அத்தியாயம் 30

சகோதரர்களே, விழித்திருங்கள்! சகோதரிகளே விழித்திருங்கள்! எனது நாள் தாமதமாகப்போவதில்லை; நேரம் தான் ஜீவனாயிருக்கிறது, மேலும் நேரத்தைத் திரும்பப் பெறுவது என்பது ஜீவனை இரட்சிப்பதாகும்! நேரம் வெகு தொலைவில் இல்லை! நீங்கள் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றால், நீங்கள் எத்தனை முறை விரும்புகிறீர்களோ அத்தனை முறை அதைப் படித்து மீண்டும் எழுதலாம். இருப்பினும், எனது நாள் மேலும் தாமதமடையப் போவதில்லை. நினைவில் கொள்ளுங்கள்! நினைவில் கொள்ளுங்கள்! இந்த நல்ல வார்த்தைகளால் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உலகின் முடிவு உங்கள் கண்களுக்கு முன்பாக வெளிப்படுகிறது, மேலும் பெரியப் பேரழிவுகள் விரைவாக நெருங்கி வருகின்றன. எது மிக முக்கியமானது: உங்கள் ஜீவனா, அல்லது உங்கள் நித்திரையும், போஜனமும், பானமும், ஆடையுமா? இவற்றை நீங்கள் எடைபோட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் சந்தேகப்பட வேண்டாம், மேலும் நிச்சயம் நடக்கவிருக்கும் விஷயங்களில் இருந்து விலகிச் செல்ல வேண்டாம்!

மனுக்குலமானது எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது! எவ்வளவு மோசமாக இருக்கிறது! எவ்வளவு குருடாக இருக்கிறது! எவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது! உண்மையில், நீங்கள் எனது வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதில்லை—நான் உங்களிடம் வீணாகப் பேசுகிறேனா? நீங்கள் இன்னும் அஜாக்கிரதையாக இருக்கிறீர்கள்—ஏன்? ஏன் அப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் உண்மையில் இதுபோன்ற எண்ணத்தைக் கொண்டிருந்ததில்லையா? இந்த விஷயங்களை நான் யாருக்காகச் சொல்கிறேன்? என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள்! நான் உங்கள் இரட்சகராக இருக்கிறேன்! நான் உங்கள் சர்வவல்லவராக இருக்கிறேன்! விழிப்புடன் இருங்கள்! விழிப்புடன் இங்கள்! இழந்துபோன நேரம் மீண்டும் ஒருபோதும் வரப்போவதில்லை—இதை நினைவில் கொள்ளுங்கள்! வருத்தத்தைக் குணப்படுத்தும் மருந்து உலகில் இல்லவே இல்லை! எனவே, நான் உங்களிடம் எப்படிப் பேச வேண்டும்? எனது வார்த்தையானது உங்களது கவனத்திற்கும், நீங்கள் மீண்டும் மீண்டும் பரிசீலிப்பதற்கும் தகுதியற்றதாக இருக்கிறதா? நீங்கள் எனது வார்த்தையில் மிகவும் கவனக்குறைவாகவே இருக்கிறீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையில் மிகவும் பொறுப்பற்றவராக இருக்கிறீர்கள்; என்னால் அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? என்னால் எப்படி முடியும்?

ஏன் இந்த நேரத்தில் எல்லாம் ஒரு சரியான திருச்சபை ஜீவிதம் உங்களிடையே உண்டாயிருக்கவில்லை? உங்களுக்கு விசுவாசம் இல்லாதது தான் காரணம்; விலைக்கிரயத்தைச் செலுத்தவோ, உங்களை ஒப்புக்கொடுக்கவோ, எனக்கு முன்பாக உங்களைச் செலவிடவோ நீங்கள் தயாராக இல்லை. எனது புத்திரரே விழித்திருங்கள்! எனது புத்திரரே என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள்! எனக்குப் பிரியமானவர்களே, எனது இருதயத்தில் இருப்பதை நீங்கள் ஏன் பரிசீலித்துப் பார்ப்பதில்லை?

முந்தைய: அத்தியாயம் 29

அடுத்த: அத்தியாயம் 31

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக