Tamil Sermon Series | கர்த்தர் மெய்யாகவே ஒரு மேகத்துல திரும்பி வர்றாரா?

நவம்பர் 8, 2022

ஒன்றன் பின் ஒன்றாக நாம் பேரழிவைக் கண்டுகொண்டிருக்கிறோம். விசுவாசிகள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு, பேரழிவுகளிலிருந்து இரட்சித்து, பரலோகராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வதற்காக கர்த்தர் ஒரு மேகத்தின் மீது திரும்பி வந்து, அவர்களை வானத்திற்கு கூட்டிக்கொண்டு போவார் என்று வாஞ்சையோடு காத்திருக்கிறார்கள். இருப்பினும், பேரழிவுகள் வந்திருக்கின்றன, ஆனாலும் அவர்கள் மேகத்தின் மீது வரும் கர்த்தராகிய இயேசுவை இன்னும் வரவேற்கவில்லை. கர்த்தராகிய இயேசு உண்மையிலேயே வருவாரா என்று பலர் வியப்புடன் சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள், மேலும் சங்கடமாக உணர்கிறார்கள். அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து, மேகத்தின் மீது கர்த்தர் வருவார் என்று காத்திருக்கும் போது, ​​ கர்த்தர் திரும்பி வந்திருக்கிறார் என்றும், அவர்தான் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் என்றும் கிழக்கத்திய மின்னல் சாட்சி அளித்து வருகிறது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் படித்த பிறகு, எல்லா சபைப் பிரிவுகளைச் சேர்ந்த பலரும் அவை உண்மை என்று உணர்ந்து, தேவனுடைய குரலைக் கேட்கிறோம் என்பதை உணர்ந்து, சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன் வந்து, கர்த்தரை வரவேற்கிறார்கள். இதைப் பார்த்து ஆச்சரியப்படுபவர்களும் பலர் உள்ளனர்: கர்த்தர் உண்மையிலேயே மேகத்தின் மீது திரும்பி வருகிறாரா? மேகத்தின் மீது அல்லது மனுவுருவான மனுஷகுமாரனாக கர்த்தர் மிகச்சரியாக எப்படி வருவார்? மெய்யான விசுவாசத்தைத் தேடுதல் என்ற இந்த நிகழ்ச்சி உங்களுக்குப் பதிலைத் தரும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க