தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 394

அக்டோபர் 13, 2022

தேவன் மீதுள்ள விசுவாசத்தில், மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் உதட்டளவில் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையிலோ தேவன் முற்றிலுமாக இல்லை. எல்லா மக்களும், தேவன் இருப்பதை நம்புகிறார்கள், ஆனாலும் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. மக்களின் வாய்கள் தேவனிடம் அநேக ஜெபங்களை ஏறெடுக்கின்றன, ஆனால் தேவனுக்கு அவர்களின் இதயங்களிலோ சிறிதளவே இடமுள்ளது, எனவே தேவன் அவர்களை மீண்டும் மீண்டும் சோதிக்கிறார். மக்கள் தூய்மையற்றவர்களாக இருப்பதனால், அவர்களைச் சோதிப்பதைத் தவிர தேவனுக்கு வேறு வழியில்லை, இதனால் அவர்கள் அவமானகரமாக உணரலாம், இந்தச் சோதனைகளுக்கு மத்தியில் தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளலாம். இல்லையென்றால், மனிதர்கள் பிரதான தூதனின் சந்ததியினராக மாறுவார்கள், மேலும் மிகவும் சீர்கெட்டவர்களாக மாறுவார்கள். தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் செயல்பாட்டில், ஒவ்வொரு நபரும் தேவனின் இடைவிடாத சுத்திகரிப்பின் கீழ் தங்களின் பல தனிப்பட்ட நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விலக்குகிறார்கள். இல்லையென்றால், தேவன் யாரையும் பயன்படுத்துவதற்கான வழி இருக்காது, மேலும் அவர் செய்ய வேண்டிய கிரியையை மக்களிடம் செய்வதற்கும் வழி இருக்காது. தேவன் முதலில் மக்களைச் சுத்திகரிக்கிறார், இந்தச் செயல்முறையின் மூலம், அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளலாம், மேலும் தேவன் அவர்களை மாற்றக்கூடும். அப்போதுதான் தேவன் தம்முடைய ஜீவனை அவர்களுக்குள் கிரியை செய்ய வைக்கிறார், இதன் மூலமாக மட்டுமே அவர்களின் இருதயங்கள் முழுமையாக தேவனிடம் திரும்ப முடியும். எனவே நான் சொல்கிறேன், தேவனை விசுவாசிப்பது என்பது மக்கள் சொல்வது போல் எளிதானது அல்ல. தேவன் அதைப் பார்ப்பதனால், உனக்கு அறிவு மட்டுமே உண்டாயிருந்து, ஆனால் அவருடைய வார்த்தையை ஜீவனாகக் கொண்டிருக்கவில்லை என்றால், மேலும் நீ உன் சொந்த அறிவுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், சத்தியத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுடைய வார்த்தைப்படி வாழவோ முடியாவிட்டால், தேவனை நேசிக்கும் இருதயம் உன்னிடம் இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும், உன் இருதயம் தேவனுக்கு உரியதல்ல என்பதை இது காட்டுகிறது. ஒருவர் தேவனை விசுவாசிப்பதின் மூலம் அவரை அறிந்து கொள்ள முடியும்: இதுவே இறுதி இலக்கும், மனிதனின் நாட்டத்தின் குறிக்கோளும் ஆகும். தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும், இதனால் அவை உனக்கு நடைமுறையில் பலனளிக்கும். உன்னிடம் கோட்பாட்டு அறிவு மட்டுமே இருந்தால், தேவன் மீதான உன் விசுவாசம் வீணாகிவிடும். நீ அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே, உன் விசுவாசம் முழுமையானதாகவும், தேவனின் சித்தத்திற்கு இணங்கவும் இருப்பதாகக் கருத முடியும். இந்த வழியில், மக்கள் அதிகமாக அறிவு சார்ந்ததைப் பற்றி பேசலாம், ஆனால் அவர்கள் இறக்கும் போது, அவர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்புகின்றன, மேலும் அவர்கள் வாழ்நாளை வீணடித்ததற்காகவும், முதிர் வயது வரை வீணாக வாழ்ந்ததற்காகவும் தங்களை வெறுக்கிறார்கள். அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுக்குச் சாட்சிப் பகரவோ முடிவதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் வெறுமனே அங்கும் இங்கும் ஓடுகிறார்கள், ஒரு தேனீ போலச் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், மரணத்தின் விளிம்பில் வைத்துதான் அவர்களிடம் உண்மையான சாட்சியம் இல்லாததையும் அவர்கள் தேவனை அறியவில்லை என்பதையும் இறுதியாகக் காண்கிறார்கள். இது மிகவும் தாமதமானதாக இல்லையா? நீ ஏன் இன்றைய நாளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி நீ நேசிக்கும் சத்தியத்தைப் பின்பற்றக்கூடாது? நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாழ்க்கையில் நீ சத்தியத்திற்காகக் கஷ்டப்படாவிட்டால் அல்லது அதைப் பெற முயற்சிக்கவில்லை என்றால், மரிக்கும் நேரத்தில் நீ வருத்தப்பட விரும்புகிறாயா? அப்படியானால், ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? உண்மையாகவே, மக்கள் சிறிதளவு முயற்சி செய்தால், சத்தியத்தைக் கடைப்பிடிக்கலாம், அதன் மூலம் தேவனை திருப்திப்படுத்தலாம். மக்களின் இருதயங்கள் எப்போதுமே சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், அவர்கள் தேவனுக்காக செயல்பட முடியாமல் போகிறது, மேலும் அவர்களின் மாம்சத்திற்காக தொடர்ந்து விரைந்து செயல்படுகின்றனர், இறுதியில் அதைக்காட்ட எதுவும் இருப்பதில்லை. இந்தக் காரணத்திற்காக, மக்கள் தொடர்ந்து தொல்லைகள் மற்றும் சிரமங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை சாத்தானின் உபத்திரவம் அல்லவா? இது மாம்சத்தின் சீர்கேடு அல்லவா? நீ உதட்டளவில் பேசி தேவனை முட்டாளாக்க முயற்சிக்கக்கூடாது. மாறாக, நீ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உன்னையே நீ ஏமாற்ற வேண்டாம், அதில் பயன் என்ன? உன் மாம்சத்திற்காக வாழ்வதன் மூலமும், ஆதாயத்திற்காகவும் புகழுக்காகவும் போராடுவதன் மூலமும் உன்னால் என்ன பெற முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க