தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 395

மார்ச் 12, 2023

இப்போது, நீங்கள் தேவனுடைய ஜனங்களாக மாறுவதை நாட வேண்டும் மற்றும் முழு பிரவேசத்தையும் சரியான பாதையில் தொடங்க வேண்டும். தேவனுடைய ஜனங்களாக இருப்பது என்பது, ராஜ்யத்தின் யுகத்திற்குள் பிரவேசிப்பதைக் குறிக்கிறது. இன்று, நீங்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகிறீர்கள். உங்கள் எதிர்கால ஜீவிதம் முன்பு இருந்ததைப் போலவே மந்தமானதாகவும், ஒழுங்கற்றதாகவும் இருப்பது நிறுத்தப்படும். அவ்வாறு ஜீவிப்பதால், தேவனால் எதிர்பார்க்கப்படும் தரங்களை அடைவது சாத்தியமற்றதாக இருக்கிறது. எந்த அவசரத்தையும் நீ உணரவில்லை என்றால், அது உன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான விருப்பம் உனக்கு இல்லை என்பதையும், உன் பின்தொடர்தல் குழப்பமானதாகவும் புரியாததாகவும் இருப்பதையும், தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதையும் காட்டுகிறது. ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது என்பது தேவனுடைய ஜனங்களின் ஜீவிதத்தைத் தொடங்குவதாகும்—இதுபோன்ற பயிற்சியை ஏற்க நீ தயாராக இருக்கிறாயா? அவசர உணர்வை உணர நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய ஒழுங்குபடுத்தலின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய சிட்சையின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகள் உன் மீது வந்து உன்னைச் சோதிக்கும்போது, நீ எவ்வாறு செயல்படுவாய்? எல்லா விதமான உண்மைகளையும் எதிர்கொள்ளும்போது நீ என்ன செய்வாய்? கடந்த காலத்தில், உங்கள் கவனம் ஜீவிதத்தில் இல்லை. இன்று, நீங்கள் ஜீவிதத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். இதைத்தான் ராஜ்யத்தின் ஜனங்கள் அடைய வேண்டும். தேவனுடைய ஜனங்களாகிய அனைவரும் ஜீவனைக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுடைய ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். ராஜ்யத்தின் ஜனங்களிடம் தேவன் எதிர்பார்ப்பது இதுதான்.

ராஜ்யத்தின் ஜனங்களிடமான தேவனுடைய எதிர்பார்ப்புகள் பின்வருமாறு இருக்கின்றன:

1. அவர்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்க வேண்டும். அதாவது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையில் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்க வேண்டும்.

3. தங்கள் இருதயங்கள் தேவன் தொடும்படியாக அவர்கள் பின்பற்ற வேண்டும். உன் இருதயம் முழுவதுமாக தேவனிடமாய்த் திரும்பி, உனக்கு ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கும்போது, நீ விடுதலையின் உலகில் ஜீவிப்பாய், அதாவது தேவனுடைய அன்பின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் நீ ஜீவிப்பாய். நீ தேவனுடைய கவனிப்பிலும் பாதுகாப்பிலும் ஜீவிக்கும்போதுதான் நீ தேவனுக்குச் சொந்தமானவனாக இருப்பாய்.

4. அவர்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும்.

5. அவர்கள் பூமியில் தேவனுடைய மகிமையின் ஒரு வெளிப்பாடாக மாற வேண்டும்.

இந்த ஐந்து காரியங்களும் உங்களுக்கான எனது ஆணைகளாக இருக்கின்றன. என் வார்த்தைகள் தேவனுடைய ஜனங்களிடம் பேசப்படுகின்றன. இந்த ஆணைகளை நீ ஏற்க விரும்பவில்லை என்றால், நான் உன்னை நிர்ப்பந்திக்க மாட்டேன்—ஆனால் நீ அவற்றை உண்மையாக ஏற்றுக்கொண்டால், உன்னால் தேவனுடைய சித்தத்தைச் செய்ய முடியும். இன்று, நீங்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்கத் தொடங்குகிறீர்கள் மற்றும் ராஜ்யத்தின் ஜனங்களாக மாறுவதைத் தொடர நாடுகிறீர்கள், மேலும் ராஜ்யத்தின் ஜனங்களாக இருக்கத் தேவையான தரங்களை அடைகின்றீர்கள். இதுவே பிரவேசத்தின் முதல் படியாக இருக்கிறது. தேவனுடைய சித்தத்தை நீங்கள் முழுமையாகச் செய்ய விரும்பினால், இந்த ஐந்து ஆணைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை உன்னால் அடைய முடிந்தால், நீ தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருப்பாய் மற்றும் நிச்சயமாக தேவன் உன்னைப் பெரிதளவில் பயன்படுத்துவார். இன்று முக்கியமானது என்னவென்றால், ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது தான். ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது ஆவிக்குரிய ஜீவிதத்தை உள்ளடக்கியது. முன்னதாக, ஆவிக்குரிய ஜீவிதத்தைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை, ஆனால் இன்று, நீங்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகையில், நீங்கள் அதிகாரப்பூர்வமாக ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிக்கிறீர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க