அத்தியாயம் 39

ஒவ்வொரு நாளும் நான் பிரபஞ்சங்களின் மேலாக நகர்கிறேன், என் கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் கண்காணிக்கிறேன். வானங்களின் மேல்தான் என் ஓய்விடம் இருக்கிறது, கீழே இருப்பதுதான் நான் நகரும் நிலம். இருப்பவைகள் எல்லாவற்றிற்குள்ளும் இருக்கும் எல்லாவற்றையும் நான் ஆட்சிசெய்து, எல்லாவற்றிற்குள்ளும் இருக்கும் எல்லாவற்றுக்கும் நான் கட்டளையிட்டு, இருப்பவைகள் எல்லாம் இயற்கையின் போக்கைப் பின்பற்றவும் இயற்கையின் கட்டளைக்குக் கீழ்ப்படியவும் செய்கிறேன். கீழ்ப்படியாதவர்களை நான் வெறுப்பதால் மற்றும் என்னை எதிர்ப்பவர்களை அருவருப்பதால் மற்றும் அவர்களின் சொந்த வகைப்பாட்டுக்குள் அடங்காததால், எல்லாவற்றையும் எந்த எதிர்ப்புமின்றி என் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய வைப்பேன், பிரபஞ்சத்தின் மேலும் அதற்குள்ளும் இருக்கும் எல்லாவற்றையும் ஒழுங்கமைப்பேன். இன்னும் என்னைத் தான்தோன்றித்தனமாக எதிர்க்கத் துணிபவன் யார்? என் கரத்தின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதற்குத் துணிபவன் யார்? எனக்கு எதிராகக் கலகம் செய்ய மனிதனுக்கு எவ்வாறு “ஆர்வம்” இருக்க முடியும்? நான் ஜனங்களை அவர்களுடைய மூதாதையர்களுக்கு முன் கொண்டுவருவேன், அவர்களது மூதாதையர்களைக் கொண்டு அவர்களைக் குடும்பத்துக்குள் திரும்பவும் வழிநடத்த வைப்பேன், அவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு எதிராகக் கலகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் மேலும் என் பக்கமாகத் திரும்பி வருவார்கள். இதுவே என் திட்டம். இன்று, என் ஆவியானவர் பூமியெங்கும் செல்கிறார், ஜனங்களின் மூதாதையர்கள் தங்களைத் தங்களின் குடும்பத்துக்குள் வெற்றிகரமாக மீண்டும் வழிநடத்துவதற்காக, எல்லாவகையான மக்களுக்கும் எண்களைக் கொடுக்கிறார், ஒவ்வொரு வகையான நபர்களின் மீதும் வெவ்வேறு அடையாளத்தை இடுகிறார், மேலும் நான் தொடர்ந்து அவர்களைப் பற்றி “கவலைப்பட்டுக்கொண்டிருக்க” வேண்டாம், அது மிகவும் தொந்தரவானதாக இருக்கிறது; இவ்வாறு, நானும் உழைப்பைப் பிரித்துக்கொள்வேன், மேலும் முயற்சியைப் பகிர்ந்தளிப்பேன். இது என் திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இதற்கு எந்த மனிதனாலும் இடையூறு செய்ய முடியாது. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் எல்லாவற்றிலும் இருந்து நான் பொருத்தமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பேன், எனக்கு முன்னால் இருக்கும் எல்லாவற்றையும் ஒழுங்காகக் கீழ்ப்படிதலுக்குள் கொண்டுவருவேன். நான் வானங்களுக்கு மேலாக அடிக்கடி உலாவுகிறேன், மேலும் அவற்றிற்குக் கீழும் அடிக்கடி நடக்கிறேன். ஜனங்கள் வந்து போகும் மாபெரும் உலகத்தைப் பார்க்கிறேன், பூமியில் அடர்த்தியாக நிறைந்திருக்கும் மனுக்குலத்தைக் கவனிக்கிறேன், இந்தக் கிரகத்தில் வாழும் பறவைகளையும் விலங்குகளையும் பார்க்கிறேன், என் இருதயத்தில் உணர்ச்சிவசப்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், சிருஷ்டிப்பின் போது நான் எல்லாவற்றையும் உருவாக்கினேன், என்னுடைய ஏற்பாடுகளின் கீழ் எல்லாவற்றின் முழுமையும் அதன் இடத்தில் அதன் கடமையைச் செய்கிறது, நான் உயரத்தில் இருந்து சிரிக்கிறேன், மேலும் வானங்களின் கீழ் இருக்கும் எல்லாம் என் சிரிப்பின் சத்தத்தைக் கேட்கும்போது, அவைகள் உடனடியாக உத்வேகம் அடைகின்றன, ஏனெனில் இந்தக் கணத்தில் என் மாபெரும் முயற்சி முடிவடைகிறது. நான் மனிதனுக்குள் வானங்களின் ஞானத்தைச் சேர்த்தேன், அவனை எல்லாவற்றின் மத்தியிலும் என்னைப் பிரதிநித்துவப்படுத்துவதற்கு வைத்தேன், ஏனெனில் நான் மனிதனை என் பிரதிநிதியாக இருக்கும்படியாகவும், எனக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதற்கல்லாமல் என்னை உள்ளத்தின் ஆழத்தில் இருந்து துதிப்பதற்காகவும் சிருஷ்டித்தேன். மேலும் இந்த எளிய வார்த்தைகளை யாரால் நிறைவேற்ற முடியும்? மனிதன் ஏன் எப்போதும் தன் இருதயத்தை அவனுக்காகவே வைத்துக்கொள்ளுகிறான் அவனது இருதயம் எனக்காக இல்லையா? நான் மனுஷனிடம் விஷயங்களை நிபந்தனையற்று கேட்பதில்லை, ஆனால் அவன் எப்போதும் எனக்குச் சொந்தமானவனாக இருப்பதால்தான் கேட்கிறேன். எனக்குச் சொந்தமாக இருப்பவற்றை நான் எவ்வாறு பிறருக்குச் சாதாரணமாகக் கொடுக்க முடியும்? நான் உருவாக்கிய “உடை” யை வேறு ஒருவர் அணிவதற்காக எப்படிக் கொடுக்க முடியும்? நான் சித்தங் குழம்பிவிட்டதாகவும், மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மனிதனுடைய வழிகளைப் பற்றி ஒன்றும் புரிந்துகொள்ளாமல் இருப்பதாகவும் மக்களின் கண்களுக்குத் தெரிகிறது; நான் அறிவற்றவனாக இருப்பது போல அது இருக்கிறது. ஆகவே, ஜனங்கள் எப்போதும் என்னைக் கள்ளங்கபடற்றவனாக பார்க்கிறார்களே தவிர உண்மையிலேயே என்னை ஒருபோதும் நேசிப்பது இல்லை. ஏனெனில் மனிதன் செய்வதெல்லாம் என்னை வேண்டுமென்றே முட்டாளாக்குவதற்காகதான், கண நேரக் கோபத்தில் நான் முழு மனுக்குலத்தையும் இல்லாமல் ஆக்குகிறேன். நான் சிருஷ்டித்த எல்லா பொருட்களின் நடுவிலும், மனுக்குலம் மட்டுமே என்னை வஞ்சிக்கும் வழிகளோடு வருவதற்கு முயற்சி செய்கிறது, மேலும் இதனால்தான் நான் மனிதனே எல்லாவற்றையும் “ஆளுகிறவன்” என்று கூறுகிறேன்.

இன்று, நான் எல்லா ஜனங்களையும் சுத்திகரிக்கப்படுவதற்காகப் “பெரிய உலையில்” போடுகிறேன். நான் நிமிர்ந்து நின்று நெருப்பில் மக்கள் எரிவதை உன்னிப்பாகக் கவனிக்கிறேன், தீப்பிழம்புகளால் நெருக்கப்பட்டு, மக்கள் உண்மைகளை உரைக்கிறார்கள். இது நான் கிரியை செய்யும் வழிகளில் ஒன்றாகும். இது இப்படி இல்லாமல் இருந்தால், ஜனங்கள் தங்களைத் “தாழ்மை” யானவர்களாகப் பாசாங்கு செய்வார்கள், மேலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்களே தவிர தங்கள் சொந்த அனுபவங்களைப் பற்றி பேச முதலில் வாய்திறக்க ஒருவரும் விரும்ப மாட்டார்கள். துல்லியமாக இதுவே என் ஞானம் ஒரு வடிவத்தை எடுப்பதாகும், பல காலங்களுக்கு முன்னரே நான் இன்றைய விஷயங்களை முன்தீர்மானித்துவிட்டேன். இவ்வாறு, ஒரு கயிற்றால் இழுக்கப்பட்டு உணர்விழ்ந்து போனவர்களைப் போல ஜனங்கள் அறியாமலேயே உலைக்குள் நுழைகிறார்கள். தீப்பிழம்புகளின் தாக்குதலில் இருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது, அவர்கள் ஒருவரை ஒருவர் “தாக்கிக்” கொள்ளுகிறார்கள், அவர்கள் “களிகூர்ந்து ஓடித்திரிகிறார்கள்”, உலையில் தங்கள் விதியை எண்ணி இன்னும் பதறுகிறார்கள், எரிந்து செத்துப்போவோம் என்று மிகவும் பயப்படுகிறார்கள். நான் நெருப்பைத் தூண்டும் போது அது உடனடியாகப் பெருகுகிறது, வானத்துக்குள் பாய்கிறது, மேலும் அதன் நாக்குகள் உலைக்குள் இழுத்துச் செல்ல முயற்சி செய்வது போல அடிக்கடி என் அங்கியை நக்குகின்றன. ஜனங்கள் அகன்ற கண்களுடன் என்னைப் பார்க்கிறார்கள். நேராக நான் அக்கினியைப் பின்தொடர்ந்து உலைக்குள் செல்கிறேன், மேலும் அந்தக் கணத்தில் தீப்பிழம்புகள் அதிகரிக்கின்றன, மக்கள் அலறுகிறார்கள். நான் தீப்பிழம்புகளுக்கு மேலாக உலாவுகிறேன். தீப்பிழம்புகள் பெருகுகின்றன, ஆனால் அவைகளுக்கு என்னை சேதப்படுத்துவது நோக்கமில்லை, நான் என் உடலில் இருந்த அங்கியை மீண்டும் பிழம்புகளிடம் கொடுக்கிறேன்—ஆனால் அவை என்னைவிட்டுத் தள்ளி நிற்கின்றன. அதன் பின்தான் தீப்பிழம்புகளின் வெளிச்சத்தில் ஜனங்கள் என் உண்மையான முகத்தைத் தெளிவாகப் பார்க்கிறார்கள். அவர்கள் உலையின் சுட்டெரிக்கும் வெப்பத்தின் மத்தியில் இருப்பதால், என் முகத்தைப் பார்த்து எல்லா திசைகளிலும் ஓடுகிறார்கள், மற்றும் உலை உடனடியாகக் “கொதிக்க” ஆரம்பிக்கிறது. தீப்பிழம்புக்குள் இருந்த அனைவரும் அக்கினி ஜூவாலையால் புடமிடப்பட்ட மனுஷகுமாரனை நோக்கிப் பார்க்கிறார்கள். அவரது உடலில் இருக்கும் உடைகள் சாதாரணமாக இருந்தாலும், அவைகள் மிகவும் அழகாக இருக்கின்றன; அவருடைய பாதங்களில் இருக்கும் பாதரட்சைகள் குறிப்பிடும்படியாக இல்லாவிட்டாலும், அவை பெரும் பொறாமையைத் தருவதாக இருக்கின்றன; அவருடைய முகத்தில் இருந்து அக்கினிப் பிரகாசம் ஒளிர்கிறது, அவருடைய கண்கள் மின்னுகின்றன, அவருடைய கண்களில் இருக்கும் ஒளியின் காரணமாக மக்களால் அவரது உண்மையான முகத்தைப் பார்க்க முடிவதுபோல் தோன்றுகிறது. ஜனங்கள் அச்சத்தால் உறைந்துபோய் இருக்கின்றனர், அவரது உடலின் மேல் ஒரு வெண் வஸ்திரத்தை அவர்கள் பார்க்கிறார்கள், மேலும் மயிரைப் போல் வெண்மையான அவரது முடி தோள்பட்டை வரை தொங்குகிறது. குறிப்பாக, அவரது மார்பைச் சுற்றி இருக்கும் ஒரு தங்கக் கவசம் கண்கூசும் ஒளியால் பிரகாசிக்கிறது, அதே நேரத்தில் அவருடைய பாதங்களில் இருக்கும் பாதரட்சைகள் மிகவும் கவரும்படியாக இருக்கின்றன. மனுஷகுமாரன் அணிந்திருக்கும் பாதரட்சைகள் நெருப்பின் மத்தியில் இருப்பதால், மக்கள் அவற்றை அதிசயம் என நம்புகிறார்கள். வேதனைத் துடிப்பின் போது மட்டுமே மக்கள் மனுஷகுமாரனின் வாயை நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்கள் புடமிடும் அக்கினியின் மத்தியில் இருந்தாலும், மனுஷகுமாரனின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் ஒன்றையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை, இதனால், இந்தக் கணத்தில், அவர்கள் மனுஷ குமாரனின் மகிழ்ச்சிகரமான வார்த்தைகளை மேலும் கேட்க முடியவில்லை. ஆனால் அவருடைய வாயில் கூர்மையான ஒரு வாள் இருப்பதைக் காண்கிறார்கள், மேலும் அவர் அதற்குமேல் பேசுவதில்லை, ஆனால் அவரது வாள் மனிதனைக் காயப்படுத்துகிறது. அக்கினிப் பிழம்புகளால் சூழப்பட்ட ஜனங்கள் வேதனையை சகித்துக் கொள்கின்றனர். அவர்களின் ஆர்வத்தின் காரணமாக, அவர்கள் மனுஷகுமாரனின் அசாதாரணமான தோற்றத்தைத் தொடர்ந்து நோக்கிப் பார்க்கிறார்கள், மேலும் அந்தக் கணத்தில்தான் அவர் கையில் இருந்த ஏழு நட்சத்திரங்களும் மறைந்து போய்விட்டதைக் கண்டறிகிறார்கள். மனுஷகுமாரன் நிலத்தில் இல்லாமல் உலையில் இருப்பதால் அவருடைய கரத்தில் இருந்த ஏழு நட்சத்திரங்களும் எடுக்கப்பட்டுவிட்டன, ஏனெனில் அவை ஓர் உருவகமே தவிர வேறல்ல. இந்தக் கணத்தில், அவைகள் அதற்கு மேலும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அவைகள் மனுஷகுமாரனின் வெவ்வேறு பாகங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மக்களின் நினைவில், ஏழு நட்சத்திரங்கள் இருப்பது அசௌகரியத்தைக் கொண்டு வருகிறது. இன்று, நான் இனிமேலும் மனுஷனுக்கு விஷயங்களைக் கடினமாக்குவதில்லை, நான் அந்த ஏழு நட்சத்திரங்களை மனுஷகுமாரனிடம் இருந்து எடுத்து, மனுஷகுமாரனின் எல்லா பாகங்களையும் ஒரே முழுமையாக இணைக்கிறேன். இந்தக் கணத்தில் மட்டும்தான் என்னுடைய முழுத் தோற்றத்தையும் மனுஷனால் பார்க்கமுடியும். என்னுடைய ஆவியை என் சரீரத்தில் இருந்து மக்கள் இனிமேலும் பிரிக்கமாட்டார்கள், ஏனெனில் நான் பூமியில் இருந்து உயரத்துக்கு மேல் ஏறிவிட்டேன். ஜனங்கள் என் உண்மை முகத்தைப் பார்த்துவிட்டார்கள், அவர்கள் இனிமேலும் என்னைப் பிரிக்க மாட்டார்கள், மேலும் நான் இனிமேலும் மனுஷனின் அவதூறைச் சகித்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் அந்த மாபெரும் உலையில் மனிதனுக்குப் பக்கத்தில் நடக்கிறேன், அவன் இன்னும் என்னைச் சார்ந்து இருக்கிறான், அவன் தன் மனசாட்சியில் நான் இருப்பதை உணர்கிறான். இவ்வாறு, சுத்தத் தங்கமாக இருப்பதெல்லாம் படிப்படியாக அக்கினி உலைக்கு நடுவிலுள்ள என்னோடு சேர்கின்றன, ஒவ்வொருவரும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும் தருணம் இதுவே. நான் ஒவ்வொரு வகையான “உலோகத்தையும்” வகைப்படுத்துகிறேன், அவைகளைத் தங்கள் குடும்பத்துக்குத் திரும்பிச் செல்ல வைக்கிறேன், மேலும் இப்போதுதான் எல்லா பொருட்களும் புத்துணர்ச்சி அடையத் தொடங்குகின்றன …

மனிதன் மிகவும் கறைபடிந்தவனாகி விட்டதால்தான் அவனை எரிப்பதற்காக உலைக்குள் வீசுகிறேன். ஆனால் அவன் தீப்பிழம்புகளால் அழிக்கப்படுவதில்லை, ஆனால் புடமிடப்படுகிறான், இதனால் என்னால் அவனில் மகிழ்ச்சி அடைய முடியும்—ஏனெனில் சுத்தத் தங்கத்தால் ஆன மாசில்லாத, அழுக்கற்ற, அசுத்தமில்லாத ஒன்றைத்தான் நான் விரும்புகிறேன். மக்கள் என் மனநிலையைப் புரிந்துகொள்வதில்லை, ஆகவே “அறுவை சிகிச்சைக்கான மேசை” மீது ஏறும் முன்னரே நான் அவர்களை வெட்டப் போவது போலவும், அவர்கள் அறுவை சிகிச்சை மேசையில் இருக்கும் போதே அங்கேயே அவர்களை உடனடியாக கொலைசெய்யப்போவது போலவும் பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். நான் மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளுகிறேன், இவ்வாறு நான் மனுக்குலத்தின் ஓர் உறுப்பினர் போலத் தோன்றுகிறேன். மனிதனின் “துரதிர்ஷ்டத்தால்” நான் மிகவும் இரக்கம் கொள்ளுகிறேன், மேலும் மனிதன் ஏன் “நோய்வாய்ப்பட்டான்” என்று எனக்குத் தெரியவில்லை. அவன் ஆரோக்கியமாக, ஊனமின்றி இருந்திருந்தால் ஒரு விலைக்கிரயத்தை செலுத்தவும் அறுவைசிகிச்சை மேசையில் நேரத்தைச் செலவிடவும் தேவை என்ன இருந்திருக்கும்? ஆனால் உண்மைகளைத் திருப்பிப் பெற முடியாது—“உணவு சுகாதாரத்தில்” கவனம் செலுத்தக் கூடாது என்று மனிதனுக்கு யார் சொன்னது? ஆரோக்கியமாக இருப்பதில் கவனம் செலுத்தக் கூடாது என்று யார் அவனுக்குச் சொன்னது? இன்று, என்னிடம் வேறு என்ன வழி இருக்கிறது? என்னுடைய இரக்கத்தைக் காட்ட நான் மனிதனுடனே “அறுவைசிகிச்சை அறைக்குள்” செல்கிறேன்—மேலும் மனிதனை நேசிக்க யார் எனக்குச் சொன்னார்கள்? இப்படி, நான் தனிப்பட்ட முறையில் “அறுவை சிகிச்சைக் கத்தியை” எடுத்து எந்த ஒரு தொடர்ச்சியையும் தடுக்க “அறுவைசிகிச்சை” செய்யத் தொடங்குகிறேன். மனிதனுக்கு நான் உண்மையாக இருந்ததால், வேதனையின் மத்தியிலும் எனக்குத் தங்கள் நன்றிக்கடனைக் காட்ட ஜனங்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். தனிப்பட்ட உண்மையை நான் மதிப்பிடுவதாக ஜனங்கள் நம்புகிறார்கள், அதாவது என் “நண்பர்கள்” கஷ்டத்தில் இருக்கும்போது நான் உதவுவேன் என்று நம்புகிறார்கள். மக்கள் என் இரக்கத்துக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். நோய் குணமாக்கப்பட்ட பின் அவர்கள் “பரிசுகளை” அனுப்பப்போவதாகக் கூறுகிறார்கள்—ஆனால் இப்படிப்பட்ட எண்ணங்களைக் கூறும் வெளிப்பாடுகளில் நான் கவனம் செலுத்துவதில்லை, ஆனால் அதற்குப் பதிலாக மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்வதிலேதான் கவனம் செலுத்துகிறேன். மனிதனின் உடல் பலவீனம் காரணமாக, கத்தியின் விளைவின் கீழ், அவன் கண்களை இறுக்கமாக மூடி அறுவைசிகிச்சை மேசையின் மேல் அதிர்ச்சியோடு படுத்துக் கிடக்கிறான்—இருந்தாலும் நான் அதைப் பொருட்படுத்துவதில்லை, நான் கையில் இருக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறேன். அறுவைசிகிச்சை முடிவடைந்ததும், மக்கள் “புலியின் தாடைகளில்” இருந்து தப்பித்துவிடுகிறார்கள் மற்றும் நான் அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களால் போஷாக்கு அளிக்கிறேன், இது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், அவர்களுக்குள் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் படிப்படியாக அதிகரிக்கின்றன. பிறகு நான் அவர்களைப் பார்த்து புன்னகைக்கிறேன், அவர்களது ஆரோக்கியம் திரும்பி வந்த பின்னர்தான் அவர்களால் என் உண்மை முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது, மேலும் அவர்கள் என்னை அதிகமாக நேசிக்கின்றனர், அவர்கள் என்னைத் தந்தையாகக் கருதுகின்றனர்—மேலும் இது பரலோகத்துக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு இல்லையா?

மே 4, 1992

முந்தைய: அத்தியாயம் 38

அடுத்த: அத்தியாயம் 40

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக