஒரு தரநிலையாகும். இதை நீ அடைய முடியுமென்றால் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நீ பெற்றுள்ளாய் என்பதற்கு போதுமான சான்று இதுவே ஆகும். ஞானத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும், தங்களை அறிந்து கொண்ட பின்னரும் எழுந்திருந்து தேவனுக்கு இசைவாக செயல்பட இயலாமல் எதிர்மறையாக, மந்தமாக இருந்தால், அந்த நபர் தேவ கிருபையை மட்டும் அடைந்திருக்கிறாரே தவிர, பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் இல்லை. ஒருவர் எதிர்மறை நோக்கம் கொண்டிருப்பின், அவரது இருதயம் தேவனிடமாய் திரும்பவில்லை என்றும் அவரது ஆவி தேவ ஆவியினால் ஏவப்படவில்லை என்றும் அர்த்தம். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 407
தேவனுக்கு முன்பாக ஒருவரது இருதயத்தை அமைதியாய் அமர்ந்திருக்கச் செய்வதே மிக முக்கியமானது என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இது மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் அவர்களது வாழ்வின் வளர்ச்சியை குறித்த பிரச்னையாகும். தேவனுக்கு முன்பாக உனது இருதயம் அமைதியாக இருந்தால் மட்டுமே, நீ சத்தியத்தை பின்பற்றுவதும் உனது குணாதிசயங்களை மாற்றிக்கொள்வதும் கனி தரும். நீ நுகத்தை சுமந்தவனாக தேவனுக்கு முன்பு வருவதால், பலவிதங்களில் குறைபாடு உள்ளவன் என்று உணர்வதால், அறிந்து கொள்ளவேண்டிய பல சத்தியங்கள் இருக்கின்றன; அனுபவிக்கவேண்டிய உண்மைகள் பல இருக்கின்றன; தேவ சித்தத்தின் மீது முழுவதும் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணங்கள் எப்போதும் உன் மனதில் இருக்கும். இவை மூச்சுவிட இயலாமல் எப்போதும் உன்னை அழுத்திக்கொண்டே இருப்பதால், நீ எதிர்மறை நோக்கில் இல்லையென்றாலும்கூட இருதயத்தில் பாரத்தை உணர நேரிடும். இப்படி இருக்கும் மக்கள் மட்டுமே தேவனுடைய வார்த்தையின் ஞானத்தை ஏற்றுக்கொள்ளவும் தேவ ஆவியினால் ஏவப்படவும் தகுதியுடையவர்களாவார்கள். அவர்களது நுகத்தினால், அவர்களது இருதய பாரத்தினால், அவர்கள் செலுத்திய கிரயத்தினால், தேவனுக்கு முன்பாக அவர்கள் அனுபவித்த நெருக்கத்தினால் அவர் அருளும் ஞானத்தையும் பிரகாசத்தையும் அவர்கள் அடைந்தார்கள் என்று கூறலாம். தேவன் ஒருவரையும் பாரபட்சத்துடன் நடத்துவதில்லை. மக்களை அவர் எப்போதும் நீதியுடன் நடத்துகிறார். காரணமில்லாமல் அல்லது நிபந்தனையில்லாமல் அவர் மக்களுக்குக் கொடுப்பதில்லை. இது அவரது நீதியுள்ள குணாதிசயங்களில் ஒன்றாகும். நடைமுறை வாழ்வில் இன்னும் அநேகர் இந்நிலையை அடைய வேண்டியதுள்ளது. அவர்கள் இருதயம் இன்னும் முழுமையாக தேவனிடம் திரும்ப வேண்டியுள்ளதால் அவர்களது இயல்பான வாழ்வில் எந்தப் பெரிய மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இன்னும் பெற்றுக்கொள்ளாமல், தேவ கிருபையில் வாழ்கிறார்கள். தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு கீழ்க்காணும் தகுதிகளை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்: அவர்கள் இருதயம் தேவனிடம் திரும்பவேண்டும்; தேவனுடைய வார்த்தைகளின் பாரத்தை அவர்கள் சுமக்கவேண்டும்; வாஞ்சையுள்ள இருதயம் அவர்களுக்கு வேண்டும்; சத்தியத்தை தேடும் உறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் மக்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை பெற்றுக் கொள்ளவும், ஞானத்தையும் பிரகாசத்தையும் அடிக்கடி அடையவும் முடியும். தேவனால் பயன்படுத்தப்படும் மக்கள் ஒழுங்காக பேசினாலும், கவனமின்றி பேசுவதை தவிர்த்தாலும், தேவனுக்கு முன்பாக அமைதியான இருதயத்தை கொண்டிருந்தாலும் வெளியே இருந்து பார்ப்பதற்கு மற்றவர்களுடன் இயல்பான உறவை கொண்டிராதவர்களாகவும் முரண்பாடானவர்களாகவும் காணப்படுவர். இப்படிப்பட்ட நபர் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட போதுமானவர். தேவன் பேசக்கூடிய “முரண்பாடான” நபர் மற்றவர்களுடன் இயல்பான உறவை பேணாதவராக, வெளிப்புற அன்புக்கோ அல்லது வெளிப்புற சடங்காச்சாரத்திற்கோ போதிய முக்கியத்துவம் கொடுக்காதவராக காணப்படுகிறார், ஆனால் ஆவிக்குரிய விஷயங்களை கொடுக்கும்போது, தங்கள் இருதயத்தை திறந்து, தேவனுக்கு முன்பான தங்கள் உண்மை அனுபவத்திலிருந்து பெற்ற பிரகாசத்தோடும், தெளிவோடும் சுயநலமின்றி மற்றவர்களுக்கு கொடுக்க இயலும். இவ்விதமாக அவர்கள் தேவன் மீதான அன்பை வெளிப்படுத்தி தேவ சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களை அவதூறாய் பேசி, பரியாசம் பண்ணும்போது, வெளியிலுள்ள மக்களால், விஷயங்களால், பொருட்களால் தாங்கள் கட்டுப்படுத்தப்படுவதை தவிர்க்கக்கூடியவர்களாகவும், அத்தகைய நிலையிலும் தேவன் முன்பாக அமைதியாக இருக்கக்கூடியவர்களாகவும் இருப்பர். அப்படிப்பட்ட நபர் தனக்கென தனித்துவமான புரிதல் கொண்டவராக காணப்படுவார். மற்ற மக்கள் என்ன செய்தாலும் இவர்களது இருதயம் ஒருபோதும் தேவனை விட்டு விலகாது. மற்றவர்கள் மகிழ்ச்சியாக, வேடிக்கையாக அரட்டையடித்துக் கொண்டிருந்தாலும், இவர்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக இருக்கும்; தேவனுடைய வார்த்தையை கண்ணோக்கும்; தேவனின் நோக்கங்களை நாடி தங்கள் இருதயத்தினுள் அமைதியாக தேவனிடம் ஜெபிக்கும். மற்றவர்களோடு இயல்பாக உறவை பேணுவதற்கு அவர்கள் ஒருபோதும் முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்வதற்கான தத்துவம் ஏதும் இல்லாதவராக காணப்படுவார்கள். ஆனால் வெளிப்புறத்தில் துடிப்பானவராக, அன்புக்குரியவராக, வெகுளியாக, சாந்தகுணமுள்ளவராக இருப்பார்கள். தேவன் பயன்படுத்தும் நபர் இப்படிப்பட்டவராக இருப்பார்கள். வாழ்க்கைக்கான தத்துவம் அல்லது “இயல்பான காரணம்” போன்றவை இப்படிப்பட்ட நபருக்கு பொருந்துவதில்லை. அவர் முழு இருதயத்தையும் தேவனின் வார்த்தைக்கு அர்ப்பணித்தவராக, தேவனை மட்டுமே இருதயத்தில் கொண்டவராக காணப்படுவார்கள். இப்படிப்பட்ட நபரை தேவன் “காரணம் காட்டாத” நபராக குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட நபரே தேவனால் பயன்படுத்தப்படுவார். தேவனால் பயன்படுத்தப்பட்டு வரும் நபரின் அடையாளம் என்னவென்றால் எப்போதும் அல்லது எங்கேயும் அவர்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக இருக்கும்; மற்றவர்கள் எவ்வளவு ஒழுக்கமற்றவர்களாக, இச்சையான, மாம்ச பிரகாரமான செயல்களில் ஈடுபட்டாலும் இவரின் இருதயம் ஒருபோதும் தேவனை விட்டு விலகாமல் இருக்கும்; இப்படிப்பட்டவர்கள் பெரும்பான்மையோரை பின்பற்ற மாட்டார்கள். இப்படிப்பட்ட நபரே தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு பொருத்தமானவர்; இவரே பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணமாக்கப்படுகிறார். இந்த காரியங்களை உன்னால் அடைய இயலாவிட்டால், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கும் பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணமாக்கப்படுவதற்கும் நீ தகுதி பெறவில்லை.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 408
நீ தேவனோடு இயல்பான உறவை வைத்துக்கொள்வதற்கு விரும்பினால், உனது இருதயம் தேவனிடம் திரும்ப வேண்டும். இதை அஸ்திபாரமாக கொண்டால், நீ மற்றவர்களிடம் இயல்பான உறவை கொண்டிருப்பாய். தேவனோடு இயல்பான உறவைகொண்டிருக்கவில்லையானால், மற்றவர்களோடு உறவை பேணுவதற்கு நீ என்ன செய்கிறாய், எவ்வளவு கடினமாய் உழைக்கிறாய், எவ்வளவு ஆற்றலை செலவழிக்கிறாய் என்பதெல்லாம் பொருட்டே அல்ல; அவையனைத்தும் வாழ்க்கைக்கான மனித தத்துவத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். மற்ற மக்கள் உன்னை புகழும்வண்ணம் மனித கண்ணோட்டத்திலும் மனித தத்துவத்தின் அடிப்படையிலும் மற்றவர்கள் மத்தியில் உனது அந்தஸ்தை பேணிவருகிறாயேயன்றி, மக்களோடு இயல்பான உறவை ஏற்படுத்துவதில் நீ தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றவில்லை. நீ மக்களுடனான உறவில் கவனம் செலுத்தாமல் தேவனோடு இயல்பான உறவை பேணி வந்தாயானால், உனது இருதயத்தை தேவனுக்குக் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிய கற்றுக்கொண்டாயானால், மற்ற மக்களுடனான உனது உறவு தானாகவே இயல்பானதாகிவிடும். இவ்விதமாக, இந்த உறவுகள் மாம்சத்தில் ஏற்படுத்தப்படுத்தப்படாமல், தேவனுடைய அன்பு என்னும் அஸ்திபாரத்தின்மேல் ஸ்தாபிக்கப்படுகிறது. மாம்சபிரகாரமான எந்த இடைபடுதலும் இருக்காது; ஆனால் ஆவியில் ஐக்கியமும், பரஸ்பர அன்பும், பரஸ்பர ஆறுதலும் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவுவதும் காணப்படும். தேவனை திருப்தியாக்கும் இருதயத்தை அஸ்திபாரமாக கொண்டே இவை அனைத்தும் நடைபெறும். இந்த உறவுகள் வாழ்க்கைக்கான மனித தத்துவத்தை சார்ந்து பேணப்படாமல் தேவனுக்காக பாரத்தை சுமப்பதன் மூலமாக இயல்பாக உருவாகிறது. இதற்கு மனித முயற்சி தேவையில்லை. தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் நீ செயல்பட்டால் மட்டும் போதும். தேவ சித்தத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு நீ விரும்புகிறாயா? தேவனுக்கு முன்பாக “காரணம் காட்டாத” ஒருவராக இருக்க விரும்புகிறாயா? மக்கள் மத்தியிலான உனது அந்தஸ்து குறித்து எண்ணாமல், உனது இருதயத்தை முழுவதுமாக தேவனுக்கு கொடுக்க விரும்புகிறாயா? உன்னோடு தொடர்பிலிருக்கும் அனைவரிலும் யாரோடு உனது உறவு சிறப்பானதாக இருக்கிறது? யாருடனான உனது உறவு மோசமான நிலையிலுள்ளது? மக்களுடனான உனது உறவு இயல்பாக உள்ளதா? நீ அனைவரையும் சமமாக நடத்துகிறாயா? மற்றவர்களுடனான உனது உறவு வாழ்க்கைக்குரிய தத்துவத்தின்படி பேணப்படுகிறதா அல்லது தேவனுடைய அன்பென்னும் அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டுள்ளதா? ஒருவர் தன் இருதயத்தை தேவனுக்கு கொடுக்கவில்லை என்றால் அவரது ஆவி மந்தமானதாக, மரத்துப்போனதாக, உணர்வற்றதாக மாறிவிடும். இப்படிப்பட்ட நபர் தேவனுடைய வார்த்தையை ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்; அவரது மனநிலை ஒருபோதும் மாறாது. ஒருவரது மனநிலையில் மாற்றம் ஏற்படுவது அவரது இருதயத்தை முழுவதுமாக தேவனுக்கு கொடுப்பதற்கான மற்றும் தேவனுடைய வார்த்தையிலிருந்து ஞானத்தையும் பிரகாசத்தையும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையாகும். தேவனுடைய கிரியை ஒருவரை துடிப்பாக உட்பிரவேசிக்க அனுமதிப்பதோடு தங்கள் எதிர்மறை காரியங்களைக் குறித்த அறிவைப் பெற்றுக்கொண்டு அவற்றை அகற்றுவதற்கும் உதவும். தேவனுக்கு உனது இருதயத்தை கொடுக்கும் நிலையை நீ அடையும்போது, உனது ஆவிக்குள் ஒவ்வொரு நுட்பமான அசைவையும் உணரக்கூடியவனாகவும், தேவனிடமிருந்து பெறும் ஞானம், பிரகாசம் ஆகியவற்றை அறியக்கூடியவனாகவும் மாறுவாய். இதைப் பற்றிக்கொண்டு படிப்படியாக பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணப்படுத்தப்படும் பாதைக்குள் பிரவேசிப்பாய். எந்த அளவுக்கு உனது இருதயம் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உனது ஆவி அதிக உணர்வுள்ளதாகவும் இன்பமானதாகவும் இருக்கும். எந்த அளவு உனது ஆவி பரிசுத்த ஆவியானவர் தன்னை ஏவுகிறார் என்பதை உணர முடிகிறதோ, அந்த அளவு தேவனுடனான உனது உறவு இயல்பானதாக மாறும். மக்களுக்கிடையேயான இயல்பான உறவு மனித முயற்சியினால் அல்ல, அவரவர் இருதயங்களை தேவனுக்குக் கொடுத்தல் என்ற அஸ்திபாரத்தின்மேலேயே எழுப்பப்படும். தேவனை தங்கள் இருதயத்தில் கொண்டிராமல், மக்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் உறவானது மாம்சரீதியானதாகவே இருக்கும். அந்த உறவு இயல்பானதாக அல்ல, இச்சைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதாகவே இருக்கும். அவ்வகை உறவுகளை தேவன் வெறுக்கிறார், அருவருக்கிறார். நீ ஆவியில் ஏவுதல் பெற்றதாக கூறியும், உன்னோடு ஐக்கியம் கொள்ள விரும்புவர்களோடு ஐக்கியம் கொள்ளாமலும், அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டி, அவர்களுடன் இடைபடாமல் தவிர்த்து, உயர்ந்தவர்கள் என்று நீ நினைக்கக்கூடிய, உனக்கு விருப்பமான மக்களோடு எப்போதும் ஐக்கியம் கொள்ள விரும்பினால், நீ உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டவனென்றும், தேவனோடு இயல்பான உறவில் இல்லையென்பதும் நிரூபணமாகும். நீ தேவனை வஞ்சிக்கவும் உனது சொந்த அவலட்சணத்தை மூடிமறைக்கவும் முயற்சிக்கிறாய். சில புரிதல்களை உன்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தாலும், நீ தவறான நோக்கங்களை கொண்டிருக்கிறாய்; பிறகு நீ செய்யும் ஒவ்வொன்றும் மனித தரத்தின்படியான நோக்கில் நல்லதாக இருக்கும். தேவனுடைய பாரத்தின்படியல்ல, மாம்சத்தின்படி நீ செயல்படுவதால் தேவன் உன்னை மெச்சிக்கொள்ள மாட்டார். தேவனுக்கு முன்பாக உனது இருதயத்தை அமைதிப்படுத்த முடியுமானால், தேவனை நேசிக்கிற அனைவரோடும் இயல்பாக இடைபட முடியுமானால் மட்டுமே, நீ தேவனால் பயன்படுத்தப்பட தகுதியானவன். இவ்விதமாக, நீ மற்றவர்களோடு எப்படி இணைந்து செயல்படுகிறாய் என்பதல்ல, வாழ்க்கைக்கான தத்துவத்தின்படியல்ல, தேவனுக்கு முன்பாக அவருடைய பாரத்தை கருத்தில் கொண்டு வாழ்வதே கருத்தில் கொள்ளத்தக்கது. உங்களில் எத்தனை பேர் இதைப் போல் உள்ளனர்? மற்றவர்களுடனான உனது உறவு உண்மையில் இயல்பாக உள்ளதா? எந்த அஸ்திபாரத்தின்மேல் அது கட்டப்பட்டுள்ளது? உனக்குள் வாழ்க்கைக்கான தத்துவங்கள் எத்தனை உள்ளன? அவை புறந்தள்ளப்பட்டனவா? உனது இருதயம் முழுமையாக தேவனிடம் திரும்பாவிட்டால், நீ தேவனுடையவன் அல்ல. நீ சாத்தானிடமிருந்து வருபவன், முடிவில் சாத்தானிடமே திரும்புவாய். நீ தேவனுடைய ஜனத்தில் ஒருவனாக இருக்கக்கூடிய தகுதி இல்லாதவன். இவை எல்லாவற்றையுமே நீ கவனத்துடன் பரிசீலிக்கவேண்டும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 409
தேவனை விசுவாசிக்கையில், தேவனுடன் ஒரு இயல்பான உறவைக் கொண்டிருப்பதிலுள்ள பிரச்சினையையாவது நீங்கள் தீர்க்க வேண்டும். நீங்கள் தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசம் அர்த்தம் இழக்கிறது. தேவனோடு ஓர் இயல்பான உறவை நிலைநிறுத்துவது என்பது தேவனுடைய சமுகத்தில் அமைதியாக இருக்கும் இருதயத்தால் முற்றிலும் அடையக்கூடியதாக இருக்கிறது. தேவனோடு ஓர் இயல்பான உறவைக் கொண்டிருப்பது என்பது சந்தேகப்படாமல் இருக்கவும், அவருடைய எந்தக் கிரியையையும் மறுக்காமல் இருக்கக் கூடியது மற்றும் அவருடைய கிரியைக்கு ஒப்புக்கொடுக்கக் கூடியது ஆகும். இதன் அர்த்தம், தேவனுடைய சமுகத்தில் சரியான நோக்கங்களைக் கொண்டிருப்பது, உனக்கு நீயே திட்டங்கள் போடாமல் இருப்பது, மற்றும் எல்லாவற்றிலும் தேவனுடைய குடும்பத்தின் நலன்களைக் கருத்தில் கொள்வது என்பதாகும்; தேவனின் மீளாய்வை ஏற்றுக்கொள்வதும் தேவனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதும் இதன் அர்த்தமாகும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுடைய சமுகத்தில் உங்கள் இதயத்தை அமைதிப்படுத்த உங்களால் முடிய வேண்டும். தேவனின் சித்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும், உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் உங்கள் திறனுக்கு ஏற்றவாறு நீங்கள் நிறைவேற்ற வேண்டும். தேவனின் சித்தம் உனக்கு வெளிப்படுத்தப்பட்டவுடன், அதைச் செயல்படுத்து, அது மிகவும் தாமதமானதாக இருக்காது. தேவனுடனான உனது உறவு இயல்பாகிவிட்டால், நீ ஜனங்களுடன் இயல்பான உறவுகளைக் கொண்டிருப்பாய். எல்லாம் தேவனுடைய வார்த்தைகளின் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணு, பின்னர் தேவனின் தேவைகளைக் நடைமுறைப்படுத்து, உனது பார்வைகளைச் சரிசெய், தேவனை எதிர்ப்பதற்கு அல்லது சபையைத் தொந்தரவு செய்வதற்கு எதையும் செய்வதைத் தவிர்த்திடு. உனது சகோதர சகோதரிகளின் வாழ்க்கைக்குப் பயனளிக்காத எதையும் செய்யாதே, பிறருக்கு உதவாத எதையும் சொல்லாதே, வெட்கக்கேடான எதையும் செய்யாதே. நீ செய்யும் எல்லாவற்றிலும் நீதியுடனும் நன்மதிப்புடனும் இருந்திடு, உனது ஒவ்வொரு செயலும் தேவனுக்கு முன்பாக கனமுள்ளதாய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள். சில நேரங்களில் மாம்சம் பலவீனமாக இருந்தாலும், தேவனுடைய குடும்பத்தின் நலன்களுக்கு உன்னால் முதலிடம் கொடுக்க இயல வேண்டும், மேலும் தனிப்பட்ட லாபத்திற்காகப் பேராசை இல்லாமல், உன்னால் நீதியுடன் செயல்பட இயல வேண்டும். உன்னால் இந்த வகையில் நடைமுறைப்படுத்த முடிந்தால், பிறகு தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும்.
நீ செய்யும் எல்லாவற்றிலும், உனது நோக்கங்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை நீ ஆராய வேண்டும். தேவனின் தேவைகளுக்கு ஏற்ப உன்னால் செயல்பட முடிந்தால், பிறகு தேவனுடனான உனது உறவு இயல்பானது. இது குறைந்தபட்ச தரமாகும். உனது நோக்கங்களைப் பார், தவறான நோக்கங்கள் எழுந்திருப்பதை நீ கண்டால், அவற்றிற்குத் திரும்பி உனது முதுகைக் காட்ட இயலவும், தேவனுடைய வார்த்தைகளின்படி செயல்பட முடியவும் வேண்டும்; இவ்வாறு நீ தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கும் ஒருவராக மாறுவாய், இது தேவனுடனான உனது உறவுகள் இயல்பானது என்பதையும், மேலும் நீ செய்யும் அனைத்தும் தேவனுக்காகவே, உனக்காக அல்ல என்பதையும் நிரூபிக்கிறது. நீ செய்யும் அனைத்திலும் மற்றும் நீ சொல்லும் அனைத்திலும், உனது இருதயத்தைச் சரியாக அமைத்து, உனது செயல்களில் நீதியுள்ளவனாக இருக்கக் கூடியவனாக வேண்டும், மேலும் உனது உணர்ச்சிகளால் வழிநடத்தப்படாதே, உனது சொந்த விருப்பப்படி செயல்படாதே. தேவனுடைய விசுவாசிகள் தாங்கள் கைக்கொண்டு நடந்துகொள்ள வேண்டிய கொள்கைகள் இவை. சிறிய விஷயங்கள் ஒரு நபரின் நோக்கங்களையும் நன்மதிப்பையும் வெளிப்படுத்தக்கூடும், ஆகவே, யாரோ ஒருவர் தேவனால் பரிபூரணபடுத்தப்படும் பாதையில் நுழைவதற்கு, அவர்கள் முதலில் தங்கள் நோக்கங்களையும் தேவனுடனான அவர்களின் உறவையும் சரிசெய்ய வேண்டும். தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும்போதுதான், நீ அவரால் பரிபூரணப்படுத்தப்பட முடியும்; அப்போதுதான் தேவனின் கையாளுதல், களைதல், ஒழுக்கம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை உன்னில் அவை கொண்டிருக்கும் நோக்கத்தின் விளைவை அடைய முடியும். அதாவது, மனுஷர்களால் தேவனை தங்கள் இருதயத்தில் வைத்திருக்க முடிந்தால் மற்றும் தனிப்பட்ட லாபத்தைத் தொடரவோ அல்லது தங்கள் சொந்த வாய்ப்புகளைப் (ஒரு மாம்ச அர்த்தத்தில்) பற்றி சிந்திக்கவோ முடியாவிட்டால், ஆனால் மாறாக ஜீவனில் பிரவேசிக்கும் சுமையைத் தாங்கி, சத்தியத்தைத் தொடர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, மற்றும் தேவனின் கிரியைக்கு அர்ப்பணித்திடு—உன்னால் இதனை செய்ய முடிந்தால், நீ தொடரும் குறிக்கோள்கள் சரியாக இருக்கும், மற்றும் தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும். தேவனுடனான உறவை சரியானதாக்குவது ஒருவரின் ஆவிக்குரிய பயணத்தில் நுழைவதற்கான முதல் படி என்று அழைக்கப்படலாம். மனுஷனின் தலைவிதி தேவனின் கரங்களில் இருந்தாலும், தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அது மனுஷனால் மாற்ற முடியாது என்றாலும், நீ தேவனால் பரிபூரணமாக்கப்படக்கூடுமா அல்லது அவரால் அடைய முடியுமா என்பது தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்பதைப் பொறுத்தது ஆகும். உன்னில் பலவீனமான அல்லது கீழ்ப்படியாத சில பகுதிகள் இருக்கலாம்—ஆனால் உனது பார்வைகளும் உனது நோக்கங்களும் சரியானதாக இருக்கும்வரை மற்றும் தேவனுடனான உனது உறவு சரியானதாக மற்றும் இயல்பானதாக இருக்கும்வரை, பின்னர் நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட தகுதி பெறுகிறாய். நீ தேவனுடன் சரியான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், மற்றும் மாம்சத்திற்காகவோ அல்லது உனது குடும்பத்தினருக்காகவோ செயல்பட்டால், நீ எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அது ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது. தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருந்தால், மற்றவை அனைத்தும் சரியாக நடைபெறும். தேவன் வேறொன்றையும் பார்ப்பதில்லை, ஆனால் தேவன் மீதான உனது விசுவாசத்தில் உனது பார்வைகள் சரியானதா என்பதை மட்டுமே பார்க்கிறார்: நீ யாரை விசுவாசிக்கிறாய், யார் பொருட்டு நீ விசுவாசிக்கிறாய், மற்றும் ஏன் விசுவாசிக்கிறாய். உன்னால் இந்த விஷயங்களைத் தெளிவாகக் காண முடிந்தால் மற்றும் உனது பார்வைகளை நன்கு வெளிப்படுத்தி கடைபிடித்தால், அப்போது நீ உனது வாழ்வில் முன்னேற்றம் அடைவாய், மேலும் சரியான பாதையில் நுழைவதற்கும் உனக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். தேவனுடனான உனது உறவு இயல்பானதல்ல, தேவன் மீதான உனது விசுவாசத்தின் பார்வைகள் மாறுபட்டவை என்றால், மற்றவை அனைத்தும் வீணாகிவிடும், நீ எவ்வளவு திடமாக விசுவாசித்தாலும், நீ எதையும் பெற மாட்டாய். தேவனுடனான உனது உறவு இயல்பானதாக மாறிய பின்னரே, நீ மாம்சத்தை கைவிட்டால், ஜெபித்தால், துன்பப்ப்பட்டால், சகித்துக்கொண்டால், ஒப்புவித்தால், உனது சகோதர சகோதரிகளுக்கு உதவினால், தேவனுக்காக உன்னை அதிகமாக பிரயோகித்தால், மற்றும் பலவற்றை செய்தால் நீ அவரால் புகழப்படுவாய். நீ செய்யும் செயலுக்கு மதிப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளதா என்பது உனது நோக்கங்கள் சரியானதா, உனது பார்வைகள் சரியானதா என்பதைப் பொறுத்தது ஆகும். இப்போதெல்லாம், ஒரு கடிகாரத்தைப் பார்ப்பதற்குத் தலையை சாய்ப்பது போல் பலர் தேவனை விசுவாசிக்கிறார்கள்—அவர்களின் கண்ணோட்டங்கள் கோணலாக உள்ளன, மேலும் அவர்கள் ஒரு திருப்புமுனையால் சரிசெய்யப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைத் தீர்க்கப்பட்டால், அனைத்தும் சரியாகிவிடும்; இல்லையென்றால், அனைத்தும் ஒன்றும் இல்லாததாகிவிடும். சிலர் எனது சமுகத்தில் நன்றாக நடந்துகொள்கிறார்கள், ஆனால் எனது முதுகுக்குப் பின்னால், அவர்கள் செய்வதெல்லாம் என்னை எதிர்ப்பதுதான். இது வக்கிரம் மற்றும் வஞ்சகத்தின் வெளிப்பாடு, மற்றும் இந்த வகை மனுஷன் சாத்தானின் வேலைக்காரன்; அவன் தேவனை சோதிக்க வந்திருக்கும் சாத்தானின் பொதுவான உருவகம். எனது கிரியைக்கும் எனது வார்த்தைகளுக்கும் உன்னால் ஒப்புக்கொடுக்க முடிந்தால் மட்டுமே நீ ஓர் சரியான மனுஷன். உன்னால் தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் முடியும் வரை; நீ செய்யும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக இலட்சணமுள்ளவையாக இருக்கும் வரை மற்றும் நீ செய்யும் அனைத்திலும் நீ நியாயமுள்ளவனாகவும், நேர்மையுள்ளவனாகவும் இருக்கும்வரை; நீ வெட்கக்கேடான காரியங்களை செய்யாத வரை, அல்லது மற்றவர்களின் வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும் விஷயங்களைச் செய்யாத வரை; நீ வெளிச்சத்தில் வாழும் வரை மற்றும் உன்னை சாத்தான் சுரண்ட அனுமதிக்காத வரை, தேவனுடனான உனது உறவு சரியானதாக இருக்கும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 410
தேவனை விசுவாசிப்பதற்கு உனது நோக்கங்களையும் பார்வைகளையும் சரியாக வைத்திருக்க வேண்டும்; தேவனின் வார்த்தைகள் மற்றும் தேவனின் கிரியை, தேவன் ஏற்பாடு செய்யும் அனைத்து சூழல்கள், தேவன் சாட்சியமளிக்கும் மனுஷன் மற்றும் நடைமுறைத் தேவன் ஆகியவை பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் சரியான வகையில் நடத்தப்படவும் வேண்டும். நீ உனது சொந்த யோசனைகளின்படி நடக்கக்கூடாது அல்லது உனது சொந்தமான குட்டித் திட்டங்களை வகுக்கக்கூடாது. நீ எதைச் செய்தாலும், உன்னால் உண்மையைத் தேட இயல வேண்டும் மற்றும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனுஷனாக தேவனின் கிரியை அனைத்திற்கும் ஒப்புக்கொடுக்க வேண்டும். நீ தேவனால் பூரணப்படுத்தப்படுவதைத் தொடர விரும்பினால் மற்றும் சரியான வாழ்க்கைப் பாதையில் பிரவேசிக்க விரும்பினால், உனது இருதயம் எப்போதும் தேவனின் சமுகத்தில் வாழ வேண்டும். ஒழுக்கம் கெட்டுப் போகாதே, சாத்தானைப் பின்பற்றாதே, சாத்தான் அவனுடைய வேலையைச் செய்வதற்கு எந்த வாய்ப்புகளையும் அனுமதிக்காதே, மற்றும் சாத்தான் உன்னைப் பயன்படுத்த அனுமதிக்காதே. நீ உன்னை முழுமையாக தேவனுக்குக் கொடுக்க வேண்டும், மற்றும் தேவன் உன்னை ஆள்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
நீ சாத்தானின் வேலைக்காரனாக இருக்க விரும்புகிறாயா? நீ சாத்தானால் வசப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவாய் என்பதற்காக, அல்லது நீ தேவனின் கிரியைக்கு ஒரு படலமாக மாறுவாய் என்பதற்காக, நீ தேவனை விசுவாசிக்கிறாயா மற்றும் அவரைப் பின்தொடர்கிறாயா? நீ தேவனால் பெறப்பட்ட ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை விரும்புகிறாயா, அல்லது ஓர் பயனற்ற மற்றும் வெற்று வாழ்க்கையை விரும்புகிறாயா? நீ தேவனால் பயன்படுத்தப்பட விரும்புகிறாயா, அல்லது சாத்தானால் வசப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? தேவனுடைய வார்த்தைகளும் சத்தியமும் உன்னை நிரப்புவதற்கு அனுமதிக்க நீ விரும்புகிறாயா, அல்லது பாவமும் சாத்தானும் உன்னை நிரப்ப அனுமதிக்கிறாயா? இந்தக் காரியங்களை கவனமாகப் பரிசீலனை செய். உனது அன்றாட வாழ்க்கையில், நீ எந்த வார்த்தைகளைச் சொல்கிறாய், எந்தெந்த விஷயங்கள் தேவனுடனான உனது உறவில் இயல்பின்மையை ஏற்படுத்தக்கூடும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், பின்னர் சரியான முறையில் பிரவேசிக்க உன்னைத் திருத்திக் கொள். எல்லா நேரங்களிலும், உனது வார்த்தைகள், உனது செயல்கள், உனது ஒவ்வொரு அசைவு மற்றும் உனது எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அனைத்தையும் ஆராய்ந்திடு. உனது உண்மையான நிலையைப் பற்றிய ஓர் சரியான புரிதலைப் பெற்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வழியில் பிரவேசித்திடு. தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருப்பதற்கான ஒரே வழி இதுதான். தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்பதை மதிப்பிடுவதன் மூலம், உன்னால் உனது நோக்கங்களைச் சரிசெய்யவும், மனுஷனின் இயல்பு மற்றும் சாராம்சத்தையும் புரிந்து கொள்ளவும், மற்றும் உன்னை உண்மையாகப் புரிந்து கொள்ளவும் முடியும், அவ்வாறு செய்யும்போது, உன்னால் மெய்யான அனுபவங்களுக்குள் பிரவேசிக்க முடியும், உன்னையே ஒரு மெய்யான பாதையில் கைவிட முடியும், மற்றும் நோக்கத்துடன் உன்னை ஒப்புக்கொடுக்க முடியும். தேவனுடனான உனது உறவு இயல்பானதா அல்லது இல்லையா என்பது குறித்த இந்த விஷயங்களை நீ அனுபவிக்கும்போது, நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் பல நிலைகளைப் புரிந்துகொள்ள முடியும். சாத்தானின் பல தந்திரங்களையும் உன்னால் காண முடியும் மற்றும் அவனுடைய சதித்திட்டங்களை ஊடுருவ முடியும். இந்தப் பாதை மட்டுமே தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கிறது. தேவனுடனான உனது உறவை நீ சரிசெய்யும்போது, நீ அவரின் ஏற்பாடுகளுக்கு முழுமையாக உன்னை ஒப்புக்கொடுக்கக்கூடும், மற்றும் நீ மெய்யான அனுபவத்திற்குள் இன்னும் ஆழமாக பிரவேசிக்கக்கூடும் மற்றும் இன்னும் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறக்கூடும். நீ தேவனுடன் ஒரு இயல்பான உறவைக் கடைபிடித்தால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மாம்சத்தை கைவிடுவதாலும், தேவனுடனான உண்மையான ஒத்துழைப்பின் மூலமும் ஜெயங்கொள்ள முடியும். “ஒத்துழைக்கும் இருதயம் இல்லாமல், தேவனின் கிரியையைப் பெறுவது கடினம்; மாம்சம் துன்பப்படாவிட்டால், தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதங்களும் கிடைக்காது; ஆவி போராடவில்லை என்றால், சாத்தான் வெட்கப்படுத்தப்பட மாட்டான்” என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ இந்தக் கொள்கைகளைக் கடைபிடித்து அவற்றை முழுமையாக புரிந்து கொண்டால், தேவன் மீதான உனது விசுவாசம் குறித்த பார்வைகள் சரிப்படுத்தப்படும். உங்களுடைய தற்போதைய நடைமுறைப்படுத்தலில், “பசியைப் போக்க அப்பத்தைத் தேடுவது” என்கிற மனநிலையை நீங்கள் விலக்கிட வேண்டும்; “எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகிறது, ஜனங்களால் தலையிட முடியாது” என்ற மனநிலையை நீங்கள் விலக்கிட வேண்டும். அவ்வாறு கூறும் ஒவ்வொருவரும், “ஜனங்கள் விரும்பிய எதையும் செய்யலாம், நேரம் வரும்போது, பரிசுத்த ஆவியானவர் அவருடைய கிரியையைச் செய்வார். ஜனங்கள் மாம்சத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒத்துழைக்கவோ தேவையில்லை; அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுவார்கள் என்பதே முக்கியம்.” இந்தக் கருத்துகள் அனைத்தும் அபத்தமானவை. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், பரிசுத்த ஆவியானவரால் கிரியைச் செய்யமுடியாது. இந்த மாதிரியான கண்ணோட்டம்தான் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெரிதும் தடுக்கிறது. பெரும்பாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியை மனித ஒத்துழைப்பின் மூலம் அடையப்படுகிறது. ஒத்துழைக்காதவர்கள் மற்றும் தீர்க்கப்படாதவர்கள், மெய்யாகவே இன்னும் தங்கள் மனநிலையில் ஒரு மாற்றத்தை அடையவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும், தேவனிடமிருந்து அறிவொளி மற்றும் வெளிச்சத்தை பெறவும், ஆடம்பரமான எண்ணங்களைக் கொண்டிருக்கவும் விரும்புகிறார்கள். இது “ஒருவரின் சுயத்தில் ஈடுபடுதல் மற்றும் சாத்தானை மன்னித்தல்” என்று அழைக்கப்படுகிறது. அத்தகையவர்கள் தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருக்க மாட்டார்கள். நீ உனக்குள்ளேயே சாத்தானின் மனநிலையின் பல வெளிப்பாடுகளையும் தோற்றங்களையும் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் தேவனுக்கு இப்போது தேவைப்படுபவற்றுக்கு மாறாக இயங்கும் எந்தவொரு நடைமுறைகளையும் நீ கண்டுபிடிக்க வேண்டும். உன்னால் இப்போது சாத்தானை கைவிட முடியுமா? நீ தேவனுடன் ஒரு இயல்பான உறவை அடைய வேண்டும், தேவனுடைய நோக்கங்களின்படி செயல்பட வேண்டும், புதிய வாழ்க்கையைக் கொண்ட புதிய மனுஷனாக மாற வேண்டும். கடந்த கால மீறுதல்களில் வாசம் பண்ண வேண்டாம்; தேவையற்ற வருத்தம் கொள்ள வேண்டாம்; எழுந்து நின்று தேவனுக்கு ஒத்துழைக்க முயல வேண்டும், மற்றும் நீ நிறைவேற்ற வேண்டிய உன்னுடைய கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும். இப்படியாக, தேவனுடனான உனது உறவு இயல்பானதாகிவிடும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 411
இதனை வாசித்த பிறகு, நீ வெறுமனே இந்த வார்த்தைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்வதாகக் கோரினால், இன்னும் உனது இருதயம் அசைக்கப்படாமல் இருந்தால், மேலும் தேவனுடனான உனது உறவை இயல்பாக்க நீ நாடவில்லை என்றால், தேவனுடனான உனது உறவுக்கு நீ முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. உனது பார்வைகள் இன்னும் சரியாக வைக்கப்படவில்லை என்பதையும், உனது நோக்கங்கள் இன்னும் தேவனால் பெறப்படுவதற்கும், அவரை மகிமைப்படுத்துவதற்கும் இன்னும் அமைக்கப்படவில்லை என்பதையும் ஆனால் சாத்தானின் சதித்திட்டங்களை மேலோங்க அனுமதித்து, உனது சொந்த இலக்குகளை அடைவதற்கு அமைக்கப்பட்டிருப்பதையுமே இது நிரூபிக்கிறது. இத்தகையவர்கள் தவறான நோக்கங்களையும் தவறான பார்வைகளையும் கொண்டிருக்கிறார்கள். தேவன் என்ன கூறுகிறார் அல்லது எப்படிக் கூறுகிறார் என்பது முக்கியமல்ல, அத்தகையவர்கள் முற்றிலும் அலட்சியமாகவே இருப்பார்கள், குறைந்தபட்ச மாற்றம்கூட ஏற்பட்டிருக்காது. அவர்களின் இருதயங்கள் எந்த அச்சத்தையும் உணராது, அவர்கள் வெட்கப்படுவதில்லை. அத்தகைய மனுஷன் ஆவி இல்லாத மூடன். தேவனின் ஒவ்வொரு வார்த்தைகளையும் வாசித்து, அவற்றைப் புரிந்துகொண்டவுடன் நீ அவற்றை நடைமுறைப்படுத்துஉனது மாம்சம் பலவீனமாய் இருந்த தருணங்கள் இருந்திருக்கலாம், அல்லது நீ கலகம் செய்பவனாய் இருந்திருக்கலாம், அல்லது நீ எதிர்த்திருக்கலாம்; கடந்த காலத்தில் நீ எப்படி நடந்திருந்தாலும், இது சிறிய விளைவையே ஏற்படுத்தும், மற்றும் அது உனது வாழ்க்கை இன்று முதிர்ச்சியடைவதிலிருந்து தடுக்க முடியாது. இன்று நீ தேவனுடன் ஒரு இயல்பான உறவைக் கொண்டிருக்கும் வரையில், நம்பிக்கை இருக்கிறது. நீ தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் உன்னில் மாற்றம் ஏற்பட்டால், உனது வாழ்க்கைச் சிறப்பானதாக மாறிவிட்டது என்று மற்றவர்களால் சொல்ல முடியும் என்றால், தேவனுடனான உனதுஉறவு இப்போது இயல்பானது, இது சரியாக வைக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. தேவன் ஜனங்களை அவர்களின் மீறுதல்களின்படி நடத்துவதில்லை. நீ புரிந்துகொண்டு விழிப்படைந்ததும், நீ கிளர்ச்சி செய்வதையோ அல்லது எதிர்ப்பதையோ நிறுத்திக் கொண்டால் தேவன் உன் மீது இரக்கம் காட்டுவார். உனக்கு புரிதல் இருந்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட தீர்மானித்தால், தேவனுடைய சமுகத்தில் உனது நிலை இயல்பானதாக மாறும். நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல, நீ இதைச் செய்யும்போது பின்வருவனவற்றைக் கவனித்துப்பார்: நான் இதைச் செய்தால் தேவன் என்ன நினைப்பார்? இது எனது சகோதர சகோதரிகளுக்கு பயனளிக்குமா? தேவனின் வீட்டில் செய்யும் வேலைக்கு இது பயனளிக்குமா? ஜெபம், அந்நியோந்நியம், பேச்சு, வேலை, அல்லது மற்றவர்களுடனான தொடர்பு என எதுவாக இருந்தாலும் உனது நோக்கங்களை ஆராய்ந்திடு, மற்றும் தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்று சரிபார். நீ உனது சொந்த நோக்கங்களையும் எண்ணங்களையும் அறிய முடியாவிட்டால், உனக்கு பாகுபாடு தெரியவில்லை என்று அர்த்தம், இது நீ மிகக் குறைவாகவே சத்தியத்தைப் புரிந்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறது. தேவன் செய்யும் அனைத்தையும் உன்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தால் மற்றும் அவருடைய வார்த்தைகளின் கண்ணாடி மூலம், அவருடைய பக்கத்தில் நின்று விஷயங்களை உணர முடிந்தால், உனது பார்வைகள் சரியானதாகிவிடும். எனவே, தேவனுடன் நல்ல உறவை நிலைநிறுத்துவது என்பது தேவனை நம்புகிற எவருக்கும் மிக முக்கியமானது; ஒவ்வொருவரும் இதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகவும், அவர்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வாகவும் கருத வேண்டும். நீ செய்யும் அனைத்தும், நீ தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருக்கிறாயா என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. தேவனுடனான உனது உறவு இயல்பானதாக மற்றும் உனது நோக்கங்கள் சரியானதாக இருந்தால், செயல்படுங்கள். தேவனுடன் ஒரு இயல்பான உறவைப் பேணுவதற்கு, உனது தனிப்பட்ட நலன்களில் ஏற்படும் இழப்புகளைப் பற்றி நீ பயப்படக்கூடாது; நீ சாத்தானை மேலோங்க அனுமதிக்கக் கூடாது, சாத்தானை உன்னை வாங்குவதற்கு நீ அனுமதிக்கக் கூடாது, மேலும் உன்னை நகைப்பிற்குரிய பொருளாக மாற்ற சாத்தானை அனுமதிக்க முடியாது. இத்தகைய நோக்கங்களைக் கொண்டிருப்பது தேவனுடனான உனது உறவு இயல்பானது என்பதற்கான அறிகுறியாகும்—மாம்சத்திற்காக அல்லாமல், மாறாக ஆவியானவரின் அமைதிக்காக, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்காக, மற்றும் தேவனுடைய சித்தத்தைப் பூர்த்திசெய்வதற்காக. சரியான நிலைக்குள் பிரவேசிக்க, நீ தேவனுடன் ஒரு நல்ல உறவை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும், மேலும் தேவன் மீதான உனது விசுவாசத்தின் பார்வைகளை சரியாக வைக்க வேண்டும். இதற்கு காரணம், தேவன் உன்னைப் பெறக்கூடும், மற்றும் அவர் தனது வார்த்தைகளின் பலனை உன்னிடத்தில் வெளிப்படுத்தி, உனக்கு மேலும் அறிவொளி கொடுத்து வெளிச்சமாக்குவார். இந்த வழியில், நீ சரியான முறையில் பிரவேசித்திருப்பாய். தேவனின் இன்றைய வார்த்தைகளைத் தொடர்ந்து புசித்துப் பானம்பண்ணு, பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வேலை செய்யும் முறைக்குள் பிரவேசித்திடு, தேவனின் இன்றைய கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படு, பழங்கால நடைமுறைகளை கடைபிடிக்காதே, காரியங்களைச் செய்ய பழைய வழிகளைப் பற்றிக்கொள்ளாதே, எவ்வளவு சீக்கிரம் முடியோ உடனே இன்றைய வேலை செய்யும் முறைக்குள் பிரவேசித்திடு. இவ்வாறு, தேவனுடனான உனது உறவு பரிபூரணமாக இயல்பானதாகிவிடும் மற்றும் நீ தேவனில் சரியான விசுவாச பாதையில் இறங்கியிருப்பாய்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 412
தேவனின் வார்த்தைகளை மக்கள் எத்துணை அதிகமாக ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் அத்தகைய அறிவொளி பெற்றவர்களாகவும், அவரை அறிந்து கொள்வதில் மிக்க பசியும் தாகமும் அதிகம் கொண்டிருப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளை ஏற்பவர்கள் உயரிய மற்றும் மிகவும் ஆழ்ந்த அனுபவங்களைக் கொண்ட, திறமைகளை உடைய பணக்காரர்களாகவும் மற்றும் அவர்கள் எள் மலர்களைப் போன்று தொடர்ந்து வளருவதற்கு அருகதை உடையவர்களாகவும் ஆகிறார்கள். வாழ்க்கையைத் தொடரும் அனைவரும் இதை தங்கள் முழுநேர வேலையாகக் கருத வேண்டும்; “தேவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது; தேவன் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது; தேவன் இல்லாமல் எல்லாம் வெறுமையாக உள்ளது”. ஆகவே, “பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இல்லாமல் நான் ஒன்றும் செய்ய மாட்டேன், தேவனுடைய வார்த்தைகளைப் வாசிப்பதால் எந்த விளைவும் இல்லை என்பதால், நான் எதையும் செய்வதில் அலட்சியமாக இருக்கிறேன்” என்ற தீர்மானத்தை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களைத் தேவையற்றச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். வாழ்க்கை அனுபவங்கள் தேவனுடைய ஞானம் மற்றும் வழிகாட்டுதலிலிருந்து வந்தவை, அவை உங்கள் அகநிலை முயற்சிகளின் கற்களாக்கப்படுவது போல இருக்கும். நீங்கள் கோர வேண்டியது இதுதான்: “வாழ்க்கை அனுபவத்திற்கு வரும் போது, எனக்கு நானே ஒரு இலவச நுழைவுச்சீட்டு கொடுக்க முடியாது.”
சில நேரங்களில், அசாதாரண சூழ்நிலைகளில், நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தை இழக்கிறீர்கள், நீங்கள் ஜெபிக்கும் போது அவரை உணர முடியவில்லை. இது போன்ற சமயங்களில் பயப்படுவது இயல்பு. நீங்கள் உடனடியாக அவரைத் தேட ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், தேவனானவர் உங்களிடமிருந்து விலகி இருப்பார், மேலும் நீங்கள் பரிசுத்த ஆவியின் பிரசன்னமில்லாமல் ஒருநாள், இரண்டு நாட்கள், ஒருமாதம் அல்லது இரண்டு மாதங்கள் வரையில் இருப்பீர்கள். இந்த சூழ்நிலைகளில், எல்லாவிதமான செயல்களையும் நீங்கள் செய்யக் கூடிய அளவிற்கு நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு உணர்ச்சியற்றவர்களாகி, சாத்தானால் மீண்டும் சிறைபிடிக்கப்படுகிறீர்கள், நீங்கள் செல்வத்திற்குப் பேராசைப்படுகிறீர்கள், உங்கள் சகோதர சகோதரிகளை ஏமாற்றுகிறீர்கள், திரைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கிறீர்கள், மஹோங் விளையாடுகிறீர்கள், ஒழுக்கமின்றி புகைபிடிப்பீர்கள், மது அருந்துவீர்கள். உங்களுடைய இதயம் தேவனிடமிருந்து வெகுதொலைவில் இருந்து கொண்டு, நீங்கள் இரகசியமாக உங்கள் சொந்த வழியில் சென்று, தேவனின் வேலை குறித்து நீங்கள் உங்களுடைய தன்னிச்சையானத் தீர்ப்பை வழங்கி உள்ளீர்கள். சில சந்தர்ப்பங்களில், பாலியல்ரீதியான பாவங்களைச் செய்வதில் மக்கள் எந்த அவமானத்தையும் சங்கடத்தையும் உணராத அளவுக்கு தாழ்ந்தவர்கள் ஆகிவிடுவார்கள். இந்த வகையான மனிதர் பரிசுத்த ஆவியினால் கைவிடப்பட்டார்; உண்மையில், பரிசுத்த ஆவியின் வேலை நீண்ட காலமாக அத்தகைய மனிதரிடத்தில் இல்லை. தீமையின் கைகள் இன்னும் அதிகமாக நீட்டும் போது அவை ஊழலில் இன்னும் ஆழமாக மூழ்குவதை மட்டுமே ஒருவர் காண முடியும். இறுதியில், அவர்கள் இந்த வழியில் இருப்பதை மறுக்கிறார்கள், அவர்கள் பாவம் செய்யும் போது சாத்தானால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். உங்களிடம் பரிசுத்த ஆவியின் பிரசன்னம் மட்டுமே இருப்பதை நீங்கள் கண்டறிந்தால், பரிசுத்த ஆவியின் வேலை இல்லாதிருந்தால், அது ஏற்கனவே ஒரு ஆபத்தான சூழ்நிலையாக இருக்கும். பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை நீங்கள் உணர முடியாத போது, நீங்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள். நீங்கள் மனம் திருந்தாவிட்டால், நீங்கள் முற்றிலும் சாத்தானிடம் திரும்பி சென்றவராகவும், மேலும் தேவனிடமிருந்து விலக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் இருப்பீர்கள். ஆகவே, நீங்கள் பரிசுத்த ஆவியின் பிரசன்னம் மட்டுமே இருக்கும் நிலையினை நீங்கள் கண்டுபிடிக்கும் போது (நீங்கள் பாவம் செய்யாமல், உங்களை நீங்களே கட்டுக்குள் வைத்திருந்து, தேவனுக்கு எதிரான அப்பட்டமான எந்த எதிர்ப்பினையும் நீங்கள் எதுவும் செய்யாமல்) உங்களிடம் பரிசுத்த ஆவியின் வேலை குறைவாக உள்ளது (நீங்கள் ஜெபிக்கும் போது நீங்கள் அசைக்கப்படுவதில்லை, தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் உண்டு பருகும் போது உங்களுக்கு வெளிப்படையான அறிவொளி அல்லது வெளிச்சம் கிடைக்காது, தேவனின் வார்த்தைகளை உண்பதிலும் பருகுவதிலும் நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் எந்த வளர்ச்சியும் இல்லை, மற்றும் நீங்கள் நீண்ட காலமாக மிகுந்த வெளிச்சத்தை இழந்து விட்டீர்கள்)—இது போன்ற சமயங்களில், நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது மேலும் உங்கள் பண்பை நீங்கள் கடிவாளமின்றி விட்டு விடக் கூடாது, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் எந்த நேரத்திலும் மறைந்து போகக் கூடும். இதனால் தான் இத்தகைய நிலைமை மிகவும் ஆபத்தானது எனவும் நீங்கள் இந்த மாதிரியான நிலையில் இருப்பதை அறிந்தால், முடிந்தவரை விஷயங்களைத் உங்களிடம் திருப்ப முயற்சிக்கவும். முதலில், நீங்கள் மனந்திரும்புதலின் ஒரு ஜெபத்தைச் சொல்லவேண்டும், மேலும் தேவனானவர் தம்முடைய கருணையை உங்கள் பேரில் மீண்டும் ஒருமுறை செலுத்தும்படி கேட்க வேண்டும். மேலும் தேவனின் வார்த்தைகளை அதிகம் உண்பதற்கும் பருகுவதற்கும் உங்கள் இதயத்தை அமைதிப்படுத்தவும் ஆர்வத்துடன் ஜெபியுங்கள். இந்த விதமான கட்டுமான அடிதளத்துடன் நீங்கள் உங்களது நேரத்தினை பிரார்த்தனையில் செலுத்த வேண்டும்; தேவனின் வார்த்தைகளைப் பாடிக் கொண்டு, ஜெபித்துக் கொண்டு, உண்டுக் கொண்டு, பருகிக் கொண்டு, உங்கள் கடமையைச் செய்து, உங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள். நீங்கள் மிகவும் வலுவிழந்து இருக்கும் போது உங்களது இதயத்தினைச் சாத்தானால் வெகுவிரைவாகப் பற்றிக் கொள்ள முடியும். அவ்வாறு நிகழ்ந்தால், உங்களது இதயமானது தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு சாத்தானிடத்தில் கொடுக்கப்படுவதால் உங்களது இதயத்தினில் பரிசுத்த ஆவியின் பிரசன்னமின்றி இருப்பீர்கள். அச்சமயங்களில், பரிசுத்த ஆவியின் பணிகளை மீட்டெடுப்பதற்கு இருமடங்கு கடினமாகி விடும். தேவனானவர் உங்களுடனேயே இருக்கும் போதே அந்த பரிசுத்த ஆவியின் பணிகளைத் தேடும் போது தேவனானவர் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு மிகவும் அதிகமான ஞானத்தினை, உங்களை கைவிடாமல் அருளுவார். தேவனைத் தியானித்தல், அவரது புகழினைப் பாடுதல், அவரது வார்த்தைகளை உண்ணுதல் மற்றும் அருந்துதல் ஆகியவற்றின் மூலம் சாத்தானின் செயல்பாடுகள் யாவும் பரவுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் பரிசுத்த ஆவியின் செயல்பாடுகள் உங்களுக்குள் செயல்படத் தொடங்கலாம். அவ்வாறு நீங்கள் பரிசுத்த ஆவியின் செயல்பாடுகளை மீண்டும் பெற இந்த வழியில் முயலாமல் வெறுமனே காத்திருந்தால் அந்த பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முக்கியமாக அளித்த ஞானத்தினை மறைத்து விட்டு தனது பிரசன்னத்தை உங்களிடமிருந்து நகர்த்தி முழுவதுமாக விலகச் செய்து விடுவார். அவ்வாறாயின், அந்த நிலையினை ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் திரும்ப பெற முடியாது. சில சமயங்களில் அதற்காக எந்தவொரு மீட்சியுமின்றி ஆறுமாதமும் கடந்து போகலாம். இது எதனாலென்றால், மக்கள் யாவற்றையும் மிகவும் சுலபமாக அடைய நினைத்து, பரிசுத்தஆவியின் வழக்கமான செயல்பாடுகளைச் சாதாரண வழியிலே உணர்வதற்கு, பரிசுத்த ஆவியினால் கைவிடப்பட்டதால், தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள். நீங்கள் பரிசுத்த ஆவியின் வேலையை மீட்டெடுத்தாலும், தேவனின் தற்போதைய பணி இன்னும் உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை, ஏனென்றால் உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் நீங்கள் பத்தாயிரம் மைல்கள் பின்னால் விடப்பட்டதைப் போல நீங்கள் மிகவும் பின் தங்கி விட்டீர்கள். இது ஒரு மிகப் பெரிய கொடுமை அல்லவா? இருப்பினும், அத்தகையவர்களுக்கு மனந்திரும்புவதற்கு தாமதமாகவில்லை, ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது என்று நான் சொல்கிறேன்: நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், சோம்பலில் ஈடுபடக் கூடாது என்பதாகும். மற்றவர்கள் ஒரே நாளில் ஐந்துமுறை ஜெபித்தால், நீங்கள் பத்துமுறை ஜெபிக்க வேண்டும்; மற்றவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தேவனுடைய வார்த்தைகளை உண்டும் பருகியும் வந்தால், நீங்கள் நான்கு அல்லது ஆறு மணி நேரம் அவ்வாறு செய்ய வேண்டும்; மற்றவர்கள் இரண்டு மணி நேரம் துதிப் பாடல்களைக் கேட்டால், நீங்கள் குறைந்தபட்சம் அரைநாள் வரை கேட்க வேண்டும். தேவனுக்கு முன்பாக அடிக்கடி சமாதானமாக இருங்கள், அவருடைய அன்பைப் பற்றி சிந்தியுங்கள், உங்களது இதயம் அவரை நோக்கி நகரும் வரை, நீங்கள் இனி தேவனிடமிருந்து விலகிச் செல்லத் துணிவதில்லை—அப்போது தான் உங்கள் பயிற்சி பலனளிக்கும்; அப்போது தான் உங்கள் முந்தைய, இயல்பான நிலையை மீட்டெடுக்க முடியும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஒரு இயல்பான நிலைமையில் நுழைவது எப்படி?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 413
தேவனுடைய விசுவாசியின் பாதையில் ஒரு மிகச் சிறிய பகுதியில் மட்டுமே நீங்கள் நடந்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் சரியான வழியில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. ஆகவே தேவனுடைய தரத்தைப் பூர்த்தி செய்வதிலிருந்து நீங்கள் வெகுதொலைவில் உள்ளீர்கள். இப்போது உங்களுடைய நிலை தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவிற்கு போதுமானதாக இல்லை. உங்களுடைய திறமையினாலும் சீர்கெட்ட சுபாவத்தினாலும் தேவனின் கிரியையை நீங்கள் எப்போதும் கவனக்குறைவாகவே நடத்துகிறீர்கள். அதை சிரத்தையுடன் நடத்துவதில்லை. இது உங்களுடைய மிக மோசமான குறைபாடு ஆகும். பரிசுத்த ஆவியானவர் நடக்கின்ற பாதையை உறுதியாக அறிய ஒருவராலும் இயலாது; உங்களில் அநேகம் பேருக்கு அது புரிவதில்லை; அதனைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. மேலும், உங்களில் பலர் இந்தக் காரியத்திற்கு மனதளவில் கவனம் செலுத்துவதில்லை; அதிலும் இருதயத்திற்கு கொண்டுச் செல்வதே இல்லை. இவ்வாறாக பரிசுத்த ஆவியானவரின் கிரியை குறித்து அறியாமையில் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்றால் தேவனின் விசுவாசியாக நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை பயனற்றதாகிவிடும். ஏனெனில் தேவனின் சித்தத்தை நிறைவேற்ற உங்கள் வல்லமையில் அனைத்தையும் நீங்கள் செய்வது இல்லை, ஏனெனில் நீங்கள் தேவனுக்கு நல்ல ஒத்துழைப்பையும் நல்குவதில்லை. தேவன் உங்கள் மேல் செயல்படவில்லை என்பதோ; அல்லது பரிசுத்த ஆவியானவர் உங்களை ஏவவில்லை என்பதோ அல்ல. நீங்கள் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கின்றீர்கள் என்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. நீங்கள் உடனடியாக இந்த நிலைமையை மாற்றி பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை வழநடத்துகின்ற பாதையில் நடக்க வேண்டும். இதுவே இன்றைய நாளின் முக்கிய தலைப்பு. “பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதை” என்பது ஆவியில் தெளிவு பெறுவதை; தேவனின் வார்த்தையைப் பற்றிய அறிவைப் பெறுவதை; எதிர்வரும் பாதை பற்றிய தெளிவைப் பெறுவதை; சத்தியத்திற்குள் படிப்படியாக பிரவேசிக்கும் திறனைப் பெறுவதை; தேவனைப் பற்றிய மாபெரும் அறிவை அடைவதைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மக்களை வழிநடத்துகின்ற பாதையானது முதன்மையாக மாற்றுக் கருத்துக்களும் தவறான கண்ணோட்டங்களும்இல்லாமல் தேவனின் வார்த்தையை தெளிவாகப் புரிந்துகொள்ளும் ஒரு பாதையாக இருக்கிறது, இந்தப் பாதையில் நடக்கின்றவர்கள் அதில் நேராக நடக்கின்றார்கள். இதை நீங்கள் அடைய வேண்டுமென்றால் தேவனுடன் நல்லிணக்கத்துடன் செயல்படவேண்டும், பின்பற்றுவதற்குச் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதையில் நடக்க வேண்டும். இது மனிதனின் ஒத்துழைப்பை உள்ளடக்கியுள்ளது: அதாவது உங்களைப் பற்றிய தேவனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும்; மேலும் தேவன் மீதான சரியான விசுவாசப் பாதையில் பிரவேசிக்க நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.
பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகிற பாதையில் அடி எடுத்து வைப்பது சிக்கலானதாகத் தோன்றலாம். ஆனால் பின்பற்றும் பாதை உங்களுக்குத் தெளிவாகும் போது, நீ அதனை மேலும் எளிதானதாகக் காண்பாய். உண்மை என்னவென்றால் தேவன் எதிர்பார்ப்பதை எல்லாம் ஜனங்களால் செய்ய இயலும்—அவர் பன்றிகளுக்கு பறக்கக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பது போன்றது அல்ல இது. எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் கவலைகளைப் போக்கவும் முற்படுகிறார். நீங்கள் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவனைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். தேவனின் வார்த்தைக்கிணங்க பரிசுத்த ஆவியானவர் நடக்கின்ற பாதையில் மக்கள் வழநடத்தப்படுகிறார்கள். ஏற்கனவே கூறியது போல், உங்கள் இருதயத்தை தேவனிடம் கொடுத்துவிட வேண்டும். இதுவே பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதையில் நடப்பதற்கு அத்தியாவசியமானதாகும். சரியான வழியில் பிரவேசிப்பதற்கு நீங்கள் இதைச் செய்ய வேண்டும். ஒருவர் தனது இருதயத்தை உணர்வுபூர்வமாக தேவனுக்கு கொடுக்கும் வேலையை எவ்வாறு செய்கிறார்? உங்களுடைய தினசரி வாழ்க்கையில் தேவனின் கிரியையை அனுபவித்து அவரிடம் ஜெபிக்கும் போது, நீங்கள் அதை கவனக்குறைவாகச் செய்கின்றீர்கள்—நீங்கள் பணியாற்றும்போது ஜெபிக்கின்றீர்கள். உங்களது இருதயத்தை தேவனுக்கு கொடுப்பதாக இதைச் சொல்ல முடியுமா? நீங்கள் வீட்டு விஷயங்களைப் பற்றியோ மாம்ச காரியங்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் எப்போதும் இரு மனதுள்ளவராக இருக்கின்றீர்கள். தேவனுடைய பிரசன்னத்தில் உங்களது இருதயத்தை அமைதிப்படுத்துவதாக இதைக் கருத முடியுமா? ஏனெனில் உன் இருதயம் எப்போதும் வெளிக் காரியங்களில் ஒன்றித்து நிற்கிறது, மற்றும் தேவனுக்கு முன்பாக திரும்பி வர இயலாமல் உள்ளது. உங்கள் இருதயம் உண்மையாகவே தேவனுக்கு முன்பாக சமாதானத்துடன் இருந்தால், உணர்வுபூர்வமாக ஒத்துழைக்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும். அதாவது உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் ஆராதனைகளுக்கு நேரம் ஒதுக்கவேண்டும். அந்த நேரத்தில் ஜனங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இதர காரியங்களை ஒதுக்கிவிட வேண்டும். இருதயத்தை நிலைப்படுத்தி தேவன் முன் உங்களை அமைதிப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஆராதனைக்கான குறிப்பேடுகளை வைத்திருக்க வேண்டும், தேவனுடைய வார்த்தை பற்றிய அவர்களது அறிவையும், அவர்களது ஆவி ஆழமாகவோ அல்லது மேலோட்டமாகவோ ஆட்கொள்ளப்பட்டதையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்; அனைவரும் உணர்வுபூர்வமாக தேவனுக்கு முன்பாக அவர்களது இருதயத்தை அமைதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் நீ ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தை உண்மையான ஆவிக்குரிய வாழ்விற்கு அர்ப்பணித்தால், அந்தநாளில் உன் வாழ்வு செழிப்பாகும். உன் இருதயம் பிரகாசமும் தெளிவும் அடையும். நீ தினந்தோறும் இத்தகைய ஆவிக்குரிய வாழ்வை வாழ்ந்தால், உனது இருதயம் தேவனின் ஆட்கொள்ளுதலுக்குள் அதிகமாகத் திரும்ப இயலும். உனது ஆவி மென்மேலும் வலிமை பெறும். உனது நிலைமை தொடர்ச்சியாக முன்னேற்றமடையும்; பரிசுத்த ஆவி வழிநடத்துகின்ற பாதையில் நடப்பதற்கு அதிகத் திறன் பெறுவாய். தேவன் உனக்கு அதிகமான ஆசீர்வாதங்களை அளிப்பார். பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை உணர்வுபூர்வமாக பெறுவது உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் நோக்கம் ஆகும். சட்டங்களைக் கடைபிடிப்பதோ மத சடங்குகளை அனுசரிப்பதோ அல்ல; மாறாக தேவனுடனான உடன்பாட்டுடன் உண்மையாக செயல்படுவதும், உனது சரீரத்தை உண்மையாக கட்டுப்படுத்துவதுமே ஆகும்—இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். எனவே நீ இதனை மிகச் சிறந்த முயற்சியுடன் செய்ய வேண்டும். உன்னுடைய ஒத்துழைப்பும் நீ எடுக்கக்கூடிய கூடுதலான முயற்சியும் எவ்வளவு சிறப்பானதாக உள்ளதோ, அந்தளவிற்கு உனது இருதயத்தால் தேவனிடம் திரும்பிவர இயலும் மற்றும் உனது இருதயத்தை தேவன் முன் உன்னால் சிறப்பாக அமைதிப்படுத்த இயலும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவன் உனது இருதயத்தை முழுமையாக ஆட்கொள்வார். வேறு யாராலும் உனது இருதயத்தை மாற்றவோ கைப்பற்றவோ இயலாது. நீ முழுமையாக தேவனுக்கு சொந்தமாவாய். நீங்கள் இந்தப் பாதையில் நடந்தால் தேவனின் வார்த்தை உனக்கு எந்நேரமும் வெளிப்பட்டு நீ புரிந்து கொள்ளாத அனைத்தையும் தெளிவுபடுத்தும்—இவை அனைத்தையும் உன்னுடைய ஒத்துழைப்பினால் பெற முடியும். இதனால்தான் தேவன் எப்போதும் “என்னுடன் உடன்பாட்டுடன் செயல்படுகிற அனைவருக்கும் நான் இரட்டிப்பாக வெகுமதி அளிப்பேன்” என்று கூறுகிறார். நீங்கள் இந்த பாதையை தெளிவாகப் பார்க்க வேண்டும். நீங்கள் சரியான பாதையில் நடக்க விரும்பினால், தேவனை திருப்திப்படுத்த உங்களால் இயன்ற அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். ஆவிக்குரிய வாழ்வை அடைய உங்களால் இயன்ற அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். தொடக்கத்தில் இந்த முயற்சிகளில் சிறப்பான முடிவுகளை நீ அடையாமல் போகலாம். ஆனால் நீ பின்னடைவதற்கோ, எதிர்மறை எண்ணங்களில் புறள்வதற்கோ அனுமதிக்கக்கூடாது. நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக நீ ஆவிக்குரிய, வாழ்வை வாழ்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உனது இருதயமும் தேவனின் வார்த்தைகளினால் ஆட்கொள்ளப்படும்; அது எப்போதும் இந்தக் காரியங்களில் ஈடுபட்டும், எப்போதும் இந்த பாரத்தை சுமந்து கொண்டும் இருக்கும். அதன் பிறகு உனது உள்ளத்தின் சத்தியங்களை ஆவிக்குரிய வாழ்வு மூலமாக தேவனிடம் வெளிப்படுத்து. நீ என்ன செய்ய விரும்புகிறாய், நீ எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாய், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய உனது அறிவும் கண்ணோட்டமும் என்ன என்பவற்றை அவரிடம் சொல். எதையும் மறைக்காதே, ஒரு சிறிய காரியத்தைக்கூட விட்டுவிடாதே. வார்த்தைகளை உனது இருதயத்தினுள் பேசிப் பயிற்சி செய் மற்றும் தேவனிடம் உனது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்து. அது உனது இருதயத்தில் இருந்தால், எவ்வகையிலாவது அதனைச் சொல்லிவிடு. எவ்வளவு அதிகமாக இந்த வகையில் நீ பேசுகிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவனின் அருமையை உணருவாய். தேவன் உனது இருதயத்தை இன்னும் வலிமையாகப் பற்றிக் கொள்வார். இவ்வாறு நடக்கின்ற போது, மற்ற யாரையும் விட அதிகமாக தேவன் உன் அன்புக்குரியவராக இருக்கிறார் என்பதை உணருவாய். எந்நிலையிலும் தேவனின் அருகாமையில் இருந்து நீ விலக மாட்டாய். இத்தகைய ஆவிக்குரிய ஆராதனையை நீங்கள் தினமும் பயிற்சி செய்தால், அதை உனது மனதைவிட்டு அகற்றாமல், அதை உனது வாழ்வின் மிக முக்கியமான காரியமாகக் கருதினால், தேவனின் வார்த்தை உனது இருதயத்தை ஆட்கொள்ளும். இதுவே பரிசுத்த ஆவியானவரின் தொடுதல் ஆகும். உனது இருதயம் எப்போதும் தேவனால் சுதந்தரித்துக் கொள்ளப்பட்டிருப்பதைப் போலவும், நீ நேசிப்பது உனது இருதயத்தில் எப்போதும் இருப்பதைப் போலவும் இருக்கும். அதை யாராலும் உன்னிடமிருந்து பறிக்க முடியாது. இது நிகழ்கின்றபோது, தேவன் உனக்குள் வாழ்வார். உனது இருதயத்திற்குள் இடம்பிடிப்பார்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை மக்களை சரியான வழியில் நடத்திச் செல்கின்றது” என்பதிலிருந்து
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 414
ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தை, தேவன் மீதான விசுவாசம் அவசியமாக்குகிறது. இது தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கும் மெய்யான ஜீவனுள் பிரவேசிப்பதற்கும் அடித்தளமாகிறது. தற்போது நீங்கள் செய்துவரும் ஜெபங்களும், தேவனிடம் நெருங்கி வருதலும், பாமாலைப் பாடுதலும், துதித்தலும் தியானம் செய்தலும், தேவனுடைய வார்த்தைகளை ஆராய்தலும் ஒரு “சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்திற்கு” ஈடாகுமா? உங்களில் எவரும் இதை அறிந்ததாய் தெரியவில்லை. ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியமென்பது பிரார்த்தனை செய்வது, பாமாலைகளைப் பாடுவது, தேவாலய வாழ்க்கையில் ஈடுபடுவது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பது, பருகுவது என இவைகளுக்குள் அடங்குவதல்ல. மாறாக, இது புதியதும் உற்சாகமுமான ஆவிக்குரிய ஜீவியத்தை உள்ளடக்கியது. உங்களது நடைமுறையை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள் என்பது அல்ல, உங்கள் நடைமுறை என்ன பலனைத் தருகிறது என்பதே முக்கியம். ஜெபம் செய்வது, பாமலைகளைப் பாடுவது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பது பருகுவது அல்லது அவருடைய வார்த்தைகளைச் சிந்திப்பது போன்ற நடைமுறைகள் உண்மையில் ஏதேனும் விளைவைக் கொண்டிருக்கின்றனவா அல்லது மெய்யான புரிதலுக்கு வழிவகுக்கின்றனவா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தில் இவை அவசியம் என பலரும் நம்புகின்றனர். இந்த ஜனங்கள் தங்கள் முடிவுகளைப் பற்றிய சிந்தனை ஏதும் இல்லாமல் மேலோட்டமான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள்; அவர்கள் மதச் சடங்குகளில் திளைக்கும் ஜனங்கள், திருச்சபைக்குள் வாழும் ஜனங்கள் அல்ல, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் ஜனங்களும் அல்ல. அவர்களின் ஜெபங்களும், பாமாலைப் பாடுதலும், தேவனுடைய வார்த்தைகளைப் புசித்தலும் பருகுதலனைத்தும் விருப்பத்தினாலோ மனதிலிருந்தோ அல்லாமல் விதிமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன, நிர்ப்பந்தத்தினால் செய்யப்படுகின்றன, மேலும் நடைமுறை வழக்கத்தில் தொடர வேண்டுமென செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் எவ்வளவு ஜெபித்தாலும் பாடினாலும், அவர்களின் முயற்சிகள் பலனளிக்காது. ஏனென்றால் அவர்கள் கடைப்பிடிப்பது மதத்தின் விதிகள் மற்றும் சடங்குகள் மட்டுமே; அவர்கள் உண்மையில் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதைக் குறித்து தர்க்கம் செய்வதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளாகக் கருதுகிறார்கள். அத்தகையவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்வதில்லை. அவர்கள் மாம்சத்தை மகிழ்விக்கிறார்கள், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள். இம்மத விதிமுறைகளும் சடங்குகளும் தேவனிடமிருந்து வந்தவையல்ல. இவை மனிதனிடமிருந்து தோன்றியவையாகும். தேவன் விதிகளைப் பின்பற்றுவதில்லை. அவர் எந்த சட்டத்திற்கும் உட்பட்டவரும் அல்ல. மாறாக, அவர் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களைச் செய்கிறார், நடைமுறைச் செயல்களை நிறைவேற்றுகிறார். த்ரீ செல்ஃப் சர்ச் போல, ஒவ்வொரு நாளும் காலை ஆராதனைகளில் கலந்துகொள்ளுதல், மாலை நேர ஜெபங்கள் செய்தல் மற்றும் உணவுக்கு முன் நன்றியுணர்வு ஜெபம் செய்தல், எல்லாவற்றிலும் நன்றி செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எவ்வளவுச் செய்தாலும், எவ்வளவுக் காலம் அதைச் செய்தாலும், அவர்களிடம் பரிசுத்த ஆவியின் கிரியை இருக்காது. ஜனங்கள் விதிகளுக்கு மத்தியில் வாழும்போதும், சம்பிரதாய வழிமுறைகளில் தங்கள் இருதயங்களை நிலைநிறுத்தும்போதும் பரிசுத்த ஆவியானவர் செயல்பட முடியாது. ஏனென்றால் அவர்களின் இருதயங்கள், விதிகள் மற்றும் மனித கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தேவனால் தலையிடவும், அவற்றில் செயல்படவும் இயலாது. மேலும் அவர்கள் தங்கள் சட்டங்களின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே வாழ முடியும். அத்தகையவர்கள் ஒருபோதும் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாது.
ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியமென்பது தேவனுக்கு முன்பாக ஜீவிக்கும் ஜீவியமாகும். ஜெபிக்கும்போது, ஒருவர் தேவனுக்கு முன்பாக தன் இருதயத்தை அமைதிப்படுத்த முடியும். மேலும் ஜெபத்தின் மூலம் ஒருவர் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தைத் தேடலாம், தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளலாம், தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளலாம். அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதன் மூலமும், பருகுவதன் மூலமும், தேவனின் தற்போதைய கிரியையைப் பற்றி ஜனங்கள் தெளிவான மற்றும் முழுமையான புரிதலைப் பெற முடியும். அவர்கள் நடைமுறையில் பழைய ஜீவிதத்தோடு ஒட்டிக்கொள்ளாமல் ஒரு புதிய பாதையையும் பெற முடியும்; அவர்கள் செய்யும் அனைத்தும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடையச்செய்யும். ஜெபத்தைப் பொறுத்தவரை, சில நல்ல சொற்களைப் பேசுவதோ அல்லது நீங்கள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் காண்பிப்பதற்காக தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு ஜெபிப்பதோ ஜெபம் அல்ல. மாறாக, ஒருவர் ஆவியானவர் பயன்படுத்துவதற்காக தன்னை பயிற்றுவிப்பதும், தேவனுக்கு முன்பாக தன் இருதயத்தை அமைதிப்படுத்த அனுமதிப்பதும், எல்லா காரியங்களிலும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து வழிகாட்டுதல்களைத் தேடுவதற்கு தன்னைப் பயிற்றுவிப்பதும் தான் அதன் நோக்கமாகும், இதன் மூலம் அவர் இருதயம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வெளிச்சத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனால் ஒருவர் செயலற்றவராகவோ சோம்பல் உடையவராகவோ இல்லாமல், தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சரியான பாதையில் காலடி எடுத்து வைப்பார். இக்காலத்தில் பெரும்பாலான ஜனங்கள் பயிற்சி முறைகளில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனாலும் சத்தியத்தைப் பின்தொடரவும், வாழ்க்கை வளர்ச்சி அடையவும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இங்குதான் அவர்கள் வழிதவறிவிட்டார்கள். புதிய வெளிச்சத்தைப் பெறும் தகுதியுள்ளவர்களும் உள்ளனர், ஆனால் அவர்களின் செயல்பாட்டு முறைகள் மாறாது. இன்றைய தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் பெறப் பார்க்கும்போது, தங்கள் பழைய மதக் கருத்துக்களை அவர்கள் தங்களுடன் கொண்டு வருகிறார்கள். எனவே அவர்கள் பெறுவது இன்னும் மதக் கருத்துக்களால் சாயம்பூசப்பட்ட கோட்பாடாகவே உள்ளது. அவர்கள் இன்றைய வெளிச்சத்தை சாதாரணமாக பெறுவதில்லை. இதன் விளைவாக, அவர்களின் நடைமுறைகள் களங்கப்படுத்தப்படுகின்றன. அவை புதிய தொகுப்பில் உள்ள பழைய நடைமுறைகளே. அவர்கள் எவ்வளவு நன்றாக கடைபிடித்தாலும், அவர்கள் வெளிவேடக்காரர்களே. ஒவ்வொரு நாளும் ஜனங்கள் புதிய நுண்ணறிவையும் புரிதலையும் பெற வேண்டும் என எதிர்பார்த்தும், தங்கள் பழைய வழக்கங்களுக்கு திரும்பக்கூடாது என எதிர்பார்த்தும், தேவன் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களைச் செய்வதற்கு ஜனங்களை வழிநடத்துகிறார். நீங்கள் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசித்திருந்தும், இன்னும் உங்கள் செயல்பாட்டு முறைகள் மாறாமலும், வெளிப்புற காரியங்களில் நீங்கள் இன்னும் ஆர்வமாகவும் ஓய்வின்றியும் இருந்து, அவருடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கு தேவன் முன் கொண்டுவர அமைதியான இருதயம் இல்லையெனில், நீங்கள் எதையும் பெற மாட்டீர்கள். தேவனின் புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் வித்தியாசமாகத் திட்டமிடவில்லை என்றால், உங்கள் செயல்பாட்டை ஒரு புதிய வழியில் செய்யவில்லை என்றால், புதிய புரிதல்களைப் பெறவில்லை என்றால், மாறாக பழையதைப் பற்றிக் கொண்டு, கொஞ்சம் குறைவான புதிய வெளிச்சத்தை மட்டுமே பெற்றுக்கொண்டால், நீங்கள் கைக்கொள்ளும் முறையை மாற்றாமல், வெறும் பெயருக்காக இந்த ஓட்டத்தில் இருக்கும் உங்களைப் போன்ற ஜனங்கள் உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் போக்குக்கு புறம்பான மத பரிசேயர்கள் ஆவார்கள்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 415
ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தை வாழ, ஒருவர் தினமும் புதிய வெளிச்சத்தைப் பெறவும், தேவனின் வார்த்தைகளைப் பற்றிய மெய்யான புரிதலைப் பெறவும் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒருவர் சத்தியத்தை தெளிவாகக் காண வேண்டும், எல்லா காரியங்களிலும் ஒரு நடைமுறைப் பாதையைக் கண்டறிய வேண்டும், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளைத் தியானிப்பதன் மூலம் புதிய கேள்விகளைக் கண்டறிய வேண்டும், மேலும் ஒருவரின் சொந்த குறைபாடுகளை உணர வேண்டும். இதனால் ஒருவரை முழுவதுமாக அசைக்கும் ஒரு ஏக்கமும், தேடும் இருதயமும் ஒருவர் பெறக்கூடும், அதனால் விழுந்துவிடக்கூடும் என்ற மிகுந்த பயத்துடன் ஒருவர் எல்லா நேரங்களிலும் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கக்கூடும். அத்தகைய ஏக்கமுள்ள, தேடும் இருதயம் கொண்ட, தொடர்ந்து கைக்கொள்ள தயாராக உள்ள ஒருவர், ஆவிக்குரிய வாழ்க்கையில் சரியான பாதையில் செல்கிறார். பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவர்களும், சிறப்பாகச் செய்ய விரும்புவோரும், தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதை விரும்புவோரும், தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள ஏங்குகிறவர்களும், இயற்கைக்கு அப்பாற்பட்டதை எதிர்பாராமல் மெய்யான விலையை செலுத்துபவர்களும், மெய்யாக தேவ சித்தத்தின் மீது உண்மையாக அக்கறை காட்டுகிறவர்களும், மெய்யான, உண்மையான அனுபவத்தைப் பெற மெய்யாகவே கடைபிடிப்பவர்களும், வெற்று சொற்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றாதவர்களும் அல்லது இயற்கைக்கப்பாற்பட்ட உணர்வைத் தொடராதவர்களும், எந்தவொரு பெரிய ஆளுமையையும் தொழுதுகொள்ளாதவர்களும் தான் சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைந்தவர்களாவர். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் ஜீவியத்தில் மேலும் வளர்ச்சியை அடைவதற்கும், அவற்றை ஆவியில் புதியதாகவும், உற்சாகமாகவும் ஆக்குவதற்கும் நோக்கமாக உள்ளன. மேலும் அவர்களால் எப்போதும் தீவிரமாகப் பிரவேசிக்க முடிகிறது. அதை உணராமல், அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு மெய்யான ஜீவிதத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். சாதாரண ஆவிக்குரிய வாழ்வைக் கொண்டவர்கள் ஒவ்வொரு நாளும் ஆவியில் விடுதலையையும் சுதந்திரத்தையும் காண்கிறார்கள். மேலும் அவர்கள் தேவனுடைய திருப்திக்கு ஒரு விடுதலையான வழியில் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளலாம். இந்த ஜனங்களைப் பொறுத்தவரை, ஜெபம் செய்வது ஒரு முறையோ நடைமுறையோ அல்ல; ஒவ்வொரு நாளும், ஒரு புதிய வெளிச்சத்தின் வேகத்துடன் தங்களால் ஈடுகொடுக்க முடியும். உதாரணமாக, ஜனங்கள் தங்கள் இருதயங்களை தேவனுக்கு முன்பாக அமைதிப்படுத்த பயிற்சி அளிக்கிறார்கள். அவர்களுடைய இருதயங்கள் மெய்யாகவே தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்க முடியும். மேலும் யாராலும் அவர்களை கலக்கமடையச் செய்ய முடியாது. எந்தவொரு நபரோ, நிகழ்வோ, காரியமோ அவர்களின் இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய பயிற்சி, பலன்களைத் தரும் நோக்கம் கொண்டது; இது ஜனங்களை விதிகளைப் பின்பற்ற வைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இந்த நடைமுறை விதிமுறையைப் பின்பற்றுவதைப் பற்றியது அல்ல, மாறாக மக்களின் வாழ்க்கையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளாக மட்டுமே பார்த்தால், உங்கள் வாழ்க்கை ஒருபோதும் மாறாது. நீங்கள் மற்றவர்களைப் போலவே அதே நடைமுறையில் ஈடுபடலாம். ஆனால் இறுதியில், அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செல்ல தகுதி பெறுகையில், நீங்கள் பரிசுத்த ஆவியானவர் செல்லும் பாதையிலிருந்து வெளியேற்றப்படுகிறீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளவில்லையா? இந்த வார்த்தைகளின் நோக்கம், தேவனுக்கு முன்பாக ஜனங்கள் தங்கள் இருதயங்களை அமைதிப்படுத்த அனுமதிப்பதும், தங்கள் இருதயங்களை தேவனிடம் திருப்புவதும் ஆகும். இதனால் தேவனுடைய கிரியை தடையின்றி நடந்து, பலனளிக்கலாம். அப்போதுதான் ஜனங்கள் தேவனுடைய சித்தத்திற்கு இணங்கியிருக்க முடியும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 416
உங்கள் அனுதின வாழ்க்கையில் நீங்கள் ஜெபத்திற்கு முக்கிய இடமளிப்பதில்லை. ஜெபக்காரியங்களை மனிதன் ஒதுக்கிவிடுகிறான். ஜெபமானது வெறுமனே தேவனுக்கு முன்பாகச் செல்லுகிற ஒரு இயக்கமாகவும், கடமைக்காகச் செய்யப்படுகிற ஒரு செயலாகவும் வழக்கமாகக் காணப்படுகின்றது. ஒருவனும் உண்மையான ஜெபத்தில் தேவனோடு இணைந்து, தன் இருதயத்தை முழுமையாக அர்ப்பணித்ததில்லை. பிரச்சனைகள் எழும்பியபோது மட்டுமே மனிதன் தேவனிடம் ஜெபத்தை ஏறெடுத்தான். இத்தனை காலத்தில், நீ எப்போதாவது தேவனிடம் உண்மையாகவே ஜெபித்ததுண்டா? நீ தேவனுக்கு முன்பாக வேதனையுடன் கண்ணீர் சிந்தி அழுத நேரம் என்று ஒன்று உண்டா? நீ தேவனுக்கு முன்பாக உன்னை நிதானித்து அறிந்த நேரம் என்று ஒன்று உண்டா? நீ எப்பொழுதாவது, தேவனுடைய இருதயத்தோடு இருதயமாக இணைந்து ஜெபித்து இருக்கிறாயா? ஜெபமானது பயிற்சியின் மூலமாக வருகிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டில் வழக்கமாக ஜெபிக்கிற நபராக இல்லை என்றால், நீங்கள் சபையில் ஜெபிக்கும் வாய்ப்பைப் பெற வழியே இருக்காது; மேலும் உங்களுக்குச் சிறிய கூடுகைகளில் ஜெபிக்கிற பழக்கமில்லாதிருந்தால், நீங்கள் பெரிய அளவிலான கூட்டங்களில் ஜெபிக்கத் தகுதியற்றவர்களாகக் காணப்படுவீர்கள். நீங்கள் தேவனுக்கு அருகாமையில் செல்லாமலும், தேவனுடைய வார்த்தையைச் சிந்தித்து, அசை போடாமலும் தொடர்ந்து காணப்படும்போது, ஜெப நேரத்தில் தேவனோடு பேச உங்களுக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை; அப்படியிருந்தும் நீங்கள் ஜெபிக்க முற்படும்பொழுது, நீங்கள் உதட்டளவில் ஜெபம் செய்கிறவர்களாக இருப்பீர்களே தவிர, உங்கள் ஜெபம் உண்மையான ஜெபமாக இருக்காது.
உண்மையான ஜெபம் என்றால் என்ன? உண்மையான ஜெபம் என்பது உங்கள் இருதயத்தில் உள்ளவற்றைத் தேவனிடத்தில் எடுத்துக் கூறுவதாகும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு, தேவனோடு ஐக்கியப்படுவதாகும், தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவருடன் தொடர்பு கொள்வதாகும், குறிப்பாகத் தேவனுக்கு அருகில் இருப்பதை உணர்ந்து கொள்வதாகும், அவர் உங்களுக்கு முன் இருப்பதை உணர்ந்து, தேவனிடம் பேசுவதற்கு உங்களிடம் ஏதோ இருப்பதாக நம்புவதாகும். உங்கள் இருதயம் ஒளியால் நிறைந்திருப்பதை உணர்கிறது; மேலும், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதையும் உணர்கிறீர்கள். நீ தேவனிடமாக ஈர்க்கப்படுவதாக உணர்கிறாய்; உன்னிடம் கேட்கிற உன் சகோதர, சகோதரிகளுக்கு உன் வார்த்தைகள் மனநிறைவைக் கொண்டு வருகின்றன. அவர்கள் சொல்ல விரும்பிய, அவர்களுடைய வார்த்தைகள் உன்னுடைய வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருப்பது போல, அவர்கள் தங்கள் மனதில் உள்ள வார்த்தைகளை நீயே பேசி வெளிப்படுத்துவதாக உணர்வார்கள். இதுவே உண்மையான ஜெபமாகும். உண்மையான ஜெபத்தில் நீ தரித்திருக்கும்பொழுது, உன் இருதயம் சமாதானத்துடன் காணப்பட்டு மனநிறைவை அறியும். தேவனை நேசிக்கும் பலம் அதிகரித்து, தேவனை நேசிப்பதைக் காட்டிலும் மிகவும் மதிக்கப்படத்தக்கவை அல்லது வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க சிறந்தவை எதுவுமில்லை என்று உணர்வாய். இவை அனைத்தும் உனது ஜெபம் வல்லமையுள்ளது என்பதை நிரூபிக்கின்றது. இதைப் போல், நீ எப்போதாவது ஜெபித்ததுண்டா?
ஜெபத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும்? உன் இருதயத்தின் உண்மையான நிலை மற்றும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியைக்கு ஏற்றவாறு உன் ஜெபம் படிப்படியாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். அவர் மனிதனிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறியவும், அவருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும், நீ தேவனோடு ஐக்கியம் கொள்ள வருகிறாய். ஜெபத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத் துவங்கும்பொழுது, முதலாவது உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுங்கள். தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல், உங்கள் இருதயத்தில் உள்ள வார்த்தைகளை மட்டும் தேவனிடம் பேச முயற்சி செய்யுங்கள். நீ தேவனுக்கு முன்பாக வரும்பொழுது இவ்விதமாகப் பேசு: “தேவனே, நான் உமக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறதை இன்றைக்குத்தான் உணர்கிறேன். நான் உண்மையிலேயே குற்றம் உள்ளவனும் வெறுக்கப்படத்தக்கவனுமாய் இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறேன். இன்று முதல் நான் உமக்காக வாழ்வேன். நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து, நீர் திருப்தி அடையும்படி உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவேன். உம்முடைய ஆவி என்னில் எப்பொழுதும் கிரியையை நடப்பித்து, தொடர்ந்து என்னை ஒளிரச் செய்து அறிவூட்டுவதாக. அதனால் நான் உமக்கு முன்பாக உறுதியான மற்றும் மாபெரும் சாட்சி பகருகிறவனாக விளங்கட்டும். எங்களில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிற உம்முடைய மகிமை, உம்முடைய சாட்சி மற்றும் உம்முடைய வெற்றியின் ஆதாரங்களைச் சாத்தான் பார்ப்பானாக.” இவ்விதமாக, நீ ஜெபிக்கும்பொழுது, உன் இருதயம் முழுமையாக விடுதலையைப் பெற்றிருக்கும். இவ்வாறாக ஜெபிக்கும் பொழுது, உன் இருதயம் தேவனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும். இது போன்று அடிக்கடி ஜெபிக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உன்னில் கிரியையை நடப்பிப்பார். இவ்விதமாக நீ எப்பொழுதும் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, உன் தீர்மானங்களை அவருக்கு முன்பாக வைக்கும்பொழுது, உன் தீர்மானங்கள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டு, உன் இருதயமும் உன் முழுமையும் தேவனால் சுதந்தரிக்கப்படும். இறுதியில் நீ அவராலே பரிபூரணமாக்கப்படுவாய். உங்களுக்கு ஜெபமானது மிகவும் இன்றியமையாதது ஆகும். நீங்கள் ஜெபித்து பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக்கொள்ளும் பொழுது, உங்கள் இருதயம் தேவனால் அசைக்கப்படும், மேலும் தேவனை நேசிக்கும்படியான பெலன் உள்ளே இருந்து வெளிப்படும். நீ உன் முழு உள்ளத்தோடு ஜெபிக்காமலும் தேவனோடு ஐக்கியம் கொள்ளும்படி உன் உள்ளத்தைத் திறக்காமலும் இருந்தால், தேவன் உன்னில் கிரியை நடப்பிக்க இயலாது. உன் இருதயத்தில் உள்ள வார்த்தைகளைத் தேவனிடம் சொல்லி ஜெபித்த பின்பும் தேவ ஆவியானவர் தன் கிரியையை இன்னும் நடப்பிக்கத் தொடங்காமலும், நீ உணர்த்துதல்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அது உன் இருதயத்தில் நேர்மை குறைந்து இருப்பதையும், உன் வார்த்தையில் உண்மை இல்லாத தன்மையையும் மற்றும் இன்னும் தூய்மை இல்லாத தன்மையையும் காட்டுகிறது. ஒருவேளை, ஜெபித்த பின்பு நீ மனநிறைவு அடைந்ததை உணர்வாயேயானால், உன் ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டதாய் காணப்படும். மேலும், தேவ ஆவியானவர் உன்னில் கிரியை செய்து கொண்டு இருக்கிறார். தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்கிற ஒருவனால் ஜெபிக்காமல் இருக்க முடியாது. உண்மையிலேயே நீ தேவனுடனான ஐக்கியத்தை அர்த்தமுள்ளதாகவும், விலைமதிப்புமிக்க ஒன்றாகவும் பார்த்தாயேயானால், நீ ஜெபத்தை கைவிட முடியுமா? தேவனுடனான ஐக்கியம் இல்லாமல் ஒருவனும் இருக்க முடியாது. நீ ஜெபிக்காமலிருந்தால் மாமிசத்தில் வாழ்ந்து, சாத்தானுடைய கட்டுகளில் இருப்பாய். உண்மையான ஜெபம் இல்லாத பட்சத்தில், நீ இருளின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறாய். என் சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொரு நாளும் உண்மையான ஜெபத்தில் இணைந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இது வெறுமனே விதிகளைக் கைக்கொள்வதைப் பற்றியது அல்ல; மாறாக, ஒரு குறிப்பிட்ட பலனை அடைந்து கொள்வதாகும். ஜெபத்திற்காக அதிகாலையில் எழுந்து, தேவனுடைய வார்த்தையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க, உங்களது சிறிது தூக்கத்தையும் சந்தோஷத்தையும் சற்று கைவிட நீங்கள் ஆயத்தமா? நீங்கள் சுத்த இருதயத்துடன் இவ்விதமாக ஜெபம் செய்து, தேவனுடைய வார்த்தையைப் புசித்து, அதைப் பருகும்பொழுது, நீங்கள் அவருக்கு மிகவும் உகந்தவர்களாகக் காணப்படுவீர்கள். தினமும் காலையிலும் நீ இப்படிச் செய்வாயேயானால், ஒவ்வொருநாளும் நீ உன் இருதயத்தைத் தேவனுக்கு அளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டும், அவருடன் தொடர்பு கொண்டும், அவரில் ஈடுபாடு கொண்டும் காணப்படுவாயேயானால் தேவனை குறித்ததான உன் அறிவு நிச்சயமாகவே அதிகரிப்பதோடு, நீ தேவ சித்தத்தை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். நீ தேவனிடம் இப்படியாகக் கூறு: “தேவனே, நான் எனது கடமையைச் செய்து முடிக்க விரும்புகிறேன். என்னை முழுவதும் உமக்காக மட்டுமே பரிசுத்தப்படுத்துகிறேன். அதனால், நீர் எங்களில் மகிமைப்படுவீராக; மற்றும், நீர் எங்கள் கூட்டத்தினால் உண்டான சாட்சியில் மகிழ்ச்சியடைவீராக. நீர் எங்களுக்குள் கிரியை நடப்பிக்கும்படியாகக் கெஞ்சி மன்றாடுகிறேன்; அதினிமித்தம் நான் உம்மை உண்மையாக நேசித்து, உம்மைத் திருப்திப்படுத்தி, உம்மை என் இலக்காக வைத்துப் பின்தொடரவும் இயலும்.” இவ்வாறு பாரத்துடன் ஜெபிக்கும் பொழுது, தேவன் உன்னை நிச்சயமாகவே பரிபூரணப்படுத்துவார். நீ உனது சுய லாபத்திற்காக மட்டுமே ஜெபிக்கக் கூடாது. தேவனுடைய சித்தத்தை கைக்கொள்வதற்காகவும், அவரை நேசிப்பதற்காகவும் கூட நீ ஜெபிக்க வேண்டும். இதுவே, உண்மையான ஜெபம் ஆகும். தேவனுடைய சித்தத்தைக் கைக்கொள்ளும்படியாக ஜெபிக்கிற ஒருவராக நீ இருக்கிறாயா?
கடந்த காலங்களில் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாதிருந்ததினால், நீங்கள் ஜெபம் என்ற ஒன்றைப் புறக்கணித்தீர்கள். இப்பொழுதோ, ஜெபத்திற்கு உங்களையே பயிற்றுவிப்பதற்கு, நீங்கள் உங்களாலான மட்டும் சிறப்புடன் செயல்பட வேண்டும். தேவனை நேசிக்க உனக்குள் காணப்படுகிற பலத்தை உன்னால் வரவழைக்க முடியாவிட்டால், எப்படி ஜெபிக்க வேண்டும்? “தேவனே, உம்மை உண்மையாக நேசிக்க என் இருதயத்திற்கு இயலவில்லை. நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன். ஆனால், அதற்கு என்னில் பெலன் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்? நீர் ஏன் ஆவிக்குரிய கண்களைத் திறப்பீராக. மேலும், உம்முடைய ஆவி என் இருதயத்தை அசைக்கட்டும். நான் உமக்கு முன்பாக வரும்பொழுது, எதிர்மறையான எல்லாவற்றையும் எறிந்துவிட்டு, எந்த ஒரு மனிதனாலோ, ஒரு விஷயத்தாலோ அல்லது ஒரு பொருளாலோ நான் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதிலிருந்து நீங்கலாகி, என் இருதயத்தை முற்றிலும் வெறுமையாக்கி, உமக்கு முன்பாக வைக்கிறேன்; என்னை முழுவதுமாக உமக்கு முன்பாக அர்ப்பணிக்கும்படி அப்படி செய்கிறேன். இருப்பினும், நீர் என்னைச் சோதிக்கலாம்; நான் ஆயத்தமாக இருக்கிறேன். இப்பொழுது நான் என் எதிர்கால வாய்ப்புகளைக் கருத்தில் கொள்வதில்லை; மரணத்தின் நுகத்தின் கீழ் நான் இருப்பதுமில்லை. உம்மை நேசிக்கும் இதயத்துடன் ஜீவ வழியைத் தேட விரும்புகிறேன். ஒவ்வொரு காரியமும் அல்லது எல்லா விஷயங்களும் உம்முடைய கரங்களில் இருக்கின்றன. என் வாழ்க்கையின் விதி உமது கரங்களில் இருக்கின்றது. என் ஜீவனையும் நீர் உமது கரங்களில் வைத்திருக்கிறீர். இப்பொழுதும் நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மை நேசிக்க, நீர் என்னை அனுமதிக்கிறீரோ இல்லையோ என்பதை பொருட்படுத்தாமல், சாத்தான் எவ்வாறு தலையிடுகிறான் என்பதையும் பொருட்படுத்தாமல், நான் உம்மை நேசிக்கத் தீர்மானித்திருக்கிறேன்.” நீங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, இப்படியாக ஜெபம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நீ இப்படி ஜெபம் செய்தாயேயானால், தேவனை நேசிக்கும் வலிமை படிப்படியாக உயரும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 417
உண்மையான ஜெபத்திற்குள் ஒருவனால் எப்படி நுழைய முடியும்?
ஜெபிக்கும்பொழுது, தேவனுக்கு முன்பாக அமைதியான ஒரு இருதயம் உங்களுக்குக் காணப்பட வேண்டும். மேலும், உன் இருதயத்தில் நேர்மை காணப்பட வேண்டும். நீ உண்மையாகவே தேவனோடு ஐக்கியங்கொண்டு, ஜெபம் செய்யும்பொழுது, நீ இனிய சொற்களாலாகிய வாக்கியங்கள்மூலம் தேவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஜெபமானது, தேவன் இப்பொழுது நிறைவேற்ற விரும்புகிற ஒன்றை மையப்படுத்தியே காணப்படவேண்டும். தேவன் உனக்கு அதிக ஞான ஒளியையும், பிரகாசத்தையும் கொடுக்கும்படி, அவரிடம் கேள். ஜெபிக்கும்பொழுது உன் உண்மை நிலையையும், உனது பிரச்சனைகளையும், தேவனுக்கு முன்பாக நீ எடுத்த தீர்மானங்களையும் கூட அவருடைய சமூகத்திற்குள் கொண்டுவா. ஜெபம் என்பது வெறுமனே செயல்முறையைக் கைக்கொள்ளுதல் அல்ல; மாறாக, நேர்மையுள்ள இருதயத்துடன் தேவனைத் தேடுகிற ஒரு செயலாகும். உன் இருதயம் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக அமைதியோடு காணப்படும்படியாகவும், அவர் உன் இருதயத்தைக் காத்துக் கொள்ளும்படியாகவும் அவரிடம் வேண்டிக்கொள்; இதனால், அவர் உன்னை வைத்துள்ள சூழலில், நீ உன்னையே அறிந்துகொண்டு, உன்னை வெறுத்து, உன் சுயத்தைக் கைவிட்டுவிட்டு, பின் தேவனுடன் சாதாரண ஒரு உறவைக் கொண்டிருக்கும் படியாக, உன்னை விட்டுக் கொடுத்து, உண்மையிலேயே தேவனை நேசிக்கும் ஒருவராக மாற முடியும்.
ஜெபத்தின் முக்கியத்துவம் என்ன?
ஜெபமானது மனிதன் தேவனுடன் ஒத்துழைக்கும் வழிகளில் ஒன்றாகும். தேவனை மனிதன் கூப்பிடுவதற்கு ஒரு வழியாகும் மற்றும் தேவனுடைய ஆவியினாலே மனிதன் அசைக்கப்படும் ஒரு செயல்முறையாகும். இப்படியாகக் கூறலாம்; ஜெபம் இல்லாதவர்கள், ஆவியில் வெறுமையுடன் காணப்படுகிற மரித்த ஜனங்களாவார்கள். அவர்கள் தேவனால் அசைக்கப்படுவதற்கு மனவலிமை அற்றவர்கள் என்பதை அது நிரூபிக்கின்றது. ஜெபம் இல்லாமல், ஒரு சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்துவது சாத்தியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரின் கிரியை நம்மில் மிகவும் குறைவாகக் காணப்படும். ஜெபம் இல்லாமல் இருப்பது ஒருவன் தேவனுடனான உறவை முறித்துக்கொள்வதாகும். அப்படிப்பட்ட ஒருவன் தேவனிடமிருந்து பாராட்டைப் பெறுவது என்பது சாத்தியமில்லை. தேவனில் விசுவாசம் உள்ளவனாக, அதிகமாக ஜெபிக்கிற ஒருவன்; அதாவது, அதிகமாக ஜெபிக்கிற அவன் தேவனால் அசைக்கப்பட்டிருக்கிறான். அதிகம் ஜெபிக்கிற அவன், தீர்மானங்களால் நிறைந்து காணப்படும்பொழுது, ஓரளவே ஜெபிக்கிற ஒருவன் புதிய ஞான ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கு அது உதவுகிறது. அதன் விளைவாக, இப்படிப்பட்ட மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் மிக விரைவாகப் பரிபூரணமாக்கப்படுவார்கள்.
ஜெபம் என்ன பலனை அடைய வேண்டும்?
ஜனங்கள் ஜெபத்தைப் பயிற்சி செய்யலாம் மற்றும் ஜெபத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஜெபம் வல்லமையுள்ளதாய் இருப்பது எளிதான விஷயம் அல்ல. ஜெபம் என்பது ஒரு இயக்கத்தின் வழியாகச் செல்வதோ, வழிமுறையைப் பின்பற்றுவதோ அல்லது தேவனுடைய வார்த்தையை மனப்பாடம் செய்து கூறுவதோ அல்ல. வேறுவிதமாகக் கூறினால், ஜெபம் என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதோ மற்றவர்களைப் பின்பற்றுவதோ அல்ல. ஜெபத்தில் ஒருவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு ஒப்படைக்கக்கூடிய நிலையை அடைந்து, தேவனால் அவன் அசைக்கப்படும்படி ஒருவனது இருதயம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஜெபம் வல்லமையுள்ளதாக இருக்க வேண்டுமானால், அது ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நாம் ஜெபிப்பதன் மூலம் மட்டுமே அதிக அறிவொளியையும், வெளிச்சத்தையும் பெற முடியும். ஒரு உண்மையான ஜெபத்தின் வெளிப்பாடு என்னவென்றால், தேவன் கேட்கிற எல்லாவற்றிற்காகவும் ஏங்குகிற ஒரு இருதயம் பெற்றிருத்தல், மேலும் அவர் என்ன கோரிக்கை வைத்திருக்கிறாரோ, அதை நிறைவேற்றி முடிக்க விரும்புதல்; ஆண்டவர் வெறுப்பதை வெறுத்தல், இவற்றின் அடிப்படையில் இதைப்பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ளுதலைப் பெற்று, தேவன் தெளிவுபடுத்திய உண்மையைக் குறித்த சிறிது அறிவையும், தெளிவையும் பெற்றிருத்தலே ஜெபத்தின் வெளிப்பாடு ஆகும். மன உறுதி, விசுவாசம், அறிவு மற்றும் ஜெபத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்ய ஒரு வழி ஆகியவை இருக்கும்பொழுது மட்டுமே, அது உண்மையான ஜெபம் என்று அழைக்கப்பட முடியும். மேலும், இவ்வகையான ஜெபம் மட்டுமே வல்லமையுள்ளதாகக் காணப்படும். இருப்பினும் ஜெபமானது தேவனுடைய வார்த்தைகளினாலான சந்தோஷத்தின் மீது கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்; தேவனோடு அவருடைய வார்த்தைகளின் மூலமாகத் தொடர்பு கொள்வதன் அடிப்படையில் அது ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், இதயம் தேவனைத் தேடக் கூடியதாகவும் அவருக்கு முன்பாக அமைதியுடனும் காணப்பட முடியும். இந்த வகையான ஜெபம் தேவனுடனான உண்மையான ஐக்கிய நிலைக்குள் ஏற்கனவே நுழைந்திருக்கிறது.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 418
ஜெபத்தைப் பற்றிய மிகவும் அடிப்படையான அறிவு:
1. மனதிற்கு வருவதெல்லாவற்றையும் கண்மூடித்தனமாகச் சொல்லாதீர்கள். உங்கள் இருதயத்தில் நீங்கள் ஒரு பாரம் கொண்டிருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஜெபிக்கும்பொழுது, நீங்கள் ஒரு நோக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
2. ஜெபம் தேவனுடைய வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது தேவனுடைய வார்த்தைகளின் மீது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. ஜெபிக்கும் பொழுது, நீங்கள் பழைய பிரச்சனைகளுக்குப் புதிய உருவம் கொடுக்கக் கூடாது. உங்கள் ஜெபம் தேவனுடைய தற்போதைய வார்த்தைகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஜெபிக்கும்பொழுது, உங்கள் உள்ளத்தின் ஆழ்ந்த கருத்துக்களைத் தேவனிடம் எடுத்துக்கூறுங்கள்.
4. குழு ஜெபம் ஒரு மையத்தைக் கொண்டதாக, முக்கியமாக, பரிசுத்த ஆவியின் தற்போதைய கிரியையை மையப்படுத்தி அமைய வேண்டும்.
5. பரிந்துரை ஜெபத்தை எல்லா மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்வதைக் காண்பிக்கும் ஒரு வழியாகும்.
ஜெபத்தைக் குறித்த அறிவு மற்றும் ஜெபத்தின் முக்கியத்துவம் குறித்த புரிந்துகொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டே ஒரு தனிமனிதனின் ஜெப வாழ்க்கை அமைகின்றது. அனுதின வாழ்க்கையில், உங்கள் குறைபாடுகளுக்காக அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். வாழ்வில் உங்கள் மனநிலையில் மாற்றத்தின் பலனைக் காண ஜெபியுங்கள். மேலும் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த உங்கள் அறிவின் அடிப்படையில் ஜெபியுங்கள். ஒவ்வொரு நபரும் தங்களுக்கான ஜெப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும். மேலும் அவர்கள் தேவனின் செயலை அறிந்து கொள்ள நாடி ஜெபிக்கவேண்டும். உங்கள் சொந்த சூழ்நிலைகளைத் தேவனுக்கு முன்பாக அப்படியே வைத்து, நீங்கள் ஜெபிக்கிற வழியைக் குறித்து கவலைப்படாமல் உண்மையாய் இருங்கள். உண்மையான புரிந்து கொள்ளுதலை அடைவது மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தைப் பெறுவதே முக்கிய அம்சமாகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைய முற்படும் ஒருவர் பல வெவ்வேறான வழிகளில் ஜெபிக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அமைதியான ஜெபம், தேவனுடைய வார்த்தைகளின் மீது ஆழ்ந்த தியானம், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறுதல் ஆகிய இவை சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைவதற்கான குறிக்கோளுடன் கூடிய செயலுக்கான உதாரணங்களாகும். இது தேவனுக்கு முன்பாக ஒருவனின் நிலையை மேலும் வளரச் செய்து ஒருபோதும் இல்லாத அளவிற்கு அவனை வாழ்க்கையில் முன்னோக்கி நகர்த்துகின்றது. சுருக்கமாகக் கூறுவதென்றால், நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தையைப் புசித்து, பருகுவது அல்லது அமைதியாக ஜெபிப்பது அல்லது சத்தமாக அறிவிப்பது ஆகிய இவை அனைத்துமே, நீ தேவனுடைய வார்த்தைகளையும், அவருடைய கிரியையையும் மற்றும் அவர் உன்னில் செய்து முடிக்க விரும்புகிறவற்றையும் தெளிவாகப் பார்க்க உனக்கு உதவுகின்றன. மிக முக்கியமாக, நீ செய்கிற இவை அனைத்தும், தேவன் உன்னிடம் எதிர்பார்க்கிற தரத்தை அடையவும், உன் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு உயர்த்தவும் உதவுகின்றது. தேவன் மனிதனிடம் வைக்கிற மிகக் குறைந்த கோரிக்கை என்னவென்றால், அவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக திறந்துவைக்க வேண்டும் என்பதாகும். மனிதன் தன் உண்மையான இதயத்தைத் தேவனுக்குக் கொடுத்து, தன் இதயத்தில் உள்ளவற்றை உண்மையாய் எடுத்துக் கூறினால், தேவன் அவனில் கிரியை செய்ய ஆவலாய் இருக்கிறார். தேவன் விரும்புவதெல்லாம் மனிதனின் திருக்குள்ள இருதயம் அல்ல, மாறாகச் சுத்தமும் நேர்மையான இருதயத்தை விரும்புகிறார். மனிதன் தன் இருதயத்திலிருந்து தேவனிடம் பேசாதிருந்தால், தேவனும் அவனுடைய இருதயத்தை அசைக்காமலும் அவனில் கிரியை செய்யாமலும் இருப்பார். ஆகையால், உங்கள் உள்ளத்திலிருந்து தேவனுடன் பேசுதல் உங்கள் குறைபாடுகள் அல்லது கலகத்தனமான மனநிலையைப் பற்றிக் கூறுதல் மற்றும் அவருக்கு முன்பாக உங்களை முழுமையாகத் திறந்து வைத்தல் போன்றவை ஜெபத்தில் மிக முக்கியமான விஷயமாகும். அப்பொழுது மட்டுமே தேவன் உன் ஜெபத்தில் ஆர்வம் உள்ளவராய் இருப்பார். இல்லையெனில் அவர் தன் முகத்தை உன்னிடமிருந்து மறைப்பார். உன் இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக அமைதியாக காத்துக்கொள்வது மற்றும் அது தேவனை விட்டு விலகாமல் இருக்கச் செய்வதே ஜெபத்தின் குறைந்தபட்ச தகுதி ஆகும். ஒருவேளை இந்தக் கட்டத்தில் புதிய அல்லது உயர்ந்த நுண்ணறிவை நீ பெறவில்லை; எனினும் நீ முன்னிருந்த நிலையைப் பாதுகாத்துப் பராமரிக்க ஜெபத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ பின்னோக்கி செல்லக்கூடாது. இதுவே மிகக் குறைந்தபட்சம் அடைய வேண்டிய உன் இலக்கு ஆகும். இந்த நிலையைக் கூட நீ அடையத் தவறினால் உன் ஆவிக்குரிய வாழ்க்கை சரியான பாதையில் இல்லை என்பதை அது நிரூபிக்கின்றது. இதன் விளைவாக நீ ஆதியில் கொண்டிருந்த தரிசனத்தை பற்றிக்கொண்டு இருக்க முடியாது, தேவன் மீதான விசுவாசத்தை இழந்து உன் மன உறுதி படிப்படியாக சிதறடிக்கப்பட்டுப் போகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ நுழைந்து இருக்கிறாயா இல்லையா என்பதற்கான அறிகுறி என்னவென்றால்: உன் ஜெபங்கள் சரியான பாதையில் இருக்கின்றனவா என காண்பதாகும். எல்லா ஜனங்களும் இந்த யதார்த்தத்துக்குள் நுழைய வேண்டும். அவர்கள் அனைவரும் ஜெபத்தில் தங்களைத் தாங்களே உணர்வுப்பூர்வமாகப் பயிற்றுவித்துக் கொள்ள அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். செயலற்ற முறையில் காத்திருக்காமல், பரிசுத்த ஆவியினால் தொடர்ந்து அசைக்கப்படும்படி முயற்சிக்க வேண்டும். அப்பொழுது மட்டும்தான் அவர்கள் உண்மையாகவே தேவனைத் தேடுகிறவர்களாகக் காணப்படுவார்கள்.
நீங்கள் ஜெபிக்கத் துவங்கும்பொழுது, ஒரேயடியாக எல்லாவற்றையும் அடைந்துவிட வேண்டும் என்று அதிகக் கற்பனை செய்யாதீர்கள் உன் வாயைத் திறந்தவுடனே பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படுதல் அல்லது அறிவொளியும் வெளிச்சமும் பெறுதல் அல்லது தேவன் உன்மீது கிருபையை பொழிந்தருளுவார் என்று எதிர்பார்த்தல் போன்ற அதிகப்படியான கோரிக்கைகளை நீ வைக்க முடியாது. அது அப்படி நடைபெறாது. தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. தேவன் ஜனங்களின் ஜெபத்திற்கு அவருடைய சொந்த நேரத்தில் பதிலளிக்கிறார். மேலும், சில சமயங்களில் அவருக்கு முன்பாக நீ உண்மையாய் இருக்கிறாயா இல்லையா என்பதைக் காண்பதற்கு உன் விசுவாசத்தை சோதிக்கிறார். நீ ஜெபிக்கும்பொழுது உனக்கு விசுவாசம் விடாமுயற்சி மற்றும் மன உறுதி இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்களைப் பயிற்றுவிக்கத் துவங்கும்பொழுது, பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படுவதைப் பெற முடியாததால் சோர்ந்து போய் விடுகிறார்கள். இது செயல்படாது! நீ விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியால் அசைக்கப்படுவதற்கான உணர்வில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், தேடுவதிலும் ஆராய்ந்து அறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சில சமயங்களில் நீ பயிற்சி செய்யும் வழி சரியானதாக இல்லாமலும் காணப்படும். மேலும் சில சமயங்களில் உன் சொந்த நோக்கங்களும் எண்ணங்களும் தேவனுக்கு முன்பாக நிலைநிற்க முடியாது. ஆகவேதான், தேவ ஆவியால் உன்னை அசைக்க முடிவதில்லை. சிலவேளைகளில், தேவன் நீ உண்மை உள்ளவனா இல்லையா என்பதைக் காண்கின்றார். சுருக்கமாகக் கூறுவதென்றால், பயிற்சியில் நீ மிகுந்த விலைக்கிரயம் செலுத்த வேண்டும். உன் பயிற்சியில் நீ திசை மாற்றம் அடைவதாக உணர்ந்தால் ஜெபம் செய்யும் வழியை மாற்றி அமைக்கலாம். உத்தம இருதயத்துடன் அவரைத்தேடி அவரை அடைய ஏங்கும்பொழுது மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் உன்னை இந்த உண்மைக்குள் நிச்சயமாகக் கொண்டு வருவார். சில சமயங்களில், நீ உத்தம இருதயத்துடன் ஜெபித்தும், குறிப்பாக நீ அசைக்கப்பட்டதாக உணர்வதில்லை. இப்படிப்பட்ட சமயங்களில் நீ விசுவாசத்தைச் சார்ந்திருந்து, தேவன் உன் ஜெபங்களைக் கவனிக்கிறார் என்று நம்ப வேண்டும். உன் ஜெபங்களில் விடாமுயற்சி வேண்டும்.
ஒரு நேர்மையான நபராக இருந்து, இருதயத்தில் உள்ள வஞ்சகத்திலிருந்து விடுபடத் தேவனிடம் ஜெபித்து, எல்லா நேரங்களிலும் ஜெபத்தின் மூலம் உன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள். தேவ ஆவியினால் அசைக்கப்பட்டு இருப்பாயாக. அப்பொழுது உன் மனநிலை படிப்படியாக மாறும். உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை என்பது ஜெப வாழ்க்கையாகும். அது பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்பட்டு இருக்கும் ஒரு வாழ்க்கையாகும். பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டு இருக்கிற செயல்முறை என்பது மனிதனின் மனநிலையில் உண்டான மாற்றத்தைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படாத வாழ்க்கை ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை அல்ல; மாறாக, அது ஒரு மதச் சடங்கு நிறைந்த ஒரு வாழ்க்கையாக மட்டுமே இருக்கும். அவ்வப்போது பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டிருக்கிறவர்கள் மற்றும் பரிசுத்த ஆவியினால் அறிவொளியையும், வெளிச்சத்தையும் அடைந்தவர்கள் மட்டுமே ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைந்து இருக்கிறார்கள். மனிதனின் மனநிலை அவன் ஜெபிக்கும்பொழுது தொடர்ந்து மாறுகிறது. எவ்வளவுக்கு அதிகமாகப் பரிசுத்த ஆவியானவர் அவனை அசைக்கிறாரோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் கிரியை செய்பவனாகவும், கீழ்ப்படிகிறவனாகவும் மாறுகிறான். ஆகவே, இப்படி அவன் இருதயம் படிப்படியாகச் சுத்தப்படுத்தப்பட்டு, அவன் மனநிலை படிப்படியாக மாறுகிறது. இதுவே உண்மையான ஜெபத்தின் பலன் ஆகும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 422
தேவனுடைய கிரியையும் வார்த்தையும் உங்கள் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கென்றே உள்ளன. அவருடைய குறிக்கோள் வெறுமனே அவருடைய கிரியை மற்றும் வார்த்தையினை நீங்கள் புரிந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ள வைப்பது மட்டிலும் அல்ல. அது போதுமானது அல்ல. நீங்கள் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கும் ஒரு நபர், எனவே தேவனின் வார்த்தையைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது. ஏனென்றால், தேவனுடைய வார்த்தையின் பெரும்பகுதி மனிதர்களுடைய மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவர் மிகவும் தெளிவாக பேசுகின்றார். சான்றாக, நீங்கள் தேவன் எதை புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனை கற்றுக் கொள்ளும் திறனை பூரணமாகப் பெற்றிருக்கிறீர்கள் என்ற வாசகம்; புரிந்துகொள்ளும் மனத்திறன் பெற்றிருக்ககூடிய ஒரு சாதாரண மனிதனால் செய்யக்கூடிய ஒன்று. குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் தேவன் பேசும் வார்த்தைகள் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கின்றன. மேலும் மக்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளாத பல விஷயங்களையும், எல்லா விதமான மனித நிலைகளையும் தேவன் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியது மேலும் ஒரு முழு நிலவில் இருந்து வரும் வெளிச்சத்தை போல தெளிவானது. எனவே இப்போது, மக்கள் பல பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் இன்னும் ஏதோ ஒன்று தவறிப் போனதாகத் தெரிகிறது—அது மக்கள் அவருடைய வார்த்தையை நடைமுறைபடுத்துவது. மக்கள் சத்தியத்தின் அனைத்து அம்சங்களையும் அனுபவமாக பெறவேண்டும் மற்றும் எது கிடைத்ததோ அதை அப்படியே உள்வாங்கிக் கொள்ள காத்து நிற்பவர்கள் என்பதற்கும் மேலாக, அதனை மிகவும் விபரமாக தேடி ஆராய வேண்டும்; இல்லாவிட்டால், அவர்கள் ஒட்டுண்ணிகளைக் காட்டிலும் சிறிது மேலானவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்து இருப்பார்கள், ஆனாலும் அதை நடைமுறைப்படுத்தாதவர்களாக இருப்பார்கள். இந்த விதமான நபர் சத்தியத்தை நேசிக்காதவர்களாக இறுதியில் முழுமையாக வெளியேற்றப்படுவர். 1990 –ஆம் ஆண்டுகளின் பேதுருவைப் போல இருக்க, நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தையை நடைமுறைப்படுத்த வேண்டும் அது உங்களுடைய அனுபவங்களில் மெய்யாக நுழைந்திருக்க வேண்டும், தேவனோடு கொண்டுள்ள உங்கள் ஒத்துழைப்பில் இன்னும் அதிகமாகமேலும் மேலும் பெரிய அளவில் பிரகாசம் அடையவேண்டும் அது உங்கள் சொந்த வாழ்க்கையில் எப்பொழுதும் அதிகரிக்கும் உதவியாக இருக்கும். நீங்கள் தேவனின் வார்த்தையை நிறைய படித்திருக்கிறீர்கள் ஆனால் உரையின் பொருளை மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறீர்கள், உங்கள் நடைமுறை அனுபவங்களின் மூலம் தேவனுடைய வார்த்தையை நேரடியாக அறிந்திருக்கவில்லை என்றால், நீங்கள் தேவனின் வார்த்தையை அறிய மாட்டீர்கள். உங்களைப் பொறுத்த மட்டிலும், தேவனுடைய வார்த்தை அது வாழ்க்கை அல்ல அது வெறும் உயிரற்ற எழுத்துக்கள். இந்த உயிரற்ற எழுத்துக்களின் சாத்தார்த்தத்தைக் கடைபிடிப்பதில் மட்டுமே வாழ்கிறேன் என்று இருப்பீர்களானால் நீங்கள் தேவனுடைய வார்த்தையின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடியாது அல்லது அவருடைய சித்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையை உங்களுடைய நடைமுறை அனுபவம் ஆக்கிக் கொள்ளும் போது மாத்திரமே தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய அர்த்தம் அதுவாகவே உங்களுக்கு வெளிப்படுத்தப்படும், மேலும் அனுபவத்தின் மூலம்தான் பல சத்தியங்களின் ஆவிக்குரிய அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டு தேவனுடைய வார்த்தையின் மனித அறிவுக்கு எட்டாதவைகளைத் திறக்க முடியும். நீங்கள் இதனை நடைமுறைப்படுத்தாது இருப்பீர்களனால், அவருடைய வார்த்தை எவ்வளவு தெளிவாக இருந்தாலும் இதுவரைக்கும் நீங்கள் புரிந்து கொண்டது என்பதெல்லாம் வெறும் எழுத்துக்களும் உபதேசங்களுமாகவே இருக்கும், அவை உங்களுக்கு ஒரு மத ரீதியான கட்டுப்பாடாக மாறிவிடும். இதைத்தான் பரிசேயர்களும் செய்தார்கள் அல்லவா? நீங்கள் தேவனுடைய வார்த்தையை நடைமுறைப்படுத்தி அதை அனுபவமாக்கிக் கொள்ளும்போது அது உங்களுக்கு நடைமுறையாகி விடுகிறது; நீங்கள் அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்காத போது, தேவனுடைய வார்த்தை உங்களுக்கு மூன்றாம் வானம் என்னும் புராண கட்டுக்கதைக்கு சற்று மேலானதாகவே இருக்கும். உண்மையில், தேவனை நம்புவதற்கான செயல்முறையானது, நீங்கள் அவருடைய வார்த்தையை அனுபவிப்பதும், அவரால் ஆதாயமடைந்து கொள்வதும் அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவனை விசுவாசிப்பது என்பது அவருடைய வார்த்தையின் அறிவையும் புரிதலையும் கொண்டிருக்க வேண்டும்; அவருடைய வார்த்தையை நீங்கள் அனுபவமாக மாற்றி வாழ்வது என்பதாக இருக்க வேண்டும்; இதுதான் நீங்கள் தேவனிடத்தில் கொண்டுள்ள நம்பிக்கையின் பின்னணியில் உள்ள உண்மை நிலை. நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள் மேலும் வார்த்தையை உங்களுக்குள் இருக்கும் ஒன்றாக வைத்துக் கொண்டு நடைமுறைப்படுத்தாமல் அதே நேரத்தில் நித்திய ஜீவனை எதிர்பார்த்தீர்கள் என்றால், நீங்கள் முட்டாள்தனமாகக் காணப்படுவீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு விருந்துக்கு போய் அங்கே இருக்கக்கூடிய ருசியான பதார்த்தங்களைப் பார்த்து அதை மனப்பாடம் செய்துகொண்டேன், ஆனால் அதை நான் ருசி பார்க்கவில்லை என்பது போல் இருக்கிறது அப்படிப்பட்ட நபர் ஒரு முட்டாள் அல்லவா?
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதை நடைமுறைபடுத்த வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 423
மனிதன் வைத்திருக்க வேண்டிய சத்தியம் அது தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிறது, அதுவே மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருக்கும் சத்தியம். உங்கள் உடலுக்குத் தேவைப்படும் சத்து மருந்து மற்றும் வாழ்வாதாரம், மனிதன் அவனது இயல்பான மனிதத் தன்மைக்கு திரும்ப வருவதற்கு உதவுகிறது. இந்த சத்தியத்தினால் ஒரு மனிதன் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அதிகமாக தேவனுடைய வார்த்தை நடைமுறைப்படுத்தும் போது உங்களுடைய வாழ்க்கை சீக்கிரமாக மலரும் சத்தியமும் அதிகமாகத் தெளிவாகும். நீங்கள் உங்கள் அந்தஸ்தில் வளரும்போது ஆவிக்குரிய உலகத்தின் காரியங்களை மிகத் தெளிவாக காண்பீர்கள், சாத்தான் மீது நீங்கள் ஜெயம் கொள்ள அதிகமான பலத்தையும் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையை நடைமுறைப்படுத்தும் போது, புரியாதிருந்த அனேக சத்தியங்கள் உங்களுக்குப் புரிய வரும். நடைமுறையில் தங்கள் அனுபவத்தை ஆழமாக்குவதை விட, தேவனுடைய வார்த்தையின் உரையை வெறுமனே புரிந்துகொள்வதிலும், உபதேசங்ளுக்கு வேண்டியதைக் கொடுப்பதில் தங்கள் கவனத்தை செலுத்துவதிலும் பெரும்பாலான மக்கள் திருப்தி அடைகிறார்கள், ஆனால் அது பரிசேயர்களின் வழி அல்லவா? ஆக “தேவனின் வார்த்தை ஜீவனாய் இருக்கிறது” என்ற சொற்றொடர் இவர்களுக்கு எவ்வளவு தூரம் மெய்யானதாக இருக்கிறது? ஒரு மனிதனுடைய வாழ்வு வெறுமனே தேவனுடைய வார்த்தையை வாசிப்பதனால் வளர முடியாது, தேவனுடைய வார்த்தையை அவன் நடைமுறைப்படுத்தும் போது வளர்கிறான். தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வது என்பது வாழ்க்கையையும் அந்தஸ்தையும் பெறுவதற்குத் தேவையானது என்பது உங்கள் நம்பிக்கையாக இருந்தால், உங்கள் புரிதல் நெளிவடைந்தது. தேவனுடைய வார்த்தையை உண்மையாக புரிந்து கொள்வது என்பது நீங்கள் சத்தியத்தை கடைப்பிடிக்கும்போது நிகழ்கிறது, “நீங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும் போது மாத்திரமே அதை புரிந்துகொள்ள முடியும்” என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இன்று, தேவனுடைய வார்த்தையை வாசித்த பிறகு நீங்கள் தேவனுடைய வார்த்தையைத் தெரியும் என்று சொல்லலாம் ஆனால் நீங்கள் புரிந்துகொண்டதாகச் சொல்ல முடியாது. சிலர் சத்தியத்தை கடைப்பிடிப்பதற்கான ஒரே வழி முதலில் அதைப் புரிந்துகொள்வதுதான் என்று கூறுகிறார்கள், ஆனால், இது ஓரளவு மட்டுமே சரியானது, நிச்சயமாக அது முற்றிலும் துல்லியமானது அல்ல. நீங்கள் ஓரு சத்தியத்தைப் பற்றிய அறிவை நீங்கள் பெறுவதற்கு முன்பு, நீங்கள் அந்த சத்தியத்தை அனுபவத்தில் உணரவில்லை. நீங்கள் ஒரு பிரசங்கத்தில் இருந்து ஒன்றை காதில் கேட்பது மட்டும் மெய்யான புரிந்துகொள்ளுதல் ஆகாது—இது வார்த்தைகளின் வெளிப்படையான அர்த்தத்தை அப்படியே வசப்படுத்திக் கொள்வது தான், ஆனால், அந்த வார்த்தைகளை மெய்யான அர்த்தத்துடன் புரிந்து கொண்டதற்கு அது சமம் அல்ல. ஏதோ மேலோட்டமான சத்தியத்தின் அறிவை பெற்றிருக்கிறேன் என்று சொல்வீர்களானால் அது நீங்கள் புரிந்து கொண்டீர்கள் அல்லது அதைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல; சத்தியத்தைக் குறித்ததான மெய்யான அர்த்தம் என்பது அதை அனுபவித்து உணரும்போது மாத்திரமே கிடைக்கும். ஆகையால், நீங்கள் அனுபவம் ஆக்கிக் கொள்ளும் போது மாத்திரமே நீங்கள் அதை புரிந்துகொள்ள முடியும் அப்போது தான் நீங்கள் அதன் மறைவான பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் அனுபவத்தை ஆழமாக்குவது என்பது அர்த்தங்களை புரிந்துகொள்வதற்கும், சத்தியத்தின் சாரத்தை புரிந்து கொள்வதற்கும் ஒரே வழியாகும். ஆகையால், நீங்கள் சத்தியத்தோடு எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும், ஆனால் உங்களுக்குள் சத்தியம் இல்லாது இருக்குமானால் நீங்கள் மற்றவர்களை சம்மதிக்க வைக்க—மதத்தை சார்ந்த மக்கள் இருக்கட்டும், உங்கள் குடும்பத்தாரைக் கூட சம்மதிக்க வைக்க இயலாது. உங்களில் சத்தியம் இல்லாது பனித்துளிகள் பறப்பது போன்று இருக்கிறீர்கள், ஆனால் சத்தியத்தோடு இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்க முடியும், உங்களை யாரும் தாக்க முடியாது. ஒரு கோட்பாடு எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், அது சத்தியத்தை வெல்ல முடியாது. சத்தியத்துடன், உலகத்தையே அசைக்கலாம் மற்றும் மலைகள் மற்றும் கடல்களை நகர்த்தலாம், அதேசமயம் சத்தியம் இல்லாவிட்டால் வலுவான நகரச் சுவர்களும் புழுக்களால் தகர்க்கப்பட வழி உண்டாகும். இது ஒரு வெளிப்படையான உண்மை.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதை நடைமுறைபடுத்த வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 424
தற்போதைய நிலையில் சத்தியத்தை முதலிலேயே தெரிந்திருக்க வேண்டும், அடுத்து அதை நடைமுறைப்படுத்துவது மேலும் சத்தியத்தின் மெய்யான அர்த்தத்தில் நம்மை நாமே பலப்படுத்திக் கொள்வது இதை நீங்கள் அடைய முயற்சி செய்ய வேண்டும். உங்கள் சொற்களை மற்றவர்கள் பின்பற்றும்படி செய்வதை விட, உங்கள் நடைமுறை அவர்கள் பின்பற்றுவதற்குக் காரணமாக அமைய வேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் அர்த்தமுள்ள ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு எது நேர்ந்தாலும் நீங்கள் எப்படிப்பட்டவரை சந்திக்க நேர்ந்தாலும் நீங்கள் சத்தியத்தைப் பெற்றவர்களாக எவ்வளவு காலம் இருக்கிறீர்களோ அவ்வளவு காலம் நீங்கள் உறுதியாக நிற்க முடியும். தேவனுடைய வார்த்தை மனிதனுக்கு ஜீவனைக் கொண்டுவருகிறது, மரணத்தை அல்ல. நீங்கள் அதிகமாக தேவனுடைய வார்த்தையை வாசித்திருந்தும், நீங்கள் ஜீவன் பெறாதவராத இருப்பீர்கள் என்றால், இன்னும் நீங்கள் மரித்தவராகவே இருப்பீர்கள் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது. சிறிது காலம் கழித்து நீங்கள தேவனுடைய வார்த்தையின் பெரும்பகுதியைப் படித்திருப்பீர்கள், பல நடைமுறை பிரசங்கங்களைக் கேட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் இன்னும் மரித்தவராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள சத்தியத்தை மதிக்கிறவர் அல்ல, அதை பின்தொடருகிறவர் அல்ல என்பதற்கு இது சான்றாகும். நீங்கள் மெய்யாகவே தேவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் எனத் தேடுவீர்களேயானால், உங்களை வெறும் உபதேசங்களால் நிறைத்துக் கொள்ளவும் அந்த இறுமாப்புள்ள உபதேசங்களைப் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நீங்கள் கவனம் செலுத்த மாட்டீர்கள் அதற்கு மாறாக நீங்கள் அதிகமாக தேவனுடைய வார்த்தையை அனுபவமாக்கி சத்தியத்தை நடைமுறைபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். இதுவே நீங்கள் இப்பொழுது செயல்படுத்த தேடுவதாக இருக்க வேண்டும் அல்லவா?
தேவன் தனது கிரியையை மனிதரிடத்தில் செய்ய குறுகின காலம் தான் உள்ளது, எனவே நீங்கள் அவருடன் ஒத்துழைக்காவிட்டால் என்ன விளைவு நேரும்? நீங்கள் புரிந்து கொண்டவுடன் அவருடைய வார்த்தையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவன் எப்பொழுதும் விரும்புவது ஏன்? அது ஏனென்றால், தேவன் தம்முடைய வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மேலும் உங்களுடைய அடுத்த படி, நீங்கள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே. நீங்கள் இவ்வண்ணமாக இந்த வார்த்தைகளை நடைமுறைப்படுத்தினால், தேவன் அவர்களுக்குள் பிரகாசிப்பதையும் அவருடைய வழிநடத்துதலையும் செயல்படுத்துவார் இது இப்படியாகவே செய்யப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தை, மனிதனை வாழ்க்கையில் மலர அனுமதிக்கிறது, எந்த ஒரு காரணத்துக்காகவும் மனிதன் வழி விலகிப் போக அல்லது செயலற்றுப் போக காரனமான எந்தவொரு அடிப்படைத் தத்துவங்களும் பற்றிக்கொள்ள இடம் கொடாது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசித்து அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள் ஆனால், நீங்கள் இன்னும் பரிசுத்த ஆவியானவரின் எந்த ஒரு கிரியையும் பெற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் பேசும் வார்த்தை ஒரு சிறு குழந்தையை ஏமாற்றி விட முடியும். உங்கள் நோக்கங்கள் சரியானதா என்று மற்றவர்களுக்குத் தெரியாது, ஆனால் தேவனுக்குத் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மற்றவர்கள் தேவனுடைய வார்த்தையை எப்படி நடைமுறைப்படுத்துகிறார்கள், நடைமுறைப்படுத்தி பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள், ஆனாலும் நீங்கள் அவருடைய வார்த்தையைப் பின்பற்றியும், பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தைப் பெறவில்லையா? தேவனுக்கு உணர்ச்சிகள் இருக்கிறதா? உங்கள் நோக்கங்கள் உண்மையிலேயே சரியானவையாக இருந்து, நீங்கள் ஒத்துழைப்பு தருபவராக இருந்தால், அப்பொழுது தேவனுடைய ஆவியானவர் உங்களுடன் இருப்பார். சிலர் எப்போதுமே தங்கள் சொந்தக் கொடியை நாட்ட விரும்புகிறார்கள், ஆனால் தேவன் ஏன் அவர்கள் எழுந்து திருச்சபையை வழிநடத்த அனுமதிக்கவில்லை? சிலர் தங்களுடைய சொந்த செயல்பாடுகளை மட்டுமே நிறைவேற்றுகிறார்கள், அவர்களூடைய சொந்தக் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள் அப்படி என்று அவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்பதாக தேவனுடைய ஒப்புதலை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்? தேவன் மனிதனின் உள்ளார்ந்த இருதயத்தை ஆராய்கிறார், சத்தியத்தைப் பின்தொடர்பவர்கள் அவ்வாறு பின்தொடர்வதை சரியான நோக்கங்களுடன் செய்ய வேண்டும். சரியான நோக்கங்கள் இல்லாதவர்கள் உறுதியாக நிற்க முடியாது. அடிப்படையில் பார்க்கும்போது, உங்கள் குறிக்கோள் தேவனுடைய வார்த்தையை உங்களுக்குள் செயல்பட விட்டுக்கொடுக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் நடைமுறைப்படுத்தி தேவனுடைய வார்த்தைமீது சரியான புரிதல் பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு தேவனுடைய வார்த்தையை புரிந்து கொள்ளும் திறன் மோசமாக இருக்கலாம், ஆனால் தேவனின் வார்த்தையை நடைமுறைப்படுத்துவதாக இருக்கும் போது இந்த குறைபாட்டினை அவரால் சரிசெய்ய முடியும். எனவே நீங்கள் பல சத்தியங்களை அறிந்திருப்பது என்பது மட்டுமல்லாமல், அவற்றை நீங்கள் கடைப்பிடிக்கவும் வேண்டும். புறக்கணிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கவனம் செய்யவேண்டியது இது. இயேசு அவருடைய முப்பத்து மூன்றரை வருட காலத்தில் பல அவமானங்களையும், மிகுந்த துன்பங்களையும் தாங்கினார். மிகப்பெரும் துன்பத்தை அனுபவித்ததற்கு எளிய காரணம் என்னவென்றால் சத்தியத்தை நடைமுறைப்படுத்திட, எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தைச் செய்திட, தேவ சித்தத்திற்கு மட்டும் கவனம் செலுத்தினார் என்பதே. அவர் சத்தியத்தை அறிந்து அதை நடைமுறைபடுத்தாது இருந்திருப்பார் எனில் இப்படிப்பட்ட துன்பங்களின் ஊடாக கடந்து சென்று இருக்கவே வேண்டாம். இயேசு யூதர்களின் போதனைகளைப் பின்பற்றி, பரிசேயர்களைப் பின்பற்றியிருந்தால், அவர் துன்பப்பட்டிருக்க மாட்டார். நீங்கள் இயேசுவின் கிரியைகளில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். தேவனுடைய கிரியை மிகவும் பயனுள்ளதாக எப்பொழுது மனிதனிடம் செயல்படுகின்றது என்றால் அது மனிதனுடைய ஒத்துழைப்பைப் பொறுத்தது என்பது நீங்கள் அங்கீகரிக்க வேண்டிய ஒன்று. இயேசுகிறிஸ்து சத்தியத்தை நடைமுறைப்படுத்த தவறி இருந்திருப்பாரானால் சிலுவையில் அவர் துன்பப்பட்டிருப்பாரா? தேவனுடைய சித்தத்தின்படி அவர் செயல்படாதவராக இருந்திருந்தால் அவ்வளவு வேதனையுள்ள ஜெபத்தை அவர் செய்திருக்க முடியுமா? ஆகையால், நீங்களும் சத்தியத்தை நடைமுறைப்படுத்துவதற்காக துன்பப்பட வேண்டும் ஒருவர் கடந்து செல்ல வேண்டிய அவசியமான துன்பம் இதுவே.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதை நடைமுறைபடுத்த வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 428
அநேக ஜனங்கள் நடைமுறையைப் பற்றி கொஞ்சம் பேசமுடியும் மற்றும் அவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயங்களைப் பற்றி பேசமுடியும் ஆனால் அதில் பெரும்பாலானது மற்றவர்களுடைய வார்த்தைகளிலிருந்து பெற்ற பிரகாசமாக இருக்கிறது. இதில் எதுவும் அவர்களுடைய தனிப்பட்ட நடத்தைகளில் உள்ளடங்கவில்லை, அல்லது அவர்களுடைய அனுபவங்களிலிருந்து பார்ப்பவைகளில் இருந்தும் உள்ளடங்கவில்லை. முன்னர் நான் இந்தப் பிரச்சினையைப் பகுத்தாய்ந்திருக்கிறேன்; எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்காதீர்கள். நீங்கள் வெறும் காகிதப்புலி, ஆயினும் சாத்தானை வெல்லுவதைப் பற்றி, வெற்றிகரமான சாட்சிகளை தாங்கி வருவது பற்றி, மற்றும் தேவனுடைய ரூபத்தில் வாழ்வதைப் பற்றி பேசுகிறீர்களா? இதெல்லாம்வீண் எண்ணம்! தேவனால் பேசப்பட்ட எல்லா வார்த்தைகளும் நீங்கள் பாராட்டுவதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் வாய் உங்களுடைய பழைய தன்மையைக் கைவிட்டுவிட்டு சத்தியத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி பேசுகிறது, ஆயினும் உங்கள் கைகள் மற்ற கிரியைகளை கொண்டு செல்கிறது மற்றும் உங்கள் இருதயம் மற்ற திட்டங்களைத் தீட்டி சதி செய்கிறது—எந்த மாதிரியான ஒரு நபர் நீங்கள்? உங்கள் இருதயமும் உங்கள் கைகளும் ஏன் ஒன்றாக மற்றும் ஒரே மாதிரியாக இல்லை? இவ்வளவு உபதேசங்களும் வெறுமையான வார்த்தைகளாகிவிட்டது; இது மனதை நொறுக்கவில்லையா? நீங்கள் தேவனுடைய வார்த்தையை நடைமுறையில் காட்டுவதற்கு இயலவில்லை என்றால், நீங்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் பாதைக்குள் இன்னும் பிரவேசிக்கவில்லை, பரிசுத்த ஆவியானவருடைய கிரியை உங்களிடம் இன்னும் இல்லை மற்றும் அவருடைய வழிகாட்டுதலை இன்னும் நீங்கள் பெறவில்லை என்பது நிரூபணமாகிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே புரிந்துகொள்ள இயலும் ஆனால் நடைமுறையில் கடைப்பிடிக்க இயலவில்லை என்று நீங்கள் சொன்னால், பிறகு நீங்கள் சத்தியத்தை நேசிக்காத ஒரு நபராக இருக்கிறீர்கள். தேவன் இதைப்போன்ற நபரை இரட்சிக்க வரமாட்டார். பாவிகளை இரட்சிப்பதற்கு, ஏழைகளை இரட்சிப்பதற்கு மற்றும் தாழ்ந்த அனைத்து ஜனங்களையும் இரட்சிப்பதற்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது மிகப்பெரும் வேதனையை அனுபவித்தார். அவருடைய சிலுவைமரணம் ஒரு பாவ நிவாரணப் பலியாக அமைந்தது. உங்களால் தேவனுடைய வார்த்தையை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால், நீங்கள் முடிந்த அளவு சீக்கிரமாக விலகிச் செல்லவேண்டும்; தேவனுடைய வீட்டில் ஒரு ஒட்டுண்ணியாகத் தொடர்ந்து இருக்காதீர்கள். தேவனைத் தெளிவாக எதிர்க்கும் காரியங்களைச் செய்வதை நிறுத்துவது அநேக ஜனங்களுக்கு அது கடினமாகத் தோன்றுகிறது. அவர்கள் மரணத்தைக் கேட்கிறார்கள் இல்லையா? அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பற்றி எப்படி பேசலாம்? தேவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு துணிவு இருக்கிறதா? தேவன் கொடுக்கிற உணவைச் சாப்பிட்டு, தேவனை எதிர்க்கும் நேர்மையற்ற காரியங்களைச் செய்து, கெட்டவனாக, நயவஞ்சகனாக மற்றும் சதிசெய்கிறவனாக இருந்து, ஆயினும் தேவன் உங்களுக்கு அளித்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க அவர் அனுமதிக்கும்போது—இவற்றைப் பெறும்போது உங்கள் கரங்கள் எரிவதைப்போல் நீங்கள் உணரவில்லையா? உங்கள் முகம் சிவப்பாக மாறுவதை நீங்கள் உணரவில்லையா? தேவனை எதிர்க்கும் எதையாவது செய்து, “விதிகளுக்குப் புறம்பாக” சதி செய்துகொண்டு செல்வது, உங்களுக்கு அச்சுறுத்தலாக இல்லையா? நீங்கள் ஒன்றையும் உணரவில்லை என்றால், நீங்கள் எந்த எதிர்காலத்தைப் பற்றியம் எப்படிப் பேசலாம்? நெடுங்காலமாக உங்களுக்கு ஏற்கனவே எதிர்காலம் இல்லை, அதனால் உங்களுக்கு இன்னும் மேலான எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும்? நீங்கள் வெட்கங்கெட்ட முறையில் எதையாவது சொல்லிருந்தாலும் எந்த நிந்தனையையும் உணராவிட்டால் மற்றும் உங்கள் இருதயம் விழிப்புடன் இல்லாவிட்டால், இது நீங்கள் தேவனால் ஏற்கனவே கைவிடப்பட்டிருக்கிறீர்கள் என்பதின் அர்த்தம் அல்லவா? பேசுவதிலும் நடப்பதிலும் அதீத விருப்பத்துடனும் கட்டுப்பாடுகள் இன்றியும் இருப்பது உங்களுடைய இயற்கைக் குணமாய் இருக்கிறது, பின்பு நீங்கள் இதைப்போல் தேவனால் எவ்வாறு பரிபூரணமாக்கப்படுவீர்கள்? உலகத்தில் மேற்கொண்டு உங்களால் ஜீவித்திருக்க முடியுமா? உங்களால் யாரை நம்பச் செய்ய முடியும்? உங்களுடைய உண்மையான இயல்பை அறிந்தவர்கள் தள்ளியே இருப்பார்கள். இது தேவனுடைய தண்டனை அல்லவா? முழுவதுமாக, பேச்சு மட்டும் இருந்து செயல் முறை இல்லையென்றால், அங்கே வளர்ச்சி இல்லை. நீங்கள் பேசும்போது பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் கிரியை செய்து கொண்டு இருக்கலாம், நீங்கள் நடைமுறையில் செய்யவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதை நிறுத்துவார். இதை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தால், நீங்கள் எவ்வாறு எதிர்காலத்தைப் பற்றி ஏதாவது பேசுவீர்கள் அல்லது உங்களது அனைத்தையும் தேவனுடைய கிரியைக்கு எவ்வாறு கொடுப்பீர்கள்? உங்களை முழுவதுமாக அர்பணிப்பதைப் பற்றிப் பேச மட்டுமே பேசமுடியும், ஆனாலும் நீங்கள் உங்களுடைய உண்மையான அன்பை தேவனுக்கு இன்னும் கொடுக்கவில்லை. அவர் உங்களிடம் இருந்து பெறுவது வெறும் வாய்ச்சொற்களின் பக்தி மட்டுமே; சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான உங்களுடைய உள்நோக்கத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. இது உங்களுடைய உண்மையான அந்தஸ்தாக இருக்கக்கூடுமா? இதை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தால், நீங்கள் தேவனால் எப்பொழுது பரிபூரணமாக்கப்படுவீர்கள்? உங்களுடைய இருண்ட மற்றும் துயர் மிகுந்த எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லையா? தேவன் உங்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா? அநேகரை மற்றும் புதிய ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் விரும்புகிறார் என்பதை நீங்கள் அறியவில்லையா? பழைய காரியங்கள் அதனுடைய பழையவற்றைப் பற்றிக்கொள்ளலாமா? இன்று நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு கவனம் செலுத்தவில்லை: நீங்கள் நாளைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்களா?
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 431
நீங்கள் மிகவும் யதார்த்தமான பாடங்களைக் கற்க வேண்டும். ஜனங்கள் ரசிக்கிற உயர்ந்தபட்சமான சத்தம், வெறுமையான பேச்சு ஆகியவற்றிற்கு அவசியம் இல்லை. அறிவைப் பற்றி பேசும்போது, ஒவ்வொரு நபரும் தங்கள் முன்பாக இருப்பவரைக்காட்டிலும் உயர்வானவராக இருக்கிறார், ஆனால் அவர்கள் இன்னும் நடைமுறைக்கான பாதையைக் கொண்டிருக்கவில்லை. நடைமுறையின் கொள்கைகளை ஜனங்களில் எத்தனை பேர் புரிந்துகொண்டுள்ளனர்? உண்மையான பாடங்களை எத்தனை பேர் கற்றுக்கொண்டுள்ளனர்? யதார்த்தத்துடன் யார் ஐக்கியமாயிருக்கக்கூடும்? தேவனுடைய வார்த்தைகளைப் பேசக்கூடிய வகையில் இருத்தல் என்பது நீ உண்மையான நிலையை உடையவனாக இருப்பதாக அர்த்தப்படாது; அது நீ திறமைசாலியாகப் பிறந்தாய், நீ வரம் பெற்றவனாக இருக்கிறாய் என்பதை மாத்திரம் காண்பிக்கிறது. உன்னால் பாதையை சுட்டிக்காட்ட முடியாவிட்டால், விளைவு ஒன்றுமிராது, மற்றும் நீ பயனற்ற குப்பையாக இருப்பாய்! நடைமுறைக்கான உண்மையான பாதை பற்றி நீங்கள் எதுவும் சொல்ல முடியாதென்றால், நீங்கள் போலியாக நடிக்கிறீர்கள் அல்லவா? மற்றவர்கள் அறியக்கூடிய வகையில் அல்லது அவர்கள் பின்பற்றக்கூடிய வகையில், நீங்கள் உங்களுக்குச் சொந்தமான உண்மை அனுபவங்களைப் பிறருக்கு வழங்க முடியாவிட்டால், நீங்கள் போலியாகச் செயல்படுபர் அல்லவா? நீங்கள் ஒரு உண்மையற்ற நபரல்லவா? உங்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அத்தகைய நபர் “பொது உடமைக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர்” என்ற பங்கை மட்டுமே வகிக்க முடியும், “பொது உடமையைக் கொண்டுவருவதற்குப் பங்களிப்பவர்” அல்ல. யதார்த்தமின்றி இருத்தல் என்பது சத்தியமில்லாது இருப்பதாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது என்பது ஒன்றுக்கும் பயனற்றதாக இருப்பதாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது நடைப்பிணமாயிருத்தலாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது என்பது குறிப்பு மதிப்பு இல்லாத “மார்க்சிச-லெனினிச சிந்தனையாளராக” இருப்பதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் கோட்பாட்டைப் பற்றி வாயை மூடிக்கொண்டு, நிஜமான, உண்மையான மற்றும் உறுதியான கட்டமைப்பு உடைய ஒன்றைப் பற்றி பேசும்படி வேண்டுகிறேன்; சில “நவீன கலைகளை” படியுங்கள், யதார்த்தமான சிலவிஷயங்களைச் சொல்லுங்கள், உண்மையான ஒன்றை பங்களியுங்கள், அர்ப்பணிப்பின் ஆவியைக் கொண்டவர்களாயிருங்கள். நீ பேசும்போது யதார்த்தத்தை எதிர்கொள்; ஜனங்களை மகிழ்ச்சியுணர்வு கொண்டவர்களாக ஆக்குவதற்காகவோ அல்லது அவர்கள் அமர்ந்து உன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவோ யதார்த்தமற்ற மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பேச்சில் ஈடுபட வேண்டாம். அதில் மதிப்பு எங்கே உள்ளது? ஜனங்கள் உன்னை இதமாக நடத்துவதைப் பெறுவதில் உள்ள கருத்து என்ன? நீங்கள் ஒரு மோசமான செல்வாக்காய் மாறிப்போகாதபடிக்கு, உங்கள் பேச்சில் கொஞ்சம் “கலைநயத்துடன்” இருங்கள், உங்கள் நடத்தையில் இன்னும் சற்றுக்கூடுதலான நியாயத்துடன் இருங்கள், நீங்கள் விஷயங்களைக் கையாளும் விதத்தில் இன்னும் சற்றுக்கூடுதலான அறிவிற்கு ஏற்புடைய வகையில் இருங்கள், நீங்கள் கூறும்வகையில் இன்னும் சற்று நடைமுறைக்குரியவராக இருங்கள், உங்கள் செயல் ஒவ்வொன்றினாலும் தேவனுடைய வீட்டிற்குப் பிரயோஜனம் கொண்டுவருதலைப் பற்றிச் சிந்தியுங்கள், நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது, உங்கள் மனசாட்சியைக் கவனியுங்கள், தயவுக்கு கைமாறாக வெறுப்பைத் திருப்பித்தராதீர்கள் அல்லது தயவுக்கு கைமாறாக நன்றியின்மையைக் காட்டாதீர்கள், மற்றும் ஒரு மாயக்காரரைப்போல் இருக்காதீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது, அவற்றை யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இணைக்கவும், நீங்கள் பேசும்போது, யதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுங்கள். கீழ்த்தரமான நோக்கத்துடன் இருக்காதீர்கள்; இது தேவனைத் திருப்திப்படுத்தாது. மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகளில், இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மையுடனும், சற்று அதிக பலந்தரும் வகையிலும், இன்னும் சற்று அதிகமாகக் கண்ணியத்துடனும் இருங்கள், மற்றும் “பரந்த எண்ணம் மற்றும் தாராள குணத்திலிருந்து” கற்றுக்கொள்ளுங்கள்.[அ] நீங்கள் மோசமான சிந்தனைகளைக் கொண்டிருக்கும்போது, மாம்சசிந்தையை அதிகமாகக் கைவிடப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் வேலைசெய்யும்போது, யதார்த்தமான பாதைகளைப் பற்றி அதிகம் பேசுங்கள், மற்றும் அதி உயர்ந்த நிலைக்குச் செல்லாதீர்கள், அப்படி நீங்கள் சென்றால் நீங்கள் பேசுவதன் கருத்து ஜனங்களைச் சென்றடையாது. குறைவாக மகிழ்வை அனுபவித்தல், அதிக பங்களிப்பு—இவை அர்ப்பணிப்புக்கான உங்கள் சுயநலமற்ற ஆவியைக் காண்பிக்கிறது. தேவனுடைய நோக்கங்களின்மீது அதிக கவனமாயிருந்து, உங்கள் மனசாட்சி கூறுவதை அதிகமாய்க் கவனியுங்கள், அதிக கவனத்துடன் இருங்கள், மேலும் தேவன் ஒவ்வொரு நாளும் உங்களிடம் பொறுமையாகவும் ஊக்கமாகவும் பேசுவதை மறந்துவிடாதீர்கள். “பழைய பஞ்சாங்கத்தை” அடிக்கடி வாசியுங்கள். மேலும் அதிகமாய் ஜெபியுங்கள், அடிக்கடி ஐக்கியம் கொள்ளுங்கள். அதிகமாய்க் குழப்பிக்கொள்வதை நிறுத்துங்கள்; நடைமுறை அறிவைக் காண்பித்து மனதினால் அறியும் திறனைச் சற்றே ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாவமான கை வெளியே வரும்போது, அதை பின்னால் இழுங்கள்; அதை அதிகதூரம் சென்றடைய விடாதீர்கள். இதனால், எந்தப் பயனும் இல்லை, சாபங்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் தேவனிடமிருந்து பெற இயலாது, எனவே கவனமாக இருங்கள். உங்கள் இதயம் மற்றவர்கள் மீது பரிதாபப்படட்டும், எப்போதும் கையில் ஆயுதங்களைக் வைத்துக்கொண்டு தாக்கிக்கொண்டிருக்க வேண்டாம். சத்தியத்தைப் பற்றி அறிகிற அறிவைப் பற்றி அதிகமாக பேசுங்கள், மற்றும் ஜீவனைப் பற்றி அதிகம் பேசுங்கள், மற்றவர்களுக்கு உதவும் ஆவியைப் பேணுங்கள். அதிகமாகச் செயல்படுங்கள், மற்றும் குறைவாகப் பேசுங்கள். நடைமுறையில் அதிகம் செயல்படுங்கள், மற்றும் ஆராய்ச்சி, பகுப்பாய்வு ஆகியற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினவரால் அதிகமாய் அசைக்கப்பட உங்களை அனுமதியுங்கள், மற்றும் அவர் உங்களைப் பரிபூரணப்படுத்த அதிகம் வாய்ப்பளியுங்கள். அதிகமான மனிதக்கூறுகளை நீக்கிப்போடுங்கள்; நீங்கள் மனிதரீதியாகச் செயல்படும் வழிகளை இன்னமும் அதிகமாய்க் கொண்டிருக்கிறீர்கள், மற்றும் விஷயங்களைச் செய்யும் உங்களின் மேலோட்டமான செயற்பாங்கும் நடத்தையும் இன்னும் பிறருக்கு வெறுப்புக்குரியதாக உள்ளது: இவற்றில் அதிகமானவற்றை நீக்கிப்போடுங்கள். உங்கள் மன நிலை இன்னும் வெறுக்கத்தக்கதாக உள்ளது; அதைத் திருத்துவதற்கு அதிக நேரம் செலவிடுங்கள். நீங்கள் இன்னும் ஜனங்களுக்கு அதிக அந்தஸ்தைக் கொடுக்கிறீர்கள்; தேவனுக்கு அதிக அந்தஸ்தைக் கொடுங்கள், நியாயமற்றவர்களாக இருக்காதீர்கள். “ஆலயம்” எப்போதும் தேவனுக்கு சொந்தமானது, அதை மக்கள் கையகப்படுத்தக்கூடாது. சுருக்கமாகக் கூறுவதென்றால், நீதியில் அதிகமாகவும், உணர்ச்சிகளில் குறைவாகவும் கவனம் செலுத்துங்கள். மாம்சசிந்தையை நீக்கிப்போடுவது மிகச்சிறந்ததாகும். யதார்த்தத்தைப் பற்றி அதிகம் பேசுங்கள், அறிவைப் பற்றி குறைவாகப் பேசுங்கள்; எதுவுமே சொல்லாமல் இருப்பதுதான் மிகச் சிறந்தது. நடைமுறையின் பாதையைப் பற்றி அதிகம் பேசுங்கள், பயனற்ற பெருமைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். இப்போதே கைக்கொள்ளத் தொடங்குவது நல்லது.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
அடிக்குறிப்பு:
அ. பிரதமரின் ஆவி: பரந்த மனப்பான்மை மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட ஒருவரை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தரமான சீனச் வழக்குச்சொல்.
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 432
ஜனங்களிடம் தேவன் கேட்டுக்கொள்பவைகள் அவ்வளவு எட்டாதவைகள் அல்ல. அவர்கள் கொஞ்சம்முயற்சி செய்தாலும் கூட, அவர்கள் “தேர்ச்சி தரத்தைப்” பெறுவார்கள். உண்மையில், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை விட அதைப் புரிந்துகொள்வது, அறிந்துகொள்வது மற்றும் உணர்ந்துகொள்வது மிகவும் சிக்கலானது. உண்மையை அறிந்துகொள்வதும் உணர்ந்துகொள்வதும் சத்தியத்தைக் கடைபிடித்த பிறகு வருகிறது; இவையே பரிசுத்த ஆவியானவர் செயல்படும் படிகள் மற்றும் முறையாகும். நீ ஏன் கீழ்ப்படிய முடியாது? உன் வழியில் செயல்படுவதன்மூலம் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ ஆதாயப்படுத்திக்கொள்ள முடியுமா? தேவனுடைய வார்த்தையின்படி, பரிசுத்த ஆவியானவர் உன் இன்பத்திற்காகவோ அல்லது உன் குறைவுகளின் அடிப்படையிலோ செயல்படுகிறாரா? இதை நீங்கள் தெளிவாகக் காண முடியாவிட்டால் இது அர்த்தமற்றது. தேவனின் வார்த்தைகளைப் படிக்க பெரும்பாலான ஜனங்கள் அதிக முயற்சி செய்திருப்பதும், ஆனால் வெறும் அறிவைப் பெற்றுள்ளதும் அதன்பின்னர் உண்மையான பாதையைப்பற்றி எதுவும் கூறமுடியாத நிலையில் இருப்பதும் ஏன்? அறிவைக் கொண்டிருப்பது சத்தியத்தைக் கொண்டிருப்பதற்குச் சமம் என்று நீ நினைக்கிறாயா? அது ஒரு குழப்பமான பார்வை அல்லவா? ஒரு கடற்கரையில் உள்ள மணல் போல உன்னால் அதிக அறிவுடன் பேச முடிந்தாலும், அதில் எதுவுமே உண்மையான பாதையைக் கொண்டிருக்கவில்லை. இதைச் செய்வதன் மூலம் நீங்கள் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லையா? அதை ஆதரிக்க எந்த பொருளும் இல்லாமல், நீங்கள் ஒரு வெற்றுக் காட்சியை உருவாக்கவில்லையா? அத்தகைய நடத்தை அனைத்தும் ஜனங்களுக்கு தீங்குநிறைந்ததாக இருக்கிறது! கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ அவ்வளவாய் அது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது, அவ்வளவாய் ஜனங்களை யதார்த்தத்திற்குள் கொண்டுச்செல்ல இயலாததாயிருக்கிறது; கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ, அவ்வளவாய் அது நீ தேவனை நிந்திக்கவும் அவரை எதிர்க்கவும் வைக்கிறது. மிக உயர்வான கோட்பாடுகளை விலைமதிப்பற்ற பொக்கிஷங்களைப் போல நடத்த வேண்டாம்; அவை தீங்கு விளைவிக்கும் மற்றும் எந்த நோக்கத்திற்கும் பயன்படாது! ஒருவேளை சிலர் மிக உயர்வான கோட்பாடுகளைப் பற்றி பேச முடியும்—ஆனால் இவற்றில் யதார்த்தம் எதுவும் இல்லை, ஏனென்றால் இந்த ஜனங்கள் தனிப்பட்ட முறையில் அவற்றை அனுபவித்திருக்கவில்லை, எனவே நடைமுறைப் பயிற்சிக்கு பாதை இல்லை. அத்தகையவர்கள் மற்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல இயலாது, மேலும் அவர்களை வழிதவறிச் செல்லும்படிக்கே நடத்திச் செல்லுவார்கள். இது ஜனங்களுக்கு தீங்கு விளைவிப்பதல்லவா? குறைந்த பட்சம், நீ ஜனங்களின் தற்போதைய சிக்கல்களைத் தீர்க்கவும், நுழைவு அடைய அவர்களை அனுமதிக்கக் கூடியவகையிலும் இருக்க வேண்டும்; இது மட்டுமே அர்ப்பணிப்பாகக் கருதப்படுகிறது, அப்போதுதான் நீ தேவனுக்கு ஊழியம் செய்யும் தகுதிபெற முடியும். எப்போதும் பேரளவிலான, கற்பனையான சொற்களைப் பேசாதே, மற்றவர்களை உனக்குக் கீழ்ப்படியும்படி பிணைக்க பொருத்தமற்ற நடைமுறைகளின் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்வது எந்த விளைவையும் ஏற்படுத்தாது, மேலும் அது அவர்களின் குழப்பத்தை அதிகரிக்கக்கூடும். இப்படிச் செல்வது பல உபதேசக் கோட்பாடுகளை உருவாக்கும், இது ஜனங்கள் உன்னை வெறுக்கும்படிச் செய்யும். இதுதான் மனிதனின் குறைபாடாக உள்ளது, இது உண்மையிலேயே இழிவுபடுத்துவதாக உள்ளது. எனவே உண்மையில் நிலவுகின்ற பிரச்சனைகளைப் பற்றி அதிகம் பேசுங்கள். மற்றவர்களின் அனுபவங்களை உங்கள் சொந்தச் சொத்தாகக் கருத வேண்டாம், மற்றவர்கள் போற்றுவதற்காக அவற்றைப் பிடித்துக் கொள்ளவும் வேண்டாம்; நீங்கள் உங்கள் சொந்த, தனிப்பட்ட வழியைத் தேட வேண்டும். ஒவ்வொரு நபரும் இதையே நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
உன்னோடு ஐக்கியப்பட்டிருத்தல் என்பது, ஜனங்கள் கைக்கொள்ள ஒருபாதையை வழங்க முடியுமென்றால், அது நீ கொண்டுள்ள யதார்த்தத்திற்கு இன்னும் அதிக மதிப்பைச் சேர்க்கிறது. நீ என்ன சொன்னாலும், நீ ஜனங்களை நடைமுறைபடுத்துகிறவர்களாக்க வேண்டும், மேலும் அவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு பாதையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களுக்கு அறிவைக்கொண்டிருத்தல் மாத்திரம் போதும் என்றிருக்க அனுமதிக்காதீர்கள். பின்பற்ற ஒருபாதை இருப்பது அதைவிட முக்கியமானதாகும். ஜனங்கள் தேவனை நம்புவதற்கு, அவர்கள் தேவனுடைய ஊழியத்தில் தேவனால் நடத்தப்படும் பாதையில் நடக்க வேண்டும். அதாவது, பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் பாதையில் நடக்கும் செயல்முறையே தேவனில் நம்பிக்கை கொள்ளும் செயல்முறையாக உள்ளது. அதன்படி, நீங்கள் நடக்கக்கூடிய ஒரு பாதையைக் கொண்டிருக்க வேண்டும், என்ன நேர்ந்தாலும், தேவனால் பூரணப்படுத்தப்பட்ட பாதையில் நீங்கள் அடிவைத்தாக வேண்டும். மிகவும் பின்னாக வீழ்ந்துவிட வேண்டாம், பல்வேறு காரியங்களில் உங்களைப் பற்றி கவலை கொண்டிருக்க வேண்டாம். குறுக்கீடுகளை ஏற்படுத்தாமல் நீங்கள் தேவன் வழிநடத்துகிற பாதையில் நடந்தால் மட்டுமே, நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறவும் நுழைவின் பாதையை உடமையாகக் கொண்டிருக்கவும் முடியும். இது மாத்திரமே தேவனுடைய விருப்பங்களுக்கு ஏற்றவகையில் இருப்பதாகவும் மனிதகுலத்திற்குக் கடமையை நிறைவேற்றுவதாகவும் எண்ணக்கூடியதாக உள்ளது. இந்தப் பிரவாகத்தில் ஒரு தனிநபராக, ஒவ்வொரு நபரும் தங்கள் கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும், ஜனங்கள் எதைச் செய்யவேண்டுமோ அதையே அதிகமாகச் செய்ய வேண்டும், சுயவிருப்பத்தின்படி செயல்படக்கூடாது. ஊழியம் செய்கிறவர்கள் தங்கள் வார்த்தைகளைத் தெளிவுபடுத்த வேண்டும், பின்பற்றும் மக்கள் கஷ்டங்களைத் தாங்குவதற்கும் கீழ்ப்படிவதற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும், மேலும் அனைவரும் தங்கள் இடத்திலேயே இருக்க வேண்டும், ஆனால் வரிசையில் இருந்து வெளியேறக்கூடாது. ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும், எந்த செயல்பாட்டை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் பாதையில் செல்லுங்கள்; தடம்மாறிப் போகாதீர்கள் அல்லது தவறாகப் போகாதீர்கள். இன்றைய வேலையை நீங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும். நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியது என்னவென்றால், இன்றைய ஊழியத்திற்கான வழிமுறையில் பிரவேசித்தல் என்பதேயாகும். இதுவே நீங்கள் பிரவேசிக்க வேண்டிய முதல் விஷயமாக உள்ளது. மற்ற விஷயங்களில் இனிமேலும் வார்த்தைகளை வீணாக்காதீர்கள். தேவனுடைய வீட்டின் இன்றைய ஊழியத்தைச் செய்தல் என்பது உங்கள் பொறுப்பாக உள்ளது, இன்றைய ஊழியத்தின் செயல்முறைக்குள் பிரவேசித்தல் என்பது உங்கள் கடமையாக உள்ளது, மற்றும் இன்றைய சத்தியத்தை நடைமுறைப்படுத்துதல் என்பது உங்கள் பாரமாக உள்ளது.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 433
தேவன் நடைமுறையான தேவனாக இருக்கிறார். அவருடைய கிரியைகள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன, அவர் பேசுகிற வார்த்தைகள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன, அவர் வெளிப்படுத்துகிற சத்தியங்கள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன. அவருடைய வார்த்தைகளாக இல்லாதவைகளெல்லாம் வெற்றிடமும், இல்லாதவையும், ஆதாரம் அற்றவையும் ஆகும். இன்று, பரிசுத்த ஆவியானவர் மக்களைத் தேவனின் வார்த்தைகளுக்குள் வழிநடத்துகிறார். மக்கள் யதார்த்தத்திற்குள் நுழைய வேண்டுமானால், அவர்கள் யதார்த்தத்தைத் தேட வேண்டும், யதார்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும், அதன் பிறகு அவர்கள் யதார்த்தத்தை அனுபவித்து, யதார்த்தமாக வாழ வேண்டும். மக்கள் யதார்த்தத்தை எத்தனை அதிகமாக அறிந்திருக்கிறார்களோ, அவர்களால் பிறரின் வார்த்தைகள் உண்மையானவையா என்பதை அவ்வளவு அதிகமாக அறிந்துகொள்ள முடிகிறது. மக்கள் யதார்த்தத்தை எவ்வளவு அதிகமாக அறிவார்களோ, அவர்களிடம் அவ்வளவு குறைவான கருத்துக்கள் உள்ளன. மக்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தத்தை அனுபவிக்கிறார்களோ, அவர்கள் யதார்த்தத்தின் தேவனின் கிரியைகளை அவ்வளவு அதிகம் அறிவார்கள், மேலும் அவர்களுடைய பாழான, சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து விடுதலையாவது அவர்களுக்கு அவ்வளவு எளிது. மக்கள் எவ்வளவு யதார்த்தத்தை பெற்றிருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை அறிவார்கள், மேலும் அவ்வளவு அதிகமாக அவர்கள் மாம்சத்தை வெறுக்கிறார்கள் மற்றும் சத்தியத்தை நேசிக்கிறார்கள். மேலும் மக்கள் எவ்வளவு யதார்த்தமாக இருக்கிறார்களோ, தேவனின் தேவைகளின் விதிமுறைக்கு அவ்வளவு நெருக்கமாக வருகிறார்கள். தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் யதார்த்தத்தைப் பெற்றவர்கள், யதார்த்தத்தை அறிந்தவர்கள் ஆவர், தேவனின் உண்மையான கிரியைகளை யதார்த்தத்தை அனுபவிப்பதன் மூலம் அறிந்து கொண்டவர்கள் ஆவர். நீ ஒரு நடைமுறையான வழியில் எவ்வளவு அதிகமாக தேவனுக்கு ஒத்துழைத்து, உன் சரீரத்தை சீர்ப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ பெற்றுக்கொள்வாய், அவ்வளவு அதிகமாக நீ யதார்த்தத்தை பெற்றுக்கொள்வாய், மேலும் நீ தேவனால் அவ்வளவு அதிகமாய் வெளிச்சத்தைப் பெறுவாய், இதனால் தேவனின் உண்மையான கிரியைகளைப் பற்றிய உனது அறிவு பெருகும். உன்னால் பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வெளிச்சத்தில் வாழ முடிந்தால், உனக்கு நடைமுறைக்கான தற்போதைய பாதை தெளிவானதாகிவிடும், மேலும் உனக்கு கடந்தகால மதக் கருத்துக்கள் மற்றும் பழைய நடைமுறைகளிலிருந்து உன்னைப் பிரிக்க அதிக வாய்ப்பு இருக்கும். யதார்த்தம் தான் இன்றைய கவனமாயிருக்கிறது. மக்களிடம் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறதோ, சத்தியத்தைப் பற்றிய அவர்களின் அறிவு அவ்வளவு தெளிவாயிருக்கிறது, மேலும் அவர்களுடைய தேவனுடைய சித்தத்தைக் குறித்து அதிக புரிதல் இருக்கும். யதார்த்தத்தால் எல்லா எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் மேற்கொள்ள முடியும், அது எல்லா கோட்பாடுகளையும் திறமைகளையும் மேற்கொள்ள முடியும், மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை உண்மையாக நேசித்து, அவருடைய வார்த்தைகளுக்காக பசியும் தாகமுமாயிருக்கிறார்கள். எப்போதும் நீ யதார்த்தத்தில் கவனம் செலுத்தினால், வாழ்க்கை, மதக் கருத்துக்கள் மற்றும் இயல்பான குணங்கள் குறித்த உன்னுடைய தத்துவம் இயல்பாகவே தேவனின் கிரியையைப் பின்பற்றி நீக்கப்படும். யதார்த்தத்தைப் பின்தொடராத, யதார்த்தத்தைக் குறித்த எவ்வித அறிவும் இல்லாதவர்களாகிய அவர்கள், இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவோ அதைப் பின்தொடருவார்கள், மேலும் அவர்கள் எளிதாக ஏமாற்றமடைவார்கள். இதுபோன்றோரில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கான வழியில்லை, எனவே அவர்கள் ஒன்றுமில்லாதவர்களாக உணர்கிறார்கள், மேலும் அதனால் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாயிருக்கிறது.
நீ உண்மையாக முயற்சித்து, உண்மையாகத் தேடி, உண்மையாக ஜெபித்து, சத்தியத்தைத் தேடுவதின் நிமித்தம் துன்பப்பட தயாராக இருக்கும் போது மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை செய்ய முடியும். சத்தியத்தைத் தேடாதவர்களிடம் இருப்பது எழுத்துக்களும், கொள்கைகளும் வெற்றுக் கோட்பாடுகளுமே அன்றி வேறொன்றும் இல்லை, சத்தியம் இல்லாதவர்களுக்கும் இயல்பாகவே தேவனைக் குறித்த பல கருத்துக்கள் உள்ளன. இதுபோன்றவர்கள் தேவனால் தங்கள் மாம்ச சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மாற்றப்படுவதினால் மூன்றாம் வானத்திற்கு ஏறிச்செல்ல மட்டுமே ஏங்குகிறார்கள். இவர்கள் எவ்வளவு முட்டாள்கள்! இதுபோன்ற காரியங்களில் தேவனைக் குறித்தோ, யதார்த்தத்தைக் குறித்தோ ஞானமில்லை என்று சொல்லும் இதுபோன்றோரால் பெரும்பாலும் தேவனுடன் ஒத்துழைக்கவும் முடியாது, மேலும் செயலற்று காத்திருக்க மட்டுமே முடியும். மக்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டு, சத்தியத்தைத் தெளிவாகக் கண்டு, அதற்கும் மேல் அவர்கள் சத்தியத்திற்குள் நுழைந்து அதைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் கண்டிப்பாக உண்மையாக முயற்சித்து, உண்மையாகத் தேடி, சத்தியத்தின் மீது பசியும் தாகமுமாய் இருக்க வேண்டும். நீ பசியும் தாகமுமாய் இருந்து, நீ உண்மையில் தேவனோடு ஒத்துழைக்கும் போது, தேவ ஆவியானவர் நிச்சயமாக உன்னைத் தொட்டு உனக்குள் கிரியை செய்வார், இது உனக்கு அதிக வெளிச்சத்தைத் தரும், மேலும் உனக்கு யதார்த்தத்தைப் பற்றிய அதிக ஞானத்தைத் தந்து, மேலும் உன் ஜீவனுக்கு பேருதவியாக இருக்கும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 434
இன்று, எல்லாமே யதார்த்தத்திலிருந்து ஆரம்பமாகிறது. தேவனின் கிரியை மிக உண்மையானது, மேலும் மக்களால் தொடக்கூடியதாக இருக்கிறது. மக்கள் அதைத் தான் அனுபவிக்கவும் அடையவும் முடியும். மக்களில் உள்ள நிறைய தெளிவில்லாத மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள், தேவனின் தற்போதைய கிரியையை அவர்கள் தெரிந்துகொள்வதைத் தடுக்கிறது. இவ்வாறு, தங்கள் அனுபவங்களில் அவர்கள் எப்போதும் விலகி, காரியங்கள் கடினமானவை என்று எப்போதும் உணர்கிறார்கள், இவையெல்லாம் அவர்களின் கருத்துக்களாலேயே உண்டாகின்றன. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை, யதார்த்தம் அவர்களுக்குத் தெரியவில்லை, எனவே அவர்களின் நுழையும் பாதையில் அவர்கள் எப்போதும் எதிர்மறையாக இருக்கிறார்கள். அவர்கள் தூரத்திலிருந்தே தேவனின் தேவைகளைப் பார்க்கிறார்கள், அவற்றை அடைய முடியவில்லை. தேவனின் வார்த்தைகள் உண்மையில் நல்லவை என்று மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள், ஆனால் நுழையும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பரிசுத்த ஆவியானவர் இந்த கொள்கையின்படி கிரியை செய்கிறார். அவர்கள் மூலமாக தீவிரமாய் ஜெபிப்பது, தேடுவது மற்றும் தேவனிடம் நெருங்குவதால், மக்களின் ஒத்துழைப்பால் முடிவுகளை அடைய முடியும், மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அறிவொளியூட்டப்பட்டு ஒளிருவார்கள். பரிசுத்த ஆவியானவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார், அல்லது மனிதன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறான் என்பதல்ல. இரண்டும் இன்றியமையாதவை, மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கிறார்களோ, மேலும் அவர்கள் தேவனின் தேவைகளின் தரத்தை அடைவதற்கு எவ்வளவு அதிகமாகப் பின்தொடருகிறார்களோ, அந்த அளவுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் பெரியது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் இணைக்கப்பட்ட மக்களின் உண்மையான ஒத்துழைப்பு மட்டுமே உண்மை அனுபவங்களையும் தேவனின் வார்த்தைகளின் அறிவின் பெருக்கத்தையும் உருவாக்க முடியும். படிப்படியாக, இவ்விதமாக அனுபவிப்பதால், இறுதியில் ஒரு பரிபூரண நபர் உருவாகுகிறார். தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. மக்களின் கருத்துக்களில், தேவன் சர்வவல்லவர், மற்றும் எல்லாமே தேவனால் செய்யப்படுகிறது, இதனால் மக்கள் செயலற்ற முறையில் காத்திருந்து, தேவனின் வார்த்தைகளை வாசிக்காமலும் அல்லது ஜெபிக்காமலும், பரிசுத்த ஆவியானவரின் தொடுதலுக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள். இருப்பினும், இதை சரியான புரிதலுடன் இருப்பவர்கள் நம்புகிறார்கள்: எனது ஒத்துழைப்பு வரைக்கே தேவனின் செயல்கள் செல்ல முடியும், மேலும் என்னில் தேவனின் கிரியை ஏற்படுத்தும் விளைவு நான் எப்படி ஒத்துழைக்கிறேன் என்பதைப் பொறுத்ததாகும். தேவன் பேசும்போது, தேவனின் வார்த்தைகளை நாடித் தேடுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்ய வேண்டும்; நான் இதைத்தான் அடைய வேண்டும்.
இன்று, எல்லாமே யதார்த்தத்திலிருந்து ஆரம்பமாகிறது. தேவனின் கிரியை மிக உண்மையானது, மேலும் மக்களால் தொடக்கூடியதாக இருக்கிறது. மக்கள் அதைத் தான் அனுபவிக்கவும் அடையவும் முடியும். மக்களில் உள்ள நிறைய தெளிவில்லாத மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள், தேவனின் தற்போதைய கிரியையை அவர்கள் தெரிந்துகொள்வதைத் தடுக்கிறது. இவ்வாறு, தங்கள் அனுபவங்களில் அவர்கள் எப்போதும் விலகி, காரியங்கள் கடினமானவை என்று எப்போதும் உணர்கிறார்கள், இவையெல்லாம் அவர்களின் கருத்துக்களாலேயே உண்டாகின்றன. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை, யதார்த்தம் அவர்களுக்குத் தெரியவில்லை, எனவே அவர்களின் நுழையும் பாதையில் அவர்கள் எப்போதும் எதிர்மறையாக இருக்கிறார்கள். அவர்கள் தூரத்திலிருந்தே தேவனின் தேவைகளைப் பார்க்கிறார்கள், அவற்றை அடைய முடியவில்லை. தேவனின் வார்த்தைகள் உண்மையில் நல்லவை என்று மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள், ஆனால் நுழையும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பரிசுத்த ஆவியானவர் இந்த கொள்கையின்படி கிரியை செய்கிறார். அவர்கள் மூலமாக தீவிரமாய் ஜெபிப்பது, தேடுவது மற்றும் தேவனிடம் நெருங்குவதால், மக்களின் ஒத்துழைப்பால் முடிவுகளை அடைய முடியும், மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அறிவொளியூட்டப்பட்டு ஒளிருவார்கள். பரிசுத்த ஆவியானவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார், அல்லது மனிதன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறான் என்பதல்ல. இரண்டும் இன்றியமையாதவை, மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கிறார்களோ, மேலும் அவர்கள் தேவனின் தேவைகளின் தரத்தை அடைவதற்கு எவ்வளவு அதிகமாகப் பின்தொடருகிறார்களோ, அந்த அளவுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் பெரியது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் இணைக்கப்பட்ட மக்களின் உண்மையான ஒத்துழைப்பு மட்டுமே உண்மை அனுபவங்களையும் தேவனின் வார்த்தைகளின் அறிவின் பெருக்கத்தையும் உருவாக்க முடியும். படிப்படியாக, இவ்விதமாக அனுபவிப்பதால், இறுதியில் ஒரு பரிபூரண நபர் உருவாகுகிறார். தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. மக்களின் கருத்துக்களில், தேவன் சர்வவல்லவர், மற்றும் எல்லாமே தேவனால் செய்யப்படுகிறது, இதனால் மக்கள் செயலற்ற முறையில் காத்திருந்து, தேவனின் வார்த்தைகளை வாசிக்காமலும் அல்லது ஜெபிக்காமலும், பரிசுத்த ஆவியானவரின் தொடுதலுக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள். இருப்பினும், இதை சரியான புரிதலுடன் இருப்பவர்கள் நம்புகிறார்கள்: எனது ஒத்துழைப்பு வரைக்கே தேவனின் செயல்கள் செல்ல முடியும், மேலும் என்னில் தேவனின் கிரியை ஏற்படுத்தும் விளைவு நான் எப்படி ஒத்துழைக்கிறேன் என்பதைப் பொறுத்ததாகும். தேவன் பேசும்போது, தேவனின் வார்த்தைகளை நாடித் தேடுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்ய வேண்டும்; நான் இதைத்தான் அடைய வேண்டும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 435
எத்தனை மத நடைமுறைகளை நீ கடைப்பிடிக்கிறாய்? எத்தனை முறை நீ தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக கலகம் செய்து உன்னுடைய சொந்த வழியில் சென்றிருக்கிறாய்? தேவனுடைய பாரத்தை உண்மையிலேயே கருத்தில் கொண்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நீ தேவனுடைய வார்த்தைகளை எத்தனை முறை நடைமுறைப்படுத்தியுள்ளாய்? நீ தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துக் கொண்டு அதன்படியே நடைமுறையில் கைக்கொண்டு நடக்க வேண்டும். உன்னுடைய செயல்கள் மற்றும் கிரியைகள் எல்லாவற்றிலும் கொள்கைப்பிடிப்புடன் இருக்கவேண்டும். இருப்பினும் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு மன ஈடுபாடின்றி பிறர் காண வேண்டுமென கிரியை நடப்பித்தல் கூடாது; மாறாக சத்தியத்தைக் கடைப்பிடித்துத் தேவனுடைய வசனத்தினால் வாழுவது என்பதே இதன் அர்த்தமாகும். இது போன்ற நடைமுறை வாழ்க்கை மட்டுமே தேவனைத் திருப்தி செய்ய முடியும். தேவனைத் திருப்திப்படுத்தும் எந்த தொடர் செயலும் ஒரு சட்டம் அல்ல; ஆனால் சத்தியத்தின்படி ஜீவிப்பது என்பதாகும். ஒரு சில மக்கள் மற்றவர்களுடைய கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் பெரும் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு முன்பாக தாங்கள் தேவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறுவார்கள்; ஆனால் அவர்களுக்கு பின்னால் இவர்கள் சத்தியத்தைப் பின்பற்றாமல் முற்றிலும் வேறு மாதிரியான வாழ்க்கையை வாழுவார்கள். இப்படிப்பட்டவர்கள் மதவாத பரிசேயர்கள் அல்லவா? எவர் ஒருவர் தேவனுக்கு உண்மையாக இருந்து வெளித்தோற்றத்திற்கு இப்படிப்பட்டவைகளை செய்யாமல் இருக்கின்றாரோ அவரே தேவனிடம் அன்பு செலுத்தி சத்தியத்தைப் பெற்றுக் கொண்டவர் ஆவர். இப்படிப்பட்ட மனிதர்கள் சூழ்நிலைகள் வரும்போது தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக பேசுவதோ அல்லது செயல்படுவதோ இல்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் சம்பவங்கள் நடைபெறும் போது ஞானத்தை வெளிப்படுத்தி இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் கிரியைகளில் கொள்கையைக் கடைபிடிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் உண்மையான ஊழியத்தைச் செய்கிறவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் தங்கள் உதட்டளவில் தேவனுக்குச் செய்யும் கடமைகளைச் செய்வார்கள். இவர்கள் தங்கள் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு கவலையில் ஆழ்ந்து நாட்களைக் கடத்துவார்கள். பிறர் தங்கள் மீது பரிதாபபடும்படி நடித்துக் கொண்டு மாசு நிறைந்த காற்றில் அமர்ந்திருப்பார்கள். எவ்வளவு இழிவான செயல் இது! நீ இவர்களிடம் நீங்கள் எந்த வகையில் தேவனுக்கு கடமைப்பட்டுள்ளீர்கள் என்று கேட்பீர்களானால் அவர்கள் பேசாமல் இருந்துவிடுவார்கள். நீ தேவனுக்கு உண்மையாக இருப்பீரானால் மற்றவர்களிடம் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டுவதில்லை. அதற்கு மாறாக உனது உண்மையான நடைமுறை ஜீவியத்தினாலும் உத்தம இருதயத்துடன் தேவனிடம் ஜெபித்து அவரிடம் உள்ள உனது அன்பைச் செயல்படுத்திக் காட்டுங்கள். தேவனுடன் உதட்டளவில் மற்றும் பெயரளவில் தொழுதுக் கொண்டு இருப்பவர்கள் மாயக்காரர்கள் ஆவர். ஒரு சிலர் தேவனிடம் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியின் எந்த வழி நடத்துதலும் இல்லாமல் தங்கள் ஜெபத்தில் அழுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் மத சடங்காச்சாரங்களை உடையவர்களாகவும், கருத்துள்ளவர்களாகவும் இருப்பர். இது போன்றச் செயல்கள் தேவனைத் திருப்திப்படுத்துவதாக எப்போதும் நம்பிக் கொண்டு அவர்கள் இத்தகைய மேம்போக்கான தேவ பக்தியையும் துக்கம் நிறைந்த அழுகையையும் தேவன் விரும்புகிறார் என்றும் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட நகைப்புக்குரிய மனிதர்களிடம் என்ன நல்லது கிடைக்கும்? தங்கள் பணிவை வெளிப்படுத்துவதற்கு பிறருக்கு முன்பாக போலியான ஒரு இரக்கக் குணத்தைக் காட்டுகின்றனர். ஒரு சிலர் மற்றவர்கள் மத்தியில் இருக்கும் போது சிறிதளவு எந்த பெலமுமின்றி ஒரு ஆட்டுக் குட்டியைப் போல துணிகரமாக தாழ்மையானவர்களைப் போல நடிக்கிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தின் மக்களாக இருப்பதற்கு இது சரியான முறையாக இருக்குமா? தேவனுடைய இராஜ்யத்தில் மக்கள் ஜீவனுள்ள கிரியைகளை உடையவர்களாகவும் அடிமைப்படாதவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வெளிப்டையானவர்களாகவும் உண்மையானவர்களாகவும் நேசிக்கப்படத்தக்கவர்களாகவும், ஒரு சுதந்திரமான நிலையில் வாழுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் நாணயம் உள்ளவர்களாகவும், பெருந்தன்மை உள்ளவர்களாகவும் எங்கு சென்றாலும் தேவனுக்குச் சாட்சியாகவும் இருப்பார்கள், இப்படிப்பட்ட மக்கள் தேவனுக்கும், மனிதர்களுக்கும் அன்பானவர்களாக இருப்பார்கள். எவரெல்லாம் விசுவாசத்திற்கு புதியவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் அதிகமான வெளிப்புற ஆசாரங்களைக் கடைபிடிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் சில காலங்கள் நொறுங்குண்டவர்கள் ஆகும்படி கையாளப்பட வேண்டும். தேவனிடம் ஆழமான விசுவாசத்தைக் கொண்டவர்கள் வெளித்தோற்றத்தில் மற்றவர்களைவிட வித்தியாசமானவர்களாக இருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களுடைய செயல்களும் கிரியைகளும் பாராட்டும்படி இருக்கும். இப்படிப்பட்ட மக்கள் மட்டுமே தேவனுடைய வசனத்தின்படி நடக்கிறவர்கள் என்று கருதப்படுவார்கள். நீ பலதரப்பட்ட மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவர்களை இரட்சிப்புக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் போது முடிவில் அவர்கள் சட்டத்திட்டங்களையும், கோட்பாடுகளையும் கைக்கொண்டு வாழ்வார்களானால் நீ தேவனுக்கு மகிமையை கொண்டு வர முடியாது. இப்படிப்பட்டவர்கள் பிரபலமான மதவாதிகளாகவும் மாயக்காரராகவும் இருக்கிறார்கள்.
…………
மனிதருடைய மேலோட்டமான நற்கிரியைகள் எதைக் குறிக்கின்றன? அவைகள் மாம்சத்தின் கிரியைகளை வெளிப்படுத்தி, சிறந்த வெளிப்புற சடங்குகளைக் காண்பித்து உன்னுடைய தனிப்பட்ட சொந்த மனோநிலையைக் காட்டுகிறது. மனிதர்களின் வெளிப்புற சடங்குகள் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை. நீ தொடர்ச்சியாக தேவனுக்குக் கடன்பட்டிருப்பதைக் குறித்து பேசிக் கொண்டே இருப்பீரானால் நீ மற்றவர்களின் வாழ்வின் தேவைகளைக் கொடுக்க அல்லது அவர்களைத் தேவனை நேசிக்கும்படி ஊக்கப்படுத்த முடியாது. இப்படிப்பட்ட செயல்கள் தேவனைத் திருப்திப்படுத்தும் என்று நீ நம்புகிறாயா? உங்களுடைய செயல்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றகூடும் என்றும் அவைகள் ஆவிக்குரியவைகள் என்றும், எண்ணுகிறாயா? ஆனால் சத்தியத்தில் அவைகள் பொருத்தமற்றவைகளாக இருக்கிறது. உனக்கு எது விருப்பமானதோ அதை சரியாக செய்வதினால் தேவன் விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்று எண்ணுறாயா? உன்னுடைய விருப்பங்கள் தேவனை பிரதிநிதித்துவப்படுத்துமா? ஒரு மனிதனுடைய குணம் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துமா? உன்னை திருப்திப்படுத்தும் செயல்களைத் தேவன் திட்டமாக அருவருக்கின்றார்; மேலும் உன் பழக்கவழக்கங்களைத் தேவன் வெறுத்துப் புறக்கணிக்கிறார். நீ தேவனுக்குக் கடன்பட்டிருப்பது உண்மையானால் அதை மற்றவர்களிடம் கூறாமல். தேவனுக்கு முன்பாக சென்று அவரிடத்தில் ஜெபத்தில் சொல்லுங்கள். நீ தேவனுக்கு முன்பாக ஜெபிக்காமல் மற்றவர்கள் மத்தியில் இருக்கும் போது அவர்கள் கவனத்தைத் தொடர்ச்சியாக உன் பக்கமாகத் திருப்ப எண்ணுவது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுமென்று நம்புகிறாயா? உன்னுடைய செயல்கள் எப்போதும் வெளிப்பார்வைக்காக மட்டுமே இருக்குமானால் அவைகள் வீணாக மிதமிஞ்சிய செயல்களாக இருக்கின்றது. மேலோட்டமான நற்கிரியைகளைச் செய்துக் கொண்டு மெய்யான செயல்களைச் செய்யாமல் விட்டுவிடும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றனர்? இப்படிபட்டவர்கள் மாயக்காரராகிய பரிசேயரைப் போல் பிரபலமான மதத்தலைவர்களாக இருகின்றனர். உங்களுடைய வேஷமான செயல்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் இந்த மாய்மாலத்தின் காரணக்கூறுகள் மென்மேலும் வளரும். உங்களுடைய மாய்மாலம் அதிகரிக்கும் போது அவைகள் தேவனிடம் நெருங்குவதற்கு அதிக தடைகளை ஏற்படுத்தும். முடிவில் இப்படிப்பட்ட மக்கள் நிச்சயமாக அகற்றப்படுவார்கள்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “விசுவாசத்தில் ஒருவர் உண்மையின்மேல் கவனம் செலுத்தவேண்டும்—மதச்சடங்குகளில் ஈடுபடுவது விசுவாசமல்ல” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 443
இப்போது நீங்கள் எதைக்கொண்டு உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? கிரியையைப் பற்றிய தரிசனங்களில் அதன் ஒரு அம்சம் அடங்கியுள்ளது, மற்றும் அடுத்த அம்சம் உன் கடைப்பிடித்தல் ஆகும். நீ இந்த இரு அம்சங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். உன் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தேடுவதில் உனக்கு தரிசனங்கள் இல்லை என்றால், பின்னர் உனக்கு அஸ்திபாரம் இருக்காது. உன்னிடம் சிறிதும் தரிசனம் இல்லாமல் கடைப்பிடிப்பதற்கான வழிகள் மட்டுமே இருந்தால், மேலும் ஒட்டுமொத்த நிர்வாகத் திட்டத்தின் கிரியை பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லை என்றால், நீ ஒன்றுக்கும் உதவாதவனாக இருக்கிறாய். தரிசனங்களை உள்ளடக்கியுள்ள சத்தியங்களை நீ புரிந்துகொள்ள வேண்டும், மற்றும் கடைப்பிடித்தலைப் பற்றிய சத்தியங்களைப் பொறுத்த வரையில், கடைப்பிடித்தலின் தகுந்த பாதைகளை புரிந்துகொண்ட பின்னர் நீ அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்; நீ வார்த்தைகளுக்கு ஏற்றபடி கடைபிடிக்க வேண்டும், மற்றும் உன் நிலைகளுக்கு ஏற்றபடி பிரவேசிக்க வேண்டும். தரிசனங்களே அஸ்திபாரங்களாகும், மேலும் இந்த உண்மையில் நீ கவனம் செலுத்தாவிட்டால், உன்னால் கடைசி வரை பின்பற்றி வர முடியாது; இந்த முறையிலான அனுபவம் உன்னை ஒன்று வழிவிலகச் செய்யும் அல்லது நீ கீழே விழுவதற்கும் தோல்வி அடைவதற்கும் வழிவகுக்கும். நீ வெற்றி அடைவதற்கு ஒரு வழியும் இருக்காது! பெரும் தரிசனங்களை அஸ்திபாரமாகக் கொண்டிராத ஜனங்கள் தோல்வியே அடைவார்கள்; அவர்களால் வெற்றிபெற முடியாது. உன்னால் உறுதியாக நிற்க முடியாது! தேவனை விசுவாசிப்பதில் என்ன அடங்கி இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? தேவனைப் பின்பற்றுவது என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? தரிசனங்கள் இல்லாமல் நீ எந்தப் பாதையில் நடப்பாய்? இன்றைய கிரியையில் உனக்குத் தரிசனம் ஒன்றும் இல்லை என்றால் உன்னை நீ பரிபூரணப்படுத்திக் கொள்ளவே முடியாது. நீ யாரை விசுவாசிக்கிறாய்? நீ ஏன் அவரை விசுவாசிக்கிறாய்? நீ ஏன் அவரைப் பின்பற்றுகிறாய்? நீ உன் விசுவாசத்தை ஒரு வகையான விளையாட்டாய்ப் பார்க்கிறாயா? நீ உன் வாழ்க்கையை ஒரு விளையாட்டுப் பொருளாய்க் கையாளுகிறாயா? இன்றைய தேவன்தான் மாபெரும் தரிசனமாக இருக்கிறார். அவரைப் பற்றி உனக்கு எவ்வளவு தெரியும்? அவரை நீ எவ்வளவு கண்டிருக்கிறாய்? இன்றைய தேவனைக் கண்ட பின்னர், தேவனைப் பற்றிய உன் விசுவாசத்தின் அடித்தளம் திடமாக இருக்கிறதா? குழப்பமான வழியைப் பின்பற்றும் வரை உன்னால் இரட்சிப்பை அடைய முடியும் என்று நீ நம்புகிறாயா? கலங்கிய நீரில் மீன் பிடிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? அது அவ்வளவு எளிதானதா? இன்று தேவன் பேசும் வார்த்தைகளைப் பற்றி எத்தனைக் கருத்துகளை ஒதுக்கி வைத்திருக்கிறாய்? இன்றைய தேவனைப் பற்றிய ஒரு தரிசனம் உனக்கு இருக்கிறதா? இன்றைய தேவனைப் பற்றிய புரிதல் எங்கு இருக்கிறது? அவரைப் பின்பற்றுவதன் மூலம் அல்லது அவரைப் பார்ப்பதன் மூலம் அவரை[அ] அடையலாம் என்றும் உன்னை யாரும் விட்டுவிட முடியாது என்றும் நீ நம்புகிறாய். தேவனைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதானது என்று நீ கருதாதே. அவரை நீ அறிய வேண்டும், நீ அவரது கிரியையை அறிய வேண்டும், அவர் நிமித்தம் நீ கஷ்டங்களை சகித்துக்கொள்ளும், அவருக்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்யும் விருப்பமும், அவரால் நீ பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பமும் கொண்டிருப்பதுதான் முக்கியமானது ஆகும். உனக்கு இருக்க வேண்டிய தரிசனம் இதுதான். எப்போதும் கிருபையை அனுபவிக்க வேண்டும் என்று உன் சிந்தனைகள் லயித்திருந்தால் அது நடக்காது. ஜனங்களின் மகிழ்ச்சிக்காக அல்லது அவர்கள் மேல் கிருபையைப் பொழியவே தேவன் இங்கு இருக்கிறார் என்று எண்ணாதே. உன் எண்ணம் தவறாகப் போய்விடும்! ஒருவன் அவரைப் பின்பற்ற தனது ஜீவனைப் பணயம் வைக்காவிட்டால், ஒருவன் அவரைப் பின்பற்றுவதற்காக உலக உடைமைகள் ஒவ்வொன்றையும் விட்டுவிடாவிட்டால், பின் அவர்களால் கடைசிவரை அவரைப் பின்தொடர்ந்து வரமுடியாது. நீ தரிசனங்களை உன் அஸ்திபாரமாகக் கொள்ள வேண்டும். ஒரு நாள் துரதிர்ஷ்டம் உன் மேல் விழும்போது, உன்னால் என்ன செய்ய முடியும்? இன்னும் உன்னால் அவரைப் பின் தொடர முடியுமா? உன்னால் அவரைக் கடைசிவரை பின்பற்ற முடியும் என்று சாதாரணமாகக் கூறாதே. உன் கண்களை அகலத் திறந்து இப்போது என்ன காலம் என்று பார்ப்பது நல்லது. ஆலயத்தின் தூண்களைப் போல் இப்போது நீங்கள் இருந்தாலும், ஒரு காலம் வரும் அப்போது இத்தகைய எல்லா தூண்களையும் புழுக்கள் கடித்துத் துண்டாக்கி ஆலயத்தை நிலைகுலையச் செய்யும், ஏனெனில் தற்போது பல்வேறு தரிசனங்கள் இல்லாமலேயே நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்த சிறிய உலகங்களிலேயே கவனம் செலுத்துகிறீர்கள், மேலும் உங்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் பொருத்தமான தேடும் வழி என்னவென்று தெரியவில்லை, இன்றைய கிரியையின் தரிசனத்தைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, மட்டுமல்லாது நீங்கள் இந்த விஷயங்களை உங்கள் இருதயங்களிலும் வைப்பதில்லை. ஒருநாள் உங்கள் தேவன் உங்களை மிகவும் பழக்கமில்லாத ஒரு இடத்தில் வைப்பார் என்று நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லையா? ஒரு நாள் உங்களிடம் இருந்து நான் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டால் உங்களுக்கு என்னவாகும் என்று உங்களால் கற்பனை செய்யமுடியுமா? உங்கள் ஆற்றல் இப்போது இருப்பது போலவே இருக்குமா? உங்கள் விசுவாசம் மறுபடியும் தோன்றுமா? தேவனைப் பின்பற்றுவதில் “தேவன்” தான் இந்த மாபெரும் தரிசனம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்: இதுவே மிக முக்கியமான விஷயம். மேலும், பரிசுத்தமாக்கப்படுவதற்காக உலக மனுஷர்களிடம் இருந்து பிரிந்துவிடுவதால் நீங்கள் தேவனின் குடும்பத்தில் இருப்பீர்கள் என்று கருத வேண்டாம். இந்நாட்களில், சிருஷ்டிகளின் மத்தியில் தேவன் தாமே கிரியை செய்கிறார்; தமது சொந்த கிரியையைச் செய்ய அவர் தாமே ஜனங்களின் மத்தியில் வந்திருக்கிறார்—பிரச்சாரங்கள் செய்வதற்காக அல்ல. உங்கள் மத்தியில், மாம்சமாக வந்திருக்கும் பரலோகத்தில் இருக்கும் தேவனின் கிரியையே இன்றையக் கிரியை என்று ஒரு சிலரால் கூட அறிய முடியவில்லை. இது உங்களைத் திறமையில் தன்னிகரற்றவர்களாக உருவாக்குவதைப் பற்றியதல்ல: இது மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறிவதற்கும், மனுஷர்கள் சென்றடையும் இடத்தை அறிவதற்கும் மேலும் தேவனையும் அவரது முழுமையையும் அறிந்துகொள்வதற்கும் உங்களுக்கு உதவுவதற்கும் ஆகும். நீ சிருஷ்டிகரின் கையில் இருக்கும் ஒரு சிருஷ்டிப்புப் பொருளே என்பதை நீ அறிய வேண்டும். நீ எதைப் புரிந்துகொள்ள வேண்டும், நீ எதைச் செய்ய வேண்டும், மேலும் நீ எவ்வாறு தேவனைப் பின்பற்ற வேண்டும்—ஆகியவையே நீ புரிந்துகொள்ள வேண்டிய சத்தியங்கள் அல்லவா? நீ பார்க்க வேண்டிய தரிசனங்கள் அவை அல்லவா?
ஒருகாலத்தில் ஜனங்களுக்குத் தரிசனங்கள் இருந்தன, அவர்களுக்கு ஒரு அஸ்திபாரம் இருந்தது. இந்த அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ நடக்கும்போது உன்னால் பிரவேசிப்பது எளிதாக இருக்கும். இப்படி இருக்க, உனக்கு பிரவேசிப்பதற்கான ஓர் அஸ்திபாரம் இருக்கும்போது உனக்கு சந்தேகங்கள் இருக்காது, மேலும் பிரவேசிப்பது உனக்கு எளிதானதாக இருக்கும். தரிசனங்களைப் புரிந்துகொள்வதின் இந்த அம்சமும் தேவனின் கிரியையை அறிந்துகொள்வதும் முக்கியமானது; இது உங்கள் சேமிப்பகத்தில் இருக்க வேண்டும். சத்தியத்தின் இந்த அம்சத்தை நீ கொண்டிராமல், கடைப்பிடித்தலின் பாதைகளைப் பற்றி பேசுவது எப்படி என்றுமட்டும் அறிந்திருந்தால், பின்னர் நீ பெரும் குறைபாடு உடையவனாக இருப்பாய். உங்களில் பலர் சத்தியத்தின் இந்த அம்சத்தை வலியுறுத்துவதில்லை என்பதை நான் கண்டறிந்தேன், மற்றும் அதை நீங்கள் கேட்கும் போது, வார்த்தைகளையும் உபதேசங்களையும் மட்டுமே கவனிப்பவர்களாகத் தோன்றுகிறீர்கள். ஒருநாள் நீ இழப்பைச் சந்திப்பாய். இந்நாட்களில் நீ கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை மற்றும் ஏற்பதில்லை என்று சில பேச்சுக்கள் உள்ளன; இந்த மாதிரி வேளைகளில் நீ பொறுமையாகத் தேட வேண்டும் மேலும் நீ புரிந்து கொள்ளும் ஒரு நாள் வரும். படிப்படியாக மேலும் மேலும் தரிசனங்களால் உன்னையே ஆயத்தப்படுத்திக்கொள். ஒரு சில ஆவிக்குரிய உபதேசங்களை நீ புரிந்துகொண்டாலும், தரிசனங்களில் கவனமே செலுத்தாமல் இருப்பதை விட இது கொஞ்சம் நன்மையானதாக இருக்கும், மேலும் இது ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் இருப்பதை விட நன்மையாக இருக்கும். இவை எல்லம் உன் பிரவேசத்திற்கு உதவிகரமானவை, மற்றும் உன் சந்தேகங்களை எல்லாம் போக்கும். நீ கருத்துக்களால் நிரப்பப்படுவதை விட இது சிறப்பானது. இந்தத் தரிசனங்கள் உன் அஸ்திபாரமாக அமைந்தால் நீ இன்னும் சிறப்பாக இருப்பாய். உனக்கு எந்தவிதமான சந்தேகமும் இருக்காது, மேலும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் நீ பிரவேசிக்கலாம். ஏன் எப்போதும் ஒரு குழப்பமான மற்றும் சந்தேகமான முறையில் தேவனை பின்பற்றி சிரமத்துக்குள்ளாகிறாய்? இது உன் தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்வதைப் போல் இல்லையா? ராஜ்யத்துக்குள் பெருமையுடனும் தன்னம்பிக்கையுடனும் நுழைவது எவ்வளவு சிறப்பாக இருக்கும்? ஏன் இவ்வளவு சந்தேகங்களுடன் இருக்க வேண்டும்? நீ முற்றிலுமாக நரகத்துக்கு ஊடாக உன்னை ஆட்படுத்திக் கொள்ளவில்லையா? யேகோவாவின் கிரியை, இயேசுவின் கிரியை, மேலும் இந்தக் கட்டத்தின் கிரியை ஆகியவற்றைப் பற்றிய ஒரு புரிதலைப் பெற்றுவிட்டாய் என்றால் உனக்கு ஓர் அஸ்திபாரம் அமைந்துவிடும். இக்கணத்தில், நீ அது மிக எளிமையானது என்று கற்பனை செய்யக் கூடும். சில ஜனங்கள் கூறுகிறார்கள், “நேரம் வந்து பரிசுத்த ஆவியானவர் மாபெரும் கிரியையை தொடங்கும் போது, நான் இந்த விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேச முடியும். என்னால் இப்போது உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் என்னை அந்த அளவுக்கு தெளிவுபடுத்தவில்லை.” அது அவ்வளவு எளிதல்ல. இப்போது நீ சத்தியத்தை[ஆ] ஏற்றுக்கொள்ள விரும்புகிறாய், பின் அதை நீ நேரம் வரும்போது திறமையாகப் பயன்படுத்துவாய் என்பது போல் அல்ல அது. அது அவ்வாறு இருக்கத் தேவையில்லை. தற்போது நீ நல்ல முறையில் ஆயத்தமாகியிருப்பதாகவும், மேலும் அந்த மத ரீதியான ஜனங்கள் மற்றும் பெரும் கொள்கை வாதிகளுக்கு பதில் சொல்வது மட்டுமல்லாமல் மறுப்பதற்கும் கூட உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் நம்புகிறாய். உன்னால் உண்மையில் அவ்வாறு செய்ய முடியுமா? உனது மேலோட்டமான அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் புரிதலைப் பற்றி நீ பேசுவாய்? சத்தியத்தைக் கொண்டு ஆயத்தமாவதும், சத்தியத்தின் யுத்தத்தை நடத்துவதும், மேலும் தேவனின் நாமத்துக்கு சாட்சி அளித்தலும் ஆகியவற்றை நீ சிந்திக்கவில்லை –தேவன் கிரியை செய்யும்போது அவை எல்லாம் நிறைவேற்றப்படும். அதற்குள், நீ சில கேள்விகளால் தடுமாற்றம் அடைவாய், மற்றும் பின்னர் நீ வாயடைத்துப்போவாய். இந்தக் கட்டத்தின் கிரியையைப் பற்றி உனக்குத் தெளிவான புரிதல் இருக்கிறதா இல்லையா, மேலும் அதைப் பற்றி உண்மையில் உனக்கு எவ்வளவு தெரியும் என்பதுதான் முக்கியமானது. விரோதியின் சக்திகளை உன்னால் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அல்லது மத சக்திகளைத் தோற்கடிக்க முடியவில்லை என்றால், பின்னர் நீ தகுதியற்றவனாக இருக்க மாட்டாயா? நீ இன்றைய கிரியையை அனுபவத்திருக்கிறாய், உன் சொந்தக் கண்ணால் பார்த்திருக்கிறாய், உன் சொந்தக் காதால் கேட்டிருக்கிறாய், ஆனால், இறுதியில், உன்னால் சாட்சியாக இருக்க முடியவில்லை என்றால், அதன்பின்னும் தொடர்ந்து வாழும் முரட்டுத் தைரியம் உனக்கு இருக்குமா? யாரை உன்னால் எதிர்கொள்ள முடியும்? அது அவ்வளவு எளிதானதாக இருக்கும் என்று இப்போதே கற்பனை செய்யாதே; நீ கற்பனை செய்வது போல் எதிர்காலத்தின் கிரியை அவ்வளவு எளிதானதாக இருக்காது; சத்தியத்தின் யுத்தத்தில் யுத்தம் செய்வது அந்த அளவுக்கு எளிதானது அல்ல, அவ்வளவு நேரடியானதும் அல்ல. இப்போது நீ அதற்கு ஆயத்தப்பட வேண்டும்; சத்தியத்தால் நீ ஆயத்தப்படவில்லை என்றால், பின்னர் நேரம் வரும்போது மற்றும் பரிசுத்த ஆவியானவர் இயற்கைக்கு மாறான முறையில் கிரியை செய்யாவிட்டால், நீ இழந்துபோய் நிற்பாய்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீங்கள் கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும்—குழப்பத்தோடு பின்பற்றாதீர்கள்!” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
அடிக்குறிப்புகள்:
அ. மூல உரையில் “அவரை” என்ற வார்த்தை இல்லை.
ஆ. மூல உரையில் “சத்தியத்தை” என்ற சொற்றொடர் இல்லை.