அத்தியாயம் 4

எனக்கு முன் ஊழியம் செய்யும் என் ஜனங்கள் அனைவரும் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: என் மீதான உங்கள் அன்பு தூய்மையற்றதாக இருந்ததா? என்னிடத்தில் உங்கள் விசுவாசம் தூய்மையானதாகவும் முழு மனதுடனும் இருந்ததா? என்னைப் பற்றிய உங்கள் அறிவு உண்மையாக இருந்ததா? உங்கள் இருதயங்களுக்குள் நான் எவ்வளவு இடத்தைப் பிடித்திருந்தேன்? நான் உங்கள் இருதயங்களை முழுவதுமாக நிரப்பினேனா? என் வார்த்தைகள் உங்களுக்குள் எந்தளவிற்கு நிறைவேறின? என்னை ஒரு முட்டாள் என்று கருதாதீர்கள்! இந்த விஷயங்கள் எனக்கு முற்றிலும் தெளிவாகப் புலப்படுகின்றன! இன்று, என் இரட்சிப்பின் குரல் உச்சரிக்கப்படுவதால், என் மீதான உங்கள் அன்பு சிறிதளவேனும் அதிகரித்துள்ளதா? என்மீதான உங்கள் விசுவாசத்தின் ஒரு பகுதி தூய்மையடைந்துள்ளதா? என்னைப் பற்றிய உங்கள் அறிவு ஆழமடைந்துள்ளதா? கடந்த காலத்தில் வழங்கப்பட்ட புகழ் இன்று உங்கள் அறிவுக்கு உறுதியான அடித்தளம் அமைத்துக் கொடுத்ததா? உங்களுக்குள் எந்தளவிற்கு என் ஆவி ஆக்கிரமித்துள்ளது? எனது உருவம் உங்களுக்குள் எவ்வளவு இடம் பிடித்துள்ளது? எனது வார்த்தைகள் உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவா? உங்கள் அவமானத்தை மறைக்க உங்களுக்கு எங்கும் இடமில்லை என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? நீங்கள் என் ஜனங்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? மேலே உள்ள கேள்விகளை நீங்கள் முற்றிலும் பொருட்படுத்தவில்லை எனில், நீ கலங்கிய நீரில் மீன்பிடிக்கிறாய் என்பதையும், எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே நீ இருக்கிறாய் என்பதையும், நான் முன்னரே தீர்மானித்த நேரத்தில் நீ நிச்சயமாக புறம்பாக்கப்பட்டு, இரண்டாவது முறையாக பாதாளத்திற்குள் தள்ளப்படுவாய் என்பதையும் இது காட்டுகிறது. இவை எனது எச்சரிக்கை வார்த்தைகள், இவற்றை இலகுவாக எடுத்துக் கொள்ளும் எவரும் எனது நியாயத்தீர்ப்பால் தாக்கப்படுவார்கள், மேலும் நியமிக்கப்பட்ட நேரத்தில் பேரழிவை சந்திப்பார்கள். இது அப்படித்தானே அல்லவா? இதை விளக்குவதற்கு நான் இன்னும் உதாரணங்களை வழங்க வேண்டுமா? உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வழங்க நான் இன்னும் தெளிவாகப் பேச வேண்டுமா? சிருஷ்டிக்க துவங்கிய காலத்திலிருந்து இன்று வரை, அநேகர் என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல், எனது மீட்பின் பாதையிலிருந்து நீக்கப்பட்டு புறம்பாக்கப்பட்டிருக்கிறார்கள்; இறுதியில், அவர்களின் சரீரங்கள் அழிந்து, அவர்களின் ஆவிகள் பாதாளத்திற்குள் வீசப்படுகின்றன, இன்றும் அவை கடுமையான சிட்சிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அநேகர் என் வார்த்தைகளைப் பின்பற்றியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் என் ஞானத்திற்கும் வெளிச்சத்திற்கும் எதிராகச் சென்றுவிட்டனர், இதனால் என்னால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, சாத்தானின் ஆதிக்கத்திற்குள் விழுந்து, என்னை எதிர்ப்பவர்களில் ஒருவராக மாறிவிட்டார்கள். (இன்று என்னை நேரடியாக எதிர்ப்பவர்கள் அனைவரும் என் வார்த்தைகளின் ஆழமற்ற விஷயங்களை மட்டுமே கடைப்பிடித்து, என் வார்த்தைகளின் சாராம்சத்திற்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.) நேற்று நான் பேசிய வார்த்தைகளை வெறுமனே கேட்டவர்கள் மட்டும் இருக்கிறார்கள், அவர்கள் கடந்த காலத்தின் “குப்பைகளை” கைகளில் கொண்டு இன்றைய “விளைபொருட்களை” பொக்கிஷமாகக் கருத மறுக்கிறார்கள். இந்த ஜனங்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், நித்திய பாவிகளாகவும், என் சத்துருக்களாகவும் மாறிவிட்டார்கள், அவர்கள் என்னை நேரடியாக எதிர்க்கிறார்கள். அத்தகையவர்கள் என் கோபத்தின் உச்சத்தில் என் நியாயத்தீர்ப்பின் பொருள்களாக இருக்கிறார்கள், இன்றும் அவர்கள் குருடர்களாக, இருண்ட நிலவறைகளுக்குள் இருக்கிறார்கள் (அதாவது, அத்தகைய ஜனங்கள் சாத்தானால் கட்டுப்படுத்தப்படும் அழுகிய, உணர்வற்றுப்போன பிரேதங்களாக இருக்கிறார்கள்; அவர்களது கண்கள் என்னால் மறைக்கப்பட்டுள்ளதால், நான் அவர்களைக் குருடர்கள் என்கிறேன்). உங்கள் சான்றாதாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு வழங்குவது நல்லது, இதன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

பவுலின் குறிப்பின் படி, நீங்கள் அவனுடைய வரலாற்றையும், அவனைப் பற்றிய சில கதைகளையும் துல்லியமற்றவை என்றும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் நினைப்பீர்கள். அவன் சிறு வயதிலிருந்தே அவனது பெற்றோரால் கற்பிக்கப்பட்டான், என் ஜீவனைப் பெற்றான், என் முன்குறித்தலின் விளைவாக அவன் எனக்குத் தேவையான திறமையைப் பெற்றிருந்தான். அவனுடைய 19 வயதில், அவன் வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு புத்தகங்களைப் படித்தான்; ஆகவே, அவனுடைய திறமை காரணமாகவும், என் தெளிவுபடுத்தல் மற்றும் வெளிச்சத்தின் காரணமாகவும், அவன் ஆன்மீக விஷயங்களைப் பற்றி சில நுண்ணறிவால் பேச முடிந்தது மட்டுமல்லாமல், எனது நோக்கங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது என்பதைப் பற்றி நான் விரிவாகப் பேசத் தேவையில்லை. நிச்சயமாக, இது உள் மற்றும் வெளிப்புற காரணிகளின் கலவையை தவிர்க்கவில்லை. ஆயினும்கூட, அவனது ஒரு குறைபாடு என்னவென்றால், அவனது திறமைகள் காரணமாக, அவன் பெரும்பாலும் வாய்சொல் வீரனாகவும் தற்புகழ்ச்சி கொண்டவனாகவும் இருந்தான். இதன் விளைவாக, அவனது கீழ்ப்படியாமை காரணமாக—கீழ்ப்படியாமையின் ஒரு பகுதி பிரதான தூதரை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தியதாகும். நான் முதல் முறையாக மாம்சமாக மாறியபோது, அவன் என்னை மீறுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தான். என் வார்த்தைகளை அறியாதவர்களில் அவனும் ஒருவனாக இருந்தான், அவனுடைய இருதயத்தில் இருந்து என் இடம் ஏற்கனவே மறைந்துவிட்டது. அத்தகையவர்கள் என் தெய்வீகத்தன்மையை நேரடியாக எதிர்க்கிறார்கள், என்னால் தாக்கப்படுகிறார்கள், மேலும் இறுதியில் தலை குனிந்து தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்கிறார்கள். ஆகையால், அவனுடைய வலுவான விஷயங்களை நான் பயன்படுத்தியபின், அதாவது, அவன் ஒரு குறிப்பிட்ட காலம் எனக்குக் கிரியை செய்தபின், அவன் மீண்டும் தனது பழைய வழிகளுக்குச் சென்றான், மேலும் அவன் என் வார்த்தைகளுக்கு நேரடியாகக் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை என்றாலும், அவன் என் உள் வழிகாட்டுதலுக்கும் தெளிவுபடுத்துதலுக்கும் கீழ்ப்படியவில்லை, இதனால் அவன் கடந்த காலத்தில் செய்ததெல்லாம் பயனற்றதாகியது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவன் பேசிய மகிமையின் கிரீடம் வெற்றுச் சொற்களாக மாறியது, இது அவனது சொந்தக் கற்பனையின் விளைவாகும், ஏனென்றால் இன்றும் அவன் என் நிபந்தனைகளின் சிறைப்பிடிப்பிற்குள் என் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படுகிறான்.

மேலேயுள்ள எடுத்துக்காட்டில் இருந்து பார்த்தோமேயானால், யார் என்னை எதிர்க்கிறார்களோ (என் மாம்ச உருவத்தை மட்டுமல்ல, மிக முக்கியமாக, என் வார்த்தைகளையும், என் ஆவியையும்—அதாவது, என் தெய்வீகத்தன்மையை எதிர்ப்பது), அவர்கள் என் நியாயத்தீர்ப்பை அவர்களின் மாம்சத்தில் பெறுகிறார்கள். என் ஆவி உன்னை விட்டு விலகும்போது, நீ கீழ்நோக்கிச் சரிந்து, நேரடியாகப் பாதாளத்திற்குள் இறங்குகிறாய். உன் மாம்ச உடல் பூமியில் இருந்தாலும், நீ மனநோயால் பாதிக்கப்பட்டவனைப் போன்றவன்: நீ உன் நியாயத்தை இழந்து, உடனடியாக ஒரு பிரேதமாக உணர்கிறாய், அதாவது உன் மாம்சத்தைத் தாமதமின்றி முடித்துக்கட்ட என்னிடம் கெஞ்சுகிறாய். ஆவியைக் கொண்டிருக்கிற உங்களில் அநேகர் இந்தச் சூழ்நிலைகளைப் பற்றி ஆழ்ந்த புரிதலைக் கொண்டுள்ளீர்கள், மேலும் விரிவாக நான் சொல்லத் தேவையில்லை. கடந்த காலத்தில், நான் சாதாரண மனிதத்தன்மையில் கிரியை செய்தபோது, அநேகர் ஏற்கெனவே என் கோபத்திற்கும் மகத்துவத்திற்கும் எதிராகத் தங்களை அளவிட்டுக் கொண்டனர், ஏற்கெனவே எனது ஞானத்தையும் மனநிலையையும் சிறிதளவு அறிந்திருக்கிறார்கள். இன்று, நான் தெய்வீகமாக நேரடியாகப் பேசுகிறேன், செயல்படுகிறேன், இன்னும் சிலர் என் கோபத்தையும் நியாயத்தீர்ப்பையும் தங்கள் கண்களால் பார்ப்பார்கள்; மேலும், நியாயத்தீர்ப்பின் யுகத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய கிரியை என்னவென்றால், என் ஜனங்கள் அனைவருமே மாம்சத்தில் என் கிரியைகளை நேரடியாக அறிந்து கொள்வதும், உங்கள் அனைவரையும் என் மனநிலையை நேரடியாகப் பார்க்க வைப்பதும் ஆகும். ஆயினும், நான் மாம்சத்தில் இருப்பதால், நான் உங்கள் பலவீனங்களை எண்ணிப்பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆவி, ஆத்மா மற்றும் சரீரத்தை விளையாட்டுப் பொருளாகக் கருதி, எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவற்றைச் சாத்தானுக்கு அர்ப்பணிக்க மாட்டீர்கள் என்பதே என் நம்பிக்கை ஆகும். உங்களிடம் உள்ள அனைத்தையும் பொக்கிஷமாக வைத்திருப்பது நல்லது, அவற்றை ஒரு விளையாட்டாகக் கருதக்கூடாது, ஏனென்றால் இதுபோன்ற விஷயங்கள் உங்கள் தலையெழுத்துடன் தொடர்புடையவை. என் வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை உங்களால் உண்மையில் புரிந்துகொள்ள முடிகிறதா? என் மெய்யான உணர்வுகளை உங்களால் கருத்தில் கொள்ள இயலுமா?

பரலோகத்திலுள்ள ஆசீர்வாதங்களுக்கு ஒத்திருக்கிற பூமியிலுள்ள என் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களுக்கு விருப்பமா? உங்கள் வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள விஷயங்களாக என்னைப் பற்றிய புரிதலையும், என் வார்த்தைகளின் இன்பத்தையும், என்னைப் பற்றிய அறிவையும் பொக்கிஷமாக வைத்திருக்க உங்களுக்கு விருப்பமா? உங்கள் சொந்த எதிர்பார்ப்புகளை எண்ணிச் சிந்திக்காமல், உங்களால் மெய்யாகவே உங்களை என்னிடம் முழுமையாகச் சமர்ப்பிக்க இயலுமா? ஓர் ஆடு போல என்னால் நீங்கள் வழிநடத்தப்படவும், கொல்லப்படவும் உங்களால் மெய்யாகவே உங்களை அனுமதிக்க இயலுமா? இதுபோன்ற விஷயங்களை அடையக்கூடிய திறன் கொண்டவர்கள் உங்களில் யாராவது இருக்கிறார்களா? என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, என் வாக்குத்தத்தங்களைப் பெறுபவர்கள் அனைவரும் என் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள் என்று இருக்குமோ? இந்த வார்த்தைகளிலிருந்து நீங்கள் எதையேனும் புரிந்துகொண்டீர்களா? நான் உங்களைச் சோதித்தால், நீங்கள் மெய்யாகவே உங்களை என் தேவ திட்டத்தில் ஈடுபடுத்த இயலுமா, மேலும் இந்தச் சோதனைகளுக்கு மத்தியில், என் நோக்கங்களைத் தேடி, என் இருதயத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? நீ உருக்கமான பல சொற்களைப் பேசவேண்டும் என்றோ அல்லது பல உற்சாகமான கதைகளைச் சொல்லவேண்டும் என்றோ நான் விரும்பவில்லை; மாறாக, உன்னால் எனக்குச் சிறந்த சாட்சி கொடுக்க முடியும் என்றும், உன்னால் முழுமையாகவும் ஆழமாகவும் யதார்த்தத்திற்குள் நுழைய முடியும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் நேரடியாகப் பேசவில்லை என்றால், உன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் நீ கைவிட்டு, நான் உன்னைப் பயன்படுத்திக்கொள்ள நீ என்னை அனுமதிப்பாயா? எனக்குத் தேவைப்படும் உண்மை இது அல்லவா? என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை யார் புரிந்துகொள்ள முடியும்? ஆயினும்கூட, இனியும் என் வார்த்தைகளின் தவறான புரிதலினால் நீங்கள் பாரமடையக் கூடாது என்றும், உங்கள் பிரவேசத்தில் நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றும், என் வார்த்தைகளின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது எனது வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்தும், என் அர்த்தம் குறித்துத் தெளிவாகத் தெரியாமலிருப்பதிலிருந்தும், இதனால் எனது ஆளுகைக் கட்டளைகளை மீறுவதிலிருந்தும் உங்களைத் தடுக்கும். உங்களுக்கான எனது நோக்கங்களை என் வார்த்தைகளில் இருந்து நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் சொந்த எதிர்பார்ப்புகளைப் பற்றி மேலும் சிந்திக்காதீர்கள், எல்லாவற்றிலும் தேவனின் திட்டங்களுக்குக் கீழ்படிய நீங்கள் எனக்கு முன்பாகத் தீர்மானித்தபடி செயல்படுங்கள். என் வீட்டுக்குள் நிற்பவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரைச் செய்ய வேண்டும்; பூமியில் எனது கிரியையின் கடைசிப் பகுதிக்கு நீ உன்னில் சிறந்ததை வழங்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை கடைபிடிக்க நீ மெய்யாகவே விரும்புகிறாயா?

பிப்ரவரி 23, 1992

முந்தைய: அத்தியாயம் 3

அடுத்த: அத்தியாயம் 5

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக