தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 68

டிசம்பர் 19, 2022

நான் என் கிரியையை புறஜாதியான தேசங்களிடையே பரப்புகிறேன். என் மகிமை பிரபஞ்சம் முழுவதும் பிரகாசிக்கிறது; எல்லாவிதமான ஜனங்களும் தங்களுக்குள் என்னுடைய சித்தத்தைக் கொண்டுள்ளனர், அவர்கள் அனைவரும் என் கரத்தால் இயக்கப்படுகின்றனர் மற்றும் நான் நியமித்த பணிகளை ஆரம்பிக்கின்றனர். இந்தத் தருணம் முதல், நான் ஒரு புதிய யுகத்திற்குள் நுழைந்து, எல்லா மனிதர்களையும் வேறொரு உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். மனிதன் என்னை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எனது "பிதாவின் வீட்டிற்கு" மீண்டும் சென்றபோது, எனது மெய்யான திட்டத்தில் உள்ள என்னுடைய கிரியையின் இன்னொரு பகுதியைத் தொடங்கினேன். நான் பிரபஞ்சத்தைக் குறித்து முற்றிலுமாக சிந்திக்கிறேன், இதுதான் என் கிரியைக்கு ஒரு சரியான நேரம் என்று காண்கிறேன். எனவே, மனிதன் மீதான எனது புதிய கிரியையை நான் முற்றிலும் விரைந்து செய்கிறேன். அனைத்திற்கும் மேலாக, இது ஒரு புதிய யுகம் மற்றும் புதிய ஜனங்களைப் புதிய யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்கும், நான் புறம்பாக்க வேண்டிய பலரை நீக்குவதற்கும் நான் புதிய கிரியைகளைக் கொண்டு வந்துள்ளேன். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில், மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு கட்ட கிரியையை நான் செய்து, அவர்களைக் காற்றிலே ஊசலாடச் செய்திருக்கிறேன். அதன் பிறகு வீசும் காற்றில் பலர் அமைதியாக பறக்கடிக்கப்படுகிறார்கள். உண்மையிலேயே, இது நான் அகற்றப் பயன்படுத்தவிருக்கும் "போரடிக்கும் களம்" ஆகும்; இதற்காகத்தான் நான் வாஞ்சித்துக் காத்திருக்கிறேன், இதுதான் எனது திட்டமும் ஆகும். நான் கிரியை செய்யும்போது பொல்லாதவர்கள் பலர் உள்ளே நுழைந்திருக்கிறார்கள், ஆனால் நான் அவர்களைத் துரத்த அவசரப்படவில்லை. மாறாக, சரியான நேரத்தில் நான் அவர்களைச் சிதறடிப்பேன். அதற்குப் பிறகு மட்டுமே நான் ஜீவ ஊற்றாக இருப்பேன். என்னை உண்மையாக நேசிப்பவர்கள் அத்தி மரத்தின் கனிகளையும் லீலிபுஷ்பத்தின் வாசனையையும் என்னிடமிருந்து பெற அனுமதிப்பேன். புழுதியின் நிலமான சாத்தான் தங்கியிருக்கும் தேசத்தில், பசும்பொன் இல்லை, மணல் மட்டுமே உள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொண்டு, நான் அத்தகைய ஒரு கட்ட கிரியையைச் செய்கிறேன். நான் ஆதாயம் செய்வது மணல் அல்ல, சுத்திகரிக்கப்பட்ட பசும்பொன் ஆகும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். துன்மார்க்கன் என் வீட்டில் எப்படி இருக்க முடியும்? என் பரலோகத்தில், நரிகளை ஒட்டுண்ணிகளாக இருக்க நான் எப்படி அனுமதிக்க முடியும்? இந்த விஷயங்களைத் துரத்த நான் ஒவ்வொரு சாத்தியமான முறையையும் பயன்படுத்துகிறேன். என் சித்தம் வெளிப்படுவதற்கு முன்பு, நான் என்ன செய்யப் போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நான் அந்தப் பொல்லாதவர்களைத் துரத்துகிறேன், அவர்கள் என் சமூகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். துன்மார்க்கருக்கு நான் இதைத்தான் செய்கிறேன். எனினும், அவர்கள் எனக்குச் சேவை செய்ய, இன்னும் ஒரு நாள் அவர்களுக்காக இருக்கும். ஆசீர்வாதங்களுக்கான மனிதர்களின் விருப்பம் மிகவும் வலுவானது; எனவே, நான் என் சரீரத்தைத் திருப்பி, எனது மகிமையான முகத்தை புறஜாதியினருக்குக் காண்பிப்பேன், இதனால் மனிதர்கள் அனைவரும் தங்கள் சொந்த உலகில் ஜீவித்துத் தங்களைத் தாங்களே நியாயந்தீர்ப்பார்கள். நான் சொல்ல வேண்டிய வார்த்தைகளைச் சொல்லும்போதே, மனிதர்களுக்குத் தேவையானதை அவர்களுக்கு வழங்குகிறேன். மனிதர்களுக்குப் புத்தி தெளியும் போது, நான் ஏற்கெனவே நீண்ட காலமாக என் கிரியையைப் பரவச் செய்திருப்பேன். நான் என் சித்தத்தை மனிதர்களிடம் வெளிப்படுத்துவேன், மனிதர்களிடம் என் கிரியையின் இரண்டாம் பகுதியைத் தொடங்குவேன். என் கிரியையுடன் எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், அவர்கள் என்னை நெருக்கமாகப் பின்பற்ற அனுமதிப்பேன். நான் செய்ய வேண்டிய என் கிரியையை மனிதர்கள் என்னுடன் இணைந்து செய்ய, மனிதர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர்களைச் செய்ய அனுமதிப்பேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க