Christian Movie Trailer | ஆறாத வடு | 28 Years of Bloody, Heart-rending Persecution by the CCP (Tamil Subtitles)

நவம்பர் 14, 2021

லீ செங்சி கூடுகைகளில் கலந்துகொண்டு அவள் சிறுவயதிலிருந்தே அவள் பெற்றோருடன் இணைந்து வேதாகமத்தைப் படித்தாள். 1988 ஆம் ஆண்டில் வெறும் பதின்மூன்றாம் வயதில் ஒரு கூடுகையில் கலந்து கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டு, அதன்பின் ஒரு சிறிய இருட்டான அறையில் வைத்து ஒரு பகல் மற்றும் இரண்டு இரவுகள் அடைக்கப்பட்டாள். அப்போதிலிருந்து சிசிபி அவளைத் துன்புறுத்துவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. திருச்சபையில் உள்ள மற்ற சகோதர சகோதரிகளுக்கு தேவனுடைய வார்த்தைகளின் புத்தகங்களை அனுப்பியதற்காக அவள் மீண்டும் 17ஆம் வயதில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாள். புத்தகங்களின் உற்பத்தி இடத்தை வெளிப்படுத்தும்படி அவளைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் அவள் தந்தையை அவளுக்கு முன்பாகவே கொடூரமாக அடித்து "அரசியல் கைதி" என்று முத்திரை குத்தி, தெருக்களில் அணிவகுத்து அழைத்துச் சென்றனர். 1996 ஆம் ஆண்டில் லீ செங்சியை மீண்டும் கைது செய்ய காவல்துறையினர் வந்தனர். தன் ஊரை விட்டு வெளியேறி அகதி வாழ்க்கையைத் தொடங்குவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லாமல் போனது. சிசிபி காவல்துறையினரின் தொடர்ச்சியான துன்புறுத்தலும் மிரடட்ல்களும் அவளது முழு குடும்பத்தையும் தொடர்ந்து அச்சமான நிலையில் வாழவைக்கிறது. நீண்டகால மன அழுத்தத்தையும் பயத்தையும் தாங்க முடியாமல் அவளது தாயாருக்கு மனமுறிவு ஏற்படுகிறது, ஏற்கனவே உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட அவளது தந்தை காவல்துறையினரின் மிருகத்தனமான அடிகளால் அவரது நிலை மேலும் மோசம் அடைவதைக் காண்கிறார். ஒருகாலத்தில் மகிழ்ச்சியாய் இருந்த குடும்பம் இப்படிச் சிதைக்கப்படுகிறது. இப்படிப் போய்க் கொண்டிருக்கையில் சுவிசேஷத்தை நாடு முழுவதும் பரப்புவதில் லீ செங்சி சகோதர சகோதரிகளுடன் இணைகிறாள். சிசிபியின் பயங்கரவாத ஆட்சியின் கீழ் அவர்கள் பாதிக்கப்பட்டு, அடக்கப்பட்டு, அடிக்கடி கைது செய்யப்பட்டனர். சில சகோதர சகோதரிகள் கைது செய்யப்பட்டு பின்னர் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். சிலர் அடித்து கொல்லப்படுகிறார்கள், சிலருக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. 2012-ன் பிற்பகுதியில், லீ செங்சி சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்கையில் மீண்டும் கைது செய்யப்பட்டு நான்கு மாத கால நீண்ட விசாரணைக்கும், ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற மிரட்டலுக்கும், மூளைச்சலவைக்கும் உட்படுத்தப்படுகிறாள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க