Christian Praise Song 2021 | புதிய வாழ்க்கையைப் போற்றுங்கள் (Tamil Subtitles)

அக்டோபர் 16, 2021

அல்லேலூயா! சர்வ வல்லமையுள்ள தேவனே!

நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், உம்மைத் துதிக்கிறோம்!

அல்லேலூயா! சர்வ வல்லமையுள்ள தேவனே!

நாங்கள் என்றென்றும் உம்மை ஆராதிக்கிறோம்!

கடைசி நாட்களின் கிறிஸ்து தோன்றியிருக்கிறார்,

அவரது வார்த்தைகள் நியாயந்தீர்த்து, சுத்திகரித்து நம்மை மாற்றுகின்றன,

சரியான பாதையில் நம்மை வழிநடத்துகின்றன,

தேவனை நேசிக்கும் ஒரு புதிய வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.

சத்தியத்தைப் புரிந்து கொள்வது மிகவும் அற்புதமானது;

சீர்கேடு இனி இல்லை, நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.

என் தவறான எண்ணங்கள் அனைத்தும் போய்விட்டன,

கலகம் என்னில் இனி ஒருபோதும் இல்லை.

இனி ஒரு போதும் அலைந்து திரிய வேண்டியதில்லை,

இனி ஒரு போதும் பாடுபட வேண்டியதில்லை.

என் ஆவி விடுதலையாக்கப்பட்டிருக்கிறது,@நான் தேவனைத் துதி பாடுகிறேன்.

நான் தேவனைத் துதி பாடுகிறேன்.

தேவனின் அன்போ உண்மையும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிறது,

வாழ்க்கையின் பிரகாசமான பாதையில் நம்மை வழிநடத்துகிறது.

மிகவும் இனிமையான அன்பை நான் ருசித்துவிட்டேன்,

நான் என்றென்றும் தேவனை நேசிப்பேன்.

சகோதரர்களே சகோதரிகளே, ஒன்றுசேருங்கள்,

அருகருகே, ஒன்றாய்க் கூடுங்கள்.

ஒரே இருதயத்துடனும் ஒரே மனதுடனும் நாம்

அவரை சேவித்து அவரது துதியைப் பாடுகிறோம்.

அவரது இதயத்தை யாரால் வெளிப்படுத்த முடியாது?

அவரது அன்பை யாரால் சொல்ல முடியாது?

நீ நடனமாடி தேவனுக்குத் துதி செலுத்து,

நான் உன் அருகில் நின்று கரங்களைத் தட்டுகிறேன்.

நான் உன் அருகில் நின்று கரங்களைத் தட்டுகிறேன்.

நமது பாடல்கள் தேவனுக்கான அன்பால் நிரம்பி இருக்கிறது,

சர்வவல்லமையுள்ள தேவனால் நாம் புதிதாக்கப்பட்டிருக்கிறோம்.

நமது சீர்கெட்ட பழைய வாழ்க்கை போய்விட்டது,

தேவனுக்கு முன்பாக ஜீவிப்பது மிகவும் சந்தோஷமானது!

சத்தியத்தைப் பயிற்சி செய்வதே நம்மை விடுதலையாக்குகிறது.

நமது கடமையை நிறைவேற்றி, தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருகிறோம்.

அவரது ஜனங்கள் புதிய ஜீவனை அனுபவிக்கிறார்கள்,

நாம் தேவனை நேசித்து வெளிச்சத்தில் வாழ்கிறோம்.

நாம் உலகின் கட்டுகளை உடைத்துவிட்டோம்,

நாம் குடும்ப கட்டுகளை உடைத்துவிட்டோம்.

நாம் மாம்சத்தின் கட்டுகளை உடைத்துவிட்டோம்.

ஒருவரை ஒருவர் நேசிப்பது எவ்வளவு இனிமையானது!

ஒருவரை ஒருவர் நேசிப்பது எவ்வளவு இனிமையானது!

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க