தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 52

ஏப்ரல் 12, 2023

சர்வவல்லமையுள்ள தேவன்! அவருடைய மகிமையான சரீரம் வெளியரங்கமாகத் தோன்றுகிறது, பரிசுத்த ஆவிக்குரிய சரீரம் எழும்புகிறது, அவரே பரிபூரணமான தேவன்! உலகமும் மாம்சமும் மாற்றப்பட்டிருக்கின்றன, மேலும் மலையில் அவரது மறுரூபமாவது தேவனாக இருக்கிறார். அவர் தமது சிரசின் மேல் பொற்கிரீடத்தை அணிந்திருக்கிறார், அவரது அங்கியானது மிக வெண்மையாக இருக்கிறது, அவரது மார்பைச் சுற்றி பொற்கச்சை ஒன்று இருக்கிறது, மேலும் உலகமும் சகல காரியங்களும் அவரது பாதபடியாக இருக்கின்றன. அவரது கண்கள் அக்கினிஜுவாலைகள் போன்று இருக்கின்றன; அவர் தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களையும், தமது வாயில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தையும் ஏந்தியிருக்கிறார். ராஜ்யத்திற்கான பாதையானது எல்லையற்ற பிரகாசத்தைக் கொண்டிருக்கிறது, அவருடைய மகிமை எழும்பிப் பிரகாசிக்கிறது; மலைகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன, சமுத்திரங்கள் சிரிக்கின்றன, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் அவற்றின் ஒழுங்கான ஏற்பாட்டில் சுழல்கின்றன, இவையனைத்தும் தனித்துவமான, மெய்தேவனை வரவேற்கின்றன, அவரது வெற்றிகரமான வருகையானது அவரது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டம் நிறைவடைவதை அறிவிக்கிறது. அனைவரும் குதித்தெழுந்து மகிழ்ச்சியுடன் நடனமாடுங்கள்! மகிழ்ச்சி கொள்ளுங்கள்! சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய மகிமையான சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! பாடுங்கள்! சர்வவல்லவரின் வெற்றிக் கொடி மாட்சிமையான, அற்புதமான சீயோன் மலையின் மீது உயர்த்தப்பட்டிருக்கிறது! எல்லா தேசங்களும் மகிழ்ச்சியடைகின்றன, எல்லா ஜனங்களும் பாடுகிறார்கள், சீயோன் மலை மகிழ்ச்சியுடன் சிரிக்கிறது, மேலும் தேவனின் மகிமையானது எழும்பியிருக்கிறது! தேவனின் முகத்தை நான் காண்பேன் என்று நான் சொப்பனத்திலும் நினைத்ததில்லை, ஆனால் இன்று நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவருடன் நேருக்கு நேர் சென்று, நான் எனது இருதயத்தை அவரிடம் திறந்து காண்பிக்கிறேன். அவர் ஏராளமான போஜனத்தையும் பானங்களையும் வழங்குகிறார். ஜீவிதம், வார்த்தைகள், செயல்கள், எண்ணங்கள், கருத்துக்கள்—அவருடைய மகிமைமிக்க வெளிச்சம் இவை அனைத்தையும் ஒளிரச் செய்கிறது. பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவர் வழிநடத்துகிறார், மேலும் அவருடைய நியாயத்தீர்ப்பானது எந்தவொரு கலகக்கார இருதயத்திற்கும் உடனடியாக வருகிறது.

புசிப்பது, ஒன்றாக வசிப்பது, தேவனுடன் சேர்ந்து ஜீவிப்பது, அவருடன் ஒன்றாக இருப்பது, ஒன்றாக நடப்பது, ஒன்றாக மகிழ்வது, மகிமையையும் ஆசீர்வாதங்களையும் பெறுவது, அவருடன் ராஜ்யத்தைப் பகிர்ந்துகொள்வது, மற்றும் ராஜ்யத்தில் ஒன்றாக இருப்பது—ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! ஆஹா, இது எவ்வளவு இனிமையான விஷயம்! நாம் ஒவ்வொரு நாளும் அவரை முக முகமாகப் பார்க்கிறோம், ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறோம், தொடர்ந்து பேசுகிறோம், மேலும் ஒவ்வொரு நாளும் புதிய தெளிவும் புதிய நுண்ணறிவுகளும் வழங்கப்படுகின்றன. நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படுகின்றன, நாம் எல்லாவற்றையும் காண்கிறோம்; ஆவியின் இரகசியங்கள் அனைத்தும் நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. பரிசுத்தமான ஜீவிதமானது உண்மையில் கவலையற்றதாக இருக்கிறது; வேகமாக ஓடுங்கள், நிற்க வேண்டாம், தொடர்ந்து முன்னேறுங்கள்—இன்னும் அதிசயமான ஜீவிதம் காத்திருக்கிறது. வெறுமனே இனிமையான சுவையுடன் திருப்தி அடைய வேண்டாம்; தேவனுக்குள் பிரவேசிக்க தொடர்ந்து முற்படுங்கள். அவர் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர், தாராளமானவர், மேலும் நம்மிடம் இல்லாத எல்லா வகையான விஷயங்களும் அவரிடம் உள்ளன. முன்கூட்டியே ஒத்துழைத்து அவருக்குள் பிரவேசியுங்கள், எதுவும் மீண்டும் ஒரே மாதிரியாக இருக்காது. நமது ஜீவிதம் உயர்ந்ததாக இருக்கும், எந்தவொரு நபராலும், விஷயத்தாலும், காரியத்தாலும் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாது.

மகிமை! மகிமை! மெய்யான மகிமை! தேவனின் மகிமையான ஜீவிதம் உள்ளே இருக்கிறது, அனைத்து விஷயங்களும் உண்மையிலேயே தளர்ந்திருக்கின்றன! கணவர்களுடனோ அல்லது பிள்ளைகளுடனோ எந்தவிதமான தொடர்பையும் உணராமல், உலகத்தையும் உலக விஷயங்களையும் நாம் கடக்கிறோம். நோய் மற்றும் சூழல்களின் கட்டுப்பாட்டை நாம் கடக்கிறோம். சாத்தான் நம்மைத் தொந்தரவு செய்யத் துணிவதில்லை. எல்லா பேரழிவுகளையும் நாம் முற்றிலுமாகக் கடக்கிறோம். இது தேவனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது! நாம் சாத்தானைக் காலின்கீழ் மிதித்து, திருச்சபைக்குச் சாட்சியாக நிற்கிறோம், மேலும் சாத்தானின் அசிங்கமான முகத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறோம். திருச்சபையின் கட்டுமானம் கிறிஸ்துவின் மீது உள்ளது, மேலும் மகிமையான சரீரமானது எழும்பியிருக்கிறது—இது எடுத்துக்கொள்ளப்படுதலில் ஜீவிக்கிறது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 15" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க