தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 333

மார்ச் 21, 2023

இப்போது நான் உங்கள் முன் கொஞ்சம் பணத்தை வைத்து, அதைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தையும் கொடுத்து, நீங்கள் தேர்வு செய்வதை நான் கடிந்துகொள்ளவில்லை என்றால், உங்களில் பலர் பணத்தைத் தேர்வு செய்து சத்தியத்தை விட்டுவிடுவீர்கள். உங்களில் சிறந்தவர்கள் பணத்தை விட்டுவிட்டு, தயக்கத்துடன் சத்தியத்தைத் தேர்வு செய்வார்கள், அதே நேரத்தில் சிலர் பணத்தை ஒரு கையிலும் சத்தியத்தை ஒரு கையிலும் எடுப்பார்கள். இதன்மூலம் உங்கள் உண்மையான நிறங்கள் தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் சத்தியத்தையும் மற்றும் நீங்கள் விசுவாசமாக இருக்கும் எதையேனும் தேர்வு செய்யும்போது, நீங்கள் அனைவரும் இதையே தேர்வு செய்கிறீர்கள், உங்கள் நடத்தை மாறாமல் அப்படியே இருக்கும். அது அப்படியல்லவா? சரியானதற்கும் தவறுக்கும் இடையில் ஊசலாடும் பலர் உங்கள் மத்தியில் இல்லையா? நேர்மறை மற்றும் எதிர்மறை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிகளில், குடும்பம் மற்றும் தேவன், குழந்தைகள் மற்றும் தேவன், அமைதி மற்றும் சஞ்சலம், செல்வம் மற்றும் வறுமை, அந்தஸ்து மற்றும் எளிமை, ஆதரிக்கப்படுதல் மற்றும் ஒதுக்கி வைக்கப்படுதல் மற்றும் பலவற்றுக்கு இடையிலான விருப்பத்தேர்வுகளைப் பற்றி நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். ஓர் அமைதியான குடும்பத்திற்கும் உடைந்த குடும்பத்திற்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்; செல்வத்திற்கும் கடமைக்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள், கரைக்குத் திரும்ப விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள்; ஆடம்பரத்திற்கும் வறுமைக்கும் இடையில், நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிமார்கள் மற்றும் கணவன்மார்களுக்கும் எனக்கும் இடையில் யாரை தேர்வு செய்வது என்று வரும்போது, நீங்கள் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள்; கருத்துக்கும் சத்தியத்திற்கும் இடையில், நீங்கள் மீண்டும் முந்தையதைத் தேர்ந்தெடுத்தீர்கள். அனைத்து விதமான உங்கள் தீய செயல்களையும் பார்த்த நான் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டேன். உங்கள் இருதயங்கள் மென்மையாக இருக்க பெரிதும் மறுக்கின்றன என்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பல வருட அர்ப்பணிப்பும் முயற்சியும் உங்களுடைய கைவிடுதலையும் அவநம்பிக்கையையும் தவிர வேறொன்றையும் எனக்குத் தரவில்லை, ஆனால் உங்களுக்கான என் நம்பிக்கைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன, ஏனென்றால் எனது நாளானது அனைவருக்கும் முன்பாக முற்றிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் இருளான மற்றும் தீய காரியங்களை நாடுவதிலேயே தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள், அவற்றின் மீதான உங்கள் பிடியைத் தளர்த்த மறுக்கிறீர்கள். அப்படியானால், உங்கள் பின்விளைவு என்னவாக இருக்கும்? நீங்கள் இதை எப்போதாவது கவனமாகச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மீண்டும் தேர்வு செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டால், உங்கள் கருத்து என்னவாக இருக்கும்? இன்னும் முந்தையதாகவே இருக்குமா? நீங்கள் இன்னும் எனக்கு ஏமாற்றத்தையும் தாங்க முடியாத துக்கத்தையுமே கொண்டு வருவீர்களா? உங்கள் இருதயங்கள் இன்னும் சிறிதளவு சௌகரியத்திலேயே இருக்குமா? என் இருதயத்தை ஆறுதல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? இந்த நேரத்தில், நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்? நீங்கள் என் வார்த்தைகளுக்கு ஒப்புக்கொடுப்பீர்களா அல்லது அவற்றில் சோர்வடைவீர்களா? எனது நாள் உங்கள் கண்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் எதிர்கொள்வது ஒரு புதிய வாழ்க்கை மற்றும் ஒரு புதிய தொடக்கப் புள்ளியாகும். இருப்பினும், இந்தத் தொடக்கப் புள்ளி கடந்த புதிய வேலையின் ஆரம்பம் அல்ல, ஆனால் பழைய வேலையின் முடிவு என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அதாவது, இதுதான் இறுதிச் செயல். இந்தத் தொடக்கப் புள்ளி பற்றிய அசாதாரணமானது எது என்பதை உங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இருப்பினும், விரைவில் ஒரு நாளில், இந்தத் தொடக்க புள்ளியின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், எனவே நாம் அதை ஒன்றாகக் கடந்து சென்று, வரவிருக்கும் முடிவை வரவேற்போம்! ஆனாலும், உங்களைப் பற்றிய எனது தொடர்ச்சியான கவலை என்னவென்றால், அநீதியையும் நீதியையும் எதிர்கொள்ளும்போது, நீங்கள் எப்போதும் முந்தையதையே தேர்வு செய்கிறீர்கள். இருப்பினும், இவை எல்லாம் உங்கள் கடந்த காலத்தில் நடந்தவை. இதைச் செய்வது மிகவும் கடினம் என்றாலும், நான் உங்களுடைய கடந்த காலச் செயல்கள் அனைத்தையும் மறந்துவிடுவேன் என்று நம்புகிறேன். ஆனாலும், அதைச் செய்வதற்கான மிகவும் சிறந்த வழிமுறை என்னிடம் உள்ளது: எதிர்காலம் கடந்த காலத்தை மாற்றட்டும், உங்களுடைய இன்றைய உண்மையான சுயத்தைக் கொடுத்து உங்கள் கடந்த காலத்தின் நிழல்களைப் போக்க விடுங்கள். எனவே ஒரு முறைக்கூட தேர்வு செய்ய நான் உங்களைத் தொந்தரவு செய்துதான் ஆகவேண்டும்: நீங்கள் உண்மையில் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க