தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 396

மார்ச் 12, 2023

ஆவிக்குரிய ஜீவிதம் எத்தகைய ஜீவிதம்? ஆவிக்குரிய ஜீவிதம் என்பது உன் இருதயம் முழுவதுமாக தேவனிடம் திரும்பியிருக்கிறதும், தேவனுடைய அன்பைக் கவனத்தில் கொள்ள முடியும் என்பதும் ஆகும். இது, தேவனுடைய வார்த்தைகளில் நீங்கள் ஜீவிப்பதும், வேறு எதுவும் உங்கள் இருதயத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதும், இன்று நீங்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது மற்றும் உங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக பரிசுத்த ஆவியானவரின் ஒளியால் இன்று வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதும் ஆகும். மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான அத்தகைய ஜீவிதமே ஆவிக்குரிய ஜீவிதமாக இருக்கிறது. இன்றைய ஒளியை உன்னால் பின்பற்ற முடியவில்லை என்றால், தேவனுடனான உன் உறவில் ஓர் இடைவெளி உருவாகி உள்ளது—அது துண்டிக்கப்பட்டிருக்கலாம்—மேலும் நீ இயல்பான ஆவிக்குரிய ஜீவிதம் இல்லாமல் இருக்கிறாய். தேவனுடனான ஓர் இயல்பான உறவு என்பது இன்று தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதற்கான அஸ்திபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உன்னிடம் இயல்பான ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கிறதா? உன்னிடம் தேவனுடனான இயல்பான உறவு இருக்கிறதா? நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுகிறவனா? இன்று நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் ஒளியைப் பின்பற்றவும், தேவனுடைய சித்தத்தை அவருடைய வார்த்தைகளுக்குள் புரிந்துகொள்ளவும், இந்த வார்த்தைகளில் பிரவேசிக்கவும் முடிந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தைப் பின்பற்றுகிற ஒருவராக இருக்கிறீர்கள். நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தைப் பின்பற்றவில்லை என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி சத்தியத்தைப் பின்பற்றாத ஒருவனாக நீ இருக்கிறாய். தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் செயல்பட வாய்ப்பேயில்லை, இதன் விளைவாக, அத்தகையவர்களால் ஒருபோதும் தங்கள் பெலனை வரவழைத்துக் கொள்ள முடியாது மற்றும் அவர்கள் எப்போதும் செயலற்றவர்களாக இருப்பார்கள். இன்று, நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தைப் பின்பற்றுகிறாயா? நீ பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தில் இருக்கிறாயா? நீ ஒரு செயலற்ற நிலையில் இருந்து வெளிவந்திருக்கிறாயா? இன்று, தேவனுடைய வார்த்தைகளை நம்புகிற அனைவரும், தேவனுடைய கிரியையை அஸ்திபாரமாக எடுத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரின் ஒளியைப் பின்பற்றுகிற அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தில் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையானவை மற்றும் சரியானவை என்று நீ நம்பினால், தேவன் எதைச் சொன்னாலும் அவருடைய வார்த்தைகளை நீ நம்பினால், நீ தேவனுடைய கிரியைக்குள் பிரவேசிப்பதை நாடும் ஒருவனாக இருக்கிறாய், இவ்வாறு நீ தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறாய்.

பரிசுத்த ஆவியானவரின் தொடரியக்கத்தினுள் பிரவேசிக்க, நீங்கள் தேவனோடு ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்க வேண்டும், முதலில் உங்கள் செயலற்ற நிலையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் கூட்டத்தைப் பின்தொடர்கிறார்கள், அவர்களுடைய இருதயங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. அத்தகையவர்களுக்குத் தங்களை மேம்படுத்திக்கொள்ள விருப்பமில்லை, மேலும் அவர்கள் பின்பற்றும் தரங்களும் மிகவும் தரம் தாழ்ந்தவை. தேவனை நேசிப்பதில் உள்ள பின்தொடர்தலும், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதும் மட்டுமே தேவனுடைய சித்தமாக இருக்கிறது. தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்த தங்கள் மனசாட்சியை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் உள்ளனர், ஆனால் அது தேவனுடைய சித்தத்தைப் பூர்த்தி செய்யாது. நீ பின்பற்றும் தரநிலைகள் எவ்வளவு உயர்வாக இருக்கிறதோ, அவ்வளவாக அது தேவனுடைய சித்தத்திற்கு உகந்ததாக இருக்கும். இயல்பானவராகவும், தேவனுக்கான அன்பைப் பின்பற்றுபவராகவும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராகவும் மாறுவதற்கு ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதே உங்கள் உண்மையான எதிர்காலமாக இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதமாக இருக்கிறது. உங்களை விட அதிக பாக்கியவான்கள் யாரும் இல்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? ஏனென்றால், தேவனை நம்பாதவர்கள் மாம்சத்திற்காக ஜீவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் சாத்தானுக்காக ஜீவிக்கிறார்கள், ஆனால் இன்று நீங்கள் தேவனுக்காக ஜீவிக்கிறீர்கள் மற்றும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஜீவிக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் ஜீவிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்கிறேன். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இந்த ஜனக்கூட்டத்தால் மட்டுமே, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதத்தை ஜீவிக்க முடிகிறது: பூமியில் வேறு எவராலும் அத்தகைய மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள ஜீவிதத்தை ஜீவிக்க முடியவில்லை. ஏனென்றால், நீங்கள் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள், தேவனால் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும், தேவன் உங்களிடம் அன்பு காட்டியிருக்கிறார் என்பதால், நீங்கள் உண்மையான ஜீவிதத்தைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள், மற்றும் மிக உயர்ந்த மதிப்புள்ள ஜீவிதத்தை எவ்வாறு ஜீவிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். இது உங்களது பின்தொடர்தல் நல்லதாக இருப்பதால் அல்ல, ஆனால் தேவனுடைய கிருபையால் அவ்வாறு இருக்கிறது. உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்தவர் தேவன், உங்கள் இருதயத்தைத் தொட்டவர் தேவனுடைய ஆவியானவர் மற்றும் அவருக்கு முன்பாக வருவதற்கான நல்ல அதிர்ஷ்டத்தை அவரே உங்களுக்குத் தருகிறார். தேவனுடைய ஆவி உங்களை பிரகாசிப்பித்திருக்கவில்லை என்றால், உங்களால் தேவனைப் பற்றிய அழகான காரியங்களைக் காண இயலாது மற்றும் தேவனை நேசிப்பதும் உங்களுக்கு சாத்தியமற்றதாகும். தேவனுடைய ஆவியானவர் ஜனங்களுடைய இருதயங்களைத் தொட்டதால் மட்டுமே அவர்களுடைய இருதயங்கள் தேவனிடம் திரும்பியுள்ளன. சில நேரங்களில், நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்கும்போது, உங்கள் ஆவி தொடப்படுகிறது, தேவனை நேசிப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதாகவும், உங்களுக்குள் பெரும் பெலன் இருப்பதாகவும், நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாத எதுவும் இல்லை என்பதாகவும் நீங்கள் உணர்கிறீர்கள். நீ இப்படி உணர்ந்தால், நீ தேவனுடைய ஆவியால் தொடப்பட்டிருக்கிறாய், உன் இருதயம் முற்றிலுமாக தேவனிடம் திரும்பிவிட்டது. "தேவனே! நாங்கள் உண்மையிலேயே உம்மால் முன்குறிக்கப்பட்டு தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம். உமது மகிமை எனக்குப் பெருமையைத் தருகிறது, மற்றும் உம் ஜனங்களில் ஒருவனாக இருப்பது எனக்கு மகிமையைத் தருகிறது. உமது சித்தத்தைச் செய்ய நான் எதையும் செலவழிப்பேன் மற்றும் எதையும் கொடுப்பேன் மற்றும் என் வருடங்கள் மற்றும் என் ஜீவ கால முயற்சிகள் அனைத்தையும் உமக்காக அர்ப்பணிப்பேன்," என்று ஜெபித்து நீ தேவனிடம் சொல்வாய். நீ இப்படி ஜெபிக்கும்போது, தேவனுக்கான முடிவில்லாத அன்பும், உண்மையானக் கீழ்ப்படிதலும் உன் இருதயத்தில் இருக்கும். இது போன்ற ஒரு அனுபவம் எப்போதாவது உனக்கு இருந்திருக்கிறதா? ஜனங்கள் அடிக்கடி தேவனுடைய ஆவியானவரால் தொடப்படும்போது, அவர்கள் குறிப்பாகத் தங்கள் ஜெபங்களில் தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார்கள்: "தேவனே! உமது மகிமையின் நாளைக் காண நான் விரும்புகிறேன், மேலும் நான் உமக்காக ஜீவிக்க விரும்புகிறேன்—உமக்காக ஜீவிப்பதை விட வேறு எதுவும் தகுதியானதாகவோ அர்த்தமுள்ளதாகவோ இல்லை, மற்றும் சாத்தானுக்காகவும் மாம்சத்துக்காகவும் ஜீவிக்க எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. இன்று உமக்காக ஜீவிக்க எனக்கு உதவுவதன் மூலம் நீர் என்னை உயர்த்துகிறீர்." நீ இவ்வாறு ஜெபித்தவுடன், உன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது என்றும், தேவனைப் பெற வேண்டும் என்றும், நீங்கள் ஜீவனுடன் இருக்கும்போது தேவனைப் பெறாமல் இறப்பதை வெறுக்கிறீர்கள் என்றும் நீங்கள் உணருவீர்கள். அத்தகைய ஜெபத்தை ஏறெடுத்தப் பிறகு, உங்களுக்குள் ஒரு சோர்வடையாத பெலன் இருக்கும், மேலும் அது எங்கிருந்து வருகிறது என்பது உனக்குத் தெரியாது. உன் இருதயத்தில் எல்லையற்ற வல்லமை இருக்கும் மற்றும் தேவன் மிகவும் அழகானவர், அவர் நேசிக்கத் தகுந்தவர் என்பதையும் நீ உணர்வாய். அப்போதுதான் நீங்கள் தேவனால் தொடப்பட்டிருப்பீர்கள். அத்தகைய அனுபவத்தைப் பெற்ற அனைவருமே தேவனால் தொடப்பட்டிருக்கிறார்கள். தேவனால் அடிக்கடி தொடப்படுவோருக்கு, அவர்களுடைய ஜீவிதத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவர்களால் தீர்மானத்தை எடுக்க முடிகிறது மற்றும் அவர்கள் தேவனை முழுமையாக அடையத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இருதயங்களில் தேவன் மீதுள்ள அன்பு வலுவாக இருக்கிறது. அவர்களுடைய இருதயங்கள் முழுமையாகத் தேவனிடம் திரும்பியுள்ளன, குடும்பம், உலகம், சிக்கல்கள் அல்லது தங்கள் எதிர்காலம் ஆகியவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை மற்றும் அவர்கள் ஜீவகாலம் முழுவதும் தங்கள் முயற்சிகளை தேவனுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரால் தொடப்பட்டிருக்கிற அனைவரும் சத்தியத்தைப் பின்பற்றும் ஜனங்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க