தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 389

மே 3, 2023

பேதுரு எனக்குப் பல ஆண்டுகளாக உண்மையுள்ளவனாக இருந்தான், ஆனாலும் அவன் ஒருபோதும் முணுமுணுக்கவுமில்லை, எந்த மனக்குறையும் கொண்டிருக்கவுமில்லை; யோபு கூட அவனுக்கு சமமானவன் அல்ல, யுகங்கள் முழுவதும், பரிசுத்தவான்கள் அனைவரும் பேதுருவைக் காட்டிலும் மிகக் குறைவுபட்டவர்களாகப் போனார்கள். அவன் என்னை அறிந்துகொள்ள முயன்றது மட்டுமல்லாமல், சாத்தான் அவனுடைய வஞ்சகத் திட்டங்களை மேம்படுத்திக் கொண்டிருந்த காலத்திலும் என்னை அறிந்துகொண்டான். இது பேதுருவைப் பல ஆண்டுகளாக எப்போதும் என் சித்தத்திற்கு ஏற்ப எனக்கு ஊழியம் செய்ய வழிவகுத்தது, இந்தக் காரணத்தினாலேயே, அவன் ஒருபோதும் சாத்தானால் அவனது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. பேதுரு யோபுவினுடைய விசுவாசத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டான், அதேவேளையில் யோபுவின் குறைபாடுகளையும் தெளிவாக உணர்ந்துகொண்டான். யோபு மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவனாக இருந்தபோதிலும், ஆவிக்குரிய உலகிலுள்ள காரியங்களைப் பற்றிய அறிவு அவனுக்கு இல்லாதிருந்தது, எனவே அவன் யதார்த்தத்துடன் பொருந்தாத பல வார்த்தைகளைக் கூறினான்; இது யோபுவினுடைய அறிவு ஆழமற்றது மற்றும் முழுமையற்றது என்பதைக் காண்பிக்கிறது. ஆகையால், பேதுரு எப்போதுமே ஆவியின் உணர்வைப் பெறுவதில் கவனம் செலுத்தினான், மேலும் ஆவிக்குரிய உலகத்தின் செயல்பாட்டைக் கூர்ந்து கவனிப்பதில் எப்போதும் கவனம் செலுத்தினான். இதன் விளைவாக, அவன் என் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்ள முடிந்தது என்பது மட்டுமின்றி, சாத்தானின் வஞ்சகத் திட்டங்களைப் பற்றி சிறிதளவு அறிவையும் கொண்டிருந்தான். இதன் காரணமாக, என்னைப் பற்றிய அவனது அறிவு யுகங்கள் முழுவதும் வேறு எவரையும் விட அதிகமாக வளர்ந்தது.

பேதுருவினுடைய அனுபவத்திலிருந்து, மனிதர்கள் என்னை அறிந்துகொள்ள விரும்புகிறார்களா என்று பார்ப்பது கடினமல்ல, அவர்கள் தங்கள் ஆவிகளுக்குள் கவனமாகப் பரிசீலனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீ ஒரு குறிப்பிட்ட தொகையை எனக்கு புறநிலையாக "அர்ப்பணிக்குமாறு" நான் கேட்கவில்லை; இது இரண்டாம் பட்சமானது. நீ என்னை அறியவில்லை என்றால், நீ பேசுகின்ற நம்பிக்கை, அன்பு, மற்றும் விசுவாசம் யாவும் மாயைகள் மட்டுமே; அவை குமிழிகளாக இருக்கின்றன, எனக்கு முன்பாகப் பெருமை பேசும், அதேவேளையில் தன்னைக் குறித்து அறியாத ஒருவனாக நீ மாறுவது உறுதி. இப்படி இருக்கும்போது, நீ மீண்டும் ஒரு முறை சாத்தானின் பிடிக்குள் சிக்கிக்கொள்வாய், பிறகு உன்னை நீயே விடுவித்துக் கொள்ள முடியாது; நீ கேட்டின் மகனாகவும் அழிவின் பொருளாகவும் மாறிவிடுவாய். இருப்பினும், நீ பாராமுகமாக என் வார்த்தைகளைக் கவனிக்காமல் இருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி நீ என்னை எதிர்க்கிறாய். இது உண்மை, நீ என்னால் தண்டிக்கப்பட்ட பல்வேறு மற்றும் பலதரப்பட்ட ஆவிகளை ஆவிக்குரிய உலகின் வாயில் வழியாகப் பார்க்க வேண்டும். அவற்றில் என் வார்த்தைகளை எதிர்கொண்டது, செயலற்றதல்லாதது, அக்கறையற்றது, மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எது? அவற்றில் என் வார்த்தைகளில் முரண்படாதது எது? அவற்றில் என் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடிக்க முயற்சிக்காதது எது? அவற்றில் தங்களைப் "பாதுகாத்துக்கொள்ள" என் வார்த்தைகளைத் "தற்காப்பு ஆயுதங்களாகப்" பயன்படுத்தாதது எது? அவர்கள் என் வார்த்தைகளின் உள்ளடக்கங்களை என்னை அறிந்துகொள்வதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தவில்லை, மாறாக விளையாடுவதற்கான பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்தினார்கள். இதில், அவர்கள் என்னை நேரடியாக எதிர்க்கவில்லையா? என்னுடைய வார்த்தைகள் யார்? என்னுடைய ஆவி யார்? இதுபோன்ற கேள்விகளை நான் உங்களிடம் பலமுறை கேட்டிருக்கிறேன், ஆனாலும் நீங்கள் அவைகளைப் பற்றிய உயர்ந்த மற்றும் தெளிவான நுண்ணறிவுகளைப் பெற்றிருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது உண்மையிலேயே அவற்றை அனுபவித்திருக்கிறீர்களா? நான் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்: நீங்கள் என் வார்த்தைகளை அறியவில்லை என்றால், அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவற்றைக் கடைபிடிக்காவிட்டால், பிறகு நீங்கள் தவிர்க்க முடியாதபடிக்கு என்னுடைய தண்டனைக்குரிய பொருட்களாக மாறிப்போவீர்கள்! நீங்கள் மெய்யாகவே சாத்தானுக்குப் பலியாகிப்போவீர்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 8" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க