தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 290

மே 3, 2023

மனிதன் தேவனை நம்புகிறான் என்பதால், அவன் படிப்படியாக, தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றவேண்டும்; அவன் "ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்ற" வேண்டும். இவர்கள் மட்டுமே உண்மையான வழியை நாடுகிற ஜனங்களாக இருக்கிறார்கள், இவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை அடிமைத்தன இயல்புடன் பின்பற்றுகிறவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் நீக்கிப்போடப் பட்டிருப்பவர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், தேவன் புதிய கிரியையைத் தொடங்குவார், ஒவ்வொரு காலகட்டத்திலும், மனுஷர்களிடையே ஒரு புதிய தொடக்கம் இருக்கும். அந்தந்த யுகங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சத்தியங்களான "யேகோவாவே தேவனாக இருக்கின்றார்" மற்றும் "இயேசுவே கிறிஸ்துவாக இருக்கின்றார்" என்ற சத்தியங்களில் மாத்திரம் மனுஷன் நிலைத்திருந்தால், மனுஷன் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தொடரமாட்டான், மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆதாயப்படுத்திக் கொள்ள இயலாதவனாகவே இருப்பான். தேவன் எவ்விதமாகக் கிரியை செய்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் சற்றும் சந்தேகம் இன்றிப் பின்தொடர்கிறான், மற்றும் அவன் நெருக்கமாகப் பின்தொடர்கிறான். இந்த வழியில், பரிசுத்த ஆவியானவரால் மனுஷனை எவ்வாறு புறம்பாக்கிப்போட முடியும்? தேவன் என்ன செய்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று மனுஷன் உறுதியாக நம்புகிறவரை, மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் எந்தவிதமான ஐயப்பாடுகளுமின்றி ஒத்துழைக்கும் வரை, தேவனுடைய நிபந்தனைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறவரை, அவன் தண்டிக்கப்படக் கூடுவது எப்படி? தேவனுடைய கிரியை ஒருபோதும் ஒழிந்து போவதில்லை, அவருடைய அடிச்சுவடுகள் ஒருபோதும் நின்றுபோயிருக்கவில்லை, அவருடைய நிர்வாகக் கிரியையை முடிப்பதற்கு முன்பு, அவர் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கின்றார், மற்றும் அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஆனால் மனிதன் வேறுபட்டவனாக இருக்கிறான்: பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய சிறு அளவை ஆதாயப்படுத்தியுள்ள நிலையில், அது ஒருபோதும் மாறாது என்பது போன்று அதை அவன் நடத்துகிறான்; கொஞ்சம் அறிவை பெற்றுக்கொண்ட நிலையில் அவன், தேவனுடைய புதிய கிரியையின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முன்வருவதில்லை; தேவனின் ஒரு சிறிய கிரியையைக் கண்டாலும், அவன் உடனடியாகத் தேவனைக் குறிப்பிட்ட ஒரு மரச்சிற்பமாகப் பரிந்துரைக்கிறான், மற்றும் தனக்கு முன்பாகக் காணும் இந்த வடிவத்திலேயே தேவன் எப்போதும் இருப்பார் என்று நம்புகிறான், இது கடந்த காலங்களில் இதைப் போன்றதாக இருந்தது, மற்றும் எதிர்காலத்திலும் எப்போதும் இவ்வாறே இருக்கும்; மனுஷன் மேலோட்டமான அறிவைப் பெற்றிருந்தாலும், அவன் தன்னையே மறக்கும் அளவுக்கு மிகுந்த கர்வம் கொண்டு, ஒரு மனநிலையையும் மற்றும் இருப்பையும் கொண்டிராத ஒரு தேவனைப் பொறுப்பற்ற வகையில் பறைசாற்றத் தொடங்குகிறான்; மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய ஒரு கட்டத்தைப்பற்றி நிச்சயப்படுத்திக் கொண்ட நிலையில், தேவனுடைய புதிய கிரியையைப் பறைசாற்றுபவர் எவ்வகைப்பட்ட நபராக இருந்தாலும், மனுஷன் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனங்களாக உள்ளனர்; இவர்கள் மிகவும் பழமைவாதிகளாக உள்ளனர், மற்றும் புதிய விஷயங்களை ஏற்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனை நம்புகிறார்கள், ஆனால் தேவனை நிராகரிக்கவும் செய்கிறார்கள். இஸ்ரவேலர் "யேகோவாவை மட்டுமே நம்பி, இயேசுவை நம்பாமல்" தவறானவர்களாய் இருந்தார்கள் என்று மனுஷன் நம்புகிறான், ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் "யேகோவாவை மட்டுமே நம்புகிறார்கள், இயேசுவை நிராகரிக்கிறார்கள்" மற்றும் "மேசியா திரும்பி வருவதற்கு ஏங்குகிறார்கள், ஆனால் இயேசு என்று அழைக்கப்படும் மேசியாவை எதிர்க்கவும் செய்கிறார்கள்" என்ற ஒரு பாத்திரத்தில் வெளிப்படையாகச் செயல்படுகிறார்கள். ஆகவே, பரிசுத்த ஆவியின் கிரியையின் ஒரு கட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் ஜனங்கள் சாத்தானின் களத்தில் வாழ்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை, மற்றும் அவர்கள் இன்னும் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறவில்லை. இது மனிதனின் கலகத்தன்மையின் விளைவாக இருக்கிறது அல்லவா? இன்றைய புதிய கிரியையைக் கடைப்பிடிக்காத உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் தாங்கள் அதிர்ஷ்டம் பெறுவோம், தங்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் தேவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆயினும், தேவன் அவர்களை மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துச் செல்வார் என்பது ஏன் என்று அவர்களால் உறுதியாகச் சொல்லமுடியாது, அல்லது அவர்களை அழைத்துச் செல்ல இயேசு ஒரு வெண்மையான மேகத்தின்மீது ஏறி வருவார் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை, அவர்கள் கற்பனை செய்யும் நாளில் வெண்மையான மேகத்தின்மீது இயேசு உண்மையிலேயே வருவாரா என்பதை அவர்கள் கூறமுடியாது. அவர்கள் அனைவரும் பெருங்கவலைப் படுகிறார்கள், மற்றும் குழப்பத்தில் இருக்கிறார்கள்; ஒவ்வொரு சபைப் பிரிவையும் சேர்ந்த பலதரப்பட்ட சிறு ஜனக்கூட்டத்திலுள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் தேவன் எடுத்துக்கொள்வாரா என்று அவர்களுக்குத் தெரியாது. தற்போதைய யுகத்தில், இப்போது தேவன் செய்யும் கிரியை, தேவனுடைய சித்தம்—இந்த விஷயங்களைப் பற்றிய எந்தப் புரிதலையும் அவர்கள் கொண்டிருப்பதில்லை, மற்றும் அவர்கள் தங்கள் விரல்களின் மீது நாட்களை இறங்கு வரிசையில் எண்ணுதல் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைக் கடைசிவரை பின்பற்றுபவர்கள் மட்டுமே இறுதியான ஆசீர்வாதத்தைப் பெறமுடியும், அதேசமயம் அதைக் கடைசிவரை பின்பற்ற முடியாமலே இன்னும் அனைத்தையும் பெற்றதாக நம்புகிற அந்த "புத்திசாலி ஜனங்கள்" தேவன் தோன்றுவதைக் காண இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பூமியில் புத்திசாலித்தனமான நபராயிருக்கிறதாக நம்புகிறார்கள், மேலும் அவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் தேவனுடைய கிரியையின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறைத்து விடுகிறார்கள், மேலும் தேவன் அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று முழுமையான உறுதியுடன் நம்புவதாகத் தெரிகிறது, அவர்களே "தேவனிடம் மிகுந்த விசுவாசமுள்ளவர்கள், தேவனைப் பின்பற்றுபவர்கள், தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிபவர்கள்." தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளுக்கு அவர்கள் "மிகுந்தவிசுவாசம்" கொண்டிருந்தாலும், அவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் இன்னும் வெறுக்கத் தக்கவையாகவே உள்ளன, ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்க்கிறார்கள், மேலும் வஞ்சகத்தையும் பொல்லாங்கையும் செய்கிறார்கள். கடைசிவரை பின்பற்றாதவர்கள், பரிசுத்த ஆவியின் கிரியையைப் பின்தொடராதவர்கள், மற்றும் பழைய கிரியையை மட்டுமே பிடித்திருப்பவர்கள், தேவனுக்கு விசுவாசத்தைக் காண்பிக்கத் தவறியது மட்டுமல்லாமல், இதற்கு மாறாக, தேவனை எதிர்ப்பவர்கள் ஆகியுள்ளனர், புதிய யுகத்தால் நிராகரிக்கப்படுபவர்களாகவும், தண்டிக்கப்படுபவர்களாகவும் ஆகியுள்ளனர். அவர்களைவிட அதிகம் பரிதாபகரமானவர்கள் யாராவது இருக்கிறார்களா? பழைய நியாயப்பிரமாணத்தை நிராகரித்து புதிய கிரியையை ஏற்றுக்கொள்கிறவர்கள் யாவரும் மனசாட்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றுகூடப் பலர் நம்புகிறார்கள். "மனசாட்சியை" பற்றி மட்டுமே பேசுகிற, மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியையை அறியாத இந்த ஜனங்கள், இறுதியில் தங்கள் சுய மனசாட்சியால் தங்கள் வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்வார்கள். தேவனுடைய கிரியை கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை, அது அவருடைய சொந்தக் கிரியையாக இருந்தாலும், தேவன் இன்னமும் அதை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறது இல்லை. மறுக்கப்படவேண்டியது மறுக்கப்படுகிறது, புறம்பாக்கப்படவேண்டியது புறம்பாக்கப்படுகிறது. ஆயினும், தேவனுடைய நிர்வகித்தலின் ஒரு சிறிய பகுதியை உறுதியாய்ப் பற்றிக் கொள்வதன் மூலம் மனுஷன் தன்னைத்தானே தேவனிடத்தில் பகைமையுள்ள இடத்தில் வைக்கிறான். இது மனிதனின் அபத்தமாயிருக்கிறது அல்லவா? இது மனிதனின் அறியாமையாயிருக்கிறது அல்லவா? ஜனங்கள் எவ்வளவு அதிகமாய் மாபெரும் ஆசீர்வாதங்களைப் பெறமுடியாமல், மற்றும் இறுதி ஆசீர்வாதத்தைப் பெறமுடியாமல் இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் பயத்துடனும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற மாட்டோமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள், அடிமைத்தனமாகப் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்கிற அந்த ஜனங்கள் அனைவரும் நியாயப்பிரமாணத்தின்மீது மிகுந்த விசுவாசத்தைக் காட்டுகிறார்கள், மேலும் அவர்கள் எவ்வளவு அதிகமாய் நியாயப்பிரமாணத்தை நோக்கித் தங்கள் விசுவாசத்தைக் காட்சிப்படுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் தேவனை எதிர்க்கிற கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இராஜ்யத்தின் காலமே இப்போதுள்ளது, நியாயப்பிரமாணத்தின் காலமல்ல, மற்றும் இன்றைய நாளின் கிரியை மற்றும் கடந்த காலத்தின் கிரியை ஆகியவை ஒரே மூச்சில் குறிப்பிடப்பட முடியாது, அல்லது கடந்த காலத்தின் கிரியை இன்றைய நாளின் கிரியையுடன் ஒப்பிடப்பட முடியாது. தேவனுடைய கிரியை மாறியுள்ளது, மனிதனின் நடைமுறையும் மாறியுள்ளது; இது நியாயப்பிரமாணத்தைப் பற்றிக்கொள்வதாகவோ அல்லது சிலுவையைச் சுமப்பதாகவோ இருப்பதில்லை, ஆகவே நியாயப்பிரமாணம் மற்றும் சிலுவை மீதான ஜனங்களின் விசுவாசம் தேவனின் அங்கீகாரத்தைப் பெறாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க