Christian Song 2021 | உங்கள் மரணப் படுக்கையில் உண்மைக்கு விழித்துக் கொள்வது மிகவும் தாமதமானது (Tamil Subtitles)

அக்டோபர் 7, 2021

இந்த வழியில், மக்கள் அதிகமாக அறிவு சார்ந்ததைப் பற்றி பேசலாம்,

ஆனால் அவர்கள் இறக்கும் போது, அவர்களின் கண்கள் கண்ணீரால் சூழ்ந்துக் கொள்கின்றன,

மேலும் அவர்கள் வாழ்நாளை வீணடித்ததற்காக தங்களை வெறுக்கிறார்கள்,

முதிர் வயதில் வீணாக வாழ்ந்தார்கள்.

அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் புரிந்துகொள்கிறார்கள்,

ஆனால் உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவரவோ

அல்லது தேவனுக்கு சாட்சி கொடுக்கவோ முடியாது;

அவர்கள் வெறுமனே அங்கும் இங்கும், ஒரு தேனீ போல ஓடுகிறார்கள்

மரணத்தின் விளிம்பில் மட்டுமே

அவர்கள் உண்மையான சாட்சியம் இல்லாததையும்

அவர்கள் தேவனை அறியவில்லை

என்பதையும் காண்கிறார்கள்.

இன்றைய நாளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி

நீ விரும்பும் சத்தியத்தை ஏன் தொடரக்கூடாது?

நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

இது மிகவும் தாமதமானதாக இல்லையா?

வாழ்க்கையில் நீ சத்தியத்திற்காகக் கஷ்டப்படாவிட்டால், அல்லது

அதைப் பெற முயற்சிக்கவில்லை என்றால், நீ மரிக்கும் நேரத்தில்

நீ வருத்தப்பட விரும்புகிறாயா?

அப்படியானால், ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்?

உண்மையாக, மக்கள், சிறிதளவு முயற்சி செய்தால்,

சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால்,

அதன் மூலம் தேவனை திருப்திப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.

மக்களின் இருதயங்கள் எப்போதுமே சாத்தானால் பிடிக்கப்பட்டிருப்பதால்,

அவர்கள் தேவனுக்காக செயல்பட முடியாமல் போகிறது,

மேலும் அவர்களின் மாம்சத்திற்காக தொடர்ந்து விரைந்து செய்லபடுகின்றனர்,

இறுதியில் அதைக்காட்ட எதுவும் இல்லை.

இந்தக் காரணத்திற்காக, மக்கள் தொடர்ந்து தொல்லைகள் மற்றும்

சிரமங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இவை சாத்தானின் உபத்திரவம் அல்லவா?

இது மாம்சத்தின் கெடுதல் அல்லவா?

நீ உதட்டளவில் பேசி தேவனை முட்டாளாக்க முயற்சிக்கக்கூடாது.

மாறாக, நீ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உன்னையே நீ ஏமாற்ற வேண்டாம், அதன் பயன் என்ன?

உன் மாம்சத்திற்காகவும் புகழுக்காகவும் வாழ்வதன் மூலமும், நீ என்ன பெற முடியும்?

இன்றைய நாளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி

நீ விரும்பும் சத்தியத்தை ஏன் தொடரக்கூடாது?

நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

இது மிகவும் தாமதமானதாக இல்லையா?

வாழ்க்கையில் நீ சத்தியத்திற்காகக் கஷ்டப்படாவிட்டால், அல்லது

அதைப் பெற முயற்சிக்கவில்லை என்றால், நீ மரிக்கும் நேரத்தில்

நீ வருத்தப்பட விரும்புகிறாயா?

அப்படியானால், ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்?

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க