Christian Movie Trailer 2023 | கொடிய அறியாமை (Tamil Subtitles)

ஜனவரி 25, 2023

ஜெங் முயன் அமெரிக்காவில் உள்ள ஒரு சீன கிறிஸ்தவ திருச்சபையில் சக ஊழியராக இருந்து, பல ஆண்டுகளாக கர்த்தரை விசுவாசித்திருக்கிறார், மேலும் கர்த்தருக்காக ஆர்வத்துடன் பணி செய்து, அர்ப்பணித்திருக்கிறார். ஒரு நாள், கர்த்தராகிய இயேசு சத்தியத்தை வெளிப்படுத்தவும், கடைசி நாட்களில் மனுஷனை நியாயந்தீர்த்து சுத்திகரிக்கும் கிரியையைச் செய்யவும் திரும்பி வந்திருக்கிறார் என்று அவருடைய அத்தை அவருக்கு சாட்சி கூறுகிறார், இந்தச் செய்தி அவரை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையை வாசித்து, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் திரைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பார்த்த பிறகு, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் தான்சத்தியம் என்றும், சர்வவல்லமையுள்ள தேவனே நிச்சயமாக, கர்த்தராகிய இயேசுவின் வருகையாக இருக்கக்கூடும் என்றும் ஜெங் முயனின் இருதயம் உறுதி செய்கிறது, எனவே அவர் தம்முடைய சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையைப் பற்றி ஆராயத் தொடங்குகிறார். ஆனால் அவரது திருச்சபையின் தலைவரான போதகர் மா, இதைக் கண்டறிந்ததும், அவர் ஜெங் முயனைத் தடுக்கும்படிக்கு மீண்டும் மீண்டும் குறுக்கிட முயற்சிக்கிறார். மெய்யான வழியைப் பற்றிய ஜெங் முயனது ஆய்வைக் கைவிடச் செய்யும் முயற்சியில், கிழக்கத்திய மின்னலை அவதூறாகப் பேசுகிறதும் மற்றும் கண்டனம் செய்கிறதுமான சிசிபி அரசாங்கத்தின் பிரச்சாரக் காணொளியை, அவர் ஜெங் முயனுக்குக் காட்டுகிறார். மேலும் இந்தக் காணொளி அவரை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது: சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சத்தியமும் தேவனுடைய சத்தமுமாக இருப்பதை அவரால் தெளிவாகக் காண முடிகிறது, அப்படியானால், மத உலகின் போதகர்களும் மூப்பர்களும் சர்வவல்லமையுள்ள தேவனை ஏன் கண்டனம் செய்கிறார்கள்? தாங்கள் தேடவோ அல்லது ஆராயவோ மறுப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் மெய்யான வழியை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். இது ஏன்? … ஜெங் முயன் ஏமாற்றப்பட்டு தவறான பாதையில் சென்றுவிடுவோம் என்று பயப்படுகிறார், ஆனால் அவர் எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்றும் அஞ்சுகிறார். அவரது முரண்பாடு மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், போதகர் மா, சிசிபி மற்றும் மத உலகில் இருந்து, ஜெங் முயனது இருதயத்தில் இன்னும் பல சந்தேகங்களை உருவாக்குகிற இன்னும் அதிகமான எதிர்மறையான பிரச்சாரத்தை முன்வைக்கிறார். அவர் போதகர் மா சொல்வதைக் கேட்டு, மெய்யான வழியைப் பற்றிய தனது ஆய்வை விட்டுவிட முடிவு செய்தார். பின்னர், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் சாட்சிகளிடமிருந்து வந்த சாட்சிகளையும் ஐக்கியங்களையும் கேட்ட பிறகு, மெய்யான வழியை ஆராய்வதன் மூலம், ஒரு வழியில் சத்தியம் உள்ளதா மற்றும் அது வெளிப்படுத்துவது தேவனுடைய சத்தமா என்பதைத் தீர்மானிப்பதே மிக அடிப்படையான கொள்கை என்பதை ஜெங் முயன் புரிந்துகொள்கிறார். சத்தியத்தின் பெரும்பகுதியை வெளிப்படுத்தக்கூடிய எவரும் கிறிஸ்துவின் தோன்றுதலாக இருக்க வேண்டும், ஏனென்றால், சீர்கெட்ட மனிதகுலத்தின் எந்த உறுப்பினராலும் சத்தியத்தை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. இது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் மெய்யான வழியை ஆராயும்போது தேவனுடைய சத்தத்தைக் கேட்பதில் கவனம் செலுத்தாமல், அதற்குப் பதிலாக தங்களது கற்பனைகளின் அடிப்படையில் வெண் மேகங்களில் கர்த்தராகிய இயேசு இறங்கி வருவார் என்று காத்திருந்தால், அவர்களால் தேவனுடைய தோன்றுதலை ஒருபோதும் வரவேற்க முடியாது. இறுதியாக ஜெங் முயன், கர்த்தராகிய இயேசுவால் சொல்லப்பட்ட, தேவனுடைய சத்தத்தைக் கேட்ட புத்தியுள்ள கன்னிகைகளின் மறைபொருளைப் புரிந்துகொண்டு, சிசிபி அரசாங்கத்தின் பொய்களையும் அபத்தமான கோட்பாடுகளையும் மற்றும் மத உலகத்தின் மத போதகர்கள் மற்றும் மூப்பர்களின் பொய்களையும் முட்டாள்தனமான கோட்பாடுகளையும் நம்ப வேண்டாம் என்றும், அவரது மத போதகரின் தடைகள் மற்றும் கட்டுகளுக்குத் தப்பவும் முடிவு செய்கிறார். ஜெங் முயன் மெய்யான வழியை ஆராய்வதில் உள்ள சிரமத்தை ஆழமாக அனுபவிக்கிறார். பகுத்தறியும் தன்மை இல்லாமல் அல்லது சத்தியத்தைத் தேடாமல், தேவனுடைய சத்தத்தைக் கேட்கவோ அல்லது தேவனுடைய சிங்காசனத்தின் முன் எடுத்துக்கொள்ளப்படவோ வழி இல்லை. அதற்கு மாறாக, ஒருவர் சாத்தானால் ஏமாற்றப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு சாத்தானின் வலையில் மரிக்க மட்டுமே முடியும், இது வேதாகமத்தில் உள்ள, "என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்" (ஓசியா 4:6). "மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்" (நீதிமொழிகள் 10:21) என்ற வார்த்தைகளை முழுவதுமாக நிறைவேற்றுகிறது.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க