Tamil Sermon Series | தேவன் ஏன் கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்?

ஜனவரி 29, 2023

பேரழிவுகள் மோசமாகிக்கொண்டு வருகின்றன, மேலும் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காகவும், கர்த்தரைச் சந்திப்பதற்கு வானத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்காகவும், முடிந்தவரை விரைவாக இந்தப் பேரழிவுகளின் துன்பத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் விசுவாசிகள் அனைவரும் வாஞ்சையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் இன்றும் கர்த்தராகிய இயேசு மேகங்களில் இறங்கி வருவதை அவர்கள் இன்னும் காணவில்லை, இது பலரை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. ஆனாலும், கர்த்தராகிய இயேசு மேகங்களின் மீது வருவதை வரவேற்பதற்குப் பதிலாக, சத்தியத்தை வெளிப்படுத்தி, நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்யும் சர்வவல்லமையுள்ள தேவனாக கர்த்தர் திரும்பி வந்திருப்பதாக கிழக்கத்திய மின்னல் தொடர்ந்து சாட்சி கொடுப்பதை ஜனங்கள் பார்ப்பது அவர்களுக்கு ஒரு முழுமையான ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது, சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையானது கிழக்கிலிருந்து மேற்கு வரை மெய்யான ஒளியைப் போல பிரகாசித்து, முழு உலகத்தையும் ஒளிரச் செய்கிறது, மேலும் சத்தியத்தை நேசிப்பவர்களும், தேவனுடைய தோற்றம் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்று ஏங்குகிறவர்களும், தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த உண்மைகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன: கிழக்கத்திய மின்னல் உண்மையிலேயே தேவனுடைய வெளிப்பாடாகவும் கிரியையாகவும் இருக்கிறதா? சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் மனுக்குலத்துடன் பேசும் சிருஷ்டிகரின் சத்தமாக இருக்கலாமோ? தேவன் ஏன் கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்? நமது பாவங்களுக்காக நாம் மன்னிக்கப்பட்டிருக்கிறோம், தேவன் நம்மை நீதிமானாக்கியிருக்கிறார், ஆகவே நாம் ஏன் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் அனுபவிக்க வேண்டும்? மெய்யான விசுவாசத்தைத் தேடுதல் என்ற இந்தப் பகுதியில், நாம் இதைப் பற்றி ஒன்றாக ஆராய்ந்து, தேவனுடைய நியாயத்தீர்ப்புக் கிரியையின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க