Christian Song 2021 | ஆவியானவர் என்றால் என்ன என்பதை கிறிஸ்து வெளிப்படுத்துகிறார் (Tamil Subtitles)

ஆகஸ்ட் 29, 2021

மனுஷ ரூபமெடுத்த தேவனால் அனைத்து வகையான ஜனங்களின்

அனைத்து வகையான செயல்களையும் வெளிப்படுத்த முடியும்.

மனுஷரின் சீர்கெட்ட மனநிலையையும் கலகத்தனமான நடத்தையையும்

வெளிப்படுத்துவதில் அவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறார்.

அவர் உலக ஜனங்களிடையே ஜீவிக்கவில்லை என்றாலும், மனுஷரின் சுபாவம்

மற்றும் உலக ஜனங்கள் அனைவரின் சீர்கேடுகளையும் அவர் அறிந்திருக்கிறார்.

இதுவே அவருடைய இருப்புநிலை ஆகும்.

அவர் உலகத்தைக் கையாள்வதில்லை என்றாலும்,

உலகத்தைக் கையாள்வதற்கான விதிகளை அவர் அறிந்திருக்கிறார்,

ஏனென்றால் அவர் மனுஷ சுபாவங்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறார்.

இன்றைய மற்றும் கடந்த காலங்களில் மனுஷனின் கண்களால் பார்க்க முடியாத மற்றும்

மனுஷனின் செவிகளால் கேட்க முடியாத

ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார்.

இதில் ஜீவிப்பதற்கான தத்துவம் அல்லாத ஞானமும்,

ஜனங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் அதிசயங்களும் அடங்கும்.

இதுதான் அவருடைய இருப்புநிலை, ஜனங்களுக்குத் தெரியும்படியும்,

ஜனங்களிடமிருந்து மறைக்கப்பட்டும் இருக்கிறது.

அவர் வெளிப்படுத்துபவை ஒரு அசாதாரண நபர் வெளிப்படுத்துபவைகளாக இருப்பது இல்லை,

ஆனால் உள்ளார்ந்த பண்புகள் கொண்ட ஆவியானவர் பண்புக்கூறுகளாக இருக்கின்றன.

அவர் உலகில் பயணம் செய்வதில்லை, ஆனாலும்

அவை எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.

அறிவோ நுண்ணறிவோ இல்லாதவர்களை தொடர்பு கொள்கிறார்,

ஆனாலும் பெரிய மனுஷருக்கு மேலான வார்த்தைகளை அவர் வெளிப்படுத்துகிறார்.

மனுஷகுலத்தின் மரபுகளையும் ஜீவிதத்தையும்

புரிந்து கொள்ளாத உணர்ச்சியற்ற ஜனக்கூட்டத்திற்குள் ஜீவிக்கிறார்,

ஆனால் சாதாரண மனுஷத்தன்மையில் ஜீவிக்குமாறு அவரால் கேட்டுக்கொள்ள முடியும்,

அதே நேரத்தில் மனுஷத்தன்மையின்

அடிப்படையையும் அதன் இழிவான தன்மையையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

இவை அனைத்தும் அவருடைய இருப்புநிலை தான், இவை மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபரின்

இருப்புநிலையை விட உயர்ந்ததாக இருக்கிறது.

வெளிப்படுத்துவதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவருடைய

அனுபவங்களின் வெளிப்பாடாக இருப்பதில்லை;

மனுஷனின் கீழ்ப்படியாமையை

அவர் அறிந்த பின்பும், வெறுத்த பின்பும் மனுஷனின் அநீதியை வெளிப்படுத்துகிறார்.

அவர் செய்யும் கிரியையானது மனுஷனுக்கு

அவரது மனநிலையையும் இருப்புநிலையையும் வெளிப்படுத்துவதற்குமே செய்யப்படுகிறது.

இது மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபர்

செய்யக்கூடிய ஒன்று இல்லை, ஆனால் கிறிஸ்துவால் மட்டுமே முடியும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க