ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து

ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தை, தேவன் மீதான விசுவாசம் அவசியமாக்குகிறது. இது தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கும் மெய்யான ஜீவனுள் பிரவேசிப்பதற்கும் அடித்தளமாகிறது. தற்போது நீங்கள் செய்துவரும் ஜெபங்களும், தேவனிடம் நெருங்கி வருதலும், பாமாலைப் பாடுதலும், துதித்தலும் தியானம் செய்தலும், தேவனுடைய வார்த்தைகளை ஆராய்தலும் ஒரு “சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்திற்கு” ஈடாகுமா? உங்களில் எவரும் இதை அறிந்ததாய் தெரியவில்லை. ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியமென்பது பிரார்த்தனை செய்வது, பாமாலைகளைப் பாடுவது, தேவாலய வாழ்க்கையில் ஈடுபடுவது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பது, பருகுவது என இவைகளுக்குள் அடங்குவதல்ல. மாறாக, இது புதியதும் உற்சாகமுமான ஆவிக்குரிய ஜீவியத்தை உள்ளடக்கியது. உங்களது நடைமுறையை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள் என்பது அல்ல, உங்கள் நடைமுறை என்ன பலனைத் தருகிறது என்பதே முக்கியம். ஜெபம் செய்வது, பாமலைகளைப் பாடுவது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பது பருகுவது அல்லது அவருடைய வார்த்தைகளைச் சிந்திப்பது போன்ற நடைமுறைகள் உண்மையில் ஏதேனும் விளைவைக் கொண்டிருக்கின்றனவா அல்லது மெய்யான புரிதலுக்கு வழிவகுக்கின்றனவா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தில் இவை அவசியம் என பலரும் நம்புகின்றனர். இந்த ஜனங்கள் தங்கள் முடிவுகளைப் பற்றிய சிந்தனை ஏதும் இல்லாமல் மேலோட்டமான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள்; அவர்கள் மதச் சடங்குகளில் திளைக்கும் ஜனங்கள், திருச்சபைக்குள் வாழும் ஜனங்கள் அல்ல, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் ஜனங்களும் அல்ல. அவர்களின் ஜெபங்களும், பாமாலைப் பாடுதலும், தேவனுடைய வார்த்தைகளைப் புசித்தலும் பருகுதலனைத்தும் விருப்பத்தினாலோ மனதிலிருந்தோ அல்லாமல் விதிமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன, நிர்ப்பந்தத்தினால் செய்யப்படுகின்றன, மேலும் போக்குகளின்படி தொடர வேண்டுமென செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் எவ்வளவு ஜெபித்தாலும் பாடினாலும், அவர்களின் முயற்சிகள் பலனளிக்காது. ஏனென்றால் அவர்கள் கடைப்பிடிப்பது மதத்தின் விதிகள் மற்றும் சடங்குகள் மட்டுமே; அவர்கள் உண்மையில் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதைக் குறித்து தர்க்கம் செய்வதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளாகக் கருதுகிறார்கள். அத்தகையவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்வதில்லை. அவர்கள் மாம்சத்தை மகிழ்விக்கிறார்கள், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள். இம்மத விதிமுறைகளும் சடங்குகளும் தேவனிடமிருந்து வந்தவையல்ல. இவை மனிதனிடமிருந்து தோன்றியவையாகும். தேவன் விதிகளைப் பின்பற்றுவதில்லை. அவர் எந்த சட்டத்திற்கும் உட்பட்டவரும் அல்ல. மாறாக, அவர் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களைச் செய்கிறார், நடைமுறைச் செயல்களை நிறைவேற்றுகிறார். த்ரீ செல்ஃப் சர்ச் போல, ஒவ்வொரு நாளும் காலை ஆராதனைகளில் கலந்துகொள்ளுதல், மாலை நேர ஜெபங்கள் செய்தல் மற்றும் உணவுக்கு முன் நன்றியுணர்வு ஜெபம் செய்தல், எல்லாவற்றிலும் நன்றி செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எவ்வளவுச் செய்தாலும், எவ்வளவுக் காலம் அதைச் செய்தாலும், அவர்களிடம் பரிசுத்த ஆவியின் கிரியை இருக்காது. ஜனங்கள் விதிகளுக்கு மத்தியில் வாழும்போதும், சம்பிரதாய வழிமுறைகளில் தங்கள் இருதயங்களை நிலைநிறுத்தும்போதும் பரிசுத்த ஆவியானவர் செயல்பட முடியாது. ஏனென்றால் அவர்களின் இருதயங்கள், விதிகள் மற்றும் மனித கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தேவனால் தலையிடவும், அவற்றில் செயல்படவும் இயலாது. மேலும் அவர்கள் தங்கள் சட்டங்களின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே வாழ முடியும். அத்தகையவர்கள் ஒருபோதும் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாது.

ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியமென்பது தேவனுக்கு முன்பாக ஜீவிக்கும் ஜீவியமாகும். ஜெபிக்கும்போது, ஒருவர் தேவனுக்கு முன்பாக தன் இருதயத்தை அமைதிப்படுத்த முடியும். மேலும் ஜெபத்தின் மூலம் ஒருவர் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தைத் தேடலாம், தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளலாம், தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளலாம். அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதன் மூலமும், பருகுவதன் மூலமும், தேவனின் தற்போதைய கிரியையைப் பற்றி ஜனங்கள் தெளிவான மற்றும் முழுமையான புரிதலைப் பெற முடியும். அவர்கள் நடைமுறையில் பழைய ஜீவிதத்தோடு ஒட்டிக்கொள்ளாமல் ஒரு புதிய பாதையையும் பெற முடியும்; அவர்கள் செய்யும் அனைத்தும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடையச்செய்யும். ஜெபத்தைப் பொறுத்தவரை, சில நல்ல சொற்களைப் பேசுவதோ அல்லது நீங்கள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் காண்பிப்பதற்காக தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு ஜெபிப்பதோ ஜெபம் அல்ல. மாறாக, ஒருவர் ஆவியானவர் பயன்படுத்துவதற்காக தன்னை பயிற்றுவிப்பதும், தேவனுக்கு முன்பாக தன் இருதயத்தை அமைதிப்படுத்த அனுமதிப்பதும், எல்லா காரியங்களிலும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து வழிகாட்டுதல்களைத் தேடுவதற்கு தன்னைப் பயிற்றுவிப்பதும் தான் அதன் நோக்கமாகும், இதன் மூலம் அவர் இருதயம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வெளிச்சத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனால் ஒருவர் செயலற்றவராகவோ சோம்பல் உடையவராகவோ இல்லாமல், தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சரியான பாதையில் காலடி எடுத்து வைப்பார். இக்காலத்தில் பெரும்பாலான ஜனங்கள் பயிற்சி முறைகளில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனாலும் சத்தியத்தைப் பின்தொடரவும், வாழ்க்கை வளர்ச்சி அடையவும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இங்குதான் அவர்கள் வழிதவறிவிட்டார்கள். புதிய வெளிச்சத்தைப் பெறும் தகுதியுள்ளவர்களும் உள்ளனர், ஆனால் அவர்களின் செயல்பாட்டு முறைகள் மாறாது. இன்றைய தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் பெறப் பார்க்கும்போது, தங்கள் பழைய மதக் கருத்துக்களை அவர்கள் தங்களுடன் கொண்டு வருகிறார்கள். எனவே அவர்கள் பெறுவது இன்னும் மதக் கருத்துக்களால் சாயம்பூசப்பட்ட கோட்பாடாகவே உள்ளது. அவர்கள் இன்றைய வெளிச்சத்தை சாதாரணமாகப் பெறுவதில்லை. இதன் விளைவாக, அவர்களின் நடைமுறைகள் களங்கப்படுத்தப்படுகின்றன. அவை புதிய தொகுப்பில் உள்ள பழைய நடைமுறைகளே. அவர்கள் எவ்வளவு நன்றாகக் கடைபிடித்தாலும், அவர்கள் வெளிவேடக்காரர்களே. ஒவ்வொரு நாளும் ஜனங்கள் புதிய நுண்ணறிவையும் புரிதலையும் பெற வேண்டும் என எதிர்பார்த்தும், தங்கள் பழைய வழக்கங்களுக்குத் திரும்பக்கூடாது மற்றும் செய்ததைத் திரும்பத் திரும்ப செய்யக்கூடாது என எதிர்பார்த்தும், தேவன் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களைச் செய்வதற்கு ஜனங்களை வழிநடத்துகிறார். நீங்கள் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசித்திருந்தும், இன்னும் உங்கள் செயல்பாட்டு முறைகள் மாறாமலும், வெளிப்புறக் காரியங்களில் நீங்கள் இன்னும் ஆர்வமாகவும் ஓய்வின்றியும் இருந்து, அவருடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கு தேவன் முன் கொண்டுவர அமைதியான இருதயம் இல்லையெனில், நீங்கள் எதையும் பெற மாட்டீர்கள். தேவனின் புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் வித்தியாசமாகத் திட்டமிடவில்லை என்றால், உங்கள் செயல்பாட்டை ஒரு புதிய வழியில் செய்யவில்லை என்றால், புதிய புரிதல்களைப் பெறவில்லை என்றால், மாறாகப் பழையதைப் பற்றிக் கொண்டு, கொஞ்சம் குறைவான புதிய வெளிச்சத்தை மட்டுமே பெற்றுக்கொண்டால், நீங்கள் கைக்கொள்ளும் முறையை மாற்றாமல், வெறும் பெயருக்காக இந்த ஓட்டத்தில் இருக்கும் உங்களைப் போன்ற ஜனங்கள் உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் போக்குக்குப் புறம்பான மத பரிசேயர்கள் ஆவார்கள்.

ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தை வாழ, ஒருவர் தினமும் புதிய வெளிச்சத்தைப் பெறவும், தேவனின் வார்த்தைகளைப் பற்றிய மெய்யான புரிதலைப் பெறவும் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒருவர் சத்தியத்தைத் தெளிவாகக் காண வேண்டும், எல்லா காரியங்களிலும் ஒரு நடைமுறைப் பாதையைக் கண்டறிய வேண்டும், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளைத் தியானிப்பதன் மூலம் புதிய கேள்விகளைக் கண்டறிய வேண்டும், மேலும் ஒருவரின் சொந்தக் குறைபாடுகளை உணர வேண்டும். இதனால் ஒருவரை முழுவதுமாக அசைக்கும் ஓர் ஏக்கமும், தேடும் இருதயமும் ஒருவர் பெறக்கூடும், அதனால் விழுந்துவிடக்கூடும் என்ற மிகுந்த பயத்துடன் ஒருவர் எல்லா நேரங்களிலும் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கக்கூடும். அத்தகைய ஏக்கமுள்ள, தேடும் இருதயம் கொண்ட, தொடர்ந்து கைக்கொள்ள தயாராக உள்ள ஒருவர், ஆவிக்குரிய வாழ்க்கையில் சரியான பாதையில் செல்கிறார். பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவர்களும், சிறப்பாகச் செய்ய விரும்புவோரும், தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதை விரும்புவோரும், தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள ஏங்குகிறவர்களும், இயற்கைக்கு அப்பாற்பட்டதை எதிர்பாராமல் மெய்யான விலையை செலுத்துபவர்களும், மெய்யாக தேவ சித்தத்தின் மீது உண்மையாக அக்கறை காட்டுகிறவர்களும், மெய்யான, உண்மையான அனுபவத்தைப் பெற மெய்யாகவே கடைபிடிப்பவர்களும், வெற்று சொற்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றாதவர்களும் அல்லது இயற்கைக்கப்பாற்பட்ட உணர்வைத் தொடராதவர்களும், எந்தவொரு பெரிய ஆளுமையையும் தொழுதுகொள்ளாதவர்களும்தான் சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைந்தவர்களாவர். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் ஜீவியத்தில் மேலும் வளர்ச்சியை அடைவதற்கும், அவற்றை ஆவியில் புதியதாகவும், உற்சாகமாகவும் ஆக்குவதற்கும் நோக்கமாக உள்ளன. மேலும் அவர்களால் எப்போதும் தீவிரமாகப் பிரவேசிக்க முடிகிறது. அதை உணராமல், அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு மெய்யான ஜீவிதத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். சாதாரண ஆவிக்குரிய வாழ்வைக் கொண்டவர்கள் ஒவ்வொரு நாளும் ஆவியில் விடுதலையையும் சுதந்திரத்தையும் காண்கிறார்கள். மேலும் அவர்கள் தேவனுடைய திருப்திக்கு ஒரு விடுதலையான வழியில் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளலாம். இந்த ஜனங்களைப் பொறுத்தவரை, ஜெபம் செய்வது ஒரு முறையோ நடைமுறையோ அல்ல; ஒவ்வொரு நாளும், ஒரு புதிய வெளிச்சத்தின் வேகத்துடன் தங்களால் ஈடுகொடுக்க முடியும். உதாரணமாக, ஜனங்கள் தங்கள் இருதயங்களை தேவனுக்கு முன்பாக அமைதிப்படுத்த பயிற்சி அளிக்கிறார்கள். அவர்களுடைய இருதயங்கள் மெய்யாகவே தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்க முடியும். மேலும் யாராலும் அவர்களை கலக்கமடையச் செய்ய முடியாது. எந்தவொரு நபரோ, நிகழ்வோ, காரியமோ அவர்களின் இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய பயிற்சி, பலன்களைத் தரும் நோக்கம் கொண்டது; இது ஜனங்களை விதிகளைப் பின்பற்ற வைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இந்த நடைமுறை விதிமுறையைப் பின்பற்றுவதைப் பற்றியது அல்ல, மாறாக மக்களின் வாழ்க்கையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளாக மட்டுமே பார்த்தால், உங்கள் வாழ்க்கை ஒருபோதும் மாறாது. நீங்கள் மற்றவர்களைப் போலவே அதே நடைமுறையில் ஈடுபடலாம். ஆனால் இறுதியில், அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செல்ல தகுதி பெறுகையில், நீங்கள் பரிசுத்த ஆவியானவர் செல்லும் பாதையிலிருந்து புறம்பாக்கப்படுகிறீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளவில்லையா? இந்த வார்த்தைகளின் நோக்கம், தேவனுக்கு முன்பாக ஜனங்கள் தங்கள் இருதயங்களை அமைதிப்படுத்த அனுமதிப்பதும், தங்கள் இருதயங்களை தேவனிடம் திருப்புவதும் ஆகும். இதனால் தேவனுடைய கிரியை தடையின்றி நடந்து, பலனளிக்கலாம். அப்போதுதான் ஜனங்கள் தேவனுடைய சித்தத்திற்கு இணங்கியிருக்க முடியும்.

முந்தைய: யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி

அடுத்த: சபை வாழ்க்கை மற்றும் யதார்த்த வாழ்க்கையை விவாதித்தல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக