Christian Praise Song 2021 | தேவனுக்காக நேசப்பாட்டு பாடுவதை நம்மால் நிறுத்த முடியாது (Tamil Subtitles)

அக்டோபர் 29, 2021

நாம் தேவனுக்காக நேசப்பாட்டு பாடுவதை நிறுத்த முடியாது.

நாம் அதிகமாய்ப் பாடப் பாட, நம் உணர்வு இனிமையாகிறது.

தேவனுக்காக நாம் இன்னும் அதிகமாய் பாடும்போது,

அவரை நாம் இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்!

தேவன் மனுவுருவானதை நாம் பாடுகிறோம்,

அவரின் சிங்காசனத்திற்கு முன்பாக நாம் எழுப்பப்பட்டிருக்கிறோம்,

சர்வ வல்ல தேவனை நாம் முகமுகமாய் காண்பதினால்,

இனி ஒருபோதும் ஏக்கத்துடன் பரத்தை நோக்கிப் பார்க்கத் தேவை இல்லை.

சத்தியத்தைக் கொண்டு,

உண்மையாக யதார்த்தமாக நம் பக்கமிருந்து அவர் நம்மை மேய்க்கிறார்.

ஒவ்வொரு நாளும் அவர் வார்த்தைகளை நாம் அனுபவிக்கிறோம்.

சத்தியத்தைப் புரிந்து கொள்வது இனிமையான உணர்வாகிறது.

தேவனுக்கான அன்பால் நம் இருதயம் நிரம்பி இருக்கிறது,

ஏனெனில், நாம் அவரது அழகான முகத்தைக் காண்கிறோம்.

நாம் துதித்துப் பாடி நடனம் ஆடுகிறோம்,

அவரது சௌந்தரியத்தை வர்ணிக்க வார்த்தைகளில்லை.

நாம் தேவனுக்காக நேசப்பாட்டு பாடுவதை நிறுத்த முடியாது.

நாம் அதிகமாய்ப் பாடப் பாட, நம் உணர்வு இனிமையாகிறது.

தேவனுக்காக நாம் இன்னும் அதிகமாய் பாடும்போது,

அவரை நாம் இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்!

நாம் தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பைப் பற்றி பாடுகிறோம்.

அவரது வார்த்தைகள், மனுஷனில் உள்ள சாத்தானின் தன்மையையும்,

மனுஷ சீர்கேட்டின் உண்மையையும் வெளிப்படுத்தி

நம்மை சுத்திகரித்து இரட்சிக்கிறது.

நமது சாத்தானிய மனநிலைகளை

அவரது வார்த்தைகள் சுத்திகரிக்கின்றன.

நம்மை புதிய ஜனங்களாய் மாற்றுகின்றன.

சாத்தானின் வல்லமைகளை நாம் தூக்கி எறிந்து விட்டோம்.

தேவனின் அன்பு உண்மை எனக் காண்கிறோம்.

அவரது நீதி அழகானது,

அவரது பரிசுத்தம் மிகவும் இனிமையானது.

நம்மால் அவரை போதுமான அளவு நேசிக்க இயலாது.

எனவே நாம் தேவனைத் துதிக்கிறோம்;

நம் உணர்வுகளை நம்மால் அடக்கி வைக்க இயலாது.

நமக்கும் தேவனுக்கும் இடையில் எதுவும் வர இயலாது.

நாம் தேவனுக்காக நேசப்பாட்டு பாடுவதை நிறுத்த முடியாது.

நாம் அதிகமாய்ப் பாடப் பாட, நம் உணர்வு இனிமையாகிறது.

தேவனுக்காக நாம் இன்னும் அதிகமாய் பாடும்போது,

அவரை நாம் இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்!

ராஜ்யத்தின் ஜீவனில் தேவனின் வார்த்தை ஆளுகை செய்கிறது.

நாம் வெளிச்சத்திற்குள் வாழ்கிறோம்.

நாம் சத்தியத்தைப் பெற்றுக்கொள்வது நம்மை விடுதலையாக்கியிருக்கிறது.

நாம் தேவனை முழு இருதயத்தோடும் உண்மைமையுடனும் ஆராதிக்கிறோம்.

அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நாம் மாறி விட்டோம்.

உண்மையுடன் அவரை சேவிக்கிறோம்.

அவருக்காக நாம் பாரம் சுமந்து,

நம் கடமைகளை உண்மையாக நிறைவேற்றுகிறோம்,

தேவனை நேசிக்கும் பாதையில் எப்போதும் முன்னேறுகிறோம்.

இப்போது நாம் தேவனுக்காக வாழ்ந்து, அவரை நேசித்து அவருக்குக் கீழ்படிய முடியும்;

இதுவே மிகப் பெரிய சந்தோஷம்.

சர்வ வல்லமையுள்ள தேவனே, நாங்கள் உம்மை துதிக்கிறோம்!

நித்திய காலமாக நாங்கள் உம்மை ஆராதிப்போம்!

நாம் தேவனுக்காக நேசப்பாட்டு பாடுவதை நிறுத்த முடியாது.

நாம் அதிகமாய்ப் பாடப் பாட, நம் உணர்வு இனிமையாகிறது.

தேவனுக்காக நாம் இன்னும் அதிகமாய் பாடும்போது,

அவரை நாம் இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்!

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க