Tamil Sermon Series | உண்மையில் எடுத்துக்கொள்ளப்படுதல்னா என்ன?

ஜனவரி 24, 2023

கடைசி நாட்களில், எல்லா விசுவாசிகளும் இரட்சகர் மேகத்தின் மீது இறங்கி வருவார் என்றும், அவரைச் சந்திப்பதற்காக எடுத்துக்கொள்ளப்படுவோம் என்றும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது பெரும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதால், மேகத்தின் மீது திரும்பி வரும் கர்த்தரை அவர்கள் இன்னும் வரவேற்கவில்லை. ஜனங்கள் எந்த நேரத்திலும் பேரழிவுகளில் மரிக்கலாம் என்று பயப்படுகிறார்கள் அல்லது கர்த்தரால் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள். கர்த்தராகிய இயேசு, மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனாக ஏற்கனவே திரும்பி வந்திருக்கிறார், மற்றும் சத்தியங்களை வெளிப்படுத்தி, கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்து வருகிறார் என்று கிழக்கத்திய மின்னல் சாட்சி பகருவது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சத்தியத்திற்காக ஏங்குகிற பலர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, தேவனுடைய சத்தத்தை உணர்ந்து, சர்வவல்லமையுள்ள தேவனிடத்திற்குத் திரும்புகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணி, அவைகளால் ஆதரிக்கப்பட்டும் போஷிக்கப்பட்டும், ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்தில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பேரழிவுகளுக்கு முன் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். "கர்த்தராகிய இயேசு தம்மைச் சந்திப்பதற்காக ஜனங்களை வானத்திற்கு அழைத்துச் செல்வார் அல்லவா? கிழக்கத்திய மின்னலின் விசுவாசிகள் தெளிவாக இன்னும் பூமியில் இருக்கிறார்கள், எனவே அவர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்பட முடியும்?" என்று பல மதவாதிகள் குழப்பமடைந்து சிந்திக்கின்றனர். எடுத்துக்கொள்ளப்படுதலின் உண்மையான அர்த்தம் அநேக ஜனங்களுக்குப் புரிவதில்லை, ஆனால் அது வானத்தில் எடுத்துச் செல்லப்படுவதைக் குறிக்கிறது என்றும், அதனால் பூமியில் இன்னும் எவரும் எடுத்துக்கொள்ளப்படுதலை அடையவில்லை என்றும் நினைக்கிறார்கள் இது சரியா? உண்மையில் "எடுத்துக்கொள்ளப்படுதல்" என்பதன் அர்த்தம் என்ன? மெய்யான விசுவாசத்தைத் தேடுதல் என்ற இந்த நிகழ்ச்சி சத்தியத்தைத் தேடவும் பதிலைக் கண்டறியவும் உங்களுக்கு வழிகாட்டும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க