தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 61

மே 5, 2023

கிழக்கிலிருந்து மின்னல் வெட்டும் சமயம், நான் என் வார்த்தைகளைப் பேசத் தொடங்கும் தருணமும் அதுவே—மின்னல் வெட்டும்போது, முழு பிரபஞ்சமும் ஒளிர்கிறது, அனைத்து நட்சத்திரங்களிலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. மனித இனம் முழுவதும் நிவர்த்தி செய்யப்பட்டதைப் போல் இருக்கிறது. கிழக்கிலிருந்து வரும் இந்த வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ், மனுஷர் அனைவரும் அவர்களது உண்மையான வடிவத்தில் வெளிப்படுகின்றனர், அவர்களின் கண்கள் என்ன செய்வது என்று தெரியாமல், மேலும் தங்களது அசிங்கமான அம்சங்களை எவ்வாறு மறைப்பது என்று உறுதியாகத் தெரியாமல் திகைத்து நிற்கின்றன. அவர்கள் என் வெளிச்சத்திலிருந்து தப்பி மலைக் குகைகளில் தஞ்சம் புகும் விலங்குகளைப் போல இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட என் வெளிச்சத்திலிருந்து வெளியேற முடியவில்லை. எல்லா மனுஷரும் திகைத்துப்போகிறார்கள், அனைவரும் காத்திருக்கிறார்கள், அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; என் வெளிச்சத்தின் வருகையால், அவர்கள் பிறந்த நாளில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள், அதேபோல் அவர்கள் பிறந்த நாளை சபிக்கவும் செய்கிறார்கள். முரண்பட்ட உணர்ச்சிகளைத் தெளிவாகப் பேசுவது சாத்தியமில்லாதது; சுய-சிட்சையினால் வழியும் கண்ணீர் ஆறுகளாகி, அவை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன, ஒரு நொடியில் தடயமின்றி செல்கின்றன. மீண்டும், என் நாள் அனைத்து மனுஷரையும் நெருங்குகிறது, மீண்டும் மனுஷ இனத்தைத் தூண்டி மனுஷருக்கு மற்றொரு புதிய தொடக்கத்தை அளிக்கிறது. என் இருதயம் துடிக்கிறது, என் இருதய துடிப்பின் தாளங்களைப் பின்பற்றி, மலைகள் மகிழ்ச்சியுடன் குதிக்கின்றன, கடல் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது, அலைகள் கற்பாறைகள் மீது மோதுகின்றன. என் இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது கடினம். அசுத்தமான எல்லாவற்றையும் என் பார்வையினால் சாம்பலாக எரிக்க விரும்புகிறேன்; கீழ்ப்படியாமையின் மகன்கள் அனைவரும் என் கண்களுக்கு முன்பாக மறைந்து போக நான் விரும்புகிறேன், ஒருபோதும் காலம் தாழ்த்தப்போவதில்லை. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் நான் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பிரபஞ்சத்தில் புதிய கிரியைகளையும் தொடங்கியிருக்கிறேன். விரைவில், பூமியின் ராஜ்யங்கள் என் ராஜ்யமாக மாறும்; விரைவில், என் ராஜ்யத்தின் காரணமாக பூமியின் ராஜ்யங்கள் என்றென்றும் முடிவிற்கு வரும், ஏனென்றால் நான் ஏற்கெனவே வெற்றியை அடைந்துவிட்டேன், ஏனென்றால் நான் வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறேன். பூமியில் எனது கிரியையை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனது திட்டத்தைச் சீர்குலைப்பதற்குச் சாத்தியமான ஒவ்வொரு வழியையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டது, ஆனால் அதன் வஞ்சகத் தந்திரங்களால் நான் சோர்வடைந்து விடுவேனா? அதன் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி என் நம்பிக்கையை என்னால் இழக்க முடியுமா? பரலோகத்திலோ பூமியிலோ நான் ஒருபோதும் என் உள்ளங்கையில் வைத்திருக்காத ஜீவன் எதுவுமில்லை; இந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாக செயல்படும் என்பது எந்தளவிற்கு உண்மை? இது என் கைகளால் கையாளப்பட வேண்டிய ஒரு பொருளல்லவா?

மனித உலகில் நான் அவதரித்த போது, மனுஷர் என் வழிகாட்டுதலின் கீழ், அவர்கள் அறியாமலேயே இன்றுவரை வந்துள்ளனர், அவர்கள் அறியாமலேயே என்னை அறிந்துகொண்டுள்ளனர். ஆனால், முன்னோக்கிச் செல்லும் பாதையில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றி யாருக்கும் சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை—மேலும் அந்தப் பாதை எந்தத் திசையில் செல்லும் என்பது பற்றி யாருக்கும் எந்தத் துப்பும் தெரிந்திருக்கவில்லை. சர்வவல்லவர் அவர்களைக் கவனிப்பதன் மூலம் மட்டுமே எவரும் இறுதியை நோக்கிச் செல்லும் பாதையில் நடக்க முடியும்; கிழக்கில் வெட்டும் மின்னலால் வழிநடத்தப்பட்டால் மட்டுமே என் ராஜ்யத்திற்கு வழிவகுக்கும் வாசலை யாராலும் கடக்க முடியும். மனுஷரிடையே, என் முகத்தைப் பார்த்த ஒருவர், கிழக்கில் மின்னலைக் கண்ட ஒருவர் என ஒருபோதும் எவரும் இருந்ததில்லை; என் சிங்காசனத்திலிருந்து ஒலிக்கும் சொற்களைக் கேட்ட ஒருவர் இருக்கிறாரா? உண்மையில், பண்டையக் காலங்களிலிருந்து, ஒரு மனுஷன் கூட எனது ஆள்தத்துவத்துடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கவில்லை; இன்று மட்டுமே, இப்போது நான் உலகிற்கு வந்திருப்பதால், மனுஷருக்கு என்னைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது கூட, மனுஷர் இன்னும் என்னை அறியவில்லை, ஏனென்றால் அவர்கள் என் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள், என் குரலை மட்டுமே கேட்கிறார்கள், இன்னும் என் அர்த்தத்தை அறியவில்லை. எல்லா மனுஷரும் இப்படிப்பட்டவர்கள்தான். என் ஜனங்களில் ஒருவராக இருப்பதால், என் முகத்தைப் பார்க்கும்போது நீங்கள் ஆழ்ந்த பெருமையை உணரவில்லையா? நீங்கள் என்னை அறியாததால் நீங்கள் வெட்கப்படுவதை உணரவில்லையா? நான் மனுஷரிடையே நடக்கிறேன், மனுஷரிடையே வாழ்கிறேன், ஏனென்றால் நான் மாம்சமாகியிருக்கிறேன், மனுஷ உலகத்திற்கு வந்திருக்கிறேன். என் நோக்கம் வெறுமனே என் மாம்சத்தை மனுஷரைப் பார்க்க வைப்பது மட்டுமல்ல; மிக முக்கியமாக, மனுஷர் என்னை அறிந்துகொள்ள வைப்பதற்காகும். மேலும், நான் மனுஷனாக அவதரித்த மாம்சத்தின் மூலம், மனுஷர் செய்த பாவங்களை அவர்களுக்கு உணர்த்துவேன்; நான் என் மனுஷனாக அவதரித்த மாம்சத்தின் மூலம், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வென்று அதன் குகையை அழிப்பேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 12" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க