தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 397

மார்ச் 12, 2023

தேவனைப் பின்தொடர்வதில் பிரதானமான முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய தேவனுடைய வார்த்தைகளின்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதே: நீங்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதை அல்லது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைப் பின்தொடர்ந்தாலும், எல்லாம் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். நீ பேசுவதும் பின்பற்றுவதும் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், நீ தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியனாகவும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை முற்றிலுமாக இழந்தவனாகவும் இருக்கிறாய். தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களை தேவன் விரும்புகிறார். நீ முன்பு புரிந்துகொண்டது எவ்வளவு அற்புதமானதாக மற்றும் தூய்மையானதாக இருந்தாலும், தேவன் அதை விரும்புவதில்லை. இதுபோன்ற விஷயங்களை உன்னால் ஒதுக்கி வைக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் உன் பிரவேசத்துக்கு அவை மிகப்பெரிய தடையாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய ஒளியைப் பின்பற்றக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். கடந்த கால ஜனங்களும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினர், ஆனாலும் அவர்களால் இன்று வரை பின்பற்ற முடியவில்லை. இது கடைசி நாட்களின் ஜனங்களுடைய ஆசீர்வாதமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றக்கூடியவர்கள், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றக்கூடியவர்கள், அதாவது தேவன் அவர்களை வழிநடத்தும் இடங்களிலெல்லாம் அவற்றைப் பின்பற்றுகிறவர்கள்—இவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றாதவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் கிரியையில் பிரவேசித்திருக்கவில்லை, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர்களுடைய துன்பங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவர்கள் எவ்வளவாக ஓடுகிறார்கள் என்றாலும், இவை எதுவும் தேவனுக்கு ஒரு பொருட்டாகாது மேலும் அவர் அவர்களைப் பாராட்ட மாட்டார். இன்று, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்தில் இருக்கிறார்கள். இன்று தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியர்களாக இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அத்தகையவர்கள் தேவனால் பாராட்டப்படுவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளிலிருந்து விலகிச் செல்லும் ஊழியம் என்பது மாம்சத்திற்கும் கருத்துகளுக்கும் உரிய ஊழியமாகும் மற்றும் அது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருப்பதற்கு சாத்தியமில்லை. ஜனங்கள் மதக் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவித்தால், அவர்களால் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற எதையும் செய்ய இயலாது மற்றும் அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்தாலும், அவர்கள் கற்பனைகளுக்கும் கருத்துக்களுக்கும் நடுவே ஊழியம் செய்கிறார்கள் மற்றும் அவர் சித்தத்திற்கு ஏற்ப ஊழியம் செய்ய அவர்களால் ஒருபோதும் இயலாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்ற முடியாதவர்களுக்கு தேவனுடைய சித்தம் புரிவதில்லை, தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் தேவனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது. தேவன் தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கும் ஊழியத்தை விரும்புகிறார். கருத்துக்கள் மற்றும் மாம்சத்துக்குரிய ஊழியத்தை அவர் விரும்புவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் படிகளைப் பின்பற்ற ஜனங்களால் இயலாது என்றால், அவர்கள் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவிக்கிறார்கள். அத்தகையவர்களின் ஊழியம் குறுக்கிட்டு, தொந்தரவு செய்கிறது, மேலும் அத்தகைய ஊழியம் தேவனுக்கு முரணாக இயங்குகிறது. இவ்வாறு தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்களால் தேவனுக்கு ஊழியஞ்செய்ய இயலாது. தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்கள் நிச்சயமாக தேவனை எதிர்க்கிறார்கள் மற்றும் அவர்களால் தேவனுடன் ஒத்துப்போக இயலாது. இன்று தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், தேவனுடைய தற்போதைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடிவதும், இன்றைய தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்ற முடிவதும், தேவனுடைய புதிய வார்த்தைகளுக்கு ஏற்ப பிரவேசிப்பதும் என இவை "பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுதல்" என்பதன் அர்த்தமாகும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றி பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்தில் இருப்பவன் இவன்தான். அத்தகையவர்கள் தேவனுடைய புகழ்ச்சியைப் பெறுவது, தேவனைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களால் தேவனுடைய சமீபத்திய கிரியைகளிலிருந்து தேவனுடைய மனநிலையையும் அறிந்து கொள்ள முடியும் மற்றும் மனிதனுடைய கருத்துக்கள் மற்றும் கீழ்ப்படியாமை மற்றும் மனிதனுடைய சுபாவம் மற்றும் சாராம்சம் ஆகியவற்றை அவருடைய சமீபத்திய கிரியையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கள் தங்கள் ஊழியத்தின் போது படிப்படியாக அவர்களுடைய மனநிலையில் மாற்றங்களை அடைய முடியும். இது போன்றவர்கள் மட்டுமே தேவனை அடையக்கூடியவர்கள் மற்றும் உண்மையான வழியை உண்மையாகக் கண்டுபிடித்தவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் புறம்பாக்கப்பட்டவர்கள் தேவனுடைய சமீபத்திய கிரியையைப் பின்பற்றத் தகுதியற்றவர்கள் மற்றும் தேவனுடைய சமீபத்திய கிரியைக்கு எதிராகக் கலகம் செய்பவர்கள். அத்தகையவர்கள் தேவனை வெளிப்படையாக எதிர்ப்பது தேவன் புதிய கிரியையைச் செய்ததாலும், தேவனுடைய உருவம் அவர்களுடைய கருத்துக்களில் இருப்பதைப் போன்றதல்ல என்பதாலும் தான்—இதன் விளைவாக, அவர்கள் பகிரங்கமாக தேவனை எதிர்க்கிறார்கள், தேவன் மீது நியாயத்தீர்ப்பை வழங்குகிறார்கள். இதனால் தேவன் அவர்களை வெறுக்கிறார் மற்றும் நிராகரிக்கிறார். தேவனுடைய சமீபத்திய கிரியையைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பது எளிதான விஷயம் அல்ல, ஆனால் தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிவதற்கும் தேவனுடைய கிரியையைத் தேடுவதற்கும் ஜனங்களுக்கு மனமிருந்தால், தேவனைப் பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் புதிய வழிகாட்டுதலைப் பெற வாய்ப்பு கிடைக்கும். தேவனுடைய கிரியையை வேண்டுமென்றே எதிர்ப்பவர்களால் பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தையோ அல்லது தேவனுடைய வழிகாட்டலையோ பெற முடியாது. ஆகவே, தேவனுடைய சமீபத்திய கிரியையை ஜனங்கள் பெற முடியுமா இல்லையா என்பது தேவனுடைய கிருபையைப் பொறுத்தது, அவர்களுடைய பின்தொடர்தலைப் பொறுத்தது மற்றும் அவர்களுடைய நோக்கங்களைப் பொறுத்தது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க