சத்தியத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே யதார்த்தத்தைக் கொண்டிருப்பதாகும்

தேவனுடைய வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, அவற்றை வெட்கப்படாமல் விளக்குவதற்கான திறமையைப் பெற்றிருப்பதால், நீங்கள் யதார்த்தத்தை பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல; நீ கற்பனை செய்கிறது போல காரியங்கள் அவ்வளவு எளிதல்ல. நீ யதார்த்தத்தைப் பெற்றிருக்கிறாயா என்பது நீ பேசுவதை அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக, நீ வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. தேவனின் வார்த்தைகள் உன்னுடைய வாழ்க்கையாகவும், உன்னுடைய இயல்பான வெளிப்பாடாகவும் மாறும் போது மட்டுமே நீ யதார்த்தத்தைப் பெற்றிருப்பதாகக் கூற முடியும். அப்போதுதான் நீ உண்மையான புரிந்துகொள்ளுதலையும் உண்மையான வளர்ச்சியையும் பெற்றிருப்பதாகக் கருத முடியும். நீங்கள் நீண்ட காலத்திற்கு சோதனையில் நிலைநிற்கக்கூடியவராக இருக்க வேண்டும், அப்போது தேவன் எதிர்பார்க்கிற அவரது சாயலில் நீங்கள் வாழ முடியும். இது வெறும் தோரணையாக இருக்கக்கூடாது; அது உங்களிடமிருந்து இயற்கையாகவே பாய வேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையிலேயே யதார்த்தத்தைப் பெற்றுக்கொள்வீர்கள், அப்போதுதான் நீங்கள் ஜீவனைப் பெற்றிருப்பீர்கள். அனைவருக்கும் தெரிந்த ஊழியம் செய்பவர்களுக்கான சோதனையின் உதாரணத்தை நான் பயன்படுத்துகிறேன்: ஊழியம் செய்பவர்கள் தொடர்பான மிக உயர்ந்த கோட்பாடுகளை யார் வேண்டுமானாலும் வழங்க முடியும். மேலும் அனைவருக்கும் இந்த விஷயத்தில் நல்ல புரிந்துகொள்ளுதல் இருக்கிறது; அவர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள், ஒரு போட்டியைப் போல, ஒவ்வொரு பேச்சும் முந்தையதை மிஞ்சுகிறதாயிருக்கிறது. இருப்பினும், மனுஷன் ஒரு பெரிய சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றால், அவன் பகருவதற்கு நல்ல சாட்சி இருக்கிறது என்று சொல்வது மிகவும் கடினம். சுருக்கமாகச் சொல்லுவதென்றால், மனுஷனின் வாழ்ந்து காட்டுதல் இன்னும் மிகக் குறைவாக இருக்கிறது, அது அவனுடைய புரிந்துகொள்ளுதலுக்கு முற்றிலும் முரணானது. எனவே, இது இன்னும் மனுஷனின் உண்மையான வளர்ச்சியாக மாறவில்லை, இது இன்னும் மனுஷனின் வாழ்க்கை அல்ல. மனுஷனின் புரிந்துகொள்ளுதல் யதார்த்தத்திற்குள் கொண்டு வரப்படாததால், அவனது அந்தஸ்து இன்னும் மணல் மீது, தள்ளாடுகிற மற்றும் சரிவின் விளிம்பில் கட்டப்பட்ட ஓர் அரண்மனை போன்றது. மனுஷன் யதார்த்தத்தின் மிக மிகக் குறைந்த அளவைப் பெற்றிருக்கிறான்; மனுஷனிடத்தில் எந்த ஒரு யதார்த்தத்தையும் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இயற்கையாகவே, மனுஷனிடமிருந்து மிகக் குறைவான யதார்த்தமே வெளிப்படுகிறது. அவர்கள் வாழ்ந்து காட்டும் அனைத்து யதார்த்தங்களும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. மனுஷனுக்கு யதார்த்தம் இல்லை என்று நான் சொல்வதற்கான காரணம் இதுவே. தேவன் மீதான தங்கள் அன்பு ஒருபோதும் மாறாது என்று ஜனங்கள் கூறினாலும், அது எந்தவொரு சோதனைகளையும் எதிர்கொள்ளும் முன்பு அவர்களது வெறும் வார்த்தைதான். அவர்கள் ஒரு நாள் திடீரென்று சோதனைகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் பேசிய விஷயங்கள் யதார்த்தத்துடன் ஒப்பிடுகையில் மீண்டும் ஒரு முறை எல்லைக்கு வெளியே சென்றுவிடுகிறது. மேலும் இது, மனுஷன் யதார்த்தத்தைப் பெற்றிருக்கவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும். உன்னுடைய கருத்துக்களுடன் பொருந்தாத விஷயங்களை நீ சந்திக்கும் போதெல்லாம், உன்னுடைய சுயத்தை ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும். அந்த விஷயங்களை உன்னுடைய சோதனைகள் என்று கூறலாம். தேவனின் சித்தம் வெளிப்படுவதற்கு முன்பு, எல்லோரும் கடுமையான சோதனை மற்றும் அளவற்ற உபத்திரவத்தின் வழியாகக் கடந்து செல்கிறார்கள். இதை நீ புரிந்து கொள்ள முடிகிறதா? தேவன் ஜனங்களிடம் இதை முயற்சிக்க விரும்பும்போது, நிதர்சனமான உண்மை வெளிவருவதற்கு முன்பு அவர்கள் தங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்ய அவர் எப்போதும் அனுமதிக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், தேவன் மனுஷனை சோதனைகளுக்கு உட்படுத்தும்போது, அவர் ஒருபோதும் அவர்களுக்கு உண்மையைக் கூறமாட்டார்; ஜனங்கள் தங்களை வெளிப்படுத்துகிற விதம் இதுதான். இன்றைய தேவனை நீ அறிந்திருக்கிறாயா, அதோடு கூட நீ ஏதேனும் யதார்த்தத்தை பெற்றிருக்கிறாயா என்பதைப் பார்க்க, தேவன் தனது கிரியையைச் செய்வதற்கான ஒரு வழி இது. தேவனின் கிரியை குறித்த சந்தேகங்களிலிருந்து நீ உண்மையிலேயே விடுபட்டிருக்கிறாயா? ஒரு மிகப்பெரிய சோதனை உன் மீது வரும்போது நீ உண்மையிலேயே உறுதியாக நிற்க முடியுமா? “எந்த பிரச்சனையும் இருக்காது என்று நான் உத்தரவாதம் தருகிறேன்” என்று யார் சொல்லத் துணிகிறீர்கள்? “மற்றவர்களுக்கு சந்தேகம் இருக்கலாம், ஆனால் நான் ஒருபோதும் சந்தேகிக்க மாட்டேன்” என்று யார் உறுதியாக சொல்லத் துணிகிறீர்கள்? பேதுரு சோதனைகளுக்கு ஆளானதைப் போலவே இதுவும் இருக்கிறது. உண்மை வெளிவருவதற்கு முன்பே அவன் எப்போதும் பெருமையாகப் பேசினான். இது பேதுருவுக்கு மட்டும் தனித்துவமாக இருந்த தனிப்பட்ட குறைபாடு அல்ல; தற்போது ஒவ்வொரு மனுஷனும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிரமம் இதுதான். இன்றைய நாட்களில் தேவனின் கிரியை பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதல் என்ன என்பதைக் காண நான் ஒரு சில இடங்களுக்குச் சென்றால் அல்லது ஒரு சில சகோதர சகோதரிகளைப் பார்வையிட்டால், நீங்கள் நிச்சயமாகவே உங்கள் அறிவைப் பற்றி அதிகம் கூற முடியும், மேலும் உங்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லாதது போலத் தோன்றும். நான் உன்னிடம்: “இன்றைய நாட்களின் கிரியை தேவனால் செய்யப்படுகிறது என்பதை உன்னால் உண்மையில் தீர்மானிக்க முடியுமா? எந்தவித சந்தேகமும் இல்லாமல்?” என்று கேட்டால், நீ நிச்சயமாக: “எந்த சந்தேகமும் இல்லாமல், இது தேவ ஆவியானவரால் செய்யப்படும் கிரியை” என்று பதிலளிப்பாய். நீ அவ்வாறு பதிலளித்தவுடன், நிச்சயமாகவே, நீ துளியளவும் சந்தேகத்தை உணர மாட்டாய். மேலும் நீ கொஞ்சம் யதார்த்தத்தைப் பெற்றிருப்பதாக நினைத்து, நீ சற்று மகிழ்ச்சியடைவாய். இந்த வழியில் விஷயங்களைப் புரிந்துகொள்ள முற்படும் ஜனங்கள் குறைவான யதார்த்தத்தைப் பெற்றிருப்பவர்கள்; அதைப் பெற்றுக்கொண்டேன் என்று அதிகம் நினைக்கும் ஒருவன், சோதனைகளை எதிர்கொள்ளும்போது குறைவாகவே உறுதியாக நிற்க முடியும். கர்வம் மற்றும் மேட்டிமையானவர்களுக்கு ஐயோ; தங்களைப் பற்றிய அறிவில்லாதவர்களுக்கு ஐயோ; அத்தகையவர்கள் பேசுவதில் திறமையானவர்கள், ஆனால் தங்கள் வார்த்தைகளை செயல்படுத்தும்போது மிக மோசமானவர்கள். உபத்திரவத்தின் மிகச்சிறிய அறிகுறியில், இந்த ஜனங்களுக்கு சந்தேகம் வரத் தொடங்குகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான எண்ணம் அவர்களின் மனதில் ரகசியமாக ஊடுருவுகிறது. அவர்கள் எந்தவித யதார்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை; இப்போது தேவனால் கேட்கப்படும் எதற்கும், எந்தவொரு யதார்த்தமும் இல்லாமல், அவர்கள் மதத்திற்கும் மேலான கோட்பாடுகளைக் கொண்டுள்ளனர். எந்தவொரு யதார்த்தமும் பெற்றிருக்காமல் கோட்பாடுகளை மட்டுமே பேசுபவர்களால் நான் மிகவும் வெறுக்கப்படுகிறேன். அவர்கள் தங்கள் கிரியையைச் செய்யும்போது சத்தமாகக் கத்துகிறார்கள், ஆனால் அவர்கள் யதார்த்தத்தை எதிர்கொண்டவுடன், விழுந்துவிடுகிறார்கள். இந்த ஜனங்களுக்கு யதார்த்தம் இல்லை என்பதை இது காட்டவில்லையா? காற்று மற்றும் அலைகள் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், உன் மனதில் ஒரு துளியும் சந்தேகத்தை அனுமதிக்காமல் நீ நிற்க முடியுமென்றால், உறுதியாக நிற்கவும், மறுதலிப்பதிலிருந்து விடுபடவும் முடியும். வேறு யாரும் இல்லாதபோது கூட, நீ உண்மையான புரிந்துகொள்ளுதல் மற்றும் உண்மையான யதார்த்தத்தைக் கொண்டிருப்பதாகக் கணக்கிடப்படும். நீ காற்று வீசுகிற பாதையை நோக்கித் திரும்புவாயானால், நீ பெரும்பான்மையைப் பின்பற்றி, மற்றவர்களின் பேச்சைக் கிளிப்பிள்ளை போல பேசக் கற்றுக் கொண்டால்—நீ எவ்வளவு சொற்பொழிவாற்றினாலும், நீ யதார்த்தத்தைப் பெற்றிருக்கிறாய் என்பதற்கு இது சான்றாக இருக்காது. எனவே, வெற்று வார்த்தைகளை மட்டும் கூச்சலிகிடுற பக்குவப்படாதவனாக இருக்கக்கூடாது என்று நான் உனக்குப் பரிந்துரைக்கிறேன். தேவன் என்ன செய்யப் போகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மற்றொரு பேதுருவைப் போல நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் மீது அவமானத்தை வரவழைத்து, உங்கள் தலையை நிமிரச் செய்யும் திறனை இழக்காதீர்கள்; அதினால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பெரும்பாலான ஜனங்களுக்கு யதார்த்தமான வளர்ச்சி இல்லை. தேவன் ஒரு மகத்தான கிரியையை செய்திருந்தாலும், அவர் யதார்த்தத்தை ஜனங்கள் மீது திணிக்கவில்லை; இன்னும் சரியாகச் சொல்வதானால், அவர் ஒருபோதும் தனிப்பட்ட முறையில் யாரையும் சிட்சித்ததில்லை. சிலர், தேவனுடைய நன்மையைப் பெறுவது எளிது என்று நினைத்து, தங்கள் பாவமான கரங்களால் தொலைதூரம் வரை எட்டுகின்றனர். அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்; அவர்கள் இத்தகைய உபத்திரவங்களால் வெளிப்படுத்தப்படுகிறார்கள். இந்த வகையான சோதனையைக்கூட அவர்களால் தாங்க முடியாததால், யதார்த்தத்தைப் பெற்றிருத்தல் போன்ற, சவாலான சோதனைகள் அவர்களுக்குக் கேள்விக்குறியாக உள்ளன. அவர்கள் தேவனை முட்டாளாக்க முயற்சிக்கவில்லையா? யதார்த்தத்தைப் பெற்றிருத்தல் போலியாக்கக்கூடிய ஒன்றல்ல; யதார்த்தம் நீ அறிந்து கொள்வதன் மூலம் அடையக்கூடிய ஒன்றும் அல்ல; இது உன் உண்மையான வளர்ச்சியைப் பொறுத்தது, அத்துடன் எல்லா சோதனைகளையும் நீ தாங்க முடியுமா இல்லையா என்பதைப் பொறுத்தது. உனக்குப் புரிகிறதா?

யதார்த்தத்தைப் பற்றி பேசும் திறனை மட்டும் தேவன் ஜனங்களிடம் கேட்கவில்லை; அது மிகவும் எளிதாக இருக்கும், இல்லையா? அப்படியானால், ஜீவனுக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தேவன் ஏன் பேசுகிறார்? அவர் ஏன் மாற்றத்தைப் பற்றி பேசுகிறார்? யதார்த்தத்தைப் பற்றிய வெற்றுப் பேச்சுக்கு மட்டுமே ஜனங்கள் திறமையுள்ளவர்களாக இருந்தால், அவர்களுடைய மனநிலையில் ஒரு மாற்றத்தை அடைய முடியுமா? ராஜ்யத்தின் நல்ல போர்ச் சேவகர்கள் யதார்த்தத்தைப் பற்றி மட்டுமே பேசக்கூடிய அல்லது பெருமை பேசக்கூடிய ஒரு குழுவாக இருக்க பயிற்சி பெறவில்லை; மாறாக, எல்லா நேரங்களிலும் தேவனுடைய வார்த்தைகளை வாழ்ந்து காட்டவும், அவர்கள் எந்த பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் இசைந்து கொடுக்காமல் இருக்கவும், தேவனின் வார்த்தைகளுக்கு ஏற்றபடி தொடர்ந்து வாழவும், உலகிற்குத் திரும்பாமல் இருக்கவும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். தேவன் பேசும் யதார்த்தம் இதுதான்; தேவன் இதைத்தான் மனுஷனிடத்தில் கோருகிறார். ஆகவே, தேவனால் வசனித்துச் சொல்லப்பட்டுள்ள யதார்த்தத்தை மிக எளிமையானதாகக் கருத வேண்டாம். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் போதனை யதார்த்தத்தைப் பெற்றிருத்தலுக்குச் சமமல்ல. இது மனுஷனின் வளர்ச்சி அல்ல—இது தேவனின் கிருபை, இதில் மனுஷனின் பங்களிப்பு ஏதுமில்லை. ஒவ்வொரு நபரும் தேவனுடைய கிரியையைப் பெற்றபின் அவர்கள் வாழ்ந்து காட்டும்படி பேதுருவின் துன்பங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும்; மேலும் இன்னும் அதிகமாக, பேதுருவின் மகிமையைக் கொண்டிருக்க வேண்டும். இதை மட்டுமே யதார்த்தம் என்று அழைக்க முடியும். நீங்கள் யதார்த்தத்தைப் பற்றி பேச முடியும் என்பதால் மட்டும், யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம்; அது ஒரு தவறான கருத்தாகும். இத்தகைய எண்ணங்கள் தேவனுடைய சித்தத்திற்கு ஒத்துப்போகிறதில்லை, அதற்கு உண்மையான முக்கியத்துவமும் இல்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லாதீர்கள்; இதுபோன்ற வார்த்தைகளை அவித்துப்போடவும்! தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய தவறான புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் அனைவரும் அவிசுவாசிகள். அவர்களுக்கு உண்மையான அறிவு இல்லை, எந்தவொரு உண்மையான வளர்ச்சியும் இல்லை; அவர்கள் யதார்த்தம் இல்லாத அறிவற்ற ஜனங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சத்திற்கு வெளியே வாழ்பவர்கள் அனைவரும் அவிசுவாசிகள். ஜனங்களால் அவிசுவாசிகள் எனக் கருதப்படுபவர்கள் தேவனின் பார்வையில் மிருகங்கள், தேவனால் அவிசுவாசிகள் எனக் கருதப்படுபவர்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாழ்க்கையாகக் கொண்டிருக்காதவர்கள். ஆகவே, தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்தைக் கொண்டிருக்காதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளை வாழத் தவறியவர்கள் அவிசுவாசிகள் என்று கூறலாம். தேவனுடைய நோக்கம், ஒவ்வொருவரும் அவருடைய வார்த்தைகளின் யதார்த்தத்தை வாழ்ந்து காட்ட வேண்டும். எல்லோரும் யதார்த்தத்தைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, அதற்கும் மேலாக, அவருடைய வார்த்தைகளின் யதார்த்தத்தை வாழ்ந்து காட்ட அனைவருக்கும் உதவ வேண்டும். மனுஷன் உணர்கிற யதார்த்தம் மிகவும் மேலோட்டமானது; அதற்கு எந்த மதிப்பும் இல்லை. தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியாது. இது மிகவும் கீழ்த்தரமானது மற்றும் குறிப்பிடத் தகுந்ததல்ல. இது மிகவும் குறையுள்ளதும், மற்றும் தேவன் எதிர்பார்க்கிற தரத்திற்கு தூரமானதும் மிகக் குறைவானதுமாகும். பாதையை சுட்டிக்காட்ட முடியாமல் உங்கள் புரிதலைப் பற்றி பேசுவது உங்களில் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதற்கும், உங்களில் யார் பயனற்ற குப்பைத் துண்டுகள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ஆய்வுக்கு உட்படுத்தப்படுவீர்கள். இப்போதிலிருந்து இதை நினைவில் கொள்க! வெற்று அறிவைப் பற்றி மட்டுமே பேசாதீர்கள்; நடைமுறையின் பாதை மற்றும் யதார்த்தத்தைப் பற்றி மட்டுமே பேசுங்கள். உண்மையான அறிவிலிருந்து உண்மையான நடைமுறைக்கு மாறுதல்; பின்னர் நடைமுறையில் இருந்து யதார்த்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல். மற்றவர்களுக்கு உபதேசம் செய்யாதீர்கள், உண்மையான அறிவைப் பற்றி பேசாதீர்கள். உன்னுடைய புரிந்துகொள்ளுதல் ஒரு பாதை என்றால், உன்னுடைய வார்த்தைகளை அதன் மீது தாராளமாக போகவிடு; அப்படி இல்லையென்றால், தயவுசெய்து உன் வாயை மூடிக்கொண்டு பேசுவதை நிறுத்து! நீ பேசுவது பயனற்றது. தேவனை ஏமாற்றுவதற்கும் மற்றவர்கள் உன் மீது பொறாமைப்படுத்துவதற்கும் நீ புரிந்துகொள்ளுதலைப் பற்றி பேசுகிறாய். அதுவே உன்னுடைய லட்சியம் அல்லவா? நீங்கள் வேண்டுமென்றே மற்றவர்களுடன் விளையாடுகிறீர்கள் அல்லவா? இதில் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா? நீ அதை அனுபவித்த பிறகு புரிந்துகொள்ளுதல் பற்றி பேசினால், நீ பெருமை பேசுகிறவனாய் காணப்படமாட்டாய். இல்லையெனில், நீ அகங்கார வார்த்தைகளை உமிழ்கிற ஒருவனாக இருப்பாய். உன் உண்மையான அனுபவத்தில் நீ கடக்க முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன, மேலும் உன் சொந்த மாம்சத்திற்கு எதிராக நீ கிளர்ச்சி செய்ய முடிவதில்லை, எப்போதுமே நீ விரும்பியதைச் செய்கிறாய்; தேவனுடைய விருப்பத்தை ஒருபோதும் திருப்திப்படுத்தமாட்டாய்—ஆனாலும் தத்துவார்த்த புரிதலைப் பற்றி பேசுவதற்கான கசப்பை நீ இன்னும் கொண்டிருக்கிறாய். நீங்கள் வெட்கமில்லாதவர்கள்! தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய உன்னுடைய புரிந்துகொள்ளுதல் பற்றி பேசுவதற்கு நீ இன்னும் தைரியமாக இருக்கிறாய். நீங்கள் எவ்வளவு வெட்கங்கெட்டவர்கள்! பிரசங்கித்தல் மற்றும் பெருமைகொள்ளுதல் உங்கள் இயல்பாகிவிட்டது, நீங்கள் அவ்வாறு செய்யப் பழகிவிட்டீர்கள். நீங்கள் பேச விரும்பும் போதெல்லாம், நீங்கள் அதைச் சுலபமாகச் செய்கிறீர்கள். ஆனால் பயிற்சி செய்யும்போது, உங்கள் இஷ்டப்படி அதைச் சித்தரிக்கிறீர்கள். இது மற்றவர்களை முட்டாளாக்க ஒரு வழி அல்லவா? நீங்கள் மனுஷர்களை வஞ்சிக்க முடியும்; ஆனால் தேவனை ஏமாற்ற முடியாது. மானிடர் அதை அறியாதிருக்கிறார்கள், பகுத்தறிவும் இல்லை. ஆனால் இதுபோன்ற விஷயங்களில் தேவன் அதிகக் கவனத்துடன் இருக்கிறார்; அவர் உன்னைத் தப்ப விடமாட்டார். உன் சகோதர, சகோதரிகள் உனக்காகப் பரிந்துரைத்து வாதிடலாம்; உன் புரிந்துகொள்ளுதலைப் புகழ்ந்து, உன்னை மெச்சிக்கொள்ளலாம். ஆனால் நீ எந்த யதார்த்தத்தையும் பெற்றிருக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தப்ப விடமாட்டார். ஒருவேளை அனுபவமுள்ள தேவன் உங்கள் தவறுகளைத் தேட மாட்டார். ஆனால் தேவனுடைய ஆவியானவர் உன்னை அசட்டை பண்ணுவார். அது உனக்குப் பொருத்துக்கொள்ள முடியாததாக இருக்கும். இதை நீ விசுவாசிக்கிறாயா? நடைமுறைப்படுத்துதலின் யதார்த்தத்தைப் பற்றி மேலும் பேசு; நீ ஏற்கனவே மறந்துவிட்டாயா? நடைமுறைப் பாதைகளைப் பற்றி மேலும் பேசு; நீ ஏற்கனவே மறந்துவிட்டாயா? “உயரிய கோட்பாடுகளையும் பயனற்ற, புழக்கத்திலுள்ள பேச்சையும் குறைத்து வழங்குங்கள்; இப்போதே நடைமுறையைத் தொடங்குவது சிறந்தது”. இந்த வார்த்தைகளை நீ மறந்துவிட்டாயா? உனக்குக் கொஞ்சம்கூட புரியவில்லையா? தேவனுடைய சித்தத்தைக் குறித்து உனக்கு எந்தப் புரிந்துகொள்ளுதலும் இல்லையா?

முந்தைய: நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்

அடுத்த: தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக