Christian Drama | முதியவரும் குழந்தையும் | Persecution and Tribulation Strengthens Their Faith in God (Tamil Subtitles)

மார்ச் 4, 2022

2008 ஆம் ஆண்டு "ஸ்திரப்படுத்துதல்" என்ற போர்வையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத நம்பிக்கைகளை வெறியோடு ஒடுக்கத் தொடங்குகிறது. பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் சிறைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். பலர் வீட்டைவிட்டு வெளியேறி மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களால் திரும்பி வீட்டுக்குப் போக முடியவில்லை. சுவிசேஷத்தைப் பகிர்ந்ததற்காகவும் விசுவாசிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காகவும் ஸாங்க் ஸிஸோங்க் என்ற ஒரு முதிய சகோதரரை சீன கம்யூனிஸ்ட் கட்சி கைது செய்வதையே முதன்மையான இலக்காக நிர்ணயித்துள்ளது. சிசிபியால் கைதுசெய்யப்படுவதைத் தவிர்க்க முழுக் குடும்பமும் ஓடி மறையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஸாங்க்ஸிஸோங்கைப் பிடிக்க முடியாத காரணத்தால் சிசிபி அதிகாரிகள் அவருடைய வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தி விசாரணக்காக அவரது சகோதரரையும் பிள்ளைகளையும் காவலில் வைக்கின்றனர். அவரது பென்ஷனை முடக்கி அவரது வாழ்வாதாரத்தை இல்லாமல் ஆக்குகின்றனர். வாழ்வதற்கு ஒரு நிலையான இடம் இல்லாமல் அவர் தன் சிறு பேரனுடன் தொடர்ந்து ஓடுவதால் அவரது நிலை இன்னும் அதிகமாக அபாயகரமானதாகிறது. பின்னர் 2010 இல், சிசிபி இன்னுமொரு காரணத்தைப் பயன்படுத்துகிறது. இந்த முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி நாடு முழுவதும் கிறிஸ்தவர்களைத் தேடி கைதுசெய்ய முற்படுகிறது. போவதற்கு ஓர் இடமும் இல்லாமல் ஸாங்க் ஸிஸோங்கும் அவரது பேரனும் ஒரு மலைக் குகையில் பதுங்கி மத்திய குளிர்காலத்தின் குளிரை எதிர்கொள்வதற்கு ஆளாகின்றனர். சிசிபியின் மனிதத்தன்மையற்ற தேடுதல் வேட்டையையும் துன்புறுத்தலையும் தாண்டி அவர்கள் எப்படித் தப்பினார்கள்? தயவுசெய்து முதியவரும் குழந்தையும் என்ற மேடை நாடகத்தைப் பாருங்கள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க