தேவனுடைய கிரியையை அறிதல் I

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 141

இந்தக் காலங்களில் தேவன் செய்யும் கிரியையை அறிந்து கொள்வது, அநேகமாக, கடைசி நாட்களில் மாம்சமாகிய தேவனுடைய பிரதான ஊழியம் என்ன, மற்றும் அவர் பூமியில் என்ன செய்ய வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதுமாகும். தேவன் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு ஒரு முன்மாதிரியை அமைப்பதற்காக (கடைசி நாட்களின் போது) பூமிக்கு வந்திருக்கிறார் என்று நான் முன்பு என் வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளேன். தேவன் இந்த முன்மாதிரியை எவ்வாறு அமைக்கிறார்? அவர் தாம் பேசுகிற வார்த்தைகள் மூலமும், செய்கிற கிரியையின் மூலமும் மற்றும் தேசம் முழுவதும் பேசுவதன் மூலமுமாக அவ்வாறு செய்கிறார். கடைசி நாட்களில் இது தேவனின் கிரியையாயிருக்கிறது; பூமியை வார்த்தைகளின் உலகமாக மாற்றுவதற்காக மட்டுமே அவர் பேசுகிறார், இதனால் ஒவ்வொரு நபரும் அவருடைய வார்த்தைகளால் வழங்கப்படுகிறான் மற்றும் ஒளியூட்டப்படுகிறான், அதனால் மனிதனின் ஆவி விழித்தெழுகிறது மற்றும் அவன் தரிசனங்களைக் குறித்தத் தெளிவையும் பெறுகிறான். கடைசி நாட்களின் போது, மாம்சமாகிய தேவன் வார்த்தைகளைப் பேசுவதற்காக பூமிக்கு பிரதானமாக வந்திருக்கிறார். இயேசு வந்தபோது, அவர் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார், மேலும் தாம் சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் மீட்பின் கிரியையை அவர் நிறைவேற்றினார். அவர் நியாயப்பிரமாண யுகத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து பழையவை அனைத்தையும் ஒழித்தார். இயேசுவின் வருகை நியாயப்பிரமாண யுகத்தை முடித்து, கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தியது; கடைசி நாட்களில் மாம்சமாகிய தேவனின் வருகை கிருபையின் யுகத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறது. அவர் பிரதானமாக அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், ஒளியூட்டி மனிதனை பிரகாசிப்பிக்கச் செய்வதற்கும், மற்றும் மனிதனின் இருதயத்திற்குள் உள்ள கற்பனை தேவர்களின் இடத்தை அகற்றுவதற்குமே வந்திருக்கிறார். இயேசு வந்தபோது அவர் செய்த கிரியையின் கட்டம் இதுவல்ல. இயேசு வந்தபோது, அவர் பல அற்புதங்களைச் செய்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், மற்றும் சிலுவையில் அறையப்படுதல் என்னும் மீட்பின் கிரியையைச் செய்தார். இதன் விளைவாக, ஜனங்களின் கருத்துக்களில் தேவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இயேசு வந்தபோது, மனிதனின் இதயத்திலிருந்து கற்பனை தேவர்களுடைய உருவத்தை அகற்றும் கிரியையை அவர் செய்யவில்லை; அவர் வந்தபோது, பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார் மற்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஒருபுறம், கடைசி நாட்களின் போது தேவனுடைய மனித அவதாரமானது மனிதனின் கருத்துக்களில் கற்பனை தேவர்கள் வைத்திருந்த இடத்தை நீக்குகிறது, இதன் நிமித்தம் மனிதனின் இதயத்தில் கற்பனை தேவர்களின் உருவம் இனி இருக்காது. அவரது உண்மையான வார்த்தைகள் மற்றும் உண்மையான கிரியை, எல்லா தேசங்களிலுமுள்ள அவரது செயல்பாடு மற்றும் மனிதர்களிடையே அவர் செய்யும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பான கிரியை ஆகியவற்றின் மூலம், அவர் தேவனுடைய யதார்த்தத்தை மனிதனுக்குத் தெரியப்படுத்துகிறார், மேலும் மனிதனின் இதயத்தில் உள்ள கற்பனை தேவர்களின் இடத்தை நீக்குகிறார். மறுபுறம், மனிதனை முழுமையாக்குவதற்கும், எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கும் தேவன் தம்முடைய மாம்சத்தால் பேசப்படும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். கடைசி நாட்களின் போது தேவன் நிறைவேற்றும் கிரியை இதுதான்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன:

1. தேவனுடைய கிரியையானது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, அதைப் பற்றிய கருத்துக்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளக்கூடாது.

2. மாம்சமாகிய தேவன் இந்த நேரத்தில் செய்ய வந்திருக்கிற முக்கியமான கிரியையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் பிணியாளிகளைக் குணப்படுத்தவோ, அல்லது பிசாசுகளைத் துரத்தவோ, அல்லது அற்புதங்களைச் செய்யவோ வரவில்லை, மேலும் மனந்திரும்புதலின் சுவிசேஷத்தை பரப்பவோ, அல்லது மனிதனுக்கு மீட்பை வழங்கவோ அவர் வரவில்லை. ஏனெனில், இயேசு ஏற்கனவே இந்தக் கிரியையைச் செய்துவிட்டார், மேலும் தேவன் அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை. இன்று, கிருபையின் யுகத்தினை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும், மற்றும் கிருபையின் யுகத்திலுள்ள அனைத்து நடைமுறைகளையும் துரத்தவுமே தேவன் வந்திருக்கிறார். நடைமுறை தேவன் அவர் உண்மையானவர் என்பதைக் காண்பிக்கவே முக்கியமாக வந்துள்ளார். இயேசு வந்தபோது, அவர் சில வார்த்தைகளைப் பேசினார்; அவர் முதன்மையாக அற்புதங்களைக் காண்பித்தார், அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், இல்லையெனில் ஜனங்களை நம்ப வைக்கவும், அவர் உண்மையிலேயே தேவன்தான் என்பதையும், அவர் ஒரு உணர்ச்சிவசப்படாத அமைதியான தேவன் என்பதையும் காணும்படிக்கு தீர்க்கதரிசனங்களை உரைத்தார். இறுதியில், அவர் சிலுவையில் அறையப்படுதல் என்னும் கிரியையையும் செய்து முடித்தார். இன்றைய தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பதில்லை, பிணியாளிகளைக் குணமாக்கி பிசாசுகளைத் துரத்துவதில்லை. இயேசு வந்தபோது, அவர் செய்த கிரியை தேவனின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியது, ஆனால் இந்த நேரத்தில் அவர் செய்யவேண்டியதாயிருக்கிற கிரியையின் கட்டத்தைச் செய்யும்படிக்கு வந்திருக்கிறார், ஏனெனில் தேவன் அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை; அவர் எப்போதும் புதியவராக இருக்கிற தேவன், ஒருபோதும் பழையவர் அல்ல, ஆகவே இன்று நீ பார்ப்பது யாவும் நடைமுறை தேவனுடைய வார்த்தைகளும் கிரியையுமே ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 142

கடைசி நாட்களில் மாம்சமான தேவன், அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விளக்குவதற்கும், மனிதன் பிரவேசிக்க வேண்டியதைச் சுட்டிக்காட்டுவதற்கும், தேவனுடைய செயல்களை மனிதனுக்குக் காண்பிப்பதற்கும், மனிதனுக்குத் தேவனுடைய ஞானம், சர்வவல்லமை மற்றும் அற்புதத்தன்மை ஆகியவற்றைக் காண்பிப்பதற்காகவும் முக்கியமாக வந்திருக்கிறார். தேவன் பேசுகிற பல வழிகளில், மனிதன் தேவனுடைய மேன்மையையும், தேவனுடைய மகத்துவத்தையும், மேலும், தேவனுடைய தாழ்மையையும் மறைவான தன்மையையும் காண்கிறான். தேவன் உயர்ந்தவராக இருக்கிறார் என்பதை மனிதன் காண்கிறான், ஆனால் அவர் தாழ்மையுள்ளவராகவும் மறைக்கப்பட்டவராகவும் இருக்கிறார், மற்றும் எல்லாரிலும் சிறியவராக மாறக்கூடியவராகவும் இருக்கிறார். அவருடைய சில வார்த்தைகள் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து நேரடியாகவும், சில வார்த்தைகள் நேரடியாக மனிதனின் கண்ணோட்டத்திலிருந்தும், சில வார்த்தைகள் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்தும் பேசப்படுகின்றன. இதில், தேவனுடைய கிரியையின் முறையானது பெரிதும் மாறுபடுகிறது என்பதைக் காணலாம், மேலும் இதை வார்த்தைகள் மூலமாகத்தான் மனிதனைப் பார்க்கும் படிக்கு அவர் அனுமதிக்கிறார். கடைசி நாட்களின் தேவனுடைய கிரியை இயல்பானது மற்றும் உண்மையானது, ஆகவே கடைசி நாட்களில் உள்ள ஜனக்கூட்டம் அனைத்து மாபெரும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். தேவனுடைய இயல்பு நிலை மற்றும் யதார்த்தத்தின் காரணமாக, எல்லா ஜனங்களும் இத்தகைய சோதனைகளுக்கு மத்தியில் பிரவேசித்திருக்கிறார்கள்; மனிதன் தேவனுடைய சோதனைகளில் இறங்கியிருப்பதற்கான காரணம் தேவனுடைய இயல்பு மற்றும் யதார்த்தமே ஆகும். இயேசுவின் யுகத்தில், எந்தவிதமான கருத்துக்களும் அல்லது சோதனைகளும் இல்லை. ஏனென்றால் இயேசு செய்த பெரும்பாலான கிரியைகள் மனிதனின் கருத்துக்களோடு ஒத்துப்போனதால், ஜனங்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள், அவர்களுக்கு அவரைப் பற்றி எந்தக் கருத்துக்களும் இல்லை. மனிதன் எதிர்கொள்கிற இன்றைய சோதனைகள் மிகப் பெரியது, இந்த ஜனங்கள் பெரும் உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படும் போது, குறிப்பிடப்படும் உபத்திரவம் இதுதான். இன்று, தேவன் இந்த ஜனங்களில் உண்டான விசுவாசம், அன்பு, துன்பத்தை ஏற்றுக்கொள்வது, மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைப் பேசுகிறார். கடைசி நாட்களில் மாம்சத்தில் வந்த தேவனால் பேசப்பட்ட வார்த்தைகள் மனிதனின் சுபாவம் மற்றும் சாராம்சம், மனிதனின் நடத்தை மற்றும் இன்று மனிதன் பிரவேசிக்க வேண்டியவை ஆகியவற்றுக்கு ஏற்ப பேசப்படுகின்றன. அவரது வார்த்தைகள் உண்மையானவை மற்றும் இயல்பானவை: அவர் நாளைய தினத்தைப் பற்றி பேசுவதுமில்லை, நேற்றைய தினத்தைத் திரும்பிப் பார்ப்பதுமில்லை; இன்று பிரவேசிக்க வேண்டிய, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய, மற்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவற்றை மட்டுமே அவர் பேசுகிறார். இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். தேவனுடைய கிரியை மனிதனின் கருத்துக்களுடன் முரண்பட்டவையாகும்; எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாடு ஒரு மேசியாவின் வருகையை முன்னறிவித்தது, இந்த தீர்க்கதரிசனத்தின் விளைவாக இயேசுவின் வருகை இருந்தது. இது ஏற்கனவே நடந்தேறியதால், வேறொரு மேசியா மீண்டும் வருவது என்பது தவறாக இருந்திருக்கும். இயேசு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டார், இந்த முறை இயேசு மீண்டும் வருகிறாரானால் அது தவறாக இருந்திருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உள்ளது, மேலும் ஒவ்வொரு பெயரிலும் அந்த யுகத்தின் குணாதிசயம் உள்ளது. மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் கிரியையின் ஒரு கட்டத்தை முடித்ததும், அது தீய ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இன்று தேவனுடைய கிரியையானது இயேசுவின் கிரியையிலிருந்து ஏன் வேறுபட்டதாய் இருக்கிறது? இன்று தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணமாக்காதது ஏன்? இயேசுவின் கிரியை நியாயப்பிரமாண யுகத்தின் போது செய்யப்பட்ட கிரியையை போலவே இருந்திருந்தால், அவர் கிருபையின் யுகத்தின் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா? அவர் சிலுவையில் அறையப்பட்ட கிரியையைச் செய்து முடித்திருக்க முடியுமா? நியாயப்பிரமாண யுகத்தைப் போலவே, இயேசு தேவாலயத்திற்குள் பிரவேசித்து ஓய்வுநாளைக் கடைப்பிடித்திருந்தால், அவர் யாராலும் துன்புறுத்தப்படாமல் அனைவராலும் அரவணைக்கப்பட்டிருப்பார். அப்படியானால், அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்க முடியுமா? அவர் மீட்பின் கிரியையை முடித்திருக்க முடியுமா? கடைசி நாட்களில் மாம்சமாக வந்த தேவன் இயேசுவைப் போலவே அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பாரானால் என்ன பயன்? கடைசி நாட்களில் தேவன் தனது கிரியையின் மற்றொரு பகுதியைச் செய்தால் மட்டுமே, அவருடைய நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராலேயே தேவனைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற முடியும், அப்போதுதான் தேவனுடைய நிர்வாகத் திட்டம் செய்து முடிக்கப்பட முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 143

கடைசி நாட்களின் போது, தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்காக முக்கியமாக வந்திருக்கிறார். அவர் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்தும், மனிதனின் கண்ணோட்டத்திலிருந்தும், மற்றும் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்தும் பேசுகிறார்; அவர் வெவ்வேறு வழிகளில் பேசுகிறார், ஒரு காலத்திற்கு ஒரு வழியைப் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனின் கருத்துக்களை மாற்றவும், கற்பனை தேவர்களின் உருவத்தை மனிதனின் இதயத்திலிருந்து அகற்றவும் அவர் பேசும் முறையைப் பயன்படுத்துகிறார். இதுதான் தேவனால் செய்யப்படுகிற முக்கியமான கிரியையாகும். பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், அற்புதங்களைச் செய்யவும், மனிதனுக்கு உலகப்பிரகரமான பொருட்களின் ஆசீர்வாதங்களை வழங்கவும் தேவன் வந்திருக்கிறார் என்று மனிதன் நம்புவதால், இதுபோன்றவற்றை அகற்றுவதற்காக தேவன் இந்தக் கட்ட கிரியையை—அதாவது மனிதனின் கருத்துக்களிலிருந்து இந்தக் காரியங்களை நீக்குவதற்காகச் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்—இதன்மூலம் தேவனுடைய யதார்த்தத்தையும் மற்றும் இயல்பான தன்மையையும் மனிதன் அறிந்துகொள்ளலாம், இயேசுவின் உருவம் அவனுடைய இருதயத்திலிருந்து அகற்றப்பட்டு, தேவனுடைய புதிய உருவத்தால் மாற்றப்படலாம். மனிதனுக்குள் தேவனுடைய உருவம் பழையதாக மாறியதும், அது ஒரு விக்கிரகமாக மாறுகிறது. இயேசு வந்து அந்தக் கட்ட கிரியையைச் செய்தபோது, அவர் தேவனை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், சில வார்த்தைகளைப் பேசினார், இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் தேவனுடைய ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். எல்லாமுமாக இருக்கிற தேவனுடைய எல்லாவற்றையும் அவரால் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, மாறாக தேவனுடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்வதில் அவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஏனென்றால், தேவன் மிகவும் பெரியவர், அதிசயமானவர், அவர் புரிந்துகொள்ளப்பட முடியாதவர், ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் தேவன் தம்முடைய கிரியையின் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறார். இந்த யுகத்தில் தேவன் செய்த கிரியை முக்கியமாக மனிதனின் வாழ்க்கைக்கான வார்த்தைகளை வழங்குவதாகும், மனிதனின் சுபாவம், சாராம்சம் மற்றும் அவனுடைய சீர்கெட்ட மனநிலை ஆகியவற்றை வெளிப்படுத்துதல், மேலும் மத கருத்துக்கள், பழமையான சிந்தனை, காலாவதியான சிந்தனை மற்றும் மனிதனின் அறிவு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை நீக்குதல் ஆகும்; தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுவதன் மூலம் மனிதனின் அறிவும் கலாச்சாரமும் சுத்திகரிக்கப்பட வேண்டும். கடைசி நாட்களில், மனிதனைப் பரிபூரணமாக்குவதற்குத் தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் பயன்படுத்துவதில்லை மாறாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மனிதனை வெளிப்படுத்தவும், மனிதனை நியாயந்தீர்க்கவும், மனிதனை சிட்சிக்கவும், மனிதனை பரிபூரணமாக்கவும் அவர் தமது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், இதனால் தேவனுடைய வார்த்தைகளில், மனிதன் தேவனுடைய ஞானத்தையும் அழகையும் காண்கிறான், மேலும் தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்கிறான், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் மனிதன் தேவனின் செயல்களைக் காண்கிறான். நியாயப்பிரமாண யுகத்தின் போது, யேகோவா மோசேயை எகிப்திலிருந்து தனது வார்த்தைகளால் அழைத்துச் சென்றார், இஸ்ரவேலர்களிடம் சில வார்த்தைகளைப் பேசினார்; அந்த காலத்தில், தேவனுடைய செயல்களில் ஒரு பகுதி தெளிவுபடுத்தப்பட்டது, ஆனால் மனிதனின் திறமை மட்டுப்படுத்தப்பட்டதாலும், அவனுடைய அறிவை முழுமையாக்க எதுவும் செய்ய முடியாததினாலும், தேவன் தொடர்ந்து பேசினார் மற்றும் கிரியையைச் செய்தார். கிருபையின் யுகத்தில், மனிதன் தேவனுடைய செயல்களில் ஒரு பகுதியை மீண்டும் ஒரு முறைப் பார்த்தான். இயேசு அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், சிலுவையில் அறையப்படவும் முடிந்தது, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு மனிதனுக்கு முன்பாக மாம்சத்தில் தோன்றினார். மனிதனுக்கு தேவனைப் பற்றி இதைவிட வேறு எதுவும் தெரியாது. தேவனால் மனிதனுக்கு எந்த அளவுக்குக் காண்பிக்கப்பட்டதோ அந்த அளவுக்கு மனிதனுக்குத் தெரியும், தேவன் மனிதனுக்கு ஒன்றும் காண்பிக்கவில்லை என்றால், அந்த அளவே தேவனைப் பற்றிய மனிதனின் வரம்பிடுதல் இருந்திருக்கும். இவ்வாறு, தேவன் தொடர்ந்து செயல்படுகிறார், இதனால் தேவனைப் பற்றிய மனிதனின் அறிவு ஆழமடையக்கூடும், இதனால் மனிதன் படிப்படியாகத் தேவனுடைய சாராம்சத்தை அறிந்து கொள்ளலாம். கடைசி நாட்களில், தேவன் மனிதனைப் பரிபூரணமாக்க தனது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். உன் சீர்கெட்ட மனநிலையானது தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் உன் மதக் கருத்துக்கள் தேவனுடைய யதார்த்தத்தால் மாற்றப்படுகின்றன. கடைசி நாட்களில் மாம்சத்தில் அவதரித்த தேவன் “வார்த்தை மாம்சமாகிறது, வார்த்தை மாம்சத்தில் வருகிறது, மற்றும் வார்த்தை மாம்சத்தில் தோன்றுகிறது” என்கிறதான வார்த்தைகளை நிறைவேற்றவே முக்கியமாக வந்துள்ளார், இதைக் குறித்து உங்களுக்கு முழுமையான அறிவு இல்லையென்றால், பிறகு உங்களால் உறுதியாக நிற்கமுடியாமல் போகும். கடைசி நாட்களில், தேவன் முதன்மையாக ஒரு கட்ட வேலையை நிறைவேற்ற விரும்புகிறார், அதில் வார்த்தை மாம்சத்தில் தோன்றும், இது தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, உங்கள் அறிவு தெளிவாக இருக்க வேண்டும்; தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதன் தன்னை வரையறுக்க தேவன் அனுமதிக்கவில்லை. கடைசி நாட்களின் போது தேவன் இந்த கிரியையைச் செய்யவில்லை என்றால், அவரை பற்றிய மனிதனின் அறிவு மேலும் அதிகரித்துச் செல்ல முடியாது. தேவனால் சிலுவையில் அறையப்பட முடியும், சோதோமை அழிக்க முடியும் என்பதையும், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு பேதுருவுக்குத் தரிசனமாக முடியும் என்பதையும் மட்டுமே நீ அறியமுடியும். ஆனால் தேவனுடைய வார்த்தைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும், மனிதனை ஜெயங்கொள்ள முடியும் என்று நீ ஒருபோதும் சொல்ல மாட்டாய். தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே நீ அத்தகைய அறிவைப் பற்றிப் பேச முடியும், மேலும் நீங்கள் அனுபவிக்கும் தேவனுடைய கிரியைகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு முழுமையாக அவரைப் பற்றிய உங்கள் அறிவு மாறும். அப்போதுதான் நீ உன் சொந்தக் கருத்துக்களுக்குள் தேவனை வரையறுப்பதை நிறுத்துவாய். மனிதன் தேவனுடைய கிரியையை அனுபவிப்பதன் மூலம் அறிந்துகொள்கிறான்; தேவனை அறிய வேறு சரியான வழி இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 144

இன்று, உங்கள் அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டிய காரியம் என்னவென்றால், தேவனால் நிறைவேற்றப்பட்ட “வார்த்தை மாம்சமாகிறது” என்பதுதான் முக்கியமாக கடைசி நாட்களில் உண்மையாக இருக்கிறது. பூமியில் அவர் செய்த உண்மையான கிரியையின் மூலம், மனிதன் அவரை அறிந்து கொள்ளவும் அவருடன் ஈடுபடவும், மற்றும் அவருடைய உண்மையான செயல்களைக் காணவும் செய்கிறார். அவரால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடிகிறது என்பதையும், அவ்வாறு செய்ய முடியாத காலங்களும் உள்ளன என்பதை அவர் மனிதனைத் தெளிவாகக் காணும்படிச் செய்கிறார்; இது யுகத்தைப் பொறுத்தது. இதிலிருந்து, அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க தேவன் இயலாதவர் அல்ல என்பதை நீ கண்டுகொள்ளலாம், மாறாக செய்ய வேண்டிய கிரியைக்கு ஏற்பவும், யுகத்திற்கு ஏற்பவும் அவர் செயல்படும் முறையை மாற்றுகிறார். தற்போதைய கிரியையின் கட்டத்தில், அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவில்லை; இயேசுவின் யுகத்தில் அவர் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்தார், ஏனென்றால் அந்த யுகத்தில் அவருடைய கிரியை வேறுபட்டதாய் இருந்தது. தேவன் இன்று அந்தக் கிரியையைச் செய்யவில்லை, அவரால் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க இயலாது என்று சிலர் நம்புகிறார்கள், இல்லையென்றால் அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்காவிட்டால், அவர் தேவன் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறானதல்லவா? தேவனால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடியும், ஆனால் அவர் வேறு யுகத்தில் கிரியை செய்கிறார், எனவே அவர் அத்தகைய கிரியையைச் செய்வதில்லை. ஏனென்றால் இது ஒரு வேறுபட்ட யுகம், இது தேவனுடைய கிரியையின் வேறுபட்ட கட்டமாக இருப்பதால், தேவனால் தெளிவுபடுத்தப்பட்ட செயல்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. தேவன் மீதான மனிதனின் நம்பிக்கை என்பது அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் மீதான நம்பிக்கை அல்ல, அற்புதங்கள் மீதான நம்பிக்கையும் அல்ல, மாறாக புதிய யுகத்தில் அவருடைய உண்மையான கிரியையின் மீதான நம்பிக்கையாகும். தேவன் செயல்படும் முறையின் மூலம் மனிதன் தேவனை அறிந்துகொள்கிறான், இந்த அறிவு மனிதனில் தேவன் மீது விசுவாசத்தை ஏற்படுத்துகிறது, அதாவது தேவனுடைய கிரியை மற்றும் செயல்களில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்தக் கட்ட கிரியையில், தேவன் முக்கியமாகப் பேசுகிறார். அடையாளங்களையும் அதிசயங்களையும் காண காத்திருக்க வேண்டாம்; நீ எதையும் காண மாட்டாய்! ஏனென்றால், நீ கிருபையின் யுகத்தில் பிறக்கவில்லை. நீ கிருபையின் யுகத்தில் இருந்திருந்தால், நீ அடையாளங்களையும் அதிசயங்களையும் கண்டிருக்கலாம், ஆனால் நீ கடைசி நாட்களில் பிறந்திருக்கிறாய், எனவே நீ தேவனுடைய யதார்த்தத்தையும் இயல்பையும் மட்டுமே காண முடியும். கடைசி நாட்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயேசுவைக் காண எதிர்பார்க்க வேண்டாம். எந்தவொரு சாதாரண மனிதரிடமிருந்தும் வேறுபடாத மாம்சத்தில் வந்த நடைமுறை தேவனை மட்டுமே நீ காண முடியும். ஒவ்வொரு யுகத்திலும், தேவன் வெவ்வேறு செயல்களைச் செய்கிறார். ஒவ்வொரு யுகத்திலும், அவர் தேவனுடைய செயல்களின் தெளிவான பகுதியை உருவாக்குகிறார், மேலும் ஒவ்வொரு யுகத்திலும் உள்ள கிரியையானது தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியையும், தேவனுடைய செயல்களில் ஒரு பகுதியையும் குறிக்கிறது. அவர் செய்யும் செயல்கள் அவர் கிரியை செய்யும் யுகத்திற்கு ஏற்ப வேறுபடுகின்றன, ஆனால் அவை அனைத்தும் மனிதனுக்கு தேவனைப் பற்றிய ஆழமான அறிவைக் கொடுக்கின்றன, தேவன் மீதுள்ள விசுவாசம் உண்மையானது, மேலும் அது நடைமுறைக்கேற்றதாகும். தேவனுடைய எல்லா செயல்கள் நிமித்தமும் மனிதன் தேவனை விசுவாசிக்கிறான், ஏனென்றால் தேவன் மிகவும் அதிசயமானவர், மிகப் பெரியவர், ஏனென்றால் அவர் சர்வவல்லமையுள்ளவர், ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாதவர். தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்யக்கூடியவராகவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும் கூடியவராக இருப்பதினால் நீ அவரை விசுவாசிக்கிறாய் என்றால், உன் பார்வை தவறானது, மேலும் சில ஜனங்கள் உன்னிடம், “அசுத்த ஆவிகளும் இதுபோன்ற காரியங்களைச் செய்யக் கூடுமல்லவா?” என்று கூறுவார்கள். இது தேவனுடைய உருவத்தைச் சாத்தானின் உருவத்துடன் குழப்பமடையச் செய்யவில்லையா? இன்று, தேவன் மீது மனிதன் விசுவாசம் வைப்பது அவருடைய பல கிரியைகளாலும், அவர் செய்யும் பெரும் காரியங்களாலும், அவர் பேசும் பல வழிகளாலும்தான். மனிதனை ஜெயங்கொண்டு அவனைப் பரிபூரணமாக்க தேவன் தமது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மனிதன் தேவனுடைய பல செயல்கள் நிமித்தம் அவரை விசுவாசிக்கிறான், அவரால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடிகிறது என்பதால் அல்ல; ஜனங்கள் தேவனுடைய செயல்களைக் காண்பதால் மட்டுமே அவரை அறிந்து கொள்கிறார்கள். தேவனுடைய உண்மையான செயல்கள், அவர் எவ்வாறு செயல்படுகிறார், அவர் என்னவிதமான ஞானமான முறைகளைப் பயன்படுத்துகிறார், எப்படி பேசுகிறார், மனிதனை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார் என்பதை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே—அதாவது அவர் எதை விரும்புகிறார், அவர் எதை வெறுக்கிறார், மற்றும் மனிதனின் மீது அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்கிறதான இந்த அம்சங்களை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே—தேவனுடைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். தேவனுடைய விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நீ நேர்மறையான மற்றும் எதிர்மறையானவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியும், மேலும் தேவனைப் பற்றிய உன் அறிவின் மூலம் உன் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நீ தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவை அடைய வேண்டும், மேலும் தேவனை விசுவாசிப்பது பற்றிய உன்னுடைய பார்வைகளை நேராக வைக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 145

நீ எவ்வாறு பின்தொடர்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் இன்று செய்யும் கிரியையை நீ புரிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த கிரியையின் முக்கியத்துவத்தை நீ அறிந்து கொள்ள வேண்டும். கடைசி நாட்களில் தேவன் வரும்போது என்ன கிரியையைக் கொண்டு வருகிறார், அவர் என்ன மனநிலையைக் கொண்டு வருகிறார், மனிதனில் முழுமையாக்கப்படுவதற்கு என்ன செய்யப்படும் என்பதை நீ புரிந்து அறிந்துகொள்ள வேண்டும். அவர் மாம்சத்தில் செய்ய வந்த கிரியையை நீ அறியாது அல்லது புரிந்துகொள்ளாதிருந்தால், உன்னால் அவருடைய சித்தத்தை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும், மேலும் அவருக்கு நெருக்கமானவனாக எவ்வாறு உன்னால் இருக்க முடியும்? உண்மையில், தேவனுடன் நெருக்கமாக இருப்பது சிக்கலானது அல்ல, ஆனால் அது எளிதானதும் அல்ல. ஜனங்கள் அதை முழுமையாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்க முடிந்தால், பிறகு அது சிக்கலற்றதாகிவிடுகிறது; ஜனங்களால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அது மிகவும் கடினமாகிவிடுகிறது, மேலும், அவர்களின் பின்தொடர்தல் அவர்களைத் தெளிவற்ற நிலைக்கு வழிநடத்தும் வாய்ப்புள்ளது. தேவனைப் பின்தொடர்வதில், ஜனங்கள் தங்களின் சொந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றால், அவர்கள் எந்த சத்தியத்தைப் பற்றியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றால், பிறகு அவர்களுக்கு அடித்தளம் இல்லை என்பதே இதன் பொருள், எனவே அவர்களால் உறுதியாக நிற்பது கடினம். இன்று, சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத, நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாத அல்லது எதை நேசிக்க அல்லது வெறுக்க வேண்டும் என்று சொல்ல முடியாத அநேகர் இங்கு உள்ளனர். அத்தகையவர்களால் உறுதியாக நிற்க முடியாது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பது, தேவனின் சித்தத்திற்காக அக்கறை கொள்வது, தேவன் மாம்சத்தில் வரும்பொழுது அவரின் கிரியையை அறிந்து கொள்வது மற்றும் அவரால் சொல்லப்படும் கொள்கைகள் போன்றவை தேவன் மீதான விசுவாசத்தின் திறவுகோலாக இருக்க முடியும். திரளான ஜனங்களைப் பின்பற்ற வேண்டாம். நீங்கள் அதற்குள் நுழைய உங்களிடம் கொள்கைகள் இருக்க வேண்டும், மேலும் அவற்றை நீங்கள் பற்றியிருக்க வேண்டும். தேவனின் அறிவொளியால் கொண்டு வரப்பட்டு உனக்குள் உறுதியாக உள்ள இந்தக் காரியங்கள் உனக்கு உதவியாக இருக்கும். நீ அவ்வாறு செய்யாவிட்டால், இன்று நீ ஒரு மாற்றுவழியைக் காண்பாய், நாளை நீ மற்றொரு மாற்றுவழியைக் காண்பாய், நீ ஒருபோதும் உண்மையான எதையும் பெற மாட்டாய். இப்படி இருப்பது உன்சொந்த ஜீவனுக்கு ஒரு பயனும் இல்லை. சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பின்பற்றுகிறார்கள்: இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று ஜனங்கள் சொன்னால், நீயும்கூட இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று கூறுகிறாய்; இது ஒரு பொல்லாத ஆவியின் வேலை என்று ஜனங்கள் சொன்னால், நீயும் கூட சந்தேகப்படுகிறாய், அல்லது அது ஒரு பொல்லாத ஆவியின் வேலை என்று நீயும் சொல்கிறாய். நீங்கள் எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளைக் கிளிபோல் திரும்பச் சொல்கிறீர்கள், எதையும் உங்களால் வேறுபடுத்திப் பார்க்கவும் இயலவில்லை, உங்களுக்காக உங்களால் சுயமாக சிந்திக்கவும் முடியவில்லை. ஒரு நிலைப்பாடில்லாத, வேறுபடுத்திப் பார்க்க முடியாத அத்தகைய நபர் ஒன்றுக்கும் உதவாத ஒரு சிறுமைப்பட்டவர்! நீ எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளைத் திருப்பிக் கூறுகிறாய்: இன்று இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று கூறப்படுகிறது, ஆனால் ஒரு நாள் யாராவது ஒருவர் இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்ல என்று சொல்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது, அது உண்மையில் மனிதனின் செயல்களைத் தவிர வேறொன்றுமில்லை—ஆனாலும் உன்னால் இதை உணர இயலாது, மற்றவர்களால் சொல்லப்படுவதை நீ காணும்போது, நீயும் அதையே சொல்கிறாய். இது உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, ஆனால் நீ இது மனிதனின் வேலை என்று கூறுகிறாய்; பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு எதிராகத் தூஷிக்கிறவர்களில் ஒருவனாக நீ மாறவில்லையா? இதில், நீங்கள் வேறுபடுத்த முடியாததால் தேவனை எதிர்க்கவில்லையா? அநேகமாய் “இது ஒரு பொல்லாத ஆவியின் வேலை” என்று சொல்கிற சில முட்டாள்கள் ஒரு நாள் தோன்றுவார்கள், இந்த வார்த்தைகளை நீ கேட்கும் பொழுது நீ நஷ்டப்பட்டு இருப்பாய், மீண்டும் நீ மற்றவர்களின் வார்த்தைகளால் கட்டப்படுவாய். ஒவ்வொரு முறையும் யாராவது தொந்தரவைத் தூண்டும்போது, உன் ஸ்தானத்தில் உன்னால் நிற்க இயலாது, மேலும் இதற்கெல்லாம் காரணம் நீ சத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். தேவனில் விசுவாசம் கொள்வதும், தேவனை அறிய முற்படுவதும் எளிதான காரியம் அல்ல. இந்தக் காரியங்களை வெறுமனே ஒன்றுகூடி, பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் அடைய முடியாது, மேலும் பேரார்வத்தினால் மட்டுமே உங்களால் பரிபூரணமடைய முடியாது. நீ அனுபவிக்க வேண்டும், அறிய வேண்டும், உன் செயல்கள் கொள்கைப்படி இருக்க வேண்டும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற வேண்டும். நீ அனுபவங்களைக் கடந்துபோகும் பொழுது, உன்னால் அநேகக் காரியங்களை அறிந்துகொள்ள முடியும்—நன்மை மற்றும் தீமைக்கு இடையிலான வித்தியாசத்தையும், நீதி மற்றும் துன்மார்க்கத்திற்கு இடையிலான வித்தியாசத்தையும், மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் மற்றும் சத்தியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தையும் உன்னால் அறிய முடியும். இந்த சகல காரியங்களையும் உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியும், அவ்வாறு செய்யும்போது, சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நீ ஒருபோதும் இழப்பை அடைய மாட்டாய். இது மட்டுமே உன்னுடைய உண்மையான வளர்ச்சியாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 146

தேவனின் கிரியையை அறிவது எளிதான காரியம் அல்ல. நீ உன் பின்தொடர்தலில் தரங்களையும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும், மெய்யான வழியை எவ்வாறு தேடுவது, அது மெய்யான வழியா இல்லையா என்பதை எவ்வாறு அளவிடுவது, இது தேவனின் கிரியையா இல்லையா என்பதை எல்லாம் நீ அறிந்து கொள்ள வேண்டும். மெய்யான வழியைத் தேடுவதில் மிக அடிப்படையான கொள்கை எது? பரிசுத்த ஆவியானவரின் கிரியை இந்த வழியில் இருக்கிறதா இல்லையா என்பதையும், இந்த வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடாக இருக்கின்றனவா, யார் சாட்சி கொடுக்கக்கூடும், அது உனக்கு என்ன கொண்டு வரக்கூடும் என்பதையும் நீ பார்க்க வேண்டும். மெய்யான வழிக்கும் தவறான வழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வதற்கு அடிப்படை அறிவைத்தரும் பல அம்சங்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் மிகவும் அடிப்படையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அதில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறுவதாகும். தேவன் மீதான ஜனங்களுடைய விசுவாசத்தின் சாராம்சமானது தேவனுடைய ஆவியானவரின் மீதான விசுவாசமாகும், ஏனென்றால் மாம்சமான தேவனில் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசமும் கூட, தேவனுடைய ஆவியானவரின் உருவகமாக இந்த மாம்சத்தில் இருக்கிறது, அதாவது அத்தகைய விசுவாசம் இன்னும் ஆவியானவர் மீதான விசுவாசமாக இருக்கிறது. ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் இந்த மாம்சம் ஆவியானவரிலிருந்து வந்தது, மேலும் வார்த்தை மாம்சமாகி விட்டதால், மனிதனது விசுவாசத்தில் தேவனின் உள்ளார்ந்த சாராம்சம் இன்னும்கூட இருக்கிறது. எனவே, இது மெய்யான வழியா இல்லையா என்பதை வேறுபடுத்துவதில், எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும், அதன் பிறகு இந்த வழியில் சத்தியம் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். சத்தியமானது இயல்பான மனிதத்தன்மையின் ஜீவ மனநிலையாக இருக்கிறது, அதாவது, தேவன் ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டித்தபோது அவனுக்குத் தேவைப்பட்டது முழு மனிதத்தன்மை (மனித உணர்வு, நுண்ணறிவு, ஞானம் மற்றும் மனிதனாக இருப்பதற்கான அடிப்படை அறிவு ஆகியவை) ஆகும். அதாவது, இந்த வழி ஜனங்களை இயல்பான மனிதத்தன்மையுள்ள ஜீவிதத்திற்கு வழிநடத்திச் செல்லுமா இல்லையா என்பதையும் பேசப்படும் சத்தியம் இயல்பான மனிதத்தன்மையின் யதார்த்தத்திற்கு ஏற்ப தேவைப்படுகிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும், இந்த சத்தியம் நடைமுறையானதாகவும் உண்மையாகவும் இருக்கிறதா இல்லையா, இது மிகவும் சரியான நேரமாக இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். அங்கு சத்தியம் இருந்தால், அது ஜனங்களை இயல்பான மற்றும் உண்மையான அனுபவங்களுக்கு வழிநடத்திச் செல்ல முடியும்; மேலும், ஜனங்கள் இன்னும் இயல்பாகி விடுகிறார்கள், அவர்களின் மனித உணர்வு இன்னும் முழுமையானதாகிறது, மாம்சத்தில் அவர்களின் ஜீவிதம் மற்றும் ஆவிக்குரிய வாழ்வு இன்னும் ஒழுங்காக மாறுகிறது, மேலும் அவர்களின் உணர்வுகள் இன்னும் இயல்பாக மாறுகின்றன. இதுதான் இரண்டாவது கொள்கை. வேறு ஒரு கொள்கையும் உள்ளது, அதாவது ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய அறிவு அதிகரித்து வருகிறதா இல்லையா, அத்தகைய கிரியையையும் சத்தியத்தையும் அனுபவிப்பது அவர்களுக்கு தேவன் மீதான அன்பைத் தூண்டி அவர்களை தேவனுடன் எப்போதும் நெருங்கி வரச்செய்யுமா இல்லையா என்பதாகும். இதில் இந்த வழி மெய்யான வழியா இல்லையா என்பதை அளவிட முடியும். இந்த வழி இயற்கைக்கு அப்பாற்பட்டு யதார்த்தமானதா, மனிதனின் ஜீவிதத்திற்கானதை வழங்க முடியுமா இல்லையா என்பது மிகவும் அடிப்படையானது. இது இந்த கொள்கைகளுக்கு ஒத்துப்போகிறது என்றால், இந்த வழியே மெய்யான வழி என்ற முடிவுக்கு வரலாம். உங்கள் எதிர்கால அனுபவங்களில் மாற்றுவழிகளை ஏற்றுக்கொள்ளும்படி இந்த வார்த்தைகள் உங்களை உருவாக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் மற்றொரு புதிய காலத்தின் கிரியை அங்கு இருக்கும் என்ற முன்னறிவித்தல் இல்லை என்றும் நான் சொல்கிறேன். இன்றைய வழி மெய்யான வழி என்று நீங்கள் உறுதியாக இருக்கும்படி நான் அவற்றைச் சொல்கிறேன், இதனால் நீங்கள் இன்றைய கிரியையின் மீதான உங்கள் விசுவாசத்தில் அரைகுறை உறுதியாக இருக்கமாட்டீர்கள், அதைப் பற்றிய நுண்ணறிவையும் பெற மாட்டீர்கள். உறுதியாக இருக்கிற போதிலும், இன்னும் குழப்பத்தில் பின்பற்றுகிறவர்கள் அநேகர் உள்ளனர்; அத்தகைய உறுதிப்பாட்டிற்கு எந்தக் கொள்கையும் இல்லை, அத்தகைய மனிதர்கள் விரைவிலேயே புறம்பாக்கப்பட வேண்டும். தாங்கள் பின்பற்றுவதில் மிகவும் தீவிரமாக இருப்பவர்களும்கூட மூன்று பாகங்கள் உறுதியாகவும் ஐந்து பாகங்கள் உறுதியற்றும் இருக்கிறார்கள், இது அவர்களிடம் அஸ்திபாரமில்லை என்பதைக் காட்டுகிறது. உங்கள் திறமை மிகவும் மோசமாகவும், உங்கள் அஸ்திபாரம் மிகவும் ஆழமற்றும் இருப்பதால், உங்களுக்கு வேறுபாடு குறித்த புரிதல் இல்லை. தேவன் தமது கிரியையை மீண்டும் செய்வதில்லை, யதார்த்தமில்லாத கிரியையையும் அவர் செய்வதில்லை, அவர் மனிதனிடம் அளவுக்கதிகமான கோரிக்கைகளை வைப்பதில்லை, மனிதனின் உணர்வுக்கு அப்பாற்பட்ட கிரியையை அவர் செய்வதில்லை. அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும் மனிதனின் இயல்பான உணர்வின் எல்லைக்குள் உள்ளன, இயல்பான மனிதத்தன்மையின் உணர்வை மீறுவதில்லை, மேலும் அவரது கிரியை மனிதனின் இயல்பான தேவைகளுக்கு ஏற்பச் செய்யப்படுகிறது. இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால், ஜனங்கள் இன்னும் இயல்பாகி விடுகிறார்கள், மேலும் அவர்களின் மனிதத்தன்மையானது இன்னும் இயல்பாகிறது. ஜனங்கள் தங்கள் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை மற்றும் மனிதனின் சாராம்சத்தைப் பற்றிய அதிகமான அறிவைப் பெறுகிறார்கள், மேலும் அவர்கள் சத்தியத்திற்காக இன்னும் பெரிய ஏக்கத்தைப் பெறுகிறார்கள். அதாவது, மனிதனின் ஜீவன் வளர்ந்துகொண்டே இருக்கிறது, மேலும் மனிதனின் சீர்கெட்ட மனநிலை அதிகமதிகமாக மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக மாறுகிறது—இவை அனைத்தும் தேவன் மனிதனின் ஜீவனாக மாறுவதன் அர்த்தமாகும். மனிதனின் சாராம்சமான காரியங்களை வெளிப்படுத்த ஒரு வழியும் இல்லாதிருந்தால், மனிதனின் மனநிலையை மாற்றவும் இயலாது, மேலும், ஜனங்களை தேவனுக்கு முன்பாக கொண்டு வருவதற்கோ அல்லது தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை அவர்களுக்கு கொடுக்கவோ இயலாது, மற்றும் அவர்களின் மனிதத்தன்மையானது கீழ்த்தரமானதாகவும், அவர்களின் உணர்வு இன்னும் அசாதாரணமாகவும் மாற காரணமாகிறது, அப்படியானால் இந்த வழி மெய்யான வழியாக இருக்கக்கூடாது, இது ஒரு பொல்லாத ஆவியின் வேலையாக அல்லது பழைய வழியாக இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால், இது பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையாக இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளில் நீங்கள் தேவனை விசுவாசத்திருக்கிறீர்கள், ஆனால் மெய்யான வழிக்கும் தவறான வழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கோ அல்லது மெய்யான வழியைத் தேடுவதற்கோ உங்களுக்கு எந்தக் கொள்கைகளின் அறிகுறியும் இல்லை. பெரும்பாலான ஜனங்கள் இந்தக் காரியங்களில் ஆர்வமாகக் கூட இல்லை; அவர்கள் வெறுமனே பெரும்பான்மையானவர்கள் செல்லும் இடத்திற்குச் சென்று, பெரும்பான்மையானவர்கள் சொல்வதை திரும்பச் சொல்கிறார்கள். மெய்யான வழியை நாடுகிற ஒருவராக எப்படி இருக்க முடியும்? அத்தகையவர்களால் மெய்யான வழியை எவ்வாறு கண்டு பிடிக்கக்கூடும்? இந்த முக்கிய கொள்கைகள் பலவற்றை நீங்கள் புரிந்து கொண்டால், பிறகு என்ன நடந்தாலும், நீங்கள் வஞ்சிக்கப்பட மாட்டீர்கள். இன்று, ஜனங்களால் வித்தியாசங்களை உருவாக்க முடியும் என்பது முக்கியமானதாக உள்ளது; இதனைத்தான் இயல்பான மனிதத்தன்மையால் பெறமுடியும், இதனைத்தான் ஜனங்கள் தங்கள் அனுபவத்தில் பெறமுடியும். இன்றும் கூட, ஜனங்கள் பின்பற்றும் செயல்பாட்டில் எதையும் வித்தியாசம் பார்க்காதிருந்தால், அவர்களின் மனித அறிவு இன்னும் வளர்ச்சியடையாதிருந்தால், ஜனங்கள் மிகவும் புத்தியில்லாதவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்களின் பின்தொடர்தல் பிழையாகவும் வழிவிலகியதாகவும் இருக்கிறது. இன்று உன் பின்தொடர்தலில் சிறிதளவும் வேறுபாடு இல்லை, அது உண்மையாக இருக்கும் போது, நீ சொல்வது போல், நீ மெய்யான வழியைக் கண்டுபிடித்து, நீ அதை அடைந்திருக்கிறாயா? உன்னால் எதையும் வித்தியாசப்படுத்தி அறிய முடியுமா? மெய்யான வழியின் சாராம்சம் என்ன? உண்மையான வழியில், நீ மெய்யான வழியை அடையவில்லை; நீ சத்தியத்திற்குரிய எதையும் பெறவில்லை. அதாவது, தேவன் உன்னிடம் எதிர்பார்ப்பதை நீ அடையவில்லை, இதனால் உன்னுடைய சீர்கேட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீ தொடர்ந்து இந்த வழியில் பின்தொடர்ந்தால், நீ இறுதியில் புறம்பாக்கப்படுவாய். இன்றுவரை பின்பற்றி, நீ தேர்ந்தெடுத்த வழி சரியான வழி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், மேலும் எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது. பல சிறிய காரியங்கள் காரணமாக அநேகர் எப்போதும் உறுதியற்றவர்களாகி, மேலும் சத்தியத்தைப் பின்தொடர்வதை நிறுத்துகிறார்கள். அத்தகையவர்கள் தேவனின் கிரியையை பற்றி அறியாதவர்கள்; அவர்கள் குழப்பத்தில் தேவனைப் பின்பற்றுபவர்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்கள் அவருக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது அவருக்கு சாட்சி கொடுப்பவர்களாகவோ இருக்க இயலாது. ஆசீர்வாதங்களை மட்டுமே நாடும் மற்றும் சத்தியத்தைப் பின்தொடர்வதற்கு கூடுமானமட்டும் தெளிவற்றதை மற்றும் விளக்கமற்றதை மட்டுமே பின்தொடர்பவர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன், இதனால் அவர்களின் வாழ்வுக்கு அர்த்தம் கிடைக்கும். இனி உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்ள வேண்டாம்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 147

ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட கிரியைகளின் முழுமையானது வெவ்வேறு சகாப்தங்கள் வந்து போனதால் படிப்படியாக மாறியிருக்கிறது. இந்தக் கிரியையின் மாற்றங்கள் உலகின் ஒட்டுமொத்த சூழ்நிலை மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன; நிர்வாகத்திற்கான கிரியை அதற்கேற்ப படிப்படியாக மாறியிருக்கிறது. இவை அனைத்தும் சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்து திட்டமிடப்படவில்லை. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட உடனேயே, கிரியையின் முதற்கட்டமான நியாயப்பிரமாணத்தையோ; கிரியையின் இரண்டாம் கட்டமான கிருபையையோ; அல்லது மூன்றாம் கட்டமான ஜெயத்தையோ யேகோவா திட்டமிடவில்லை. முதலில் மோவாபின் சந்ததியினரிடமிருந்து தொடங்கி, அதன் மூலம் முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றுவதே அவரது கிரியையாக இருக்கிறது. உலகை சிருஷ்டித்தபின், அவர் ஒருபோதும் இந்த வார்த்தைகளைப் பேசவில்லை, மோவாபிற்குப் பிறகும் அவர் ஒருபோதும் பேசவில்லை; உண்மையில், லோத்துக்கு முன்புவரை, அவர் அவற்றை ஒருபோதும் உச்சரிக்கவேயில்லை. தேவனின் கிரியைகள் அனைத்தும் தன்னிச்சையாகச் செய்யப்படுகின்றன. இவ்வாறே அவரது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத்தின் கிரியைகள் முழுவதும் வளர்ந்தன; உலகைச் சிருஷ்டிப்பதற்கு முன்பு, அத்தகைய திட்டத்தை “மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான சுருக்க விளக்கப்படம்,” என்ற வடிவத்தில் அவர் எழுதியிருக்கவில்லை. தேவனின் கிரியையில் இருப்பதை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார்; ஒரு திட்டத்தை வகுக்க அவர் தனது மூளையைக் கசக்குவதில்லை. நிச்சயமாக, சில தீர்க்கதரிசிகள் ஏராளமான தீர்க்கதரிசனங்களைக் கூறியிருக்கிறார்கள், ஆனால் தேவனின் கிரியை எப்போதுமே துல்லியமான திட்டமிடலில் ஒன்றாகும் என்று சொல்லிவிட முடியாது; அந்த தீர்க்கதரிசனங்கள் அந்த நேரத்தில் தேவனின் கிரியைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. அவர் செய்யும் அனைத்து கிரியைகளும் மிகவும் உண்மையான கிரியைகளே. ஒவ்வொரு யுகத்தின் வளர்ச்சிக்கும் ஏற்ப அதை அவர் செயல்படுத்துகிறார், மேலும் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, கிரியை செய்வது என்பது ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்க மருந்தை வழங்குவதற்கு ஒத்ததாகும்; அவர் தன் கிரியையைச் செய்யும்போது, அவர் அவதானிக்கிறார், அவருடைய அவதானிப்புகளின்படி அவருடைய கிரியையைத் தொடர்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவன் தம்முடைய ஏராளமான ஞானத்தையும் திறனையும் வெளிப்படுத்த வல்லவர்; எந்தவொரு குறிப்பிட்ட யுகத்தின் கிரியைக்கு ஏற்பவும் அவர் தனது ஏராளமான ஞானத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறார், மேலும் அந்த யுகத்தில் அவரால் திரும்பக் கொண்டுவரப்பட்ட ஜனங்கள் அனைவரையும் தன் முழு மனநிலையைக் காண அனுமதிக்கிறார். ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய கிரியைக்கு ஏற்ப, செய்ய வேண்டிய எந்தக் கிரியையையும் செய்து, அவர் ஜனங்களுக்கான தேவைகளை வழங்குகிறார். சாத்தான் எந்த அளவிற்கு அவர்களைச் சீரழித்தான் என்பதன் அடிப்படையில் ஜனங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகிறார். இதுபோலவே, யேகோவா ஆரம்பத்தில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, பூமியில் தேவனை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவுவதற்காகவும், சிருஷ்டிப்பின் மத்தியில் அவர்கள் தேவனுக்குச் சாட்சிக் கொடுக்கவும் அவர் அதைச் செய்தார். ஆயினும், சர்ப்பத்தால் சோதிக்கப்பட்டபின் ஏவாள் பாவமிழைத்தாள், ஆதாமும் அவ்வாறே செய்தான்; தோட்டத்தில், அவர்கள் இருவரும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தார்கள். ஆதலால், அவர்கள் மீது செயல்பட யேகோவாவுக்கு கூடுதல் கிரியை இருந்தது. அவர்களின் நிர்வாணத்தைக் கண்ட அவர், அவர்களின் சரீரங்களை மிருகத்தின் தோலால் ஆன ஆடைகளைக் கொண்டு மூடினார். பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் … நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” என்றார். அவர் ஸ்திரீயை நோக்கி: “நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” என்றார். அப்போதிலிருந்து, நவீனகால மனுஷன் இப்போது பூமியில் ஜீவித்திருப்பதைப் போலவே, அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, அதற்கு வெளியே ஜீவித்திருக்கும்படி செய்தார். தேவன் மனுஷனை ஆதியிலே சிருஷ்டித்தபோது, மனுஷனை சர்ப்பத்தால் சோதிக்க அனுமதிப்பதும், பின்னர் மனுஷனையும் சர்ப்பத்தையும் சபிப்பதும் அவருடைய திட்டமாக இருக்கவில்லை. அவர் உண்மையில் அத்தகைய திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை; சம்பவங்கள் உருவான விதம்தான் அவரது சிருஷ்டிப்புகளில் புதிய கிரியைகளைச் செய்ய வைத்தது. யேகோவா பூமியில் ஆதாம் மற்றும் ஏவாள் மத்தியில் இந்தக் கிரியையைச் செய்தபின், “பூமியில் மனுஷனின் அக்கிரமம் பெருகினது என்பதையும், அவனது இருதயத்தின் எண்ணங்களின் ஒவ்வொரு கற்பனையும் தொடர்ந்து தீமையாக மட்டுமே இருந்ததையும் யேகோவா கண்டார். பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காக யேகோவா மனம் வருந்தினார், அது அவருடைய இருதயத்திற்கு விசனமாயிருந்தது. … ஆனால் நோவா, கர்த்தரின் பார்வையில் கிருபையைப் பெற்றான்.” இது வரை மனிதகுலம் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் யேகோவாவுக்கு இன்னும் பல புதிய கிரியைகள் இருந்தன, ஏனென்றால் அவர் படைத்த மனிதகுலம் சர்ப்பத்தால் சோதிக்கப்பட்ட பின்னர் மிகவும் பாவம்கொண்டதாக வளர்ந்திருந்தது. இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில், மனிதகுலம் அனைத்திலும், நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் என்று யேகோவா தேர்ந்தெடுத்தார், அதன் பின்னர் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழிக்கும் கிரியையை அவர் மேற்கொண்டார். இவ்வாறே இன்றுவரை மனிதகுலம் தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது, பெருகிய முறையில் சீரழிவு வளர்ந்து வந்திருக்கிறது, மேலும் மனுஷனின் வளர்ச்சியானது அதன் உச்சத்தை அடையும் நேரம் வரும்போது, அது மனிதகுலத்தின் முடிவாகப் பொருள்கொள்ளப்பட வேண்டும். உலகத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, அவருடைய கிரியையின் உள்ளார்ந்த உண்மை எப்போதுமே இவ்வாறே இருந்து வந்திருக்கிறது, எப்போதும் இவ்வாறுதான் இருக்கும். இது, ஜனங்கள் தங்கள் வகைக்கு ஏற்ப எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள் என்பது போன்றது; ஒவ்வொரு நபரும் ஆரம்பத்திலேயே ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்படும் நிகழ்வுக்கும் இதற்கும் வெகுதூர இடைவெளி உண்டு; மாறாக, வளர்ச்சிக்கான செயல்முறைக்கு உட்பட்ட பின்னரே அனைவரும் படிப்படியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். முடிவில், முழுமையான இரட்சிப்பைக் கொண்டுவர முடியாத எவரும் தங்கள் “மூதாதையர்களிடம்” திரும்பிச் செல்வார்கள். உலகம் சிருஷ்டிக்கப்படும் போதே மனிதகுலத்தின் மத்தியில் எவ்வித கிரியையும் தேவனால் ஆயத்தப்படுத்தப்படவில்லை; மாறாக, மனிதகுலத்தின் மத்தியில் படிப்படியாக, மிகவும் யதார்த்தமாக, நடைமுறைரீதியாக தேவன் தனது கிரியையைச் செய்ய அனுமதித்த விஷயங்களின் வளர்ச்சியே இது. உதாரணமாக, யேகோவா தேவன் அந்த ஸ்திரீயைத் தூண்டுவதற்காக சர்ப்பத்தைப் படைக்கவில்லை; அது அவருடைய குறிப்பிட்ட திட்டமாக இருக்கவில்லை, அதை அவர் வேண்டுமென்றே முன்னரே தீர்மானிக்கவும் இல்லை. இது ஓர் எதிர்பாராத நிகழ்வு என்றும் கூறலாம். ஆகவே, இதன் காரணமாகவே யேகோவா ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, மீண்டும் ஒருபோதும் மனுஷனை உருவாக்க மாட்டேன் என்று ஆணையிட்டார். இருப்பினும், இந்த அஸ்திபாரத்தின் மீது மட்டுமே ஜனங்கள் தேவனின் ஞானத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். நான் முன்பு கூறியது போலவே: “சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு நான் என் ஞானத்தைப் பயன்படுத்துகிறேன்.” சீர்கெட்ட மனிதகுலம் எப்படியாக வளர்ந்தாலும் அல்லது சர்ப்பம் அவர்களை எப்படித் தூண்டினாலும், யேகோவாவிடம் அவருடைய ஞானம் எப்போதும் இருக்கிறது; அவர் உலகை சிருஷ்டித்ததிலிருந்தே புதிய கிரியைகளில் ஈடுபட்டு வருகிறார், இந்தக் கிரியையின் படிகள் எதுவும் திரும்பச் செய்யப்படுவதில்லை. சாத்தான் தொடர்ச்சியாகச் சதிகளை செயல்படுத்தி வருகிறான், மனிதகுலம் தொடர்ந்து சாத்தானால் சீர்கெட்டுப்போகிறது, மேலும் யேகோவா தேவன் தம்முடைய ஞானமான கிரியையை இடைவிடாமல் செய்துவருகிறார். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து அவர் ஒருபோதும் தோல்வியடையவும் இல்லை, கிரியை செய்வதையும் நிறுத்தவில்லை. மனுஷர் சாத்தானால் சீர்கெட்டப் பிறகு, அவர்களுடையச் சீர்கேட்டுக்கு ஆதாரமாய் இருக்கும் எதிரியைத் தோற்கடிக்க அவர் அவர்களிடையே தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். இந்த யுத்தம் ஆரம்பத்தில் இருந்தே உக்கிரமாக இருந்துவருகிறது, இது உலகின் இறுதி வரை தொடரும். இந்தக் கிரியையைச் செய்வதில், யேகோவா தேவன் சாத்தானால் சீர்கெட்ட மனுஷர்களை அவரது பெரிய இரட்சிப்பைப் பெற அனுமதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஞானத்தையும், சர்வ வல்லமையையும், அதிகாரத்தையும் காண அனுமதிக்கிறார். மேலும், இறுதியில், அவர் துன்மார்க்கரைத் தண்டிப்பதும் நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பதும் ஆகிய தம்முடைய நீதியுள்ள மனநிலையை பார்க்க அனுமதிப்பார். அவர் இன்றுவரை சாத்தானுடன் போரிட்டு வருகிறார், ஒருபோதும் தோற்கடிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு ஞானமுள்ள தேவன், மேலும் சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்துகிறார். ஆகையால், தேவன் பரலோகத்தில் உள்ள அனைத்தையும் தம்முடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியச் செய்வது மட்டுமல்லாமல், பூமியிலுள்ள அனைத்தையும் அவருடைய பாதப்படிக்குக் கீழே வைத்திருக்கிறார், மேலும், மனிதகுலத்தை ஆக்கிரமித்து துன்புறுத்தும் துன்மார்க்கரை அவர் சிட்சைக்குள்ளாக்குகிறார். அவருடைய—ஞானத்தின் காரணமாகவே இந்தக் கிரியைகளின் முடிவுகள் அனைத்தும் கொண்டு வரப்படுகின்றன. மனிதகுலத்தின் இருப்புக்கு முன்னர் அவர் ஒருபோதும் தனது ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை, ஏனென்றால் அவருக்கு பரலோகத்திலோ, பூமியிலோ, அல்லது முழு பிரபஞ்சத்திலோ எங்கும் எதிரிகள் இல்லை, மேலும் இயற்கையின் இடையே எதையும் ஆக்கிரமிக்கும் அந்தகாரச் சக்திகள் இல்லை. பிரதான தூதன் அவருக்குத் துரோகம் செய்த பிறகு, அவர் பூமியில் மனிதகுலத்தை படைத்தார், மனிதகுலத்தினால்தான் அவர் பிரதான தூதனாகிய சாத்தானுடனான தனது ஆயிரம் ஆண்டுகால நீண்ட யுத்தத்தை முறையாகத் தொடங்கினார், இந்தப் போர் ஒவ்வொரு தொடர்ச்சியான கட்டத்திலும் உக்கிரமடைகிறது. இந்தக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய சர்வவல்லமையும் ஞானமும் இருக்கிறது. அப்போதுதான் பரலோகத்திலும் பூமியிலும் உள்ள சகலமும் தேவனின் ஞானம், சர்வவல்லமை மற்றும் குறிப்பாக தேவனின் மெய்மை ஆகியவற்றைக் கண்டன. அவர் இன்றுவரை தனது கிரியையை இதே யதார்த்தமான முறையில் செய்துவருகிறார்; கூடுதலாக, அவர் தனது கிரியையைச் செயல்படுத்தும்போது, அவர் தனது ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு கட்ட கிரியையின் ஆழ்ந்த உண்மையைப் பார்க்கவும், தேவனின் சர்வவல்லமையை எவ்வாறு விளக்குவது என்பதைக் காணவும், மேலும், தேவனின் மெய்மையைப் பற்றிய உறுதியான விளக்கத்தைக் காணவும் அவர் உங்களை அனுமதிக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 148

பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது; அவரால் எந்த நேரத்திலும் தனது கிரியையைத் திட்டமிட முடியும், எந்த நேரத்திலும் அதைச் செயல்படுத்தவும் முடியும். பரிசுத்த ஆவியானவரின் பணி மெய்மையானது என்றும், அது எப்போதும் புதியது என்றும், ஒருபோதும் பழையது அல்ல என்றும், எப்போதும் மிக உயர்ந்த அளவிற்கு புதியது என்றும் நான் ஏன் எப்போதும் சொல்கிறேன்? உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது அவருடைய கிரியை முன்பே திட்டமிடப்படவில்லை; நடந்தது அதுவல்ல! கிரியையின் ஒவ்வொரு படியும் அந்தந்த நேரத்திற்கு அதன் சரியான முடிவை அடைகிறது, மேலும் அந்தப் படிகள் ஒன்றோடொன்று தலையிடுவதும் இல்லை. அநேக நேரங்களில், நீ மனதில் வைத்திருக்கக்கூடிய திட்டங்கள் பரிசுத்த ஆவியானவரின் சமீபத்திய கிரியைகளுக்கு ஒப்பாகாது. அவரது கிரியை மனுஷனின் பகுத்தறிவு போன்று எளிமையானதும் அல்ல, மனுஷக் கற்பனையைப் போன்று சிக்கலானதும் அல்ல—இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜனங்களுக்கு அவர்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதை உள்ளடக்கியது. அவரை விட மனுஷனின் சாராம்சத்தைப் பற்றி யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை, மேலும் சரியாக இந்தக் காரணத்திற்காகவே ஜனங்களின் யதார்த்தமான தேவைகளுக்கும், அவருடைய கிரியைகளுக்கும் வேறேதும் பொருந்துவதில்லை. எனவே, மனுஷனின் கண்ணோட்டத்தில், அவருடைய கிரியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. அவர் இப்போது உங்களிடையே கிரியை செய்கையில், நீங்கள் இருக்கும் நிலைகளை அவர் கவனித்துக் கொண்டே கிரியை செய்யும்போதும் மற்றும் பேசும் போதும்—ஒவ்வொரு விதமான நிலையையும் எதிர்கொண்டு பேச அவரிடம் சரியான வார்த்தைகள் உள்ளன—ஜனங்களுக்குத் தேவையானதை மட்டுமே பேசுகிறார். அவருடைய கிரியையின் முதல் படியை எடுத்துக் கொள்ளுங்கள்: சிட்சிக்கும் நேரம். அதன் பிறகு, ஜனங்கள் எல்லா விதமான நடத்தைகளையும் வெளிப்படுத்தினர், மேலும் சில வழிகளில் கலகத்தனமாகவும் நடந்து கொண்டனர்; சில எதிர்மறை நிலைகளைப் போலவே பல்வேறு நேர்மறை நிலைகளும் தோன்றின. அவர்கள் தங்களையே வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் எதிர்மறையான நிலைகளையும், மிகவும் இழிவான வரம்பையும் அடைந்தனர். இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டே தேவன் தம்முடைய கிரியையை நடத்தியுள்ளார், இதனால் அவருடைய கிரியை மூலம் மிகச் சிறந்த முடிவை அடைய அவர்களைக் கைப்பற்றுகிறார். அதாவது, எந்த நேரத்திலும் அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர் ஜனங்களிடையே நிலையான கிரியையைச் செய்கிறார்; ஜனங்களின் உண்மையான நிலைகளுக்கு ஏற்ப அவர் தனது கிரியையின் ஒவ்வொரு படியையும் செயல்படுத்துகிறார். சிருஷ்டிப்புக்கள் அனைத்தும் அவருடைய கைகளில் உள்ளன; அவர் அவர்களை எப்படி அறியாமல் போவார்? ஜனங்களின் நிலைகளுக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எங்கும் செய்யப்பட வேண்டிய அடுத்தக் கட்ட கிரியைகளை தேவன் செய்கிறார். எந்த வகையிலும் இந்தக் கிரியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்படவில்லை; அது மனுஷனின் கருத்து! அவர் தனது கிரியையின் முடிவுகளை அவதானித்துக் கொண்டே கிரியை செய்கிறார், மேலும் அவருடைய கிரியை தொடர்ந்து ஆழமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது; ஒவ்வொரு முறையும், அவருடைய கிரியையின் முடிவுகளை அவதானித்தபின், அவர் தனது கிரியையின் அடுத்தப் படியை செயல்படுத்துகிறார். அவர் படிப்படியாக மாறுவதற்கும் காலப்போக்கில் தனது புதிய படைப்பை ஜனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் சகலத்தையும் பயன்படுத்துகிறார். இந்த விதமான கிரியையால் ஜனங்களுக்கான தேவைகளை வழங்க முடியும், ஏனென்றால் தேவன் ஜனங்களை நன்கு அறிவார். இப்படியாகவே அவர் தனது கிரியையைப் பரலோகத்திலிருந்து செயல்படுத்துகிறார். அதேபோல், தேவனின் மனுஷ அவதாரமும் அவருடைய கிரியையை அதே வழியில் செய்கிறது, உண்மையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகளைச் செய்து ஜனங்களிடையே கிரியை செய்கிறது. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் அவருடைய சிருஷ்டிப்புகள் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை, கவனமாக முன்பே திட்டமிடப்படவும் இல்லை. உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின், மனுஷகுலம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை யெகோவா கண்டார், அதனால் அவர் ஏசாயா தீர்க்கதரிசியின் வாயைப் பயன்படுத்தி, நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிந்தபின், கிருபையின் யுகத்தில் மனுஷகுலத்தை மீட்பதற்கான தனது கிரியையைச் செய்வார் என்று யெகோவா முன்னறிவித்தார். இது யெகோவாவின் திட்டமாகும், ஆனால் அந்த நேரத்தில் அவர் அவதானித்த சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது; ஆதாமைச் சிருஷ்டித்த உடனேயே அவர் நிச்சயமாக அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஏசாயா வெறுமனே ஒரு தீர்க்கதரிசனத்திற்கு குரல் கொடுத்தார், ஆனால் யெகோவா நியாயப்பிரமாண யுகத்தில் இந்தக் கிரியைக்கு முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை; மாறாக, கிருபையின் யுகத்தின் ஆரம்பத்தில் அவர் அதைச் செயல்படுத்தினார்; யோசேப்பின் கனவில் தூதர் தோன்றி, தேவன் மாம்சமாகுவார் என்ற செய்தியை அவருக்குத் தெளிவூட்டினார், அப்போதுதான் அவருடைய மனுஷ அவதாரக் கிரியை தொடங்கியது. ஜனங்கள் கற்பனை செய்தபடி, உலகத்தைச் சிருஷ்டித்த உடனேயே மனுஷ அவதாரம் எடுப்பதற்கு தேவன் தயாராக இருக்கவில்லை; மனுஷகுலம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது மற்றும் சாத்தானுக்கு எதிரான அவரது போரின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இது தீர்மானிக்கப்பட்டது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 149

தேவன் மாம்சமாக மாறும்போது, அவருடைய ஆவி ஒரு மனுஷனின் மீது இறங்குகிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் ஆவி தன்னை ஒரு சரீரத்தால் அலங்கரிக்கிறது. சில வரையறுக்கப்பட்ட படிகளைத் தன்னுடன் கொண்டு வரக்கூடாது என்பதற்காக அவர் பூமியில் தனது கிரியையைச் செய்ய வருகிறார்; அவரது கிரியை முற்றிலும் வரம்பற்றது. பரிசுத்த ஆவியானவர் மாம்சத்தில் மேற்கொள்ளும் கிரியையானது அவரது கிரியையின் முடிவுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அவர் மாம்சத்தில் எவ்வளவு காலத்திற்குக் கிரியை செய்வார் என்பதை தீர்மானிக்க இதுபோன்றவற்றைப் பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் தன் கிரியையின் ஒவ்வொரு படியையும் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அவர் முன்னேறிச் செல்லச் செல்லத் தன் கிரியையை ஆராய்கிறார்; இந்தக் கிரியை மனுஷக் கற்பனையின் வரம்புகளை நீட்டிக்கும் அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. இது வானங்களையும், பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டிப்பதில் யேகோவாவின் கிரியை போன்றது; அவர் ஒரே நேரத்தில் திட்டமிட்டு பணியாற்றினார். அவர் அந்தகாரத்தில் இருந்து வெளிச்சத்தைப் பிரித்தார், காலையும் மாலையும் உருவானது—இதற்கு ஒரு நாள் பிடித்தது. இரண்டாவது நாளில், அவர் வானத்தைச் சிருஷ்டித்தார், அதுவும் ஒரு நாள் எடுத்தது; பின்னர் அவர் பூமி, சமுத்திரங்கள் மற்றும் அவற்றில் வசிக்கும் அனைத்து ஜீவஜந்துக்களையும் சிருஷ்டித்தார், அதற்கு இன்னொரு நாள் தேவைப்பட்டது. ஆறாம் நாள் வரை இது தொடர்ந்தது, தேவன் மனுஷனைச் சிருஷ்டித்து பூமியில் உள்ள அனைத்தையும் நிர்வகிக்க அனுமதித்தார். பின்னர், ஏழாம் நாளில், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்ததும், அவர் ஓய்வெடுத்தார். தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை ஒரு புனித நாளாக நியமித்தார். இந்தப் புனித நாளை அவர் மற்ற அனைத்தையும் சிருஷ்டித்தப் பிறகுதான் நிறுவ முடிவு செய்திருந்தார், அவற்றை உருவாக்குவதற்கு முன்பு அல்ல. இந்தக் கிரியையும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது; சகலத்தையும் சிருஷ்டிப்பதற்கு முன்பு, அவர் ஆறு நாட்களில் உலகையும், ஏழாம் நாளில் ஓய்வையும் சிருஷ்டிக்க முடிவு செய்திருக்கவில்லை; அது உண்மைகளுக்கு ஏற்ப இல்லை. அவர் அப்படி ஒரு விஷயத்திற்குக் குரல் கொடுக்கவும் இல்லை, அதைத் திட்டமிடவும் இல்லை. சகலத்தையும் சிருஷ்டிப்பது ஆறாம் நாளில் நிறைவடையும் என்றும் ஏழாம் நாள் ஓய்வெடுப்பார் என்றும் அவர் சொல்லவில்லை; மாறாக, அந்த நேரத்தில் அவருக்கு நல்லதாகத் தோன்றியதைப் பொறுத்து அவர் சிருஷ்டித்தார். அவர் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்ததும், அது ஏற்கனவே ஆறாவது நாளாக இருந்தது. அவர் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்தது ஐந்தாவது நாளாக இருந்திருந்தால், அவர் ஆறாவது நாளை ஒரு புனித நாளாக நியமித்திருப்பார். ஆனால், அவர் ஆறாவது நாளில்தான் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்தார், இதனால் ஏழாம் நாள் ஒரு புனித நாளாக மாறியது, தற்போதுவரை இந்நாளே அப்படியாக இருந்து வருகிறது. ஆதலால், அவரது தற்போதைய பணிகள் இதே முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் தேவைகளுக்கு அவர் பேசவும், வழங்கவும் செய்கிறார். அதாவது, ஆவியானவர் ஜனங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேசுகிறார், செயல்படுகிறார்; அவர் சகலத்தையும் கண்காணித்து, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கிரியை செய்கிறார். நான் செய்வது, சொல்வது, உங்கள் மீது வைப்பது, உங்களுக்கு வழங்குவது, இவை அனைத்தும் விதிவிலக்கு இல்லாமல், உங்களுக்கு தேவையானது மட்டுமே ஆகும். ஆகவே, எனது கிரியை எதுவும் யதார்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டதல்ல; அவை அனைத்தும் உண்மையானது தான், ஏனென்றால் “தேவனின் ஆவி அனைவரையும் கண்காணிக்கிறது,” என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவை அனைத்தும் காலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தால், இவை மிகவும் துல்லியமாக இருந்திருக்காதா? ஆறாயிரம் ஆண்டுகள் முழுமைக்குமான திட்டங்களை தேவன் வகுத்ததாகவும், பின்னர் மனுஷகுலத்தைக் கலகக்காரர்களாக, எதிர்ப்பவர்களாக, வக்கிரமும் வஞ்சகமும் கொண்டவர்களாக, மாம்சத்தின் சீர்கேட்டினைக் கொண்டவர்களாக, சாத்தானின் மனநிலையைக் கொண்டவர்களாக, கண்களில் ஆசை கொண்டவர்களாக மற்றும் தனிப்பட்ட இன்பங்களைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவர் முன்னரே முன்குறிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் நினைப்பது போலாகும். இவை எதுவும் தேவனால் முன்னரே முன்குறிக்கப்படவில்லை, மாறாகச் சாத்தானின் சீர்கேட்டின் முடிவாகவே இவை அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன. “சாத்தானும் தேவனின் பிடியில் இருந்திருக்கவில்லையா? சாத்தான் இவ்விதத்தில் மனுஷனைச் சீரழிப்பான் என்று தேவன் முன்னரே தீர்மானித்திருந்தார், அதன் பிறகு, தேவன் தம்முடைய கிரியையை மனுஷர்களிடையே செயல்படுத்தினார்,” என்று சிலர் பேசுவர். மனுஷகுலத்தைச் சீரழிக்க தேவன் உண்மையிலேயே சாத்தானை முன்குறித்திருப்பாரா? மனுஷகுலத்தை இயல்பாக வாழ அனுமதிக்கவே தேவன் மிகவும் ஆர்வமாக உள்ளார், எனவே அவர் உண்மையில் அவர்களது ஜீவிதங்களில் தலையிடுவாரா? அப்படியானால், சாத்தானைத் தோற்கடித்து மனுஷகுலத்தை இரட்சிப்பது ஒரு பயனுள்ள முயற்சியாக இருந்திருக்காதா? மனுஷகுலத்தின் கலகத்தன்மை எவ்வாறு முன்னரே முன்குறிக்கப்பட்டிருக்க முடியும்? அது சாத்தானின் குறுக்கீட்டால் நிகழ்ந்த ஒன்று, எனவே அதை தேவனால் எவ்வாறு முன்னரே முன்குறிக்கப்பட்டிருக்க முடியும்? நீங்கள் பேசும் தேவனின் பிடியில் உள்ள சாத்தான், நான் பேசும் தேவனின் பிடியில் உள்ள சாத்தானிடமிருந்து மிகவும் வித்தியாசமானவன். “தேவன், சர்வவல்லவர். சாத்தான் அவரது கைகளுக்குள் இருக்கிறான்,” என்ற உங்களது கூற்றுகளின்படி பார்த்தால், சாத்தானால் ஒருபோதும் அவருக்குத் துரோகமிழைத்திருக்க முடியாது. தேவன் சர்வவல்லமை கொண்டவர் என்று நீங்கள் சொல்லவில்லையா? உங்கள் அறிவு மிகவும் சிறியதாக இருக்கிறது, மேலும் அது மெய்மையுடன் தொடர்பில் இல்லை; மனுஷனால் ஒருபோதும் தேவனின் எண்ணங்களையும் புரிந்து கொள்ள முடியாது, மனுஷனால் ஒருபோதும் அவருடைய ஞானத்தையும் புரிந்து கொள்ள முடியாது! தேவன் சர்வவல்லமை உள்ளவர்; இது ஒரு பொய்யே அல்ல. பிரதான தூதன் தேவனுக்கு துரோகமிழைத்தான், ஏனென்றால் தேவன் ஆரம்பத்தில் அவனுக்கு அதிகாரத்தின் ஒரு பங்கைக் கொடுத்திருந்தார். நிச்சயமாக, ஏவாள் சர்ப்பத்தின் சோதனையில் வீழ்ந்ததைப் போல இதுவும் ஓர் எதிர்பாராத நிகழ்வுதான். இருப்பினும், சாத்தான் தனது துரோகத்தை எப்படி நிகழ்த்தினாலும், அவனால் இன்னும் தேவனைப் போல சர்வவல்லமை கொள்ள முடியவில்லை. நீங்கள் கூறியது போல், சாத்தான் வெறும் வலிமைமிக்கவன்தான்; அவன் என்ன செய்தாலும், தேவனின் அதிகாரம் எப்போதும் அவனைத் தோற்கடிக்கும். “தேவன் சர்வவல்லமையுள்ளவர், சாத்தான் அவருடைய கைகளுக்குள் இருக்கிறான்,” என்ற கூற்றின் பின்னணியில் உள்ள உண்மையான அர்த்தம் இதுதான். எனவே, சாத்தானுடனான போர் ஒரு நேரத்தில் ஓர் அடியெடுத்து வைப்பதாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், சாத்தானின் தந்திரங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே தேவன் தனது கிரியையைத் திட்டமிடுகிறார்—அதாவது, அவர் மனுஷகுலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்து, காலத்திற்கு ஏற்றவாறு அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறார். அதேபோல், கடைசி நாட்களுக்கான கிரியை ஆரம்ப காலத்திலேயே, கிருபையின் யுகத்திற்கு முன்பே முன்குறிக்கப்படவில்லை; பின்வருவனவற்றை போல முன்குறித்தல்கள் ஒழுங்கான முறையில் செய்யப்படவில்லை: முதலாவதாக, மனுஷனின் வெளிப்புற மனநிலையை மாற்றுதல்; இரண்டாவதாக, மனுஷனை அவனுக்கான சிட்சைக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்துதல்; மூன்றாவதாக, மனுஷன் மரண விசாரணைக்கு உட்படுத்தப்படுதல்; நான்காவதாக, மனுஷன் தேவனை நேசிக்கும் நேரத்தை அனுபவிக்க வைத்தல் மற்றும் அவனை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தீர்மானத்தை வெளிப்படுத்த வைத்தல்; ஐந்தாவது, தேவனின் விருப்பத்தைக் காணவும் அவரை முழுமையாக அறிந்து கொள்ளவும் மனுஷனை அனுமதித்தல், இறுதியாக மனுஷனை பரிபூரணப்படுத்துதல். அவர் கிருபை யுகத்தில் இவை அனைத்தையும் திட்டமிடவில்லை; மாறாக, அவர் தற்போதைய காலத்தில் அவற்றைத் திட்டமிடத் தொடங்கினார். தேவனைப் போலவே சாத்தானும் தன் கிரியையைச் செய்கிறான். சாத்தான் அவனது சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறான், அதேசமயம் தேவன் நேரடியாகப் பேசி, சில இன்றியமையாத விஷயங்களை வெளிப்படுத்துகிறார். இதுதான் இன்று செய்யப்படும் கிரியை, மேலும், உலகத்தைச் சிருஷ்டித்த பின்னர், நீண்ட காலத்திற்கு முன்பே இதேபோன்று செயல்படும் கிரியைதான் பயன்படுத்தப்பட்டது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 150

தேவன் முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், பின்னர் அவர் ஒரு சர்ப்பத்தையும் படைத்தார். எல்லாவற்றைக் காட்டிலும், இந்த சர்ப்பம் மிகுந்த விஷம் கொண்டதாக இருந்தது; அதன் சரீரத்தில் விஷம் இருந்தது, சாத்தான் அதைப் பயன்படுத்திக் கொண்டான். சர்ப்பமே ஏவாளை பாவம் செய்ய தூண்டியது. ஏவாள் பாவம் செய்தபின் ஆதாம் பாவம் செய்தான், பின்னர் அவர்கள் இருவராலும் நன்மை தீமைகளை வேறுபடுத்தி அறிய முடிந்தது. சர்ப்பம் ஏவாளைச் சோதிக்கும் என்றும் ஏவாள் ஆதாமைச் சோதிப்பாள் என்றும் யேகோவா அறிந்திருந்தால், அவர் ஏன் அனைவரையும் ஒரு தோட்டத்திற்குள் வைத்திருந்தார்? இந்த விஷயங்களை அவரால் கணிக்க முடிந்திருந்தால், அவர் ஏன் ஒரு சர்ப்பத்தைச் சிருஷ்டித்து ஏதேன் தோட்டத்திற்குள் வைத்தார்? நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஏதேன் தோட்டம் ஏன் கொண்டிருந்தது? அவர்கள் அந்தக் கனியை புசிக்க வேண்டும் என்பதற்காகவா? யேகோவா வந்தபோது, ஆதாமோ ஏவாளோ அவரை எதிர்கொள்ளத் துணியவில்லை, அப்போதுதான், அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க கனியைப் புசித்து, சர்ப்பத்தின் தந்திரத்திற்கு இரையாகிவிட்டார்கள் என்பதை யேகோவா அறிந்தார். இறுதியில், அவர் சர்ப்பத்தைச் சபித்தார், ஆதாமையும் ஏவாளையும் கூட சபித்தார். அவர்கள் இருவரும் அந்த விருட்சத்தின் கனியைப் புசித்தபோது, அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்பதை யேகோவா அறிந்திருக்கவில்லை. தீமை கொண்டவர்களாகவும் மற்றும் பாலியல் ரீதியாக ஒழுங்கற்ற நிலையைக் கொண்டவர்களாகவும் மனிதகுலம் சீர்கெட்டுப்போனது, அவர்கள் இருதயத்தில் அடைத்து வைத்திருந்த அனைத்தும் தீயவையாகவும், அநீதியானவையாகவும் மாறிப்போனது; அவை அனைத்தும் அசுத்தமானவை. ஆகவே மனிதகுலத்தைச் சிருஷ்டித்ததற்காக யேகோவா வருந்தினார். அதன்பிறகு, நோவாவும் அவனுடைய குமாரரும் தப்பிப்பிழைத்த ஒரு ஜலப்பிரளயத்தால் உலகை அழிக்கும் தன் கிரியையை அவர் மேற்கொண்டார். சில விஷயங்கள் உண்மையில் ஜனங்கள் நினைக்கும் அளவுக்கு மேம்பட்டதாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்டவையாகவும் இருப்பதில்லை. சிலர், “பிரதான தூதன் தனக்கு துரோகமிழைப்பான் என்று தேவன் அறிந்திருந்ததால், அவர் எதற்காக அவனை சிருஷ்டித்தார்?” என்று கேட்கிறார்கள். இவை தான் உண்மைகள்: பூமி சிருஷ்டிக்கப்படும் முன், பிரதான தூதனே பரலோகத்தின் தேவதூதர்களில் மிகப் பெரியவனாக இருந்தான். பரலோகத்திலுள்ள எல்லா தேவதூதர்கள் மீதும் அவன் அதிகாரம் கொண்டிருந்தான்; இதுவே தேவன் கொடுத்த அதிகாரம். தேவனுக்கு அடுத்து, இவனே பரலோக தேவதூதர்களில் மிகப் பெரியவன். பின்னர், தேவன் மனிதகுலத்தைச் சிருஷ்டித்த பிறகு, பூமியில் பிரதான தூதன் தேவனுக்கு எதிராக இன்னும் பெரிய துரோகத்தை நிகழ்த்தினான். அவன் மனிதகுலத்தை நிர்வகிக்கவும் தேவனின் அதிகாரத்தை மிஞ்சவும் விரும்பியதால், அவன் தேவனுக்குத் துரோகமிழைத்தான் என்று நான் சொல்கிறேன். ஏவாளை பாவம் செய்யத் தூண்டியது பிரதான தூதனே, மேலும் அவன் அவ்வாறு செய்ததற்குக் காரணம், அவன் பூமியில் தன் ராஜ்யத்தை நிலைநாட்டவும், மனுஷர் தேவனுக்குப் புறம்பாகத் திரும்பி, அதற்குப் பதிலாகப் பிரதான தூதனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்பினான் என்பதே ஆகும். தேவதூதர்கள் மற்றும் பூமியிலுள்ள ஜனங்கள் உட்பட சகலமும் தனக்குக் கீழ்படியும் என்று பிரதான தூதன் அறிந்துகொண்டான். பறவைகள் மற்றும் மிருகங்கள், விருட்சங்கள், காடுகள், மலைகள், ஆறுகள் மற்றும் மனுஷரின் பராமரிப்பில் இருக்கும் சகலமும்—அதாவது ஆதாமும், ஏவாளும்—அதேநேரத்தில் ஆதாமும் ஏவாளும் பிரதான தூதனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஆகவே, பிரதானத் தூதன் தேவனின் அதிகாரத்தை மீறி தேவனுக்குத் துரோகமிழைக்க விரும்பினான். அதன்பிறகு, அவன் பல தேவதூதர்களை தேவனுக்கு எதிரான கலகத்திற்கு வழிநடத்தினான், பின்னர் அவர்கள் பல்வேறு வகையான அசுத்த ஆவிகளாக மாறிப்போயினர். இன்றுவரை மனிதகுலத்தின் வளர்ச்சி பிரதான தூதனின் சீர்கேட்டால் ஏற்பட்டவை, இல்லையா? பிரதான தூதன் தேவனுக்குத் துரோகமிழைத்ததாலும், மனிதகுலத்தைச் சீரழித்ததாலும்தான் மனுஷர் இன்று இந்நிலையில் இருக்கிறார்கள். ஜனங்கள் கற்பனை செய்யக்கூடிய அளவிற்குச் சுருக்கமாகவும் எளிமையாகவும் இந்தப் படிப்படியான கிரியைகள் ஒருபோதும் இருக்கவில்லை. சாத்தான் ஒரு காரணத்திற்காகத் தனது துரோகத்தை மேற்கொண்டான், ஆனாலும் இதுபோன்ற ஓர் எளிய உண்மையை ஜனங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வானங்களையும், பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டித்த தேவன் எதற்காகச் சாத்தானையும் சிருஷ்டித்தார்? தேவன் சாத்தானை மிகவும் வெறுக்கிறார், மேலும் சாத்தான் அவருடைய எதிரியும் கூட, இருப்பினும் அவர் ஏன் சாத்தானைச் சிருஷ்டித்தார்? சாத்தானைச் சிருஷ்டிப்பதன் மூலம், அவர் ஓர் எதிரியைச் சிருஷ்டிக்கவில்லையா? தேவன் உண்மையில் ஓர் எதிரியைச் சிருஷ்டிக்கவில்லை; மாறாக, அவர் ஒரு தேவதூதனைச் சிருஷ்டித்தார், பின்னர் அந்த தேவதூதன் அவருக்குத் துரோகமிழைத்தான். அவனது நிலை மிகவும் உயர்ந்ததாக வளர்ந்தது, அதன் காரணமாகவே அவன் தேவனுக்குத் துரோகமிழைக்க விரும்பினான். இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று கூட ஒருவர் கூறலாம், ஆனால் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வும் கூட. ஒரு குறிப்பிட்ட நிலைக்கு முதிர்ச்சியடைந்த பின்னரும் ஒருவன் எவ்வாறு தவிர்க்க முடியாமல் மரிக்கிறானோ, இதுவும் அதுபோலத்தான்; விஷயங்கள் இப்போது அந்த நிலைக்கு வளர்ந்திருக்கின்றன. சில அபத்தமான முட்டாள்கள், “சாத்தான் உம் எதிரி என்பதால், நீர் ஏன் அதைச் சிருஷ்டித்தீர்? பிரதான தூதன் உமக்கு துரோகமிழைப்பான் என்று உமக்குத் தெரியாதா? உம்மால் நித்தியத்திலிருந்து நித்தியம் வரை பார்க்க முடியவில்லையா? பிரதான தூதனின் இயல்பு உமக்குத் தெரியாதா? அவன் உமக்குத் துரோகமிழைப்பான் என்பதை நீர் தெளிவாக அறிந்திருந்ததால், நீர் ஏன் அவனை ஒரு பிரதான தூதனாக மாற்றினீர்? அவன் உமக்குத் துரோகமிழைத்தது மட்டுமல்லாமல், தன்னுடன் பல தேவதூதர்களையும் வழிநடத்தி, மனிதகுலத்தைச் சீர்கெட்டுப்போக வைக்க மனுஷரின் உலகத்திற்கு வந்திறங்கினான். ஆனாலும் இன்றுவரை, உம்மால் உமது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தை முழுமையாக்க முடியவில்லை,” என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தைகள் சரியானவையா? நீ இவ்வாறாகச் சிந்திக்கும்போது, அவசியமானதை விட அதிக சிக்கலில் நீ உன்னையே சிக்க வைத்துக் கொள்வதில்லையா? இன்னும் சிலர், “சாத்தான் இன்றுவரை மனிதகுலத்தைச் சீர்கெட்டுப்போக வைக்கவில்லை என்றால், தேவன் இப்படி மனுஷகுலத்தின் இரட்சிப்பைக் கொண்டு வந்திருக்க மாட்டார். எனவே, தேவனின் ஞானமும், சர்வவல்லமையும் கண்ணுக்குத் தெரியாததாக இருந்திருக்கும்; அவருடைய ஞானம் எங்கே வெளிப்பட்டிருக்கும்? ஆகவே, தேவன், பின்னர் தனது சர்வவல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகச் சாத்தானுக்கான ஒரு மனித இனத்தை உருவாக்கினார்—இல்லையெனில், தேவனின் ஞானத்தை மனுஷன் எவ்வாறு கண்டுபிடிப்பான்? மனுஷன், தேவனை எதிர்க்கவில்லை அல்லது அவருக்கு எதிராகக் கலகம் செய்யவில்லை என்றால், அவருடைய செயல்கள் வெளிப்படுவது தேவையற்றதாக இருந்திருக்கும். சிருஷ்டிக்கப்பட்டவை அனைத்தும் அவரை வணங்கி அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தால், தேவன் செய்ய வேண்டிய எந்தக் கிரியையும் இருந்திருக்காது,” என்கின்றனர். இது மெய்மைக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் தேவனைப் பற்றி இழிவானது என்று எதுவுமே இல்லை, எனவே அவரால் அசுத்தத்தை உருவாக்க முடியாது. தன் எதிரியைத் தோற்கடிப்பதற்கும், தாம் படைத்த மனுஷரை இரட்சிப்பதற்கும், மேலும், தேவனை வெறுக்கும், அவருக்குத் துரோகஞ்செய்யும், அவரை எதிர்க்கும் பிசாசுகளையும் சாத்தானையும் தோற்கடிப்பதற்கும் மட்டுமே அவர் தனது கிரியைகளை இப்போது வெளிப்படுத்துகிறார். ஆதியில் பிசாசுகளும், சாத்தானும் தேவனின் ஆதிக்கத்தின் கீழ், அவருக்கே சொந்தமானவையாக இருந்தவை. தேவன் இந்தப் பிசாசுகளை தோற்கடிக்க விரும்புகிறார், அவ்வாறு செய்யும்போது, சகலத்திற்கும் தன் சர்வவல்லமையை வெளிப்படுத்துகிறார். மனுஷகுலமும், பூமியிலுள்ள சகலமும் இப்போது சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன, மேலும் பொல்லாதவர்களின் ஆதிக்கத்தின் கீழும் உள்ளன. தேவன் தம் கிரியைகளைச் சகலத்திற்கும் வெளிப்படுத்த விரும்புகிறார், இதனால் ஜனங்கள் அவரை அறிந்துகொள்வார்கள், இதன் மூலம் சாத்தானைத் தோற்கடித்து, எதிரிகளை முற்றிலுமாக வெல்வார்கள். இந்தக் கிரியையின் முழுமையானது அவருடைய கிரியைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அவருடைய சிருஷ்டிப்புக்கள் அனைத்தும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன, எனவே தேவன் தம்முடைய சர்வவல்லமையை அவர்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறார், இதன் மூலம் சாத்தானைத் தோற்கடிப்பார். சாத்தான் இல்லை என்றால், அவர் தன் கிரியைகளை வெளிப்படுத்தத் தேவையில்லை. சாத்தானின் துன்புறுத்தல் இல்லாதிருந்திருந்தால், தேவன் மனிதகுலத்தைச் சிருஷ்டித்து அதனை ஏதேன் தோட்டத்தில் வாழ வழிநடத்தியிருப்பார். சாத்தானின் துரோகத்திற்கு முன்பு, தேவன் தம்முடைய எல்லாக் கிரியைகளையும் தேவதூதர்களிடமோ அல்லது பிரதான தூதனிடமோ ஏன் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை? ஆரம்பத்தில், எல்லா தேவதூதர்களும், பிரதான தூதனும் தேவனை அறிந்திருந்தால், அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தால், தேவன் அந்த அர்த்தமற்ற கிரியைகளைச் செய்திருக்க மாட்டார். சாத்தான் மற்றும் பிசாசுகள் இருப்பதனாலேயே, மனுஷரும் தேவனை எதிர்க்கிறார்கள், மேலும் கலகத்தனமான மனநிலையால் நிரப்பப்படுகிறார்கள். ஆகவே தேவன் தம்முடைய கிரியைகளை வெளிப்படுத்த விரும்புகிறார். அவர் சாத்தானுடன் போர் செய்ய விரும்புவதால், அவனைத் தோற்கடிக்க அவர் தனது சொந்த அதிகாரத்தையும் தன் எல்லாக் கிரியைகளையும் பயன்படுத்த வேண்டும்; இவ்வாறாக, அவர் மனுஷரிடையே செய்யும் இரட்சிப்பின் கிரியை அவர்களை அவரது ஞானத்தையும் சர்வவல்லமையையும் காண அனுமதிக்கும். இன்று தேவன் செய்து வரும் கிரியை அர்த்தமுள்ளதாக இருக்கிறது, “நீர் செய்யும் கிரியை முரண்பாடானதாக இல்லையா? இந்தக் கிரியையின் தொடர்ச்சியானது உமக்குச் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு விஷயமல்லவா? நீர் சாத்தானை சிருஷ்டித்தீர், பின்னர் உமக்குத் துரோகஞ்செய்யவும், எதிர்க்கவும் அவனை அனுமதித்தீர். நீர் மனுஷரைச் சிருஷ்டித்து, பின்னர் அவர்களைச் சாத்தானிடம் ஒப்படைத்தீர், ஆதாமையும் ஏவாளையும் சோதிக்க அனுமதித்தீர். இவற்றையெல்லாம் நீர் வேண்டுமென்றே செய்ததால், நீர் ஏன் இன்னும் மனிதகுலத்தை வெறுக்கிறீர்? நீர் ஏன் சாத்தானை வெறுக்கிறீர்? இவை அனைத்தும் உம் சொந்தச் சிருஷ்டிப்புக்கள் இல்லையா? நீர் வெறுக்குமளவிற்கு என்ன இருக்கிறது?” என்று ஒரு சில அபத்தமான ஜனங்கள் சொல்லும் விஷயங்களுக்கு ஒருபோதும் தேவனின் கிரியை ஒப்பாகாது. அவர்கள் தேவனை நேசிக்க விரும்புகிறார்கள், ஆனால் இருதயத்தின் ஆழத்தில், அவர்கள் தேவனைப் பற்றி குறை கூறுகிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! நீ உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை, உனக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட பல எண்ணங்கள் உள்ளன, மேலும் தேவன் தவறு செய்ததாகவும் கூட நீ கூறுகிறாய்—நீ எவ்வளவு அபத்தமானவன்! நீதான் சத்தியத்தைத் தவறாகக் கையாளுகிறாய்; தேவன் தவறு செய்திருக்கிறார் என்பது விஷயம் அல்ல! சிலர் மீண்டும் மீண்டும், “நீர்தான் சாத்தானைச் சிருஷ்டித்தீர், நீர்தான் சாத்தானை மனுஷரிடையே அனுப்பி, அவர்களை இவனிடம் ஒப்படைத்தீர். மனுஷர், சாத்தானிய மனநிலையைப் பெற்றதும், நீர் அவர்களை மன்னிக்கவில்லை; மாறாக, நீர் அவர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெறுத்தீர். முதலில் நீர் அவர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நேசித்தீர், ஆனால் இப்போது நீர் அவர்களை வெறுக்கிறீர். நீர்தான் மனிதகுலத்தை வெறுத்தீர், ஆனாலும் மனிதகுலத்தை நேசித்தவரும் நீரே. இங்கே என்ன தான் நடக்கிறது? இது ஒரு முரண்பாடு அல்லவா?” என்று புகார் கூறுகிறார்கள். நீ அதை எப்படிப் பார்த்தாலும், பரலோகத்தில் இதுதான் நடந்தது; பிரதான தூதன், தேவனுக்குத் துரோகமிழைத்த விதமும், மனிதகுலம் சீர்கெட்டுப்போனதும் இப்படித்தான், மேலும் மனுஷர் இன்றுவரை இப்படித்தான் இருந்துவருகிறார்கள். நீங்கள் அதை எப்படிப்பட்ட விதத்தில் சொல்ல நினைத்தாலும், அதுதான் முழுக் கதை. எவ்வாறாயினும், தேவன் இன்று செய்து வரும் இந்தக் கிரியையின் முழு நோக்கமும் உங்களை இரட்சிப்பதற்காகவும், சாத்தானை தோற்கடிப்பதற்காகவும்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 151

தேவன், சாத்தானைத் தோற்கடிக்க மனுஷ நிர்வகித்தலைப் பயன்படுத்துகிறார். ஜனங்களைச் சீரழிப்பதன் மூலம், சாத்தான் அவர்களின் தலைவிதியை நெருக்கி, தேவனின் கிரியையைச் சீர்குலைக்கிறான். மறுபுறம், மனிதகுலத்தை இரட்சிப்பதே தேவனின் கிரியையாக இருக்கிறது. தேவன் செய்யும் கிரியையின் எந்தக் கட்டம் மனிதகுலத்தை இரட்சிப்பதற்காக இல்லை? எந்த நடவடிக்கை ஜனங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும், அவர்கள் நீதியுடன் நடந்துகொள்வதற்கும், நேசிக்கக்கூடியவர்களின் உருவத்தை வெளிப்படுத்துவதற்கும் இல்லை? இருப்பினும், சாத்தான் இதைச் செய்வதில்லை. அவன் மனிதகுலத்தைச் சீரழிக்கிறான்; அவன் தொடர்ந்து பிரபஞ்சம் முழுவதும் மனிதகுலத்தைச் சீரழிக்கும் கிரியையை மேற்கொள்கிறான். நிச்சயமாக, தேவன் சாத்தானிடம் கவனம் செலுத்தாமல் தனது சொந்தக் கிரியையைச் செய்கிறார். சாத்தானுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரம் தேவனால் வழங்கப்பட்டதே; தேவன் அவருடைய எல்லா அதிகாரத்தையும் மொத்தமாகக் கொடுக்கவில்லை, எனவே சாத்தான் என்ன செய்தாலும், அவனால் ஒருபோதும் தேவனை மிஞ்ச முடியாது, எப்போதும் தேவனின் பிடியில்தான் இருக்கமுடியும். தேவன் பரலோகத்தில் இருந்தபோது அவருடைய எந்தக் கிரியைகளையும் வெளிப்படுத்தவில்லை. அவர் வெறுமனே சாத்தானுக்கு அதிகாரத்தின் ஒரு சிறிய பகுதியைக் கொடுத்து, மற்ற தேவதூதர்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவர அவர் அனுமதித்தார். ஆகையால், சாத்தான் என்ன செய்தாலும், அவனால் தேவனின் அதிகாரத்தை மிஞ்ச முடியாது, ஏனென்றால் தேவன் முதலில் வழங்கிய அதிகாரம் மிகக் குறைவானதுதான். தேவன் கிரியை செய்கையில், சாத்தான் இடையூறு செய்கிறான். கடைசி நாட்களில், அவனது இடையூறுகள் முடிவடையும்; அதேபோல், தேவனின் கிரியையும் முடிவடையும், மேலும் தேவன் பரிபூரணப்படுத்த விரும்பும் மனுஷர், பரிபூரணப்படுத்தப்படுவர். தேவன், ஜனங்களை நேர்மறையாக வழிநடத்துகிறார்; அவரது வாழ்க்கை ஜீவத்தண்ணீர்போன்றது, அளவிட முடியாதது மற்றும் எல்லையற்றது. சாத்தான் மனுஷனை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சீரழித்துவிட்டான்; முடிவில், ஜீவத்தண்ணீர் மனுஷனைப் பரிபூரணப்படுத்தும், சாத்தானால் தலையிட்டு அவனது கிரியையைச் செய்ய இயலாது. இதன்மூலம், தேவனால் இந்த ஜனங்களை முழுமையாகத் திரும்பப் பெற முடியும். இப்போது கூட, சாத்தான் இதை ஏற்க மறுக்கிறான்; அவன் தொடர்ந்து தேவனுக்கு எதிராகத் தன்னைத் தூண்டுகிறான், ஆனால் அவர் அதைக் கவனிப்பதே இல்லை. “சாத்தானின் அந்தகாரப் படைகள் அனைத்தையும், சகல அந்தகாரச் செல்வாக்குகளையும் நான் வெற்றி கொள்வேன்,” என்று தேவன் கூறியுள்ளார். இது இப்போது மாம்சத்தில் செய்யப்பட வேண்டிய கிரியை, மேலும் இதுவே தேவன் மாம்சமாக மாறுவதையும் முக்கியமாக்குகிறது: அதாவது, கடைசி நாட்களில் சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையின் கட்டத்தை நிறைவு செய்வதற்கும், சாத்தானுக்குச் சொந்தமான அனைத்தையும் துடைத்தெறிவதற்கும் இந்தக் கிரியை செயல்படுத்தப்படும். சாத்தானுக்கு எதிரான தேவனுடைய வெற்றி தவிர்க்கமுடியாதது! உண்மையில், சாத்தான் ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே தோல்வியடைந்து விட்டான். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசம் முழுவதும் சுவிசேஷம் பரவத் தொடங்கியபோது—அதாவது, தேவனின் மனுஷ அவதரிப்பு அவருடைய கிரியையைத் தொடங்கியதும், இந்தக் கிரியை செயல்பாட்டிற்கு வந்தது—சாத்தான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டான், ஏனென்றால் மனுஷ அவதரிப்பின் நோக்கம் சாத்தானை வெல்வதே ஆகும். தேவன் மீண்டும் மாம்சமாகி, எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாத தன் கிரியையைத் துவங்கிவிட்டார் என்பதைச் சாத்தான் கண்டவுடனேயே, இந்தக் கிரியையைக் கண்டு அவன் திகைத்துப்போனான், மேலும் எந்தக் குறும்புகளையும் செய்யத் துணியவில்லை. முதலில் சாத்தான், தானும் ஏராளமான ஞானத்தைக் கொண்டிருப்பதாக நினைத்து, தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவித்தான்; எவ்வாறாயினும், தேவன் மீண்டும் மாம்சமாக மாறுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை, அல்லது அவருடைய கிரியையில், மனுஷரை வென்று சாத்தானைத் தோற்கடிக்க தேவன் சாத்தானின் கலகத்தனத்தை மனிதகுலத்திற்கான வெளிப்பாடாகவும் நியாயத்தீர்ப்பாகவும் பயன்படுத்துவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தேவன் சாத்தானை விட புத்திசாலி, அவருடைய கிரியைகள் அதை விட புத்திசாலித்தனமானவை. ஆகையால், நான் முன்பு கூறியது போல், “நான் செய்யும் கிரியை சாத்தானின் தந்திரங்களுக்குப் பிரதியுத்தரமாக மேற்கொள்ளப்படுகிறது; இறுதியில், நான் என் சர்வவல்லமையையும், சாத்தானின் வல்லமையற்ற தன்மையையும் வெளிப்படுத்துவேன்.” தேவன் தனது கிரியையை முன்னணியில் மேற்கொள்வார், அதே நேரத்தில் சாத்தான் பின்னால் மேற்கொள்வான், இறுதியில், அவன் அழிக்கப்படுவான்—தன்னை எது அடித்தது என்று கூட அவனுக்குத் தெரியாது! அடித்து நொறுக்கப்பட்ட பின்னரே அவன் உண்மையை உணருவான், அதற்குள் அவன் ஏற்கனவே அக்கினிக்கடலில் எரிக்கப்பட்டிருப்பான். அப்போது அவன் முழுமையாக உறுதிப்பட்டிருப்பான் இல்லையா? ஏனென்றால், சாத்தானுக்குக் கிரியை செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இருக்காது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 152

மனுஷன் மத்தியில் தேவனுடைய கிரியை என்பது மனுஷனிடமிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்றது, ஏனென்றால் மனிதனே இந்தக் கிரியையின் இலக்காக இருக்கின்றான், மற்றும் மனுஷன் மாத்திரமே தேவனுக்குச் சாட்சியத்தைக் கொண்டிருக்கக்கூடிய வகையில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே சிருஷ்டியாக இருக்கின்றான். மனுஷனின் வாழ்க்கை மற்றும் அவனது செயல்பாடுகள் அனைத்தும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட இயலாதவையாக இருக்கின்றன, மற்றும் இவை அனைத்தும் தேவனுடைய கரங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன, மற்றும் எந்த நபரும் தேவன் இல்லாமல் இருக்க முடியாது என்றும்கூட கூறலாம். எவரொருவரும் இதை மறுக்க முடியாது, ஏனெனில் இது ஒரு உண்மையாக இருக்கின்றது. தேவன் செய்கின்ற யாவும் மனுக்குலத்தின் பிரயோஜனத்திற்கானதாகவே இருக்கின்றது, மற்றும் அது சாத்தானின் சூழ்ச்சிகளுக்கு எதிராக செயல்படுத்தப்படுகின்றது. மனுஷனுக்குத் தேவையான அனைத்தும் தேவனிடமிருந்தே வருகின்றது, தேவனே மனுஷனுடைய வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கின்றார். இவ்வாறாக, மனுஷன் தேவனிடத்திலிருந்து பிரியக்கூடாதவனாக இருக்கிறான். மேலும் தேவன் மனுஷனிலிருந்து பிரிந்து செல்வதற்கான எந்த நோக்கத்தையும் ஒருபோதும் கொண்டிருந்தது இல்லை. தேவன் செய்கின்ற கிரியை சகல மனுக்குலத்தின் நிமித்தமானதாக இருக்கின்றது, மற்றும் அவருடைய எண்ணங்கள் எப்பொழுதும் இரக்கமுள்ளவையாகவே இருக்கின்றன. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய சிந்தனைகள் (அதாவது, தேவனுடைய சித்தம்) என்ற இரண்டுமே மனுஷனால் அறியப்பட வேண்டிய “தரிசனங்களாக” இருக்கின்றன. இப்படிப்பட்ட தரிசனங்கள் தேவனுடைய நிர்வகித்தலாக இருக்கின்றன, மற்றும் மனிதனால் செய்யப்பட்டிருக்க முடியாத கிரியையாக இருக்கின்றன. அதேவேளையில், தேவன் தம்முடைய கிரியையின்போது, மனுஷன் செய்யும்படி அவனிடத்தில் அவர் கேட்டுக்கொள்கின்ற விஷயங்கள் மனுஷனின் “நடைமுறை” என்று அழைக்கப்படுகின்றன. தரிசனங்கள் என்பவை தேவனுடைய கிரியையாக இருக்கின்றன, அல்லது அவை மனுக்குலத்திற்கான அவரது சித்தமாக இருக்கின்றன அல்லது அவருடைய கிரியையின் இலக்குகளாக மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. தரிசனங்கள் நிர்வகித்தலின் ஒருபகுதி என்றும் கூறப்படலாம், ஏனெனில் இந்த நிர்வகித்தல் தேவனின் கிரியையாக இருக்கின்றது, மற்றும் இது மனுஷனை நோக்கிச் செலுத்தப்படுகின்றது, இது மனுஷன் மத்தியில் தேவன் செய்கின்ற கிரியை என்று அர்த்தப்படுகின்றது. இந்தக் கிரியையானது தேவனுக்கு சாட்சியமாகவும் மற்றும் மனுஷன் தேவனை இதன்மூலம் அறியவரும் பாதையாகவும் இருக்கின்றது, மற்றும் இது மனுஷனுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. தேவனின் கிரியை பற்றிய அறிவுக்குக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மக்கள் தேவன் மீதான நம்பிக்கை பற்றிய கோட்பாடுகளுக்கே கவனம் செலுத்துகின்றார்கள், அல்லது அற்பமான முக்கியமில்லாத விவரங்களைக் கவனிக்கிறார்கள், பின்பு அவர்கள் தேவனை அறியாதிருப்பார்கள், மேலும் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்க மாட்டார்கள். தேவனைப் பற்றிய மனுஷனின் அறிவுக்கு மிகவும் உதவக்கூடிய தேவனுடைய கிரியையே தரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்தத் தரிசனங்கள் தேவனுடைய கிரியையாக, தேவனுடைய சித்தமாக மற்றும் தேவனுடைய கிரியையின் இலக்குகளாக மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன; இவை அனைத்தும் மனுஷனுக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன. நடைமுறை என்பது மனுஷனால் செய்யப்பட வேண்டியதைக் குறிக்கிறது, அதாவது தேவனைப் பின்பற்றும் சிருஷ்டிகளால் செய்யப்பட வேண்டியவை, மற்றும் இது மனுஷனின் கடமையாகவும் இருக்கின்றது. மனுஷன் என்ன செய்யவேண்டியவனாக இருக்கிறான் என்பது தொடக்கத்திலிருந்தே மனுஷனால் புரிந்துகொள்ளப்படுகிற ஒன்றாக இருக்கவில்லை, ஆனால் தேவன் தமது கிரியையின்போது மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றவைகளாக இருக்கின்றது. தேவன் கிரியை செய்கையில், கேட்டுக்கொள்கின்ற யாவும் படிப்படியாக மிகவும் ஆழமாகவும் உயர்ந்ததாகவும் ஆகின்றன. உதாரணமாக, நியாயப்பிரமாண யுகத்தின்போது, மனுஷன் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தது, மற்றும் கிருபையின் யுகத்தின்போது, மனுஷன் சிலுவையைச் சுமக்க வேண்டியதாயிருந்தது. ராஜ்யத்தின் யுகம் மாறுபட்டதாக இருக்கின்றது: மனிதன் செய்யும்படிக் கேட்டுக்கொள்ளப்படுபவைகள் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றில் இருந்தவைகளைவிட உயர்வானவைகளாய் இருக்கின்றன. தரிசனங்கள் இன்னும் அதிகமாக உயர்த்தப்படும்போது, மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவை இன்னும் உயருகின்றன, மற்றும் மிகவும் தெளிவாகவும் இன்னும் அதிகம் உண்மையாகவும் ஆகின்றன. அதேபோல், தரிசனங்களும் அதிகம் உண்மையாகின்றன. இத்தனை அதிக உண்மையான தரிசனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் மனுஷனுக்கு உகந்தவைகளாக இருப்பது மட்டுமின்றி, இன்னும் அதிகமாக, தேவனைப்பற்றிய அவனது அறிவுக்கும் உகந்தவையாக இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 153

முந்தைய யுகங்களுடன் ஒப்பிடும்போது, ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது தேவனுடைய கிரியை மிகவும் நடைமுறைக்கு உரியதாக இருக்கின்றது, மனுஷனின் சாராம்சம் மற்றும் அவனது மனநிலையின் மாற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது, மேலும் தேவனைப் பின்பற்றும் அனைவரும் அவருக்கு அதிகமாய்ச் சாட்சியம் தரக்கூடியவர்கள் ஆக்குகின்றது. வேறுவார்த்தைகளில் கூறுவதென்றால், ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது, தேவன் செயல்படுகையில், கடந்தகாலங்களில் வேறு எந்தக் காலத்தைக் காட்டிலும் அதிகமாக தேவன் தம்மைக் காண்பிக்கின்றார், அதாவது மனுஷனால் அறியப்பட வேண்டிய தரிசனங்கள், முந்தைய எந்த யுகத்தைக் காட்டிலும் உயர்வானவைகளாக இருக்கின்றன. மனுஷர்களிடையே தேவனுடைய கிரியையானது முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்திருப்பதால், ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது மனுஷனால் அறியப்பட்ட தரிசனங்கள் எல்லா நிர்வாகக் கிரியையிலும் மிகவும் உயர்ந்தவையாக இருக்கின்றன. தேவனுடைய கிரியை முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்திருக்கின்றது, மற்றும் மனுஷனால் அறியப்படவேண்டிய தரிசனங்கள், மற்ற எல்லாத் தரிசனங்களையும்விட மிகவும் உயர்ந்தவைகள் ஆகிவிட்டன, மற்றும் இதன்விளைவாக மனுஷனின் நடைமுறையும் முந்தைய யுகங்கள் எதிலும் இருந்ததைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கிறது, ஏனெனில் மனுஷனின் நடைமுறையானது தரிசனங்களுடன் படிப்படியாக மாறுகிறது, மற்றும் தரிசனங்களின் பரிபூரணத்துவமானது மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவற்றின் பரிபூரணத்துவத்தையும் குறிக்கிறது. தேவனின் நிர்வகித்தல் அனைத்தும் ஒரு நிறுத்தத்திற்கு வந்த உடனே, மனுஷனின் நடைமுறையும் ஒழியும், தேவனுடைய கிரியை இல்லாத நிலையில், மனுஷன் தேர்ந்துகொள்ள, கடந்த காலக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தல் என்பதைத் தவிர வேறெதுவும் கொண்டிருக்க மாட்டான், இல்லையேல் திரும்புவதற்கு வெறுமனே எந்த இடமும் அவனுக்கிராது. புதியதரிசனங்கள் இல்லையேல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் புதிய நடைமுறை எதுவும் இருக்காது; முழுமையான தரிசனங்கள் இல்லையேல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் பரிபூரணமான நடைமுறை இருக்காது; உயர்வான தரிசனங்கள் இல்லாமல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் உயர்வான நடைமுறை இருக்காது. தேவனுடைய அடிச்சுவடுகளுடன் கூடவே மனுஷனின் நடைமுறை மாறுகிறது, மற்றும், அதுபோலவே, தேவனுடைய கிரியையுடன் கூடவே மனுஷனின் அறிவும் அனுபவமும் மாறுகின்றன. மனுஷன் எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும், அவன் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இன்னமும் இருக்கிறான், தேவன் கிரியை செய்வதை ஒரு கணம் மாத்திரம் நிறுத்தினால், மனுஷன் உடனடியாக அவருடைய கோபத்தினால் மரித்துப்போவான். மனுஷனிடம் பெருமைபாராட்ட ஒன்றுமில்லை, ஏனெனில் இன்று மனுஷனின் அறிவு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவனது அனுபவங்கள் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், அவன் தேவனுடைய கிரியையில் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்கிறான்—ஏனெனில் மனுஷனின் நடைமுறையும், தேவன் மீதான நம்பிக்கையில் அவன் தேட வேண்டியவையும், தரிசனங்களில் இருந்து பிரிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு நிகழ்விலும், மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய தரிசனங்கள் உள்ளன, மற்றும், இவற்றைப் பின்பற்றி, பொருத்தமான கோரிக்கைகள் மனுஷனால் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தரிசனங்களை அடித்தளமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், மனுஷன் நடைமுறையில் வெறுமனே திறனற்றவனாக இருப்பான், அத்துடன் மனுஷன் உறுதியாக தேவனைப் பின்பற்ற இயலாத நிலையில் இருப்பான். மனுஷன் தேவனை அறியாது அல்லது தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாது இருந்தால், மனுஷன் செய்கிற எல்லாம் வீணானதாக இருக்கும், மற்றும் அவை தேவனால் அங்கீகரிக்கப்பட இயலாதவையாக இருக்கும். மனுஷனின் கொடைகள் எவ்வளவு ஏராளமாயிருந்தாலும், அவன் இன்னும் தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலில் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்கிறான். மனுஷனின் செயல்கள் எவ்வளவு நல்லவைகளாக இருப்பினும் அல்லது மனுஷன் எத்தனையோ செயல்களைச் செய்தாலும், இன்னமும் அவர்களால் தேவனுடைய கிரியைக்கு மாற்றாக எதுவும் செய்துவிட முடியாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மனுஷனின் நடைமுறையானது தரிசனங்களிலிருந்து பிரிக்கப்பட இயலாது. புதிய தரிசனங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் புதிய நடைமுறையைக் கொண்டிருப்பதில்லை. அவர்களின் நடைமுறையானது சத்தியத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் கோட்பாடுகளில் நிலைத்திருந்து, மரித்துப்போன நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்; அவர்கள் புதிய தரிசனங்கள் எவற்றையும் கொண்டிருப்பதில்லை, இதன் விளைவாக, அவர்கள் புதிய யுகத்திலிருந்து எதையும் நடைமுறைப்படுத்துவது இல்லை. அவர்கள் தரிசனங்களை இழந்திருக்கிறார்கள், அவ்வாறு செய்வதால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் இழந்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் சத்தியத்தை இழந்திருக்கிறார்கள். சத்தியம் இல்லாதவர்கள் அபத்தத்தின் வம்சாவளியினராய் இருக்கின்றனர், அவர்கள் சாத்தானின் உருவமாகவே இருக்கின்றனர். ஒருவர் எந்த வகையான நபராக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கிரியையின் தரிசனங்கள் இன்றி இருக்க முடியாது, மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் இருந்து விலகி இருக்க முடியாது; ஒருவர் தரிசனங்களை இழந்தவுடன், ஒருவர் உடனடியாக பாதாளத்தில் இறங்குகிறார் மற்றும் இருளின் மத்தியில் வாழ்கிறார். தரிசனம் இல்லாதவர்கள் மதியீனமாக தேவனைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாதவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதில்லை, மாறாகத் தேவனுடைய நாமத்தை ஓர் அடையாள அட்டை போலத் தொங்கவிட்டுக் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மாம்சமாக அவதரித்த தேவனை அறியாதவர்கள், தேவனுடைய நிர்வகித்தல் முழுமையிலும் கிரியையின் மூன்று கட்டங்களை அறியாதவர்கள்—இவர்கள் தரிசனங்களை அறிவதில்லை, எனவே சத்தியம் இல்லாமல் இருக்கின்றார்கள். மேலும், சத்தியத்தைக் கொண்டிராதவர்கள் எல்லாப் பொல்லாங்கும் செய்பவர்கள் அல்லவா? சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பவர்கள், தேவனைப் பற்றிய அறிவை நாட மனவிருப்பம் கொண்டவர்கள், மற்றும் தேவனுடன் உண்மையிலேயே ஒத்துழைப்பவர்கள், தரிசனங்களை ஓர் அடித்தளமாகக் கொண்டு செயல்படும் ஜனங்களாக இருக்கின்றனர். இவர்கள் தேவனால் அங்கீகரிக்கப்படுகின்றார்கள், ஏனென்றால் இவர்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறார்கள், மற்றும் இந்த ஒத்துழைப்புதான் மனிதனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 154

நடைமுறைப்படுத்தும் பலபாதைகளைத் தரிசனங்கள் கொண்டுள்ளன. மனிதனால் ஏற்படுத்தப்பட வேண்டிய நடைமுறைக் கோரிக்கைகளும் தரிசனங்களுக்குள் இருக்கின்றன, அதேபோன்று மனுஷனால் அறிந்திருக்கப்பட வேண்டிய தேவனின் கிரியையும் இதில் இருக்கின்றது. கடந்தகாலத்தில், சிறப்புக் கூட்டங்கள் அல்லது பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாபெரும் கூட்டங்களின்போது, நடைமுறைப்பாதையினுடைய ஓர் அம்சம் மட்டுமே பேசப்பட்டது. இப்படிப்பட்ட நடைமுறை கிருபையின் காலத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, மற்றும் அது தேவனுடைய அறிவுடன் அரிதாகவே எந்தத் தொடர்பையும் கொண்டிருந்தது, ஏனெனில் கிருபையின் காலத்தினுடைய தரிசனம், இயேசு சிலுவையில் அறையப்பட்டதின் தரிசனமாக மட்டும் இருந்தது, மற்றும் வேறு எந்தப் பெரிய தரிசனங்களும் இருந்ததில்லை. சிலுவையில் அறையப்படுவதன் மூலம் மனிதகுலத்தை அவர் மீட்பதற்கான ஊழியத்தைக்காட்டிலும் அதிகமான எதையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டியதில்லை, மற்றும், கிருபையின் யுகத்தின்போது மனிதன் தெரிந்து கொள்ளுவதற்கு வேறு எந்தத் தரிசனங்களும் இருந்ததில்லை. இதனால், மனுஷன் தேவனைப் பற்றிக் குறைவான அறிவு மட்டுமே கொண்டிருந்தான், இயேசுவின் அன்பு மற்றும் பரிவிரக்கம் ஆகியவை பற்றிய அறிவைத்தவிர, நடைமுறைப்படுத்துவதற்கு எளிய மற்றும் இரக்கம் உண்டுபண்ணுகிற ஒரு சில விஷயங்கள் மாத்திரமே இருந்தன, அவை இன்றைய விஷயங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தன. கடந்த காலங்களில், மனுஷனின் சபை கூடுகை எந்தவிதத்தில் நடைபெற்றிருந்தாலும், அவன் தேவனுடைய கிரியையின் நடைமுறை அறிவைப்பற்றிப் பேச இயலாதவனாக இருந்தான், மனுஷன் பிரவேசிப்பதற்கு மிகவும் பொருத்தமான நடைமுறைப் பாதை எதுவாக இருந்தது என்பதை எவரொருவராலும் தெளிவாகக் கூற இயலாததாகவே இருந்தது. மனுஷன் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையின் அடித்தளத்திற்குச் சில எளிய விவரங்களை மட்டுமே பேசினான்; அவனது நடைமுறையின் சாராம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஏனென்றால் அதே யுகத்தில் தேவன் எந்தப் புதிய கிரியையும் செய்யவில்லை, மற்றும் மனுஷன் செய்யும்படிக்கு அவனிடத்தில் அவர் கேட்டுக்கொண்டவை சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை, அல்லது சிலுவையைச் சுமத்தல் என்பவையாக மாத்திரம் இருந்தன. இத்தகைய நடைமுறைகளைத் தவிர, இயேசு சிலுவையில் அறையப்பட்டதைவிட உயர்ந்த தரிசனங்கள் எதுவும் இல்லை. கடந்த காலத்தில், மற்ற தரிசனங்களைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஏனென்றால் தேவன் ஒருபெரிய அளவிலான கிரியையைச் செய்யவில்லை, மேலும் அவர் மனுஷனிடத்தில் குறைவான கோரிக்கைகளை மட்டுமே வைத்தார். இதனால், மனுஷன் என்ன செய்தாலும், அவன் இந்த எல்லைகளை மீற இயலாதிருந்தான், இவை மனுஷனால் நடைமுறைப் படுத்தப்படக்கூடிய ஒருசில எளிய மற்றும் ஆழமற்ற விஷயங்களின் எல்லைகளாகவே இருந்தன. இன்று நான் மற்ற தரிசனங்களைப்பற்றிப் பேசுகின்றேன், ஏனென்றால் இன்று, அதிகமான கிரியைகள் செய்யப்பட்டுள்ளன, இவை நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமான கிரியையாக இருக்கின்றன. மனுஷன் செய்ய வேண்டியவைகளும் கடந்துபோன யுகங்களைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமானவையாக இருக்கின்றன. மனுஷன் இப்படிப்பட்ட கிரியையை முழுமையாக அறிய இயலாமல் இருக்கின்றான் என்றால், அது முக்கியத்துவம் எதையும் கொண்டிராது; மனுஷன் தன் வாழ்நாள் முழுவதுமானப் பிரயாசத்தை இதற்கு அர்ப்பணிக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட கிரியையை முழுமையாக அறிவதில் மனுஷன் சிரமம் கொண்டிருப்பான் என்று கூறப்பட முடியும். ஜெயங்கொள்ளுதலின் கிரியையில், நடைமுறைப் பாதையைப் பற்றி மட்டுமே பேசுவது என்பது மனுஷனின் ஜெயங்கொள்ளுதலைச் சாத்தியமற்றதாக்கும். மனுஷன் செய்ய வேண்டியவை எதையும் செய்யாமல், தரிசனங்கள் பற்றி வெறுமனே பேசுதலும்கூட மனுஷனின் ஜெயங்கொள்ளுதலைச் சாத்தியமற்றதாக்கும். நடைமுறைப் பாதை தவிர வேறு எதைப்பற்றியும் பேசப்பட்டிருந்ததில்லை என்றால், மனுஷனின் குணத்தில் உள்ள பலவீனத்தைத் தாக்குவது, அல்லது மனுஷனின் கருத்துக்களை அகற்றுவது சாத்தியமற்றதாக இருக்கும், மற்றும் அதுபோன்றே மனுஷனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலும் சாத்தியமற்றதாக இருக்கும். தரிசனங்கள் மனுஷனுடைய ஜெயங்கொள்ளுதலின் முக்கியமான கருவிகளாக இருக்கின்றன, இருப்பினும் தரிசனங்கள் நீங்கலாக நடைமுறைப் பாதை இருந்ததில்லை என்றால், பின்பு மனிதன் பின்பற்ற வழி எதையும் கொண்டிருக்கமாட்டான், அவன் பிரவேசிப்பதற்கான வழிகள் எதையும் கொண்டிருக்கமாட்டான். இது தொடக்கத்தில் இருந்து முடிவுவரை தேவனுடைய கிரியையின் கொள்கையாக இருந்துள்ளது: நடைமுறைப் படுத்தக்கூடியது தரிசனங்களில் இருக்கின்றது, மற்றும் நடைமுறைக்குக் கூடுதலானவைகளும் தரிசனங்களில் இருக்கின்றன. மனுஷனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களின் அளவு, மற்றும் அவனது மனநிலை ஆகிய இரண்டுமே தரிசனங்களில் மாற்றங்களுடன் இணைகின்றன. மனுஷன் தனது சொந்த முயற்சிகளை மட்டுமே நம்பியிருந்தால், எந்தவொரு பெரிய அளவிலான மாற்றத்தையும் சாதித்தல் அவனுக்குச் சாத்தியமற்றதாயிருக்கும். தரிசனங்கள் தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய நிர்வகித்தல் பற்றிப் பேசுகின்றன. நடைமுறை என்பது மனுஷனுடைய நடைமுறைப் பாதையையும், மனுஷனின் வாழ்வதற்கான வழியையும் குறிக்கிறது; தேவனுடைய நிர்வகித்தல் அனைத்திலும், தரிசனங்களுக்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவு என்பது தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான உறவாக இருக்கின்றது. தரிசனங்கள் நீக்கப்பட்டிருந்தால், அல்லது அவை நடைமுறைப் பேச்சு இன்றி பேசப்பட்டிருந்தன என்றால், அல்லது தரிசனங்கள் மட்டுமே இருந்தன மற்றும் மனிதனின் நடைமுறை அழிக்கப்பட்டிருந்தது என்றால், பின்பு இதுபோன்ற விஷயங்களை தேவனுடைய நிர்வகித்தலாகக் கருதமுடியாது, தேவனுடைய கிரியையானது மனுக்குலத்தினிமித்தமாகச் செய்யப்பட்டு இருக்கின்றது என்று கூறவும் முடியாது; இதனால், மனுஷனுடைய கடமை நீக்கப்பட்டிருக்கும் என்பது மாத்திரம் அல்ல, இது தேவனுடைய கிரியையின் நோக்கத்தை மறுதலித்தலாகவும் இருக்கும். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, தேவனுடைய கிரியையின் ஈடுபாடு இல்லாமல், மனிதன் வெறுமனே நடைமுறைப்படுத்தும்படி மாத்திரம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தால், மற்றும் இதற்கும் அதிகமாக, மனிதன் தேவனுடைய கிரியையை அறியும்படிக் கேட்டுக்கொள்ளப்படாதிருந்தால், பின்பு அப்படிப்பட்ட கிரியையானது தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்பட்டிருந்திருக்காது. மனுஷன் தேவனை அறிந்திராமல், மற்றும் தேவனுடைய சித்தத்தைப் பற்றி அறியாமையில் இருந்து, மற்றும் தனது நடைமுறையைத் துல்லியமற்ற மற்றும் புலப்படாத வகையில் கண்மூடித்தனமாக செயல்படுத்தியிருந்தால், பின்பு அவன் ஒருபோதும் முற்றிலும் தகுதியான சிருஷ்டியாக மாட்டான். எனவே, இந்த இரண்டு விஷயங்களுமே இன்றியமையாதவையாக உள்ளன. தேவனுடைய கிரியை மட்டுமே இருந்திருந்தால், அதாவது, தரிசனங்கள் மட்டுமே இருந்திருந்து, மனிதனின் ஒத்துழைப்பும் நடைமுறையும் இல்லாதிருந்தால், இதுபோன்ற விஷயங்கள் தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்க முடியாது. மனிதனின் நடைமுறை மற்றும் பிரவேசம் மட்டுமே இருந்திருந்தால், பின்பு மனிதன் எவ்வளவு உயர்வான பாதையில் பிரவேசித்தாலும், இதுவும்கூட ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கும். மனிதனின் பிரவேசம் படிப்படியாகக் கிரியை மற்றும் தரிசனங்கள் ஆகியவற்றின் சுவட்டில் மாற வேண்டும்; அது ஒரு கணப்பொழுதில் திடீரென்று மாறமுடியாது. மனிதனுடைய நடைமுறைக் கொள்கைகள் சுயாதீனமானவைகளாக மற்றும் கட்டுப்பாடற்றவைகளாக இருப்பதில்லை, ஆனால் அவை குறிப்பிட்ட சில எல்லைகளுக்குள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட கொள்கைகள் கிரியையின் தரிசனங்களுக்கு இணங்க மாறுகின்றன. எனவே, தேவனுடைய நிர்வகித்தலானது இறுதியில் தேவனுடைய கிரியையாகவும் மனுஷனின் நடைமுறையாகவும் இறங்கி வருகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 155

நிர்வாகக் கிரியையானது மனிதகுலத்தின் நிமித்தமாக மட்டுமே வந்தது, அதாவது மனிதகுலத்தின் இருப்பின் நிமித்தமாக மட்டுமே அது எழுந்தது. மனிதகுலத்திற்கு முன்னதாகவோ அல்லது ஆதியில் வானங்களும் பூமியும் மற்றும் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டபோதோ நிர்வகித்தல் இருந்ததில்லை. தேவனுடைய சகல கிரியையிலும், மனுஷனுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு நடைமுறையும் இருந்ததில்லை என்றால், அதாவது, மோசம்போன மனுக்குலத்திற்குப் பொருத்தமான தேவைகளைத் தேவன் ஏற்படுத்தாதிருந்தால் (தேவனால் செய்யப்பட்ட கிரியையில், மனுஷனின் நடைமுறைக்குப் பொருத்தமான பாதை இருந்ததில்லை என்றால்), பின்பு இந்தக் கிரியை தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்பட்டிருக்க முடியாது. தேவனுடைய கிரியை முழுமையும், மோசம் போன மனுஷர்களிடம் அவர்களின் நடைமுறையை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது பற்றிக் கூறிவதில் மாத்திரம் ஈடுபட்டிருந்தால், மற்றும் தேவன் தமது சொந்தக் கிரியையை மேற்கொள்ளாது இருந்தால், மற்றும் தமது சர்வவல்லமை அல்லது ஞானத்தைக் காட்சிப்படுத்தாதிருந்தால், பின்பு தேவன் மனுஷனிடம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுபவை எவ்வளவு உயர்ந்தவையாக இருப்பினும், மனுஷன் மத்தியில் தேவன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், மனுஷன் தேவனுடைய மனநிலை பற்றி எதையும் அறியமாட்டான்; விஷயம் இப்படியிருந்தால், பின்பு இவ்வகையான கிரியை தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்படக் குறைவான தகுதியுடையதாகவே இருக்கும். எளிமையாகச் சொன்னால், தேவனுடைய நிர்வாகக் கிரியையானது தேவனால் செய்யப்பட்ட கிரியையாக இருக்கின்றது, மற்றும் எல்லாக் கிரியையும் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்களினால் தேவனுடைய வழிநடத்துதலின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட கிரியையை நிர்வகித்தல் என்று சுருக்கமாகக் கூறலாம். வேறுவார்த்தைகளில் சொல்லுவதென்றால், மனிதர்களிடையே தேவனுடைய கிரியை, அதேபோல் அவரைப் பின்தொடரும் அனைவரும் அவருடன் ஒத்துழைத்தல் ஆகியவை ஒட்டுமொத்தமாக நிர்வகித்தல் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு, தேவனுடைய கிரியை தரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றது, மற்றும் மனிதனின் ஒத்துழைப்பு நடைமுறை என்று அழைக்கப்படுகிறது. தேவனுடைய கிரியை எவ்வளவு உயர்வாக உள்ளதோ (அதாவது, தரிசனங்கள் எவ்வளவு உயர்வாக உள்ளதோ), அவ்வளவுக்குத் தேவனுடைய மனநிலை மனுஷனுக்குத் தெளிவாக்கப்படுகிறது, அது மனுஷனின் கருத்துக்களுடன் எவ்வளவு அதிகமாய் முரண்படுகிறதோ, அவ்வளவுக்கு மனுஷனின் நடைமுறையும் ஒத்துழைப்பும் உயர்வாகிறது. மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவை எவ்வளவு உயர்வாகிறதோ, அவ்வளவாய்த் தேவனுடைய கிரியை மனுஷனின் கருத்துக்களில் இருந்து முரண்படுகின்றது, இதன் விளைவாக மனுஷனின் சோதனைகள், மற்றும் அவன் பூர்த்தி செய்யவேண்டிய தரங்களும் உயர்வாகின்றன. இந்தக் கிரியையின் முடிவில், எல்லாத் தரிசனங்களும் முழுமை அடைந்திருக்கும், மற்றும் மனுஷன் நடைமுறைப்படுத்த வேண்டியவை பரிபூரணத்தின் உச்சத்தை அடைந்திருக்கும். இது ஒவ்வொருவரும் அவரவருடைய வகையின்படியே வகைப்படுத்தப்படும் நேரமாகவும் இது இருக்கும், ஏனெனில் மனிதன் தெரிந்துகொள்ளவேண்டியது மனிதனுக்குக் காண்பிக்கப்படும். எனவே, தரிசனங்கள் அவற்றின் உச்சத்தை அடையும்போது, அதற்கேற்ற வகையில் கிரியையானது அதன் முடிவை நெருங்கும், மற்றும் மனுஷனின் நடைமுறையும் அதன் உச்சத்தை எட்டியிருக்கும். மனுஷனின் நடைமுறையானது தேவனுடைய கிரியையை அடிப்படையாகக் கொண்டுள்ளது, மற்றும் மனுஷனின் நடைமுறை மற்றும் ஒத்துழைப்பினால் மட்டுமே தேவனின் நிர்வகித்தல் முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. மனுஷன் என்பவன் தேவனுடைய கிரியையின் காட்சிப்பொருளாய் இருக்கிறான், மற்றும் தேவனின் அனைத்து நிர்வாகக் கிரியையின் இலக்காக இருக்கிறான், மற்றும் தேவனுடைய அனைத்து நிர்வகித்தலின் பலனாகவும் இருக்கின்றான். மனுஷனின் ஒத்துழைப்பின்றி தேவன் தனியாகக் கிரியை செய்தால், அவருடைய முழுக்கிரியையின் தெளிவான பலனாகச் செயல்பட ஒன்றும் இருக்க முடியாது, பின்னர் தேவனுடைய நிர்வகித்தலுக்குச் சிறிதளவு முக்கியத்துவமும் இருக்காது. தேவனின் கிரியையைத் தவிர, தேவன் தமது கிரியையை வெளிப்படுத்தவும், அதன் சர்வவல்லமையையும் ஞானத்தையும் நிரூபிக்கவும் பொருத்தமான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே தேவன் தமது நிர்வகித்தலின் நோக்கத்தை அடையமுடியும், மற்றும் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடிக்க இந்தக் கிரியை அனைத்தையும் பயன்படுத்தி இலக்கை அடையமுடியும். ஆகையால், மனுஷன் தேவனுடைய நிர்வகித்தலின் இன்றியமையாத ஒரு பகுதியாக இருக்கிறான், மற்றும் மனுஷனால் மட்டுமே தேவனின் நிர்வகித்தலைக் கனிகொடுக்கிறதாக மாற்றவும், அதன் இறுதிநோக்கத்தை அடையவும் முடியும்; மனுஷனைத் தவிர, வேறு எந்த சிருஷ்டியாலும் அத்தகைய கிரியையை மேற்கொள்ள முடியாது. மனுஷன் தேவனுடைய நிர்வாகக் கிரியையினுடைய உண்மையான இலக்காக வேண்டுமென்றால், மோசம்போன மனிதகுலத்தின் கீழ்ப்படியாமை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இது மனுஷனுக்கு வேறுபட்ட காலங்களுக்குப் பொருத்தமான பயிற்சி அளிக்கப்பட வேண்டியதிருக்கின்றது, மற்றும் தேவன் அதற்கு ஒத்திசைவான கிரியையை மனுஷர் மத்தியில் செயல்படுத்த வேண்டும். இந்த வழியில் மட்டுமே இறுதியில் தேவனுடைய நிர்வாகக் கிரியையினுடைய பலனாக உள்ள ஒரு குழுவினரான ஜனங்கள் ஆதாயப்படுத்தப்பட முடியும். மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியையானது, வெறுமனே தேவனுடைய கிரியையின் மூலமாக மட்டுமே தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்க முடியாது; இதை அடைய, அவருடைய கிரியைக்குப் பொருத்தமான உயிருள்ள மனுஷர்களும் அப்படிப்பட்ட சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். தேவன் இந்த மக்கள் மீது முதலில் கிரியை செய்வார், பின்பு இவர்கள் மூலம் அவரது கிரியை வெளிப்படுத்தப்படும், மற்றும் இவ்வாறு அவரது சித்தம் பற்றிய சாட்சியம் சிருஷ்டிகளின் மத்தியில் கொடுக்கப்படும், மற்றும் இதில், தேவன் தம்முடைய கிரியையின் இலக்கை அடைய வேண்டியதிருக்கும். சாத்தானைத் தோற்கடிக்கத் தேவன் தாம் மட்டும் தனியாகக் கிரியை செய்கிறதில்லை, ஏனென்றால் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியிலும் அவர் தாமே தமக்கு நேரடியான சாட்சியம் கொடுக்க முடியாது. அவர் அவ்வாறு செய்வதாயிருந்தால், மனுஷனை முற்றிலுமாக இணங்கச் செய்வது சாத்தியமற்றதாகும், எனவே அவனைத் தோற்கடிக்க மனிதன் மீது தேவன் கிரியை செய்யவேண்டும், அப்போது மட்டுமே அவர் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியில் சாட்சியத்தைப் பெற முடியும். மனுஷனின் ஒத்துழைப்பு இல்லாமல், தேவன் மாத்திரமே கிரியை செய்திருந்தால் அல்லது மனுஷன் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், மனுஷன் ஒருக்காலும் தேவனின் மனநிலையை அறிந்துகொள்ள இயலாதவனாக இருந்திருப்பான், மற்றும் அவன் தேவனுடைய சித்தத்தை என்றென்றைக்கும் அறியாதவனாக இருந்திருப்பான்; பின்பு தேவனுடைய கிரியையானது தேவனுடைய நிர்வாகக் கிரியை என்று அழைக்கப்பட்டிருக்க முடியாது. தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளாமல், மனுஷன் தான் மட்டுமே கடும்முயற்சி செய்வதும், மற்றும் தேடுவதும், மற்றும் கடினமாக உழைப்பதுமாக இருந்தான் என்றால், குறும்புகளைச் செய்கிறவனாயிருப்பான். பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல், மனுஷன் செய்கிறது என்னவோ, அது சாத்தானுடைய கிரியையாக இருக்கிறது, அவன் கலகக்காரனாகவும், பொல்லாங்கு செய்கிறவனாகவும் இருக்கிறான்; மோசம்போன மனிதகுலத்தினால் செய்யப்படும் எல்லாவற்றிலும் சாத்தான் காட்சிப்படுத்தப்படுகிறான், மற்றும் தேவனுடன் இணக்கமாகும் எதுவும் அங்கு இருப்பதில்லை, மற்றும் மனுஷன் செய்கிற யாவும் சாத்தானின் வெளிக்காட்டுதலாக இருக்கின்றது. பேசப்பட்ட எல்லாவற்றிலும், தரிசனங்களையும் மற்றும் நடைமுறையையும் தவிர எதுவும் இல்லை. தரிசனங்களின் அடிப்படையில், நடைமுறையையும் கீழ்ப்படிதலின் பாதையையும் மனுஷன் கண்டறிகின்றான், இதனால் அவன் தன் கருத்துக்களை ஒதுக்கிவைக்கலாம், மற்றும் கடந்தகாலங்களில் அவன் கொண்டிராத அந்த விஷயங்களை ஆதாயப்படுத்தலாம். மனுஷன் தேவனுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று தேவன் கேட்கின்றார், அதாவது மனுஷன் தேவனுடைய கோரிக்கைகளுக்கு முழுமையாக அடிபணியவேண்டும் என்று தேவன் கோருகின்றார், மற்றும் தேவன் செய்த கிரியையை மனுஷன் பார்க்கும்படியாகவும், தேவனுடைய சர்வவல்லமையை அனுபவிக்கும்படியாகவும், மற்றும் தேவனுடைய மனநிலையை அறிந்துகொள்ளும் படியாகவும் கேட்டுக்கொள்கிறார். சுருக்கமாகக் கூறுவதென்றால், இவை தேவனுடைய நிர்வகித்தலாக இருக்கின்றது. மனுஷனுடனான தேவனின் ஒன்றிணைவு என்பது நிர்வகித்தலாக இருக்கின்றது, மற்றும் இது மிகப்பெரிய நிர்வகித்தலாக இருக்கின்றது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 156

தரிசனங்களை உள்ளடக்கியது முக்கியமாக தேவன் தாமே செய்கின்ற கிரியையைக் குறிக்கின்றது, மற்றும் நடைமுறை தொடர்பானது மனுஷனால் செய்யப்பட வேண்டும், மற்றும் தேவனுடன் இதற்கு எவ்விதத்தொடர்பும் இல்லை. தேவனுடைய கிரியை தேவனாலேயே முடிக்கப்படுகின்றது, மற்றும் மனுஷனின் நடைமுறை மனிதனாலேயே அடையப்படுகிறது. தேவனால் செய்யப்பட வேண்டியது மனுஷனால் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை, மனுஷனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது தேவனுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது. தேவனுடைய கிரியை அவருடைய சொந்த ஊழியமாகும், மற்றும் அது மனுஷனுடன் எந்த தொடர்பும் கொண்டிருப்பதில்லை. இந்தக் கிரியை மனுஷனால் செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் தேவனால் செய்யப்பட வேண்டிய கிரியையை மனுஷன் செய்ய இயாலாதவனாக இருப்பான். மனுஷன் நடைமுறைப்படுத்தத் தேவையானது எதுவோ, அது மனுஷனால் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டும், அது அவனுடைய ஜீவனின் தியாகமாக இருந்தாலும், அல்லது சாட்சியாக நிற்க அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்தாலும்—இவை அனைத்தும் மனுஷனால் வெற்றிகரமாகச் செய்துமுடிக்கப்பட வேண்டும். தேவன் செய்ய வேண்டியதாக உள்ள கிரியை எல்லாவற்றையும் தேவன் தாமே செய்து முடிக்கின்றார், மனுஷன் செய்ய வேண்டியது எதுவோ அது மனுஷனுக்குக் காட்டப்படுகின்றது, மற்றும் எஞ்சியுள்ள கிரியை மனுஷன் செய்வதற்கு விடப்படுகிறது. தேவன் கூடுதல் கிரியை செய்கிறதில்லை. அவர் தம்முடைய ஊழியத்திற்குள் இருக்கும் கிரியையை மாத்திரம் செய்கின்றார், மற்றும் மனுஷனுக்கு வழியை மாத்திரம் காட்டுகின்றார், மற்றும் வழியைத் திறக்கும் கிரியையை மாத்திரம் செய்கின்றார், வழியை ஆயத்தப்படுத்தும் கிரியையைச் செய்வதில்லை; இது அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும், மற்றும் இவை அனைத்தும் மனுஷனின் கடமையாகும், இது மனுஷனால் செய்யப்பட வேண்டும், மற்றும் இதில் தேவன் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை. மனுஷனைப் போலவே, தேவனும் சத்தியத்தில் துன்பத்தை அனுபவித்து மற்றும் சுத்திகரிப்படைய வேண்டும் என்று மனிதன் கோரினால், பின்பு மனுஷன் கீழ்ப்படியாதவனாக இருக்கிறான். தேவனுடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதேயாகும், மற்றும் தேவனின் வழிகாட்டுதல்கள் எல்லாவற்றிற்கும், எந்த எதிர்ப்பும் இன்றிக் கீழ்ப்படிவதே மனுஷனின் கடமையாக இருக்கிறது. தேவன் எவற்றில் எவ்விதம் கிரியை செய்கின்றார் அல்லது ஜீவிக்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் அடைவதற்கு கடமைப்பட்டிருக்கிறவற்றை அவன் அடைந்தே தீர வேண்டும். தேவன் மாத்திரமே மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்க முடியும், அதாவது இது தேவன் மாத்திரமே மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்க தகுதி வாய்ந்தவராய் இருக்கின்றார். மனுஷன் தன்னை முழுமையாகக் கீழ்ப்படுத்தி மற்றும் நடைமுறைப் படுத்துதலைத் தவிர வேறு எந்த விருப்பத்தையும் கொண்டிருக்கக் கூடாது மற்றும் வேறு எதுவும் செய்யக் கூடாது; இது மனிதன் கொண்டிருக்க வேண்டிய உணர்வாக இருக்கிறது. தேவனால் செய்யப்பட வேண்டிய கிரியை முடிந்தவுடன், மனுஷன் அதைப் படிப்படியாக அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். முடிவில், தேவனுடைய நிர்வகித்தல் எல்லாம் நிறைவடைந்து இருக்கும்போது, மனுஷன் செய்யும்படிக்கு தேவன் கேட்டுக்கொண்டவற்றை அவன் இன்னமும் செய்திருக்கவில்லை என்றால், மனுஷன் தண்டிக்கப்பட வேண்டும். தேவனுடைய கோரிக்கைகளை மனுஷன் நிறைவேற்றாதிருக்கிறான் என்றால், இது மனுஷனின் கீழ்ப்படியாமையினால் ஆனதாக இருக்கிறது; இது தேவன் தமது கிரியையில் எல்லா வகையிலும் முழுமையானவராக இருந்திருக்கவில்லை என்று அர்த்தப்படுகிறதில்லை. தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் அனைவரும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவர்கள், மற்றும் தங்களது விசுவாசத்தைக் கொடுக்க முடியாதவர்கள் மற்றும் தங்களது கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள் ஆகிய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இன்று, நீங்கள் அடைய வேண்டியவை கூடுதலான கோரிக்கைகள் அல்ல, ஆனால் மனுஷனின் கடமையாகவும் மற்றும் அனைத்து மக்களாலும் செய்ய வேண்டியவையாகவும் இருக்கின்றன. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவோ அல்லது அதை நன்றாகச் செய்யவோ இயலாதவர்களாய் இருக்கிறீர்கள் என்றால், பின்பு நீங்கள் உங்கள் மீது தொல்லையைக் கொண்டுவரவில்லையா? நீங்கள் மரணத்தோடு ஊடாடுவதில்லையா? எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் பெறுவோம் என்று நீங்கள் இன்னமும் எப்படி எதிர்பார்க்க முடியும்? தேவனுடைய கிரியை மனிதகுலத்தின் நிமித்தமாகச் செய்யப்படுகின்றது, மற்றும் மனுஷனின் ஒத்துழைப்பு தேவனின் நிர்வகித்தலின் நிமித்தமாக வழங்கப்படுகிறது. தேவன் தாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தபின், மனுஷன் தனது நடைமுறையில் விருப்பத்துடன் இருக்க வேண்டும், மற்றும் தேவனுடன் ஒத்துழைக்க வேண்டும். தேவனுடைய கிரியையில், மனுஷன் எந்த முயற்சியையும் இடையூறாக விட்டுவைக்கக் கூடாது, அவன் தனது விசுவாசத்தை அளிக்க வேண்டும், மற்றும் எண்ணற்ற கருத்துக்களில் ஈடுபடாமல், அல்லது செயலற்று அமராமல் மற்றும் மரணத்திற்குக் காத்திராமல் இருக்க வேண்டும். தேவன் தம்மையே மனுஷனுக்காகத் தியாகம் பண்ணக் கூடும், எனவே மனுஷன் தன் விசுவாசத்தை தேவனுக்கு ஏன் வழங்கக் கூடாது? மனுஷனை நோக்கி தேவன் ஒரே இருதயமும் சிந்தையும் கொண்டிருக்கின்றார், எனவே மனுஷன் ஏன் ஒரு சிறிய ஒத்துழைப்பை வழங்கக் கூடாது? தேவன் மனிதகுலத்திற்காகக் கிரியை செய்கின்றார், எனவே தேவனின் நிர்வகித்தலினிமித்தம் மனிதன் தனது கடமையில் சிலவற்றை ஏன் செய்யக் கூடாது? தேவனுடைய கிரியை இவ்வளவு தூரம் வந்திருக்கின்றது, இருப்பினும் இன்னமும் நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் செயல்படுவதில்லை, நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால் நகருவதில்லை. இப்படிப்பட்ட ஜனங்கள் அழிவின் இலக்குகளாக இருப்பதில்லையா? தேவன் ஏற்கெனவே தமக்குரிய எல்லாவற்றையும் மனிதனுக்காக அர்ப்பணித்துள்ளார், ஆகவே, இன்று, மனிதன் தன் கடமையை ஆர்வத்துடன் செய்ய இயலாதவனாக இருப்பது ஏன்? தேவனைப் பொறுத்த மட்டில், அவருடைய கிரியையே அவருடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது, அவருடைய நிர்வாகக் கிரியை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், பூர்த்தி செய்வதும் அவனுடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது. இதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடன் பேசப்பட்ட வார்த்தைகள் உங்கள் சாராம்சத்தின் மையப்பகுதியை எட்டியுள்ளன, மற்றும் தேவனுடைய கிரியையானது முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்த வழியின் உண்மை அல்லது தவறான தன்மையை ஜனங்களில் பலர் இன்னமும் புரிந்து கொள்ளுகிறதில்லை; அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் மற்றும் காணுகிறார்கள், மற்றும் தங்கள் கடமையைச் செய்வது இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மற்றும் கிரியையையும் ஆராய்கிறார்கள், அவர் என்ன சாப்பிடுகின்றார், எதை அணிகின்றார் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள், மற்றும் அவர்களின் கருத்துக்கள் இன்னும் அதிகத் துன்பம் தருபவையாகின்றன. அப்படிப்பட்ட ஜனங்கள் ஒன்றுமில்லாததைப் பற்றி அமளி செய்து கொண்டிருப்பதில்லையா? அப்படிப்பட்ட ஜனங்கள் தேவனை நாடுபவர்களாக இருக்கக் கூடுவது எப்படி? மேலும் அவர்களால் எப்படி தேவனுக்கு அடிபணிய நோக்கம் கொண்டிருக்க முடியும்? அவர்கள் தங்கள் விசுவாசத்தையும் கடமையையும் தங்கள் மனதின் பின்புறத்தில் வைத்து, அதற்குப் பதிலாகத் தேவன் எங்கிருக்கின்றார் என்பதின் மீது கவனம் செலுத்துகின்றார்கள். அவர்கள் அட்டூழியக்காரராய் இருக்கிறார்கள்! மனுஷன் தான் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் புரிந்து கொண்டு, அவன் நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்தால், பின்பு தேவன் நிச்சயமாக மனுஷன்மீது அவருடைய ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளியிருப்பார், ஏனென்றால் மனுஷனின் கடமையையும், மனுஷனால் செய்யப்பட வேண்டியவற்றையும் தான் தேவன் மனுஷனிடம் கேட்கிறார். மனுஷன் புரிந்துகொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொள்ள இயலாமலும், நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர இயலாமலும் இருந்தால், மனுஷன் தண்டிக்கப்படுவான். தேவனுடன் ஒத்துழைக்காதவர்கள் தேவனிடத்தில் பகைமை உடையவர்களாக இருக்கிறார்கள், புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள், இப்படிப்பட்ட ஜனங்கள் வெளிப்படையாக எதிர்க்கும் எதையும் செய்யாவிட்டாலும் கூட, அதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவானதாக இருக்கிறது. தேவனால் கோரும் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவராத எல்லோருமே, பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் சிறப்புக் கவனம் செலுத்தினாலும், வேண்டுமென்றே எதிர்க்கிறவர்களாக மற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் தேவனுக்கு அடிபணியாதவர்கள் கலகக்காரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தேவனுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் தேவனுடன் ஒத்துழைக்காதவர்களாக இருக்கிறார்கள், தேவனுடன் ஒத்துழைக்காதவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 157

தேவனுடைய கிரியை ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்போது, மற்றும் அவருடைய நிர்வகித்தல் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்போது, அவருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறவர்கள் எல்லோரும் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளைத் தேவன் தம்முடைய சொந்த தராதரங்களின்படியும், மற்றும் மனுஷன் சாதிக்கக்கூடிய திறனுக்கேற்றபடியும் ஏற்படுத்துகின்றார். அவருடைய நிர்வகித்தலைப் பற்றிப் பேசும்போது, அவர் மனுஷனுக்கான வழியையும் சுட்டிக்காட்டுகின்றார், மற்றும் மனுஷனின் பிழைப்புக்கான பாதையை வழங்குகின்றார். தேவனுடைய நிர்வகித்தல் மற்றும் மனுஷனின் நடைமுறை இரண்டும் ஒரே கட்ட கிரியையாக இருக்கின்றன, மற்றும் அவை ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. தேவனுடைய நிர்வகித்தல் பற்றிய பேச்சு மனுஷனுடைய மனநிலையின் மாற்றங்களுடன் தொடர்புகொண்டுள்ளது, மற்றும் மனுஷனால் செய்யப்படவேண்டியவை பற்றிய மற்றும் மனுஷனுடைய மனநிலையின் மாற்றம் பற்றிய அந்தப் பேச்சு, தேவனுடைய கிரியையுடன் தொடர்புகொண்டுள்ளது; இந்த இரண்டையும் பிரிப்பதற்கான நேரம் எதுவும் இருப்பதில்லை. மனுஷனின் நடைமுறையானது படிப்படியாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால், மனுஷனிடத்தில் தேவன் கேட்டுக்கொள்ளும் கோரிக்கைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன, மற்றும் தேவனின் கிரியையானது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது மற்றும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. மனுஷனின் நடைமுறையானது கோட்பாட்டில் அகப்பட்டிருந்தால், அவன் தேவனுடைய கிரியை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை பறிக்கப்பட்டவனாக இருக்கிறான் என்பதை இது நிரூபிக்கிறது; மனுஷனின் நடைமுறை ஒருபோதும் மாறாது அல்லது ஆழமாகச் செல்லாது என்றால், மனுஷனின் நடைமுறையானது மனுஷனின் விருப்பத்தின்படி செயல்படுத்தப்படுகிறது, மற்றும் அது சத்தியத்தின் நடைமுறையல்ல என்பதை நிரூபிக்கிறது; மனிதன் மிதித்துச் செல்வதற்குப் பாதை எதையும் கொண்டிருப்பதில்லை என்றால், அவன் ஏற்கெனவே சாத்தானின் கைகளில் விழுந்து, சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறான், இது அவன் பொல்லாத ஆவிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறான் என்று அர்த்தப்படுகிறது. மனுஷனின் நடைமுறை ஆழமாகச் செல்லவில்லை என்றால், தேவனுடைய கிரியை மேம்படாது, மற்றும் தேவனுடைய கிரியையில் எந்த மாற்றமும் இல்லை என்றால், மனுஷனின் பிரவேசித்தல் ஒரு நிறுத்தத்திற்கு வரும்; இது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. தேவனுடைய எல்லாக் கிரியையினூடாகவும், மனுஷன் எப்போதுமே யேகோவாவின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க வேண்டியிருந்தால், பின்பு தேவனுடைய கிரியை முன்னேற முடியாது, முழுயுகத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருதலுக்கான சாத்தியக்கூறு மிகக் குறைவானதாகவே இருக்கும். மனிதன் எப்பொழுதும் சிலுவையைப் பற்றிக்கொண்டு மற்றும் பொறுமையையும் மனத்தாழ்மையையும் கடைப்பிடித்துக் கொண்டிருந்தால், தேவனின் கிரியை தொடர்ந்து முன்னேறுவது சாத்தியமற்றதாக இருக்கும். நியாயப்பிரமாணத்தில் மாத்திரம் நிலைத்திருக்கும் ஜனங்கள் மத்தியிலோ, அல்லது சிலுவையை மாத்திரம் பற்றிக்கொண்டு மற்றும் பொறுமையையும் தாழ்மையையும் கடைப்பிடிக்கிறவர்கள் மத்தியிலோ, ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தலானது எளிதில் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட இயலாது. அதற்குப் பதிலாக, தேவனுடைய நிர்வாகக் கிரியை முழுவதும் கடைசிநாட்களில் உள்ளவர்கள், தேவனை அறிகிறவர்கள், சாத்தானின் பிடியிலிருந்து மீட்கப்பட்டவர்கள், மற்றும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களை முழுமையாக விலக்கிக்கொண்டவர்கள் மத்தியில் முடிக்கப்பட்டு இருக்கிறது. இது தேவனுடைய கிரியையின் தவிர்க்க முடியாத வழிமுறையாக இருக்கிறது. மத தேவாலயங்களில் இருப்பவர்களின் நடைமுறை காலாவதியானது என்று கூறப்பட்டிருக்கிறது ஏன்? ஏனென்றால், அவர்கள் கடைப்பிடிப்பது இன்றைய நாட்களின் கிரியையிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. கிருபையின் காலத்தில், அவர்கள் கடைப்பிடித்தது சரியானதாக இருந்தது, ஆனால் அந்தக் காலம் கடந்து சென்றுள்ளது, மற்றும் அவர்கள் கடைப்பிடித்தது படிப்படியாகக் காலாவதியாகியுள்ளது. இது புதிய கிரியையினால் மற்றும் புதிய வெளிச்சத்தினால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதன் தொடக்ககால அஸ்திபாரத்தின் அடிப்படையில், பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பலபடிகள் ஆழமாக முன்னேறியிருக்கின்றது. இருப்பினும், அந்த மக்கள் இன்னும் தேவனுடைய கிரியையின் ஆரம்பக் கட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள், மற்றும் பழைய நடைமுறைகள் மற்றும் பழைய வெளிச்சத்துடன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளிலேயே தேவனுடைய கிரியை பெரிதும் மாறக்கூடும், எனவே 2,000 ஆண்டுகளில் இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்காதா? மனிதனுக்குப் புதிய வெளிச்சமோ நடைமுறையோ இல்லையென்றால், அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தொடர்ந்து கடைபிடிக்கவில்லை என்று இது அர்த்தப்படுத்துகிறது. இது மனுஷனின் தோல்வியாக இருக்கிறது; தேவனுடைய புதிய கிரியை இருப்பது மறுதலிக்கப்படமுடியாதது, ஏனென்றால், முன்பு பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருந்தவர்கள் இன்று, காலாவதியான நடைமுறைகளில் இன்னமும் நிலைத்து இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதுமே முன்னோக்கி நகர்கின்றது, பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறவர்கள் எல்லோரும் கூட படிப்படியாக ஆழமாக முன்னேறவும் மற்றும் மாற்றம் அடையவும் வேண்டும். அவர்கள் ஒரே கட்டத்தில் நின்று விடக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள் மட்டுமே அவருடைய தொடக்ககாலக் கிரியையிலேயே தங்கியிருப்பார்கள், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கீழ்ப்படியாமையோடு இருக்கிறவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆதாயப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். மனுஷனின் நடைமுறையானது பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையுடன் இணக்கமாக இல்லாதிருந்தால், பின்பு மனுஷனின் நடைமுறை நிச்சயமாக இன்றையநாட்களின் கிரியையில் இருந்து துண்டிக்கப்படுகிறது, மற்றும் அது இன்றைய நாட்களின் கிரியைக்கு நிச்சயமாகவே முரண்பாடானதாக இருக்கிறது. காலத்திற்குப் பொருந்தாத இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் திறனற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இறுதியாகத் தேவனுக்குச் சாட்சியாக நிற்கும் ஜனங்களாக முடிவதில்லை. மேலும், முழு நிர்வாகக் கிரியையும், இப்படிப்பட்டதொரு ஜனக்கூட்டத்தின் மத்தியில் முடிக்கப்பட இயலாது. ஏனெனில் ஒருகாலத்தில் யேகோவாவின் நியாயப்பிரமாணத்தைப் பற்றியிருந்தவர்களும், மற்றும் ஒருகாலத்தில் சிலுவைக்காகப் பாடுகளை அனுபவித்தவர்களும், கடைசிநாட்களில் நடக்கும் கிரியையின் கட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அவர்கள் செய்ததெல்லாம் வீணானதும் மற்றும் பயனற்றதுமாகிவிடும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய மிகத்தெளிவான வெளிப்பாடு இப்போது ஏற்றுக்கொள்வதாக இருக்கின்றது, அது கடந்தகாலத்தைப் பற்றிக் கொண்டிருப்பதில்லை. இன்றைய கிரியையைப் பின்தொடராதவர்கள், மற்றும் இன்றைய நடைமுறையிலிருந்து பிரிந்தவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்ப்பவர்களாக மற்றும் அதை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனுடைய தற்போதைய கிரியையை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் கடந்த காலத்தின் வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இவர்கள் அறிவதில்லை என்பது மறுக்கப்பட இயலாது. மனுஷனின் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள், நடைமுறையில் கடந்தகாலத்திற்கும் இன்றைய நாட்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள், முந்தைய காலத்தில் இந்த நடைமுறை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது, இன்று அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதற்கான இந்த எல்லாப் பேச்சும் இருப்பது ஏன்? மனுஷனின் நடைமுறையில் இப்படிப்பட்ட பிரிவினைகள் எப்போதும் பேசப்படுகின்றன, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டுள்ளது, இவ்விதமாகவே மனுஷனின் நடைமுறை நிலையாக மாறவேண்டியதிருக்கின்றது. மனுஷன் ஒரு கட்டத்திலேயே சிக்கிக்கொண்டால், தேவனின் புதிய கிரியை மற்றும் புதிய வெளிச்சத்தைக் கடைப்பிடிக்க அவனால் இயலாது என்பதை இது நிரூபிக்கிறது; தேவனின் ஆளுகைத் திட்டம் மாறியிருக்கவில்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே இருப்பவர்கள் எப்போதுமே தாங்கள் சரியானவர்களாய் இருக்கிறதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில், அவர்களுக்குள் தேவனுடைய கிரியை நீண்ட காலத்திற்கு முன்பே நின்றுவிட்டது, மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களிடமிருந்து இல்லாதே போயிருக்கிறது. தேவனுடைய கிரியை நீண்ட காலத்திற்கு முன்பே அவர் தமது புதிய கிரியையை முடிக்க நோக்கங் கொண்டுள்ள வேறொரு ஜனக்கூட்டத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. ஏனென்றால், மதத்தில் இருப்பவர்கள் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கின்றனர், மற்றும் அவர்கள் கடந்தகாலத்தின் பழைய கிரியையை மட்டுமே பற்றிக்கொண்டு இருக்கிறார்கள், இவ்வாறு தேவன் இந்த ஜனங்களைக் கைவிட்டுவிட்டார், மற்றும் இந்தப் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளும் ஜனங்கள்மீது அவருடைய புதிய கிரியையைச் செய்கின்றார். இவர்கள்தான் அவருடைய புதிய கிரியையில் ஒத்துழைக்கும் ஜனங்களாக இருக்கிறார்கள், மற்றும் இந்த வழியில் மட்டுமே அவருடைய நிர்வகித்தல் நிறைவேற்றப்பட முடியும். தேவனுடைய நிர்வகித்தல் எப்போதும் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது, மற்றும் மனுஷனின் நடைமுறை எப்போதும் மேலே ஏறிக்கொண்டு இருக்கிறது. தேவன் எப்பொழுதும் கிரியை செய்து கொண்டிருக்கின்றார், மற்றும் மனுஷன் எப்போதுமே தேவை உள்ள நிலையில் இருக்கிறான், இப்படியாக இருவருமே தங்கள் உச்சத்தை அடைகின்றார்கள், மற்றும் தேவனும் மனிதனும் முழுமையான ஒருங்கிணைப்பை அடைகின்றார்கள். இது தேவனுடைய கிரியையை நிறைவேற்றுவதற்கான வெளிப்பாடாக இருக்கின்றது, மற்றும் இது தேவனுடைய முழு நிர்வகித்தலின் இறுதிவிளைவாக இருக்கின்றது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 158

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் தொடர்பாக மனுஷனிடம் வைக்கப்படும் கோரிக்கைகளும் உள்ளன. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மற்றும் சிட்சை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இல்லாதவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டின் கீழ், பரிசுத்த ஆவியானவரின் எந்தக் கிரியையும் இல்லாமல் இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்கிறார்கள், மற்றும் இவர்கள் தேவனுடைய புதிய கிரியையில் ஒத்துழைக்கிறார்கள். இந்தப் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் ஒத்துழைக்க இயலாதவர்களாக, மற்றும் இந்த நேரத்தில் தேவனால் கோரப்படும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்றால், பின்பு அவர்கள் சிட்சிக்கப் படுவார்கள், மற்றும் மோசமான நிலையில் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்படுவார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் வாழ்வார்கள், மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் பெறுவார்கள். சத்தியத்தைக் கைக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஒளியூட்டப்படுகிறார்கள், மற்றும் சத்தியத்தைக் கைக்கொள்ள விரும்பாதவர்கள் பரிசுத்த ஆவியினால் சிட்சிக்கப் படுகிறார்கள், மற்றும் அவர்கள் தண்டிக்கப்படுவதும் கூட நடைபெறலாம். அவர்கள் எந்த வகையான நபராக இருந்தாலும், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருக்கிறார்கள் என்றால், தேவனுடைய நாமத்திற்காக அவருடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் தேவன் பொறுப்பு எடுத்துக்கொள்வார். அவருடைய நாமத்தை மகிமைப் படுத்துகிறவர்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்க விருப்பமாய் இருப்பவர்கள் யாவரும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்; அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் அவருடைய தண்டனையைப் பெறுவார்கள். புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்களே பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறார்கள், அவர்கள் புதிய கிரியையை ஏற்றுக்கொண்டதால், அவர்கள் தேவனுடன் சரியான முறையில் ஒத்துழைக்க வேண்டும், தங்கள் கடமையைச் செய்யாத கலகக்காரர்களாகச் செயல்படக்கூடாது. இது மனிதனிடத்தில் தேவன் வைக்கும் ஒரே கோரிக்கையாக இருக்கின்றது. புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு அவ்வாறு இல்லை: அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே உள்ளனர், பரிசுத்த ஆவியின் சிட்சை மற்றும் கடிந்துகொள்ளுதல் ஆகியவை அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதில்லை. நாள் முழுவதும், இந்த மக்கள் மாம்சத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் தங்கள் மனதிற்குள் வாழ்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் தங்கள் சுய மூளையின் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டின் படியானதாக உள்ளது. இது பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையினால் கேட்கப்பட்டதாக இருப்பதில்லை, இது தேவனுடனான ஒத்துழைப்பாகவும் இருப்பதில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தேவனுடைய பிரசன்னத்தை இழந்தவர்களாக இருக்கிறார்கள், மேலும், தேவனுடைய ஆசீர்வாதங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இல்லாதவர்கள் ஆகிறார்கள். அவர்களுடைய பெரும்பாலான வார்த்தைகளும் கிரியைகளும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய கடந்தகால கோரிக்கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன; அவை சத்தியம் என்பதாக இருப்பதில்லை, அவை கோட்பாடாகவே உள்ளன. இந்த ஜனங்கள் ஒன்றாகக் கூடுவது மதத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நிரூபிக்க இத்தகைய கோட்பாடும் ஒழுங்குமுறையும் போதுமானவைகளாக இருக்கின்றன; இவை தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருப்பதில்லை, அல்லது தேவனுடைய கிரியையின் இலக்குகளாக இருப்பதில்லை. இவர்கள் அனைவரின் மத்தியிலான கூடுகையானது மதத்தின் மாபெரும் கூடுகை என்று மட்டுமே அழைக்கப்பட முடியும், மற்றும் அது சபை என்று அழைக்கப்பட முடியாது. இது மாற்ற முடியாத உண்மையாக உள்ளது. இவர்களிடம் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியை இல்லை; இவர்கள் செய்வது மதத்தின் தொடர்பை நினைவூட்டுவதாகக் காணப்படுகிறது, இவர்கள் வாழ்வது எதுவோ, அது மதத்தினால் நிரம்பியதாகத் தெரிகிறது; இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மற்றும் கிரியையைக் கொண்டிருக்கவில்லை, பரிசுத்த ஆவியின் சிட்சை அல்லது ஒளியூட்டப்படுதலைப் பெறுவதற்கு இவர்கள் தகுதியுள்ளவர்களாக இருப்பதில்லை. இந்த மக்கள் அனைவரும் உயிரற்ற சடலங்களாக உள்ளனர், மற்றும் ஆவிக்குரிய தன்மையற்ற புழுக்களாக இருக்கிறார்கள். மனுஷனின் கலகம் மற்றும் எதிர்ப்பைப் பற்றி இவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, மனுஷனின் எல்லாப் பொல்லாங்கு செய்தல் பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, தேவனுடைய கிரியை பற்றிய யாவற்றையும் மற்றும் தேவனுடைய தற்போதய சித்தத்தையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் அனைவரும் அறியாமையுள்ள, கீழ்மட்ட ஜனங்களாய் இருக்கிறார்கள், மற்றும் இவர்கள் விசுவாசிகள் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்ற நுரை போன்று பயனற்றவர்களாய் இருக்கிறார்கள்! இவர்கள் செய்யும் எதுவும் தேவனுடைய நிர்வகித்தலின் எவ்விதமான தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை, இது தேவனுடைய திட்டங்களையும் பாதிக்க முடியாது. இவர்களின் சொற்களும் செயல்களும் மிகவும் அருவருப்பானவையாக, மிகவும் பரிதாபகரமானவையாக, மற்றும் குறிப்பிடத் தகுதியற்றவையாக உள்ளன. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இல்லாதவர்களால் செய்யப்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதன் காரணமாக, இவர்கள் என்ன செய்தாலும், இவர்கள் பரிசுத்த ஆவியின் சிட்சையின்றி இருக்கிறார்கள், மேலும், பரிசுத்த ஆவியானவரின் ஒளியூட்டுதல் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சத்தியத்தின் மீது அன்பு இல்லாதவர்கள், பரிசுத்த ஆவியினால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள். இவர்கள் மாம்சத்தின்படி நடந்துகொண்டு, தேவனுடைய அடையாளப் பலகையின் கீழ் தங்களைப் பிரியப்படுத்துபவை எவைகளோ அவைகளையே செய்கிறதால் இவர்கள் பொல்லாங்கு செய்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவன் கிரியை செய்கையில், இவர்கள் வேண்டுமென்றே அவரிடம் பகைமை உணர்வுடன் இருக்கிறார்கள், மற்றும் அவருக்கு நேர் எதிர்த்திசையில் ஓடுகிறார்கள். தேவனுடன் ஒத்துழைக்க மனுஷனின் தோல்வியானது தன்னிலேயே மிகவும் கலகத்தனமாக இருக்கிறது, எனவே வேண்டுமென்றே தேவனுக்கு எதிராக ஓடுகிற மக்கள் குறிப்பாக அவர்களுக்கான நியாயமான தண்டனையைப் பெறாதிருப்பார்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 159

நீங்கள் தேவனுடைய கிரியையைக் குறித்த தரிசனங்களை அறிந்துகொள்ள வேண்டும், மேலும் அவருடைய கிரியை செல்லும் பொதுவான திசையையும் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் நேர்மறையான பிரவேசமாகும். தரிசனங்களைக் குறித்த சத்தியத்தை நீ துல்லியமாக அறிந்துகொண்டவுடன், உனது பிரவேசம் பாதுகாக்கப்படும்; தேவனின் கிரியை எவ்வாறு மாறினாலும், உனது இருதயத்தில் நீ உறுதியாக இருப்பாய், தரிசனங்களைப் பற்றி தெளிவாக இருப்பாய், மேலும் உனது பிரவேசம் மற்றும் உன் நாட்டத்திற்கான ஒரு இலக்கையும் வைத்திருப்பாய். இவ்வாறு, உனக்குள் உள்ள அனைத்து அனுபவங்களும் அறிவும் ஆழமாகி மேலும் விரிவடையும். இதன் சாராம்சத்தை நீ முழுவதுமாகப் புரிந்துகொண்டதும், நீ உன் ஜீவிதத்தில் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டாய், நீ வழிதவறவும் மாட்டாய். இந்தக் கிரியையின் படிகளை நீ அறிந்து கொள்ளாவிட்டால், ஒவ்வொரு படியிலும் நீ இழப்பை சந்திக்க நேரிடும், மேலும் இழப்பிலிருந்து மீள சில நாட்களுக்கு மேல் ஆகும், அல்லது இரண்டு வாரங்கள் ஆனால் கூட உன்னால் சரியான பாதைக்குத் திரும்ப முடியாது. இது தாமதத்தை ஏற்படுத்தாதா? நேர்மறையாகப் பிரவேசிக்கும் வழி மற்றும் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டிய நடைமுறை ஆகியவற்றில் ஏராளமானவை உள்ளன. தேவனுடைய கிரியைகளைக் குறித்த தரிசனங்களைப் பொறுத்தவரை, நீ பின்வரும் விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்: அவரது ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம், பரிபூரணப்படுத்தப்படுவதற்கான எதிர்காலப் பாதை, சோதனைகள் மற்றும் உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் எதை அடைய வேண்டும், நியாயத்தீர்ப்பு மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் முக்கியத்துவம், பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குப் பின்னால் உள்ள கொள்கைகள், மற்றும் பரிபூரணப்படுத்துதல் மற்றும் ஜெயங்கொள்ளுதல் ஆகியவற்றிற்குப் பின்னால் உள்ள கொள்கைகள். இவை அனைத்தும் தரிசனங்களைக் குறித்த சத்தியத்தைச் சேர்ந்தவை. மீதமுள்ளவை நியாயப்பிரமாணத்தின் யுகம், கிருபையின் யுகம், மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகிய மூன்று கட்டக் கிரியைகள், அத்துடன் எதிர்கால சாட்சி ஆகியவை ஆகும். இவையும் தரிசனங்களைக் குறித்த சத்தியம்தான், மேலும் இவை மிக அடிப்படையானவையாகவும், மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன. தற்போது நீங்கள் பிரவேசித்து, கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய உள்ளன, அது இப்போது அதிக அடுக்குகள் கொண்டதாகவும் மற்றும் மிக விபரமாகவும் இருக்கிறது. இந்தச் சத்தியங்களைப் பற்றி உனக்கு எந்த அறிவும் இல்லை என்றால், நீ இன்னும் பிரவேசித்தலை அடையவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. அநேக நேரங்களில், சத்தியத்தைப் பற்றிய ஜனங்களின் அறிவு மிகவும் ஆழமற்றதாக இருக்கிறது; அவர்களால் சில அடிப்படைச் சத்தியங்களைக் கூட கடைப்பிடிக்க முடியவில்லை, மேலும் அற்ப விஷயங்களைக் கூட எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை. ஜனங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாததற்குக் காரணம், அவர்களின் மனநிலை கலகத்தனமாக இருப்பதாலும், இன்றைய கிரியையைப் பற்றிய அவர்களின் அறிவு மிகவும் மேலோட்டமானதாகவும், ஒருதலைப்பட்சமாகவும் இருப்பதுதான். எனவே, ஜனங்களைப் பரிபூரணமாக்குவது எளிதான காரியமல்ல. நீ மிகவும் கலகக்காரனாக இருக்கிறாய், மேலும் நீ உன் பழைய தன்மையையே இன்னும் அதிகமாகக் கொண்டிருக்கிறாய்; உன்னால் சத்தியத்திற்கு அருகில் நிற்க முடியாது, மேலும் மிகவும் தெளிவான சத்தியங்களைக் கூட உன்னால் கடைப்பிடிக்க முடிவதில்லை. அத்தகையவர்களை இரட்சிக்க முடியாது, மேலும் அவர்கள் ஜெயங்கொள்ளப்படாதவர்களாக இருப்பார்கள். உனது பிரவேசத்திற்கு விபரங்களோ அல்லது குறிக்கோள்களோ இல்லை என்றால், வளர்ச்சி உன்னிடம் மெதுவாகத்தான் வரும். உன் பிரவேசத்திற்கு சிறிதளவும் யதார்த்தம் இல்லை என்றால், உன் நோக்கம் வீணாகிவிடும். சத்தியத்தின் சாராம்சம் உனக்குத் தெரியாவிட்டால், நீ மாறாமல் இருப்பாய். மனுஷனின் ஜீவிதத்தில் வளர்ச்சியும், அவனது மனநிலையின் மாற்றங்களும் யதார்த்தத்திற்குள் நுழைவதன் மூலமும், மேலும், விரிவான அனுபவங்களுக்குள் நுழைவதன் மூலமும் அடையப்படுகின்றன. உனது பிரவேசத்தின் போது உனக்குப் பல விரிவான அனுபவங்கள் இருந்தால், உன்னிடம் உண்மையான அறிவும் பிரவேசமும் இருந்தால், உன் மனநிலை விரைவாக மாறலாம். தற்போது, உனக்கு நடைமுறையைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், தேவனின் கிரியையைக் குறித்த தரிசனங்களைப் பற்றி நீ குறைந்தபட்சத் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால், உன்னால் பிரவேசிக்க இயலாது; சத்தியத்தைப் பற்றி அறிந்த பின்னரே நீ பிரவேசிப்பது சாத்தியமாகும். பரிசுத்த ஆவியானவர் உன் அனுபவத்தில் உன்னைத் தெளிவூட்டினால் மட்டுமே நீ சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலையும், ஆழமாகப் பிரவேசிப்பது பற்றிய புரிதலையும் பெறுவாய். நீங்கள் நிச்சயம் தேவனின் கிரியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 160

ஆதியில், மனுஷகுலத்தை சிருஷ்டித்த பிறகு, தேவனுடைய கிரியையின் அஸ்திபாரமாக ஊழியம் செய்தது இஸ்ரவேலர்கள்தான். பூமியில் இஸ்ரவேல் முழுவதும் யேகோவாவின் கிரியையின் அஸ்திபாரமாக இருந்தது. மனுஷனை ஒரு சரியான ஜீவிதத்தை வாழச் செய்யவும், பூமியில் ஒரு சரியான முறையில் யேகோவாவை வணங்கச் செய்யவும், நியாயப்பிரமாணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மனுஷனை நேரடியாக வழிநடத்துவதும் மேய்ப்பதும் யேகோவாவின் கிரியையாக இருந்தது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மனுஷனால் தேவனைப் பார்க்கவோ தொடவோ முடியவில்லை. ஏனென்றால், அவர் செய்ததெல்லாம் சாத்தானால் சீர்கெட்டுப்போன ஆதிகால ஜனங்களை வழிநடத்துவதும், அவர்களுக்குக் கற்பிப்பதும், அவர்களை மேய்ப்பதும்தான். அவருடைய வார்த்தைகளில் நியாயப்பிரமாணங்கள், சட்டங்கள் மற்றும் மனுஷ நடத்தை விதிமுறைகளைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை, மேலும் அவர்களுக்கு ஜீவனைக் குறித்த சத்தியங்களையும் வழங்கவில்லை. அவருடைய தலைமையின் கீழ் இருந்த இஸ்ரவேலர் சாத்தானால் ஆழமாகச் சீர்கெட்டுப்போகவில்லை. அவரது நியாயப்பிரமாணத்தின் கிரியையே, இரட்சிப்பிற்கான கிரியையின் முதல் கட்டமாக, இரட்சிப்பிற்கான கிரியையின் ஆரம்பமாக இருந்தது, மேலும் அதற்கு மனுஷனின் ஜீவ மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களுடன் நடைமுறையில் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகையால், இரட்சிப்பிற்கான கிரியையின் ஆரம்பத்தில் இஸ்ரவேலில் அவர் செய்த கிரியைக்காக அவர் மாம்சமாக வேண்டிய அவசியம் இல்லை. இதற்குத்தான் மனுஷனுடன் ஈடுபட அவருக்கு ஓர் ஊடகம்—ஒரு கருவி—தேவைப்பட்டது. இவ்வாறு, யேகோவாவின் சார்பாகப் பேசியவர்களும் கிரியை செய்தவர்களும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களிடையே எழுந்தார்கள், இவ்வாறுதான் மனுஷகுமாரர்களும் தீர்க்கதரிசிகளும் மனுஷரிடையே கிரியை செய்ய வந்தார்கள். மனுஷகுமாரர்கள் யேகோவாவின் சார்பாக மனுஷரிடையே கிரியை செய்தனர். யேகோவாவால் “மனுஷகுமாரர்” என்று அழைக்கப்படுவதன் காரணம் என்னவென்றால், அத்தகையவர்கள் யேகோவாவின் சார்பாக நியாயப்பிரமாணத்தை வகுக்கிறார்கள் என்பதாகும். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடையே ஆசாரியர்களாக இருந்தனர், அவர்கள் யேகோவாவால் கவனிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டவர்களாகவும், யேகோவாவின் ஆவி கிரியை செய்தவர்களாகவும் இருந்தார்கள்; அவர்கள் ஜனங்களிடையே தலைவர்களாக இருந்து, நேரடியாக யேகோவாவுக்கு ஊழியம் செய்தார்கள். மறுபுறம், தீர்க்கதரிசிகள், யேகோவாவின் சார்பாக, எல்லா நாடுகளிலும், பழங்குடியின ஜனங்களிடமும் பேசுவதற்காக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் யேகோவாவின் கிரியையையும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் மனுஷகுமாரர்களாக இருந்தாலும், தீர்க்கதரிசிகளாக இருந்தாலும், அனைவரும் யேகோவாவின் ஆவியினால் எழுப்பப்பட்டு, தங்களுக்குள் யேகோவாவின் கிரியையைக் கொண்டிருந்தார்கள். ஜனங்களிடையே, அவர்கள்தான் யேகோவாவை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்; அவர்கள் பரிசுத்த ஆவியானவர் மனுஷனாக அவதரித்த மாம்சமாக இருந்ததால் அல்ல, மாறாக அவர்கள் யேகோவாவால் எழுப்பப்பட்டதனால் மட்டுமே அவர்கள் தங்கள் கிரியையை செய்தார்கள். ஆகையால், அவர்கள் தேவனின் சார்பாகப் பேசுவதிலும் கிரியைசெய்வதிலும் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் இருந்த மனுஷகுமாரர்களும், தீர்க்கதரிசிகளும் மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. கிருபையின் யுகத்திலும், கடைசி கட்டத்திலும் செயல்படுத்தப்பட்ட தேவனின் கிரியை நேர்மாறாக இருந்தது, ஏனென்றால் மனுஷனின் இரட்சிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகிய இரண்டும் மனுஷனாக அவதரித்த தேவனால் நிகழ்த்தப்பட்டன. எனவே அவர் சார்பாகக் கிரியை செய்ய தீர்க்கதரிசிகளையும் மனுஷகுமாரர்களையும் மீண்டும் ஒரு முறை எழுப்ப வேண்டிய அவசியமிருக்கவில்லை. மனுஷனின் பார்வையில், சாராம்சத்திற்கும், அவர்களின் கிரியையின் முறைக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் எதுவும் இருப்பதில்லை. இந்தக் காரணத்தினாலேயே, ஜனங்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரனின் கிரியைகளோடு மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகளைத் தொடர்ந்து குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மனுஷனாக அவதரித்த தேவன் தோன்றியது அடிப்படையில் தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரர்கள் தோன்றியதைப் போன்றதுதான். மனுஷனாக அவதரித்த தேவன், தீர்க்கதரிசிகளை விட மிகவும் இயல்பாகவும், உண்மையாகவும் இருந்தார். எனவே, மனுஷனால் அவர்களை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. மனுஷன் தோற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறான், கிரியை செய்வதிலும் பேசுவதிலும் இருவரும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களுக்கு இடையே முக்கியமான வேறுபாடு இருப்பதை அவனால் முழுமையாக அறியமுடிவதில்லை. மனுஷனின் விஷயங்களை ஆழ்ந்து கவனிக்கும் திறன் மிகவும் மோசமாக இருப்பதால், அவனுக்கு எளிய சிக்கல்களை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை, மிகவும் சிக்கலானவற்றையும் கூட வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. தீர்க்கதரிசிகளும், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஜனங்களும் பேசியபோதும், கிரியை செய்தபோதும், இது மனுஷனின் கிரியைகளை மற்றும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் செயல்பாட்டைச் செய்வதாக இருந்தது. இது மனுஷன் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகளும் கிரியையும் அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டவை ஆகும். அவருடைய வெளிப்புறத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டவைக்குரியதாக இருந்தபோதிலும், அவருடைய கிரியை அவருடைய செயல்பாட்டைச் செய்வதல்ல, அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். “கடமை” என்ற சொல் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் “ஊழியம்” என்பது மனுஷனாக அவதரித்த தேவனைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது. இரண்டிற்கும் இடையே ஒரு கணிசமான வேறுபாடு உள்ளது; அவை ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளக் கூடியவை அல்ல. மனுஷனின் கிரியை அவனுடைய கடமையைச் செய்வதேயாகும், அதேசமயம் தேவனின் கிரியை நிர்வகிப்பதும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதும் ஆகும். ஆகையால், பல அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பல தீர்க்கதரிசிகள் அவரால் நிரப்பப்பட்டிருந்தாலும், அவர்களுடைய கிரியையும் வார்த்தைகளும் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷராகத் தங்கள் கடமையைச் செய்வதற்காக மட்டுமே இருந்தன. அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் மனுஷராக அவதரித்த தேவனால் பேசப்பட்ட ஜீவவழியை மிஞ்சியிருக்கலாம், மேலும் அவர்களின் மனுஷத்தன்மையானது மனுஷனாக அவதரித்த தேவனின் தன்மையை மிஞ்சியிருக்கலாம், ஆனால் அவர்கள் இன்னும் தங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருந்தார்கள், ஊழியத்தை நிறைவேற்றவில்லை. மனுஷனின் கடமை மனுஷனின் செயல்பாட்டைக் குறிக்கிறது; அதுவே மனுஷனால் அடையக்கூடியதும் கூட. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனால் மேற்கொள்ளப்படும் ஊழியம் அவருடைய நிர்வாகத்துடன் தொடர்புடையது, இது மனுஷனால் அடைய முடியாதது. மனுஷனாக அவதரித்த தேவன் பேசினாலும், கிரியை செய்தாலும், அதிசயங்களை வெளிப்படுத்தினாலும், அவர் தனது நிர்வாகத்தின் மத்தியில் மிகச் சிறந்த கிரியையைச் செய்துவருகிறார், அத்தகையக் கிரியையை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது. மனுஷனின் கிரியை என்பது தேவனின் நிர்வாகத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக தனது கடமையைச் செய்வதாகும். தேவனின் நிர்வாகம் இல்லாமல், அதாவது, மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியம் இழக்கப்பட்டால், சிருஷ்டிக்கப்பட்ட ஒருவனின் கடமை இழக்கப்பட நேரிடும். தன் ஊழியத்தைச் செய்வதில் இருக்கும் தேவனின் கிரியை, மனுஷனை நிர்வகிப்பதாகும், அதேசமயம் மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது சிருஷ்டிகரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத் தனது சொந்த கடமையை நிறைவேற்றுவதாகும், மேலும் ஒருவருடைய சொந்த ஊழியத்தை நிறைவேற்றுவதை எந்த வகையிலும் கருத முடியாது. தேவனின் ஆழமான சாராம்சத்திற்கு—அவருடைய ஆவிக்கு—தேவனின் கிரியை அவருடைய நிர்வாகமாகும், ஆனால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் வெளிப்புறத் தோற்றத்தை அணிந்திருக்கும் மனுஷனாக அவதரித்த தேவனுக்கு, அவருடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். அவர் எந்தக் கிரியையைச் செய்தாலும் அது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்; மனுஷனால் செய்யக்கூடியது, தேவனின் நிர்வாகத்தின் எல்லைக்குள் மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் தனது சிறந்ததைக் கொடுப்பது மட்டுமே ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 161

கிருபையின் யுகத்தில், இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், அதிகக் கிரியைகள் செய்தார். அவர் ஏசாயாவை விட எவ்வாறு வேறுபட்டவர்? அவர் தானியேலை விட எவ்வாறு வேறுபட்டவர்? அவர் ஒரு தீர்க்கதரிசியா? அவர் ஏன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்? அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? அவர்கள் அனைவரும் வார்த்தைகளைப் பேசிய மனுஷர், அவர்களுடைய வார்த்தைகள் மனுஷனுக்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் தோன்றின. அவர்கள் அனைவரும் வார்த்தைகளைப் பேசினர், கிரியைகள் செய்தனர். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களைப் பேசினார்கள், அதே விஷயத்தை இயேசுவினாலும் செய்திருக்க முடியும். இது ஏன் அப்படி? இங்கே வேறுபாடானது கிரியையின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயத்தை அறிய, நீ மாம்சத்தின் தன்மையை கருத்தில் கொள்ளக்கூடாது, அல்லது அவர்களின் சொற்களின் ஆழத்தையோ அல்லது மேலோட்டமான சாரத்தையோ நீ கருத்தில் கொள்ளக்கூடாது. எப்போதும் நீ முதலில் அவர்களின் கிரியைகளையும், அந்தக் கிரியைகள் மனுஷனில் ஏற்படுத்தும் விளைவுகளையுமே கருத்தில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனங்கள் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவில்லை, மேலும் ஏசாயா, தானியேல் போன்றவர்களால் பெறப்பட்ட உத்வேகங்கள் வெறும் தீர்க்கதரிசனங்களாக மட்டுமே இருந்தன, ஜீவவழியாக இருக்கவில்லை. யேகோவாவின் நேரடி வெளிப்பாடு இல்லாவிட்டால், மனுஷருக்குச் சாத்தியமில்லாத அந்தக் கிரியையை யாராலும் செய்திருக்க முடியாது. இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், ஆனால் அத்தகைய வார்த்தைகள் மனுஷனால் கடைப்பிடிக்கக் கூடிய ஜீவவழிக்கானப் பாதையை கண்டுபிடிக்க உதவும்படி இருந்தன. அதாவது, முதலாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை அவனுக்கு வழங்க முடியும், ஏனென்றால் இயேசு ஜீவனாக இருக்கிறார்; இரண்டாவதாக, அவரால் மனுஷனின் வழிவிலகல்களை மாற்றியமைக்க முடியும்; மூன்றாவதாக, யுகத்தைத் தொடர யேகோவாவின் கிரியைகளைப் பின்பற்றி அவரது கிரியைகள் செயல்படக்கூடும்; நான்காவதாக, அவரால் மனுஷனுக்குள் இருக்கும் தேவைகளையும், மனுஷனிடம் இல்லாததைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஐந்தாவதாக, அவரால் ஒரு புதிய யுகத்தில் நுழைந்து பழையதை முடித்துவைக்க முடியும். அதனால்தான் அவர் தேவன் என்றும், கிறிஸ்து என்றும் அழைக்கப்படுகிறார்; அவர் ஏசாயாவிடமிருந்து மட்டுமல்ல, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளிடமிருந்தும் வேறுபட்டவர். ஏசாயாவை தீர்க்கதரிசிகளின் கிரியைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முதலாவதாக, அவனால் மனுஷனுக்கான ஜீவனை வழங்க முடியவில்லை; இரண்டாவதாக, அவனால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடியவில்லை. அவன் யேகோவாவின் தலைமையில் பணிபுரிந்து கொண்டிருந்தான், ஆனால் ஒரு புதிய யுகத்தை தொடங்கவில்லை. மூன்றாவதாக, அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அவன் தேவனுடைய ஆவியிலிருந்து நேரடியாக வெளிப்பாடுகளைப் பெற்றுவந்தான், மற்றவர்கள் அவற்றைக் கேட்டாலும் கூட அவர்களுக்குப் புரியாது. அவனுடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனங்களை விடவும், யேகோவாவின் இடத்தில் செய்யப்படும் கிரியையின் அம்சத்தை விடவும் பெரியது இல்லை என்பதை நிரூபிக்க இந்த சில விஷயங்கள் மட்டுமே போதுமானவை. ஆயினும், அவனால் யேகோவாவை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை. அவன் யேகோவாவின் ஊழியனாக இருந்தான், யேகோவாவின் கிரியையில் ஒரு கருவியாக இருந்தான். அவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்குள்ளும், யேகோவாவின் கிரியையின் எல்லைக்குள்ளும் மட்டுமே கிரியை செய்து கொண்டிருந்தான்; அவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தைத் தாண்டி கிரியை செய்யவில்லை. இதற்கு மாறாக, இயேசுவின் கிரியை வேறுபட்டதாக இருந்தது. அவர் யேகோவாவின் கிரியையின் வரம்பை மிஞ்சினார்; சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் மனுஷனாக அவதரித்த தேவனாகக் கிரியை செய்தார், மேலும் சிலுவையிலும் அறையப்பட்டார். அதாவது, யேகோவா செய்த கிரியைக்கு வெளியே அவர் புதிய கிரியையைச் செய்தார். இது ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியது. மேலும், மனுஷனால் அடைய முடியாததைப் பற்றி அவரால் பேச முடிந்தது. அவருடைய கிரியை தேவனின் நிர்வாகத்திற்குட்பட்ட கிரியையாக இருந்தது, இது மனுஷகுலம் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அவர் ஒரு சில மனுஷருக்காக மட்டும் கிரியை செய்யவில்லை, அவரது கிரியை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுஷரை மட்டும் வழிநடத்துவதாக இருக்கவில்லை. தேவன் ஒரு மனுஷனாக எப்படி அவதரித்தார், அந்த நேரத்தில் ஆவியானவர் எவ்வாறு வெளிப்பாடுகளைக் கொடுத்தார், ஆவியானவர் எவ்வாறு ஒரு மனுஷன் மீது இறங்கி கிரியை செய்யத் தொடங்கினார்—இவை மனுஷரால் பார்க்கவோ தொடவோ முடியாத விஷயங்கள். அவர் மனுஷனாக அவதரித்த தேவன் என்பதற்கு இந்த உண்மைகள் சான்றாக செயல்படுவது முற்றிலும் சாத்தியமற்றது. எனவே, மனுஷனுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகளில் மட்டுமே அவனால் வேறுபாடு காண முடியும். இது மட்டுமே உண்மையானது. ஏனென்றால், ஆவியானவரின் விஷயங்கள் உனக்குப் புலப்படாது, அவை தேவனால் மட்டுமே தெளிவாக அறியப்படுகின்றன, மேலும் மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சத்தால் கூட அவற்றை அறிய முடியாது; அவர் செய்த கிரியைகளிலிருந்து மட்டுமே அவர் தேவன்தானா என்பதை உன்னால் சரிபார்க்க முடியும். அவருடைய கிரியையிலிருந்து, முதலில், அவரால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடிகிறது என்பதைக் காணலாம்; இரண்டாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவும், மனுஷன் பின்பற்றுவதற்கான வழியைக் காட்டவும் முடியும். அவர் தான் தேவன் என்பதை நிரூபிக்க இது போதுமானது. குறைந்தபட்சம், அவர் செய்யும் கிரியையால் தேவ ஆவியானவரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அத்தகைய கிரியையிலிருந்து தேவ ஆவி அவருக்குள் இருப்பதைக் காணலாம். மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகள் முக்கியமாக ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கும், புதியக் கிரியைகளை வழிநடத்துவதற்கும் மற்றும் ஒரு புதிய சாம்ராஜ்யத்தைத் தொடங்குவதற்குமாக இருந்ததால், அவர் மட்டுமே தேவன் என்பதை உறுதிப்படுத்த இவை மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இது அவரை ஏசாயா, தானியேல் மற்றும் பிற பெரிய தீர்க்கதரிசிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. ஏசாயா, தானியேல் மற்றும் மற்றவர்கள் அனைவரும் மிகவும் படித்த மற்றும் பண்பட்ட மனுஷ வர்க்கமாக இருந்தனர்; அவர்கள் யேகோவாவின் தலைமையில் அசாதாரண மனுஷராக இருந்தனர். மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சமும் அறிவுமிக்கதாக இருந்தது, அதில் எந்தவிதமான குறையும் இல்லை, ஆனால் அவருடைய மனுஷத்தன்மையானது குறிப்பிடும்படிக்கு சாதாரணமானதுதான். அவர் ஒரு சாதாரண மனுஷன், வெறும் கண்களால் அவரைப் பற்றிய எந்தவொரு சிறப்பு மனுஷத்தன்மையையும் உணரவோ அல்லது மற்றவர்களைப் போலல்லாத அவருடைய மனுஷத்தன்மையில் எதையும் கண்டறியவோ முடியவில்லை. அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவோ அல்லது தனித்துவமானவராகவோ இல்லை, மேலும் அவருக்கு உயர் கல்வி, அறிவு அல்லது கோட்பாடு என எதுவும் இருக்கவில்லை. அவர் பேசிய ஜீவனையும், அவர் வழிநடத்திய பாதையையும் கோட்பாட்டின் மூலமாகவோ, அறிவின் மூலமாகவோ, ஜீவித அனுபவத்தின் மூலமாகவோ அல்லது குடும்ப வளர்ப்பின் மூலமாகவோ பெறப்படவில்லை. மாறாக, அவை ஆவியானவரின் நேரடி கிரியைகளாக இருந்தன, இது மாம்சத்தில் அவதரித்தவர் செய்த கிரியை. மனுஷனுக்குத் தேவனைக் குறித்துப் பெரிய கருத்துக்கள் இருப்பதால், குறிப்பாக இந்தக் கருத்துக்கள் பல தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளால் ஆனவை என்பதால், மனுஷனின் பார்வையில், அறிகுறிகளையும் அதிசயங்களையும் செய்ய முடியாத, மனுஷனுக்குரிய பலவீனத்துடன் கூடிய சாதாரண தேவன், நிச்சயமாக தேவன் இல்லை. இவை மனுஷனின் தவறான கருத்துக்கள் அல்லவா? மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சம் ஒரு சாதாரண மனுஷனாக இல்லையென்றால், அவர் எப்படி மாம்சமாக மாறினார் என்று சொல்ல முடியும்? மாம்சத்தில் இருப்பது என்பது ஒரு வழக்கமான, சாதாரண மனுஷனாக இருக்க வேண்டும்; அவர் தலைசிறந்த ஒருவராக இருந்திருந்தால், அவர் மாம்சத்திலிருந்து வந்திருக்க மாட்டார். அவர் மாம்சத்திலிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க, சாதாரண மாம்சத்தை மனுஷனாக அவதரித்த தேவன் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இது வெறுமனே மனுஷ அவதாரத்தின் முக்கியத்துவத்தை நிறைவு செய்வதற்காக இருந்தது. இருப்பினும், தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட மனுஷர்; மனுஷனின் பார்வையில், அவர்களின் மனுஷத்தன்மை குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக இருந்தது, மேலும் அவர்கள் சாதாரண மனுஷத்தன்மையை விஞ்சும் பல செயல்களைச் செய்தனர். இந்த காரணத்திற்காக, மனுஷன் அவர்களை தேவர்களாகக் கருதினான். இப்போது நீங்கள் அனைவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இது கடந்த காலங்களில் உள்ள எல்லா மனுஷராலும் மிக எளிதாகக் குழப்பிக்கொள்ளப்பட்ட பிரச்சனையாக இருக்கிறது. மேலும், மனுஷ அவதாரம் எல்லாவற்றைக் காட்டிலும் மறைபொருள் மிக்கதாக இருந்து, மேலும் தேவன் மனுஷனாக அவதரித்ததை மனுஷன் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். நான் சொல்வது உங்கள் செயல்பாட்டை நிறைவேற்றுவதற்கும் மனுஷ அவதாரத்தின் மறைபொருளை நீங்கள் புரிந்துகொள்வதற்கும் உகந்ததாகும். இவை அனைத்தும் தேவனின் நிர்வாகத்துடன், தரிசனங்களுடன் தொடர்புடையவை ஆகும். இதைப் பற்றிய உங்கள் புரிதல் தரிசனங்களைப் பற்றிய அறிவை, அதாவது தேவனின் நிர்வாகக் கிரியை பற்றிய அறிவைப் பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், நீங்கள் பல்வேறு வகையான ஜனங்கள் செய்ய வேண்டிய கடமையைப் பற்றியும் அதிகப் புரிதலைப் பெறுவீர்கள். இந்த வார்த்தைகள் உங்களுக்கு வழியை நேரடியாக காட்டவில்லை என்றாலும், அவை உங்கள் பிரவேசத்திற்குப் பெரிதும் உதவுகின்றன, ஏனென்றால் உங்களது தற்போதைய ஜீவிதங்களில் தரிசனங்கள் அதிகம் இருப்பதில்லை, இப்படியிருந்தால் அது உங்கள் பிரவேசத்தைத் தடுக்கும் குறிப்பிடத்தக்க தடையாக மாறிவிடும். இந்தச் சிக்கல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், உங்கள் பிரவேசத்தைத் துரிதப்படுத்த எந்த உந்துதலும் இருக்காது. இதுபோன்ற ஒரு நோக்கம் உங்கள் கடமையை எவ்வாறு சிறப்பாகச் செய்ய உதவும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 162

“மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகளுக்கும், கடந்த கால தீர்க்கதரிசிகளும் மற்றும் அப்போஸ்தலர்களும் செய்தவற்றிற்கும் வித்தியாசம் என்ன? தாவீது கர்த்தர் என்றும் அழைக்கப்பட்டார், இயேசுவும் அப்படித்தான். அவர்கள் செய்த கிரியை வேறுபட்டிருந்தாலும், அவை ஒரே காரியமென்று அழைக்கப்பட்டன. எனக்குச் சொல்லுங்கள், ஏன் அவர்களின் அடையாளங்கள் ஒன்று போல் இல்லை? யோவான் கண்டது ஒரு தரிசனமாக இருந்தது, அதுவும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்ததாக இருந்தது, மேலும் பரிசுத்த ஆவியானவர் சொல்ல நினைத்த வார்த்தைகளை அவரால் சொல்ல முடிந்தது. யோவானின் அடையாளம் இயேசுவின் அடையாளத்திலிருந்து ஏன் வேறுபட்டது?” என்று சிலர் கேட்பார்கள். இயேசு பேசிய வார்த்தைகளால் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது, அவை தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தின. யோவான் கண்டது ஒரு தரிசனம், அவர் தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாமல் இருந்தார். இயேசுவைப் போலவே யோவானும், பேதுருவும், பவுலும் அநேக வார்த்தைகளைப் பேசினார்கள், ஆனாலும் அவர்கள் ஏன் இயேசுவைப் போன்ற அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை? அவர்கள் செய்த கிரியை வேறுபட்டது என்பதே இதற்கு முக்கியமான காரணம். இயேசு தேவனுடைய ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், தேவனுடைய ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்து கொண்டிருந்தார். இதற்கு முன்பு யாரும் செய்திராத கிரியையான புதிய யுகத்தின் கிரியையை அவர் செய்தார். அவர் ஒரு புதிய வழியைத் திறந்தார், அவர் யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் தேவனையே பிரதிநிதித்துவப்படுத்தினார், அதேசமயம் பேதுரு, பவுல் மற்றும் தாவீது ஆகியோர் இயேசுவால் அல்லது யேகோவாவால் அனுப்பப்பட்டவர்கள், அவர்கள் எதற்காக அழைக்கப்பட்டார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தேவனின் ஒரு சிருஷ்டிப்பின் அடையாளத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆகவே, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், எவ்வளவு பெரிய அற்புதங்களைச் செய்தாலும், அவர்கள் இன்னும் தேவனின் ஆவியானவரை பிரதிநிதித்துவப்படுத்த முடியாமல் தேவனின் சிருஷ்டிகளாக இருந்தனர். அவர்கள் தேவனின் நாமத்தால் கிரியை செய்தார்கள் அல்லது தேவனால் அனுப்பப்பட்ட பிறகு கிரியை செய்தார்கள். மேலும், அவர்கள் இயேசு அல்லது யேகோவா ஆரம்பித்த யுகங்களில் கிரியை செய்தார்கள், அவர்கள் வேறு எந்தக் கிரியையும் செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தேவனின் சிருஷ்டிப்புகளாக மட்டுமே இருந்தனர். பழைய ஏற்பாட்டில், அநேக தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தார்கள், அல்லது தீர்க்கதரிசன புத்தகங்களை எழுதினார்கள். அவர்களை தேவன் என்று யாரும் சொல்லவில்லை, ஆனால் இயேசு கிரியை செய்ய ஆரம்பித்தவுடன், தேவனின் ஆவியானவர் அவரை தேவன் என்று சாட்சி பகிர்ந்தார். அது ஏன்? இந்தக் கட்டத்தில், இதற்கு முன்பே, அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் பல்வேறு நிருபங்களை எழுதி, அநேக தீர்க்கதரிசனங்களை உரைத்தார்கள் என்பதை நீ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும்! பிற்காலத்தில், ஜனங்கள் அவற்றில் சிலவற்றை வேதாகமத்தில் வைப்பதற்காக தேர்ந்தெடுத்தார்கள், சில தொலைந்து போயின. அவர்களால் பேசப்படுபவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று சொல்பவர்கள் இருந்தாலும், ஏன் அவற்றில் சில நன்மையாகக் கருதப்படுகின்றன, அவற்றில் சில தீமையாகக் கருதப்படுகின்றன? சிலர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், மற்றவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? அவை உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவரினால் பேசப்பட்ட வார்த்தைகளாக இருந்தால், அவற்றைத் தேர்ந்தெடுப்பது ஜனங்களுக்கு அவசியமா? இயேசு பேசிய வார்த்தைகளின் விவரங்களும் அவர் செய்த கிரியையும் நான்கு சுவிஷேசங்களில் ஒவ்வொன்றிலும் ஏன் வேறுபடுகின்றன? இது அவற்றை எழுதியவர்களின் தவறு அல்லவா? சிலர் கேட்பார்கள், “பவுலும் மற்ற ஆசிரியர்களும் எழுதிய புதிய ஏற்பாட்டின் நிருபங்களும் அவர்கள் செய்த கிரியையும் மனிதனின் சித்தத்திலிருந்து ஓரளவு உயர்ந்து, மனிதனின் கருத்துக்களால் கலப்படம் செய்யப்பட்டதால், இன்று நீர் (தேவன்) பேசும் வார்த்தைகளில் மனிதனின் தூய்மையற்ற தன்மை இல்லையா? அவை உண்மையில் மனிதனின் கருத்துக்கள் எதையும் கொண்டிருக்கவில்லையா?” தேவன் செய்த கிரியையின் இந்த நிலை பவுல் மற்றும் அநேக அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் செய்ததைவிட முற்றிலும் வேறுபட்டு இருந்தது. அடையாளத்தில் வேறுபாடு இருப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமாக, மேற்கொள்ளப்படுகிற கிரியையிலும் வேறுபாடு உள்ளது. பவுல் தாக்கப்பட்டு கர்த்தருக்கு முன்பாக விழுந்தபின், பரிசுத்த ஆவியானவரினால் கிரியைக்கு வழிநடத்தப்பட்டார், அவர் அனுப்பப்பட்ட ஒருவரானார். ஆகவே அவர் சபைகளுக்கு நிருபங்களை எழுதினார், இந்த நிருபங்கள் அனைத்தும் இயேசுவின் போதனைகளைப் பின்பற்றின. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே கிரியை செய்ய பவுல் கர்த்தரால் அனுப்பப்பட்டார், ஆனால் தேவன் தாமே வந்தபோது, அவர் எந்த நாமத்திலும் கிரியை செய்யவில்லை, தேவனுடைய ஆவியானவரைத் தவிர வேறு எவரையும் அவருடைய கிரியையில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. தேவன் தனது கிரியையை நேரடியாகச் செய்ய வந்தார். அவர் மனிதனால் பரிபூரணமாக்கப்படவில்லை, அவருடைய கிரியை எந்த மனிதனின் போதனைகளிலும் மேற்கொள்ளப்படவில்லை. கிரியையின் இந்தக் கட்டத்தின் போது, தேவன் தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றிக் கூறுவதன் மூலம் வழிநடத்துவதில்லை, மாறாக, தன்னிடம் உள்ளதைப் பொறுத்து நேரடியாக அவருடைய கிரியையைச் செய்கிறார். உதாரணமாக, ஊழியம் செய்பவர்களுக்குரிய சோதனை, சிட்சிப்பின் நேரம், மரணத்தின் சோதனை, தேவனை நேசிக்கும் நேரம்…. இது அனைத்தும் முன்பு செய்யப்பட்டிராத கிரியை, இது மனிதனின் அனுபவங்களை விட தற்போதைய யுகத்தின் கிரியையாகும். நான் கூறிய வார்த்தைகளில், மனிதனின் அனுபவங்கள் எவை? அவை அனைத்தும் ஆவியானவரிடமிருந்து நேரடியாக வரவில்லையா, அவை ஆவியானவரினால் வெளியாக்கப்படவில்லையா? உன் திறமை மிகவும் மோசமாக இருப்பதால்தான் நீங்கள் யதார்த்தத்தை நிதானிக்க முடியவில்லை! நான் கூறும் நடைமுறை வாழ்க்கைமுறை, பாதையை வழிநடத்துவதாகும், இதற்கு முன்னர் யாராலும் எப்போதும் பேசப்படவில்லை, இந்தப் பாதையை யாரும் ஒருபோதும் அனுபவித்ததில்லை, அல்லது இந்த யதார்த்தத்தை அறிந்திருக்கவில்லை. நான் இந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு, யாரும் அவற்றைப் பேசவில்லை. இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி யாரும் பேசவில்லை, அத்தகைய விவரங்களை அவர்கள் இதுவரைப் பேசியதில்லை, மேலும், இந்தக் காரியங்களை வெளிப்படுத்த யாரும் இதுபோன்ற நிலைகளைச் சுட்டிக்காட்டவில்லை. இன்று நான் வழிநடத்தும் பாதையை யாரும் வழிநடத்தவில்லை, அது மனிதனால் வழிநடத்தப்பட்டிருந்தால், அது ஒரு புதிய வழியாக இருந்திருக்காது. உதாரணமாகப் பவுலையும் பேதுருவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இயேசு பாதையை வழிநடத்துவதற்கு முன்பு அவர்களுக்குச் சொந்த அனுபவங்கள் இல்லாதிருந்தது. இயேசு வழிநடத்திய பின்புதான் அவர்கள் இயேசு பேசிய வார்த்தைகளையும், அவர் வழிநடத்திய பாதையையும் அனுபவித்தார்கள். இதிலிருந்து அவர்கள் அநேக அனுபவங்களைப் பெற்றார்கள், மேலும் அவர்கள் நிருபங்களை எழுதினார்கள். எனவே, மனிதனின் அனுபவங்கள் தேவனின் கிரியைக்கு சமமானவை அல்ல, தேவனின் கிரியை என்பது மனிதனின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களால் விவரிக்கப்படும் அறிவுக்கு சமமானதல்ல. இன்று நான் ஒரு புதிய பாதையை வழிநடத்துகிறேன், புதிய கிரியையைச் செய்கிறேன் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன், என் கிரியையும் வெளிப்பாடுகளும் யோவானிடமிருந்தும் மற்ற எல்லா தீர்க்கதரிசிகளிடமிருந்தும் வேறுபட்டவை. அது அப்படியல்ல, நான் ஒருபோதும் அனுபவங்களைப் பெற்று, பின்னர் அவற்றைப் பற்றி உங்களிடம் பேசுவதில்லை. அப்படிச் செய்திருந்தால், அது உங்களை நீண்ட காலத்திற்கு முன்பே தாமதப்படுத்தியிருக்காதா? கடந்த காலத்தில், அநேகர் பேசிய அறிவும் போற்றப்பட்டது, ஆனால் அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் ஆவிக்குரிய நபர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அடிப்படையில் மட்டுமே பேசப்பட்டன. அவர்கள் பாதையை வழிநடத்தவில்லை, ஆனால் அவர்களின் அனுபவங்களிலிருந்து வந்தவர்கள், அவர்கள் பார்த்திருந்தவற்றிலிருந்து வந்தவர்கள், அவர்களின் அறிவிலிருந்து வந்தவர்கள். சில அவர்களின் கருத்துக்கள், மற்றும் சில அவர்கள் சுருக்கமாகக் கூறியிருந்த அனுபவத்தை உள்ளடக்கியவை. இன்று, எனது கிரியையின் தன்மை அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. மற்றவர்களால் வழிநடத்தப்படுவதை நான் அனுபவித்ததில்லை, மற்றவர்களால் பரிபூரணமாக்கப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், நான் பேசிய மற்றும் விவாதித்தவை எல்லாம் வேறு யாரையும் போன்றதல்ல மற்றும் வேறு யாராலும் பேசப்படவுமில்லை. இன்று, நீங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், நான் பேசும் வார்த்தைகளின் அடிப்படையில் உங்கள் கிரியை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வெளிப்பாடுகளும் கிரியையும் இல்லாமல், இந்தக் காரியங்களை அனுபவிக்கும் திறன் கொண்டவர்கள் யார், (ஊழியம் செய்பவர்களின் சோதனை, சிட்சிப்புக் காலம்…), அத்தகைய அறிவைப் பற்றி யாரால் பேச முடியும்? இதைக் காண்பதற்கு நீ உண்மையில் தகுதியற்றவனா? கிரியையின் நிலையைப் பொருட்படுத்தாமல், என் வார்த்தைகள் பேசப்பட்டவுடன், நீங்கள் என் வார்த்தைகளுக்கு ஏற்ப ஐக்கியம் கொள்ளவும், அதன்படி கிரியை செய்யவும் தொடங்குகிறீர்கள், அது உங்களில் எவரும் நினைவில் கொண்டிருந்த ஒரு வழி அல்ல. இவ்வளவு தூரம் வந்திருந்தும், இதுபோன்ற தெளிவும் எளிமையுமான கேள்வியைக் காண உன்னால் இயலவில்லையா? இது யாரோ நினைவில் கொண்ட ஒரு வழி அல்ல, எந்தவொரு ஆவிக்குரிய நபரின் அடிப்படையிலானதும் இல்லை. இது ஒரு புதிய பாதை, முன்பு இயேசு பேசிய அநேக வார்த்தைகள் கூட இனி ஒருபோதும் பொருந்தாது. நான் பேசுவது ஒரு புதிய சகாப்தத்தைத் திறக்கும் கிரியை, அது தனித்து நிற்கும் கிரியை. நான் செய்யும் கிரியை மற்றும் நான் பேசும் வார்த்தைகள் அனைத்தும் புதியவை. இது இன்றைய தினத்தின் புதிய கிரியை அல்லவா? இப்படியே இயேசுவின் கிரியையும் இருந்தது. அவருடைய கிரியையும் ஆலயத்தில் இருந்தவர்களிடமிருந்து வேறுபட்டது, அதுவும் பரிசேயர்களின் கிரியையிலிருந்தும் கூட வேறுபட்டது, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவராலும் செய்யப்பட்டதைப் போல எந்த ஒற்றுமையையும் அது கொண்டிருக்கவில்லை. அதைக் கண்டபின், ஜனங்களால் தீர்மானம் செய்ய முடியவில்லை. “இது உண்மையில் தேவனால் செய்யப்பட்டதா?” இயேசு யேகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அவர் மனிதனுக்கு கற்பிக்க வந்தபோது, அவர் பேசியதெல்லாம் பழைய ஏற்பாட்டின் பண்டையக் கால புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் கூறியதை விட புதியவை, வேறுபட்டவை, இதன் காரணமாக ஜனங்கள் உறுதியில்லாதவர்களாகவே இருந்தனர். இதுதான் மனிதனை சமாளிக்க மிகவும் கடினமானவனாக்குகிறது. இந்தப் புதிய கட்ட கிரியையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, உங்களில் பெரும்பாலோர் நடந்து வந்த பாதை, அந்த ஆவிக்குரிய நபர்களின் அஸ்திபாரத்தைக் கடைப்பிடிப்பதும், பிரவேசிப்பதும் ஆகும். ஆனால், நான் இன்று செய்யும் கிரியை மிகவும் வித்தியாசமானது, அதனால் அது சரியானதா இல்லையா என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை. முன்பு நீ எந்தப் பாதையில் நடந்தாய் என்பதில் எனக்கு அக்கறை இல்லை, யாருடைய “உணவை” நீ புசித்தாய், அல்லது உன் “தகப்பனாக” நீ தெரிந்து கொண்டாய் என்பதில் எனக்கு விருப்பமில்லை. மனிதனை வழிநடத்த நான் வந்திருந்து புதிய சிருஷ்டிப்புகளைக் கொண்டு வந்திருப்பதால், என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நான் சொல்வதற்கேற்ப கிரியை செய்ய வேண்டும். நீ எவ்வளவு வல்லமையுள்ள “குடும்பத்தைச்” சேர்ந்தவனாக இருந்தாலும், நீ என்னைப் பின்பற்ற வேண்டும், நீ உன் முந்தைய நடைமுறைகளின்படி கிரியை செய்யக்கூடாது, உன் “வளர்ப்புத் தகப்பன்” பொறுப்பில் இருந்து விலக வேண்டும், நீ உன் நியாமான பங்கைப் பெற உன் தேவனுக்கு முன் வர வேண்டும். நீ முழுமையாக என் கைகளில் இருக்கிறாய், மேலும் நீ உன் வளர்ப்புத் தகப்பனுக்கு அதிகமான குருட்டு விசுவாசத்தை அர்ப்பணிக்கக்கூடாது. அவன் உன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இன்றைய தினத்தின் கிரியை தனித்து நிற்கிறது. நான் இன்று சொல்வது அனைத்தும் கடந்த காலத்திலிருந்து ஒரு அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இது ஒரு புதிய ஆரம்பம், அது மனிதனின் கையால் சிருஷ்டிக்கப்பட்டது என்று நீ சொன்னால், நீ இரட்சிப்புக்கு அப்பாற்பட்ட அளவுக்குக் குருடனாய் இருக்கிறாய்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 163

ஏசாயா, எசேக்கியேல், மோசே, தாவீது, ஆபிரகாம் மற்றும் தானியேல் ஆகியோர் இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடையே தலைவர்களாகவோ தீர்க்கதரிசிகளாகவோ இருந்தார்கள். ஏன் அவர்கள் தேவன் என்று அழைக்கப்படவில்லை? ஏன் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு சாட்சி பகரவில்லை? பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் கிரியையைத் தொடங்கியதும், அவருடைய வார்த்தைகளைப் பேசத் தொடங்கியதும் ஏன் அவருக்கு சாட்சி பகர்ந்தார்? ஏன் பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களுக்கு சாட்சி பகரவில்லை? அவர்கள் மாம்சமான மனிதர்கள், அனைவரும் “ஆண்டவன்” என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அழைக்கப்பட்டதைக் கவனம் கொள்ளாமல், அவர்களின் கிரியை அவர்கள் இருக்கும் நிலை மற்றும் அவர்களின் சாராம்சத்தைக் குறிக்கிறது, மேலும் அவர்கள் இருக்கும் நிலை மற்றும் அவர்களின் சாராம்சம் ஆகியவை அவர்களின் அடையாளத்தைக் குறிக்கின்றன. அவர்களின் சாராம்சம் அவர்களின் பட்டங்களுடன் தொடர்புடையது அல்ல. அது அவர்கள் வெளிப்படுத்தியவை மற்றும் அவர்கள் வாழ்ந்த விதம் ஆகியவற்றால் குறிப்பிடப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில், ஆண்டவன் என்று சாதாரணமானவர்கள் அழைக்கப்படுவதில் எதுவும் இல்லை, ஒரு நபர் எந்த வகையிலும் அழைக்கப்படலாம், ஆனால் அவருடைய சாராம்சம் மற்றும் இயல்பான அடையாளம் மாற்ற முடியாததாக இருந்தது. அந்தக் கள்ளக் கிறிஸ்துக்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள் மற்றும் ஏமாற்றுபவர்களில், “தேவன்” என்று அழைக்கப்படுபவர்களும் இருந்தார்கள் இல்லையா? ஏன் அவர்கள் தேவன் இல்லை? ஏனென்றால் அவர்களால் தேவனின் கிரியையைச் செய்ய முடியாது. அடிப்படையில் அவர்கள் மனிதர்கள், ஜனங்களை ஏமாற்றுகிறார்கள், தேவன் அல்ல, எனவே அவர்கள் தேவனின் அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. பன்னிரண்டு கோத்திரங்களில் தாவீது ஆண்டவன் என்றும் அழைக்கப்படவில்லையா? இயேசு ஆண்டவர் என்றும் அழைக்கப்பட்டார். இயேசு மட்டும் ஏன் மனுஷ ரூபமெடுத்த தேவன் என்று அழைக்கப்பட்டார்? எரேமியாவும் மனுஷகுமாரன் என்று அறியப்படவில்லையா? மேலும் இயேசு மனுஷகுமாரன் என்று அறியப்படவில்லையா? தேவனின் சார்பாக இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? அவருடைய சாராம்சம் வேறுபட்டது என்பதால் அல்லவா? அவர் செய்த கிரியை வேறுபட்டது என்பதால் அல்லவா? பட்டப்பெயர் முக்கியமா? இயேசு மனுஷகுமாரன் என்றும் அழைக்கப்பட்டாலும், அவர் தேவனின் முதல் மனுஷ அவதரிப்பு ஆவார், அவர் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும், மீட்பின் கிரியையைச் செய்யவும் வந்திருந்தார். மனுஷ குமாரன் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களிடமிருந்து இயேசுவின் அடையாளமும் சாரமும் வேறுபட்டவை என்பதை இது நிரூபிக்கிறது. இன்று, பரிசுத்த ஆவியானவரினால் பயன்படுத்தப்பட்டவர்களால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று உங்களில் யார் சொல்லத் துணிகிறார்கள்? இதுபோன்ற காரியங்களை யாராவது சொல்லத் துணிகிறார்களா? நீ இதுபோன்ற காரியங்களைச் சொன்னால், எஸ்ராவின் தீர்க்கதரிசன புத்தகம் ஏன் நிராகரிக்கப்பட்டது, அந்தப் பண்டைய காலப் புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் ஏன் அதேபோல் செய்யப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், நீங்கள் ஏன் இத்தகைய நிலையற்ற தேர்வுகளைச் செய்யத் துணிகிறீர்கள்? பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேர்ந்தெடுப்பதற்கு நீ தகுதியுள்ளவனா? இஸ்ரேலில் இருந்து அநேக கதைகளும் நிராகரிக்கப்பட்டன. மேலும் கடந்த காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று நீ நம்பினால், சில புத்தகங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்திருந்தால், அவை அனைத்தும் வைக்கப்பட்டிருக்க வேண்டும், சபைகளின் சகோதர சகோதரிகளுக்கு வாசிக்க அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அவை மனிதனின் சித்தத்தால் தேர்ந்தெடுக்கப்படவோ நிராகரிக்கப்படவோ கூடாது. அதைச் செய்வது தவறாகும். பவுல் மற்றும் யோவானின் அனுபவங்கள் அவர்களின் தனிப்பட்ட உள்ளுணர்வுடன் கலந்தன என்று சொல்வதால் அவர்களின் அனுபவங்களும் அறிவும் சாத்தானிடமிருந்து வந்தவை என்று அர்த்தமல்ல, ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் உள்ளுணர்வுகளிலிருந்து வந்த காரியங்களை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர். அவர்களின் அறிவு அந்த நேரத்தில் அவர்களின் நிஜ அனுபவங்களின் பின்னணிக்கு ஏற்ப இருந்தது, இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்தவை என்று யாரால் விசுவாசத்துடன் சொல்ல முடியும்? நான்கு சுவிசேஷங்களும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவை என்றால், மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஒவ்வொருவரும் இயேசுவின் கிரியையைப் பற்றி ஏன் வித்தியாசமாகச் சொன்னார்கள்? நீங்கள் இதை விசுவாசிக்கவில்லை என்றால், பேதுரு எவ்வாறு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தான் என்ற வேதாகமத்தில் உள்ள விளக்கங்களைப் பாருங்கள். அவை அனைத்தும் வேறுபட்டவை, அவை ஒவ்வொன்றும் அவற்றின் தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. அறியாதவர்கள் அநேகர், “மனுஷ ரூபமெடுத்த தேவனும் ஒரு மனிதராவார், ஆகவே அவர் பேசும் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து முழுமையாக வர முடியுமா? பவுல் மற்றும் யோவானின் வார்த்தைகள் மனிதனின் சித்தத்துடன் கலந்திருந்தால், அவர் பேசும் வார்த்தைகள் உண்மையில் மனிதனின் சித்தத்துடன் கலக்கப்படவில்லையா?” இப்படிச் சொல்லும் ஜனங்கள் குருடர்கள் மற்றும் அறிவற்றவர்கள்! நான்கு சுவிஷேசங்களையும் கவனமாக வாசியுங்கள். இயேசு செய்த காரியங்களையும், அவர் பேசிய வார்த்தைகளையும் பற்றி அவர்கள் பதிவுசெய்ததை வாசியுங்கள். ஒவ்வொரு விளக்கமும் மிகவும் வித்தியாசமானது, ஒவ்வொன்றும் அதன் சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஏன் முரண்பாடுகள் உள்ளன? இதைக் காண முடியாத அளவிற்கு மனிதன் மிகவும் முட்டாளானவன் அல்லவா? தேவனுக்காக சாட்சி பகர உன்னைக் கேட்டால், நீ எந்த வகையான சாட்சிகளைப் பகர முடியும்? தேவனை அறிவதற்கான அத்தகைய ஒரு வழியில் அவருக்கு சாட்சி பகர முடியுமா? “யோவான் மற்றும் லூக்காவின் பதிவுகள் மனித விருப்பத்துடன் கலந்திருந்தால், உங்கள் தேவன் பேசும் வார்த்தைகள் மனித விருப்பத்துடன் கலக்கப்படவில்லையா?” என்று பிறர் உன்னிடம் கேட்டால், உன்னால் தெளிவான பதிலைக் கொடுக்க முடியுமா? லூக்காவும் மத்தேயுவும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டிருந்து, இயேசுவின் கிரியையைப் பார்த்திருந்த பின், இயேசுவின் கிரியையின் சில யதார்த்தங்களை நினைவுறுத்தும் படியாக, அவர்கள் தங்கள் சொந்த அறிவைப் பற்றிப் பேசினார்கள். அவர்களின் அறிவு பரிசுத்த ஆவியானவரினால் முழுமையாக வெளிப்பட்டது என்று நீ சொல்ல முடியுமா? வேதாகமத்திற்கு வெளியே, அவர்களை விட உயர்ந்த அறிவைக் கொண்ட அநேக ஆவிக்குரிய பிரமுகர்கள் இருந்தார்கள், ஆகவே, அவர்களின் வார்த்தைகள் பிற்கால சந்ததியினரால் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை? அவை பரிசுத்த ஆவியானவரினாலும் பயன்படுத்தப்படவில்லையா? இன்றைய தினத்தின் கிரியையில், இயேசுவின் கிரியையின் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்ட எனது சொந்த உள்ளுணர்வுகளைப் பற்றி நான் பேசவில்லை என்பதையும், இயேசுவின் கிரியையின் பின்னணிக்கு எதிராக எனது சொந்த அறிவைப் பற்றியும் நான் பேசவில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இயேசு என்ன கிரியை செய்தார்? இன்று நான் என்ன கிரியை செய்கிறேன்? நான் செய்வதற்கும் சொல்வதற்கும் எந்த முன் மாதிரியும் இல்லை. இன்று நான் நடந்து செல்லும் பாதை இதற்கு முன் ஒருபோதும் நடக்கப்படவில்லை, இது ஒருபோதும் யுகங்களுக்கும் தலைமுறைகளுக்கும் முன்பான ஜனங்களால் நடக்கப்படவில்லை. இன்று, இது தொடங்கப்பட்டுள்ளது, இது ஆவியானவரின் கிரியை அல்லவா? இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றாலும், கடந்த காலத் தலைவர்கள் அனைவரும் மற்றவர்களின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் தங்கள் கிரியையைச் செய்தார்கள்; இருப்பினும், தேவனாகிய அவருடைய கிரியை வேறுபட்டது. இயேசுவின் கிரியையின் கட்டம் ஒரே மாதிரியாக இருந்தது. அவர் ஒரு புதிய வழியைத் திறந்தார். அவர் வந்ததும், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார், மனிதன் மனந்திரும்பி அறிக்கையிட வேண்டும் என்று கூறினார். இயேசு தம்முடைய கிரியையை முடித்த பிறகு, பேதுருவும் பவுலும் மற்றவர்களும் இயேசுவின் கிரியையைச் செய்யத் தொடங்கினார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டு பரலோகத்திற்கு ஏறிய பிறகு, அவர்கள் சிலுவையின் வழியைப் பரப்ப ஆவியானவரால் அனுப்பப்பட்டார்கள். பவுலின் வார்த்தைகள் போற்றப்பட்டாலும், பொறுமை, அன்பு, துன்பம், முக்காடிடுதல், ஞானஸ்நானம் அல்லது பின்பற்ற வேண்டிய பிற உபதேசங்கள் போன்ற இயேசு கூறிய அஸ்திபாரத்தின் அடிப்படையிலும் அவை அமைந்தன. இவை அனைத்தும் இயேசுவின் வார்த்தைகளின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் பேசப்பட்டன. அவர்களால் ஒரு புதிய வழியைத் திறக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் அனைவரும் தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 164

அந்த நேரத்தில் இயேசுவின் வெளிப்பாடுகளும் கிரியைகளும் கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை, பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின் கிரியைக்கு ஏற்ப அவர் தனது கிரியையைச் செய்யவில்லை. இது கிருபையின் காலத்தில் செய்யப்பட வேண்டிய கிரியைக்கு ஏற்றாற்போல் மேற்கொள்ளப்பட்டது. அவர் கொண்டு வந்திருந்த கிரியையின்படி, அவருடைய சொந்தத் திட்டத்தின்படி, அவருடைய ஊழியத்தின்படி பிரயாசப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின்படி கிரியை செய்யவில்லை. அவர் செய்த எதுவும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின்படி இல்லை, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக அவர் கிரியை புரிய வரவில்லை. தேவனின் கிரியையின் ஒவ்வொரு கட்டமும் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை நிறைவேற்றுவதற்காக வெளிப்படையாகச் செய்யப்படவில்லை, மேலும் அவர் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவோ அல்லது பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை வேண்டுமென்றே உணரவோ வரவில்லை. ஆயினும் அவருடைய கிரியைகள் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளைப் பாழாக்கவில்லை, அவர் முன்பு செய்திருந்த கிரியையையும் இடையூறு செய்யவில்லை. எந்தவொரு கோட்பாட்டையும் பின்பற்றாமல் அதற்குப் பதிலாக அவரே செய்ய வேண்டிய கிரியையைச் செய்வது என்பது அவருடைய கிரியையின் முக்கிய அம்சமாகும். அவர் ஒரு தீர்க்கதரிசியோ அல்லது ஞானதிருஷ்டிக்காரரோ அல்ல, ஆனால் அவர் செய்யவேண்டிய கிரியையைச் செய்ய உண்மையாக வந்த ஒரு செய்கைக்காரர், அவர் தனது புதிய யுகத்தைத் தொடங்கவும், அவருடைய புதிய கிரியையைச் செய்யவும் வந்தார். நிச்சயமாக, இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, பழைய ஏற்பாட்டில் பண்டைய தீர்க்கதரிசிகள் பேசிய அநேக வார்த்தைகளையும் அவர் நிறைவேற்றினார். இன்றைய கிரியையும் பழைய ஏற்பாட்டின் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளையும் நிறைவேற்றியுள்ளது. “பழைய பஞ்சாங்கத்தை” நான் வைத்திருப்பதில்லை என்பது போன்றதுதான் இது, அவ்வளவுதான். ஏனென்றால், நான் செய்யவேண்டிய கிரியைகள் அதிகம் உள்ளன, நான் உங்களிடம் பேச வேண்டிய அநேக வார்த்தைகள் உள்ளன, இந்தக் கிரியையும் இந்த வார்த்தைகளும் வேதாகமத்தின் பத்திகளை விளக்குவதை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனென்றால் இதுபோன்ற கிரியைக்கு பெரியதான முக்கியத்துவம் அல்லது மதிப்பு உங்களுக்கு இல்லை, அது உங்களுக்கு உதவ முடியாது, அல்லது உங்களை மாற்ற முடியாது. வேதாகமத்திலிருந்து எந்தவொரு பத்தியையும் நிறைவேற்றுவதற்காக புதிய கிரியையைச் செய்ய நான் விரும்புகிறதில்லை. வேதாகமத்தின் பண்டைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிறைவேற்ற மட்டுமே தேவன் பூமிக்கு வந்திருந்தால், யார் பெரியவர், மனுஷனாக அவதரித்த தேவனா அல்லது அந்தப் பண்டைய தீர்க்கதரிசிகளா? எல்லாவற்றிற்கும் மேலாக, தீர்க்கதரிசிகள் தேவனுக்குப் பொறுப்பானவர்களா, அல்லது தேவன் தீர்க்கதரிசிகளுக்குப் பொறுப்பானவரா? இந்த வார்த்தைகளை நீ எவ்வாறு விளக்குகிறாய்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 165

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியும் ஒரே ஓட்டத்தைப் பின்பற்றுகிறது, எனவே தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தில், ஒவ்வொரு படியும் அடுத்தடுத்து, உலகின் அஸ்திபாரத்திலிருந்து இன்று வரை நெருக்கமாகப் பின்பற்றப்படுகிறது. வழி வகுக்க யாரும் இல்லாதிருந்தால், யாரும் பின்பற்றி வரமாட்டார்கள். பின்னால் வருபவர்களும் இருப்பதால், வழி வகுப்போரும் இருக்கிறார்கள். இந்த வழியில் கிரியை படிப்படியாக வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு படி மற்றொன்றைப் பின்தொடர்கிறது, யாரோ ஒருவர் வழியைத் திறக்காமல், கிரியையைத் தொடங்குவது சாத்தியமில்லை, மேலும் தேவன் தனது கிரியையை முன்னோக்கி எடுத்துச் செல்ல வழி இல்லை. எந்தப் படியும் மற்றொன்றிற்கு முரண்பட்டதாக இல்லை, ஒவ்வொன்றும் ஒரு ஓட்டத்தை உருவாக்குவதற்கு வரிசையாக மற்றொன்றைப் பின்பற்றுகின்றன. இவை அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகின்றன. ஆனால் யாரோ ஒருவர் வழியைத் திறக்கிறாரா அல்லது வேறொருவரின் கிரியையைச் செய்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், இது அவர்களின் அடையாளத்தை தீர்மானிக்கவில்லை. இது சரிதானல்லவா? யோவான் வழியைத் திறந்தார், இயேசு தனது கிரியையைச் செய்தார், ஆகவே, இயேசுவின் அடையாளம் யோவானை விடக் குறைவு என்பதை இது நிரூபிக்கிறதா? யேகோவா இயேசுவுக்கு முன்பாக தனது கிரியையைச் செய்தார், எனவே யேகோவா இயேசுவை விடவும் பெரியவர் என்று உன்னால் சொல்ல முடியுமா? அவர்கள் வழி வகுத்தார்களா அல்லது மற்றவர்களின் கிரியையைச் செய்தார்களா என்பது முக்கியமல்ல. மிக முக்கியமானது என்னவென்றால், அவர்களின் கிரியையின் சாராம்சம் மற்றும் அது குறிப்பிடும் அடையாளம். இது சரிதானல்லவா? தேவன் மனிதர்களிடையே கிரியை செய்ய நினைத்ததால், வழி வகுக்கும் கிரியையைச் செய்ய இயன்றவர்களை அவர் எழுப்ப வேண்டியிருந்தது. யோவான் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று அவர் ஆரம்பத்திலிருந்தே பேசினார், ஏன் இந்த வார்த்தைகளை அவரால் சொல்ல முடிந்தது? இந்த வார்த்தைகள் பேசப்பட்ட வரிசையைப் பொறுத்தவரை, பரலோக ராஜ்யத்தின் சுவிசேஷத்தை முதலில் பேசியது யோவானும், பின்னர் பேசியது இயேசுவும்தான். மனிதனின் கருத்துக்களின்படி, புதிய பாதையைத் திறந்தவர் யோவான், ஆகவே யோவான் இயேசுவை விட பெரியவராக இருந்தார். ஆனால் யோவான் தான் கிறிஸ்து என்று சொல்லவில்லை, தேவனுடைய அன்பான குமாரன் என்று தேவன் அவருக்கு சாட்சி பகிரவில்லை, மாறாக வழியைத் திறந்து கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்த வெறுமனே அவரைப் பயன்படுத்தினார். அவர் இயேசுவுக்கு வழி வகுத்தார், ஆனால் இயேசுவின் சார்பாக அவரால் கிரியை செய்ய முடியவில்லை. மனிதனின் எல்லா கிரியைகளும் பரிசுத்த ஆவியானவரினால் பராமரிக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டின் காலத்தில், யேகோவாதான் வழிநடத்தினார், யேகோவாவின் கிரியை பழைய ஏற்பாட்டின் முழு யுகத்தையும், இஸ்ரேலில் செய்யப்பட்ட அனைத்து கிரியைகளையும் குறிக்கிறது. மோசே பூமியில் இந்தக் கிரியையை வெறுமனே ஆதரித்தார், அவருடைய பிரயாசங்கள் மனிதனால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பாகக் கருதப்படுகிறது. அந்த நேரத்தில், யேகோவா பேசினார், மோசேயை அழைத்தார், அவர் மோசேயை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து எழுப்பினார், அவர்களை வனாந்தரத்தின் வழியாய் கானானுக்கு வழிநடத்தச் செய்தார். இது மோசேயின் கிரியை அல்ல, ஆனால் தனிப்பட்ட முறையில் யேகோவாவால் நடத்தப்பட்டதாகும், எனவே மோசேயை தேவன் என்று அழைக்க முடியாது. மோசேயும் நியாயப்பிரமாணத்தை வகுத்தார், ஆனால் இந்த நியாயப்பிரமாணம் தனிப்பட்ட முறையில் யேகோவாவால் கட்டளையிடப்பட்டது. அவர் அதை மோசேயைக் கொண்டு வெளிப்படுத்தியிருந்தார். இயேசுவும் கட்டளைகளை உண்டாக்கினார், மேலும் அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தை ரத்துசெய்து புதிய யுகத்திற்கான கட்டளைகளை வகுத்தார். இயேசு தாமே ஏன் தேவனாவார்? ஏனெனில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அந்த நேரத்தில், மோசே செய்த கிரியைகள் யுகத்தைக் குறிக்கவுமில்லை, புதிய வழியைத் திறக்கவுமில்லை; அவர் யேகோவாவால் வழிநடத்தப்பட்டார், வெறுமனே தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒருவராவார். இயேசு வந்தபோது, யோவான் வழியை வகுக்கும் ஒரு படியைச் செய்து, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்த ஆரம்பித்திருந்தார் (பரிசுத்த ஆவியானவர் இதைத் தொடங்கியிருந்தார்). இயேசு வந்த போது, அவர் நேரடியாகத் தனது சொந்த கிரியையைச் செய்தார், ஆனால் அவருடைய கிரியைக்கும் மோசேயின் கிரியைக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. ஏசாயாவும் அநேக தீர்க்கதரிசனங்களைப் பேசினார், ஆனாலும் அவர் ஏன் தேவனாக இருந்ததில்லை? இயேசு அநேக தீர்க்கதரிசனங்களைப் பேசவில்லை, ஆனாலும் ஏன் அவர் தாமே தேவனாவார்? அந்த நேரத்தில் இயேசுவின் கிரியை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவை என்று யாரும் சொல்லத் துணியவில்லை, அதெல்லாம் மனிதனின் சித்தத்திலிருந்தே வந்தன, அல்லது அது முற்றிலும் தேவனின் கிரியை என்று சொல்லத் துணியவில்லை. இதுபோன்ற காரியங்களை ஆய்வு செய்ய மனிதனுக்கு வழி இருந்ததில்லை. ஏசாயா அத்தகைய கிரியையைச் செய்தார், அத்தகைய தீர்க்கதரிசனங்களைப் பேசினார், அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவைகள் என்று கூறலாம். அவை ஏசாயாவிடமிருந்து நேரடியாக வரவில்லை, ஆனால் யேகோவாவிடமிருந்து வெளிப்பட்டவை. இயேசு பெரிய அளவில் கிரியை செய்யவில்லை, அநேக வார்த்தைகளைச் சொல்லவில்லை, அநேக தீர்க்கதரிசனங்களையும் உரைக்கவில்லை. மனிதனைப் பொறுத்தவரை, அவருடைய பிரசங்கம் குறிப்பாக உயர்ந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் அவர் தாமே தேவன், இது மனிதனால் விவரிக்க முடியாதது. யோவான், ஏசாயா, தாவீது ஆகியோரையும் யாரும் நம்பவில்லை, அவர்களை தேவன், அல்லது தாவீதாகிய தேவன், அல்லது யோவானாகிய தேவன் என்று யாரும் அழைக்கவில்லை; இதுவரை இப்படியாக யாரும் பேசவில்லை, இயேசு மட்டுமே கிறிஸ்து என்று எப்போதும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த வகைப்படுத்துதல் தேவனின் சாட்சி, அவர் மேற்கொண்ட கிரியை மற்றும் அவர் செய்த ஊழியத்தின் படி செய்யப்படுகிறது. வேதாகமத்தின் பெரிய மனிதர்களான ஆபிரகாம், தாவீது, யோசுவா, தானியேல், ஏசாயா, யோவான் மற்றும் இயேசு ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்கள் செய்த கிரியையின் மூலம், தேவன் யார், எந்த வகையான ஜனங்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் யார் அப்போஸ்தலர்கள் என்பதை உன்னால் சொல்ல முடியும். தேவனால் யார் பயன்படுத்தப்பட்டார்கள், தேவனாக இருந்தவர் யார், என்பவை அவர்களின் சாராம்சத்தையும் மற்றும் அவர்கள் புரிந்த கிரியையைப் பொருத்தும் வேறுபடுத்தப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. உன்னால் வித்தியாசத்தைச் சொல்ல முடியாவிட்டால், தேவனை விசுவாசிப்பதன் அர்த்தம் உனக்குத் தெரியாது என்பதை இது நிரூபிக்கிறது. இயேசு தேவனாவார், ஏனென்றால் அவர் அநேக வார்த்தைகளைப் பேசினார், அநேகக் கிரியைகளைச் செய்தார், குறிப்பாக அநேக அற்புதங்களை அவர் செய்துகாட்டினார். அதேபோல், யோவானும் மோசே செய்ததைப் போலவே அதிகக் கிரியை செய்தார், அநேக வார்த்தைகளைப் பேசினார். அவர்கள் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? ஆதாம் தேவனால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டார். ஒரு சிருஷ்டி என்று மட்டுமே அழைக்கப்படுவதற்குப் பதிலாக அவர் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? “இன்று, தேவன் இவ்வளவு கிரியைகளைச் செய்துள்ளார், அநேக வார்த்தைகளைப் பேசினார். அவரே தேவனாவார். பின்னர், மோசே அநேக வார்த்தைகளைப் பேசியதால், அவரும் தேவனாக இருந்திருக்க வேண்டும்!” என்று யாராவது உன்னிடம் சொன்னால், அதற்கு நீ அவர்களிடம் திரும்ப கேட்க வேண்டியது, “அந்த நேரத்தில், தேவன் ஏன் யோவானுக்கு இல்லாமல் இயேசுவுக்கு தேவனாகவே சாட்சி பகர்ந்தார்? யோவான் இயேசுவுக்கு முன்பாக வரவில்லையா? எது பெரியது, யோவானின் கிரியையா அல்லது இயேசுவின் கிரியையா? மனிதனுக்கு, யோவானின் கிரியை இயேசுவை விட உயர்ந்ததாகத் தோன்றுகிறது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஏன் யோவானுக்கு இல்லாமல் இயேசுவுக்கு சாட்சி அளித்தார்?” இன்றும் இதேதான் நடக்கிறது! அந்த நேரத்தில், மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தியபோது, யேகோவா மேகங்களில் இருந்து அவரிடம் பேசினார். மோசே நேரடியாகப் பேசவில்லை, மாறாக யேகோவாவால் நேரடியாக வழிநடத்தப்பட்டார். இது பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலின் கிரியை. மோசேக்குள் ஆவியானவரும் இல்லை, தேவனின் சாயலும் இல்லை. அவரால் அந்த கிரியையைச் செய்ய முடியவில்லை, ஆகவே, அவர் செய்த கிரியைக்கும் இயேசு செய்த கிரியைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் செய்த கிரியை வேறுபட்டது! யாராவது தேவனால் பயன்படுத்தப்பட்டார்களா, அல்லது ஒரு தீர்க்கதரிசியா, ஒரு அப்போஸ்தலனா, அல்லது தேவன்தானா என்பதை அவருடைய கிரியையின் தன்மையால் அறிய முடியும், இது உன்னுடைய சந்தேகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளைத் திறக்க முடியும் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. யுகங்கள் முழுவதும், அந்த பெரிய நபர்களிடையே அநேக வேதங்களை வெளிப்படுத்தியவர்கள் இருந்திருக்கிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஆட்டுக்குட்டியானவர் என்று நீ சொல்ல முடியுமா? அவர்களின் விளக்கங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்று நீ சொல்ல முடியுமா? அவர்கள் வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு ஆட்டுக்குட்டியானவரின் அடையாளம் இல்லை. ஏழு முத்திரைகளைத் திறக்க அவர்கள் எவ்வாறு தகுதியுடையவர்களாக இருக்க முடியும்? “ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளைத் திறக்க முடியும்” என்பது யதார்த்தம்தான், ஆனால் அவர் ஏழு முத்திரைகளைத் திறக்க மட்டும் வரவில்லை. இந்த கிரியைக்கு எந்த அவசியமும் இல்லை, இது தற்செயலாக செய்யப்படுகிறது. அவர் தனது சொந்த கிரியையைப் பற்றி முற்றிலும் தெளிவாக இருக்கிறார். வேதவசனங்களை விளக்குவதற்கு அவர் அதிக நேரம் செலவிடுவது அவசியமா? ஆறாயிரம் ஆண்டுகால கிரியைகளில் “வேதவசனங்களை விளக்கும் ஆட்டுக்குட்டியானவரின் காலமும்” சேர்க்கப்பட வேண்டுமா? அவர் புதிய கிரியைகளைச் செய்ய வருகிறார், ஆனால் கடந்த கால கிரியைகளைக் குறித்த சில வெளிப்பாடுகளையும் அவர் அளிக்கிறார், ஆறாயிரம் ஆண்டு கிரியைகளின் சத்தியத்தை ஜனங்களுக்குப் புரிய வைக்கிறார். வேதாகமத்திலிருந்து அதிகமான பத்திகளை விளக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய கிரியைதான் மதிப்பு மிக்கது, அது முக்கியமானதாகும். ஏழு முத்திரைகளை உடைப்பதற்காக இல்லாமல் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய வேண்டும் என்றே தேவன் வந்தார் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 166

கிருபையின் யுகத்தில், யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான். யோவானால் தேவனின் கிரியையைச் செய்ய முடியவில்லை, ஆனால் மனுஷனின் கடமையை மட்டுமே நிறைவேற்றினான். யோவான் கர்த்தருடைய முன்னோடியாக இருந்தான் என்றாலும், அவனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை; அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் மட்டுமே. இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல அவர்மீது இறங்கினார். பின்னர் அவர் தமது கிரியையைத் தொடங்கினார், அதாவது அவர் கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்யத் தொடங்கினார். அதனால்தான் அவர் தேவனின் அடையாளத்தைச் சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அவர் தேவனிடமிருந்து வந்தார். இதற்கு முன்பு அவருடைய விசுவாசம் எப்படியிருந்திருந்தாலும்—அது சில சமயங்களில் பலவீனமாக இருந்திருக்கலாம், அல்லது சில சமயங்களில் வலுவாகவும் இருந்திருக்கலாம்—அவை அனைத்தும் அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வழிநடத்தியச் சாதாரண மனுஷ ஜீவிதத்தைச் சேர்ந்தவை. அவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகு (அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட பின்), தேவனின் வல்லமையும் மகிமையும் உடனடியாக அவரிடத்தில் வந்துசேர்ந்தன, ஆகவே அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கினார். அவரால் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடிந்தது, அதிசயங்களைச் செய்ய முடிந்தது, அவருக்கு வல்லமையும் அதிகாரமும் இருந்தன, ஏனென்றால் அவர் நேரடியாக தேவனின் சார்பாகக் கிரியை செய்துவந்தார்; அவர் ஆவியானவரின் கிரியையை அவருக்குப் பதிலாகச் செய்து ஆவியானவரின் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகையால், அவரே தேவன்; இது மறுக்க முடியாதது. யோவான் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒருவன். அவனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாத்தியமும் அவனுக்கு இல்லை. அவன் அவ்வாறு செய்ய விரும்பியிருந்தால், பரிசுத்த ஆவியானவர் அதை அனுமதித்திருக்க மாட்டார், ஏனென்றால் தேவன் தாமாகவே நிறைவேற்ற நினைத்த கிரியையை அவனால் செய்ய முடியவில்லை. ஒருவேளை மனுஷன் நிறைய விருப்பங்களைக் கொண்டிருந்திருக்கலாம், அல்லது மாறுபட்ட ஏதோவொன்று இருந்திருக்கலாம்; எந்தச் சூழ்நிலையிலும் அவனால் நேரடியாக தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்திருக்காது. அவனுடைய முட்டாள்தனம் அவனை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தின, ஆனால் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது. ஆனாலும், அவனுடைய அனைத்தும் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்று உன்னால் சொல்ல முடியாது. அவனுடைய விலகலும் பிழையும் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? மனுஷனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தவறு இருப்பது இயல்பானது, ஆனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஒருவன் மாறுபட்டவனாக இருந்தால், அது தேவனை அவமதிப்பதாக இருக்காதா? அது பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணம் அல்லவா? மற்றவர்களால் உயர்த்தப்பட்டாலும், தேவனின் இடத்தில் நிற்க பரிசுத்த ஆவியானவர் மனுஷனை அனுமதிப்பதில்லை. அவன் தேவன் இல்லையென்றால், அவனால் இறுதியில் நிலையாக நிற்க முடியாது. மனுஷன் விரும்பியபடி தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த பரிசுத்த ஆவியானவர் மனுஷனை அனுமதிப்பதில்லை! உதாரணமாக, பரிசுத்த ஆவியானவர் யோவானுக்கு சாட்சியம் அளித்தார், அவன்தான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தியவன் என்பதை வெளிப்படுத்தியதும் பரிசுத்த ஆவியானவர்தான், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவன்மீது செய்த கிரியைகள் நன்கு அளவிடப்பட்டிருந்தன. யோவானிடம் கேட்கப்பட்டதெல்லாம், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும், அவருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பன மட்டுமே. அதாவது, பரிசுத்த ஆவியானவர், வழியை ஆயத்தப்படுத்தும் அவனுடைய கிரியையை மட்டுமே ஆதரித்தார், அத்தகைய கிரியையைச் செய்ய மட்டுமே அவனை அனுமதித்தார்—வேறு எந்தக் கிரியையும் செய்ய அவனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. யோவான் எலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினான், மேலும் வழியை ஆயத்தப்படுத்த ஒரு தீர்க்கதரிசியையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்தினான். பரிசுத்த ஆவியானவர் இவ்விஷயத்தில் அவனை ஆதரித்தார்; அவனுடைய கிரியை வழிவகுப்பதாக இருக்கும் வரை, பரிசுத்த ஆவியானவர் அவனை ஆதரித்தார். இருப்பினும், அவனே தேவனாக இருப்பதாகக் கூறி, மீட்பின் கிரியையை முடிக்க வந்திருப்பதாகச் சொன்னால், பரிசுத்த ஆவியானவர் அவனை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்திருக்கும். யோவானின் கிரியை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கிரியைக்கு எல்லைகள் இல்லாமல் இல்லை. பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கிரியையை உண்மையிலேயே ஆதரித்தார் என்பது உண்மையாக இருப்பினும், அந்த நேரத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வல்லமை அவன் வழியை ஆயத்தப்படுத்த மட்டுமே என வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவனால் வேறு எந்தக் கிரியையும் செய்ய முடியவில்லை, ஏனென்றால் அவன் வழியை ஆயத்தப்படுத்த வந்த யோவான் மட்டுமே, இயேசு அல்ல. ஆகையால், பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் முக்கியமானது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் மனுஷனைச் செய்ய அனுமதிக்கும் கிரியை அதைவிட முக்கியமானது. அந்த நேரத்தில் யோவானுக்கு அற்புதமான சாட்சியம் கிடைக்கவில்லையா? அவனது கிரியையும் பெரிதாக இருக்கவில்லையா? ஆனால் அவன் செய்த கிரியையானது இயேசுவை விட அதிகமானதாக இருக்க முடியாது, ஏனென்றால் அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் மட்டுமே, மேலும் தேவனை அவனால் நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, எனவே அவன் செய்த கிரியை வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவன் தனது ஆயத்தப்படுத்தும் கிரியையை முடித்தபின், பரிசுத்த ஆவியானவர் அவனது சாட்சியத்தை ஆதரிக்கவில்லை, புதிய கிரியைகள் எதுவும் அவனுக்குக் கொடுக்கப்படவில்லை, தேவன் அவராகவே கிரியை செய்யத் தொடங்கியவுடன் அவன் புறப்பட்டுச் சென்றான்.

சிலர் பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டு, “நான் தான் தேவன்!” என்று சத்தமாகக் கூக்குரலிடுகிறார்கள். ஆயினும்கூட, இறுதியில், அவர்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயத்தில் அவர்கள் தவறு செய்கிறார்கள். அவர்கள் சாத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குச் செவிசாய்ப்பதில்லை. நீ உன்னை எவ்வளவு உயர்த்திக் கொண்டாலும் அல்லது எவ்வளவு சத்தமாகக் கூக்குரலிட்டாலும், நீ இன்னும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன்தான். நீ சாத்தானுக்குச் சொந்தமானவன். “நான்தான் தேவன், நான்தான் தேவனின் அன்பான குமாரன்!” என்று நான் கூக்குரலிடுவதில்லை, ஆனால் நான் செய்யும் கிரியை தேவனின் கிரியை. நான் கத்த வேண்டுமா? உயர்த்திக் கூறவேண்டிய அவசியமே இல்லை. தேவன் தமது சொந்தக் கிரியையைத் தாமே செய்கிறார், அவருக்கு மனுஷன் ஒரு அந்தஸ்தை வழங்கவோ அல்லது அவருக்கு ஒரு கெளரவமான பட்டத்தை வழங்கவோ தேவையில்லை: அவருடைய கிரியை அவருடைய அடையாளத்தையும் அந்தஸ்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு முன்பு, அவர் தேவனாக இருக்கவில்லையா? அவர் மாம்சமாகிய தேவனாக இருக்கவில்லையா? சாட்சிப் பிரமாணத்தைப் பெற்ற பிறகுதான் அவர் தேவனுடைய ஒரே குமாரனாக ஆனார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது அல்லவா? அவர் தனது கிரியையைத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இயேசு என்ற பெயரில் ஒரு மனுஷன் ஏற்கனவே இருக்கவில்லையா? உன்னால் புதிய பாதைகளைக் கொண்டு வரவோ அல்லது ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. உன்னால் ஆவியானவரின் கிரியையையோ அல்லது அவர் பேசும் வார்த்தைகளையோ வெளிப்படுத்த முடியாது. உன்னால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, ஆவியானவரின் கிரியையையும் உன்னால் செய்ய முடியாது. தேவனின் ஞானம், அதிசயம் மற்றும் புரிந்துகொள்ள முடியாதத் தன்மை மற்றும் தேவன் மனுஷனை சிட்சிக்கும் மனநிலையின் முழுமை—இவை அனைத்தும் உனது வெளிப்படுத்தும் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. எனவே உன்னை தேவன் என்று நீ கூற முயல்வது பயனற்றது; உன்னிடம் பெயர் மட்டுமே இருக்கும், சாராம்சம் எதுவும் இருக்காது. தேவன் வந்துவிட்டார், ஆனால் யாரும் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை, ஆனாலும் அவர் தம்முடைய கிரியையைத் தொடர்கிறார், மேலும் ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வாறு செய்கிறார். நீ அவரை மனுஷன் அல்லது தேவன், கர்த்தர் அல்லது கிறிஸ்து, அல்லது சகோதரி என எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர் செய்யும் கிரியை ஆவியானவரின் கிரியையாகும், அது தேவனின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மனுஷன் தம்மை எவ்வாறு அழைக்கிறான் என்பது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அந்தப் பெயரால் அவருடைய கிரியையைத் தீர்மானிக்க முடியுமா? தேவனைப் பொறுத்தவரை, நீ அவரை எவ்வாறு அழைத்தாலும், அவர் ஆவியான தேவனுடைய மாம்சம்தான்; அவர் ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஆவியானவரால் அங்கீகரிக்கப்படுகிறார். உன்னால் ஒரு புதிய யுகத்திற்கு வழிவகுக்கவோ, அல்லது பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ, அல்லது ஒரு புதிய யுகத்தைத் தொடங்கவோ அல்லது புதிய கிரியையைச் செய்யவோ முடியாவிட்டால், நீ உன்னை தேவன் என்று அழைக்க முடியாது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 167

பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனால் கூட தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இதுபோன்ற மனுஷனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று சொல்வது மட்டுமல்லாமல், அவன் செய்யும் கிரியையாலும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனுஷனின் அனுபவத்தை நேரடியாக தேவனின் நிர்வகித்தலின் கீழ் வைத்திருக்க முடியாது, மேலும் அதனால் தேவனின் நிர்வகித்தலைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியாது. தேவன் அவராகவே செய்யும் கிரியை முழுக்க முழுக்க அவர் தமது சொந்த நிர்வகித்தல் திட்டத்தில் செய்ய விரும்பும் கிரியை ஆகும், அது பெரிய அளவிலான நிர்வகித்தலுடன் தொடர்புடையது. மனுஷனால் செய்யப்படும் கிரியையானது அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குவதை உள்ளடக்கியதாகும். இதற்கு முன்னர் சென்றவர்களால் நடந்ததையும் தாண்டி ஒரு புதிய அனுபவ வழியைக் கண்டறிவதும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு வழிகாட்டுவதும் இதில் அடங்கும். இந்த ஜனங்கள் வழங்குவது அவர்களின் தனிப்பட்ட அனுபவம் அல்லது ஆன்மீக ஜனங்களின் ஆன்மீக எழுத்துக்கள் ஆகியவையே ஆகும். இந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டாலும், அவர்கள் செய்யும் கிரியையானது ஆறாயிரம் ஆண்டுகாலத் திட்டத்தில் நிர்வகித்தலின் பெரிய கிரியைக்குத் தொடர்பில்லாதது ஆகும். அவர்கள் வெறுமனே, ஜனங்களை பரிசுத்த ஆவியானவரின் நீரோட்டத்தில் வழிநடத்த, பரிசுத்த ஆவியானவரால் வெவ்வேறு காலங்களில் எழுப்பப்பட்டவர்கள். அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள் முடிவடையும் வரை அல்லது அவர்களின் ஜீவிதங்கள் முடிவடையும் வரை அதைச் செய்வார்கள். அவர்கள் செய்யும் கிரியை தேவனுக்கு ஒரு பொருத்தமானப் பாதையை உருவாக்குவது அல்லது பூமியில் தேவனுடைய நிர்வகித்தலில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைத் தொடர்வது மட்டுமே ஆகும். தேவனுடைய நிர்வகித்தலின் பெரிய கிரியையை இவர்களால் தங்களுக்குள்ளேயே செய்ய இயலாது, அல்லது புதிய பாதைகளைத் திறக்கவும் முடியாது, மேலும் அவர்களில் எவரும் முந்தைய யுகத்தைச் சேர்ந்த தேவனுடைய எல்லா கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் முடியாது. ஆகையால், அவர்கள் செய்யும் கிரியை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் செய்யும் ஒரு செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதே அன்றி தேவன் செய்யும் ஊழியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர்கள் செய்யும் கிரியை, தேவனால் செய்யப்படுவதைப் போன்றது இல்லை. ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கான கிரியை தேவனின் இடத்தில் உள்ள மனுஷனால் செய்யக்கூடிய ஒன்றல்ல. தேவனைத் தவிர வேறு எவராலும் இதைச் செய்ய முடியாது. மனுஷனால் செய்யப்படும் அனைத்துக் கிரியைகளும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தனது கடமையைச் செய்வதைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்படும்போது அல்லது தெளிவுபடுத்தப்படும்போது செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் வழங்கும் வழிகாட்டுதல், முழுக்க முழுக்க மனுஷனுக்கு அன்றாட ஜீவிதத்தில் நடைமுறையின் பாதையைக் காண்பிப்பதையும், தேவனின் விருப்பத்திற்கு இணங்க அவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் கொண்டுள்ளது. மனுஷனின் கிரியை தேவனின் நிர்வகித்தலை உள்ளடக்கியதும் இல்லை, ஆவியானவரின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. உதாரணமாக, விட்னஸ் லீ மற்றும் வாட்ச்மேன் நீ ஆகியோரின் கிரியைகள் தலைமை தாங்குவது மட்டுமே. புதிய பாதையோ அல்லது பழைய பாதையோ, வேதாகமத்தில் மீதமுள்ள கொள்கையின் அடிப்படையில் அந்தக் கிரியை முன்வைக்கப்பட்டது. உள்ளூர் தேவாலயத்தை மீட்டெடுப்பதோ அல்லது உள்ளூர் தேவாலயத்தைக் கட்டியெழுப்புவதோ, எதுவாக இருந்தாலும் தேவாலயங்களை நிறுவுவதே அவர்களின் கிரியையாக இருந்தது. இயேசுவாலும் அவருடைய அப்போஸ்தலர்களாலும் முடிக்கப்படாத கிரியையை அல்லது கிருபையின் யுகத்தில் மேலும் வளர்ச்சியடையாத கிரியையையே அவர்கள் செய்தார்கள். இயேசு தம்முடைய காலக்கட்ட கிரியையில் அவருக்குப் பின் வரும் தலைமுறையினரைக் கேட்டுக்கொண்ட விஷயங்களான முக்காடிடுதல், ஞானஸ்நானம் பெறுதல், அப்பம் பிட்குதல் அல்லது திராட்சைரசம் பருகுதல் ஆகியவற்றையே அவர்கள் தங்களது கிரியையில் செய்தார்கள். அவர்களின் கிரியை, வேதாகமத்தைக் கடைப்பிடிப்பதும், வேதாகமத்தினுள் பாதைகளைத் தேடுவதுமாகும் என்று கூறலாம். அவர்கள் எந்த விதமான புதிய முன்னேற்றங்களையும் செய்யவில்லை. ஆகையால், அவர்களின் கிரியையில் வேதாகமத்தினுள் புதிய பாதைளைக் கண்டுபிடித்ததையும், சிறந்த மற்றும் மிகவும் யதார்த்தமான நடைமுறைகளையும் மட்டுமே காண முடியும். ஆனால் தேவனின் தற்போதைய சித்தத்தை அவர்களின் கிரியையில் கண்டறிய முடியாது, மேலும் கடைசிக் காலத்தில் தேவன் செய்யத் திட்டமிட்டுள்ள புதிய கிரியையையும் கண்டறிய இயலாது. ஏனென்றால், அவர்கள் நடந்து வந்த பாதை இன்னும் பழையதாகவே இருந்தது—புதுப்பித்தலும் இல்லை, முன்னேற்றமும் இல்லை. ஜனங்கள் மனந்திரும்பி தங்களது பாவங்களை ஒப்புக்கொள்ளும்படி அவர்களைக் கேட்கும் நடைமுறையை கடைப்பிடிக்கவும், கடைசிவரை சகித்துக்கொள்பவன் இரட்சிக்கப்படுவான் என்றும் மற்றும் ஆணே பெண்ணின் தலைவன் என்றும் சொல்லப்படுவதைக் கடைப்பிடிக்கவும், மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், மேலும் சகோதரிகள் பிரசங்கிக்க முடியாது, ஆனால் கீழ்ப்படிய வேண்டும் என்ற பாரம்பரியக் கருத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்த இயேசு சிலுவையில் அறையப்பட்ட உண்மையை அவர்கள் தொடர்ந்து பற்றிக்கொண்டிருந்தனர். இத்தகைய தலைமை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், பரிசுத்த ஆவியானவரால் ஒருபோதும் புதிய கிரியைகளைச் செய்திருக்கவோ, ஜனங்களை விதிமுறைகளிலிருந்து விடுவித்திருக்கவோ, அல்லது அவர்களை சுதந்திரம் மற்றும் அழகின் ராஜ்யத்திற்கு வழிநடத்திச் சென்றிருக்கவோ முடிந்திருக்காது. ஆகையால், யுகத்தை மாற்றும் கிரியையின் இந்தக் கட்டத்தில் தேவன் தாமே கிரியை செய்யவும், பேசவும் வேண்டும்; இல்லையெனில் எந்த மனுஷனும் அவருக்குப் பதிலாக அவ்வாறு செய்ய முடியாது. இதுவரை, இந்த நீரோட்டத்துக்கு வெளியே பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளும் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டவர்கள் சகிப்புத்தன்மைகளை இழந்துவிட்டிருக்கிறார்கள். ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்களின் கிரியையானது தேவன் செய்த கிரியையைப் போலல்லாமல் இருப்பதால், அவர்களின் அடையாளங்களும் அவர்கள் சார்பாக அவர்கள் செயல்படுத்தும் விஷயங்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் செய்ய விரும்பும் கிரியை வேறுபட்டது, இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாகக் கிரியை செய்பவர்களுக்கு வெவ்வேறு அடையாளங்களும் அந்தஸ்துகளும் வழங்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்கள் சில புதிய கிரியைகளையும் செய்யலாம், மேலும் முந்தைய யுகத்தில் செய்யப்பட்ட சில கிரியைகளை அகற்றவும் செய்யலாம், ஆனால் அவர்கள் செய்வது புதிய யுகத்தில் தேவனின் மனநிலையையும் சித்தத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவர்கள் முந்தைய யுகத்தின் கிரியையை ஒழிக்க மட்டுமே கிரியைச் செய்கின்றனர், தேவனின் மனநிலையை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்திற்கான புதிய கிரியைகளைச் செய்வதற்காக அல்ல. இவ்வாறு, அவர்கள் எத்தனை காலாவதியான நடைமுறைகளை ஒழித்தாலும் அல்லது எத்தனை புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தினாலும், அவர்கள் இன்னமும் மனுஷனையும், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களையும்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், தேவனே தமது கிரியையைச் செய்யும்போது, பழைய யுகத்தின் நடைமுறைகள் ஒழிக்கப்படுவதை அவர் வெளிப்படையாக அறிவிப்பதில்லை அல்லது புதிய யுகத்தின் தொடக்கத்தை நேரடியாக அறிவிப்பதில்லை. அவர் தமது கிரியையில் நேர்மையாகவும், நேரடியாகவும் இருக்கிறார். தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதில் அவர் நேர்மையானவர்; அதாவது, அவர் கொண்டு வந்த கிரியையை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அந்தக் கிரியையை துவக்கத்தில் எப்படிச் செய்ய விரும்பினாரோ அப்படியே செய்கிறார், அவருடைய தன்மையையும் மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். மனுஷன் அதைப் பார்க்கும்போது, அவருடைய மனநிலையும் அவருடைய கிரியையும் கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கின்றன. இருப்பினும், தேவனின் கண்ணோட்டத்தில், இது அவருடைய கிரியையின் தொடர்ச்சியும், வளர்ச்சியுமாக மட்டுமே இருக்கிறது. தேவன் கிரியை செய்யும்போது, அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்தி, புதிய கிரியையை நேரடியாகக் கொண்டுவருகிறார். இதற்கு நேர்மாறாக, மனுஷன் கிரியை செய்யும் போது, அந்தக் கிரியை, விவாதம் மற்றும் கற்றல் மூலமாகச் செய்யப்படுகிறது, அல்லது மற்றவர்களின் கிரியைகளில் நிறுவப்பட்ட அறிவின் விரிவாக்கம் மற்றும் நடைமுறையை முறைப்படுத்துவதாக இருக்கிறது. அதாவது, மனுஷன் செய்த கிரியையின் சாராம்சம் ஒரு நிறுவப்பட்ட ஒழுங்கைப் பின்பற்றுவதும், “பழைய பாதைகளில் புதிய காலணிகளைக் கொண்டு நடப்பதும்,” ஆகும். இதன் பொருள் என்னவென்றால், ஜனங்கள் நடந்துசென்ற பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திய பாதை கூட தேவனால் தொடங்கப்பட்டதின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதுதான். எனவே, எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, மனுஷன் இன்னும் மனுஷனாகவே இருக்கிறான், தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 168

ஈசாக்கு ஆபிரகாமுக்குப் பிறந்ததைப் போலவே, யோவானும் வாக்குத்தத்தத்தினால் பிறந்தான். அவன் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான், அதிகக் கிரியைகள் செய்தான், ஆனால் அவன் தேவன் அல்ல. மாறாக, அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவனாக இருந்தான், ஏனென்றால் அவன் இயேசுவுக்காக வழியை மட்டுமே ஆயத்தப்படுத்தினான். அவனுடைய கிரியையும் மிகச் சிறப்பாக இருந்தது, அவன் ஆயத்தப்படுத்திய பின்னரே இயேசு அதிகாரப்பூர்வமாகத் தனது கிரியையைத் தொடங்கினார். முக்கியமாக, அவன் வெறுமனே இயேசுவுக்காக உழைத்தான், மேலும் அவன் செய்த கிரியை இயேசுவின் கிரியைக்கு ஊழியம் செய்வதாகவும் இருந்தது. அவன் வழியை ஆயத்தப்படுத்திய பிறகே, இயேசு தமது கிரியையைத் தொடங்கினார், அந்தக் கிரியை புதியதாகவும், அதிக உறுதியாகவும் மற்றும் விரிவாகவும் இருந்தது. அந்தக் கிரியையின் ஆரம்பப் பகுதியை மட்டுமே யோவான் செய்தான்; புதிய கிரியையின் பெரும்பகுதி இயேசுவால் செய்யப்பட்டது. யோவானும் புதிய கிரியையைச் செய்தான், ஆனால் அவன் ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியவன் அல்ல. யோவான் வாக்குத்தத்தத்தினால் பிறந்தவன், அவனுடைய பெயர் தேவதூதனால் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில், சிலர் அவனுடைய தகப்பன் சகரியாவின் பெயரைச் சூட்ட விரும்பினர், ஆனால் அவனது தாயார், “இந்தக் குழந்தை அந்தப் பெயரால் அழைக்கப்பட மாட்டான். அவனை யோவான் என்று அழைக்க வேண்டும்,” என்று கூறினாள். இது எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் கட்டளைப்படி நிகழ்ந்தது. பரிசுத்த ஆவியானவரின் கட்டளைப்படியே இயேசுவுக்கும் பெயர் சூட்டப்பட்டது, அவர் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பிறந்தார், மேலும் பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. இயேசு, தேவன், கிறிஸ்து மற்றும் மனுஷகுமாரனாக இருந்தார். யோவானின் கிரியையும் மிகச் சிறந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? இயேசு செய்த கிரியைக்கும் யோவான் செய்த கிரியைக்கும் என்ன வித்தியாசம்? யோவான், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான் என்பதுதான் ஒரே காரணமா? அல்லது இது தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதா? யோவான், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்றும் கூறினான், அவன் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தையும் பிரசங்கித்தான், ஆனாலும் அவனுடைய கிரியை மேலும் வளர்ச்சியடையவில்லை, வெறுமனே ஒரு தொடக்கமாக மட்டுமே அமைந்தது. இதற்கு நேர்மாறாக, இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், அதேபோல் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், மேலும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தையும் அவர் நிறைவேற்றினார். அவர் செய்த கிரியை யோவான் செய்ததை விடப் பெரியதாக இருந்தது, மேலும் சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் வந்தார்—கிரியையின் அந்தக் கட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் யோவானைப் பொறுத்தவரை, அவன் வெறுமனே பாதையை மட்டுமே ஆயத்தப்படுத்தினான். அவனுடைய கிரியை சிறப்பானதாக இருந்தாலும், அநேக வார்த்தைகள் கொண்டதாக இருந்தாலும், அவனை ஏராளமான சீஷர்கள் பின்பற்றினார்கள் என்றாலும், அவனுடைய கிரியை மனுஷனுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மனுஷன் ஒருபோதும் அவனிடமிருந்து ஜீவனையோ, வழியையோ, ஆழமான சத்தியங்களையோ பெறவில்லை, மேலும் தேவனின் சித்தத்தைப் பற்றிய புரிதலையும் அவனிடமிருந்து மனுஷன் பெறவில்லை. யோவான் ஒரு சிறந்த தீர்க்கதரிசி (எலியா), அவன் இயேசுவின் கிரியைக்குப் புதிய தளத்தைத் திறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆயத்தப்படுத்தினான்; அவன் கிருபையின் யுகத்தின் முன்னோடியாக இருந்தான். இத்தகைய விஷயங்களை அவர்களின் சாதாரண மனுஷத் தோற்றங்களைக் கவனிப்பதன் மூலம் வெறுமனே அறிய முடியாது. யோவானும் மிகவும் கணிசமான கிரியையைச் செய்ததால், மேலும் பரிசுத்த ஆவியானவரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டதால், மற்றும் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டதால் இவை அனைத்தும் பொருத்தமாக இருந்தன. இது அவ்வாறு இருப்பதால், அவர்கள் செய்யும் கிரியையின் மூலம்தான் ஒருவன் அந்தந்த அடையாளங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும், ஏனென்றால் ஒரு மனுஷனின் சாராம்சத்தை அவனது வெளிப்புற தோற்றத்தைக் கண்டு சொல்ல எந்த வழியும் இல்லை, அல்லது பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் என்ன என்பதை மனுஷன் அறியும் வழியும் இல்லை. யோவானால் செய்யப்பட்ட கிரியையும், இயேசுவால் செய்யப்பட்ட கிரியையும் வேறுபட்டவை, அவை வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருந்தன. இதிலிருந்தே யோவான் தேவனா இல்லையா என்பதை ஒருவன் தீர்மானிக்க முடியும். இயேசுவின் கிரியையானது ஆரம்பிக்க, தொடர மற்றும் முடிவுக்குக் கொண்டுவந்து நிறைவேற்றுவதாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தேவன் மேற்கொண்டார், அதேசமயம் யோவானின் கிரியை ஒரு தொடக்கத்தைத் தவிர வேறேதுமாக இருக்கவில்லை. ஆரம்பத்தில், இயேசு சுவிசேஷத்தைப் பரப்பி, மனந்திரும்புதலுக்கான வழியைப் பிரசங்கித்தார், பின்னர் மனுஷனை ஞானஸ்நானம் செய்யவும், நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும், பிசாசுகளை விரட்டவும் செய்தார். இறுதியில், அவர் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டு, யுகம் முழுவதற்குமான தமது கிரியையை நிறைவு செய்தார். அவர் எல்லா இடங்களுக்கும் சென்று, மனுஷரிடம் பிரசங்கித்து, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார். இந்த விஷயத்தில் அவரும் யோவானும் ஒரே மாதிரியாக இருந்தார்கள், வித்தியாசம் என்னவென்றால், இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், மேலும் கிருபையின் யுகத்தை மனுஷனிடம் கொண்டு வந்தார். கிருபையின் யுகத்தில் மனுஷன் எதைக் கடைப்பிடிக்க வேண்டும், மனுஷன் பின்பற்ற வேண்டிய வழி ஆகியவற்றைப் பற்றிய வார்த்தை அவருடைய வாயிலிருந்து வந்தது, இறுதியில், அவர் மீட்பின் கிரியையை முடித்தார். யோவானால் இந்தக் கிரியையை ஒருபோதும் செய்திருக்க முடியாது. ஆகவே, தேவனின் கிரியையைச் செய்தவர் இயேசுதான், அவரே தேவனாகவும் மற்றும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் இருக்கிறார். வாக்குத்தத்தத்தினால் பிறந்தவர்கள், ஆவியானவரால் பிறந்தவர்கள், பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்படுபவர்கள் மற்றும் புதிய பாதைகளைத் திறப்பவர்கள் என இவர்கள் அனைவருமே தேவன்தான் என்று மனுஷனின் கருத்துக்கள் கூறுகின்றன. இந்தப் பகுத்தறிவின்படி, யோவானும் தேவனாக இருப்பான், மோசே, ஆபிரகாம், தாவீது…, அவர்கள் அனைவரும் தேவனாக இருப்பார்கள். இது ஒரு முழுமையான நகைச்சுவை அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 169

சிலர், “ஏன் தேவன் மட்டுமே யுகத்தைத் தொடங்கிவைக்க வேண்டும்? ஒரு சிருஷ்டியால் அவருக்குப் பதிலாக அதைச் செய்ய முடியாதா?” என்று ஆச்சரியப்படலாம். ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும் வெளிப்படையான நோக்கத்திற்காக தேவன் மாம்சமாகிறார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நிச்சயமாக, அவர் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும்போது, அதே நேரத்தில் அவர் முந்தைய யுகத்தை முடித்திருப்பார். தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்; அவரே தமது கிரியையைச் செயல்பாட்டில் அமைத்துக்கொள்வதால், அவர் தான் முந்தைய யுகத்தை முடித்துவைக்க வேண்டும். சாத்தானை அவர் தோற்கடித்ததற்கும், உலகை அவர் ஜெயங்கொண்டதற்கும் அதுவே சான்று. ஒவ்வொரு முறையும் அவர் மனுஷரிடையே கிரியை செய்யும்போது, அது ஒரு புதிய யுத்தத்தின் தொடக்கமாக இருக்கிறது. புதிய கிரியையின் ஆரம்பம் இல்லாவிட்டால், இயற்கையாகவே பழைய கிரியைக்கு முடிவு எதுவும் இருக்காது. பழைய கிரியைக்கு முடிவு எதுவும் இல்லாதபோது, சாத்தானுடனான யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது. தேவன் அவராகவே வந்து மனுஷரிடையே புதிய கிரியைகளைச் செய்தால் மட்டுமே, மனுஷனால் சாத்தானுடைய ஆதிக்க வரம்பின் கீழ் முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய ஜீவிதத்தையும் புதிய தொடக்கத்தையும் பெற முடியும். இல்லையெனில், மனுஷன் என்றென்றும் முதுமையிலேயே ஜீவித்திருப்பான், என்றென்றும் சாத்தானின் பழைய அதிகாரத்தின் கீழ்தான் ஜீவித்திருப்பான். தேவன் வழிநடத்தும் ஒவ்வொரு யுகத்திலும், மனுஷனின் ஒரு பகுதி விடுவிக்கப்படுகிறது, இதனால் மனுஷன் தேவனின் கிரியையுடன் புதிய யுகத்தை நோக்கி முன்னேறுகிறான். தேவனின் ஜெயம் என்பது அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைத்த ஜெயம் என்று பொருள். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷகுலத்தின் இனமானது யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்டால், அது மனுஷனின் அல்லது சாத்தானின் கண்ணோட்டத்தில், தேவனை எதிர்ப்பது அல்லது காட்டிக்கொடுப்பது போலாகும், தேவனுக்குக் கீழ்ப்படிவதாக இருக்காது, மேலும் மனுஷனின் கிரியை சாத்தானுக்கு ஒரு கருவியாக மாறும். தேவனால் தொடங்கப்பட்ட ஒரு யுகத்தில் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றினால் மட்டுமே சாத்தான் முழுமையாக நம்புவான், ஏனென்றால் அதுவே ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் கடமையாகும். ஆகையால், நீங்கள் பின்பற்றவும் கீழ்ப்படியவும் வேண்டும் என்று நான் சொல்கிறேன், உங்களிடம் இருந்து அதற்குமேல் எதுவும் தேவையில்லை. இதுதான் ஒவ்வொருவரும் தனது கடமையைச் செய்வது மற்றும் ஒவ்வொருவரும் அந்தந்த செயல்பாட்டைச் செய்வது என்பதன் அர்த்தமாகும். தேவன் தனது சொந்தக் கிரியையைச் செய்கிறார், அதற்குப் பதிலாக மனுஷன் அதைச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை, சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரின் கிரியையில் அவர் பங்கேற்பதும் இல்லை. மனுஷன் தன் கடமையைச் செய்கிறான், தேவனின் கிரியையில் அவன் பங்கேற்பதில்லை. இதுவே கீழ்ப்படிதல், மற்றும் சாத்தானின் தோல்விக்கான சான்று. தேவன் புதிய யுகத்தைத் தொடங்கியபின், அவர் இனி மனுஷகுலத்தின் மத்தியில் கிரியை செய்ய வரப்போவதில்லை. அப்போதுதான், மனுஷன் தனது கடமையைச் செய்வதற்கும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனுக்கான தனது கிரியையைச் செய்வதற்கும் அதிகாரப்பூர்வமாகப் புதிய யுகத்திற்குள் நுழைகிறான். தேவன் கிரியை செய்யும் கொள்கைகள் இவைதான், இவற்றை யாரும் மீறக்கூடாது. இவ்வாறாக கிரியை செய்வது மட்டுமே விவேகமானதும், நியாயமானதும் ஆகும். தேவனின் கிரியை தேவனால்தான் செய்யப்பட வேண்டும். அவர்தான் தமது கிரியையைச் செயல்பாட்டில் அமைக்கிறார், அவரே அவருடைய கிரியையை நிறைவு செய்கிறார். அவர்தான் கிரியையைத் திட்டமிடுகிறார், அதை நிர்வகிப்பவரும் அவரே, அதற்கும் மேலாக, அவர்தான் கிரியையை பலனடையவும் வைக்கிறார். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்; விதைப்பவனும் நானே, அறுவடை செய்பவனும் நானே.” தேவனுடைய நிர்வகித்தல் கிரியைகள் அனைத்தும் தேவனாலே செய்யப்படுகின்றன. ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் ராஜா அவர்; அவருக்குப் பதிலாக எவராலும் அவருடைய கிரியையைச் செய்ய முடியாது, அவருடைய கிரியையை யாராலும் முடிவிற்குக் கொண்டுவரவும் முடியாது, ஏனென்றால் எல்லாவற்றையும் தம் கையில் வைத்திருப்பவர் அவரே. உலகை சிருஷ்டித்த அவர், உலகம் முழுவதையும் அவருடைய வெளிச்சத்தில் ஜீவித்திருக்க வழிநடத்துவார், மேலும் அவர் முழு யுகத்தை நிறைவும் செய்வார், இதன் மூலம் அவருடைய முழு திட்டமும் பலனைக் கொண்டுவரும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 170

தேவனின் முழு மனநிலையும் ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது கிருபையின் யுகத்திலோ, நியாயப்பிரமாணத்தின் யுகத்திலோ, கடைசிக் காலத்திலோ மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை. கடைசிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரியையானது நியாயத்தீர்ப்பு, கோபாக்கினை மற்றும் சிட்சை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கடைசிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரியைகளால் நியாயப்பிரமாணத்தின் யுகம் அல்லது கிருபையின் யுகத்தின் கிரியைகளுக்கு மாற்றாக முடியாது. இருப்பினும், இந்த மூன்று கட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்து, ஓர் உட்பொருளை உருவாக்குகின்றன, மேலும் இவை அனைத்தும் ஒரே தேவனின் கிரியைதான். இயற்கையாகவே, இந்தக் கிரியையை நிறைவேற்றும் செயல் தனி யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தொடக்கத்திற்கான கிரியையை செய்ததைப் போல; கிருபையின் யுகத்தில் மீட்பிற்கான கிரியையைச் செய்தது போல; கடைசிக் காலத்தில் சகலத்தையும் இறுதிக்குக் கொண்டுவரும் கிரியை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆறாயிரம் ஆண்டுக்கால நிர்வகித்தல் திட்டத்தினுடைய கிரியைகளின் தரிசனங்களைப் பொறுத்தவரை, யாராலும் நுண்ணறிவு அல்லது புரிதலைப் பெற முடியாது, இந்தத் தரிசனங்கள் கடைசிவரை புதிராகவே இருக்கும். கடைசிக் காலத்தில், ராஜ்யத்தின் யுகத்தை முன்னெடுப்பதற்காக வார்த்தையின் கிரியை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது சகல யுகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. கடைசிக் காலம் என்பது கடைசிக் காலத்தை விடவும், ராஜ்யத்தின் யுகத்தை விடவும் பெரியதாக இல்லை, மேலும் அது கிருபையின் யுகம் அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதாவது கடைசிக் காலத்தில், ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டத்தில் உள்ள அனைத்து கிரியைகளும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இதுவே மறைபொருளின் வெளிப்பாடாகும். இந்த வகையான மறைபொருள் எந்த மனுஷனாலும் வெளிப்படுத்த முடியாத ஒன்றாகும். மனுஷனுக்கு வேதாகமத்தைப் பற்றி எவ்வளவு பெரிய புரிதல் இருந்தாலும், அது அவனுக்கு வெறும் வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை, ஏனென்றால் மனுஷனுக்கு வேதாகமத்தின் சாராம்சம் புரிவதில்லை. வேதாகமத்தைப் படிப்பதால், மனுஷன் சில சத்தியங்களைப் புரிந்து கொள்ளலாம், சில வார்த்தைகளை விளக்கலாம், அல்லது சில பிரபலமான பத்திகளையும் அத்தியாயங்களையும் தனது சிறிய ஆய்வுக்கு உட்படுத்தலாம், ஆனால் அந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை அவனால் ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது, ஏனென்றால் எல்லா மனுஷரும் மரித்துப்போன வார்த்தைகளைத்தான் காண்கிறார்கள், யேகோவா மற்றும் இயேசுவினுடைய கிரியையின் காட்சிகளை அல்ல, மேலும் இந்தக் கிரியையின் மறைபொருளை கட்டவிழ்க்க மனுஷனுக்கு வழியே இல்லை. எனவே, ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் மறைபொருளே மிகப் பெரிய மறைபொருளாகும், இது மிகவும் ஆழமாக மறைக்கப்பட்டதாகவும் மற்றும் முற்றிலும் மனுஷனுக்குப் புரியாததாகவும் இருக்கிறது. தேவன் அதை மனுஷனுக்கு விளக்கி வெளிப்படுத்தாவிட்டால், தேவனின் விருப்பத்தை யாரும் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது; இல்லையெனில், இந்த விஷயங்கள் எப்போதும் மனுஷனுக்கு புதிராகவே இருக்கும், என்றென்றும் மூடிமறைக்கப்பட்ட மறைபொருட்களாகவே இருக்கும். மத உலகில் இருப்பவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்; இன்று உங்களுக்குச் சொல்லப்படாதிருந்தால், நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருந்திருக்க மாட்டீர்கள். இந்த ஆறாயிரம் ஆண்டுகாலக் கிரியை தீர்க்கதரிசிகளின் எல்லா தீர்க்கதரிசனங்களையும் விட மறைபொருள் மிக்கது. இது சிருஷ்டிப்பு முதல் இன்றுவரை மிகப் பெரிய மறைபொருளாக இருக்கிறது, மேலும் யுகங்கள் முழுவதிலும் உள்ள தீர்க்கதரிசிகளில் எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் இந்த மறைபொருள் இறுதி யுகத்தில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, இதற்கு முன்னர் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த மறைபொருளை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், அதை உங்களால் முழுமையாகப் பெற முடிந்தால், எல்லா மத நபர்களும் இந்த மறைபொருளால் வெல்லப்படுவார்கள். இது மட்டுமே தரிசனங்களில் மிகப்பெரியது; இதையே மனுஷன் புரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறான், ஆனால் அது அவனுக்கு மிகவும் தெளிவாகத் தெரியவில்லை. நீங்கள் கிருபையின் யுகத்தில் இருந்தபோது, இயேசு செய்த கிரியை அல்லது யேகோவா செய்த கிரியை என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. யேகோவா ஏன் நியாயப்பிரமாணங்களை வகுத்தார், ஏன் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்கும்படி அவர் பெருந்திரளான ஜனங்களிடம் கேட்டார் அல்லது ஏன் ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று கேட்டார், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வனாந்தரத்துக்கும் பின்னர் கானானுக்கும் ஏன் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது ஜனங்களுக்கு புரியவில்லை. இந்த விஷயங்கள் இந்த நாள் வரையிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 171

பரிசுத்த ஆவியானவரால் விசேஷித்த ஆலோசனையும் வழிகாட்டுதலும் கொடுக்கப்படுபவர்களைத் தவிர வேறு யாராலும் சுதந்திரமாக வாழ முடியாது, ஏனெனில் அவர்களுக்கு தேவனால் பயன்படுத்தப்படுபவர்களின் ஊழியமும் வழிநடத்துதலும் தேவைப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு காலத்திலும் தமது கிரியைக்காகச் சபைகளில் சுறுசுறுப்பாக மேய்ப்பன் ஊழியத்தைச் செய்யும் வெவ்வேறு மனுஷர்களை தேவன் எழுப்புகிறார். அதாவது, தேவனின் கண்களில் தயை பெற்று அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மூலமே அவருடைய கிரியை செய்யப்பட வேண்டும்; பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கு, அவர்களுக்குள் பயன்படுத்தத் தகுதியான பகுதியைப் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்த வேண்டும், மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணப்படுத்தப்பட்டதன் மூலம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மனுஷனின் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருப்பதால், அவன் தேவனால் பயன்படுத்தப்படுகிறவர்களால் வழிநடத்தப்பட வேண்டும்; மோசேயை தேவன் பயன்படுத்தியதும் இது போன்றதே. மோசேயிடம் அந்நேரத்தில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமானவை அதிகமாக இருந்ததை அவர் கண்டார், மேலும் அந்த நிலையில் அதை அவர் தேவனின் கிரியையைச் செய்ய பயன்படுத்தினார். இந்த நிலையிலும், கிரியை செய்வதற்காகப் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு மனுஷனின் பகுதியைச் சாதகமாகக் கொண்டு தேவன் அவனைப் பயன்படுத்துகிறார், மேலும் பரிசுத்த ஆவியானவர் அவனை வழிநடத்தும் அதே வேளையில் மீதியாய் இருக்கும் பயன்படுத்த முடியாத பகுதியைப் பரிபூரணப்படுத்துகிறார்.

தேவனால் பயன்படுத்தப்படுகிற ஒருவனால் செய்யப்படும் கிரியை கிறிஸ்து அல்லது பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் ஒத்துழைப்பதற்காகவே செய்யப்படுகிறது. இந்த மனுஷன் மனுஷர்களின் நடுவில் இருந்து தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும் வழிநடத்த தேவனால் எழுப்பப்படுகிறான், மேலும் இவன் மனுஷ ஒத்துழைப்பின் கிரியையைச் செய்ய தேவனால் எழுப்பப்படுகிறான். மனுஷ ஒத்துழைப்பின் கிரியையைச் செய்யக் கூடிய இப்படிப்பட்ட ஒருவனைக் கொண்டு, இன்னும் அதிகமான மனுஷனுக்கான தேவனின் தேவைகளையும், மனுஷனின் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் செய்யவேண்டிய கிரியையையும் அவன் மூலம் செய்ய முடியும். இதை இன்னொரு வகையில் இப்படிச் சொல்லலாம்: இந்த மனுஷனை தேவன் பயன்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால், தேவனைப் பின்பற்றும் யாவரும் தேவனின் சித்தத்தைச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும், தேவனின் கோரிக்கைகளை இன்னும் அதிகமாக நிறைவேற்ற முடியும். தேவனின் வார்த்தைகளை அல்லது தேவனின் சித்தத்தை ஜனங்களால் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாததால், இத்தகைய கிரியையைச் செய்ய யாராவது ஒருவனை தேவன் எழுப்புகிறார். தேவனால் பயன்படுத்தப்படும் இந்த நபரை மத்தியஸ்தன் என விளக்கலாம். தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியில் தொடர்புகொள்ளும் ஒரு “மொழிபெயர்ப்பாளன்” போல இவன் மூலம் தேவன் ஜனங்களை வழிநடத்துகிறார். இவ்வாறு, இப்படிப்பட்ட மனுஷன் தேவனுடைய வீட்டில் பணி செய்பவர்களையோ அல்லது அவருடைய அப்போஸ்தலர்களையோ போன்றவன் அல்ல. அவர்களைப் போல, தேவனை சேவிக்கிற ஒருவன் எனச் சொல்லலாம், எனினும் அவன் செய்யும் வேலையின் தன்மையிலும் அவனை தேவன் பயன்படுத்தும் பின்னணியிலும் அவன் பெருமளவில் மற்ற ஊழியக்காரர்களிலும் அப்போஸ்தலர்களிலும் இருந்து வேறுபடுகிறான். அவனுடைய வேலையின் சாராம்சம் மற்றும் அவன் பயன்படுத்தப்படும் பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையில், தேவனால் பயன்படுத்தப்படுகிற மனுஷன் அவரால் எழுப்பப்படுகிறான், அவன் தேவனுடைய கிரியைக்காக தேவனால் ஆயத்தப்படுத்தப்படுகிறான், மேலும் அவன் தேவனின் சொந்தக் கிரியையிலேயே ஒத்துழைக்கிறான். அவனுக்குப் பதிலாக வேறு எவரும் அவனுடைய வேலையைச் செய்ய முடியாது—இது தேவ கிரியையோடு கூட தவிர்க்க முடியாததாக இருக்கும் மனுஷ ஒத்துழைப்பாகும். அதேநேரத்தில், மற்ற ஊழியக்காரர்கள் அல்லது அப்போஸ்தலர்களால் செய்யப்படும் கிரியை என்பது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சபைகளுக்கான ஏற்பாடுகளின் பல அம்சங்களின் அனுப்புதலும் நடைமுறைப்படுத்தலும் ஆகும், அல்லது சபை வாழ்க்கையைப் பராமரிப்பதற்கான சில எளிய வாழ்க்கை நியதிக்கான கிரியை ஆகும். இந்த ஊழியக்காரர்களும் அப்போஸ்தலர்களும் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்கள் என்றும் கூறமுடியாது. அவர்கள் சபைகளின் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மேலும் ஒரு கால அளவிற்கு அவர்கள் பயிற்சிபெற்று பண்படுத்தப்பட்ட பின்னர், அவர்களில் தகுதியானவர்கள் வைக்கப்பட்டு தகுதியற்றவர்கள் அவர்கள் வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் சபைகளின் நடுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், தலைவர்கள் ஆன பின்னர் அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டுகிறார்கள், மேலும் சிலர் மோசமான செயல்களையும் கூட செய்து முடிவில் புறம்பாக்கப்படுகிறார்கள். மாறாக, தேவனால் பயன்படுத்தப்படும் மனுஷன், தேவனால் ஆயத்தப்படுத்தப்படுகிறான், மேலும் சில திறன்களைக் கொண்டவனாய் இருக்கிறான், மேலும் மனிதத்தன்மை உள்ளவனாய் இருக்கிறான். அவன் முன்கூட்டியே பரிசுத்த ஆவியானவரால் ஆயத்தப்படுத்தப்பட்டு பரிபூரணப்படுத்தப்படுகிறான், மேலும் அவன் முழுமையாகப் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறான், மற்றும் குறிப்பாக அவனுடைய கிரியை என்று வரும்போது, அவன் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு கட்டளையிடப்படுகிறான்—இதனால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வழிநடத்தும் பாதையில் எந்தத் திசைமாற்றமும் இல்லை, ஏனெனில் தேவன் தமது சொந்தக் கிரியைக்கு நிச்சயமாகப் பொறுப்பை எடுத்துக்கொள்ளுகிறார், மேலும் தேவன் தமது சொந்தக் கிரியையையே எல்லா நேரமும் செய்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 172

பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கும் கிரியையானது, அது தேவனின் சொந்தக் கிரியை அல்லது பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை என எதுவாக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியைதான். தேவனின் சாராம்சமாக இருப்பவர் ஆவியானவர்தான், இவரை பரிசுத்த ஆவியானவர் அல்லது ஏழு மடங்கு தீவிரப்படுத்தப்பட்ட ஆவியானவர் என்று அழைக்கலாம். மொத்தத்தில், தேவனுடைய ஆவியானவர் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாமங்களில் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் தேவனுடைய ஆவியானவர்தான். அவர்களின் சாராம்சம் இன்னும் ஒன்றுதான். ஆகையால், தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியைதான், அதே சமயம் மாம்சமாகிய தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியையை விடக் குறைவானதல்ல. பயன்படுத்தப்படுபவர்களின் கிரியையும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைதான். ஆயினும், தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரின் முழுமையான வெளிப்பாடாக இருக்கிறது, இது முற்றிலும் உண்மை, அதேசமயம் பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியையானது மனுஷன் தொடர்பான பல விஷயங்களுடன் கலக்கப்படுகிறது, மேலும் அது பரிசுத்த ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாக இருப்பதில்லை, அவருடைய முழுமையான வெளிப்பாடாகவும் இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மாறுபட்டதாக இருக்கிறது, மேலும் எந்த நிபந்தனைகளுக்கும் உட்படாததாக இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியை வெவ்வேறு ஜனங்களில் வேறுபடுகிறது; இது வெவ்வேறு சாராம்சங்களை வெளிப்படுத்துகிறது, மேலும் இது காலம் மற்றும் தேசத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது. நிச்சயமாக, பரிசுத்த ஆவியானவர் பல வழிகளில் மற்றும் பல கொள்கைகளின்படி கிரியை செய்கிறார் என்றாலும், கிரியை எவ்வாறு செய்யப்படுகிறது அல்லது எந்த வகையான ஜனங்கள் மீது செய்யப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், அதன் சாராம்சம் எப்போதும் வேறுபட்டதாக இருக்கிறது; வெவ்வேறு ஜனங்கள் மீது செய்யப்படும் அனைத்து கிரியைகளும் அவற்றின் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவை அனைத்தும் அவற்றினுடைய பொருட்களின் சாராம்சத்தைக் குறிக்கின்றன. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையானது குறிப்பிட்ட எல்லை கொண்டதாகவும் மற்றும் அளவிடப்பட்டதாகவும் இருக்கிறது. மாம்சமாக அவதரித்த மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது ஜனங்கள் மீது மேற்கொள்ளப்படும் கிரியையைப் போன்றதல்ல, மேலும் அது மேற்கொள்ளப்படும் நபரின் திறனுக்கேற்ப கிரியையும் மாறுபடுகிறது. மாம்சமாக அவதரித்த மாம்சத்தில் செய்யப்படும் கிரியைகள் ஜனங்கள் மீது செய்யப்படுவதில்லை, மேலும் இது ஜனங்கள் மீது செய்யப்பட்ட அதே கிரியையும் இல்லை. சுருக்கமாக சொல்வதானால், கிரியையானது எவ்வாறு செய்யப்பட்டாலும், வெவ்வேறு பொருள்களில் நிகழ்த்தப்படும் கிரியையானது ஒருபோதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, மேலும் அவர் கிரியை செய்யும் கொள்கைகளானது அவர் கிரியை செய்யும் வெவ்வேறு ஜனங்களின் நிலைகள் மற்றும் சுபாவங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு ஜனங்களின் உள்ளார்ந்த சாராம்சத்தின் அடிப்படையில் கிரியை செய்கிறார், மேலும் அவர் அந்த சாராம்சத்தை மீறும் வகையிலான கோரிக்கைகளை அவர்களிடம் வைப்பதில்லை, அவர்களுடைய உள்ளார்ந்த திறனை மீறும் வகையிலும் அவர் கிரியை செய்வதில்லை. எனவே, மனுஷன் மீதான பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது அந்த கிரியையினுடைய நோக்கத்தின் சாராம்சத்தை காண ஜனங்களை அனுமதிக்கிறது. மனுஷனின் உள்ளார்ந்த சாராம்சம் மாறுவதில்லை; அவனது உள்ளார்ந்த திறமை குறைவாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுடைய திறமையின் வரம்புகளுக்கு ஏற்ப அவர் அவர்களை பயன்படுத்துகிறார் அல்லது அவர்கள் மீது கிரியை செய்கிறார், அதன்மூலம் அவர்கள் பயனடைகிறார்கள். பயன்படுத்தப்படும் ஜனங்கள் மீது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும்போது, அந்த ஜனங்களின் செயல் திறன்களும் உள்ளார்ந்த திறமையும் தடுத்து நிறுத்தப்படாமல் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அவர்களின் உள்ளார்ந்த திறமையானது கிரியையின் சேவையில் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கிரியையில் முடிவுகளை அடைவதற்காக, அவருடைய கிரியையில் பயன்படுத்தக்கூடிய மனுஷரின் பகுதிகளை அவர் பயன்படுத்துகிறார் என்று கூறலாம். இதற்கு நேர்மாறாக, மாம்சமாக அவதரித்த மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது ஆவியானவரின் கிரியையை நேரடியாக வெளிப்படுத்துகிறது, மேலும் அது மனுஷ மனம் மற்றும் எண்ணங்களால் கலப்படமடையாமல் இருக்கிறது; மனுஷனின் வெகுமதிகளால், அல்லது மனுஷனின் அனுபவத்தால், அல்லது மனுஷனின் உள்ளார்ந்த நிலையால் கூட அதை அடைய முடியாது. பரிசுத்த ஆவியானவரின் எண்ணற்ற கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு நன்மை செய்வதற்கும் அவனை மேம்படுத்துவதற்குமே செய்யப்படுகின்றன. இருப்பினும், சிலர் பரிபூரணமாக்கப்படும் அதே வேளையில், மற்றவர்கள் பரிபூரணத்திற்கான நிலைகளைக் கொண்டிருப்பதில்லை, அதாவது அவர்களால் பரிபூரணமாக்கப்படவும் முடியாது, அவர்களை இரட்சிக்கவும் முடியாது. அதாவது பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அவர்கள் பெற்றிருந்தாலும், அவர்கள் இறுதியில் புறம்பாக்கப்படுவார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது ஜனங்களை மேம்படுத்துவதாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்ற அனைவருமே முழுமையாக பரிபூரணமாக்கப்படுவார்கள் என்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனென்றால் பலர் தங்கள் நாட்டத்தில் பின்பற்றும் பாதையானது பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையாக இருப்பதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் ஒருதலைப்பட்சக் கிரியையை மட்டுமே கொண்டிருக்கிறார்கள், உள்ளார்ந்த மனுஷ ஒத்துழைப்பையோ அல்லது சரியான மனுஷ நாட்டத்தையோ அவர்கள் கொண்டிருப்பதில்லை. இவ்வாறு, இந்த ஜனங்கள் மீது பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பரிபூரணமாக்கப்படுபவர்களுக்கு சேவை செய்யத்தான் வருகிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஜனங்களால் நேரடியாகப் பார்க்க முடியாது, மேலும் அதை நேரடியாக ஜனங்களால் தொடவும் முடியாது. கிரியையின் வரத்தைக் கொண்டவர்களால் மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும், அதாவது ஜனங்கள் செய்யும் வெளிப்பாடுகளின் மூலம்தான் பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பின்பற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 173

பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பல வகையான ஜனங்கள் மற்றும் பல வகையான நிலைமைகளின் மூலம் நிறைவேற்றப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. மாம்சமாகிய தேவனின் கிரியையால் ஒரு முழு யுகத்தின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு முழு யுகத்தில் ஜனங்கள் பிரவேசிப்பதையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றாலும், ஜனங்களின் பிரவேசம் பற்றிய விவரங்கள் தொடர்பான கிரியை பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் மனுஷரால்தான் இன்னும் செய்யப்பட வேண்டும், மனுவுருவான தேவனால் பயன்படுத்தப்படும் மனுஷரால் அல்ல. எனவே, தேவனின் கிரியை, அல்லது தேவனின் சொந்த ஊழியமானது மாம்சமாகிய தேவனின் கிரியை ஆகும், இதனை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பல்வேறு வகையான ஜனங்கள் மூலம் முடிக்கப்படுகிறது; எந்தவொரு தனி நபராலும் அதை முழுமையாகச் செய்து முடிக்க முடியாது, மேலும் எந்த ஒரு நபராலும் அதை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. திருச்சபைகளை வழிநடத்துபவர்களாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது; அவர்களால் சில முன்னெடுத்து செல்லும் கிரியைகளை மட்டுமே செய்ய முடியும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: தேவனின் சொந்தக் கிரியை, பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை, பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் உள்ள அனைவருக்குமான கிரியை ஆகியவை தான் அவை. முழு யுகத்தையும் வழிநடத்துவதே தேவனின் சொந்தக் கிரியை ஆகும்; பயன்படுத்தப்படுபவர்களின் கிரியையானது, தேவனைப் பின்பற்றுபவர்களை வழிநடத்த, தேவன் தனது சொந்த கிரியையைச் செய்தபின் கட்டளைகள் அனுப்பப்படுவதன் மூலமோ அல்லது பெறுவதன் மூலமோ செய்யப்படுகிறது, இவர்கள்தான் தேவனுடைய கிரியைக்கு ஒத்துழைப்பவர்களாக இருக்கிறார்கள்; பிரவாகத்தில் இருப்பவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையானது அவருடைய எல்லாக் கிரியைகளையும் பராமரிப்பதற்காகச் செய்யப்படுகிறது, அதாவது பரிபூரணப்படுத்தக்கூடியவர்களை பரிபூரணப்படுத்தும் அதே வேளையில் அவருடைய முழு நிர்வாகத்தையும் அவருடைய சாட்சியத்தையும் பராமரிப்பதற்காக செய்யப்படுகிறது. மொத்தத்தில், இந்த மூன்று பகுதிகளும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையான கிரியை ஆகும், ஆனால் தேவனின் கிரியை இல்லாமல், நிர்வாகக் கிரியை முழுவதுமாக தேக்கமடைந்துபோகும். தேவனின் கிரியையானது மனுஷகுலத்தின் அனைத்து கிரியைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது, மேலும் இது முழு யுகத்தின் கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதாவது தேவனின் சொந்தக் கிரியையானது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு வல்லமையையும் போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதேசமயம் அப்போஸ்தலர்களின் கிரியையானது தேவனின் சொந்தக் கிரியைக்கு பிறகு வருகிறது, அதிலிருந்து தொடர்கிறது. அது யுகத்தை வழிநடத்துவதும் இல்லை, முழு யுகத்திலும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. மனுஷன் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள், அதற்கும் நிர்வாகக் கிரியைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. தேவன் அவராகவே செய்யும் கிரியையானது நிர்வாகக் கிரியைக்குள் இருக்கும் ஒரு திட்டமாகும். மனுஷனின் கிரியையானது பயன்படுத்தப்பட்டவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டுமே ஆகும், அதற்கும் நிர்வாக கிரியைக்கும் தொடர்பில்லை. அவை இரண்டும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்ற போதிலும், கிரியையின் அடையாளங்கள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் ஆகியவற்றின் வேறுபாடுகள் காரணமாக, தேவனின் சொந்தக் கிரியைக்கும் மனுஷனின் கிரியைக்கும் இடையே தெளிவான மற்றும் முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன. மேலும், பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையின் அளவு வெவ்வேறு அடையாளங்களைக் கொண்ட பொருள்களில் மாறுபடுகிறது. இவையே பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் கொள்கைகள் மற்றும் நோக்கம் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 174

மனுஷனின் கிரியையானது அவனது அனுபவத்தையும் மனுஷத்தன்மையையும் குறிக்கிறது. மனுஷன் எதை வழங்குகிறானோ அதுவும், அவன் செய்யும் கிரியையும் அவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மனுஷனின் நுண்ணறிவு, மனுஷனின் பகுத்தறிவு, மனுஷனின் தர்க்கம் மற்றும் அவனது செழிப்பான கற்பனை ஆகிய அனைத்தும் அவனது கிரியையில் சேர்க்கப்பட்டுள்ளன. மனுஷனின் அனுபவத்தால் குறிப்பாக அவனது கிரியையைக் குறிக்க முடிகிறது, மேலும் ஒரு நபரின் அனுபவங்கள் அவனது கிரியையின் கூறுகளாகின்றன. மனுஷனின் கிரியையால் அவனது அனுபவத்தை வெளிப்படுத்த முடியும். சிலர் எதிர்மறையாக அனுபவிக்கும் போது, அவர்கள் பேசும் பெரும்பாலான மொழி எதிர்மறை கூறுகளைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் அனுபவம் நேர்மறையாக இருந்து, அவர்கள் குறிப்பாக நேர்மறையான அம்சத்தில் ஒரு பாதையைக் கொண்டிருந்தால், அவர்களின் பேச்சு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது, மேலும் ஜனங்கள் அவர்களிடமிருந்து நேர்மறையான காரியங்களைப் பெறவும் முடியும். ஒரு ஊழியக்காரன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்மறையாக மாறினால், அவனுடைய பேச்சும் எப்போதும் எதிர்மறையான கூறுகளைக் கொண்டிருக்கும். இந்த வகையான பேச்சு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது, மற்றவர்கள் அவனது பேச்சுக்குப் பிறகு தங்களை அறியாமலேயே மனச்சோர்வடைந்து போவார்கள். தலைவரின் நிலையைப் பொறுத்து பின்பற்றுபவர்களின் நிலை மாறுகிறது. ஓர் ஊழியக்காரன் அவனது அகத்தில் எப்படி இருந்தாலும், அதையேதான் அவன் வெளிப்படுத்துகிறான், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை பெரும்பாலும் மனுஷனின் நிலைக்கு ஏற்ப மாறுகிறது. அவர் ஜனங்களின் அனுபவத்திற்கு ஏற்ப கிரியை செய்கிறார், அவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் அனுபவத்தின் இயல்பான போக்கிற்கு ஏற்ப ஜனங்களிடம் கோரிக்கைகளை வைக்கிறார். மனுஷனின் பேச்சு தேவனின் வார்த்தையிலிருந்து வேறுபடுகிறது என்பதே இதன் அர்த்தம். ஜனங்களின் பேச்சானது அவர்களின் தனிப்பட்ட நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் தெரிவிக்கிறது, தேவனுடைய கிரியையின் அடிப்படையில் அவர்களின் நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துகிறது. தேவன் கிரியை செய்தபின் அல்லது பேசியபின், அவர்கள் எதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதும், பின்னர் அதைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்குவதும் அவர்களின் பொறுப்பு ஆகும். எனவே, மனுஷனின் கிரியை அவனது பிரவேசித்தலையும் நடைமுறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நிச்சயமாக, இத்தகைய கிரியை மனுஷ பாடங்கள் மற்றும் அனுபவம் அல்லது சில மனுஷ எண்ணங்களுடன் கலக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் எப்படிக் கிரியை செய்தாலும், அதாவது மனுஷன் மீதோ அல்லது மாம்சமாகிய தேவன் மீதோ, ஊழியக்காரர்கள் எப்போதுமே அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதை வெளிப்படுத்துகிறார்கள். பரிசுத்த ஆவியானவர்தான் கிரியை செய்கிறார் என்றாலும், மனுஷன் இயல்பாகவே என்னவாக இருக்கிறான் என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அடித்தளமின்றி கிரியை செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிரியையானது ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து வருவதில்லை, ஆனால் எப்போதும் உண்மையான சூழ்நிலைகள் மற்றும் உண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும் மற்றும் அவனது பழைய கருத்துகளையும் பழைய எண்ணங்களையும் மாற்ற முடியும். மனுஷன் வெளிப்படுத்துவது என்னவென்றால், அவன் பார்ப்பது, அனுபவிப்பது, கற்பனை செய்யக்கூடியது ஆகியவைதான். அது கோட்பாடுகள் அல்லது கருத்துகளாக இருந்தாலும் கூட அது மனுஷனின் சிந்தனையால் அடையக்கூடியதுதான். மனுஷனின் கிரியையானது அந்தக் கிரியையின் அளவைப் பொருட்படுத்தாமல், மனுஷனுடைய அனுபவத்தின் அளவையும், மனுஷன் எதைப் பார்க்கிறானோ அதையும், அல்லது மனுஷனால் கற்பனை செய்யவோ அல்லது எண்ணவோ முடியாததையும் மீறாததாக இருக்கிறது. தேவன் தாம் என்னவாக இருக்கிறாரோ அதை மட்டுமே வெளிப்படுத்துகிறார், இது மனுஷனால் அடைய முடியாதது—அதாவது மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எல்லா மனுஷரையும் வழிநடத்தும் தமது கிரியையை அவர் வெளிப்படுத்துகிறார், இது மனுஷ அனுபவத்தின் விவரங்களுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது, ஆனால் அதற்குப் பதிலாக அவருடைய சொந்த நிர்வாகத்துடன் தொடர்புடையாதாகும். மனுஷன் அவனது அனுபவத்தைத்தான் வெளிப்படுத்துகிறான், அதே சமயம் தேவன் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், இது அவருடைய உள்ளார்ந்த மனநிலை, மனுஷனால் இதை அடையமுடியாது. மனுஷனின் அனுபவம் என்பது தேவனுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் பெறப்பட்ட அவனது நுண்ணறிவு மற்றும் அறிவு ஆகியவை ஆகும். இத்தகைய நுண்ணறிவும் அறிவும் மனுஷனின் இருப்பு என்று அழைக்கப்படுகின்றன, அவற்றின் வெளிப்பாட்டின் அடிப்படையானது மனுஷனின் உள்ளார்ந்த மனநிலை மற்றும் திறமை ஆகியவையாக இருக்கின்றன—இதனால்தான் அவை மனுஷனின் இருப்பு என்றும் அழைக்கப்படுகின்றன. மனுஷனால் அவன் அனுபவிப்பதையும் பார்ப்பதையும் பேச முடிகிறது. அவர்கள் அனுபவிக்காத, பார்த்திராத, அல்லது அவர்களின் சிந்தனையை அடைய முடியாதவற்றை யாராலும் பேச முடியாது, அவை அவர்களுக்குள் இல்லாத விஷயங்களாகும். மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்திலிருந்து வந்ததில்லை என்றால், அது அவனது கற்பனை அல்லது கோட்பாடாகத்தான் இருக்கும். சுருக்கமாகக் கூறுவதானால், அவனது வார்த்தைகளில் எந்த யதார்த்தமும் இல்லை. நீ ஒருபோதும் சமுதாய விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாவிட்டால், உன்னால் சமூகத்தின் சிக்கலான உறவுகளைத் தெளிவாகப் பேச முடியாது. உனக்குக் குடும்பம் இல்லையென்றால், மற்றவர்கள் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசினால், அவர்கள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, மனுஷன் பேசுவதும், அவன் செய்யும் கிரியையும் அவனது உள்ளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றிய தனது புரிதலை ஒருவன் பேசி, உனக்கு அதில் எந்த அனுபவமும் இல்லை என்றால், நீ அவனுடைய அறிவை மறுக்கத் துணிவதில்லை, அதில் நூறு சதவிகிதம் நம்பிக்கையுடனும் இருக்கத் துணிவதுமில்லை. ஏனென்றால், அவர்களின் பேச்சு நீ அனுபவிக்காத ஒன்றாகவும், நீ அறியாத ஒன்றாகவும் இருக்கிறது, உன் மனதால் அதை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவர்கள் அறிந்ததிலிருந்து, நீ செய்ய வேண்டியது எதிர்காலத்தில் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதற்கான பாதையில் செல்வதே ஆகும். ஆனால் இந்தப் பாதை கோட்பாட்டு அறிவில் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்; இந்தப் பாதையால் உனது சொந்தப் புரிதலின் இடத்தை நிரப்ப முடியாது, உனது அனுபவத்தின் இடத்தையும் நிரப்ப முடியாது. அவர்கள் சொல்வது மிகவும் சரியானதுதான் என்று நீ நினைக்கிறாய், ஆனால் உனது சொந்த அனுபவத்தில், இது பல வழிகளில் சாத்தியமற்றது என்று நீ கருதுகிறாய். நீ காது கொடுத்துக் கேட்கும் சில விஷயங்களை நீ முற்றிலும் சாத்தியமற்றதாக உணர்கிறாய்; அந்த நேரத்தில் நீ அதைப் பற்றிய கருத்துக்களை மனதில் கொள்கிறாய், நீ அதை ஏற்றுக்கொண்டாலும், நீ அதைத் தயக்கத்துடன் மட்டுமே செய்கிறாய். ஆனால் உனது சொந்த அனுபவத்தில், நீ கருத்துக்களைப் பெற்ற அறிவானது உனது நடைமுறைக்கான வழிமுறையாக மாறுகிறது, மேலும் நீ நடைமுறைப்படுத்தும் போது, நீ காது கொடுத்துக் கேட்ட வார்த்தைகளின் உண்மையான மதிப்பு மற்றும் அர்த்தத்தை நீ புரிந்துகொள்கிறாய். நீ உனது சொந்த அனுபவத்தைப் பெற்ற பிறகு, நீ அனுபவித்தவற்றைப் பற்றி நீ கொண்டிருக்க வேண்டிய அறிவைப் பற்றி பேசலாம். மேலும், யாருடைய அறிவு உண்மையானது மற்றும் நடைமுறைக்குரியது என்பதையும், யாருடைய அறிவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பயனற்றது என்பதையும் உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியும். எனவே, நீ கூறும் அறிவானது சத்தியத்துடன் ஒத்துப்போகிறதா என்பது பெரும்பாலும் அதில் உனக்கு நடைமுறை அனுபவம் உள்ளதா என்பதைப் பொறுத்து இருக்கிறது. உனது அனுபவத்தில் சத்தியம் இருக்கும் இடத்தில், உனது அறிவானது நடைமுறையானதாகவும் மற்றும் மதிப்புமிக்கதாகவும் இருக்கும். உனது அனுபவத்தின் மூலம், உன்னால் விவேகத்தையும் நுண்ணறிவையும் பெற முடியும், உனது அறிவை ஆழப்படுத்த முடியும், மேலும் நீ உன்னை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றிய உனது ஞானத்தையும் பொது அறிவையும் அதிகரிக்கவும் முடியும். சத்தியத்தைக் கொண்டிருக்காத ஜனங்கள் வெளிப்படுத்தும் அறிவானது, அது எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது கோட்பாடாகத்தான் இருக்கிறது. மாம்ச விஷயங்களைப் பொறுத்தவரை இந்த வகை நபர் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கலாம், ஆனால் ஆவிக்குரிய விஷயங்களில் அத்தகைய தனித்தன்மை இருப்பதில்லை. ஏனென்றால், அத்தகையவர்களுக்கு ஆவிக்குரிய விவகாரங்கள் எதிலும் அனுபவம் இருப்பதில்லை. இவர்கள் ஆவிக்குரிய விவகாரங்களில் தெளிவு இல்லாதவர்கள், ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள். நீ எந்த வகையான அறிவை வெளிப்படுத்தினாலும், அது உனதாக இருக்கும் வரை, அது உனது தனிப்பட்ட அனுபவமாகவும் உனது உண்மையான அறிவாகவும் இருக்கிறது. கோட்பாட்டைப் பற்றி மட்டுமே பேசும் ஜனங்கள்—சத்தியமோ யதார்த்தமோ இல்லாதவர்கள்—விவாதிப்பது அவர்களுடையதாக இருக்கிறது என்றும் அழைக்கப்படலாம், ஏனென்றால் அவர்கள் தங்கள் கோட்பாட்டிற்கு ஆழ்ந்த சிந்தனையின் மூலமாக மட்டுமே வந்தடைந்திருக்கிறார்கள், மேலும் அது அவர்களின் ஆழ்ந்த சிந்தனையின் விளைவும் ஆகும். ஆயினும்கூட அது வெறும் கோட்பாடு மட்டும்தான், கற்பனையைத் தவிர வேறில்லை!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 175

எல்லா வகையான ஜனங்களின் அனுபவங்களும் அவர்களுக்குள் இருக்கும் விஷயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எந்தவொரு ஆவிக்குரிய அனுபவமும் இல்லாத எவரும் சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பற்றியோ, பல்வேறு ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய சரியான அறிவைப் பற்றியோ பேச முடியாது. மனுஷன் அகத்தில் எப்படி இருக்கிறானோ அதைத்தான் வெளிப்படுத்துகிறான்—இது நிச்சயம். ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய அறிவையும், சத்தியத்தைப் பற்றிய அறிவையும் பெற்றிருக்க நீ விரும்பினால், உனக்கு உண்மையான அனுபவம் இருக்க வேண்டும். மனுஷ ஜீவிதத்தில் பொது அறிவு பற்றி உன்னால் தெளிவாகப் பேச முடியாவிட்டால், எப்படி உன்னால் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேச முடியும்? திருச்சபைகளை வழிநடத்தி, ஜனங்களுக்கு ஜீவனை வழங்குகிறவர்களாகவும், ஜனங்களுக்கு அப்போஸ்தலர்களாகவும் இருக்கக்கூடியவர்களுக்கு உண்மையான அனுபவம் இருக்க வேண்டும்; அவர்களுக்கு ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய சரியான புரிதலும், சத்தியத்தைப் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும். அத்தகையவர்கள் மட்டுமே திருச்சபைகளை வழிநடத்தும் ஊழியக்காரர்களாக அல்லது அப்போஸ்தலர்களாக இருக்க தகுதியுடையவர்கள். இல்லையெனில், அவர்கள் மிகத் தாழ்ந்தவர்களாக இருந்து பின்பற்ற மட்டுமே முடியும், வழிநடத்த முடியாது, மேலும் ஜனங்களுக்கு ஜீவனை வழங்கக்கூடிய அப்போஸ்தலர்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், அப்போஸ்தலர்களின் செயல்பாடு விரைவாக செயல்படுவதோ அல்லது போராடுவதோ அல்ல; ஜீவனுக்கு ஊழியம் செய்யும் கிரியையை செய்வதற்கும் மற்றவர்களை அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கு வழிவகுக்கும் கிரியையைச் செய்வதும்தான் அப்போஸ்தலர்களின் செயல்பாடாக இருக்கிறது. இந்தச் செயல்பாட்டைச் செய்பவர்கள் ஒரு கனமான பொறுப்பை ஏற்க நியமிக்கப்படுகிறார்கள், இந்தப் பொறுப்பானது யாராலும் தோள்களில் சுமக்க முடியாததாக இருக்கிறது. இந்த வகையான கிரியையை ஜீவனை அறிந்தவர்கள், அதாவது சத்திய அனுபவமுள்ளவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். வெறுமனே கைவிடக்கூடிய, விரைந்து செயல்படக்கூடிய, அல்லது தங்களையே செலவழிக்க விரும்பும் எவராலும் இதை மேற்கொள்ள முடியாது; சத்திய அனுபவம் இல்லாதவர்கள், கிளைநறுக்கப்படாதவர்கள் அல்லது நியாயந்தீர்க்கப்படாதவர்கள் ஆகியோரால் இந்த வகை கிரியைகளைச் செய்ய இயலாது. எந்த அனுபவமும் இல்லாத ஜனங்களால், யதார்த்தம் இல்லாத ஜனங்களால் யதார்த்தத்தை தெளிவாகக் காண முடிவதில்லை, ஏனென்றால் அவர்களும் இந்த வகையானவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள். எனவே, இந்த வகையான நபரால் தலைமைதாங்கும் கிரியைகளைச் செய்ய இயலாது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் நீண்ட காலம் சத்தியம் இல்லாமல் இருந்தால், அவர்கள் புறம்பாக்கப்பட வேண்டும். நீ வெளிப்படுத்தும் நுண்ணறிவானது நீ ஜீவிதத்தில் அனுபவித்த கஷ்டங்கள், நீ சிட்சிக்கப்பட்டதற்கான விஷயங்கள் மற்றும் நீ நியாயந்தீர்க்கப்பட்டதற்கான சிக்கல்களுக்கு சான்றாக நிற்க முடியும். சோதனைகளுக்கான விஷயங்களுக்கும் இதுதான் உண்மையாக இருக்கிறது: நீ சுத்திகரிக்கப்பட்ட இடத்தில், நீ பலவீனமாக இருக்கிறாய்—இவையெல்லாம் உனக்கு அனுபவமுள்ள பகுதிகள், இவற்றில் உனக்கு ஒரு பாதையும் இருக்கிறது. உதாரணமாக, திருமணத்தில் யாராவது விரக்தியடைந்தால், அவர்கள் பெரும்பாலும், “தேவனுக்கு நன்றி, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் தேவனுடைய இருதயத்தின் ஆசையை நிறைவேற்றி, அவருக்கு என் முழு ஜீவிதத்தையும் வழங்க வேண்டும், மேலும் எனது திருமணத்தை தேவனின் கைகளில் வைக்க வேண்டும். எனது முழு ஜீவிதத்தையும் தேவனிடம் பிணையம் வைக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்று சொல்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அவன் பேசுவதன் மூலம் நிரூபிக்க முடியும். ஒரு நபரின் பேச்சின் வேகம், அவர்கள் சத்தமாகவோ அல்லது அமைதியாகவோ பேசினாலும்—இதுபோன்ற விஷயங்கள் அனுபவத்தின் விஷயங்களாக இருப்பதில்லை, மேலும் அவற்றில் என்ன இருக்கிறது என்பதையும் அவை என்னவாக இருக்கிறது என்பதையும் அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியாது. இந்த விஷயங்களால் ஒரு நபரின் குணம் நல்லதா அல்லது கெட்டதா, அல்லது அவர்களின் சுபாவம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை மட்டுமே சொல்ல முடியும், ஆனால் ஒருவருக்கு அனுபவம் உள்ளதா என்பதை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பேசும்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திறன், அல்லது பேச்சுத் திறமை அல்லது வேகம் என்பது நடைமுறைக்கான ஒரு விஷயமாக இருக்கிறது, இதனால் உனது அனுபவத்தை மாற்ற முடியாது. உனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி நீ பேசும்போது, நீ முக்கியமானவை என்று கருதும் மற்றும் உனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் நீ பேசுகிறாய். என் பேச்சு நான் இருப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் நான் சொல்வது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாக இருக்கிறது. நான் சொல்வது மனுஷன் அனுபவிக்கும் விஷயமாக இருப்பதில்லை, அது மனுஷனால் பார்க்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பதில்லை; இது மனுஷனால் தொடக்கூடிய ஒன்றாகவும் இருப்பதில்லை, ஆனால் அதுதான் நான். நான் அனுபவித்ததை மட்டுமே பேசுகிறேன் என்று சிலர் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடு என்பதை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. நிச்சயமாக, நான் அனுபவித்த விஷயங்கள் பற்றிதான் நான் சொல்கிறேன். ஆறாயிரம் ஆண்டுகளாக நிர்வாகக் கிரியைகளைச் செய்தது நான் தான். மனுஷகுலத்தின் சிருஷ்டிப்பின் ஆதி முதல் இப்போது வரை அனைத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்; என்னால் அதை எப்படி விவாதிக்காமல் இருக்க முடியும்? மனுஷனின் சுபாவத்தைப் பற்றி பேசுகிறோம் என்றால், நான் அதைத் தெளிவாகக் கண்டிருக்கிறேன்; நான் அதை நீண்ட காலத்திற்கு முன்பே கவனித்தேன். இவ்வாறாக இருப்பின் இதைப் பற்றி என்னால் எப்படித் தெளிவாகப் பேசாமல் இருக்க முடியும்? மனுஷனின் சாராம்சத்தை நான் தெளிவாகக் கண்டதால், மனுஷனை சிட்சிப்பதற்கும் அவனை நியாயந்தீர்ப்பதற்கும் நான் தகுதியானவனாக இருக்கிறேன், ஏனென்றால் மனுஷர் அனைவரும் என்னிடமிருந்து வந்தவர்கள், ஆனால் சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கிறார்கள். நிச்சயமாக, நான் செய்த கிரியையை மதிப்பிடுவதற்கான தகுதியும் எனக்கு உண்டு. இந்தக் கிரியை என் மாம்சத்தால் செய்யப்படவில்லை என்றாலும், இது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவே இருக்கிறது, என்னிடம் இருப்பது இதுதான், நான் என்னவாக இருக்கிறேனோ அதுவும் இதுதான். எனவே, அதை வெளிப்படுத்தவும், நான் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் நான் தகுதியானவனாக இருக்கிறேன். ஜனங்கள் அவர்கள் அனுபவித்ததை மட்டும்தான் சொல்கிறார்கள். இதைத்தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள், அவர்களது மனங்கள் அடையக்கூடியது இதுதான், அவர்களின் புலன்களால் கண்டறிய முடிவதும் இதுதான். இதைத்தான் அவர்கள் பேச முடியும். மாம்சமாகிய தேவனால் பேசப்படும் வார்த்தைகளானது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன. இதனை மாம்சம் அனுபவித்ததும் இல்லை, பார்த்ததும் இல்லை, ஆனாலும் அவர் இன்னும் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் மாம்சத்தின் சாராம்சம் ஆவியானவராக இருக்கிறார், மேலும் ஆவியானவரின் கிரியையைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார். மாம்சத்தால் அடையமுடியாத போதிலும், இந்தக் கிரியையானது ஆவியானவரால் ஏற்கெனவே செய்யப்பட்ட கிரியையாக இருக்கிறது. மாம்சமான பிறகு, மாம்சத்தின் வெளிப்பாட்டின் மூலம், தேவன் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் ஜனங்களுக்கு உதவுகிறார், மேலும் தேவனின் மனநிலையையும் அவர் செய்த கிரியையையும் பார்க்க ஜனங்களை அனுமதிக்கிறார். மனுஷனின் கிரியையானது ஜனங்களுக்கு அவர்கள் எதில் பிரவேசிக்க வேண்டும், எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகத் தெளிவைத் தருகிறது; சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஜனங்களை வழிநடத்துவதும் இதில் அடங்கும். மனுஷனை நிலைநிற்கச் செய்வதே மனுஷனின் கிரியையாக இருக்கிறது; தேவனின் கிரியையானது மனுஷகுலத்திற்கான புதிய பாதைகளையும் புதிய யுகங்களையும் திறந்து வைப்பது, இறந்துபோகக்கூடியவர்களால் அறியப்படாதவற்றை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது, அவருடைய மனநிலையை ஜனங்கள் அறிந்து கொள்ள அனுமதிப்பது ஆகிய விஷயங்களைச் செய்கிறது. மனுஷகுலம் முழுவதையும் வழிநடத்துவதே தேவனின் கிரியையாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 176

பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளும் ஜனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் செய்யப்படுகின்றன. இது ஜனங்களை மேம்படுத்துவது பற்றியதாக இருக்கிறது; ஜனங்களுக்கு பயனளிக்காத எந்தக் கிரியையும் இருப்பதில்லை. சத்தியம் ஆழமானதா அல்லது ஆழமற்றதா என்பது முக்கியமல்ல, சத்தியத்தை ஏற்றுக்கொள்பவர்களின் திறமை எதுவாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் என்ன செய்தாலும், அது ஜனங்களுக்குப் பயனளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நேரடியாகச் செய்ய முடியாது; அதை அவருடன் ஒத்துழைக்கும் ஜனங்கள் மூலமாகத்தான் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறாக மட்டுமே பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் முடிவுகளைப் பெற முடியும். நிச்சயமாக, பரிசுத்த ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்யும்போது, அது கலப்படம் செய்யப்படுவதில்லை; ஆனால் பரிசுத்த ஆவியானவர் மனுஷன் மூலமாகக் கிரியை செய்யும்போது, அது மிகவும் கறைபடிந்து பரிசுத்த ஆவியானவரின் அசல் கிரியையாக இருப்பதில்லை. இது இவ்வாறு இருப்பதால், சத்தியமானது மாறுபட்ட அளவுகளுக்கு மாறுகிறது. பின்பற்றுபவர்கள் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான நோக்கத்தைப் பெறுவதில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, மனுஷனின் அனுபவம் மற்றும் அறிவின் கலவையை அவர்கள் பெறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியை சரியானது என்பதையே பின்பற்றுபவர்கள் பெறுவதன் ஒரு பகுதியாக இருக்கிறது, அதேசமயம் ஊழியக்காரர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதால் பின்பற்றுபவர்கள் பெறும் மனுஷனின் அனுபவமும் அறிவும் வேறுபடுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் தெளிவு மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய ஊழியக்காரர்கள் இந்தத் தெளிவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனுபவங்களைப் பெறுவார்கள். இந்த அனுபவங்களுக்குள் மனுஷனின் மனம் மற்றும் அனுபவம், மனுஷத்தன்மையின் இருப்பு ஆகியவை ஒன்றிணைக்கப்படுகின்றன, பின்னர் அவற்றில் இருக்க வேண்டிய அறிவு அல்லது நுண்ணறிவை அவர்கள் பெறுகின்றனர். சத்தியத்தை அனுபவித்த பிறகு இதுவே மனுஷனின் நடைமுறையாக இருக்கிறது. இந்த நடைமுறையானது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஏனென்றால் ஜனங்கள் வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள், மேலும் ஜனங்கள் அனுபவிக்கும் விஷயங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன. இவ்வாறாக, பரிசுத்த ஆவியானவரின் அதே தெளிவு வெவ்வேறு அறிவையும் நடைமுறையையும் விளைவிக்கிறது, ஏனென்றால் தெளிவைப் பெறுபவர்கள் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் நடைமுறையில் சிறிய தவறுகளைச் செய்கிறார்கள், சிலர் பெரிய தவறுகளைச் செய்கிறார்கள், சிலர் தவறுகளைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், ஜனங்கள் புரிந்துகொள்ளும் திறனில் வேறுபடுகிறார்கள், மேலும் அவர்களின் உள்ளார்ந்த திறன்களும் வேறுபடுகின்றன. சிலருக்கு ஒரு செய்தியைக் கேட்டபின் ஒருவித புரிதல் ஏற்படுகிறது, மேலும் சிலருக்கு ஒரு சத்தியத்தைக் கேட்டபின் வேறு மாதிரியான புரிதல் ஏற்படுகிறது. சிலர் சற்றே விலகுகிறார்கள், சிலருக்குச் சத்தியத்தின் உண்மையான அர்த்தம் புரிவதேயில்லை. எனவே, ஒருவனின் புரிதலானது அவன் மற்றவர்களை எவ்வாறு வழிநடத்துவான் என்பதைக் கூறுகிறது; இதுதான் சத்தியம், ஏனென்றால் ஒருவனின் கிரியை என்பது ஒருவர் இருப்பதற்கான வெளிப்பாடாகும். சத்தியத்தைப் பற்றிய சரியான புரிதல் உள்ளவர்கள் தலைமையிலான ஜனங்களுக்கும் சத்தியத்தைப் பற்றிய சரியான புரிதல் இருக்கும். புரிதலில் பிழைகள் கொண்டவர்கள் இருந்தாலும், அவர்களில் மிகக் குறைவானவர்களே இருக்கிறார்கள், ஆனால் அனைவருக்கும் பிழைகள் இருப்பதில்லை. ஒருவனுக்குச் சத்தியத்தைப் புரிந்துகொள்வதில் பிழைகள் இருந்தால், அவனைப் பின்பற்றுபவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி பிழை கொண்டவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்கள் வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் பிழை கொண்டவர்களாக இருப்பார்கள். பின்தொடர்பவர்கள் எந்த அளவிற்கு உண்மையைப் புரிந்துகொள்கிறார்கள் என்பது பெரும்பாலும் ஊழியக்காரர்களைப் பொறுத்து இருக்கிறது. நிச்சயமாக, தேவனிடமிருந்து வரும் சத்தியம் சரியானதாகவும் பிழையில்லாமலும் இருக்கிறது, அது முற்றிலும் நிச்சயமானதாக இருக்கிறது. எவ்வாறாயினும், ஊழியக்காரர்கள் முற்றிலும் சரியானவர்களாக இருப்பதில்லை, மேலும் அவர்கள் முற்றிலும் நம்பகமானவர்கள் என்றும் கூறிவிட முடியாது. சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு ஊழியக்காரர்களுக்கு மிகவும் நடைமுறையான ஒரு வழி இருந்தால், பின்பற்றுபவர்களுக்கும் நடைமுறைப்படுத்த ஒரு வழி இருக்கும். ஊழியக்காரர்களுக்குச் சத்தியத்தை கடைப்பிடிக்க ஒரு வழி இல்லை, ஆனால் கோட்பாடு மட்டும் இருக்கிறது என்றால், பின்தொடர்பவர்களுக்கு எந்த யதார்த்தமும் இருக்காது. பின்தொடர்பவர்களின் திறனும் தன்மையும் பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்றன, அவை ஊழியக்காரர்களுடன் தொடர்புடையவை அல்ல, ஆனால் பின்தொடர்பவர்கள் எந்த அளவிற்குச் சத்தியத்தை புரிந்துகொண்டு தேவனை அறிகிறார்கள் என்பது ஊழியக்காரர்களைப் பொறுத்தது (இது சிலருக்கு மட்டுமே). ஓர் ஊழியக்காரன் எப்படியாக இருக்கிறானோ, அவன் வழிநடத்தும் விசுவாசிகளும் அப்படித்தான் இருப்பார்கள். ஓர் ஊழியக்காரன் எவ்விதத் தடையும் இல்லாமல் தன்னை வெளிப்படுத்துகிறான். அவனைப் பின்பற்றுபவர்களிடம் அவன் வைக்கும் கோரிக்கைகளானது அவன் அவனாகவே அடைய விருப்பப்படும் அல்லது அவனாகவே அடைய முடிகிறவையாக இருக்கின்றன. பெரும்பாலான ஊழியக்காரர்கள் அவர்கள் தங்களுக்கு என்ன செய்துகொள்கிறார்களோ, அவர்களைப் பின்பற்றுபவர்களால் அதை ஒருபோதும் அடைய முடியாது என்றாலும், அதையே தங்களைப் பின்பற்றுபவர்களின் கோரிக்கைகளை வைப்பதற்கு ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள்—மேலும் ஒருவனால் அதை அடைய முடியவில்லை எனில், அவனே அவனது பிரவேசத்திற்குத் தடையாகிறான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 177

கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களின் கிரியையில் மிகக் குறைவான விலகலே இருக்கிறது, மேலும் அவர்களுடைய கிரியையின் வெளிப்பாடு மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. கிரியை செய்ய தங்கள் சுபாவத்தை நம்பியிருப்பவர்கள் மிகப் பெரிய தவறுகளைச் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு ஒரு பெரிய தடையாக இருக்கும் பரிபூரணமாக்கப்படாத ஜனங்களின் கிரியையானது அவர்களின் இயல்புத்தன்மையை அதிகமாக வெளிப்படுத்துகிறது. ஒரு நபரின் திறமை எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கட்டளையின் கிரியையைச் செய்வதற்கு முன்பு அவர்கள் கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, நியாந்தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் அத்தகைய நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்காவிட்டால், அவர்களின் கிரியையானது எவ்வளவு சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தாலும், அதனால் சத்தியத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியாது, அது எப்போதும் அவர்களின் இயல்புத்தன்மை மற்றும் மனுஷனின் நற்குணம் ஆகியவற்றின் விளைவாகவே இருக்கும். கிளைநறுக்கப்படாமல், கையாளப்படாமல் மற்றும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படாதவர்களின் கிரியையை விட கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு மற்றும் நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களின் கிரியையானது மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. நியாத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படாதவர்கள், மனுஷ மாம்சம் மற்றும் எண்ணங்களைத் தவிர வேறொன்றையும் வெளிப்படுத்துவதில்லை, அவர்கள் அதிக மனுஷ நுண்ணறிவு மற்றும் உள்ளார்ந்த திறமைகளின் கலவையாக இருக்கிறார்கள். இது தேவனுடைய கிரியைக்கான மனுஷனின் துல்லியமான வெளிப்பாடு இல்லை. அத்தகையவர்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களுடைய இயல்பான திறமையால் அவர்களுக்கு முன் கொண்டு வரப்படுகிறார்கள். தேவனின் உண்மையான நோக்கத்திலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு, அதிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்லும் மனுஷனின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்தை அவை அதிகம் வெளிப்படுத்துவதால், இந்த வகை நபரின் கிரியையால் ஜனங்களை தேவனுக்கு முன்பாகக் கொண்டுவர முடியாது, ஆனால் அவர்களை மனுஷனுக்கு முன்பாகக் கொண்டுவருகிறது. எனவே, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்தப்படாதவர்கள் தேவனின் கட்டளை கிரியையைச் செய்ய தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். ஒரு தகுதிவாய்ந்த ஊழியக்காரனின் கிரியையால் ஜனங்களைச் சரியான பாதையில் கொண்டு வந்து அவர்களுக்குச் சத்தியத்திற்கு அதிக பிரவேசங்களை வழங்க முடியும். அவனுடைய கிரியையால் ஜனங்களை தேவனுக்கு முன்பாக கொண்டு வர முடியும். மேலும், அவன் செய்யும் கிரியையானது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம், மேலும் இது விதிகளுக்கும் கட்டுப்படாமல் ஜனங்களுக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும், மேலும் ஜீவிதத்தில் படிப்படியாக வளரக்கூடிய திறனையும் அனுமதிக்கிறது, இதனால் சத்தியத்தில் இன்னும் ஆழமான பிரவேசம் இருக்கும். தகுதியற்ற ஊழியக்காரனின் கிரியையானது மிகக் குறைவானதாக இருக்கிறது. அவனது கிரியை முட்டாள்தனமானது. அவனால் ஜனங்களை விதிகளுக்குள் மட்டுமே கொண்டுவர முடியும், மேலும் அவன் ஜனங்களிடம் கோருவதும் மனுஷனுக்கு மனுஷன் வேறுபட்டதாக இருப்பதில்லை; அவன் ஜனங்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப கிரியை செய்வதில்லை. இந்த வகைக் கிரியைகளில், பல விதிகள் மற்றும் பல கோட்பாடுகள் இருக்கின்றன, மேலும் இதனால் ஜனங்களை யதார்த்தத்திற்குக் கொண்டு வர முடியாது, அல்லது ஜனங்களை ஜீவித வளர்ச்சியின் சாதாரண நடைமுறைக்கும் கொண்டுவர முடியாது. பயனற்ற சில விதிகளை மட்டுமே கடைபிடிக்க இது ஜனங்களுக்கு உதவும். இத்தகைய வழிகாட்டுதலால் ஜனங்களை வழிதவறி வழிநடத்திச் செல்ல மட்டுமே முடியும். அவன் உன்னை அவனைப்போல் மாற்ற உன்னை வழிநடத்துகிறான்; அவனிடம் என்ன இருக்கிறதோ அதற்கும் மற்றும் அவன் என்னவாக இருக்கிறானோ அதற்கும் உன்னை கொண்டுவர அவனால் முடியும். தலைவர்கள் தகுதியுள்ளவர்களா என்பதைப் பின்பற்றுபவர்கள் கண்டறிய, அவர்கள் வழிநடத்தும் பாதை மற்றும் அவர்களது கிரியைகளின் முடிவுகளைப் பார்ப்பது, மற்றும் பின்பற்றுபவர்கள் சத்தியத்திற்கு ஏற்ப கொள்கைகளைப் பெறுகிறார்களா என்பதையும், மற்றும் அவர்கள் தங்களது மாறுதலுக்கு ஏற்ற நடைமுறை பாதைகளைப் பெறுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். நீ வெவ்வேறு வகையான நபர்களின் வெவ்வேறு கிரியைகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்; நீ முட்டாள்தனமாக பின்பற்றுபவராக இருக்கக்கூடாது. இது ஜனங்களின் பிரவேசம் பற்றிய விஷயத்தைச் சேர்ந்தது. எந்த நபரின் தலைமையில் பாதை இருக்கிறது, எதில் இல்லை என்பதை உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், நீ எளிதில் ஏமாற்றப்படுவாய். இவை அனைத்தும் உனது சொந்த ஜீவிதத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பரிபூரணமடையாதவர்களின் கிரியையில் அதிகமான இயல்புத்தன்மை இருக்கிறது; இது மனுஷ விருப்பத்துடன் அதிகமாகக் கலந்திருக்கிறது. அவர்கள் இயல்புத்தன்மை கொண்டிருக்கிறார்கள்—அவர்கள் அதனுடன் பிறந்தவர்கள். இது கையாளப்பட்டதற்குப் பிறகான ஜீவிதமோ அல்லது மாற்றப்பட்டதற்குப் பிறகான யதார்த்தமோ இல்லை. அத்தகைய நபரால் ஜீவனைப் பின்பற்றுபவர்களை எவ்வாறு ஆதரிக்க முடியும்? மனுஷனுக்கு உண்மையாக இருக்கும் ஜீவனானது அவனது உள்ளார்ந்த புத்திசாலித்தனம் அல்லது திறமை ஆகியவைதான். இந்த வகையான புத்திசாலித்தனம் அல்லது திறமையானது மனுஷனுக்கான தேவனின் சரியான கோரிக்கைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. ஒரு மனுஷன் பரிபூரணப்படுத்தப்படாமலும், அவனுடைய சீர்கெட்ட மனநிலை கிளைநறுக்கப்படாமலும், கையாளப்படாமலும் இருந்தால், அவன் வெளிப்படுத்தும் விஷயத்திற்கும் சத்தியத்திற்கும் இடையே ஒரு பரந்த இடைவெளி இருக்கும்; அவன் வெளிப்படுத்தும் விஷயங்களானது அவனது கற்பனை மற்றும் ஒருதலைப்பட்ச அனுபவம் போன்ற தெளிவற்ற விஷயங்களுடன் கலக்கப்படும். மேலும், அவன் எவ்வாறு கிரியை செய்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒட்டுமொத்த குறிக்கோளும் இல்லை, எல்லா ஜனங்களின் பிரவேசத்திற்கு ஏற்ப சத்தியமும் இல்லை என்பதை ஜனங்கள் உணர்கிறார்கள். மதில்சுவர்களில் வாத்துகளை உட்கார வைத்திருப்பதைப் போல, ஜனங்களிடம் கோரப்பட்டவற்றில் பெரும்பாலானவை அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இது மனுஷ விருப்பத்திற்கான கிரியையாக இருக்கிறது. மனுஷனின் சீர்கெட்ட மனநிலை, அவனது எண்ணங்கள் மற்றும் அவனது கருத்துக்கள் அவனது உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. மனுஷன் சத்தியத்தை கடைப்பிடிக்கும் உள்ளுணர்வோடு பிறப்பதில்லை, சத்தியத்தை நேரடியாகப் புரிந்து கொள்ளும் உள்ளுணர்வும் அவனுக்கு இருப்பதில்லை. இதனை அந்த மனுஷனின் சீர்கெட்ட மனநிலையுடன் சேர்த்தால்—இந்த வகையான சுபாவம் கொண்ட நபர் கிரியை செய்யும்போது, இது குறுக்கீடுகளை ஏற்படுத்தாதா? ஆனால் பரிபூரணமான ஒரு மனுஷனுக்கு ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியத்தின் அனுபவமும், அவர்களின் சீர்கெட்ட மனநிலையைப் பற்றிய அறிவும் இருக்கிறது, இதனால் அவனது கிரியையில் உள்ள தெளிவற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்கள் படிப்படியாகக் குறைந்து, மனுஷக் கலப்படம் குறைந்து, அவனுடைய கிரியையும் சேவையும் தேவனுக்குத் தேவைப்படும் தரங்களுக்கு மிக நெருக்கத்தில் வரும். இவ்வாறு, அவனது கிரியை சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் நுழைந்திருக்கிறது, அது யதார்த்தமாகவும் மாறிவிட்டது. குறிப்பாக மனுஷனின் மனதில் உள்ள எண்ணங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கின்றன. மனுஷனுக்கு வளமான கற்பனையும் நியாயமான தர்க்கமும் இருக்கிறது, மேலும் அவன் விவகாரங்களைக் கையாண்ட நீண்ட அனுபவத்தையும் கொண்டிருக்கிறான். மனுஷனின் இந்த அம்சங்கள் கிளைநறுக்கப்பட்டு மற்றும் திருத்தப்படாவிட்டால், இவை அனைத்தும் கிரியை செய்வதற்கான தடைகளாகத்தான் இருக்கும். எனவே, மனுஷனின் கிரியையானது மிக உயர்ந்த துல்லியத்தை அடைய முடியாது, குறிப்பாக பரிபூரணமாக்கப்படாத ஜனங்களின் கிரியை மிக உயர்ந்த துல்லியத்தை அடைய முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 178

மனுஷனின் கிரியையானது ஓர் எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது. மனுஷனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் கிரியையை மட்டுமே செய்ய முடியும், முழு யுகத்தின் கிரியையையும் செய்ய முடியாது—இல்லையெனில், அவன் ஜனங்களை விதிகளுக்கு மத்தியில் அழைத்துச் செல்வான். மனுஷனின் கிரியையானது ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால், மனுஷனின் அனுபவத்திற்கு எல்லை இருக்கிறது. மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. மனுஷன் நடக்கும் வழிகள் மற்றும் சத்தியத்தைப் பற்றிய அவனது அறிவு ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பொருந்தும். மனுஷன் பயணிக்கும் பாதையானது முற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் சித்தம்தான் என்று உன்னால் கூற முடியாது, ஏனென்றால் மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே தெளிவு பெற முடியும், மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் முழுமையாக நிரம்பியிருக்கவும் முடியாது. மனுஷன் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் சாதாரண மனுஷத்தன்மையின் எல்லைக்குள் இருக்கின்றன, மேலும் அவற்றால் சாதாரண மனுஷ மனதில் இருக்கும் எண்ணங்களின் வரம்பை மீற முடியாது. சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் ஜீவிக்க முடிந்தவர்கள் இந்த வரம்பிற்குள்தான் அனுபவிப்பார்கள். அவர்கள் சத்தியத்தை அனுபவிக்கும்போது, அது எப்போதும் பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெற்ற சாதாரண மனுஷ ஜீவிதத்தின் அனுபவமாகவே இருக்கிறது; இது சாதாரண மனுஷ ஜீவிதத்திலிருந்து விலகிச் செல்லும் அனுபவமாக இருப்பதில்லை. தங்கள் மனுஷ ஜீவிதத்தை ஜீவிப்பதற்கான அஸ்திபாரத்தில் பரிசுத்த ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட சத்தியத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். மேலும், இந்தச் சத்தியமானது நபருக்கு நபர் மாறுபடுகிறது, அதன் ஆழமானது அந்த நபரின் மனநிலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அவர்கள் நடந்துகொண்டிருக்கும் பாதையானது சத்தியத்தைப் பின்தொடரும் ஒருவரின் சாதாரண மனுஷ ஜீவிதம்தான் என்று உன்னால் சொல்ல மட்டுமே முடியும், மேலும் இது பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெற்ற ஒரு சாதாரண மனுஷன் நடந்து சென்ற பாதை என்றும் அழைக்கப்படலாம். அவர்கள் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்லும் பாதைதான் என்று உன்னால் சொல்ல முடியாது. சாதாரண மனுஷ அனுபவத்தில், பின்பற்றுபவர்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும், ஜனங்கள் அனுபவிக்கும் சூழல்களும் அவர்களின் அனுபவத்தின் வரம்புகளும் ஒரே மாதிரியாக இல்லாததாலும், அவர்களின் மனம் மற்றும் எண்ணங்களின் கலவையின் காரணமாகவும், அவர்களின் அனுபவமானது வெவ்வேறு அளவுகளில் கலக்கப்படுகிறது. ஒவ்வொருவனும் வெவ்வேறு, தனிப்பட்ட நிலைமைகளுக்கு ஏற்ப ஒரு சத்தியத்தைப் புரிந்துகொள்கிறான். சத்தியத்தின் உண்மையான அர்த்தத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் முழுமையடையாமல் இருக்கிறது, மேலும் அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மனுஷனின் நிபந்தனைகளுக்கு ஏற்ப மனுஷன் அனுபவிக்கும் சத்தியத்தின் நோக்கமானது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. இவ்வாறாக, வெவ்வேறு நபர்களால் வெளிப்படுத்தப்படும் ஒரே சத்தியத்தின் அறிவானது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது, மனுஷனின் அனுபவமானது எப்போதுமே வரம்புகளைக் கொண்டிருக்கிறது, மேலும் அந்த அனுபவத்தால் பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மனுஷனால் வெளிப்படுத்தப்படும் விஷயங்கள் தேவனின் சித்தத்திற்கு மிக நெருக்கமாக ஒத்திருந்தாலும் கூட, மேலும் மனுஷனின் அனுபவமானது பரிசுத்த ஆவியானவர் செய்யும் பரிபூரணமாக்கும் கிரியைக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் கூட மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையாக உணர்ந்துகொள்ள முடியாது. மனுஷன் தேவனின் ஊழியனாக மட்டுமே இருக்க முடியும், தேவன் அவனிடம் ஒப்படைக்கும் கிரியையைச் செய்யும் ஊழியனாக மட்டுமே அவனால் இருக்க முடியும். மனுஷனால் பரிசுத்த ஆவியானவரால் தெளிவுபடுத்தப்பட்ட அறிவையும் அவனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சத்தியங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மனுஷன் தகுதியற்றவன், பரிசுத்த ஆவியானவரை வெளிப்படுத்துபவனாக இருப்பதற்குத் தேவையான நிபந்தனைகளை அவன் பூர்த்தி செய்வதில்லை. அவனுடைய கிரியையானது தேவனின் கிரியை என்று சொல்ல அவனுக்கு உரிமை இல்லை. மனுஷனிடம், மனுஷனின் கிரியை செய்வதற்கான கொள்கைகள் இருக்கின்றன, மேலும் எல்லா மனுஷரும் வெவ்வேறு அனுபவங்களையும் மாறுபட்ட நிலைமைகளையும் கொண்டுள்ளனர். மனுஷனின் கிரியையில் பரிசுத்த ஆவியானவரின் தெளிவிற்குக் கீழ் இருக்கும் அவனது அனுபவங்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இந்த அனுபவங்களால் மனுஷன் இருப்பதை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், தேவன் இருப்பதை அல்லது பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆகையால், மனுஷன் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதை என்று சொல்ல முடியாது, ஏனென்றால் மனுஷனின் கிரியையால் தேவனின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் மனுஷனின் கிரியையும் அனுபவமும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையான சித்தமல்ல. மனுஷனின் கிரியையானது எளிதில் விதிகளுக்குள் சிக்கிக்கொள்கிறது, மேலும் அவனது கிரியையின் முறையானது எளிதில் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் அதனால் ஜனங்களை ஒரு சுதந்திரமான வழியில் அழைத்துச் செல்ல இயலாது. பின்பற்றும் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர், மேலும் அவர்கள் அனுபவிக்கும் முறையும் அதன் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனுஷனின் அனுபவமானது எப்போதும் குறைவானதாகவே இருக்கிறது; அவனுடைய கிரியையின் முறையும் ஒரு சில வகைகளுக்கு என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனை பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்லது தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மனுஷனின் அனுபவமானது இறுதியில் குறைவானதாகவே இருக்கிறது. தேவன் தமது கிரியையை எப்படிச் செய்தாலும், அது விதிகளுக்குக் கட்டுப்பட்டதாக இருப்பதில்லை; அது எவ்வாறாக செய்யப்பட்டாலும், அது ஒரேயொரு முறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதில்லை. தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை—அவருடைய எல்லா கிரியைகளும் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக இருக்கின்றன. மனுஷன் அவரைப் பின்தொடர எவ்வளவு நேரம் செலவிட்டாலும், தேவன் கிரியை செய்யும் முறைகளை ஆளும் எந்த சட்டங்களையும் அவனால் வடிகட்டிட முடியாது. அவரது கிரியையானது கொள்கை ரீதியானது தான் என்றாலும், அது எப்போதும் புதிய வழிகளில் செய்யப்படுகிறது, எப்போதும் புதிய முன்னேற்றங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் அது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. ஒரே காலகட்டத்தில், தேவனுக்குப் பல்வேறு வகையான கிரியைகள் மற்றும் ஜனங்களை வழிநடத்தும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம், இதன் மூலம் ஜனங்கள் எப்போதும் புதிய பிரவேசங்களையும் மாற்றங்களையும் கொண்டிருப்பார்கள். அவருடைய கிரியையின் சட்டங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது, ஏனென்றால் அவர் எப்போதும் புதிய வழிகளில் கிரியை செய்கிறார், இதனால் மட்டுமே தேவனைப் பின்பற்றுபவர்கள் விதிகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தேவனின் கிரியையானது எப்போதுமே ஜனங்களின் கருத்துக்களைத் தவிர்த்து, அவற்றை எதிர்க்கிறது. உண்மையான இருதயத்தோடு தேவனைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே அவர்களின் மனநிலையை மாற்றியமைத்து சுதந்திரமாக வாழ முடியும், எந்தவொரு விதிகளுக்கும் உட்படுத்தப்படாமலும் அல்லது எந்த மதக் கருத்துக்களாலும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்க முடியும். மனுஷனின் கிரியையானது அவனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், அவனால் எதை அடைய முடியும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஜனங்களுக்குக் கோரிக்கைகளை வைக்கிறது. இந்த கோரிக்கைகளின் தரமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது, மேலும் நடைமுறைக்கான வழிமுறைகளும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இவ்வாறு, பின்பற்றுபவர்கள் தங்களை அறியாமலேயே இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர்; காலம் செல்லச் செல்ல, இவை விதிகளாகவும் சடங்குகளாகவும் மாறுகின்றன. ஒரு காலகட்டத்தின் கிரியையானது தேவனின் தனிப்பட்ட பரிபூரணத்திற்கு உட்படுத்தப்படாத மற்றும் நியாயத்தீர்ப்பைப் பெறாத ஒருவனால் வழிநடத்தப்பட்டால், அவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தேவனை எதிர்ப்பதில் மதவாதிகளாகவும் நிபுணர்களாகவும் மாறுவார்கள். எனவே, ஒருவன் ஒரு தகுதி வாய்ந்த தலைவராக இருந்தால், அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு, பரிபூரணமடைவதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படாதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருந்தாலும், தெளிவற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். காலப்போக்கில், அவர்கள் ஜனங்களை தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதிகளுக்கு வழிநடத்திச் சென்றுவிடுவார்கள். தேவன் செய்யும் கிரியையானது மனுஷனின் மாம்சத்துடன் ஒத்துப்போவதில்லை. இது மனுஷனின் எண்ணங்களுடன் ஒத்துப்போவதில்லை, ஆனால் மனுஷனின் கருத்துக்களை எதிர்க்கிறது; இது தெளிவற்ற மதச் சாயங்களுடன் களங்கப்படுத்தப்படுவதும் இல்லை. தேவனுடைய கிரியையின் முடிவுகளை அவரால் பரிபூரணப்படுத்தப்படாத ஒருவனால் அடைய முடியாது; அவை மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 179

மனுஷனின் மனதில் இருக்கும் கிரியையானது மனுஷனால் மிக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, மத உலகில் உள்ள போதகர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தங்கள் கிரியையைச் செய்ய தங்களின் வரங்களையும் பதவிகளையும் நம்பியிருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்களைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வரங்களால் பாதிக்கப்படுவார்கள், அவர்களில் சிலராலேயே ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். அவர்கள் ஜனங்களின் வரங்கள், திறன்கள் மற்றும் அறிவில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மற்றும் பல ஆழமான, நம்பத்தகாத கோட்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள் (நிச்சயமாக, இந்த ஆழமான கோட்பாடுகள் அடைய முடியாதவை). அவர்கள் ஜனங்களின் மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துவதில்லை, மாறாக, பிரசங்கிக்கவும் கிரியை செய்யவும் ஜனங்களைப் பயிற்றுவிப்பதிலும், ஜனங்களின் அறிவையும் அவர்களின் ஏராளமான மதக் கோட்பாடுகளையும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். ஜனங்களின் மனநிலை எவ்வளவு மாறியிருக்கிறது அல்லது ஜனங்கள் சத்தியத்தை எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் ஜனங்களின் சாராம்சத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, மேலும் ஜனங்களின் இயல்பான மற்றும் அசாதாரண நிலைகளை அறிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்வதே இல்லை. அவர்கள் ஜனங்களின் கருத்துக்களை எதிர்ப்பதில்லை, அல்லது அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் இல்லை, அவர்கள் குறைபாடுகள் அல்லது சீர்கேடுகளுக்காக ஜனங்களை கிளை நறுக்குவதும் இல்லை. அவர்களைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் தங்கள் வரங்களைக் கொண்டு ஊழியம் செய்கிறார்கள், மேலும் அவர்கள் மதக் கருத்துக்களையும் இறையியல் கோட்பாடுகளையும் தான் வெளிப்படுத்துகிறார்கள், அவை யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவை, மேலும் அவற்றால் ஜனங்களுக்கு ஜீவிதத்தை முழுமையாக வழங்கவும் இயலாது. உண்மையில், அவர்களுடைய கிரியையின் சாராம்சமானது திறமையை வளர்ப்பது, ஒன்றுமில்லாதவனைப் பின்னர் அவன் பணிக்கு சென்று வழிநடத்தும் ஒருவனாக மாற்ற ஒரு திறமையான இறையியல் கல்லூரி பட்டதாரியாக வளர்ப்பது ஆகியவைதான். தேவனின் ஆறாயிரம் ஆண்டுக்காலக் கிரியைகளில் இருக்கும் ஏதேனும் சட்டங்களை நீ அறிவாயா? மனுஷன் செய்யும் கிரியையில் பல விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன, மேலும் மனுஷ மூளை மிகவும் இறுமாப்புள்ளதாக இருக்கிறது. ஆகவே, மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்தின் எல்லைக்குள் இருக்கும் அறிவு மற்றும் புரிதலாகவே இருக்கிறது. இதைத் தவிர மனுஷனால் எதையும் வெளிப்படுத்த முடிவதில்லை. மனுஷனின் அனுபவங்கள் அல்லது அறிவானது அவனது உள்ளார்ந்த வரங்களிலிருந்தோ அல்லது அவனது உள்ளுணர்விலிருந்தோ எழுவதில்லை; அவை தேவனின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி வழிநடத்துதல் காரணமாக எழுகின்றன. இந்த வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளும் மனத்திறன் மட்டுமே மனுஷனிடம் இருக்கிறது, ஆனால் தெய்வீகத்தன்மை என்பது என்ன என்பதை நேரடியாக வெளிப்படுத்தக்கூடிய எந்த மனத்திறனும் இல்லை. மனுஷனால் ஊற்றாக இருக்க முடியாது; அவனால் ஊற்றிலிருந்து வரும் தண்ணீரை ஏற்றுக்கொள்ளும் ஒரு பாத்திரமாக மட்டுமே இருக்க முடியும். இதுவே மனுஷனின் உள்ளுணர்வு ஆகும், ஒரு மனுஷனாக இருக்க வேண்டியவனிடம் இருக்கக்கூடிய மனத்திறன் இதுதான். தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனத்திறனை மனுஷன் இழந்து, உள்ளுணர்வையும் இழந்தால், அவன் மிகவும் விலையேறப்பெற்றதை இழந்து, சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் கடமையையும் இழக்கிறான். ஒருவன் தேவனின் வார்த்தையையோ அல்லது அவரது கிரியையையோ அறிந்திருக்கவில்லை அல்லது அதைப்பற்றிய அனுபவம் அவனுக்கு இல்லை என்றால், அவன் தனது கடமையை இழக்கிறான், அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக அவன் செய்ய வேண்டிய கடமை, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன் என்ற மேன்மையையும் இழக்கிறான். தெய்வீகம் என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துவது தேவனின் உள்ளுணர்வாக இருக்கிறது, இது மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டாலும் அல்லது நேரடியாக ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டாலும்; இது தேவனின் ஊழியம்தான். மனுஷன் தேவனின் கிரியையின் போது அல்லது அதற்குப் பிறகு தனது சொந்த அனுபவங்களை அல்லது அறிவை வெளிப்படுத்துகிறான் (அதாவது, அவன் யார் என்பதை வெளிப்படுத்துகிறான்); இதுவே மனுஷனின் உள்ளுணர்வும் கடமையுமாகும், மேலும் மனுஷன் அடைய வேண்டியதும் இதுதான். மனுஷனின் வெளிப்பாடு தேவன் வெளிப்படுத்துவதை விட மிகக் குறைவுதான் என்றாலும், மனுஷனின் வெளிப்பாடு பல விதிகளுக்குக் கட்டுப்பட்டிருந்தாலும், மனுஷனானவன் அவன் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும், மேலும் அவன் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். மனுஷன் தன் கடமையை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், அவனுக்குச் சிறிதளவு தயக்கமும் இருக்கக்கூடாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 180

தேவனின் கிரியையை மனுஷனின் கிரியையிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மனுஷனின் கிரியையில் உன்னால் என்ன பார்க்க முடியும்? மனுஷனின் கிரியையில் அவனது அனுபவத்தின் பல கூறுகள் இருக்கின்றன; மனுஷன் அவன் என்னவாக இருக்கிறான் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறான். தேவனின் சொந்தக் கிரியையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது, ஆனால் அவரது இருப்புநிலையானது மனுஷனிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மனுஷனின் இருப்புநிலையானது அவனது அனுபவத்தையும் ஜீவிதத்தையும் குறிக்கிறது (மனுஷன் தனது ஜீவிதத்தில் என்ன அனுபவிக்கிறான் அல்லது எதை எதிர்கொள்கிறான், அல்லது அவனிடமிருக்கும் ஜீவிப்பதற்கான தத்துவங்கள் ஆகியவை), மேலும் வெவ்வேறு சூழல்களில் வாழும் ஜனங்கள் வெவ்வேறு இருப்புநிலைகளை வெளிப்படுத்துகிறார்கள். நீ சமுதாயத்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறாயா, நீ உனது குடும்பத்தில் உண்மையில் எப்படி ஜீவிக்கிறாய் என்பதையும் அதற்குள் இருக்கும் அனுபவத்தையும் நீ வெளிப்படுத்தியவற்றில் காணலாம், அதேசமயம் உன்னால் தேவனின் கிரியையில் மாம்சமாகிய தேவனுக்கு சமூக அனுபவங்கள் உள்ளதா என்பதையும் பார்க்க முடியாது. மனுஷனின் சாராம்சத்தை அவர் நன்கு அறிவார், மேலும் அனைத்து வகையான ஜனங்களுக்கும் தொடர்புடைய அனைத்து வகையான நடைமுறைகளையும் அவரால் வெளிப்படுத்த முடியும். மனுஷரின் சீர்கெட்ட மனநிலையையும் கலகத்தனமான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் அவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறார். அவர் உலக ஜனங்களிடையே ஜீவிக்கவில்லை என்றாலும், மனுஷரின் சுபாவம் மற்றும் உலக ஜனங்கள் அனைவரின் சீர்கேடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். இதுவே அவருடைய இருப்புநிலை ஆகும். அவர் உலகத்தைக் கையாள்வதில்லை என்றாலும், உலகத்தைக் கையாள்வதற்கான விதிகளை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் மனுஷ சுபாவங்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். இன்றைய மற்றும் கடந்த காலங்களில் மனுஷனின் கண்களால் பார்க்க முடியாத மற்றும் மனுஷனின் செவிகளால் கேட்க முடியாத ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார். இதில் ஜீவிப்பதற்கான தத்துவம் அல்லாத ஞானமும், ஜனங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் அதிசயங்களும் அடங்கும். இதுதான் அவருடைய இருப்புநிலை, ஜனங்களுக்குத் தெரியும்படியும் இருக்கிறது, ஜனங்களிடமிருந்து மறைக்கப்பட்டும் இருக்கிறது. அவர் வெளிப்படுத்தும் விஷயங்களானது ஒரு அசாதாரண நபர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருப்பது இல்லை, ஆனால் உள்ளார்ந்த பண்புகள் கொண்ட ஆவியானவர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. அவர் உலகில் பயணம் செய்வதில்லை, ஆனாலும் அவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அறிவு அல்லது நுண்ணறிவு இல்லாத “மனுஷக்குரங்கினங்களை” தொடர்பு கொள்கிறார், ஆனால் அறிவை விட உயர்ந்த மற்றும் பெரிய மனுஷருக்கு மேலான வார்த்தைகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மனுஷத்தன்மை இல்லாத மற்றும் மனுஷகுலத்தின் மரபுகளையும் ஜீவிதத்தையும் புரிந்து கொள்ளாத ஒரு குழப்பமான மற்றும் உணர்ச்சியற்ற ஜனக்கூட்டத்திற்குள் ஜீவிக்கிறார், ஆனால் அவரால் சாதாரண மனுஷத்தன்மையில் ஜீவிக்குமாறு மனுஷகுலத்தை கேட்டுக்கொள்ள முடியும், அதே நேரத்தில் மனுஷத்தன்மையின் அடிப்படையையும் அதன் இழிவான தன்மையையும் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் அவருடைய இருப்புநிலை தான், இவை மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபரின் இருப்புநிலையை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் மற்றும் சீர்கெட்ட மனுஷகுலத்தின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்தவும் சிக்கலான, தொந்தரவான, மோசமான சமூக ஜீவிதத்தை அனுபவிப்பது தேவையற்றதாக இருக்கிறது. ஒரு மோசமான சமூக ஜீவிதமானது அவருடைய மாம்சத்தை மேம்படுத்துவதில்லை. அவரது கிரியையும் வார்த்தைகளும் மனுஷனின் கீழ்ப்படியாமையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை மனுஷனுக்கு உலகத்தைக் கையாள்வதற்கான அனுபவத்தையும் பாடங்களையும் வழங்குவதில்லை. அவர் மனுஷனுக்கு ஜீவனை வழங்கும்போது சமூகம் அல்லது மனுஷனின் குடும்பத்தை ஆராயத் தேவையில்லை. மனுஷனை வெளிப்படுத்துவதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவருடைய மாம்சத்தின் அனுபவங்களின் வெளிப்பாடாக இருப்பதில்லை; நீண்ட காலமாக மனுஷனின் கீழ்ப்படியாமையை அறிந்த பின்பும், மனுஷகுலத்தின் சீர்கேட்டை வெறுத்த பின்பும் மனுஷனின் அநீதியை அவர் வெளிப்படுத்துவதே அவரது வெளிப்பாடாக இருக்கிறது. அவர் செய்யும் கிரியையானது மனுஷனுக்கு அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதற்கும் அவருடைய இருப்புநிலையை வெளிப்படுத்துவதற்குமே செய்யப்படுகிறது. அவரால் மட்டுமே இந்த கிரியையைச் செய்ய முடியும்; இது மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபர் அடையக்கூடிய ஒன்று இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 181

தேவன் செய்யும் கிரியையானது அவருடைய மாம்சத்தினுடைய அனுபவத்தின் பிரதிநிதியாக இருப்பதில்லை; மனுஷன் செய்யும் கிரியையானது அவனது அனுபவத்தின் பிரதிநிதியாக இருக்கிறது. எல்லோரும் தங்கள் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேவனால் சத்தியத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியும், அதே சமயம் மனுஷனால் சத்தியத்தை அனுபவித்ததற்கு ஒத்த அனுபவத்தை மட்டுமே வெளிப்படுத்த முடியும். தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை, மேலும் அந்தக் கிரியையானது காலம் அல்லது நிலம் ஏற்படுத்தும் தடைகளுக்கு உட்பட்டதாக இல்லை. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவரால் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். அவர் விரும்பியபடி கிரியை செய்கிறார். மனுஷனின் கிரியைக்கு நிபந்தனைகளும் சூழலும் இருக்கின்றன; அவை இல்லாமல், அவனால் கிரியை செய்ய இயலாது மற்றும் தேவனைப் பற்றிய அவனது அறிவை அல்லது சத்தியத்தின் அனுபவத்தை அவனால் வெளிப்படுத்த முடியாது. ஒரு விஷயத்தை தேவனின் கிரியை என்றோ அல்லது மனுஷனின் கிரியை என்றோ சொல்ல, இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை நீ ஒப்பிட வேண்டும். தேவனால் செய்யப்பட்ட எந்தக் கிரியையும் இல்லை, மனுஷனின் கிரியை மட்டுமே இருக்கிறது எனில், மனுஷனின் போதனைகள்தான் உயர்ந்தவை என்றும், அவை வேறு யாருடைய திறனுக்கும் அப்பாற்பட்டவை என்றும் நீ வெறுமனே அறிந்து கொள்ளுவாய்; அவர்கள் பேசும் தொனிகளும், விஷயங்களைக் கையாள்வதில் அவர்களின் கொள்கைகளும், கிரியை செய்யும் அனுபவமும் நிலையான முறையும் மற்றவர்களுக்கு எட்டாதவையாக இருக்கின்றன. நல்ல திறமை வாய்ந்த மற்றும் உயர்ந்த அறிவைக் கொண்ட இந்த ஜனங்களை நீங்கள் அனைவரும் பாராட்டுகிறீர்கள், ஆனால் தேவனின் கிரியை மற்றும் வார்த்தைகளிலிருந்து அவருடைய மனுஷத்தன்மையானது எவ்வளவு உயர்ந்தது என்பதை உன்னால் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக, அவர் சாதாரணமானவராக இருக்கிறார், கிரியை செய்யும் போது அவர் இயல்பானவராகவும், உண்மையானவராகவும் இருந்தாலும் மனுஷரால் அளவிடமுடியாதவராக இருக்கிறார், ஆகவே அந்த விஷயமானது ஜனங்களை அவர்மீது ஒருவித பயபக்திகொள்ள வைக்கிறது. ஒரு நபரின் கிரியையில் அவனது அனுபவமானது குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், அல்லது அவனது கற்பனையும் பகுத்தறிவும் குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், மேலும் அவனது மனுஷத்தன்மையும் குறிப்பாக நல்லதாக இருக்கலாம்; இத்தகைய பண்புக்கூறுகளால் ஜனங்களின் போற்றுதலைத்தான் பெற முடியும், ஆனால் அவர்களின் பிரமிப்பையும் பயத்தையும் தூண்டாது. நன்றாகக் கிரியை செய்யக்கூடியவர்களையும், குறிப்பாக ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களையும், சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்களையும் ஜனங்கள் அனைவரும் போற்றுகிறார்கள், ஆனால் அத்தகையவர்களால் ஒருபோதும் பயபக்தியை வெளிப்படுத்த முடியாது, போற்றுதலையும் பொறாமையையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆனால் தேவனின் கிரியையை அனுபவித்தவர்கள் தேவனைப் போற்றுவதில்லை; அதற்குப் பதிலாக, அவருடைய கிரியையானது மனுஷனுக்கு அப்பாற்பட்டது என்றும், மனுஷனுக்குப் புரியாதது என்றும், அது புதியது மற்றும் அற்புதமானது என்றும் அவர்கள் உணர்கிறார்கள். தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது, அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால், அவர் புரிந்துகொள்ளமுடியாதவர், ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவைதான், மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள், அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள், இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவருடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே ஜனங்கள் விரும்புகிறார்கள்; அவர்கள் அவரை மிஞ்ச விரும்புவதில்லை, ஏனென்றால் அவர் செய்யும் கிரியையானது மனுஷனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது, அவருக்குப் பதிலாக மனுஷனால் அதைச் செய்ய முடியாது. மனுஷனுக்குக் கூட தனது குறைபாடுகள் தெரியாது, ஆனாலும் தேவன் ஒரு புதிய பாதையை உருவாக்கி, மனுஷனை ஒரு புதிய மற்றும் அழகான உலகிற்குக் கொண்டு வர வந்திருக்கிறார், எனவே மனுஷகுலமானது புதிய முன்னேற்றத்தை அடைந்து ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கியுள்ளது. தேவனைப் பற்றி ஜனங்கள் உணருவது போற்றுதல் இல்லை, அல்லது அதற்கு மாறாக அது போற்றுதல் மட்டுமில்லை. பயபக்தியும் அன்பும் அவர்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கின்றன; தேவன் உண்மையில் அற்புதமானவர் என்பது அவர்களின் உணர்வாக இருக்கிறது. மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவர் செய்கிறார், மனுஷனால் சொல்ல முடியாத விஷயங்களை அவர் சொல்கிறார். தேவனின் கிரியையை அனுபவித்தவர்களுக்கு எப்போதும் விவரிக்க முடியாத உணர்வு இருக்கும். ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களால் தேவனின் அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது; அவருடைய சௌந்தரியத்தை அவர்களால் உணரமுடிகிறது, அவருடைய கிரியையானது மிகவும் ஞானமானது என்பதையும், மிகவும் அற்புதமானது என்பதையும், அதன் மூலம் எல்லையற்ற வல்லமையானது அவர்கள் மத்தியில் உருவாகிறது என்பதையும் அவர்களால் உணர முடிகிறது. இது பயமோ அல்லது அவ்வப்போது வெளிப்படும் அன்பு மற்றும் மரியாதையோ இல்லை, ஆனால் மனுஷனுக்கான தேவனுடைய இரக்கத்தின் ஆழமான மற்றும் அவனைச் சகித்துக்கொள்ளும் உணர்வு ஆகும். இருப்பினும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த ஜனங்கள் அவருடைய மகத்துவத்தையும் அவர் எந்தக் குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் உணர்கிறார்கள். அவருடைய கிரியையின் பெரும்பகுதியை அனுபவித்தவர்களால் கூட அவரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை; அவரை உண்மையிலேயே வணங்கும் அனைவருக்கும் அவருடைய கிரியையானது ஜனங்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதில்லை என்பதையும், ஆனால் எப்போதும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் அறிவார்கள். ஜனங்கள் அவரை முழுமையாகப் போற்றவேண்டும் என்பதையோ அல்லது அவருக்கு அடிபணிந்த தோற்றத்தை முன்வைக்க வேண்டும் என்பதையோ அவர் எதிர்பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் உண்மையான பயபக்தியையும் உண்மையான கீழ்ப்படிதலையும் அடைய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார். அவருடைய கிரியையில் அதிகபட்சமாக, உண்மையான அனுபவமுள்ள எவரும் அவரை பயபக்தியுடன் வணங்குவதை உணர்கிறார்கள், இது போற்றுதலை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவருடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை காரணமாக ஜனங்கள் அவருடைய மனநிலையைப் பார்த்திருக்கிறார்கள், ஆகவே அவர்கள் அவரை இருதயத்தில் வைத்து வணங்குகிறார்கள். தேவன் வணங்கப்படுவதற்கும் கீழ்ப்படிவதற்கும் உரியவர், ஏனென்றால் அவருடைய இருப்புநிலையும் அவருடைய மனநிலையும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்குச் சமமானவை இல்லை, அதற்கும் மேற்பட்டவையாக இருக்கின்றன. தேவன் தன்னிறைவுள்ளவர், நித்தியமானவர், அவர் சிருஷ்டிக்கப்படாத ஜீவன், மேலும் தேவன் மட்டுமே பயபக்திக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவர்; மனுஷன் இதற்குத் தகுதியற்றவனாக இருக்கிறான். எனவே, அவருடைய கிரியையை அனுபவித்தவர்கள், அவரை உண்மையாக அறிந்தவர்கள் அனைவரும் அவரைப் பயபக்தியுடன் உணர்கிறார்கள். இருப்பினும், அவரைப் பற்றிய தங்கள் கருத்துக்களை விட்டுவிடாதவர்களுக்கு—அவரை தேவனாகக் கருதாதவர்களுக்கு—அவரைப் பற்றி எந்தப் பயபக்தியும் இருப்பதில்லை, அவர்கள் அவரைப் பின்பற்றினாலும், அவர்கள் ஜெயங்கொள்ளப்படுவதில்லை; அவர்கள் இயற்கையாகவே கீழ்ப்படியாத ஜனங்கள் ஆவர். இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் அவர் அடைய விரும்புவது என்னவென்றால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா ஜீவன்களும் சிருஷ்டிகருக்கு மரியாதைக்குரிய இருதயங்களைக் கொண்டிருக்க வேண்டும், அவரை வணங்க வேண்டும், நிபந்தனையின்றி அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் ஆகியவைதான். அவருடைய அனைத்து கிரியைகளும் அடைய வேண்டிய இறுதி முடிவு இதுதான். இதுபோன்ற கிரியையை அனுபவித்தவர்கள் தேவனைச் சிறிதளவு கூட வணங்கவில்லை என்றால், மேலும் அவர்களின் கடந்த கால கீழ்ப்படியாமையானது மாறாவிட்டால், அவர்கள் புறம்பாக்கப்படுவது உறுதி. தேவனுக்கான ஒரு நபரின் அணுகுமுறையானது அவரைப் போற்றுவதோ அல்லது தூரத்திலிருந்தே அவருக்கு மரியாதை செலுத்துவதோ மட்டுமாக இருந்து, அவரைச் சிறிதளவு கூட நேசிப்பதாக இல்லை என்றால், இதுவே தேவன்மீது அன்பு இல்லாத ஒரு நபர் வந்துள்ளதன் விளைவாகும், மேலும் அந்த நபர் பரிபூரணமடைவதற்கான நிபந்தனைகளைக் கொண்டிருப்பதில்லை. இவ்வளவு கிரியைகளாலும் ஒரு நபரின் உண்மையான அன்பைப் பெற முடியாவிட்டால், அந்த நபர் தேவனைப் பெறவில்லை என்றும், சத்தியத்தை உண்மையாகப் பின்தொடரவில்லை என்றும் அர்த்தமாகிறது. தேவனை நேசிக்காதவன் சத்தியத்தை நேசிப்பதில்லை, அதனால் அவனால் தேவனைப் பெற்றுக்கொள்ள முடியாது, தேவனின் அங்கீகாரத்தையும் பெற முடியாது. அத்தகையவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவித்தாலும், அவர்கள் நியாயத்தீர்ப்பை அனுபவித்தாலும், அவர்களால் தேவனை வணங்க முடிவதில்லை. இவர்களின் சுபாவம் மாறாததாக இருக்கிறது, மேலும் மிகவும் பொல்லாத மனநிலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனை வணங்காத அனைவருமே புறம்பாக்கப்பட வேண்டும், தண்டனைக்குரிய பொருள்களாக இருக்க வேண்டும், பொல்லாப்பு செய்பவர்களைப் போலவே தண்டிக்கப்பட வேண்டும், அநீதியான காரியங்களைச் செய்தவர்களைக் காட்டிலும் அதிகமாகத் துன்பப்பட வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 182

எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய கிரியை மனுஷக் கிரியையில் இருந்து வேறுபட்டது, மேலும் அவரது வெளிப்பாடுகள் அவர்களுடையது போல் எப்படி இருக்க முடியும்? தேவனுக்கு அவருக்கே உரிய மனநிலை உள்ளது, அதே சமயம் மனுஷனுக்கோ அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. தேவனுடைய மனநிலை அவருடைய கிரியையில் வெளிப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் மனுஷனுடைய கடமைகள் மனுஷனுடைய அனுபவங்களில் உள்ளடங்கியுள்ளன மற்றும் அவை அவனது பின் தொடர்தலில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே ஏதோ ஒன்று தேவனுடைய வெளிப்பாடா அல்லது மனுஷனுடைய வெளிப்பாடா என்பது செய்யப்படுகிற கிரியை மூலம் தெளிவாகிறது. அது தேவனாலேயே விளக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை அல்லது அதற்குச் சாட்சி கொடுக்க மனுஷன் முயற்சி செய்யவேண்டியதும் இல்லை; மேலும் தேவன் தாமே எந்த நபரையும் ஒடுக்கவும் தேவை இல்லை. இவை எல்லாம் இயற்கையான வெளிப்படாக வருகின்றன; அது வலுக்கட்டாயமானதோ அல்லது மனுஷனால் தலையிடக் கூடியதோ அல்ல. மனுஷனுடைய கடமை அவர்களது அனுபவங்கள் மூலம் அறியப்படும், மேலும் ஜனங்கள் கூடுதலாக எந்த ஓர் அனுபவ கிரியைகளையும் செய்யவேண்டிய அவசியமும் இல்லை. மனுஷனின் அனைத்துச் சாராம்சமும் அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது வெளிப்படுத்தப்படலாம். அதே நேரத்தில், தேவன் தமது கிரியையைச் செய்யும்போது தமது உள்ளார்ந்த மனநிலையை வெளிப்படுத்தலாம். அது மனுஷனின் கிரியையாக இருந்தால் அதை மறைக்க முடியாது. அது தேவனின் கிரியையாக இருந்தால், தேவனுடைய மனநிலையை யாராலும் இன்னும் அதிகமாக மறைக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் மனுஷனால் கட்டுப்படுத்தவும் முடியாது. எந்த ஒரு மனுஷனையும் தேவன் என்று கூறமுடியாது, அல்லது அவர்களுடைய கிரியை மற்றும் வார்த்தைகளைப் பரிசுத்தமானதாகப் பார்க்கமுடியாது அல்லது மாற்றமுடியாதது என்று கருத முடியாது. தேவன் தமக்கு மாம்சத்தை அணிந்து கொண்டதால் அவரை மனுஷன் என்று கூற முடியுமே தவிர அவரது கிரியையை மனுஷனுடைய கிரியை அல்லது கடமை என்று கூற முடியாது. மேலும், தேவனுடைய பேச்சுக்களையும் பவுலுடைய நிருபங்களையும் சமமாகக் கருத முடியாது, அல்லது தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மற்றும் மனுஷனுடைய அறிவுறுத்தும் வார்த்தை ஆகியவற்றை ஒரே விதத்தில் வைத்துப் பேச முடியாது. ஆகையால், தேவனுடைய கிரியையை மனுஷனுடைய கிரியையில் இருந்து வேறுபடுத்தும் கொள்கைகள் இருக்கின்றன. இவை கிரியையின் நோக்கம் அல்லது அதன் தற்காலிகத் திறனை வைத்தல்லாமல் அவற்றின் சாரத்தின்படி வேறுபடுத்தப்படுகின்றன. இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ஜனங்கள் கொள்கைத் தவறுகளைச் செய்கின்றனர். இது ஏனென்றால் மனுஷன் தன்னால் அடையக் கூடிய வெளிப்புறத்தைப் பார்க்கிறான், ஆனால் மனுக்குலத்தின் புறக்கண்களால் கவனிக்க முடியாத சாராம்சத்தையே தேவன் பார்க்கிறார். நீ தேவனுடைய வார்த்தைகளையும் கிரியைகளையும் ஒரு சராசரி மனுஷனின் கடமைகளாகக் கருதி, மனுஷனுடைய பெரிய அளவிலான கிரியையை மனிதன் நிறைவேற்றும் கடமையாக இல்லாமல் அதற்கு மாறாக மாம்சத்தை அணிந்த தேவனின் கிரியையாகப் பார்த்தால், நீ கொள்கை அளவில் தவறுசெய்யவில்லையா? மனுஷனுடைய நிருபங்களையும் சுயவரலாற்றையும் எளிதாக எழுதிவிடலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகிய அஸ்திவாரத்தின் மேல்தான் எழுதமுடியும். இருப்பினும், தேவனுடைய பேச்சுக்களையும் கிரியையையும் மனுஷனால் எளிதில் நிறைவேற்ற முடியாது அல்லது மனித ஞானத்தாலும் சிந்தனையாலும் அடைய முடியாது மற்றும் அவற்றை ஆராய்ந்து ஜனங்களால் முற்றிலுமாக விளக்க முடியாது. கொள்கை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்குள் எந்த ஓர் எதிர்வினையையும் எழுப்பவில்லையென்றால், உங்கள் விசுவாசம் மிக உண்மையானதும் புடமிடப்பட்டதும் அல்ல என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உங்கள் விசுவாசம் முற்றிலும் தெளிவற்றதோடு குழப்பமானதும் கொள்கையற்றதுமானதாக உள்ளது. தேவன் மற்றும் மனுஷனைப் பற்றிய மிகவும் அடிப்படையான முக்கியப் பிரச்சினைகளைக் கூட புரிந்துகொள்ளாமல் இருக்கும் இந்த வகையான விசுவாசம் முற்றிலுமாக உள்ளுணர்வு அற்றது இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பதின்மூன்று நிருபங்களைப் பொறுத்தவரையில் உன் நிலைப்பாடு என்ன?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 183

இயேசு முப்பத்து மூன்றரை ஆண்டுகளாக பூமியில் இருந்தார், சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்யவே அவர் வந்தார். மேலும் சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் தேவன் தம்முடைய மகிமையின் ஒரு பகுதியைப் பெற்றார். தேவன் மாம்சத்தில் வந்தபோது, அவர் மனத்தாழ்மையுடனும் மறைவாகவும் இருக்க முடிந்தது மற்றும் மிகுந்த துன்பங்களையும் தாங்க முடிந்தது. அவர் தேவனாக இருந்தபோதிலும், ஒவ்வொரு அவமானத்தையும் ஒவ்வொரு அவதூறையும் அவர் சகித்துக்கொண்டார். மீட்பின் கிரியையை முடிக்க சிலுவையில் அறையப்பட்டதில் மிகுந்த வேதனையை அவர் சகித்தார். இந்தக் கட்ட கிரியை முடிந்தபின், தேவன் மிகுந்த மகிமையைப் பெற்றார் என்பதை ஜனங்கள் கண்டாலும், அது அவருடைய முழுமையான மகிமையாக இருக்கவில்லை; அது அவர் இயேசுவிடம் இருந்து பெற்ற அவருடைய மகிமையின் ஒரே ஒரு பகுதி மட்டுமே. இயேசுவால் ஒவ்வொரு கஷ்டத்தையும் சகித்துக்கொள்ளவும், தாழ்மையாகவும், மறைவாகவும், தேவனுக்காக சிலுவையில் அறையப்படவும் முடிந்தது என்றாலும், தேவன் தம்முடைய மகிமையின் ஒரு பகுதியை மட்டுமே பெற்றார், மற்றும் அவருடைய மகிமை இஸ்ரவேலில் பெறப்பட்டது. தேவனுக்கு மகிமையின் இன்னொரு பகுதி உள்ளது: அது, நடைமுறையில் கிரியை செய்வதற்கும் ஒரு ஜனக்கூட்டத்தைப் பரிபூரணமாக்குவதற்கும் அவர் பூமிக்கு வருவதாகும். இயேசுவின் கிரியையின் கட்டத்தின்போது சில இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்தார். ஆனால் அந்தக் கிரியை அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைச் செய்வதற்காக மட்டுமே செய்யப்பட்டதல்ல. இயேசு தேவனை நேசித்ததால் பாடுகள் படவும், தேவனுக்காக சிலுவையில் அறையப்படவும் முடிந்தது என்பதையும், மிகுந்த வேதனையை அனுபவிக்க முடிந்தது என்பதையும், தேவன் அவரைக் கைவிட்டாலும், தேவனுடைய சித்தத்திற்காக தம் உயிரைத் தியாகம் செய்ய அவர் இன்னும் தயாராக இருக்கிறார் என்பதையும் முதன்மையாகக் காட்டியது. தேவன் இஸ்ரவேலில் தமது கிரியையை முடித்தபின், இயேசு சிலுவையில் அறையப்பட்டபின், தேவன் மகிமை அடைந்தார், மற்றும் அவர் சாத்தானுக்கு முன்பாக சாட்சியளித்தார். சீனாவில் தேவன் எப்படி மாம்சமாகியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்ததுமில்லை, பார்த்ததுமில்லை, ஆகையால் தேவன் மகிமையை அடைந்திருப்பதை உங்களால் எவ்வாறு பார்க்க முடியும்? தேவன் உங்களுக்குள் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்யும்போது, நீங்கள் உறுதியாக நிற்கும்போது, தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டம் ஜெயமாக இருக்கிறது. இது தேவனுடைய மகிமையின் ஒரு பகுதியாகும். நீங்கள் இதை மட்டுமே பார்க்கிறீர்கள், நீங்கள் இன்னும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை. உங்கள் இருதயத்தை முழுவதுமாக தேவனுக்குக் கொடுக்கவில்லை. இந்த மகிமையை நீங்கள் இன்னும் முழுவதுமாகக் காணவில்லை. தேவன் ஏற்கனவே உங்கள் இருதயத்தை ஜெயங்கொண்டுள்ளார் என்பதையும், உங்களால் ஒருபோதும் அவரை விட்டு விலக முடியாது என்பதையும், தேவனை நீங்கள் இறுதிவரை பின்பற்றுவீர்கள் என்பதையும், உங்கள் இருதயம் மாறாது என்பதையும், இது தேவனுடைய மகிமை என்பதையும் மட்டுமே நீங்கள் காண்கிறீர்கள். தேவனுடைய மகிமையை நீங்கள் எதில் காண்கிறீர்கள்? ஜனங்களிடம் காணப்படும் அவருடைய கிரியையின் விளைவுகளில் காண்கிறீர்கள். தேவன் மிகவும் அழகானவர். ஜனங்கள் தங்கள் இருதயத்தில் தேவனைக் கொண்டுள்ளார்கள். அவரை விட்டுவிட விரும்பவில்லை. இது தேவனுடைய மகிமையாகும். திருச்சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் பெலன் பெருகும்போது, அவர்களால் தங்கள் இருதயத்திலிருந்து தேவனை நேசிக்க முடியும், தேவன் செய்த கிரியையின் மிக உயர்ந்த வல்லமையைப் பார்க்க முடியும், அவருடைய வார்த்தைகளின் ஒப்பற்ற வல்லமையையும், அவருடைய வார்த்தைகள் அதிகாரம் கொண்டவை என்பதையும் காணும் போது சீன நிலப்பரப்பின் ஆவி நகரத்தில் அவர் தமது கிரியையைத் தொடங்க முடியும். ஜனங்கள் பலவீனமாக இருந்தாலும், அவர்களுடைய இருதயங்கள் தேவனுக்கு முன்பாக வணங்குகின்றன மற்றும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், மற்றும் அவர்கள் பலவீனர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகள் மிகவும் அன்பானவை என்பதையும், அவற்றின் நேசத்திற்கு அவர்கள் மிகவும் தகுதியானவர்கள் என்பதையும் அவர்களால் காண முடியும். இது தேவனுடைய மகிமையாகும். ஜனங்கள் தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு, அவருக்கு முன்பாக சரணடையும் மற்றும் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் நாள் வரும் போது, அவர்களுடைய வாய்ப்புகளையும் தலைவிதியையும் தேவனுடைய கைகளில் விட்டுவிடக்கூடிய நாள் வரும் போது, தேவனுடைய மகிமையின் இரண்டாம் பகுதி முழுவதுமாக அடையப்பட்டிருக்கும். அதாவது, நடைமுறை தேவனுடைய கிரியை முழுவதுமாக முடிந்ததும், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் அவரது கிரியை முடிவுக்கு வரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனால் முன்குறிக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் பரிபூரணப்படுத்தப்படும்போது, தேவன் மகிமையை அடைந்திருப்பார். தேவன் தமது மகிமையின் இரண்டாம் பகுதியை கிழக்கிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார். ஆனால் அது மனிதக் கண்ணுக்குத் தெரியவில்லை. தேவன் தமது கிரியையை கிழக்கிற்குக் கொண்டு வந்துள்ளார். அவர் ஏற்கனவே கிழக்குக்கு வந்துவிட்டார். இது தேவனுடைய மகிமையாகும். இன்று, அவருடைய கிரியை இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், தேவன் கிரியை செய்ய முடிவு செய்திருப்பதால், அது நிச்சயமாக நிறைவேறும். சீனாவில் இந்தக் கிரியையை நிறைவேற்றப் போவதாக தேவன் முடிவு செய்துள்ளார். உங்களைப் பரிபூரணப்படுத்த அவர் தீர்மானித்துள்ளார். ஆகவே, அவர் உங்களுக்கு எந்த வழியையும் கொடுக்கவில்லை—அவர் ஏற்கனவே உங்கள் இருதயங்களை ஜெயங்கொண்டிருக்கிறார், மற்றும் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீ தொடர்ந்து செயல்பட வேண்டும், தேவன் உங்களை ஆதாயம் செய்யும்போது, தேவன் மகிமை அடைகிறார். இன்று, தேவன் இன்னும் முழு மகிமையையும் அடையவில்லை, ஏனென்றால், நீங்கள் இன்னும் பரிபூரணமாக்கப்படவில்லை. உங்கள் இருதயங்கள் தேவனிடம் திரும்பியிருந்தாலும், உங்கள் மாம்சத்தில் இன்னும் பல பலவீனங்கள் உள்ளன, உங்களால் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது, தேவனுடைய சித்தத்தை உங்களால் கவனத்தில் கொள்ள முடியாது. உங்களை விட்டு விலக்கி வைக்க வேண்டிய பல எதிர்மறையான விஷயங்களை நீங்கள் இன்னும் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் பல சோதனைகள் மற்றும் சுத்திகரிப்புகளுக்கு உட்பட வேண்டும். அவ்விதத்தில் மட்டுமே உங்களுடைய ஜீவித மனநிலைகளால் மாற்றம் பெற முடியும் மற்றும் நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படவும் முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “‘ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது’ என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பேச்சு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 184

அந்த நேரத்தில், எல்லா மனுஷரையும் மீட்பதற்கான கிரியையாக இயேசுவின் கிரியை இருந்தது. அவரை விசுவாசித்த அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன; நீ அவரை விசுவாசித்த வரை, அவர் உன்னை இரட்சித்தார்; நீ அவரை விசுவாசித்தால், இனிமேல் உனக்குள் பாவம் இருக்காது, நீ உன் பாவங்களிலிருந்து விடுபட்டுவிட்டாய் என்று அர்த்தம். இதுதான் இரட்சிக்கப்படுவதையும், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கிறது. ஆயினும், விசுவாசித்தவர்களில், கலகக்காரர்களும், தேவனை எதிர்ப்பவர்களும் இருந்தார்கள். அவர்களையும் மெதுவாக அகற்ற வேண்டியதிருந்தது. இரட்சிப்பு என்பதற்கு மனுஷன் இயேசுவினால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட்டான் என்று அர்த்தமல்ல, ஆனால் அந்த மனுஷனிடம் இனி பாவமில்லை என்றும், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும் அர்த்தமாகிறது. நீ விசுவாசித்தால், இனி நீ ஒருபோதும் பாவம் செய்தவனாக இருக்கமாட்டாய். அந்த நேரத்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார், ஜனங்களுக்குப் புரியாத பலவற்றை அதிகம் கூறினார். ஏனென்றால், அந்த நேரத்தில் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, அவர் புறப்பட்டுச் சென்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தேயு இயேசுவுக்கு ஒரு வம்ச அட்டவணையை உருவாக்கினார், மற்றவர்களும் மனுஷனின் சித்தத்திற்கு ஏற்ற பல கிரியைகளைச் செய்தனர். இயேசு மனுஷனைப் பரிபூரணமாக்கவும், அவனை ஆதாயப்படுத்தவும் வரவில்லை, ஆனால் கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்ய வந்தார், அவை: பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் கொண்டு வருவதும், சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை முடிப்பதும் ஆகும். ஆகவே, இயேசு சிலுவையில் அறையப்பட்டவுடன், அவருடைய கிரியை முழுமையாக முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போதைய கட்டத்தில்—ஜெயங்கொள்வதற்கான கிரியையில்—அதிக வார்த்தைகள் பேசப்பட வேண்டும், அதிகக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் பல செயல்முறைகளும் இருக்க வேண்டும். ஆக இயேசு மற்றும் யேகோவாவின் கிரியையின் மறைபொருட்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும், இதன்மூலம் எல்லா ஜனங்களும் தங்கள் விசுவாசத்தில் புரிதலும் தெளிவும் பெறுவர். ஏனென்றால் இது கடைசிக் காலத்தின் கிரியை, கடைசிக் காலம் என்பது தேவனுடைய கிரியையின் முடிவு, கிரியை முடிவடையும் நேரம். கிரியையின் இந்தக் கட்டம் யேகோவாவின் நியாயப்பிரமாணத்தையும் இயேசுவின் மீட்பையும் உனக்குத் தெளிவுபடுத்துகிறது, மேலும் இது தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் முழு கிரியையையும் நீ புரிந்துகொள்வதற்கும், இதன் அனைத்து முக்கியத்துவத்தையும் சாராம்சத்தையும் புரிந்துகொள்ளவும் உனக்கு உதவுகிறது. அதுமட்டுமன்றி, இயேசு செய்த அனைத்துக் கிரியைகளின் நோக்கத்தையும் அவர் பேசிய வார்த்தைகளையும் நீ புரிந்து கொள்ளவும், மேலும் வேதாகமத்தின் மீதுள்ள உன் குருட்டு விசுவாசத்தையும் வணக்கத்தையும் புரிந்து கொள்ளவும் இந்தக் கிரியை உதவுகிறது. இவை அனைத்தையும் நீ முழுமையாகப் புரிந்துகொள்ள இது உனக்கு உதவும். இயேசு செய்த கிரியையையும், தேவனின் இன்றைய கிரியையையும் நீ புரிந்துகொள்வாய்; சத்தியம், ஜீவன் மற்றும் வழி ஆகிய அனைத்தையும் நீ புரிந்துகொள்வாய் மற்றும் காண்பாய். இயேசு செய்த கிரியையின் கட்டத்தில், முடித்துவைப்பதற்கான கிரியையைச் செய்யாமல் இயேசு ஏன் புறப்பட்டுச் சென்றார்? ஏனென்றால், இயேசுவினுடைய கிரியையின் கட்டம் முடித்துவைப்பதற்கான கிரியை அல்ல. அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய வார்த்தைகளும் முடிவுக்கு வந்தன; அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவருடைய கிரியை முழுமையாக நிறைவுபெற்றது. தற்போதைய கட்டம் வேறுபட்டது: வார்த்தைகள் இறுதிவரை பேசப்பட்டு, தேவனின் கிரியை முழுவதும் முடிந்த பின்னரே அவருடைய கிரியை நிறைவுபெறும். இயேசுவினுடைய கிரியையின் போது, பல வார்த்தைகள் சொல்லப்படாமல் இருந்தன, அல்லது அவை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும், இயேசு அவர் என்ன செய்தார் அல்லது எதைச் சொல்லவில்லை என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அவருடைய ஊழியம் வார்த்தைகளின் ஊழியம் அல்ல, ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். கிரியையின் அந்தக் கட்டம் முக்கியமாக சிலுவையில் அறையப்படுவதற்காகவே இருந்தது, அது தற்போதைய கட்டத்தைப் போன்றது அல்ல. கிரியையின் தற்போதைய கட்டமானது நிறைவு செய்வதற்கும், சுத்திகரிப்பதற்கும், மற்றும் அனைத்துக் கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. வார்த்தைகள் அவற்றின் இறுதிவரை பேசப்படாவிட்டால், இந்தக் கிரியையை முடிக்க எந்த வழியும் இருக்காது, ஏனென்றால் கிரியையின் இந்தக் கட்டத்தில் அனைத்துக் கிரியைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில், இயேசு மனுஷனுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார். அவர் அமைதியாகப் புறப்பட்டுச் சென்றார், இன்றும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் அநேகர் இருக்கிறார்கள், அவர்களது புரிதல் பிழையானது, ஆனால் அது சரியானதுதான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், தவறு செய்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முடிவில், இறுதிக் கட்டம் தேவனின் கிரியையை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவரும், மேலும் அதன் நிறைவையும் வழங்கும். தேவனின் ஆளுகைத் திட்டத்தை அனைவரும் புரிந்துகொண்டு அறிந்து கொள்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் கருத்துக்கள், அவனுடைய நோக்கங்கள், தவறான மற்றும் மூடத்தனமான புரிதல், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய அவனது கருத்துக்கள், புறஜாதியாரைப் பற்றிய அவனது கருத்துக்கள் மற்றும் அவனது பிற விலகிச் செல்லுதல்கள் மற்றும் பிழைகள் சரிசெய்யப்படும். மனுஷன், ஜீவிதத்தின் சரியான பாதைகள் அனைத்தையும், தேவனால் செய்யப்பட்ட எல்லாக் கிரியைகளையும், முழு சத்தியத்தையும் புரிந்துகொள்வான். அது நிகழும்போது, கிரியையின் இந்தக் கட்டம் நிறைவுக்கு வரும். உலகத்தைப் படைப்பது யேகோவாவின் கிரியையாக இருந்தது, அது ஆதியாக இருந்தது; கிரியையின் இந்தக் கட்டமானது கிரியையின் முடிவாகவும், இதுவே இறுதியானதாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில், தேவனின் கிரியை இஸ்ரவேலின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது, மேலும் அது எல்லா இடங்களிலும் மிகவும் பரிசுத்தமான ஒரு புதிய யுகத்தின் விடியலாக இருந்தது. உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கும், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்துத் தேசங்களிலும் மிகவும் தூய்மையற்ற நிலையில் கடைசிக் கட்டக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டத்தில், தேவனின் கிரியை எல்லா இடங்களைக் காட்டிலும் பிரகாசமான இடத்தில் மேற்கொள்ளப்பட்டது, கடைசிக் கட்டத்தில் எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமான இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இந்த அந்தகாரம் வெளியேற்றப்படும், வெளிச்சம் உள்ளே கொண்டுவரப்படும், ஜனங்கள் அனைவரும் ஜெயங்கொள்ளப்படுவர். எல்லா இடங்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையற்ற மற்றும் அந்தகார இடத்தைச் சேர்ந்த இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதும், மெய்யான தேவன் என்று ஒரு தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதும், ஒவ்வொருவரும் முற்றிலும் நம்பியதும், ஜெயங்கொள்ளுவதற்கான கிரியையை பிரபஞ்சம் முழுவதும் செயல்படுத்த இந்த உண்மை பயன்படுத்தப்படும். கிரியையின் இந்தக் கட்டம் ஒரு அடையாளமாகும்: இந்த யுகத்தின் கிரியைகள் முடிந்ததும், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகையின் கிரியை முழுமையாக நிறைவுபெறும். எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமாக இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவுடன், அது மற்ற எல்லா இடங்களிலும் இருக்கும் என்று சொல்லாமல் போகிறது. எனவே, ஜெயங்கொள்ளப்படுவதற்கான கிரியை சீனாவில் மட்டுமே அர்த்தமுள்ள அடையாளத்தைக் கொண்டுள்ளது. சீனா அந்தகாரத்தின் அனைத்து வல்லமைகளையும் உள்ளடக்குகிறது, மேலும் சீன ஜனங்கள் சாத்தானின் மாம்சமாக இருப்பவர்களையும், மாம்சமும் இரத்தமுமாக இருக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் மிகவும் சீர்கெட்டுப்போன சீன ஜனங்கள்தான், தேவனுக்கு எதிரான வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர், அவர்களின் மனுஷத்தன்மை மிகவும் கீழ்த்தரமானது மற்றும் தூய்மையற்றது, எனவே அவர்கள்தான் சீர்கெட்டுப்போன முழு மனுஷகுலத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இதனால் மற்ற தேசங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியாது; மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை, இந்தத் தேசங்களின் ஜனங்கள் நல்ல திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தேவனை அறியாவிட்டால், அவர்கள் அவரை எதிர்ப்பதாகவே இருக்கக் கூடும். யூதர்களும் எதற்காக தேவனை எதிர்த்தார்கள், எதற்காக அவரை மீறினார்கள்? பரிசேயர்களும் ஏன் அவரை எதிர்த்தார்கள்? யூதாஸ் ஏன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்? அந்த நேரத்தில், சீஷர்களில் பலருக்கு இயேசுவை தெரியாது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த பின்பும் ஜனங்கள் ஏன் அவரை நம்பவில்லை? மனுஷனின் கீழ்ப்படியாமை அனைத்தும் ஒன்றுபோல் இல்லையா? சீன ஜனங்கள் எடுத்துக்காட்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் ஜெயங்கொள்ளப்படும்போது, மாதிரிகளாகவும் விளக்கமாதிரிகளாகவும் மாறுகிறார்கள், மேலும் மற்றவர்களுக்கான சான்றாதாரங்களாக இருப்பார்கள். எனது ஆளுகைத் திட்டத்திற்கு நீங்கள் ஒரு துணைப்பொருள் என்று நான் ஏன் எப்போதும் கூறிவந்தேன்? சீர்கேடு, தூய்மையற்ற தன்மை, அநீதி, எதிர்ப்பு, கலகம் ஆகியவை சீன ஜனங்களில் தான் முழுமையாக வெளிக்காட்டப்பட்டு அவற்றின் அனைத்து மாறுபட்ட வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறம், அவர்கள் மோசமான திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர், மறுபுறம், அவர்களின் ஜீவிதங்களும் மனநிலையும் பின்தங்கியவையாக இருக்கின்றன, மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள், சமூகச் சூழல், பிறந்த குடும்பம் அனைத்துமே மோசமாக மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அவர்களின் அந்தஸ்தும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இடத்திலுள்ள கிரியை அடையாளமாக இருக்கிறது, மேலும் இந்தச் சோதனைக் கிரியை முழுவதுமாக மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேவனின் அடுத்தடுத்தக் கிரியைகள் மிகச் சிறப்பாகச் செயல்படும். கிரியையின் இந்தக் கட்டம் நிறைவடைந்தால், அடுத்தடுத்தக் கிரியைகள் எளிதாக இருக்கும். கிரியையின் இந்தக் கட்டம் முடிந்தவுடன், மகத்தான ஜெயம் முழுமையாகக் கிடைக்கும், மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் ஜெயங்கொள்வதற்கான கிரியை முழுமையான முடிவுக்கு வந்திருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 185

இப்போது மோவாபின் சந்ததியாரிடம் கிரியை செய்வது என்பது மாபெரும் இருளுக்குள் விழுந்தவர்களை இரட்சிப்பதற்காகவே. அவர்கள் சபிக்கப்பட்டிருந்தாலும், தேவன் அவர்களிடம் இருந்து மகிமையைப் பெற விருப்பமுள்ளவராக இருக்கிறார், ஏனெனில் முதன் முதலில் அந்த ஜனங்கள் அனைவரின் இருதயங்களிலும் தேவன் இல்லாமல் இருந்தார்; தேவனை தங்கள் இருதயங்களில் கொண்டிராதவர்களை அவருக்குக் கீழ்ப்படிந்து அவரில் அன்புகூருகிறவர்களாக மாற்றுது மட்டுமே உண்மையில் ஜெயங்கொள்ளுதல், மேலும் அத்தகையக் கிரியையின் பலனே மிகவும் மதிப்புள்ளதும் திருப்திகரமானதாகவும் இருக்கும். மகிமையை அடைவது என்பது இதுவே—கடைசி நாட்களில் தேவன் அடைய விரும்பும் மகிமையும் இதுவே. இந்த ஜனங்கள் கீழான நிலையில் உள்ளவர்களாக இருந்தாலும், இப்போது அவர்களால் இத்தகைய மாபெரும் இரட்சிப்பை அடைய முடியும் என்பது உண்மையில் தேவனால் கிடைக்கும் உயர்வேயாகும். இந்தக் கிரியை மிகவும் அர்த்தமுள்ளது, மேலும் நியாயத்தீர்ப்பின் மூலமே அவர் இந்த ஜனங்களைப் பெறுகிறார். இந்த ஜனங்களைத் தண்டிப்பது அவர் நோக்கமல்ல, ஆனால் அவர்களை இரட்சிப்பதேஆகும். கடைசி நாட்களில் அவர் இன்னும் இஸ்ரவேலில் ஜெயங்கொள்ளும் கிரியையை செய்துகொண்டிருந்தால், அது பயனற்றதாக இருக்கும்; அதற்குப் பலன் கிடைத்தாலும் கூட, அதற்கு மதிப்போ அல்லது எந்தவொரு பெரிய முக்கியத்துவமோ இருக்காது, மேலும் அவரால் முழு மகிமையை அடைய முடியாது. மிகவும் இருளான இடங்களில் விழுந்தவர்களான, மிகவும் பின்தங்கி இருப்பவர்களான, உங்களிடம் அவர் கிரியை செய்கிறார். இந்த ஜனங்கள் ஒரு தேவன் இருக்கிறார் என்று அங்கீகரிக்கவில்லை மேலும் ஒரு தேவன் இருக்கிறார் என்று ஒருபோதும் அறிந்திருக்கவும் இல்லை. இந்த சிருஷ்டிகளை சாத்தான் மிகவும் சீர்கெடுத்துவிட்டதால் அவர்கள் தேவனை மறந்துவிட்டார்கள். அவர்களை சாத்தான் குருடாக்கிவிட்டதால் பரலோகத்தில் ஒரு தேவன் இருக்கிறார் என்பதை அவர்கள் சிறிதளவும் அறியவேயில்லை. உங்கள் இருதயங்களில் நீங்கள் எல்லாரும் விக்கிரகங்களை ஆராதிக்கிறீர்கள் மேலும் சாத்தானை ஆராதிக்கிறீர்கள்—நீங்கள் மிகவும் கீழானவர்கள், ஜனங்களில் மிகவும் பின்தங்கியவர்கள் அல்லவா? நீங்கள் எந்த ஒரு தனிப்பட்ட சுதந்திரமும் அற்ற, கீழான மாம்சங்கள், மேலும் நீங்கள் துன்பங்களையும் அனுபவிக்கிறீர்கள். விசுவாசிக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் இந்தச் சமூகத்தின் கீழான நிலையில் இருக்கும் ஜனங்களும் நீங்களே. உங்களிடம் கிரியை செய்வதன் முக்கியத்துவம் இதில்தான் அடங்கியுள்ளது. மோவாபின் சந்ததியாரான உங்களிடத்தில் கிரியை செய்வது உங்களை அவமானப்படுத்துவதற்கு அல்ல, ஆனால் கிரியையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவே. இது உங்களுக்கு ஒரு மாபெரும் உயர்வு. ஒரு நபருக்கு அறிதிறனும் உள்ளுணர்வும் இருந்தால் அவன் கூறுவான்: “நான் மோவாபின் சந்ததி, தேவனால் இத்தகையப் பெரும் உயர்வை, அல்லது இத்தகைய பெரும் ஆசீர்வாதங்களை இன்றைக்குப் பெறுவதற்கு உண்மையிலேயே தகுதியற்றவன். நான் செய்கிற மற்றும் சொல்கிற எல்லாவற்றிலும், எனது நிலை மற்றும் மதிப்பைப் பொறுத்தவரையிலும், இத்தகைய பெரும் ஆசிர்வாதங்களை தேவனிடம் இருந்து பெறுவதற்கு நான் தகுதியுள்ளவனே அல்ல. இஸ்ரவேலர்களுக்கு தேவனிடத்தில் பெரும் அன்பு உண்டு, அவர்கள் அனுபவித்து வரும் கிருபை அவரால் அவர்களுக்கு அருளப்பட்டது, ஆனால் அவர்களது நிலை நம்மை விட மிகவும் உயர்வானதாக இருக்கிறது. ஆபிரகாம் தேவனிடத்தில் மிகவும் பயபக்தியுள்ளவனாக இருந்தான், மேலும் பேதுரு இயேசுவிடம் பயபக்தியுள்ளவனாக இருந்தான்—அவர்களது பயபக்தி நம்மை விட ஒரு நுறு மடங்கு அதிகமானது ஆகும். நம்முடைய செய்கைகளின் அடிப்படையில், தேவனுடைய கிருபையை அனுபவிக்க நாம் முழுமையாகத் தகுதியற்றவர்கள்.” சீனாவில் இருக்கும் இந்த ஜனங்களின் சேவைகளை தேவனுக்கு முன்பாக கொண்டுவரவே முடியாது. அது முற்றிலும் தாறுமாறாகக் கிடக்கிறது; இப்போது நீ அனுபவிக்கும் மிக அதிக அளவிலான கிருபை தேவன் உன்னை உயர்த்தியதால் மட்டுமே! தேவனுடைய கிரியையை எப்போது நீ நாடினாய்? எப்போது நீ உன் ஜீவனை தேவனுக்காகத் தியாகம் செய்தாய்? எப்போது நீ உன் குடும்பம், உன் பெற்றோர், மற்றும் உன் குழந்தைகளை மனமார விட்டுக்கொடுத்தாய்? உங்களில் ஒருவனும் ஒரு பெரிய கிரயத்தைக் கொடுக்கவில்லையே! பரிசுத்த ஆவியானவர் உன்னை வெளியே கொண்டுவரவில்லையானால், உங்களில் எத்தனை பேரால் எல்லாவற்றையும் தியாகம் செய்திருக்க முடியும்? பலவந்தத்தாலும் வலுக்கட்டாயத்தாலும் மட்டுமே நீங்கள் இன்றுவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் பயபக்தி எங்கே? உங்கள் கீழ்ப்படிதல் எங்கே? உங்கள் செய்கையின் அடிப்படையில், நீங்கள் வெகுகாலத்துக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்க வேண்டும்—நீங்கள் யாவரும் சுத்தமாகத் துடைத்தழிக்கப் பட்டிருப்பீர்கள். இத்தகைய பெரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களைத் தகுதிப்படுத்துவது எது? நீங்கள் கொஞ்சம் கூடத் தகுதியற்றவர்கள்! உங்களில் யார் தங்கள் சொந்தப் பாதையை உருவாக்கி வெற்றியடைந்தீர்கள்? உங்களுக்குள் யார் சத்திய வழியைத் தாங்களாகவே கண்டுபிடித்திருக்கிறார்கள்? நீங்கள் எல்லோரும் சோம்பேறித்தனமான, பெருந்தீனிக்கார, வசதி நாடும் கேவலமானவர்கள்! நீங்கள் பெரியவர்கள் என்று நினைக்கிறீர்களா? தற்பெருமையடித்துக்கொள்ள உங்களிடம் என்ன இருக்கிறது? நீங்கள் மோவாபின் சந்தியார் என்பதைப் புறக்கணித்துவிட்டாலும் கூட, உங்கள் சுபாவம் அல்லது உங்கள் பிறப்பிடம் மிக உயர்ந்த வகையானதா? நீங்கள் அவனுடைய சந்ததியார் என்பதை அலட்சியப்படுத்தினாலும், நீங்கள் எல்லோரும் முற்றிலுமாக மோவாபின் சந்ததிகள் அல்லவா? நிகழ்வுகளின் உண்மைகளை மாற்ற முடியுமா? இப்போது உங்கள் சுபாவத்தை வெளிப்படுத்துவது நிகழ்வுகளின் உண்மைகளைத் தவறாக சித்தரிக்குமா? உங்கள் அடிமைத்தனம், உங்கள் ஜீவிதங்கள், மற்றும் உங்கள் நடத்தைகளை நோக்கிப் பாருங்கள்—மனுக்குலத்தின் மத்தியில் நீங்கள்தான் கீழானவர்களிலும் கீழானவர்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? தற்பெருமை பேச உங்களிடம் என்ன இருக்கிறது? சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் நிலையை நோக்கிப் பாருங்கள். நீங்கள் அதன் கீழ் மட்டத்தில் இருக்கிறீர்கள் இல்லையா? நான் தவறாகப் பேசிவிட்டேன் என்று நீங்கள் நினக்கிறீர்களா? ஆபிரகாம் ஈசாக்கைக் காணிக்கையாகக் கொடுத்தான்—நீங்கள் என்ன காணிக்கை கொடுத்தீர்கள்? யோபு எல்லாவற்றையும் கொடுத்தான்—நீங்கள் என்ன கொடுத்தீர்கள்? சத்திய வழியைத் தேடுவதற்காகப் பல ஜனங்கள் தங்கள் ஜீவனைக் கொடுத்திருக்கிறார்கள், தங்கள் தலையை கொடுத்திருக்கிறார்கள், தங்கள் இரத்தத்தைச் சிந்தியிருக்கிறார்கள். நீங்கள் அந்தக் கிரயத்தைச் செலுத்திவிட்டீர்களா? ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இத்தகையப் பெரும் கிருபையை அனுபவிக்க நீங்கள் தகுதியுடையவர்களே அல்லர். நீங்கள் மோவாபின் சந்ததி என்று இன்று கூறுவது தவறா? நீங்கள் உங்களையே மிக உயர்வாகக் கருத வேண்டாம். நீ தற்பெருமையாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இத்தகையப் பெரிய இரட்சிப்பு, இத்தகைய பெரிய கிருபை இலவசமாக உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை, ஆனாலும் இலவசமாகக் கிருபையை அனுபவிக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒன்றை நீங்கள் தேடி நீங்களாகவே கண்டுபிடித்த உண்மையான வழியா இது? இதை ஏற்றுக்கொள்ளும்படி உங்களை வற்புறுத்தியது பரிசுத்த ஆவியானவர் அல்லவா? தேடுகிற இருதயம் உங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை, அதைவிட சத்தியத்தைத் தேடி அதைப் பெரிதும் விரும்பும் இருதயம் உங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. நீங்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு அதை அனுபவிக்கிறீர்கள்; கொஞ்சம் கூட முயற்சி செய்யாமலேயே இந்த சத்தியத்தை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். குற்றம் கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நீ பெரும் தகுதி வாய்ந்தவன் என்று எண்ணுகிறாயா? தங்கள் ஜீவனைத் தியாகம் செய்தவர்களோடும் தங்கள் இரத்தத்தைச் சிந்தியவர்களோடும் ஒப்பிடும்போது குறை சொல்ல உங்களுக்கு என்ன இருக்கிறது? உங்களை இப்போதே அழிப்பது சரியானதும் இயல்பானதுமாக இருக்கும்! கீழ்ப்படிந்து பின்பற்றுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை. நீங்கள் தகுதியுள்ளவர்களே அல்லர்! உங்கள் மத்தியில் இருந்து பெரும்பாலானோர் அழைக்கப்பட்டீர்கள், ஆனால் உங்கள் சூழல் உங்களை வற்புறுத்தவில்லை அல்லது நீங்கள் அழைக்கப்படவில்லை என்றால், நீங்கள் வெளியே வருவதற்கு முற்றிலுமாக விருப்பம் இல்லாதவர்களாக இருந்திருப்பீர்கள். இத்தகைய விட்டுவிடுதலை ஏற்றுக்கொள்ள யார் விரும்புவார்கள்? மாம்ச இன்பங்களை வீட்டுவிட யார் விரும்புவார்கள்? நீங்கள் எல்லோரும் வசதிகளில் பேராசையோடு களித்து ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடும் ஜனங்கள். நீங்கள் இத்தகைய மாபெரும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறீர்கள்—வேறெதைத்தான் நீங்கள் சொல்ல வேண்டி இருக்கிறது? உங்களிடமுள்ள புகார்கள் என்ன? பரலோகத்தின் மாபெரும் ஆசீர்வாதத்தையும் மாபெரும் கிருபையையும் அனுபவிக்க நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும் உலகில் இதுவரை செய்யப்படாத கிரியை இன்று உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் ஆசீர்வாதம் இல்லையா? நீங்கள் தேவனை எதிர்த்துநின்று அவருக்கு எதிராகக் கலகம் செய்ததால் இன்று நீங்கள் இவ்வாறு சிட்சிக்கப்பட்டீர்கள். இந்த சிட்சையின் காரணமாக, தேவனின் இரக்கத்தையும் அன்பையும் நீங்கள் கண்டுள்ளீர்கள், அது மட்டுமல்லாமல் மேலும் அவரது நீதியையும் பரிசுத்தத்தையும் கண்டுள்ளீர்கள். இந்த தண்டனையினாலும், மனிதகுலத்தின் அசுத்தத்தினாலும், நீங்கள் தேவனின் மாபெரும் வல்லமையைக் கண்டீர்கள், மற்றும் அவருடைய பரிசுத்தத்தையும் மகத்துவத்தையும் கண்டீர்கள். இது மிக அரிய சத்தியங்கள் இல்லையா? இது அர்த்தமுள்ள ஒரு ஜீவிதம் இல்லையா? தேவன் செய்யும் கிரியை முற்றிலுமாக அர்த்தம் கொண்டது. இவ்வாறு, உங்கள் நிலை தாழ்ந்ததாக இருக்கும் போது, அதிகமாக தேவனால் நீங்கள் உயர்த்தப்படுகிறீர்கள் என்பது நிரூபணமாகிறது, மேலும் இன்றும் உங்களிடமான அவரது கிரியையின் மிகுந்த மதிப்பை அதிகமாக அது நிரூபணம் செய்கிறது. அது தெளிவாக வேறெங்கும் கிடைக்காத விலையேறப்பெற்ற பொக்கிஷம்! இத்தகையப் பெரும் இரட்சிப்பைக் காலங்காலமாக வேறு யாரும் அனுபவிக்கவில்லை. உங்கள் நிலை கீழானது என்ற உண்மை தேவனின் இரட்சிப்பு எவ்வளவு பெரியது என்பதைக் காட்டுகிறது, மேலும் அது தேவன் மனுக்குலத்துக்கு உண்மையுள்ளவர் என்பதையும் காட்டுகிறது—அவர் இரட்சிக்கிறார், அவர் அழிப்பதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மோவாபின் சந்ததியை இரட்சிப்பதன் முக்கியத்துவம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 186

தேவன் பூமிக்கு வந்தபோது, அவர் உலகத்துக்கு உரியவராக இல்லை, மற்றும் உலகத்தை அனுபவிக்க அவர் மாம்சமாக மாறவில்லை. எங்கு அவரது கிரியை அவரது மனநிலையை வெளிப்படுத்துமோ மற்றும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்குமோ அந்த இடத்தில்தான் அவர் பிறந்தார். அது பரிசுத்தமான தேசமாக இருந்தாலும் சரி அல்லது இழிவான தேசமாக இருந்தாலும் சரி, மற்றும் அவர் எங்கு கிரியை செய்தாலும் சரி, அவர் பரிசுத்தமானவர். சாத்தானால் அனைத்தும் சீர்கெடுக்கப்பட்டிருந்தாலும் பூமியில் உள்ள யாவும் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவையே. இருப்பினும், இன்னும் எல்லா காரியங்களும் அவர்க்கு உரியவையே; அவை எல்லாம் அவருடைய கரங்களிலேயே இருக்கின்றன. அவர் இழிவான ஒரு தேசத்துக்கு வருகிறார், தமது பரிசுத்தத்தை வெளிப்படுத்தும்படி அங்கு கிரியை செய்கிறார்; அவரது கிரியைக்காக மட்டுமே அவர் இதைச் செய்கிறார், இந்த இழிவான தேசத்தின் ஜனங்களை இரட்சிக்கும் பொருட்டு இத்தகையக் கிரியையைச் செய்வதற்காக அவர் பெரும் அவமானத்தைச் சகித்துக்கொள்ளுகிறார் என்பது இதன் அர்த்தம். அனைத்து மனுக்குலத்துக்கும் சாட்சியாக விளங்கும்படி இது செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட கிரியை ஜனங்களுக்கு காண்பிப்பது தேவனுடைய நீதி ஆகும். தேவனின் மேலாதிக்கத்தை இதனால் சிறந்த முறையில் காண்பிக்க முடியும். பிறரால் வெறுக்கப்படும் ஒரு தாழ்ந்த மக்கள் குழுவின் இரட்சிப்பில் அவரது மகத்துவமும் நேர்மையும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஓர் இழிந்த தேசத்தில் பிறந்தது அவரைத் தாழ்ந்தவர் என்று நிச்சயமாக நிரூபிக்கவில்லை; அவரது மாட்சிமையையும், மனுக்குலத்தின் மேல் அவருக்குள்ள உண்மையான அன்பையுமே அது அனைத்து சிருஷ்டிகளும் காண அனுமதிக்கிறது. அவர் இவ்வாறு அதிகமாகச் செய்யும் போது, அது இன்னும் அதிகமாக அவருடைய பரிசுத்தமான அன்பையும், மனுஷனிடம் அவருக்குள்ள மாசற்ற அன்பையும் வெளிப்படுத்துகிறது. தேவன் பரிசுத்தமானவரும் நீதியுள்ளவரும் ஆவார். கிருபையின் காலத்தில் இயேசு பாவிகளோடு வாழ்ந்தது போல, அவர் ஓர் இழிவான தேசத்தில் பிறந்திருந்தாலும் கூட, முற்றிலும் இழிவான ஜனங்களோடு அவர் ஜீவித்துவரும் போதும், அவரது கிரியையின் ஒவ்வொரு பகுதியும் முழு மனுக்குலமும் பிழைத்திருப்பதற்காக வேண்டி செய்யப்படவில்லையா? மனுக்குலம் மாபெரும் இரட்சிப்பை அடைவதற்காக அல்லவா இவை எல்லாம் செய்யப்படுகின்றன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பல ஆண்டுகள் அவர் பாவிகளோடு வாழ்ந்தார். அது மீட்பின் பணிக்காக. இன்று, அவர் இழிவான, தாழ்ந்த ஒரு ஜனக்குழுவுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இது இரட்சிப்புக்காக. அவரது கிரியைகள் யாவும் மனுக்குலமாகிய உங்களுக்காக அல்லவா? மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இல்லையென்றால், ஒரு மாட்டுக்கொட்டிலில் பிறந்து பல ஆண்டுகள் பாவிகளோடு ஜீவித்து அவர் ஏன் துன்பப்பட்டிருக்க வேண்டும்? மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இல்லையென்றால், அவர் ஏன் இரண்டாவது முறையாக மாம்ச தேகத்துக்குத் திரும்பிவந்து, பிசாசுகள் கூடும் இந்த தேசத்தில் பிறந்து, சாத்தானால் ஆழமாக சீர்கெடுக்கப்பட்ட இந்த ஜனங்களோடு ஜீவிக்க வேண்டும். தேவன் உண்மையுள்ளவர் இல்லையா? அவருடைய கிரியையில் எந்தப் பகுதி மனுக்குலத்துக்கானது அல்ல? எந்தப் பகுதி உங்கள் விதிக்கானது அல்ல? தேவன் பரிசுத்தமானவர்—இது மாற்ற முடியாதது. அவர் ஓர் இழிவான தேசத்துக்கு வந்திருக்கும் போதிலும் அவர் இழிவானவற்றால் அசுத்தமாக மாட்டார்; மனுக்குலத்தின் பேரில் தேவனுடைய அன்பு மிகமிக சுயநலமற்றது மேலும் அவர் சகித்துக்கொள்ளும் துன்பமும் அவமானமும் மிகமிக அதிகமானது என்பது ஒன்றே இதன் அர்த்தமாகும்! உங்கள் அனைவருக்காகவும் உங்கள் தலைவிதிக்காகவும் அவர் எவ்வளவு பெரிய அவமானத்தால் துன்பப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெரும் ஜனங்களையும் அல்லது பணக்கார மற்றும் வலிமைமிக்க குடும்பங்களின் குமாரர்களையும் இரட்சிப்பதற்கு மாறாக, கீழாகவும் அற்பமாகவும் பார்க்கப்படுபவர்களை இரட்சிப்பதையே அவர் முக்கியமாகக் கருதுகிறார். இவை எல்லாம் அவருடைய பரிசுத்தம் அல்லவா? இவை எல்லாம் அவருடைய நீதி அல்லவா? முழு மனுக்குலமும் பிழைத்திருப்பதற்காக, அவர் ஓர் இழிவான தேசத்தில் பிறந்து ஒவ்வொரு அவமானத்தையும் தாங்குவார். தேவன் மிக உண்மையானவர்—அவர் பொய்யான கிரியைகளைச் செய்யமாட்டார். கிரியையின் ஒவ்வொரு கட்டமும் இத்தகைய நடைமுறைக்குகந்த வழியில் செய்யப்படவில்லையா? எல்லா ஜனங்களும் அவதூறாக அவர் பாவிகளோடு உண்கிறார் என்று கூறினாலும், ஜனங்கள் எல்லாம் அவரைக் கேலி செய்து அவர் இழிவான மற்றும் கீழான ஜனங்களோடு வாழ்கிறார் என்று சொன்னாலும், அவர் இன்னும் தம்மை சுயநலமில்லாமல் அளிக்கிறார், மேலும் இவ்வாறு அவர் இன்னும் கூட மனுக்குலத்தால் புறக்கணிக்கப்படுகிறார். அவர் சகிக்கும் துன்பம் உங்களுடையதை விடப் பெரிதல்லவா? நீங்கள் செலுத்திய கிரயத்த்தை விட அதிகமான கிரியையை அல்லவா அவர் செய்கிறார்? நீங்கள் இழிவான தேசத்தில் பிறந்தாலும், தேவனின் பரிசுத்தத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பிசாசுகள் கூடும் தேசத்தில் பிறந்திருந்தாலும், பெரும் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்தெடுக்க என்ன இருக்கிறது? உங்களுக்கு என்ன குறை இருக்கிறது? நீங்கள் சகித்த துன்பத்தை விட அவர் சகித்த துன்பம் பெரிதல்லவா? அவர் பூமிக்கு வந்து மனித உலகின் இன்பங்களை ஒருபோதும் அனுபவிக்கவில்லை. அவர் அத்தகையப் காரியங்களை வெறுக்கிறார். மனிதன் பொருட்களைக் கொண்டு தனக்கு உபசாரம் செய்வதற்காக தேவன் பூமிக்கு வரவில்லை, அல்லது மனிதனின் உணவு, துணி, மற்றும் அணிகலன்களை அனுபவிக்கவும் அவர் வரவில்லை. அவர் இந்தப் பொருட்களைப் பொருட்டாக எண்ணுவதில்லை. அவர் மனிதனுக்காகப் பாடுபடவே பூமிக்கு வந்தார், உலத்தின் செல்வத்தை அனுபவிக்க அல்ல. அவர் துன்பப்படவும், கிரியை செய்யவும், தம்முடைய நிர்வாகத்திட்டத்தை முடிக்கவும் வந்தார். அவர் ஒரு சிறந்த இடத்தை, ஒரு தூதரகத்தில் அல்லது நவநாகரிக தங்கும் விடுதியில் வாழ்வதை அவர் தேர்வுசெய்யவில்லை, அவருக்காகக் காத்திருக்க அவருக்கு பல ஊழியர்களும் இல்லை. நீங்கள் பார்த்தவற்றின் அடிப்படையில், அவர் கிரியை செய்யவா அல்லது அனுபவிக்கவா வந்தார் என்பதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் கண்கள் பார்க்கவில்லையா? அவர் உங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்? ஒரு வசதியான இடத்தில் அவர் பிறந்திருப்பாரேயானால், அவரால் மகிமையை அடைய முடியுமா? அவரால் கிரியை செய்ய முடியுமா? அவர் அப்படி செய்திருந்தால் அதற்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்திருக்குமா? அவரால் முற்றிலுமாக மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடியுமா? இழிவின் தேசத்தில் இருந்து ஜனங்களை அவரால் விடுவிக்க முடியுமா? ஜனங்கள் அவர்களுடைய கருத்தின்படி கேட்கிறார்கள்: “தேவன் பரிசுத்தமாக இருப்பதால், அவர் ஏன் நமது இழிந்த இடத்தில் பிறந்தார்? நீ எங்களை இழிவான மனிதர்கள் என்று வெறுத்து; நீ எங்கள் எதிர்ப்பையும் கலகத்தையும் வெறுக்கிறாய், ஆகவே நீ ஏன் எங்களோடு ஜீவிக்கிறாய்? நீ ஒரு மேலான தேவன். நீ எங்கு வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம், இவ்வாறு நீ ஏன் இந்த இழிந்த தேசத்தில் பிறக்க வேண்டும்? நீ ஒவ்வொரு நாளும் எங்களைச் சிட்சித்து நியாயந்தீர்க்கிறாய், மற்றும் நாங்கள் மோவாபின் சந்ததி என்று தெளிவாக நீ அறிந்திருக்கிறாய், ஆகவே நீ ஏன் இன்னும் எங்களோடு வாழ்கிறாய்? மோவாபின் சந்ததியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நீ ஏன் பிறந்தாய்? அதை ஏன் நீ செய்தாய்?” உன்னுடைய இத்தகைய சிந்தனைகளில் முற்றிலுமாகக் நியாயம் இல்லை! அவரது மாட்சிமையையும், அவரது தாழ்மையையும், மறைந்துகொள்ளுதலையும் ஜனங்கள் பார்க்க இத்தகைய கிரியையே அனுமதிக்கின்றது. அவர் தமது கிரியைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய சித்தமாக இருக்கிறார், மேலும் அவரது கிரியைக்காக எல்லா துன்பங்களையும் சகித்துக்கொண்டார். அவர் மனுக்குலத்தின் பொருட்டும், அதைவிட மேலாக, அனைத்து சிருஷ்டிகளும் அவரது ஆளுகையின் கீழ் அடங்க, சாத்தானை ஜெயங்கொள்ளவும் காரியமாற்றுகிறார். இது மட்டுமே அர்த்தமுள்ள, விலைமதிப்பற்ற கிரியையாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மோவாபின் சந்ததியை இரட்சிப்பதன் முக்கியத்துவம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 187

அந்தக் காலகட்டத்தில் இயேசு யூதேயாவில் கிரியை செய்தபோது, அவர் அதை வெளிப்படையாகச் செய்தார், ஆனால் இப்போது, நான் உங்களிடையே ரகசியமாகக் கிரியை செய்கிறேன், ரகசியமாகப் பேசுகிறேன். அவிசுவாசிகளுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. உங்களிடையேயான எனது கிரியை, என்னை அறியாதவர்களுக்குத் தெரியாது. இந்த வார்த்தைகள், இந்த சிட்சைகள் மற்றும் நியாயத்தீர்ப்புகள் ஆகியவற்றை நீங்கள் மட்டுமே அறிவீர்கள், மற்றவர்கள் அறியார். இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு உங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன; அவிசுவாசிகளில் எவருக்கும் இது தெரியாது, ஏனென்றால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இங்குள்ள இந்த ஜனங்கள் சிட்சைகளை அனுபவித்தபின் பரிபூரணமாக்கப்படும் நிலையில் இருக்கின்றனர், ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு இது எதுவும் தெரியாது. இந்தக் கிரியை அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது! அவர்களுக்கு மாம்சமாகிய தேவன் தம்மை வெளிக்காட்டுவதில்லை, ஆனால் இந்தப் பிரவாகத்தில் இருப்பவர்களுக்கு அவர் வெளிப்படையாக இருக்கிறார் என்று சொல்லலாம். தேவனிடத்தில் சகலமும் வெளிப்படையாக இருந்தாலும், சகலமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், சகலமும் விடுவிக்கப்பட்டிருந்தாலும், இது அவரை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே சத்தியமாக இருக்கிறது; மீதமுள்ளவர்களைப் பொறுத்தவரை, அவிசுவாசிகளைப் பொறுத்தவரை, எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை. உங்களுக்கிடையில் மற்றும் சீனாவில் தற்போது செய்யப்பட்டுவரும் கிரியைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க, அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிரியையை அவர்கள் அறிந்திருந்தால், அவர்கள் செய்வதெல்லாம் அதைக் கண்டிப்பதும், அதைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதுமே ஆகும். அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். மிகவும் பின்தங்கிய இடமான சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் கிரியை செய்வது எளிதான காரியமல்ல. இந்தக் கிரியை வெளிப்படையாகச் செய்யப்படுமானால், இதைத் தொடர்ந்து செய்வது சாத்தியமற்றதாகிவிடும். இந்தக் கட்டக் கிரியையை இந்த இடத்தில் வெறுமனே செய்ய முடியாது. இந்தக் கிரியை வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டுமானால், அவர்கள் அதை எவ்வாறு முன்னோக்கிச் செல்ல அனுமதிப்பர்? இது கிரியையை இன்னும் பெரிய ஆபத்தில் சிக்க வைக்காதா? இந்தக் கிரியை மறைக்கப்படாமல், இயேசுவின் காலத்தில் அவர் நோயுற்றவர்களை அற்புதமாகக் குணமாக்கி, பேய்களை விரட்டியடித்தது போலத் தற்போதும் நிகழ்ந்திருந்தால், இந்தக் கிரியை வெகு காலத்திற்கு முன்பே பிசாசுகளால் “பிடிக்கப்பட்டிருக்காதா”? தேவன் இருக்கிறார் என்பதை அவர்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா? மனுஷனுக்குப் பிரசங்கிப்பதற்கும், சொற்பொழிவு ஆற்றுவதற்கும் நான் இப்போது ஜெப ஆலயங்களுக்குள் நுழைந்தால், நான் வெகு காலத்திற்கு முன்பே துண்டுகளாகிப் போயிருக்க மாட்டேனா? இது நடந்திருந்தால், எனது கிரியை எவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும்? எந்த அடையாளங்களும் அதிசயங்களும் வெளிப்படையாக வெளிப்படுவதில்லை என்பதற்கான காரணம் அவற்றை மறைப்பதற்காகத்தான். எனவே, அவிசுவாசிகளுக்கு, எனது கிரியையைக் காணவோ, அறியவோ, கண்டுபிடிக்கவோ முடியாது. கிருபையின் யுகத்தில் இயேசு செய்ததைப் போலவே கிரியையின் இந்தக் கட்டமும் செய்யப்பட வேண்டும் என்றால், அது இப்போது இருப்பதைப் போலச் சீராக இருந்திருக்க முடியாது. எனவே, இவ்வழியில் ரகசியமாகக் கிரியை செய்வது உங்களுக்கும், கிரியைக்கும் மொத்தமாகப் பயனளிக்கும். பூமியில் தேவனின் கிரியை நிறைவடையும் போது, அதாவது, இந்த ரகசியக் கிரியை நிறைவடையும் போது, கிரியையின் இந்தக் கட்டம் வெளியரங்கமாக வெளிப்படுத்தப்படும். சீனாவில் ஜெயங்கொண்டவர்களின் குழு ஒன்று இருப்பதை அனைவரும் அறிவார்கள்; தேவன் சீனாவில் மாம்சமாகியிருக்கிறார் என்பதையும், அவருடைய கிரியை முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் அனைவரும் அறிந்துகொள்வார்கள். அப்போதுதான் அது மனுஷன் மீது விடியும்: சீனா ஏன் இன்னும் தனது வீழ்ச்சியையோ அல்லது தகர்ந்துபோதலையோ வெளிக்காட்டவில்லை? தேவன் தமது கிரியையை சீனாவில் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டு வருகிறார், மேலும் ஒரு குழுவினரை ஜெயங்கொண்டவர்களாகப் பரிபூரணமாக்கியிருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (2)” என்பதிலிருந்து

முந்தைய: தேவனுடைய கிரியையை அறிதல்

அடுத்த: தேவனுடைய கிரியையை அறிதல் II

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக