Testimony of Faith | எனக்கும் பரலோக ராஜ்யத்திற்கும் இடையில் நிற்பது யார்? (Tamil Subtitles)

அக்டோபர் 3, 2021

மைக்கேல் ஒரு பக்தியுள்ள கத்தோலிக்கர், அவர் ஒருபோதும் ஆவிக்குரிய ரீதியில் போஷிக்கப்படுவதை உணராதவர். ஒரு நாள் சர்வவல்லமையுள்ள தேவனின் வலைத்தளத்தைக் கண்டுபிடித்து, திருச்சபையின் பல சுவிசேஷ திரைப்படங்களை ஆன்லைனில் பார்த்து முடிக்கும் வரை பரிசுத்த ஆவியின் கிரியைக்காக அவள் எல்லா இடங்களிலும் தேடுகிறாள். இந்த திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம், சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளை தேவனின் சத்தமாக அவள் உணர்ந்தாள், சர்வவல்லமையுள்ள தேவன் தான் திரும்பிவந்த கர்த்தராகிய இயேசு என்பதில் உறுதியாக இருக்கிறாள். ஆயினும், அவளை ஆச்சரியப்படுத்தும் விதத்தில், அவளுடைய கிறிஸ்தவ தந்தை மற்றும் உறவினர், ஒரு மூப்பர் மற்றும் ஒரு போதகர், அவளுடைய விசுவாசத்தைப் பற்றி அறிந்ததும், அவர்கள் அவளைத் தடுக்கவும் துன்புறுத்தவும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்கள், மேலும் அவளுக்கு எதிராக மற்ற போதகர்களுடன் கூட அணிசேர்க்கிறார்கள். சர்வவல்லமையுள்ள தேவன்மீதுள்ள விசுவாசத்தை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தும் முயற்சியில் மைக்கேலின் தந்தை அவளை மறுதலிக்க வேண்டும் என்று அச்சுறுத்துகிறார். இந்த ஆவிக்குரிய போரில் சிக்கி, சாத்தானின் சோதனையையும் அவள் மீதான தாக்குதலையும் சமாளிக்க அவள் எவ்வாறு தேவனைச் சார்ந்திருக்கிறாள் மற்றும் தேவனின் வார்த்தைகளின் சத்தியத்தை நம்புகிறாள், இறுதியில் எவ்வாறு சாட்சியாக நிற்கிறாள்? கண்டுபிடிக்க இந்த வீடியோவைப் பாருங்கள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க