Tamil Sermon Series | நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன—கர்த்தர் திரும்பி வரும்போது நம்மை நேரடியாகத் தமது ராஜ்யத்துக்குள் கொண்டுசெல்வாரா?

நவம்பர் 5, 2022

பேரழிவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன மேலும் விசுவாசிகள் யாவரும் ஆகாயத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தரைச் சந்திக்கவும் இன்றைக்குத் தீவிரமாகிவரும் பேரழிவுகளின் துன்பங்களில் இருந்து தப்பிக்கவும் இரட்சகரின் வருகைக்காகக் காத்துகொண்டு இருக்கிறார்கள். தங்கள் பாவங்கள் எல்லாம் கர்த்தராகிய இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால் மன்னிக்கப்பட்டுவிட்டதால். கர்த்தர் அவர்களை பாவம் செய்தவர்களாக இப்போது பார்க்கவில்லை, அவர்களுக்கு தேவையான எல்லாம் இருக்கிறது, மேலும் கர்த்தர் வரும்போது அவர்கள் நேரடியாக அவரது ராஜ்யத்துக்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஆனால் பலருக்குக் குழப்பமாக இருப்பது என்னவென்றால் பேரழிவுகள் வந்துவிட்டன ஆனால் இன்னும் அவர்கள் கர்த்தரை வரவேற்கவில்லையே என்பதுதான். சில காலங்களுக்கு முன்னர் கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவனாக வந்துவிட்டதற்குக் கிழக்கத்திய மின்னல் மட்டும் தொடர்ந்து சாட்சியாக இருக்கிறது—அவர் சத்தியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் மேலும் தேவனின் வீட்டில் இருந்து நியாயத்தீர்ப்புக் கிரியை ஆரம்பித்து அவர் பேரழிவுகளுக்கு முன்னால் ஏற்கெனவே ஜெயங்கொண்டவர்களின் ஒரு குழுவை ஏற்படுத்திவிட்டார். பல விசுவாசிகள் இதைச் சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றனர்: கிழக்கத்திய மின்னல் சாட்சி அளிக்கும் இந்த சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கும் கர்த்தரா? ஆனால் கர்த்தர் பேரில் உள்ள விசுவாசத்தால் எங்கள் பாவங்கள் ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுவிட்டன, மேலும் அவர் நாங்கள் பாவத்தோடு இருப்பதாக இப்போதெல்லாம் எங்களைப் பார்ப்பதில்லை, ஆகையால் அவர் வரும்போது எங்களை நேரடியாகப் பரலோக ராஜ்யத்துக்குள் கொண்டு செல்ல வேண்டுமல்லவா? பின் ஏன் தேவன் கடைசிநாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்ய வேண்டும்? "மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்" என்ற இந்த அத்தியாயத்தில் எங்களோடு இணைந்து பதிலை அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க