Christian Song 2021 | நினிவே ராஜாவின் மனந்திரும்புதலை தேவன் புகழ்ந்தார் (Tamil Subtitles)

அக்டோபர் 28, 2021

நினிவே ராஜா, யெகோவா தேவன் அவர்களை அழிப்பார் என்று கேள்விப்பட்டபோது,

அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த வஸ்திரங்களைக்

கழற்றிப்போட்டு, சாக்கை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.

மேலும் கூறினான், மனுஷரும் மிருகங்களும் கூட அவற்றை உடுத்தட்டும்,

எந்த மனுஷரும் எதையும் ருசிக்காதிருக்கட்டும்,

ஆனால் தேவனை நோக்கி ஆவலோடு சத்தமாய்க் கூப்பிடட்டும்.

மேலும் ராஜா, அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள

கொடுமையையும் விட்டுத் திரும்பக்கடவர்கள் என்று கூறச்சொன்னான்.

நினிவேயின் ராஜா மிகப்பெரும் மனந்திரும்புதலைக் காண்பித்தார்,

ஒரு ஆட்சியாளர் செய்ய வேண்டியதையும் நிறைவேற்றினார்.

அவரது செயல்கள் மனித எந்தவொரு ராஜாவிற்கும் சாதிக்கக் கடினமான ஒன்றாகும்,

இவை மனித வரலாற்றில் முன்னெப்போதும் கேள்விப்படாதவை,

மேலும் அவை மனிதகுலத்தால் நினைவுகூரப்படுவதற்கும்,

பின்பற்றப்படுவதற்கும் தகுதியானவைகளாகும்.

மனிதன் தோன்றியது முதல்,

ஒவ்வொரு ராஜாவும் தேவனை எதிர்க்கவும், விரோதிக்கவுமே

தனது குடிமக்களை வழிநடத்தியிருந்தார்கள்.

தங்களின் துன்மார்க்கத்திற்கான மீட்பைத் தேடவும், யேகோவா தேவனின்

மன்னிப்பைப் பெறவும், உடனடி தண்டனையைத் தவிர்க்கவும் தேவனிடத்தில் மன்றாடும்படி,

ஒருவர் கூட தங்களின் குடிமக்களை வழிநடத்தவில்லை.

இருந்தபோதிலும், நினிவேயின் ராஜா தனது குடிமக்களை அவரவருடைய கொடுமையையும்

பொல்லாத வழிகளையும் விட்டுவிட்டு, அவர்களை தேவனிடம் வழிநடத்த முடிந்தது.

மேலும், அவன் தனது சிங்காசனத்தை ஒதுக்கி வைத்தான், அதற்குப் பதிலீடாக தேவன்

அவருடைய உக்கிரக்கோபத்தைத் திரும்பப் பெற்றார்,

அவர்களை அழிவிலிருந்து காத்து, அனைவரும் உயிர்வாழ அனுமதித்தார்.

நினிவேயின் ராஜா மிகப்பெரும் மனந்திரும்புதலைக் காண்பித்தார்,

ஒரு ஆட்சியாளர் செய்ய வேண்டியதையும் நிறைவேற்றினார்.

அவரது செயல்கள் மனித எந்தவொரு ராஜாவிற்கும் சாதிக்கக் கடினமான ஒன்றாகும்,

இவை மனித வரலாற்றில் முன்னெப்போதும் கேள்விப்படாதவை,

மேலும் அவை மனிதகுலத்தால் நினைவுகூரப்படுவதற்கும்,

பின்பற்றப்படுவதற்கும் தகுதியானவைகளாகும்.

வரலாற்றில் இது ஒரு அரிய அதிசயம்!

மேலும் சீர்கேடான மனுக்குலம் மனந்திரும்பி, தங்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக

அறிக்கைச் செய்கிறதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்று கூட சொல்லாம்.

நினிவேயின் ராஜா மிகப்பெரும் மனந்திரும்புதலைக் காண்பித்தார்,

ஒரு ஆட்சியாளர் செய்ய வேண்டியதையும் நிறைவேற்றினார்.

அவரது செயல்கள் மனித எந்தவொரு ராஜாவிற்கும் சாதிக்கக் கடினமான ஒன்றாகும்,

இவை மனித வரலாற்றில் முன்னெப்போதும் கேள்விப்படாதவை,

மேலும் அவை மனிதகுலத்தால் நினைவுகூரப்படுவதற்கும்,

பின்பற்றப்படுவதற்கும் தகுதியானவைகளாகும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க