தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 391

அக்டோபர் 12, 2022

மனிதன் தேவனை விசுவாசிக்கத் தொடங்கியதிலிருந்து எதை மனிதன் தனக்கென்று ஆதாயப்படுத்தியுள்ளான்? நீ தேவனைக் குறித்து என்ன தெரிந்து கொண்டிருக்கிறாய்? நீ தேவனை விசுவாசித்ததினால் எவ்வளவு மாறியிருக்கிறாய்? இன்றைக்கு, மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது அவனது ஆத்துமாவின் இரட்சிப்பிற்காகவும், அவனது உடல் நன்றாக இருப்பதற்காகவும், அல்லது தேவனை நேசிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையினைச் செழிப்பாக்கிக் கொள்வான் என்பதற்காகவும் அல்ல என இப்படி அநேகமானவற்றை நீங்கள் யாவரும் அறிந்து இருக்கிறீர்கள். இப்படியாக இருக்கும் வேளையில், நீ உன்னுடைய உடல் சார்ந்தவை நன்றாக இருப்பதற்காக அல்லது தற்காலிக சுகத்திற்காக தேவனை நேசிக்கிறேன் என்றும், இதற்கு மேல் நான் எதனையும் கேட்க மாட்டேன் என்கிற அளவிற்கு தேவனிடத்தில் கொண்டிருக்கும் உன் அன்பு அதனுடைய உச்சத்தைத் தொட்டு விட்டதாக இருந்தாலும், நீ தேடும் அந்த அன்பு அவ்வேளையிலும் கலப்படமான அன்பாக, தேவனுக்குப் பிரியமில்லாத ஒன்றாகவே காணப்படுகிறது. அவர்களது மந்தமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அல்லது அவர்களது இருதயங்களில் இருக்கின்ற வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தேவன் மீது தாங்கள் கொண்டிருக்கின்ற அன்பைப் பயன்படுத்துபவர்கள் சுகமான வாழ்க்கை வாழ பேராசைக் கொண்டவர்களாகவும், தேவனிடத்தில் மெய்யான அன்புகூரும்படி தேவனை உண்மையாகத் தேடாத வகையைச் சேர்ந்த ஜனங்களாக இருக்கின்றனர். இந்தவித அன்பு கட்டாயத்தின் பேரில் உண்டாகிறது, இது மனதின் இன்பத்திற்கான நாட்டமாகும், தேவனுக்கு இப்படிப்பட்ட அன்பு தேவையில்லை. அப்படியென்றால், உன்னுடைய அன்பு எப்படிப்பட்டது? எதற்காக தேவனிடம் அன்புகூருகிறாய்? தேவன் மீது எவ்வளவு மெய்யான அன்பைத் தற்பொழுது உனக்குள் கொண்டிருக்கிறாய்? உங்களில் பெரும்பாலானவர்களின் அன்பு மேற்சொல்லிய அன்பைப் போன்றே காணப்படுகின்றது. இந்த விதமான அன்பினால் முன்பிருந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள மட்டுமே முடியும்; அது மாறாத நிலையை அடைய முடியாது அல்லது மனிதனுக்குள் ஆழமாக வேர்விட முடியாது. இந்த விதமான அன்பு மலரும் பூ ஒன்று கனி கொடுக்காமல் உதிர்ந்து விடுவதைப் போல் மட்டுமே இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இத்தகைய விதமாக தேவனை ஒரு கட்டத்தில் நேசித்துவிட்டு, உன்னை வழி நடத்துவதற்கு ஒருவரும் இல்லையென்றால், நீ விழுந்து போவாய். தேவனை நேசிக்கும் போது மட்டுமே உன்னால் தேவனை நேசிக்க முடிந்து, அதற்குப் பின் உன் வாழ்வின் மனநிலை மாற்றம் பெறாமல் இருக்கின்றது என்றால், நீ அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் மூடுதலில் இருந்து தப்பிக்க முடியாமல், சாத்தானின் கட்டுகள் மற்றும் சூழ்ச்சியில் இருந்து விடுபட முடியாதவனாக அப்படியே நின்று விடுவாய். இது போன்ற எவரையும் தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது; இறுதியில், அவர்களின் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இன்னும் சாத்தானுக்கு சொந்தமானதாகவே இருக்கும். இது குறித்து எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட முடியாத அனைவரும் ஆரம்பத்தில் இருந்த இடத்திற்குத் திரும்புவார்கள், அதாவது, சாத்தானிடத்திற்குத் திரும்பிச் செல்வார்கள் மற்றும் தேவனிடத்தில் இருந்து வருகிற அடுத்த படியான தண்டனையைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்குச் செல்வார்கள். சாத்தானை உதறித் தள்ளி விட்டு அவனது ஆதிக்கத்தில் இருந்து தப்பி வருபவர்களே தேவனால் ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுபவர்கள். அவர்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் மக்கள் மத்தியில் எண்ணப்பட்டிருக்கிறார்கள். ராஜ்யத்தின் மக்கள் இப்படித்தான் வருகிறார்கள். இந்த வகையான மனிதனாக நீயும் மாற விரும்புகிறாயா? நீயும் தேவனால் ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? நீயும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்து தேவனிடம் திரும்ப விரும்புகிறாயா? இப்பொழுது நீ சாத்தானுக்குரியவனா அல்லது ராஜ்யத்தின் ஜனமாக எண்ணப்பட்டவர்களில் ஒருவனாக இருக்கின்றாயா? இந்த விஷயங்கள் உனக்கு ஏற்கெனவே தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும், மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க