Christian Choir Song | தேவனின் வருகையை கொண்டாடுதல் (சிறப்பம்சம்)

நவம்பர் 8, 2020

பரபரப்பான ராஜ்ய கீதம் ஒலிக்கிறது, மனுஷரிடையே தேவனின் வருகையை முழு பிரபஞ்சத்திற்கும் அறிவிக்கிறது! தேவனுடைய ராஜ்யம் வந்துவிட்டது! சகல ஜனங்களும் உற்சாகமடைகிறார்கள், சகலமும் களிப்படைகின்றன! வானங்கள் அனைத்திலும் உள்ள சகலமும் மகிழ்ச்சியில் பொங்கிவழிகின்றன. என்னவொரு மகிழ்ச்சியான வசீகரிக்கும் காட்சிகள் இவை?

மனுஷரிடையே, வேதனையோடு வாழ்ந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகாலம் சாத்தானின் சீர்கேட்டைத் தாங்கிக்கொண்டு, தேவனின் வருகைக்காக நீண்ட காலம் காத்திருக்காதவன் - ஏங்காதவன் - யார்? யுகங்கள் முழுவதும் எத்தனை விசுவாசிகளும், தேவனைப் பின்பற்றுபவர்களும், சாத்தானின் செல்வாக்கின் கீழ், துன்பங்களையும், கஷ்டகாலத்தையும், இடர்பாடுகளையும், பிரிவினையையும் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்? தேவனுடைய ராஜ்யம் விரைவில் வரும் என்று யார் தான் நம்பவில்லை? மனுஷகுலத்தின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் ருசித்துவிட்டு, மனுஷரிடையே அதிகாரத்தை நிலைநிறுத்த சத்தியத்தையும் நீதியையும் விரும்பாதவன் யார்?

தேவனுடைய ராஜ்யம் வரும்போது, சகலவித தேசங்களும் ஜனங்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் ஒருவழியாக வரும்! இந்த நேரத்தில், வானத்திலும் பூமியிலும் உள்ள சகலத்திலும் காட்சிகள் என்னவாக இருக்கும்? ராஜ்யத்தில் ஜீவிதமானது எவ்வளவு அழகாக இருக்கும்? "ராஜ்ய கீதம்: ராஜ்யம் உலகத்தின் மீது இறங்குகிறது" மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான பிரார்த்தனைகள் நிறைவேறும்!

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க