ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 2

பிலதெல்பியா சபையானது தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்தின் காரணமாக, முற்றிலுமாக உறுதியான வடிவம் பெற்றுள்ளது. ஆவிக்குரிய பயணத்தில் தடுமாறாத எண்ணற்ற பரிசுத்தவான்களின் இருதயங்களில் தேவன் மீதான அன்பு தோன்றுகிறது. ஒரே உண்மையான தேவன் மாம்சமாகிவிட்டார், அவர் பிரபஞ்சத்தின் அதிபதி, அவர் எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார் என்ற நம்பிக்கையை அவர்கள் உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள்: இது பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மலைகளைப் போல அசையாதது! இது ஒருபோதும் மாறாது!

சர்வவல்லமையுள்ள தேவனே! இன்று நீர்தான் எங்கள் ஆவிக்குரியக் கண்களைத் திறந்து, குருடர்களைப் பார்வையடையச் செய்கிறீர், முடவனை நடக்க வைக்கிறீர் மற்றும் குஷ்டரோகிகளைச் சொஸ்தமாக்குகிறீர். நீரே பரலோகத்திற்கான வாசலைத் திறந்து, ஆவிக்குரிய ராஜ்யத்தின் மர்மங்களை உணர நம்மை அனுமதித்திருக்கிறீர். உம்முடைய பரிசுத்த வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறோம், சாத்தானால் கெடுக்கப்பட்ட எங்கள் மனிதத்தன்மையிலிருந்து இரட்சிக்கப்படுகிறோம், உம்முடைய விவரிக்கமுடியாத பெரிய கிரியையும், உம்முடைய விவரிக்கமுடியாத மிகப்பெரிய இரக்கமும் இத்தகையதாகும். நாங்கள் உம்முடைய சாட்சிகள்!

நீர் நீண்ட காலமாக, தாழ்மையுடன், அமைதியாக மறைந்திருக்கிறீர். நீர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலுக்கும், சிலுவையில் அறையப்படுதலுக்கும், மனித ஜீவிதத்தின் சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களுக்கும், துன்புறுத்தல் மற்றும் துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளீர். நீர் மனித உலகின் வலியை அனுபவித்து ருசித்திருக்கிறீர் மற்றும் நீர் அந்த யுகத்தினால் கைவிடப்பட்டிருக்கிறீர். மனுஷரூபமெடுத்த தேவனே தேவன். தேவனுடைய சித்தத்திற்காக, நீர் எங்களை குப்பையிலிருந்து இரட்சித்தீர். உம்முடைய வலது கரத்தால் எங்களைப் பிடித்துக் கொண்டு, உம்முடைய கிருபையை எங்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறீர். எந்த வேதனையும் இல்லாமல், உம்முடைய ஜீவனை எங்களுக்குள்ளாகக் கொடுத்திருக்கிறீர். உம்முடைய இரத்தம், வியர்வை, கண்ணீர் ஆகியவற்றால் நீர் செலுத்திய விலைக்கிரயம் பரிசுத்தவான்கள் மீது பூசப்பட்டிருக்கிறது. நாங்கள் உம்முடைய கடினமான முயற்சிகளின் பலன்களாக இருக்கிறோம்[அ]. நாங்கள் நீர் செலுத்திய விலைக்கிரயமாக இருக்கிறோம்.

சர்வவல்லமையுள்ள தேவனே! உமது அன்பும் இரக்கமும், உமது நீதியும், கம்பீரமும், உமது பரிசுத்தமும், மனத்தாழ்மையுமே, எல்லா ஜனங்களும் உமக்கு முன்பாக பணிந்து, உம்மை நித்திய காலத்திற்கும் வணங்கக் காரணமாக இருக்கின்றன.

இன்று நீர் அனைத்து திருச்சபைகளையும் பிலதெல்பியா சபையாகப் பரிபூரணமாக்கியுள்ளீர். இதனால் உமது 6,000 ஆண்டு ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளீர். பரிசுத்தவான்கள் தாழ்மையுடன் உமக்கு முன்பாக தங்களை ஒப்புக்கொடுக்க முடியும், ஆவியில் இணைத்துக்கொள்ள முடியும், அன்போடு பின்தொடர முடியும் மற்றும் நீரூற்றின் பிறப்பிடத்துடன் இணைந்திருக்க முடியும். ஜீவத்தண்ணீர் இடைவிடாமல் ஓடி, திருச்சபையில் உள்ள அனைத்துச் சேற்று மற்றும் அசுத்தமான நீரையும் கழுவி தூய்மைப்படுத்துகிறது, மீண்டும் உமது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகிறது. நடைமுறையில் உண்மையான தேவனை நாம் அறிந்திருக்கிறோம், அவருடைய வார்த்தைகளுக்குள் நடந்திருக்கிறோம், நமது சொந்தச் செயல்பாடுகளையும் கடமைகளையும் உணர்ந்திருக்கிறோம் மற்றும் திருச்சபையின் பொருட்டு நம்மைப் பயன்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறோம். உம்முடைய சித்தம் எங்களுக்குள் தடைப்படக்கூடாது என்பதற்காக, பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நாங்கள் உமக்கு முன்பாக அமைதியாக எப்போதும் கவனிக்க வேண்டும். பரிசுத்தவான்களிடையே பரஸ்பர அன்பு இருக்கிறது. சிலருடைய பலமானது மற்றவர்களின் தவறுகளுக்கு ஈடுசெய்யும். அவர்கள் எல்லா நேரங்களிலும் ஆவியில் நடக்க முடிகிறது, பரிசுத்த ஆவியானவரால் அறிவொளி பெற்று பிரகாசிக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்ட உடனேயே அதைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் புதிய ஒளியுடன் இணைந்து செயல்படுகின்றனர் மற்றும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றனர்.

தேவனுடன் தீவிரமாக ஒத்துழையுங்கள். அவரை நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதுதான் அவரோடு நடப்பதாகும். நம்முடைய சொந்த யோசனைகள், எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் உலகப்பிரகாரமான பிரச்சனைகள் அனைத்தும் புகை போல மெல்லிய காற்றில் மறைந்துபோகின்றன. நாம் தேவனுடன் நடந்து, அவர் நம்முடைய ஆவிகளை ஆட்சி செய்ய அனுமதிக்கிறோம். இதனால் மேன்மை அடைந்து, உலகத்தை ஜெயிக்கிறோம், நம்முடைய ஆவிகள் சுதந்திரமாகப் பறந்து விடுதலையை அடைகின்றன: இதுவே சர்வவல்லமையுள்ள தேவன் ராஜாவாகும் போது கிடைக்கும் பலனாகும். தேவனைப் புகழ்ந்து ஆடிப் பாடாமலும், துதியின் பலிகளைச் செலுத்தாமலும், புதிய பாடல்களைப் பாடாமலும் எவ்வாறு இருக்க முடியும்?

தேவனைத் துதிப்பதற்கு உண்மையிலேயே பல வழிகள் உள்ளன: அவருடைய நாமத்தைக் கூப்பிடுவது, அவரிடம் நெருங்கி வருவது, அவரைப் பற்றிச் சிந்திப்பது, தியானிப்பது, கலந்துரையாடலில் ஈடுபடுவது, சிந்தித்துப் பார்ப்பது, ஆராய்வது, ஜெபிப்பது மற்றும் துதி பாடல்கள் பாடுவது ஆகியனவாகும். இந்த வகையான துதியில் இன்பம் இருக்கிறது, அபிஷேகம் இருக்கிறது. துதியில் வல்லமை இருக்கிறது மற்றும் ஒரு சுமையும் இருக்கிறது. துதியில் விசுவாசம் இருக்கிறது மற்றும் புதிய புரிதல் இருக்கிறது.

தேவனுடன் தீவிரமாக ஒத்துழையுங்கள், ஊழியத்தில் ஒருங்கிணைந்திடுங்கள், ஒன்றுபடுங்கள், சர்வவல்லமையுள்ள தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுங்கள், பரிசுத்த ஆவியானவருடைய சரீரமாக மாறுங்கள், சாத்தானை மிதியுங்கள், சாத்தானின் தலைவிதிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பிலதெல்பியா சபை தேவனுடைய சமூகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருடைய மகிமையில் வெளிப்படுத்தப்படுகிறது.

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “பலன்களாக இருக்கிறோம்” என்ற சொற்றொடர் இல்லை.

முந்தைய: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 1

அடுத்த: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 3

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக