தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 584

டிசம்பர் 23, 2022

நான் உங்கள் மத்தியில் அநேகக் கிரியைகளைச் செய்திருக்கிறேன் மேலும், நிச்சயமாகவே பல கூற்றுக்களையும் கூறியிருக்கின்றேன். இருந்தும் என் வார்த்தைகளும், என் கிரியைகளும் இந்தக் கடைசி நாட்களில் என் கிரியைகளுக்கான நோக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றவில்லை என்கிற உணர்வு ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. இந்தக் கடைசி நாட்களில் என் கிரியைகள் ஒரு குறிப்பிட்ட நபருக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களுக்காகவோ மாத்திரம் அல்ல, மாறாக என் உள்ளார்ந்த மனநிலையை வெளிப்படுத்தவே செய்யப்படுகின்றன. இருந்தும் எண்ணற்ற காரணங்களுக்காகவும், அதாவது, நேரமின்மை அல்லது தொடர்ந்த வேலை திட்டங்களாலும் என்னிடமிருந்து என் மனநிலையைப் பற்றி எந்த அறிவையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் நான் என் புதிய திட்டத்தையும் என் இறுதி கிரியையும் தொடங்கி, எனது கிரியையில் ஒரு புதிய பக்கத்தைத் திறக்கிறேன், இதனால் என்னைக் காண்பவர்கள் எல்லோரும் நான் ஜீவிப்பதன் நிமித்தம் தங்கள் மார்புகளில் அடித்துக்கொண்டு முடிவின்றி அழுது புலம்புவார்கள். இது ஏனென்றால் நான் இந்த உலகில் மனிதகுலத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவந்திருக்கிறேன், மேலும் இந்த நேரத்திலிருந்து என் மனநிலையையும் முழு மனிதகுலத்திற்கும் முன்பாக வைப்பேன், அப்பொழுது என்னை அறிந்தவர்கள் மற்றும் அறியாதவர்கள் அனைவரின் கண்களுக்கும் நான் விருந்தாவேன். நான் மெய்யாகவே இந்த மனு உலகத்திற்கும் எல்லாம் பலுகிப்பெருகுகிறதான நிலத்திற்கும் வந்திருக்கிறேன் என்றும் எல்லாக் கண்களும் காணும். இதுவே என் திட்டமும் நான் மனிதகுலத்தைப் படைத்ததுமுதல் எனது ஒரே "அறிக்கையாகவும்" இருக்கின்றது. என்னுடைய கோல் மீண்டும் ஒருமுறை மனிதகுலத்திற்கும், எனக்கு விரோதமாக இருக்கும் அனைவருக்கும் சமீபமாக வைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் என்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் உங்கள் சிதறாத கவனத்தைத் தரலாம்.

வானாதி வானங்களோடும் கூட இணைந்து, நான் செய்யவேண்டிய காரியத்தைத் தொடங்கினேன். எனவே நான் திரளான ஜனங்களிடத்திற்குள்ளாக உட்புகுந்து, யாரும் என் அசைவுகளை உணராதபடியும் அல்லது என் வார்த்தைகளைக் கவனியாதபடியும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே அசைவாடுகிறேன். எனவே, என் திட்டம் சீராக முன்னேறி வருகின்றது. உங்களுடைய புலன்கள் மிகவும் உணர்வு இல்லாமல் போய்விட்டதால், என் கிரியையின் படிநிலைகளை நீங்கள் அறியவில்லை. ஆனால் நிச்சயமாகவே ஒரு நாள் வரும் அப்போது என் உள்ளார்ந்த நோக்கத்தை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். இன்று நான் உங்களுடனே வாழ்ந்து, உங்களுடனே பாடு அனுபவிக்கின்றேன், மேலும் மனுக்குலம் என்னைக் குறித்துக் கொண்டிருக்கும் மனநிலையையும் நான் வெகுகாலமாய்ப் புரிந்துவைத்துக் கொண்டிருக்கின்றேன். நான் இதைக் குறித்து இன்னும் அதிகமாகப் பேச விரும்பவில்லை. நான் இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை, இந்த வலிமிகுந்த பாடத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகளைத் தந்து உங்களுக்கு இலச்சையைக் கொண்டுவரவும் விரும்பவில்லை. நீங்கள் செய்தவற்றை எல்லாம் உங்கள் இருதயத்தில் நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்வீர்கள் என்று மாத்திரம் நான் நம்புகிறேன், இதனால் நாம் மீண்டும் சந்திக்கும்போது நம் கணக்குகளைச் சரிசெய்துகொள்ளலாம். நான் எப்போதும் நீதியோடும், நியாயத்தோடும் மற்றும் மரியாதையுடனும் நடந்துகொள்வதால், உங்களில் ஒருவரையும் தவறாகக் குற்றம்சாட்ட விரும்புவதில்லை. நீங்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றும், உங்கள் மனசாட்சியின்படி விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்கும் விரோதமாகச் செல்லக்கூடிய எதையும் நீங்கள் செய்திராதபடி இருக்க வேண்டும் என்றும் நம்புகிறேன். நான் உங்களிடம் கேட்கும் ஒரே காரியம் இதுதான். கொடூரமான பாவங்களைச் செய்ததினால் பலர் இளைப்பாறுதலின்றி எளிதில் புண்படுபவர்களாக உணருகிறார்கள், ஒரு நற்கிரியையும் செய்யாததினால் பலர் தங்களைக்குறித்தே வெட்கமடைந்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்படுவதை விடுத்து என் மனநிலையைச் சோதிக்கும்படி இன்னும் வெளியரங்கமாகாத தங்கள் அருவருப்பான அம்சங்களை மறைக்கிறதான முகமூடிகளை முற்றிலுமாகக் களைந்துவிட்டு மோசத்திலிருந்து அதிக மோசத்திற்குக் கடந்து செல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மனிதனின் செயல்பாடுகளைக் குறித்து நான் அக்கறை கொள்வதோ அல்லது அதில் கவனம் செலுத்துவதோ இல்லை. மாறாக, தகவல்களைச் சேகரிப்பதாக இருந்தாலும், அல்லது இந்தப் பூமியில் பயணிப்பதாக இருந்தாலும் அல்லது என் ஆர்வத்திற்குட்பட்டு ஏதாவது செய்வதாக இருந்தாலும் நான் செய்ய வேண்டிய கிரியையை மாத்திரமே செய்கிறேன். முக்கியமான நேரங்களில், நான் ஆரம்பத்தில் திட்டமிட்டபடி மனிதரின் மத்தியில் ஒரு நொடி தாமதமாகவோ அல்லது விரைவாகவோ இல்லாமல் இயல்பாகவும், சீராகவும் என் கிரியைகளைத் தொடருகிறேன். ஆனாலும், என் கிரியையின் ஒவ்வொரு படியிலும் நான் அவர்களது முகஸ்துதியையும், பொய்யான தாழ்ச்சியையும் வெறுப்பதினால் சிலர் புறந்தள்ளப்படுகின்றனர். வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ என்னால் வெறுக்கப்படுகிறவர்கள் எல்லாம் நிச்சயமாகவே கைவிடப்படுவார்கள். சுருக்கமாகக் கூறினால், என்னால் வெறுக்கப்படுகிறவர்கள் என்னைவிட்டு அகன்று போகும்படியாகும். என் வீட்டில் வசிக்கும் துன்மார்க்கரை நான் விட்டுவைப்பதில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் மனிதனின் தண்டனைக்குரிய காலம் சமீபமாயிருக்கிறது, எனக்கென்று என் சொந்தத் திட்டங்கள் இருப்பதால் என்னால் வெறுக்கத் தக்க ஆத்துமாக்களைப் புறம்பே தள்ள நான் அவசரப்படுவதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க