தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 332

மார்ச் 21, 2023

இப்போது நீங்கள் உயிர்வாழும் ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியமானதாகும், இது உங்கள் இலக்குக்கும் உங்கள் விதிக்கும் மிகவும் முக்கியமானதாகும், எனவே இன்று உங்களிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் பேணி பாதுகாக்க வேண்டும், மற்றும் கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்தையும் பொக்கிஷமாக சேர்த்துவைக்கவேண்டும். நீங்கள் இந்த வாழ்க்கையை வீணாக வாழ்ந்திருக்காத விதத்தில், உங்களால் முடிந்தவரை அதிக ஆதாயங்களைப் பெறும் விதத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் செலவழித்து உங்களை செதுக்கவேண்டும். நான் ஏன் இதுபோன்ற வார்த்தைகளைப் பேசுகிறேன் என்று நீங்கள் குழப்பமடையலாம். வெளிப்படையாகச் சொல்வதானால், உங்கள் யாருடைய நடத்தையிலும் எனக்குச் சிறிதளவும் மகிழ்ச்சியில்லை, ஏனென்றால் உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைகள் இன்று நீங்கள் இருப்பது போல இல்லை. அதனால்தான், நான் இப்படிச் சொல்கிறேன்: நீங்கள் ஒவ்வொருவரும் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள், உங்கள் கடந்த காலம் உதவிக்காக கண்ணீர் வடிக்கிறது, மேலும் சத்தியத்தைத் தொடர்வதற்கான மற்றும் வெளிச்சத்தைத் தேடுவதற்கான முன்னாள் இலக்குகள் அவற்றின் முடிவை நெருங்குகின்றன. இதுதான் உங்கள் கைமாற்றின் இறுதிக் காட்சி, இது நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்றாகும். நீங்கள் என்னைப் பெரிதும் ஏமாற்றிவிட்டீர்கள் என்பதற்காக உண்மைகளுக்கு மாறாக நான் பேச விரும்பவில்லை. ஒருவேளை இதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம், நிஜத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம், ஆனாலும் நான் இதை உங்களிடம் கண்டிப்பாகக் கேட்டாக வேண்டும்: இத்தனை வருடங்கள், உங்கள் இருதயங்கள் சரியாக எதனால் நிரப்பப்பட்டுள்ளன? அவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன? இந்தக் கேள்விகளை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லாதீர்கள், நான் ஏன் இதுபோன்ற காரியங்களைக் கேட்டேன் என்று என்னிடம் கேட்காதீர்கள். இதை அறிந்து கொள்ளுங்கள்: ஏனென்றால் உங்களை எனக்கு நன்றாக தெரியும், உங்கள் மீது மிகவும் அதிகமாக அக்கறை காட்டுகிறேன், உங்கள் நடத்தையிலும் செய்கைகளிலும் எனது இருதயத்தை மிகவும் அதிகமாக ஈடுபடுத்தியுள்ளேன், எனவே நிறுத்தாமலும் கசப்பான மனநிலை கொள்ளாமலும் உங்கள் தவறுக்குக் கணக்குக் கொடுக்குமாறு உங்களை அழைத்திருக்கிறேன். ஆனாலும் நீங்கள் எனக்கு அக்கறையின்மையையும் தாங்க முடியாத பிரிவையும் தவிர வேறு எதையும் திருப்பித் தரவில்லை. நீங்கள் என்னைக் குறித்து மிகவும் அலட்சியமாக இருக்கிறீர்கள்; எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்க சாத்தியமுள்ளதா? நீங்கள் இதைத்தான் நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையிலேயே என்னை தயவுடன் நடத்தவில்லை என்பதையே இது மேலும் நிரூபிக்கிறது. எனவே, உங்கள் தலைகளை நீங்கள் மணலில் புதைக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள் என்று கூட தெரியாத அளவுக்கு மிகவும் சாமர்த்தியமானவர்களாக இருக்கிறீர்கள், அப்படியானால் எனக்குக் கணக்குக் கொடுப்பதற்கு நீங்கள் எதைப் பயன்படுத்துவீர்கள்?

என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்கிற கேள்வி என்னவென்றால், உங்கள் இருதயங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள், யாருக்காக வாழ்கிறீர்கள் என்று உங்களுக்குள்ளேயே கேட்க முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் இந்த கேள்விகளைப் பற்றி ஒருபோதும் கவனமாக சிந்திக்காமல் இருந்திருக்கலாம், எனவே நான் உங்களுக்குப் பதில்களை வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும்?

மனிதன் தனக்காகவே வாழ்கிறான், தனக்கே விசுவாசமாக இருக்கிறான் என்ற உண்மையை ஞாபகசக்தி கொண்ட எவரும் ஒப்புக்கொள்வார்கள். உங்கள் பதில்கள் முற்றிலும் சரியாக இருக்கும் என்று நான் நம்பமாட்டேன், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த வாழ்க்கையில் வாழ்கிறீர்கள், ஒவ்வொருவரும் உங்கள் சொந்தத் துயரத்தில் துயரப்படுகிறீர்கள். நீங்கள் நேசிக்கிறவர்களுக்கும், உங்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களுக்குமே விசுவாசமாக இருக்கிறீர்கள்; நீங்கள் உங்களுக்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சுற்றியுள்ள மக்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்களால் தூண்டப்படுவதனால், நீங்கள் உண்மையிலேயே உங்களுக்கு விசுவாசமாக இல்லை. நீங்கள் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்காக அல்ல, ஏதாவது ஒரு காரியத்தில் உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதற்காகவே நான் இந்த வார்த்தைகளைப் பேசுகிறேன், ஏனென்றால் பல வருடங்களாக, உங்களில் யாரிடமிருந்தும் நான் ஒருபோதும் விசுவாசத்தைப் பெறவில்லை. இத்தனை வருடங்கள் நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் என் மீது சிறிதளவு கூட விசுவாசத்தைக் காண்பிக்கவில்லை. மாறாக, நீங்கள் நேசிக்கும் நபர்களையும் உங்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களையும் சுற்றியே பெரிதும் வலம் வந்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் எல்லா நேரங்களிலும், அவற்றை உங்கள் இருதயங்களுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறீர்கள், அவற்றை ஒருபோதும் கைவிடவில்லை. நீங்கள் நேசிக்கிற எந்தவொரு காரியத்தைப் பற்றியும் நீங்கள் ஆர்வமாக அல்லது ஆவலாக இருக்கும்போதெல்லாம், நீங்கள் என்னைப் பின்பற்றும் போது அல்லது என் வார்த்தைகளைக் கேட்கும்போதுகூட இதுதான் நடக்கிறது. ஆகையால், நான் உங்களிடம் கேட்கும் விசுவாசத்தை, நீங்கள் விரும்பும் உங்களது "விருப்பமானவைகளுக்கு" பயன்படுத்தி எனக்குப் பதிலாக அவைகளுக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்லுகிறேன். நீங்கள் எனக்காக ஒன்று அல்லது இரண்டு காரியங்களைத் தியாகம் செய்தாலும், அது உங்களுக்குரிய அனைத்தையும் குறிப்பிடாது, மேலும் நீங்கள் உண்மையிலேயே எனக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அது காண்பிக்காது. உங்களுக்கு ஆர்வமுள்ள காரியங்களிலேயே நீங்கள் ஈடுபாட்டுடன் காணப்படுகிறீர்கள்: சிலர் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், மற்றவர்கள் கணவன்மார்கள், மனைவிமார்கள், செல்வம், வேலை, மேலதிகாரிகள், அந்தஸ்து அல்லது பெண்கள் ஆகியோருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். நீங்கள் விசுவாசமாக இருக்கும் காரியங்களைப் பற்றி நீங்கள் ஒருபோதும் சோர்வாகவோ அல்லது எரிச்சலாகவோ உணர மாட்டீர்கள்; மாறாக, இந்தக் காரியங்களை அதிக அளவிலும் உயர் தரத்திலும் வைத்திருக்க நீங்கள் இன்னும் ஆர்வம் கொள்வீர்கள், நீங்கள் ஒருபோதும் அவற்றை விட்டுவிட மாட்டீர்கள். நானும் எனது வார்த்தைகளும் நீங்கள் ஆர்வமாக இருக்கிற பொருட்களுக்குப் பின்னாலேயே தள்ளப்படுகிறோம். அவற்றை கடைசியாக வரிசைப்படுத்துவதற்கு உங்களுக்கு வேறு வழியில்லை. தாங்கள் விசுவாசமாக இருக்கிற காரியங்களை கடைசி இடத்தில் வைக்கிறவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. அவர்களுடைய இருதயங்களில் என்னைப் பற்றிய ஒரு சிறிய தடயம்கூட இருப்பதில்லை. நான் உங்களிடம் அதிகம் கேட்பதாக அல்லது உங்கள் மீது தவறாகக் குற்றஞ்சாட்டுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடும்போது, நீங்கள் ஒருபோதும் எனக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்ற உண்மையை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இது போன்ற நேரங்களில், இது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? உங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும்போதும், உங்கள் உழைப்புகளுக்காக நீங்கள் வெகுமதி பெறும்போதும், போதுமான சத்தியத்தினால் நீங்கள் நிரப்பப்படவில்லை என்று நீங்கள் சோகமாக உணரவில்லையா? எனது அங்கீகாரத்தைப் பெறாததற்காக நீங்கள் எப்போது அழுதீர்கள்? உங்கள் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும் உங்கள் மூளையை கசக்கிப் பிழிந்து மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் திருப்தியடையவில்லை; அவர்கள் சார்பாக நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்றும், அவர்களுக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்யவில்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். இருப்பினும், என்னைப் பற்றி நீங்கள் எப்போதும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் இருக்கிறீர்கள்; நான் உங்கள் நினைவுகளில் மட்டுமே இருக்கிறேன், ஆனால் நான் உங்கள் இருதயங்களில் வசிக்கவில்லை. எனது அர்ப்பணிப்பையும் முயற்சிகளையும் நீங்கள் ஒருபோதும் உணர்வதில்லை, நீங்கள் அவற்றை ஒருபோதும் பாராட்டியதில்லை. நீங்கள் சுருக்கமான பிரதிபலிப்பில் மட்டுமே ஈடுபடுகிறீர்கள், இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறீர்கள். நான் நீண்ட காலமாக ஏங்கிய "விசுவாசம்" இது அல்ல, ஆனால் நான் இதை நீண்ட காலமாக வெறுக்கிறேன். ஆனாலும், நான் என்ன சொன்னாலும், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு காரியங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறீர்கள்; உங்களால் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் நீங்கள் அனைவரும் மிகவும் "தன்னம்பிக்கையுடன்" இருக்கிறீர்கள், நான் பேசிய வார்த்தைகளிலிருந்து எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் எப்போதும் தேர்வு செய்கிறீர்கள். நீங்கள் இன்றும் இவ்வாறே இருந்தால், உங்கள் தன்னம்பிக்கையைக் கையாள்வதற்கான சில வழிமுறைகள் என்னிடம் உள்ளன. மேலும் என்னவென்றால், எனது வார்த்தைகள் அனைத்தும் சத்தியமானவை என்றும், அவற்றில் எதுவும் சத்தியங்களைச் சிதைக்காது என்றும் உங்களை ஒப்புக்கொள்ள வைப்பேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க